Sunday, June 21, 2026
முகப்பு பதிவு பக்கம் 153

வடமாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரச்சாரம்: தமிழினமே, இதோ துரோகிகளை இனங்கண்டுகொள்!

டந்த மார்ச் 01 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்திற்கு, பிகார் மாநிலத் துணை முதல்வரும் ராஷ்டிர ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரான ஃபரூக் அப்துல்லா ஆகியோர் வருகைப் புரிந்திருந்தனர். இப்பொதுக்கூட்டத்தில், “பா.ஜ.க.விற்கு எதிராக அனைத்து தேசிய கட்சிகளும் தங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை மறந்துவிட்டு ஓரணியில் திரளவேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார் மு.க.ஸ்டாலின்.

இப்பொதுக்கூட்டத்திற்கு அடுத்தநாள், தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தமிழர்களால் விரட்டிவிரட்டி படுகொலை செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் போலிச் செய்திகள் பரவின. குறிப்பாக, இந்தியில் பேசியதற்காக பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் 12 பேர் தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டதாகவும் டிவிட்டர், வாட்சப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் காட்டுத் தீயாகப் பரவின. இந்தியில் வெளிவரும் பிரபல பத்திரிகைகளான தைனிக் பாஸ்கர், ஹிந்துஸ்தான், பஞ்சாப் கேசரி போன்றவையும் இப்போலிச் செய்திகளை அப்படியே வெளியிட்டன.

பிகார் பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களிலும், பா.ஜ.க. தலைவர்களின் டுவிட்டுகளிலும் நிதிஷ் தலைமையிலான அரசை சாடுவதற்கு, இந்த போலிச் செய்திகள் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டன. பிகார் மாநில சட்டமன்றத்தில் இதையொட்டி பா.ஜ.க. அமளியிலும் ஈடுப்பட்டது.

படிக்க : தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்பி கலவரம் செய்ய முயலும் பாசிச பாஜகவை தடை செய்வோம்! | மக்கள் அதிகாரம்

பா.ஜ.க.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிமாஞ்சி, “தமிழ்நாட்டில் பிகாரைச் சார்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள். ஆனால், லாலுவின் மகனும் பிகாரின் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கேக் சாப்பிடுகிறார்; வெட்கக்கேடு” என்று தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

பிகார் மாநிலத்திலும், வடமாநிலத் தொழிலாளர்கள் மத்தியிலும் கொந்தளிப்பையும் பீதியையும் ஏற்படுத்திய இப்பிரச்சாரத்தை பா.ஜ.க.வின் இணைய வானரப்படையே திட்டமிட்டு பரப்பியுள்ளது. நிதிஷ் தலைமையிலான பிகார் அரசுக்கு, மக்களிடையே அதிருப்தியையும் ஆத்திரத்தையும் உண்டாக்கும் நோக்கத்தில் இந்த வதந்திப் பரப்பிவிடப்பட்டுள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, எதிர்கட்சிகளின் முகாமை பலவீனப்படுத்தவும்; புல்வாமா போல ஏதேனும் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டு தேசவெறி, மத, சாதி, இனவெறியைத் தூண்டிவிட்டு, தன்னை மேலும் பலப்படுத்திக்கொள்ளும் முயற்சிகளையும் பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது. பிகாரில் கிளப்பிவிடப்பட்டுள்ள இப்பிரச்சாரம் அதன் ஒரு பகுதியாகும்.

தமிழ்நாட்டின் அரசியல் மரபு, வெறுப்பு பிரச்சாரமாம்!

பிகாரில் தமிழ்நாட்டிற்கு எதிராக போலிச் செய்திகளைப் பரப்பிய பா.ஜ.க., தமிழ்நாட்டில் போலிச் செய்திகள் பரப்புவோர் மீது தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோருகிறது. மேலும் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தைப் பரப்புவது தி.மு.க.தான் என்றும் குற்றஞ்சாட்டுகிறது.

“தி.மு.க. ஆரம்பித்த இந்தி எதிர்ப்பு எனும் பிழைப்புவாத நடவடிக்கைகளில் தொடங்கிய இந்த வெறுப்புப் பிரச்சாரம், தற்போது ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவிற்கு வந்திருக்கிறது” என்று அறிக்கை விட்டிருக்கிறார் அண்ணாமலை. மேலும், “தி.மு.க. ஆரம்பித்த காலத்திலிருந்து, தற்போதுவரை ஏதோ ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள்” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இவை ஏதோ தி.மு.க. என்ற கட்சி மீதான விமர்சனம் அல்ல. தமிழ்நாட்டின் இந்தி திணிப்பு எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு அரசியலைத்தான் அண்ணாமலை ‘வெறுப்புப் பிரச்சாரம்’ என்கிறார். மாபெரும் மொழிப்போராட்ட காலத்தில் கூட இந்தி பேசும் மக்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில்லை. எண்ணற்ற பார்ப்பனிய எதிர்ப்பு அரசியல் போராட்டங்கள் நடைபெற்ற இம்மண்ணில், ஒரு பார்ப்பனர்கள்கூட தாக்கப்பட்டதில்லை.

அப்படியிருக்க, இந்து-இந்தி-இந்தியா என்ற பாசிச சித்தாந்தந்திற்கு எதிராக பக்குவப்பட்டு வளர்ந்த தமிழ் மண்ணை, வன்முறை – வெறுப்பரசியலின் அடிப்படையாக சித்தரிக்க அண்ணாமலைக்கு எவ்வளவு கொழுப்பு வேண்டும்!

பாபர் மசூதி இடிப்பு, ரதயாத்திரை படுகொலைகள், குஜராத் இனப்படுகொலை, சிறுபான்மையினர் – தலித்துகளுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்படும் கும்பல் படுகொலைகள், பெண்கள் மீது பாலியல் வெறியாட்டங்கள் என அன்று முதல் இன்றுவரை நாட்டையே வன்முறைக்காடாக ஆக்கிய பாசிசக் கும்பல், தமிழ்நாட்டின் அரசியலைப் பழித்துப் பேசுகிறது.

சீமான் – பா.ஜ.க. கள்ள உறவு அம்பலமானது!

ஈரோடு கிழக்கு மாவட்டத்தில் வி.சி.க.வினரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவருமான வேல்முருகனும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபாட்டார்களாம். இதுபோன்ற பிரச்சாரங்களும் இந்த வதந்திகளுக்கான அடிப்படை என்று அவதூறு சேற்றை அள்ளி வீசுகிறார் அண்ணாமலை. ஆனால், அண்ணாமலையின் ஆட்டுமூளைக்கு சீமானின் திருநாமம் மறந்துவிட்டது.

ஈரோடு இடைத்தேர்தலையொட்டி, வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக சீமான கக்கிய இனவெறி கொஞ்சமல்ல.

“கஞ்சா வச்சிருக்கான், அபின் வச்சிருக்கான், பெண்களை கைய பிடித்து இழுத்தான், கற்பழித்தான் என்று உள்ளே தூக்கிப்போட்டு சாப்பாடு இல்லாமல் அடி வெளித்துடுவேன். அவனே பெட்டியைத் தூக்கி கிட்டு ஓடிடுவான்” என்று ஈரோட்டில் சீமான் பேசியபோது பொத்திக் கொண்டிருந்த அண்ணாமலை, இப்போது தி.மு.க.வும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு அரசியலும்தான் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிரான வதந்திக்கு காரணம்; திருமாவளவனும் வேல்முருகனும்தான் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினர் என்கிறார்.

இன்னொருபக்கம், வடமாநிலத் தொழிலாளர்களை அடித்துவிரட்ட வேண்டும் என்று பேசிய சீமானோ, “வெளியாரை வெளியேற்று” என்று முழக்கமிட்டுத் திரியும் சீமானின் அரசியல்பிதா மணியரசனோ, இந்த விவகாரம் தொடர்பாக தங்கள் கட்சி சார்பாக எவ்வித அறிக்கையையும் வெளியிடவில்லை.

தமிழ்தேசிய அரசியலுக்கு பின் ஒளிந்துகொண்டிருக்கும் சீமானும் மணியரசனும் பாசிச பா.ஜ.க.வின் பி டீம்கள்; காவி கும்பலுக்கு எதிராக போராடிவரும் தமிழ்நாட்டைப் பிளவுபடுத்தும் கோடாரிகள் என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்.

துரோகிகள் ஆபத்தானவர்கள்!

பாசிச பா.ஜ.கவின் மதவெறி அரசியலுக்கு தமிழ்நாடு பலியாக மறுக்கிறது. மாணவி லாவண்யா தற்கொலை, கோவை சிலிண்டர் வெடிப்பு ஆகியவற்றை வைத்து பா.ஜ.க. போட்ட திட்டங்களும் ஊத்திவிட்டது. வேல்யாத்திரை, காசி தமிழ்ச் சங்கமம் என என்னென்ன அவதாரங்கள் எடுத்துவந்தாலும் தமிழ் மக்களிடம் அவை எடுபடவில்லை. இந்த வேளையில்தான் சீமான்-மணியரசன் கும்பல், காவிக் கும்பலுக்கு ஐந்தாம் படையாகச் செயல்பட்டு தமிழ்நாட்டை வீழ்த்த நினைக்கிறது.

“நான் தான் பா.ஜ.க.வை கடுமையாக எதிர்க்கிறேன். எனக்கு ஓட்டுப்போட்டால் பா.ஜ.க. வந்துவிடும் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள்” என்று சீமான் ஒவ்வொரு மேடையிலும் குமுறுகிறார். தாங்களும் பா.ஜ.க.வை எதிர்க்கிறோம் என்று சீமானும் மணியரசனும் பேசுபவை, “புலி பசுத் தோல் போர்த்திவருவதற்கு ஒப்பானதுதான்”.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணியைத் தடுப்பதற்காக, திருமாவளவனின் அறைகூவலை ஏற்று பல்வேறு அரசியல் கட்சிகள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். பேரணியை ஆதரித்து பங்கேற்பதாகச் சொன்ன சீமானோ, நாம் தமிழர் கட்சியினரோ ஒரு இடத்தில் கூட பங்கேற்கவில்லை. இதுதான் சீமானின் பா.ஜ.க. எதிர்ப்பு.

திராவிட எதிர்ப்பு அரசியலின் மூலம் பார்ப்பனிய எதிர்ப்பு அரசியலை நீர்த்துப் போகச் செய்து, தமிழினப் பெருமிதம் என்ற பெயரில் பார்ப்பனியத்தை கடத்திக் கொண்டுவருவதும், அதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.விற்கு சேவைசெய்வதும்தான் சீமான்-மணியரசன் கும்பலின் இலக்கு.

படிக்க : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: செத்துப் போனது  ‘ஜனநாயகம்’! உயித்தெழுந்தது பாசிச பாஜக நரகலின் நகல் சீமான்!

“திராவிடர்கள்” என்று சொல்லக்கூடாது, “தமிழ் இந்து” என்று சொல்ல வேண்டும் என்று மணியரசன் வகுத்தளிக்கும் கோட்பாடுகளெல்லாம், காவி பாசிஸ்டுகளுக்காக தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் சித்தாந்த கரசேவையாகும்.

பஞ்சம் பிழைக்கவந்த வடமாநிலத் தொழிலாளிகளால் தமிழர் வேலை பறிபோகிறது என்று காட்டுக் கூச்சலிடும் சீமான், தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில், இந்திபேசுவோர் நுழைக்கப்படுவது குறித்து அவ்வளவாக அக்கறைப்படுவதில்லை.

ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் சீமானுக்கு 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் கிடைத்திருக்கிறது. இத்தொகுதியில் சென்றமுறை பெற்ற வாக்குகளைவிட, இந்த வாக்கு எண்ணிக்கையில் பெரிய அளவிற்கு வீழ்ச்சி ஒன்றுமில்லை.

சீமான் தேர்தலில் வெல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், சீமானுக்கு கிடைத்த அந்த 10 ஆயிரம் வாக்குகளும், சீமானது பாசிச அரசியலுக்கு கிடைத்த வாக்குகளாகும். வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிரான சீமானின் இனவெறி அரசியலை ஆதரிப்பவர்களது வாக்குகளாகும்.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பகைவர்களால், நேரடியாக மோதி தமிழ் மண்ணை ஒருகாலும் கைப்பற்ற முடியாது. ஆனால், சீமான்-மணியரசன் போன்ற துரோகிகளின் மூலம், தமிழ் மண்ணைக் கவிழ்ப்பதற்கு பாசிஸ்டுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை நாம் சாதரணமாக கடந்துசெல்ல முடியாது.

