Saturday, June 20, 2026
முகப்பு பதிவு பக்கம் 155

பாசிச ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவோம்! | தோழர் அமிர்தா | வீடியோ

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மார்க்ஸ் லெனின், பெரியார், பூலே படங்கள் உடைப்பு! பாசிச ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவோம்!

ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். மாற்றுக் கருத்துக்களை, எதிர்ப்புக் கருத்துக்களை ஒழித்துக்கட்டுவதற்காகவே பாசிச ஏபிவிபி குண்டர்கள் மாணவர்களை தாக்கி வருகின்றனர்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

Portraits of Marx, Lenin, Periyar, Phule vandalized in the JNU! | People’s Power Condemns

20.02.2023

Portraits of Marx, Lenin, Periyar, Phule vandalized in the JNU!

Let’s put an end to the atrocities of fascist RSS – ABVP goons!

People’s Power condemns!

The portraits of Marx, Lenin, Periyar, Phule installed at the students’ union office of the Jawaharlal Nehru University in Delhi are vandalized by the RSS’s student arm ABVP. The gathered ABVP members wrote on the wall that “communists be hanged” and “Savarkar”. They attacked the Tamil students who questioned this.

The students of the JNU have been continuously protesting against the fascistic actions of the Modi government. The fascist ABVP goons are attacking the students in order to eliminate the dissent.

The fascist mob which attacked the Kerala students a few days ago is now attacking the Tamil students. The students who propagate leftist thoughts are being threatened and the portraits of Marx, Lenin, Periyar, Phule are vandalized. People’s Power strongly condemns this.


Also Read: Conspiracy to reopen the murderous Sterlite! Let’s support the struggling Tuticorin people! | People’s power


People’s Power is demanding for the dismissal of the goons who attacked the Tamil students, and to ban the fascist ABVP in the JNU.

BJP and the RSS’s student arm ABVP were never ordinary political outfits. They are fascist outfits. Annihilating democratic and revolutionary thoughts is their primary obligation. People’s Power is demanding the Tamil Nadu government to ban the fascist organizations including RSS, BJP and ABVP.

With Comradeship,
Comrade Marudhu,
Spokesperson,
People’s Power.
Contact : 99623 66321

நினைவில் கொள், இது தமிழ்நாடு! தீரனும் திப்புவும்

நினைவில் கொள், இது தமிழ்நாடு! தீரனும் திப்புவும்

மது ஒழிப்பு போராளி தியாகி சசிபெருமாளின் பிறந்த நாளான இன்று பூரண மதுவிலக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் தோழர் சுந்தர். அதில் கலந்து கொண்ட பிறகு தாம்பரம் செல்லும்  ரயிலில் ஏறினேன்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆறு பேர் ஏறி எனது இருக்கைக்கு அருகில் அமர்ந்தனர். பொதுவாகவே தமிழர் அல்லாதவர் என்றாலே நான் விரும்பி பேச ஆரம்பிப்பேன். அவர்கள் யார் எங்கிருந்து வந்தார்கள் அவர்கள் பண்பாடு, உணவு முறை, தமிழ்நாட்டைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? இப்படி பலவற்றை நான் பலரிடமும் விவாதித்து இருக்கிறேன். இன்றைக்கு கிடைத்தது வித்தியாசமான அனுபவம்.

அந்த ஆறு பேரும் கர்நாடகாவின் மங்களூரைச் சேர்ந்தவர்கள். அனைவரும் சுமாராக 40 வயதுகளில் இருப்பவர்கள். நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கிறார்கள். தி நகரில் உள்ள போத்தீஸுக்கு செல்வதற்காக வந்திருக்கிறார்கள்.

படிக்க : இன்று நமக்கு அஸ்திவாரக் கற்கள்தான் தேவை!

என் எதிரில் அமர்ந்திருந்தவரிடம் “திப்பு சுல்தான் மங்களூரை ஆட்சி செய்தாரா?” என்று கேட்டேன்.

அதற்கு பதில் இன்னொருவர் சொன்னார் “இல்லை. சிவாஜி ஆட்சி ஆட்சி செய்தார்”

அவர்களில் இருந்த இன்னொருவர் “சிவாஜி மகாராஷ்டிராவை ஆட்சி செய்தார்” என்று கூறி யாரோ ஒரு அரசியல் பெயரை சொன்னார்.

மங்களூரை சிவாஜி ஆட்சி செய்ததாக கூறிய நபர், தனது கட்டை விரலை கீழ்நோக்கி காட்டியவாறு “திப்பு கெட்டவர்” என்றார்.

“உனக்குத் திப்புவின் வரலாறு சரியாக தெரியாது” என்றேன்.

“எனக்கு திப்புவின் வரலாறு தெரியும். அவர் கெட்டவர்” என்றார்.

“உன் வரலாறு மட்டும் அல்ல நீயும் சரியானவர் அல்ல” என்றேன்.

“உன்னுடைய பெயர் என்ன?” என்றான்.

என்னுடைய பெயரை சொன்னேன். இரண்டு மூன்று முறை அவன் உச்சரித்துப் பார்த்தான்.

“நீ என்ன இந்துவா? முஸ்லிமா?” என்றான்.

“நான் என்ன மதம் என்று கூறினால்தான் பதில் சொல்வாயா?” என்றேன்.

“திப்பு சுல்தான் நிறைய இந்துக்களை கொன்றிருக்கிறார் உனக்கு தெரியுமா?” என்றான்.

“திப்பு இந்துக்களைக் கொன்றதற்கான சான்றுகளை ஏதாவது இருக்கிறதா? தமிழ்நாட்டின் சில பகுதிகளையும் அவர் ஆட்சி செய்திருக்கிறார். தமிழ்நாட்டில் அவர் எந்த ஒரு இந்துவையும் கொன்றதற்கான கதைகளும் கிடையாது, சான்றுகளும் கிடையாது. ஏதாவது டாக்குமென்ட்(ஆதாரம்) இருந்தால் கொடு” என்றேன்.

படிக்க : பாசிச எதிர்ப்பு – க்ரியா ஊக்கிகளும், நவீன அராஜகவாதிகளும் – ஒரு பார்வை

“உனக்கு திப்பு சுல்தானையும் தெரியாது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை திரட்டி கொண்டு போய் திப்புவுக்கு ஆதரவாக போர் செய்த தீரன் சின்னமலையையும் உனக்கு தெரியாது. ஆனால் எங்களுக்கு எல்லாம் தெரியும். அந்த உண்மை தெளிவாக புரியும். திப்பு சுல்தானும் தீரன் சின்னமலையும் எங்கள் தலைவர்கள்” என்றேன்.

வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தான்.

“நினைவில் கொள், இது தமிழ்நாடு!” என்றேன். அதற்குப் பிறகு அவன் என் கண்களை பார்க்கவே இல்லை.

(அவர்களோடு ஆங்கிலத்தில் நடந்த உரையாடல் இது)

– மருது

அருந்ததியர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் சீமான்! | தோழர் மருது | வீடியோ

அருந்ததியர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் சீமான்!
தேர்தல் ஆணையமே, நாம் தமிழர் கட்சியை தடை செய்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், சாட்டை துரைமுருகனும் உடனடியாக கைதுசெய்யப்படவேண்டும். அந்த நாம் தமிழர் கட்சி ஈரோடு இடைதேர்தலுக்காக திட்டமிட்டு சாதிய வன்முறையை உருவாக்குவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே அந்த கட்சியும் தடைசெய்யப்படவேண்டும் என்று மக்கள் அதிகாரம் கூறுகிறது.

