Tuesday, July 29, 2025
முகப்பு பதிவு பக்கம் 156

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை: நோயாளிகளை அல்லாடும் நிலைக்கு தள்ளியுள்ளது திமுக அரசு!

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை: “கல்லாக” கிடக்கும் நோயாளிகள் – கள ரிப்போர்ட்

ள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள அரசுப் பொது மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் துளியும் இல்லாமல் நோயாளிகளை அல்லாடும் நிலைக்கு தள்ளியுள்ளது திமுக அரசு.

ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகள், தனியார் மருத்துவமனையில் இலட்சக்கணக்கில் செலவுச் செய்து சொகுசாக படுத்து கிடக்க, ஓட்டுப் போட்ட மக்களோ அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத அரசு மருத்துவமனையில் அநாதையாக தூக்கி எறியப்பட்டுள்ளனர்.

ஒரு அறையில் 20 படுக்கைகள் இருக்க வேண்டிய இடத்தில் 40-க்கும் மேற்பட்ட படுக்கைகளை அமைத்து, குப்பை வண்டியில் குப்பைகளை அடைப்பதுபோல் நோயாளிகளை ஒரே அறையில் அடைத்து வைத்துள்ளனர். போதிய காற்றோட்ட‌ வசதியோ, குடிநீர் வசதியோ கிடையாது. ஒரு நோயாளிக்கும் இன்னொரு நோயாளிகளுக்கும் இடையே விடப்படும் இடைவெளி கூட விடமால் நெருக்கமாக‌ படுக்கைகளை அமைந்துள்ளனர்.

குளுக்கோஸ் ஏற்றுவதற்கு சரியான உபகரணங்கள் இல்லாமல் ஜன்னல் கம்பிகளில் குளுக்கோஸ் பாட்டிலை மாட்டி தொங்க விட்டு மருத்துவம் பார்த்து வருகின்றனர். 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருக்கும் கட்டிடத்தில் லிப்ட் வசதிகள் கிடையாது. மூன்றாவது மாடி என்றாலும் நோயாளிகள் நடந்துதான் செல்ல வேண்டும். உணவு வாங்குவதற்கு கூட நோயாளிகள் இறுதி தளத்திற்கு நடந்து வருகின்றனர்.


படிக்க : செவிலியர்கள் முதல் மருத்துவர்கள் போராட்டம் வரை – நம்மிடம் கோருவது என்ன? ஒன்றினைந்த போராட்டமே !


போதிய மருத்துவர்கள் வசதியும் கிடையாது. தினமும் ஒரு மருத்துவர்தான் வருகிறார். அறைகளில் அடைத்து வைக்க முடியாத நோயாளிகள், நோயாளிகளை கூட்டி செல்ல பயன்படுத்த படும் சறுக்கு படிக்கட்டு‌க்கு அருகே படுக்கை அமைத்து படுக்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு எந்தவொரு பேன் வசதியோ, அவசர சிகிச்சை அளிப்பதற்கு உபகரணங்கள் வசதிகளோ கிடையாது. நோயாளிகளுக்கு பாதுகாப்பு வசதி துளியும் இல்லை. நோயாளிகளின் பொருட்கள் வைப்பதற்கும் எந்த வசதியும் செய்து தரப்படவில்லை.

ஒரு பெண் நோயாளியை சந்தித்து பேசியபோது, “செவிலியர்கள் சரியாக வருவது கிடையாது பலமுறை கூறியும் குளுக்கோஸ் ஏற்றுவது கிடையாது. எனக்கு ரத்தம் ஏற்ற வேண்டும், ஆனால், அதை யாரும் தயார் செய்துக் கொடுக்க முன்வரவில்லை. கொசுக்கடி மத்தியில் இந்த படிகட்டு அருகே தனியே அமர்ந்து காத்திருக்கிறேன்” என்றார்.

நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை சந்தித்து பேசியபோது, “நான் இங்கு வந்து ஒரு வாரம் ஆகிறது. இதுவரை ஒரு முறைதான் எனக்கு குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர். சரியான கவனிப்பு இல்லை. செவிலியர்களிடம் கேட்டால் மருத்துவர் சொன்னால்தான் எங்களால் செய்ய முடியும் என்று கூறுகிறார்கள். ஒரு நாளைக்கு ஒருமுறைதான் மருத்துவர் வருகிறார். அதுவும் எல்லா‌ நோயாளிகளையும் பார்த்து முடிப்பதற்குள் 12 மணி ஆகிவிடுகிறது. நீங்கள் கொஞ்சம் மருத்துவரிடம் சொல்லி உடனே பார்க்க சொல்லுங்கள் வலி கொஞ்சம் அதிகமாக இருக்கிறது” என்று இறுதியாக நம்மிடம் கூறினார்.

செவிலியர்களை சந்தித்து பேசியபோது, ”இங்கு செவிலியர்கள் பற்றாக்குறை அதிகம் இருக்கிறது. எங்களால் முடிந்தவரை நாங்கள் எல்லோரையும் பார்த்து கொள்கிறோம். எல்லா நோயாளிகளையும் சந்தித்து பேசி மருந்துகளை வழங்கி வருகிறோம். ஆம், இங்கு இருக்கும் செவிலியர்கள் மனிதாபிமானத்தோடு தங்கள் சேவைகளை செய்து வருகின்றனர். ஆனால் இந்த அரசோ இவர்களுக்கு 6 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. பலமுறை நிர்வாகத்திடம் முறையிட்டும் பலன் ஏதுமில்லை. 40-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இங்கு கான்ட்ராக்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் நிலையும் இதேதான். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற செவிலியர்கள், மருத்துவர்கள் இங்கு கிடையாது. இருக்கும் ஒன்று, இரண்டு பேர்தான் தலைக்குமேல் சுமைகளை போட்டுகொண்டு எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கின்றனர்” என்றார்.

2019-ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் 3400 செவிலியர்களை கான்ட்ராக்டர் முறையில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அதன்பிறகு மூன்று முறை கான்ட்ராக்டர் கால‌ நீட்டிப்பு செய்யப்பட்டு விட்டது. ஆனால், இவர்களுக்கு பணி நிரந்தரம் இதுவரை வழங்கப்படவில்லை. இரண்டு முறை போராட்டம் நடத்தியும் இவர்களின் குரலுக்கு அரசு செவி சாய்க்கவில்லை.

கொரோனா காலத்தில் தேவதைகளாக பார்க்கப்பட்ட செவிலியர்களை தற்போது குப்பை காகிதமாய் தூக்கி எறிந்துவிட்டது அரசு. கொரோனா காலத்தில் உயிரை விட்ட மருத்துவர்களுக்கும் இதுவரை சரியாக நிவாரணம் வழங்கப்படவில்லை.


படிக்க : மதுரை அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா இறப்புகள் || புமாஇமு கள அறிக்கை


உயிரை பணையம் வைத்து வேலை செய்யும் செவிலியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை, அப்பாவி மக்களுக்கு மருத்துவ வசதி செய்து தரப்படவில்லை, ஆனால் இந்த அரசு பல நூறு கோடி செலவு செய்து செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்துகிறது அரசு.

குஜராத்தில் எப்படி மோடி திரையிட்டு சேரிகளை மறைத்தாரோ அதேபோன்று சாலைகளில் எல்லாம் சதுரங்க விளையாட்டு பலகை வரைந்து ஏழைகளின் நிலை வெளியே தெரியாமல் மறைத்துள்ளது திமுக அரசு. நேப்பியர் பாலத்தை மிக பெரிதாக சதுரங்க பலகையாக மாற்றத் தெரிந்த அரசின் கண்ணுக்கு, அதன் கொஞ்ச தொலைவில் நீண்ட ஆண்டுகளாக இடிந்த குடிசையில் வாழும் சத்தியா நகர் மக்களை தெரியவில்லை.

