ஸ்டெர்லைட் : கொலைக் குற்றவாளி போலீசாரை கைது செய் | இராஜு | தியாகு உரை | வீடியோ

கடந்த 29/12/2018 அன்று சென்னை நிருபர்கள் அரங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் உரிமை தமிழ் தேசம் இதழின் ஆசிரியர் தோழர் தியாகு, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி !

“தனிச்சட்டம் இயற்று ஸ்டெர்லைட்டை விரட்டு!
துப்பாக்கிச்சூடு – கொலைக் குற்றவாளி போலீசாரை கைது செய்!”

என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் சென்னை மண்டலத்தின் சார்பாக, கடந்த 29/12/2018 அன்று சென்னை நிருபர்கள் அரங்கத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இக்கருத்தரங்கத்தில் உரிமை தமிழ் தேசம் இதழின் ஆசிரியர் தோழர் தியாகு, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு ஆகியோர் ஆற்றிய உரை !

தோழர் இராஜு பேசுகையில், இந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு என்பது எவ்வாறு திட்டமிட்டு ஸ்டெர்லைட்டால் அரங்கேற்றப்பட்டது என்பதையும், அரசின் அத்தனை உறுப்புகளும் எவ்வாறு கார்ப்பரேட் சேவை செய்கின்றன என்பதையும் விவரித்துப் பேசினார். இதனை எதிர்கொள்வதற்கான அவசியம் குறித்தும் அதற்கான புதிய உத்திகளை வகுத்துக் கொள்வது குறித்தும் உரையாற்றினார்.

அவரது உரையின் காணொளி:

உரிமை தமிழ் தேசம் இதழின் ஆசிரியர் தோழர் தியாகு பேசுகையில், போலீசு எவ்வாறு மக்கள் விரோதமாக மாறியிருக்கிறது என்பதை விவரித்துப் பேசினார். மேலும் இதனை எதிர்கொண்டு ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கவிடாமல் தடுக்க  வேண்டுமெனில், ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது தமிழகத்தின் பொதுக்கருத்தாக மாற்றப்பட வேண்டும் என்றார்.

அவரது உரையின் காணொளி:

பாருங்கள் ! பகிருங்கள் !

*****

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க