privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

(சாதியக் கொடூரங்களால் பாதிப்புக்குள்ளான ஒரு மாணவனுக்கும் - ஒரு கம்யூனிஸ்ட் தோழருக்குமான உரையாடலே, இந்தக் கவிதை) என்ன செய்ய? நான்! என்ன செய்ய? என்ன செய்ய? நான்! என்ன செய்ய? குடிக்கிற தண்ணித் தொட்டியில, மலத்தக் கலக்குறான் – என்ன செய்ய? படிக்கிற மாணவன் மூஞ்சியிலே, மூத்திரத்த அடிக்குறான்–என்ன செய்ய? சாதிப்பெருமையை பேசிக்கிட்டு மகளோட, கழுத்தையே அறுக்கிறான் – என்ன செய்ய? காட்டுசுள்ளிப் பொருக்கபோனா கம்பியில, கரண்ட வைக்கிறான்...
எதற்கு வாழ்த்துகிறீர்கள்? உலகம் அறிந்த தலைவர் நாடு போற்றும் பிரதமர் G20-இன் நாயகன் சந்திரயான்-3 விட்ட சாதனையாளன் தாடி வளர்க்கும் சன்னியாசி ‘பாரத’ பிரதமர் மோடிக்கு இன்று பிறந்தநாளாம்! காவி கும்பலும் கார்ப்பரேட் களவாணிகளும் போட்டி போட்டுக்கொண்டு வாழ்த்து சொல்கின்றனர்! எதற்காக இந்த வாழ்த்துக்கள் எல்லாம்? பாரத தாயின் புகழ் பாடி மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி வேடிக்கை பார்த்ததற்கா? ஏழைகளை ஒட்டச்சுரண்டி இந்திய நாட்டை அம்பானி-அதானி கார்ப்பரேட்களிடம் அடகு வைத்ததற்கா? “மனிதர்கள் மிருகமானால்” என்ற படத்தை குஜராத் கலவரத்தில் நேரலையில் காட்டியதற்கா? பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டிய மக்களை பார்ப்பனியம் பழக...
தன் வாழ்வில், வெளிச்சமில்லை, தகுந்த ஊதியமில்லை, வேலை நிரந்தரமில்லை, தாழ்வாரம் சொந்தமில்லை.., ஊருக்கு வெளிச்சம் தர, உழைக்கும் அந்த தொழிலாளர்க்கு, ஒராயிரம்.. நன்றிகள் !
கூடப்படிக்கும் நண்பன் கேட்டது நீ எப்பொழுது உன் வீட்டிற்குக் கூட்டிச் செல்வாய்... நான் எப்படிப் புரியவைப்பேன்... அது வீடல்ல முழுசாக கட்டி முடிக்கப்படாத குருவிக் கூடு என்று... அது வீடல்ல முழுசாக கட்டி முடிக்கப்படாத குருவிக் கூடு என்று‌‌‌... குனிந்துகூடச் செல்ல முடியாத குட்டிஜப்பான் என் வீடு... தவழ்ந்துதான் செல்லமுடியும் அந்த தாஜ்மஹாலின் உள்ளே... நம்ம ஊரு ரோடு போல வீட்டின் உள்ளே ஆங்காங்கே பள்ளங்கள்... பள்ளங்களைப் பார்வையிடும் அதிகாரிகள் போல எலிகளும் மூட்டைப் பூச்சிகளும்... எனக்கு மட்டுமே கிடைத்த வரம் வீட்டினுள் அருவி... கரையான் கடித்த கழிகள்... கூரையின் மேல் பறவையின் எச்சங்கள்... இரவில் ரோந்து வரும் போலீசு போல... வீட்டிற்கு ரோந்து வரும் வௌவால்கள்... ஆம்புலன்ஸ் சத்தம்...
உனது செம்படை இன்னும் உலக முதலாளித்துவ ஓநாய்களுக்கு அச்சுறுத்துலாகவே இருக்கிறது…ஏனென்றால், நீ ஒரு சர்வாதிகாரி அல்லவா! ஆம், முதலாளித்துவத்தைக் கொல்லவந்த பாட்டாளி வர்க்க பிரதிநிதியின் சர்வாதிகாரி!
அயோத்தியின் இராமனும் அதானியின் இராமனும் இதோ இப்போது வந்திருப்பது அயோத்தியின் இராமன் அல்ல  இது இராமன் 2.0 இரண்டு இராமன்களும் மனைவியோடு வாழவில்லை அன்று ஒரு வானரம் இலங்கையை எரித்தது இன்று பல்லாயிரம் வானரங்கள் நாட்டை எரித்துக் கொண்டிருக்கின்றன அந்த இராமனுக்காக சூர்ப்பனகையின் முலையறுத்து பெருமிதம் கொண்டான் இலக்குவன் இந்த இராமனுக்காக கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து சிசுவை அறுத்து வன்புணர்வு செய்தார்கள் நவீன இலக்குவன்கள் விவசாயத்தின் வயிற்றைக்கிழித்து கனிம வளங்களை அதானிகளுக்கு படையல் போடுகிறார் 2.0 இராமன் அசுவமேத யாகத்தில்...

அண்மை பதிவுகள்