privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்ஓசூர் கமாஸ் வெக்ட்ரா பயங்கரவாதம்!

ஓசூர் கமாஸ் வெக்ட்ரா பயங்கரவாதம்!

-

17.04.2013, ஓசூர்.

பு.ஜ.தொ.மு., ஓசூர்ஓசூரில் கனரக வாகன உற்பத்தி நிறுவனமான கமாஸ் வெக்ட்ராவில் நடக்கின்ற தொழிலாளர்கள் மீதான முதலாளித்துவ பயங்கரவாத அடக்குமுறைகளை அவ்வாலைத் தொழிலாளர்கள் தங்களின் ஒன்றுபட்ட போராட்டங்களின் வாயிலாக வெளிக் கொணர்ந்துள்ளனர். ஆலை நிர்வாகத்துக்கு சாதகமாக செயல்பட்டுவரும் தொழிலாளர் நலத்துறை, ஆய்வகத்துறையைக் கண்டித்து, மாவட்டத் தலைநகரில் கடந்த பிப்ரவரி 2013-ல் ஆர்ப்பாட்டம் என பலவேறு போராட்டங்களை நடத்திவந்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக கடந்த 15.04.2013 அன்று காலை 10 மணியளவில் ஓசூர் நகராட்சி முன்பாக ஆலைநிர்வாகத்தின் அடக்குமுறைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தொழிலாளர்கள் கலந்துக் கொண்டு ஆதரவளித்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு கமாஸ் வெக்ட்ரா கிளைச் சங்கத் தலைவர் தோழர் செந்தில் தலைமைத் தாங்கினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் சங்கர் சிறப்புரையாற்றினார். கமாஸ் வெக்ட்ரா கிளைச் சங்கத்தின் பொருளாளர் தோழர் முரளி இறுதியாக நன்றியுரையாற்றினார்.

திரளான மக்கள் திரண்டு நின்று கவணித்து ஆதரவளித்துச் சென்றனர். ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதற்கு முன்பாக ஆயிரக்கணக்கில் துண்டறிக்கைகள் அச்சடித்து நகர்முழுவதும் விநியோகித்து மக்களிடையே பிரச்சாரம் செய்திருந்தனர்.

ஓசூர் ரஷ்ய பன்னாட்டு கம்பெனி கமாஸ்வெக்ட்ராவின் தொழிலாளர்மீதான முதலாளித்துவ அடக்குமுறையை முறியடிப்போம்!
நிர்வாக அதிகாரிகளின் கிரிமினல் வேலைகளை அம்பலப்படுத்துவோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

ஓசூரில் கமாஸ் வெக்ட்ரா எனும் ரசியாவை சேர்ந்த கனரக வாகன தொழிற்சாலை இயங்கிவருகிறது. இவ்வாலையில் உற்பத்தி செய்யப்படும் லாரிகள் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 2010-ல் நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக் கட்ட எத்தனித்தது. தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தால் ரஷ்ய நிறுவனத்தின் நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக்கட்டும் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. மேலும் நயவஞ்சகமாக 2010-ல் அத்திப்பள்ளிக்கு விரட்டப்பட்ட 15 தொழிலாளர்களின் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

கமாஸ் வெக்ட்ரா கம்பெனியா? பட்டறையா?

52 நிரந்தரத் தொழிலாளர்களை கொண்ட இவ்வாலையில் தற்போது சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட 13 தொழிலாளர்கள் சஸ்பெண்டு, 3 தொழிலாளர்கள் வடமாநிலங்களுக்கு விரட்டியடிப்பு, 18 தொழிலாளர்கள் சர்வீஸ், மார்க்கெட்டிங் பிரிவுகளுக்கும் மாற்றப்பட்டு எஞ்சிய 16 நிரந்தரத் தொழிலாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு கம்பெனி இயங்குகிறதாம். நேரடி உற்பத்தி பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், அதிகாரிகளை திணித்துவிட்டு நிரந்தரத் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு கம்பெனி இந்தியாவுக்குள் வந்தால் தொழிலாளர்க்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் “2020-ல் இந்தியா வல்லரசு” ஆகிவிடும் என்றும் அப்துல்கலாம் முதல் பிரதமர் மன்மோகன்சிங் வரை பேசுபவர்களின் முகத்தில் காரி உமிழ்கிறார்கள் இவ்வாலை நிர்வாகிகள்.