அருந்ததியர் சாதி மக்கள் மீது சீமானும் சாட்டை துரைமுருகனும் பாய்ந்திருக்கிறார்கள். தமிழர்களை பிரித்து பிரித்து வேட்டையாடுகிற ஓநாய்களாகவே இவர்கள் இருவரும் செயல்படுகிறார்கள்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

டெல்லி ஜே.என்.யூ.வில் தமிழ்நாட்டு மாணவர்களைத் தாக்கிய, ஏபிவிபி கும்பலின் கொட்டத்தை அடக்குவோம்!

0

டெல்லி ஜே.என்.யூ.வில்
தமிழ்நாட்டு மாணவர்களைத் தாக்கிய,
ஏபிவிபி கும்பலின் கொட்டத்தை அடக்குவோம்!

பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் படங்களை
வைத்துப் போராடினால் உனக்கு ஏன் எரியுது?

ஆளுநர் ரவி தமிழ்நாட்டின் பெயரை மாற்றும் என்கிறார்.
ஏபிவிபி கும்பலோ தமிழ்நாட்டு மாணவர்களை தாக்குகிறது.
இந்தத் திமிர் பிடித்த பாசிச கும்பலை விரட்டியடிப்போம்.

காவி பயங்கரவாத குண்டர் படையான
ஏபிவிபி-யை தடை செய்ய போராடுவோம்!

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு – 9444836642

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மார்க்ஸ், லெனின், பெரியார், பூலே படங்கள் உடைப்பு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

20.02.2023

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில்
மார்க்ஸ் லெனின், பெரியார், பூலே படங்கள் உடைப்பு!

பாசிச ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவோம்!

கண்டன அறிக்கை!

டெல்லி ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில், ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யின் பாசிச குண்டர்கள் மாணவர் மன்றத்திலிருந்த மார்க்ஸ், லெனின் மற்றும் பெரியார், பூலே ஆகியோரின் படங்களை உடைத்திருக்கிறார்கள். மேலும் ‘இங்கு கம்யூனிசம் பேசக்கூடாது’ என்றும் ‘சாவர்க்கர்’ என்றும் எழுதி இருக்கிறார்கள். இதனை தட்டிக் கேட்ட தமிழ்நாட்டு மாணவர்களையும் தாக்கியிருக்கிறார்கள்.

ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். மாற்றுக் கருத்துக்களை, எதிர்ப்புக் கருத்துக்களை ஒழித்துக்கட்டுவதற்காகவே பாசிச ஏபிவிபி குண்டர்கள் மாணவர்களை தாக்கி வருகின்றனர்.

படிக்க : அசைவ உணவு சாப்பிட்ட ஜேஎன்யூ மாணவர்களை தாக்கிய ஏபிவிபி குண்டர்கள் !

சில தினங்களுக்கு முன்பு கேரள மாணவர்களை தாக்கிய பாசிச கும்பல், இப்போது இடதுசாரி கருத்துக்களை பேசக்கூடாது என்றும் மார்க்ஸ், லெனின், பெரியார், பூலே உள்ளிட்டோரின் படங்களை உடைத்தும் தமிழ்நாட்டு மாணவர்களை தாக்கியும் உள்ளது. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாட்டு மாணவர்களை தாக்கிய குண்டர்களை உடனே பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாசிச ஏ.பி.வி.பி அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

வழக்கம் போன்றதொரு கட்சியாக பாஜகவும், மாணவர் அமைப்பாக ஏ.பி.வி.பி.யும் எப்போதும் இருந்ததில்லை. அது ஒரு பாசிச கும்பல், ஜனநாயக மற்றும் முற்போக்கு புரட்சிகர கருத்துக்களை ஒழித்து கட்டுவதே அதன் முதல் வேலை. ஆகவே ஆர்.எஸ்.எஸ், பாஜக, ஏபிவிபி போன்ற பாசிச அமைப்புகளை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது
செய்தி தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

வேங்கைவயல் சம்பவம்: எது தேசிய அவமானம்?

றையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தேக்கத் தொட்டில் சாதி வெறியர்களால் மலம் கலக்கப்பட்ட செய்தி பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. தமிழ்நாடு “பெரியார் மண், சமூகநீதியின் மண்” என்று பேசப்படும் சூழலில் இப்படிப்பட்ட மனிதத்தன்மையற்ற செயல் நடைப்பெற்றிருக்கிறது. இதைப்பற்றி கருத்து தெரிவித்த சனநாயக இயக்கங்கள் யாவும் இதை “மனித தன்மையற்ற செயல்” என்றும் “தேசிய அவமானம்” என்றும் கண்டித்துள்ளனர். ஆனால், இது தமிழகத்தில் நடந்த முதல் தேசிய அவமானம் இல்லை என்பதை நாம் பார்க்கத் தவறக்கூடாது.

2002 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் திண்ணியம் கிராமத்தில் முருகேசன் மற்றும் ராமசாமி ஆகிய இருவர் மனித மலத்தை உண்ணும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். மதுரை மேலஊரப்பனூரில் கடந்த 2003-ஆம் ஆண்டு முத்துமாரி என்ற பெண் மீது மலம் கலந்த தண்ணீர் ஊற்றப்பட்டது. 2004-ஆம் ஆண்டு சங்கன் என்ற நபரை சிறுநீர் குடிக்க வைத்தனர். 2019-ஆம் ஆண்டு, திருவாரூர் மாவட்டம் திருவாண்டுதுறை கிராமத்தைச் சேர்ந்த கொல்லிமலை என்ற நபருக்கு மனித மலத்தை வலுக்கட்டாயமாக ஊட்டி, அவரது உடலில் குற்றவாளிகள் சிறுநீர் கழித்தனர். கடந்த 10 ஆண்டுகளில், இதுபோன்ற 20 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆனால் இதுபோன்ற குற்றங்களில் தண்டனை விகிதம் தமிழ்நாட்டில் 5-6% மட்டுமே.

யதார்த்த நிலை இப்படியிருக்க, “சாதி அமைப்பிற்கு எதிரான போராட்ட மரபை கொண்ட தமிழ்நாடு” என்று பெருமை பேசுவதில் எந்தப் பயனுமில்லை. சாதிக்கு எதிரான வலுவான போராட்ட மரபை கொண்ட சமூகத்தில் ஏன் தீண்டாமை வன்கொடுமைகள் நடக்கிறது என்பதுதான் கேள்வி.

சாதிய வன்கொடுமைகள் மற்றும் தீண்டாமையின் தீவிரத்தன்மை பற்றி, அது ஏற்படுத்தும் உளவியல் சிக்கல்கள் பற்றி இந்த ஆட்சியாளர்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் எந்த அக்கறையுமில்லை. அதனால் தான் தொட்டியை சுத்தம் செய்த அதிகாரிகளுக்கு குழாய்களிலும் மலம் கலந்த நீரின் பாதிப்பு இருக்கும் என்ற எளிய உண்மை தெரியவில்லை. குழாய்கள் மாற்றப்பட இரண்டு வாரங்கள் ஆயிருக்கிறது.


