Monday, June 23, 2025
முகப்பு பதிவு பக்கம் 153

திரைவிமர்சனம்: சூரரைப் போற்ற முடியாது – பாகம் 3 | சு.விஜயபாஸ்கர்

சூரரைப் போற்ற முடியாது – பாகம் 3

நல்ல முதலாளிகள் இல்லையா?

விப்ரோ முதலாளி அசீம் பிரேம்ஜி பல பில்லியன் கணக்கிலான தனது சொத்தை கல்விக்கு பொதுமக்களுக்கு என நன்கொடை செய்து வருகிறார். ஆண்டுதோறும் தனது சொத்தில் பெரும் பகுதியை ஏழைகளுக்கு கல்வி மருத்துவம் போன்ற பொது விடயங்களுக்கும் செலவு செய்கிறார்கள். இவர்களைப் போல நல்ல முதலாளி இருக்கவே முடியாதா என சந்தேகம் கொள்பவர்களுக்கு, ஆங்கிலத்தில் கதாசிரியரும் நடிகருமான டின் கவானாக் “தொண்டின் மூலம் தன்னை மீட்டுருவாக்கம் செய்ய முயற்சிக்கும் கார்ப்பரேட்டிசமானது தனது குற்றங்களுக்கு அபதாரம் செலுத்துவதாக சொல்லும் தொடர் கொலையாளியை ஒத்துள்ளது” என பதிலளித்தார்.

முதலாளிகள் செய்யும் எந்த காரியமும் லாபத்தை, தன்னலத்தை நோக்கியதாகவே இருக்கும். காரண காரியங்கள் இல்லாமல் முதலாளிகள் விலை குறைப்பு அல்லது நன்கொடை என பண விரயம் செய்வதில்லை. தன்னை சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் மக்களை அமைதிப்படுத்த ஆயுதங்களை விட மருந்தே சாதகமானது என்ற புத்தி ராக்பெல்லர் முதல் கோபிநாத் வரை செயல்படுகிறது. இப்படிப்பட்ட முதலாளிகளைத்தான் நல்லெண்ணத் தூதர்களாக, ரோல்மாடலாக, இளைய தலைமுறையின் முன்னோடிகளாக நம் முன்னே காண்பிக்கின்றனர்.

திரைப்படத்தில் ஜெட் ஏர்வேஸ் நரேஷ் கோயல் டிஸ்கோ சாமி விஜய் மல்லையா போன்ற முதலாளிகளை தீயவர்களாக வில்லன்களாக சித்தரித்து, புரட்சியாளராக, சமத்துவத்தை விரும்பும் நாயகனாக ஏழைப்பங்காளனாக காண்பிக்கப்பட்ட கோபிநாத் நிஜத்தில் என்ன செய்தார் தெரியுமா?


படிக்க : தி கிரேட் இந்தியன் கிச்சன் || ஆணாதிக்கமும் மதமும் இங்கு தோலுரிக்கப்படும்


திரைக்குள் யார் கோபிநாத்தை விமான நிறுவனம் தொடங்க விடாமல் சூழ்ச்சி செய்தார்களோ அவருடன் இணைந்து அதாவது 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிங்ஃபிஷர் விஜய் மல்லையா, ஜெட் ஏர்வேஸ் நரேஷ் கோயல், ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ போன்றவர்களுடன் இணைந்து ” ஏர் டெக்கான்” அடையாள வேலை நிறுத்தம் செய்தது.
ஏழை மக்களை இலவசமாக தங்கள் விமானத்தில் ஏற்ற வேண்டும் என்பதற்காகவா வேலை நிறுத்தம் செய்தார்கள்? விமானத்தில் பறக்கும் கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காகவா? இல்லை. மாறாக விமான எரிபொருள் விலையை குறைக்க வேண்டும்.

விமான நிலையங்களில் விதிக்கப்படும் கட்டணங்களை குறைக்க வேண்டும். நட்டத்தில் நடக்கும் தங்கள் நிறுவனங்களுக்கு அரசு நிதி உதவி செய்திட வேண்டும். இதுதான் இவர்கள் கோரிக்கை இல்லையென்றால் வேலை நிறுத்தம் செய்வோம். தனியார் விமானங்கள் பறக்க விட்டால் என்ன கதி நேரும் என்பதை அரசுக்கும் மக்களுக்கும் நாங்கள் புரிய வைப்போம் என்றார் மல்லையா. அதற்கு துணை நின்றார் கோபிநாத்.

முதலாளி வர்க்கக் கனவு

எல்லாவிடயங்களிலும் திரைக்கதையும் உண்மை கதையும் வெவ்வாறாக இருந்தாலும் ஒரு விடயத்தில் சூரரைப் போற்று திரைக்கதைக்கும் நிஜத்திற்கும் ஒற்றுமை இருக்கிறது.
படத்தில், சூர்யாவின் கிராம மக்கள் தங்களது நகையை, நிலத்தை விற்று. சேமிப்பை வைத்து, கடன் வாங்கி, திருமணத்திற்கு வைத்திருந்த பணத்தை தந்து, விமானம் வாங்க போவதாக அறிவித்த சூர்யாவுக்கு உதவுவார்கள்.

இது உண்மையில் ஏழை மக்களின் ஆசை இல்லை. மாறாக முதலாளிகளின் ஆசை. கனவும் கூட.

கோபிநாத் ஏர் டெக்கானை வாங்கிய விஜய் மல்லையா நட்டத்தில் ஓடிய தனது கிங்பிஷர் விமான நிறுவனத்தை நடத்த முடியாமல், ஏழை, எளிய மக்களின் வரிப்பணத்தில் இயங்கிய அரசு வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்காமல், நாட்டைவிட்டு அரசியல்வாதிகளின் துணையோடு தப்பி ஓடினார். அந்த விஜய் மல்லையாவின் நிறுவனத்தைக் காப்பாற்ற அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என்று திருவாய் மலர்ந்தார் கோபிநாத்.

அரசு நிறுவனமான ஏர் இந்தியாவிற்கு பல ஆயிரம் கோடிகளை செலவழிக்கும் அரசு, கிங் பிஷரை காப்பாற்ற சில ஆயிரம் கோடிகளை செலவழிக்க வேண்டும் என சக முதலாளிக்கு மக்களின் வரி பணத்தை கொடுக்கச் சொன்னார் கோபிநாத். லாபத்தை தங்கள் கணக்கில் சேர்த்துக் கொண்டு, நட்டத்தை மக்கள் வரிப்பணத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோபிநாத்தின் கோரிக்கை ஒன்றும் புதிதல்ல. லாபம் தனியுடமை, நட்டம் பொதுவுடமை என்பது தான் முதலாளித்துவ கோட்பாடு. இந்த விதியின் கீழ் தான் 2008 ஆம் ஆண்டில் உலக பெருமந்தத்தில் வீழ்ந்த பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து அமெரிக்க அரசு உதவி செய்தது.

சினிமா முதலாளிகள் சளைத்தவர்களா?

கோபிநாத்தாக நடிக்கும் சூர்யாவும் திரைத்துறையினரும் முதலாளிகளுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல. சினிமாவுக்கு வரிச்சலுகை வேண்டும், மானியம் வேண்டும் என கோரிக்கை வைத்து வைத்திருப்பவர்கள் தான் இந்த ஆகாய சூரர்கள். பெருந்தொற்றினால் உலகமே முடங்கிய சில மாதங்களுக்குள்ளாகவே படப்பிடிப்புகளை நடத்த அனுமதி தாருங்கள் என தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நடிகர்களும் கோரிக்கை வைத்தனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா? படப்பிடிப்பு நடத்தப்படாமல், எண்ணற்ற சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்து, வாழ்வாதாரம் இழந்து, வீடுகளுக்குள் முடங்கி வறுமையில் வாடுகின்றனர் என்று நீலிக் கண்ணீர் வடித்தனர்.

தங்கள் சேமிப்புகளை கரைத்து, தொழிலாளியின் துயரைப் போக்க இவர்கள் முன்வராதது ஏன்?

தங்களைக் காத்துக்கொள்ள தொழிலாளர்களைக் கால் கொடுப்பதை வழக்கமான விதியாக வைத்திருக்கிறது முதலாளிவர்க்கம்

“பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பை தடுத்து நிறுத்த சில ஆயிரம் கோடிகளை அரசு செலவு செய்தால் என்ன?” என கிங்பிஷர் நிறுவனத்தின் நட்டத்தை மக்கள் தலையில் எழுதச் சொன்னார் கோபிநாத்.

தங்கள் தொழில் போட்டியால் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க அரசு நிதி உதவி கேட்கும் முதலாளிகள் தங்களது லாபத்தை அரசுக்கு தருவார்களா? அரசை விடுங்கள், தங்களது லாபத்திற்கு காரணமாக இருந்த தொழிலாளர்களோடு பங்கீடு செய்வார்களா?

அப்படி ஒரு சூழ்நிலை இருக்குமானால் தொழில் செய்வதை கைவிடுவார்கள் இந்த நியாயவான்கள். லாபமே குறி, அதற்காக எதையும் செய்ய தயாராக இருப்பவர்கள் முதலாளிகள்.

கொரோனா பெருந்தொற்றின் போது கைகளை கழுவு, வீட்டுக்குள்ளேயே இரு, சமூக இடைவெளியை கடைப்பிடி என நொடிக்கு ஒரு முறை நமக்கு அறிவுரை வழங்கிய திரைத்துறை மகான்கள். தொற்று அபாயம் நீங்கும் முன்னே திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று அறிவற்ற முறையில் எடப்பாடி அரசு நடந்து கொண்டபோது, கனவுலக கோமான்கள், பசியறிந்து, படியளந்த எடப்பாடியாரை சத்தமின்றி மனமுருகி வேண்டி இருப்பார்கள். வெளியே சத்தம் கேட்டால் தங்களை ரசிக்கும் ரசிகர்கள் காறித்துப்புவான் அல்லவா.

வெறும் முதலாளி மட்டுமல்ல கோபிநாத் ஆளும்வர்க்கத்தின் செல்லப்பிள்ளை

1994 ஆண்டு கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டார். 2009 மக்களவைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட கோபிநாத்தை இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, மோகன்தாஸ் பய் போன்றவர்கள் ஆதரித்தனர். மோகன் தாஸ் பய் அதிதீவிரமாக மோடியையும் பாஜகவையும் ஆதரிப்பவர். நாராயணமூர்த்தியும் அவ்வப்போது மோடி ஆதரிப்பவர் தான். 2014 ஆம் ஆத்மி டிக்கெட்டில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார் கோபிநாத். சமீபத்தில் கர்நாடக மாநில ஹாசன் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பாக கோபிநாத் போட்டியிடப்போவதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

அதிகாரவர்க்கம், அரசியல்வாதிகள், முதலாளிகள் என அனைவரும் ஒருசேர கோபிநாத்தை ஆதரிப்பதன் மர்மம் என்ன? தனியார்மயத்தை, உலகமயத்தை, தாராளமயத்தை, மக்களிடம் பரவலாக விளம்பரப் படுத்தும் நோக்கத்தில் அவ்வப்போது கோபிநாத் போன்றவர்கள் தோன்றுவார்கள். கோபிநாத் வழியில் நீங்களும் உழைத்தால் பூலோக சொர்க்கம் காத்திருக்கிறது என்று தன்னை விளம்பரம் செய்கிறது முதலாளித்துவம்.

மாட்டாதவரை சாமியார் மாட்டிக்கொண்டால் போலிச்சாமியார்

வாயிலிருந்து லிங்கம் எடுத்த சாமியார், வெறும் கையில் விபூதி எடுத்த சாமியார், காட்டை அழித்த சாமியார், பாலியல் வழக்கில் கைதான சாமியார், கொலைகார லோககுரு, கருவறைக்குள் பாலியல் வன்புணர்வு செய்த குருக்கள் என ஆன்மீகம் நமக்கு தந்திருக்கும் மாடல் மாட்டும் வரை சாமியார் மாட்டியபின் போலிச்சாமியார். ஆன்மீக வியாபாரிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல முதலாளிகள்

அம்பலமாகும் வரை ரோல்மாடல் தொழிலதிபர், பிடிபட்ட பின் கிரிமினல், இதுதான் தனியார்மயம் நமக்கு அளித்திருக்கும் மாடல். விஜய் மல்லையா கேத்தன் தேசாய், ஹர்ஷத் மேத்தா, சத்யம் ராஜூ என வெற்றிகரமான தொழிலதிபர்களாக திகழ்ந்தவர்கள் பலர். எப்போது வரை? அவர்கள் செய்த குற்றங்கள் அம்பலமாகும் வரை. இப்படிப்பட்டவர்களை தனியார்மயம் நமக்கான ரோல்மாடலாக நம் மீது திணிப்பதை விளம்பரம் செய்யும் பணி கலைத்துறையின் பெரும்பணி. அதற்கு சம்பளம் தான் அவர்களுக்கான வெகுமதி.

இப்படிப்பட்ட சூழலில்தான் இயக்குனர்கள் முதலாளிகளை, கதாநாயக பிம்பம் போட்டு நம் மீது திணிக்கின்றனர். இந்த வெற்று பிம்பங்களின் முகமூடியைக் கிழித்து உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுவது அவசியமான செயலாக மாறி விட்டது. ஒரு வணிக சினிமாவில் வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரத்தை விமர்சிப்பதன் அவசியமும் தேவையும் என்ன என்ற கேள்வி எழலாம். சினிமாக்கள் வரும் பொழுது போக்கோடு நின்றுவிடவில்லை. மக்களிடம் ரசனை ஊட்டுவதில் வளர்ப்பதில், கற்றுக் கொடுப்பதில் சினிமா, கலை – இலக்கியத்துக்குப் பங்குண்டு.

எனவே தான் கலை இலக்கியத்தைப் பற்றி மாவோ சொல்கிறார்: ”எம்முடைய இலக்கியமும் கலையும் அடிப்படையாகத் தொழிலாளர்கள், விவசாயிகள், படைவீரர்களுக்கானவை. பரவலாக்குதல் என்பதன் பொருள் அவர்களிடம் பரவலாக்குதல்; தராதரங்களை உயர்த்துதல் என்பதன் பொருள் அவர்களுடைய தற்போதைய நிலையிலிருந்து, அந்த மட்டத்திலிருந்து முன்னேற்றுவது என்பதாகும். அவர்களுக்குச் சாதகமானதும், அவர்களால் உடனே ஏற்றுக் கொள்ளக் கூடியதும் எதுவோ அதையே நாம் பரவலாக்க வேண்டும். எனவே, அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு முன், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் பணி இருக்கிறது. தராதரங்களை உயர்த்துவதற்கு இது இன்னும் அதிகமாகப் பொருந்தும்.

உயர்த்தத் தொடங்குவதற்கே அடித்தளம் தேவை. ஒரு வாளித் தண்ணீரை எடுத்துக் கொள்வோம். அதைத் தரையிலிருந்து தானே மேலே இழுக்கிறோம்? அந்தரத்திலிருந்தா இழுக்கிறோம்? அப்படியானால், இலக்கியமும் கலையும் எந்த அடித்தளத்திலிருந்து உயர்த்தப்படுவது? நிலப் புரபுத்துவ வர்க்கங்களின் அடித்தளத்திலிருந்தா? முதலாளி வர்க்கங்களின் அடித்தளத்திலிருந்தா? சிறுமுதலாளி வர்க்க அறிவுஜீவிகளின் அடித்தளத்திலிருந்தா? இல்லை, இவை எதிலிருந்தும் அல்ல, பரந்துபட்ட தொழிலாளர், விவசாயிகள், படை வீரர்களின் அடித்தளத்திலிருந்தே”


படிக்க : NGK : செல்வராகவன் – சூர்யா கூட்டணி Hangover-ல் ஒரு அரசியல் படம் !


அப்படியானால், பரவலாக்குதலுக்கும் தரத்திற்குமான உறவு என்ன? பிரச்சனையை மக்களின் தேவையிலிருந்து பார்க்கலாம். மக்களுக்கு எளிய, தெளிவான படைப்புகள் வேண்டும். எதிரியுடன் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு, எதிரிகளால் எழுத்தறிவற்ற கல்வியற்ற மூடர்களாக, அடிமைகளாக நசுக்கப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு போராட உற்சாகம் வேண்டும்; வெற்றி மீது நம்பிக்கை வளர வேண்டும்; எதிரிக்கு எதிராக ஒரே மனத்தோடு, ஒரே சிந்தனையோடு போராடுவதற்காக பரந்த பொது அறிவு அவர்களுக்கு வேண்டும்; பரந்த கலாச்சார அறிவு வேண்டும்; நிறையக் கலை இலக்கியப் படைப்புகள் வேண்டும்.
ஆனால் எதார்த்தத்தில், இந்திய, தமிழ்ச் சூழல் இன்று மேல் வர்க்க, மேல்சாதி மனோபாவத்தை பிரதிபலிக்கக் கூடியதாகவே சினிமா உள்ளது.

அரிதான சில படைப்புகளைத் தவிர்த்து பெரும்பான்மையான வணிக சினிமாக்கள் சந்தைக் கலாச்சாரத்தின் உள்ளடக்கமாக இருக்கிறது. அத்தோடு மட்டுமின்றி, சினிமாவுக்குள் தனக்கான அடையாளத்தை உருவாக்கி, வெகுமக்கள் மத்தியில் பரவலாக்கம் செய்துவருகிறது அதிகாரவர்க்கம். நேர்மையின் மறு உருவமாக வடிவமைக்கப்பட்ட கதாநாயகர்கள், திரைக்கு வெளியே இந்த உலகை உய்விக்க வந்த நாயகர்களாக தங்களை விளம்பரப்படுத்தி, அதன்மூலம் அரசியலை தனதாக்கி, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முனைகிறார்கள். ”சூரரைப்போற்று” சூர்யா என்ற நடிகரை போற்றுவதற்காக உருவாக்கப்பட்ட படமும் அல்ல, நெடுமாறன் ஆக தோன்றிய கோபிநாத் சமத்துவத்தைப் படைக்க விரும்பும் புரட்சியாளனும் இல்லை.
எனவே சினிமா புகட்ட விரும்பும் மேட்டுக்குடி, மேல்சாதி மனோபாவத்தை வெட்டி வீழ்த்துவது நமது முதன்மைக் கடமையாகும்.

நிஜத்தில் லாபவெறியை மையமாக கொண்டு செயல்படும் முதலாளிகளும், அதே நோக்கத்தை திரையில் காட்சியாக்கும் சினிமாக்காரர்களும் சேர்ந்து செய்த போலிப் பிம்பம் தான் “சூரரைப் போற்று”. நம்மால் இந்த சூரரைப் போற்ற முடியாது.

(முற்றும்)

சு.விஜயபாஸ்கர்

disclaimer

நீட் என்னும் அயோக்கியத்தனம்

டந்த 18 ம் தேதி கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வு மையம் ஒன்றில் மாணவிகளின் உள்ளாடையில் உலோக கொக்கி இருப்பதால் அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என உள்ளாடையை அகற்ற வற்புறுத்தியுள்ளனர்.

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு என தொடர்ச்சியாக மூன்று பொது தேர்வுகள் எழுதுவதே மாணவர்களுக்கு பெரும் சவாலாகவும் சுமையாகவும்  இருக்கிறது. இதனை நம்மால்  எப்பொழுது புரிந்து கொள்ள முடியும் என்றால் தேர்வு முடிவு வெளியாகும் பொழுது மாணவர்கள் அநேகர் தற்கொலை செய்து கொள்வதன் மூலம் நமக்கு தெரிய வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் நீட் தேர்வு வந்ததிலிருந்து, அத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ படிப்பு  படிக்க  முடியும்  என்ற  சூழ்நிலை  உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் அந்தந்த மாநில பாடத்திட்டத்தில் படித்து இருப்பார்கள். ஆனால் அவர்களுக்குள் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் இருக்கும். அந்த அடிப்படையில்  ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் இதுவரை படிக்காத என்.சி.இ.ஆர்.டி. (NCERT) பாடப்புத்தகத்தை படித்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற கட்டாயத்திற்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். இது மாணவர்களுக்கு மேலும் ஒரு சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் பெரும் சுமையாகவும் இருக்கிறது.

நீட் தேர்வு : சட்டப் போராட்ட அனுபவம், களப்போராட்ட அவசியத்தை போதிக்கிறது!

இதையெல்லாம் கடந்து நீட் தேர்வு எழுத போனால் அங்கு பெண்கள் உள்ளாடையில் உலோக கொக்கி இருக்கிறது என்றும் அவர்கள் உள்ளாடையை கழற்றினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என்றும் கூறி, அவர்களை கட்டாயப்படுத்தி உள்ளாடையை கழற்ற வைக்கிறார்கள் தேர்வு மைய ‘உத்தமபுத்திரர்கள்’. தேர்வு எழுத சென்ற பல மாணவிகள் வேறு வழியின்றி உள்ளாடையில் இருந்த உலோக கொக்கியை அகற்றிவிட்டு துணியை கட்டிக்கொண்டு தேர்வு எழுத சென்றார்கள்.

இதனையடுத்து கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த மாணவியின் தந்தை ஒருவர், “பல மாதங்கள் கடுமையாக படித்தும் இது போன்ற மன ரீதியான தொல்லையால் என் மகள் சரியாக தேர்வு எழுதவில்லை; அழுது கொண்டே வெளியே வந்தாள்” என போலீஸில் புகார் அளித்துள்ளார். மேலும் இஸ்லாமிய மாணவிகளை ஹிஜாப் மற்றும் புர்காவையும் அகற்ற சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது போன்ற கேவலமான நடவடிக்கைகளின் மூலம், நீட் தேர்வுகள் மிகவும் கண்டிப்போடும் கட்டுப்பாடோடும்  நடக்கிறது என்று பொதுமக்கள் மத்தியில் பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கும் இவர்களின் லட்சணம் என்ன தெரியுமா? மாணவிகளின் உள்ளாடை வரை பரிசோதித்த இதே நீட் தேர்வில், டெல்லி மற்றும் ஹரியானாவில் தேர்வர்களுக்கு பதிலாக வேறு சிலர் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது  அம்பலமாகியுள்ளது.

மேலும், டெல்லியில் கவுதம் நகரை சேர்ந்த சுசில் ரஞ்சன் என்பவர் ஆள் மாறாட்ட முறைகேடுக்கு மூளையாக செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் பல்வேறு போட்டித் தேர்வு பயிற்சி மையங்களுடன் சேர்ந்து போலி நுழைவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டைகளை தயாரித்து மாணவர்களுக்கு பதில் வேறு நபர்களை தேர்வு எழுத அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூளையாக செயல்பட்டு வந்த சுசில் ரஞ்சன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

அறை கண்காணிப்பாளரின் துணை இல்லாமல் எப்படி ஆள் மாறாட்டம் செய்ய முடியும்?  ஆள் மாறாட்டம் செய்வதற்கு அந்நிறுவனமும் ஹால் கண்காணிப்பாளரும் ஒத்துழைத்தால் மட்டுமே செய்திருக்க முடியும். இதுபோல் அதிகாரிகள் பணக்கார மாணவர்களிடமிருந்து லஞ்சம் வாங்கி கொண்டு களவாணித்தனம் செய்திருப்பது பல இடங்களில் அம்பலமாகியுள்ளது. ஆனால் நேர்மையாக தன்னை நம்பி மட்டுமே தேர்வு எழுத வரும் மாணவ மாணவிகளை மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டு சோதிக்கப்படுகின்றனர்.

“நீட் தேர்வு என்பது தகுதியுள்ள மாணவர்களை தேடிக் காண விழையும் பெரும் முயற்சி” என்று கதை அளந்து விடுபவர்களின் முகத்தில் காரி உமிழும் வண்ணம் வகையில் தான் தொடர்ச்சியாக நீட் தேர்வு நடந்து வருகிறது. சமீபத்தில், கேரீயர்ஸ் 360 (Careers 360) என்ற நிறுவனம் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. கடந்த மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், “நீட் தேர்வு என்பதே சுயநிதி கல்லூரிகள் அதிகளவில் பணம் சம்பாதிப்பதற்கான எளிய வழிமுறை” என்பதனை தரவுகளுடன் அம்பலப்படுத்தியுள்ளது.

“நீட் தேர்வின் விதியோ தரமான மாணவர்களை” தேர்ந்தெடுப்பது என்று நீட் தேர்வை ஆதரிக்கும் கும்பல்கள் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் நடைமுறையில் உள்ள விதியோ தனியார் சுயநிதி கல்லூரிகள், தனியார் பயிற்சி நிறுவனங்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என ஆளும் வர்க்கத்தின் லாப வேட்டைக்கானதாக தான் உள்ளது.

கேரளா : நீட் தேர்வு – மாணவர்கள் மீது ஏவப்படும் ஒடுக்குமுறை!

மொத்தமாக பார்த்தால் நீட் தேர்வில் இரண்டு முரணான அம்சங்கள் வெளிப்படுகின்றன. ஒன்று பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித்துகள், பொருளாதாரத்தில் தாழ்ந்தவர்கள் யாரும் மருத்துவராகக் கூடாது. அவர்கள் இந்த சமூகத்தில் முன்னேறக்கூடாது என்பது. மற்றொன்று இந்தத் தேர்வை வைத்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நீட் பயிற்சி மையம் வைத்திருப்பவர்களும் கொழுத்து கொண்டிருக்கின்றனர்.

பணம் உள்ளவர்கள் மட்டுமே கனவு காண வேண்டும் என்று ஒவ்வொரு தேர்வின் போதும் எளிய மக்களின் முகத்தில் ஓங்கி அறைகிறது நீட் தேர்வு. ஆனால் ஆரம்பத்தில் போராட்டங்களின் மூலம் திருப்பி அறைந்து கொண்டிருந்த தமிழகம், அனிதா இறந்த போது போர்க்களமான தமிழகம், இன்று பல அனிதாக்களை இழந்த போதும் எழவு வீட்டில் எந்த சலனமும் இல்லாமல் ஓய்ந்து கிடப்பது போல் ஓய்ந்து கிடக்கின்றது. இது தான் இங்குள்ள சமரச சக்திகளின் மிகப் பெரிய வெற்றி.

