கடந்த மூன்று மாதங்களாக ஷப்பீர் அஹ்மத் வாஸியுல்லா தனது காலை நேரங்களை மாலேகானின் டி.எம் உயர்நிலைப் பள்ளியில் தான் கழிக்கிறார். அவரது மகன் மாஸின் வகுப்பறைக்கு வெளியே நான்கு மணி நேரங்கள் பொறுமையாகக் காத்திருக்கிறார். வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போதே 11 வயதான மாஸ் தனது தந்தை அமர்ந்திருப்பதை அடிக்கடி எட்டிப் பார்த்து உறுதிப் படுத்திக் கொள்கிறான்.
கடந்த 2006-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ம் நாள் மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரின் நாசிக் பகுதியில் அமைந்திருக்கும் அவர்களது வீட்டுக்குள் அத்துமீறி நுழையும் போலீசார், ஷப்பீரை இழுத்துச் செல்கின்றனர். அப்போது மாஸ் நான்கு வயதுச் சிறுவன்.
ஒரே இரவில் சிறுவன் மாஸின் தந்தை பயங்கரவாதியாக முத்திரை குத்தப்படுகிறார். இதனால் சக மாணவர்களின் கேலி கிண்டல்களால் மாஸ் பள்ளி செல்வதையே நிறுத்தினான். சுமார் ஏழு வருடங்களாக வீட்டிலேயே அடைந்து கிடந்தான்.
2011-ம் ஆண்டு ஷப்பீர் பிணையில் வெளியே வந்தார். எனினும், அவரது மகனை மீண்டும் பள்ளியில் சேர்க்க இரண்டு ஆண்டுகள் ஆனது. ”சிறையிலிருந்து வெளியே வந்து முதன் முறையாக எனது மகனைத் கட்டித் தழுவிய போது அவன் அதிகம் பேசவில்லை. பள்ளிக்குச் செல்வது குறித்து கேட்ட போது அவன் முற்றாக மறுத்து விட்டான்”.
“நான் பள்ளிக்குச் சென்றால், போலீசு உங்களை மீண்டும் கைது செய்து விடும் என்றான். எனவே அவனது வகுப்புகள் முடியும் வரை நான் அவனது வகுப்பறைக்கு வெளியே காத்திருக்கிறேன்” என்கிறார் ஷப்பீர். முன்பு சொந்தமாக பாட்டரிகள் விற்கும் கடை ஒன்றை நடத்தி வந்த ஷப்பீர் தற்போது சிறையில் கற்றுக் கொண்ட அக்குபிரஷர் மருத்துவத்தைக் கொண்டு பிழைப்பு நடத்தி வருகிறார்.
விசைத்தறிகளின் நகரமான மாலேகான் முன்பொரு காலத்தில் தடை செய்யப்பட்ட இசுலாமிய மாணவர் இயக்கத்தின் மையமாக இருந்தது. மாலேகான் குண்டு வெடிப்பு நிகழ்ந்த உடன் கைது செய்யப்பட்ட ஒன்பது அப்பாவி இசுலாமியர்களில் ஷப்பீரும் ஒருவர். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புக்காக கைது செய்யப்பட்ட சுவாமி அசீமானந்தா, தான் சார்ந்திருந்த வலது சாரி இந்துத்துவ இயக்கமே மாலேகான் குண்டு வெடிப்புகளுக்கும் காரணம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை அடுத்து சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டிருந்த ஒன்பது இசுலாமியர்களும் 2011-ம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
மாலேகான் வழக்கு முதலில் மகாராஷ்டிராவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாராலும், பின்னர் சிபிஐ-யினாலும் விசாரிக்கப்பட்டு வந்தது. அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலத்தை அடுத்து வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வுத் துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
ஆகஸ்டு மாத இறுதியில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் ஏதும் இல்லையென்றும், அவர்களின் விடுதலைக் கோரிக்கையைத் தாம் எதிர்க்கப் போவதில்லையென்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தது தேசிய புலனாய்வுத் துறை.
