Wednesday, May 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 818

ஈழம்: சென்னையில் பு.மா.இ.மு மாணவர்கள் சாலை மறியல் – வீடியோ !

சனவரி 30 காலை 10 மணிக்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தலைமையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலிருந்து திடீரென்று வெளியே வந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையை மறித்தார்கள்.

முத்துக்குமாரின் இறுதிப் பயணம் – படங்கள் !

0
OLYMPUS DIGITAL CAMERA

முத்துக்குமாரின் இறுதிப் பயணம் – படங்கள் !

p1010063

முத்துக்குமாரின் இறுதிப் பயணம் ! நேரடி ரிப்போர்ட் !!

100
OLYMPUS DIGITAL CAMERA

மூண்டெழுமா முத்துக்குமார் இட்ட தீ?

அவநம்பிக்கையால் நிரம்பிய சூழலிலும் நம்பிக்கையூட்டும் தருணம் எப்போதாவது தோன்றத்தான் செய்கின்றது. ஆயினும் அது தோன்றி மறையும் ஒரு தருணம் மட்டுமா, அன்றி புதியதொரு நிகழ்வுப் போக்கின் துவக்கமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியிருக்கிறது.

இப்பதிவை எழுதும் இந்த நேரத்தில் முத்துக்குமாரின் இறுதிப் பயணம் கொளத்தூரிலிருந்து பெரம்பூரைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு அமைப்பினரும் அமைப்பு சாராத தமிழ் உணர்வாளர்களுமாக பல்லாயிரக்கணக்கானோர் காட்டாற்று வெள்ளம் போல் கரை புரண்டு செல்ல, அந்த வெள்ளத்தின் மீது மிதந்து செல்கிறான் முத்துக்குமார்.

பேரணியின் துவக்கத்தில் பாதையெங்கும் மலர் தூவிச்செல்லும் ஒரு வாகனம். அதனைத் தொடர்ந்து எமது  தோழர்கள் ( ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு ) முழக்கமிட்டுச் செல்கிறார்கள். இந்திய மேலாதிக்கத்துக்கு எதிரான முழக்கங்கள். மேலாதிக்கத்தின் நோக்கத்தை அம்பலப்படுத்தும் முழக்கங்கள். ஈழத்தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கு ஆதரவான முழக்கங்கள். இரண்டு நாள் போர் நிறுத்தம் எனும் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தும் முழக்கங்கள். காஷ்மீரிலும் வட கிழக்கிந்தியாவிலும் தேசிய இனங்களை நசுக்கும் இந்திய இராணுவத்துக்கு எதிரான முழக்கங்கள். தமிழின விரோத பார்ப்பனக் கும்பலுக்கு எதிரான முழக்கங்கள்.

அடுத்த வரிசையில் வருகிறார்கள் கட்சித் தலைவர்கள். முன்னே அணிவகுத்துச் செல்லும் முழக்கங்கள் பலவற்றின் கருத்துடன் முரண்படும் தலைவர்கள். இந்த தன்னெழுச்சியின் வெள்ளத்தில் தம்மையும் தம் அடையாளத்தையும் பேணிக் கரைசேர்வதெப்படி கொள்வதெப்படி எனும் சிந்தனையில் ஆழ்ந்தபடி நடைபோடும் தலைவர்கள்.

அவர்களைத் தொடர்ந்து வருகிறது கருத்துகள் ஏதும் எழுப்பாத பாண்டு வாத்தியம்.

அதன் பின்னே முத்துக்குமாரைத் தாங்கிய வாகனம். தமிழகத்தின் மவுனத்தையும், கட்சிகளின் துரோகத்தையும் கண்டு மனம் வெதும்பி, தீப்பாய்வது என்ற முடிவில் முத்துக்குமார் எழுதிய கடிதம் அவனுடைய சிந்தனையோட்டத்தின் தடயங்களைக் காட்டுகிறது. மரிக்குமுன்னர் தன் இறுதி யாத்திரையை அவன் மனக்கண்ணில் ஓட விட்டிருப்பான். ஐயமில்லை. அந்தக் காட்சி இதுதானா, இதனினும் வலிதா?… யாரறிவார்? மரணம் விட்டுச்செல்லும் புதிர்களில் இதுவும் ஒன்று.

முத்துக்குமாரின் பின்னே பல்லாயிரக்கணக்கில் மக்கள் வெள்ளம். பல்வேறு அமைப்பினர்…. பல்வேறு முழக்கங்கள்…. குமுறி வெடிக்கும் கதறல்கள்…. கோபங்கள்.

“ராஜபக்சே ஒழிக! பொன்சேகா ஒழிக! காங்கிரசு ஒழிக! ஓட்டுக்கட்சி துரோகிகள் ஒழிக! பிரபாகரன் வாழ்க! புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்! சோனியாவே இத்தாலிக்கு ஓடு! ஜெயலலிதா ஒழிக! போர்நிறுத்தம் செய்! தமிழர்களைக் கொல்லாதே!”

ஒழுங்கமைக்கப்படாத இரைச்சலாக, ஒழுங்கமைக்கப்பட்ட கோபமாக, தன்னை முன்னிறுத்தும் நடிப்பாக, தன்னுணர்விழந்த கதறலாக.. முத்துக் குமாரைத் தொடர்கிறது மக்கள் வெள்ளம். கட்சிக் கொடிகளோ பதாகைகளோ வேண்டாம் என்பதை எல்லோரும் ஆரம்பத்தில் கடைப்பிடித்திருப்பதாக கூறுகின்றனர் பேரணியில் சென்று கொண்டிருக்கும் எமது தோழர்கள். ஆயினும் பின்னர் பல்வேறு அமைப்புக்களின் பதாகைகள் ஊர்வலத்தை வண்ணமயமாக்கின.

கொடிகள் இல்லையெனினும் கட்சிகள் இருக்கத்தானே செய்கின்றன? பதாகைகள் இல்லையெனினும் கொள்கைகள் இருக்கத்தானே செய்கின்றன? “என்னுடைய உயிரை ஆயுதமாக ஏந்துங்கள்” என்று தன் உயிலில் குறிப்பிட்டிருந்தான் முத்துக் குமார்.

ஆயுதம் ஒன்று இல்லாததனால்தான் தமிழகத்தில் போர் தொடங்கவில்லை என்று அவன் எண்ணியிருக்க வேண்டும். அல்லது தன் உடல் எனும் ஆயுதமே போரையும் போர்க்குணத்தையும் தமிழகத்தில் தோற்றுவித்துவிடுமென்று அவன் எதிர்பார்த்திருக்க வேண்டும்.

அந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பதுதான் கேள்வி.

நேற்று முன்தினம் இரவு முத்துக்குமாரின் உடலை கொளத்தூர் வணிகர் சங்க கட்டிடத்திற்குக் கொண்டு வந்தார் வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன். நேற்று காலை 9 மணி முதல் தலைவர்கள் வரத்தொடங்கினர். மருத்துவர் ராமதாசு, திருமா, நெடுமாறன், வைகோ, தா.பாண்டியன், நல்லகண்ணு  என பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த அனைவரும் வந்து அஞ்சலி செலுத்திய பின் வணிகர் சங்கக் கட்டிடத்தினுள் சென்றனர். வெளியே முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. செங்கல்பட்டில் உண்ணாவிரதமிருந்து கைது செய்யப்பட்ட மாணவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். பச்சையப்பன் கல்லூரி வாயிலில் காலை மறியல் போராட்டம் செய்த பு.மா.இ.மு தோழர்கள் ஊர்வலமாக முழக்கமிட்டபடி வந்து கொண்டிருந்தனர்.

அஞ்சலி செலுத்துவதற்காக இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் சகிதம் மேடையில் ஏறினார் புரசை திமுக எம்.எல்.ஏ பாபு. போலீசை மேடையை விட்டு இறங்கச் சொன்னார்கள் எமது தோழர்கள். “என் பாதுகாப்புக்குத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள்” என்றார் எம்.எல்.ஏ. “எங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் போலீசு பாதுகாப்பா?” என்று மக்கள் கூட்டம் கொந்தளிக்க அந்த இடத்திலிருந்து ஓடினார் எம்.எல்.ஏ. ஆள் படை சகிதம் பந்தாவாக வந்து இறங்கிய அதிமுக மதுசூதனன் நிலைமையைப் புரிந்து கொண்டு, படை பரிவாரங்களை ஓரமாக நிற்க வைத்துவிட்டு, தனியாக வந்து மாலையைப் போட்டுவிட்டு அவசரம் அவசரமாக இடத்தைக் காலி செய்தார்.

இறுதி ஊர்வலத்தை எப்படி நடத்துவது என்ற ஆலோசனை உள்ளே நடக்கத் தொடங்கியிருந்தது. இன்றைக்கே, (அதாவது 30ம் தேதி வெள்ளிக்கிழமையன்றே) அடக்கம் செய்து விடலாம் என்பது தலைவர்களின் ஒருமனதான கருத்து. “குறைந்த பட்சம் ஒரு நாளாவது வைத்திருந்து மக்களை ஏராளமாகத் திரட்ட வேண்டும். அவருடைய மரணத்தின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும்” என்பது ம.க.இ.க தோழர்கள் முன்வைத்த கருத்து. வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையனும் இதே கருத்தைக் கொண்டிருந்தார். “இங்கிருந்து ஊர்வலமாக தூத்துக்குடி எடுத்துச் செல்லலாம்” என்று முத்துக்குமாரின் உறவினர் சிலர் கருத்து கூறினர்.

இது தொடர்பான விவாதத்தில் தலைவர்கள் கூறிய கருத்துகள் கண்ணாடிப் பேழைக்குள் உறங்கிக் கொண்டிருந்த முத்துக் குமாரின் காதுகளில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.

“உடனே எடுக்காவிட்டால் கூட்டம் அதிகமாகி சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகிவிடும் என்று எச்சரித்தார் ஒரு தலைவர். “நேரம் ஆக ஆக கூட்டம் உணர்ச்சிக்கு ஆட்பட்டு நிலைமை கட்டு மீறிவிடும்” என்று வழிமொழிந்தார் இன்னொருவர். “உடல் தாங்காது” என்றார் ஒரு தலைவர். “சனிப்பிணம் தனிப்போகாது என்பது மக்கள் நம்பிக்கை. அதைக் கணக்கில் கொள்ள வேண்டும்” என்றார் இன்னொரு தலைவர். இன்றே எரியூட்டி விட்டு அஸ்தியை தமிழகம் முழுவதும் ஊர்வலமாக எடுத்துப் போகலாமே என்ற மாற்று வழியையும் சிலர் முன் மொழிந்தார்கள்.

“தனது உடல் எதிரிகளைத் துன்புறுத்தும்” என்ற நம்பிக்கையில் தீக்குளித்தான் முத்துக்குமார். ஆனால் அவ்விருப்பத்துக்கு விரோதமாக அவன் உடல் “நண்பர்களை” துன்புறுத்திக் கொண்டிருந்தது. வணிகர் சங்கத்தின் அறைக்கு வெளியே அனல் பறக்கத் தொடங்கி விட்டது. உள்ளேயோ புழுக்கம் கூடிக் கொண்டிருந்த்து.

தலைவர்கள் முன்கூட்டியே தீர்மானித்து இறுதி யாத்திரைக்கான வண்டிக்கு ஏற்பாடு செய்திருப்பார்கள் போலும்! அலங்கரிக்கப்பட்ட வண்டி உள்ளே நுழைந்தது. உடனே வண்டியை மறித்தார்கள் எமது தோழர்கள். “வண்டி மிஞ்ச வேண்டுமானால் உடனே இடத்தைக் காலி செய்” என்று எச்சரித்தார்கள். எதுவும் புரியாமல் பயந்து போன ஓட்டுனர் மறுகணமே இடத்தைக் காலி செய்தார்.

சேரன், வடிவேலு, அமிர், சுந்தர்ராஜன், ஆர்.கே.செல்வமணி என திரையுலகத்தினர் வந்திறங்கினர். “இறுதி யாத்திரையை எப்படி நடத்துவது, எப்போது நடத்துவது என்று எந்த தலைவரும் முடிவு செய்ய முடியாது. இங்கே கூடியிருக்கும் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார் சேரன். பேச முடியாமல் கண்ணீர் விட்டார் சத்யராஜ். “ஓட்டுக் கட்சிகள்.. துரோகிகள்” என்று சரமாரியாக வெடித்தார்கள் திரையுலகப் பேச்சாளர்கள்.

தாங்கள் உணர்வு பூர்வமாகப் பேசினோமா  அல்லது சூழலால் உந்தப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி விட்டோமா என்ற கேள்விக்கான விடை இந்நேரம் அவர்களுக்குக் கிடைத்திருக்கும். எவ்வாறாயினும் அந்தப் பேச்சு கூட்டத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தது.

ஆலோசனை முடிந்து முடிவை அறிவிக்க மேடையேறினார் வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன். “இரண்டு கருத்துகள் இருக்கின்றன. நாளை அடக்கம் செய்யலாம் என்பது ஒரு கருத்து” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் அதனை ஆமோதித்த்து கூட்டம். “இரண்டாவதாக தலைவர்களின்  கருத்து என்னவென்றால்..” என்று அவர் பேச முயன்றார். கூட்டம் அதனை அனுமதிக்கவில்லை. “துரோகிகள் ஒழிக” என்று முழக்கமிடத் தொடங்கியது. “நீங்கள் என்னைப் பேச அனுமதிக்க மாட்டேன் என்கிறீர்கள். தலைவர்களுடைய கருத்தை அவர்களே சொல்லட்டும்” என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்.

எந்த தலைவர் பேசுவது? திருமா கையில் மைக்கை கொடுத்தார்கள். அவரைப் பேசவிடாமல் கூட்டம் கூச்சல் எழுப்பியது. ஒரு மோதல் சூழ்நிலை ஏற்படவே அதனை அமைதிப் படுத்த வேண்டியதாயிற்று. மீண்டும் மைக் சேரன் கைக்கு வந்த்து. “நாளை அடக்கம்” என்ற கருத்தில் திருமாவும் உடன்பட்டார். மற்ற தலைவர்களுக்கு… வேறு வழியில்லை.

தலைவர்கள் புறப்பட்டனர். உரைகள் தொடர்ந்தன.. சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படவேண்டும். கொளத்தூர், பெர்ரம்பூர், ஜமாலியா, பின்னி குக்ஸ் ரோடு, ஒட்டேரி, புரசவாக்கம் ஐ ரோடு, டவுட்டன், சூளை, யானைக்கவுனி வழியாக மூலக்கொத்தளம் இடுகாட்டை அடைய வேண்டும் என்பது முடிவு.

ஆனால் முத்துக் குமாரின்  இறுதிப் பயணம் தீர்மானிக்கப்பட்ட பாதையில் செல்லவில்லை.

தொடரும்…

ஈழமும் முத்துக்குமாரின் தியாகமும் – நமது கடமை என்ன?

42

ஒவ்வொரு தற்கொலையும் அநீதியான இந்த சமூக அமைப்பிற்கு எதிராக நடத்தப்படும் கலகம் என்றார் மாவோ. பிறந்தவர் எவரும் என்றாவது ஒரு நாள் மரிக்கப் போகிறோம் என்றாலும் அனைவரும் வாழவே விரும்புகிறோம். வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிருள்ள மனதனுக்கு மரணம் என்றால் அச்சம்தான்.

ஈழம்: முத்துக்குமாரை கொன்ற தீ சுரணையற்ற மனங்களை சுடட்டும்!

60

fire1

image003

fire5

fire4

ஈழத்திற்காகத் தீக்குளித்து தியாகியானான் ஒரு தமிழன் !

ஈழத்திற்காக தமிழக ஓட்டுக்கட்சிகள் குறிப்பாக தி.மு.கவின் நாடக உணர்ச்சியைத் திருப்தி படுத்துவதற்காக பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று ஈழத்தமிழர்களைக் கொல்லும் ராஜபக்க்ஷேவுக்கு ஆதரவை அளித்து விட்டு உடன் திரும்பி விட்டார். காங்கிரசுக் கூட்டணி அரசின் தமிழகப் பங்காளிகள் ஏதோ பெரிய கோரிக்கையைச் சாதித்து விட்டதாக பீற்றி வருகின்றனர். இந்த பசப்பலுக்கு மத்தியில்தான் முல்லைத் தீவில் நூற்றுக்கணக்காண மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

தமிழக ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகளின் இந்த வேடதாரி அரசியலுக்கு மத்தியில் தமிழக மக்களின் தன்னெழுச்சியான

போராட்டங்கள் தமிழகமெங்கும் காட்டுத்தீயைப் போல பரவி வருகின்றன. மக்களின் இந்தப் போராட்டம் உணர்ச்சிப்பூர்வமானது. கொல்லப்படும் ஈழத்தமிழனைக் காப்பாற்றுவதற்காக எதாவது செய்யவேண்டும் என்ற ஆதங்கத்திலிருந்து இது கம்பீரமாக எழுந்து வந்திருக்கிறது. முக்கியமாக எல்லாப் போராட்டங்களும் தற்போது இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்து முதுகில் குத்தும் இந்திய அரசின் துரோகத்தை தோலுரிக்கும் வண்ணம் நடந்து வருகிறது. இதற்கு முன் நடந்த போராட்டங்கள் வெறும் மனிதாபிமான கோரிக்கைக்காக நடந்திருக்கும் வேளையில் தற்போது இந்திய அரசின் துரோகத்தனத்தை எதிர்த்து முறியடிப்போம் என்று ஒரு சரியான அரசியல் முழக்கத்துடன் நடந்து வருவது முக்கியமானது.

இன்று காலை அகில இந்திய பெண்கள் முன்னணி எனும் பெண்கள் அமைப்பு இந்தியாவின் துரோகத்தை எதிர்த்து சென்னையில் இருக்கும் தலைமைச் செயலகத்தை முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர்.பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றதற்காக கையொலி எழுப்பிய தமிழக சட்டசபை வீடணர்களில் காதுகளுக்கு கேட்குமாறு இந்தப் போராட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான

பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர். சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் துவங்கியிருக்கின்றனர்.

செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களின் சாகும் வரை உண்ணாவிரதம் ஏழு நாட்களுக்குப் பிறகு முடிந்தாலும் தமிழகம் முழுவதும் அநேகமாக எல்லாக் கல்லூரி மாணவர்களும் வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். எமது மாணவர் அமைப்பான பு.மா.இ.மு எல்லாக் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கான அறைக்கூட்டங்களை நடத்தி இந்தப் போராட்டங்களை தொடருவதற்கு முயற்சி செய்கிறது. குறிப்பாக சென்னை, கடலூர், விருத்தாசலம், தஞ்சாவூர் முதலிய இடங்களில் பு.மா.இ.மு சார்பில் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. தஞ்சையில் மட்டும் எல்லாக்க கல்லூரிகளையும் சேர்த்து 3000 மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.மேலும் பல அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புக்களும் தமது தலைமை வழிகாட்டுதல் இல்லாமல் தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். அரசியல் கட்சிகளின் பின்புலம் இல்லாத மாணவர்களும் அதிக அளவில் போராடி வருகின்றனர். இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோபிசெட்டிபாளையத்தில் வணிகர்கள் ஈழத்திற்காக இன்று கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர்.

