“கொழுத்த பணக்காரர்கள் வாழும் ஏழைநாடு – முட்டுச் சந்தில் இந்தியா”
அரசின் திட்டக் கொள்கை வடிவமைப்பில் முறைசாராத் தொழிலாளர்களுக்கு எந்தப் பங்கும் இருப்பதில்லை. வறுமையில் பல கோடிப் பேர் வாழும் நம் நாட்டில் ஒரு சிறு பிரிவினர் பெருஞ் செல்வந்தர்களாக உள்ளார்கள்.
ரூ. 63,500 கோடியை ஏப்பம் விட்ட வீடியோகானை ரூ. 300 கோடியில் முழுங்கப் பார்க்கும் வேதாந்தா !
கொரோனா ஊரடங்கில் சாதாரண மக்களின் கடனுக்கான வட்டியின் வட்டியைக் கூட ரத்து செய்யாத வங்கிகள் முதலாளிகளிக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தில் ‘முடி வெட்டிக்கொள்ள’ இவர்கள் தயங்குவதில்லை.
அரியலூரைப் பாலைவனமாக்கும் நாசகர சிமெண்ட் ஆலைகள் !
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உருவான இயற்கை வளங்களை சில பத்தாண்டுகளுக்குள் சுரண்டிக் கொழுக்கும் இக்கார்ப்பரேட்டுகள், நிலத்தையும் நீரையும் காற்றையும் நஞ்சாக்கி அரியலூரை பாலைவனமாக்கி வருகின்றன.
’ஹேர்கட்’ பெயரில் பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட் கொள்ளை !
பாபா ராம்தேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்களுக்கு கிடைக்கும் கடன் தள்ளுபடி சலுகைகள் மக்களுக்காக சேவை செய்யும் அரசு நிறுவனங்களுக்கோ, நிதி நெருக்கடியில் இருக்கும் அரசுகளுக்கோ கிடைப்பது இல்லை.
வங்க தேசத்தில் தொடரும் முதலாளித்துவ பயங்கரவாதப் படுகொலைகள் || படக் கட்டுரை
ஏகாதிபத்திய நாடுகளின் நிறுவனங்கள் மற்றும் அவற்றைச் சார்ந்து இயங்கும் வங்கதேச தொழிற்சாலைகள் ஆகியவற்றின் இலாபவெறி தான் ஆண்டுதோறும் தொடரும் வங்கதேச தொழிலாளர்களின் மரணங்களுக்கு முக்கியக் காரணம்.
சமையல் எண்ணெய் விலை உயர்வு : பின்னணி என்ன ?
கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான சிறு இறக்குமதியாளர்களின் உரிமத்தை 2017-ம் ஆண்டு முதல் ஒன்றிய அரசு புதுப்பிக்காததால், பெருநிறுவனங்களின் ஏக போக கட்டுப்பாட்டில் சமையல் எண்ணெய் சிக்கியுள்ளது
கொரோனா : பிணத்தை வைத்து கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகள்!
தனியார் மருத்துவமனைகள், அதிகார வர்க்கத்தை தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டு தங்களை யாரும் அசைக்க முடியாது என்ற திமிருடன் செயல்படுகின்றன. இவர்களுக்கு ஆதரவாக அரசின் தனியார்மயக் கொள்கையும் நிற்கிறது
ஒரு பங்கு ஆக்சிஜன் தயாரிக்க 10 பங்கு ஆக்சிஜனை வீணடிக்கும் ஸ்டெர்லைட் !
ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகளான அதிகப்படியான மின்சாரப் பயன்பாடு, உயிர் காக்கும் வாயுவான ஆக்சிஜனை வீணடிப்பது போன்றவை எல்லாம் கிரிமினல் குற்றத்திற்கு நிகரானதாகும்.
தனியார்மயக் கொள்கையால் புழுத்து நாறும் இந்திய மருத்துவக் கட்டமைப்பு !!
புதிய தாராளவாதக் கொள்கைகளின்படி மருத்துவம், மக்களின் அடிப்படை உரிமையாக பார்க்காமல் கடைச்சரக்காக மட்டுமே பார்க்கப்பட்டது. அரசு நிதி பெருமளவில் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் தனியாருக்கு திருப்பிவிடப்பட்டது.
கொரோனா : கார்ப்பரேட் – சனாதன வைரஸுக்கு எதிரான இருமுனைப் போராட்டம் தேவை !
குறுந்தொழில்கள் இழுத்து மூடப்பட்டு விட்ட அதே நேரத்தில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கு தடை இல்லாமல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அம்பானி, அதானி கும்பலின் நலன்காப்பதையே தாரக மந்திரமாக கொண்டுள்ளார் மோடி.
தடுப்பூசி வணிகம் : மக்களின் மரணத்தில் நடத்தப்படும் கொள்ளை !
அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா 100 சதவீதம் பொது நிதியைப் பெற்று ஒரு தடுப்பூசியை உருவாக்கியது. முன் ஆர்டர்கள் ஒரு டோஸ் ஒன்றுக்கு 31 டாலர்கள் விலையில் 2400 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிற்கு 78 கோடி டோஸ்களை விற்றுள்ளது.
‘ஃபோர்பஸ்’ : கொரோனா பெருந்தொற்றில் உயரும் முதலாளிகளின் சொத்து மதிப்பு
ஃபோபர்ஸ் குறிப்பிடும் இந்தத் திடீர் சொத்துக் குவிப்புப் பாய்ச்சல் உலகெங்கும் நடந்து வருகிறது. “கடந்த ஆண்டில் சராசரியாக ஒவ்வொரு 17 மணி நேரத்திற்கும் ஒரு புதிய கோடீசுவரர் உருவாகியிருக்கிறார். மொத்தத்தில், உலகப் பெரும் கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு முந்தைய ஆண்டை விட 5 இலட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் அதிகரித்திருக்கிறது.”
உணவுக்குக் கையேந்தப் போகிறோமா ? || நெருங்கி வரும் இருள் !
கார்ப்பரேட்டுகளின் பிடியில் உணவு தானிய உற்பத்தியும் விநியோகமும் செல்கையில் அவை மீண்டும் பஞ்சம் பட்டினியை நோக்கி இவ்வுலகை இட்டுச் செல்லும்.
விரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன ?
உணவு தானிய உற்பத்தியை மையமாகக் கொண்டிருக்கும் இந்திய விவசாயத்தை ஏகாதிபத்தியத்தின் நலனுக்கான விவசாய உற்பத்தி முறையாக ஒழுங்கமைக்கவே வேளாண் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன
கொரோனாவிலும் குறையாத இலாபம் ! அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு !
ஓட்சை பசியிலிருக்கும் குருவிகளுக்குக் கொடுப்பதற்கு பதிலாக, வயிறு கொழுத்த குதிரைக்கு தேவைக்கும் அதிகமான உணவாகக் கொடுத்தால், குதிரை போடும் சாணத்தில் இருக்கும் செரிக்காத ஓட்ஸை குருவிகளும் கொத்தித் தின்று பசியாறலாம் என்பதுதான் இந்தக் கோட்பாட்டின் அடிநாதம்.