படிக்க: வேங்கை வயல் – பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் போலீசு! | மக்கள் அதிகாரம்


“ப்ளீச்சிங் செயல்முறையின் மூலமாக தொட்டி மற்றும் குழாய்களில் உள்ள கிருமிகளை அவர்கள் சுத்தம் செய்ததாக நினைக்கிறார்கள். ஆனால் நான் ஒவ்வொரு முறையும் கோப்பைத் தேநீரை என் வாயில் கொண்டு வரும்போதெல்லாம், அந்த மலம் கலந்த அசுத்தமான தொட்டியும், அதிலிருந்து நான் குடித்த தண்ணீரும் தான் நினைவுக்கு வருகிறது? இதற்கு அரசு என்ன செய்யப் போகிறது?” என்று கேட்கும் எளிய மக்களின் கேள்வி இந்த ஆட்சியாளர்களுக்கு புரிவதே இல்லை‌. அது புரிந்திருந்தால் இந்நேரம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பார்கள்.

மலம் கலந்த மனிதத்தன்மையற்ற குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்க முயற்சிக்கிறது போலீஸ். அதையும் சனநாயக இயக்கங்கள் தான் தங்களின் போராட்டங்கள் மூலம் அம்பலப்படுத்தியிருக்கின்றன. “தேசிய அவமானம்” என்று சொல்லக்கூடிய சம்பவம் பற்றி ஆட்சியாளர்கள் வாய் திறக்கவே இவ்வளவு போராட்டங்கள் வேண்டியிருக்கிறது. அவ்வாறெனில் நீதி கிடைக்க இன்னும் எத்தனை நாள் போராடவேண்டும்?

சமவத்துவ பூமி, சமூக நீதி ஆட்சி, பெரியார் மண் என்று சொல்லிக்கொள்ளும் தமிழ்ச் சமூகம் இன்னும் வேர்மட்ட அளவில் சனநாயகப்படவில்லை. வெகு மக்கள் திரள் போராட்டங்கள் மூலமாக நடைமுறையில் சனநாயக உரிமைகளை சாதித்த போராட்டங்களை தமிழகம் கண்டதில்லை என்றே சொல்லலாம்.

பெரியாரின் திராவிடர் கழகத்தால் கோவில் நுழைவுப் போராட்டங்கள், தெருக்களில் செருப்பு அணிந்து செல்வது, பொதுக்குளத்தில் தண்ணீர் எடுப்பது போன்ற போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இந்த போராட்டங்கள் எதுவும் “கோவில் நுழைவு, தெருக்களில் செருப்பு அணிவது, பொதுக்குளத்தில் தண்ணீர் எடுப்பது” போன்றவையாவும் அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகள் என்ற சமூகநிலையை உருவாக்கவில்லை. அவை யாவும் அரசியல் அமைப்பு சட்டத்தில் கூட காகித சட்டங்கள் என்ற அளவில் தான் இருந்தன. ஆனால் யதார்த்தத்தில் தீண்டாமை உயிர்ப்புடனே இருந்து வந்துள்ளது.

இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் அனைத்தும் இட ஒதுக்கீடுகள் மூலம் இந்த அரசமைப்பின் அதிகாரங்களை பங்கிட்டுக்கொள்வதற்கானவை என்ற அளவில் சுருக்கப்பட்டுவிட்டது. இப்படி சாதி அமைப்பிற்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் இந்த அரசமைப்பிலும் தேர்தல் அரசியலிலும் சாதியை நிறுவனமயபடுத்துவாதவே இருந்திருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் பெரிதும் பயன்பெற்றது இடைநிலை சூத்திர சாதியினர்தான்.


படிக்க: வேங்கைவயல் – பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் போலீசு || தோழர் மருது வீடியோ


இதற்கிடையில் பட்டியல் சமூக மேட்டுக்குடியினர் அரசு அதிகாரத்தில் தங்களின் பங்கை கேட்டு 1990-களில் ஏகாதிபத்திய கைக்கூலி அறிவுஜீவிகளின் ஆதரவுடன் அடையாள அரசியலை தொடங்கி வைத்தனர். இந்த அடையாள அரசியல் கட்சிகளும், திமுக, அதிமுக என மாறி மாறி கூட்டு வைத்து ஓட்டரசியலில் சாதியை நிறுவனமயப்படுத்துவதில் பங்காற்றின.

குறிப்பாக சாதி அமைப்பிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இயக்கங்களின் தோல்வி என்பது இந்த இயக்கங்களின் கோரிக்கைகள் எதுவும் ஒடுக்கப்பட்ட மக்களின் யதார்த்த வாழ்நிலையில் எந்த சமூக மாற்றத்தையும் உருவாக்கிவிடவில்லை என்பது தான். இந்த இயக்கங்களால் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் குறிப்பிட்ட அளவில் முன்னேற்றம் ஏற்பட்டது என்பது உண்மையே. ஆனால் அப்படி முன்னேறியவர்களில் பெருமளவிலானவர்கள் “புதிய பார்ப்பனர்களாக” மாறி இந்த சாதி அமைப்பை பாதுகாக்கவே நினைத்தார்கள்.

இப்போதுகூட, வேங்கைவயல் சம்பவத்தை “தேசிய அவமானம்” என்று சொல்வதும், “அரசு குற்றவாளிகளை கைது செய்யவேண்டும், மலம் கலந்த குடிநீர் தொட்டியை இடிக்க வேண்டும், அரசு இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று சொல்லி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்யும் சனநாயக இயக்கங்கள் எவையும், சாதி அரசியல் அமைப்புச் சட்டத்திலும், அரசு அதிகாரத்திலும் நிறுவனமயமாக்கப்பட்டிருக்கும் யதார்த்த நிலையை கண்டுகொள்வதில்லை.

அப்படி புரிந்து கொண்டிருந்தால், “தேசிய அவமானம்” அந்த தண்ணீர்த் தொட்டி அல்ல; இந்த அரசியல் அமைப்புச் சட்டமும், தேர்தல் அரசியலும், இந்த அரசதிகார அமைப்பும் தான் “தேசிய அவமானம்” என்பது புரிந்திருக்கும். ஆனால் இதனால் இந்த கட்சிகளுக்கு ஓட்டுகள் வந்து சேராது என்பதால் அதைப்பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. அதனால்தான் குடிநீர் தொட்டியை ” தேசிய அவமானம்” என்று பொங்கும் இவர்களால் இந்த அரசமைப்புச் சட்டம், அரசதிகாரம் ஆகியவை மக்கள் விரோதமானது என்று சொல்ல முடிவதில்லை.

இப்போது அந்த தொட்டியை இடிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் அது இன்னொரு வேங்கைவயல் உருவாவதை தடுக்கப் போவதில்லை. ஏனெனில் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் அதிகாரத்தை ப்ளீச்சிங் பொடி போட்டு கழுவ முடியாது.

ராஜன்

இன்று நமக்கு அஸ்திவாரக் கற்கள்தான் தேவை!

“முதலிலிருந்தே ஜெயதேவ் என்னைக் காட்டிலும் உடல் வலிமை பெற்றவர். ஆபத்துகளை எதிர்கொள்வதென்பது அவருக்கு மிகச் சாதாரண விஷயம்! அடிதடிச் சண்டைக்கு அவர் எப்போதுமே முன்னே நிற்பார். ஜெயதேவின் இச்சிறப்புக்களைக் கண்ட பகத்சிங், பிஸ்மில்லை விடுவிக்கும் ‘ஆக்சனுக்கு'(Action) ஜெயதேவை அழைத்துச் செல்ல வேண்டுமென்று முடிவு செய்தார். ஒரு நாள் மத்தியானம் பகத்சிங் தன் முடிவைத் தெரிவித்தபோது, என் பலவீனமான உடலை வெறுத்தேன். கட்சியின் பணி செய்யத் தகுதியில்லாதவன் என நான் கருதப்பட்டதற்காக மிகவும் வருந்தினேன். அதனால் சற்று நேரமே உட்கார்ந்துவிட்டு தூக்கம் வருகிறதென்று சாக்குக் கூறி ஒரு பக்கமாகப் படுத்துக்கொண்டுவிட்டேன். நான் உறங்கவில்லை என்பதை பகத்சிங் அறிவார். அவர் கொஞ்ச நேரம் பக்கத்திலிருந்த புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்துவிட்டு, என் தோளை மெல்ல உலுக்கி, “சிவா” என்று கூப்பிட்டார்.