செஸ் போட்டியில் பங்கு பெற்ற நபர்களுக்கு 3500 உணவுப் வகைகளை அரசு தயார் செய்துள்ளது. அதில் எந்த வகை உணவும் “ரிப்பீட்” ஆகாது என்றும் கூறியுள்ளது. காலை சாப்பிட்ட உணவு  மதியம் கிடைக்குமா என தவித்துக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களின் மத்தியில், பன்னாட்டு வீரர்களுக்கு உழைக்கும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி படையல் வைத்து கொண்டிருக்கிறது திமுக அரசு!


பாரி

உழைக்கும் மக்களைப் பேரழிவுக்குள் தள்ளிய பாசிச மோடி அரசு!

நாட்டை மீட்பதற்காக கடவுள் என்னை அனுப்பியுள்ளார். நான் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பதற்காக இங்கு வரவில்லை. உங்கள் சேவகனான எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். 60 மாதங்களில் (5 ஆண்டுகள்) இந்தியாவை மாற்றிக் காண்பிக்கிறேன்” என்று 2014 தேர்தல் பிரச்சாரத்தில் சவடாலடித்தார் மோடி. 8 ஆண்டுகள் ஆண்டுவிட்டார் தேவதூதர். இந்தியா எப்படி இருக்கிறது?

கருப்புப் பண ஒழிப்பு, 5 டிரில்லியன் பொருளாதாரம், 2 கோடி வேலை வாய்ப்பு, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு என அடுக்கடுக்கான புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்த மோடி, இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் அனைவரையும் வாழ வழியில்லாமல் ஆக்கியிருக்கிறார். ‘இந்தியாவை மாற்றிக் காண்பிக்கிறேன்’ என்று அவர் கூறியதன் உண்மைப் பொருளை இன்று நாடு கண்டுவருகிறது.

நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் அன்றாட வாழ்வாதாரச் செலவிற்கே திண்டாடுகிறது. 2014-ல் 66 ரூபாய் இருந்த பெட்ரோல் விலை, இன்று 110-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது; 400 ரூபாய் இருந்த சிலிண்டரின் விலை 1,100-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வாலும் ஜி.எஸ்.டி. வரி உயர்வாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக ஏறிவருகிறது.

பால், தயிர், அரசி உள்ளிட்டு பார்சல் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் வரியை 5 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது மோடி அரசு. எண்ணெய், பருப்பு ஆகியவற்றின் விலை ஏற்கெனவே மோசம். ஜி.எஸ்.டி. வரி கூட்டிய பிறகு 10 ரூபாய்க்கு விற்ற டீ 12 ரூபாய் ஆகிவிட்டது. ஐந்து, பத்து ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த தள்ளுவண்டிக் கடை இட்லி, தோசை கூட இரண்டொரு ரூபாய் கூடிவிட்டது. அரைவயிற்றுக் கஞ்சிக்குக்கூட நம்மை அல்லாட வைத்துவிட்டது பா.ஜ.க.


படிக்க : சிறுபான்மை சமூகங்களை வஞ்சிக்கும் மோடி அரசு!


வறுமையை ஒழிப்பேன் என்று சொன்னார் மோடி. ஆனால் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில்தான் வறுமை செழித்தோங்கி வளர்ந்துகொண்டிருக்கிறது. 2019 ஆம் ஆண்டு வோர்ல்ட் பாவர்ட்டி கிளாக் (World Poverty Clock) என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கைப்படி, அதீத வறுமையுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடம். மேலும் ஏழைகள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடம். இந்திய மக்கள் தொகையில் 68.8 சதவிகிதம் பேர் ஒரு நாளைக்கு 160 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தில் வாழ்கிறார்கள்.