ரஷ்ய நிறுவனத்தின் அடாவடிகளும், அயோக்கியத்தனங்களும்;

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை முன்னால் போடப்பட்ட 12/3 ஒப்பந்தம் மதிக்கப்படவில்லை. அசெம்பிளி லைனில் 12/3 ஒப்பந்தப்படி 34 நிரந்தரத் தொழிலாளர்கள் வழங்கப்படுவதில்லை. அதேசமயம் ஆட்குறைப்பு அடக்குமுறையும், உற்பத்தி உயர்வும் திணிக்கப்படுகிறது. 12/3 ஒப்பந்தப்படி உற்பத்தி உள்ளிட்ட நிபந்தனைகளை ஏற்று வேலைசெய்யும் 27 இளந்தொழிலாளர்களுக்கு ரூ 7,000 ஊதிய உயர்வு சட்டத்தின்படி வழங்கப்படவில்லை. இதுதவிர ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்ட போனஸ் ரூ 8,400, பரிசுப் பொருட்கள்(ரூ 5,000 மதிப்பு), சீருடை, காலணி போன்ற எதுவும் வழங்கப்படவில்லை. தொழிற்சாலை துணைத்தலைமை ஆய்வாளர் ஜெகதீசனிடம் புகார் கூறியதற்காக 8 நாட்கள் சம்பளவெட்டு செய்யப்பட்டுள்ளது.

ரசிய நிர்வாகம் உரிமைகளை பறித்து நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக்கட்டவும் கிரிமினல் வேலைகளை செய்யும் எச். ஆர், ஐ.ஆர், ஜி. எம் என்ற பெயரில் அடியாட்களை வைத்துள்ளது. ராஜூ ஆறுமுகம்(எச். ஆர்) ரூ 32 லட்சம், சுந்திரமூர்த்தி(ஜி. எம்) ரூ 24 லட்சம், காமவெறியன் ஏகாம்பரம்(ஐ.ஆர்) ரூ 18 லட்சம் என பெருந்தொகையை வெளிநாட்டு நிறுவனத்திடம் பேரம் பேசி பெற்றுக்கொண்டு தொழிலாளர்களை ஒடுக்கிவருகின்றார்கள். “இந்தியாவில் எங்கே போய் புகார் கொடுத்தாலும் எங்கள்மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கமாட்டாங்க, சும்மா இல்ல 4 கோடி ரூபாய் அரசு அதிகாரிகளுக்கு செலவு செய்திருக்கோம். மேனேஜ்மென்ட் தொழிலாளர்களையும் தொழிற்சங்கத்தையும் ஒழிக்காம விடாது.” இப்படி ரௌடிகளைவிட மிகமோசமாக கொக்கரித்துவருபவர்கள்தான் மேற்கண்ட மும்மூர்த்திகள். சொத்துக்குவிப்பு, கிரிமினல் வழக்குகள் இவர்கள்மீது பாய்வதில்லை. காரணம் இவர்கள் முதலாளித்துவப் பயங்கரவாதத்தின் அடிவருடிகள் என்பதால்தான்.

தொழிலாளர் நல அலுவலரும், தொழிற்சாலைகள் ஆய்வாளரும் நிர்வாகத்தின் உளவாளிகளே!

மேற்கண்ட அரசுத்துறை அதிகாரிகளிடம் முறையீடு செய்வது என்பது சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமமாகும். பல தொழிற்தகராறு வழக்குகள் தொழிலாளர் அலுவலரிடம் போடப்பட்டபோதும் தொழிலாளர் அலுவலர் ரமேஷ்குமார் நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்பட்டுவருகிறார். தொழிற்தகராறு சட்டம் 1947 பிரிவு 2k வழக்குக்கு போடவேண்டிய சமரச முறிவறிக்கைக்கு 12 (4)க்கு பதிலாக அவரே நிர்வாகத்தின் கட்டளைப்படி அரசாங்கத்திற்கு விவரம் தெரிவிக்காமல் திருத்தப்பட்ட தொழில்தாவா கீழ் நீதிமன்றத்துக்கு செல்லும்படி அறிவுரை கூறினார். இது ஒரு தீய உள்நோக்கம் கொண்ட கட்டப்பஞ்சாயத்து ஆகும். தொழிற்சாலை ஆய்வாளர் திரு நாகராஜன், ஜெகதீசன் ஆகியோர் தொழிலாளர்களுக்கு எதிராகவும், நிர்வாகத்திற்கு சாதகமாகவும் தங்கள் சுயலாபத்திற்காக செயல்படுகின்றனர். நிர்வாகத்தின் சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகள் குறித்து புகார் அளித்தும் பல புகார் கடிதங்களுக்கு பதில் இல்லை.

வேலை வாய்ப்புத்துறை அதிகாரிகள் தவறு செய்யும் அதிகாரிகள் மீது ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. தொழிலாளர்துறை அதிகாரிகள், தொழிற்சாலைகள் துறை அதிகாரிகள் சரிவர செயல்படவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் சென்றால் அவரும் அதே அதிகாரிகளிடம் மனுக்களை திருப்பி அனுப்புகிறார். எங்கிருந்து தீரும் மக்கள் குறை?