“என்ன?” நான் அவர் பக்கம் திரும்பிக் கேட்டேன்.

“ஒரு விஷயம் கேட்கவா?”

“கேளேன்!”

ஒரு நபரின் பெயர் பெரிதா? கட்சியின் வேலை பெரிதா?”

“கட்சி வேலை தான் பெரிது”

“கட்சி வேலை தடங்கலின்றி நடந்து கொண்டே இருக்க வேண்டும். நாம் கைக்கொள்ளும் ’ஆக்சன்’கள் எல்லாம் வெற்றியடைந்து கொண்டிருக்க வேண்டும். நம்மைப் பற்றிய செய்தி நாட்டு மக்களுக்குத் தடையின்றிக் கிடைத்துக்கொண்டிருக்க வேண்டும். இந்த சுதந்திரப் போராட்டத்திலே நாம் ஒவ்வொரு திருப்பத்திலும் வெற்றி பெற்றுக்கொண்டிருக்க வேண்டுமல்லவா? இதற்கான முதல் நிபந்தனை என்ன தெரியுமா?”

படிக்க : அஷ்பகுல்லாகான் : பன்முகத்தன்மை கொண்ட ஒரு போராளி !

“வலிமையாகவும், விரிவாகவும் மக்களைத் திரட்டுவதுதான்!”

“மக்களைத் திரட்டுவதும், பிரச்சாரமும் முக்கியம். நாட்டு மக்கள் நமது துணிவையும், செயல்களையும் பாராட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் நம்முடன் நேரடித் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள். நாமும் மக்களுக்கு இதுவரை நாம் குறிப்பிடும் சுதந்திரம் எவ்வாறு இருக்கப்போகிறது, வெள்ளையர்கள் வெளியேறிவிட்ட பிறகு ஏற்பட போகும் நமது அரசு எப்படி இருக்கும் என்கிற விஷயங்களை விளக்கிக் கூறவில்லை. நாம் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவைத் திரட்டி நம்முடைய லட்சியங்களை மக்கள் மத்தியிலே கொண்டு செல்லவேண்டும். காரணம், பொதுமக்களின் ஆதரவைப் பெறாமல் நாம் இதுவரை செய்து வந்ததைப் போல, வெள்ளை அதிகாரிகளையும், அவர்களின் ஏஜெண்டுகளையும், கொன்று குவிப்பதிலேயே இனியும் காலத்தைக் கடத்த முடியாது. நாம் இதுவரை மக்களைத் திரட்டுவதையும், பிரச்சாரத்தையும் அலட்சியப்படுத்தி ’ஆக்சன்’களுக்கே முக்கியத்துவம் அளித்து வந்தோம். இச்செயல்முறையை நாம் விட்டுவிட வேண்டும். நான் உன்னையும், விஜயையும் மக்களைத் திரட்டவும், பிரச்சாரத்தை நிர்வகிக்கவும் விட்டுச்செல்ல விரும்புகிறேன்” என்று கூறி பகத்சிங் சற்று நிறுத்தி,

“நாமெல்லாம் படை வீரர்கள். படைவீரர்களுக்கு எல்லாவற்றையும் விட போர்க்களம் தான் விருப்பமானது. அதனாலேயே எல்லோருமே ’ஆக்சன்’களுக்குப் போகத்துடிக்கிறார்கள். என்றாலும், நம் இயக்கத்தை முன்னிறுத்தி சிலராவது ’ஆக்சன்’கள் மேலுள்ள மோகத்தை விட்டுவிட வேண்டியது தான்; சாதாரணமாக ’ஆக்சன்’களில் பங்கெடுப்பவர்களையும், தூக்குமேடை ஏறுபவர்களையும் தான், புகழ் தேடி வருகிறது. அவர்கள் நிலை ஒரு பெரிய மாளிகையின் தலைவாசலில் பதிக்கபட்ட வைரம் போன்றது; ஆனால் அஸ்திவாரத்திற்குள் விழுந்து கிடக்கும் ஒரு சாதாரணக் கல்லுக்குள்ள முக்கியத்துவம் அந்த வைரத்திற்கில்லை”….

“வைரங்கள் மாளிகையின் எழிலை அதிகரிக்கலாம், பார்ப்பவர்களை வியப்பிலாழ்த்தலாம். ஆனால், அவை மாளிகையின் அஸ்திவாரம் ஆக முடியாது. பல நூறாண்டுகள் தமது தோள்கள் மேல் சுமந்திருக்கமுடியாது. இதுவரையிலும் நம் இயக்கம் வைரங்களைத் திரட்டியதே தவிர, அஸ்திவாரக் கற்களைச் சேர்த்து வைக்கவே இல்லை. அதனால் தான் நாம் இத்தனை மாபெரும் தியாகங்கள் புரிந்தும் மாளிகையைக் கட்டவும் ஆரம்பிக்கவில்லை. இன்று நமக்கு அஸ்திவாரக் கற்கள்தான் தேவை!”

படிக்க : ஜதீந்திரநாத் தாஸ் : விடுதலை உணர்வை தட்டியெழுப்பிய தியாகம் !

பகத்சிங் மேலும் தொடர்ந்தார்: “தியாகமும், உயிர்ப்பலியும் இரண்டு விதமானவை. ஒன்று, குண்டடிப்பட்டும், தூக்கிலிடப்பட்டும் மரணத்தைத் தழுவுவது. இதில் கவர்ச்சி அதிகமிருந்தாலும், கஷ்டம் குறைவு தான்! இரண்டாவது, வாழ்க்கை பூராவும் மாளிகையைச் சுமந்து கொண்டிருப்பது. போராட்டம் நடந்துகொண்டிருக்கும் போது, நமக்கு எதிரான சூழ்நிலையில் நமது தோழர்கள் ஒவ்வொருவராக நம்மை விட்டுப் போய்க் கொண்டிருக்கும் போது நாம் ஒரு சில தேறுதல் வார்த்தைகளுக்காகத் தவிக்கிறோம். அப்படிப்பட்ட நேரங்களிலே தட்டுத்தடுமாறாமல் தமது லட்சியப் பாதையை விட்டு செல்லாதவர்கள், மாளிகையின் சுமையால் அசைந்து கொடுக்காதவர்கள், பளுவுக்குப் பயந்து தோள்களைக் கீழே இறக்காதவர்கள், ஒளி மங்கிவிடக்கூடாதென்பதற்காகத் தம்மைத் தாமே எரித்துக்கொள்பவர்கள், தன்மையான பாதையிலே இருள் சூழ்ந்துகொள்ளக்கூடாதென்று தம்மைத் தாமே மெழுகுவர்த்தியைப் போல் கரைத்துக்கொள்பவர்கள், உயிர்த்தியாகம் புரிபவர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் இல்லையா?”

-சிவவர்மா

விடுதலைப் பாதையில் பகத்சிங்…. புத்தகத்திலிருந்து… பக் 39 முதல் 41 வரை.