இந்தப் போராட்டங்களின் உச்சமாக ஒரு தமிழன் தீக்குளித்து உயிரிழந்த போராட்டம் இன்று நடந்திருக்கிறது. தூத்துக்குடியைச்

சேர்ந்த 26 வயது முத்துக்குமார் ஒரு மாதப்பத்திரிக்கையின் தட்டச்சு வேலை செய்பவர்.  இன்று காலை மத்திய அரசு நிறுவனங்கள் பலவற்றின் தென்மண்டலத் தலைமையகங்கள் இருக்கும் சாஸ்திரி பவனுக்கு வந்த முத்துக்குமார் கையில் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். அவர் கையிலிருந்த ஈழத்தமிழரின் போராட்டத்திற்கன பிரசுரங்கள் காற்றில் பறந்தன. இதை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர்.ஆயினும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்துக்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புக்கான போரில் சுடுவதற்கென்றே இந்திய பீரங்கிகள் தமிழகம் வழியே அனுப்பப்பட்ட மண்ணில் எந்த ஆயுதமின்றி தனது உயிரை அழித்து ஒரு மாபெரும் ஆயுதத்தை தமிழக மக்களுக்கு வழங்கியிருக்கிறான் ஒரு வீரன். தமிழக அட்டைக்கத்தி அரசியல் தலைவர்கள் வெறுமனே அறிக்கைகள் விட்டு ஈழத்திற்காக நாடகமாடிக் கொண்டிருக்கும் சூழலில் தனது உயிரை அழித்து தமிழக மக்களின் உணர்ச்சியைத் தட்டி எழுப்பியிருக்கிறான் ஒரு போராளி. இறுதி வேண்டுகோள், இறுதி எச்சரிக்கை, பதவியைத் துறப்போம் என தமிழக ஆளும்கட்சி நடித்துக் கொண்டிருக்கும் காலத்தில் தனது உடலை தீக்கிரைக்காக்கி இந்தியாவின் துரோகத்தை எதிர்த்திருக்கிறான் ஒரு தமிழன். ஈழத்தில் புலிகளுக்கெதிரான போரில் ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்படுவதை பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தமென அகமகிழும் பார்ப்பனப் பத்திரிகையுலகின் கொழப்பைத் தனது இன்னுயிரைத் தந்து அம்பலமாக்கியிருக்கிறான் ஒரு பத்திரிகையின் தொழிலாளி.

முத்துக்குமார் எனும் போராளியின் உடலைக் கருக்கிய தீயின் நாக்குகள் சுரணையற்றிருக்கும் மனங்களை சுட்டுப்பொசுக்கி திருத்தட்டும். முத்துக்குமார் எனும் வீரனின் உயிரைத் துறக்கத் துணிந்த தியாகம் கொழும்பில் இந்திய- இலங்கை கிரிக்கெட் ஆட்டத்தை ரசிக்கும் அற்பங்களின் இழிவை எள்ளி நகையாடட்டும். முத்துக்குமார் எனும் இளைஞனின் தியாகம் ஈழத்தில் கொத்துக் கொத்தாய் செத்து விழும் ஈழத்தமிழனின் பிணங்களைக் கண்டு உவகை கொள்ளும் சுப்பிரமணிய சுவாமி, ஜெயலலிதா, இந்து ராம், தமிழக காங்கிரசு நரிகள் முதலான ஒநாய்களின் வெறியை தமிழக மக்கள் அறுப்பதற்கு உதவட்டும். முத்துக்குமார் எனும் அந்தத் தொழிலாளியின் மரணம் புலம்பெயர்ந்த நாடுகளில் வில்லு படத்தை ரசித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழனின் மரத்துப் போன சுரணையை மீட்டுக் கொண்டு வரட்டும். முத்துக்குமாரின் தீக்குளிப்பு பதிவுலகில் அக்கப்போரையும், அரட்டையையும், வாடிக்கையாகக் கொண்டிருக்கும் சில பதிவர்களுக்கு சமூக அக்கறை என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொடுக்கட்டும். முத்துக்குமார் எனும்  அந்த வார்த்தை இதுவரை ஈழத்திற்காக இது வரை ஒரு துரும்பையும் எடுத்துப் போடாதவர்களின் மனச்சாட்சியை கிளறி எழுப்பட்டும்.

ஆம் மரத்துப்போயிருக்கும் தமிழுலகில் ஒரு இளைஞன் ஈழத்திற்காக தன்னுயிரைப் பலிதானம் செய்திருக்கிறான். அவனுக்கு அஞ்சலி செலுத்த விரும்புகிறவர்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ?

ஈழம்: சென்னையில் ம.க.இ.க ஆர்பாட்டம் ! படங்கள், வீடியோ !!

OLYMPUS DIGITAL CAMERA

ஜனவரி 26, 2009! வழக்கம் போல் சென்னை மெரினாவில் காவல்துறை அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அரசுத் தொலைக்காட்சியில் தில்லியில் நடக்கும் இராணுவ அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிற தொல்லைக்காட்சிகளில் சிம்பு, தனுஷ், தமன்னா முதலான நாட்டுக்காக உழைக்கும் நல்லவர்களின் அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இப்படியாக தேசப்பற்று பொங்கி வழிந்து கொண்டிருந்த நிலையில், சென்னை ஆளுநர் மாளிகைக்கு அருகில் சைதாப்பேட்டை பனகல் மாளிகைக்கு எதிரிலிருந்து ஒலிக்கிறதொரு இளம்பெண்ணின் குரல். ஈழத்திலே வெறியாட்டம்! இங்கே எதற்கு கொண்டாட்டம்? குடியரசுக் கொண்டாட்டம்?” இம்முழக்கத்தை தொடர்ந்து எதிரொலித்து எழும்புகின்றன ஆயிரக்கணக்கான குரல்கள்.

சைதை பேருந்து நிலையத்தை கடந்து செல்லும் வாகனங்கள் தம்மையறியாமல் தாமதிக்கின்றன. அனுமதி வழங்கப்படாத ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்ய வந்து நிற்கும் காவல்துறையின் முகத்தில் ஈயாடவில்லை.

சென்ற வேலையை மறந்து ஆர்ப்பாட்டத்தை கவனிக்க நிற்கிறார்கள் மக்கள். முழக்கங்கள் விண்ணைப் பிளக்கின்றன. தெறிக்கும் தமிழர் இரத்தத்தின் புரவலன் யார், புரவலன் யார்? இலங்கை இராணுவம் கைகளிலே இருப்பதென்ன, இருப்பதென்ன? இந்திய அரசு சப்ளை செய்த துப்பாக்கிகள், ஆயுதங்கள்! இந்திய அரசே, காங்கிரஸ் அரசே, பதில் சொல், பதில் சொல்! நாடகம் வேண்டாம், நாடகம் வேண்டாம், நயவஞ்சக நாடகம் வேண்டாம்” கூர்ந்து கவனிக்கிறார்கள் பலர். வியந்து நிற்கிறார்கள் சிலர். மாட்சிமை தாங்கிய உலகத்தின் மாபெரும் ஜனநாயக சோசலிசக் குடியரசின் கொண்டாட்ட நாளன்று, அதன் அயோக்கியத்தனத்தை, அகிம்சை தரித்த கொலை முகத்தை தோலுரிப்பதா?

ஆம். ஜனநாயகக் குடியரசின் முகத்திரையை கிழிக்கும் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட எமது அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம்(ம.க.இ.க), புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்ணணி(பு.ஜ.தொ.மு), விவசாயிகள் விடுதலை முன்ணணி(வி.வி.மு), புரட்சிகர மாணவர் இளைஞர் முன்ணணி(பு.மா.இ.மு), பெண்கள் விடுதலை முன்ணணி(பெ.வி.மு) ஆகிய புரட்சிகர அமைப்புகள் அன்றுதான் களத்திலறங்கின. முதல் நாள் பு.ஜ.தொ.மு-வின் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டிற்கு தமிழகம் முழுவதிலுமிருந்து பங்கேற்க வந்திருந்த புரட்சிகர அமைப்புகளின் தோழர்களிடம், மாநாடு முடிந்த இரவில், மறுநாள் காவல்துறை அனுமதியின்றி, சிங்களப் பாசிச அரசுக்கு துணைபோகும் நயவஞ்சக இந்திய அரசை அம்பலப்படுத்தும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ள திட்டம் அறிவிக்கப்பட்டது. சற்றும் தயங்காமல் பங்கேற்க முன்வந்தனர் தோழர்கள். அன்று இரவு ஆயிரக்கணக்கான தோழர்கள், ஆண்கள், பெண்கள், கைக்குழந்தைகள் சென்னையின் பல இடங்களிலும் தங்கிக் கொண்டனர். 500க்கும் மேற்பட்ட பெண்களும், குழந்தைகளும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில்தான் அன்று இரவு உறங்கினர். விரட்ட வந்த காவல்துறையை சாதுர்யமாகப் பேசி விரட்டியடித்தனர்.

மறுநாள் காலை, தோள்பைகளையும், குழந்தைகளையும் சுமந்து கொண்டு பட்டொளி வீசிப் பறந்த ஆயிரக்கணக்கான செங்கொடிகளோடு சில மணி நேரங்களில் போர்ப்படையாய் சைதையில் அணிவகுத்து நின்றனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள், முதியவர்கள் என அனைவரும் செந்நிறத்தில் உடையணிந்து நிற்க, செம்படை அணிவகுப்பாய் சீறித் தொடங்கிற்று ஆர்ப்பாட்டம். போர்முழக்கமாய் தப்பு ஒலிக்க, காற்றை கிழித்துக் கிளம்பின முழக்கங்கள். சிவப்பு அலையாய் எழுந்து நின்ற தோழர்களைக் கண்டு உள்ளூர கலங்கி நின்ற காவல்துறை, ஒரு புறம்கைது செய்ய வேண்டும், இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள்” என தலைவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தது. மறு புறமோ இலங்கைக்குள்ள திரும்ப திரும்ப மூக்கை நுழைக்கிற, குப்புறக் கிடந்தான் ராஜீவ் காந்தி மறந்து போகுற!” என ம.க.இ.கவின் மையக் கலைக்குழு பாடிக் கொண்டிருந்தது. அந்த புனித நாளில் அந்தப் புனிதப் பாடலை சத்தியமூர்த்திப் பவனத்து கதர்ச்சட்டைகள் கேட்டிருக்க வேண்டும். மெய்மறந்து போயிருப்பார்கள்.

கிளிநொச்சி வீழ்ந்தது, முல்லைத்தீவு பிடிக்கப்பட்டது என ஒவ்வொரு நாளும் வெளிப்டையாக தமது குரூர மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வரும் பார்ப்பனப் பத்திரிக்கைகளை அம்பலப்படுத்தி பேசத் துவங்கினார் ம.க.இ.கவின் மாநிலச் செயலாளர் மருதையன். 1983 முதல் தனது உளவு அமைப்புகளால் ஈழப் போராளி அமைப்புகளை கைக்கூலிகளாக்க முயன்றதையும், தான் முன்வைத்த துரோக ஒப்பந்தத்தை ஈழ மக்கள் புறக்கணித்த ‘குற்றத்திற்காக’ அமைதிப் படை என்ற பெயரில் தனது படையை அனுப்பி ஈழ மக்களை கொன்று குவித்தும், ஈழப் பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கும் ஆளாக்கிய வரலாற்றின் துயரத்தை சில வரிகளால் கோட்டுருவமாக எழுப்பினார். தமது தலைவனுக்காக செண்டிமெண்ட் கண்ணீர் வடிக்கும் கதர்ச்சட்டை காலிகள் ஈழப்பெண்களின் இரத்தத்திற்கும், கண்ணீருக்கும் என்றைக்காவது பதில் சொல்லியிருக்கிறார்களா எனக் கேள்வி எழுப்பினார். இந்நிலையில் தமது சுயநிர்ணய உரிமைக்காக போராடி வரும் மக்களின் கோரிக்கையைப் பற்றி வாய் திறக்காமல், சோறு அனுப்ப இரங்கற்பா பாடும் கேவலத்தை திரைகிழித்தார்.ஏய் பிச்சையெடுப்பதற்கா நடக்கிறது அங்கே போராட்டம்? ஈழத் தமிழ் மக்களின் தன்னுரிமைக்கான போராட்டம் அது” என கொதித்த குரலில் தகித்தது மண். இந்திய அரசை கைகூப்பி போரை நிறுத்த வலியுறுத்தும் மோசடியை அம்பலப்படுத்தினார். இந்திய அரசு குறைந்தபட்சம் போரை நிறுத்து என்று கூட சொல்லாது. ஏன் என்றால், டாடாவுக்கு அங்கே தேயிலைத் தோட்டம் இருக்கிறது. ஏன் என்றால் அம்பானிக்கு அங்கே எண்ணெய்க் கிணறு இருக்கிறது. அந்துஜாவுக்கு சிமெண்ட் கம்பெனி இருக்கிறது. மித்தலுக்கு தொழில்கள் நடக்கின்றன. எனவே இந்தியத் தரகு முதலாளிகள் கொள்ளையடிப்பதற்காக இந்திய அரசு மாமா வேலை பார்க்கிறது” என தெற்காசியாவின் பிராந்திய நாட்டாமையாக தன்னை நிறுவிக் கொள்ள முயலும் இந்திய அரசின் வர்க்க நலனை படம் பிடித்தார். தனது சொந்த நாட்டில் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களிலுள்ள மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து, அவர்களை காக்கை குருவிகளைப் போல சுட்டுத் தள்ளும் இந்திய அரசு, சிங்கூரிலும், நந்திகிராமிலும், ஒரிசாவிலும், கோவாவிலும் தரகு முதலாளிகளுக்காகவும், பன்னாட்டு முதலாளிகளுக்காகவும் உழைக்கும் மக்களை சுட்டுத் தள்ளிய இந்திய அரசு, ஈழ மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் என்பது பகற்கனவு மட்டுமல்ல, இந்திய அரசின் நயவஞ்சக கொலைவெறி முகத்தை மறைப்பதாகும் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.உடனடித் தீர்வுகள் ஏதுமில்லை. எனினும் போராட்டம் தொடர்கிறது. ராஜபக்சே நினைப்பது போல புலிகளையும், பிரபாகரனையும் ஒழித்து விட்டால் ஈழப் போராட்டம் முடிந்து விடுமென்பது வீண்கனவு. மக்களுக்கு எதிரான எந்த அடக்குமுறையும் வென்றதில்லை. விடுதலைப் போராட்டம் தொடரும். தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஏனெனில் விடுதலைக்கான போராட்டம் தேதி குறிப்பிட்டு தொடங்கி, தேதி குறிப்பிட்டு முடிக்கப்படுபவையல்ல” என முழங்கினார். கண நேரம் பெரும் மழை பொழிந்த அமைதி நிலவியது.

கிளிநொச்சி வீழ்ந்தாலென்ன, முல்லைத்தீவு வீழ்ந்தாலென்ன, இல்லை வென்றது இல்லை, இல்லை! இனவெறி ஆதிக்கம் வென்றது இல்லை!” என முழக்கங்கள் அதிர காவல்துறை வாகனங்களில் ஏற்றப்பட்டார்கள் தோழர்கள். கம்பியிட்ட ஜன்னல்களின் வழியே செங்கொடி பறக்க முழக்கமிட்ட தோழர்களை ஏற்றியவாறு கடந்து சென்றன வாகனங்கள். எனினும் காற்றில் ஒலித்தவாறிருந்தன அடர்த்தியான குரல்கள். இதோ நேற்று பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றிருக்கிறார். போரை நிறுத்துவதற்கு அல்ல, வெற்றியைக் கொண்டாட! இலங்கை அரசு கொக்கரிக்கிறது, கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் வேடிக்கை பார்க்க அழைக்கிறது! துக்ளக் சோ சிரிக்கிறான், சுப்பிரமணிய சுவாமி குதூகலிக்கிறான், இந்து ராம் வாழ்த்துப்பா எழுதுகிறான், இலங்கைக்கும் இந்தியாவுக்குமான கிரிக்கெட் போட்டியில் டாஸ் ஜெயிப்பது எவ்வளவு முக்கியமென டோனி விளக்குகிறார். எல்லா சமயமும் நீங்களே டாஸ் ஜெயித்து விட முடியாது. காலங்கள் மாறும், மாறியே தீரும். இன்று நெறிக்கப்பட்டு கிடக்கும் ஈழமக்களின் குரல்வளைகளிலிருந்து தணியாத விடுதலைத்தாகம் பெரும் ஓலமாய் எழுந்தே தீரும். இது வரலாற்றின் விதி.

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே சொடுக்கவும்

இந்த பதிவுக்கு தமிழிஷில் வாக்களிக்க இங்கே சொடுக்கவும்

தொடர்புடைய பதிவுகள்:

ஈழத்திற்காக ஓர் ஆர்ப்பாட்டம்…

ஈழம்: தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் !

வீடியோ:

படங்களை பெரியதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்

 

 

ஈழம் – சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் !!

OLYMPUS DIGITAL CAMERA

ஈழத்தமிழ் மக்கள் மீதான இனவெறிப் போரில்

சிங்களப் பாசிச அரசுடன்  கைகோர்த்து நிற்கும்

இந்திய அரசைக் கண்டித்து சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் !!

ஜனவரி 26 இந்தியக் குடிரயரசு தினத்தில் அதிகார வர்க்க அமைப்புக்கள் குடியரசு மகாமித்யத்தை ஓதிக்கொண்டிருப்பது வழக்கம். இந்நாளில் ஈழத்திற்காக இந்திய அரசு செய்யும் துரோகத்தை அம்பலப்படுத்த எமது புரட்சிகர அமைப்புக்கள் முடிவு செய்தன.

கருணாநிதியின் இறுதி நாடகம்?

33

yiruthi-naadagam

(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்)

(முகம் தெரியாத நண்பர் ரவி அவர்கள் நேற்று மின்அஞ்சலில் அனுப்பிய கருத்துப்படத்தை இங்கே நன்றியுடன் வெளியிடுகிறோம். )

அய்யகோ என ஈழத்திற்காகக் கதறுகிறார் கருணாநிதி. கதறிய கையோடு குடும்பக் குலக்கொழுந்துகளான

ஈழத்தமிழரின் இரத்தத்தை சுவைக்கும் பிணந்திண்ணி கழுகுகள் – கருத்துப்படம் !

40

fasicst1

(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்)

சிங்களப் பேரினவாத அரசின் வெறித்தனமான போரில் உயிரை விட்டும், உயிர் பிழைத்தவர்கள் அகதிகளாய் அலைந்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் ஈழத்தின் இரத்தத்தை சுவைப்பதில் துக்ளக் சோ, இந்துராம், ஜெயலலிதா, சுப்பிரமணியசுவாமி, போன்ற தமிழக ஒநாய்களும், பொன்சேகா, ராஜபக்க்ஷே முதலான சிங்கள ஒநாய்களும் வெறியுடன் அலைந்து  கொண்டிருக்கின்றன….!

மேலும் கருத்துப்படங்களுக்கு: http://vinavu.wordpress.com/cartoon/

இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் !

53

அன்பார்ந்த நண்பர்களே,

ஐ.டி துறையின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் அது அமெரிக்க ஏகாதிபத்திய நலனோடு பின்னப்பட்டிருக்கிறது என்பதை விளக்கியும், புரியவைக்கவும் வினவில் பல கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். இதை பலர் பொதுவில் புரிந்து கொண்டாலும் ஐ.டி துறையில் இருக்கும் நண்பர்கள் பிரச்சினையின் பாரிய தன்மையை பொதுவில் இல்லையென்றே கருதுகிறார்கள். எமக்கு வந்த பின்னூட்டங்களிலிருந்து இதை உணர முடிகிறது.

தகவல் தொழில் நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்களிலிருந்து ஆட்குறைப்பும், சம்பளக் குறைப்பும், இப்போதுதான் நிகழ்கிறது என்றால் இந்த போக்கு உற்பத்தி சார்ந்த தொழில்துறைகளுக்கு முன்பே நடந்து வருகிறது. பின்னி ஆலை, ஸ்டாண்டர்டு மோட்டார் ஆலை போன்ற தொழிற்சாலைகள் மூடப்பட்டு ஓரளவுக்கு நடுத்தர வர்க்க ஊதியம் வாங்கி வந்த பல நூறு தொழிலாளர்கள் இன்று தமது வாழ்க்கைக்காக உதிரி வேலை செய்து போராடி வருகிறார்கள். இவர்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டதும் உண்டு. இப்போது அமெரிக்க பின்னடைவு காரணமாக இந்தியாவின் தொழிற்சாலைகளிலும் ஆட்குறைப்பும், கதவடைப்பும் நடந்து வருகிறது.ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு அதிக கார்கள் ஏற்றுமதி செய்து வந்த ஹுண்டாய் நிறுவனமே பாதி நாட்களுக்கு மட்டும் இயங்கி வருகிறது என்றால் மற்ற தொழிற்சாலைகளின் நிலைமையை புரிந்து கொள்ளலாம்.

தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் உற்பத்தி சார்ந்த தொழிலாளர்களின் ஊதியத்தை விட பலமடங்கு அதிகம் பெறுகிறார்கள் என்பதும் அதற்கேற்றபடி அவர்களது வாழ்க்கைத்தரம் மாறியிருப்பதும் எவரும் மறுக்க முடியாத ஒன்று. இருப்பினும் அமெரிக்காவோடு பிணைக்கப்பட்டிருக்கும் அவர்களது விதி என்றுமே கழுத்திற்கு மேல் தொங்கக்கூடிய கத்தி போல அபாயகரமாக இருக்கிறது என்பதுதான் உண்மை. சுருங்கக்கூறின் அவர்களது வாழ்க்கை ஓரிரவில் தலைகீழாக மாறலாம். ஆடம்பரமும், நுகரவுக் கலாச்சாரமும் துறந்தே தீரவேண்டுமெனவும் நிலைமை வரலாம்.அப்படி வந்து விட்டது என்பதைத்தான் கீழ்க்கண்ட உண்மைக்கதைகள் எடுத்தியம்புகின்றன.இது மேல்தட்டு நடுத்தரவர்க்கத்தின் சோகம் என்றாலும் அவர்களையும் ஒரு தொழிலாளியின் நிலைமைக்கு காலம் இறக்கியிருக்கிறது.பதிவர் கிறுக்குப்பையன் தளத்திலுருந்து இந்தக் கதைகளின் சில பகுதிகளை இங்கே பதிவு செய்கிறோம்.நாட்டு நடப்பும், அரசியலும் கிஞ்சித்தும் அறியாத இந்த அப்பாவிகளின் கதைகள் பொதுவில் எவரையும் சோகம் கொள்ளவைக்கும். சோகம் எந்த அளவுக்கு இதயத்தை ஊடுறுகிறோதோ அந்த அளவு அரசியல் ரீதியாக அதைப் புரிந்து கொள்வதும் அதிலிருந்து மீள்வதும் சாத்தியம்தான். முதலில் கதைகளைப்படியுங்கள். தீர்வை கட்டுரையின் இறுதியில் பார்க்கலாம்.

சினிமாக்களில் வருவதுபோல ஒரே இரவில் பலரது வாழ்க்கையை உயர்த்திப் போட்டஅதே ஐ.டி. வேலை, இன்றும் ஒரே நாளில் அவர்கள் வாழ்க்கையை நிலைகுலையவைத்திருக்கிறது. உலகப் பொருளாதார வீழ்ச்சி, சுமார் 7,000 கோடிஅளவில் சத்யம் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் ஊழல்.. ‘விப்ரோ’ நிறுவனத்துக்குக்கொடுத்து வந்த வேலையை நிறுத்திக் கொண்ட உலக வங்கி.. என்று ஊடகங்களில்வரும் தகவல் கள் இப்போதுதான் பயமுறுத்து கின்றன.. ஆனால், இந்திய தகவல்தொழில் நுட்பத் துறையின் தலைநகரமான பெங்களூருவில், சில மாதங்களுக்குமுன்பேயே துவங்கி விட்டிருக்கிறது இந்த ஐ.டி வீழ்ச்சி!

‘கடந்த நான்குமாதங்களில் மட்டும் சிறிதும் பெரிதுமாக சுமார் முந்நூறு ஐ.டி நிறுவனங்கள்மூடப்பட்டு விட்டன.. கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களுமே ஆள் குறைப்பில்இறங்கி விட்டன. விரைவில் இந்தியா முழுக்க இருக்கிற ஐ.டி நிறுவனங்கள்பாதிக்கப்படும்!’ என்கிற அதிர்ச்சித் தகவல் நம் காதுகளை வந்தடைந்தது! விஷயத்தின் தீவிரம் நம்மை உலுக்க, பெங்களூருவின் ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கிற.. பார்த்த.. தமிழர்களை சந்தித்துப் பேசினோம். அனைவருமே புகைப்படத்துக்கு மறுத்துத்தான் பேசி னார்கள். இல்லை.. இல்லை.. தங்கள் மனக் குமுறல்களைக் கொட்டினார்கள்.

”நான்சென்னையிலிருந்து பெங்களூரு வந்து ஏழு வருஷமாச்சு.. என்னோட ஆரம்ப சம்பளம் 20,000 ரூபா. கடைசியா எனக்கு கம்பெனி கொடுத்த புரமோஷன்ல அறுபதாயிரம்ரூபாயா ஆகியிருந்தது என் சம்பளம்..” என்கிற மீரா கிருஷ்ணனுக்கு இன்றைக்குவேலை இல்லை. ”வீட்டு வாடகை, சாப்பாடு, போக, வர கார் வசதினு எல்லாமேகம்பெனி கொடுத்துடும். வாங்குற சம்பளத்துல எனக்குனு ஒரு செலவு கிடையாது.மூணு வருஷத்துக்கு முன்னால கல்யாணமாகி, குழந்தை பிறந்து சந்தோஷமா போய்ட்டுஇருந்தது வாழ்க்கை.. திடீர்னு ஒரு நாள் எங்க எல்லாரையும் கூப்பிட்டு ‘இனிமே கம்பெனியை நடத்த முடியாது’னு சொல்லிட்டாங்க. அவ்வளவுதான். மறுநாள்என்னை பிக்கப் பண்ண கார் வரல.. வெளியில வேலை தேடுறேன். கிடைக்கல.என்னோட இத்தனை வருஷ அனுபவமும் சுத்த வேஸ்ட்ங்கிறது இப்போதான் தெரியுது” – கட்டுப்படுத்தவே முடியாமல் கேவுகிறார் மீரா.

வேலையிலிருந்து முதலில் தூக்குவது திருமணமான பெண்களைத்தானாம்! அடுத்து, திருமணமான ஆண்களையாம்! அதுபற்றிச் சொல்லி வருந்தினார் தர்மபுரியிலிருந்து இங்கு வந்து வேலைசெய்கிற கல்பனா. ”நூறு பேர் இருந்த இடத்துல இருபது, முப்பது பேரை வச்சுவேலை வாங்கியாகணும். அப்படின்னா, அவங்க ராத்திரி, பகல் பார்க்காம வேலைசெய்றவங்களா இருக்கணும். கல்யாணமான பெண்கள்னா, குறிப்பிட்ட நேரத்துக்குள்ளவீட்டுக்குப் போறதுலயே நோக்கமா இருப்பாங்க. குடும்பம், குழந்தை, பிரசவம்னு லீவ் எடுப்பாங்க. அதனால அவங்களைத்தான் முதல்ல வெளியேத்துறாங்க.

கல்யாணமான ஆண்களும்கூட பேச்சுலர்ஸ் அளவுக்கு ஆபீஸ்ல நேரம் செலவழிக்க முடியாதுஇல்லையா? அதனால, கொஞ்சம்கூட ஈவு, இரக்கமே இல்லாம, ‘ஸ்டார் பர்ஃபார்மரா’ (‘பிரமாதமாக வேலை செய்கிறவர்’ என்று நிறுவனமே ஸ்டார் அந்தஸ்து கொடுக்குமாம்) இருந்தாக்கூட தூக்கிடுறாங்க. எங்க கம்பெனியில போன நவம்பர்மாசம், 30 வயசைத் தாண்டினவங்க எல்லாரையும் வேலையை விட்டு எடுத்துட்டாங்க..நாங்களும் பயந்துட்டுத்தான் இருக்கோம்” என்றவர், ஒரு கண்ணீர்க் கதையைச்சொன்னார்..

”எங்க டீம் லீடர் அவர். பிரமாதமா வேலை செய்வார். போன செப்டம்பர்லதான் அவருக்குக் கல்யாணம் ஆச்சு. அவர் மனைவி இப்போ கர்ப்பமா இருக்காங்க. அவருக்கும் வேலை போய்டுச்சு. போன வாரம் தற்செயலா அவரோட வீட்டுக்குப் போயிருந்தேன். ஐயோ! அந்தக் கொடுமையை என்னனு சொல்லுவேன்! கையில இருந்த காசு மொத்தமும் செலவழிஞ்சு போக, மூணு நாள் பட்டினியாகெடந்திருக்காங்க ரெண்டு பேரும். ‘பேசாம செத்துப் போய்டலாம் போல இருக்கு’னு அவர் குலுங்கிக் குலுங்கி அழ, என்னால தாங்கவே முடியல. ஆபீஸ்ல ஒரு பாஸா மட்டும்தான் அவரை நான் பார்த்திருக்கேன். டீம்லயே ‘ஜூனியர் மோஸ்ட்’ ஆன என்கிட்ட அவர் அப்படி அழுதது.. ச்சே! இந்த உலகம்.. பணம்னு எல்லாத்து மேலயும் வெறுப்பு வந்துடுச்சு” என்கிறார் கண்ணீர் மல்க! கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையாக வெளிவரும் ஒவ்வொரு கதையுமே இதயத்தை நொறுக்குகிறது. ”எதுவாஇருந்தாலும் இ-மெயில்தான். இனிமே எல்லாரும் பத்து மணி நேரம் கண்டிப்பா வேலை பார்க்கணும். கார், சாப்பாடு வசதில்லாம் கிடையாது’ன்னு ஒரு இ-மெயில்அனுப்பிட்டா மறுநாளே கையில டிபன் பாக்ஸோட டவுன் பஸ் பிடிச்சு ஆபீஸ்வந்துடணும். அப்படித்தான் வந்துக்கிட்டு இருக்கோம்” என்றார் ரேவதி.

பெங்களூருவின்பெரிய ஐ.டி நிறுவனம் ஒன்றில் மாதம் 80,000 ரூபாய் சம்பளத்தில் வேலைபார்த்த பிரகாசம், இன்று 7,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குப் போகிறார்.. ”ஐ.டி.துறையில சம்பளம் ஜாஸ்தினு வெளியில இருக்குறவங்களுக்குத் தோணும். ஆனா, அதுக்கேத்த கமிட்மென்ட்ஸ் எங்களுக்கு இருக்கும். காருக்கு மட்டும் மாசம் இருபதாயிரம் ரூபா இ.எம்.ஐ கட்டினேன். வேலை போனதும் காரை வித்துட்டேன்.ஆனாலும் கார் கடன் இன்னும் முழுசா அடையல. அதுதவிர, கிரெடிட் கார்டு கடன்இருக்கு. ஃபர்னிச்சர், மைக்ரோவேவ் அவன், டிஜிட்டல் கேமரா, ஹோம் தியேட்டர்னு கண்ட பொருளையும் வாங்கிக் குவிச்சிருக்கேன். இதையெல்லாம்வித்தா பைசாகூட தேறாது. தலைக்கு மேல கடனை வச்சுக்கிட்டு திண்டாடுறேன்..” என்றவர் நிறுத்தி, ”என்னையும் என் மனைவியையும் விடுங்க. எப்படியோ போறோம்.பீட்ஸாவும் பர்கருமா சாப்பிட்டுப் பழகின குழந்தைக்கு திடீர்னு தினம் தினம்ரசம் சாதம் போடுற கொடுமை எந்தத் தகப்பனுக்கும் வரவே கூடாதுங்க.. போன மாசம்முழுக்க ரெண்டு வேளை சாப்பாடுதான். கடனை அடைச்சாத்தான் நிம்மதிகிடைக்கும்!” என்றார் கலங்கும் கண்களுடன்.

ஐ.டி. நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாகப் பணிபுரியும் பிரசாந்த் குமார், இந்த அவல நிலையின் காரணம் பற்றியும் ஐ.டி. துறையின் எதிர்காலம் பற்றியும் பேசினார்.. ”தொண்ணூறுகளின்இறுதியில் பெங்களூருவில் 600-க்கும் மேற்பட்ட ஐ.டி. கம்பெனிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால் சென்டர்கள், பி.பி.ஓ-க்கள் இருந்தன.இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பெங்களூருவைத் தேடி வந்து குடியேறினர்மக்கள். ஆனால், சமீபத்தில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் தொடர் சரிவின் காரணமாக, உலகெங்கும் ஐ.டி. கம்பெனிகள் பெரும் பின்னடைவைச்சந்தித்துள்ளன. பெங்களூருவில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட கம்பெனிகள்மூடப்பட்டுள்ளன. இதனால் 8,500 பேர் வேலை இழந்துள்ளனர். சம்பளக் குறைப்பு, ஆட்குறைப்பு, சலுகைகள் குறைப்பும் இதனால்தான்.

சமீபத்தில் ‘யுனைட்ஸ்’ என்கிற தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவை வழங்குவோர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இன்னும் ஆறு மாதத்தில் இந்தியாவில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை இழக்க நேரிடும்’ என்றுஅறிவித்துள்ளது. கவலை தரும் அறிக்கை இது” என்றவர், ”இருந்தாலும் ‘2009-ல் தகவல் தொழில் நுட்பத்துறை மீண்டும் கோலோச்சும்’ என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை. காத்திருப்போம்” என்றார்.இரவிலும் வேலை செய்யும் இவர்களின் எதிர்காலத்துக்கு விடியல் வருமா?

இரக்கம் இல்லாத இ-மெயில்!

ஒருஐ.டி நிறுவனம் தன் ஊழியர்களுக்கு அனுப்பிய ஒரு இ-மெயிலில் இருந்த வரிகள்இவை.. ‘வடை, அப்பளம், காய்கறி, பழங்களை உணவில் குறைத்தால் மாதம் 5 லட்சரூபாய் சேமிக்க முடியும். வருடத்துக்கு 60 லட்சம் ரூபாய் சேமிப்பு. அதனால், நாளை முதல் உணவில் இவை கிடையாது!’

”மறைமுக பாதிப்பு!”

”ஐ.டிதுறையில் நேர்ந்திருக்கிற பாதிப்பு என்பது நேரடியானது. இது தவிர, மறைமுக பாதிப்புகளும் நிறைய இருக்கின்றன. ஐ.டி. நிறுவனங்களை நம்பி மாதத் தவணையில்கார் வாங்கி, ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் பல இளைஞர்களும். தவிர, ஜிம்கள், கேடரிங்குகள், ஹவுஸ் கீப்பிங்.. என்று பல வகையான தொழில்களும் ஐ.டி-யால்வளர்ந்தன. இன்று அவைதான் முதல் கட்ட பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.ஐ.டி. துறையினர் ஏற்றி விட்ட ரியல் எஸ்டேட் விலையும் வீட்டு வாடகையும்எப்போது கட்டுக்குள் வரும் என்பது தெரியவில்லை..” என்று வருந்துகிறார்சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் ஒருவர்.

”கண்ணு முன்னால நிக்குது இ.எம்.ஐ..”

சமீபத்தில் சரிவைச் சந்தித்த ‘சத்யம்’ நிறுவனம் ‘தன் ஊழியர்கள் யாரும் மீடியாக்களிடம்பேச அனுமதி கிடையாது’ என்று இ-மெயில் அனுப்பி உள்ளது. இருந்தாலும், அந்தநிறுவன ஊழியர்கள் சிலரிடம் பேசினோம்.. தங்கள் அடையாளங்களை மறைத்து அவர்கள் வெளிப்படுத்திய உண்மைகள் இங்கே..

” ‘சத்யம் கம்பெனியை இழுத்து மூடப்போறாங்க. அதுக்குள்ள எல்லாரும் வேற வேலை தேடிக்குங்க’னு சீனியர்ஸ் என்னை நாலு மாசம் முன்னவே எச்சரிச்சாங்க. அவங்களும் வேற கம்பெனிக்கு நல்லசம்பளத்துக்குப் போயிட்டாங்க. ஆனா, அவங்க சொன்னதை நம்பாத நான் சிக்கல்ல மாட்டிக்கிட்டேன்.. இப்ப வேற கம்பெனிக்கு அப்ளிகேஷன் போட்டா, பிப்ரவரி வரைக்கும் ஆட்களை வேலைக்கு எடுக்கிறதில்லைனு சொல்லிட்டாங்க!” ”வேலைஇருக்கா.. இல்லையா.. ஜனவரி மாசச் சம்பளம் வருமா.. வராதா..னு எதுவுமேதெரியல. இதுல, தங்கச்சி கல்யாணத்துக்குக் கடன் வாங்கினது.. ஊர்ல அப்பா, அம்மாவுக்கு வீடு கட்டிக் குடுத்தது..னு கட்ட வேண்டிய இ.எம்.ஐ.கள் கண்ணுமுன்னாடியே நிக்குது. பிப்ரவரி ஒண்ணாம் தேதியை நினைச்சா இப்பவே பயமாஇருக்கு!’

நன்றி கிறுக்குப்பையன்

பின்னுரை

ஹுண்டாய் துணை நிறுவனமொன்றில் பணிபுரியும் தோழர் ஒருவரிடம் பேசும்போது அவர் நிறுவனத்தில் சில ஆயிரம் ரூபாய்களுக்கு பணிபுரியும் பொறியியல் பட்டதாரிகள் கூட எங்கே நம்மையும் பணி நீக்கம் செய்து விடுவார்களோ என்ற பீதியுடன் அற்ப விசயங்களைக்கூட அதி ஜாக்கிரதை உணர்வுடன் எச்சிரிக்கையாக பதட்டத்துடன் வேலை செய்வதாகக் கூறினார். இந்த நிலை இப்போது ஐ.டி துறையிலும் விஷம்போல பரவியுள்ளது. இதையெல்லாம் வைத்து முன்பு நாங்கள் சொன்ன விசயங்கள் இப்போது பலித்து வட்டதாக நாங்கள் மகிழ்ச்சி அடைவதாக நண்பர்கள் தயவு செய்து புரிந்து கொள்ளக் கூடாது. இந்த நாட்டின் தொழிலாளிக்கும், ஐ.டி துறை ஊழியர்களுக்கும் நடக்கும் அநீதி என்பது எங்களுக்கும் இழைக்கப்படும் துன்பம்தான் என்ற தோழமை உணர்வுடனே இதைப் பார்க்கிறோம்.சாரமாகச் சொன்னால் இது முதலாளித்துவப் பயங்கரவாதம் ஏழைநாடுகளின் மீது நடத்தும் போர். இந்தப் போரில் நாமும் ஆயுதங்களுடன் தயாராகி எதிர்கொள்ளவேண்டும் என்பதுதான் எமது அவா.

அதற்காகத்தான் ஐ.டி ஊழியர்களுக்கு ஒரு புரட்சிகர தொழிற்சங்கம் தேவை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம். வாங்கிய சம்பளத்தை சேமித்து, ஐ.எஸ்.ஓ தரக்கட்டுப்பாடு போன்ற விசயங்கள் மூலம் இந்த இடரை சமாளிக்கலாம் என்ற மூடநம்பிக்கை சில ஐ.டி ஊழியர்களிடன் இருக்கிறது. சத்யம் நிறுவனம் கூட இந்த சான்றிதழும் உலக கார்ப்பரேட் நிறுவன விருதும் பெற்றதும் என்பதிலிருந்து இதன் யோக்கியதையை புரிந்து கொள்ளலாம். நமக்குத் தேவை அரசியல் ரீதியான தெளிவும், ஒரு புரட்சிகர தொழிற்சங்கம் கொடுக்கும் “நாம்” என்ற பலமும்தான். இந்த தொழிற்சங்க முயற்சி ஆரம்பித்த உடனே ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கையில் பாலும், தேனும் ஓடும் என்று சொல்லவில்லை. ஆனால் சுயமரியாதையும், கேட்பார் கேள்வியின்றி ஆட்குறைப்பு செய்யும் முதலாளிகளின் திமிரை ஒடுக்கவும் முடியும்.அப்படி பல தொழிற்சாலைகளில் எமது தோழர்கள் சாதித்திருக்கிறார்கள்.