எதிரிகளை விட துரோகிகள் அபாயமானவர்கள், தமிழினம் இக்கும்பலை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்!

அம்பலப்படுத்தி தோலுரிப்போம்!


ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.
05.03.2023

மதுரை ஸ்மார்ட் சிட்டி (தீண்டா நகரம்) | Madurai smart city | பாகம் 1 | documentary

மதுரை ஸ்மார்ட் சிட்டி (தீண்டா நகரம்) | Madurai smart city | பாகம் 1

சிறுதொழிலை அழிக்கவரும் மதுரை ஸ்மார்ட் சிட்டி பற்றி மக்கள் கூறும் கருத்துக்கள்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

புதிய ஜனநாயகம் – மார்ச் 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் மார்ச் – 2023 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் – மார்ச் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561

வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

தலையங்கம்: நிதிநிலை அறிக்கை 2023-2024: அம்பானி-அதானிகளுக்கு அமிர்தகாலம்! உழைக்கும் மக்களுக்கு ஆலகாலம்!
♦ “ஒரே நாடு ஒரே தேர்தல்” இந்துராஷ்டிர மயானவாயில்!
♦ ஆளுநர்கள் நியமனம்: அடிவருடிகளுக்கு பரிசு! அடியாள் வேலைக்கு பதவி!
♦ ஐ.ஐ.டி முதல் ஜே.என்.யூ வரை: பாசிசமயமாகும் உயர்கல்வி நிறுவனங்கள்!
♦ நிக்கோபார் தீவுகளை அழிக்கவரும் ‘வளர்ச்சி’த் திட்டங்கள்!
♦ வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம்! காரணம் என்ன? வடமாநிலத் தொழிலாளியா? முதலாளித்துவ இலாபவெறியா?
♦ அமெரிக்காவில் வேர்பரப்பும் காவி பாசிசக் கும்பல்!
♦ ‘சாட் ஜி.பி.டி’ – டிஜிட்டல் ஏகபோகங்களிடையே ஒரு புதிய போட்டாபோட்டி!
♦ “உன் நெருக்கடியை என் தலையில் சுமந்தாதே!” கொதித்தெழுந்த பிரான்ஸ் – பிரிட்டன்

தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்பி கலவரம் செய்ய முயலும் பாசிச பாஜகவை தடை செய்வோம்! | மக்கள் அதிகாரம்

04.03.2023

தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்பி
கலவரம் செய்ய முயலும் பாசிச பாஜகவை தடை செய்வோம்!

மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை !

டந்த இரண்டு, மூன்று நாட்களாக வடஇந்திய ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு எதிரான வதந்திகளை பரப்பி சதி செய்தது பாசிச பாரதிய ஜனதா கட்சி தான் என்பது தற்பொழுது அம்பலமாகியுள்ளது.

உத்தரப்பிரதேச பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளரான பிரசாந்த் உமாராவ் என்பவன், இந்தியில் பேசியதற்காகவே தமிழ்நாட்டில் 12 பிகார் தொழிலாளிகள் அடித்துக் கொல்லப்பட்டனர் என்ற பொய் செய்தியை திட்டமிட்டு பரப்பியுள்ளான். இது தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக மற்ற தேசிய இனங்களை எதிரியாக்கும் சதி வேலையாகும்.

இச்செய்தியை பாசிச பாரதிய ஜனதா கட்சியினரும் வடநாட்டு ஊடகங்களும் திட்டமிட்டு பரப்புவதன் மூலம் தமிழ்நாட்டில் ஒரு உண்மையிலேயே இனக் கலவரத்தை உருவாக்குவதற்காக சதி செய்து வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு டிஜிபியும் தமிழ்நாட்டின் முதலமைச்சரும் உரிய விளக்கம் அளித்திருக்கிறார்கள். பீகார் மாநில சட்டசபையில் தமிழ்நாட்டில் பீகாரிகள் கொலை செய்யப்படுகிறார்கள் என்று பாசிச பாரதிய ஜனதா கட்சி அமளியில் ஈடுபட்டிருக்கிறது.

மாபெரும் இந்தி எதிர்ப்பு போர் நடந்த காலகட்டத்தில் கூட, இந்தி பேசியவர்கள் யாரும் தமிழர்களால் தாக்கப்பட்டதில்லை என்பதுதான் வரலாறு. உழைக்கும் வடஇந்திய தொழிலாளியையும் சுரண்டும் மார்வாடி, பார்ப்பன, பனியா குஜராத்தி கார்ப்பரேட் முதலாளிகளையும் பிரித்துப் பார்க்கத் தெரிந்தவர்கள் தமிழர்கள்.

படிக்க : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: செத்துப் போனது  ‘ஜனநாயகம்’! உயித்தெழுந்தது பாசிச பாஜக நரகலின் நகல் சீமான்!

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஒரு பாசிஸ்ட், பீகாரிகள் தமிழ்நாட்டில் கொலை செய்யப்படுகிறார்கள் என்று வதந்தியை கிளப்பி விடுவான். அச்செய்தியை வடஇந்திய ஊடகங்களும் பாசிச பாஜக கும்பலும் இந்தியா முழுமைக்கும் பரவச் செய்யும். அதை வைத்து பீகார் சட்டசபையிலும் பீகாரிலும் கலவரம் செய்வதற்கு பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்யும். இதைப் பற்றி எதுவும் பேசாத அண்ணாமலை, தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று கூறுவார். என்ன ஒரு நாடகம் இது?

தமிழ்நாட்டை பிரித்தாளும் சூழ்ச்சியில் தமிழ்நாட்டை சுற்றி வளைக்கும் போரில் தமிழ்நாட்டில் உறவாடி கெடுக்கும் யுத்தியில் இந்த வதந்தியும் ஒன்று. பிபிசி ஆவணப்படம், ஹிண்டன்பர்க் அறிக்கை, எரிவாயு உருளை விலை ஏற்றம் என அம்பலப்பட்டு அம்மணமாகி போன இந்த மோடி-அமித்சா பாசிச கும்பலை காப்பாற்றுவதற்கும், மோடி-அமித்சா பாசிசக் கும்பலுக்கு எதிரான இந்தியா தழுவிய ஒரு கூட்டணி உருவாகக் கூடாது என்பதற்கும் நடத்தப்பட்ட முன்னோட்டமே பீகார் “தொழிலாளிகள் தமிழ்நாட்டில் கொலை செய்யப்பட்டார்கள்” என்ற வதந்தி.

இந்த வதந்தி தற்பொழுது முறியடிக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் இதை ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிச கும்பல் தொடர்வார்கள் வதந்திகளைப் பரப்பி கலவரம் செய்து ஆட்சியைப் பிடிப்பதும் தேசிய இனங்களை பிரித்தாள்வதுமே மோடி அமித்ஷா, பாசிச கும்பலின் கைவந்த கலை. இந்த மோடி கும்பலுக்கு ஏற்ற ஜாடிதான் சீமான். அதனால்தான் சுரண்டும் வடஇந்திய மற்றும் தமிழ் முதலாளிகளை பற்றி பேசாமல் சுரண்டப்படும், உழைக்கும் வடஇந்திய தொழிலாளியை தமிழர்களுக்கு எதிரியாக காட்டிக் கொண்டிருக்கிறார். ஆக, பாரதிய ஜனதா கட்சியின் இலக்கும் சீமானின் இலக்கும் ஒன்றே!

ஆகவே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பலை தடை செய் என்பது நம்முடைய முக்கிய கோரிக்கையாக இருக்க வேண்டும். பாசிச பாஜக – ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை தடை செய் என தேர்தல் ஆணையத்தில் கேட்பதல்ல; தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு ஊரிலும் தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் ஆர்.எஸ்.எஸ் – பாஜகவை தடை செய்ய வேண்டும், அதற்கான முன்னெடுப்புகளில் தமிழ் மக்கள் ஈடுபட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு புதுவை
99623 66321.

Morbi Bridge Collapse: A Massacre of Gujarat Model!

The collapse of Gujarat’s Morbi suspension bridge resulted in the loss of lives of at least 141 people including 53 children. This incident shocked everyone. Various media and social media had exposed the irregularities that took place.

But, we can’t just view this incident as just another accident or an expression of the negligence of the BJP ruled state governments. The Morbi bridge had exposed the real face of the Gujarat model, which is being posed as the role model for the whole country by the fascists. The collapse of the Morbi bridge is an act of terrorism. Even though it was not preplanned, it is a massacre; this incident is an outcome of unrestricted leasing of entire Gujarat to the corporates.

000

The Morbi bridge, which was built across the Machchhu River, was inaugurated by the British in 1879. Besides being used by the pedestrians, it had also emerged as a place of tourist attraction. After the 2001 earthquake, the bridge had not been renovated. The process of renovation started on March this year. The bridge had been re-opened by keeping Diwali and Chhath puja in mind. But the media reported that the bridge had collapsed as a result of overcrowding.

But, the fact is that the bridge had not been renovated. Even the rusted old cables of the bridge were left untouched; they were not even greased. The anchor pins that hold the cables on the ground were broken and the bolts on the anchor were loose. The wooden flooring was replaced with aluminum sheet and this has increased the weight of the bridge. There were no properly trained security guards. By keeping profits in mind, more tickets – capacity was 150 but reportedly 650 entry tickets were sold – and a huge crowd was allowed to enter the bridge. The bridge was opened before receiving a “fit for use” certificate. The forensic report reveals this information.


Also Read: ‘Twitter 2.0’ – Propaganda Machine of Fascists!


The maintenance and restoration work was awarded to Gujarat’s Oreva Group by the Gujarat government. This group (better known as Ajanta Quartz) is one of the leading wall clock manufacturers. This group has been carrying out the maintenance work of the bridge since 2007. Recently, the contract for maintenance of this bridge was handed over to this group for another 15 years.

This corporate group had sublet the restoration contract to two other contractors. These contractors were not qualified engineers. They only carried out welding and electrical work in the bridge. Moreover, over lacks any experience in construction business. Morbi municipality had given the contract of renovation to Oreva without a tender. It was a shock that the agreement was just one-and-a-quarter page.

This Gujarat model reveals us that the Brahminical fascists did not even take into consideration that this project is concerned with the lives of the people. Their normalcy is bribery – corruption – scam.

Not only the Morbi suspension bridge, but all the sectors of the Gujarat government had been opened for the plundering of the corporates. The word ‘Gujarat model development’ indicates the gifting of all the sectors to the corporates, i.e., establishing the rampant exploitation of the corporate bourgeoisie. The tragedy that claimed the lives of almost 150 people is an expression of this. That’s why we say that this incident is not an accident; it’s a massacre.

000

While the negligence shown in the maintenance and the importance given to the profiteering of Oreva are on one side, the actions of the BJP – Modi mob and their mouthpiece media after the Morbi bridge incident on the other side exposes us how vicious the fascists are.

Modi, on the occasion of Vallabhbhai Patel’s birth anniversary, said “I am in Ekta Nagar but my mind is with the victims of Morbi. Rarely in my life, would I have experienced such pain. On one hand, there is a pain-riddled heart and on the other hand, there is the path to duty”. He acted tactically. On the same day evening, while speaking in an event in Banaskantha district, Modi shed crocodile tears on the stage. But he did not utter a word about the reason for the accident.


Also Read: Imperialism at a dead end! It’s time for the world proletariat to take the lead!


It has been announced that Modi would visit those who were severely injured in the accident. Only then the condition of the hospital in which the injured were treated got exposed to the outside world. The hospital got a quick makeover only because of the reason that PM Modi would be visiting. The walls of the hospital were painted, new tiles were installed on the walls, and minor construction works were carried out to beautify the hospital.

That hospital did not even have the basic facilities such as drinking water, beds and bedsheets. Bedsheets had been brought from a hospital in Jamnagar, which is 160 km away from Morbi. There is no supply connection for the newly installed water cooler. In two days, 56 injured people have been discharged before the completion of treatment.

Thus many news which reached us through social media exposed the grim face of Gujarat model. The BJP – Modi mob, in order to save its vote-bank, unleashed a series of fake-news campaign. Even after all this, Modi began his election campaign with the slogan “I’ve made this Gujarat”, without any shame.

BJP is trying to win the constituency of Morbi by making the party’s ex-MLA Kantilal Amrutiya as the candidate and projecting him as ‘Morbi hero’ who saved the lives of the people during the suspension bridge accident. The Election Commission went one step further and postponed the announcement of election dates by citing the Morbi incident. The election dates were announced only after the anti-BJP sentiment had drained.


