ராஜஸ்தான்: அதானியின் சூரிய மின்திட்டத்திற்காக அபகரிக்கப்படும் மேய்ச்சல் நிலங்கள்
பையா கிராமத்தைச் சார்ந்த 36 வயதான மோதி சிங், “எங்கள் முன்னோர்கள் இந்த நிலத்தை ஓரானாக (புனித நிலம்) விட்டுச் சென்றனர். இந்த நிலம் தற்போது அரசுக்குச் சொந்தமானது. புனிதமான மரங்கள் என்பதால் பல ஆண்டுகளாக எந்த மரத்தையும் வெட்டவில்லை. தற்போது அதானி இந்த நிலங்களை கைப்பற்ற முயற்சிக்கிறார்” என்று கூறினார்.
உத்தரப்பிரதேசம்: கன்வர் யாத்திரைக்காக சூறையாடப்பட்ட 17,000 மரங்கள்
நீர்ப்பாசனத் திணைக்களம் வழங்கிய தகவலின்படி, ஆகஸ்ட் 9, 2024 வரை மூன்று மாவட்டங்களிலும் 17,607 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் 1,12,722 மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்பட்டதாகவும், தற்போது 33,776 மரங்களை வெட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மணிப்பூர்: துஷார் மேத்தாவின் பொய்யை அம்பலப்படுத்திய குக்கி எம்.எல்.ஏ-க்கள்
ஏற்கெனவே, கடந்த அக்டோபர் 18 அன்று மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்கை பதவி நீக்கம் செய்யக்கோரி 19 பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள் மோடிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது குக்கி எம்.எல்.ஏ-க்களின் இக்கூட்டறிக்கை பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
ராஜஸ்தான்: கல்வி மட்டுமல்ல, கல்விகூடங்களும் காவிமயம்!
இந்திய கிரிக்கெட் அணி, தூர்தர்ஷன், பி.எஸ்.என்.எல். என அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். கயவர்கள் திட்டமிட்டு புகுத்தப்பட்டு அதன் உள்ளடக்கமும் காவிமயமாக்கப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாகவே காவி நிற மாற்றம் என்பது நடந்தேறுகிறது.
400 நாட்களைக் கடந்த இஸ்ரேலின் இன அழிப்புப் போர்: கொன்று குவிக்கப்படும் பாலஸ்தீன மக்கள்
காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை 401 நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலிய போர் விமானங்களின் குண்டுவீச்சு தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய மூன்று படுகொலை தாக்குதல்களில் 51 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 164 பேர் படுகாயமடைந்துள்ளனர், வடக்கு காசாவில் பல்வேறு குடியிருப்பு கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
உ.பி: நீட் பயிற்சி மாணவியை அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை
உத்தரப்பிரதேசத்தில் இந்துமதவெறிக் குண்டர்களாலும் ஆதிக்கச் சாதிவெறி பிடித்தவர்களாலும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இவற்றில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்.
‘கிரேட் பிரிட்டனில்’ உணவு பொட்டலத்திற்காக அலையும் உழைக்கும் மக்கள்
உலகமயம்-தனியார்மயம்-தாராளமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் தோல்வி அடைந்துவிட்ட நிலையில், இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் மக்கள் எந்த மாற்றத்தையும் எதிர்நோக்கி காத்திருக்க முடியாது.
பழைய ஓய்வூதிய திட்டம் கோரி அரசு ஊழியர்கள் போராட்டம்
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் நவ.12ம் தேதியன்று ஒரு மணி நேர பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முத்துலட்சுமி: நீட் எனும் தூக்குக்கயிறுக்கு பலியாகிய மற்றொரு மாணவி
மாணவி முத்துலட்சுமியின் மரணத்தை நாம் தற்கொலை என்று கூறுவதை விட, பாசிச மோடி அரசால் நிகழ்த்தப்பட்ட படுகொலை என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். 2017-ஆம் ஆண்டில் அனிதாவில் தொடங்கிய இந்தப் படுகொலை இன்றுவரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம்: தமிழ்நாட்டை கார்ப்பரேட் கும்பலுக்கு படையிலிடும் தி.மு.க. அரசு!
வளர்ச்சி’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட்டுகளிடம் தாரைவாக்கப்படும். விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு சொந்த மாநிலத்திற்குள்ளேயே அகதிகளாக்கப்படுவர்.
அறநிலையத்துறை நடத்துவது பள்ளி, கல்லூரிகளா? பஜனை மடங்களா? | புமாஇமு கண்டனம்
தமிழ்நாட்டு மாணவ சமுதாயத்தின் மூளைகளில் காவிச் சாயம் பூசி, ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி மதவெறி கும்பலுக்குப் படையல் போடும் அயோக்கியத்தனமாகும்.
மணிப்பூர்: பழங்குடியின பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு உயிருடன் எரித்து படுகொலை!
மூன்று குழந்தைகளுக்குத் தாயான, அப்பெண்ணைக் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, உயிருடன் எரித்து படுகொலை செய்துள்ளது காட்டுமிராண்டிகளான மெய்தி இனவெறிக் கும்பல்.
பாலியல் வன்கொடுமை குற்றவாளியுடன் கூட்டாளியாக செயல்பட்ட விருத்தாச்சலம் போலீசு
பெண் காணாமல்போன வழக்கில் பாலியல் வன்புணர்வு பிரிவை சேர்க்குமாறு கோரியுள்ளனர். அப்போதுதான் விருத்தாச்சலம் போலீசு தனது கோரமுகத்தைக் காட்டத் தொடங்கியது.
புதிய ஜனநாயகம் – நவம்பர் 2024 | மின்னிதழ்
புதிய ஜனநாயகம் நவம்பர் 2024 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 30 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.
பெருகி வரும் நீரிழிவு நோய்: உழைக்கும் மக்களைக் கைவிடும் அரசு மருத்துவமனைகள்
உயிர் காக்கும் மருந்துகளையும், இயந்திரங்களையும் திட்டமிட்டு அரசு புறக்கணிப்பதானது, உயிர் பிழைப்பதற்கு வேறு வழியே இல்லாமல் தனியார் மருத்துவமனைகளை நோக்கி மக்களைத் தள்ளுவதாகும்.

