முக்கியமாக இந்த நம்பிக்கையை இணையத்தின் வாயிலாக மட்டும் உங்களுக்கு அளித்து விட முடியாது. அவற்றை நீங்கள் நேரில் காணவேண்டும். அது நிச்சயம் உங்களுக்கு ஒரு நம்பிக்கையையும், போராட்ட குணத்தையும் அளிக்கும்.அதற்கு வரும் ஞாயிறு நடக்க இருக்கும் அம்பத்தூர் மாநாட்டிற்கு வருமாறு உரிமையுடன் அழைக்கிறோம். ஐ.டி துறை ஊழியர்களின் தொழிற்சங்க முயற்சிக்கு வினவும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும். நாங்கள் 21 -ம் நூற்றாண்டின் கம்யூனிஸ்ட்டுகள். எங்களது தோழமை உங்களது சோர்வையும், அவநம்பிக்கையையும், சலிப்பையும், தோல்வி மனப்பான்மையையும் நிச்சயம் நீக்கி உங்களை புதிய மனிதனாக மாற்றிக் காட்டும். வாழ்வை இழப்பதற்கு நாம் ஒன்றும் அனாதைகளல்ல. தோள் கொடுக்க நாங்கள் இருக்கிறோம். வாருங்கள் புதிய உலகத்தை படைப்போம், முதலாளித்துவ பயங்கரவாதத்தை வேரறுப்போம்.

வெள்ளை மாளிகை கருப்பு ஒபாமாவை தேர்ந்தெடுத்தது ஏன்?

cariobamaஅமெரிக்காவின் 44ஆவது அதிபராக பாரக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். வெற்றி பெற்றதும் சிகாகோவில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் முன் ஒபாமா உரையாற்றியபோது, அங்கே எல்லா இன மக்களும் திரண்டிருந்தாலும், குறிப்பாக கருப்பின மக்களின் முகத்தில் இதுவரை இல்லாத ஒரு மகிழ்ச்சியும், ஆனந்தக் கண்ணீரும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. இனவேறுபாடு, வயது வேறுபாடு இல்லாமல், அமெரிக்காவின் கனவை, அதன் முன்னோர்களின் இலட்சியத்தை அந்த இரவின் வெற்றிச் செய்தி உறுதி செய்திருப்பதாக ஒபாமா அந்த மக்களிடத்தில் உரையாற்றினார்.

2004க்கு முன்னர் ஒபாமா என்றால் யாரென்றே பெரும்பாலான அமெரிக்க மக்களுக்குத் தெரியாது. 2007இல் அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்ததும் பலரும் வியப்புடன் பார்த்தனர். கென்யாவைச் சேர்ந்த ஆப்பிரிக்கருக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளையினப் பெண்மணிக்கும் பிறந்த ஒபாமா, தனது தாய்வழிப் பாட்டியிடம்தான் வளர்ந்தார். அவ்வகையில் அவர் கருப்பின மக்களின் போராட்டம் நிறைந்த அவல வாழ்க்கையை பெரிய அளவுக்கு உணர்ந்தவர் அல்ல. நல்ல கல்விப் புலமும், பேச்சுத் திறனும் கொண்ட ஒபாமாவுக்கு 90 சதவீதக் கருப்பின மக்களும், வெள்ளையர்களில் ஏறக்குறைய பாதிப்பேரும் வாக்களித்துள்ளனர்.

மொத்த வாக்குகளில் எழுபது சதவீதம் வெள்ளையர்களுக்குரியது என்றால், அவர்களில் கணிசமானோர் ஒபாமாவுக்கு வாக்களித்தது ஏன் என்ற கேள்வி முக்கியமானது. இன்னமும் வாழ்வின் எல்லாத்  துறைகளிலும்  கோலோச்சிவரும் வெள்ளை நிறவெறிக்கு பழக்கப்பட்ட மக்கள் ஒபாமாவை ஏற்பதற்கு எப்படி தயார் செய்யப்பட்டனர் என்பதே பரிசீலனைக்குரியது. கருப்பின மக்களின் வாக்குகளை மட்டும் வைத்து ஒபாமா இந்த வெற்றியை ஈட்டியிருக்க முடியாது.

இதையெல்லாம் விட,  அமெரிக்காவின் முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள், ஊடக முதலாளிகள் இவர்கள்தான்  அமெரிக்க அதிபரை தேர்வு செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். இவை எவற்றிலும் கருப்பினத்தவர் தீர்மானிக்கும் நிலையில் இல்லை என்றால், ஒபாமா அமெரிக்க முதலாளிகளின் செல்லப்பிள்ளையாக ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதுதான் விசயம். முதலில் ஜனநாயகக் கட்சியின் முடிவுகளை எடுக்கும் மேல்மட்டத்தில் கருப்பினத்தவர்கள் எவரும் தீர்மானகரமாக இல்லை. குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி இரண்டுமே வெள்ளையர்களின் கைகளில்தான் உள்ளது. இதில் குடியரசுக் கட்சி வெளிப்படையாக வெள்ளை நிறவெறியர்களை ஆதரித்தும், முதலாளிகள், உயர் வகுப்பினரை ஆதரிக்கும் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தியும் வரும் கட்சியாகும். ஜனநாயகக் கட்சியோ இவற்றை மறைமுகமாக ஆதரிக்கும் கட்சியாகும். நேரத்துக்கேற்றபடி அமெரிக்க முதலாளிகள் இந்தக் கட்சிகளை மாறி மாறிப் பயன்படுத்திக் கொள்வர்.

அடுத்து இரண்டு கட்சிகளால் அதிபர் பதவிக்கு தெரிந்தெடுக்கப்படும் நபர்களை ஊடக முதலாளிகள் முன்னிருத்துவார்கள். இவர்களைப் பிரபலங்களாக மாற்றும் வகையில் பல செய்திகள், கருத்துக் கணிப்புக்கள், நவீன தொழில் நுட்ப விளம்பரங்கள் முதலியவற்றைச் செய்வார்கள். இந்தச் செலவுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இரண்டு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களும் முதலாளிகள் மற்றும் நிறுவனங்களிடம் வசூல் செய்வார்கள். முதலாளிகளும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து பல மில்லியன் டாலரை நன்கொடையாகக் கொடுப்பார்கள்.

ஜனநாயக நாடு என்று பீற்றப்படும் அமெரிக்காவின் அதிபர் தெரிவு இப்படித்தான் முதலாளிகளின் தயவால் செய்யப்படுகிறது. ஆக, ஒபாமாவைத் தேர்வு செய்த ஜனநாயகக் கட்சி, அவருக்கு ஆதரவளித்த ஊடக முதலாளிகள், நன்கொடையை அள்ளிக் கொடுத்த நிறுவனங்கள் இவை எவற்றிலும் கருப்பினத்தவர் இல்லை என்பதிலிருந்து, ஒபாமாவை வெள்ளையர்கள் நிரம்பி வழியும் நிறுவனங்கள்தான் தேர்வு செய்து வெற்றி பெற வைத்தன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இதுவரை இல்லாத அளவுக்கு ஒபாமா தனது தேர்தல் செலவுகளுக்காக அறுநூறு மில்லியன் டாலருக்கு மேல் வசூல் செய்திருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் இது ஒரு சாதனையாம். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் மெக்கைன் கூட இதில் பாதியளவுதான் வசூல் செய்திருக்கிறார் என்றால், இந்தத் தேர்தலில் முதலாளிகள் ஒரு மனதாக ஒபாமாவைத் தேர்வு செய்துள்ளனர் என்று அறியலாம். ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், பிரபலமான வழக்கறிஞர்கள், சட்ட நிறுவனங்கள், வால் ஸ்ட்ரீட்டின் பங்குச் சந்தை மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் ஆகியோர்தான் ஒபாமாவின் புரவலர்கள்.

ஆக, ஒபாமாவை கட்சிக்குள் தேர்வு செய்து, காசும் கொடுத்து, பிரபலப்படுத்திய பின்னர் வெல்ல வைத்தது அத்தனையிலும் முதலாளிகள்தான் முடிவெடுத்துள்ளனர் என்றால், இந்த நாடகத்தின் சென்டிமெண்ட் உணர்ச்சி மட்டும் கருப்பின மக்களுக்குச் சொந்தமானது என்று சொல்லலாம். ஆனாலும், 228 ஆண்டுகளாகியிருக்கும் அமெரிக்க அதிபர் வரலாற்றில் முதன் முறையாக ஒரு கருப்பினத்தவர் தெரிவு செய்யப்பட்டிருப்பது, இன்னமும் இனவெறியின் கொடுமைகளை அனுபவித்து வரும் மக்களை மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைத்திருப்பதையும் நாம் அங்கீகரிக்கவேண்டும்.

ஆனால், இந்த மகிழ்ச்சி அலைவரிசையில் கருப்பினத்தவர் மட்டுமல்ல, உலக மக்களும் என்ன பெறப் போகிறார்கள் என்பது எல்லாவற்றையும் விட முக்கியமானது.  எந்த நெருக்கடியான காலத்தையும் சந்திப்பதற்கு முதலாளித்துவம் தனது முகமூடிகளை தேவைக்கேற்றபடி மாற்றி கொள்ளும் என்ற தந்திரம்தான் இந்த மகிழ்ச்சியில் மறைபடும் செய்தி.  இதைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு தென்னாப்பிரிக்காவின் வரலாறு மிகவும் எடுப்பானது ஆகும்.

தென்னாப்பிரிக்காவில் வெள்ளையினச் சிறுபான்மையினர் கருப்பின பெரும்பான்மையினரை அடக்கி ஆண்டு வந்த போது பெயரளவுச் சலுகைகள் கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து உலக அளவில் பொதுக்கருத்து உருவானதும், வெள்ளையர்களின் மாமன் மச்சான் உறவு முறை நாடுகளான மேற்கத்திய நாடுகள்கூடத் தென்னாப்பிரிக்கா மீது பொருளாதாரத் தடை விதித்தன. இதில் யாருக்கு பாதிப்பு இருந்ததோ இல்லையோ, தென்னாப்பிரிக்காவின் வளர்ந்து வந்த முதலாளிகளுக்கு பிரச்சினை வந்தது, 80களின் இறுதியில் நன்கு வளர்ந்து விட்ட அந்த முதலாளிகள், தமது வர்த்தகத்தை உலக அளவிலும், ஏன் ஆப்பிரிக்கக் கண்டத்தில்கூடச் செய்யமுடியாமல் சிரமப்பட்டனர்.

அப்போதுதான் அவர்கள் கருப்பினத்தவருக்கு வாக்களிக்கும் உரிமையை மட்டும் வழங்கினால், தமது பிரச்சினைகள் தீர்ந்து விடுமென்று உணர்ந்து கொண்டார்கள். அதன்பின் 90களில் நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். உடனே அவரது ஆப்பிரிக்க தேசிய காங்கிரசும் ஆட்சிக்கு வந்தது, உலக நாடுகளும் தமது தடைகளை நீக்கி விட்டன. இப்போது இந்தக் கட்சி ஆட்சிக்கு வந்து பதினான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த ஆட்சி மாற்றத்தால் வெள்ளையர்கள் எதையும் இழக்கவில்லை, கருப்பர்களும் எதையும் பெறவில்லை.

நாட்டின் சொத்துக்களில் 96 சதவீதம் சிறுபான்மை வெள்ளையர்களிடமே இன்றும் இருக்கிறது. வெள்ளையர்களின் தனிநபர் வருமானத்தில் பத்தில் ஒரு பங்குதான் கருப்பர்கள் பெறுகின்றனர். சந்தை மூலதனத்தில் 1.2 சதவீதம்தான் கருப்பர்களுடையது. கருப்பின மக்களில் 48 சதவீதம்பேர் வேலையற்றவர்களாக இருப்பதால், வன்முறை ஆண்டுதோறும் பெருகிவருகிறது. நாளொன்றுக்கு ஒரு டாலருக்கும் குறைவாக சம்பாதிப்போர் இந்த பதினான்கு ஆண்டுகளில் இருமடங்காகி விட்டனர்.

மற்றொருபுறம் வெள்ளை முதலாளிகள் ஆப்பிரிக்காவோடும், உலக நாடுகளோடும் தமது வர்த்தகத்தைப் பல மடங்காக்கி சொத்துக்களைப் பெருக்கியிருக்கின்றனர். தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஒழிந்த கதையின் வர்த்தக ஆதாயம் இப்படித்தான் ஒளிந்து கொண்டிருக்கிறது. இதுதான் ஒபாமாவின் வெற்றிக்குப் பின்னாலும் மறைந்திருக்கிறது.

கோமாளி அதிபர் புஷ்ஷின் இரண்டு ஆட்சிக் காலத்திலும் அமெரிக்கா பல நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறது. ஈராக்கிலும், ஆப்கானிலும் நடைபெற்று வரும் போர் நோக்கமற்று பெரும் பணத்தை விழுங்கும் சுமையாக மாறிவிட்டது. இந்த ஆக்கிரமிப்பு போர்களினால் உலக மக்களிடமிருந்து அமெரிக்கா தனிமைப்பட்டிருக்கிறது எனலாம். அமெரிக்காவிலும் போரை எதிர்த்து ஒரு மக்கள் கருத்து உருவாகியிருக்கிறது. இந்த எட்டாண்டுகளிலும் புஷ் எந்த நாட்டுக்குச் சென்றாலும் பெருந்திரளான மக்கள் அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றனர். குறிப்பாக, இசுலாமிய மக்கள் அமெரிக்காவைக் கட்டோடு வெறுக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

எண்ணெய் விலை ஏற்றம், ரியல் எஸ்டேட் விலைச் சரிவு, நிறுவனங்களில் ஆட்குறைப்பு, அதிகரித்துவரும் வேலையின்மை  இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சமீப மாதங்களில் பெரும் அமெரிக்க வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் திவாலானது அமெரிக்க மக்களிடம் பெரும் சினத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இதுவரை அமெரிக்கா கண்ட மோசமான அதிபர்களில் புஷ்ஷுக்குத்தான் முதலிடம் என்பதைப் பல்வேறு கருத்துக் கணிப்புக்கள் நிரூபித்திருக்கின்றன. இதனால்தான் மெக்கைன் தனது அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்காக புஷ்ஷைக் கூப்பிடவில்லை.

இப்படி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெயர் கெட்டிருக்கும் சூழ்நிலையில், அதைத் தூக்கி நிறுத்துவதற்காக அமெரிக்க முதலாளிகளுக்கு ஒரு ஒபாமா தேவைப்பட்டிருக்கிறார். புஷ்ஷை வெறுத்த அளவுக்கு ஒபாமாவை உலக மக்கள் வெறுக்க முடியாது, ஏனெனில் அவர் ஒரு கருப்பர். பெயரிலும் ஹுசைன் என்ற வார்த்தை முசுலீம்களை நினைவு படுத்தும் வகையில் இருக்கிறது. அமெரிக்கா திவாலில் வாழ்க்கையை இழந்து நிற்கும் கருப்பினத்தவருக்கும், நடுத்தர வர்க்க வெள்ளையினத்தவருக்கும் புஷ்ஷுக்கு மாற்றாக, அவர்கள் அண்டை வீட்டுக்காரரை நினைவுபடுத்தும் ஒரு சாதரண எளிய நபராக ஒபாமா தென்படுகிறார்.

இப்படி ஒரு சூழ்நிலையில்தான் ஒபாமாவுக்கு அதிபர் பதவி என்ற ஜாக்பாட் அளிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க முதலாளிகள் தனக்கு வழங்கியிருக்கும் இந்த அரிய கவுரவத்தை ஒபாமாவும் நன்றியுடன் விசுவாசத்துடன் தமது பேச்சிலும் நடவடிக்கைகளிலும் வெளிப்படுத்துகிறார். ஈராக்கிலிருந்து படைகள் திரும்பப் பெறப்படும் என்று சவடால் விட்டவர், இப்போது தந்திரமாக ஈராக்கில் பயங்கரவாதத்திற்கெதிராக படை முகாம்கள் நிறுத்தி வைக்கப்படும் என்கிறார். ஆப்கானில் முன்பை விட கடுமையாக பின்லேடனுக்கு எதிரான போர் நடைபெறுவதற்காகக் கூடுதல் துருப்புக்கள் அனுப்பிவைக்கப்படும், தேவைப்பட்டால் பாக்.கிற்குள் இருக்கும் அல்காய்தாவினருக்கு எதிரான படையெடுப்புகூட நடக்கும் என்கிறார். ஈரான் அணுஆயுதத்தைத் துறக்கவில்லையென்றால் கடும் நடவடிக்கை நிச்சயம் உண்டு என மிரட்டுகிறார்.

இவையெதுவும் அமெரிக்காவின்  மேலாதிக்கத்திற்கான வெளியுறவுக் கொள்கையைக் கடுகளவு கூட மாற்றவில்லை என்பதோடு, முன்பை விடத் தீவிரமாக நடைபெறப்போகிறது என்ற அபாயத்தையும் சுட்டிக் காட்டுகிறது. உள்நாட்டிலும் கடந்த ஆண்டுகளில் புஷ் எடுத்த எல்லா பொருளாதார நடவடிக்கைகளையும் இல்லினாய் செனட்டராக இருந்த ஒபாமா ஆதரித்திருக்கிறார். சமீபத்திய பொருளாதார மீட்பு நடவடிக்கைகளால் திவாலான அமெரிக்க நிறுவனங்களைக் காப்பாற்றும் அரசின் முயற்சிக்கும் அவர் ஆதரவு கொடுத்திருக்கிறார்.

தனது தேர்தல் பிரச்சாரத்தில் அவர் வெள்ளை நிறவெறிக்கு எதிராக ஒரு சொல்கூடப் பயன்படுத்தியதில்லை. தன்னை ஒரு கருப்பராகவும் முன்னிலைப்படுத்தவில்லை. வெற்றி பெற்றதும் நடந்த கூட்டத்தில் பேசியபோதும்கூட, அமெரிக்காவின் நெருக்கடிகளை ஒரு சில நாட்களில் தீர்க்க முடியாது என்றதோடு, அமெரிக்க மக்கள் தியாகம் செய்வதற்குத் தயாராக இருக்கவேண்டும் என்று ஒபாமா வலியுறுத்தினார். அவரது கிச்சென் கேபினட்டில் முதலாளித்துவ அடியாட்கள்தான் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக ஒபாமா தேர்வு செய்திருக்கும் ரஹ்ம் இமானுவெல் இசுரேலின் தீவிர ஆதரவாளராக இருப்பதோடு,  அதன் உளவுத் துறையான மொசாத்தோடு தொடர்புள்ளவர். அமெரிக்காவில் யூத லாபி என்றழைக்கப்படும் யூத மத செல்வாக்குக் குழு, வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தக் குழுவைச் சேர்ந்தவரை முன்னிலைப்படுத்துவதிலிருந்து இனிவரும் நாட்களில் பாலஸ்தீன மக்கள் படும் துன் பங்கள் பெருமளவு அதிகரிக்கப் போவதைப் பார்க்கலாம்.