ஆக, கைது செய்யப்பட்டு ஏழு வருடங்கள் கழிந்த நிலையில் இவர்கள் ஒன்பது பேரும் அப்பாவிகள் என்று அறிவிக்கப்பட்டு வழக்கிலிருந்து முற்றாக விடுதலை செய்யப்படும் தருவாயில் இருக்கிறார்கள்.
இங்கிருந்து ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவில் நாங்கள் 56 வயதான ஷம்சுத்தா ஸோஹாவைச் சந்தித்தோம். இவர் இவ்வழக்கில் முதன் முதலாக கைது செய்யப்பட்ட நூருல் ஹூடாவின் தாய். ஹூடா நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்; இதன் விளைவாகவே இன்று வரை அவர் தாயார் இரவில் தூங்க முடியாமல் தவிக்கிறார். ”நான் கதவின் அருகாகப் படுத்துக் கொள்கிறேன். இரவு முழுவதும் அதன் இடுக்குகளின் வழியே போலீசார் வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டே இருப்பேன். எனது மகனை விசாரித்து விட்டு பத்து நிமிடங்களில் அனுப்பி வைப்பதாகச் சொல்லி இழுத்துச் சென்றனர். அவன் ஐந்தரை ஆண்டுகள் கழித்து திரும்பி வந்தான்” என்கிறார் அந்தத் தாய்.
மகன் தீவிரவாதியாக முத்திரை குத்தப்பட்டிருந்த நிலையில் யாரும் அவரது மகள்களைத் திருமணம் செய்து கொள்ள முன் வரவில்லை. “பயங்கரவாதியின் சகோதரியை யாரும் கலியாணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்று என் உறவினர்களிடம் பலரும் சொல்லி விட்டனர்” கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீரின் ஊடே சொல்கிறார். நூருலின் விடுதலைக்குப் பின் இப்போது ஒருவழியாக அவரது மகள்களுக்குத் திருமணமாகியுள்ளது.
ஷப்பீரின் பாட்டரி கடையில் ரூ 5,000 மாதச் சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்தார் நூர். தற்போது தேசிய நெடுஞ்சாலை 3-ன் ஓரமாக ஒரு பழைய மளிகைக் கடையை நடத்தி வருகிறார். ”இந்தத் தொழிலைத் துவங்க ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கி இருக்கிறேன். ஆனால், ஒரு மாதத்திற்கு 1,500 ரூபாய் தான் சம்பாதிக்க முடிகிறது” என்கிறார் நூர். இந்த தொகையைக் கொண்டு குடும்ப செலவுகளைச் சமாளிக்கவே தடுமாறும் நூரால் அவரது சொந்த சிகிச்சைக்கான செலவுகளைச் சமாளிக்கவே முடிவதில்லை. ”சிறையில் வாங்கிய அடிகளால் தலையில் இரத்தக் கட்டு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து இரத்தம் வழியும் போது யாரோ எனது தலையில் ஓட்டை போடுவதைப் போல் உணர்கிறேன்” என்கிறார் நூர்.
பாப்ரி போஸ்டர்களுக்காக கைது
மாலேகானின் உட்பகுதி ஒன்றில் நாங்கள் மௌலானா ஸாகித் அப்துல் மஜீத்தை சந்தித்தோம். முன்பொரு காலத்தில் மதகுருவாக இருந்த மஜீத், தற்போது விறகு வெட்டியாக காலம் தள்ளுகிறார். இதில் வருமானமாக அவருக்கு மாதம் 1,000 ரூபாய் கிடைக்கிறது. தார்பாலின் கூரை வேயப்பட்ட சிதிலமடைந்த வீட்டில் வசித்து வருகிறார் மஜீத். எட்டுமாத கர்ப்பிணியான அவரது மனைவி, நம் மனதைப் பிசையும் படியாக மிகவும் மெலிந்திருக்கிறார்.