ஹின்ட்ரைஸ் பவுண்டேஷன் ஆய்வறிக்கையின்படி, 20 கோடிக்கு மேலான இந்தியர்கள் நாள்தோறும் பசியோடு உறங்கச் செல்கிறார்கள். மேலும் நாள்தோறும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உணவில்லாமல் பசியால் இறந்துபோவதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.

***

கடந்த 8 ஆண்டுகளில் 12.5 கோடி பேரின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது; இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் மற்றும் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அறிக்கைப் படி, இவற்றில் கிராமப்புறத்தில் 57 சதவிகிதமும், நகர்ப்புறத்தில் 80 சதவிகிதத் தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளார்கள். கடந்த மே-ஜூன் வரையிலான ஒரே மாதத்தில் 1.6 கோடி பேர் வேலையிழந்திருக்கிறார்கள். இதுவெறும் கொரோனா காலத்தில் மட்டும் நிகழவில்லை. மோடியின் மக்கள் விரோத கொள்கைகளால் விளைந்த விளைவு இது.

சான்றாக, கருப்புப் பண ஒழிப்பு என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பழிப்பு நடவடிக்கை. பண மதிப்பழிப்பு குறித்த அறிவிப்பு வந்த உடனேயே மொத்த விலைச் சந்தை சுமார் 20 நாட்களுக்கு மூடப்பட்டு விற்பனை நின்று போனது. இதனால் ஆலைகளின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் நட்டமடைந்த பல சிறுகுறு தொழிற்சாலைகள் மூடப்பட்டன. 35 லட்சம் பேர் வேலை இழந்தனர். உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

மேலும் இந்நடவடிக்கைக்குப் பிறகு 96 சதவிகிதம் ரொக்கப்பணம் மீண்டும் வங்கிகளுக்கே திரும்பிவிட்டது. செல்லாத பணத்தை மாற்றுவதற்காக வரிசையில் நின்றே 140 பேர் உயிரிழந்தனர்.

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை அறிமுகப்படுத்தியது அடுத்த தாக்குதல். கடந்த 2018-ஆம் ஆண்டு  ஜூலை மாதம் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) நடத்திய ஆய்வில், 6.3 கோடி சிறுகுறு தொழில்களில் ஐந்தில் ஒரு பங்கு தொழில்கள் ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு பின்னர் தனது லாபத்தில் 20% வீழ்ச்சியைக் கண்டது; இதனால் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய வேண்டியிருந்தது என்று குறிப்பிடுகிறது.

அதேபோல இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் மதிப்பீட்டின்படி, ஜி.எஸ்.டி. கொண்டுவரப்பட்ட ஆண்டில் கிட்டத்தட்ட 50 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளார்கள். இதனால் 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம், 4.1 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் வேலையின்மை விகிதம் ஆகஸ்டில், அதாவது ஒரே மாதத்தில் 6.4 சதவிகிதமாக உயர்ந்தது.

இச்சிறுகுறு தொழில்கள்தான் இந்தியப் பொருளாதாரத்திற்கு 32% பங்களிப்பை வழங்குகின்றன. விவசாயம் ஒழிக்கப்பட்டுவரும் நிலையில், முறைப்படுத்தப்பட்ட ஆலைத்தொழில்கள் 10 சதவிகிதத்திற்கும் குறைவான வேலைவாய்ப்பையே வழங்குகின்றன. 40 சதவிகிதத்திற்கும் மேலானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கிவரும் சிறுகுறு தொழில்கள் மோடி ஆட்சியில் திட்டமிட்டு ஒழித்துக் கட்டப்பட்டது இப்படித்தான்.

வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. அதன் சதவிகிதம் 7.83 ஆக உயர்ந்திருக்கிறது. 15 முதல் 19 வயதே உள்ள இளந்தலைமுறையினரின் வேலையின்மை சதவிகிதம்தான் 50-க்கு மேல் உள்ளது.