அதேபோல துணை அதிபர் பதவிக்காக ஒபாமா தேர்வு செய்திருக்கும் நபரான ஜோ பிடேனும் யூத லாபியைச் சேர்ந்தவர் என்பதோடு, ஆயுத முதலாளிகளுக்கும், வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களுக்கும்  நெருக்கமான நபருமாவார். இவையெல்லாம் அமெரிக்கா எனும் ஏகாதிபத்தியக் கட்டமைப்பின் விதிகளுக்குட்பட்டுத்தான் ஒபாமா போன்ற முகமூடிகள் உருவாக்கப்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

ஆக, உலக அரங்கில் அமெரிக்கா தனிமைப்பட்ட நேரத்தில், உள்நாட்டில் பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் வெறுப்புற்ற நேரத்தில் அதைத் தணிக்கும் வண்ணம் ஒரு நபர் முதலாளிகளுக்குத் தேவைப்பட்டார். அப்படி முதலாளிகள் தேடிக்கொண்டிருக்கும் போது, ஒபாமா தான் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இரண்டு தேவைகளும் ஒன்றையொன்று பதிலீடு செய்து கொண்டன. 1960களில் மார்ட்டின் லூதர் கிங்கும், மால்கமும், கருஞ்சிறுத்தைகளும் போராடிப் பெற்ற சம உரிமைகளின் ஆதாயத்தை, எந்த விதப் போராட்டமுமின்றி, முதலாளிகளின் ஆதரவுடன் கைப்பற்றியதும்தான் ஒபாமாவின் சாமர்த்தியம்.

கருப்பர் அதிபரான வரலாற்று சிறப்புமிக்க சம்பவம் என்று ஊடகங்கள் போற்றும் இந்தக் காட்சி விரைவிலேயே மாறும். அப்போது கோமாளி புஷ்ஷுக்கும் திறமைசாலி ஒபாமாவுக்கும் வேறுபாடில்லை என்பதை உலக மக்கள் மட்டுமல்ல, அமெரிக்க மக்களே, அதிலும் குறிப்பாக ஏழைகளாக இருக்கும் கருப்பின மக்கள் புரிந்து கொள்வர்.

புதிய ஜனநாயகம், டிசம்பர் 08 ( அனுமதியுடன்)

ராஜபட்சே – சிவ சங்கர் மேனன் சந்திப்பு – கருத்துப்படம்

26

raja-pakse1

(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்)

பட்சேவுக்கு இந்தியா கூட்டாளி, தமிழனுக்கு பகையாளி!

பகையாளிகளிடம் கெஞ்சும் தமிழக கோமாளிகள்!!

புத்தகக் கண்காட்சியில் வினவு ! நூல் இரண்டு : மும்பை 26/11: விளக்கமும் விவாதமும்

7

vbf2

அன்பார்ந்த நண்பர்களே !
வினவுத் தளத்தில் மும்பைத் தாக்குதல் குறித்து ஆறு பாகங்களாக வெளிவந்த தொடர் கட்டுரை ம.க.இ.க சார்பில் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. மேலும் இதற்கு வந்த மறுமொழிகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் வந்த பின்னூட்டங்களை தமிழில் மொழிபெயர்த்து சேர்க்கப்பட்டுள்ளன. நூலின் முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம்.

முன்னுரை

மும்பை தாக்குதலை ஒட்டி வினவு இணைய தளத்தில் ஆறு பகுதிகளாக வெளிவந்த கட்டுரைகளை இங்கே தொகுத்து வெளியிடுகிறோம். இந்திய ஆளும் வர்க்கங்களின் பொருளாதாரத் தலைநகரில், அதன் ஆன்மீக வாசஸ்தலங்களான  ஐந்து நட்சத்திர விடுதிகள் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆளான காரணத்தினால், அவமானத்திற்கும் ஆத்திரத்திற்கும் ஆட்பட்டு, இந்தியாவின் மேட்டுக்குடி வர்க்கம் சாமியாடிக் கொண்டிருந்த அந்த நாட்களில் எழுதப்பட்டவை இந்தக் கட்டுரைகள். ஏற்கெனவே பல மாநகரங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து ஊடகங்களும், இந்து மதவெறி பாசிஸ்டுகளும் இசுலாமிய துவேசத்தை பரப்பி வந்த தருணத்தில், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல வந்தது மும்பை தாக்குதல்.

” இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து ஆப்கான் மீதும் ஈராக் மீதும் போர் தொடுத்த அமெரிக்க வல்லரசைப் போலவே, ‘இந்திய வல்லரசும்’ பாகிஸ்தானுக்கு உரிய முறையில் பதிலடி கொடுக்க வேண்டும், அரசாங்கம் லாயக்கில்லை, அரசியல்வாதி ஒழிக, ராஜிநாமா செய், பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களைக் குறி வைத்துத் தாக்கு, எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்து, பொடாவைக் கொண்டு வா” என விதம் விதமான வெறிக்கூச்சல்களால் ஊடகங்களும் இணையமும் அதிர்ந்து கொண்டிருந்த அந்த நாட்களில், இந்தக் கூச்சல்களுக்கு அஞ்சிப் பின்வாங்காமல் உண்மையை நிதானமாகவும் தைரியமாகவும் இக்கட்டுரைகள் முன்வைத்தன. இது பயங்கரவாதம் என்ற பிரச்சினை குறித்த அனைத்தும் தழுவிய ஆய்வல்ல. அத்தகையதொரு ஆய்வை வெளியிடுவதற்கான தருணமும் அதுவல்ல.

இன்று கூச்சல்களும் தொடைதட்டல்களும் அடங்கிவிட்டன. பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது தீர்வல்ல என்றும்  அவ்வாறு போர் தொடுக்கும் நோக்கம் இந்தியாவுக்கு இல்லை என்றும் மன்மோகன்சிங் பேசுகிறார். அமெரிக்காவால் அறிவூட்டப்பட்ட ஆளும் வர்க்கங்களும் இப்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றன. எனினும் எதுவும் செய்ய இயலாத கையறுநிலையால் ஆளும் வர்க்கங்கள் பல்லை நறநறவென்று கடிக்கும் சத்தம் மட்டும் இன்னமும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இது ஆளும் வர்க்கங்களின் மனநிலையாக மட்டும் இல்லை. பாகிஸ்தான் கையால் அடிவாங்கி, திருப்பி அடிக்க முடியாத ஆத்திரத்தில் குமுறும் ஒரு சராசரி இந்தியனின் மனநிலையாகவும் இது மாற்றப்பட்டிருக்கிறது. வெகுளித்தனமான தேசிய உணர்ச்சியும், இந்து வெறியின் கறைபடாத நியாய உணர்ச்சியும் கூட ஒரு விதமான கையறுநிலையால் துடித்துக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. இந்நூலில் வெளியிடப்பட்டுள்ள வாசகர் கடிதங்களிலும் (பின்னூட்டங்கள்) இத்தகைய மனநிலையின் தாக்கத்தை நீங்கள் பார்க்க முடியும்.

பாகிஸ்தானைத் தனிமைப் படுத்திவிட்டு அமெரிக்காவின் நெருங்கிய நண்பனாக இந்தியா மாறிக் கொள்வதன் வாயிலாகத்தான் பயங்கரவாதப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்ற கருத்து நயவஞ்சகமான முறையில் இப்போது மக்கள் மத்தியில் பரப்பப்படுகிறது. இந்தக் கருத்தின் அடிப்படையில்தான் இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தமும், அணுசக்தி ஒப்பந்தமும் மன்மோகன் அரசால் நிறைவேற்றப் பட்டன. ஆயினும் அவை ‘எல்லை தாண்டிய பயங்கரவாதத்திலிருந்து’ இந்தியாவைக் காப்பாற்றவில்லை. மாறாக அதனை அதிகரிப்பதற்கு மட்டுமே பயன்பட்டிருக்கின்றன. இந்தியா எந்த அளவுக்கு அமெரிக்காவை நெருங்கிச் செல்கிறதோ, அதே அளவுக்கு அது இசுலாமிய பயங்கரவாதத்தின் குறியிலக்காக மாறும் என்பதே உண்மை. இசுலாமிய பயங்கரவாதத்துக்கு எதிரானது என்ற பெயரில் அமெரிக்கா தொடுத்திருக்கும் உலக மேலாதிக்கத்துக்கான போரில், இந்தியாவைத் தனது காலாட்படையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே அமெரிக்க வல்லரசின் திட்டம். இதற்கு உட்படுவதன் மூலம் அமெரிக்கச் சதுரங்கத்தின் பகடைக்காய்களாகச் சிக்கிச் சீரழிவதற்கு மேல் இந்தியாவும் பாகிஸ்தானும் பெறப்போவது எதுவும் இல்லை. வளைகுடாவுக்கு அடுத்து உலகின் பதட்டப்பகுதியாக தெற்கு ஆசியா மாறுவதற்கும் அமெரிக்காவின் மேலாதிக்கம் இங்கே நிலைப்படுவதற்கும் மட்டுமே இது வழிவகுக்கும். சீனாவையும் ரசியாவையும் கட்டுக்குள் வைக்கும் அமெரிக்காவின் யுத்த தந்திரத் திட்டத்துக்கு உகந்த இந்த ஏற்பாட்டை இந்திய ஆளும் வர்க்கங்களும், காங்கிரசு பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகளும் விரும்பி வழிமொழிகின்றன. இந்திய ஆளும் வர்க்கங்களின் அரசியல் பொருளாதார நலன்களே இக்கொள்கையை வழிநடத்துகின்றன.

‘அடித்தால் திருப்பி அடி’ என்ற உணர்ச்சிபூர்வமான பேச்சு ஒரு நாட்டின் அரசியல் இராணுவ முடிவுகளைத் தீர்மானித்துவிட முடியாது. அவ்வாறு ‘திருப்பி அடிப்பதற்காக’ ஆப்கானிஸ்தானுக்குப் போன அமெரிக்க சிப்பாய்கள்  8 ஆண்டுகளுக்குப் பிறகும் நாடு திரும்ப முடியவில்லை. அதிபர் புஷ் நடத்திய இசுலாமிய பயங்கரவாதத்துக்கு எதிரான போர் அமெரிக்காவை எங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது என்பதை அமெரிக்க மக்கள் தம் அனுபவத்தில் கண்டுவிட்டார்கள். பொருளாதார திவால் நிலை, உள்நாட்டில் ஜனநாயக மறுப்பு என்பதுதான் அவர்களுக்குக் கைமேல் கிடைத்த பலன். இந்தப் பாதை அதனினும் கொடிய விளைவுகளைத்தான் இந்திய மக்களுக்கும் வழங்க முடியும். எனினும் இத்தகையதொரு மாற்று ஒன்றைத்தான் காங்கிரசும், பாரதிய ஜனதாவும், இந்திய ஆளும் வர்க்கங்களும்  மக்களிடையே முன்வைக்கின்றன. ஏகாதிபத்திய உலகமயமாக்கமும், மறுகாலனியாக்கமும் உழைக்கும் மக்கள் மீது ஏவிவிடும் சுரண்டல் மற்றும் அடக்குமுறையிலிருந்து திசை திருப்புவதற்கு இந்த ‘பயங்கரவாத எதிர்ப்புப் போர்’ ஒரு கருவியாக அவர்களுக்குப் பயன்படும். ‘இந்திய எதிர்ப்பு’ என்னும் முழக்கத்தை வைத்து பாகிஸ்தான் மக்களை அந்நாட்டு ஆளும் வர்க்கங்களும், இராணுவ அதிகார வர்க்கமும் திசை திருப்ப முடியும். கூடுதலாக, ‘அமெரிக்காவின் கையாள்’ என்ற அந்தஸ்தை இந்தியா அடையும் பட்சத்தில்,  உலக இசுலாமிய மக்கள் அமெரிக்காவுக்கு எதிராகக் கொண்டிருக்கும் நியாயமான எதிர்ப்புணர்ச்சியின் விளைவுகளையும் இந்தியா அனுபவிக்க வேண்டியிருக்கும்.

இசுலாமிய சர்வதேசியம் என்பது நிறைவேறவே முடியாத ஒரு அபத்தம். அன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்டு, இன்று அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பை திசைதிருப்புவதற்கும், இசுலாமிய நாடுகளின் மக்களை அடிமைப்படுத்துவதற்கும் பயன்பட்டு வரும் ஒரு கருவி. அவ்வளவே. ஆனால், மூலதனத்தின் சர்வதேசியமும், அதனை முன் தள்ளும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கமும் நாம் எதிர்கொண்டிருக்கும் உண்மைகள். உலக மக்களால் எதிர்க்கப்பட வேண்டிய உண்மையான எதிரிகள். பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் இந்த உண்மையான எதிரிகளைத் தப்பவிடுவதுடன், அவர்களுடைய கையாளாகவே நமது நாடு மாறிவிடக்கூடாது என்று எச்சரிப்பதே இக்கட்டுரைகளின் நோக்கம்.

எமது தோழர்களால் நடத்தப்படும் ‘வினவு’ என்ற இந்த இணையத் தளம், மிகக் குறுகிய  காலத்தில் ஆயிரக்கணக்கான வாசகர்களைப் பெற்றிருக்கிறது. வாசகர்கள் அனைவரும் வினவு முன்வைக்கும் கருத்துகளை வழிமொழிபவர்கள் அல்ல. அதில் மாறுபடுபவர்களும், எதிர்த்து வாதாடுபவர்களும் உண்டு. அத்தகைய மாற்றுக் கருத்துகளும் விவாதங்களும் அதே தளத்தில் பின்னூட்டங்களாக வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றை இங்கே சுருக்கித் தந்திருக்கிறோம். வாசகர்களின் ஒவ்வொரு மாற்றுக் கருத்துக்கும் வினவு தோழர்கள் பதிலளிக்கவில்லை. அது சாத்தியமும் இல்லை. எனினும் இந்தக் கட்டுரைகளையும், அதன் எதிர்வினைகளையும் ஒரு சேரப் படிப்பவர்கள் ஒரு பிரச்சினையைப் பரிசீலிக்கும் பல கோணங்களையும், அந்த அரசியல் பார்வைகளின் பின்னால் உள்ள வர்க்க நலன்களையும் புரிந்து கொள்ள இயலும். இது தமிழில் புதிய முயற்சி. பார்ப்பனிய இந்து மதவெறி பாசிசத்திற்கும், அமெரிக்கபயங்கரவாதத்திற்கும் எதிரதான சமரில் இந்நூலும் உங்களுக்கு ஒரு ஆயுதமாய்ப் பயன்படும்  என்று நம்புகிறோம்.

தோழமையுடன்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.
ஜனவரி, 2009

பக்கம் – 88, விலை ரூ.35
இந்த நூல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில் ( எண்: 99 – 100 ) விற்பனைக்குக் கிடைக்கும். கண்காட்சி முடிந்தவுடன் கீழைக்காற்று கடையிலும், புதிய கலாச்சாரம் அலுவலகத்திலும் பெற முடியும். முகவரிகள்,

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம், 2ஆவது நிழற்சாலை,
( 15-ஆவது தெரு அருகில் ), அசோக் நகர், சென்னை – 600 083.
தொலைபேசி: 044 – 2371 8706 செல்பேசி : 99411 75876

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
தொலைபேசி: 044 – 28412367

வெளியூர், மற்றும் வெளிநாட்டு நண்பர்கள்  vinavu@gmail.com , pukatn@gmail.com முகவரிகளில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய பதிவுகள்

சீமான் கைது: கதர் வேட்டி நரிகளின் திமிரை வீழ்த்துவோம்!

86

தமிழகத்தைப் பிடித்திருக்கும் சாபக்கேடுகளில் ஒன்று காங்கிரசுக் கட்சி. நூறாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தக் கோமான்களின் கட்சி துவங்கப்பட்டதே வெள்ளைக்காரர்களின் பிச்சையில்தான். அடிமைத்தனத்தோடு பொறுக்கித் தின்பதற்கு இங்கிலாந்து ராணியிடம் மனு கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதே இக்கட்சியின் புல்லரிக்கும் வரலாற்றுப் பெருமை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இக்கட்சிக்கு தலைமை தாங்கிய திலகர்தான் இந்துத்வ விசமத்தனங்களுக்கு சுளி போட்டவர். விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் யானை முகத்தோனை பிரம்மாண்ட சைசில் பல கெட்டப்புக்களில் வடித்து கடலை நாசமாக்கும் விதத்தில் கரைத்து, இந்த எழவு மும்பையோடு நிற்காமல் எல்லா புண்ணியஸ்தலங்களுக்கும் பயணம் செய்து இப்போது தமிழகத்திலும் ஊன்றிவிட்டது. அமைதியாக இருந்த பல ஊர்கள் இன்று விநாயகர் சதுர்த்தியால் வருடா வருடம் கலவரங்களைச் சந்திக்கின்றன. இன்றைய பா.ஜ.கவின் முன்னோடிகளில் ஒருவராக இருந்த பெருமை இந்த கதர்க் கட்சியினருக்கு உண்டு.

அப்புறம் வந்த காந்தி அஹிம்சை என்ற பெயரில் மக்களிடம் முன்முயற்சியோடு எழுந்து வந்த ஏகாதிபத்தியப் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்து வெள்ளையனுக்கு வாழ்வு கொடுத்தவர். இதற்கிடையில் இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து தோல்வியுற்றதும் இனிமேல் இந்தியாவைச் சுரண்டுவதற்கு பொருளில்லை என்று காங்கிரசுக் கோமான்களிடம் அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு அதற்குத் தோதாக பிசினஸ் உடன்படிக்கைகளை போட்டுக்கொண்டு வருமானத்திற்கு வழி ஏற்படுத்தி விட்டு எஸ்கேப் ஆனான் வெள்ளைக்காரன்.

இதைத்தான் கதர் வேட்டி நரிகள் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்ததாக கூச்சமேயில்லாமல் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் 47க்கு முந்தைய காலத்தில் இந்த நரிகளின் தலைவர்கள் எல்லா வகையிலும் பிற்போக்கிற்கு பல்லக்கு தூக்கிக் கொண்டிருந்தனர். தேவதாசி முறையைத் தடை செய்வதை சத்யமூர்த்தி அய்யர் வெறியோடு எதிர்த்தார். சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனர்களுக்கும், மற்ற சாதிக்காரர்களுக்கும் தனிப்பந்தி வைத்து சநாதனத்தை வெறியோடு காப்பாற்றிய வ.வே.சு.அய்யரும் இந்த மாட்டுக்கட்சியில்தான் குப்பை கொட்டினார். இந்தி ஆதிக்கத்தையும், குலக் கல்வித் திட்டத்தையும் கொண்டு வரத்துடித்த ராஜாஜி என்ற துக்ளக் சோவின் தாத்தாவாக இருக்கும் தகுதி கொண்டவரைப்பற்றி பலரும் கேள்விப்பட்டிருக்கலாம். இவருக்குப் பிறகு பதவிக்கு வந்த பச்சைத்தமிழர் காமராஜரின் காலத்தில்தான் பண்ணையார்களாக இருந்த பல நரிகள் தொழிலதிபர்களாக அவதாரமெடுத்தன. இதைத்தான் காமராஜரின் பொற்காலமென்று நரிகள் நிறுத்தாமல் ஊளையிடுகின்றன. அவ்வப்போது இந்தப் பொற்கால ஆட்சியினை மீட்டு வரப்போவதாக பாச்சாவும் காட்டுகின்றன.

இப்படி தோற்றத்திலிருந்தே கோமான்களின் கட்சியாக மேய்ந்து வந்த இந்த நரிகளின் மேல் மக்களுக்குள்ள வெறுப்புதான் திராவிட இயக்கத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. அன்றிலிருந்து தொண்டர்களில்லாமல் தலைவர்களாக உள்ள நரிகள் மட்டும் மேயும் ஒரு கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் அது இந்த நரிகளின் கட்சிதான். மாவட்டத்திற்கு ஒரு நரி வீதம் கோஷ்டி வைத்துக்கொண்டு அடித்துக் கொள்வதும், வேட்டி கிழியும் வண்ணம் ஒரு பாக்சிங் ஸ்டையிலயே இந்தியாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமை இந்த குள்ள நரிகளின் கட்சிக்குத்தான் உண்டு என்பதை நாளை பிறக்கப்போகும் ஒரு குழந்தை கூட அறியும்.