குறிப்பு : “ஆக்சன்” (Action) என்றால்… சிறையிலிருந்து யாரையாவது விடுவிப்பதையும், எந்த அதிகாரியையாவது கொல்வதையும், கொள்ளையடிப்பதையும், போலீசாரை எதிர்த்துப் போராடுவதையும் புரட்சியாளர் மொழியில் “ஆக்சன்”என்பர்.

வேங்கைவயல் – பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் போலீசு || தோழர் மருது வீடியோ

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை திட்டமிட்டு கொட்டியவர்களை யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தாங்களே மனிதக் கழிவைக் கொட்டியதாக ஒப்புக் கொள்ளச் சொல்லி தாழ்த்தப்பட்ட மக்களை போலீசு தொடர்ச்சியாக சித்திரவதை செய்கிறது.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பாசிச எதிர்ப்பு – க்ரியா ஊக்கிகளும், நவீன அராஜகவாதிகளும் – ஒரு பார்வை

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தலைமையிலான சங்பரிவார் பாசிச கும்பல் தமிழ்நாட்டில் தங்களுக்கான அடித்தளத்தை உருவாக்க ஒன்றிய அரசின் துணைகொண்டும், தங்களுக்கேயுரிய கிரிமனல் வழிகளிலும் வெறித்தனத்தோடு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அக்கும்பலின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தமிழ்நாடு ஏதோவொரு வகையில் எதிர்வினையாற்றிக் கொண்டே இருக்கிறது.

தமிழ்நாட்டின் இத்தகைய எதிர்ப்புப் போக்கை புரிந்து கொண்டு காவிக்கும்பல் அதற்கேற்றாற்போல் படிப்படியாக காய்நகர்த்திக் கொண்டு வருகிறது என்பது நாம் அறிந்ததே.

குறிப்பாக ஒன்றிய அரசின் கங்காணியான ஆளுநர் ஆர்.என்.ரவி மூலமாக தங்களது தாக்குதலை பாசிஸ்டுகள் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வள்ளுவரை காவிமயமாக்குவது, காசி தமிழ்ச்சங்கமம், தமிழ்நாடு என்று அழைக்க மறுப்பது, அரசுத் துறை செயலாளர்களை மாநில அரசுக்கெதிராக செயல்பட ஊக்குவிப்பது என்று பல்வேறு வழிகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை எல்லாம் காலில் போட்டு மிதித்து விட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திமிரோடு செயல்பட்டு வருவதையும் பார்த்து வருகிறோம்.

சட்டமன்றத்தில் ஆளுநர் ரவியின் இழிவான நடவடிக்கையையும், அதற்கான எதிர்வினையையும் நாம் அறிவோம். தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என்பதற்காக துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி பாசிச கும்பலின் இழிவான, சதித்தனமான செயல்பாடுகளை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கத் தயாரில்லை என்பதும் கடந்த காலங்களில் பல்வேறு விசயங்களில் நாம் பார்த்த நடைமுறை உண்மை.


படிக்க: இங்கேயும் சில நட்சத்திரங்கள் நகர்கின்றன!


அதே சமயம் இதில் நாம் திருப்தி அடைந்து விட முடியாது. குறிப்பாக, மேற்கண்ட அரசியல் பிரச்சினைகள் குறித்து பொதுவெளியில் வெளிப்பட்ட இரண்டு வகையான போக்குகளைப் பற்றி அம்பலப்படுத்துவதன் ஊடாக நாம் எதை நோக்கி நகரவேண்டும் என்பதை உணர்த்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

முதலாவது போக்கு, பாசிச எதிர்ப்பு என்பதே, திமுக-வை ஆதரிப்பதுதான் என்ற கோணத்தில் ”எப்புட்றா” வகை வாதப் பிரதிவாதங்களை சமூக ஊடகங்களில் நடத்தி திமுக-வை எப்பாடுபட்டாவது காப்பாற்றத் துணியும் கேடுகெட்ட சந்தர்ப்பவாதப் போக்கைப் பற்றியது. இத்தகைய நபர்கள் முற்போக்கு பேசுவதைப் பற்றி நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இவர்கள் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்த்து போராடும் புரட்சிகர, ஜனநாயக இயக்கங்களை கொச்சைப்படுத்துகிறார்கள் என்பதுதான் பிரச்சினை.

சமீபத்தில் அப்படியொரு ‘முற்போக்கு’ யூடியூப்பர் ஒரு சமூக ஊடகத்திற்கான பேட்டியில் பேசியிருந்தார். அதில் “ஆளுநரை எதிர்த்து ஜனநாயக இயக்கங்களும், புரட்சிகர இயக்கங்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் அடையாளப் போராட்டங்கள் நடத்துகிறார்கள். ஆளுநர் செல்லுகின்ற இடங்களில் எல்லாம் கருப்புக் கொடி காட்ட வேண்டியது தானே? ஏன் தயங்குகிறார்கள், வழக்கு வந்தால் வரட்டுமே… தொடர்ச்சியாக இதைச் செய்தால் மக்கள் உணர்வு பெற்று தானாக களத்தில் சேர்ந்து கொள்வார்கள்… எழுச்சி தொடங்கும்… ஆளுநர் வெளியேற்றப்படுவார்… ஏன் இதைச் செய்யாமல் இருக்கின்றார்கள் என்றுதான் எனக்குப் புரியவில்லை” என்று ’புதியதொரு’ கோணத்தில் பேசியிருந்தார்.

சாத்தியமான மாற்றைப் பேசுவோருக்கு (அதாவது திமுக-வின் பின்னால் அணிதிரண்டு பாசிசத்தை வீழ்த்துவது) மிகவும் அலர்ஜியான விசயம் ஒன்று இருக்கிறது. அது மக்களை அமைப்பாக்குவதன் மூலம்தான் எதிரிகளை வெல்ல முடியும் என்பது.

கடந்த காலங்களில் நமது அனுபவம் என்ன? பார்ப்பன பயங்கரவாதத்தை எதிர்த்தும், மறுகாலனியாக்க சுரண்டலை எதிர்த்தும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். பார்ப்பன சாதித் தீண்டாமையை எதிர்த்த சீறீரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம், நெல்லை கங்கைகொண்டானில் கோக் எதிர்ப்புப் போராட்டம், தஞ்சை வினோதகன் மருத்துவமனையைக் கைப்பற்றும் போராட்டம், இறால் பண்ணை அழிப்புப் போராட்டம், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு எதிரான போராட்டம் இவையெல்லாம் ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும் முன்னின்று நடத்திய போராட்டங்கள். மாதக்கணக்கான இந்த இயக்கங்களில் லட்சக்கணக்கான துண்டறிக்கைகள், பல்லாயிரக்கணக்கான சுவரொட்டிகள், ஆயிரக்கணக்கான சுவரெழுத்துக்கள், நூற்றுக்கணக்கான பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், போராட்டங்கள் என இடைவிடாமல் வேலை  செய்துள்ளோம்.


படிக்க: நூல் அறிமுகம் : அராஜகவாதமா ? சோசலிசமா ? | தோழர் ஸ்டாலின்


நமது பிரச்சாரங்களின் போது நம்மை தார்மீகரீதியாக ஆதரிக்கும் மக்கள் ஏன் இத்தகைய போராட்டங்களில் பெருந்திரளாக கலந்து கொள்ளவில்லை? ஏன் ஒரு எழுச்சியை நோக்கி தொடர்ச்சியாக இந்தப் போராட்டங்கள் நகரவில்லை? என்ற கேள்விதான் மிக முக்கியமானது.