Also Read: Shraddha murder case: Recolonization Destroying Human Values!


On one side, PM Modi’s lies and dramas were broadcasted by the media. While on the other side, fake news – that the bridge got collapsed as some youths deliberately shook it – was spread.

Vivek Ranjan Agnihotri, the director of Kashmir Files said, “Probe if it’s a sabotage by urban-Naxals because they are very capable of going to any extent”. The media spread all these sorts of news but remained mute on the necessity to arrest Oreva’s managing director Jaysukh Patel.

Not only the pro-BJP media in the north, Vikatan group had also reported as if the private company was the only wrongdoer and that the relief and rescue measures were going on; and that serious investigations were going on. They did not utter a word about the blatant corruption – irregularities of the BJP-Modi mob. Instead they projected Modi’s crocodile tear drama as his care for the people.

The Morbi bridge collapse had exposed the real face of development under the Gujarat model. The Gujarat model is a paradise for the dominant caste Gujarati-Marwadi-Patel-Bania corporate bosses. But it is a graveyard for the working people. This has been proved once again.

“ஒரேநாடு”! ஒன்றுகலக்காத “தமிழ்நாடு”!

டம்தெரியாமல் மோதிக்கொண்டிருந்த’ ஆளுநர் ரவிக்கு, “தமிழ்நாடு” என்றால் என்னவென்று இந்நேரம் புரிந்திருக்கும்; புரியவைத்திருக்கிறது தமிழ்நாடு. ஆனாலும், 2017 ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பிறகு, இந்த ஆண்டு பொங்கலை போராட்டப் பொங்கலாக, அரசியல் புத்துணர்ச்சியோடு தொடங்கிவைத்த பெருமை அவரையேச் சாறும் என்பதால், நாம் அவருக்கு நன்றிசொல்லித்தான் ஆகவேண்டும்.

கிண்டி ராஜ்பவனில், கடந்த மாதம் 5ஆம் தேதி, தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் உறவாடிக் கெடுக்கும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தன்னார்வலர்களுக்கு, பாராட்டு நிகழ்ச்சி நடத்தினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அந்நிகழ்ச்சியில், “தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு” என்று தனது ‘ஆதங்கத்தை’ வெளிப்படுத்தினார். மேலும், “தமிழ்நாடு என்று சொல்வதைவிட, தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்; பாரதத்தின் ஒருபகுதியே தமிழகம்” என்று பேசியதை அனைவரும் அறிவோம்.

“திருக்குறள் ஆன்மிகத்தைப் போதிக்கிறது”, “திராவிடம் என்பது இனமல்ல, இடப்பெயர்”, “சனாதனம் தமிழகத்தில் தோன்றி, பாரதம் முழுக்க பரவியது” – என தொடர்ந்து, தமிழ்நாட்டைச் சீண்டும்வகையில் பேசிவந்ததன் உச்சம்தான் “தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்ல வேண்டும்” என்ற திமிரான பேச்சு!

இனியும் சகித்துக் கொள்ளமுடியாது என்ற நிலைக்கு தமிழ்நாட்டு அரசியல் சக்திகளைத் தூண்டிவிட்ட ரவி, அதற்கே உரிய எதிர்வினையையும் சந்தித்தார்.


படிக்க: சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | காணொலி


“தமிழ்நாடு-தமிழன்-தமிழ் என்பவை ஆளுநர் ரவிக்கு கசப்பானவையாக இருக்கின்றன; எனவே இவற்றை விட்டு விலகிச் செல்லும் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும்” என்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆளுநரை விமர்சித்திருந்தார். கி.வீரமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ஆளுநரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆளுநரின் பேச்சுக்கு பதிலடியாக, “தமிழ்நாடு” என்ற ஹாஷ்டாக், டிவிட்டரில் பிரபலமாகியது.

ஜனவரி 9-ஆம் தேதி, ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு ஆளுநர் உரை வழங்குவதற்காக வந்திருந்த ஆர்.என்.ரவியைக் கண்டித்து, வி.சி.க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, சி.பி.ஐ., சி.பி.எம்., காங்கிரஸ் ஆகிய தி.மு.க. கூட்டணிக் கட்சிகள், “வாழ்க தமிழ்நாடு”, “எங்கள் நாடு தமிழ்நாடு”, “ஆளுநர் உரையைப் புறக்கணிப்போம்” என்று முழக்கமிட்டனர். பின்னர், ஆளுநர் உரையைப் புறக்கணித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பா.ம.க.வினரும் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்.என்.ரவியின் அடாவடி!

தாம் பேசியது சட்டமன்றத்திலேயே எதிர்ப்புக்கு உள்ளாகியிருந்தபோதும், திமிர் பிடித்த ஆர்.என்.ரவி, மேலும் அகம்பாவமாக நடந்துகொண்டார். தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையை வாசிக்காமல், சில விசயங்களை வெட்டியும் ஒட்டியும் வாசித்தார். குறிப்பாக “தமிழ்நாடு அரசு” என்ற சொல்லைப் புறக்கணித்து, அச்சொல்லுக்கு பதிலாக “இந்த அரசு” என்று குறிப்பிட்டு பேசினார்.

“சமூகநீதி”, “சுயமரியாதை”, “சமத்துவம்”, “பகுத்தறிவு”, “திராவிட மாடல்” உள்ளிட்ட சொற்களையும், “தந்தை பெரியார்”, “அண்ணல் அம்பேத்கர்”, “பெருந்தலைவர் காமராசர்”, “பேரறிஞர் அண்ணா”, “முத்தமிழறிஞர் கலைஞர்” ஆகிய தலைவர்களது பெயர்களையும் வாசிக்காமல் புறக்கணித்தார்.

ஆளுநர் உரை முடிந்ததும் எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தம்மால் இசைவளிக்கப்பட்டு அச்சிடப்பட்ட உரையையே ஆளுநர் முறையாகவும், முழுமையாகவும் படிக்காததால், உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்பட்ட அச்சிடப்பட்ட உரையே அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார். தன்னுடைய திமிருக்கு அனைத்து வகைகளிலும் பதிலடி கிடைத்துக் கொண்டே இருந்ததால், பொறுத்துக்கொள்ள முடியாத ஆர்.என்.ரவி தேசியகீதம் பாடப்படும் முன்பே வெளியே ஓடினார்.

தி.மு.க.விற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமானால், ஆர்.என்.ரவி வேறுவகைகளில்கூட செய்திருக்கலாம். ஆளுநர் உரை நிகழ்த்தாமல், சட்டமன்றக் கூட்டத்தைப் புறக்கணித்துக் கூட இருக்கலாம். ஆனால், தீர்மானிக்கப்பட்ட உரையை ஏற்றுக் கொண்டு, வாசிக்கும்போது மாற்றி வாசிப்பது – திருத்தி வாசிப்பது போன்றவை எல்லாம் தி.மு.க. என்ற தனிப்பட்ட கட்சிக்கு எதிரான நடவடிக்கை அல்ல; தமிழ்நாடு அரசுக்கு உரிய இறையாண்மையையே கேள்விக்கு உள்ளாக்குவதாகும்.


படிக்க: திரிபுரா மாடல் தேர்தல் வன்முறை : பாசிஸ்டுகள் கற்றுத்தரும் பாடம் என்ன?


அடுத்து, ஜனவரி 10-ஆம் தேதி, ஆளுநர் மாளிகை சார்பில் வெளியான பொங்கல் விழா அழைப்பிதழிலும், “தமிழ்நாடு ஆளுநர்” என்ற சொல்லுக்குப் பதிலாக “தமிழக ஆளுநர்” என்ற சொல் இடம்பெற்றிருந்தது; தமிழ்நாட்டு அரசின் இலச்சினைக்குப் பதிலாக, ஒன்றிய அரசின் இலச்சினையும், திருவள்ளுவர் ஆண்டுக்குப் பதிலாக, ஆங்கில தேதியும் இடம்பெற்றிருந்தது.

தி.மு.க. அரசையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் சீண்டிப் பார்ப்பதாக நினைத்துக் கொண்டு, தொடர்ச்சியாக தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளால், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சவாலுக்கு அழைத்தார் ரவி.

பாசிசத் திமிருக்கு செருப்படி!

பா.ஜ.க, அடிமை அ.தி.மு.க.வைத் தவிர, மற்ற அனைத்துக் கட்சிகளும், இயக்கங்களும் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, தமிழ்நாட்டு மாணவர்கள், மக்களிடமிருந்தும் எதிர்ப்புக் குரல் ஓங்கியது.

சட்டமன்ற முதல் கூட்டம் நடந்து முடிந்த அன்றே வி.சி.க. மற்றும் சி.பி.எம். ஆகிய கட்சிகள் ஆர்.என்.ரவியைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தன.

ஜனவரி 12-ஆம் தேதி சட்ட அமைச்சர் ரகுபதி மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து மரபுகளை மீறாமல் பணியாற்ற ஆளுநருக்கு அறிவுறுத்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை வழங்கினர்.

சென்னையில் பல இடங்களில் ஆளுநரைக் கண்டித்து தி.மு.க-வினரால் #GetOutRavi (கெட் அவுட் ரவி) என்ற ஹாஷ்டாக் போடப்பட்ட நீளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மேலும், ஆளுநரை பதவி விலகக் கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியும், “தமிழ்நாடு வாழ்க” என மக்கள் நீதி மய்யமும் பல்வேறு இடங்களில் சுவரொட்டி ஒட்டியது. பல்வேறு மாவட்டங்களில் தி.மு.க. மற்றும் அதன் மாணவர் அணி சார்பாக கருப்புக்கொடி ஏந்தியும் ஆளுநர் ரவியின் புகைப்படத்தை எரித்தும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

திருப்பூர் மற்றும் புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்கள் எழுப்பியும் ஆளுநர் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பொள்ளாச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆளுநரின் உருவபொம்மையை எரித்தனர். இவையன்றி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆளுநருக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.


படிக்க: ஜே.என்.யூ மாணவர்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி குண்டர்கள்


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார்பு நீதிமன்றம் எதிரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரின் உருவப்படத்தை மிதித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆளுநருக்கு எதிராக கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தில் குதித்தனர். சென்னை மாநிலக்கல்லூரி, புதுக்கல்லூரி, திருத்தணி கலைக் கல்லூரி, எடப்பாடி அரசு கலை அறிவியல் கல்லூரி, சேலம் அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆளுநருக்கு எதிராக “எங்கள் நாடு தமிழ்நாடு”, “ஆளுநரே வெளியேறு”, “தமிழ்நாடு வாழ்க” உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பட்டாபிராமில், இந்து கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருப்பதி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாயிலின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, ஆளுநரின் உருவப்படத்தைக் கிழித்து எரிந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

“சட்டப்பேரவையில் மாண்பையும், தமிழ்நாட்டின் சுயமரியாதையையும் காக்கின்ற அரசியல் சட்டம் வழங்கியுள்ள அறவழியிலானப் போராட்டத்தை மேற்கொண்ட காரணத்தால், இந்தப் பொங்கல் விழா நமக்குக் கூடுதல் இனிப்பு நிறைந்த சர்க்கரைப் பொங்கலாக அமைந்துள்ளது” என சட்டமன்ற நிகழ்வை மறைமுகமாக மேற்கோள் காட்டி, தமது பொங்கல் வாழ்த்து அறிக்கையை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் “தமிழ்நாடு வாழ்க” எனக் கோலமிட்டு தமிழர் திருநாளைக் கொண்டாடுமாறு, மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதனை வரவேற்று, “தமிழ்நாடு”, “தமிழ்நாடு வாழ்க”, “எங்கள் நாடு தமிழ்நாடு”, “GetOutRavi” போன்ற முழக்கங்கள், பொங்கல் அன்று பலரது வீட்டு வாசல்களையும் அலங்கரித்தன. மேலும், இரண்டு நாட்களுக்கு மேலாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் #தமிழ்நாடு #GetOutRavi உள்ளிட்ட முழக்கங்களே ஆதிக்கம் செலுத்தின.

தமிழ்நாடு என்றால், காவிகளுக்கு எரிவது ஏன்?

இதற்கு முன்பு தமிழ்நாடு, தமிழகம் என இரண்டு பெயர்களையும் பொதுவாகப் பயன்படுத்திவந்த பலரும், தற்போது தன்னுணர்வோடு “தமிழ்நாடு” என்று முழங்குகின்றனர். ஏனெனில், “தமிழ்நாடு” என்பதற்கும், “தமிழகம்” என்பதற்கும் இடையிலான வேறுபாடு வெறும் சொல் அல்ல.