நிலப்பிரபுக்களாகவும், தியேட்டர், திருமண மண்டபங்களின் உரிமையாளர்களாகவும், பெட்ரோல், கேஸ் ஏஜென்சிகளின் முகவர்களாகவும், பிரபலங்களுக்கு கடன் கொடுக்கும் மேட்டுக்குடி பைனான்சியர்களாகவும், பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டுகளாகவும், சிறு, நடுத்தர தொழிலதிபர்களாகவும், சுய நிதி கல்லூரிகளின் அதிபர்களாகவும், தொழில் செய்யும் இந்த நரிகள் இந்தப் பதவிகளை அதிகாரத்தில் இருக்கும் வலிமை கொண்டு பிக்பாக்கட் அடித்திருக்கின்றன. இந்த தொழில் வியாபாரத்தைத் தக்கவைப்பதற்காகவே அரசியல் கட்சி என்ற பெயரில் கூச்சநாச்சமில்லாமல் மூவர்ணக் கொடியை கட்டிக்கொண்டு தமிழகத்தை கேட்பார் கேள்வியில்லாமல் ரைட்ராயலாக மேய்ந்து வருகின்றன.

தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் பலகோடி மதிப்பிலான சொத்துக்களை வைத்திருக்கும் இந்நரிக் கட்சியினர் இதுவரை எந்த மக்கள் பிரச்சினைக்காகவும் தெருவில் இறங்கி போராடியது கிடையாது. தி.மு.கவும், அ.தி.மு.கவும் போடும் பிச்சையினால் தொகுதிகளைக் கைப்பற்றி தொந்தி வளர்க்கும் கூட்டம் என்றுமே மக்களைப்பற்றி கவலைப்பட்டதும் கிடையாது. ராஜீவின் கொலையாளிகளை சோனியா காந்தியே மன்னித்தாலும் இந்த கு.நரிகள் மட்டும் மன்னிக்காதாம். காலையில் எழுந்து தினத்தந்தி பார்த்து யார் நரிகளின் தமிழகத் தலைவர் என்று தெரிந்து கொள்ளும் கொழுப்பெடுத்த அடிமை நரிகள் ஈழத்தின் துயரத்தை கண்டால் ஆவேசத்துடன் மோத வருகின்றன. இது இன்று நேற்றைய விவகாரமல்ல. பகத்சிங்கையே தூக்கில் போடுவதற்கு வெள்ளையனுக்கு முகூர்த்த நாள் குறித்துக் கொடுத்த முண்டங்கள்தான் இந்த நரிகளின் முன்னோர்கள் எனும்போது ஈழத்தில் சாகும் அப்பாவித் தமிழனெல்லாம் எம்மாத்திரம்? ஆனாலும் அடிமைகள் ரோஷம் கொண்டவர்களாக தங்களைக் கருதிக் கொள்ளும் பசப்பலைத்தான் சகிக்க முடியவில்லை.

டெல்லியில் கனைத்தால் சென்னையில் இருமும் இந்த சுயமரியாதை கிஞ்சித்துமற்ற கு.நரிகள், புலிகள் என்றதும் பங்குச் சந்தை காளை போல சிலிர்த்துக்கொண்டு பாய்கின்றன. விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமென்பதால் வாயை மூடிக்கொண்டு போகவேண்டுமாம். விடுதலைப்புலிகளெல்லாம் ஒன்றுமேயில்லை எனுமளவுக்கு பல இலட்சம் ஈராக்கிய, ஆப்கானிய மக்களை கொன்ற பயங்கரவாதி செருப்பு புகழ் புஷ்ஷுவிடம் இந்தியா உங்களை நேசிக்கிறது என்ற நரிகளின் டர்பன் கட்டிய பிரதம நரி பீற்றிக் கொண்டதாம். கோழி மாக்கான் புஷ்ஷை அயோத்தி ராமனுக்கு மேலாக பூஜை செய்யும் நரிகள் ஈழத்தில் தமிழனென்பதால் கொல்லப்படும் போரை மறைமுகமாய் ஆதரித்துக் கொண்டு கூடவே புலி பீதியைப் பரப்பி வருகின்றன. அமெரிக்க பயங்கரவாதி புஷ்ஷையும், இலங்கை பயங்கரவாதி பக்ஷேவையும் ஃபிரண்ட்லியாகப் பார்க்கும் கு.நரிகளிடம் போய் ஈழத்தமிழருக்காக ஆதரவைக் கேட்ட தமிழக அரசியல்வாதிகளை எதைக்கொண்டு அடிப்பது? சத்திய மூர்த்திமேல் சில சிறுகற்கள் பாதிப்பேயில்லாமல் வீசப்பட்டதை வைத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விட்டதாக ஜவுளித் துறை அமைச்சராக இருக்கும் நரியொன்று இதை மத்திய அரசு கவனிக்கும் என்று மிரட்டுகிறது. இப்படி பல அனாமதேயங்களெல்லாம் வாய் திறந்து பேசுவதற்குக் காரணம் கருணாநிதியின் சரண்டர் அரசியல்தான்.

ஈழத்தமிழனைக் கொல்வதற்கு துப்பாக்கியும் கொடுத்து, ரவையையும் திணித்து கூடவே சாகப்போகும் தமிழன் வயிறு ஃபுல்லாக நிரப்பிக் கொண்டு சாக வேண்டுமென்பதற்காக வாய்க்கரிசியையும் கொடுத்த புண்ணியவான்களை வைத்தே போரை நிறுத்தி விடப்போவதாக கருப்பு சிகப்பு மாடுகள் பிலிம் காட்டுவதை எந்த லேப்பில் கழுவி சுத்தம் செய்வது? இதில் பிரணாப் முகர்ஜியை வேறு கொழும்புக்கு அனுப்பி சாதனை படைக்கப் போகிறார்களாம். எதற்கு? ரேடார் வேலை செய்கிறதா இல்லையா என்று பரிசோதிப்பதற்காகவா? ஈழத்தில் நடக்கும் போர் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்படவில்லை, புலிகளுக்கு எதிராக நடத்தப்படுகிறது என்று ராஜ பக்க்ஷே மட்டுமல்ல தமிழகத்து குள்ள நரிகளும் ஒரே சுவரத்தில் ஊளையிடுகின்றன. இந்த நரிகளே இப்படி பேசும்போது சுப்பிரமணிய சுவாமி, துக்ளக் சோ, ஜெயலலிதா, இந்து ராம் போன்ற ஈழத்திற்கு எதிராக துவேசத்தைக் கக்கும் கொட்டை போட்ட நரிகளைப் பற்றி சொல்லவேண்டியதில்லை.

சீமான் உணர்ச்சி வசப்பட்டு பேசியதாக ஈழத்து ஆதரவாளர்கள் சிலர் வருத்தப் பட்டுக் கொள்கிறார்கள். சீமான் ஒரு ரசிகரைப்போல புலிகளையும், பிரபாகரனையும் ரசிப்பதில் எங்களுக்குக்கூட உடன்பாடு இல்லைதான். மேலும் ஈழத்தமிழரின் விடுதலை என்பது பிரபாகரனின் வீரத்தில் முடிந்து வைக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் மனமுருகி பேசும் சீமானின் பார்வையில் பல பழுதுகள் உள்ளன. என்றாலும் அப்படி இரசிப்பதற்கு உரிமை கிடையாதா என்ன? அவர் என்ன கொலைக் குற்றமா செய்து விட்டார்? கண்ட கஸ்மாலங்களுக்கெல்லாம் ரசிகர் என்ற பெயரில் பாலபிஷேகம் செய்யும் நாட்டில் பிரபாகரனைப் பற்றி பேசக்கூடாதா என்ன? பேசினால் உடனே ராஜீவின் ஆவியை சாமியாடி வரவழைத்து விடுவார்களாம். ஒருவேளை ஆவி வரவில்லையென்றாலும் இவர்களே போதையேற்றிக் கொண்டு ராஜிவுக்காக உளறுவார்களாம். அப்படி என்னதான் கிழித்து விட்டார் இந்த ராசீவ்காந்தி? டெல்லி சீக்கியர்களிடன் கேட்டால் ராஜீவின் காலத்திய கதர் நரிகள் இரத்தம் குடித்த கதையை ஆத்திரத்துடன் விவரிப்பார்கள். போபால் மக்களிடன் கேட்டால் பல நூறு உயிர்களைக் கொன்ற யூனியன் கார்பைடு நிறுவனம், ராஜீவின் உதவியோடு ரத்த பானம் குடித்த கதையை மறக்க முடியாமல் கதறுவார்கள். இதுபோக ஈழத்திற்கு அமைதிப்படை என்ற பெயரில் ஒரு ஆக்கிரமிப்பு படையை அனுப்பி பலநூறு உயிர்களை கொன்று குவித்த ராஜீவ் காந்தி ஒரு பயங்கரவாதிதான் என்று சீமான் கேட்டதில் என்ன தவறு?

இந்திய இராணுவம் இலங்கை, காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் என எங்கெல்லாம் தனது படையை அனுப்பியதோ அங்கெல்லாம் கொன்ற கணக்கும், தின்ற கணக்கும், கற்பழித்த கணக்கும் பெருக்கிப்பார்த்தாலும் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பிரம்மாண்டமானவை. எனில் இதற்குக்காரணமான கு.நரிகளின் தலைவர்களை கேவலம் ஒரு வைக்கப்போரில் தைக்கப்பட்ட பொம்மைக் கொடும்பாவியாகக் கூட கொளுத்தக் கூடாதா?

பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கொடும்பாவி கொளுத்தியதற்காக இதுவரை கருப்புதாரின் கறையை மிதிக்காத கதர் வேட்டி நரிகளெல்லாம் உடனே அண்ணா சாலையில் மறியல் என்று சீனைப்போடுகின்றன. சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அடித்தால் எனென்று கேட்க ஆளில்லாத  இந்த துப்புக்கெட்ட நரிகள் ஒரு இடத்திற்கு பத்து அல்லது பதினைந்து என்ற கணக்கில் கூடிக் கொண்டு போர் செய்கின்றனவாம். இதையே மானங்கெட்ட தமிழ் தொலைக்காட்சிகள் மாபெரும் போராட்டமாகக் கவரேஜ் பண்ணும் கொடுமையை என்னவென்று சொல்ல?

சீமானும், கொளத்தூர் மணியும், மணியரசனும் கைது செய்யப்பட்டிருப்பது தமிழனுக்கு நேர்ந்த மாபெரும் அவமானம் என்று கருத வேண்டும். ஈழத்திற்காக குரல் கொடுத்தால் அதுவும் நரிகள் விரும்பியபடி கொடுக்காவிட்டால் உடனே கைது என்றால் இந்த அயோக்கியத்தனத்துக்கு ராஜபக்ஷேயே மேல் என்று ஒத்துக் கொண்டு போய்விடலாமே? செத்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழனுக்காக குரல் கொடுப்பதை விட தமிழ்நாட்டு தமிழனுக்கு சுயமரியாதை உணர்வை ஊட்டுவது காலத்தின் கட்டாயம். அதற்காகத்தான் சற்றே காரமான மொழியில் இந்தப் பதிவை எழுதுகிறோம்.

சட்டசபைக்கு ஐம்பது சீட்டும், பாராளுமன்றத்திற்க்கு பத்து சீட்டும் பெற்றுக்கொண்டு ஏதோ தமிழகமே இவர்களின் ஆணைக்கு கீழே செயல்படக் காத்து நிற்பதைப் போல பாவ்லா காட்டும் இந்த கு.நரிக் கட்சியை தமிழக மக்கள் உடனே தடை செய்யவேண்டும். இது ஈழத்தமிழருக்குச் செய்யவேண்டிய உதவியை விட அவசரமான கடமை. இல்லையேல் இந்த நரிகள் ஈழத்திற்காக  இங்கயே ஒரு கல்லறையைக் கட்டி சோனியா காந்தியை வைத்து திறப்பு விழாவும் நடத்திவிடுவார்கள்.

ஞாநியின் ‘தவிப்பு’ !

ஞாநியின் ‘தவிப்பு’ – நாவல் விமரிசனம்

“துப்பாக்கிக் குழாயிலிருந்து அரசியலதிகாரம் பிறக்கிறது” அரசியல் சித்தாந்தமல்ல

  • துப்பாக்கியால் ஞானஸ்நானம் பெற்றவர்களெல்லாம் போராளிகளா?
  • நீதியற்ற வழிமுறைகளைக் கோருகிற இலட்சியம் நீதியான இலட்சியமா?
  • உயிரைத் துறக்கும் போராளிக்கு நேர்மையைத் துறக்கும் உரிமை உண்டா?

நாவல் விமரிசனத்தினூடாகப் பரிசீலிக்கப்படும் கேள்விகள் இவை.

ஆனந்த விகடனில் தொடர் கதையாக வெளிவந்த ஞாநியின் (பத்திரிகையாளர்) ‘தவிப்பு’ எனும் நாவல் நூல் வடிவில் வெளிவந்துள்ளது.

இந்த நூல் வெளியீட்டுக் கூட்டத்தில் பேசிய ‘நந்தன்’ சிறப்பாசிரியர் சுப. வீரபாண்டியன், தனித்தமிழ்நாட்டிற்கான நியாயங்களை ஞாநி நேர்மையாக, தெளிவாகக் குறிப்பிட்டுள்ளாரென்றும், எனவே அந்த வகையில் உள்ளடக்கத்தில் தனக்கு முரண்பாடு இல்லை என்று கூறியிருக்கிறார்.

“பஞ்சாப், அசாம் மாநிலங்களில் நடந்த போராட்டங்களும் அவற்றை டெல்லி ஆட்சியாளர்கள் எதிர்கொண்ட விதமுமே இந்தக் கதைக்கு ஆதார நிகழ்ச்சிகள். அவற்றை தமிழ்ச் சூழலுக்குப் பொருந்துவதாக மாற்றி அமைத்துக் கற்பனை செய்திருக்கிறேன்” என்று தன் முன்னுரையில் கூறுகிறார் ஞாநி.

தனிநாடா – இல்லையா என்பது குறித்த அரசியல் விவாதம் நமது நூல் விமரிசனக் கட்டுரையின் வரம்புக்கு அப்பாற்பட்டது.

ஆனால், ஈழ விடுதலை இயக்கங்களுக்கும், தமிழ்நாட்டில் தற்போது பேசப்படும் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் இருக்கின்ற தொப்புள் கொடி உறவை மறுக்கவியலாது.

இனி கதைக்கு வருவோம்.

இந்திய ஒருமைப்பாடு, அநீதிக்கெதிரான மிதவாத எதிர்ப்பு ஆகிய கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட, அரசியலெல்லாம் அதிகம் தெரிந்து கொள்ளாத தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான விஜயன்.

தனது சொந்த ஊரான செங்கல்பட்டில் பல இடங்களில் குண்டு வெடித்த செய்தியைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைகிறான். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அவனுக்கு உள்துறை அமைச்சகத்திலிருந்து அழைப்பு வருகிறது.

குண்டு வெடிப்பை நடத்திய தமிழ்நாடு விடுதலைப் புரட்சியாளர் குழு (தவிப்பு) என்கிற அமைப்பின் தலைமைக் குழுவினருடைய புகைப்படங்கள், வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய கோப்பினை விஜயனிடம் காட்டுகிறார் உளவுத்துறைத் தலைவர்.

விதவிதமான உயர்கல்வி கற்ற தமிழ் இளைஞர்களின் படங்களுக்கு நடுவே ஆனந்தி! அவனுடைய கல்லூரித் தோழி. நம்ப முடியாமல் அந்தப் புகைப்படத்தையே வெறித்துக் கொண்டிருந்த விஜயனிடம் “உங்களுக்கு இவளைத் தெரியுமா?” என்று கேட்கிறார் உளவுத்துறை அதிகாரி. “தெரியும்” என்கிறான் விஜயன். “அது எங்களுக்கும் தெரியும்” என்று பதில் வருகிறது.

மறுநாளே தவிப்பு குழுவினர் சென்னை தொலைக்காட்சி நிலைய இயக்குனரைக் கடத்தி விட்டனர் என்ற செய்தி வருகிறது. தவிப்பு குழுவினரைச் சந்தித்துப் பேசும் பொறுப்பு விஜயனிடம் ஒப்படைக்கப்படுகிறது. விஜயன் புறப்படுகிறான்.

ஆனந்தியின் புகைப்படத்தைப் பார்த்தது முதல் அவளை நேரில் சந்திக்கும் தருணம் வரை விஜயனின் சிந்தனையில் ஆனந்தியைப் பற்றிய பழைய நினைவுகள் கிளர்ந்தெழுகின்றன.

-விஜயனின் நினைவுகளினூடாக ஆனந்தியின் பாத்திரம் நாவலில் நிறுவப்படுகிறது.

ஆனந்தியை நேரில் சந்திக்கிறான் விஜயன். “நீ எப்படி இந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தாய்” என்று கேட்கிறான். எண்பதுகளில் போலீசால் கொலை செய்யப்பட்ட நக்சல்பாரி இயக்கத் தோழர் பாலனின் (நாவலில் இராஜன்) கதையைச் சொல்லி, “அதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமேயில்லை” என்று அப்போதுதான் தெளிந்ததாகச் சொல்கிறாள் ஆனந்தி.

தனித் தமிழ்நாடு கேட்பதற்கான நியாயங்கள் குறித்து ஆனந்தியும் அவளது தோழர்களும் வைத்த வாதங்கள் எதற்கும் விஜயனிடம் பதில் இல்லை. ஆனால் வன்முறை இதற்கு வழியல்ல என்ற கருத்து அவனிடம் ஓங்கி நிற்கிறது.

தவிப்பு குழுவினரின் கோரிக்கைகளில் சில அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டதனடிப்படையில் நிலைய அதிகாரி விடுவிக்கப்படுகிறார்.
ஆனால் இந்தப் பேச்சு வார்த்தையினூடாக தவிப்பு குழுவினருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சன், தன்னைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறுகிறான். ‘எச்சரிக்கையாகப் பயன்படுத்துவது’ என்று முடிவு செய்கிறது தவிப்பு.

பணமும் ஆயுதங்களும் ஏற்பாடு செய்து தருகிறது உளவுத்துறை. குழுவினரிடன் குடிப் பழக்கமும் உல்லாசமும் பரவுகிறது. பணத்துக்காக போதை மருந்து கடத்தல் துவங்குகிறது.

ஆனந்தியும் சில தோழர்களும் எதிர்க்கின்றனர். பிறகு ஒரு நாள் சக தோழர்களாலேயே கொல்லப்படுகின்றனர்.

விஜயன் அழுகிறான். தன்னைப் போல தெளிவு பெற வாய்ப்பு இருந்தவர்களெல்லாம் வேடிக்கை பார்க்கிறவர்களாக மட்டுமே இருந்துவிட்டதனால்தான், டெல்லியில் அதிகாரத்தில் வந்து அமரும் யாரோ ஒருவனின் அயோக்கியத் தனத்துக்காக அன்பும் அறிவும் ததும்பும் இளைஞர்கள் பலியாக்கப்படுகிறார்கள். எனவே அரசியலில் ஈடுபடுவதென முடிவு செய்கிறான்.

செங்கல்பட்டில் இடைத் தேர்தலில் நிற்கும் மத்திய உள்துறை அமைச்சருக்கெதிராகப் போட்டியிட்டு வெல்கிறான்.

ஒரு அமைச்சன் தனது சொந்த அரசியல் லாபத்துக்காகப் போராளிக் குழுவொன்றைப் பகடைக் காயாக்கிக் கொண்டான் என்பதல்ல பஞ்சாப், அசாம், காஷ்மீர் பிரச்சினைகளின் அனுபவம். உறவாடி, ஊடுறுவி, கைக்கூலிகளை உருவாக்கிக் கெடுப்பது என்பது, ‘ஒருமைப்பாட்டையும்’, பிராந்திய மேலாதிக்கத்தையும் காப்பாற்ற இந்திய அரசு மேற்கொள்ளும் போர்த் தந்திரமாகவே உள்ளது.