இதுவரை தமிழகத்தில் மட்டும் ஏறக்குறைய 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வால் கொல்லப்பட்டுள்ளனர். நீட் தேர்வினால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். இத்தாக்குதலை தொடுப்பது இரட்டை குழாய் கொண்ட தனியார்மயம் – தாரளமயம் – உலகமயம் என்ற கொலைகார துப்பாக்கி தான். இந்த துப்பாக்கியின் விந்தை என்னவென்றால் ஒரு துளையின் மூலம் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் உயிரைக் கொன்று குவித்து வருகிறது. இன்னொரு துளையோ பண முதலைகளுக்கு பண மாலையாக விழுகிறது. இந்த துப்பாக்கியை அடித்து நொறுக்காமல் நீட்டிலிருந்து நமக்கு விடிவில்லை.

ஆதி

திரைவிமர்சனம்: சூரரைப் போற்ற முடியாது – பாகம் 2 | சு.விஜயபாஸ்கர்

சூரரைப் போற்ற முடியாது – பாகம் 2

அதற்காக கோபிநாத்தின் தகிடுதித்தங்கள் ஒன்றல்ல இரண்டல்ல.

1. ஆம்னி பஸ்களுக்கு வழிகாட்டி ஏர் டெக்கான். கடைசி நேரத்தில் டிக்கெட் வாங்கினால் உச்சபட்ச விலை.
2. பொதுமாக்களின் விமான ஆசைக்கு தூண்டிலாக சில டிக்கெட்டுகள் குறைந்த விலையில் தரப்பட்டன.
3. டிக்கெட்டை கேன்சல் பண்ணினால் அபராதம் விதிக்கப்படும் என்ற நடைமுறையை முதன்முதலில் கொண்டு வந்தது ஏர்டெக்கான்.
4. எவ்வளவு குறைவான தொழிலாளர்களை வைக்க முடியுமோ, அவ்வளவு குறைவான தொழிலாளர்களை வைத்து, எவ்வளவு அதிகமான வேலை வாங்க முடியுமோ, அவ்வளவு அதிகமான வேலை வாங்கியது ஏர் டெக்கான். செலவை குறைக்க வேண்டுமெனில் ஆட்களைக் குறை அல்லது சம்பளத்தை குறை. இது தான் தனியார் முதலாளிகளின் தாரக மந்திரம். இதுவே கோபிநாத்தின் தந்திரம்.
5. பழைய ஹெலிகாப்டர்கள், பழைய விமானங்கள் என வாங்கி அதை வைத்து விமான நிறுவனம் நடத்தி, உயிருக்கு உலை வைக்கும் வேலையை செய்தார் கோபிநாத்.
6. தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இருப்பது, வேலையை விட்டு நீக்குவது போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் கோபிநாத்துக்கு அத்துப்படி.
7. SBI, AXIS என பல வங்கிகளிடம் கடன் வாங்கி விட்டு, திருப்பித்தரவில்லை கோபிநாத். கடனை திருப்பி தராததால், SBI கோபிநாத்தின் சொத்துக்களை ஏலம் விட்டது.
8. ரைட் சகோதரர்கள் இன்று உயிரோடு இருந்து, விமான நிறுவனம் நடத்தினால், வில்பர் ரைட் தனது தம்பி ஆர்வில் ரைட்டை வேலையை விட்டு தூக்கிருப்பான் என ஒருமுறை சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனர் (Herb Kelleher) காமெடியாக சொன்னார். இதைத் தான் அனைத்து தனியார் முதலாளிகளும் செய்கிறார்கள். கேப்டன் கோபி நாத் செய்ததும் இதுதான். 2020 மார்ச் 22ல் லாக்டவுனை இந்திய அரசு அறிவிக்கிறது. ஏப்ரல் 5 ஆம் தேதி ஏர் டெக்கான் தனது அனைத்து தொழிலாளர்களையும் வேலையை விட்டு விலகச் சொல்லிவிட்டது அல்லது சம்பளம் இல்லாத நீண்ட கால விடுப்பில் போகச்சொல்லி விட்டது. மற்ற எந்த விமான நிறுவனங்களும் இதைச் செய்யவில்லை. முதன் முதலில் ஏர் டெக்கான் செய்தது.


படிக்க : சர்தார் உத்தம்சிங் திரைப்படம் : பயங்கரவாதியா ? புரட்சியாளரா ?


பல நாள் திருடன் ஒரு நாளும் அகப்படவில்லை

2003 இல் துவங்கிய ஏர் டெக்கான் கடுமையான நட்டத்தை சந்தித்தது, 2007 இல் விஜய் மல்லையாவுக்கு விற்று விட்டார். ஏர் டெக்கானை வாங்கியது விஜய் மல்லையாவின் சரிவுக்கு முக்கிய காரணம். 2009 இல் டெக்கான் 360 என்ற சரக்கு விமான போக்குவரத்தை ஆரம்பித்து, நட்டத்தினால் 2011 இல் இழுத்து மூடினார். 2012 இல் குஜராத்தின் சில நகரங்களுக்கு (அகமதாபாத், சூரத், ஜாம் நகர், பாவ் நகர், கண்டலா) இடையேயான விமானப் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பித்து 2013 இல் நட்டத்தினால் மூடிவிட்டார். இத்தனை முறை நட்டத்தினால் மூடிவிட்டாலும், 2017 இல் மோடி அரசாங்கம், குறுநகரங்களுக்கான விமானப் பயணம் என்ற நோக்கத்திற்காக கொண்டு வந்த UDAN என்ற திட்டத்தின் கீழ் 34 நகரங்களுக்காக விமானப் பயண அனுமதியை கோபிநாத் வாங்கியுள்ளார்.

ஜெட் ஏர்வேஸ், பாரமவுண்ட், ஏர் சஹாரா, கிங்பிஷர் என பல விமான நிறுவனங்கள் நட்டத்தை சமாளிக்க இயலாமல் நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு ஒடிய போதும், பல முறை நட்டமடைந்தாலும், 2017 இல் மீண்டும் ஏர் டெக்கானை ஆரம்பித்த கோபி நாத், 2020 ஆம் ஆண்டு ஏப்ரலில் அதனை தற்காலிகமாக இழுத்து மூடிவிட்டார். இதன் பின்னரும் UDAN என்ற இந்திய அரசின் திட்டத்தின் தலைமை ஆலோசகராக கோபிநாத் உள்ளார்.

அதன் மர்மம் என்ன?

பாரத் மகாதேவன் என்ற விமானத்துறையைச் சார்ந்த உயரதிகாரி, “விமானத்துறையில் கோபிநாத் செய்த தவறுகளுக்கும் குற்றங்களுக்கும்” ஒருபோதும் மாட்டவில்லை என்கிறார். அவரைத் தப்ப விடுவது யார்? பார்ப்பன லாபியா?

இதற்கு கோபி நாத்தே பதில் சொல்லுகிறார். 2017 இல் ஏர் டெக்கானை மீண்டும் ஆரம்பித்தபோது ஒரு பேட்டியில், ”ஏர் டெக்கானை விஜய் மல்லையாவுக்கு விற்ற போது, இவ்வளவு பிரச்சினைகள் வருமென கணித்தீர்களா” என Network 18 பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு, “விஜய் மல்லையா புத்திசாலித்தனமாகவும் அரசியல் சூழலை சிறப்பாக நிர்வகிக்கவும் செய்திருக்க வேண்டும், ஏனெனில் மற்ற சில பெரு நிறுவனங்களின் கடனுடன் ஒப்பிடும்போது விஜய் மல்லையாவின் கடன் மிகக் குறைவு. மற்ற பெரு நிறுவனங்கள் கடனை திருப்பிச்செலுத்தாமல் சமாளிக்கின்றன. ஆனால் அவரால் தனது கடனை சமாளிக்கவோ அல்லது விமானச் சேவையை மறுதொடக்கம் செய்யவோ முடியவில்லை” என்கிறார். சுருக்கமாக, தனக்கு உள்ள புத்திசாலித்தனம் மல்லையாவுக்கு இல்லை எனக் கூறுகிறார் என எடுத்துக் கொள்ளலாமா?

சிலமுறை தேர்தலில்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தும், சில அரசியல் கட்சிகளோடும் இன்றும் இணக்கமாகவும் உள்ள அந்த தந்திரம் மல்லையாவுக்கு இல்லை எனக் கூறுகிறார் என எடுத்துக் கொள்ளலாமா?.

கையில் எடுத்த தொழிலெல்லாம் தோல்வியில் முடிந்தாலும், இன்றும் அதிகார வர்க்கத்தின் செல்லப்பிள்ளையாக இருக்கும் கோபிநாத்தின் திறமை மல்லையாவுக்கு இல்லை எனக் கூறுகிறார் என எடுத்துக் கொள்ளலாமா?

எப்படி எடுத்துக்கொண்டாலும் தவறில்லை.

சேவை கண்ணோட்டம் கொண்ட முதலாளி சாத்தியமா?

எந்த முதலாளி தனது லாபத்தை கைவிடுவார் அல்லது லாபத்தை கைவிட்டு மக்களுக்கு சேவை செய்ய அவர் ஏன் முதலாளி ஆகவேண்டும்? கோபி நாத் அறிமுகப்படுத்திய மலிவுவிலை விமானம் ஜாதியை பொருளாதார ஏற்றத் தாழ்வை ஒழிக்க வந்த வாகனம் இல்லை.
ஆண்டுக்கு சராசரியாக 0.2 முறை விமானத்தில் பறக்கும் இந்திய குடிமக்களை, அதைவிட அதிக முறை பறக்க வைத்து லாபம் சம்பாதிக்க கோபிநாத் பெரும்படு தேர்ந்தெடுத்த வியாபார உத்திதான் மலிவு விலை விமான பயணம். ஒரு ரூபாய் டிக்கெட் என்பது விமானத்தில் பறக்க அவர்களை விமானத்தை நோக்கி கவர்ந்திழுக்கும் இனிப்பு மிட்டாய் போல தூண்டில் போட்டு மீனை இழுக்கும் வியாபாரத் தந்திரமே அன்றி மக்கள் சேவை அல்ல. பணக்காரர்கள் மட்டுமே வைத்திருந்த செல்போன் இன்று ஒருவருக்கு ஒன்று என பரவலானதின் பின்னணி தனியார் தொலைத்தொடர்பு கம்பெனிகளின் தொழில்தந்திரமும் வியாபார உத்தியும் அன்றி, அனைத்தையும் அனைவருக்கும் பரவலாக்கும் பொதுவுடமை இல்லை. 500 ரூபாய்க்கு செல்போன் விற்று அனில் அம்பானி லாபம் சம்பாதித்தாரா இல்லை அதை வாங்கிய 500 ரூபாய் மாதச் சம்பளம் பெற்ற தொழிலாளி லாபம் சம்பாதித்தாரா?

தொழில் போட்டியும், புதிய சந்தையை உருவாக்குவதும், பழைய சந்தைகளை அழிப்பதும், முதலாளித்துவத்தின் அடிப்படை இயங்கு முறை. முதலாளித்துவம் தனக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை, ”ஒருபுறம் வலுக்கட்டாயமாக உற்பத்தி சக்திகளில் ஒரு பெரும் பகுதியை அழிப்பதன் மூலமும், மறுபுறம் புதிய சந்தைகளை கைப்பற்றுதல், பழைய சந்தைகளை கடைசிவரை கடைசி சொட்டு வரை சுரண்டுதல் மூலமும் சமாளிக்க முயற்சிக்கிறது” என்றார் காரல் மார்க்ஸ.

தொழில் போட்டிகளுக்காக விலையை குறைப்பது ஒன்றும் புதிதல்ல. அது பழைய கடைச்சரக்கு. தொலைதொடர்பு துறையில் திடீரென நுழைந்த முகேஷ் அம்பானி மற்ற நிறுவனங்களின் கையில் இருந்த சந்தையைக் கைப்பற்ற, ஜியோ சிம் கார்டை விலையில்லாமல் மூன்று மாதங்களுக்கு தந்தார். அதன் விளைவாக ஏராளமான பேர் மற்ற நிறுவனங்களிலிருந்து விலகி, ஜியோ சிம் கார்டை பயன்படுத்த ஆரம்பித்தனர். ஏற்கனவே நெருக்கடியில் இருந்த வோடபோன், ஏர்செல், ஐடியா, போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முகேஷ் அம்பானியோடு சண்டை செய்ய இயலாமல் வீழ்ந்தன. ”அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்போது காலியாகும்” என காத்திருந்த முகேஷ் அம்பானி தொலைதொடர்பு கட்டணத்தை 30 சதவிகிதம் உயர்த்தினார். 2015 ஆம் ஆண்டில் தொலைத்தொடர்புத் துறையில் நுழைந்த முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டில் இன்று 50 சதவீத செல்போன் சந்தை உள்ளது.

குறைந்த விலைக்கு பொருட்களை விற்று, போட்டியாளர்களை வீழ்த்தி சந்தையைக் கைப்பற்றி பின்னர் விலையை உயர்த்தி லாபத்தை அதிகரிப்பது முதலாளிகளுக்கு பாலபாடம். முகேஷ் அம்பானி இன்று செய்ததை கோபிநாத் அன்று செய்தார். 2003 ஆம் ஆண்டில் மலிவு விலை டிக்கெட் என்ற வியாபார யுத்தியுடன் விமானச் சந்தைக்குள் நுழைந்த கோபிநாத் 3 ஆண்டுகளில் 20 சதவீத சந்தையை கைப்பற்றினார். தனிப்பெரும் முதலாளி கனவோடு இருந்த கோபிநாத்தை இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற மலிவு விலை விமான நிறுவன முதலாளிகள் கோபிநாத்தின் உத்தியை வைத்தே அவரை வீழ்த்தின. தொழில் போட்டியும் கடனும் நெருக்க தனது நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை 550 கோடி விஜய் மல்லையாவுக்கு விற்று நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொண்டார். ஏர் டெக்கானை வாங்கிய விஜய் மல்லையா விழுந்தது தனிக்கதை.

ஒரு ரூபாய்க்கு டிக்கெட் விற்றவர் ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர் ஆனது எப்படி? சேவை மனப்பான்மையுடன் இருந்ததாலா?

வரம்பின்றி திறந்து விடப்பட்ட இந்திய பெரு சந்தையில் கால்பதித்த முதலாளி வர்க்கத்தின் உற்பத்திப் பொருட்களுக்கு மென்மேலும் விரிவடைந்து வரும் சந்தைத் தேவை. அதற்கு அந்தத் தேவை, முதலாளி வர்க்கத்தை இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் ஓடும்படி விரட்டுகிறது. அது எல்லா இடங்களிலும் கால் பதிக்க இடம் தேடி தேட வேண்டியதாகிறது. எல்லா இடங்களிலும் தொடர்புகளை நிறுவ வேண்டியதாகிறது. ஏர் டெக்கான் மூலம் கோபிநாத் இந்தியாவின் சிறு குறு நகரங்களை நோக்கிப் போனார். ஒவ்வொரு முதலாளியும் தனது தொழிலை வளர்க்க லாபத்தை பெருக்க செய்யும் செயல் அது. அதற்காக எதையும் செய்ய துணிந்தால் தான் அவர்களால் முதலாளியாக நீடிக்க முடியும். கோபிநாத்தும் இதற்கு விதிவிலக்கல்ல.


படிக்க : சாராஸ் திரைப்படம் : குழந்தைப் பேறு வரமா ? சாபமா ? || ராஜசங்கீதன்


மனிதகுலம் சந்திக்கும் துன்ப, துயரங்களை பயன்படுத்தி மூலதனக் குவிப்பை செய்வது முதலாளித்துவ அமைப்பின் தவிர்க்க முடியாத குணாம்சமாக இருக்கிறது. எதையும் லாபமாக பார்க்கும் முதலாளி வர்க்கம், கொரானா பெருந்தொற்று காலத்தையும் லாபம் சம்பாதிக்கும் வாய்ப்பாகவே பார்த்தது. அதனால் தான் கொரானா காலத்திலும் யுபிஎஸ் (UBS), பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் (Price Waterhouse Cooper’s -PWC) அறிக்கையில் இந்திய பணக்காரர்களின் நிகர வருமானம் 2020 ஏப்ரல் – ஜுலையில் மட்டும் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 423 பில்லியன் டாலர். நாடு முழுவதும் மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு பொதுமுடக்கம் கடும் அமலில் இருந்த காலகட்டத்தில் பணக்காரர்களின் வருமானம் இவ்வளவு உயர்ந்துள்ளது.

பணக்காரர்களை எனது வாடிக்கையாளராக கருதவில்லை மாறாக எனது அலுவலகத்தில் சுத்தம் செய்யும் பெண்ணும், ஆட்டோ ஓட்டுநரும், மற்றும் இவர்களைப் போன்ற ஏழை மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறோம், ஏழை மக்களும் பறக்க முடியும் என கனவு காண வேண்டும். அந்தக் கனவை நாங்கள் நனவாக்குவோம் என்றார் கோபிநாத். அந்தக் கனவு உண்மையில் மக்களின் கனவல்ல. அது கோபிநாத் என்ற முதலாளியின் கனவு. ஏழை எளிய மக்கள் விமானத்தில் பறப்பதின் மூலம் தன் வாழ்வில் எந்தப் பிரச்சினைகளையும் திருத்தி விடப்போவதில்லை. ஆனால் முதலாளிகள் கொள்ளை லாபம் சம்பாதிப்பது நிச்சயம். எனவே மக்களுக்கு இல்லாத கனவைத் தூண்டி, அதன் முலம் நுகர்வை அதிகரித்து, தங்கள் மூலதனத்தை பெருக்குவதே முதலாளித்துவம் காணும் கனவு.

தாங்கள் காணும் கனவை மக்களின் கனவாக மாற்றுவதுதான் முதலாளிகள் செய்யும் சேவை.

(தொடரும்…)

சு.விஜயபாஸ்கர்

disclaimer

மக்களிடயே அறிவியல் கண்ணோட்டத்தை உருவாக்க, பார்ப்பன பாசிசத்தை எதிர்த்த புஷ்ப மித்ர பர்கவா! – பாகம் 2

0

மக்களிடயே அறிவியல் கண்ணோட்டத்தை உருவாக்க, பார்ப்பன பாசிசத்தை எதிர்த்த புஷ்ப மித்ர பர்கவா! – பாகம் 1

மக்களிடயே அறிவியல் கண்ணோட்டத்தை உருவாக்க,
பார்ப்பன பாசிசத்தை எதிர்த்த புஷ்ப மித்ர பர்கவா! – பாகம் 2

திருட்டு!

ஜனவரி 7-ம் தேதி தில்லி வந்தபோது அவசரநிலை ஆட்சி இருந்தது. தேர்தல் அறிவித்து, தேர்தல் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. நாங்கள் கண்காட்சி வேலைகளை முழுதும் முடித்து திறப்பு விழாவிற்கு தயாராயிருந்த மார்ச் 21ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்திரா காந்தி தோற்று, மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். புதிய அரசாங்கத்திற்கு, இன்று நாம் வெளிப்படையாக அனுபவித்து வருகிறோமே அந்த இந்துத்துவ அஜண்டா, மறைமுகமானதாக இருந்தது. ஏற்கனவே குறிப்பிட்ட போஸ் போன்றோர் ஆதிக்கம் செலுத்தவும், திறன் மிக்க ரியாஸ் அகமது போன்றோர் அடங்கியிருக்கவும் ஆனது. எங்கள் கண்காட்சியில் இருந்த பல செய்திகளும் மத அடிப்படைவாதத்திற்கு எதிரானதாக இருந்தது. மூடநம்பிக்கைகளை எதிர்த்து, அறிவியல் கண்ணோட்டம், காரண-காரிய தேடல், பகுத்தறிவு, புறநிலை உண்மையிலிருந்து முடிவுக்கு வருவது போன்றவை இயல்பாகவே மத அடிப்படைவாதங்களுக்கு எதிரானதாகத்தானே இருக்கும்!

மார்ச் 21க்குப் பின் காட்சிகள் வேகமாக மாறத் தொடங்கின. சில நாட்களில் ரியாஸ் அகமது தனது என்சிஇஆர்டி இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார். போஸ் போன்றோர் காட்டில் மழை! எங்களுக்கு உள்ள பாராளுமன்ற தொடர்புகள் மூலம் பிரதமர் மொரார்ஜி தேசாயை வைத்து திறப்பு விழா நடத்த முயன்றோம். என்சிஇஆர்டி-யும் புதிய கல்வி அமைச்சரும் ஒத்துழைக்கவில்லை. வேறு வழியின்றி கண்காட்சியைப் பூட்டி வைத்து விட்டு அனைவரும் ஐதராபாத் திரும்பினோம்!


படிக்க : ஜூலை 1, 1921 : சீன கம்யூனிஸ்ட் கட்சி உதய நாளை நினைவுக்கூறுவோம்!


தற்செயல் நிகழ்வாக எனது மிக நெருங்கிய உறவுப் பெண் ஆஷா சிங் பால் பவனில் பணியாற்றி வந்தார். பால் பவன் இயக்குனருடன் எனக்கு நல்லுறவும் இருந்தது. அவரிடம் பேசி, ஆஷாவிடம் ஒரு சாவியைக் கொடுத்து கண்காட்சி அரங்கை பராமரித்து வரச் சொன்னேன். அரசாங்கத்தை அணுகி கண்காட்சியை அரசே ஏற்று நடத்த பேசுவது, அல்லது கண்காட்சியை யாருக்காவது விற்றுவிடுவது என இரு யோசனைகள் இருந்தது. முதல் வாய்ப்பு மிகக் குறைவு எனத் தெரிந்தது. எனவே விற்பதற்கான ஆட்களைத் தேடத் தொடங்கினேன்.

ஆந்திரப் பிரதேச அரசு கண்காட்சியை வாங்கி, ஐதராபாத்தில் அமைக்க முன்வந்தது. கல்வித் துறை அதிகாரிகளும், கல்வி அமைச்சரும் தில்லி சென்று கண்காட்சியைப் பார்த்து மிகவும் திருப்தியுற்று, கட்டாயம் வாங்கிக் கொள்வதாக கூறினர். 6000 சதுர அடிக்கு மேல் மத்திய நூலகத்தில் இடமும் ஏற்பாடு செய்தனர். 1978 ஆகஸ்ட் 7 அன்று ஆந்திர அரசின் முதன்மை நிதித் துறை செயலர் எனது அலுவலகம் வந்து, கண்காட்சியை வாங்கிக் கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது என்றார். அன்றே, இந்திய தேசிய அறிவியல் அகாடமி கவுன்சிலில் என்னை உறுப்பினராக தேர்வு செய்ததைப் பற்றி பாதுகாப்புத் துறை அறிவியல் ஆலோசகர் என்னிடம் நேரில் வந்து தெரிவித்தார். அதே நேரம் தில்லி பால் பவனிலிருந்த உறவுப் பெண் ஆஷா தொலைபேசியில் அழைத்து, கண்காட்சியை மொத்தமாகக் காணோம் என்றார். இடி விழுந்தது போலாயிற்று.

உடனடியாக ஆகஸ்ட் 9ம் தேதியே தில்லி விரைந்து சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பார்த்தேன். யாரும் என்னுடன் முகம் கொடுத்துப் பேசாதது மட்டுமின்றி, குறிப்பாக கண்காட்சி பற்றி வாயே திறக்க மறுத்தனர். அரசாங்கம் மாறியதும் எல்லோரும் மாறி விட்டனர். யார் எடுத்துச் சென்றனர், எங்கே உள்ளது என எதையும் என்னிடமே சொல்ல மறுத்தனர். என்சிஇஆர்டி-யின் புதிய இயக்குனரைச் சந்திக்க முயன்று, அவரைப் பார்க்கவே முடியவில்லை. வேறு வழியின்றி, ஆகஸ்ட் 11ல் தில்லியிலேயே செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினேன். நிறையப் பேர் கலந்து கொண்டனர். அடுத்த இரண்டு நாட்களுக்கு நாட்டின் எல்லா இதழ்களிலும் கண்காட்சி திருடப்பட்டு, காணாமற் போனதுதான் பரபரப்புச் செய்தியாகவும் தலைப்புச் செய்தியாகவும் ஆனது. அலெக்சாண்ட்ரியா நூலகம், வெற்றி பெற்ற ரோமானியர்களால் எரிக்கப்பட்டதுடன் ஒப்பிட்டு செய்திகளை எழுதினார்கள். உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் அறிவியல் கண்காட்சி மறைந்த மாயம் பற்றி விரிவாக எழுதினர். புகழ் பெற்ற அறிவியல் இதழ்களான நேச்சர் (NATURE), சயின்ஸ் (SCIENCE) இதழ்களும் விரிவாகவே எழுதின.

ஜனதா அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் உத்தரவில், என்சிஇஆர்டி-யின் தூண்டுதலின் பேரில் கண்காட்சி சில மணி நேரங்களில் வாரிச் சுருட்டி, களவாடப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் தான் வாகனங்களில் வந்து வழித்தெடுத்துச் சென்றுள்ளனர். (இன்று சாலைகளில் மனித உயிர்களை படுகொலை செய்யும்) இந்த கொலைகார கும்பல், அறிவியல் உபகரணங்களைப் பற்றி அறிந்திருக்குமா? விலைமதிப்பற்ற வண்ணப் படக்  காட்சிகளைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? முறையாக, விவரம் தெரிந்தோர் இதை எடுப்பது என்றால் கூட இரு வாரங்கள் ஆகும்! இரவு பகல் பாராமல் பரபரப்பாக செய்தால் கூட ஒரு வாரமாவது ஆகும்! சிலமணி நேரங்களில் அப்புறப்படுத்துவது என்றால் அழித்தொழித்து விட்டார்கள் என்றே பொருள்! மின் வயர்கள் மட்டும் பல மைல் நீளம் என்றால் எத்தனை கருவிகள், மின்விளக்குகள் உட்பட மின்சாதனங்கள் எனக் கணக்கிட்டுப் பாருங்கள்!

