தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேர் சிறைவைப்பு ! – சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு !
“தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரே காரணத்திர்காக மக்கள் அதிகாரம் தோழர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது போலீசு.
இந்தியாவில் இதுவரை எங்கும் நிகழ்த்தப்படாத ஒரு திட்டமிட்ட படுகொலையை நடத்திவிட்டு இந்த அரசு தனது குற்றங்களை மறைக்க மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
இது மக்கள் அதிகாரத்தின் மீதான ஒடுக்குமுறையாக மட்டும் சுருக்கிப்பார்க்க முடியாது. இந்த தூத்துக்குடி மாடல் ஒடுக்குமுறை இனி வரும் போராட்டங்கள் அனைத்தையும் ஒடுக்கும் சோதனை முயற்சியாக, பாசிச நடைமுறையாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதனை முறியடிக்க ஜனநாயக சக்திகள், அறிவுத்துறையினர், பத்திரிக்கை – ஊடகங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டியுள்ளது.” என 11.06.2018 அன்று சென்னையில் நடத்த பத்திரிக்கையாலர் சந்திப்பில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் தெரிவித்துள்ளார்.