மௌலானா ஸாகித் 1998-ம் ஆண்டு முதன் முதலாக போலீசு கண்காணிப்பின் கீழ் வந்துள்ளார். ”பாபரி மஸ்ஜித் (இடிப்பைக் கண்டித்து) போஸ்டர் ஒட்டியதாக என்மீது வழக்குப் பதியப்பட்டது. அதன் பின் என்னை சந்தேகத்துரியவனாக கருதிய போலீசு பல முறை முன்னெச்சரிக்கையாக கைது செய்துள்ளது” என்று சொல்லும் மஜீத்தின் வாழ்க்கை அவரது 2006-ம் ஆண்டு கைதுக்குப் பின் முற்றிலும் மாறிப் போனது. ”எனது தந்தை என்னை தலை முழுகி விட்டார். 2006 அவுரங்காபாத் ஆயுத வழக்கில் எனது சகோதரன் கைது செய்யப்படுவதற்கு என்னை பழி சொல்கிறார்” என்றார் மஜீத்.
வினோதம் என்னவென்றால் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் புனைந்த வழக்கு மொத்தமும் போலீசு ஆள்காட்டி அப்ரார் அஹ்மத் எனும் ஒரே நபரின் ஒப்புதல் வாக்குமூலத்தையே அடிப்படையாக கொண்டிருந்தது. அவர் தான் கைது செய்யப்பட்ட ஒன்பது நபர்களையும் இவ்வழக்கில் சிக்க வைத்தார். கடைசியில் பயங்கரவாத தடுப்புப் போலீஸ் அப்ரார் அஹ்மத்தையும் கைது செய்தது. அவர் தனது ஒப்புதல் வாக்குமூலத்தை 2009-ல் மாற்றிக் கொண்டார். எனினும், பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாரும் சி.பி.ஐயும் அதைப் புறக்கணித்தனர்.
ஆனால் 2011-ல் அசீமானந்தா இந்துத்துவ இயக்கங்களுக்கு மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்பிருப்பதை உறுதி செய்த பின் வழக்கு தேசிய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதன் பின்னரே ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களின் பிறிதிடமிருப்பு (அலிபி) கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகிறது. மாலேகானில் வெடித்த குண்டுகளில் ஒன்றை வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட மௌலானா ஸாகித், அந்தக் குறிப்பிட்ட நாளில் தான் அந்த ஊரிலேயே இல்லை என்கிறார். “சம்பவம் நடந்த அன்று நான் யாவாட்மல் நகரில் இருந்ததாக இருபதுக்கும் மேற்பட்டவர்கள் சாட்சியமளித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக தேசிய புலனாய்வுத் துறை அதை நம்பியது” என்கிறார்.
அனேகமாக இவ்வழக்கை விசாரித்து வரும் மும்பை செஷன்ஸ் கோர்ட் அக்டோபர் 19-ம் தேதியன்று இவர்களை வழக்கிலிருந்து முற்றாக விடுவிக்கும் மனு மீதான தீர்ப்பை அளிக்கலாம்.
வெறும் சம்பிரதாயமாக கருதப்படும் இந்த விடுதலையும் கூட இந்துத்துவ இயக்கங்களால் எதிர்க்கப்படலாம். அவ்வாறு நடந்தால் இவர்களின் விடுதலை மேலும் தாமதமாகக் கூடும். அது வரை ஷப்பீர் மாஸியுல்லாவும் பிறரும் காத்திருப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.
நன்றி : ராஷ்மி ராஜ்புட் – The Hindu
தமிழாக்கம் : தமிழரசன்
உண்மை.
Police fakhurddin had made a confession that he planned to kill Modi at Chennai. What is your take on that
Can u replay the matter which is written by vinavu here?
If u think Modi is good then answer the question raised by vinavu!
Yes….. Police office from Gujarat too accept that Modi has given GREEN SIGNAL to kill Indian citizen at Gujarat at 2002!!!!
Why?