இந்தக் கண்காட்சி இந்தியாவில் எங்குமே நடக்கக் கூடாது என்றே ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள் இதைப் பெயர்த்தெடுத்துள்ளனர். (அன்றைய ஜனதா அரசாங்கத்தில் கேபினட் அந்தஸ்தில் ஒரு பிஜேபி அமைச்சர்தான் இருந்தார். இன்றோ அவர்களின் ஆட்சி. அதனால்தான் பயமே இன்றி தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கௌரி லொங்கேஷ் என பகுத்தறிவாளர்களும், அறிவியல் சிந்தனையைப் பரப்புவோரும் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இது மக்களிடம் எதிர்க் கருத்துக்களை உருவாக்கவே, அதிலிருந்து  கற்றுக் கொண்டு, இன்று சுய சிந்தனை உள்ள அறிவுத் துறையினரை நகர்ப்புற நக்சல்கள் என அவதூறு செய்து, சிறையிலிட்டு சித்திரவதை செய்து கொல்கிறார்கள்!) 2500 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமிராண்டிக் காலத்திற்கு சமூகத்தை பின்னுக்கு இழுத்துச் செல்ல முனையும் மத அடிப்படைவாதிகள், முன்னோக்கிச் செல்லத் தூண்டும் அறிவியல் கண்காட்சியை அனுமதிப்பார்களா?

கண்காட்சி பற்றி பிரதமர் மொரார்ஜியை செப்டம்பர் 27ல் சந்திக்க முடிந்தது. அவரது அறையில் நுழைந்தபோது வரவேற்கவுமில்லை, அமரச் சொல்லவுமில்லை. கீழே குனிந்து கொண்டிருந்தார். நானே சென்று அவருக்கு முன் உள்ள நாற்காலியில் அமர்ந்து காணாமற் போன கண்காட்சி பற்றிக் கூறினேன். தலையை உயர்த்தாமலே ஏன் முதலிலேயே என்னிடம் கூறவில்லை எனக் கேட்டார். எல்லாப் பத்திரிகைகளிலும் செய்தியாக வந்ததே என்ற போது நான் பத்திரிக்கை படிப்பதில்லை என்றார்! பாராளுமன்றத்திலேயே கடும் விவாதம் நடந்ததே என்றேன். நல்லவேலை பாராளுமன்றமே செல்வதில்லை என்று கூறவில்லை. பின்னர் டாக்டர் மாத்தூர் என்பவர் தலைமையில் ஒருநபர் விசாரனைக் கமிசன் அமைத்தார். அது எதிர்பார்த்தது போலவே அரசாங்கம், என்சிஇஆர்டி இரண்டுக்கும் இதில் (களவாடியதில்) தொடர்பில்லை என நற்சான்று தந்து முடித்துக் கொண்டது.

இந்தியப் பகுத்தறிவாளர் கழகம் ஆந்திர உயர்நீதி மன்றத்தில் ஒரு ரிட் மனுப் போட்டு, அது விசாரணைக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது. என்சிஇஆர்டி-யின் நடவடிக்கை இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்ற அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது. புகழ்பெற்ற மனித உரிமைப் போராளி, வழக்கறிஞர் கண்ணபிரான் அவர்கள் எங்கள் தரப்புக்கு ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்பட்டது. ஆயினும் நீதி மட்டும் கிட்டவில்லை. (எப்போது இந்திய நீதிமன்றங்கள் இயற்கை நீதி வழங்கியிருக்கின்றன? நீதி என்பது விதிவிலக்கானதாகி வருகிறது.)

அறிவியல் கண்காட்சி மீண்டும் உயிர்த்தெழுந்தது!

இதற்கிடையே ஆந்திர கல்வித் துறை அதிகாரிகள் மெனக்கெட்டு தில்லி சென்று, பலரிடமும் பேசி, கடைசியில் ஒருவழியாக கண்காட்சியைக் கண்டு பிடித்துவிட்டார்கள்! இவர்களின் இமாலய முயற்சியைப் பாராட்டியே ஆக வேண்டும்! என்சிஇஆர்டி வளாகத்திலேயே, அங்குள்ள ஒரு குடௌனில் குப்பையாக கண்காட்சிப் பொருட்கள் போடப்பட்டிருந்தது. ஆந்திர கல்வித் துறை அதிகாரிகள், என்சிஇஆர்டி அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி, அவர்கள் செலவு செய்த தொகையைத் தந்து கண்காட்சிப் பொருட்கள் அனைத்தையும் 1980ல் எடுத்து வந்தனர். மீண்டும் 2 ஆண்டுகள் வேலை செய்து கண்காட்சி உருவாக்கப்பட்டது. கண்காட்சி காணாமல் போய் ஆந்திர அரசு கண்டு பிடித்து எடுத்த அந்த இடைப்பட்ட காலத்தில் வெளிநாடுகள் பலவும் (ஹாலந்து, அமெரிக்கா போல) அந்தக் கண்காட்சியை தங்கள் நாடுகளுக்கு அனுப்ப இயலுமா என விசாரித்தனர். அந்த அளவு கண்காட்சி பற்றிய செய்தி உலகம் முழுவதும் கல்வித் துறை வட்டாரத்தில் பிரபலமாகி இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை!

மத்தியில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு, மீண்டும் இந்திரா காந்தி பிரதமர் ஆனார். ஆந்திராவிலோ என்டிஆர் முதல்வராகி விட்டார். இதன் காரணமாக, கண்காட்சி திறப்பு விழா தள்ளித் தள்ளிப் போய் இறுதியில் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பின்பு 1984 நவம்பர் 12ல் திறக்கப்பட்டது. புகழ் பெற்ற அறிவியலாளர்கள் பலரும் வந்து திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். ஆந்திர முதல்வர் என்டிஆரும் கலந்து கொண்டார். மக்கள் ஆர்வமாக வந்து கண்காட்சியைப் பார்த்து கொண்டாடினர் என்றே சொல்ல வேண்டும். இதை தொடர்ந்து நடத்துவதற்கு மாணவர்கள், அரசு-தனியார் ஊழியர்கள், குடும்பப் பெண்கள் என 700க்கும் மேற்பட்டோர் தன்னார்வலர்களாக தொண்டாற்ற முன்வந்தனர். அவர்களை நேர்காணல் செய்து சில நூறு பேரை தெரிவு செய்து, முறையான பயிற்சி அளித்து பயன்படுத்தினோம். அறிவியல் கண்ணோட்டம் தந்து மக்களை மூட நம்பிக்கைகளிலிருந்து மீட்க வேண்டிய ஆட்சியாளர்களோ, இன்று, பிற்போக்கு சாதி-மத மோதல்களைத் தூண்டி மக்களைக் கூறு போட்டு படுகொலைகளைச் செய்கின்றனர்!


படிக்க : பாசிச எதிர்ப்புப் போராளி நிகோலா வாப்சரோவ்–வை நினைவு கூர்வோம்!


அறிவியல் முறை பற்றிய இந்தக் கண்காட்சியை இந்திய அரசாங்கத்தின் ஃபிலிம்ஸ் டிவிசன் 35mm திரைப்படமாக எடுத்து, 1980களின் இறுதியில் வெளியிடப்பட்டது. அது வீடியோவாகவும் வெளிவந்தது. இதே ஃப்லிம்ஸ் டிவிசன் இக் கண்காட்சியை ஒரு குறும்படமாகவும் எடுத்து வெளியிட்டது. நாடு முழுவதும் 700க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இக் குறும்படம் 1980 களின் இறுதியில் திரையிடப்பட்டது.

***

அறிவியல் கண்ணோட்டத்தை மக்களிடம் உருவாக்க வேண்டும் என 1970களிலேயே போராடிய அறிவியலாளர் புஷ்ப மித்ர பர்கவா போன்றவர்கள் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? 1977 கூட்டணி மந்திரி சபையில் இடம் பெற்ற உடனே பாஜக-வும் ஆர்.எஸ்.எஸ். கும்பலும் தங்களின் இந்துத்துவா அஜண்டாவைத் துவங்கி விட்டனர் என்பது மேற்கூறிய சம்பவத்திலிருந்து தெரிய வருகிறது. இந்த பார்ப்பன பாசிச கும்பல் ஏன் இந்த அளவு வெறி பிடித்து அலைந்தது என்பது பற்றி சயன்ஸ் இதழ் கட்டுரை மூலம் தெரிய வருகிறது. சாய்பாபா போன்ற மோசடி நபர்களை அறிவியல் கண்ணோட்டம் கேள்வி கேட்க வைக்கிறது.

சாமியார்கள், சாதுக்கள், வேதங்கள், ஜோதிடங்கள் எல்லாம் கேள்வி கேட்கக் கூடாதவை என பார்ப்பன பாசிசம் கட்டமைக்கிறது. ஆனால் எதையும் ஏன், எதற்கு, எப்படி என கேள்வி கேட்கச் சொல்கிறது அறிவியல் கண்ணோட்டம். தவிர அறிவியலின் வரலாறு பகுதியில் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் படங்கள் வைத்து அறிவியல் கோட்பாடுகளை சமூக மாற்றங்களுக்கும் பொருளாதார திட்டங்களுக்கும் பயன்படுத்தியவர்கள் என விளக்கப்பட்டிருந்தது என சயன்ஸ் இதழ் கட்டுரை குறிப்பிடுகிறது.

பார்ப்பன பாசிச கும்பல் வெறியாட்டம் போட இவை போதாதா? இந்த பார்ப்பன பாசிச கும்பலை வீழ்த்தி, நாம் என்றைக்கு அரசியல் சட்டம் குறிப்பிடும் அறிவியல் கண்ணோட்டத்தை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கப் போராடப் போகிறோம்? அந்த நாள் தான் பர்கவா போன்ற அறிவியலாளர்களை உண்மையாக நாம் நினைவு கூறும் நாளாகும்!

(முற்றும்)

(Angel, Devil and Science என்ற புஷ்ப மித்ர பர்கவா எழுதிய புத்தகத்தை தழுவி எழுதிய சுருக்கமான கட்டுரை.)


நாகராசு

சனாதனதுக்கு எதிராக பேசினால் துப்பாக்கி குண்டுகள் பாயும்; மிரட்டும் ஆர் (எஸ்.எஸ்) என். ரவி..!

கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். இல்லை இல்லை ஆர்.எஸ்.எஸ் ரவி கலந்துகொண்டார்.

இந்தியாவில் ஆளும் அரசுக்கு எதிராக துப்பாக்கியை பயன்படுத்துவோருக்கு துப்பாக்கியால் தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார். அதாவது வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் சில குழுக்கள் தங்களது வாழ்க்கை மற்றும் உரிமையை மறுக்கும் இந்த அரசுக்கு எதிராக ஆயுதந்தாங்கி போராடி வருகிறன்றனர். இந்த குழுக்களையும் நக்சலைட் மவோயிஸ்டுகளையும் துப்பாக்கி கொண்டு அடக்குவோம் என்று அவர் பேசியுள்ளார்.

இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்காக காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் உழைக்கும் மக்களை இந்திய ராணுவ அடியாள்படை கொன்று குவித்து வருகிறது. அங்கு இருக்கும் சிறப்பு ராணுவ ஆயுத சட்டத்தை பயன்படுத்தி கொண்டு பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சொல்லிமாளாத பல்வேறு கொடுமைகளை செய்து வருவதை தனது வாடிக்கையான தொழிலாக இந்திய ராணுவத்தினர் வைத்துள்ளனர். ஆயுதம் காட்டி அடக்குமுறை செய்யும் இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு எதிராகதான் அந்த குழுக்கள் ஆயுதம் தாங்கி போராடி வருகிறது. அதுபோல் உழைக்கும் மக்களின் விடியலுக்காவும் இந்திய அரசின் அடக்குமுறை மற்றும் இயற்கை கொள்ளைக்கும் எதிராக ஆயுதம் தாங்கி போராடி வருகிறார்கள் நக்சலைட்கள் மற்றும் மாவோயிஸ்டுகள். ஆயுதம் தாங்கிய தனது போராட்டத்தின் மூலம் இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று நோக்கத்தில் செயல்படும் அவர்களை கொன்று ஒழிப்பதுதான் தீர்வு என்ற பொருளில் பேசியுள்ளார் இந்த ஆர் எஸ் எஸ் உளவாளி.

ஆனால் பீமாகொரேன்கான், மாலேகான் கலவரம், கோத்ரா ரயில் எரிப்பு, குஜராத் கலவரம், ஜாகின்பாக் கலவரம், பாபர் மசூதி இடிப்பு போன்றவற்றை நடத்திக்காட்டிய இந்துத்துவ ஆயுதந்தாங்கிய பயங்கரவாத கும்பல்களுக்கு அவர்கள் சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்பு தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் அனைவரும் இந்தியாவில் இந்துராஷ்டிரம் அமைக்க போராடுபவர்கள். அதனால் அவர்களை ஊக்குவித்து சட்டப்பாதுகாப்பும் அளிப்பதுதான் இந்த அரசின் நோக்கம்.

‘பாசிச படையெடுப்பின் கை தேர்ந்த உளவாளி’ ஆர்.என். ரவி !

தொடர்ந்து பேசிய அவர், ’’தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடுக்கு எதிராக பேசுபவர்களுடன் பேச்சுவார்த்தை அவசியமில்லை” என்று கூறியுள்ளார். அதாவது நாம் ஆயுதம் தாங்கி போராடவில்லை என்றாலும் கூட அரசின் அக்கப்போர்கள், அடக்குமுறைகள், உரிமை பறிப்பு மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக பேசினால் கூட ஆளும் வர்க்கத்தின் துப்பாக்கி நம்மை நோக்கி பாயும். அது ராணுவத்தின் துப்பாக்கியாக கூட இருக்கலாம் அல்லது கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்ற முற்போக்கு அறிவு ஜீவிகளை கொன்ற ஆர் எஸ் எஸ் அமைத்து இருக்கும் நிழல் ராணுவத்தின் துப்பாக்கி குண்டாக கூடா இருக்கலாம்.

மேலும் அவர் தேச ஒருமைப்பாடு என்று கூறுவது தற்போது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இருக்கும் ஒருமைப்பாடு அல்ல என்றும் அவர்கள் இந்தியாவில் மிகவேகமாக நடைமுறைபடுத்தி வரும் இந்து ராஷ்டிரத்தின் ஒருமைப்பாடுதான் என்று அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசியதிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.

ரவி தொடர்ந்து இப்படி பேசுவது என்பது அவர் ஏற்றுக்கொண்ட இந்துத்துவ சனாதன சித்தாந்தத்தின் அடைப்படியில் தான். அவருக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அதுதான் அகண்ட பாரத்தத்தில் இந்துராஷ்டிரா அமைப்பது. அந்த இந்து ராஷ்டிராவில் சனாதன தர்மம் சட்டமாக இருக்கும். அதற்கான பணிகளை அடித்தளத்தில் அவர்களது அடியாட்படை செய்து கொண்டு இருக்கும்போது அதை வெளிக்கூறும் நபராக தான் ரவி இருக்கிறார்.

ஏற்கனவே, சென்னை வானகரத்தில் உள்ள சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய ஆர்.என்.ரவி, ‘பாரதம் என்பது சனாதன தர்மத்தால் உருவாக்கப்பட்டது. மரத்தில் உள்ள இலைகள், கிளைகள் ஆகியவற்றைப் போல நமது எண்ணங்களும் செயல்பாடுகளும் கொள்கைகளும் மாறுபடலாம். வேற்றுமையில் ஒற்றுமையைப் போன்று பரமேஸ்வரா என்பது ஒன்றே என சனாதனம் கூறுகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதைத்தான் சனாதன தர்மமும் கூறுகிறது. நாட்டில் ராணுவம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைப் போல ஆன்மிகத்திலும் வளர்ச்சி என்பது அவசியம். அதுவே இந்தியாவின் வளர்ச்சியாக அமையும்’ எனக் குறிப்பிட்டார்.

ரிஷிகள், முனிவர்கள் மற்றும் சனாதன தர்மத்தின் ஒளியால் இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அரசியலைப்புச் சட்டமானது, சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது. என்று தான் ஏற்றுக்கொண்ட ஆர் எஸ் எஸ் சித்தாந்த கருத்தை வெளிப்படுத்தினார். ஏற்கனவே இருக்கும் சட்டத்தில் சானதன தர்மம் அடங்கி இருப்பதாகவும் அது தேவைக்கு ஏற்றவாறு வளர்ச்சியடைய வேண்டும் என்றும் கூறுகிறார். அதாவது இனிமேல் உருவாக்கப்படும் சட்டங்கள் அனைத்தும் வெளிப்படையாக சனாதன தர்மத்தின் அடிப்படையில் இருக்கும் என்றும் இலைமறைக்காயாக எடுத்து இயம்புகிறார். தற்போது பாசிச மோடி அரசால் இயற்றப்பட்ட பல்வேறு சட்டங்கள் இந்து ராஷ்டிரத்தை கட்டமைக்கும் வகையில் தான் உள்ளன. உபா சட்ட திருத்தம், பசுவதை தடை சட்டம், மதமாற்ற தடை சட்டம், மாட்டுக்கறி உண்ண தடை, லவ் ஜிகாத, கலால் ஜிகாத் என்று பல்வேறு செயல்பாடுகளை நாம் கூறலாம். இதுதான் தற்போது இருக்கும் இந்திய தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு. இதற்கு எதிராக யார் பேசினாலும் துப்பாக்கி குண்டுகள் பாயும். அது அமைப்பாக இருந்தாலும் தனி நபராக இருந்தாலும் சரி. இந்துத்துவ துப்பாக்கிகுண்டுகள் நம் உடலில் பாய்ந்தே தீரும் என்றும் திருவாளர் தமிழக ஆளுநர் கூறுகிறார்.

இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் !

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுந‌ர், திரு.ஆர்.என்.ரவி, அவர்கள் சென்னை ஸ்ரீ  ராம் சமாஜத்தில் ராம நவமி விழாவை தொடங்கி வைத்து, இன்றைய மிக முக்கிய காலத்தில் நம் நாடு அனைவரின் வளர்ச்சியையும் உள்ளடக்கி ராமராஜ்யத்தை நோக்கி முன்னேறி வருவதை விளக்கினார் என்று கூறப்பட்டிருந்தது. இதுபோன்ற கருத்துகள் மற்றும் ஒன்றிய அரசின் செயல்பாடுகள், இந்துத்துவ காலிகளின் களியாட்டங்கள் ஆகியவை இந்தியாவில் இந்துராஷ்டிரம் கட்டமைக்கப்பட்டு மிக தீவிரமாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது என்பது நன்கு புலனாகிறது.

ரவி தமிழக ஆளுநராக பதவியேற்றது முதல் அவர் செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் வெறும் மாநில அரசின் உரிமை பறிப்பு மட்டும் அல்ல. அது அகண்ட பாரதத்திற்கான அடித்தளம். தற்போது இந்த இந்துராஷ்டிரத்திரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விரைவில் ஆர் எஸ் எஸ், பாஜக அறிவிக்கும் இது இந்து ரஷ்டிரம் என்று. அந்த அறிவிப்பு 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகோ அல்லது முன்பாக கூட இருக்கலாம். அறிவிப்புக்காக மட்டும்தான் காத்து இருக்கிறது. தற்போது நம்மை ஆளும் இந்த இந்து ராஷ்டிரா.

மூச்சுவிட நேரம் தரும் என்று ’’இடைவெளியும்’’ அவர்களின் இளவல்களும் எடுத்து கூறிய, எந்த முன்னேற்ற கழகங்களும் நம்மை இந்த இந்துத்துவ அதானி அம்பானி பாசிசத்தில் இருந்து காத்துவிடாது. நாம் களம் புகாதவரை இந்த பாசிசத்தையும் வீழ்த்த முடியாது.

ராவண வடிவேல்

ஆர்.எஸ்.எஸ்-.பி.ஜே.பி, அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம்! சிறப்பு வெளியீடு!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

வரும் செப்டம்பர்17-ஆம் தேதி சென்னையில் ஆர்.எஸ்.எஸ்-.பி.ஜே.பி, அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம் என்ற முழக்கத்தின் அடிப்படையில், முற்போக்கு ஜனநாயக சக்திகளை அணிதிரட்டி நாம் மாநாடு நடத்தவிருக்கிறோம். இம்மாநாடு தொடர்பான அறிவிப்பு மற்றும் மாநாட்டிற்கான துண்டறிக்கையை நம் இணையத்தில் வெளியிட்டுள்ளோம்.

மாநாடு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அரசியல் கட்சி தலைவர்கள் & அமைப்புகளிடம் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் சார்பில் துண்டறிக்கை வினியோகம் செய்யப்பட்டது.

மக்கள் அதிகாரத்தின் சார்பில் சென்னையில் நடக்கும் மாநாட்டின் பிரசுரம் மற்றும் சிறப்பு வெளியீடு விடுதலை சிறுத்தைகளின் தலைவர்.தொல். திருமாவளவன் அவர்களிடத்தில் வழங்கப்பட்டது.
மக்கள் அதிகாரத்தின் சார்பில் சென்னையில் நடக்கும் மாநாட்டின் பிரசுரம் மற்றும் சிறப்பு வெளியீடு CPI(M) மாநில செயற்குழு உறுப்பினர் தோழர்.கனகராஜ் அவர்களிடத்தில் வழங்கப்பட்டது.
மக்கள் அதிகாரத்தின் சார்பில் சென்னையில் நடக்கும் மாநாட்டின் பிரசுரம் மற்றும் சிறப்பு வெளியீடு தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் தோழர்.பொழிலன் அவர்களிடத்தில் வழங்கப்பட்டது.
மக்கள் அதிகாரத்தின் சார்பில் சென்னையில் நடக்கும் மாநாட்டின் பிரசுரம் மற்றும் சிறப்பு வெளியீடு தமிழ்தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் மகிழன் அவர்களிடத்தில் வழங்கப்பட்டது

ற்போது மாநாடு தொடர்பான மைய முழக்கத்தின் அடிப்படையில், இந்த மைய இயக்கம் தொடர்பாக விரிவாக விளக்கும் வகையில், வெளியீடு ஒன்றை அச்சிட்டு வெளியிட்டுள்ளோம்! படியுங்கள்! பரப்புங்கள்!

வெளியீடு நன்கொடை : ரூ.10

இந்த வெளியீட்டை வாங்கி படித்து ஆதரவு அளிக்குமாறு, கேட்டுக்கொள்கிறோம்.

சுவரெழுத்து விளம்பரம்:

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை
தொடர்புக்கு :- 97916 53200, 94448 36642, 73974 04242, 99623 66321.

மாநாட்டில் கலந்து கொண்டு பாசிசத்தை வீழ்த்தும் பணியில் இணைந்து செயல்பட அறைக்கூவி அழைக்கிறோம். நன்றி!

திரைவிமர்சனம்: சூரரைப் போற்ற முடியாது – பாகம் 1 | சு.விஜயபாஸ்கர்

சூரரைப் போற்ற முடியாது – பாகம் 1

சூர்யா நடித்த சூரரைப்போற்று என்ற ஒரு திரைப்படம் அண்மையில் அமேசான் இணையதளத்தில் நேரடியாக வெளிவந்து பரவலான விவாதங்களை கிளப்பியது. அந்தப் படத்தை இயக்கியவர் மணிரத்னத்திடம் துணை இயக்குனராக பயிற்சி பெற்ற சுதா கொங்கரா என்ற பெண். 2000 ஆண்டுகளில் ஏர் டெக்கான் என்ற விமான போக்குவரத்து நிறுவனத்தை நிறுவி, நடத்திய கர்நாடகாவைச் சேர்ந்த பார்ப்பனர் கேப்டன் கோபிநாத் என்பவர்தான் இந்தப்படத்தில் வரும் சூரர்.

ஒரு புத்தகத்தையோ அல்லது ஒருவரது வாழ்க்கையையோ தழுவி எடுக்கப்படும் படங்கள் உண்மை கதைக்கு மிக நெருக்கத்தில் இருப்பதுதான் நியாயம், அவ்வாறின்றி படத்தின் விளம்பரத்திற்காக சில வணிக விடயங்களை சேர்த்துக் கொண்டாலும் நாம் அதை விமர்சிக்கப் போவதில்லை. ஆனால் நிஜக்கதைக்கும், உண்மைக்கும் தொடர்பில்லாத விடயங்களை மக்கள் மத்தியில், மக்களின் மூளைகளில் ஏற்றும்போது அதை விமர்சிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படுகிறது.

விமான் நிறுவனம் தொடங்கினாரா, விமானம் பறந்ததா இல்லையா என்பதே சூரரைப்போற்று திரைப்படத்தின் கதைக்களமாக இருந்தாலும், விமான நிறுவனம் தொடங்க சொல்லும் காரணமாக ”Not only cost barrier, break the damn caste barrier” எனச் சொல்லுவதாக எடுத்துக்கொள்ளலாம். அதாவது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் ஜாதிய ஏற்றத்தாழ்வுகளையும் ஒழிக்கவே விமானப் போக்குவரத்து நிறுவனத்தை தொடங்க விரும்புகிறார் நாயகன்.

திரைப்படத்தில் விமான நிறுவன விமான போக்குவரத்து நிறுவனத்தை துவங்கும் சூர்யா, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், சாதிய ஏற்றத் தாழ்வுகளையும் கடந்து அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் விமானப் போக்குவரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிறார்.


படிக்க : விக்ரம்  திரைப்பட வசூல் : மக்கள் அளித்த பணம் கவர்ச்சிக்கா? கருத்துக்கா?


