Monday, June 23, 2025
முகப்பு பதிவு பக்கம் 154

இந்து ராஷ்டிரத்தை அடித்து நொறுக்குவோம் | தோழர் ரவி வீடியோ

மோடியை அம்பலப்படுத்தியது தான் திஸ்தா செதல்வாட் செய்த குற்றம் அதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுபுர் சர்மாவை அம்பலப்படுத்திய ஆல்ட் நியூஸ் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தபோல்கர், கல்புர்கி, பன்சாரே, கௌரிலங்கேஷ் போன்ற முற்போக்காளர்களை கொலை செய்துவிட்டார்கள் காவி பயங்கரவாதிகள்.

ஸ்டான் சுவாமியை சிறையிலேயே சித்திரதை செய்து கொன்றுவிட்டது அரசு. அடுத்து பலர் சிறையில் சித்தரவதைக்குள் இருக்கிறார்கள். அதவாது மோடி அரசை எதிர்த்து பேசுபவர்கள் அனைவரையும் ஒடுக்குகிறார்கள். அவர்களை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று சித்தரிக்கிறார்கள்.

நாட்டின் இசுலாமிய மக்கள் மீது பொய்வழக்குகள், புல்டோசர் நீதிகள் பாய்கின்றனர். காவி பயங்கரவாதிகளால், தாக்குதலுக்குள்ளாகிறார்கள்; கொலை செய்யபடுகிறார்கள்.

மோடி அரசின் கார்ப்பரேட் கொள்கைகளால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து,,, அவர்கள் பயன்படுத்து அதியாவசிய பொருட்களின் விலை விண்ணைமுட்டி வருகிறது. பெட்ரோல் – டீசல் விலை உயர்வு அதை தொடர்ந்து அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. ஜி.எஸ்.டி வரி விதிப்பால் சிறு-குறு தொழில்கள் அழிக்கப்படுவருகிறது.

வேலையில்லாத்திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராடிய இளைஞர்களை அச்சுருத்துவதற்காகவே உ.பி யோகி அரசு புல்டோசர் பேரணி நடத்துகிறது.

ம.பி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆளே இல்லாமலும் ஆட்சியை கவிழ்த்து, பாஜக ஆட்சிக்கட்டிலில் ஏறிவருகிறது. எனவே இனியும் தேர்தல் ஜனநாயம் என்னும் கேலிக்கூத்தை நம்புவது முட்டாள் தன்ம்.

இவை அனைத்தினும் நாம் கூறவருவது என்ன? இந்துராஷ்டிரம் நடைமுறையில் இருக்கிறது. இதனை அடித்து நொறுக்காமல் உழைக்கும் மக்களுக்கு வாழ்க்கை இல்லை என்பதே!

புமாஇமு அமைப்பின் மாநில ஒருங்கிணைப்புக்குழு தோழர் ரவி இந்து ராஷ்டிரத்தின் பாசிச தாக்குதல்கள் பற்றி இந்த காணொலியில் விரிவாக விளக்குகிறார்….

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள்!!

ஜி.எஸ்.டி வரி உயர்வு: மக்களை வாட்டிவதைக்கிறார்கள் | மக்கள் நேர்காணல்

ஜி.எஸ்.டி அதிகரிப்பதால், உழைக்கும் மக்கள் வறுமையிலும், பட்டினியிலும் தள்ளப்படுவார்கள். ஆனால் மறுபக்கம் முதலாளிகள் செல்வ செழிப்பாக இருக்கிறார்கள். உழைக்கும் மக்கள் ஜி.எஸ்.டி வரி உயர்வை பற்றி பாதிப்புகளை நம்முடன் இக்காணொலியில் பகிர்ந்து கொள்கிறார்கள்…

வீடியோ ஆக்கம்:
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

தனியார் கல்விக்கு எதிரான போராட்ட(கள்ளக்குறிச்சி)மாடல் பரவி விடக்கூடாது என்பதே திமுக அரசின் நோக்கம்! | மருது வீடியோ

ள்ளக்குறிச்சி படுகொலை பற்றி உளவுத்துறை சாதிய பிரச்சினை என்று கூறியுள்ளது. உளவுத்துறையின் நோக்கமே போராடியவர்களை போக்கிரிகளாகவும், பயங்கரவாதிகளாக்வும் கூறி தனிமைப்படுத்துவது தான் நோக்கம்.

அரசின் நோக்கம் எப்போதும் மக்கள் பிளவுபட்டே இருக்க வேண்டும். தனியார் பள்ளியில் ஏதேனும் பிரச்சினையேன்றால் பள்ளி முன் அமரவேண்டும் போராட்டவேண்டும் என்ற இந்த நடைமுறை தமிழகம் முழுவதும் உள்ள 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் நிலைமை என்ன ஆகும் என்பதுதான் அரசுக்கு பிரச்சினை.

அனைவரிடமும் பேசும் முதல்வர் ஸ்டாலின் ஏன் மாணவி ஸ்ரீமதியின் பேற்றோர்களிடம் பேசவில்லை.

தூத்துக்குடி மாடல் என்பது அரசுக்கு துப்பாக்கிச்சூடு மாடல்; மக்களுக்கு சாதி மதம் கடந்த கார்ப்பரேட் கம்பெனிக்கு எதிராக போராடி வெற்றிபெற்ற வீரம் செறிந்த போராட்ட மாடல். அதேபோல், ஜல்லிக்கட்டு மாடல் என்பது அரசுக்கு வன்முறை செய்து ஒடுக்கிய மாடல்; மக்களுக்கு ஒரு பொதுக்கோரிக்கைக்கான தமிழகமே பலநாட்கள் அமைதி வழியில் போராட்டி சாதித்த மாடல். அதேபோல் கள்ளக்குறிச்சி மாடல் என்பது அரசுக்கு கலவரம் செய்தவர்களை ஒடுக்கிய மாடல்; மக்களுக்கு தனியார் பள்ளிகளை எதிர்த்து இப்படித்தான் போராடவேண்டும் என்று சொல்லும் தனியார் கல்விக்கு எதிரான போராட்ட மாடல். இந்த மாடல் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் பரவினால், உழைக்கும் மக்களின் போராட்டம் என்ன பரிமானத்தை அடையும் என்று யோசித்து பாருங்கள்!

கொலைகார சக்தி பள்ளியின் உரிமையாளரை காப்பாற்ற துடிப்பதன் காரணம் என்ன? இந்த பள்ளிக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் சாதித்து காட்டிவிட்டார்கள் என்றால் இந்த போராட்டம் வடிவம், அடுத்து பல தனியார்பள்ளிகளுக்கு பரவும். தொழிற்சாலை தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு பரவும் இது முதலாளிகலுக்கு மிகப்பெரிய பிரச்சினை.

எந்த காலத்திலும் முதல்வர் ஸ்டாலினும் டிஜிபி சைலேந்திரபாபுவும் தனக்கு கீழ் இருக்கும் அதிகார வர்க்கத்தை காட்டிக்கொடுக்க மாட்டார்கள்.

இதுபோன்ற பல கேள்விகளுக்கு ரெட் பிக்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் பேட்டி வீடியோவில் விடையளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மாணவி ஸ்ரீமதி மரணம்: தனியார் கல்வியை ஒழிப்பதே தீர்வு | A.ஜான் வின்சென்ட் | வீடியோ

கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியின் மாணவி ஸ்ரீமதியின் மரணம் பல்வேறு சந்தேகங்கள் ஏற்படுத்துகிறது. ஆனால் அந்த சந்தேகங்களுக்கு இன்று வரை விடைக்கவில்லை. எனவே தனியார் கல்வியில் நடக்கும் இதுபோன்ற மர்ம மரணங்களை தெளிவாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதுப்போன்ற தனியார் கல்வி நிறுவனங்களின் மர்ம மரணங்களுக்கு முக்கிய காரணமான தனியார் கல்வியை ஒழிக்காமல் இப்பிரச்சினை தீராது.

மேலும் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் இந்த பேட்டி வீடியோவில் எழுப்புகிறார் PUCL அமைப்பின் மாநில செயலாளர், A.ஜான் வின்சென்ட் அவர்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

திருவள்ளூர் பள்ளி மாணவி மர்ம மரணம் – அதிகார வர்க்கத்தை அடிபணிய வைத்த மக்கள்!

திருவள்ளூர் பள்ளி மாணவி மர்ம மரணம்
– அதிகார வர்க்கத்தை அடிபணிய வைத்த மக்கள்!

கள்ளக்குறிச்சி மக்களின் போர்க்குணமிக்க போராட்டம் வழிகாட்டுகிறது!

கலகங்களின் தேவையை இறுகப் பற்றிக் கொள்ளும் தருணமிது!

திருவள்ளூர் மாவட்டம் – திருத்தணி அருகே கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி சரளா (17) ஜூலை 25 அன்று மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

பள்ளி நிர்வாகம் மாணவியின் மரணம் குறித்து முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்ததால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய பதிலை தர வேண்டும் எனக்கோரி மாணவியின் சொந்த ஊரான தெக்களூரில் பொதட்டூர்பேட்டை – திருத்தணி சாலையில் 4 அரசுப் பேருந்துகளை மக்கள் சிறைப்பிடித்து, சாலை மறியலிலும் ஈடுபடுகின்றனர். உடனடியாக அங்கு வந்த திருத்தணி போலீசும், எம்.எல்.ஏ சந்திரனும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதிகள் அளிக்கின்றனர்.

இது தொடர்பாக மப்பேடு போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்கின்றனர். டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்படுகிறது. மாணவியின் மரணம் குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுகிறது. அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி விடுதியின் முன்பு குவிந்தனர்.


படிக்க : கள்ளக்குறிச்சி-போராடியவர்கள் மீது ஒடுக்குமுறை: கண்டனப் பதிவுகள் | வீடியோ


திருவள்ளூர் எஸ்.பி பெகர்லா செபாஸ் கல்யாண், வட்டாட்சியர் செந்தில்குமார், குழந்தைகள் நல அதிகாரிகள் உடனடியாக பள்ளி விடுதிக்கு வந்து விசாரணை நடத்தினர். காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா பள்ளி விடுதியில் விசாரணை மேற்கொள்கிறார்.

மாணவியின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.க்கள் வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உடனடியாக விசாரணை மேற்கொள்கிறார். தங்களது மகள் சரளாவின் மர்ம மரணத்திற்கு நியாயமான பதில் கிடைக்கும் வரை உடலை வாங்கப் போவதில்லை என பெற்றோர் தெரிவித்ததை தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். இதில் மாணவி சரளாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்படுகிறது.

இதன் பின்பே மாணவியின் உடல் பெற்றோர்களால் பெற்றுக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட சம்பவங்கள் அனைத்தும் ஒரே நாளில் நடக்கின்றன.

கள்ளக்குறிச்சி போராட்டத்தில் நான்கு நாட்களாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், போராடிய மக்களை துச்சமென நினைத்து, இழுத்தடித்து, அடக்குமுறைகளை ஏவி வந்த அதிகார வர்க்கம் திருவள்ளூரில் நடந்த சம்பவத்துக்கு ஒரே நாளில் நடவடிக்கை எடுக்கிறது என்றால்,  மக்களின் மேல் அக்கறை உள்ளவர்கள் போல்  காட்டிக் கொள்கிறது என்றால் என்ன காரணம்?

தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் திருவள்ளூரானது கள்ளக்குறிச்சி போராட்ட வடிவத்தை கைக்கொண்டு விடும் என்பதுதான் காரணம். “கலகம் செய்யாமல் நியாயம் பிறக்காது” என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுவிட்டார்கள் என்பதே காரணம். அதை கள்ளக்குறிச்சியில் மக்கள் நடத்திய போர்க்குணமிக்க போராட்டம் ஒருபடி மேலே கொண்டு சென்றுவிட்டது. மக்கள் அமைதியாக இருக்கும் வரை அவர்களின் மீது வரைமுறையற்ற ஒடுக்குமுறைகளை ஏவுபவர்கள் உழைக்கும் மக்களின் கலகத்தை கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள். அதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு  தள்ளப்படுகிறார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், கள்ளக்குறிச்சி போராட்டம் ஆகியவை தமிழக மக்களின் போராட்ட வடிவத்தை தீர்மானிக்கும் முன்னுதாரணமான விசயங்களாக மாறுகின்றன. அடுத்தடுத்து இந்த வடிவங்களை நிரந்தரமாக்கிக் கொள்ளும் நிலைக்கு மக்களை தள்ளிவிடக் கூடாது என்ற எச்சரிக்கைதான் திருவள்ளூரில் அதிகார வர்க்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு முக்கியமான காரணம்.

கள்ளக்குறிச்சி போராட்டத்தின் மூலம் பெற்ற போராட்ட உணர்வை திருவள்ளூரிலும் தெக்களூர் பகுதி மக்கள் பேருந்துகளை சிறைப்பிடித்தன் மூலம், சாலைகளை மறித்ததன் மூலம் வெளிக்காட்டத் தொடங்குகின்றனர். இனியும் தாமதித்தால் தமிழகமே கலகத்தில் இறங்கும் என்ற அச்சம்தான் ஆளும் வர்க்கத்தை உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தள்ளுகிறது.

கள்ளக்குறிச்சியில் போர்க்குணமிக்க போராட்டத்தை நடத்தியதால் போலீசின் அடக்குமுறைக்கு ஆளாகி நூற்றுக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் சிறைக்கு சென்றார்கள் என்பது உண்மைதான்.

உலகளாவிய கார்ப்பரேட் பயங்கரவாத நிறுவனமான ஸ்டெர்லைட்டை தூத்துக்குடி மக்கள் 13 பேரின் இன்னுயிரை கொடுத்துத்தான் மூடியுள்ளார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் போலீசின் தாக்குலை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு களத்தில் நின்றார்கள் தமிழக இளைஞர்கள்.

இந்தப் போராட்டங்கள் இந்த அரசும், போலீசும் யாருக்காக நிற்கிறது முற்றிலும் அம்பலமாகின.

இத்தகைய தியாகமும், அர்ப்பணிப்பும் மிக்க கலகங்கள்தான் ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்துகின்றன. அதுதான் திருவள்ளூரில் விரைவான நடவடிக்கையை நோக்கி ஆளும் வர்க்கத்தை  தள்ளியது என்பதை நாம் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும்.


படிக்க : கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? | Press Meet


அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் போர்க்குணத்துடன் போராடிய மக்களின் நியாயத்தை திருவள்ளூரில் எடுத்த நடவடிக்கையின் மூலம் ஆளும் வர்க்கம் ஒத்துக் கொண்டுள்ளது என்பதே தர்க்கரீதியான உண்மை.

தற்போது அதிகார வர்க்கம் எடுக்கும் நடவடிக்கைகள் நம்மை வாழவைப்பதற்காக அல்ல. தனது எஜமானனான சுரண்டும் வர்க்கத்தை பாதுகாப்பதற்கும், மக்கள் மீது பாய்வதற்கான தருணத்தை எதிர்நோக்கி பதுங்கிக் கொள்கிறது என்பதே உண்மை. ஏனெனில் அதன் இயல்பே அதுதான்!

அதிகார வர்க்கத்தின் தயவின் மூலம் நமது உரிமைகளை ஒருநாளும் பெற முடியாது!

போர்க்குணமிக்க உழைக்கும் மக்களின் போராட்டத்தை நிபந்தனையின்றி ஆதரிப்போம்!

உழைக்கும் மக்களின் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கான கலகங்களை நிரந்தரமாக்குவதன் மூலம் வர்க்கப் போராட்டத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம்!


இனியன்

இலங்கை மின் உற்பத்தி ஒப்பந்தம்: அதானியின் பகற்கொள்ளைக்கு மோடியின் கரசேவை!

ஸ்.பி.ஐ வங்கித் தலைவரை கையோடு அழைத்துச் சென்று அதானிக்கு ஆஸ்திரேலியாவில் 7500 கோடி செலவில் நிலக்கரி சுரங்கம் வாங்கிக் கொடுத்தது, காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம், இனயம் துறைமுகம்  உருவாக்க அனுமதி, அதானியின் மின் உற்பத்தி ஏகபோகத்திற்காக கொண்டுவரப்பட்ட உதய்மின் திட்டம் உள்ளிட்டவற்றால் அதானியை ஆசியாவின் நம்பர் ஒன்  பணக்காரராக்கிய மோடி தனது கைங்கரியத்தை இலங்கையிலும் செய்திருக்கிறார்.

கடந்த மார்ச் 2022-இல்,  இலங்கை வடக்கு மாகாணத்தின் மன்னார் மற்றும் பூநேரி ஆகிய பகுதிகளில்  500 கோடி டாலர் முதலீட்டில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி ஆகிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காக  அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது இலங்கை மின்சார வாரியம் (Ceylon Electricity Board (CEB)). எந்தவித சட்டபூர்வ ஏல வழிமுறைகளையும் பின்பற்றாமல் நேரடியாகவே இவ்வொப்பந்தத்தை அதானி குழுமத்திற்கு வழங்கியிருக்கிறது இலங்கை அரசு.

அதானி குழுமத்திற்கு இவ்வொப்பந்தம் கிடைத்தது குறித்து, கடந்த ஜூன் 10-ஆம் தேதி இலங்கையின் பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழு (Committee on Public Enterprises (COPE) இலங்கை மின்சார வாரியத் தலைவரான எம்.எம்.சி. ஃபெர்டினாண்டோவிடம் விசாரணை நடத்தியது.  இதில் பல ‘தேவரகசியங்கள்’ வெளியே கசிந்தன. அரசு நிறுவனங்களில் ஏற்படும் முறைகேடுகளை விசாரணை செய்வது மற்றும் வெளிக்கொணர்வது இக்குழுவின் வேலையாகும்.


படிக்க : ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! | மாநாடு அறிவிப்பு !


பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழுவிடம் பதிலளித்த ஃபெர்டினாண்டோ, “இந்தியப் பிரதமர் மோடியின் அழுத்தத்தால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அதானி குழுமத்திற்கு அனுமதி வழங்க தன்னைப் பணித்தார். இது குறித்து, நவம்பர் 16, 2021 அன்று நடந்த சந்திப்பின் போது, ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்ட நேரடி அந்நிய மூதலீடு என்ற அடிப்படையில் மன்னார் மற்றும் பூநேரி ஆகிய பகுதிகளில் காற்றாலை மற்றும் சூரியசக்தி ஆகியவற்றின் மூலம் 500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க  அதானி குழுமத்திற்கு அனுமதியளிக்க வலியுறுத்தினார். இதனடிப்படையில், நவம்பர் 25, 2021 தேதியிட்ட கடிதத்தை இலங்கை நிதியமைச்சகத்தின் கருவூலச் செயலாளரான எஸ்.ஆர். அடிகலாவிற்கு அனுப்பினேன். இவ்விவகாரத்தை அதிபரே பார்த்துக் கொள்வதாகக் கூறியதால்தான், அதானி குழுமத்திற்கு ஒப்பந்தம் கிடைப்பதற்கு தேவையானவற்றை செய்யுமாறு கருவூலச் செயலாளாருக்கு கடிதம் எழுதினேன்” என்று ரகசியங்களை போட்டுடைத்திருக்கிறார்.

ஃ பெர்டினாண்டோ  பேசிய வீடியோ சமூக வலைதளங்களில்  பெருமளவில் பகிரப்பட்டு இலங்கை அரசியலில் பெரும் சூறாவளியைக் கிளப்பியிருக்கிறது. இவ்வீடியோ வெளிவந்தவுடன், அதிபர் கோத்தபய, “ எந்தவொரு தனிநபருக்கும் அல்லது நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் வழங்க நான் அங்கீகரித்ததாகக் கூறுவதை திட்டவட்டமாக மறுக்கிறேன்” என்று ட்வீட் செய்தார். இதையடுத்து, பசிக்களைப்பாலும், மன அழுத்தத்தாலும் ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கால் அவ்வாறு கூறியதாக அந்தர் பல்டியடித்தார் ஃபெர்டினாண்டோ . இறுதியில், கடந்த ஜூன் 15 அன்று ‘தனிப்பட்ட காரணங்களுக்காக’ மின்சார வாரிய தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் ஃபெர்டினாண்டோ.

அதே நாளில் ஃபெர்டினாண்டினோவின் விலகலை ஏற்றுக் கொண்டதாகவும், புதிய தலைவராக நலிந்த இளங்கோ கோன் பதவியேற்க உள்ளதாகவும் இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ட்வீட்டரில் அறிவித்தார்.

அதானிக்கு எதிராக பதாகைகளைத் தாங்கி நின்று போராடும் இலங்கை மக்கள்.

கடந்த ஆண்டு அக்டோபரில் அதானி இலங்கை சென்ற போதே இவ்வொப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த பிறகு, தனது சொந்த ஹெலிகாப்டர் மூலம் மின் உற்பத்தி தொடங்கவிருக்கும் மன்னாரை அதானி பார்வையிட்டார். அப்பொழுதே இவ்விவகாரம் இலங்கை அரசியலில் விவாதப் பொருளாகியது.

அதானியின் இலங்கை பயணத்திற்கு பிறகு, கடந்த ஆண்டு டிசம்பரில் 1 பில்லியன் டாலர் முதலீட்டில் 1000 மெகாவாட் திறன் கொண்ட முதல் காற்றாலைத் திட்டத்தை மன்னார் பகுதியிலும், இரண்டாவது காற்றாலை திட்டத்தை பூநேரி பகுதியிலும் அமைக்க இலங்கை முதலீட்டாளர்  வாரியத்திடமும் (Board of Investments of Sri Lanka), இலங்கை மின்சார வாரியத்திடமும் அதானி குழுமம் அனுமதி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமம் அனுமதி கோருவதற்கு முன்பே டெல்ஃப் தீவு, அனலை தீவு, நைனா தீவு ஆகிய இடங்களில் 12 மில்லியன் டாலர் முதலீட்டில் கலப்பு மின் உற்பத்தி மையங்கள் அமைக்க சீன நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தியப் பிரதமர் மோடியின் அழுத்தத்தால், ஏல முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சீன நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தங்களைக் கடந்த ஆண்டு ரத்து செய்து, தற்போது அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது இலங்கை அரசு. சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ததற்கு, சர்வதேச நிதி நிறுவனத்தின் கடன் உதவியால் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருந்ததாகவும், அதற்காக ஏல முறையில் சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்ததாகவும் கூறியிருந்தார், அன்றைய அரசுத்துறை விவகாரங்களுக்கான அமைச்சர் துமிந்த திசனாயகே. ஆனால் இந்திய அரசு 75 சதவீத மானியம் வழங்குவதாகக் கூறியதால் சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாக கூறியிருக்கிறார் திசனாயகே.