Those who(BJP) are killing people at Gujarati and killed Gandhi(RSS) have no right to talk about Muslim
Yes suresh Both பக்ருதீன் and ADVANI ACCEPT their crimes.
Only different is Advani is a Hindu terrorist and
பக்ருதீன் is a Muslim terrorist !!!
பக்ருதீன் did crime against Hindus and
Advani did crime against Muslims
NOW TELL ME WHO IS BAD AND GOOD?
According to Indian constitution both பக்ருதீன் and ADVANI committed a crime!!!!
நியாயங்கள் மத வெறியால் புதைக்க படுகிறது. அவர்கள் நம்பும் கடவுள்கள் கூட இந்த அநியாயத்த ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறார்கள்.
Both Hindu and Muslim forgot the resent HISTORY.
During the uprising of Hindu kingdom (Sivaji) , Hindu and Muslim fight lot in central India!!!
What is the consequence?
We (Hindu and Muslim) lost our mother nation to British!!!(Mogul empire was too week due to Hindu Muslim war)
STILL WE ARE FOOL , SO WE (hINDU mUSLIM FIGHT WITH EACH OTHER)
iF WE CONTINUE THIS FIGHTING THE HISTORY WILL BE REPEATED!!!
Hello Munna ,
you pls do not think all Hindus are against Muslims!!!!
Most of the Tamil Hindus(99.9%) are secular Hindus!!!
What does secular Hindu means?
Simple meaning is We can not hurt other people in the name of God and religion…
Very few people are Hindu terrorist that is similar to Muslim terrorist.
So it is better to mingle(come together)with secular Hindus and eradicate (stamp out)Hindu and Muslim terrorists.
இந்தத் தொடுப்பில் உள்ள செய்தியைப் பாருங்கள் இது சமீபத்தில் போலீஸ் பக்ருதின், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் முதலிய அப்பாவி முஸ்லீம்கள் கைது ஆனது குறித்து செய்தி உள்ளது.
http://www.dinamalar.com/news_detail.asp?id=821763
இந்த அப்பாவி முஸ்லீம்களை இப்படிக் கைது செய்து துன்புறுத்தி பொய் வழக்குப் போடுவது குறித்து இப்போதே வினவு போன்ற பொதுநல அக்கறை கொண்டவர்கள் தடுத்து அப்பாவி முஸ்லீம்களைக் காப்பாற்ற வேண்டும். தும்பை விட்டு வாலைப் பிடிபது போல ஐந்து வருடம் கழித்து பன்னா இஸ்மாயிலும், பிலால் மாலிக்கும், போலீஸ் பக்ருதீனும் அப்பாவிகள், அவர்கள் வாழ்க்கை தொலைந்தது என்று கட்டுரை எழுதி என்ன பயன்?
ஆமாம்.. மிகவும் மோசமான இஸ்லாமிய மத வெறுப்பு இங்கு தூவப்பட்டுள்ளது.. இந்து வெறி ஓநாய்களின் விஷ கருத்துக்கள் மட்டும் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
வினவு இப்போதே பன்னா இஸ்மாயிலும், பிலால் மாலிக்கும், போலீஸ் பக்ருதீனும் அப்பாவிகள் என்ற உண்மைகளை ஆராய்ச்சி பூர்வமாகத் தக்க ஆதாரங்களுடன் எழுதி இந்துத் துவ வாதிகளின் முகத் திரையைக் கிழிக்க வேண்டும், செய்யுமா?
Why do not u write a story about Advany and Modi that they are good!!!!
———————————————————————–
———————————————————————–
I KINDLY REQUEST YOU TO WRITE about ……….
What way Advani demolished a OLD BUILDING AT AYOTHI ?
HOW MANY PEOPLE INVOLVED IN THIS “GREAT…..!” event,?
HOW MANY CALORIES HAVE BEEN SPEND FOR EVERY ONE FOR THAT DEMOLITION?
What is the real motive BJPPPPPPPPPPPPP FOR that OOOOOOld BUILDING DEMOLITION ?
