பரந்தூர் விமான நிலையம்: கார்ப்பரேட் சேவைக்காக சொந்த மாநில மக்களை அகதிகளாக்கும் திமுக அரசு!
“மீண்டும் எமது நிலத்தைக் கையகப்படுத்துவது குறித்து ஏதேனும் அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டால் நாங்கள் அனைவரும் தற்கொலைச் செய்துகொள்வோம். அதற்கு மாவட்ட நிர்வாகமும், திமுக அரசுமே பொறுப்பு என்று ஏகனா புரம் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
“அபராஜிதா” மசோதா: பாலியல் குற்றவாளிகளை தண்டிக்கவா? தப்பிக்கவைக்கவா?
அரசியல்வாதிகளையும் மாஃபியா கும்பல்களையும் காப்பாற்ற உள்ளூர் ரவுடிகளை என்கவுண்டர் செய்வதை போல சஞ்சய் ராய் போன்ற அம்புகளுக்கு மரண தண்டனை கொடுத்துவிட்டு உண்மை குற்றவாளிகளை காப்பாற்றுவதே மம்தா அரசு கொண்டுவந்துள்ள இப்புதிய மசோதாவின் உண்மையான நோக்கம்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் பறிமுதல்: மாணவர்களை சீரழிப்பது யார்?
கார்ப்பரேட்மயத்தின் விளைவாக உருவான எஸ்.ஆர்.எம். போன்ற கார்ப்பரேட் பல்கலைக்கழகங்கள் நடுத்தரவர்க்க பெற்றோர்களை குறிவைத்துக் கொள்ளையடிக்கும் கேந்திரத்தை உருவாக்கியுள்ளார்கள் என்றால், அதன் அருகில் கஞ்சா போதைக் கும்பல் அவர்களுக்கான சாம்ராஜ்யத்தை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அரசுப் பள்ளிகளில் ஊடுருவும் காவி கும்பல்: பரம்பொருள் பவுண்டேஷன் மகாவிஷ்ணு ஒருதுளி மட்டுமே! | பு.மா.இ.மு கண்டன அறிக்கை!
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்கள் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவவே வாய்ப்பிருக்கிறது என்று இத்திட்டம் அறிவிக்கப்படும் போதே எமது அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்கும் பா.ஜ.க கும்பல்!
துப்பாக்கி முனையில் மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து மிரட்டி, “இது குறித்து வெளியே சொன்னால் உன்னைக் கொன்றுவிடுவோம்” என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
திருப்பூர்: தள்ளுவண்டி உணவகத்தைச் சூறையாடிய இந்து முன்னணி வழிபறி கும்பல்!
இந்து முன்னணி அமைப்பு வழக்கம் போல, கடையைச் சூறையாடியவர் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல என்று ஓடி ஒளிந்து கொண்டுள்ளது. இன்னொருபுறம் ராசுக்குட்டி தி.மு.க-வை சேர்ந்தவன் என்ற பொய் பிரச்சரத்திலும் ஈடுபட்டு வருகிறது.
கொல்கத்தா: மக்கள் போராட்டமாக மாறிவரும் மருத்துவர்கள் போராட்டம்!
மருத்துவத்துறை கிரிமினல்மயமாவதற்கு எதிராக குரலெழுப்ப வேண்டியுள்ளது. பெண்கள் பாலியல் மீது வன்கொடுமைகள் நடப்பதற்கு முக்கிய காரணமாக உள்ள போதைப்பொருள், ஆபாச திரைப்படங்கள் போன்றவற்றை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
இந்தியாவில் அதிகரித்துவரும் மாணவர்கள் தற்கொலைகள்
மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மற்றும் நாட்டின் தற்கொலைகள் சராசரியைவிட மாணவர்களின் தற்கொலைகள் பெருகிவருவது அச்சமூட்டும் வகையில் உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மாணவர் தற்கொலைகள் 6,654-லிருந்து 13,044 வரை உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா தேர்தல் தேதி: எஜமானின் உத்தரவுக்காக காத்திருக்கும் தேர்தல் ஆணையம்!
மொத்தத்தில் தோல்வி பயம் தலைக்கேறியுள்ள பாசிசக் கும்பல் பண-அதிகார பலத்தின் மூலம் தேர்தலை சந்திக்கவே திட்டமிடுகிறது. அப்போதும் கூட எளிதில் தேர்தலில் வெல்ல முடியாத அளவிற்கு பாசிசக் கும்பலின் தோல்வி முகம் தீவிரமாக உள்ளது
மீள்பதிவு | வ.உ.சி : ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியின் 150-வது பிறந்தநாள் | மின்னிதழ்
நாட்டின் கேந்திரமான கட்டமைப்புகளை பன்னாட்டு ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்து, நாட்டை மறுகாலனி ஆதிக்கத்திற்கு கொண்டு செல்லத் துடிக்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை முறியடிப்பதுதான் வ.உ.சி-க்கு நாம் செய்யும் கைமாறு
அசாம்: பெங்காலி முஸ்லீம்களைக் குறிவைக்கும் காவிக் குண்டர்கள்
"14 முதல் 15 குண்டர்கள் முகத்தை மூடியபடி எங்களிடம் வந்து, எங்கள் அறைகளுக்கு முன்னால் முழங்காலிடுமாறு கட்டாயப்படுத்தினர். அவர்கள் கைகளில் கத்திகள், துப்பாக்கிகள், கம்புகள், பிளாஸ்டிக் குழாய்கள் இருந்தன. அவர்கள் எங்களை பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் பிரம்பு குச்சிகளால் அடிக்கத் தொடங்கினர்".
ஹரியானா: பசுவின் பெயரில் நடக்கும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் முதல்வர் சைனி
ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, "கிராம மக்கள் பசுக்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். இது போன்ற விஷயங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியவந்தால், அவர்களை யாரால் தடுக்க முடியும்?" என்று வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார்.
வத்வான் துறைமுகம் அடிக்கல் நாட்டு விழா: மோடி அச்சம் கொண்டது ஏன்?
துறைமுகம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள வத்வான் பகுதியில் இந்த அடிக்கல் நாட்டு விழா நடைபெறவில்லை. மாறாக, வத்வானில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பால்கர் நகரில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இது ஏன்?
“புதிய மூன்று குற்றவியல் சட்டங்களைத் திரும்பப்பெறு” | மதுரை அரங்கக்கூட்டம் | செய்தி – புகைப்படம்
நடைமுறைக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் உழைக்கும் மக்களுக்கான தண்டனைகளை அதிகப்படுத்துகிறது. போலீசிற்கு அதிக அதிகாரம் வழங்குகிறது. காலனிய கால சட்டங்களை நீக்குவதாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.
லடாக்கில் புதிய மாவட்டங்கள்: மக்களை ஏமாற்ற முடியாது
தங்கள் அடிப்படை கோரிக்கைகளுக்கு முரணான இருக்கும் அனைத்து நபர்கள், கட்சிகள், இயக்கங்களையும் லடாக் மக்கள் புறக்கணிக்கிறார்கள்.