Wednesday, November 5, 2025

மத்தியப்பிரதேச மக்களை துரத்தும் போபால் விஷவாயு படுகொலை

1984-ஆம் ஆண்டு யூனியன் கார்பைடு தொழிற்சாலை போபால் மக்களைக் கொலையுண்டதற்குத் துணைபோன அரசு நிர்வாகம், இன்று பீதாம்பூர் மக்களை அழிவில் விளிம்பிற்குத் தள்ளுவதற்குத் துடித்துக்கொண்டிருக்கிறது.

விடுதலையின் பாதை சிவப்பு!

இறுதிக்கட்ட காட்சியில், வாத்தியார் டி.ஏ-விடம், “மக்களை அமைப்பாக்க வேண்டும். அதுவே முக்கியம்” என்பார். ஆம், மக்களை அமைப்பாக்குவது முன் எப்போதையும் விட இப்போது மிக முக்கியமான பணி. அதைத் தவிர்ப்பதை விட ஆபத்தான பணியும் வேறேதும் இல்லை.

உ.பி: ’பசு பாதுகாப்பு’ பெயரில் பலியிடப்படும் இஸ்லாமியர்கள்

யோகி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி செய்யக் கூடிய உத்தரப்பிரதேசத்தில் உள்ள சிறுபான்மை மக்கள் மதமாற்றம், பசுவதை என்கிற பெயர்களில் காவி கும்பலால் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

பீகார் அரசு பணியாளர் தேர்வு மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்

தேர்வை ரத்து செய்யக்கோரி போராடிய மாணவர்கள் மீது போலீசு கொடூரமான முறையில் தடியடி நடத்தியது. மிருகத்தனமாக மாணவர்களைக் கையாண்டது. போலீசின் தாக்குதலால் மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

எம் மாணவிகளிடம் இனி என்ன சொல்ல? | கல்விச் செயற்பாட்டாளர் உமா

உங்களுக்கு ஏதாவது பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டால் நிச்சயமாக இந்த எண்ணுக்கு (14417) புகார் அளியுங்கள் என்று ஒரு ஆசிரியராக என்னிடம் படிக்கும் பெண் குழந்தைகளிடம் இனிமேல் எப்படி, நான் சொல்ல முடியும்?

பீகார்: பழங்குடியினப் பெண்களைக் கட்டிவைத்து அடித்த பாசிச கும்பல்

“சமீபத்தில் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவது அதிகரித்து வருகிறது. இது மிகவும் வேதனை அளிக்கிறது. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை அவர்கள் இந்த விஷயத்தைத் தொடர்வார்கள்” - பாஸ்டர் சாது சுந்தர் சிங்

சத்தீஸ்கர்: பழங்குடியின மக்களை சித்திரவதை செய்யும் பா.ஜ.க அரசு

பாதுகாப்புப் படையினர் நடத்திய கொடூர தாக்குதலில் 12 வயது சிறுவனது தொண்டையில் தோட்டா பாய்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

விவசாயிகள் நலனுக்கு எதிராகச் செயல்படும் உச்சநீதிமன்றம்!

நீதிபதிகள், "சட்டம் ஒழுங்கு பிரச்சினையைச் சிலர் உருவாக்குகிறார்கள் என்றால், அது உங்கள் விவகாரம். அதை இரும்புக் கரம் கொண்டு சமாளிக்க வேண்டும்" என்று விவசாயிகள் மீது வன்முறையை ஏவும் விதத்தில் கருத்துக் கூறியுள்ளனர்.

தேர்தல் தகிடுதத்தங்களை மறைப்பதற்காகச் சட்டத்தைத் திருத்திய மோடி அரசு

தேர்தல் ஆணையம் என்பது பாசிச கும்பலால், தேர்தல் ஜனநாயகம் என்று சொல்லிக் கொள்வதற்காக ஒரு பொம்மைப் போன்றே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கீழ்வெண்மணியின் நெருப்பு நம் நெஞ்சில் | மீள்பதிவு

டிசம்பர் 25 இரவு 8 மணிக்கு திடீரெனப் புகுந்தது கோபாலகிருஷ்ண நாயுடுவின் வெறிநாய்ப்படை. கண்ணில் கண்டவர்களையெல்லாம் வெட்டித் தள்ளியது. தப்பி ஓடிய மக்கள் கூலித்தொழிலாளி ராமையாவின் குடிசையில் தஞ்சம் புகுந்தனர். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என மொத்தம் 48 பேர் எல்லாம் கரிக்கட்டைகளாக அடுத்த நாள் காலையில்.

இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு (1925-2024): தியாகங்கள் உரமாகின்றன

கம்யூனிசம் ஓர் அறிவியல் தத்துவம்; அதனை யாராலும் அழிக்க முடியாது. வர்க்க ஏற்றத்தாழ்வுகளை அகற்றி பூவுலகில் சொர்க்கத்தைப் படைப்பதற்காக மார்க்சிய-லெனினிய புரட்சிகர அமைப்புகள் போராடி வருகின்றன.

30ஆவது நாளாக தொடரும் விவசாய சங்கத் தலைவரின் உண்ணாவிரதப் போராட்டம்!

தலேவால் “அரசுக்கு என் உடல்மீது அக்கறை இருந்தால் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றட்டும். அதன் பிறகு சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தது விவசாயிகளின் சமரசம் இல்லாத போராட்ட உணர்வினை வெளிப்படுத்துகிறது.

நக்சல்பாரி எழுச்சிக்குப் பின்னான கடும் ஒடுக்குமுறை || அபிஜித் மஜும்தார் | மீள்பதிவு

மூலை முடுக்கெல்லாம் போலீஸ் நிறைந்திருக்க சுடுகாட்டிற்கு அப்பா உடலை எடுத்துச்சென்றபோது, இயக்கத் தோழர்கள் சட்டென்று தோன்றி அப்பாவுக்கு செவ்வஞ்சலி செலுத்தி, புரட்சிகர முழக்கங்களை எழுப்பி்விட்டு மறைவர். இதற்கு விசேஷமான துணிச்சல் வேண்டும்.

நக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல் | மீள்பதிவு

விவசாயிகளிடம் துப்பாக்கிகளும் இல்லை. வெடி குண்டுகளும் இல்லை. அரசிடம்தான் அதுபோன்ற ஆயுதங்கள் இருந்தன. போலீசிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றுங்கள் என்று தெளிவான அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது.

வரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு! | மீள்பதிவு

மக்கள் பேரெழுச்சியால் தூக்கியெறியப்படுவோம் என்று அஞ்சி, தனது கையாட்களான காங்கிரசிடமும் முஸ்லீம் லீகிடமும் அரசு அதிகாரத்தை 47 ஆகஸ்டில் ஒப்படைத்தது பிரிட்டிஷ் அரசு. மும்பை கடற்படை எழுச்சியின் வீரஞ்செறிந்த வரலாறு – ஆதாரங்கள்!

அண்மை பதிவுகள்