சட்டவிரோதமாக அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட இவ்வொப்பந்தத்தை இலங்கையின் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. இவ்வொப்பந்தத்தின் மூலம் ராஜபக்ச அரசு, மோடியின் நண்பருக்கு கொல்லைப்புற வழியாக அனுமதியளித்திருப்பதாக குற்றம் சுமத்துகின்றன.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைத் துளியும் பொருட்படுத்தாமல், இலங்கையின் மின்சார நெருக்கடியை சாதகமாக்கிக் கொண்டு இலங்கை மின்சார சட்டம் 2009-இல் திருத்தத்தைக் கொண்டு வந்து அதானியின் கொல்லைப்புற நுழைவை  சட்டப்பூர்வமாக்கியிருக்கிறது, இலங்கையின் கோத்தபய-ரணில் அரசு.  இத்திருத்தத்திற்கு 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், 36 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்திருக்கின்றனர், 13 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்திருக்கின்றனர்.

இச்சட்டத்திருத்தத்தில், மின்சார சட்டம் 2009 பகுதி 8-இல் இருந்த, “மின் உற்பத்தி செய்கிற எந்த ஒரு நபரும் ஏல முறையில் பங்கேற்க வேண்டும் என்ற விதிமுறையை ரத்து செய்து, ஏல முறையில் எந்த ஒரு நபரும் பங்கு பெறலாம் என்று திருத்தப்பட்டிருக்கிறது”. இதன் மூலம் மின் உற்பத்தி நிறுவனங்கள் ஏல முறையில் பங்கேற்றாக வேண்டிய கட்டாயமில்லை. அதானி குழுமம் போல் ஏல முறையில் பங்கேற்காமல், இலங்கை அரசு விரும்பும் ஒருவருக்கு  ஒப்பந்தத்தை வழங்க முடியும்.

இலங்கையின் உடனடி  ‘வளர்ச்சி’க்கு இச்சட்டத்திருத்தம் இன்றியமையாதது என்று கூறியிருக்கிறார், காஞ்சன விஜேசேகர.  இச்சட்டத்திருத்தத்தால் இலங்கையில் முதலீடுகள் அதிகரிக்கும் எனக் கூறுவதன் மூலம் விஜேசேகரவும் கார்ப்பரேட் சேவையே வளர்ச்சி என்கிற நிதியமைச்சர் நிர்மலாவுடன் ஒத்திசைகிறார். இலங்கையின் பிரதமர் ரணிலும் இச்சட்டத்திருத்தத்தை வரவேற்று மோடியை மிஞ்சிய ஏகாதிபத்திய அடிவருடி என்று நிரூபித்துக் கொண்டுள்ளார்.

இலங்கையின் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, காலிமுகத் திடலில் போராடும் மக்கள், இலங்கையின் மின்சாரத் துறை ஊழியர்கள் மற்றும் இலங்கையின் மின் உற்பத்தி முதலாளிகளின் கூட்டமைப்பான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கழகத்தினரும் இச்சட்டத்திருத்தத்திற்கும், ஏல முறை ஒழிக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர்.

இச்சட்டத் திருத்தம் கொண்டுவந்த உடனேயே மின்சாரத்துறை ஊழியர்கள் காலவரையற்றப் போராட்டம் அறிவித்தனர். அதிபர் கோத்தபயவோ, “மின்சாரம் இன்றியாமையாத சேவை” என்று அறிவித்ததால் ஊழியர்களது  போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. எனினும் கோத்தபய-வுக்கு எதிராக காலிமுகத் திடலில் போராடும் மக்கள் இந்திய தூதரகத்தின் முன்பும், அதிபர் கோத்தபய அலுவலக வாசலின் முன்பும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.


படிக்க : கடந்த ஆண்டில் மட்டும் 49 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த அதானி !


மின்சாரம் இன்றியமையாதது என்று அதிபர் கூறிக் கொண்டிருக்கும் போது, கடும் மின் தட்டுப்பாட்டால் இருளில் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை மக்களோ அதானிக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். ‘அதானியை நிறுத்து’ (#StopAdani) என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனதே இதற்கு ஒரு சான்று.

மேலும், தலைநகர் கொழும்புவில் உள்ள மெஜஸ்டிக் பகுதியில் போராடிய மக்கள் “அதானியை நிறுத்து”,  “இலங்கையிலிருந்து வெளியேறு” என முழக்கங்கள் எழுப்பினர். “வெளிநாட்டைச் சேர்ந்த அதானிக்கு ஏன் இலங்கையின் மின் திட்டங்களை டெண்டர்கூட விடாமல் கொடுக்க வேண்டும்? அப்படிக் கொடுப்பதால், நம் நாட்டின் வளங்கள் சுரண்டப்படும். மேலும், நம் நாட்டின் மின்சார உற்பத்தி முறையும் சீர்குலைந்துவிடும்; இது இலங்கையின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல; அதானி குழுமம் இலங்கையில் கால்பதிக்கக் கூடாது!”  என்கின்றனர் போராடும் மக்கள்.

அதானிக்கு எதிராகத் தொடங்கியுள்ள இந்தச் சிறுபொறி, இலங்கையின் எதிர்கால நம்பிக்கையின் கீற்று. எனினும், இக்கார்ப்பரேட் எதிர்ப்புப் போராட்டத்தை இலங்கையை மேலாதிக்கம் செய்யத் துடிக்கும் இந்தியாவுக்கு எதிராகவும், அமெரிக்க, சீன மேலாதிக்கத்திற்கு எதிராகவும் வளர்த்தெடுக்க வேண்டியிருக்கிறது.


அப்பு

கள்ளக்குறிச்சி-போராடியவர்கள் மீது ஒடுக்குமுறை: கண்டனப் பதிவுகள் | வீடியோ

ள்ளக்குறிச்சியில் உள்ள கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியை பாதுகாக்கும் வகையில் தி.மு.க அரசும், போலீசும் செயல்படுகிறது. மரணித்த மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கேட்டும் போராடிய மக்கள் மீது தனது ஒடுக்கும் முறையையும் ஏவி வருகிறது. இதனை கண்டித்து,

  • தோழர் வெற்றிவேல்செழியன், பொதுச்செயலாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.
  • பேராசிரியர் சங்கரலிங்கம், PUCL-TN, மாநிலத் தலைவர்;
  • சு.கோபால், பொதுச் செயலாளர், CPDR-TN.
  • தோழர் பாவேந்தன், தமிழக மக்கள் முன்னணி.
  • பேராசிரியர் மார்க்ஸ், தேசியத் தலைவர், NCHRO.
  • தோழர் ராஜா, தமிழ்த்தேச மக்கள் முன்னணி
  • தோழர் மகிழன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்;
  • தோழர் லெனின் பாரதி, திரைப்பட இயக்குனர்
  • தோழர் ராமலிங்கம், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

ஆகிய அனைவரும் இந்த காணொலியில் தனது கண்டனங்களை பதிவு செய்கிறார்கள்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

அரச பயங்கரவாதத்தை ஏவும் பாசிஸ்டு ரணிலே, எம் மக்கள் உனக்கும் பாடம் புகட்டுவார்கள்!

க்கள் பேரெழுச்சியின் முதல் சுற்றில் (மே 9), தனது பிரதமர் பதவியை துறந்தோடிவிட்டு ரகசியமாக பதுங்கிவிட்டார் மஹிந்த ராஜபக்சே. சரியாக இரண்டு மாதங்கள் கழித்து எழுச்சியின் இரண்டாவது அலை. மக்கள் பெருந்திரள் அதிபர் மாளிகையை கைப்பற்றிய ஜூலை 9 எழுச்சியில், நாட்டை விட்டே துரத்தப்பட்டார் கோத்தபய. மாலத்தீவு, சிங்கப்பூர் என தான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் போராட்டங்களை எதிர்நோக்க, தஞ்சமடைய நாடு இல்லாமல் சர்வதேச அகதியாய் திரிந்து கொண்டிருக்கிறார் அவர். பிற நாட்டுப் பாசிஸ்டுகளுக்கும் பீதியூட்டின இப்போராட்டங்கள்.

மறுமுனையில் ராஜபக்சே கும்பலை அதிகாரத்திலிருந்து வெளியேற்றிவிட்டு, அவ்விடத்தில் தங்களது அடிமைச் சேவகன் ரணிலை அமர வைக்க எண்ணிய அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக ஏகாதிபத்தியங்கள் மற்றும் இந்திய ஆளும் வர்க்கங்கள், இம்மக்கள் எழுச்சியின் பின்னணியில் தங்கள் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள். இடைக்கால அதிபராக தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்டார் ரணில்.

ஆனால் ஆர்ப்பரித்த மக்கள் எழுச்சி அடங்கவில்லை. “கோட்டா கோ ஹோம்” என்றபடி தொடங்கிய போராட்டமாக இருந்தாலும் ‘புதிய அரசியலமைப்புச் சட்டம்’, ‘மக்கள் பங்கேற்புடன் கூடிய அரசாங்கம்’ என போராட்ட முன்னணியாளர்களால் எழுச்சியானது அடுத்த கட்டத்திற்கு வழிகாட்டப்பட்டிருந்தது. போராட்டம் ரணிலுக்கு எதிராக திரும்பத் தொடங்கியது. அதிபர் மாளிகையைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகமும் மக்களால் முற்றுகையிடப்பட்டது. மேலும் நாடாளுமன்ற கட்டிடத்தையும் முற்றுகையிடும் நோக்கில் பெருந்திரளான மக்கள் விரைந்து கொண்டிருந்தார்கள்.


படிக்க : மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ரணில் அதிபரானார் – இது இலங்கை மக்களுக்கு விடப்பட்ட சவால் !


பிரதமர் அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளான சில மணி நேரத்தில், மக்கள் எழுச்சியை ரணில் இவ்வாறு வர்ணித்தார்:

“ஜனநாயகத்திற்கு எதிரான இந்த பாசிச அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரச சொத்துக்களை அழிக்க அனுமதிக்க முடியாது”; “எனது அலுவலகத்தில் இருப்பவர்கள் செயல் தலைவர் என்ற பொறுப்பை நான் நிறைவேற்றுவதைத் தடுக்க விரும்புகிறார்கள். அவர்கள் நமது அரசியல் அமைப்பை கிழித்தெரிய அனுமதிக்க முடியாது.”