“நாடு” என்பதுதான் பிரச்சினை என்றால், மஹாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் போன்ற பெயர்களில் உள்ள “ராஷ்டிரா”, “பிரதேசம்” என்பதும் தனிநாட்டைக் குறிப்பது போன்ற பெயர்கள்தானே, “தமிழ்நாடு” என்ற பெயர் மட்டும் அவர்களுக்கு ஏன் பிரச்சினையாக உள்ளது என்று பலர் கேள்வி எழுப்பினர்; “ஒரே நாடு”, “ஒரே தேசம்” என்ற பெயரில் பல்தேசிய இனங்களின் தன்னுரிமையை நசுக்கி, இந்துராஷ்டிரத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு இன்றுவரை சிம்மசொப்பனமாக திகழ்வது “தமிழ்நாடு” மட்டுமே என்பதுதான் அதற்கான காரணம்.

அப்படியிருக்க, “தமிழ்நாடு” என்ற பெயர் கூட தன்னை தனிநாடு போல அடையாளப்படுத்திக் கொள்வதும், அதன்மூலம் ஒரே பாரதக் கொள்கையைக் கேள்விக்கு உள்ளாக்குவதையும் காவிக் கும்பலால் செரிக்க முடியவில்லை. அந்த வயிற்றெரிச்சலின் வெளிப்பாடுதான் ஆர்.என்.ரவியின் பேச்சு.

ரவி மட்டுமல்ல, “தினமல(ர்)ம்”, “துக்ளக்” உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் ஆதரவு பத்திரிகைகள் அனைத்திலும் “தமிழ்நாடு” என்ற பெயருக்கு பதிலாக, “தமிழகம்” என்ற பெயரே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் உள்ளக் குமுறலை பகிரங்கமாகப் பேசியதன் மூலம் வாயைக் கொடுத்து புண்ணாக்கிக் கொண்டார் ரவி.

பாசிச உளவாளியை விரட்டியடிப்போம்!

“ஊழல்”, “இந்துவிரோதம்”, “சட்ட ஒழுங்கு சீர்குலைவு” என தி.மு.க.விற்கு எதிரான பிரச்சாரங்களில் ஏறியடித்துப்பேசும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல், புலி வாயில் விரலைவிட்ட கதையாக, தமிழ் மக்களின் உணர்வை சீண்டிப் பார்த்த ரவிக்கு, முட்டு கொடுக்க முடியாமல் தவித்தது. இறுதியில் ஆர்.என்.ரவியே தமிழ்நாட்டிடம் மண்டியிட்ட கூத்தும் அரங்கேறியது.

“காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே உள்ள தொடர்பைக் குறிக்கவே தமிழகம் என்ற சொல்லைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், தமிழகம் என்பதே மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன். எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வது தவறானது” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார்.

ரவி அந்த பொருளில் சொல்லவில்லையாம், நாம் தவறாக புரிந்துகொள்கிறோமாம். அவ்வாறெனில், பொங்கல் நிகழ்ச்சி அழைப்பிதழில் தமிழ்நாடு பெயரும் தமிழ்நாடு அரசின் இலட்சினையும் ஏன் இல்லை என்று கேட்டால் பதில் இருக்கப் போவதில்லை. மண்டியிடுவது என்று முடிவுசெய்தபின், அதையும் ‘கவுரமாக’ச் செய்ய வேண்டுமாம்!

அதோடு விட்டாரா ரவி, இப்போதெல்லாம் எங்கே சென்றாலும், ‘ஒரு பாதுகாப்புக்கு’ தமிழ்நாடு என்று உச்சரிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டார். அண்மையில் புதிதாக பயிற்சியில் இணைந்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் பேசிய ஆர்.என்.ரவி, தொடர்பே இல்லாமல் அந்த இடத்தில், “தமிழர்கள் எங்கு சென்றாலும் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழ் மொழியையும் மிகவும் நேசிக்கிறார்கள்” என்று பேசியுள்ளார். இன்னொரு கூட்டத்தில், உரையை முடிக்கும்போது, “வாழ்க தமிழ்நாடு”, “வாழ்க பாரதம்” என்று முழங்கியுள்ளார்.


படிக்க: சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | துண்டறிக்கை!


‘நாகாலாந்தில் போராளிக் குழுக்களை ஒடுக்கி, அமைதியை நிலைநாட்டிய தீரர்’ என்று சித்தரிக்கப்பட்ட ரவியை “மூச்ச்..” என்று அடக்கிப் பணிய வைத்திருக்கிறது தமிழ்நாடு. ரவி ஆளுநராக பதவியேற்ற காலந்தொட்டு, அவரது தமிழ்நாட்டு அரசு விரோதப் போக்கை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால், அதற்கெல்லாம் ரவி தன்னிலை விளக்கம் கொடுத்ததில்லை. பாசிசத் திமிரோடுதான் நடந்துவந்திருக்கிறார். அப்படிப்பட்ட ரவியை மண்டியிடச் செய்திருப்பதென்பது முக்கியமான விசயமாகும்.

ஆனால், இதுவொரு தொடக்கம்தான். தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அதன்மீது அமர்ந்திருக்கிறார் ஆர்.என்.ரவி. ஏழுதமிழர் விடுதலை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட மசோதா மீது கடைசிவரை முடிவெடுக்காமல் வஞ்சகமாகச் செயல்பட்டார்; நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதற்காக நடந்த போராட்டங்கள்தான் எத்தனை; ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்காமல் இன்றுவரை இழுத்தடிப்பதால், உயர்ந்துகொண்டே இருக்கிறது பிணங்களின் எண்ணிக்கை.

எனவே, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் ஏவியுள்ள இந்த உளவாளியை விரட்டியடிக்காமல், Get-out-Ravi என்ற முழக்கத்திற்கு செயல்வடிவம் கொடுக்காமல், நமது வெற்றி முழுமையடையாது!

ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு கொடுக்கும் அடி என்பது, ‘நம்மை எதிர்க்கும் வலிமையுள்ள சக்திகள் எதுவும் அரசியல் அரங்கில் இல்லை’, ‘எவ்வித தங்குதடையும் இல்லாமல் இந்துராஷ்டிரத்தை நோக்கி முன்னேறிவிடலாம்’ என்று கருதிக் கொண்டிருக்கிற ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு விடுக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பாசிசப் படையெடுப்பின் உளவாளிகளான ஆர்.என்.ரவிகள், கேரளா, தெலுங்கானா, மேற்கு வங்கம், டெல்லி என எதிர்க்கட்சிகள் ஆளும் மற்ற மாநிலங்களிலும் உள்ளார்கள்; அங்கெல்லாம் ஆளுநர் என்ற பெயரில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக குடைச்சல் கொடுத்துவருகிறார்கள். தமிழ்நாடு அடிக்கும் அடி, மற்ற மாநில மக்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும்; பாசிச எதிர்ப்பு சக்திகளுக்கு ஊக்கமளிக்கும். எனவே, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வை எதிர்த்து தமிழ்நாட்டில் களமாடும் அனைத்து புரட்சிகர, ஜனநாயக சக்திகளுக்கும் உளவாளி ரவியை விரட்டியடிப்பதுதான் உடனடிக் கடமையாக இருக்க வேண்டும்!

பானு

ஹிஜாப் விவகாரம்: ஈரான் அரசுக்கு எதிராக போராடும் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள்! | தோழர் அமிர்தா வீடியோ

ரானில் மாணவிகள் பள்ளிகளுக்குச் செல்லக்கூடாது என்பதற்காக, ஹிஜாபை எதிர்த்து போராடினார்கள் என்பதற்காக பள்ளி மாணவிகள் பழிவாங்கப்படுகிறார்கள். 650-ம் மேற்பட்ட மாணவிகளுக்கு விசம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோம் மற்றும் போருஜெர்ட் நார்களில் உள்ள பள்ளிகளில் இச்சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

ரசாயன வாயுவால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, உமிழ் நீர் அதிகமாக சுரப்பது, குடல் பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மாசா அமினி-இன் மரணத்தை தொடர்ந்து நடைபெற்ற ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்குபெற்றதற்காக தற்போது மாணவிகள் பழிவாங்கப்படுகிறார்கள்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நெல்லை: சுரண்டை கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை – மாணவர்கள் போராட்டம்!

சுரண்டை கல்லூரி பிஎச்டி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த
பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் போராட்டம்!

சுரண்டை கல்லூரியில் ஆய்வு மாணவி ஒருவருக்கு தொடர்ந்து ஆறு மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த வணிகவியல் துறைத்தலைவர் அஜித் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து நேற்று(02.03.23) போராட்டம் நடத்தினர்.

பெண் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை என்பது பள்ளி, கல்லூரிகளில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க வேண்டிய பொறுப்பு சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்திற்கும், அரசுக்கும் உள்ளது. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதாக இல்லை.

கடந்த ஆறு மாதங்களாக பேராசிரியர் தொல்லை தந்தும் மாணவியால் அதை கல்லூரி நிர்வாகத்திடம் எடுத்துச் செல்ல முடியாத அளவுக்குதான் அந்த கல்லூரி நிர்வாகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் போராட்டம் நடத்திய பின்னர்தான் அரசு இயந்திரமும் பெயரளவில் செயல்படுகிறது.

மாணவர்கள் என்றால் பொறுப்பு இல்லாமல் திரிபவர்கள் என்ற எண்ணத்தை இது மாதிரியான போராட்டங்கள் உடைத்தெறிகின்றன. இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் ஜல்லிக்கட்டு வரை மாணவர்கள் பங்கெடுத்து கொண்ட போராட்டம்தான் சமுதாயத்தில் குறிப்பிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

சமீபத்தில் நெல்லை டவுண் ஆர்ச் பள்ளிக்கு அருகில் உள்ள இடத்தை, சமூக விரோதிகள் டாஸ்மாக் போல பயன்படுத்திக் கொண்டிருக்கையில் போலீசும், மாவட்ட நிர்வாகமும் அதை தடுக்காத போது, பள்ளி மாணவர்கள் திரண்டு வந்து டவுண் பொருட்காட்சி திடல் அருகே சாலை மறியல் செய்துதான் நடவடிக்கை எடுக்க வைத்தனர். மாணவர்களுக்கு சமூக உணர்வும், சமூக அக்கறையும் இருக்கிறது என்பதை இம்மாதிரியான போராட்டங்கள் நமக்கு உணர்த்துகிறது.

ஆனால் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் தெரிந்தே மாணவர்களை ஏமாற்றுவதை நாம் அறிய முடிகிறது. கல்லூரி முதல்வர் சின்னத்தாய் கூறுகையில், கல்லூரி முதல்வர் தலைமையில் நடந்த ஆட்சி மன்ற கூட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை அறிக்கையின் படி, சம்பந்தப்பட்ட பிரச்சினைக்குரிய பேராசிரியரால் கல்லூரியின் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது என்கிற அடிப்படையில், அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற முடிவை தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இது மாணவர்கள் திரண்டு வந்து வெளியில் போராட்டம் நடத்தியதால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்கிற போலீசின் அறிக்கையை மறுவாசிப்பு செய்வது போலவே உள்ளது. விசயம் என்னவோ மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை தந்தார் என்பதே.

இந்த அடிப்படையில் இருந்து விசாரணையை தொடங்குவது, இதை பாலியல் வன்முறை புகாராக பதிவு செய்வது என்று இல்லாமல், இதை வெறுமனே சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்பது தெரிந்தே பிரச்சினையை மடை மாற்றுவதாக உள்ளது.

இது மாதிரியான பிரச்சினைகளுக்கு மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் அனைவரும் அமைப்பாக திரண்டால்தான் தீர்வு காண முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.

மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்
9385353605

சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | காணொலி

இது, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்.
சித்தர்கள், வள்ளுவரும் வள்ளலாரும் வாழ்ந்த மண்.
பெரியார் தன்மான படை வளர்த்த மண்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என உலகுக்கு
உரைத்த மண்.
கீழடியும் ஆதிச்சநல்லூரும் நமது மரபு.

பூலித்தேவன், ஒண்டிவீரன், கட்டபொம்மன்,
வேலுநாச்சியார், மருதுசகோதரர்கள், சின்னமலை,
சுந்தரலிங்கனார், அழகுமுத்துக்கோன்,
வ.உ.சி., சிங்காரவேலர்…
உறுதிமிக்கது நமது விடுதலைப் போராட்ட உணர்வு.