அதேபோல ஆனந்தியுடனான விஜயனின் நட்பும், அவனிடம் தங்கிக் கிடக்கும் ஆனந்தியைப் பற்றிய நினைவுகளும், எட்டாண்டுப் பிரிவை நியாயப்படுத்துவனவாக இல்லை.

ஆனந்தியின் மரணத்தினால் குற்ற உணர்வுக்கு ஆளாகும் விஜயன், அதிகாரிகள் – அமைச்சர் – உளவுத்துறை ஆகிய அனைவரிடமும் நெருங்கியிருந்து சூடுபட்ட பின்னரும், நம்பிக்கையுடன் தேர்தலில் நிற்கிறான் – வெல்கிறான். இது வலிந்து ஒட்டவைக்கப்பட்ட முடிவாக இருக்கிறது.

-இவ்வாறு நாவலின் பாத்திரப் படைப்பு, கலைத் தன்மை, ஒத்திசைவு ஆகியவற்றை நாவலின் வரம்புக்குள்ளேயே நின்று விமரிசிக்கலாம்.

ஆனால் நாவலின் மையமான கதாபாத்திரங்களான போராளிகள், அவர்களது சிந்தனை, நடவடிக்கைகள், அவை எழுப்பும் கருத்தியல் ரீதியான வினாக்கள் ஆகியவற்றினூடாக ‘விடுதலை இயக்கம்’ என்பதைப் புரிந்து கொள்வது அதைவிட முக்கியமானது.

இதை ஒரு இயக்கத்தின் கதையாகச் சொன்னால், தியாக உள்ளம் கொண்ட படித்த இளைஞர் குழுவொன்று சிறிது வழி தவறியதால் அழிந்த கதை என்று சொல்லலாம்.

அல்லது ஆனந்தியின் கதையாகச் சொல்வதென்றால், கவிதை உள்ளமும் தலைமைப் பண்புகளும் கொண்ட ஒரு பெண், சக தோழர்களின் தவறுகளால் அநியாயமாகப் பலியான கதை என்று சொல்லலாம்.

“தொடர்கதை முடிவடைந்து பத்து மாதங்களுக்குப் பிறகும் எங்கேனும் சந்திக்கும் ஏதோ ஓர் வாசகர் ‘ஆனந்தி செத்துப் போயிருக்க வேண்டியது அவசியம்தானா?’ என்று கேட்டுக் கொண்டுதானிருக்கிறார். எனக்குள்ளும் அதே கேள்வி இருக்கிறது” – என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் ஞாநி.

கதை சொல்லப்பட்டிருக்கிற முறையிலும் சரி, வாசகர்கள் பழக்கப்பட்டிருக்கும் முறையிலும் சரி, இது ஆனந்தியின் கதைதான். எனவே ஆனந்திக்காக வாசகர்கள் வருந்துவதில் வியப்பில்லை.

“பலவீனமில்லாத இயக்கம் இருக்க முடியாது; போராளிகள் மடிந்தாலும் போராட்டம் தொடரும் என்று முடித்திருக்க வேண்டும்” என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் சுப. வீ.

தவிப்பு இயக்கத்தின் பலம் எது பலவீனம் எது? ஆனந்தி உயிர் பிழைத்திருந்தால் – ஆனந்த விகடன் வாசகர் அடையக்கூடிய மன ஆறுதலுக்கு மேல் – வேறென்ன நடந்திருக்கும்? தேர்தல் பாதையில் நம்பிக்கை கொண்ட விஜயனும் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்ட ஆனந்தியும் உண்மையில் அரசியல் எதிர்த்துருவங்களா?

இந்தக் கேள்விகளுக்கு நாம் விடை காண முயல வேண்டும்.

“ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், நல்லெண்ணம் மிக்க சில முட்டாள்தனமான நம்பிக்கைகள் அறிஞர்களின் மூளைகளில் ‘தேவையான முறையில்’ தோன்றுகின்றன” என்றார் பிளக்கானவ்.

அத்தகைய அறிஞர்கள் ‘வீரர்களாகவும்’ ஆகிவிடும்போது அவர்கள் தம்மை உயர்வகை மானிடர்களாகப் ‘பணிவுடன்’ கருதிக் கொள்கிறார்கள்.

அவர்கள் மக்களை எவ்வளவுதான் நேசித்தாலும் மக்களை பூச்சியங்களின் கூட்டம் என்றே ‘அன்புடன்’ மதிப்பிடுகிறார்கள்.

பூச்சியங்களுக்குத் தலைமை வகிப்பதன் மூலம் அவற்றுக்கு மதிப்பை ஏற்படுத்தித் தருகின்ற “எண்கள்” என்ற தகுதியில், மக்களின் ஜீவமரணப் பிரச்சினைகளில் அவர்களை ஈடுபடுத்தாமலேயே, அவர்கள் மத்தியில் பணியாற்றாமலேயே, அவர்களுக்காக முடிவெடுக்கும் உரிமையைத் தம் கையிலெடுத்துக் கொள்கிறார்கள். இது தம்முடைய தியாகத்துக்கு மக்கள் வழங்க வேண்டிய ‘நியாயமான விலை’ என்று உளப்பூர்வமாக நம்புகிறார்கள்.

எதார்த்தமே கொள்கையின் உரைகல்லாக இருக்க வேண்டும் என்ற விஞ்ஞானத்தை இவர்கள் மறுக்கிறார்கள். தங்கள் சொந்த மன உணர்வுக்கேற்ப யதார்த்தத்தைப் பிசைந்து கொள்கிறார்கள்.

இத்தகையவர்கள்தான் தவிப்பு குழுவினர்.

சிந்தனை ஒன்று – முகங்கள் மூன்று

மக்களாகிய மந்தைகள் மீது ஒருவகை வெறுப்புக் கொண்ட குமாரசாமி; அனுதாபம் கொண்ட ஆனந்தி. இவையிரண்டும் ஒரே நடுத்தர வர்க்க சிந்தனையின் இரண்டு முகங்கள்.

பண்பாட்டு விழுமியங்கள், கலை ரசனை, அறநெறிகள் போன்ற அனைத்திலும் குமாரசாமியுடன் தீவிரமாக வேறுபடும் ஆனந்தி தனித் தமிழ்நாடு என்ற அரசியல் கொள்கையில் மட்டும் உடன்படுவதால் இருவரும் தவிப்பு குழுவின் மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள்.

மற்றெல்லாவற்றிலும் ஆனந்தியுடன் ஒத்திசைவு கொண்ட விஜயன், வன்முறைப் பாதையை மறுக்கின்ற ஒரே காரணத்தால் அந்நியன்.
விஜயனும் ஆனந்தியும் வேறானவர்களா? இல்லை. இவர்களும் கூட அதே சிந்தனையின் இரண்டு முகங்கள்தான்.

அதனால்தான் ஆனந்தி ஒரு தீவிரவாதக் குழுவின் உறுப்பினர் என்று கேள்விப்பட்டதும் அதிர்ச்சியடைகிறான் விஜயன். “பொருந்தாத பொருட்கள் – ஆனந்தியும் துப்பாக்கியும், ஆனந்தியும் வெடிகுண்டும். ஆனந்தியும் கடத்தலும். இவை எப்படிப் பொருந்த முடியும்” என்று அதிசயிக்கிறான். அவளை நேரில் சந்திக்கும்போது கேட்கிறான்.

ஆனந்தி பதில் சொல்கிறாள்: “எங்களுக்கும் இந்த வன்முறை சம்மதம் இல்லைதான்… அதன் மொழியில் பேசினால்தான் அதற்குப் (அரசுக்கு) புரிகிறது என்பதால் குண்டுகளை வெடிக்க வேண்டியிருக்கிறது.”

“ஒரு நல்ல நண்பனோடும் இடைவெளி வைத்துப் பேச வேண்டிய நிலைக்கு என்னைத் தள்ளியிருக்கிற சூழ்நிலை எனக்கு அலுப்பாக இருக்கிறது. இந்த வன்முறைகள் எப்போது முடியும் என்ற தவிப்பு என்னை அலைக்கழிக்கிறது.. இதையெல்லாம் செய்தாக வேண்டிய கட்டாயத்துக்கு எங்களைத் தள்ளியிருக்கிற உங்கள் அரசாங்கம் மீது எனக்கு மேலும் மேலும் வெறுப்பாயிருக்கிறது. நிறைய முகமூடிகளை அணிந்து கொண்டு போராட வேண்டியிருப்பது அலுப்பாக இருக்கிறது… ஒவ்வொரு முகமூடியாக உதற வேண்டியிருக்கிறது. வன்முறை கூட ஒரு முகமூடிதான். எங்கள் உண்மையான முகங்கள் வேறு. நீ அதைப் புரிந்து கொண்டால் நான் எவ்வளவு சந்தோஷப்படுவேன்.”

ஆம்! ஆனந்தியும் துப்பாக்கியும் பொருந்தாத பொருட்கள்தான் என்று அவளே விளக்கிவிட்டாள். இந்தக் குமுறலைக் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள்.

கட்டாயத்துக்கு ஆளானவர்கள்!

“இதையெல்லாம் செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு எங்களைத் தள்ளியிருக்கும் அரசாங்கம்…” – எதையெல்லாம்? நகரின் மத்தியில் குண்டு வைத்து பொதுமக்களைக் கொல்வது போன்ற ‘புரட்சிகர’ நடவடிக்கைகளையெல்லாம்!

கட்டாயத்திற்கு ஆளானவர்கள்! எப்பேர்ப்பட்ட புகழ்மிக்க சொற்றொடர்! தனது சொந்த நடவடிக்கைக்கான தார்மீகப் பொறுப்பிலிருந்து நடுத்தர வர்க்கம் விடைபெற்றுக் கொண்டுவிட்டது!

யூதர்களைக் கொலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு மனிதாபிமானமுள்ள ஜெர்மன் அதிகாரிகளை உள்ளாக்கிய நாஜி அரசு, நம்மூரின் ‘நேர்மையான’ அதிகாரிகளை ஊழலுக்கு உடன்பட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கும் அமைச்சர்கள், ‘முற்போக்கு’ இளைஞர்களை வரதட்சிணை வாங்கும் கட்டாயத்திற்கு ஆளாக்கும் பெற்றோர்கள்!

இந்த இரண்டு வார்த்தைகள் அளிக்கும் தார்மீகப் பாதுகாப்பில்தானே நடுத்தர வர்க்கம் வாழ்ந்து கொண்டிருக்கிறது!

அப்படியானால் இந்த வன்முறைக்கு யார் பொறுப்பேற்பது? ‘இந்த வன்முறை கூட ஒரு முகமூடிதான்’ என்று கூறி தார்மீகப் பொறுப்பை முகமூடியின் மீது சுமத்துகிறாள் ஆனந்தி. “நிறைய முகமூடிகளை அணிந்து கொண்டு போராட வேண்டியிருப்பது அலுப்பாக இருக்கிறது” என்கிறாள்.

புரட்சி என்பது முகமா, முகமூடியா?

விந்தை! ஒரு சராசரி மனிதன், தனக்கு ஏற்கனவே அணிவிக்கப்பட்டிருக்கும் முகமூடிகளை ஒவ்வொன்றாகக் கழற்றியெறியும் முயற்சியினூடாகத்தான் புரட்சியாளனாக மாறுகிறான். சாதி, மதம், இனம், சமூக அந்தஸ்து, தகுதி போன்ற பல முகமூடிகளைப் பிய்த்தெறியும் துன்பமும் புரட்சியாளனாக, முரணற்றவனாக உருவாகும் இன்பமும் பிரிக்கவொண்ணாதவை.

வன்முறை என்பது புரட்சியாளனின் முகமூடி அல்ல; சூழ்நிலையின் கைதியாக, தன் சொந்த விருப்பத்துக்கு விரோதமாக ஈடுபடும் இழிந்த நடவடிக்கையல்ல வன்முறை.

ஒரு புரட்சிகர அமைப்பும் அதன் உறுப்பினரும் சுதந்திரமாக, அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து உணர்வுப் பூர்வமாக ஈடுபடும் நடவடிக்கை. உயிருக்குப் போராடும் மனிதனைக் காப்பாற்றுவதும், எதிரியைக் கொலை செய்வதும் அவனது உணர்வுப் பூர்வமான நடவடிக்கைகள்தான்.

ஆனால் “நான் அவளில்லை” என்கிறாள் ஆனந்தி. அவள் விஜயனின் ‘பழைய’ ஆனந்திதான். புரட்சிக்காரி என்பதுதான் அவளுடைய முகமூடி. அதனால்தான் அவளுக்கு ‘அலுப்பாக’ இருக்கிறது.

தமிழன் திருந்த மாட்டான்!

தங்களது சொந்த மன உணர்வின் அடிப்படையில் சமூக நிலைமையை மதிப்பிட்டதால் தோன்றுவது தவிப்பு; அதே மன உணர்வுக்கு மக்களும் வரவில்லை என்பதால் ஏற்படுவது அலுப்பு.

இதே அலுப்புதான் ‘தமிழன் திருந்த மாட்டான்’ என்று அறிஞர்களைப் பேச வைக்கிறது. “எனக்கென்ன வந்தது. நான் வசதியாக வாழ்ந்து விட்டுப் போயிருக்கலாம்” என்று அங்கலாய்க்க வைக்கிறது.

தமது வாழ்க்கை வசதிகளை விட்டொழித்ததன் மூலம் தங்களது விடுதலையைச் சாதித்துள்ளதாக அவர்கள் கருதுவதில்லை. “உங்களுடைய விடுதலைக்காக மற்றவர்கள் இழக்க விரும்பாததை நான் இழந்தேன்” என்று மக்களுக்கு நினைவு படுத்துகிறார்கள். “நினைத்திருந்தால் நான் நடுத்தர வர்க்க அற்பனாகவே வாழ்ந்திருக்க முடியும்” என்று சொல்வதன் மூலம், தற்போது தான் அணிந்திருப்பது முகமூடிதான் என்பதை மக்களுக்கு நினைவு படுத்துகிறார்கள்.
இந்த முகமூடிக்காரர்களின் அலுப்பின் உள்ளே உறைந்திருப்பது நடுத்தர வர்க்க மேட்டிமைத்தனம்; பூச்சியங்களுக்குத் தலைமை தாங்கும் ‘எண்களின்’ அகம்பாவம்!

இந்த அலுப்புதான் பொருளாதாரம், அரசியல், பண்பாடு ஆகியவை குறித்த அறிவியல் பூர்வமான ஆய்வுகளை ஏளனத்துடன் நிராகரிக்கிறது. தங்கள் சொந்த நடைமுறை குறித்த விமரிசனங்களை வன்மத்துடன் எதிர்கொள்கிறது.

எயிட்ஸ் விளம்பரத்தின் நீதி!

நாவலுக்கு வருவோம். “ஆயுதம் தருகிறேன். பணமும் தருகிறேன். என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று தவிப்பு குழுவினரிடம் கூறுகிறான் உள்துறை அமைச்சன்.

“அவ்வாறு பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை” என்று கருதுகிறது மத்தியக் குழுவின் பெரும்பான்மை. ‘இது ஆபத்தானது’ என்கிறாள் ஆனந்தி.

இது இலட்சியத்துக்கு எதிரான நடைமுறை என்றோ, நெறி தவறிய செயல் என்றோ ஆனந்தி கூறவில்லை. இதிலிருக்கும் ‘ஆபத்தை’ மட்டுமே சுட்டிக் காட்டுகிறாள்.

ஆபத்து எதில்தானில்லை? ஆர்ப்பாட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடு நடக்கும் ஆபத்து இருக்கிறது; ஆதிக்க சக்திகளை எதிர்த்தால் கொலை செய்யப்படும் ஆபத்து இருக்கிறது; ஏன், உண்ணாவிரதம் இருந்தால்கூட செத்துப் போகும் ஆபத்து இருக்கிறது.

உளவுத்துறையைப் பயன்படுத்துவது என்ற முடிவு தங்கள் இலட்சியத்திற்கு ஏற்படுத்தும் ஆபத்தையோ, தங்கள் நாணயத்திற்கு ஏற்படுத்தும் ஆபத்தையோ, மக்களுக்கு ஏற்படுத்தவிருக்கும் ஆபத்தையோ ஆனந்தி கருதவில்லை. தங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை எண்ணியே கவலைப்படுகிறாள்.

எயிட்ஸ் தடுப்பு விளம்பரங்களும் கூட இப்படித்தான் சொல்கின்றன. “உங்கள் மனைவியைத் தவிர யாருடனும் உறவு வைத்துக் கொள்ளாதீர்கள். அப்படி வைத்துக் கொள்வதென்றால் ஆணுறை அணியுங்கள்.”

முதல் வரியில் ஒழுக்கக் கோட்பாடு. இரண்டாவது வரியில் ஆபத்தைத் தடுக்கும் எச்சரிக்கை. ஆணுறை அணிந்து ஆபத்தைத் தவிர்ப்பவர்களின் கள்ளத்தனம், அதன் காரணமாகவே நல்லொழுக்கமாகி விடுமா?

தந்திரங்கள்

ஆம். அப்படித்தான் ஆகிவிடுகிறது! இந்திய உளவுத்துறை, இந்திய இராணுவப் பயிற்சி ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டபோதும் அமைதிப்படையை எதிர்த்து நின்றதனால் புலிகள் நெறி தவறாதவர்களாகி விட்டார்கள்; அது மட்டுமல்ல, “எச்சரிக்கையாகப் பயன்படுத்திக் கொள்ளும்” இந்தக் கோட்பாடு, விடுதலைப் போராட்டத்தின் “நடைமுறைத் தந்திரம்” என்ற அரசியல் அந்தஸ்தையும் பெற்றுவிட்டது.

இதே தந்திரத்தின் அடிப்படையில், ஈழத்தமிழர்களின் போராட்டம் இந்துக்களின் போராட்டம் என்று கூறி தாக்கரேயின் ஆதரவைப் பெறலாம்; காஷ்மீர் விடுதலையை எதிர்ப்பதன் மூலம் ஈழ விடுதலையைத் துரிதப்படுத்தலாம். எதுவும் செய்யலாம்.

ஆனால் இவையெதுவும் போராளிகளின் ஆளுமை மீது, போராளி அமைப்பின் மீது, அவர்களது நேர்மை, நல்லொழுக்கத்தின் மீது, அவர்களது இலட்சியத்தின் மீது ஒரு சிறிய கீறலைக் கூட ஏற்படுத்தாது என்பதுதான் அவர்களது ஆதரவாளர்களின் நம்பிக்கை.

ஏனென்றால் “இலட்சியம், வழிமுறைகளை நியாயப்படுத்துகிறது.”

· இதுதான் தவிப்பு குழுவினரின் கோட்பாடு. அவர்கள் மட்டுமல்ல இந்திய அரசின் துணைகொண்டு ஐ.ஆர்.8 போல தமிழீழத்தைக் குறுகிய காலத்தில் அறுவடை செய்ய எண்ணிய ஈழத்தின் எல்லா ‘தவிப்பு’ குழுக்களுக்கும் இதுதான் கோட்பாடு.

இவர்கள் மட்டுமல்ல; எப்படியாவது தனித்தமிழ்நாடு பெறத் தவிப்பவர்கள், எப்படியாவது புரட்சியை விரைவுபடுத்தத் துடிப்பவர்கள், எப்படியாவது (ஜெ யுடன் சேர்ந்தாவது) பாரதிய ஜனதாவைத் தோற்கடிக்க முயலும் போலி கம்யூனிஸ்டுகள்…. இன்னோரன்ன அனைவருக்கும் இதுதான் கோட்பாடு.