2018 – 2020க்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில், கடன் நெருக்கடி, வேலையின்மை, வியாபார நெருக்கடி போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 25,000 பேர். இதை தற்கொலை என்று சொல்வதைவிட மோடி கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகள் செய்த இனப்படுகொலை என்றே சொல்ல வேண்டும்.

விவசாயம் பொய்த்துப் போய், போதுமான வேலைவாய்ப்பில்லாமல் சொந்த மாநிலங்களைவிட்டு நாட்டுக்குள்ளேயே புலம்பெயரும் தொழிலாளர்களின் சதவிகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உரிமைகள் ஏதுமற்ற நிலையில், அடிமாட்டுக் கூலிக்கு வேலைசெய்யும் இத்தொழிலாளர்கள் உள்நாட்டிலேயே அகதிகளைப் போல வாழக்கூடியவர்கள். மாநிலங்களுக்கு இடையே புலம்பெயரும் தொழிலாளர்கள் 10 கோடி பேர் இருப்பதாக மோடி அரசே கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

கொரோனா பெருந்தொற்றின்போது, எவ்வித முன்னறிவிப்பு இன்றி மோடி அறிவித்த ஊரடங்கால் கொடூரமாக பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள். பல லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள், உணவிற்கும் பணத் தேவைக்கும் வழியின்றி நூற்றுக்கணக்கான மைல்கள் நாட்டின் குறுக்கும் நெடுக்கும் நடந்தே கடந்தனர். போகும் வழியிலேயே பட்டினியால் மாண்டவர்கள் பல பேர். பட்டினி மயக்கத்தில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அநியாயமாக மடிந்த செய்தி நம்மில் பலரது நெஞ்சையும் உலுக்கியது. 2௦20-ஆம் ஆண்டில் மட்டும் 8,733 பேர் இவ்வாறு இறந்தனர்.

தனியார்மய கொள்கைகளின் விளைவாக மொத்த பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு வருகிறது. அரசு வேலையில் இருக்கும் தொழிலாளர்கள் கூட தமது வேலை எப்போது பிடுங்கப்படும் என்ற பயத்தில்தான் வாழ்கின்றனர். மேலும் தொழிலாளர் சட்டத் திருத்தம் என்ற பெயரில் தொழிலாளர்களின் சங்கம் சேரும் உரிமை உள்ளிட்டு மொத்த உரிமைகளும் காவு வாங்கப்படுகின்றன. ‘அக்னிபத்’ என்ற பெயரில் இராணுவமே காண்டிராக்ட்மயமாக்கப்படுகிறது. இனி அனைத்து அரசு வேலைகளும் காண்டிராக்ட் கொத்தடிமைமயமே என்பதற்கான கட்டியம் கூறல் இது.

வெவ்வேறு வடிவங்களில் விவசாயிகளை ஒழித்துக்கட்டும் வேலையை மோடி அரசு செய்துவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் வேளாண்மைக்கான நிதி துண்டிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. உணவு, உரம் மற்றும் பெட்ரோலிய மானியங்கள் ஆகியவை வெட்டபட்டுகொண்டே இருக்கின்றன. இதுபோன்ற மோடி அரசின் தொடர் வஞ்சனை காரணமாக கடந்த எட்டு ஆண்டுகளில் பல லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2014-2020 ஆண்டுகளில் மட்டும் 9.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.


படிக்க : தொழிலாளிகள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம் !


விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று கூறிய மோடி அரசு, குறைந்தபட்ச ஆதாரவிலையை ஒழித்துக் கட்டவும் விவசாய நிலங்களையும் விவசாயத்தையும் கார்ப்பரேட்டுகள் கைப்பற்றிக் கொள்வதற்கு ஏற்ற வகையில் வேளாண் சட்டத்தைத் திருத்தியது. டெல்லியை முற்றுகையிட்டு கிட்டத்தட்ட 2 ஆண்டுகள்வரை போராடிய விவசாயிகள் மோடியை பணியவைத்தனர். இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் இன்னுயிரை ஈந்து தியாகியானார்கள்.