தனித்தியங்கும் தமிழ்நாட்டின் இம்மரபுகள்தான்,
ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்குக் கொடுங்கனவு.

தொழிலாளர் வர்க்கம் தனது வரலாற்றுக் கடமையை
நிறைவேற்றிய போராட்ட தினமான
மே தினத்தில் உறுதியேற்போம்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானி-மோடி கூட்டுக்களவானிதனம் அம்பலம் || கேலிச்சித்திரம்

ஹிண்டன்பர்க் அறிக்கையின் மூலம் அதானியின் கோடிக்கணக்கான கொள்ளை அம்பலமானது… மோடி அரசு நாட்டின் ஒட்டுமொத்த தொழிற்துறைகளையும் அதானி-அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு படையல் வைத்திருக்கிறது. உழைக்கும் மக்களையும் இயற்கைவளங்களையும் சுரண்டியே உலக பணக்காரன் தரவரிசையில் முன்னிலைக்கு வந்திருக்கிறார் அதானி.

ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானி-மோடி அரசு நிறுவனங்களின் கூட்டுகளவானிதனம் அம்பலம்…

கேலிச்சித்திரம்: தோழர் அன்பு
மக்கள் அதிகாரம், கோவை மண்டலம்
9488902202

சிலிண்டர் விலை உயர்வு: உழைக்கும் மக்களை சுரண்டும் மோடி அரசு! | தோழர் அமிர்தா | வீடியோ

ன்றைய தேதியில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 77.69 டாலர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 112.40 டாலர். 2022 -ம் ஆண்டு மார்ச் மாதம் சமையல் எரிவாயு உருளையின் விலை 965.00 ரூபாய்.

கடந்த ஆண்டு ஒப்பிடும்போது கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 35 டாலர் குறைந்திருக்கிறது. ஆனாலும் சமையல் எரிவாயு உருளை விலை கடந்த ஓராண்டில் அதிகரித்து இருக்கிறது.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

Shraddha murder case: Recolonization Destroying Human Values!

On November 14, a news spread on the internet about a man named Aftab, who killed the woman he was in love with in Delhi and cut her body into 35 pieces and kept it in a refrigerator. While many were shocked to learn about the incident, a considerable number of people went through the incident in jest. In order to understand those who have passed by, it is necessary to first understand Aftab and the society.

Brutal murderer Aftab

Shraddha, a 27-year-old woman, was in a ‘living together’ relationship with her boyfriend in Delhi a few months ago. A friend of hers said that he could not get in touch with Shraddha and that it had been several months since he spoke to her. Shraddha’s father Vikas Walkar became suspicious of the fact that her social media accounts were also not in use and lodged a missing person’s complaint with the police.

During the investigation, it was revealed that Shraddha had been brutally murdered by her boyfriend six months ago. Each of Aftab’s statements during the police investigation on ‘how he killed Shraddha’ makes our blood run cold.

Aftab and Shraddha had met in 2019 through the ‘Bumble’ dating app. Following this, Shraddha came to Mumbai and got a job in Aftab’s company. A few months later, they decided to move in together. They took up a house in Mumbai and have been living together for the past three years.

On May 14, Aftab and Shraddha came to Delhi from Mumbai and rented a house. There have been frequent fights between the two, as Shraddha has repeatedly asked Aftab to marry her and he has refused to do so.

On the night of May 18, after a fight broke out between the two, Aftab sat on Shraddha’s chest and strangled her to death.


Also Read: Iran’s Anti-Hijab protests: A democratic war!


Aftab, who has committed a murder, is not at all disturbed. He has been searching throughout the night on Google to find out how to dispose Shraddha’s body, as he would get trapped if he buried her. After deciding to chop her body into pieces and dispose it, he slept in the same room that night, where Shraddha’s body was.

The next day, he bought a 300-litre refrigerator, black plastic bags, meat cleavers, and took Shraddha’s body to the washroom and chopped it into pieces. While chopping, he stopped in between and bought food on Zomato; ate it; and then started chopping it again. In his statement to the police, Aftab has said that it was not difficult for him to cut Shraddha’s body as he was already a cook.

He opened the tap and chopped off the body so that the noise wouldn’t be heard outside. As a result, the first 20,000 litres of water (about 35 buckets a day) that is supplied free of cost in the rented house ran out, and a further cost of Rs. 300 was charged that month.

He has chopped Shraddha’s body for two continuous days into 35 pieces in order to keep it in the refrigerator. To prevent stinking, he had cut her liver, intestines, etc., into pieces and thrown them into the forest that night itself; he then chopped out the other parts and put them in separate plastic bags and placed them inside the refrigerator. He burnt her face to prevent it from identifying and put it in the refrigerator; he even enjoyed watching it from time to time.

For 16 days in a row since then, he went for a walk at 2 a.m., and threw Shraddha’s body parts to the dogs in the surrounding town area. Moreover, he has thrown away many parts into the forest so that the animals will eat up.

During these days, food delivery workers, friends and women have come and gone to his house. But, no one knew that Shraddha’s body parts were in the house. Since it is summer, her body has started to rot quickly and started smelling. He has concealed the smell with incense sticks and room sprays. When friends came, he hid her body. Aftab has been running Shraddha’s social media accounts for a certain period of time so that no one gets suspicious.

Shraddha’s chopped body parts were in the same fridge where he kept food items like milk, vegetables and ice cream. But he has used them casually every day. He was alone in the house until he was arrested.


Also Read: Rishi Sunak: A hybrid form of Fascism!


Aftab met many women through the same ‘bumble’ dating app where he first saw Shraddha. He had brought another woman to the house and had sex with her while Shraddha’s disfigured body was still in the house.

But he did not feel guilty at all by any of this. When the truth was exposed and the police interrogated him, Aftab replied without any expression on his face. Police who interrogated Aftab said he slept peacefully throughout the night in the lock-up during interrogation.

Aftab confessed that he killed Shraddha because she had been asking him to marry her and said, “I had decided to kill Shraddha, a week before I killed her”.

Moreover, Aftab had hit her several times before this incident. In 2020, Shraddha had lodged a complaint with the police alleging that Aftab could kill her. A handwritten letter of hers has also been released.

Aftabs hidden inside us!

How can a man kill a woman who lived together with him in the same house for three years so brutally and remain without the slightest sense of guilt. This has shocked many. But what’s even more shocking is that many of us are able to get through it so easily.

The Shraddha murder case, which was posted on the social media pages of news organisations, was flooded with perverted comments. Comments like “You women asked for the rogue ones” were found in almost all the pages. Also, a lot of memes about Shraddha’s body in the refrigerator went viral. Many bourgeois liberal newspapers were shocked by this and reported that the human psyche has rotted.

While talking about this some college students, quickly slipped away from the news. Some expressed only the slightest sympathy for Shraddha. However, it was shocking that some people argued in favour of Aftab that “Aftab would have killed her at the heat of the moment, as he could not bear Shraddha’s torture”. In particular, it was women who spoke against Shraddha and embraced Aftab.

How are they able to accept Aftab? Aftab, who committed the brutal murder, passes by normally without any remorse. Having heard of that cruelty, the community also goes past Aftab without any hesitation. If this society is able to pass through Aftab, it means that there is an Aftab in everyone.

Aftab was not an individual. A representative of the society that is culturally deteriorating. There are many humans here who either fully or partially represent Aftab.

Recolonization destroying the human essence!

Many, who are looking for the reason for Aftab’s brutality, begin their search from him and end with him. But the question that how can a man kill the woman whom he loved and chop her body should begin from this society.

In the 1990s, India adopted the recolonizational policies of privatization-liberalization-globalization. Recolonization, viewed generally as an economic policy, also had a huge impact on politics and culture. Each and every human sense was transformed into a commodity. Especially in India, which already has a brahminical-patriarchal mindset, it is having barbaric consequences.

Aftab was a representative of humans who had been turned into barbarians by such recolonizational policies. Brought up entirely by capitalist degeneration, he used to watch a lot of web series on crime. One of them was the American crime series “Dexter”. He has confessed that Dexter instigated him to kill Shraddha. Apart from these, Aftab also had a variety of addictive habits.

Moreover, Aftab met Shraddha through a dating app. It is to be noted here that the government has not in any way banned these sex broker apps. Not only  by these apps, but the society is being degraded on a daily basis in many ways like video games, pornography, etc.

Aftab, who started loving Shraddha was not expecting a marital relationship; but a ‘living together’ relationship that was not obliged to any responsibility. That is, it is a relationship that is carried out solely for fulfilling sexual desires. However, Shraddha’s demand of marrying her and conversing with other women about this is against the principles of ‘living together’.

Aftab could not tolerate Shraddha violating the ‘norms’ of a culture he loves. That is why Aftab killed her without the slightest sense of guilt.


Also Read: Russia – Ukraine War: America’s Proxy War and the Danger of a World War


Aftab is not the only victim of this degenerative culture. The entire society is gradually becoming barbaric. Crimes are intensifying and becoming perverse. Rapes are evolving into gang rapes, burning and mutilation of the body. After Shraddha’s murder, there were two similar incidents of killing and chopping the body into pieces, were reported in Uttar Pradesh.

In the name of progressive, feminism, liberty, modernity, science and progress, recolonizational culture creates a society devoid of values. This means that, not only the human values gets eroded, but also the new generation is being transformed into cruel psychopaths. It creates worse qualities that don’t even exist among animals. Smartphones and the virtual world that comes with it separate humans from each other. It destroys the human nature of cohabitation.

Socialism is the only way to rescue the society and ourselves from this mess. It is only through the struggle to create that noble society, human values will be restored and recolonization shall be destroyed.

As a starting point, struggles against these sexual perversions must be carried out; public discussions should be held among the youth and students; we need to uphold the right human values against degradations such as alcohol and drugs, smartphone addiction, cinema degeneration and brahminical-patriarchal cultures. There should be protests against the media which are spreading such cultural degradation and against the State which is upholding it. The only solution is to involve ourselves in the social transformation through such struggles!

Thulipa

மக்களை வாட்டும் பொருளாதார நெருக்கடி: நேற்று – இலங்கை, இன்று – பாகிஸ்தான்!

மது அண்டை நாடான பாகிஸ்தானில் உணவு, எரிபொருள், மின்சாரம், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தத்தளித்து வருகின்றனர். உணவின்றி தவித்து வரும் அந்நாட்டு மக்களின் நிலையை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. கோதுமை மூட்டைகள் கொண்டு செல்லும் லாரிகளின் பின்னே நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஓடுகிறார்கள்; மோட்டார் வாகனத்தில் கோதுமை லாரியை வேகமாகத் துரத்திச் செல்கிறார்கள். கோதுமை வாங்கத் திரண்ட கூட்ட நெரிசலில் சிக்கி 5 அப்பாவி மக்களின் உயிர் பறிபோயுள்ளது. ஒரு மூட்டைக்காக அவர்கள் அடித்துக்கொள்ளும் காட்சிகள் நம்மை நிலைகுலையச் செய்கின்றன.

பாகிஸ்தானில் உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ காட்சி ஒன்றில், கோதுமை மூட்டையை எடுத்துக்கொண்டு ஓடும் ஒருவரிடமிருந்து, அம்மூட்டையைப் பிடுங்க நான்கு, ஐந்து பேர் முயற்சிக்கின்றனர். மூட்டையை வைத்திருப்பவரோ, அதனை மேலும் இறுகப்பற்றிக் கொண்டு கீழே விழுந்து வீறிட்டுக் கதறி அழும் காட்சி நமது நெஞ்சத்தை நடுங்கச் செய்கிறது. வீட்டில் பசியோடு தனக்காக காத்துக் கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு ஒரு மூட்டையாவது எடுத்துச் செல்லவேண்டும் என்ற பெற்றோர்களின் ஏக்கத்தின் வெளிப்பாடுதான் இத்தகைய அழுகையும் ஆவேசமுமாகும்.