பிரச்சார இயக்கங்களால் மக்களைத் திரட்ட முடியாது என்பதுதான் கசப்பான உண்மை. அதற்கு மக்கள் அமைப்பாக்கப்பட்டிருப்பதுதான் அடிப்படையான தேவை. அதுதான் நாம் பரிசீலிக்க வேண்டிய மிக முக்கியமான விசயம். இந்த உண்மையைப் பரிசீலிப்பது க்ரியா ஊக்கிகளுக்கு கசக்கத்தானே செய்யும்?

ஒரு எழுச்சியை உருவாக்குவது மட்டுமல்ல, அதைத் தக்கவைப்பதும், தொடர்ந்து எடுத்துச் செல்வதும்தான் முக்கியம். அதற்கு திரளான மக்கள் அமைப்பாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் அரசியல் அரிச்சுவடி.

டெல்லி விவசாயிகள் போராட்டம் குறிப்பிட்ட அளவு எடுத்துச் செல்லப்பட்டதற்கான காரணம் குறிப்பிடத்தகுந்த அளவு விவசாயிகள் அமைப்பாக்கப்பட்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை. அதனால்தான் பஞ்சாப், ஹரியானாவைத் தவிர மற்ற இடங்களில் பெருந்திரளாக திரளவில்லை.

ஆனால், பொதுவில் பார்ப்பன எதிர்ப்பு, தமிழுணர்வு என்ற வகையில் தமிழ்நாட்டு மக்களிடம் குறிப்பிடத்தகுந்த அளவு உள்ள தார்மீக ஆதரவை மட்டும் வைத்துக் கொண்டு கனவுக்கோட்டை கட்டச் சொல்கிறார்கள் க்ரியா ஊக்கிகள். அதாவது திமுக-வுக்காக முற்போக்கு, ஜனநாயக இயக்கங்களும், புரட்சிகர இயக்கங்களும் தியாகம் செய்ய வேண்டும் என இவர்கள் கூறுகின்றனர். உழைக்கும் மக்கள் தங்களுக்கான சொந்த அடித்தளத்தை உருவாக்கத் தேவையில்லை, திமுக-வின் பின்னால் அணிதிரண்டால் பாசிசத்தை ஒழித்துவிட முடியும் என்று நம்பச் சொல்கின்றனர்.

பாசிசத்தை வீழ்த்துவதற்கு உழைக்கும் மக்களை அணிதிரட்டுவது, பாசிச எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றிய எந்தப் புரிதலுமற்ற முதலாளித்துவ சந்தர்ப்பவாதக் கும்பல்களின் உளறல்களே இவை.


படிக்க: ‘சோசலிச’, ‘ஜனநாயக’ முகமூடிகளின் துரோகத்தில் செழித்துவளரும் பாசிச சக்திகள்!


கார்ப்பரேட் திமுக-வின் பாதந்தாங்கிகளாக இருந்து கொண்டு (இவர்கள் திமுக-வின் தொடர்ச்சியான கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகள் பற்றி மூச்சு கூட விடமாட்டார்கள்) போகிற போக்கில் ஜனநாயக இயக்கங்களையும், புரட்சிகர இயக்கங்களையும் அவதூறு செய்வது கடும் கண்டனத்துக்குரியதாகும்.

மார்க்சிய லெனினியத்தின் மீதும், புரட்சிகரக் கட்சியின் தலைமையில் மக்களைத் திரட்டுவதைப் பற்றியும் நம்பிக்கையிழந்த இவர்களால் வேறு எப்படிப் பேச முடியும்?

இன்னொரு பக்கம் ஆளுநரே வெளியேறு என்று போராடுவதைக் காட்டிலும், ஆளுநர் பதவியே வேண்டாம் என்று போராட வேண்டும் என சிலர் கூறுகின்றனர். ஏனெனில் அப்பதவியே பிரிட்டிஷ், பார்ப்பன, பனியா முதலாளிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்டது. எனவே அப்பதவியே வேண்டாம் எனப் போராட வேண்டும் எனக் கூறுகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட தருணத்தில், அச்சூழலுக்கேற்ப முழக்கங்களை முன்வைத்துப் போராடுவதற்கு அதற்கான திட்டமும், அரசியல் முன்முயற்சியும் இன்றியமையாதது. “ஆளுநரே வெளியேறு” என்பது குறிப்பிட்ட சூழலுக்கான முழக்கம் ஆகும்.

உதாரணத்திற்கு காவி – கார்ப்பரேட் பாசிசமானது தற்போதையை சூழலில் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அம்பானி – அதானி பாசிசமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இத்தகைய குறிப்பான சூழ்நிலைக்கேற்ப நமது அரசியல் முழக்கங்களை முன்வைத்து, மக்களிடம் கொண்டு செல்கிறோம்.

ஆனால், இப்படிப்பட்ட சிந்தனை முறையோ, நடைமுறையோ இல்லாததன் காரணமாகவே அராஜகவாதமான முறையில் தங்களது அரசியலை வெளிப்படுத்துகின்றனர். ஏனென்றால், இவர்கள் கூறுகின்ற விசயங்களை மக்களிடம் கொண்டு செல்லப்போவதில்லை. போகிற போக்கில் ஒரு அரசியல் பிரச்சினையில் அராஜகமான முறையில் தீர்வைப் பற்றிப் பேசுவது. அதற்கு பொறுப்பாக நடந்து கொள்ளவும் மாட்டார்கள். ஆனால் இன்னொரு பக்கம் நடைமுறையில் தங்கள் பகுதியில் ஒரு மருத்துவமனை தொடர்பான பிரச்சினையில் தலையிடும்போது குறிப்பிட்ட பிரச்சினைக்கேற்ப முழக்கம் வைக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் இவர்களை நவீன அராஜகவாத கும்பல் என்று கூறுகிறோம்.

உண்மையில் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வேரடி மண்ணோடு வீழ்த்துவதற்கு, பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிகளை கட்டியமைக்க வேண்டிய பெருந்தேவை நமக்கு முன்னே உள்ளது. இச்சூழலில் பெருவாரியான உழைக்கும் மக்களை அமைப்பாக்குவதைப் பற்றிய எந்தப் பார்வையும் இல்லாத, வாய்ச்சவடால் அடித்துக் கொண்டு கிளம்பியிருக்கின்ற இத்தகைய முதலாளித்துவ சந்தர்ப்பவாத, நவீன அராஜகவாதப் போக்குகளை புரிந்து கொண்டு தொடர்ச்சியாக அம்பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

இனியன்

Adani: An enemy of the World Proletariat!

The last two years have been the toughest years in history. The world was devastated by the deadly Corona pandemic and the people had died in clusters. While people around the world were struggling to save their lives, a small group was competing to find a place in the list of the world’s richest elite. Adani was the foremost among them. At that time, his daily income was ₹1,002 crore.

Being born into an ordinary textile business family, how could he earn this much? How did he manage to reach the third spot in the world’s rich list? The only reason is the Modi-Adani alliance. Adani’s businesses and assets began to grow only after Modi became the Chief Minister of Gujarat in 2001. It would not be an exaggeration to say that Adani’s many business expansions and industrial developments were shown as Modi’s Gujarat model.

