privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்புதிய கலாச்சாரம்டாஸ்மாக்: அம்மாவின் மரண தேசம்! புதிய கலாச்சாரம் ஆகஸ்டு வெளியீடு

டாஸ்மாக்: அம்மாவின் மரண தேசம்! புதிய கலாச்சாரம் ஆகஸ்டு வெளியீடு

-

 புதிய கலாச்சாரம் ஆகஸ்டு 2015 டீஸர்:

“டாஸ்மாக்கை மூடு” என்ற குரல் தமிழகம் முழுவதும் எழத் தொடங்கியவுடன், ஆங்காங்கே மக்கள் போராடத் தொடங்கியவுடன், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு, படிப்படியாக மதுவிலக்கு”என்று விதம் விதமாக எல்லோரும் பேசத் தொடங்கி விட்டார்கள்.

கடையை மூடுவதற்கு தேர்தல் வரை எதற்கு காத்திருக்க வேண்டும்? பல ஊர்களில் பெண்கள் திரண்டு வந்து போராடி டாஸ்மாக் கடைகளை உடைப்பதையும் பூட்டுவதையும் நாம் பார்க்கவில்லையா? லட்சக்கணக்கில் உறுப்பினர்களை வைத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் கட்சிகள் இப்போதே தங்கள் தொண்டர்களைத் திரட்டி கடைகளை மூடலாமே! கடைகளை மூடுவதற்கு அரசதிகாரம் எதற்கு? முதல்வர் பதவி எதற்கு?

இது போகாத ஊருக்கு வழி. இவர்களுக்கு ஓட்டுப்போட்டோ, அரசாங்கத்துக்கு மனுப்போட்டோ ஒருக்காலும் டாஸ்மாக்கை மூட முடியாது. ஏனென்றால்,டாஸ்மாக் இல்லையென்றால் அரசு கஜானாவே காலி என்ற நிலைமை திட்டமிட்டே உருவாக்கப்பட்டுவிட்டது. மேலிருந்து கீழ் வரை ஆளுங்கட்சியினரும், அதிகார வர்க்கத்தினரும் கூட்டு சேர்ந்து கொண்டு முறையான வரி வருவாயை சூறையாடுகிறார்கள். பாதிக்குப் பாதி லஞ்சத்தை வாங்கிக்கொண்டு வீட்டு வரி, சொத்து வரி முதல் மின் கட்டணம் வரையிலான முறையான வருவாய்களை வசூலிக்காமல் விடுகிறார்கள், அல்லது முறைகேடாகத் தள்ளுபடி செய்கிறார்கள்.

சந்தையில் ஒரு லோடு 16,000 ரூபாய்க்கு விற்கும் ஆற்று மணலை வெறும் 600 ரூபாய்க்கு விற்று விட்டு மீதியை கீழிருந்து மேல்வரை பங்கு போட்டு தின்கிறார்கள். கிரானைட், கனிம வளம், காட்டு வளம், தண்ணீர் உள்ளிட்ட எல்லா பொதுச் சொத்துகளும், போக்குவரத்து துறை உள்ளிட்ட பொதுத் துறைகளும் இப்படி சூறையாடப்படுகின்றன. கார்ப்பரேட் முதலாளிகள் ஏற்கெனவே கட்டி வந்த வரிகள் ஒவ்வொரு ஆண்டும் குறைக்கப்படுகின்றன. அவர்களுக்கு சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன. இந்த வருமானங்களை ஈடுகட்டத்தான் சாராயம் விற்கிறது அரசு.

மல்லையா போன்ற சாராய முதலாளிகளைப் போலவே, ஜெயா-சசி, டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் போன்ற ஓட்டுப் பொறுக்கிகளும் சாராய முதலாளிகளாகவே இருக்கின்றனர். மாவட்ட அளவில் அ.தி.மு.க கிரிமினல் கும்பல்கள்தான் பார் நடத்தி கலப்பட சாராயம் விற்கின்றனர். இந்தக் கும்பலும் மாவட்ட நிர்வாகம், போலீசு உள்ளிட்ட ஒரு பெரிய வலைப் பின்னலும் இதன் பின்னால் இயங்குகிறது. டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருகின்ற வருமானத்துக்கு இணையான வருமானத்தை இந்தக் கும்பலும் சுருட்டுகின்றது. ரத்தம் சுவைத்த இந்த மிருகங்கள் மது விலக்கை அமல்படுத்தும் என்று நம்புவது மடமை.