பாகிஸ்தானில் உணவுப் பொருட்களின் விலை இதுவரை கண்டிராத உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஒரு கிலோ டீத்தூள் ரூ.1100, ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.150, ஒரு லிட்டர் பால் ரூ.140, ஒரு கிலோ சமையல் எண்ணெய் ரூ.480, ஒரு டசன் முட்டை ரூ.400 என விற்கப்படுகின்றன. உணவுப் பொருட்கள் மட்டுமல்லாது சமையல் எரிவாயு உருளையின் விலையும் ரூ.2,411 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டின் வடமேற்கு கைபர் பக்துன்வா எனும் பகுதியில், சமையல் எரிவாயு நிரப்பப்பட்ட பெரிய பிளாஸ்டிக் பைகளைச் சிறுவர்கள் எடுத்து செல்லும் காணொளி காட்சியினை சமூக வலைதளங்களில் காணமுடியும். எரிவாயு நிரப்பப்பட்ட அந்த பிளாஸ்டிக் பையில் சிறிய கீறல் விழுந்தாலும் மிகப்பெரிய விபத்து நேரிடும். எனினும் தட்டுப்பாடு காரணமாக சமையல் எரிவாயு உருளை கிடைக்காமல், கள்ளச்சந்தையில் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதால் வேறுவழியின்றி மக்கள் இத்தகைய ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானை இருள் கவ்வியுள்ளது. மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்க ஷபாஸ் ஷெரீப் அரசு பல கட்டுப்பாடுகளை தற்போது விதித்துள்ளது. மின்சார சேமிப்பு நடவடிக்கையாக வணிக வளாகங்கள், உணவகங்கள், திருமண மண்டபங்கள் அனைத்தையும் மாலைவேளையில் அதிக நேரம் திறந்து வைத்திருக்கக் கூடாது எனக் கட்டுப்பாட்டை விதித்துள்ளது. மின் கட்டுப்பாட்டு நடவடிக்கையால் மருத்துவமனைகள், பள்ளிகள் கூட செயல்பட முடியாத நிலை உள்ளது. அரசுத் துறைகளிலும் மின் பயன்பாட்டை 30 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது பாகிஸ்தான் அரசு. மின்சாரத் தட்டுப்பாட்டால் நாடாளுமன்றம் மூன்று நாட்கள் மூடப்பட்டது; செனட் செயலகம் சில நாட்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டது.


படிக்க: துருக்கி நிலநடுக்க மரணங்கள்: அரசு நிகழ்த்திய படுகொலையே!


மின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எரிபொருள் இறக்குமதிக்கு ஆகும் செலவான ரூ.6,200 கோடியை (பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில்) சேமிக்க முடியும் என்கிறது பாகிஸ்தான் அரசு. ஆனால், இதன் விளைவாக பல இடங்களில் 24 மணிநேரம் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டதால், தொழிற்சாலைகள் செயலிழந்து, உற்பத்தி நடக்காமல் முடங்கியது. இதனால், பாகிஸ்தான் 300 மில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்துள்ளது என்கின்றனர் செயற்பாட்டாளர்கள்.

அரசாங்கம் கடனில் தவிப்பதால் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியமான ரூ.2,500 கோடியும், அரசு ஊழியர்களுக்கான சம்பளமும் பல மாதங்களாக வழங்கப்படவில்லை. இதனால் ரயில்வே ஊழியர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலையிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய சிக்கனக் குழு, அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10 சதவிகிதத்தையும், அமைச்சர்களின் செலவீனங்களில் இருந்து 15 சதவிகிதத்தையும் வெட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மேலும், அமைச்சர்களின் எண்ணிக்கையும், பிரதமரின் உதவியாளர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. பொருளாதார நிலையை மீட்க, அமெரிக்காவில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகச் சொத்தினை பாகிஸ்தான் அரசு ஏலம் விட்டுள்ளது.

2021 டிசம்பரில் 12.3 சதவிகிதமாக இருந்த பணவீக்கம், 2022 டிசம்பரில் 24.5 சதவிகிதமாக இரட்டிப்பாகியுள்ளது என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. இது 47 ஆண்டுகளாக பாகிஸ்தான் சந்தித்திராத நிலைமை. கடந்தாண்டு அந்நாட்டைப் புரட்டிப் போட்ட வெள்ளம் இந்நிலையைத் தீவிரமாக்கியது. மேலும், 2023-ஆம் நிதியாண்டில் 23 சதவிகிதம் வரை கூடுதலான பணவீக்கத்தை பாகிஸ்தான் சந்திக்கப் போவதாகவும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

000

பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் 22.67 சதவிகிதம் பங்காற்றுகிறது. அந்நிய செலாவணி போன்றவற்றிற்கு பெரிதும், ஜவுளி ஏற்றுமதியைச் சார்ந்திருக்கிறது. அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பாகிஸ்தானில் இருந்து ஆடைகள், போர்வைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஆனால், 2021-ஆம் ஆண்டு 2.9 மில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி தற்போது 18.3 சதவிகிதத்திற்கு குறைந்துள்ளது. ஜவுளித் தொழிலுக்குத் தேவையான பருத்தி உள்ளிட்ட மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்திருப்பதால், வெளிநாடுகளில் இருந்து சரக்குக் கப்பல்களில் வந்திறங்கியிருக்கும் கண்டெய்னர்கள் எடுக்கப்படாமல் கராச்சி துறைமுகத்திலேயே தேங்கியிருக்கின்றன. பருத்தித் தட்டுப்பாடு காரணமாக பல ஜவுளி ஆடைத் தொழிற்சாலைகளின் உற்பத்தியும் முடங்கி, 7 இலட்சம் ஜவுளி ஆடைத் தொழிலாளர்களின் வேலை பறிபோயுள்ளது.

ஏற்றுமதி குறைந்திருக்கும் இதேநேரத்தில் இறக்குமதி அதிகரித்துள்ளது. கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் 23 மில்லியன் ஹெக்டேர் நிலம் நாசமாகி உணவு, மருந்துகள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், நிதிப் பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்கள் கராச்சி துறைமுகத்தில் தேங்கிக் கிடைக்கின்றன.

ஜனவரி 27-ஆம் தேதி, பாகிஸ்தானின் பொருளாதார நிலை குறித்து திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில், இரும்பு மற்றும் ஜவுளி ஏற்றுமதியாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில், “ஏற்றுமதி சார்ந்த நடவடிக்கைகளே நமது பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்கக்கூடிய மருந்து” எனவும், “பொருளாதாரப் புதைகுழியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க ஏற்றுமதிக்கான அவசர நிலையை அறிவிக்க வேண்டும்” எனவும் அமைச்சர் பேசியிருக்கிறார். ஆனால், தற்போது பாகிஸ்தானின் கையில் இருக்கும் 4.3 பில்லியன் டாலர் அந்நிய செலாவணியைக் கொண்டு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே திவால் நிலையில் இருந்து பாகிஸ்தான் தப்பித்திருக்க முடியும்.

தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க பிரதமர் ஷபாஸ் ஷெரிப், உலக நாடுகளின் உதவியை நாடி வருகிறார். இந்தியாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் நிலையில் இருக்கிறது பாகிஸ்தான். அமெரிக்கா, சவூதி அரேபியா, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவுவதாகத் தெரிவித்திருக்கின்றன. இருந்தாலும் தற்போது வழங்கப்பட்டிருக்கும் நிதி உதவியைக் கொண்டு ஜூலை மாதம் வரை மட்டுமே சமாளிக்க முடியும். ஆனால் இந்த நிதியாண்டை சமாளிக்க பாகிஸ்தானுக்கு மேலும் 30 பில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது. ஏற்கனவே கடனில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு கடன் கொடுத்து மீண்டும் கடனைத் திரும்பப் பெற முடியும் என்ற நம்பிக்கையில்லாத காரணத்தினால் உலக நாடுகள் கைவிரித்துவிட்டன. எனவே பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது.


படிக்க: பாகிஸ்தான் பொருளாதார, சூழலியல் நெருக்கடி: மனித குலத்தின் எதிரி ஏகபோக மூலதனம்!


ஆனால், ஐ.எம்.எஃப். வழக்கம் போல இந்த முறையும் கடனோடு சேர்த்து நிபந்தனைகளையும் விதித்து பாகிஸ்தானை இன்னும் படுகுழிக்குத் தள்ளுகிறது. 2019-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு ஆறு பில்லியன் டாலர் கடன் தர ஐ.எம்.எஃப். ஒப்புக்கொண்டது. இது கடந்தாண்டு பாகிஸ்தானில் வெள்ளம் வந்தபோது ஏழு பில்லியனாக உயர்த்தப்பட்டது. ஐ.எம்.எஃப். இடமிருந்து பாகிஸ்தான் நிதியைப் பெற எரிபொருள், மின் கட்டணம், எரிவாயு விலையை உயர்த்த வேண்டும்; வரிகளை அதிகரிக்க வேண்டும்; மருத்துவம், சுகாதாரம், கல்வி போன்றவற்றிற்கு வழங்கிவரும் மானியங்களை நிறுத்த வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளை பாகிஸ்தான் மீது விதித்தது. ஆனால், இந்த உத்தரவை பாகிஸ்தான் சரியாக நடைமுறைப்படுத்தாததால் ஐ.எம்.எஃப். ஒரு பில்லியன் டாலரை தராமல் இழுத்தடித்து வந்தது.

இந்நிலையில், ஜனவரி 27-ஆம் தேதி ஐ.எம்.எஃப் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்தவுடனேயே வரலாறு காணாத அளவுக்கு டாலருக்கு நிகரான பாகிஸ்தான் நாணயத்தின் மதிப்பு ஒரே நாளில் ரூ.255.43 ஆக வீழ்ச்சியடைந்தது. இது கடந்த இருபது ஆண்டுகளில் பாகிஸ்தான் சந்தித்திராத வீழ்ச்சியாகும். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிக்க ஐ.எம்.எஃப். இடமிருந்து மேலும் கடன் பெறுவது என்பது கத்திக்குத்துக்கு பேண்டேஜ் போடுவது போன்றுதான். அதனால் காயம் ஆறாது, மேலும் சீழ்ப்பிடிக்கவே செய்யும் என்பதையே இது நிரூபிக்கிறது.

நேற்று இலங்கை, இன்று பாகிஸ்தான், நாளை இந்தியா அல்லது வேறு நாடு என்று ஒவ்வொரு நாடுகளும் ஐ.எம்.எஃப்.பின் கடன் வலையில் சிக்கவைக்கப்பட்டு, அதன் சுமை முழுவதும் அந்நாட்டின் உழைக்கும் மக்களின் மீது திணிக்கப்படுகிறது. இலங்கையைப் போல பிற நாடுகளிலும் மக்கள் எழுச்சி வந்துவிடுமோ என்ற ஏகாதிபத்தியங்கள் அஞ்சுகின்றன. அதனால், கடன் உதவி கொடுப்பது போல நாடகமாடுகின்றன. இந்தக் கடன் உதவிகள் என்பவையெல்லாம், ஏழை நாடுகளை ஒட்டச் சுரண்டும் ஏகாதிபத்தியச் சுரண்டல் என்பதை அனைத்து ஆளும் வர்க்கங்களும் மறைக்கின்றன.

இலங்கையைப் போலவே இந்தியாவிற்கு முன்னதாகவே, தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட நாடுதான் பாகிஸ்தான். அதன் மூலம் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் வலையில் சிக்கியிருக்கிறது. இது, பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்றாகும்.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னதாக சீனாவுடனான பாகிஸ்தானின் நெருக்கம் வளர்ந்து வந்தது. சீனாவின் பட்டுப்பாதை என்ற மிகப்பெரும் பொருளாதாரத் திட்டத்தின் ஒரு அங்கமாக, பாகிஸ்தான் வழியாக சீனா-பாகிஸ்தான் பொருளாதாரத் தாழ்வாரம் (CPEC) என்ற பெரும் பொருளாதாரத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இருப்பினும் அமெரிக்காவுடனான அனைத்து உறவுகளையும் பாகிஸ்தான் தொடர்ந்து வந்தது.


படிக்க: புரட்சிகர கட்சிக்காக ஏங்கும் இலங்கை மக்கள் போராட்டம் !


இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று, ரசிய-உக்ரைன் போர் போன்றவை காரணமாக பாகிஸ்தானின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்தித்துத் தேக்கம், விலையேற்றம், வேலையின்மை போன்றவை அதிகரித்துள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவைப் பலவீனப்படுத்தி, இலங்கையைப் போலவே தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள பாகிஸ்தானை தனது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கிறது அமெரிக்கா.

ஐ.எம்.எஃப்.பின் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயக் கொள்கையைப் பின்பற்றியதால் உருவான இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பதிலாக, மீண்டும் ஐ.எம்.எஃப்.பின் கடன் வலையில் பாகிஸ்தான் சிக்குவது என்பது அந்நாட்டை அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியாக்கிவிடும். மாறாக, ஏகாதிபத்திய நாடுகளைச் சார்ந்து வாழும் பொருளாதாரக் கட்டமைப்பையும் அதனைத் தாங்கிப் பிடிக்கும் அரசுக் கட்டமைப்பையும் தூக்கியெறிந்து உழைக்கும் மக்கள் அதிகாரத்தைப் படைக்கும் உண்மையான ஜனநாயகத்தைப் படைக்கும் பாதையில் பாகிஸ்தான் உழைக்கும் மக்கள் முன்னேறுவதைத் தவிர வேறு வழியில்லை. அத்தகைய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பது நமது கடமையாகும்.