During the 2002 anti-Muslim pogrom in Gujarat, it was Adani who supported and defended Modi. Some leaders of the Confederation of Indian Industry (CII) had criticised Modi for the riots. Adani, who had opposed it from within the group, had publicly threatened to leave the federation for Modi’s sake. The Modi-Adani alliance was so strong at that time.

Adani is not only close to Modi but also to his ideological leadership, the RSS. Sudheesh Minni, the author of the book “Cellars of the Inferno: Confessions of an RSS Pracharak”, has exposed Adani’s presence at the shakhas and important meetings held at the Nagpur office, the headquarters of the RSS, as a testimony to the Adani-saffron nexus.


Also Read: Adani Namo Namaha!


In 2003, Adani had announced that he would invest ₹15,000 crore at the Vibrant Gujarat Summit of investors. Modi had acquired 15,946 acres of land at a throwaway price of ₹1-32 per square metre for the Mundra port maintained by Adani and the proposed Special Economic Zone (SEZ) project. Adani gave the land to the state-run public sector company Indian Oil for ₹600 per square metre.

The Gujarat government itself bought natural gas in the open market and sold it to Adani at a lower price; When Adani did not supply electricity to the Gujarat Electricity Board as per the contract, the government collected only a minimum penalty; The irregularities committed by the Modi-Adani alliance in the sale of shares of Mundra port to Adani at throwaway prices are incalculable. Adani, who looted crores of people’s money through these scams, entered into subsequent businesses and joined the list of the elite.

In 2009, he started 11 companies for  separate businesses. In 2012, he stepped into solar power generation. In the financial year 2012-2013, the annual income of the Adani Group increased to ₹47,352 crore. However, in 2000, the total budget of the Adani Group stood only at ₹3,300 crore.

Adani, whose looting was centred in Gujarat till 2013, began expanding across India when Modi became the Prime Minister in 2014. Modi flew in Adani’s own aircraft for the 2014 Lok Sabha election campaign. As Modi flew in Adani’s plane, shares of Adani’s companies soared. Shares of Adani’s three companies grew nearly 85.35 per cent.

After winning the election and Modi became Prime Minister, the Adani Group began to grow at a lightning pace. It further expanded its business by buying the enterprises of others in bulk. On the day, when the results of the 2014 Lok Sabha elections were declared, Dhamra port was acquired from L&T and Tata Steel for ₹5,500 crore. He purchased a 1,200 MW thermal power plant in the next three months and a 600 MW thermal power plant in the next three months.


Also read: Adani – The Bandit who robbed India! | People’s Power


If buying others’ businesses is one way, then another means is to expand one’s business in areas where one has no prior experience. Adani Group, which has nothing to do with the aviation industry, was awarded the contract to operate six airports in February 2019. For this purpose, the Adani Group has created a separate company called Adani Airport Holdings Limited. It has also entered the telecom sector with the acquisition of 5G spectrum.

As a result, the Adani Group has grown into India’s leading company in sectors such as commercial coal mining, ports, electricity, fuel production and distribution. Adani Group is pouncing into other fields too. Through this, it is expanding its influence in other countries as well.

Soon after Modi became the Prime Minister of India, he began to lay the groundwork for Adani’s international plunder. Modi himself went directly to Australia and bargained for the coal mine for Adani. Modi also provided him ₹6,500 crore from the SBI for this. Not only this, bank loans have been at the heart of the overall growth of the Adani Group. In particular, thousands of crores of rupees paid through public sector banks and written off as bad loans within a specified period of time amassed a huge capital for corporates like Adani-Ambani. The basis for this is that the government’s aim is to create Adanis by looting the tax money and bank savings of crores of working people as its primary task. The name they have given to this plundering is ‘Development of the Nation’.

Like the Australia mining deal, Modi negotiated and concluded the Sri Lankan 500-megawatt wind power project in favour of Adani. “The President (Gotabaya Rajapaksa) summoned me after a meeting and said, India’s Prime Minister Modi is pressuring him to hand over the project to the Adani group”, said Ferdinando, who was the then chairman of Sri Lanka’s electricity board.

If one method is to start power plants in one country and generate electricity and supply electricity to the government of that country, then another method of the Adani Group is to generate electricity in one country and supply power to another country. The Adani Group is following the second line of power supply to Bangladesh and the European Union countries.

The Kota Thermal Power Plant in Jharkhand is producing 1,600 MW of electricity; this is being sent to Bangladesh from December 2022. The contract for the same was signed with the Bangladesh Power Development Board (BPDB) in 2017 itself. The agreement was finalised through a meeting with Adani by the Bangladeshi Prime Minister, who visited India in September 2022.

Like the governments here, the Bangladesh government also buys electricity from Adani at a higher price. The BPDB agreed to pay 3.26 Bangladeshi taka (₹2.72) per kilowatt hour as capacity charge, which is higher than any other power plant in Bangladesh.


Also Read: Let’s uphold the day of Russian Socialist Revolution! Let’s smash RSS-BJP; Ambani-Adani fascism! | Pamphlet


Similarly, the Adani Group has said that it will produce electricity and emission-free fuel (green hydrogen) in Morocco and supply it to the European Union. The project, which supplies 10 GW of electricity, is the largest power generation project outside India.

The Adani Group aims to become the world’s largest producer by investing $50 billion in green hydrogen production within the next decade. For this, it has partnered with France’s TotalEnergies.

Apart from coal mining, power generation and distribution, Adani Port is also taking over cargo ports in other countries too. In 2017, the Adani Group was involved in the construction of a green field container port at Carey Island of Malaysia; this would be an extension of the existing Port Klang.

Similarly, in July 2022, the Adani Group captured the port of Haifa, a major trading hub on Israel’s Mediterranean coast. It took over the port in alliance with Gadot, a local chemical and logistics conglomerate. Israel is largely dependent on sea route to import and export goods to their country. It should be noted that the port of Haifa itself handles almost half of the container shipping for Israel.

While the acquisition of the port by the Adani Group is significant on that basis, it is more important that the Adani Group aims to facilitate trade routes between India, Europe and the Middle East through the port. What’s more is that the Adani Group is focused on creating an integrated global transport through its ports in Carey Island in Malaysia, Haifa in Israel and ports in India.

Since 2014, the Adani Group has not only expanded its plundering across India, but has also been expanding its plundering in many countries of the world. There have also been mass protests against Adani’s plundering in Australia and Sri Lanka. At the same time, protests are taking place in various parts of India, including Gujarat, Kerala and Tamil Nadu, against the plundering of the Adani Group and the destruction of the environment it causes. In Kerala, the people there are now actively protesting against Adani’s Vizhinjam port.

With the help of Modi, who has been deceiving people in the name of development and progress and turning the country into a hunting ground for corporate dacoits, Adani is expanding his destructive plunder not only in India but also in many other countries. In this aspect, Adani is not just an enemy of the Indian proletariat, but of the world proletariat. It is, therefore, necessary for the Indian proletariat to unite with the world proletariat in the struggle to bring down Adani. It is also our obligation to smash the Modi-Adani alliance.