மக்கள் எழுச்சி அடுத்த கட்ட இலக்குடன் முன்னேறுவதை கண்டு அச்சமுற்ற ஆளும் வர்க்கம், போராட்டத்தை ஒடுக்குவதற்கு வெளிப்படையாக களமிறங்கிவிட்டது என்பதற்கான சமிஞ்சையாக இருந்தது ரணிலின் பேச்சு. எழுச்சியை பலவந்தமாக ஒடுக்குவதற்கான உட்சபட்ச அதிகாரம் ராணுவம் மற்றும் போலீசுத் துறைக்கு வழங்கப்பட்டது.

இதனை உணர்ந்த போராட்ட முன்னணியாளர்கள் அதிபர் அலுவலகம் மற்றும் பிற அரசு கட்டிடங்களை கைப்பற்றி இருந்த மக்களை அவற்றிலிருந்து வெளியேறச் சொல்லி அழைத்தனர். கட்டுப்பாடுடனும் ஒழுங்குடனும் அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார்கள் மக்கள்.

***

இதற்கிடையில், இலங்கை வரலாற்றிலேயே முதல்முறையாக அதிபர் தேர்தல் நாடாளுமன்ற அவையில் நடைபெற்றது. ராஜபக்சே கும்பலுடன் ஒப்பந்தம் பேசிக் கொண்டு, அக்கும்பலது ஊழல் சொத்துக்களை பாதுக்காப்பவர் என்று ரணிலைக் கருதிய மக்கள், அவரைத் தோற்கடிக்கும்படி அரசியல் கட்சிகளுக்கு அறைகூவினார்கள். ஆனால் நாடாளுமன்ற பன்றிகள் ஆளும் வர்க்கத்தின் விருப்பத்தையே வழிமொழிந்தன.

ரணிலுக்கு முக்கியப் போட்டியாளராக இருந்த சஜித் பிரேமதாச சொல்லிவைத்தார் போல கடைசி நேரத்தில் வாபஸ் வாங்கிக் கொள்ள, டலஸ் அழகம்பெரும மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகியோரை தோற்கடித்து 134 ஓட்டுகள் பெற்று அதிபர் தேர்தலில் வென்றார் ரணில் விக்ரமசிங்க.

தன் கட்சிக்கு ஒரு இருக்கை கூட இல்லாத ரணிலின் வெற்றிக்கு, நாடாளுமன்றத்தில் அதிக இருக்கைகளைக் கொண்டுள்ள ராஜபக்சேக்களின் பொதுஜன பெரமுன கட்சி ஆதரவே அடித்தளமாக இருந்தது. மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி உள்ளிட்ட சில தமிழ் குழுக்களும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்துள்ளன.

தமிழர் கட்சிகளில் அதிக இருக்கைகளைக் கொண்டுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு டலஸ் அழகம்பெருமவை ஆதரிப்பதாகச் சொன்னாலும் ரகசிய வாக்கெடுப்பின்போது அக்கட்சியின் ஒரு அணி ரணிலுக்கு வாக்குசெலுத்தியதாகச் சொல்கிறார்கள். தேர்தலுக்கு முதல்நாள் இரவு த.தே.கூ கூட்டிய கூட்டத்தில் இந்திய தூதரகத்தின் துணைத் தூதர் கலந்துகொண்டதாகவும் அவர் ரணிலை ஆதரிக்கும்படி கோரியதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மலையகத் தமிழர்களின் ஓட்டு வங்கியைக் கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் இந்திய ஆளும் வர்க்கங்களோடு நெருக்கமான உறவு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 21 அன்று அதிபராக பதவியேற்கிறார் ரணில். மறுநாள் அதிகாலை (ஜீலை 22) காலிமுகத்திடல் போராட்ட முகாம் ராணுவத்தினரால் வேட்டையாடப்படுகிறது. திடீரென்று பெருத்த எண்ணிக்கையில் மைதானத்தைச் சுற்றி வளைத்த ராணுவம் முகாம்களை அடித்து நொறுக்கியது. போராட்டக்காரர்கள் கண்மூடித்தனமாக தாக்கி விரட்டப்படுகிறார்கள். அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களும் தாக்குதலிலிருந்து தப்பவில்லை. காயப்பட்டவர்களை ஏற்றிச் செல்லவந்த ஆம்புலன்ஸைக்கூட தடுத்து நிறுத்தியுள்ளது ராணுவம். 24 மணி நேரத்திற்குள் தான் யாரென்று காட்டிவிட்டார் ரணில்.

கோத்தபய ஆட்சியின் கீழ் பிரதமராகப் பொறுப்பேற்றபோது, காலிமுகத்திடல் போராட்டத்தை ஆதரிப்பதாகக் கூறிய ரணிலின் நோக்கம் ராஜபக்சேக்களை விரட்டிவிட்டு தான் அதிகார பீடத்தைப் பிடித்துக் கொள்வதுதான் என அம்பலமாகிவிட்டது.

ராணுவச் சூறையாடலுக்கு ஒருநாள் முன்னர் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்தான், அதிபர் செயலகம் அமைந்துள்ள காலிமுகத்திடல் மைதானத்திற்கு பதிலாக, விஹாரமகாதேவி பூங்காவை போராட்டக்காரர்களுக்கு ஒதுக்கித் தரப்போவதாக கூறியிருந்தார் ரணில். மேலும் போராட்டக்காரர்களில் ஒருபிரிவினரும் முறைப்படி போராட்டத்தை முடித்துக் கொண்டு வெளியேறப்போவதாக அறிவித்திருந்தனர். இச்சூழலில், அதுவும் முன்னறிவிப்பில்லாமல் நடைபெற்ற காலிமுகத்திடலில் தாக்குதல் மக்களை அச்சுறுத்துவதற்காக திட்டமிட்டே அரங்கேற்றப்பட்ட பாசிச நடவடிக்கையாகும்.

அடக்குமுறை மட்டுமல்லாமல் தமது கேடுகெட்ட அவதூறுகள் மூலமும் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியது ரணில் அரசு. போராட்ட முன்னணியாளர்கள் சிலரது வங்கிக் கணக்கில் திடீரென பல கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டதாகவும் வெளியிலிருந்து சிலர் பணம் கொடுத்துதான் காலிமுகத்திடல் போராட்டத்தை இயக்குகிறார்கள் என்றும் வதந்தி பரப்பட்டது. இதுகுறித்து விசாரித்த இலங்கை புலனாய்வுத்துறையே அவ்வாறான தகவல் – வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பல கோடி ரூபாய் – போலி என்று அறிவித்துள்ளது. இருப்பினும் கைக்கூலிகளின் அவதூறுகள் தொடருகின்றன.

‘அனைத்துக் கட்சி அரசாங்கம்’ என்ற பெயரில் ரணில் பலரை நியமித்துக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினரும் ரணிலின் பள்ளி நண்பருமான தினேஷ் குணவர்த்தன பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ராஜபக்சேக்களுக்கு நெருக்கமானவராகவும் அறியப்படுகிறார். கோத்தபய ராஜபக்சேவால் முன்னர் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் இடம்பெற்றவர்களையே, ரணில் மீண்டும் அமைச்சர்களாக நியமித்திருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவமுள்ள அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி, அனைவரின் பங்கேற்போடும் அமைக்கப்படுவதற்குப் பெயரே அனைத்துக் கட்சி அரசாங்கம். ஆனால் ரணிலோ தனக்கு தோதானவர்களை தன் விருப்பம் போல நியமித்து வருகிறார். முதலாளித்துவ ஜனநாயகத்தின் வழமையான போலித்தனங்களைக்கூட கையாள மறுக்கிறார் ரணில்.

***

ஒருபக்கம் ராணுவமும் போலீசும் போராடுபவர்களை வேட்டையாடி வருகிறது; முன்னணியாளர்களை கைதுசெய்து போராட்டங்களை நசுக்கும் நயவஞ்சக வேலையில் இறங்கியிருக்கிறது ரணில் அரசு. மறுமுனையில் “கோத்தபய ஓட்டிவிட்டார்; போராட்டங்களை ரணிலுக்கு எதிராகத் தொடருவது பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரமாக்கும்” என்று பிரச்சாரம் செய்கிறது ஆளும் வர்க்கம். ‘அரசியல் உறுதித்தன்மையை விரைந்து நிலைநாட்ட வேண்டும்’ என்று கட்டளையிடுகிறது அமெரிக்கா.


படிக்க : இலங்கை உழைக்கும் மக்களுக்கு எமது புரட்சிகர வாழ்த்துகள்!


உண்மையில் ரணில் என்ன செய்யப்போகிறார். எந்தப் பாதையில் போனதால் இலங்கை திவாலகிப் போனதோ அதே பாதையில், ஐ.எம்.எஃப், உலக வங்கி விதிக்கும் கட்டளைகளை நிறைவேற்றுவதன் வடிவில் அதே மறுகாலனியாக்கப் பாதையில் தீவிரமாகச் செல்வார். ‘அரசியல் உறுதித்தன்மையை’ நிலைநாட்டுவதைப் பற்றி அமெரிக்கா பதறுவதற்குப் பின் உள்ளது இவையே.

அடக்குமுறைகளுக்கு அஞ்சாமலும் அவதூறுகள், திசைதிருப்பல்களுக்கு பலியாகமலும் இலங்கை உழைக்கும் மக்களின் எழுச்சி அடுத்த திசையை நோக்கி நகர வேண்டியிருக்கிறது.

‘அனைத்துக் கட்சி அரசாங்கம்’ எனும் ரணிலின் மக்கள் விரோத ஏற்பாட்டை தூக்கி வீசிவிட்டு, காலிமுகத்திடல் பிரகடனம் முன்வைப்பதைப் போல, ‘போராடும் மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கூடிய ஒரு தற்காலிக அரசாங்கம்’ உடனடியாக நிறுவப்பட வேண்டும். அதுவே விடியலை நோக்கிய பாதையின் தொடக்கமாகும். ராஜபக்சேக்களைப் போல ரணிலையும் நாட்டைவிட்டே துரத்தும்படியான, எழுச்சியின் மூன்றாம் சுற்றை எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது சர்வதேச பாட்டாளி வர்க்கம்.

ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.
26.07.2022

Russia – Ukraine War: America’s Proxy War and the Danger of a World War – Part 2

Russia – Ukraine War: America’s Proxy War and the Danger of a World War – Part 1

Russia – Ukraine War: America’s Proxy War and the Danger of a World War – Part 2

Russia is emerging as a rival to the United States, which dominates the production and distribution of petrol and natural gas. The European Union relies on Russia for a quarter of its oil imports and for 40 percent of its natural gas.

Germany, which is the largest economic power in the European Union, relies on Russia for more than half of its natural gas needs and for more than 30 percent of its crude oil needs.

In 2020, Germany’s natural gas demand increased by 75 percent. France, which meets its electricity needs through nuclear energy, is also dependent on Russia for its petrol, coal and natural gas.

Moreover, until the time of the ‘Orange Revolution’ in Ukraine, Ukraine was buying natural gas from Russia at subsidized prices.

The gas from Russia to Germany and other European countries is exported through pipelines via Ukraine and Poland. Not only this, the gas is also transported directly from northern Russia to Germany via the Baltic Sea, through the Nord Stream pipeline project.

The Nord Stream 2 gas pipeline project was launched in 2018 and completed in 2021. If this gas pipeline project starts functioning, there will be no need for Russian gas to be sent to European countries by land via countries such as Ukraine and Poland. Russia does not need to pay Ukraine and Poland to send gas to Europe.