பணக்காரர்களுக்கும் உயர் ஜாதியினருக்கு மட்டுமானது அல்ல விமானப் போக்குவரத்து, மாறாக ஏழைகளுக்கும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமத்து, விவசாய மக்களுக்கும் விமானம், பறக்க வேண்டும் என்கிறார் கதாநாயகன். கருப்புச்சட்டை அணிந்து சுயமரியாதை திருமணம் நடத்துகிறார். தங்களது ஊரில் நிற்காத ரயிலை மறித்து போராட்டம் எதிர்த்து போராட்டம் நடத்துகிறார் கதா நாயகன்.
மாறன் என்ற திராவிட இயக்க, தனித்தமிழ் பெயரையும் கதையின் நாயகனுக்கு சூட்டியுள்ளனர். பெரியார் படத்தையும் அங்காங்கே காட்டியுள்ளனர். பெரு நிறுவனங்களை விமர்சிக்கும் வகையிலான சில விமர்சனங்களையும் சேர்த்துள்ளனர்.
சாதியை விமர்சிக்கும் வசனங்களையும் ஆங்காங்கே தூவி விட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் பின்தங்கிய கிராமத்தில் இருந்து, பிறந்து வளர்ந்த, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் விமான நிறுவனத்தை தொடங்கியதாக காட்டுகிறார்கள்.

மேற்சொன்ன படத்தில் காட்டப்பட்ட மேற்சொன்ன கதைக்கும் கோபிநாத்தின் உண்மை கதைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கோபிநாத் கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த அய்யங்கார் ஜாதியை சேர்ந்தவர்.

ஏன் இப்படி உண்மைக்கு தொடர்பில்லாத வகையில் கதாபாத்திரத்தை வடிவமைக்க வேண்டும்? காரணங்கள் பல.

அகரம் அறக்கட்டளை, நீட் விஷயத்தில் சூர்யாவின் கண்டன அறிக்கை, அவரது மனைவி ஜோதிகாவின் சமீபத்திய ”கோயில்கள் தேவையில்லை, மருத்துவமனைகள் தேவை” என்ற பேச்சு ஆகியவை சூர்யாவுக்கு அண்மைக்காலத்தில் ஒரு முற்போக்கு பாத்திரத்தை தந்துள்ளன.

தமிழ்நாட்டில் எடுக்கப்படும் கதை என்பதாலும், படத்தைப் பார்ப்பவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்க அல்லது அதற்கும் கீழான பொருளாதார பார்க்க பின்னணியில் இருப்பவர்கள் என்பதாலும், தொழில் முனைவோர் கனவில் இருப்போர் என்பதாலும், விமானத்தில் ஒருமுறையாவது பறந்து விட மாட்டோமா என்ற ஏக்கத்தில் இருக்கும் ஒரு பெருங்கூட்டம், நாமும் பெரு முதலாளி ஆகிவிடுமோ நாம் விட மாட்டோமா என்ற கற்பனையில் இருக்கும் சிறு-குறு முதலாளிகள் போன்றோரை குறி வைத்தும்,
பார்ப்பன எதிர்ப்பிற்கு தமிழ்நாட்டில் உள்ள ஆதரவு என்ற பல காரணிகளை இணைத்து, எடுக்கப்பட்ட திரைப்படம் சூரரைப் போற்று.

கோபிநாத்தின் ஒரிஜினல் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட படத்தில் சொல்லப்பட்டுள்ள கதைக்கும் கோபிநாத்தின் ஒரிஜினல் கதைக்கும் தொடர்பே இல்லை.

யார் அந்த உண்மையான கோபிநாத்?

1990-களின் தொடக்கத்தில் இந்தியாவில் வணிக சந்தை தனியாருக்கு வரம்பின்றி திறந்துவிடப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு துறைகள் முழுமையாக தனியாரின் கட்டுப்பாட்டில் வந்தன. கருப்பட்டி மிட்டாயை ஈ மொய்ப்பது போல், 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட இந்தியாவை கார்ப்பரேட்களும், முதலாளித்துவ நிறுவனங்களும் மொய்த்தனர். அவற்றில் ஒரு வகை விமான போக்குவரத்து நிறுவனங்கள்.

பொதுத்துறை நிறுவனங்களான ஏர் இந்தியாவும் இந்தியன் ஏர்லைன்ஸ் மட்டுமே விமான சேவை வழங்கி வந்த நிலையில், இந்தியாவை உய்விக்க ”தனியார்மயம், தாராளமயம், உலகமயம்” வந்தால்தான் முடியும் என்ற முதலாளித்துவ திட்டத்தின் ஒரு பகுதிதான் தனியார் விமான சேவை நிறுவனங்கள். ஜெட் ஏர்வேஸ், பரமௌண்ட், பைஸ்ஜெட், இண்டிகோ, கிங்ஃபிஷர், என பற்பல தனியார் விமான நிறுவனங்கள் புற்றீசல் போல் முளைத்தன.

சில காலம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த கோபிநாத்துக்கு தொழில் முனைவர் ஆகும் ஆசை வந்தது எட்டு ஆண்டுகளில் ராணுவத்தை விட்டு விலகி, பட்டுப்பூச்சி பண்ணை, வாகன விற்பனை, ஹோட்டல் என பல சிறு சிறு தொழில்களை முயன்ற கோபிநாத்துக்கு இலக்கு பெரும் முதலாளியாக மாறுவது. அதன் நுழைவு வாயிலாக விமான போக்குவரத்து தொழிலை தேர்ந்தெடுத்தார் கோபிநாத். 1997 ஆம் ஆண்டில் தனது நண்பருடன் நண்பர் சாமுவேல் உடன் இணைந்து டெக்கான் ஏவியேஷன் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார் சாமுவேல் ஓர் தொழில்முறை விமானி. அவர்கள் இணைந்து தொடங்கிய டெக்கான் ஏவியேஷன் ஆரம்பத்தில் தனி நபர்களுக்கான விமான சேவை எனப்படும் ”சார்ட்டர் விமான சேவையை” வழங்கியது. அரசியல்வாதிகளும் கொழுத்த பணக்காரர்களும் கோபிநாத்தின் வாடிக்கையாளர்கள். சிறு குறு தொழில்களை செய்து வந்த கோபிநாத் இப்போது நடுத்தர முதலாளி ஆகிவிட்டார். ஆனால் முதலீட்டும் எண்ணம் அத்தோடு நின்று விடுமா?

கேட்பாரின்றி இறந்து கிடந்த இந்திய சந்தையும் நூறு கோடி மக்களும் கோபிநாத் கோபிநாத் பெரு முதலாளி கனவிற்கு தூண்டில் போட்டன. அதன் விளைவாக அரசியல்வாதிகளுக்கும், கொழுத்த பணக்காரர்களுக்கு மட்டுமே பறந்த டெக்கான் ஏவியேஷன், ஏர் டெக்கான் ஆக உருமாறி அனைத்து தரப்பு மக்களுக்குமான பொதுப் போக்குவரத்து விமான நிறுவனமாக பறந்தது. 2003இல் உருவெடுத்த ஏர் டெக்கானை, விளம்பரப்படுத்தி, பெரிய அளவில் சந்தை படுத்துவது எப்படி என முதலாளி கோபிநாத் சிந்திக்காமல் இருப்பாரா? சந்தை படுத்தாமல் எப்படி பெரு முதலாளி ஆவது?

உலகெங்கும் இன்று வரை பயணிகள் விமான போக்குவரத்து தொழில் முதலாளிகளுக்கு கொள்ளை லாபத்தை ஈட்டித் தரவில்லை. மிகக் குறைந்த நிறுவனங்களே லாபத்தில் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

தொழிற்போட்டி, ஏர்பஸ், போயிங் என்ற இரு நிறுவனங்களின் ஏகபோக உரிமையில் உள்ள விமானத் தயாரிப்பு, சர்வதேச சட்டங்கள், விதிமுறைகள், எரிபொருள் செலவு, விமான நிலையங்களுக்கு தர வேண்டிய கட்டணம் போன்ற பல்வேறு காரணிகளால் பல விமான நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன அல்லது நட்டத்தில் இயங்குகின்றன.


படிக்க : முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் !


லாபத்தில் பல்லிளிக்கவும், கும்மாளம் போடவும் எந்த முதலாளிக்கும் கசக்காது. ஆனால் நட்டத்தை பொறுப்பேற்க எந்த முதலாளி முன் வருவார்? குறைவான லாபம் அல்லது நட்டம் என்ற அளவில் இயங்கி வரும் விமான போக்குவரத்து நிறுவனங்கள் தங்கள் நட்டத்தை, அதாவது செலவுகளை குறைத்து, லாபத்தை அதிகரிக்க, கையிலெடுத்த யுத்தி No Frill Service, அதாவது எவ்வகையிலாவது விமானத்தை இயக்கும் செலவைக் குறைப்பது தான் இந்த மாடல்.

விமான வடிவமைப்பை மாற்றுவது, இருக்கைகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை குறைத்து அதிக இருக்கைகளை வடிவமைப்பது, பயணிகளுக்கு வழமையாக பயணச் சீட்டோடு வழங்கி வந்த உணவுப்பொருட்கள், மது போன்றவற்றை தனியாக பணம் பெற்று வழங்குதல்,
குறைந்த அளவிலான தொழிலாளர்களைப் பணியமர்த்துதல், முடிந்த அளவு குறைவான ஊதியம் வழங்குதல், டிக்கெட்டுகளை நேரடியாக விற்றல் என முடிந்த வகையில் செலவுகளை குறைத்து லாபத்தை கூட்டும் முயற்சியில் ஈடுபட்டன. குறைந்த விலையில் டிக்கெட்டுகளை விற்பதின் மூலம், அதிகப் பயணிகளை ஈர்க்க முடியும் என்ற உத்தியும் உண்டு.

Lean and Mean, No Frill, low-cost service என பல பெயர்களில் அறியப்பட்டாலும் குறைந்த செலவில் விமானத்தை இயக்கி அதிக அளவில் பயணிகளை ஈர்த்து, அதிக லாபத்தை ஈட்டுவது தான் விமான நிறுவனங்களில் அடிப்படை நோக்கம். இம்முறையில் அமெரிக்காவைச் சேர்ந்த சவுத் வெஸ்ட் ஏர்வேஸ் , அயர்லாந்தைச் சேர்ந்த ரியான் ஏர் போன்ற சில நிறுவனங்கள் மலிவு விலையில் பயண டிக்கெட்டுகளை தந்து அதிக லாபத்தை ஈட்டி வந்தனர், அதைப் பின்பற்றிய கோபிநாத், இந்திய பயணிகள் விமான போக்குவரத்து துறையில் பல செலவு குறைப்பு முறைகளை அறிமுகப்படுத்தினார்.

(தொடரும்…)

சு.விஜயபாஸ்கர்

disclaimer

மக்களிடயே அறிவியல் கண்ணோட்டத்தை உருவாக்க, பார்ப்பன பாசிசத்தை எதிர்த்த புஷ்ப மித்ர பர்கவா! – பாகம் 1

1

குறிப்பு : அறிவியலாளர் புஷ்ப மித்ர பர்கவா 2017-ம் ஆண்டு, ஆகஸ்ட் 1-ம் தேதி நம்மைவிட்டு பிரிந்தார். ஐதராபாத்தில் Centre for Cellular and Molecular Biology என்ற ஒன்றிய அரசின் ஆய்வகத்தை நிறுவி அதன் இயக்குனராக இருந்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய –  சர்வதேசிய கௌரவ பட்டங்களையும் விருதுகளையும், – பத்ம பூஷன், பிரான்ஸ் அதிபரிடமிருந்து லீஜன் தி’ஹானர், தேசிய குடிமகன் விருது உட்பட – வாங்கியவர். ஒன்றிய அரசின் பல துறைகளிலும், தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு உட்பட, ஆலோசகராக இருந்தவர். தனது இறுதி மூச்சு வரை அறிவியல் கண்ணோட்டத்தைப் பரப்பி வந்த பர்கவா, 1975-ம் ஆண்டில் அறிவியல் சிந்தனைகளை உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் மனதில் பதிய வைப்பதற்கு முடிவு செய்து, அறிவியல் கண்காட்சி ஒன்றை நிறுவ வேண்டும் என முனைந்தார். இதற்காக கடுமையாக 2 ஆண்டுகள் உழைத்து டில்லியில் ஒரு நிரந்தர கண்காட்சியையும் அமைத்தார்.

‘எதையும் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று ஏற்காதே! உனக்கு சரி எனப்படும் வரை எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என கேள்வி கேள்’ என கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ் (அடிமைச் சமூகத்தில் ஆண்டையாக வாழ்ந்த இவர் நம்மைப் போன்ற மனிதர்கள் ஏன், எப்படி, எதற்காக அடிமையானார்கள் என்ற கேள்வியைக் கேட்கவே இல்லை என்பது தனியே பரிசீலிக்க வேண்டிய ஒன்று) சொன்னார் அல்லவா, அந்த வழியில் உண்மையான அறிவியல் அறிஞர். அவரது அறிவியல் கண்காட்சியின் இறுதியில், இங்கு சொல்லப்பட்டவை நிரந்தர உண்மைகள் என்று ஏற்காதே, கேள்வி கேள் என்று மனதில் ஆழப் பதியும் வண்ணம் கூறியவர். ஆனால் அந்தக் கண்காட்சி தலைநகர் தில்லியில் அமையவில்லை! ஐதராபாத்தில் அமைந்தது. இன்று பார்ப்பன பாசிச கும்பல் அறிவுத் துறையினரை நரவேட்டையாடி வருகிறதே, அந்தக் கொடுமைகளை அன்றே அனுபவித்தவர் தான் இந்த அறிவியல் அறிஞர் பர்கவா! அது பற்றிய வரலாற்றை (பர்கவா அவர்களே எழுதியதிலிருந்து) இக்கட்டுரை சுருக்கமாகக் கூறுகிறது.

மக்களிடயே அறிவியல் கண்ணோட்டத்தை உருவாக்க, பார்ப்பன பாசிசத்தை எதிர்த்த புஷ்ப மித்ர பர்கவா!

***

அறிவியல் சிந்தனை முறை பற்றிய கண்காட்சியின் வரலாறு

இந்த வரலாறு ரியாஸ் அகமதுவிலிருந்து தொடங்குகிறது. கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சிஇஆர்டி) என்ற அமைப்பின் இயக்குனரான ரியாஸ் அகமது, அலிகார் இசுலாமிய பல்கலைக் கழகத்தின் பௌதிகப் பேராசிரியராக, விஞ்ஞானியாக இருந்தவர். என்சிஇஆர்டி இயக்குனர்களிலேயே மிகவும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டவர் இவர். வாழ்நாள் முழுதும் பகுத்தறிவாளராகவும் தேசியவாதியாகவும் வாழ்ந்தவர். இன்று நாடு முழுதும் உள்ள 10+2+3 கல்வி முறையை ஏற்படுத்தியவர். அதே போல உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும் வொகேசனல் கல்வி (ஐடிஐ, டிப்ளமோ என தொழிற்கல்வி), பல்கலைக் கழக கல்வி என இரு துறைகளாகப் பிரித்துப் பயிலும் முறையை உருவாக்கியவர்.

நேருவின் பிறந்த நாளில் தில்லியில் ஆண்டு தோறும் கல்வி கண்காட்சி நடைபெரும். 1975 மே 14 அன்று தில்லி சென்ற போது, ரியாஸ் அகமதுவைச் சென்று சந்தித்தேன். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் கண்ணோட்டம், அறிவியல் முறை பற்றி எழுதி வருகிறீகளே, நீங்கள் தேசிய அறிவியல் கண்காட்சியின் ஒரு அங்கமாக அறிவியல் முறை பற்றிய கண்காட்சியை ஏன் நிறுவ முன்வரக் கூடாது என என்னிடம் கேள்வி எழுப்பினார். இதைச் செய்ய ஏற்றுக் கொண்டால் என்சிஇஆர்டி பொருளாதார ரீதியாக உதவும் எனக் கூறினார்.

அறிவுப்பூர்வமாக சவாலானதாக இருந்ததால், இந்த யோசனை என்னைக் கவர்ந்தது. அறிவியல் முறை என்பது பற்றி கருத்து ரீதியாகவும் அறிவியல் நிபுனத்துவம் கொண்டவர்களுக்குப் புரியும் படியும் விளக்கி வந்த அறிவியல் முறை பற்றி, இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை புரிந்து கொள்ளும்படியாக, காட்சி வடிவில் ஒரு கண்காட்சியை நிறுவுவது என்பது உயர்ந்த மட்டத்திலான படைப்பாற்றலைக் கோருகின்ற ஒன்று. இதனாலேயே ரியாஸ் அகமதுவின் அழைப்பை நான் ஏற்றுக் கொண்டேன்.

ஐதராபாத் திரும்பிய உடனே ஒரு நாள் இரவு முழுதும் விழித்திருந்து, 50 பக்கங்களில் ஒரு திட்டத்தை அந்த இரவே எழுதித் தயாரித்தேன். அடுத்த சில நாட்கள் திட்டத்தில் எழுதியுள்ளதை காட்சிப் படுத்த ஆடியோ-வீடியோ காட்சிகள் என்னென்ன தேவைப்படும், நேரடியான பரிசோதனைகள் என்னென்ன செய்வது என தோராயமாக எழுதினேன். நான் என்ன எழுதியுள்ளேனோ அது கண்காட்சியை ஆதிக்கம் செய்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த திட்டமும் ஆடியோ-வீடியோ காட்சிகளும் (நேரடி பரிசோதனைகள், செய்முறை விளக்கங்கள் உட்பட) பல மாற்றங்களுக்கு ஆளானது. ஆனால் முதல் ஓரிரு நாட்களில் முடிவு செய்த அடிப்படையான திட்டங்கள் எந்த மாற்றமுமின்றி கடைசிவரை நின்று நீடித்தது.


படிக்க : பார்ப்பனியத்தை ஏற்காத அறிவியலாளர் புஷ்ப மித்ரா பர்கவா மறைவு


அடுத்ததாக கண்காட்சிக்கு தேவையானவற்றைத் தயாரிக்க ஐதராபாத்தில் உள்ள துறை சார்ந்த வல்லுனர்கள் 11 பேரிடம் பேசியதில் அனைவரும் இதில் பங்கேற்க ஆர்வமுடன் இசைந்தனர். முதல் கூட்டம் எனது (பர்கவா) வீட்டில் நள்ளிரவு வரை உற்சாகமாக நடந்தது. அன்றைக்கு இளம் வயதினராக இருந்த அந்த வல்லுனர்கள், இன்றைக்கு அவரவர் துறைகளில் பல்வேறு சாதனைகள் புரிந்து அறிவியல் உலகில் மட்டுமல்ல பொதுவில் நன்கு அறிமுகமானவர்களாக உள்ளனர். இந்தக் கண்காட்சி வேலைகள் என்னை எப்படி மாற்றியதோ, அதே போல அவர்கள் வாழ்விலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

என்சிஇஆர்டி தரும் பணம் கண்காட்சி வேலைகளுக்குப் போதுமானதாக இருக்காது என்பதை உணர்ந்தேன். இந்தக் கண்காட்சி அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்றால், தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமான ஒன்றாக நிறுவப்பட வேண்டும் என அனைவருமே விவாதித்து முடிவுக்கு வந்தோம். இந்த இரு முடிவுகள் பற்றி என்சிஇஆர்டி-யிலும் அதன் இயக்குனர் ரியாஸ் அகமதுவிடமும் பேசி ஒப்புதல் பெற்றோம்.

நிதிக்காக விஎஸ்டி தொழிற்சாலைகளின் தலைவர் ஆன்ந்த்லால் என்பவரை அணுகினேன். அவர் உடனடியாகவே ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார். இவர் நிதி தரவில்லை என்றால் இந்தக் கண்காட்சியே உருவாகியிருக்காது. (இன்றைய பிஜேபி ஆட்சி அன்று இருந்திருந்தால் இந்த திட்டமே உருவாகியிருக்காது. ஒரு வேளை தொடங்கியிருந்தால் ஆன்ந்த்லாலிடம் பணம் வாங்கி மோசடி செய்துவிட்டார் என பர்கவா மீது குற்றம் சாட்டி சிறையிலடைத்து, சாகும்வரை கம்பி எண்ணிக் கொண்டிருந்திருப்பார் என்பதே உண்மை. – நாகராசு). தவிர நான் பணிபுரியும் ஆய்வகமும் நல்ல ஒத்துழைப்பு நல்கி, கண்காட்சி வேலைகள் நடக்க, தனி ஒரு கட்டிடமும் ஒதுக்கித் தந்தது. எனது ஆய்வகம் (Centre for Cellular and Molecular Biology) அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆய்வு மையத்தின் (சிஎஸ்ஐஆர்) கீழ் தனித்து இயங்கும் ஒரு நிறுவனம். இது கடைசிவரை தடையின்றி கண்காட்சியை நிறுவ உதவியது. அன்றைய சிஎஸ்ஐஆர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த நாயுடம்மாவும் முழு ஆதரவு தந்தார்.

இவர்கள் தவிர உலகம் முழுவதிலுமிருந்து தனிநபர்களும், நிறுவனங்களும் அரிதான, மதிப்பு மிக்க பொருட்கள், விவரங்கள், காட்சிப் படுத்த ஆடியோ-வீடியோ கொடுத்து உதவினர். தனிநபர்கள் துறை சார்ந்த வல்லுனர்கள் ஆவர். மேலும் தேசிய ஜியோபிசிகல் ஆய்வுக் கழகம்-ஐதராபாத், மாக்ஸ் முல்லர் பவன்-ஐதராபாத், ஆந்திர பிரதேஷ் விவசாய பல்கலைக் கழகம்-ஐதராபாத். தெற்கு மத்திய ரயில்வே, இந்திய வானிலையியல் துறை-புது தில்லி, பாபா அணு ஆராய்ச்சி மையம்-ட்ராம்பே, இந்துஸ்தான் ஆண்டிபயாடிக்ஸ் லிட்.-பிம்ப்ரி, வைரஸ் ஆய்வு மையம்-பூனா, பிரிட்டிஷ் கவுன்சில்-சென்னை, அமெரிக்க தகவல் சேவை-சென்னை,பம்பாய், ராயல் சொசைட்டி-லண்டன், பாஸ்டர் இன்ஸ்டிடூட்-பாரிஸ் போன்ற பல நிறுவனங்களும் உதவின.  பல்வேறு பதிப்பகத்தினர், எழுத்தாளர்களின் நூல்களில் இருந்து விவரங்கள், அரிய புகைப்படங்களை எடுத்துக் கையாண்டோம்.

இந்தக் கண்காட்சியை உருவாக்க சுமார் 2 ஆண்டுகள் ஆனது. 1976 இறுதியில் கண்காட்சி முழு வடிவம் பெற்ற போது, இதைக் காட்சிப் படுத்தவே 5000 சதுர அடிக்கும் மேலான இடம் தேவைப்படுவதோடு, நிர்வாகத்திற்கும் கூடுதலாக இடம் இருந்தால் தான் சிறப்பாக அமையும் என உணர்ந்தோம்! ஐதராபாத்தில் அமைத்தபோது வந்து பார்த்த பலரும், இது நாட்டின் தலைநகரான தில்லியில் நிரந்தரமாக அமைக்கப்படுவதே சிறப்பாக இருக்கும் என்றனர்.

ரியாஸ் அகமது, அன்றைய ஒன்றிய கல்வி அமைச்சர் நூருல் ஹாசன் இருவருமே கண்காட்சி நிரந்தரமானதாக நிறுவப்பட வேண்டும் என முழு மனதோடு ஏற்றுக் கொண்டனர். தில்லி கோட்லா மார்க்கில் உள்ள பால பவன் வளாகத்தில் உள்ள போலிஷ் பெவிலியன் இதற்கு ஏற்ற இடம் என தெரிவு செய்தனர். அது தனியாக உள்ள கட்டிடம். கண்காட்சி தனித்துவமாக விளங்கும் என முடிவானது.

கண்காட்சி அமைக்கும் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். என்சிஇஆர்டி-யின் அறிவியல் பிரிவு தலைமையில் இருந்த அதிந்திர போஸ், என்னுடன் லக்னௌ பல்கலைக் கழகத்தில் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பில் 1942-1946ல் ஒன்றாகப் படித்தவர். என்சிஇஆர்டி-யில் ஒரு பாடப் புத்தகம் எழுதுகையில் நெருங்கிப் பழக வேண்டியது வந்தது. லேனிங் சயின்ஸ்-பார்ட் 1 (Learning Science-Part 1) என்ற 6ம் வகுப்புக்கான அறிவியல் பாட நூல் எழுதும் அமர்வில் நானும் இருந்தேன். (இந்த நூல்தான் 6ம் வகுப்பு அறிவியல் நூலாக பல ஆண்டுகள் இருந்தது.) இது பல வழிகளிலும் மரபான நூலிலிருந்து மாறி இருந்தது. தீவிர வலதுசாரி சிந்தனை கொண்ட போஸ் நூலை எழுதும் போது நிறைய சிக்கல்களை ஏற்படுத்தினார். அதையெல்லாம் கடந்து வந்தோம். ஆனால் அறிவியல் கண்ணோட்டத்துடன் அறிவியல் முறை பற்றிய கண்காட்சி அமைக்கும் எங்களின் அறிவியல் பற்றிய சிந்தனை, போசின் சிந்தனை முறைக்கு முற்றிலும் நேர் எதிரானதாக இருந்தது.


படிக்க : வரலாற்றுப் பார்வையில் E = mc2 – வீடியோவும் விளக்கமும்


கண்காட்சிக்கான பொருட்கள் தில்லி பாலபவனுக்கு ஐதராபாத்திலிருந்து கொண்டுவரப்பட்டன. ஒரு குட்ஸ் ரயில் பெட்டி நிறைய எடுத்து வந்தது மட்டுமின்றி நாங்களும் கைகளில் கணிசமாக கொண்டுவர வேண்டியதாகியது. 1977 பிப்ரவரி 6 – 17க்குள் எல்லா பொருட்களும் வந்து சேர்ந்தன. இதற்கான செலவுகள் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமானது. தவிர வேலை செய்தவர்களுக்கான கூலியும் தர வேண்டும். என்சிஇஆர்டி பணம் தந்துவிடும் என்ற தைரியம் இருந்தது. 1977 மார்ச் 7ம் தேதி கல்வி அமைச்சர் நூருல் ஹாசன் சாஸ்திரி பவனுக்கு தேநீர் அருந்த அழைத்தார். எனது தோளில் தட்டிக் கொடுத்து இந்திய அறிவுத்துறை வரலாற்றிலேயே இந்தக் கண்காட்சி ஒரு மைல்கல்லாக இருக்கப் போகிறது எனப் பாராட்டினார்.