சாதாரண மனிதன் சட்டத்தை மீறினால் உடனடியாக பாய்கிறது சட்டம், சிறை, தண்டனை, ஆனால் முதலாளிகள் மற்றும் அவர்களின் அடியாட்களான எச்.ஆர்., ஐ.ஆர். போன்ற அதிகாரிகள் சட்டத்தை மீறும்போது சட்டபுத்தகங்கள் எல்லாம் முதலாளிகளின் கழிவறை காகிதங்களாக மாறுகிறது.

விசாரணை அதிகாரியின் துரோகங்கள்!

சஸ்பண்ட் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு விசாரணை என்ற பெயரில் ஆலைவளாகத்திற்குள் வைத்து நிர்வாகத்திற்கு சாதகமாக பதிவு செய்தும், தொழிலாளர்களை மிரட்டுவதும், தொழிலாளர்கள் கேட்கும் கேள்விகளை நிராகரிப்பதும், உதவி செய்யும் சக தொழிலாளியை மிரட்டுவதும், விசாரனைக்கு சம்மந்தம் இல்லாத அதிகாரிகள் விசாரணையில் குறுக்கீடு செய்வதும், விசாரணை குறிப்பை படித்துப் பார்க்க நேரம் கொடுக்க மறுப்பதும், விசாரணைக்கு தேவையான காலஅவகாசம் கொடுக்க மறுப்பதும் இதுபோன்ற செயல்களை விசாரணை அதிகாரி திரு. கே. கோவிந்தராஜன் செயல்பட்டுவருகிறார்.

தொழிலாளர்களை விசாரணையின்போது வெளியே போ! நான் அப்படிதான் எழுதுவேன். அதிகம் பேசினால் விசாரணையை நிர்வாகத்திற்கு சாதகமாக இன்றே முடித்துவிடுவேன் என்று கத்துகிறார். பல கம்பெனியில் நிர்வாகத்திற்கு சாதகமாக இயற்கை நீதியை மறுத்து ஒருதலைபட்சமாக செயல்பட்டதை பாதிக்கப்பட்ட டெனக்கோ(Tenneco) தொழிலாளர்களை கேட்டால் தெரியும். கோவிந்தராஜன் செய்வது அனைத்தும் மோசடி சதிவேலையாகும். தன்னை நல்லவன்போல காட்டிக்கொள்ள நேஷனல் அரிமா சங்க செயலாளர் என்று ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.

தொழிலாளர்களே!

மீண்டும் தற்போது 2013-ல் நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக்கட்ட எத்தணிக்கிறது. வெறிப்பிடித்த ரஷ்ய நிறுவனத்தின் அடியாட்கள் அடிவருடிகளை அம்பலப்படுத்துவோம்!

சட்டபூர்வ உரிமைகளை 12(3) எதையும் மதிக்காத கிரிமினல் ரஷ்ய கமாஸ் வெக்ட்ரா நிறுவனத்தின் முதலாளித்துவ பயங்கரவாத தாக்குதலை தொழிலாளர்களின் ஒற்றுமையால் முறியடிப்போம்!

ஒப்பந்த, தற்காலிகத் தொழிலாளர்கள் என்ற பெயரில் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கப்படுவதற்கு எதிராக தொழிலாளர்கள் ஓரணியில் திரண்டிடுவோம்!

அசோக்லேலாண்டு, எக்ஸைடு, கார்போரண்டம் போன்ற ஆலைகளில் வேலைப்பளு அதிகரிப்பு, ஊதிய உயர்வுக்கு முட்டுக்கட்டை பேச்சுவார்த்தை என்னும் நாடகத்தையும் லாபவெறியையும் அம்பலப்படுத்துவோம்!

தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கைக்கு எதிராக அணிதிரள்வோம்! போராடுவோம்!

தமிழக அரசே தலையிடு!

12/3 ஒப்பந்தத்தை மதித்து நடக்க உத்தரவிடு!

ஒப்பந்தத்தை மதிக்காமல் தொழிலாளர்கள்மீது அடக்குமுறை ஏவும் கிரிமினல் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடு!

சஸ்பண்ட் செய்யப்பட்ட 13 தொழிலாளர்களுக்கு உடனடியாக வேலை வழங்க உத்தரவிடு!

இவண்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கமாஸ் வெக்ட்ரா மோட்டார்ஸ் லிட்(கிளை),
(கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்கள்)
பதிவு எண்: 24 KRI,
செல்- 9788011784.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க