WHAT WAY U R KILLING 3000 INDIANS AT GUJARAT?
//தும்பை விட்டு வாலைப் பிடிபது போல //
Yes yes we Indians do the mistake as U said above…..!
Now we are going to rectify that mistakes…..!
@all kind of terrorist should go to Pakistan
——————————————–
1. Tamil Eelam people killllllllller Sonia
2. Gujarat Indian citizen(year 2002) killlllllllller Modi
3. Punjab people killllllllllller at Delhi during Indra association
4. Hindu killller பக்ருதீன்
5. O I forgot Mr Advani!!!!
All u killllllllers should go to Pakistan- Afghanistan border and fight with each other and also fight with Taliban terrorist and all of them die!!!!
By the way…….,
We Indians are hard workers and we have lot of work to construct this nation to
killlll poverty and malnutrition amoung our humble people.
U GUYS ARE MISS LEADING IN THE NAME OF RELIGION
No religion will provide food and shelter only hard work can!
Hi அஞ்சன் குமார்,
Yes Both பக்ருதீன் and ADVANI ACCEPT their crimes.
Only different is Advani is a Hindu terrorist and
பக்ருதீன் is a Muslim terrorist !!!
பக்ருதீன் did crime against Hindus and
Advani did crime against Muslims
NOW TELL ME WHO IS BAD AND GOOD?
u see the following link!!!
It will revel the real face of the Modi mastan
https://www.vinavu.com/2013/09/23/fascist-modi-get-out/
மோடியை தவிடு பொடியாக்கிய மகஇக பொதுக்கூட்டம் ! படங்கள்
செந்தில்குமார்
அத்வானி மோடி ஆகியோர்நல்லவர்களா இல்லையா என்ற கேள்விக்கு இந்தக் கட்டுரையில் இடமில்லை! ஏனெனில், கட்டுரையின் மையக் கருத்து அப்பாவி முஸ்லீம்கள் கைது, சிறைக் கொடுமை, சித்திரவதை ஆகியவற்றுக்கு ஆளாக்கப் படுகிறார்கள் என்பதே. இந்தக் கருத்தை அவர்கள் கைது செய்யப்படும்போதே முன்வைத்திருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. அவ்வாறு செய்யாமல் விட்டு விட்டு, காலம் கடந்து செய்வதால் அப்பாவிகளுக்கு எந்த பலனும் இல்லை. இது போக, காலம் காலமாக பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் எழுதப்பட்ட குற்றவியல் சட்டத்தில் பல அப்பாவிகள் (சாதி மத பேதம் இன்றி) சிறை, சித்திரவதை, கைது ஆகிய கொடுமைகளுக்கு ஆளாகி வருவது அனைவரும் அறிந்ததே. இப்படி இருக்க, வெறுமனே ஒன்றிரு முஸ்லீம்கள் இப்படி கொடுமை அனுபவித்ததற்கு மத ரீதியான காரணம் கற்பித்து எழுதுவது முறையன்று. ஆங்காங்கே மும்பையிலும், கோவையிலும், பெங்களூருவிலும், ஐதராபாத்திலும், இன்னபிற இடங்களிலும் தொடர்ந்து வெடுகுண்டு வெடிப்புகளைநிகழ்த்தி வருபவர்கள் முஸ்லீம் மதத்தின் அடிப்படை வாதத் தீவிரவாதிகளாக இருப்பதால்தான் இந்தக் கட்டுரையில் காணப்படுவதுபோன்ற கொடுமைகள்நிகழ்கின்றன. அதற்குச் சரியான தீர்வு, தீவிரவாதநடவடிக்கையில் ஈடுபடும் முஸ்லீம்களை இனம் காணுவதில் பிற முஸ்லீம்கள் முன்நிற்க வேண்டும். பொதுவுடமை, மனித உரிமை இவற்றில் ஆர்வலர்கள் கூட அத்தகு வன்முறையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக எழுதுவதையும் பேசுவதையும் கைவிட வேண்டும். இவைதான் காலப் போக்கில்நாட்டில் மத ரீதியான மோதல்களைத் தவிர்க்க, அறவேநீக்கப் பயன்படும்.