Also Read : Sri Lanka, Pakistan, Afghanistan: Dice in the Fight for Hegemony of US-China in South Asia (Part 1)


This gas pipeline project could send 135 billion cubic metres of gas needed to the EU and strengthen the trade.

At the same time, the US is also seeking to occupy the EU’s gas market. The US and European countries have imposed sanctions on Russia, citing Russia’s war on Ukraine.

Contradictions within the European Union in opposing Russia!

On the one hand, the countries which refuse to accept US hegemony rally under the leadership of Russia and China. While on the other hand, the European Union countries are presented as a determined bloc which accept the US leadership. The truth is that not all countries in the European Union accept the boundless domination of the United States. Within the coalition itself, the contradictions are intensifying.

Austria, Germany, Hungary and the Netherlands do not support a gas embargo on Russia. Of these, Austria and Hungary have refused to supply Ukraine with weapons as demanded by NATO. Germany was also initially reluctant to provide weapons. It agreed to supply weapons only after repeated criticism from the US and other NATO countries.

Although the majority of countries support an economic embargo on Russia, it cannot be sustained for a long time. The Organization of the Petroleum Exporting Countries (OPEC) criticized the sanctions on Russia as it is not good for the EU countries. That’s the truth too. The majority of the European countries have no definite alternative to Russian gas.

According to a report published at the end of last April by the Centre for Research on Energy and Clean Air, Russia’s profits from the sale of gas to EU countries have doubled since the war in Ukraine. Russia has so far earned a profit of € 46 billion. This is the beauty of the so-called economic sanctions.

In this context, another statistic has also emerged which makes us laugh. In 2014, the European Union banned the sale of weapons to Russia for its Crimean annexation. But since that year, more than 10 countries in the European Union, including Germany, France and Italy, have sold weapons to Russia to the tune of € 230 million. There are currently reports circulating that it could be used by Russia against Ukraine.

Declining dominance of the petro-dollar and The Russia-China alliance

According to a statistic released in 2019, 88 per cent of the world’s trade is conducted in dollars. Russia and China, which have emerged as rivals to US hegemony, are seeking to put an end to this dominance of the dollar. Russia, in particular, is challenging the domination of dollar in the oil trade.

In the early 1970s, the US signed an agreement with oil-rich Saudi Arabia to carry out global energy trade in dollars. For 50 years, the dominance of the petro-dollar was unquestionably established.

But this position was questioned by Russia in 2014 when it faced sanctions imposed by the European Union and the United States over its annexation of Crimea. System for Transfer of Financial Messages (SPFS) was created by Russia as an alternative to Society for Worldwide Interbank Financial Telecommunications (SWIFT), an international money transfer system that is dominated by dollar. SPFS was created to integrate other countries to trade in Ruble.

Similarly, in 2015, China also created the China’s Cross-Border Interbank Payment System (CIPS) as an alternative to SWIFT. It integrates other countries that come forward to trade in the Chinese currency, the Yuan.

The UK, Germany and France have developed a mechanism called Instrument in Support of Trade Exchanges (INSTEX) to engage in non-dollar trade with Iran in defiance of US sanctions imposed on it. This mechanism which was formed in early 2019. It was jointly announced by the end of that year that five other European countries — Belgium, Denmark, the Netherlands, Finland and Sweden — wanted to join. Russia had also welcomed the move.

In addition to these, the Eurasian Economic Union (EAEU) led by Russia, consisting of Armenia, Belarus, Kazakhstan and Kyrgyzstan and BRICS, which includes Britain, Russia, India, China and South Africa, are also alliances formed against the dominance of the dollar.

Major oil producers such as Saudi Arabia and the United Arab Emirates are in talks to trade in currencies other than dollar. In particular, the media is writing that Saudi Arabia is going to recognize China’s yuan. Recently, Israel has also agreed to trade in China’s yuan.

It is noteworthy that all these countries have previously accepted the hegemony of the United States unquestionably. Combining this with India’s move to import oil at a 30 percent discount from Russia, regardless of the US sanctions on Russia, it is understandable that the dominance of the petro-dollar has been called into question.

In retaliation for the sanctions on Russia, Russia is now asking European countries to pay for the oil and natural gas that they import from Russia in rubles instead of dollars.

In order to trade in rubles, those countries must have rubles in stock. For that, they have to do business with Russia. Conditions imposed by Russia have created a situation, in which European countries have to act against their own sanctions. So far, four European companies have offered to trade in rubles.

NATO: A global military alliance against Russia-China

The victory-defeat of Russia in the war in Ukraine will determine whether the US is going to somehow prop up and maintain its declining world hegemony or lose and fall. That’s why the US has declared that “Our goal is to cripple Russia”.

This is an opportunity for Russia to defeat the domination of its enemy, the United States, and create a conducive global conditions for its development. So the war is going on fiercely.

Russia and China are working together in the race for political-economic hegemony against the United States. The United States, therefore, has to confront these two countries together.

Now that India is maintaining close ties with Russia without respecting the US. This has weakened the US-led QUAD military alliance against China. The US, therefore, plans to massively expand NATO to encircle and bring down not only Russia but also China.

NATO Secretary General Jens Stoltenberg told the Telegraph in an interview, “It is also of concern that we see that Russia and China are working more and more closely

together. This is something that matters for our security.” “NATO leaders are expected to make decisions on ‘what we call a reset, a longer-term adaptation of NATO’ at the Madrid summit in June.” he said.

The invitation of 13 non-NATO countries to a conference in Germany to aid the war in Ukraine is a clear testimony to the US’s NATO expansion plan.

Japan, South Korea, Australia and New Zealand from the Asia Pacific region, Israel, Qatar and Jordan from the Middle East, Kenya, Liberia, Morocco and Tunisia from Africa participated in the conference.

The NATO alliance, which is pressurising Russia, is planned to be expanded from the North Atlantic region to the eastern European countries. It is set to expand around the world to encircle China and Russian-Chinese spheres of influence.

We can’t align in the tug-of-war for hegemony

After its defeat in the Cold War, Russia is gradually strengthening itself politically, economically and militarily. China has grown to compete with imperialism in political, economic and military terms.

Following the Great Depression of 2008, the US economy did not make the expected progress. Following the failure of the privatization-liberalization-globalization policies, the unipolar world order of the American superpower began to loosen up. Russia and China are entering into an alliance to write the epilogue altogether.

The struggle between these two factions is the current international political trend.

Countries like India, which pretend to be neutral and independent also have a intend. They are waiting to embrace the alliance which gets strengthened in the aforementioned tug-of-war. They are now vacillating as they can’t foresee the end.

The US-led imperialism, which have no way of restoring the economy, regard fascism and world war as the weapons of last resort to prevent people from revolution and to maintain their world hegemony.


Also Read : The uprising of the working people that shook Sri Lanka! – Part 2


Russia’s war on Ukraine must be viewed from this background. But among the majority of the left wing and the democratic forces, we see only the denouncing of the US’s NATO expansionist policy. They don’t criticize Russia.

They define Russian invasion as a ‘war of self-defence’. That is true in a way, but we must not forget that the two warring countries are imperialists.

Russia is seeking to use the war not only as an opportunity to prevent its encirclement by winning the war, but also as an opportunity to assert its hegemony by questioning the US hegemony. This is what we have explained in the article.

In the war between the imperialists, the proletariat can take advantage of their weakness; should take advantage of it. But one imperialism (Russia) cannot be supported against the another (The US).

On the contrary, the revolutionary forces must peel off their country’s ruling classes, which engage in anti-Russian, pro-NATO, warmongering-jingoistic propaganda and are pseudo-neutral or  intending to ally in some way or the other in the war of hegemony; We must mobilize the working people for a revolutionary civil war!

(The End)


Palraj

கள்ளக்குறிச்சியில் போராடியவர்கள் மீதான ஒடுக்குமுறை: உ.பி.யோகிக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை! | மருது வீடியோ

மாணவி ஸ்ரீமதி இறந்த பல மணிநேரத்திற்கு பிறகுதான் பெற்றோர்களுக்கு தெரிவிக்கிறார்கள். மரணத்தை மறைந்தார்கள் என்ற ஒரே ஒரு புள்ளியை மட்டும் வைத்துக்கொண்டு பள்ளி நிர்வாகத்தை கைது செய்திருக்க முடியும்.

எப்படி மாணவி இறந்தார் என்று சி.பி.சி.ஐ.டி பல நாள் கழித்து பொம்மையை மேலிருந்து தூக்கிப்போட்டு ஆய்வு செய்கிறது. மக்களை பைத்தியகாரர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா?

இது ஒரு விளம்பர ஆட்சி; சைலேந்திரபாபு விளம்பரம் செய்வார். ஸ்டாலின் விளம்பரம் செய்வார். அதேபோல் இந்த மாணவியை வைத்துக்கொண்டு போலீசு ஒரு விளம்பரம் செய்கிறது. மக்கள் போராட்டத்தை தனியாகவும், கலவரக்காரர்கள் என்று தனியாகவும் பேசுவதன் நோக்கம் என்ன?

யோகி ஆதித்யநாத்திற்கும் மு.க.ஸ்டாலினுக்கும் வித்தியாசம் இல்லை என்று அவர்கள் மீண்டும் மீண்டும் கள்ளக்குறிச்சி போராட்டத்தின் மீதான ஒடுக்குமுறையின் மூலம் நிருபிக்கிறார்கள்.

ஒரு தனியார் கல்வி நிறுவனத்திற்கு ஏற்பட்ட சேதத்திற்கு ஏன் இந்த அரசு கொந்தளிக்கிறது?

அன்று, தூத்துக்குடி போராட்டத்தை ஒடுக்கும் ஓர் அரச வன்முறையை தூத்துக்குடி மாடல் என்று அதிமுக அரசு செய்து காட்டியது. அதே நடவடிக்கையை இன்று கள்ளக்குறிச்சி மாடல் என்று திமுக அரசு செய்து வருகிறது.

அந்த மாணவி உயர்சாதியாக இருந்தாலும் போராட்டத்தில் தலித் மக்களும் வன்னிய மக்களும் இணைந்து கலந்து கொண்டார்கள். தமிழ்நாட்டில் ஒரு சமூக மாற்றமோ; அல்லது அநீதிக்கு எதிரான போராட்டமோ சாத்தியம் என்று நிரூபித்தப் போராட்டம் இந்த கள்ளக்குறிச்சி தனியார் கல்விக்கு எதிரான போராட்டம்.

மேலும் பல்வேறு கேள்விகளுக்கு தமிழ் குரல் என்று யூடியூப் சேனலின் பேட்டி வீடியோவில் பதில் அளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

Russia – Ukraine War: America’s Proxy War and the Danger of a World War

Russia – Ukraine War: America’s Proxy War and the Danger of a World War – Part 1

On February 24, Russia launched a full-scale military invasion on Ukraine in the name of ‘special military operation to eliminate the neo-Nazis’. It’s been more than two months and the war is still going on.

The United States is waging this war from outside of Ukraine through a number of means, including imposing economic sanctions against Russia, arming Ukraine, unleashing false propaganda against Russia and thereby pressuring, and trying to unite countries that are anti-Russian.