நாங்கள் மேலும் உற்சாகம், ஊக்கத்துடன் திறப்பு விழாவிற்கு வேலை செய்தோம். அதைத் திறந்து வைக்க இருந்தவர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள்! அவர் நூருல் ஹாசன், ரியாஸ் அகமது மூலம் மட்டுமின்றி மேலும் பலர் மூலம் கண்காட்சி பற்றித் தெரிந்து கொண்டார். தில்லியில் கண்காட்சியை நிறுவிக் கொண்டிருந்த போது, சிஎஸ்ஐஆர் டைரக்டர் ஜெனரல் மறைந்த நாயுடம்மா, ஐஎஸ்ஆர்ஓ தலைவரும் விண்வெளித் துறை செயலாளருமான மறைந்த சதீஷ் தாவன், யஷ் பால் இன்னும் இது போன்ற எண்ணற்ற பிரபலங்கள் வந்து பார்த்துப் பாராட்டியது எங்களை மேலும் உற்சாகப்படுத்தியது. மார்ச் மத்தியில் கண்காட்சி பற்றி ஏகமாக பலரும் தெரிந்து கொண்டதோடு, அதைக் காணவும் ஆவலாக இருந்தனர்.

நாங்கள் எல்லோரும் பரபரப்பாக இரவு பகல் பாராது வேலை செய்தோம். எங்களுக்கு என்சிஇஆர்டி வளாகத்திலேயே ஒரு வீடும் கொடுத்து விட்டனர். நண்பர்களிடமிருந்து பொருட்களை வாங்கியும் ஐதராபத்திலிருந்து சில கொண்டு வந்தும் அங்கேயே அனைவரும் ஒரு குடும்பமாக சமைத்து சாப்பிட்டோம்! தொடர்ந்து 8 வாரங்கள் கடுமையாக வேலை செய்து மார்ச் 3வது வாரம் கண்காட்சி திறப்பு விழாவிற்குத் தயாராகி விட்டது. கண்காட்சியின் மின் இணைப்பு வயர்கள் மட்டும் பல மைல்கள் நீளம் கொண்டதாக இருந்தது.

(தொடரும்…)

(Angel, Devil and Science என்ற புஷ்ப மித்ர பர்கவா எழுதிய புத்தகத்தை தழுவி எழுதிய சுருக்கமான கட்டுரை.)


நாகராசு

தொழிலாளிகள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம் !

1

ண்மை காலமாக தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகள் தீவிரமடைந்து வருகிறது. தனியார்மய – தராளமய – உலகமய கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு தொழிலாளர்கள் மீதான அடக்குமுறை வடிவங்களில் பல புதிய பரிணாமங்கள் ஏற்பட்டுள்ளது. தனியார் முதலாளித்துவ நிறுவனத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர்கள் மற்றும் அரசுத் துறையின் கீழ் செயல்படும் தொழிலாளர்கள் என எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லா துறைகளிலும் காண்ட்ராக்ட்மயம் புகுத்தப்படுகிறது.

காண்டிராக்ட் தொழிலாளர்களுக்கு எவ்வித அடிப்படை உரிமைகளும் வழங்கப்படுவதில்லை. குறைந்த ஊதியத்திற்கு அவர்களின் உழைப்பானது மிகக் கொடுமையான முறையில் சுரண்டப்படுகிறது. பெரும்பாலான காண்டிராக்ட் தொழிலாளர்கள் தினக்கூலியாக அல்லது வாரக்கூலிகளாக மாற்றபட்டுள்ளனர்.

கூலியை குறைக்கும் விதமாக பெரும்பான்மையான தொழில்நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்துவது அதிகரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பல இலட்சக்கணக்கான குடும்பங்கள் தங்கள் சொந்த மண்ணைவிட்டு பல கிலோமீட்டர் தொலைவிற்கு வேலைதேடி பயணம் செய்து, இடம்பெயர வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

உ.பி, ராஜஸ்தான், பீகார் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் இருந்து தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்களுக்கு அதிகப்படியான வெளிமாநில தொழிலாளர்கள் படையெடுக்கின்றனர்.


படிக்க : பெங்களுரு: போராடும் டெலிவரி தொழிலாளர்கள் – கண்டுகொள்ளாத ஸ்விகி!


வெளிமாநில தொழிலாளர்களிடம் குறைந்த கூலிக்கு உழைப்பை சுரண்டுவதன் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள பணிநிரந்தர தொழிலாளர்களுக்கு பணிபாதுகாப்பு, ஊதிய உயர்வு என்பது எல்லாம் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது.

தொழிலாளர்கள் தங்களின் அடிப்படை உரிமைக்காக போராடினால், நாம் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்படுவோம்; கூலி குறைக்கப்படும் என்ற அச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் தமிழக தொழிற்பேட்டைகளில் பணிநிரந்தரம் கேட்டு நடத்திய போராட்டங்கள் எல்லாம் தற்போது மிக கணிசமான அளவு குறைந்து உள்ளது.

***

கடந்த 2011-14 ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து நடத்திய ஊதிய உயர்வு போராட்டம் மிக முக்கியமான போராட்டமாகும். போக்குவரத்து தொழிலாளர்களும் ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி மிகத்தீவிரமான வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்விக்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களால் போர்க்குணமிக்க முறையில் நடத்தப்பட்ட போராட்டம், மிகக் கடுமையான முறையில் அரசால் ஒடுக்கப்பட்டது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது டெஸ்மா, எஸ்மா போன்ற கடும் ஒடுக்குமுறை சட்டங்கள் எல்லாம் போடப்பட்டன. அரசு இயந்திரங்கள் முடங்கின. தொழிலாளர்களின் போரட்டங்களை கண்டு ஆவேசம் அடைந்த பாசிச ஜெயலலிதா, 1.5 லட்சம் பேரை கைது செய்ய உத்தரவிட்டார். அரசு ஊழியர்கள் மீது பாசிச அடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இந்த இரண்டு நிகழ்வுகளும் தமிழக தொழிலாளர்களின் மீதான தாக்குதலில் மிக முக்கியமான நிகழ்வாகும்.

இத்தாக்குதலுக்கு பிறகு ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்ட பரிணாமமே மாறிவிட்டன. போராட்டங்கள் மேலும் மேலும் சுருங்கிவிட்டன. ஏற்கெனவே நடத்தப்பட்ட போராட்டங்களின் வரம்புகள் மாற்றியமைக்கப்பட்டன. போராட்டத்தின் தன்மையே மாறியது.

***

தொழிலாளர்களை அமைப்பாக திரட்டி வைத்துள்ள, அடிப்படை உரிமைகளுக்காக போராடக்கூடிய தொழிலாளர் அமைப்புகள் அனைத்தும் பொருளாதாரப் போராட்டம் என்ற வரம்புக்குள்ளேயே பெயரளவிலான போராட்டங்கள் நடத்துவது என்ற வரம்புக்குள் சுருக்கப்பட்டுவிட்டன. கடந்த காலங்களில் இவ்வாறான தொழிற்சங்களில் செல்வாக்கு செலுத்திய குசேலர், மைக்கெல் பெர்ணாண்டர்ஸ், வி.பிரகாஷ் போன்ற தொழிற்சங்க தலைவர்களெல்லாம் செல்வாக்கு இழந்து பொய்க்கொண்டிருக்கிறார்கள்

புரட்சிகர தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் உரிமைக்காக நேர்மையாக போராடுவது என்ற நிலை இருக்கிறது. ஆனால் குறைந்த அளவே தொழிலாளர்கள் போரட்டங்களில் பங்காற்றுகின்றனர். தற்போது 44 தொழிலாளர் சட்டங்கள் 4 சட்டத்தொகுப்பாக திருத்தப்பட்டதும், பெயரிலாவிலான உரிமைகளைக் கூட சட்டப்போராட்டம் நடத்தி பெறுவது என்பது எல்லாம் கேள்விக்குறியாகிவிட்டது. குறிப்பாக சங்கமாக திரளும் உரிமை தற்போது பல்வேறு தொழிற்சாலைகளில் மறுக்கப்பட்டு வருகிறது.

***

அண்மைகாலங்களில் தொழிலாளர்கள் அமேசான், ஸ்விகி, சுமேட்டோ போன்ற நிறுவனங்களில் விற்பனை பிரதிநிதிகளாகவும், டெலிவிரிபாய் ஆகவும் மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறான தொழிலாளர்கள் சமூகத்தில் உருவாவதன் மூலம், தொழிலாளர்களை அமைப்பாக்கும் நடவடிக்கை என்பது மேலும் மேலும் குறைத்து வருகிறது. மிகப்பெரிய மால்கள், விற்பனையகங்கள், ஜவுளி ஸ்டோர்கள் ஆகியவற்றில் பணிபுரிகின்ற தொழிலாளர்கள் ஒன்று சேராத வண்ணம் தனித்தனியாக பிரிக்கபட்டு பணியமர்த்தப் படுகின்றனர். இந்நிறுவனங்களில் பணிபுரிகின்றவர்களுக்கு பணிநிரந்தரம், பாதுகாப்பு, மருத்துவ உதவி, வைப்புத்தொகை போன்ற எவ்வித உரிமையும் கிடையாது. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இவர்கள் உழைப்பை சுரண்ட முடியும் என்ற கொடுமையான அடக்குமுறை, இவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படுகிறது.

***

ஆலைக்குள் இல்லாமல், ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட முதலாளியின் கீழ் பணி புரியும் நிலை அதிகரித்துள்ளது. பல்வேறு தொழில் பிரிவுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் தங்களை ஒரு வர்க்கம் அல்லது தொழிலாளி என்று உணரும் போக்கு என்பது அண்மை காலங்களில் சுருங்கி வருகிறது.

ஒலா நிறுவனத்தில் பணிபுரியும் ஆட்டோ தொழிலாளியோ அல்லது ஸ்விகி போன்ற நிறுவனங்களில் பணிபுரிபவர்களோ, தன்னை ஒரு தொழிலாளி என்று கருதுபவதை விட தன்னை ஒரு நிறுவனத்தின் ஊழியராக கருதிக் கொள்கின்றனர். நினைத்தால் வேலைக்கு செல்லலாம், வேலைக்கு சென்றால் ஊதியம் என்ற ஒரு சுருக்கப்பட்டுவிட்டது.

இதன் மூலம் ஊதியம் என்று சொல்லப்படுகின்ற சட்டபூர்வமான வரைமுறைகள் எல்லாம் மாறிவிட்டது. ஊதியம் என்ற மதிப்பீடுகள் மறைந்து அத்துக்கூலி என்ற நிலைமை வந்தடைந்துவிட்டது. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில், அடிப்படை உரிமைகளான வீட்டு வாடகைப்படி, மருத்தவ வசதி, நீண்ட கால வைப்பு நிதி போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுவிட்டது.

இன்று வந்தாய், வேலை செய்தாய், அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை என்று அதன் ஒட்டு மொத்த சாராம்சம் சுருக்கப்பட்டு கொடுரமான ஒரு உழைப்பு சுரண்டல் அரங்கேறி கொண்டு இருக்கிறது.

ஊதிய உரிமை என்பது பல நாடுகளின் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக போராடி பெற்ற உரிமையாகும். தற்போது தொழிலாளர்களிடம் அந்த போராட்ட உணர்வும் மறைந்து வருகின்றது.


படிக்க : தொழிலாளர்களை வஞ்சிக்கும் ஃபோர்டு ஆலை : கண்டுகொள்ளாத அரசு !


தொழிலாளர்கள் மனநிலையானது, ஒரு நாள் 500 ரூபாய் சம்பாதித்தால் போதும், அதைகொண்டு வாழ்நிலைமைகளை சமாளித்துவிடலாம் என்ற நிலைமையில் உள்ளது. அதற்குமேல் அதிக ஊதியம் பெறுவதற்கு அதற்கு ஏற்றாற்போல அதிக நேரம் வேலைபார்க்கின்றனர்.

ஆனால், அன்றாடம் விலைவாசியானது தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கல்வி கட்டணம், மருத்துவக் கட்டனம், போக்குவரத்துக் கட்டனம் அதிகரிப்பால் மக்களின் சேமிப்பானது கரைந்துக்கொண்டே செல்கிறது. இப்பொருளாதார நெருக்கடியானது மக்களை வாழவழியில்லாத நிலையை நோக்கி தள்ளுகிறது.

ஆகவே, நாம் வாழ வேண்டும் என்றால் போராட்டங்களின் மூலம் நம்முடைய உரிமையை நாம் நிலைநாட்டிக் கொள்வது காலத்தின் கட்டாயம்.

நாம் ஒரு ஆலை தொழிலாளியாகவோ, அரசு தொழிலாளியாகவோ அல்லது எவ்வாறாக செயல்பட்டாலும், லாரிஓட்டுநர், ஆட்டோ ஒட்டுநர், அரசு ஊழியர், சலவைத் தொழிலாளி, மின் ஊழியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் என்று பல வகையில் பிரிந்து இருந்தாலும் எல்லோரும் அத்துக்கூலிகள், அன்றாடங் காட்சிகள்தான். எல்லோரும் தினக்கூலி என்ற நிலைமையை நோக்கி மிக விரைவாக நாம் வந்துக்கொண்டிருக்கிறோம்.

இன்றைய காவி – கார்ப்பரேட் பாசிச மோடி ஆட்சி விலைவாசி உயர்வு, தனியார்மயமாக்கல், மக்களுக்கு எதிரான வரிக்கொள்கை போன்ற எண்ணற்ற தாக்குதல்களை தீவிரப்படுத்தி கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாம் ஆலைத்தொழிலாளி, அரசு ஊழியர், ஸ்விகி ஊழியர் என்று தனித்தனியாக நம்மை நாம் பிரித்து பார்த்து கொள்ளக் கூடாது. மாறாக இன்றைய நவீன ஊடகத்தின் வளர்ச்சி காரணமாக நாம் அனைவரும் தொழிலாளர் வர்க்கமாக ஒன்று திரள்வதற்கான வாய்ப்புகள் பலவாறு பெருகிவிட்டன. இந்த வாய்ப்பினை எப்படி பயன்படுத்தி கொள்ள போகிறோம் என்பது குறித்து சிந்திப்பதே காலத்தின் கட்டாயம்.

நாம் ஓரணியில் தொழிலாளி வர்க்கம் என்ற முறையில் திரண்டு எழுந்து நமக்கான நமது உரிமையை நிலைநாட்டிட வீதி போராட்டங்களில் இறங்கிவிட வேண்டும். தொழிலாளர்கள் தனது உரிமையை பெற மறுத்து நிற்கும் முதலாளிகளுக்கு பணிவிடை செய்யும் இந்த காவி கும்பலையும், முதலாளிகளின் நலனை பாதுகாக்கும் சமூக அமைப்பையும் அடியோடு மாற்றி அமைக்கும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.


ராமசாமி

உலக ஆளும் வர்க்கம், முடிவில்லாத போர், மக்களின் கொத்துக் கொத்தான மரணம்! – பாகம் 2

0

உலக ஆளும் வர்க்கம், முடிவில்லாத போர், மக்களின் கொத்துக் கொத்தான மரணம்! – பாகம் 1

உலக ஆளும் வர்க்கம், முடிவில்லாத போர், மக்களின் கொத்துக் கொத்தான மரணம்! – பாகம் 2

முதாயம் சிதைந்து கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள அமெரிக்கா, இராணுவ ஆயுத தளவாட உற்பத்தி மூலம் மட்டுமே தனது உலக மேலாதிக்கத்திற்கான போட்டியாளர்களை, குறிப்பாக ரசியா மற்றும் சீனாவை ஒழித்துவிடலாம் எனப் பார்க்கிறது. அமெரிக்கா நேட்டோவை மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா வரை விரிவுபடுத்துகிறது. தெற்கு சீனக் கடலில் குவாட் கூட்டணி மூலம் இராணுவ ஒத்திகை நடத்தி, இது தனது நாட்டின் நலனுக்கானது எனக் கூறும் அமெரிக்கா சீனாவையும் அச்சுறுத்துகிறது! இதனால் சீனா, ரசியா இரண்டும் அமெரிக்காவிற்கு எதிராக கூட்டு சேர்கின்றன!

சீனா ஆசியாவிலும் பசிபிக்கிலும் உள்ள கடல் வழிகள் தனது செல்வாக்குப் பகுதி எனப் பார்க்கிறது! ரசியாவும் தன்னிடமிருந்து பிரிந்து சென்ற உக்ரைன் மற்றும் அருகாமை நாடுகளை தனது செல்வாக்குப் பிரதேசம் எனப் பார்க்கிறது! இந்த சீன, ரசிய எல்லைப் பகுதியில் அமெரிக்கா இராணுவ ஆக்கிரமிப்பில் ஈடுபடுவது தேவையற்ற ஒரு கெடுபிடிப் போரை உருவாக்குகிறது! வாசிங்டன் கொள்கை வகுப்பாளர்கள் எதிர்ப்பின்றி எடுத்துள்ள இந்த முடிவானது இந்த புவிப்பரப்பையே முற்றாக அழித்தொழிக்கும் அணு ஆயுதப் போருக்கு இட்டுச் செல்லக் கூடும்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் மேற்கு பசிபிக்கின் ஆசியக் கடலோர நெடுகிலும் ஜப்பானிலிருந்து ஆஸ்திரேலியா வரை சீனா விமான தளங்களை கட்டியெழுப்பியதன் மூலம், அந்தப் பகுதியில் விமானம் தாங்கி கப்பல்கள் உட்பட போர்க்கப்பல்களைத் தாக்கும் திறனை அது கொடுத்துள்ள நிலையில், இப்பகுதிகளில் தங்களின் கட்டுப்பாட்டிற்கான அதி தீவிர நாய்ச் சண்டை நிலவுகிறது. பலதுருவ உலகினை அமெரிக்கா ஏற்றுக் கொள்ள மறுத்தது மட்டுமல்ல ஒரு முடிசூடா மன்னனைப் போல தானே உலகை ஒற்றைத் துருவமாக மேலாதிக்கம் செய்ய முனைவதும் ரஷ்யாவும் சீனாவும் கூட்டணி கட்டுவதை உறுதிப்படுத்தியுள்ளது, இப்படியான ஒரு கெடுபிடிப் போரைத் தடுக்கத் தான் இதை எதிர்ப்பவர்கள் கடினமாக உழைத்தனர். இந்தப் பகைத்தன்மையானது, அமெரிக்கப் போர் வெறியர்களின் போர் வெறிக்கு தீனி போடுவதாக அமைந்துள்ளது. இது, ஒரு முடிவற்ற போரை நடத்த விரும்பும் வாசிங்டன் ஆட்சியாளர்களை களிவெறி கொள்ள வைத்துள்ளது!


படிக்க : இரஷ்ய-உக்ரைன் போர்: இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் ! – பாகம் 2


ரசியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ள உக்ரேனை அழைத்து, மாஸ்கோவுடன் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தும்படி பதட்டம் தோன்றியதுமே ஹென்றி ஹிஸ்ஸிங்கர் அறிவுறுத்தினார். “இன்னும் இரு மாதங்களில் செய்து முடிக்கவில்லை என்றால் அது எளிதில் தீர்க்க இயலாத பெரும் பதட்டத்தையும் நெருக்கடியையும் தோற்றுவிக்கும்” என கிஸ்ஸிங்கர் கூறியது செவிடன் காதில் ஊதிய சங்கானது.

சர்வாதிகார அரசாங்கங்களுக்கு மாற்றுக் கருத்துக் கொண்டோர் மீது அடக்குமுறையை ஏவி விடவும், சமூக நலத் திட்டங்களை வெட்டிக் குறுக்கவும், ஒழிக்கவும், செய்தி ஊடகங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும் ஒரு எதிரி தேவைப்படுகிறது! யுத்தம் நியாயப்படுத்த முடியாதவற்றை நியாயப்படுத்தும்! ஆள்கடத்தல்கள், சித்திரவதைக் கொடூரங்கள், திட்டமிட்ட தனிமனிதப் படுகொலைகள், செய்தித் தணிக்கைகள், வரைமுறையற்ற தடுப்புக் காவல்கள், ஒடுக்குமுறைப் பகுதிகள் என போர்க் கிரிமினல் குற்றங்கள் கட்டவிழ்த்து விடப்படும்! போரானது மக்களை நிரந்தர சித்தப்பிரமையிலும், பயத்திலும் வைத்திருக்கும்! அது பொது மக்களை கேள்விக்கிடமற்ற முறையில் அடிமைத்தனத்தில் இருத்தும்!

”இந்தப் போரானது வெற்றி பெறுவதற்காக அல்ல, தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே” என 1984-ல் ஜியார்ஜ் ஆர்வெல் எழுதினார். ”வறுமையினாலும் அறியாமையினாலும் தான் தந்தைவழி ஒடுக்குமுறை சமூகம் சாத்தியம். இந்தப் புதிய பதிப்பு கடந்த காலத்தியதே தான். கடந்த காலத்தில் இதைத் தவிர வேறு எதுவும் இருந்திருக்கவில்லை! போர் நடவடிக்கைகளின் மூலம் சமூகத்தை வறுமைக் கொடுமையில் வைத்திருக்க வேண்டும் என்பதே கொள்கை! இந்தப் போர் ஆளும் வர்க்க கும்பல்களால் தமது சொந்த நாட்டு மக்கள் மீது நடத்தப்படுவதே அன்றி யுரேசியா அல்லது கிழக்காசியா மீது வெற்றி பெறுவதற்காக அல்ல! மாறாக நிலவும் சமூக கட்டமைப்பை அப்படியே பாதுகாப்பதற்காகத் தான்!

முடிவற்ற இந்தப் போரின் செய்தி இதுதான்: ஆளும் வர்க்கத்திற்கு, இராணுவத்திற்கு, அரசாங்கத்திற்கு கட்டுப்பட மறுத்தால் நீங்கள் தேசத் துரோகி!

பெருந்தொற்றின் விளைவாகவும் சுற்றுச் சூழல் நாசம் மற்றும் உக்ரைன் போரினால் உலகம் முழுதும் சுமார் 14 கோடிப் பேர் பட்டினிக் கொடுமையில் அவதிப்படுகின்றனர். இவர்களும் தமது எதிர்காலம் பற்றித் தெரிந்துள்ளனர். பெருந்தொற்றினால் ஒன்றரைக் கோடி மக்கள் செத்து மடிந்துள்ளனர். இவர்களில் பல்லாயிரக் கணக்கானோர் உரிய பாதுகாப்பும் மருத்துவ உதவியும் கிடைத்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார்கள். உலகின் தெற்குப் பகுதியில் சுற்றுச் சூழல் பேரழிவாலும் தோற்றுப் போன அரசுகளின் நடவடிக்கையாலும் மக்கள் அகதிகளாக விரட்டப்படுகிறார்கள். 2050-ல் இந்த அகதிகளின் எண்ணிக்கை 120 கோடியாக அதிகரித்திருக்கும்.

ஏழை எளியவர்களுக்கும் நோயுற்றவர்கள், பலவீனமானவர்களுக்கும் இவை சொல்லுகின்ற செய்தி இதுதான்: உங்களின் மற்றும் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை ஒரு பொருட்டே அல்ல!

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிக் கோமான்களுக்கு அவர்கள் அரசியல் நெருக்கடியில் இருப்பது தெரியும். இது ரசியாவின் குளறுபடியாலா? ட்ரம்ப் மற்றும் அவரது பாசிச கும்பலாலா? பத்திரிகையாளர்கள் மற்றும் அசாஞ்சே போன்ற இணையப் பதிப்பாளர்கள் இவர்களை அம்பலப்படுத்தி கெட்ட பெயர் ஏற்படுத்தியதாலா? தீவிர வலதுசாரி, இடதுசாரி விமர்சகர்களை கடும் தணிக்கைக்கு உட்படுத்தாததாலா?

தற்போது ஜனநாயகக் கட்சி குடியரசுக் கட்சியோடு நெருங்கியிருப்பினும் சிக்கலுக்குத் தீர்வுகாண இயலாமல் தோற்றுக் கொண்டுள்ளது. ட்ரம்ப்பும் அவரது பாசிச கும்பலும் கேபிடால் மீது நடத்திய தாக்குதலை, அந்த வழக்கை வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டி வரும் ஜோ பிடன் நிர்வாகம் அனைத்துத் துறைகளிலும் தோல்விகளையே தழுவி வருகிறது. மக்கள் நலத்திட்டங்களை வெட்டி நாசமாக்கி, மத்திய ஆசியப் பகுதியில் வெட்டி இராணுவச் செலவு செய்து வேடிக்கை காட்டிவரும் பிடன் தான், உலகிலேயே மிக பூதாகரமான சிறைத் துறை அமைப்பைக் கட்டி வருவதோடு, போலீசை ராணுவமயமாக்கி வருகிறார்.

நல்ல நிர்வாகத்தைக் கட்டியமைப்போம் என வாக்குறுதி தந்த பிடன் நிர்வாகம், மக்களின் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி வருகிறது. குறைந்த பட்ச கூலியைக் கூட்டுவதற்குக் கூட மறுக்கிறது. இது கானல் நீரைக் காட்டி, கண்கட்டி வித்தை செய்து, வெற்றுச் சொல்லாடல், கவர்ச்சி மற்றும் அச்சத்தின் மூலம் வாக்காளர்களை அச்சுறுத்திப் பணிய வைக்க முயல்கிறது. இது எப்படி இருக்கிறது என்றால், கிழக்கு ஐரோப்பிய தொங்கு சதை நாடுகளின் ஆட்சியாளர்கள், உயிர் பயத்தில் வெற்றுச் சொல்லாடல்களைப் பயன்படுத்தினார்களே அதுபோல உள்ளது என கட்டுரையாளர் ஒப்பீடு செய்கிறார்.

கோடீசுவர வர்க்கம், அவர்களில் பலரும் இந்தப் பழைய உளுத்துப் போன அரசியலை மெருகூட்டிக் காட்டியும் வெற்றுச் சொல்லாடல் மூலமும் பகாசுரக் கொள்ளைச் சுரண்டலைத் தொடரவே விரும்புகின்றனர். அவர்கள் ஒரு இழிந்த ஜனநாயகத்திற்கு மரியாதை செலுத்தும் புனைகதைகளை நம்புகிறார்கள். அது அவர்களுக்கு மரியாதையை அளிக்கிறது.