தமிழ்நாட்டின் எதிரி யார்? சீமானா? வடக்கனா? | தோழர் வெற்றிவேல்செழியன் வீடியோ

வட மாநில தொழிலாளர்கள் யார்? நமது தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை எடுத்துக் கொள்ளுங்கள். எல்லா கட்டுமானங்களிலும் அவர்கள் பிணங்கள் புதைக்கப்பட்டுள்ளன. அவர்களின் ரத்தமும் சதையும் அதில ஒட்டி இருக்கிறது. ஆடு மாடுகளை விட கேவலமாக நடத்தப்படுகின்றார்கள். ஒரு சகமனிதன் அதைப் பார்த்துக் கொண்டு இனவாதம் பிடிவாதம் பேச முடியுமா? அதை பேசுபவன் தான் இந்த இன வெறி பிடித்த சீமான். ஒரு சக தொழிலாளி இப்படி ஆடு மாடுகளைப் போல மோசமாக நடத்தப்படுகிறானே என்ற கோபம் ஏன் அவருக்கு வரவில்லை என்றால், அவர் முதலாளிகளின் ஆர்.எஸ்.எஸ் – அம்பானி – அதானிகளின் ஆள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

சிவராத்திரி விழாவிற்கு முர்மு: பாஜகவின் அடையாள அரசியல்! | தோழர் ரவி | வீடியோ

குடியரசு தலைவர் பழங்குடியின பெண் என்று கூறி அடையாள அரசியல் செய்து கொண்டிருக்கிறது மோடி அரசு. காடுகளை அழித்து மிக பிரம்மாண்டமான கோவிலை கட்டி இருக்கிறார் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ். காடுகளை பாதுகாக்கும் பழங்குடி மக்களின் இருந்து வந்த முர்மு காடழிப்பு செய்த கார்ப்பரேட் சாமியார் நடத்தும் சிவராத்திரி விழாவில் கலந்துகொள்கிறார். இதுதான் பாசிச பாஜகவின் அரசியல். இதனை பயன்படுத்திக்கொண்டு கார்ப்பரேட் சாமியார் ஜக்கி இன்னும் பல்வேறு காடுகளை அழித்து கோவில்களை கட்டுவார்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

தோழர் ரவி
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
புமாஇமு, தமிழ்நாடு.

அருந்ததியர் மக்களை வந்தேறி என்ற சீமான் | மக்கள் அதிகாரம் கண்டனம்

18.02.2023

அருந்ததியர் மக்களை வந்தேறி என்று தமிழரை பிளந்து
தமிழ் இனத்தை உடைக்கும் சீமான்!

கண்டன அறிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியின மக்களை வந்தேறிகள் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் டிஎன்ஏ சோதனை செய்யாமலேயே யார் தமிழர்? யார் வந்தேறிகள்? என்கின்ற மாபெரும் ஆராய்ச்சியை செய்து வருகிறார் சீமான். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் முதலியார் சாதியை சேர்ந்த மக்கள் அதிகமாக இருப்பதால் தன்னுடைய கட்சியும் முதலியார் சாதியை சேர்ந்தவரை நிறுத்தியுள்ளது என்று பெருமையாக கூறியுள்ளார் சீமான்.இப்படி சாதிப்பெருமையை பேசிக் கொண்டிருக்கும் சீமான் நாம் தமிழர் என்ற பேசுவதே கேலிக்கூத்தானது. அவரே அருந்ததியர்கள் வந்தேறிகள் என்ற கருத்தையும் உதிர்த்துள்ளார்.

இதற்கு எதிராக ஈரோடு பகுதியைச் சேர்ந்த அருந்ததி சாதியை சேர்ந்த மக்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் தமிழகத்திலே தோன்றியது என்றால் அக்காலம் முதல் நடைபெற்ற அனைத்து விடுதலைப் போர்களிலும் சாதி வேறுபாடு இன்றி அனைவரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை.

வேலு நாச்சியாரின் படைத்தளபதியாய் குயிலியும் பூலித்தேவனின் தளபதியாய் ஒண்டிவீரனும் இருந்த வரலாறுதான் தமிழ்நாட்டின் வரலாறு. இது எதுவும் அறியாத சீமான், வந்தேறிகள் என்று தமிழரை பிளவுபடுத்துகிறார்.

தமிழரைப் பிளவு படுத்தி தமிழினத்தை உடைத்து தமிழ்நாட்டை கூறுபோடும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க பாசிச கும்பலின் நிகிழ்ச்சி நிரலையே சீமான் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை உண்மை.

அருந்ததியின மக்களை வந்தேறிகள் என்று கூறி தமிழின ஓர்மையை உடைக்கும் சீமானின் பேச்சினை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ; அம்பானி- அதானி பாசிசத்தால்
ஒடுக்கப்படும் மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி தமிழ்நாட்டை பாசிசத்துக்கு எதிரான அரணாக மாற்றுவோம். அதற்கு எதிரான மக்கள் விரோத சக்திகளை புறக்கணிப்போம் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச்செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு- புதுவை
9962366321

இனவெறியை தூண்டும் சீமான் மீது நடவடிக்கை எடு || மக்கள் அதிகாரம் புகார்

தேதி : 18.02.2023

அனுப்புதல் :

தோழர் வெற்றிவேல்செழியன்,
மாநிலச்செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை

பெறுதல் :

காவல் ஆணையர்,
காவல் ஆணையரகம்,
சென்னை.

பொருள்: வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக தொடர்ந்து இன வெறியைத் தூண்டி வரும்  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க கோருதல்.

ஐயா, வணக்கம்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகிய இருவரும் நாம் தமிழர் கட்சி நடத்தும் பொதுக்கூட்ட மேடைகளில் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான இனவெறியை தூண்டும் கருத்துக்களை பேசி வருகின்றனர்.

இது ஒரே இடத்தில் வேலை செய்யும் தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கும் மோதல் போக்கை உருவாக்கும் செயலாகும். சமீபத்தில் திருப்பூர், ஓசூர் போன்ற இடங்களில் உண்மையாக நடந்த சம்பவம் என்ன என்பதை அறிவதற்கு முன்பே வட மாநில தொழிலாளர்களுக்கு எதிரான விஷமக் கருத்துக்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டன.

சாட்டை துரைமுருகன் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது “வடக்கன் வரும்போது 25 கிலோ கஞ்சாவோடு வருகிறான். பகலில் வேலை பார்த்துவிட்டு இரவில் கஞ்சா விற்கின்றான்” என்றும், “நமது பெண்களை கையைப் பிடித்து இழுப்பான், நமது குழந்தைகளை கடத்திச் சென்று விடுவான்” என்றும் வட மாநில தொழிலாளர்களை பார்த்தாலே கோபம் வரும் அளவிற்கு இனவெறி கருத்துக்களை பேசியுள்ளார்.

புகார் அளித்த பின் பத்திரிகையாளர் சந்திப்பில் மக்கள் அதிகாரம் தோழர்கள்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 15.02.2023 அன்று ஈரோட்டில்  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “கஞ்சா வச்சிருக்கான், அபின் வச்சிருக்கான்,  பெண்களை கைய பிடித்து இழுத்தான், கற்பழித்தான் என்று உள்ளே தூக்கிப்போட்டு சாப்பாடு இல்லாமல் அடி வெளுத்துவிடுவேன். அவனே பெட்டியை தூக்கி கிட்டு ஓடிடுவான்” என்று விஷமத்தனமான இன வெறியூட்டும் கருத்தை பேசியுள்ளார்.

வடமாநில மற்றும் தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் மோதலை ஏற்படுத்தி ரத்தம் குடித்து அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே சீமானும் சாட்டை துரைமுருகனும் இதை செய்து வருகின்றனர்.

இதனால் சமூகத்தில் அசாதாரண சூழல் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே இன வெறியை தூண்டி மோதலை ஏற்படுத்தத் துடிக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் சாட்டை துரைமுருகன் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

தோழமையுடன்,
தோழர் வெற்றிவேல்செழியன்,
மாநிலச்செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.