Russia, at the same time, Ukraine & NATO say that this war could last long and they should be prepared for this. None of these sides is ready for a ceasefire and to indulge in peace talks. In particular, the US, which is waging a proxy war against Russia, is not ready to retreat.

War crises – Burden on the people

It is the working people of Ukraine who are the victims of this inter-imperialist dogfight. The news of the plight of parents who write addresses on their backs to identify their children if they get killed during the war is heart-wrenching. But Ukraine’s ruling neo-Nazi mob is using their own people, including women and children, as human shields to prevent the Russian military from advancing in the war.


Also Read : Sri Lanka, Pakistan, Afghanistan: Dice in the Fight for Hegemony of US-China in South Asia (Part 1)


More than fourty lakh people (40,19,287) have fled Ukraine since the beginning of the war, says the UN Human Rights Commission. 90 per cent of those who left were women and children. Since men between the ages 18 and 60 will be needed for forced conscription, the Nazi Ukrainian government did not allow them to exit.

But the American and the European media are propagating a series of one-sided ghost stories that the Russian troops are killing Ukrainian civilians in clusters.

Russia is the third largest producer of petrol in the world and the second largest producer of natural gas. The wheat requirements of many countries were being met through exports from Ukraine and Russia. Therefore, as a result of this war, the price of gas is on the rise; There is a shortage of wheat in many countries. Moreover, the crises created by the war, such as rising prices of raw materials and essential commodities, are falling on the heads of the working people around the world.

The threat of a Third World War!

US Secretary of State Antony Blinken and Secretary of Defense Lloyd Austin, who visited Ukraine on April 24 met President Zelensky and openly declared that the US wanted to see Russia’s military capabilities weakened.

Ukrainian President Zelensky, America’s pet, howled to his master, “We need weapons, more and more weapons”. Next to the US, the UK is also actively engaged in the war. It has stationed 8,000 troops in eastern Europe, bordering Russia.

The US government is pouring money into Ukraine to counter Russia. When the war began, it immediately released $130 million. At the beginning of March, it allocated $200 million. Shortly thereafter, it announced another $800 million. President Biden has now obtained the approval of the US Congress to provide up to $35 billion to help Ukraine.

In addition to the financial aid, the US is providing Ukraine with deadly combat equipments, including anti-craft missile systems, artillery, missiles and sophisticated guns, as well as the help of its intelligence services.

Biden has passed the ‘Ukraine Democracy Defense Lend-Lease Act of 2022’ in the Congress for the uninterrupted supply of weapons to Ukraine. The Act was first enacted in 1941 to supply England with its weapons during World War II. Now Biden has revived it for Ukraine. The legislation was passed with a majority (417-to-10 vote) with the support of both the Republicans and Democrats.

Not only the United States, but two-thirds of the 30-member NATO alliance countries supply weapons to Ukraine. This is the reason behind Ukraine’s survival of the attack by the military superpower Russia for this long.

And on April 19, 43 countries, including the US-led NATO countries, came together in Germany to form a coalition to help Ukraine in the war. These countries have offered to provide Ukraine with financial assistance for war spending and buying arms. These countries have scheduled to discuss their plan every month.

Given these conditions, the US’s Cold War against Russia poses the risk of a third world war. This is what the United States and Russia are saying alternately. Therefore, both sides are engaged in preparations for war, and are declaring their intentions openly s any hesitation.

Continuation of Cold War and Ukraine’s inclusion in NATO

Inorder to understand about the Russia – Ukraine war, we need to first understand about the cold war. We need to look into this in two parts: period between late 1950’s and 1991 & from 1991 till date.

At the end of World War II, the United States began to grow into a super power in the imperialist camp. In the late 1950s, the revisionists restored capitalism in the Soviet Union, which was a socialist country; The Socialist Soviet Union, therefore, degenerated into social imperialism (socialist in words; imperialistic in action) and entered into a contest with the United States for world hegemony.

Earlier, in 1945 – at the end of World War II, the countries under the clutches of fascist Hitler were liberated by the Soviet Red Army. It included Albania, Bulgaria, Czechoslovakia, Romania, Hungary, Poland and East Germany. All these countries became socialist republics under the leadership of the Communist Party.

Fearing the spread of socialism, imperialists including the United States, Britain and France formed a political-military alliance called NATO to counter the Soviet Union.

In 1949, 12 countries from the northern part of the Atlantic Ocean, Belgium, Canada, Denmark, France, Iceland, Italy, Luxembourg, the Netherlands, Norway, Portugal, England, and the USA, formed NATO through an agreement. NATO is an abbreviation for the North Atlantic Treaty Organization.

Soviet social imperialism, on the other hand, turned the socialist countries of Eastern Europe into hung flesh for its exploitation; And in 1955, in order to counter NATO, it unified those countries and established the Warsaw Treaty Organization (WTO). It is also a politico-military alliance similar to that of NATO.

In the Cold War, which lasted for more than 35 years, Soviet social imperialism, caught up in the politico-economic crises of 1990-1992, lost to the United States. In the late ’90s, the Warsaw Pact was dissolved. The Soviet Union also got disintegrated, as 14 countries withdrew from the Soviet Union. But during the same period, the US-led NATO alliance expanded to include Greece, Turkey, West Germany and Spain.

The Czech Republic, Hungary and Poland joined NATO in 1999; Bulgaria, Estonia, Latvia, Lithuania, Romania, Slovakia and Slovenia in 2004; Albania and Croatia in 2009; Montenegro in 2017; In 2020, North Macedonia also joined NATO.

The NATO force, which consisted solely of the North Atlantic region, is the world’s largest military conglomerate, incorporating most of the Eastern European countries, including the former Soviet member states. At present, 30 countries are its members.

During the Cold War, the US-led NATO defied its promise to Russia that it would not expand further eastwards. The NATO countries are now encircling Russia.

Countries bordering Russia’s territory, such as Latvia, Lithuania and Estonia, are in NATO. The United States is also seeking to include Ukraine, which currently shares a vast territory with Russia, into NATO. Like Ukraine, countries including Norway, Sweden and Poland have expressed their willingness to join NATO.

The United States regards Ukraine as a place of geo-political significance.  It aims not only to expand its territorial dominance, but also to encircle and attack Russia. Inorder to counter this, Russia has waged war on Ukraine. So this war is not a sudden event. It is a continuation of the Cold War between the US and Russia.

Pre-production work of the American Proxy War

Since 2000, the world’s military spending has almost doubled. In 2021, the global military spending was around $2 trillion. More than half of this is from NATO countries.

Between 1991 and 2021, the United States provided large-scale military aid to Ukraine. Between 1991 and 2014, the US provided about $3.8 billion in military aid. Comparatively, in a short span of time between 2014 – 2021, military aid provided was $2.4 billion.

It is not that the US and the NATO alliance have been providing aid to Ukraine only after Russia’s invasion of Ukraine; The above figures illustrate that the US has been preparing for a proxy war against Russia for a very long time.

Islamic extremist groups such as Osama Bin Laden’s Al Qaeda, ISIS and the Taliban have been nurtured in Islamic countries by the CIA, the intelligence agency of the US, and the country’s military headquarters. Similar to that, $5 billion was spent to raise a neo-Nazi gang called Azov Batallion in Ukraine.

In the ongoing war, it is not only the Ukrainian army that is fighting the Russian troops, but also the neo-Nazi armed force called the Azov Battalion is also fighting alongside them. The weapons sent by the US go under the control of this group.


Also Read : War on Ukraine : Russian troops, getout from Ukraine and Crimean Peninsula !


The US has also carried out coups to create a puppet regime in its favor in Ukraine. In the 2004 Presidential election, Viktor Yanukovych, a Russian supporter, became President. Unable to tolerate this, the US, through its loyalist cliques, staged a coup in Ukraine in the name of ‘Orange Revolution’ and made pro-US leader Viktor Yushchenko as President.

In the 2010 election, Russian supporter Yanukovych became President again. He wanted to revive his relationship with Russia. Against this, neo-Nazi mob nurtured by the US, took to the streets. Yanukovych stepped down as President as a result of the political crisis. Fascist mobs seized power. Zelensky, who is currently in power, is also the blessed President of the neo-Nazi clique.

Racist Ukrainian neo-Nazi gangs have been staging racial repressions and violations on the Russian-dominated Crimean Peninsula and the Donbas region. More than 14,000 people have been killed in this civil war. Russia annexed Crimea in 2014 through a military operation.

(to be continued…)


Palraj

ஜி.எஸ்.டி வரி விதிப்பை விமர்சித்ததற்காக பாஜக குண்டர்களால் தாக்கப்பட்ட நிருபர்கள்!

0

மேற்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சல்சித்ரா அபியான் என்ற ஊடகத்தில் பணிபுரியும் நிருபர்கள், ஜூலை 20 அன்று சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) விகிதத்தின் சமீபத்திய உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கருத்து பதிவிட்டதற்கான தாக்குதலுக்குள்ளானர்.

நிருபர்கள் – ஷாகிப் ரேங்க்ரெஸ் மற்றும் விஷால் ஸ்டோன்வால் – உத்தரபிரதேசத்தின் பாக்பத்தில் உள்ள கிஷன்பூர் பரல் கிராமத்தில் செய்தி சேகரிக்க சென்றபோது ஒரு நபர் அவர்களின் உபகரணங்களை பறிக்க முயன்றார். அங்குள்ள உள்ளூர் மக்களிடம் செய்தி சேகரித்ததற்கான அவர்களை மிரட்டினார்.

சல்சித்ரா அபியான் நிறுவனர் நகுல் சிங் சாவ்னி ட்விட்டரில் இந்த சம்பவத்தை விவரித்தார், “இது இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைந்திருக்கும் நிலை. நிருபர்களைத் தாக்கியவர் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) உறுப்பினர் என்றும் அவர் “வன்முறையில் ஈடுபட்டார்” என்றும் குற்றம் சாட்டினார்.

தனது நிறுவனத்தில் பணிபுரியும் நிருபர்கள் இவ்வாறு தாகப்படுவது இது முதல் முறையல்ல; சல்சித்ரா அபியானுடன் பணிபுரியும் பல நிருபர்கள் பாதிக்கப்படக்கூடிய சிறுபான்மை சமூகங்களிலிருந்து வந்தவர்கள் என்பது அவர்களை இலகுவான இலக்குகளாக மாற்றியது என்று கூறினார்.


படிக்க : அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2022 – பத்திரிகை துறையின் மீதான பாசிச நடவடிக்கை!


ஸ்டோன்வால் – ஒரு முன்னாள் செங்கல் சூளைத் தொழிலாளி; ரேங்க்ரெஸ் – முசாபர்நகரில் 2013 வகுப்புவாத கலவரங்களில் இருந்து தப்பியவர். இரண்டு நிருபர்களும் ஜிஎஸ்டி உயர்வின் பாதிப்புகள் குறித்து உள்ளூர் கிராம மக்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த நபர் அவர்களைத் தாக்கி, அவர்களின் கேமரா மற்றும் மைக்ரோஃபோனைப் பறிக்க முயன்றுள்ளார்.