வெண்பா

ஜே.என்.யூ மாணவர்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி குண்டர்கள்

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ஏ.பி.வி.பி என்ற ஆர்.எஸ்.எஸ் மாணவ குண்டர்படை இடதுசாரி மற்றும் முற்போக்கு மாணவர்களின் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி மும்பையில் சாதியபாகுபாடு காரணமாக தற்கொலை செய்துகொண்ட ஐ.ஐ.டி மாணவர் தர்ஷன் சோலங்கியின் மரணத்திற்கு நீதிகேட்டு நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களில் பல்வேறு மாணவர் அமைப்பினர் ஒருங்கிணைந்து மிகப்பெரிய பேரணிகளை நடத்தினர்.

அதன் ஒரு பகுதியாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 30-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள், “ரிசர்வேசன் கிளப்’’ என்ற பெயரில் பெரியாரின் கருத்துகள் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளனர்.

அதன்பின்னர் இரவு 9 மணியளவில் அங்குள்ள மாணவர் செயற்பாட்டு அரங்கில் (TEFLAS) ‘100 பூக்கள்’ என்ற மாணவர் மன்றத்தின் சார்பில் ‘ஜானே பி தோ யாரோ’ என்ற திரைப்படம் ஒன்று திரையிடுவதாக திட்டமிட்டுள்ளனர்.

அதையறிந்து அங்கு வந்த ஆர்.எஸ்.எஸ் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனப்படும் ஏ.பி.வி.பி-யைச் சேர்ந்த கும்பல், தமிழ்நாட்டு மாணவர்கள் உட்பட முற்போக்கு பகுத்தறிவு பேசக்கூடிய அனைவரின் மீதும் கொடூரத்  தாக்குதலை நடத்தியது.

அத்துடன் நிறுத்தி கொள்ளாமல் மாணவர் செயற்பாட்டு அரங்கத்தில் இருந்த காரல் மார்க்ஸ், லெனின், பெரியார், பூலே உள்ளிட்ட தலைவர்களின் படங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.


படிக்க: டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மார்க்ஸ், லெனின், பெரியார், பூலே படங்கள் உடைப்பு! | மக்கள் அதிகாரம் கண்டனம்


இந்த ஏ.பி.வி.பி குண்டர்களின் கொடூர தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 15-க்கும் அதிகமான மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். குறிப்பாக, ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு மருத்துவப்பாடத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த நாசர் முகம்மது மொய்தீன், கனமான பொருளால் தாக்கப்பட்டு தலையில்  படுகாயம் அடைந்துள்ளார். அப்போது அங்கிருந்த சக மாணவர்கள் அவரை ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளனர். ஆனால் ஏ.பி.வி.பி கும்பலானது ஆம்புலன்சை போகவிடாமல் வழி மறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்குள் புகுந்து அநாகரிகமாக பேசி மாணவர்களுக்கு எச்சரிக்கை மற்றும் கொலை மிரட்டல்கள் விடுத்துள்ளனர். இப்படி இந்த காவி பயங்கிரவாதிகளின் தாக்குதல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சரியாக கூறவேண்டுமெனில் இந்துராஷ்ட்ரம் என்பது இப்படித்தான் இருக்கும் இங்கு முற்போக்கு இடதுசாரிகளுக்கு துளி அளவும் இடமில்லை ஏதாவது பேச முற்பட்டால் இதுதான் கதி என்று நமக்கு எச்சரிக்கை விடுகிறார்கள் காவி பாசிஸ்ட்டுகள்.

இதுபோன்ற கொடூர தாக்குதல் நடவடிக்கைகள் இன்று நேற்று உருவானதல்ல ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள உட்கல் பல்கலைக்கழகத்தில் ‘இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்தியக் கல்விக் கொள்கை’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அக்கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட ஜே.என்.யூ பேராசிரியர் சூர்ஜித் மஜும்தார் அவர்கள் வரலாற்று திரிபு குறித்தும் புதிய கல்விக் கொள்கை தொடர்பான எதிர்மறை அம்சங்கள் குறித்தும் விளக்கி பேசிக்கொண்டிருக்கும் வேளையில் அவர் உரையை தடுக்கும் நோக்கத்துடன் ஏ.பி.வி.பி கும்பல்படையின் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட தொடங்கினர். அப்போது அவர்களிடம் சென்று அமைதியாக இருங்கள் தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்த விடுங்கள் என்று கூறிய பேராசிரியர்கள் மற்றும் நிகழ்ச்சி  ஒருங்கிணைப்பாளர்கள், கலந்துகொண்ட  மாணவர்கள் என அனைவரின் மீதும் ஏ.பி.வி.பி காவி குண்டர்கள் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக, தாக்குதலில் ஈடுபட்ட ஏ.பி.வி.பி குண்டர்படையை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டியது அது மாணவர் படை அல்ல காவி கும்பல்களின் அடியாட்படை.

இதைபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லி பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்கு வெளியில் சமூகசெயற்பாட்டாளர் சாய்பாபாவின் மீது புனையப்பட்ட பொய் வழக்கிற்கெதிராகவும் அவரை சிறையில் இருந்து விடுவிக்ககோரியும் பிரச்சாரம் செய்த முற்போக்கு இடதுசாரிசிந்தனை கொண்ட மாணவ/மாணவிகள் மீது ஏ.பி.வி.பி குண்டர்படை கற்கள், செங்கல்கள், லத்திகள் மற்றும் கம்பிகளால் கடுமையாக தாக்கியுள்ளது. பலத்த இரத்த காயங்களை ஏற்படுத்திய அக்கும்பல் அங்கிருந்த அனைத்து மாணவர்களையும் வெளிப்படையாக எச்சரித்துச்சென்றது.


படிக்க: டெல்லி ஜே.என்.யூ.வில் தமிழ்நாட்டு மாணவர்களைத் தாக்கிய, ஏபிவிபி கும்பலின் கொட்டத்தை அடக்குவோம்!


லக்னோ பல்கலைக்கழகத்தில் ரோகித் வெமுலாவின் நினைவு தினத்தையொட்டி கல்லூரி வளாகத்தில் AISA உட்பட பல்வேறு மாணவர் அமைப்புகள் ஒருங்கிணைந்து ஒரு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தனர். அந்த நிகழ்ச்சியில் ரோகித் வெமுலாவிற்கான நீதிகேட்டு அணிவகுப்பு ஒன்றையும் நடத்தினர். இந்த பேரணியை தொடக்கத்தில் இருந்தே தடுப்பதற்கான முயற்சிகளை எடுத்த வந்த கல்லூரி நிர்வாகம் ஏ.பி.வி.பி குண்டர்படையை ஏவி விட்டுள்ளது. “ரோகித் வெமுலா வாழ்க” என்று முழக்கமிட்டு சென்ற மாணவர்களுக்கு எதிராக “ஜெய் ஸ்ரீராம்” என்று முழங்கி கொண்டு மாணவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தினார்கள் ஏ.பி.வி.பி குண்டர்கள்.

சில வாரங்களுக்கு முன்பு குஜராத் கலவரங்கள் குறித்தான “இந்தியா: மோடி கேள்வி” என்ற ஆவணப்படம் ஒன்றை பிபிசி தொலைகாட்சி நிறுவனம் வெளியிட்டது. அந்த ஆவணப்படம் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் இந்துமதவெறியர்களின் முகத்திரையை உலகிற்கு கிழித்து காட்டியது.

இந்த ஆவணப்படத்தை அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும், இடதுசாரி மாணவர்களும் தங்களுக்கு வாய்ப்பான இடமான  கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மற்றும் மக்கள் கூடும் பொது இடங்கள் என பல்வேறு இடங்களில் பல்வேறு வகைகளில் திரையிடல் செய்தனர்.

இந்த திரையிடல் தங்களுக்கு எதிரானது தங்களை இழிவுபடுத்த கூடியது என்று கூறிக்கொண்டு ஆவணப்படத்தை திரையிடும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மீது பெரும் தாக்குதலை தொடுத்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.

அந்த வகையில் ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் தங்களுடைய கல்லூரி வளாகத்தில் முற்போக்கு சிந்தனைகொண்ட மாணவர்களை அணிதிரட்டி ஆவணப்படத்தை திரையிட முயன்றபோது கல்லூரி நிர்வாகம் மின்இணைப்பை துண்டித்து காவிபயங்கிரவாத கும்பலுக்கு ஆதரவாக கைக்கோர்த்துக் கொண்டது.

மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் எந்த திரையிடலுக்கும் அனுமதியளிக்க முடியாது என்று கல்லூரி நிர்வாகம் மாணவர்களை எச்சரித்தது. இந்த வேளையில்தான் முற்போக்கு ஜனநாயக சிந்தனை கொண்ட மாணவர்கள் மற்றும் இடதுசாரி சிந்தனையாளர் திரையிடலுக்கு மாற்றாக தங்களுடைய மொபைல் போன்கள் மூலம் அந்த ஆவணப்படத்தை பகிர்ந்து அனைவரும் கூட்டமாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாத ஏ.பி.வி.பி குண்டர் படை மாணவர்கள் மீது கற்களை வீசி கொடூர தாக்குதலில் ஈடுபட்டது. பின்னர் தாக்குதலுக்குள்ளான நபர்கள் இணைந்து கல்லூரி நிர்வாகத்திற்கெதிராகவும் ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பிற்கெதிராகவும் கண்டன முழக்கமிட்டனர்.

இவ்வாறு அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளையும், இடதுசாரி சிந்தனையாளர்களையும் தொடர்ந்து தாக்கியும் மிரட்டியும் வரும் காவி பாசிச ஏ.பி.வி.பி ரவுடி கும்பலை அனைத்து கல்லூரி – பல்கலைக்கழகளிலும் தடைசெய்ய வேண்டும்.

டேவிட்

திரிபுரா மாடல் தேர்தல் வன்முறை : பாசிஸ்டுகள் கற்றுத்தரும் பாடம் என்ன?

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பை ஒன்றிய தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி 18 அன்று வெளியிட்டது. பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ள திரிபுராவில், கடந்த 2018 ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதல் தொடர்ச்சியாக வன்முறைகளில் ஈடுபட்டு எதிர்க்கட்சிகளை முடக்கி வருகிறது. இந்நிலையில், “வன்முறையில்லா தேர்தல்” என்பதே இலக்கு என அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியான சில மணிநேரத்திற்குள்ளாகவே எதிர்க்கட்சிகள் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தி, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பைக் கால்தூசுக்குச் சமமாகக் கூட மதிக்கவில்லை என்பதை நிரூபித்திருக்கிறது பாசிச பா.ஜ.க கும்பல்.

மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள மஜிலிஸ்பூர் தொகுதியில் இரு சக்கரவாகனப் பேரணி சென்ற காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியது பா.ஜ.க குண்டர்படை. இது மட்டுமின்றி, “சச்சிந்திர லால் காலனி, மோகன்பூர், ரணீர் பஜார், பிரித்தா நகர் என பேரணி சென்ற பிற இடங்களிலும் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. மேலும், உதய்பூரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கிறது” என்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சுதீப் ராய் பர்மன். இத்தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டது மஜிலிஸ்பூர் சட்டமன்ற உறுப்பினரும், திரிபுரா மாநில தகவல் மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சருமான சுஷாந்த சௌத்ரி தான் என்று குற்றஞ்சாட்டுகிறார், பர்மன்.

இத்தாக்குதல்களில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும், திரிபுரா மாநிலத் தேர்தல் பொறுப்பாளருமான அஜய் குமார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கோபால் சந்திர ராய் உட்பட பலர் தாக்கப்பட்டனர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இத்தாக்குதல் தொடர்பாக 8 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும், தேர்தல் பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி 3 போலீசுதுறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்திருக்கிறது தேர்தல் ஆணையம். கடந்த 2018 முதலாக, பா.ஜ.க நடத்தி வரும் அத்தனை வன்முறைகளையும் திரிபுரா போலீசு வேடிக்கை பார்த்து வருவதாக சி.பி.எம். கட்சி தொடர்ந்து கூறி வரும் நிலையில், துணை ராணுவத்தினர் முன்னிலையில் தான் இத்தாக்குதல்கள் நடந்தன என்றும், திரிபுரா போலீசுதுறை கைகட்டி வேடிக்கைப் பார்ப்பதாகவும் காங்கிரஸ் கட்சியினர் தற்போது குற்றம் சாட்டியுள்ளனர்.