அதனால்தான் கடத்தல்காரர்களிடம் மாமூல் வாங்குவது, அவர்களையே இயக்கத்தில் சேர்ப்பது, பேருந்து நிலையங்களில் குண்டு வைத்து மக்களைக் கொல்வது போன்ற நடவடிக்கைகளும் ஆனந்திக்கு முறிவை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் “இலட்சியம் வழிமுறைகளை நியாயப்படுத்துகிறது.”

நீதியான லட்சியம்
நீதியற்ற வழிமுறைகள்

“நியாயப்படுத்துகிறது” என்ற இந்தச் சொல்லே நியாயமற்ற ஒரு கொள்கை அல்லது செய்கைக்கு, அது தன்னியல்பில் பெற்றிராத ஒரு தகுதியை வலிந்து அதற்கு வழங்கும் மோசடியாகும். நெறியற்ற நடவடிக்கைகளுக்கு ‘இலட்சியப் போர்வை’ போர்த்தி மறைக்கும் பித்தலாட்டமாகும்.

இலட்சியம் வழிமுறைகளை நியாயப்படுத்துவதில்லை; தீர்மானிக்கிறது. அதே போல, வழிமுறைகளும் இலட்சியத்தின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.

இலட்சியத்திற்கு உகந்த வழிமுறை கடைப் பிடிக்கப்பட வில்லையானால், எத்தகைய வழிமுறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றனவோ அதற்குப் பொருத்தமான இலட்சியத்தையே அடைய முடியும்.

“நீதியற்ற வழிமுறைகளைக் கோருகின்ற இலட்சியம் நீதியான இலட்சியமல்ல” என்றார் மார்க்ஸ்.

இலட்சியத்திற்கும் – வழிமுறைக்கும், அறிவியலுக்கும் – அறநெறிக்கும், கொள்கைக்கும் – நடைமுறைக்கும் இடையே இருக்க வேண்டிய இணைப்புக் கண்ணியை மார்க்சியத்தின் துணை கொண்டு மட்டுமே அறிவியல்பூர்வமாக நிறுவ முடியும்.

அரசியல் – அறவியல் முரண்பாடு

தாக்குதல் – தற்காப்பு, போராட்டம் – சமரசம், தியாகம் செய்தல் – தேவையற்ற தியாகத்தைத் தவிர்த்தல் போன்ற பல பிரச்சினைகள் தோற்றுவிக்கின்ற ‘அரசியல் – அறவியல்’ முரண்பாடுகளை மார்க்சியத்தின் துணை கொண்டு மட்டுமே அறிவியல் பூர்வமாகப் பரிசீலித்து விடைகாண முடியும்.

மற்றெல்லா இசங்களும், அவற்றைப் பின்பற்றும் இயக்கங்களும் ‘குத்துமதிப்பாக’ இவற்றைப் பற்றிப் பேசலாம்; அவரவர் வசதிக்கேற்ப வரையறுத்துக் கொள்ளலாம்; தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். அவற்றில் ஓர் ஒருங்கிணைவு இருக்க முடியாது.

போராட்டத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் எதிரியுடன் தற்காலிக சமரசம் செய்து கொள்வதன் ‘அரசியல் தேவை’ குறித்து ஒருவர் பேசினால், அதனையே ‘துரோகம்’ என்று அறவியல் வழிநின்று இன்னொருவர் சாட முடியும்.

“அமைச்சனின் கூலிப்படையாக மாறுவதற்கா இத்தனை தியாகங்கள் செய்தோம்” என்று ரவித்தம்பி அறவியல் (தார்மீக) ஆவேசத்துடன் கேட்கும் போது, “ஆளும் வர்க்கங்களின் உள் முரண்பாடுகளைப் பயன்படுத்துவதில் என்ன தவறு” என்று குமாரசாமி அரசியல் ரீதியாக அதற்கு மடையடைக்க முடியும்.

நாவல் முழுவதிலும், தவிப்பு குழு முழுவதிலும், அவர்களுடைய சிந்தனை – செயல்பாடு முழுவதிலும் இந்த முரண்பாடு நிரம்பியிருக்கிறது.

நாய் விற்ற காசு கடிக்கும்!

கோப்பை நிரம்பிவிட்டது; அது வழிவதற்கான கடைசித் துளி மட்டுமே தேவைப்படுகிறது. அந்தக் கடைசித்துளிதான் போதை மருந்துக் கடத்தல்.

“நாய் விற்ற காசு குரைக்காது, போதைப் பொருட்கள் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படாது: வேறு எந்த நாட்டுக்காரனோ பயன்படுத்தட்டும்” என்று கூறுகின்ற தமிழ்மணி, குமாரசாமியின் நியாயங்களை ஆனந்தி எதிர்க்கிறாள்.

போதைப் பொருள் கடத்தலை நிறுத்துவது என்று முடிவு செய்யப்படுகிறது. ஆனால் விடுதலை இயக்கத்தைக் கடத்தல் இயக்கமாக மாற்றி, அந்தக் கடத்தலுக்கு ‘உதவி செய்யாவிட்டால் கொன்றுவிடுவோம்’ என்று இயக்கத்தின் ஆதரவாளர் ஒருவரையே மிரட்டிய தமிழ்மணி, குமாரசாமி போன்றோர் இயக்கத்தில் தொடர்ந்து இருப்பதைப் பற்றி ஆனந்திக்கும் குழுவினருக்கும் ஆட்சேபம் எதுவும் இல்லை.

அப்பாவியா – விஷமியா?

ஒரு மனிதனை எப்படி மதிப்பீடு செய்வது? வேறொரு இடத்தில் இதற்கு விளக்கம் தருகிறாள் ஆனந்தி. தவிப்பு குழுவினால் கடத்தப்பட்ட பாண்டே எனும் அதிகாரியை – தங்கள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் – கொன்று விடுவோம் என்று ஆனந்தி கூறிய போது “அதெப்படி நியாயம்” என்று கேட்கிறான் விஜயன்.

“ஒருவரை அப்பாவி என்றோ விஷமி என்றோ ஒட்டு மொத்தமாக வர்ணித்துவிட முடியாது. பாண்டே சாதுவான நல்ல மனிதராக இருக்கலாம். நீ கூடத்தான்… ஆனால், அரசாங்கத்தின் கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்பில் இருக்கும் போது, உங்கள் நடவடிக்கைகள் எமது தமிழ் மக்களுக்குச் சாதகமாக இருக்கின்றனவா, எதிரானவையா என்பதைப் பொறுத்துத்தான் உங்கள் அப்பாவித்தனம் தீர்மானிக்கப்படும்” என்கிறாள் ஆனந்தி.

இந்த அளவுகோலை குமாரசாமிக்கும் பொருத்த வேண்டும் என்று ஆனந்தி எண்ணவில்லை. பாண்டேயைப் போல கட்டளையை நிறைவேற்றும் பொறுப்பில் அல்ல, முடிவுகளை எடுக்கும் பொறுப்பில் உள்ள குமாரசாமி, ஜனநாயக விரோதமாக தன்னிச்சையாக முடிவுசெய்த போதை மருந்து வியாபாரம் அப்பாவித்தனமானதா? அறியாமையால் செய்த பிழையா?

குமாரசாமியை ஒரு போராளி என்றே மதிப்பிடுகிறாள் ஆனந்தி. “ஒரு மனிதனை ஒட்டுமொத்தமாக இன்ன தன்மை கொண்டவரென்று வரையறுத்து விட முடியாது” என்ற ஆனந்தியின் சிந்தனையும் இங்கே வேலை செய்கிறது.

கலப்பற்ற மனிதன் உண்டா?

தன்னுடைய அனைத்து சுய முரண்பாடுகளையும் நியாயப்படுத்துவதற்கு நடுத்தரவர்க்கம் தன் கைவசம் வைத்திருக்கும் வாளும் கேடயமும் இந்தக் கோட்பாடுதான்.

ஒரு பொருள், மனிதன் அல்லது இயக்கத்தின் பன்முகத் தன்மையை ஆராய்ந்து, அதன் சாராம்சமென்ன என்பதை வரையறுத்து, பிறகு அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சியை மதிப்பிடுவதுதான் அறிவியல் நோக்கு.

“இயற்கையிலும் சரி சமுதாயத்திலும் சரி, ‘கலப்பற்ற’ நிகழ்வுகள் எவையும் இல்லை.” ஆனால் ஒரு நிகழ்வின் தன்மையை இன்னதென்று வரையறுத்துச் சொல்லும் நேரத்தில், அதில் இது கலந்திருக்கிறதே “என்பதை யாரேனும் நினைவுபடுத்துவாரானால் அவர் அளவு கடந்த அசட்டுப் புலமை வாய்ந்தவராகவோ அல்லது சொற்புரட்டராகவோ எத்தராகவோதான் இருக்க வேண்டும்” என்றார் லெனின்.

சந்தனக் கடத்தல், போதை மருந்து கடத்தல், உளவுத்துறை உறவு ஆகிய எதை வேண்டுமானாலும் தமிழர் விடுதலைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனும் கண்ணோட்டம், பழமைவாதம், ஆணாதிக்கம் ஆகிய அனைத்தும் குமாரசாமியிடம் இருக்கின்றன. எனினும் அவனை போலீசு சித்திரவதைக்குப் பணியாத உயிரைத் துச்சமாக மதிக்கும் போராளியாகவே மதிப்பிடுகிறாள் ஆனந்தி.

இந்த நூலின் வெளியீட்டு விழாவில் பேசிய சுப.வீரபாண்டியனும் இதையேதான் வேறு வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார். “பலவீனமில்லாமல் ஒரு இயக்கம் இருக்க முடியாது.”

பலத்தை வென்றது பலவீனம்!

ஆனால் என்ன விந்தை! பலவீனம் பலத்தை அழித்துவிட்டது. ஆனந்தி கொலை செய்யப்படுகிறாள். ஆனந்தியின் கருத்துக்களை ஆதரித்த வேலு என்ற மத்தியக்குழு உறுப்பினர் விஜயனுக்கு எழுதிய கடிதம் நாவலின் இறுதிப் பகுதியில் வருகிறது.

“அடுத்து வரும் நாட்களில் எங்கள் இயக்கம் மக்கள் முன்பு கொச்சைப் படுத்தப்படும். நாங்கள் செய்த தவறுகள் அம்பலப்படுத்தப்படும். அந்த வேளையில் தமிழ் விடுதலைப் போராளிகள் என்றாலே இப்படித்தான் என்ற கருத்து மக்கள் மனதில் தோன்றத் தொடங்கும்.

இல்லை. அப்படி இல்லை. ஒழுக்கம், அறநெறிகள், மனித நேயம் இவற்றில் ஆழ்ந்த பற்றுள்ள பல போராளிகள் ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டதால்தான் இந்தச் சீரழிவுகள் நிகழ்கின்றன என்பதை மக்கள் உணரச் செய்ய வேண்டும். அதை உங்களைப் போன்றோரால்தான் செய்ய முடியும் என்பதாலேயே இந்தக் கடிதம். எங்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டி அல்ல, எமது மானத்தை, சுய மரியாதையைக் காப்பாற்றவே இக்கடிதம்.”

இழக்க ஏதுமில்லாப் போராளிகள்!

தம்மையும், ஆனந்தியையும் அறநெறியில் பற்றுக் கொண்டவர்களாகக் கூறுகிறார் வேலு. அறநெறியில் பற்றுக் கொண்ட ஆனந்தி கொலை செய்யப்படுவதற்கு முன்பு உள்துறை அமைச்சனை சந்திக்கிறாள். தமிழகத்தில் தங்களை நசுக்கும் நோக்கத்துடன் இறக்கப்பட்டிருக்கும் ராணுவம் உடனே விலக்கப்பட வேண்டும் என்று கோருகிறாள். “விலக்காவிட்டால்?” என்று கேட்கிறான் அமைச்சன்.

ஆனந்தி பதிலளிக்கிறாள். “எங்களுடன் நீங்கள் நடத்திய பேரம் பற்றி முதலமைச்சர் ஆறுமுகத்துக்கும், பொது மக்களுக்கும் அறிவிப்போம். அது பகிரங்கமாவதில் எங்களுக்கொன்றும் இழப்பு இல்லை. நீங்கள்தான் தேர்தலில் நிற்கிறீர்கள்!”

“எங்கள் தவறுகள் அம்பலமாகும்; நாங்கள் கொச்சைப்படுத்தப் படுவோம். இருப்பினும் அதைச் சந்திப்போம். ஆனால் உன்னை அம்பலப்படுத்தாமல் விடமாட்டோம்” என்றுகூடச் சொல்லவில்லை ஆனந்தி.

அமைச்சன் பதவியை இழக்கலாம்; தேர்தலில் தோற்கலாம்; ஆனால் அவனிடம் இழப்பதற்கு மானம் இல்லை. இலட்சியமும் இல்லை.

எங்களுக்கும் இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்கிறாள் ஆனந்தி. ஆனால் வேலுவோ “இந்த உறவாடலில் நாங்கள் இழந்தவை ஏராளம்” என்று கடிதம் எழுதுகிறார்.

கள்ள உறவின் இரகசியங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் திறமையில்தான் இவர்களது “அறநெறியின் ஆன்மா” ஒளிந்திருக்கிறது போலும்!

இந்தியா ராஜீவை இழந்தது
ஈழம் விடுதலையை இழந்தது

ஈழப் போராளிகளுடனான இரகசிய உறவில் இந்திய அரசு ராஜிவ் காந்தியை இழந்தது; சில நூறு சிப்பாய்களை இழந்தது. ஈழ மக்களோ தம் விடுதலையை இழந்தார்கள். ஆனந்திகளுக்கோ இழப்பு ஒன்றுமில்லை!

தாங்கள் தமிழ் மக்களுக்கிழைத்த நம்பிக்கைத் துரோகத்தைப் பற்றியோ, அவர்களது ‘விடுதலை’யைத் தொலைத்தது பற்றியோ அக்கடிதம் வருந்தவில்லை: தங்கள் மானத்தை சுயமரியாதையைக் காப்பாற்றவே கவலைப்படுகிறது. தங்களது நடவடிக்கையின் சமூக விளைவுகளை எண்ணி வருந்தாமல், தன் நிலை எண்ணி வருந்தும் அறிவாளிகளின் உளவியல் இது.

பூச்சியங்களுக்குத் தலைமை தாங்கும் அகம்பாவத்தில் திளைத்திருந்த ‘மதிப்பு மிக்க’ எண்கள், இதோ தன்னிரக்கத்தில் வீழ்ந்து விட்டன!

அந்த இடத்தில் சிக்கெனப் பொருந்துகிறது ஆனந்திக்குப் பிடித்தமான சுந்தர ராமசாமியின் (பசுவய்யா) கவிதை.

நான் விடைபெற்றுக் கொண்டுவிட்ட
செய்தி
உன்னை வந்து எட்டியதும்
நண்பா பதறாதே.
ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல்
எதுவும் அதில் இல்லை.
இரங்கற்கூட்டம் போட
ஆட்பிடிக்க அலையாதே
நம் கலாச்சாரத் தூண்களின்
தடித்தனங்களை எண்ணி
மனச் சோர்வில் ஆழ்ந்து கலங்காதே.

கலாச்சாரத் தூண்கள் (சாகித்திய அகாதமி போன்றவை) தன்னை கவுரவிக்க வேண்டுமென்ற விருப்பம், விருப்பம் நிறைவேறாததால் தனக்கு ஏற்பட்ட மனச்சோர்வு, அந்தக் கோபத்தில் வெடிக்கும் தடித்தனம் என்ற வசவு, நானும் இலைதானா – மரமில்லையா என்ற ஆதங்கம், பிறகு இலைகளின் மீது அனுதாபம்!

இதுதான் ஆனந்திக்குப் பிடித்தமான கவிதை என்றால், நாவலாசிரியர் இக்கவிதை மூலம் ஆனந்தியின் பாத்திரத்திற்குப் பெருமை சேர்க்கவில்லை.

தன்னிரக்கம்

மக்களுக்காக மரிக்கும் போராளி, தனது மறைவுக்காக மக்கள் கண்ணீர் சிந்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. தனக்காக கலாச்சாரத் தூண்கள் கண்ணீர் சிந்த வேண்டும் என்று எண்ணுபவன் போராளியல்ல; கலாச்சாரத் தூண்களால் அலங்கரிக்கப்படும் அரசவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காகப் ‘புரட்சி’யை ஒரு கருவியாகப் பயன்படித்துபவன்.

இந்தக் கவிதையின் அழகியலைக் கொண்டு ஆனந்தியின் அரசியலை மதிப்பிடலாமெனில், “எங்களைக் கண்டு கொள்; எங்களை அங்கீகரி; எங்களுடன் பேசு” என்று அரசை நிர்ப்பந்திப்பதற்காகக் குண்டு வெடிக்கும் ‘அழுத்த அரசியல்’தான் (Pressure politics) அது.

ஆனால் போராளிகள் என்பவர்கள் மக்களால் கண்டுகொள்ளப்படுவற்காக, அங்கீகரிக்கப் படுவதற்காக மக்களிடம் பேசுபவர்கள், அவர்களைத் திரட்டுபவர்கள், அவர்களைப் பேச வைப்பவர்கள், அவர்களைப் போராடச் செய்பவர்கள். ஆம்! ‘பூச்சியங்களின்’ பின்புலத்தில்தான் எண்களின் மதிப்பு உயர்கிறது.

***

ஆயுதம் தாங்கிய விஜயன்தான் ஆனந்தி! ஆயுதம் ஏந்திய அமைச்சன்தான் குமாரசாமி! ஆயுதம் தாங்கிய அமிர்தலிங்கம்தான் பிரபாகரன்!

தவிப்பு எனும் ஆயுதம் தாங்கிய அறிஞர்களின் ஊனம் அவர்களது மூளையில்தான் இருக்கிறது. அவர்களது அரசியல் சித்தாந்தம் ஒரு வேளை அவர்களுக்கு அழிவைத் தேடித்தராமல் இருந்திருந்தால், தமிழ் மக்கள் தங்களுக்கு நேரவிருக்கும் அழிவை எதிர்த்துப் போராட நேரிட்டிருக்கும.

***

இது சீனப் புரட்சியின் ஐம்பதாவது ஆண்டு. தோழர் மாவோவின் புகழ்பெற்ற மேற்கோள் ஒன்றைக் குறிப்பிட்டு முடித்துக் கொள்வோம்.

“துப்பாக்கிக் குழாயிலிருந்துதான் அரசியலதிகாரம் பிறக்கிறது” என்றார் மாவோ. சமாதான மாற்றம், தேர்தல் பாதை என்று சரணடைந்த போலி கம்யூனிசத்திற்கு அளிக்கப்பட்ட பதில் அது.

அந்த வாக்கியம் ஓர் அனைத்தும் தழுவிய உண்மை. தொழிலாளி வர்க்கத்திற்கு மட்டுமல்ல, முதலாளி வர்க்கத்திற்கும் அரசியல் அதிகாரம் துப்பாக்கிக் குழாயிலிருந்துதான் பிறக்கிறது.

போராளிகளையும் புரட்சியாளர்களையும் இனங்காண்பதற்கான அடையாளமே துப்பாக்கிதான் என்று கருதியிருப்போர், மாவோவின் அந்த மேற்கோளை அருள்கூர்ந்து இன்னுமொருமுறை படியுங்கள்.

துப்பாக்கிக் குழாயிலிருந்து அரசியல் அதிகாரம்தான் பிறக்கிறது. அரசியல் சித்தாந்தம் பிறப்பதில்லை.

புதிய கலாச்சாரம், அக்டோபர் – 1999 ( அனுமதியுடன் )

‘தவிப்பு’
ஆசிரியர்: ஞாநி

விலை ரூ.80

நூல் கிடைக்குமிடம்

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை -600002.
044 – 28412367