சமூகம் நாசமாவது பற்றி இந்த அரசோ கட்சிகளோ கவலைப்படவில்லை, உண்மையில் மகிழ்ச்சியடைகின்றனர். ஏனென்றால், படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை, வேலையில் இருப்பவர்களுக்கு நியாயமான ஊதியம் இல்லை, விவசாயம் அழிந்து மக்கள் நாடோடிகளாக வேலை தேடி அலைகின்றனர். இந்தச் சூழ்நிலையில், வெறுப்பிலும் ஆத்திரத்திலும் இருக்கும் இளைஞர் சமுதாயத்திடமிருந்தும் மக்களிடமிருந்தும் இந்த அரசாங்கத்தையும் அதிகாரிகளையும் ஓட்டுப் பொறுக்கிகளையும் டாஸ்மாக் கடைதான் கவசமாக இருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

எனவே, இந்த அரசிடம் வேண்டுகோள் விடுப்பதன் மூலமோ, தேர்தலில் வாக்களிப்பதன் மூலமோ டாஸ்மாக்கை மூடிவிடலாம் என்று நம்புவதே முட்டாள்தனமானது. நம் கண் முன்னே இளைய தலைமுறை கெட்டழிவது கண்டு நெஞ்சம் நடுங்குகிறது. இனி பொறுப்பதற்கில்லை; மக்கள் இழப்பதற்கும் எதுவுமில்லை. நம்முடைய தெருவில், நம்முடைய ஊரில் சாராயக்கடை கூடாது என்றால் அதை நாம் அமல் படுத்த வேண்டும். நம்மை மீறி கடையை நடத்துவதற்கு எவனுக்கும் அதிகாரம் கிடையாது. பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை அமல்படுத்துவதுதான் ஜனநாயகம். அதற்கு எதிராக அரசின் எந்த அதிகாரம் வந்து நின்றாலும் அதனைத் எதிர்த்து நிற்க வேண்டும்.

இந்த வழியில் அல்லாது வேறெந்த வழியிலும் டாஸ்மாக்கை மூட முடியாது. இந்த உண்மையை இவ்வெளியீட்டில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகளும், நேர்காணல்களும், கள ஆய்வுகளும் வாசகர்களுக்கு உணர்த்தும்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்

Graphic1

______________________________

இதழில் இடம்பெற்றுள்ள தலைப்புகள்:

  • செய்யாறு டாஸ்மாக் கடை உடைப்பு
  • டாஸ்மாக் ஒழிப்பு – ஒரு ஒழுக்கப் பிரச்சினையல்ல!
  • குடியால் தொலைந்த குடும்பம் “வள்ளியின் கதை”
  • ஜெயா-சசி கும்பலின் ஆந்திர சாராயப் பங்காளி “ஜனநாயகப் பூங்கா – சாராயப் பூக்கள்”
  • பார்ப்பனியமும் பட்டை சாராயமும் சுரா,சோம லித்வேனிய மது, மத்ய சுவாகா….”
  • டாஸ்மாக் அருளும் இலவசங்கள்: வரமா – வக்கிரமா?
  • மதுவை ஒழிக்க முடியுமா?
  • சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம்
  • பயந்து வாழும் துப்புறவு பெண் தொழிலாளிகள்
  • எனிசி கோனியாக் – பாரிசின் விலையுர்ந்த சரக்கு அம்மாவின் டாஸ்மாக்கில்
  • சூளகிரியில் மக்கள் சூறாவளி டாஸ்மாக் கடையை பூட்டிய நீண்ட போராட்டம்
  • ஊத்திக் கொடுத்த தாய்மாமனுக்கு 307 என்றால் தாய்க்கு என்ன செக்சன்?
  • குடியில் இந்தியா – நெ.1
  • உப்பு, குடிநீர், உணவகம் வரிசையில்.. அம்மா சாராயம் எப்போது?

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

_______________________

ஆண்டுச் சந்தா உள்நாடு:  ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH  IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.

தொலைபேசி
044-2371 8706,
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________