இப்போது கைது செய்யப் பட்டிருக்கும் பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் அப்பாவிகள் என்றநிலைப்பாட்டை வினவு எடுப்பதானால் இப்போது எடுக்கவேண்டுமே அல்லாது ஐந்து வருடங்களுக்குப் பின்னர் அல்ல.
இதைநான் ஏன் சொல்கிறேன் என்றால், இப்போதே அப்படிப் பட்டநிலைப்பாட்டை எடுக்க மன உறுதியும், முஸ்லீம்கள் எல்லாரும் அப்பவிகளே என்ற அசையாநம்பிக்கையும் தேவை. அது வினவிடமோ அல்லது உங்களிடமோ இருக்கிறதா என்பதுதான் எனது கேள்வி.
Hi Anchan kumar ,
As u said ……
Those who killlllled Gandhi is also innocent?( RSS bull shits!)
Those who killlllled Indians at Gujarat during 2002 also innocent? (Modi Gang)
Those who demolished a OLD BUILDING AT AYOTHI ALSO Innocent?
These guys are criminals should be punished!!!!!!
//அத்வானி மோடி ஆகியோர்நல்லவர்களா இல்லையா என்ற கேள்விக்கு இந்தக் கட்டுரையில் இடமில்லை! //
Since Hindus (very few) are become a terrorist Muslims tooo learn from them!!!!
By killing Mr Gandhi, Rss teach Muslim terrorist for the method of killing!!!!
By Killing 3000 Indians at Gujarat, Criminal Modi gang teach Muslim terrorist how to react!!!
These Hind and Muslim terrorist are almost similar!!!
Hindu terrorist make a ACTION!!!
Muslim terrorist make a REACTION!!!
So BOTH of them should be punished according to Indian constitutional Law.
Since our constitution is following secular and socialist approach , there is no place for Religious fundamentalism and Religious Terrorism !!!!!
Mandieela arrrucha?(Did u understand at least little bit in your brain?)
//இப்போது கைது செய்யப் பட்டிருக்கும் பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் அப்பாவிகள் என்றநிலைப்பாட்டை வினவு எடுப்பதானால் இப்போது எடுக்கவேண்டுமே அல்லாது ஐந்து வருடங்களுக்குப் பின்னர் அல்ல.//
Hi Anchan kumar …,
So u advising Vinavu to support Muslim Terrorism!!!
If vinavu supports Muslim terrorism, then they can also supports Hindu Terrorism.
But this will never happened in the past, present,future!!Because they are COMMUNIST
அது என்ன?
படங்களைப் போட்டு …நன்றி தி இந்து.?.
..இதே இந்துதான் அவர்களை தீவிரவாதி என்று
எல்லா நிறத்தையும் பூசியது!
Suma Natchnu Eruku
I am a big follower of vinavu. But nowadays vinavu stared writing to support only few community && few religions. Its lost its motto && goals. I asking an question to vinavu ..?. do we expect an article about this …”http://tamil.oneindia.in/news/international/religious-tension-pakistan-as-muslims-dig-up-hindu-grave-185035.html” or “http://tamil.oneindia.in/news/international/saudi-cleric-gets-8-years-prison-raping-and-killing-child-185036.html” . Then we people will say like still vinavu on his way against all sort of terrorism.
// தீவிரவாதநடவடிக்கையில் ஈடுபடும் முஸ்லீம்களை இனம் காணுவதில் பிற முஸ்லீம்கள் முன்நிற்க வேண்டும்.//
குண்டு வைத்ததில் RSS என்ற இந்து அமைப்பினரின் பங்கும் இருக்கிறது. எத்தனை இந்துக்கள் அவர்களை இனம் காட்டியிருக்கிறீர்கள்? குண்டு வெடித்த உடன் எத்தனை இந்துக்கள் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள்?