படிக்க : இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் !


ஆனால், இது நீடிக்கக் கூடாது! மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்களாட்சி என படாடோபமாக பீற்றிக் கொண்டு, மக்களை அடக்கி, ஒடுக்கிச் சுரண்டி, அவர்களின் அற்ப உடமைகளையும் உழைப்பையும் சூறையாடிக் கொண்டுள்ள கேடுகெட்ட கழிசடை அரசியல் கும்பல்களிடமிருந்து என்ன வரும்? கார்ப்பரேட்டுகளும் கோடீஸ்வர வர்க்கங்களும் தமது பகாசுர சுரண்டல்களையும் சூறையாடல்களையும் முரட்டுத்தனமான மற்றும் கொடூரமான எதேச்சதிகாரத்தின் கீழ், சுதந்திரமாக எந்தத் தங்கு தடையுமின்றித் தொடர்வார்கள்.

சமூக, அரசியல், பொருளாதார மற்றும் சுற்றுச் சூழல் முதலியன சர்வநாசமாக்கப்படுவது வேகமாக முடுக்கிவிடப்படும். அதிர்ச்சியூட்டுகின்ற, அதனாலேயே ஏற்றுக் கொள்ள இயலாத புறநிலை உண்மைகளைப் பற்றி பொது வெளியில் விவாதிப்பது முற்றாக நின்றுவிடும். கிறித்துவ பாசிசம், கேளிக்கூத்தான சதிக் கோட்பாடுகள் போன்றவற்றை மாற்றாக முன்வைப்பார்கள். எல்லா கெட்ட செயல்களுக்கும் காராணம் என தனி நபரையோ அல்லது குழுவையோ பொறுபாக்கி அவர்கள் முற்றாக ஒழித்துக் கட்டப்பட்டு விட்டார்கள் என்கிற குழந்தைப் பிள்ளை மாயாஜாலக் கதைகளில் மக்களை மூழ்கடித்து பின்னுக்கு இழுப்பார்கள்.

உண்மையையும் பொய்யையும் பிரித்தறிய இயலாது. பலவீனமான பிரிவினரைப் புறக்கணித்து, அவர்களது சிக்கல்களுக்கும் அவர்களே காரணம் என்பது மட்டுமின்றி, நமது எல்லா சிக்கல்களுக்கும் காரணம் அவர்களே என பழி தூற்றுவார்கள். யார் இவற்றை எதிர்க்கிறார்களோ அவர்கள் கிரிமினல் குற்றவாளியாக்கப்படுவார்கள். மக்கள் கொத்துக் கொத்தாகச் செத்து மடிவது உலகம் முழுதும் நடக்கும். இன்றைக்கு நம்மை ஒடுக்குபவர்களிடம் உள்ள அதிகாரம் பறிக்கப்பட்டு, துரத்தப்படவில்லை என்றால் இந்த அழுகி, சிதைந்து கொண்டுள்ள உலகத்தை தான் நாம் நமது குழந்தைகளுக்குக் கையளிப்போம்!

(முற்றும்)

(குறிப்பு: கிரிஸ் ஹெட்ஜெஸ் என்ற புலிட்சர் பரிசு பெற்ற அமெரிக்கப் பத்திரிகையாளர் எழுதிய கட்டுரையினைத் தழுவியது. இவர் தி நியூயார்க் டைம்ஸ் இதழில் 15 ஆண்டுகள் பணியாற்றியவர். Scheer Post-ல் 2020ல் வெளியான கட்டுரை. முதலாளித்துவ எழுத்தாளர்களே முதலாளித்துவத்தின் தோல்வியை எழுதுகின்றனர். அது நீடிக்கக் கூடாது என்கின்றனர்.)


நாகராசு

மீள்பதிவு : நீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா ?

1

நண்பர்களே,
பார்வையாளர்கள் படைப்பாளிகளாக மாறும் வாய்ப்புகளை வழங்குகிறது இன்றைய தொழில் நுட்பம். உங்களிடம் இருக்கும் செல்பேசியை எடுங்கள்! உங்களைச் சுற்றியுள்ள வாழ்வின் பரிமாணங்களை படம் பிடியுங்கள்! வினவு புகைப்படக் கட்டுரைகளில் உங்கள் படங்களும் இடம்பெற வேண்டும். நமது காலத்தின் அழகை, போராட்டத்தை, மாற்றத்தை பதிவு செய்வோம்
அன்புடன் அழைக்கிறோம்
நட்புடன்
வினவு

காட்சியுலகம் கருத்துலகை விஞ்சி நிற்கும் காலமிது! கருத்துலகமே காட்சியுலகை தீர்மானிக்கிறது என்றாலும் காட்சியுலகமே அதிக பார்வைகளைப் பெற்று வருகிறது. ஒளிச்சுருள் காலத்தில் காமரா ஒரு தனிவகையான சிறப்புக் கருவி. செல்பேசி காலத்தில் செல்ஃபியாக மாறிய காமரா நம்முடன் எப்போதும் இருப்பது அவசியமாகி விட்டது.

ன்னையும் தம்மையும் சுற்றம் – நட்பையும், வார இறுதி மகிழ்ச்சிகளையும் படம் பிடிக்கும் ஆண்ட்ராய்டு செல்பேசியை ஒரு மக்கள் பத்திரிகையளராய் நாம் பயன்படுத்தலாம். கொஞ்சம் பார்வை, ஓரளவு திறன், பயண நாட்டம் இருந்தால் போதும். உங்களைச் சுற்றி இருக்கும் நிகழ்வுகள், மனிதர்கள், தருணங்கள் உங்களது கேமரா படமெடுப்பதற்காக எப்போதும் காத்துக் கொண்டிருக்கின்றன.

க்கள் பத்திரிகையாளர்கள் – இது இணையம் வளர்ந்த பிறகு தோன்றிய முன்னேற்றம். கார்ப்பரேட் ஊடகங்களே இப்படி செய்தி – படங்களை அனுப்புமாறு மக்களைக் கோருகின்றன. அப்படியானால் மக்கள் ஊடகமான வினவு தளத்தில் உங்கள் பங்கேற்பு வேண்டுமல்லவா?

நீங்கள் சென்னையில் இருக்கலாம். கொழும்புவில் இருக்கலாம். இலண்டனில் நடக்கலாம். சிங்கப்பூரில் வாழலாம். அரபுலகில் வசிக்கலாம். அமெரிக்காவில் வேலை செய்யலாம். உங்களைச் சுற்றி எண்ணிறந்த மனிதர்கள் இருக்கிறார்கள். வேறுபட்ட பண்பாட்டு சூழல் நிலவுகிறது. மொழி-மதம்-பாலினம்-வேலை என வேறுபட்டிருந்தாலும் மக்களை மனித சமூகமாய் ஒன்றிணைய வைக்கும் இழை ஒன்றிருக்கிறது. அதை கண்டுபிடிக்கலாம்.

ங்கள் செல்பேசியை எடுத்துக் கொள்ளுங்கள். புகைப்பட ஏற்பாடுகளை சரிபாருங்கள். வெளியே செல்லுங்கள். உங்களுக்கே தெரியாத ஒரு விசயம், மற்றவரிடம் தெரிவித்தே ஆகவேண்டிய ஒரு விசயத்தை முடிவு செய்யுங்கள். பிறகு அதை படமெடுங்கள்.

ஏதோ ஒரு நிலையில்தான் மக்கள் அழகாக இருக்கிறார்கள். அல்லது அவர்களது ஆளுமை தெரிய வருகிறது. மக்கள், காட்சிகளை நேருக்கு நேர் மையப்படுத்தி எடுக்காமல் ஏதாவது ஒரு ஓரத்தில் இருந்து எடுங்கள். அவர்கள் – அவற்றின் பக்கவாட்டில் இருந்து எடுங்கள். அதையும் நெருக்கமாக, தூரமாக, மையமாக என்று மூன்று நிலைகளில் எடுங்கள். அவர்களது சூழலை விளக்கும் பின்னணிக் காட்சியோடு எடுங்கள். பிறகு அந்த படத்தில் இருக்கும் காட்சிகள் – மனிதர்கள் பேசுவார்கள். அவ்வளவுதான். இதையே தொடர்ந்து செய்யும் போது நீங்கள் ஒரு புகைப்படச் செய்தியாளர்.

இந்த வாரம் உங்களுக்குரிய தலைப்பு – காத்திருப்பு!

து மக்கள் அன்றாட வாழ்க்கையின் பொருட்டு எங்கோ எதற்கோ காத்திருக்கிறார்கள். நீண்ட நேரமோ, குறுகிய நேரமோ, சலிப்புடனே, உற்சாகத்துடனோ காத்திருக்கிறார்கள். இந்த உலகின் எந்த இடத்திலும் மேன் மக்கள் காத்திருக்க தேவையில்லை. நாம்தான் காத்திருக்க வேண்டியிருக்கிறது. காத்திருத்தல் தவறல்ல. அது ஒரு ஒழுங்கு முறை. ஆனால் அந்த காத்திருத்தல் பல நேரம் மகிழ்வாக இருக்கிறதா? பேருந்து வருமா? ரேசனில் அரிசி கிடைக்குமா? இன்று சித்தாள் வேலை கிடைக்குமா? ரயிலில் அமர இடம் கிடைக்குமா? மருத்துவமனையில் உடன் வேலை முடியுமா? என்று ஏகப்பட்ட காத்திருப்புகள் இருக்கின்றன

வெளிநாட்டிலும் இத்தகைய காத்திருப்புகள் இருக்கலாம். விமான நிலையத்திலோ, பெட்ரோல் பங்கிலோ, உணவக விடுதிகளிலோ, திரையரங்குகளிலோ கூட இருக்கலாம். காத்திருப்பவர் ஒரு கேப் டிரைவர், ஒரு லாரி ஓட்டுநர், ஒரு தொழிலாளி, ஒரு மாணவர், பெற்றோர் யாராக வேண்டுமானால் இருக்கலாம். அங்கே பல்தேசிய மக்கள் இருப்பார்கள். அவர்களிடம் அன்றாட வாழ்க்கைக்காக ஏதாவது ஒரு இடத்தில் காத்து நிற்கும் போது என்ன தோன்றும் எனக் கேளுங்கள்! ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு கவிதை வரும்!

விதையை எழுத்தாக்குங்கள். காட்சியை படமாக்குங்கள்! இந்தக் கருவில் எத்தனை படம் வேண்டுமானாலும் எடுங்கள். எடுக்க எடுக்க உங்கள் பார்வை செதுக்கப்படும். செல்பேசியோடும் பிணைந்துள்ள வாழ்வை உற்சாகத்தோடும், பயனுள்ள முறையிலும் கழிக்கலாம்.

vinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது
வினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 93 8465 9191 உடன் அனுப்புங்கள்.
கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்!
தெரிவு செய்யப்படும் படங்கள் வரும் வார இறுதியில் வெளியிடப்படும்.
அடுத்த வாரம் இன்னொரு தலைப்பு!

புகைப்படங்களை எடுக்கப் போகும் மக்கள் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் படங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

ஆர்.எஸ்.எஸ் – பாஜக, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம் ! மாநாடு துண்டறிக்கை !

ஆர்.எஸ்.எஸ் – பாஜக, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்!

செப்டம்பர் 17 – சென்னையில் மாநாடு

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

பேயாட்சியின் பிடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம். உழைக்கும் மக்கள் நிம்மதியாக வாழ முடிகிறதா இந்த ஆட்சியில் பசி, பட்டினிச்சாவு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வரி உயர்வு, வேலையின்மை, கார்ப்பரேட் நாசகரத் திட்டங்களால் வாழ்வாதாரப் பறிப்பு – என அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது நமது வாழ்வு!

2014-ல் ரூபாய் 400-க்கும் குறைவாக இருந்த  சிலிண்டர்  விலை, 170 சதவிகிதம் உயர்ந்து 1,100-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் என எதையும் வாங்கிச் சமைக்க முடியவில்லை. விலைவாசி விஷம் போல ஏறுகிறது. தயிருக்கும் உப்புக்கும் கூட ஜி.எஸ்.டி வரியைக் கூட்டுகிறது பாசிச மோடி ஆட்சி.

வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. அதன் சதவிகிதம் 7.83 ஆக உயர்ந்திருக்கிறது. 15 முதல் 19 வயதே உள்ள இளந்தலைமுறையினரின் வேலையின்மை சதவிகிதம்தான் 50-க்கு மேல் உள்ளது. கடந்த மே-ஜூன் வரையிலான ஒரே மாதத்தில் 1.6 கோடி பேர் வேலையிழந்திருக்கிறார்கள். ‘அக்னிபத்’ என்ற பெயரில் இராணுவமே காண்டிராக்ட்மயமாக்கம். இனி அனைத்து அரசு வேலைகளும் காண்டிராக்ட் கொத்தடிமை மயமே என்பதற்கான கட்டியம் கூறல் இது.

2018 – 2020-க்கு  இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில், கடன் நெருக்கடி, வேலையின்மை, வியாபார நெருக்கடி போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 25,000 பேர். 20 ஆண்டுகளில் இல்லாத அளவு தானிய உற்பத்தி பெருகியிருக்கிறது. ஆனால், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் நாளொன்றுக்கு 4,500 குழந்தைகள் பட்டினியால் சாகின்றன. 70 சதவிகித மக்கள் சத்தான உணவு உட்கொள்ள முடிவதில்லை என்கிறது ஒரு ஆய்வறிக்கை.


படிக்க : ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! | மாநாடு அறிவிப்பு !


மதவெறி, சாதிவெறி கலவரங்களைத் தூண்டிவிட்டு முசுலீம்கள், கிறித்தவர்கள், தலித்துகள் என சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஒரு உள்நாட்டு போரையே நடத்திவருகிறது ஆர்.எஸ்.எஸ் என்ற பாசிச குண்டர் படை. அதன் அரசியல் கட்சிதான் பாஜக.

ஒட்டுமொத்த முசுலீம்களையும் இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக அறைகூவுகிறது ஆர்.எஸ்.எஸ். இந்துப் பண்டிகைகளில் மதவெறி ஊர்வலங்கள் நடத்தி முசுலீம் மக்கள் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறார்கள் காவி குண்டர்கள்.  ஹிஜாப் அணியத் தடை, பாங்கு ஓதத் தடை, வியாபாரம் செய்யத் தடை என குடிமக்களின் அடிப்படை உரிமைகள் கூட பறிக்கப்படுகிறது. பாபர் மசூதி தீர்ப்பு தொடங்கி எல்லா வழக்கிலும் நீதிமன்றம் உட்பட அவர்களை வஞ்சிக்கிறது. இந்த அநீதிகளை எதிர்த்து போராடினால், புல்டோசரை வைத்து வீட்டை இடிக்கிறார்கள். அனைத்து உரிமைகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பாடுகிறார்கள் முசுலீம்கள்.

உண்மையில் இந்த ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி யாருக்கானது? கார்ப்பரேட்டுகளின் அதிலும் குறிப்பாக பார்ப்பன – பனியா சாதியைச் சேர்ந்த அம்பானி, அதானி கும்பலுக்கே இந்த ஆட்சி சுபிட்சம்.

அதானிக்கு ஆஸ்திரேலியாவில் சுரங்கம் வாங்க பேரம் பேசுவதற்கு மோடியே விமானத்தில் போகிறார்; மின் உற்பத்தி டெண்டர் தரச்சொல்லி இலங்கை அரசிடம் பேசுகிறார். இப்படி எட்டாண்டுகளில் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் மட்டும் அதானி அடைந்த லாபம் 3,39,700 கோடி. அம்பானியின் ஜியோவுக்கு மோடியே விளம்பரதாரராக நடித்ததை நாம் மறந்திருக்க முடியாது. கடந்த பத்தாண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 1830 சதவீதமும் அம்பானியின் சொத்து மதிப்பு 400 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. இவர்கள் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டாப் 10-இல் உள்ளார்கள். இதற்கு கைமாறாக தேர்தல் நிதி என்ற பெயரில் பாஜகவை கோடிகளால் குளிப்பாட்டுகிறது அம்பானி – அதானி கும்பல். இரயில்வே, விமானம், நெடுஞ்சாலை, மருத்துவம், எல்.ஐ.சி என மக்களுக்கு சேவையாற்றும் அனைத்து துறைகளையும் இக்கார்ப்பரேட்டுகளுக்கு விற்றுத் தள்ளுகிறது மோடி ஆட்சி.

இந்த ஆட்சிக்கு எதிராக துணிச்சலோடு களத்தில் நிற்கும் செயல்பாட்டாளர்கள் பொய்வழக்கில் கைதுசெய்யப்படுகிறார்கள். ‘மோடியைக் கொல்ல சதி’ என்ற பெயரில், ஒரு மொட்டைக் கடிதத்தை ஆதாரமாகக் கொண்டு 16 செயல்பாட்டாளார்கள் கைதுசெய்யப்பட்டார்கள். பழங்குடிகளுக்காக போராடிய 83 வயதான பாதிரியார் ஸ்டான் சுவாமி, சிறைக் கொடுமையால் கொல்லப்பட்டார். குஜராத் படுகொலை வழக்கில் மோடிக்கு எதிராக வழக்கு தொடுத்த தீஸ்தா சேதல்வாட், போலீசு அதிகாரி சிறீகுமார் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்; கொலைக்குற்றவாளி மோடியோ சட்டப்படி விடுதலை செய்யப்படுகிறார். ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் போலிச் செய்திகளை அம்பலடுத்திய குற்றத்திற்காக ஆல்ட் நியூஸ் நிறுவனத்தின் இணையாசிரியர் ஜீபைர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மோடிக்கு எதிராக வாயைத் திறந்தாலே கைது வழக்குதான் என்பதை இயல்புநிலையாக்குகிறார்கள்.

ஏதோ ஐந்தாண்டுகள் ஆண்டுவிட்டுப் போகும் கட்சி அல்ல பாஜக. இதற்கு பின் ஆர்.எஸ்.எஸ். என்ற பாசிச பயங்கரவாத அமைப்பு இருக்கிறது. மக்களை நூறுகூறாகப் பிரித்து, சாதி ஏற்றத்தாழ்வை – பார்ப்பன ஆதிக்கத்தை மீண்டும் நவீன வடிவில் நிலைநாட்டுவதே இதன் குறிக்கோள். இதைத்தான் அவர்கள் ‘இந்துராஷ்டிரம்’ என்கிறார்கள். மறுபக்கம் தங்களுக்கு புரவலர்களாக இருக்கும் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் கும்பல் நாட்டை சூறையாட ஏற்பாடு செய்துகொடுக்கிறார்கள். இந்த இரண்டு நோக்கத்திற்கும் சேவைசெய்யும் வகையில் பாராளுமன்றம், தேர்தல் ஆணையம், சிபிஐ, ரிசர்வ வங்கி, இராணுவம் என பல துறைகளின் உயர் மட்டங்களிலும் தங்கள் ஆட்களை நிரப்பியிருறார்கள். அரசமைப்புச் சட்டத்தையே கூட அவர்களுக்கு தோதான வகையில் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன், நாடாளுமன்றத்தில் என்னென்ன வார்த்தைகள் பேசவேண்டும் என பட்டியல் வெளியிட்டிருகிறார்கள்; நாடாளுமன்ற வளாகத்தில் போராடக்கூடாதாம். எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கிடையே கூட எத்தனையோ சட்டங்களை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. கூக்குரலிடவும் போரடவும் மட்டும்தான் எதிர்கட்சிகளால் முடிந்தது. தற்போது அதற்கும் தடை.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற பெயரில் அனைத்து அதிகாரங்களையும் ஒற்றையாட்சியின் கீழ் கொண்டுவந்துகொண்டிருக்கிறார்கள். நீட், ஜி.எஸ்.டி. புதிய கல்விக் கொள்கை, வேளாண் சட்டங்கள், அணைகள் பாதுகாப்பு மசோதா என பல்வேறு சட்டங்களின் மூலம் பெயரளவிலான மாநில உரிமைகள் கூட பறிக்கப்பட்டுவிட்டன.


படிக்க : இந்து ராஷ்டிரத்தை அடித்து நொறுக்குவோம்!


தான் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்டவற்றை ஏவி அச்சுறுத்துவது; எம்.எல்.ஏ.க்களை விலைபேசுவது ஆகியவற்றின் மூலம் இதுவரை 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது பாஜக. புதுச்சேரி, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், தற்போது மஹாராஷ்டிரம் என நாறுகிறது சொல்லிக் கொள்ளப்படும் மக்களாட்சி. மற்றொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ். ஆளுநர்களைக் கொண்டு அறிவிக்கப்படாத இணையாட்சியை நடத்துகிறார்கள். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியே அதற்கு சாட்சி.

பாசிசப் பேயாட்சியால் நாடே குமுறி வருகிறது. ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, வேளாண் திருத்தச் சட்ட எதிர்ப்பு, குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, பொதுத்துறை தனியார்மயமாக்க எதிர்ப்பு, காண்டிராக்ட் மயமாக்க எதிர்ப்பு, வேலையின்மைக்கு எதிராக, விலைவாசி உயர்வுக்கு எதிராக, மதவெறி-சாதிவெறித் தாக்குதல்களுக்கு எதிராக என உழைக்கும் மக்களாகிய நமது அனைத்து வகை குமுறலும் இந்த ஆட்சிக்கு எதிராகத்தான் நிற்கிறது.

இசுலாமியர்கள், தலித்துகள், வணிகர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என அனைவரும் தனித்தனியாப் போராடி வருகிறோம். நம்முடைய போராட்டங்களின் இலக்கு ஆர்.எஸ்.எஸ் – பாஜக அம்பானி அதானி பாசிசத்தை முறியடிப்பதாக மாறவேண்டும். ஆர்.எஸ்.எஸ் – பாஜக மக்கள் அடித்தளத்தில் ஊடுருவி ஆதரவு பெறுகிறார்கள். அதுபோல நாமும் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு தொழிற்சாலையிலும், ஒவ்வொரு பள்ளியிலும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிகளை கட்டி காவி – கார்ப்பரேட் பாசிசக் கும்பலை நேருக்குநேர் சந்தித்து முறியடிக்க வேண்டும். அப்படிப்பட்ட முன்னணிகளே பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணிக்கு பின்புலமாக அமையும். அதுவே ஆர்.எஸ்.எஸ் – பாஜக, அம்பானி – அதானி பாசிச கும்பலை வீழ்த்தும். அதற்காகத்தான் உங்களை அறைகூவி அழைக்கிறோம்…! எங்களோடு இணையுங்கள், மாநாட்டுக்கு நிதி தாருங்கள் !

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை
தொடர்புக்கு :- 97916 53200, 94448 36642, 73974 04242, 99623 66321.


பதினைந்தாம் ஆண்டில் வினவு: சூறாவளியாய் சுழன்றடிப்போம்! கை கோருங்கள் வாசகர்களே!

5

அன்பார்ந்த வாசகர்களே, தோழர்களே,

வினவு 15-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அந்த வகையில் தங்களுக்கு எமது புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உலகத்தின் மாபெரும் மந்தம் அமெரிக்காவில் தொடங்கிய போது வினவு வலைப்பூவாகத் தொடங்கப்பட்டது. அது 2008. இன்று, 14 ஆண்டுகளைக் கடந்து 15-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. உலகம் முழுவதும் தமிழ் அறிந்த அரசியல் முன்னணியாளர்களிடம் வினவு ஒரு அங்கமாகியிருக்கிறது.

2008 ஜூலை 17 வினவு தொடக்க நாள்!

இந்த 13 ஆண்டுகள் தொடர்ச்சியான முன்னேற்றத்தை சந்தித்து வந்த வினவும் தனது 13-வது ஆண்டில் பெரும் நெருக்கடிக்குள்ளாகியது. மக்களுக்கு ஏற்பட்டது கோவிட் நெருக்கடி எனில், வினவில் ஏற்பட்டது அரசியல்-அமைப்பு நெருக்கடி. ஆளும் வர்க்கங்களால் உழைக்கும் மக்கள் சந்தித்த நெருக்கடிகளின் ஒரு அங்கமாக, சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமாக நடந்து கொண்டிருந்த தருணத்தில் வினவு முடங்கியது.

வினவின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்கள் இணைந்து சதித்தனமாக, வினவிலேயே தமது விலகல் கடிதத்தையும் வெளியிட்டு, தலைமறைவாகினர். அதனைத் தொடர்ந்து வினவின் ஆசிரியர் குழு பொறுப்பில் இருந்து விலகுவதாக வினவிலேயே அறிவித்தது. இவையெல்லாம், வினவின் வாசகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இத்தனை ஆண்டுகள் முன்னேற்றகரமாக இருந்த வினவு என்ன ஆகும் என்று அஞ்சத் தொடங்கினர்.

புரட்சிகர அரசியலுக்கு நம்பிக்கைக்குரிய இடமாக இருந்த வினவு தளத்தில் நடந்த இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து சுமார் ஒரு மாதம் வினவும் முடக்கப்பட்டதானது, வினவுக்கும் அதன் வாசகர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும்.

வினவு தொடங்கிய காலத்தில், வலைப்பூக்களும், இணைய தளங்கள் மட்டுமே இணைய உலகில் இருந்தன. அதிலும் வினவு அளவிற்கு செல்வாக்குள்ள ஒரு தளம் அன்று இல்லையென்றே சொல்லலாம்.

ஆனால், 2020-ஆம் ஆண்டிலோ நிலைமை முற்றிலும் வேறானது. பல சமூக ஊடகங்கள் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருந்தன. தமிழில் அரசியல் இணைய தளங்களும் வந்திருந்தன. இதனால், வினவில் நடக்கும் விவாதங்கள் தொடக்க காலங்களில் இருந்த அளவிற்கு இல்லாமல் போயிருந்தது.

இந்த சூழலில், வினவை முடக்கியதானது, புரட்சிகர அரசியலுக்கும் வினவுக்கும் செய்த துரோகத்தைத் தவிர வேறெதுவும் இல்லை.

