மகாராஷ்டிரா: சட்டமன்றத் தேர்தலுக்காக கலவரம் செய்யும் பாசிச சக்திகள்
உள்ளூர்வாசிகள், ”எங்களை வெளியேற சொல்ல நீங்கள் யார்?” என கேள்வி எழுப்பியுள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் உள்ளூர்வாசிகள் மீது தாக்குதல் நடத்தியும், வீடுகளுக்குத் தீ வைத்தும் சம்பாஜி ராஜேவின் ஆதரவாளர்கள், இந்துத்துவா குண்டர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
அரசாணை 151: மருத்துவத்துறையை கார்ப்பரேட் கையில் ஒப்படைப்பதற்கான சதி!
ஒருபுறம் நீட் எதிர்ப்பு பேசிக்கொண்டே, 50 சதவிகித சேவை இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை நகர்த்துவதன் மூலம் கார்ப்பரேட் சேவையில் தனது உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளது திமுக அரசு.
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: சுங்கச்சாவடியை அகற்றும் வரை மக்கள் போராட்டம் ஓயாது!
டோல்கேட் எதிர்ப்பு போராட்டக் குழு தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை ஓயப்போவதில்லை என அமைதிப் பேச்சுவார்த்தையின் முகத்தில் கரியைப் பூசினர்.
வங்கதேசத்தில் வெடித்த பிரம்மாண்டமான மாணவர் போராட்டம்
நேற்று (ஜூலை 15) டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் போராடிய நூற்றுக்கணக்கான மாணவர்களை ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பான சத்ரா லீக் அமைப்பினர் கற்களை வீசியும், தடிகள் – இரும்புக் கம்பிகளைக் கொண்டும் தாக்கினர்.
கப்பலூர் சுங்கச்சாவடி கட்டண உயர்வு: மக்கள் போராட்டங்களே தீர்வு!
ஓட்டுகள் வாங்குவதற்கு கொடுக்கப்படும் வாக்குறுதிகளை நம்பி எந்த பயனும் இல்லை; போராட்டங்கள் மூலமே நமக்கான தீர்வை பெற முடியும் என்று தொடர் போராட்ட நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
கும்மிடிப்பூண்டி ராஜ்குமார் இறப்பு: இது தற்கொலையல்ல, அரசின் கொலை
"எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி வீட்டை காலி செய்யச் சொன்னால் என்ன செய்வது? ஒரு வாரம் அவகாசம் வேண்டும்" என்று ராஜ்குமார் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அவர்கள் வீட்டினை இடிக்க முயன்றுள்ளனர்.
அருணாச்சல பிரதேசம்: சியாங் அணை கட்டுவதற்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் மக்கள்
மக்கள் எதிர்ப்பை சிறிதும் பொருட்படுத்தாத பாசிச மோடி அரசு இது போன்ற திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஏற்ற வகையில் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் வன பாதுகாப்பு சட்டத்தைத் திருத்தி அமைத்தது.
தென்கொரியா சாம்சங் தொழிலாளர் போராட்டம்: வெற்றிகரமாக இரண்டாவது நாளாகத் தொடர்கிறது
கொட்டும் மழையிலும் அனைத்து தொழிலாளர்களும் கருப்பு நிறத்தில் மழை கோட்டு அணிந்து கொண்டு தலையில் சிவப்பு நிறத்தில் தொழிற்சங்க பெயர் தாங்கிய ரிப்பனை கட்டிக்கொண்டு இராணுவம் போல் அணிவகுத்து நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பிரிட்டன் தேர்தல்: தொழிலாளர் கட்சியின் வெற்றியில் கொண்டாட ஏதுமில்லை
பழமைவாத கட்சி, தொழிலாளர் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் நேட்டோ (NATO) ஆதரவு கட்சிகள் தான். பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரிப்பதிலும் இவர்களுக்குள் ஒற்றுமை உள்ளது.
தமிழ் விரோத போக்கை கடைப்பிடிக்கும் பாரதியார் பல்கலைக்கழகம்!
அனைத்து பல்கலைக்கழகங்களும் அரசின் ஆணையினைச் செயல்படுத்தி வரும் நிலையில் பாரதியார் பல்கலைக்கழகம் மட்டும் அரசு ஆணையினை மதிக்காமல் இருப்பது பல்கலைக்கழகம் யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்ற கேள்வியினை எழுப்புகிறது.
சந்துரு அறிக்கைக்கு எதிராக பா.ஜ.க செயற்குழு தீர்மானம்
தமிழ்நாட்டில் சாதிய படுகொலைகள் அதிகரிப்பதற்குச் சாதிவெறி சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் ஊடுருவலே காரணம் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த செயற்குழு கூட்டம் அமைந்துள்ளது.
தென்கொரியா: சாம்சங் நிறுவனத்தில் வெடித்தது தொழிலாளர்களின் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்ட ம்
நிர்வாகத்திற்கு ஒரு மாதம் அவகாசம் அளித்து ஜூலை 8, 9, 10 ஆகிய தேதிகளில் மூன்று நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்தது தொழிற்சங்க தலைமை. மேலும், கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் இது கால வரம்பற்ற வேலை நிறுத்தமாக நீடிக்கும் என்றும் தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் அனுமதியின்றி நுழைந்த ஏ.பி.வி.பி கயவர்கள் – மாணவர்கள் போராட்டம்
இந்துத்துவா விஷமக் கருத்துகளை பரப்பி, அதன் மூலம் கலவரத்தை உண்டாக்க முயன்ற ஏ.பி.வி.பி – ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்.
பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம்
கிராம சபைக் கூட்டம் நடத்தப்படாததால் திமுக அரசைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஜூலை 3 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர்.
இத்தாலி: புலம்பெயர் தொழிலாளர்களின் உயிரை உறிஞ்சிக் கொழிக்கும் பண்ணைகள்
இத்தாலிய பண்ணைகளில் "கப்போரலாடோ" (Caporalato) என்ற ஒரு சட்டவிரோத முறைப்படி தொழிலாளர்களை பணியமர்த்துவது பரவலாக நடைபெறுகிறது. இதில் "கேப்போரல்" (caporale) எனப்படும் இடைத்தரகர்கள் புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து அனைத்து ஆவணங்களையும் பெற்றுக்கொண்டு, அவர்களை பெரிய விவசாயிகளிடம் பணிக்கமர்த்துவார்கள்.