“நாங்கள் வெளியேறுவது நல்லது என்று அவர் எங்களை மிரட்டினார். நாங்கள் செய்தி சேகரிக்க முடியாமல் தடுக்கப்பட்டோம். அந்த நபர் நாங்கள் அரசாங்கத்தைப் பற்றி பொய்யான தகவல்களைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டினார்” என்று ரேங்க்ரெஸ் கூறினார்.

இந்த வெளிப்பாடுகளைத் தொடர்ந்து, டிஜிட்டல் செய்தி வெளியீடுகளின் அமைப்பான DIGIPUB – Rangrezz மற்றும் Stonewall-க்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், பாரதிய ஜனதா ஆளும் உத்தரப்பிரதேசத்தில் பத்திரிகையாளர்கள் வன்முறை மற்றும் மிரட்டல் மூலம் தங்கள் வேலையைச் செய்வதிலிருந்து பலமுறை தடுக்கப்படுகிறார்கள் என்ற உண்மையை அந்த அமைப்பு எடுத்துக்காட்டுகிறது, வட மாநிலத்தில் பத்திரிகை சுதந்திரம் “குறிப்பாக பலவீனமாக உள்ளது” என்று குறிப்பிட்டது.

“உத்தரபிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் மீது அடையாள தெரியாத ஆசாமிகளால் மீண்டும் மீண்டும் மிரட்டல் மற்றும் தாக்குதல்கள் நடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

DIGIPUB, மாநில அரசாங்கத்தை “ஒரு ஜனநாயக சமூகத்தில் சுதந்திரமான பத்திரிகையின் முக்கிய பங்கு குறித்து அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் செய்தியாளர்களைத் தாக்கும் நபர்களை சட்டத்தின் முழு பலத்துடன் கையாளவும் அழைப்பு விடுத்துள்ளது. அரசியலமைப்புச் சட்டப்படி பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்த உத்தரப்பிரதேச போலீசுத்துறையை அது வலியுறுத்தியுள்ளது.


படிக்க : தி கேரவன் பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல் விடும் காஷ்மீர் போலீசு !


ஜி.எஸ்.டி வரி மூலம் உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக, உழைக்கும் மக்களிடம் செய்தி சேகரிப்பது பெறும் குற்றமா? பாஜக உறுப்பினர்களுக்கு எல்லையற்ற சுதந்திரத்தை உ.பி.யில் யோகி அரசு வழங்கியுள்ளது என்பதைத்தான் இப்பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் நமக்கு உணர்த்துகிறது.

பாசிஸ்டுகள் நிறைந்த ஆர்.எஸ்.எஸ். – பாஜக தான் ஆளும் மாநிலத்தில் எந்தவித கருத்து சுதந்திரத்திற்கும் இடமளிக்காமல், ஓர் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை அரங்கேற்றி வருகிறது. இந்த பாசிச சக்திகளை முறியடிக்க பத்திரிகையாளர்கள்-முற்போக்காளர்கள்-புரட்சிகரசக்திகள்-உழைக்கும் மக்கள் ஆகியோர் ஓரணியில் திரள்வேண்டிய தருணமிது.

புகழ்

ஸ்ரீமதி படுகொலை: தனியார்மய கொள்ளையை பாதுகாக்கும் நீதிமன்றம்!

ள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் பள்ளியில் படித்த ஸ்ரீமதி என்ற 12-ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்தது அவரது குடும்பத்தை தாண்டி மொத்த தமிழகத்தையும் உலுக்கியது என்றால் மிகையில்லை.

மாணவி இறப்பு குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்த முறை; பள்ளி நிர்வாகம் நடந்து கொண்ட முறை; மாவட்டம் நிர்வாகம் சமந்தப்பட்ட பள்ளிக்கு அடியாளாக செயல்பட்டதை மாணவியின்  பெற்றோரை அலைக்கழிக்கப்பட்டிதில் இருந்து பார்க்க முடிகின்றது.

இவையெல்லாம் கடந்த ஜூலை 13, 14 தேதிகளில் நடந்த நிகழ்வுகள். இதன்பிறகு போலீசு மற்றும்  மாவட்ட  நிர்வாகம் மாணவியின் பெற்றோரை சமாதானப்படுத்துவது அல்லது கட்ட பஞ்சாயத்து மூலம் சரி கட்டிவிடலாம் என்ற எத்தணிப்பு ஸ்ரீமதியின் அம்மா மற்றும் மக்கள் போராட்டம் மூலம் முறியடிக்கப்பட்டது.

இறப்பு என்பதே துயரம்தான்; அதுவும் படிக்கும் இளம் மாணவி என்றால் விளக்கி சொல்லத்தான் வேண்டுமா? சரி இன்றைக்கு விவகாரம் எப்படி போய்க் கொண்டுருக்கிறது?


படிக்க : கலகம் பிறக்காமல் நீதி கிடைக்காது ! ஆளும் வர்க்கக் கைக்கூலிகளே அஞ்சி நடுங்குங்கள் !


உடனடியாக மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டுயிலில் நிறுத்தி வைப்பு என்ற மாபெரும் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது  நாம்  பிரச்சினையை  அரசியல் ரீதியில் பாப்போம்.

தமிழகத்தில் 4500-க்கு மேற்பட்ட தனியார் பள்ளிகள் இருப்பதாக அறிய முடிகின்றது (இவைகளின்  ஆண்டு  வருமானம் எத்தனை இலட்சம் கோடி என்பதை வாசகர்களே முடிவு செய்யலாம் ஏனெனில் இன்றைய தகவல் உலகில் யாரும் மதிப்பிடு செய்யலாம்.) அறிவை தரும் கல்வியானது பச்சையாக சொல்வதுதென்றால் பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாற்றியிருக்கும் தனியார்மயம்.

இதற்கு சட்டப்பூர்வ அங்கிகரத்தை தனது சட்டங்கள் மூலம் வழங்கியிருப்பது அறிவிற்கும், இயற்கை நியதிக்கும் எதிரானுதான். அமைதி பூங்கவனா தமிழகத்தை கலவர பூமியாக மாற்றுவதாக அஞ்சி ஒலமிடும் ‘அறிவாளிகளே’ நாங்களும் இதைத்தான் கேட்கிறோம். அமைதியான அன்பிற்குரிய தமிழக – இந்திய உழைக்கும் மக்கள் மீது தனியார்மயத்தை திணித்தீர்களே அது இன்றைக்கு  மக்களின் வாழ்வாதாரத்தையும் – உரிமைகளையும் பறித்த வண்ணம் இருக்கின்றதே! இதற்குகென்ன உங்கள் பதில்?

“ஒவ்வொரு முரண்பட்டிற்கும் ஒரு நிகழ்ச்சிபோக்கு இருக்கின்றது” என்றார் பேராசன் மாவோ. இந்த விதி இன்றைய உலகமயமாக்களுக்கும் பொருந்துகிறது. இலாபம் ஒன்றே நோக்கமாக கொண்டுள்ள முதலாளிதத்துவம் அதன் கொள்கைகள், விதிமுறைகள், பிற நியாய வாதங்கள் அனைத்தும் பெருவாரியானோரை துன்பத்தில் ஆழ்துவதை அடிப்படையாக கொண்டிருக்கின்றது. இதன் நிகழ்ச்சிபோக்கானது ஆலையில் பணிபுரியும் தொழிலாளி, விவசாயி, தனியார் பள்ளி மாணவன் இன்னும் பிற உழைக்கும் வர்க்கத்தின் கழுத்தை நெரிக்கின்றது. (இந்த கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டபடி) கொள்ளையடிக்க வழங்கப்பட்ட அனுமதியானது கொலை செய்யவும் கொண்டு செல்கிறது.

இதன் எதிர் முனையான ஒடுக்கப்படும் வர்க்கத்திற்கு நியூட்டனின் மூன்றாம் விதியை பிரேயோகிப்பதற்கான கால சூழலையும், வாய்ப்பையும் தந்துவிட்டு பிறகு எப்படி தவறு என சொல்ல முடியும்? ஏழாம் அறிவை போதித்த தலைமைச் செயாலாளர் திருவாளர் இறையண்புவிற்கு, மாணவியின் தாயார் மற்றும் மக்கள் எழுப்பிய அடிப்படையான கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்த மாவட்ட நிர்வாகம் குற்றவாளியாக தெரியவில்லை. ஆளும் வர்க்கத்தின் அறிவாளிக்கு பிரச்சினையின் வேரும் அடிப்படையும் தெரியாமல் போனதில் வியப்பேதும் இல்லை.

பெரும் திரளான மக்கள் போராட்டம் இளைஞர்களின் அறச்சிற்றத்தை சிறுமைப்படுத்தி, இலக்கற்ற கலவரக்காரர்களாக சித்தரிக்கும் போலீசு கும்பல் இந்த போராட்டத்திற்கு காரணமானவர்களையும், வாட்ஸ்ஆப் குழுக்களையும், அமைப்புகளையும் கண்காணிக்கின்றோம் இப்படியெல்லாம் பேசும் GDP சைலேந்தரபாபு என்ன சொல்ல  வருகின்றார்? இதுபோன்ற அநீதிக்கெல்லாம் மக்களும் இளைஞர்களும் போராடக்கூடாது என்கிறார். ஆளும் வர்க்க அதிகாரிகள், ஆட்சியாளார்கள், அறிவாளிகள் யாவரும் சொல்லும் நியாயம் மக்களுக்கு எதிராகத்தான் இருக்கிறது.

“முதலாளித்துவ உற்பத்தி முறை தனி நபர் சுவிகரிப்பை அடிப்படையாக” கொண்டிருப்பதை மட்டும் மார்க்ஸ் சொல்லவில்லை அதன் மேற்கட்டுமானமான அரசியல், நீதி, நிர்வாகம், கல்வி உள்ளிட்ட அனைத்தும் பெருவாரியான மக்களுக்கு எதிராகத்தான் இருக்கின்றது என்றார். இந்த நிகழ்ச்சிப்போகின் தொடர்ச்சிதான் ஸ்ரீமதி உள்ளிட்டவர்களின் மரணங்கள். வாட்ஸ்அப் குழுக்களும் அமைப்புகளும்தான் போராட்டத்திற்கு காரணமென சொல்லும் போலீசின் புலானாய்வு மேம்போக்கானது, அடிப்படையற்றது.

***

மகளை  பறிக்கொடுத்த மாணவியின் பெற்றோர் நீதிமன்றங்களை அணுகியபோது “உங்களுக்கு நீதிமன்றத்தின் நம்பிக்கை இல்லையா”? என கேள்வி எழுப்பிய நீதிபதி சதீஷ் குமார் அங்கே போராடுகின்றீர்களே என சுட்டிகாட்டும் விதத்தில் பேசிய நீதிபதிக்கு குறிப்பாக மாவட்ட நிர்வாகத்தின் கள்ளமௌனம் குற்றமாக தெரியவில்லை.

ஒரு வாதத்திற்கு தற்கொலை என வைத்துக் கொண்டாலும் நீட்டை எதிர்க் கொள்ளும் மாணவர்கள் முதல் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ – மாணவியிர்கள் வருடத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பாலியாவது தொடர் நிகழ்வாக உள்ளதே இது நாட்டின் கல்வி அமைப்பு மக்களுக்கு எதிராக இருப்பது குறித்து இந்த கனவான்களுக்கு தெரியாதா? ஏதோ எதிர் பாராத நடந்த விபத்தைப் போல சித்திரிப்பது மோசடித்தானமாகும்.