2020-ஆம் ஆண்டில் மீண்டும் வினவு எழுந்து நடக்கத் தொடங்கினாலும் நெருக்கடியில்தான் அதுவும் நடந்தது. அரசியல் தலைமையில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து வினவுக்கு இருந்த நெருக்கடிகள் 2020 ஆகஸ்டில் முடிவுக்கு வந்தன. இதனைத் தொடர்ந்து வினவானது இரண்டாவதாக பிறப்பெடுத்து பயணிக்கத் தொடங்கியது.

இது வினவுக்கு மட்டுமல்ல, புரட்சிகர இதழ்கள் பலவற்றிற்கும் கடந்த காலங்களில் நடந்ததுதான். வினவும் கடந்து வந்துள்ளது!

வாசகர்கள் குறைந்துவிட்டனர், கும்பலாக பல தோழர்களுடன் சுறுசுறுப்பாக இயங்கிய வினவு அலுவலகம் ஒருசிலருடன் சுருங்கிவிட்டது. இனி, வினவு ஒழிந்துவிடும் என்று எதிரிகளும் துரோகிகளும் நகைத்துக் கொண்டிருந்தனர்.

2021 தொடக்கத்தில் வினவில் சில பதிவுகள் மட்டுமே வந்து கொண்டிருந்தன. பதிவுகளே வெளிவராத நாட்களும் பல. சமூகத்தின் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் போனவற்றில், வினவின் இரண்டு பிறந்த நாள்களும் அடங்கும்.

வினவு முடக்கப்பட்டது – 2020 பிப்ரவரி 25
மீண்டும் வினவு செயல்படத் தொடங்கியது – 2020 மார்ச் 23
இது வினவுக்கு ஒரு லாக்டவுன்

இந்த சமகாலத்தில் மக்களின் நிலைமை என்ன?

வரலாற்றில் முன்னுதாரணமில்லாத வகையில், மக்கள் கோவிட் பெருந்தொற்றால் தவித்துக் கொண்டிருந்தனர். உலகமே ஸ்தம்பித்திருந்தது; அச்சு ஊடகங்களின் காலமும் இத்துடன் முடிந்துவிடும் என்று சொல்லுமளவிற்கு எல்லா பணிகளும் முடங்கி இருந்தன. தொலைக்காட்சி மற்றும் இணைய உலகம் மட்டும்தான் மக்களுக்கு உலக நடப்புகளை தெரிந்து கொள்வதற்கு ஒரே வழியாக இருந்தது.

மக்கள் படும் துன்பங்களையும் அரசின் அலட்சியங்களையும் கோவிட் பெருந்தொற்றின் பின்னே உள்ள அரசியலையும் வீச்சாகப் பேச வேண்டிய தருணத்தில்தான், வினவில் நெருக்கடியும் உருவானது. அந்த நெருக்கடியுடனேயே தன்னால் இயன்ற அளவு இப்பிரச்சினைகளை வெளி உலகிற்குக் கொண்டுவந்தது.

பல முக்கியமான கட்டுரைகள் வாசகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றன.

கோவிட் பெருந்தொற்றை ஒட்டி ஒன்றிய அரசின் செயல்பாடுகளை அம்பலப்படுத்திக் கொண்டுவரப்பட்ட கட்டுரைகள், தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக கொண்டுவரப்பட்ட கட்டுரைகள், காவி எதிர்ப்பில் திமுகவின் சந்தர்ப்பவாதங்கள், அதன் கார்ப்பரேட் சேவை தொடர்பான கட்டுரைகள், இலங்கை அரசியலைக் கூர்ந்து கவனித்துக் கொண்டுவரப்பட்ட கட்டுரைகள், காவி-கார்ப்பர்ரேட் பாசிச அடக்குமுறைகளை அம்பலப்படுத்திய கட்டுரைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.

***

சர்வதேச அளவில் அமெரிக்காவின் ஒற்றைத் துருவ மேலாதிக்கம், அதன் இறுதிக்கட்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கைநழுவிக் கொண்டிருக்கும் உலக மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டிக் கொள்ளும் பொருட்டு, மூர்க்கமான போர்வெறியுடன் உக்ரைனைத் தூண்டிவிட்டுள்ளது. இதன் மூலம், இரசிய, உக்ரைன் போர் மூண்டு 150-க்கும் மேற்பட்ட நாட்களைக் கடந்துள்ள இன்றைய நிலையில், உலக பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது.

பொருளாதார நெருக்கடி, பாசிஸ்டுகளின் ஆட்சிகள், உலகப் போர் போன்றவை உலக மக்களை வாட்டி வதைக்கின்றன. பல நாடுகள் தொடர்ந்து போர்க் களத்திலும் போராட்டக் களத்திலுமே இருக்கின்றன. ஒரு அலை போல இந்த போராட்டங்கள் உலக நாடுகளைச் சுற்றிவருகிறது.

வினவு உச்சத்தில் இருந்த போது
மாதம் 200 பதிவுகள் வரை வெளிவந்தன.
அதிகபட்சமாக 224 பதிவுகள் வந்துள்ளன.

நமது நாட்டில், காவி-கார்ப்பரேட் பாசிசம் அனைத்து துறைகளிலும் வேகமாக அரங்கேறி வருகிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இதனை எதிர்ப்பதில் சந்தர்ப்பவாதமாக செயல்பட்டு வருகின்றன. எந்தக் கட்சியும் கார்ப்பரேட் சேவை மட்டும் கைவிடவில்லை. புரட்சிகர ஜனநாயக சக்திகள், சிறுபான்மை மக்கள், தலித் மக்கள், பழங்குடியின மக்கள்தான் பாசிசத்தை நேரடியாக எதிர்கொண்டு வருகின்றனர். பாசிஸ்டுகள் ஒருங்கிணைந்த வகையில் திட்டமிட்டு செயல்படும் இச்சூழலில், பாசிச எதிர்ப்பு சக்திகளில் ஒருங்கிணைப்போ பலவீனமாக உள்ளது.

ஆனால், அண்டை நாடான இலங்கையில் மக்கள் வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டம் இந்தியாவிற்கும் பரவிவிடுமோ என்று ஆளும் வர்க்கங்கள் அஞ்சிக் கொண்டிருக்கின்றன.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவாசாயிகளின் போராட்டம், அக்னிபாத்திற்கு எதிராக மாணவர்-இளைஞர்கள் போராட்டம், தனியார் கல்வி நிறுவனத்திற்கு எதிரான கள்ளக்குறிச்சிப் போராட்டம் என்று போராட்டங்கள் நாள் தோறும் புதிய உச்சத்தை அடைந்து கொண்டிருக்கின்றன.

பாசிஸ்டுகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருப்பதால், கடுமையான ஒடுக்குமுறைகளைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி, இந்துராஷ்டிரத்தைப் படைத்துவிடலாம் என கனவு காண்கின்றனர். ஆனால், உழைக்கும் மக்களோ தங்களால் இயன்ற பல்வேறு வகைகளில் இவற்றை எதிர்க்கொண்டு வருகிறனர்.

அந்த மக்களுடன் வினவும் தொடர்ந்து பயணிக்கும், மக்களுக்கு தோள்கொடுக்கும்!

***

நெருக்கடிகள் பல பாடங்களை விட்டுச் செல்கின்றன. புரட்சிகர ஊக்கமான சக்திகள்தான் அதில் இருந்து கற்றுக்கொள்கின்றன. வினவும் இதற்கு விதிவிலக்கல்ல.

வினவின் எழுத்தாளர்களும் பதிவாளர்களும் அலுவலகத்தில் நிறைந்து இருந்த சுழல் இன்று மாறி உள்ளது. பல கள எழுத்தாளர்கள் வினவுக்கு எழுதத் தொடங்கி உள்ளனர். புதிய எழுத்தாளர்கள் பலர் உருவாகி வினவில் பதிவுகளை எழுதி வருகின்றனர். 2021 மார்ச் இறுதியிலிருந்து சொந்தப் பதிவுகளை மட்டுமே கொண்டு வினவு இயங்கி வருகிறது.

வினவின் கட்டமைப்பில் ஏற்பட்ட இந்த மாற்றமானது வினவை மேலும் விரிவுப்படுத்துவதாகவும், மீண்டும் ஒரு நெருக்கடி வினவுக்கு வந்தாலும் மீளும் வழிவகை கொண்டதாகவும் அமைந்துள்ளது. வினவை மக்களிடமும் புதிய எழுத்தாளர்களிடமும் கொண்டுசென்று சேர்த்துள்ளது.

தோழர் மாவோ சொல்வது போல, தீமை நன்மையாக மாற்றப்பட்டுவிட்டது!

ஜூலை 2021-இல் இருந்து களச் செய்திகள் உழைக்கும் மக்களின் அனுபவங்களை எழுதத் தொடங்கியுள்ளோம். தூய்மைப் பணியாளர் போராட்டங்கள், செவிலியர் போராட்டம், தற்காலிக விரிவுரையாளர் போராட்டம், திம்பம் மலைப்பாதையில் மக்கள் போராட்டம், கோவை மலுமிசைப்பட்டி தலித் மக்கள் போராட்டம், பாலியப்பட்டு மக்கள் போராட்டம், ஆத்தூர் தலித் மக்கள் கோவில் நுழைவைத் தடுப்புக்கு எதிரான போராட்டம்,மேச்சேரி தலித் ஆசிரியர் மீதான அடக்குமுறை கண்டித்து மக்கள் நடத்திய போராட்டம், ஜி.எஸ்.டி., கல்விக் கொள்ளை போன்றவை தொடர்பான உழைக்கும் மக்களுடன் கருத்துரையாடல்… என பல பதிவுகள், களச்செய்தியாளர்களால் எழுதப்பட்டவையாகும். இதன் மூலமாக, வினவு பல்லாயிரம் புதிய மக்களுக்கு அறிமுகமாகியுள்ளது.

இந்தக் கட்டுரைகள் வெறுமனே செய்திகளைச் சொல்வதாக மட்டுமின்றி, உழைக்கும் மக்களின் வலியை நமக்கு கடத்துபவையாகவும் அமைந்திருந்தன என பல வாசகர்கள் தெரிவித்தனர்.

வினவு காத்திரமான பல கட்டுரைகளையும் கொண்டு வருகிறது.

மக்கள் போரட்டம் என்றால் அதற்கு தொடர்ச்சிக் கொடுக்க முயன்று வருகிறோம். கள்ளக்குறிச்சி மக்கள் போராட்டத்தின் மீதான அரசின் அடக்குமுறை தொடர்பாக வினவு வெளியிட்ட பதிவுகள் சிறு முயற்சியாகும். இன்னும் இந்த திசையில் வினவு அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து கட்டுரைகளைக் கொண்டுவருகிறோம். வீடியோ பதிவுகளை அதிக்கப்படுத்தியுள்ளோம். தோழமை அமைப்புகள் மூலமாக களச்செய்திகளைக் கொண்டுவருகிறோம்.

மேலும், வீடியோ பதிவுகளை அதிகரிக்க வேண்டியுள்ளது; கேலிச்சித்திரங்கள், நூல் அறிமுகம், கேள்வி-பதில் உள்ளிட்ட பல வடிவங்களில் பதிவுகளைக் கொண்டுவர வேண்டியுள்ளது.

இன்று, இணையதளம் மட்டுமின்றி, வினவின் யூடியுப், முகநூல் பக்கங்கள், டிவிட்டர் பக்கங்கள் என பல லட்சம் பேர் வினவைப் பின் தொடர்கிறார்கள். இது கடந்த நான்காண்டுகளில் பெரிய வளர்ச்சியாகும். மற்ற மாற்று ஊடகங்களுடன் வினவை ஒப்பிடும் போது இது மிகப் பெரும் சரிவாகும். ஆனால், நெருக்கடிகளை கடந்து மீண்டு வந்துள்ள வினவிற்கு இது வெற்றியாகும்.

வாசகர்களின் ஆதரவு தான், இன்றைய சூழலில் முற்போக்கு, புரட்சிகர அரசியலை பரப்பும் ஊடகங்களில் வினவை முன்னிலைக்கு கொண்டுவந்துள்ளது.

வினவில் ஏற்பட்ட நெருக்கடியின் போது அனைத்து வாசகர்களும் மாத சந்தா தருவதை நிறுத்திவிட்டனர். வினவு மீண்டும் செயல்பட தொடங்கிய பின்னர், வினவின் செயல்பாடுகளில் நம்பிக்கை ஏற்பட்டு ஒரு சில வாசகர்கள் மீண்டும் நன்கொடை கொடுக்கத் தொடங்கி இருப்பது ஆறுதலை அளிக்கிறது.

வினவு கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. உங்களது நிதி ஆதரவை பெரிதும் எதிர்நோக்கியுள்ளது.

மேலும், வினவு அலுவலக எழுத்தாளர்களைவிட, கள மற்றும் வெளி எழுத்தாளர்கள், பதிவர்களையே அதிக அளவில் சார்ந்திருக்கிறது. வாசகர்களாகிய நீங்களும் அவ்வாறு பங்களிக்க முடியும், பங்களிக்க வேண்டும்.

2022-ஆம் ஆண்டில் வினவு பல ஏற்றங்களை சந்திக்கும் என்று நம்புகிறோம். காவி-கார்ப்பரேட் காரிருள் சூழ்ந்துள்ள இன்றைய சூழலில் மக்கள் போராட்டங்களும் வளர்ந்து வருகின்றன. இந்தக் காலத்தில் ஒரு புரட்சிகர பலம் என்ற வகையில் வினவு மேலும் வேகமாக செயல்பட வேண்டி உள்ளது.

போகும் பாதை வெகு தூரம். புரட்சிகர சமூக மாற்றத்தை தவிர, பின்னடைவுகளும் வேற எந்த முன்னேற்றங்களும் நாம் கற்றுக்கொள்ளத்தக்கவையே.

கற்றுக்கொள்வோம், மீண்டெழுவோம்!
சூறாவளியாய் சுழன்றடிப்போம்!
கை, கோருங்கள் வாசகர்களே!

வினவு

 


உலக ஆளும் வர்க்கம், முடிவில்லாத போர், மக்களின் கொத்துக் கொத்தான மரணம்! – பாகம் 1

0

லகை ஆளுகின்ற ஆளும் வர்க்கக் கும்பல் எந்தவித பொறுப்புணர்வுமின்றி ஆட்சியை நடத்திக் கொண்டுள்ளது. மக்கள் அடிமை முறைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சுற்றுச் சூழல் மிக மோசமாக நாசமாகிக் கொண்டுள்ளது. மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிவது அன்றாட நிகழ்வாக மாறிக் கொண்டுள்ளது.

எதிர்காலம் பற்றி எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாமல் உள்ளது. சுற்றுச் சூழல் முற்றாக நாசமாகிக் கொண்டிருப்பது பற்றி ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன. இந்த சுற்றுச் சூழல் நாசமாவதைத் தடுத்து நிறுத்தக் கூடிய எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுப்பதற்கு உலக ஆளும் வர்க்கம் தயாராக இல்லை. பூமியில் புதைந்துள்ள கரிம எரிபொருள் எடுப்பதை விரைவுபடுத்தி வருகிறோம்! அதை எந்த வரம்புமற்று சுவீகரித்து வருகிறோம்! இவை தவிர, காணுயிர்கள் சுவீகரிப்பு பூதாகரமாகப் பெருகி வருகிறது! ஃப்ராய்டிய மரண விருப்பத்தால் பீடிக்கப்பட்டுள்ளது போல புதுப் புதுப் போர்களை நடத்தி வருகிறோம்! அபோகலிப்சோவின் நான்கு குதிரை ஓட்டிகளைப் போல – ஆக்கிரமிப்பு, போர், வறட்சி மற்றும் மரணம் – இவற்றுடன் 21-ம் நூற்றாண்டிற்குள் பாய்ச்சலில் சென்று கொண்டுள்ளோம்!

ஆள்பவர்கள் யார்? கார்ப்பரேட் நிறுவனங்களின், உலக கோடீசுவர வர்க்கத்தின் ஏவல், எடுபிடி நாய்கள்! இந்த கையளவேயான கார்ப்பரேட்டுகளின் தற்கொலைப் பாதையான பேரழிவுப் பாதையில் ஆட்சியாளர்கள் உலகை இழுத்துச் செல்கின்றனர். கார்ப்பரேட் பகாசுர சூறையாடலை சீர்திருத்துவது பற்றி கூட இந்த ஆட்சியாளர்களின் திட்டத்திலேயே இல்லை. மாறாக இந்த சூறையாடலுக்குப் பணிந்து சேவை செய்கின்றனர்.


படிக்க : இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் !


இந்த பகாசுர சூறையாடலால் உலக மக்கள் சொல்லொனா துன்ப துயரங்களுக்கு ஆளாக்கப் படுகிறார்கள்! இதனால் மரபான சட்ட முறையிலான ஆட்சியை நடத்த முடிவதில்லை. ஒரு பாசிசக் கொடுங்கோண்மை ஆட்சி தேவைப்படுகிறது! அங்கு கோடீசுவர ஆளும் வர்க்க கும்பல் உல்லாச ஊதாரி வாழ்க்கை நடத்தும்! உழைப்பாளிகளோ அடிமைகளாக நடத்தப்படுவார்கள்!

மனித உரிமைகளும் இயற்கை நீதிகளும் செல்லாக்காசாக இருக்கும்! 24 மணி நேரமும் 365 நாட்களும் பெரியண்ணனின் கண்காணிப்பின் கீழ் உலக மக்கள் உழல வேண்டும்! அரசே சாவு வியாபாரிகளாகவும், போர் மட்டுமே அதன் தொழிலாகவும் இருக்கும்! மாற்றுக் கருத்துக்களுக்கு இம்மியளவும் இடமிருக்காதது மட்டுமல்ல அவர்கள் கிரிமினல் குற்றவாளிகளாக்கப்பட்டு நரவேட்டையாடப்படுவார்கள்!

ஏகாதிபத்தியங்களின் இலாப வெறிக்காக தூண்டிவிடப்படும் உள்நாட்டுப் போர்களாலும், சுற்றுச் சூழல் நாசத்தாலும் சொந்த மண்ணிலிருந்து விரட்டப்படும் மக்கள், அகதிகளாக, அந்த மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளில் இப்படிப்பட்ட நாசங்கள் இல்லயே என அங்கு தஞ்சம் புகச் சென்றால் அங்கு நுழைய விடாமல் விரட்டியடிப்பார்கள்!

அன்றாடம் அகதிகள் செத்து மடியும் நெஞ்சை உலுக்கும் செய்திகள் தினசரி நிகழ்வுகளாக எவ்வித எதிர்ப்புமின்றி, பதைபதைப்புமின்றி கடந்து சென்று கொண்டிருக்கின்றன! இன்றைக்கு இப்படிப்பட்ட கொடுமைகள் நமக்கில்லை என மகிழ்ந்து கொண்டுள்ள உல்லாச ஊதாரி கும்பல் நாளை இதே கொடுமைகளுக்குப் பலியாகி செத்து மடியும் அவலத்தைக் காண உலகில் யாரும் இருக்க மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி!

தண்டிக்கப்பட்டு கைவிடப்பட்ட கோடானு கோடி மக்கள் தமது எதிர் காலம் பற்றித் தெரிந்து வைத்துள்ளனர். அவர்களுக்கான எதிர்காலம் இப்போதே வந்து விட்டது. நமது தலைமுறையின் மிக முக்கியமான பதிப்பாளரும் ஆஸ்த்திரேலிய குடிமகனுமான ஜூலியன் அசாஞ்சேவை அகதி என்று கூடப் பார்க்காமல் சர்வதேச சட்ட விதிகளை மீறி பிரிட்டன் அரசு கைது செய்தது! ஏகாதிபத்தியங்கள் நடத்தும் ரகசிய சதிச் செயல்களை விக்கி லீக்ஸ் என்ற இணைய இதழில் அம்பலப்படுத்தி உலக மக்களை எச்சரித்த அவரை கைது செய்ய அலைபாய்ந்த அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்த பிரிட்டன் அரசு அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடிவு செய்த செய்தி நமக்கெல்லாம் தெரிந்த ஒரு உதாரணம் தான்!

உலக சாவு வியாபாரிகளின் ரகசிய சதித் திட்டங்களை, பழிவாங்கும் நடவடிக்கைகளை, அவர்களின் இழிவான பண்புகளை, கார்ப்பரேட்டுகளின் – அரசுகளின் ஊழல் கிரிமினல் குற்றங்களை அம்பலப்படுத்தும் யாராயிருந்தாலும் அவர்கள் கிரிமினல்களாக முத்திரை குத்தப்பட்டு வேட்டையாடப் படுவார்கள் என்றால் எத்தனை பத்திரிகையாளர்கள் தமது உயிருக்குத் துணிந்து உண்மைகளை வெளிக்கொண்டு வருவார்கள் என எதிர் பார்ப்பீர்கள்? இன்றைக்கு ஜனநாயகத்தின் தூண் என சொல்லப்படும் பத்திரிகை தர்மம் கிரிமினல் குற்றமாக்கப்பட்டு விட்டது! (இந்தியாவிலும் பத்திரிகையாளர்கள் ஒடுக்கப்படுவதும், கொல்லப்படுவதும் நினைவுக்கு வருகிறதா?)

அசாஞ்சே பக்கவாத பாதிப்புக்குள்ளாகி உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது ஒரு பொருட்டல்ல! அவர் அமெரிக்க குடிமகன் இல்லை என்பதோ அவரது விக்கி லீக்ஸ், அமெரிக்க பதிப்பகம் இல்லை என்பதோ ஒரு பொருட்டல்ல! அசாங்கே தஞ்சம் புகுந்து 7 ஆண்டுகள் வாழ்ந்து வந்த ஈகுடேரிய தூதராலயத்தில் பாதுகாப்புப் பணி புரிந்த ஸ்பெயின் நாட்டின் யுசி குலோபல் (UC Glopal) நிறுவனம் தனிப்பட அசாஞ்சேயும் அவரது வழக்குரைஞரும் பேசியதை அவர்களுக்கே தெரியாமல் சட்ட விரோதமாகப் பதிவு செய்து அமெரிக்காவிடம் கொடுத்தது.

Julian-Assange
ஈக்வடார் தூதரகத்தில் இருந்து வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து செல்லப்படும் அசாஞ்சே.

இது சர்வதேச விதி மீறல்! யாரிடம் போய்ச் சொல்வது? அசாஞ்சேக்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பிரச்சாரம் செய்யப்பட்டது! அவரது வழக்கு விசாரணை ஒரு மோசடி நாடகம்! ஒருமுறை இந்தக் கட்டுரையாளர் நீதிமன்றம் சென்று விசாரணையைப் பார்த்த போது எந்தக் குற்றமுமற்ற, ஹீரோவான அசாஞ்சே, கேளிக்குறிய நபராக எந்த ஜனநாயக உரிமைகளும் அற்றவராக நடத்தப்பட்டார்! அவரை நடத்திய விதத்தில் ஒரு செய்தி சொல்லப்பட்டது! அதாவது, நீ எங்களை அம்பலப்படுத்தினால், நாங்கள் உங்களை ஒழித்துவிடுவோம் என்பதுதான்! (மோடி அரசின் செயல்பாடு போலவே இருக்கிறதே என உங்கள் மனதில் ஓடுகிறதா?)

சீனாவின் பரந்து விரிந்த வியர்வைக் கூடங்களான தொழிலகங்களிலோ துருப்பிடித்துப் போன டெட்ராய்டின் கார்ப்பரேட் நிறுவனங்களிலோ தொழிலாளர்கள் வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட போதாத அற்பக் கூலிக்கு அல்லற்படுகின்றனர். அங்கு பணிப்பாதுகாப்புமில்லை, தொழிற்சங்கங்களுமில்லை! வணிக ஒப்பந்தங்கள், ஆலை மூடல்கள், உயரும் வட்டி வீதம், விலைவாசி உயர்வு என அனைத்தும் தொழிலாளர்களை அழித்தொழித்து வருகின்றன! (இந்தியாவின் நிலைமைகளை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறதா?) அவர்களுக்கும் தமது எதிர்காலம் தெரிகிறது!

வட்டி விகிதம் அதிகரிப்பது மறுதலையாக கூலியைக் குறைக்கிறது. பல பத்தாண்டுகளாக கூலி உயராமல் தேங்கியுள்ளது! இது வேலையின்மையையும், அதனால் தனிநபரின் கடனையும் அதிகரித்து விட்டது! உணவு மற்றும் பிற அடிப்படைத் தேவைகளின் விலை உயர்ந்துவிட்டது! வட்டி விகிதத்தை உயர்த்துவது பொதுவில் பொருளாதார மந்தத்தை உருவாக்கும்! ஆனால் கார்ப்பரேட் பகாசுரக் கொள்ளையர்கள் டிராகுலாக்களைப் போல தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சுவதிலேயே வெறி பிடித்து அலைகின்றனர்! பணவீக்கம் முதலீட்டிலான இலாபத்தைக் குறைப்பதால், ஆலையில் போடப்படும் மூலதனம் குறைகிறது!

கூலி உயர்வதால் விலைகள் உயர்வதில்லை! விலை உயர்வுக்கு சந்தையில் பொருள் வரத்து குறைவதுதான் முக்கிய காரணம்! மறுபுறம் எரிபொருள் விலை உயர்வாலும் கார்ப்பரேட்டுகளின் இலாப வெறியாலும் பொருட்களின் விலை அதிகரிக்கிறது! இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் அமெரிக்க பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது உற்பத்திப் பொருட்களின் விலைகளை உயர்த்தி வரலாறு காணாத இலாபத்தை ஈட்டியுள்ளனர்! (இந்தியாவிலும் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் கார்ப்பரேட்டுகள் பெரும் லாபம் சம்பாதித்து உலகப் பணக்கார வரிசையில் சேர்ந்திருப்பதை பல கட்டுரைகளில் வினவே அம்பலப்படுத்தியுள்ளது!)