உதய்பூரில் சி.பி.எம். கட்சியினரைக் கடுமையாகத் தாக்கியதோடு, கட்சி அலுவலகத்திற்கும் தீ வைத்துள்ளது பா.ஜ.க கும்பல். தெற்கு திரிபுராவிலும், ஜிரானியாவில் உள்ள எஸ்.என் காலனியில் சி.பி.எம் முன்னாள் அமைச்சர் மாணிக் டே கலந்துகொண்ட கூட்டத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. மேற்கு திரிபுராவில் சி.பி.எம் கட்சி அலுவலகம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது. மேலும், தலாய் மாவட்டத்தில் காரில் வந்து கொண்டிருந்த திப்ர மோத்தா கட்சியின் ஊழியரான பிரனஜித் நமசுத்ரா கொலை செய்யப்பட்டிருக்கிறார்.


படிக்க: குஜராத் மாடல் அரதப் பழசு ! உ.பி. மாடல் தான் புத்தம் புதுசு !


எதிர்க்கட்சிகளின் மீதான பா.ஜ.க குண்டர்களின் தாக்குதலைக் கண்டித்து காங்கிரஸ், சி.பி.எம் உள்ளிட்ட ஏழு கட்சிகள் சார்பில், “தேர்தல் வன்முறைகளை நிறுத்து”, “என் ஓட்டு என் உரிமை” போன்ற முழக்கங்களுடன் கடந்த ஜனவரி 21 அன்று பேரணி நடத்தப்பட்டது. பேரணிக்குப் பிறகு, மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து பா.ஜ.க கட்டவிழ்த்து விட்டுள்ள தேர்தல் வன்முறைகள் குறித்து இக்கட்சிகளின் தலைவர்கள் முறையிட்டுள்ளனர்.

திரிபுராவில் பா.ஜ.க ஆட்சிக்கு வரும்வரை மதக்கலவரங்களோ, தேர்தல் வன்முறையோ திரிபுரா வரலாற்றில் நடைபெற்றதில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க சங்கப் பரிவாரக் கும்பல்கள் திரிபுராவில் காலூன்றிய பிறகு திரிபுராவின் நிறம் மாறியிருக்கிறது, மதக்கலவரங்களும், தேர்தல் வன்முறைகளும் அதிகளவில் நடைபெறுகின்றன. குறிப்பாக 2018 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போதுதான் திரிபுராவில் முதன்முறையாக தேர்தல் வன்முறை அரங்கேறியது. அச்சமயத்தில் மட்டும், தேர்தல் ஆணைய புள்ளி விவரத்தின்படி 370 புகார்கள் தேர்தல் வன்முறையை ஒட்டி பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

2018 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தொடங்கிய தேர்தல் வன்முறையானது, 2021-இல் நடந்த திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் உச்சநிலையை அடைந்தது. திரிபுரா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவது, எதிர்க்கட்சி வேட்பாளர்களை மிரட்டி வாபஸ் வாங்கச் செய்வது, எதிர்க்கட்சியினர் அலுவலகங்கள் மற்றும் அவர்களது வீடுகளில் புகுந்து தாக்குதல் நடத்துவது, மக்களை மிரட்டுவது, ஓட்டுப் போடவிடாமல் தடுப்பது என ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காவிக் கும்பலின் தேர்தல் வன்முறை கோரத் தாண்டவமாடியது. மொத்தமுள்ள 334 இடங்களில் 122 இடங்கள் எதிர்த்தரப்பினர் இல்லாமலே பா.ஜ.க வெற்றி பெற்றது என்பதிலிருந்தே காவிக் கும்பலின் வன்முறை வெறியாட்டத்தின் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், தற்போது நடைபெற்றுள்ள தாக்குதலானது தேர்தல் வெற்றிக்காகவோ, தேர்தல் நேரத்தில் நடைபெறுகிற வழக்கமான வன்முறையாகவோ இல்லை. இது தேர்தல் வன்முறையில் ஏற்பட்டுள்ள புதிய பரிமாணம், திரிபுரா மாடல் எனலாம். தற்போது காங்கிரஸ், சி.பி.எம் கட்சியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், தேர்தல் வெற்றி என்ற தற்காலிக நலனுக்காக மட்டும் நடத்தப்பட்டதல்ல, அக்கட்சிகளை ஒழித்துக் கட்டும் நோக்கில் நடத்தப்பட்டவையாகும். தேர்தல் அரங்கில்கூட பா.ஜ.க-விற்கு போட்டியாக எந்த அரசியல் கட்சியும் இருக்க முடியாது என்ற சூழலை பாசிஸ்ட்டுகள் உருவாக்கி வருகின்றனர். இந்த போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பில் வழங்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச, பெயரளவிலான ஜனநாயக உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்துவந்த காவி பாசிஸ்ட்டுகள் தற்போது முற்றிலுமாக ஒழித்துக்கட்ட துணிந்திருக்கிறார்கள் என்பதையே இத்தாக்குதல் காட்டுகிறது.

இதுநாள் வரை, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பல் தீவிர மதவெறிப் பிரச்சாரத்தை நடத்தும்போது, அதை எதிர்கொள்ள முடியாத இதர முதலாளித்துவக் கட்சிகள் தாங்களும் இந்துக்களின் பாதுகாவலர்கள்தான் என மென்மையான இந்துத்துவா போக்கினை முன்வைத்து வந்தனர். ஆனால், ‘இந்துப் பாதுகாவலர்’ போட்டியில் பாசிஸ்ட்டுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தோற்றுவிட்டனர்.


படிக்க: குஜராத்: பாசிஸ்டுகளின் தேர்தல் வெற்றி தவிர்க்கவியலாதது!


பாசிஸ்ட்டுகளுக்கு எதிராக மக்கள் சக்தியைத் திரட்டும் நோக்கமற்ற இவர்கள், தற்போது நேரடித் தாக்குதலில் பாசிஸ்ட்டுகள் இறங்கியிருப்பதைக் கண்டு திகைத்து நிற்கின்றனர். சகல ஆயுதங்களும் தரித்து நிற்கும் எதிரியின் முன்னே வெறுங்கையோடு நிற்கும் பரிதாப நிலைக்கு வந்துவிட்டனர். எனினும், மக்கள்விரோத – ஜனநாயக விரோத இந்துத்துவா சித்தாந்தத்தை அம்பலப்படுத்தி முறியடிக்கவும், ஜனநாயகப்பூர்வமான மாற்றுத்திட்டம் ஒன்றை – அவர்கள் நம்பும் தேர்தல் வரம்புக்குள் கூட – முன்வைத்து மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கவும் யாரும் தயாரில்லை.

இதே நிலையில்தான் திரிபுராவில் தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த சி.பி.எம். கட்சியும் இருந்து வருகிறது. அவர்கள் கம்யூனிஸ்டு கட்சி என தங்களை அறிவித்துக் கொண்டிருப்பதால், சில செயல்திட்டங்களை முன்வைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்தும் கட்டாயம் அவர்களுக்கு எப்போதும் இருந்ததில்லை. இதனால், பழங்குடிகள் – பழங்குடி அல்லாதோர் என அனைவர் மத்தியிலும் தனது வாக்கு வங்கியையும் – செல்வாக்கையும் தொடர்ந்து இழந்து வருகின்றனர்.

2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து பரிசீலித்த சி.பி.எம். கட்சியின் தலைமையானது, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வுக்கு எதிராக அரசியல் – சித்தாந்த – ஸ்தாபன தளங்களில் போராட்டங்களை நடத்தி மக்களை வென்றெடுக்க வேண்டும் என முடிவு செய்திருந்தது. ஆனால், இதுவரை இவை எவற்றையும் தீவிரமாக முன்னெடுக்கவில்லை. மாறாக, வழக்கமான பொருளாதாரப் போராட்டங்கள் – தேர்தல் கணக்குகளுக்குப் பொருத்தமான வேலைகளை மட்டுமே செய்து வருகிறது. கேரளா தவிர்த்த மற்ற மாநிலங்களில் கட்சி சுருங்கி வருவதோடு, மக்கள் அடித்தளத்தையும் இழந்து வருகிறது என்பதை அவர்களது தேர்தல் பரிசீலனை அறிக்கைகளும், கட்சி மாநாட்டு அறிக்கைகளும் தெளிவாகக் காட்டுகின்றன.

புரட்சி என்பதே நாடாளுமன்றத்தின் வழியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் என்ற நிலைக்குத் தாழ்ந்துவிட்ட இக்கட்சி, பாசிசம் பற்றிய புரிதலே இல்லாமல், இதர கட்சிகளைப் போலவே தேர்தல் மூலமாகவே பா.ஜ.க பாசிசக் கும்பலை வென்றுவிட முடியும் என்ற சிந்தனைப் போக்கில் மூழ்கிக் கிடக்கிறது. பாசிஸ்ட்டுகள் ஆயுதந்தாங்கிய தாக்குதல்களைத் தொடுத்து வரும் நிலையிலும் கூட வன்மையாகக் கண்டிப்பது, கடுமையாகக் கண்டிப்பது என அறிக்கைப் போரை நடத்தி வருகிறது.


படிக்க: அன்றே சொன்னது புதிய ஜனநாயகம் : ஆம் ஆத்மி, பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிகள் !


2019 நாடாளுமன்றத் தேர்தலிலேயே, கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் 27 சதவிகித வாக்குச் சாவடிகளில் இடது முன்னணியால் முகவரை நியமிக்க முடியவில்லை. இப்போது தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவோ, தேர்தல் பிரச்சாரம் செய்யவோ முடியாத நிலைக்கு பாசிஸ்ட்டுகள் கொண்டு வந்துவிட்டனர். ஆனால், எவ்வளவு அடித்தாலும், செக்கு மாடுகளைப் போல தலைமையும் அணிகளும் தேர்தல் வரம்புக்குள் சுற்றிவருபவர்களாக மாறியிருப்பதால், என்ன செய்வதென்றே தெரியாமல் தேர்தல் ஆணையரிடம் முறையிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய வழிமுறைகளால் தேர்தலில் கூட சி.பி.எம். கட்சி பெற்றது ஏதுமில்லை, இழந்தவையோ ஏராளம். குறிப்பாக, தேர்தல் அரசியலில் இருக்கும் ஒரு கட்சி என்ற அந்தஸ்தையே பறிகொடுக்கும் நிலைக்கு வந்துவிட்டது. இவர்களுக்கும் பிற எதிர்க்கட்சிகளுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டதால், ஓட்டுப் போடுவதைக் கூட குறைத்து வருகின்றனர். எத்தனைத் தொகுதிகளில் போட்டியிட்டாலும் இரண்டு சதவிகித ஓட்டுகளைக் கூட வாங்க முடியாத நிலைக்குப் போயிருக்கிறது. எனவே, தேர்தல் மூலமாகவே சமூக மாற்றத்தையும், பாசிச எதிர்ப்பையும் சாதிக்க முடியும் என்ற கனவை ஓரங்கட்டி வைத்து விட்டு, குறைந்தபட்சம் தமது கட்சி மாநாட்டு அறிக்கைகளில் இருக்கும் படிப்பினைகளையேனும் நடைமுறைப்படுத்தினால் மட்டுமே அரசியல் அரங்கில் சி.பி.எம். கட்சி தாக்குபிடிக்க முடியும்.

தேர்தல் அரங்கில் பாசிஸ்ட்டுகளைத் தோற்கடிக்க வேண்டுமென்ற எதிர்க்கட்சிகளின் விருப்பம், இனி வெறும் விருப்பமாக மட்டுமே இருக்க முடியும் என்பதை பாசிஸ்ட்டுகள் உணர்த்தி வருகின்றனர். தேர்தலுக்கு வெளியே மக்களை அரசியல் – சித்தாந்த ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் அணிதிரட்டுவதும், பாசிச எதிர்ப்பு மக்கள் படையொன்றை உருவாக்கி நேருக்கு நேர் மோதி வீழ்த்துவதும்தான் இனி தீர்வு. இதுவே, தேர்தலைத் தீர்வாகக் கருதும் எதிர்க்கட்சிகளும், அதை ஒரு வழிமுறையாகக் கருதுகிற ஜனநாயக சக்திகளும் திரிபுரா அனுபவத்திலிருந்து பெற வேண்டிய படிப்பினையாகும்.

அப்பு