நீதிகேட்டு நீதிமன்றம் சென்ற மாணவியின் அப்பாவிடம் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பே போதுமானது அதில் நாங்கள் தலையிடவில்லை. ஆகையால், அங்கே நீங்கள் முறையிட்டுக் கொள்ளுமாறு தள்ளிவிட்டது உச்சநீதிமன்றம். மீண்டும் உயர்நீதிமன்ற நீதிபதி மாணவியின் அப்பாவிடம் “உங்களுக்கு இந்த நீதிமன்றம், அரசமைப்பின் மீது நம்பிக்கை இல்லையா? இறந்த உடலை வைத்துக் கொண்டு அரசை மிரட்டுகின்றீர்களா”? என காட்டமாக பேசிய நீதிபதி தனது உத்தரவில் இரண்டு முறை பிரேத பிரிசோதனை செய்யப்பட்ட அறிக்கையினை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிபுணர்குழு பிரிசோதித்து அறிக்கை தரவேண்டும் என்றும் மாணவியின் உடலை 23.07.2022 காலை பெற்று அமைதியான முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்றார்.

ஆக அதிஉயர்ந்த நீதிமன்றங்கள் இரண்டும் இவ்விசயத்தில் ஒரு தலை பட்சமாகவும் பிரச்சினையை வெறும் தற்கொலை நிகழ்வாகவும் அல்லது அரசின் அறிக்கையை ஏற்றுக் கொண்டதின் மூலம் தனியார்மயக் கொள்ளயை பாதுகாப்பதில் நீதிமன்றங்கள் தனது தீர்ப்புகளின் வாயிலாக உத்தரவிடுவது ஒரு விகையில் நீதிமன்றம் பாசிசம் எனலாம்.

***

உலகமயமாக்கால் கொள்கை நடைமுறைக்கு வந்து கால் நூற்றாண்டுக்கு மேலாகியும் வளர்ச்சி என்பது எங்கும் இல்லை. இன்றைய தகவல் உலகில் இதற்கான விவரங்கள் அன்றாடம் வந்த வண்ணம் இருப்பதும் இதுபோன்ற நிகழ்வுகள் ஒன்று சேரும்போது ஆர்டிக்ஸ் வெடியை காட்டிலும் மக்களின் குமறல் வெளிப்படுகிறது.


படிக்க : கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? | Press Meet


மறுபுறம், இந்த போராட்டதில் கைதாயிறுக்கின்ற 400-க்கும் மேற்பட்டோரில் இளைஞர்கள் (அதிகம் அரசு சிறுவர்கள் என சொல்வோரும் இளைஞர்கள்தான்) இப்படிப்பட்ட இளைய தலைமுறை அநீதிக்கெதிராக வீதிக்கு வந்துருப்பது வரவேற்க வேண்டிய அம்சம் என்பதுடன், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை காட்டும் கூறாகவும் பார்க்க வேண்டியிருக்கின்றது.

ஆளும் வர்க்கத்தின் அடியாள் படையான போலீசு வாட்ஸ்ஆப் குழுக்களை கண்காணித்து கொண்டிருக்கட்டும் அவர்களால் அறிவியிலின் வளர்ச்சிப் போக்கை ஒரு போதும் கட்டுப்படுத்த முடியாது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இலங்கையின் மக்கள் பேரெழுச்சியும் தமிழகத்தில் மாவட்டம் ஒன்றில் நடந்தேறிய மக்கள் எழுச்சியும் அளவில் –தன்மையில்-குறிக்கோலில்- வேறுபாடு கொண்டிருந்தாலும் தனியார்மயமாக்களுக்கு, உலகமயமாக்களுக்கு எதிரானதில் ஒன்றுபடுகிறது.

இந்த இரு போராட்டாங்களும் தன்னெழுச்சியாக அமைக்கப்படாமாலும் நடந்ததேறியிருக்கிறன. இப்போது நாம் செய்வதெல்லாம் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கத்தால் பாதிக்கப்படும் வர்க்க பிரிவினரை அரசியல்படுத்தி அமைக்கப்படும் பணியை போர்க்கால அடிப்படையில் விரைவுப்படுத்துவதின் வாயிலாகத்தான் இப்படிப்பட்ட அநீதிக்கு முடிவுகட்டுவது துவக்கமாக இருக்கும்.

ஆ. கா. சிவா,
மாநில ஒருங்கிணைப்பு  குழு  உறுப்பினர்,
பு.ஜ.தொ.மு.
22.07.2022

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! | மாநாடு அறிவிப்பு !

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்!

மாநாடு அறிவிப்பு !

***

நாள் : செப்டம்பர் 17
இடம் : சென்னை

மாநாட்டிற்கு அனைத்து உழைக்கும் மக்களையும் அறைகூவி அழைக்கிறோம்!

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக்குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை

தொடர்புக்கு : 9791653200, 9444836642, 7397404242, 9962366321.

பசியால் ஆமணக்கு காய்களை தின்ற சிறுவர்களை பசியின் கொடுமையில் இருந்து விடுதலை செய்ய முடியவில்லையே ஏன்?

கொத்தடிமைகளாக பணியாற்றிய சிறுவர்களுக்கு
விடுதலை சான்றிதழ் வழங்கிய ஒசூர் கோட்டாட்சியர்!

பசியால் ஆமணக்கு காய்களை தின்ற சிறுவர்களை
பசியின் கொடுமையில் இருந்து விடுதலை செய்ய முடியவில்லையே ஏன்?

செய்தி 1:

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகில் உள்ள தொட்ட அப்பனூர் கிராமத்தின் அருகே திம்மப்பா (52) என்பவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரின் சூளையில் சிறுவர், சிறுமிகள் உட்பட 10 பேர் கொத்தடிமைகளாக பத்தாயிரம், இருபதாயிரம், நாற்பதாயிரம் ரூபாய் அளவில் கடனாக பெற்றுக் கொண்டு வருடக் குத்தகை அடிப்படையில் பணிபுரிந்து வந்திருக்கின்றனர்.

இவர்களை அடையாளம் கண்டு ஒசூர் கோட்டாட்சியர் தேன்மொழி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து ”விடுதலை சான்றிதழ்” வழங்கி அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.

செய்தி 2:

கடந்த 04.07.2022 அன்று ஒசூர் அருகே ஜீமங்கலம் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். செங்கல் சூளை வளாகத்திலேயே குடும்பத்துடன் தகர கொட்டகைகளை அமைத்து வசித்து வருகின்றனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்களின் வீட்டுப் பிள்ளைகள் சம்பவத்தன்று பசியின் கொடுமையால் காட்டாமணக்கு காய்களை தின்றுள்ளார்கள். இதில் 8 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு செய்திகளும் நம்மிடம் கேட்கும் கேள்வியும், உணர்த்தும் செய்தியும் என்ன?

திராவிட மாடல் ஆட்சியில் வெளிமாநில கூலி தொழிலாளர்களின் வீட்டுப் பிள்ளைகள் பட்டினியின் கொடுமையால் ஆமணக்கு காய்களை உணவுப் பொருளாக உண்ணும் ஏழ்மை நிலையில் ரேசன் பொருட்களை கூட வாங்க முடியாத உள்நாட்டு அகதிகளாக வாழ்கின்றனர்.


படிக்க : சாதி ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாகும் டெலிவரி தொழிலாளர்கள் !


ஏன் எனில் மானிய விலையில் உணவுப் பொருட்களை வினியோகிக்கும் முறையை கைவிட்டு நேரடி பணப்பட்டுவாடா திட்டத்தை நோக்கி அரசு நகர்ந்து கொண்டு இருப்பது இந்த அவலநிலைக்கு காரணம் என உணர்த்துகிறது.

மேலும், 1990-களில் தனியார்மயம் – தாராளமயம் நடைமுறைப்படுத்தப்பட்ட சில ஆண்டுகளிலேயே நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழே, மேலே என ரேசன் பொருட்கள் விநியோக முறையில் இரண்டாக பிரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டினிச் சாவுகளும், நோஞ்சான் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைவான தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் என சமூகம் முழுவதும் இந்த நிலைக்கு வித்திட்டது அன்றைய நரசிம்மராவ் அரசு.

சமூக நலத்துறை சார்பில் மூன்று திட்டங்களை தமிழக அரசு தொடங்கியுள்ளது. எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணிப்பது, ஊட்டச்சத்து குறைபாடு வளர்ச்சி போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மேலும், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் 28 ஆயிரத்து 936 குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 521 குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் டேட் சிரப், நெய், சிவப்பு அவல், வெல்லம் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

இதனை போன்று தமிழகம் முழுவதும் கணக்கிட்டால் திராவிட மாடல் ஆட்சியில் மற்றும் வல்லரசு மோடி ஆட்சியில் இந்தியா முழுவதும் பட்டினிச் சாவுகளும், நோஞ்சான் குழந்தைகளும், ஊட்டச்சத்து குறைவான தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் என பசியின் கொடுமையை இந்தியா முழுவதும் காண முடியும்.

பொதுவான சில சீர்திருத்தங்களை செய்வதன் மூலம் பிரச்சினைகளை தீர்த்துவிட முடியும் என்று அரசு நம்மை நம்ப வைக்கிறது.

இவர்களால் செங்கல் சூளையில் கொத்தடிமையான சிறுவர்களுக்கு வேண்டுமென்றால் விடுதலை சான்றிதழ் வழங்க முடியுமே தவிர உள்நாட்டு ஏழை அகதிகளான கூலி தொழிலாளிகளை பசியின் கொடுமையில் இருந்து விடுவிக்க முடியாது. ஏனெனில் பெரும் பணக்காரர்கள் அதிகம் வாழும் நாடுகள் குறித்த ஓர் ஆய்வில் ”ஹைநெட்வொர்த்” பணக்காரர்கள் நம்நாட்டில் உருவாகி விட்டார்கள் என கூறுகிறது.


படிக்க : வடமாநில தொழிலாளியோ, தமிழக தொழிலாளியோ, போலீசு முதலாளிகளின் பக்கம்தான் !


ஒருபக்கம் பணக்காரர்களின் எண்ணிக்கை மட்டும் உயரவில்லை. பசி, பட்டினிச் சாவு, உள்நாட்டு இடப்பெயர்வு என ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்த விளைவுதான் செங்கல் சூளையின் கொத்தடிமையும், பசியின் கொடுமையால் ஆமணக்கு காய்களை தின்னும் அவலநிலையும்.

இந்த அவலநிலையை உருவாக்கும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் ஆகிய பொருளாதாரக் கொள்கைகளை அடியோடு வீழ்த்த வேண்டும். இதையெல்லாம் மறைத்து மக்களை பிரித்தாண்டு கார்ப்பரேட்டுகளை வாழ வைக்கும் காவி – கார்ப்பரேட் கும்பல் களத்தில் வீழ்த்தப்பட வேண்டும்.

விக்ரம் – ஒசூர்