அமெரிக்க பொருளாதார பகுப்பாய்வகத்தின் கூற்றுப்படி, வரி செலுத்துவதற்கு முன்பான இலாப விகிதம் 25% அதிகரித்தது, அதாவது 2.81 இலட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 1976-க்குப் பின் இதுவே மிக அதிக ஆண்டு இலாபம்! 1948 முதல் மத்திய வங்கி இலாபம் பற்றி பகுப்பாய்வு செய்யத் தொடங்கியதிலிருந்து கடந்த ஆண்டு வரி செலுத்திய பின்பான இலாப விகிதம் மிக அதிக அளவாக 37% அதிகரித்துள்ளது.


படிக்க : இரஷ்ய-உக்ரைன் போர்: இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் ! – பாகம் 2


அமெரிக்காவின் டிரஸ்டுகளுக்கு எதிரான சட்டம் மற்றும் ஏகபோகத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை பணவீக்கத்தின் பாதிப்புகளைச் சற்று மட்டுப்படுத்தி விலைவாசியைக் குறைக்கும்! பொருட்களை கட்டுப்பாட்டுடன் பகிர்ந்தளிக்கையில் பணவீக்கம் குறையும். இதே போல கூலியையும் விலையையும் உயர்த்தாமல் அதே நிலையில் இருத்தும் போது பண வீக்கம் குறையும்.

நாட்டுடமையாக்கள், பொதுத் துறைகளை கார்ப்பரேட்டுகள் கைப்பற்றுவதை – பொது சுகாதாரம், வங்கி முதலியன – கைவிடும் போது விலைவாசி குறையும்! ஆனால் கோடீசுவரர்கள் தமது இலாபத்தைக் குறைக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் ஏற்கமாட்டார்கள்! தமது ஏகபோகத்தை பாதுகாப்பார்கள்! பொதுத் துறைகளை தமது கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பார்கள்! கோடீசுவரர்களின் செய்தி இதுதான்: ‘பொருளாதாரம் எங்களின் இலாபத்திற்காகத் தான் இயங்குகிறது, உங்களுக்காக இல்லை!’.

ஆயிரக்கணக்கான கோடி டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை அமெரிக்காவும் ஐரோப்பாவும் உக்ரைனுக்கு வழங்குவதால் போரைத் தொடர்ந்து கொண்டுள்ள உக்ரேனியர்களுக்கும் அவர்களது எதிர்காலம் பற்றித் தெரியும்! அரசின் தலையாய வணிகமே போர்தான்! சாவு வியாபாரிகள்! போர்த் தளவாட உற்பத்தி ஆலைகள் கொழிக்கின்றன! இராணுவத்திற்கான வரவு செலவு பட்ஜெட் விரிவடைகிறது! இன்றைய தேதிக்கு அமெரிக்கா நாளொன்றுக்கு 13 கோடி டாலர் மதிப்பிலான ஆயுதங்களைக் கொடுத்து உதவுகிறது! இது மொத்தமாக உதவி செய்ய உறுதியளித்த 5,500 கோடி டாலரில் ஒரு பகுதிதான்!

(தொடரும்…)

(குறிப்பு: கிரிஸ் ஹெட்ஜெஸ் என்ற புலிட்சர் பரிசு பெற்ற அமெரிக்கப் பத்திரிகையாளர் எழுதிய கட்டுரையினைத் தழுவியது. இவர் தி நியூயார்க் டைம்ஸ் இதழில் 15 ஆண்டுகள் பணியாற்றியவர். Scheer Post-ல் 2020ல் வெளியான கட்டுரை. முதலாளித்துவ எழுத்தாளர்களே முதலாளித்துவத்தின் தோல்வியை எழுதுகின்றனர். அது நீடிக்கக் கூடாது என்கின்றனர்.)


நாகராசு

‘அக்னிபத் திட்டம்’: காண்டிராக்ட்மயம், கார்ப்பரேட் நலன், காவி பயங்கரவாதம்!

டந்த 14.06.2022 அன்று, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் ‘வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு’, ‘புரட்சிகரமான திட்டம்’ என்று பா.ஜ.க. அரசால் படாடோபமாக அறிவித்துக் கொண்டுவரப்பட்டது ‘அக்னிபத்’ என்ற திட்டம்.

17.5 முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்களை, 6 மாதங்கள் பயிற்சிகொடுத்து 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த முறையில் (காண்டிராக்ட்) இராணுவத்தில் வீரர்களாக சேர்த்துக் கொள்வதே அக்னிபத் திட்டமாகும். இவ்வாறு சேர்த்துக் கொள்ளப்படும் வீரர்கள் ‘அக்னி வீரர்கள்’ என்று அழைக்கப் படுவார்களாம்.

இவர்களுக்கு தொடக்கத்தில் 30 ஆயிரம் சம்பளமாகவும் பின்னர் படிப்படியாக அதிகரித்து இறுதியாண்டில் 40 ஆயிரம் சம்பளமாகவும் வழங்கப்படும். 4 ஆண்டுகள் பணி முடித்தவுடன் இவர்களில் 25 சதவிகிதம் பேர் மாத்திரம் இராணுவத்தில் நிரந்தரப் பணியாளர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மீதமுள்ள 75 சதவிகிதம் பேர் வெளியேற்றப்படுவார்கள். மற்ற இராணுவ வீரர்களைப் போல இவர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படாது. பணியிலிருந்து விடுவிக்கபடும்போது, இதுவரை சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையோடு, கூடுதலாக அரசு செலுத்தும் தொகையும் சேர்த்து சேவா நிதி என்ற பெயரில் 12 இலட்சம் வழங்கப்படும். அக்னிபத் வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் இவை.


படிக்க : இந்து ராஷ்டிரத்தை அடித்து நொறுக்குவோம் | தோழர் ரவி வீடியோ


முப்படைகளுக்குமான இராணுவச் செலவுகளுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் 5.26 இலட்சம் கோடியில் 1.20 இலட்சம் கோடி ஓய்வூதியத்திற்கு மட்டுமே செலவிடப்படுகிறது; மொத்த பட்ஜெட் தொகையில் 48.8 சதவிகிதம் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கும் ஓய்வூதியத்திற்கும் மட்டுமே செலவிடப்படுகிறது; அக்னிபத் என்ற பெயரில் இராணுவத்தில் காண்டிராக்ட் முறையைப் புகுத்துவதன் மூலம் இச்செலவினங்களை மிச்சப்படுத்தி, ‘இராணுவத்துறையை நவீனமயப்படுத்தப் போகிறோம்’ என்கிறது பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு.

அக்னிபத்-க்கு எதிரான போராட்டத் தீ!

“இந்திய இராணுவத்தை வலுப்படுத்தும் திட்டம்”, “இராணுவத்துறையை நவீனமயமாக்கும் திட்டம்” அத்துடன் இலவச இணைப்பாக, “தேசபக்தி மிக்க இளைஞர்கள் நாட்டுக்கு சேவையாற்றுவதற்கு பொன்னான வாய்ப்பை வழங்கும் திட்டம்” – என மிகக் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தப்பட்டாலும் இராணுவத்தில் காண்டிராக்ட் முறையை புகுத்தும் இத்திட்டம் பா.ஜ.க.வாலே நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இளைஞர்களின் எதிர்ப்புகளை சம்பாதித்துள்ளது.

குறிப்பாக, இராணுவத்தில் சேரும் கனவோடு பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள் நாடு முழுக்க வீரியமான பல போராட்டங்களை முன்னெடுத்துவருகிறார்கள். உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, பீகார், இராஜஸ்தான் ஆகிய வடமாநிலங்கள் தொடங்கி தெலுங்கானா வரை மொத்தம் 18 மாநிலங்களில் இளைஞர்களின் போராட்டங்கள் மிகப் போர்குணமாக நடைபெற்றன.

தமிழகத்திலும் சென்னை, வேலூர், திருப்பத்தூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், இராணுவத்தில் சேர்வதற்காக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் நடத்தினர்.

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரயிலை மறித்து போராடும் இளைஞர்கள். இடம் தெலுங்கானா மாநில செகந்திரபாத்.

பல மாநிலங்களிலும் போராட்டக்காரர்கள் இரயில் மறியலில் ஈடுப்பட்டனர். 12 இரயில்கள் போராட்டக்காரர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் போராட்டக்காரர்கள் இரயிலுக்குத் தீவைத்தபோது, போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். இளைஞர்களின் போராட்டத்தால் சுமார் 300 இரயில்கள் இரத்துசெய்யப்பட்டன. 1,000 கோடிகளுக்கு மேல் இரயில்வே துறைக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 700-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுப்பட்டதற்காக போலீசால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வேலையில்லாத் திண்டாட்டம் – வெடித்தெழுந்த கோபம்

15 ஆண்டுகால இராணுவ வீரர் பணியை, 4 ஆண்டு தற்காலிக ஒப்பந்த பணியாக மாற்றும் அக்னிபத் திட்டம், 21 வயதே ஆன இளைஞனை உத்தரவாதமில்லாத வாழ்க்கைச் சூழலில் வெளியே தள்ளுகிறது. அடுத்த வேலைக்கு உத்தரவாதம் இல்லை. இளைஞர்களின் கோபத்திற்கு முக்கியக் காரணம் இது.

தற்போது இராணுவப் பணி காண்டிராக்ட்மயத்தை எதிர்த்துப் போராடுவதைப் போலவே, கடந்த ஜனவரி மாதம் இரயில்வே தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி) நடத்திய தேர்வில் மோசடி நடைபெற்றதாகக்கூறி பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அரசுத் தேர்வெழுதிய மாணவர்கள் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டது நினைவிருக்கலாம்.

இச்செய்தி குறித்து, 2022 பிப்ரவரி மாத புதிய ஜனநாயகம் இதழில், “வேலை உத்தரவாதமின்மை, வாழ்க்கைச் செலவினங்களுக்கு கூட போதிய வருவாயின்மை ஆகிய பிரச்சினைகள் மக்களை ஒரு கிளர்ச்சிகர சூழலின் தருவாயில் நிறுத்தியுள்ளது. அதில் ஒரு சிறு தீப்பொறியைத்தான் பீகாரில் பார்க்கிறோம்.” என்று எழுதியிருந்தோம். இதோ இன்று அக்னிபத் பிரச்சினையில் நாடு முழுவது பற்றிப் பரவுகிறது இளைஞர்களின் போராட்டங்கள்.

எந்தெந்த மாநிலங்களில் அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் மிகத் தீவிரமாக நடைபெறுகின்றனவோ, அந்த மாநிலங்களெல்லாம் மிகக் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுவதைப் பார்க்கலாம். சான்றாக, இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் (Centre for Monitoring Indian Economy) மே மாதத் தரவுகளின்படி, பீகாரில் 13.3 சதவிகிதம் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது; இதுவே ஹரியானாவில் 24.6 சதவிகிதமாகவும், இராஜஸ்தானில் 22.2 சதவிகிதமாகவும், ஜார்கண்டில் 13.1 சதவிகிதமாகவும் உள்ளது.

எப்பாடு பட்டாவது, மத்திய அல்லது மாநில அரசுப் பணியிடங்களில் நுழைந்துவிட்டாலோ இராணுவம், போலீசு ஆகிய துறைகளில் சேர்ந்துவிட்டாலோ வாழ்க்கையை உத்தரவாதப் படுத்திக் கொள்ளலாம் என ஒருபிரிவு இளைஞர்கள் தவம் கிடக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பில் இடியை இறக்குவது போல இறங்கியிருக்கிறது இராணுவத்துறையில் காண்டிராக்ட் முறையைப் புகுத்தும் அக்னிபத் திட்டம். இளைஞர்களின் கோபத் தீ, மேலோங்கிப் படர்ந்துவருவதற்கு இதுவே அடிப்படை.

நிரந்தர வேலை பறிப்பே, புதிய வேலைவாய்ப்புகளாக…

இதில் கொடுமை என்னவென்றால், 2024 முடிய, ஒன்றரை ஆண்டுக்குள் மத்திய அரசுப் பணிகளில் 10 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கப்போவதாக அறித்துள்ளார் மோடி; அக்னிபத் திட்டம் மூலம் 4 ஆண்டுகளில் உருவாக்கப் போவதாகச் சொல்லும் 1.86 இலட்சம் வேலைவாய்ப்புகள், மேற்சொன்ன 10 இலட்சத்தில் ஓர் அங்கமாகக் குறிப்பிடப்படுகிறது.

இரயில்வே தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபடும் பீகார் மாணவர்கள்.

2020 மார்ச் 01 அன்று, நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், மத்திய அரசுப் பணியிடங்களில் இன்றைய புள்ளிவிவரப்படி, 8.72 இலட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாகக் குறிப்பிட்டார். அரசுத் துறைகளில் நிரந்த ஊழியர்கள் நிரப்பப்பட வேண்டிய இலட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் அனைத்தும் காண்டிராக்ட்மயமாக்கப்பட இருக்கின்றன என்பதை மோடியின் ‘10 இலட்சம் வேலைவாய்ப்பு’ திட்டத்தை அக்னிபத் திட்டத்தோடு இணைத்துப் பார்த்துப் புரிந்துகொள்ளலாம்.

வேலைவாய்ப்பை அழிப்பதையே ‘வேலைவாய்ப்பை உருவாக்குவதாக’ நா கூசாமல் பிரச்சாரம் செய்கிறார்கள் மோடியும் அவரது அடிவருடிகளும்.

எனவே ‘வேலைவாய்ப்பு உருவாக்கம்’ என்ற பெயரில், அனைத்துத் துறை அரசுப் பணிகளையும் காண்டிராக்ட்மயமாக்கும் விரிந்த திட்டத்தின் ஓர் அங்கமே அக்னிபத். ஆகவே பாசிச மோடி அரசு இதிலிருந்து பின்வாங்குவது அவ்வளவு எளிதானதல்ல.

நாடெங்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்களின் போராட்டங்கள் வெடித்தபோதும், அதைப் பார்த்து மோடி அரசு பின்வாங்கிவிடவில்லை. “முப்படைகளிலும் தற்காலிக வீரர்களைச் சேர்க்கும் அக்னிபத் திட்டம் திரும்பப் பெறப்படாது” – என தெளிவாகவே அறிவித்திருக்கிறார் இராணுவ விவகாரங்களுக்கான கூடுதல் செயலர் ஜெனரல் அனில் புரி.

ஆனால், சில சலுகைகளை அறிவிப்பதன் மூலமும் பொய் நம்பிக்கைகளை ஊட்டுவதன் மூலமும் எதிர்ப்புகளை ஓரளவு சிதறடிக்க முயற்சிக்கிறது பாசிச பா.ஜ.க.

இந்த ஆண்டு மட்டும் அக்னிபத் வீரர்களுக்கான வயது வரம்பு தளர்த்தப்பட்டு 23 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அக்னிபத் திட்டத்தில் வேலை பார்த்த வீரர்களுக்கு, மத்திய அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், மத்திய ஆயுத போலீஸ் படை, அசாம் ரைஃபில் படை ஆகிய படைப்பிரிவுகளில் அக்னி வீரர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங். கர்நாடகம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநில அரசாங்கங்கள், பணி முடித்து வெளியே வரும் அக்னி வீரர்களுக்கு மாநில அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்குவோம் என அறிவித்திருக்கிறார்கள்.

கார்ப்பரேட்டுகளுக்கான குண்டர் படைகளா அக்னி வீரர்கள்?

பா.ஜ.க. மற்றும் அதன் ஊதுகுழுல் ஊடகங்களின் ஆதரவுப் பிரச்சாரங்களுக்கு இடையே, கார்ப்பரேட் முதலாளிகளும் அக்னிபத் திட்டத்திற்கு வெளிப்படையாகத் தங்கள் பேராதரவுகளை வழங்கி வருகிறார்கள்.

ஆர்.பி.ஜி. எண்டர்பிரைசஸ் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, பயோகான் லிமிடெட் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா, மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் சுதர்சன் வேனு, டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் ஆகியோர் அக்னிபாத் திட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இத்திட்டம் கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வேட்டைக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கப் போகிறது என்பதை இந்த வெளிப்படையான ஆதரவுகளே நமக்கு உணர்த்துகின்றன.

“இந்த திட்டத்தின் கீழ் ஒழுக்கம் மற்றும் திறன் பயிற்சி பெறும் வீரர்கள் வேலைவாய்ப்பிற்கு ஏற்றவர்களாக மாறுவார்கள்; தலைமைப் பண்பு, குழுப் பணி மற்றும் உடல் பயிற்சி ஆகியவற்றுடன், அக்னி வீரர்கள் தொழில்துறையில் சந்தைக்கு ஏற்றத் தீர்வுகளை வழங்குவார்கள்” என்று டுவிட் செய்திருந்தார் ஆனந்த் மஹிந்திரா.

ஒன்னரை ஆண்டுகளில், 10 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கப்போவதாக அறிவித்துள்ள மோடி.

தொழிலாளர் நலச் சட்டங்களெல்லாம் வெட்டி வீசப்பட்டு, தொழிலாளர்கள் மீது கொடூரச் சுரண்டல்கள் நிகழ்த்தப்படும் தீவிர மறுகாலனியாக்கக் காலம் இது; சங்கம் வைக்க உரிமை இல்லை, 12 மணி நேரம் வேலை, நீம் – எஃப்.டி.ஈ உள்ளிட்ட காண்டிராக்ட் கொத்தடிமைத்தனங்கள் என தாக்குதல் மேல் தாக்குதல்கள் தொழிலாளர் வர்க்கத்தின் மீது ஏவப்படுகின்றன; இதற்கெல்லாம் தாக்குப் பிடித்து, உரிமைகளைப் பற்றி கவலைப்படாமல் மாடுபோல் உழைக்கும் நபர்களை, கட்டளைக்கு சிரமேற்கொண்டு கீழ்படியும் நபர்களை தொழிலாளர்களாக தேடுகிறார்கள் மஹிந்திரா உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகள். அவர்களுக்கான ரெடிமெட் தயாரிப்புகளாக கிடைக்கிறார்கள் அக்னி வீரர்கள். இதைத்தான் ஆனந்த மஹிந்திரா அவரது மொழியில் டுவிட் செய்திருக்கிறார். ஏனெனில் இராணுவ சிப்பாய்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுவது இந்த வகையான ‘தலைமைப் பண்புதான்’.

மேலும் ஆயுதப் பயிற்சி பெற்ற இந்த முன்னாள் அக்னி வீரர்களை, கார்ப்பரேட்டுகள் தங்களது குண்டர் படையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் உண்டு. ஆலையில் போராடும் தொழிலாளர்கள், ஸ்டெர்லைட் ஆலை போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் சூறையாடலுக்கு எதிராக போராடும் மக்கள் ஆகியோர் மீது வன்முறையை ஏவி அடக்கி ஒடுக்க இப்பிரிவினர் பயன்படுத்தப்படலாம். “இப்படியெல்லாம் நடக்குமா, நீங்கள் பிரச்சினையை மிகைப்படுத்திச் சொல்கிறீர்கள்” என்று தோன்றலாம்.-

இதில் சற்றும் மிகைப்படுத்தல் இல்லை. சதீஷ்கர், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் கார்ப்பரேட்டுகளின் கனிமவளச் சூறையாடலை ஒடுக்குவதற்காக அம்மக்கள் மத்தியிலிருந்தே சில கருங்காலிகளைப் பொறுக்கியெடுத்து, அவர்களுக்கு காசு கொடுத்து ‘சல்வாஜூடும்’ என்ற ஆயுதம் தாங்கிய கூலிப் படையை, அரசே உருவாக்கவில்லையா? கார்ப்பரேட் சூறையாடல் மிகத் தீவிரமாக நடைபெறும் பகுதிகளில், அரசுப் படைகளையும் தாண்டி மக்களின் ஒருபிரிவு மத்தியிலிருந்தே உருவாக்கப்படும் சல்வாஜீடும் போன்ற கூலிப் படைகள், போராடுபவர்களை அடக்கி ஒடுக்குவதற்கான சிறந்த கருவி.

ஆளும் வர்க்கங்களின் சுரண்டல் வெறி தீவிரமடையும்போது, அதற்கெதிராக புரட்சிகர போராட்டங்கள் மக்களிடையே வெடித்துக் கிளம்பும்போது, மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக மக்களின் ஒருபிரிவு மத்தியிலிருந்தே எதிர்ப்புரட்சி குண்டர் படைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்ற வரலாறை நாம் உலகின் பலநாடுகளின் வரலாற்றிலும் காணாலாம். இத்தகைய குண்டர் படைகள் அனைத்தும் உதிரிப் பிரிவு மக்களிடமிருந்தே (சமூகத்தின் கடைநிலையிலுள்ள, தங்கள் வாழ்க்கையை முறையாக அமைத்துக் கொள்ள வாய்ப்பில்லாத மக்கள் பிரிவினர்) கட்டப்பட்டிருக்கின்றன.

வேலையில்லாத் திண்டாட்டம் என்பது சாதாரணப் பிரச்சினை இல்லை. சமூகத்தில் குற்றங்கள் பெருகிவருவதற்கு அது ஒரு முக்கிய காரணம். தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக காசு கொடுத்தால் எதையும் செய்யும் ஒரு பிரிவினரை (உதிரிகள்) இது நிச்சயம் உருவாக்கும். 21 வயதே முடிந்த முறையாக ஆயுதப்பயிற்சி பெற்ற ஒரு இளைஞர் கூட்டம், ஒவ்வொரு ஆண்டும் வேலையில்லா பட்டாளத்தில் சேரும்போது, அவர்களின் நிர்கதியான நிலை எதற்கு வேண்டுமானால் அவர்களை தயார் செய்யும்.

காவி பயங்கரவாதத் திட்டமே அக்னிபத்!

சல்வாஜீடும் பழங்குடிகளை விரட்டுவதற்காக, பழங்குடிகளைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ள கூலிப்படை.

அக்னிபத் திட்டம் என்பது இராணுவத் துறையில் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களை புகுத்தும் திட்டம் என்ற கூற்று நாம் கவனிக்க வேண்டிய அடுத்த முக்கியமான விசயம். காவிகளும் கார்ப்பரேட்டுகளும் ஒருசேர தங்கள் நோக்கங்கங்களை நிறைவேற்றிக் கொள்ள இருக்கிறார்கள். புரட்சிகர சக்திகள் மட்டுமல்லாது, தி.க. தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. தலைவர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டு பல அரசியல் கட்சித் தலைவர்களும் “இது இராணுவத் துறையில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் கொண்டவர்களை புகுத்தும் திட்டம்” என வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.

2021 ஆம் ஆண்டு, நாடுமுழுவதும் புதிதாக 100 இராணுவப் பள்ளிகளை தொடங்கப் போவதாக அறிவித்த பாதுகாப்புத் துறை அமைச்சகம், கடந்த மார்ச் மாதம் முதல்கட்டமாக 21 பள்ளிகளை தொடங்கியுள்ளது. அரசு – தனியார் கூட்டு அடிப்படையில், இந்த இராணுவப் பள்ளிகளை தொடங்கி நடத்த தனியார் பள்ளிகள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு அனுதியளிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகள் மற்றும் அறக்கட்டளைகளில் பெரும்பாலானவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் இயக்கப்படுபவை ஆகும்.

இத்திட்டம் மூலம் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தால் பயிற்றுவிக்கப்பட்ட ஏராளமானோர் அலைஅலையாக இராணுவத்தில் நுழைக்கப்படும் அபாயம் இருப்பதையும் இது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பது குறித்தும் மே மாதம் புதிய ஜனநாயகத்தில், “தயாராகிறது இந்துராஷ்டிர இராணுவம்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தோம். இது அக்னிபத் திட்டத்திற்கும் பொருந்தும்.

“இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் நாஜி சித்தாந்தம் கொண்ட பாசிச கும்பல் இராணுவத்தில் ஊடுருவி வருகிறது. இரசியாவுக்கும் உக்ரைனுக்கும் நடக்கின்ற போரில், உக்ரைன் இராணுவத்தில் நவநாஜி ஆயுதப்படையான அசோவ் படைப்பிரிவு பங்குபெற்றிருப்பது அம்பலமாகியுள்ளது. இந்த அசோவ் பாசிசக் கும்பல் சொந்தநாட்டு சிறுபான்மையினரைக் கொல்வதையும், அவர்களது சொத்துக்களைக் கொள்ளையடிப்பதையும் செய்து வருகிறது.


படிக்க : கார்ப்பரேட்டின் நலனுக்காக நாட்டின் மனித வளத்தை நாசம் செய்யும் நடவடிக்கையே அக்னிபாத்! | வீடியோ


உக்ரைனிலாவது அசோவ் படைப்பிரிவு இராணுவத்துடன் இணைத்து பணியாற்றுகிறது. மோடி அரசின் இத்திட்டம் அமலானால், இந்திய இராணுவமே ஆர்.எஸ்.எஸ்-இன் பாசிச படையணியாகிவிடும்.

ஹரித்துவார் மாநாட்டில், முசுலீம்களை இனப்படுகொலை செய்துவிட்டு இந்தியாவை இந்துராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும் என்று காவி கும்பல் அறைகூவல் விடுத்துள்ள நிலையில், இராணுவம் அலைஅலையாக ஆர்.எஸ்.எஸ்.மயமாக உள்ளது” – தயாராகிறது இந்துராஷ்டிர இராணுவம்.

தனது பாசிச நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளுவதில் அடுத்தடுத்த படிகளில் முன்னேறி வருகிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. இலங்கை உழைக்கும் மக்கள் இராஜபக்சேவுக்கு பாடம் புகட்டியது போல, நாம் மோடி அரசுக்கு, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பரிவாரங்களுக்கு பாடம் புகட்டியாக வேண்டும். அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில், பீகார் மாநில இளைஞர்கள் அம்மாநில துணை முதல்வரும் பா.ஜ.க. தலைவருமான ரேணு தேவியின் வீட்டை தாக்கினார்கள், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். எதிரியை நேரடியாக குறிவைத்து தாக்கும் இத்தகைய போராட்டங்களை நாடு முழுக்க பரப்புவோம், பாசிச சர்வாதிகாரத்தை நிறுவத் துடிக்கிற ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலை வேரறுப்போம்!


ரவி