வேளாண் சட்டங்களை இரத்துசெய்யும்போது, குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்ட உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றுவேன் என்று எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் பல மாதங்களாகியும் நிறைவேற்றாத மோடி அரசு, இப்போது வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்களைக் கொண்டே குழு அமைத்துள்ளது.

வேளாண் சட்டத் திருத்தம், தொழிலாளர் சட்டத் திருத்தம், நீம் – எஃப்.டி.இ சட்டங்கள், மீன்வள பாதுகாப்பு மசோதா, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு 100 சதம் அனுமதி, ஜி.எஸ்.டி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுச் சட்டம், நிலத்தடி நீருக்கு கட்டணம், மின்சாரத் திருத்தச் சட்டம், புதிய கல்விக் கொள்கை, நீட் உள்ளிட்டு எண்ணற்ற மக்கள் விரோத – கார்ப்பரேட் நலக் கொள்கைகளைக் கொண்டுவந்து நாட்டையும் உழைக்கும் மக்களையும் தாக்கிவருகிறது இந்த பாசிசப் பேயாட்சி.

பா.ஜ.க. ஆட்சி நீட்டித்திருக்கும் ஒவ்வொரு நொடியும் விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், சிறுகுறு வணிகர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிராக ஒரு மறைமுகப் போரைத் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டாமல் உழைக்கும் நிம்மதியாக வாழ முடியாது.


துலிபா

நாடாளுமன்ற பாசிசம்!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஜி.எஸ்.டி. வரி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்டு பல்வேறு மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று தொடக்க நாள் முதல் எதிர்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.

பாக்கெட்டில் அடைத்த உணவுப் பொருட்களுக்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரி கூட்டியதைக் கண்டிக்கும் விதமாகவும் விலைவாசி உயர்வு குறித்து அவையில் விவாதிக்கக் கோரியும் தயிர், பால் பாக்கெட்டுகளுடன் எதிர்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவை நடவடிக்கைகளை முடக்குவதாகக் கூறி அவைத்தலைவர் ஓம் பிர்லா 27 எதிர்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்தார். மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன் ஆகிய 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் நடப்புக் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். “நாடாளுமன்ற நடவடிக்கைகளைச் சீர்குலைப்பதை பா.ஜ.க. சட்டப்பூர்வமான தந்திரமாகவே கடைபிடிக்கிறது” என்று குற்றஞ்சாட்டினார் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி. “விவாத சுதந்திரம் இல்லையென்றால் நாடாளுமன்றம் எதற்கு” என கேள்வி எழுப்பினார் ராகுல் காந்தி.


படிக்க : நொறுங்கும் நாடாளுமன்ற ஜனநாயகம் அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம் !


பாசிச பா.ஜ.க. ஆட்சியின் கீழ் நாடாளுமன்றத்தில் நடைபெறும் இடைநீக்கங்களும் விவாத மறுப்பும் முந்தைய காங்கிரஸ் அரசின் எதேச்சதிகாரத்தைப் போன்றதல்ல. நாடாளுமன்ற போலி ஜனநாயகம் திவாலாகி பாசிசம் சட்டப்பூர்வமாகியதன் வெளிப்பாடே என்று நாம் முன்பே அடையாளப்படுத்தினோம். அதை மெய்ப்பிக்கும் வகையில் தி பிரிண்ட் இணையதளம் சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டிருக்கிறது.

பா.ஜ.க. ஆட்சியின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவது, மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 2006-ஆம் ஆண்டு மழைக்காலக் கூட்டத்தொடர் முதல் 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை இரு அவைகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் 51 எம்.பி.க்கள். அதேநேரம் 2015 ஆகஸ்டு முதல் தற்போது வரை 130 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஊழல், சகுனி, சர்வாதிகாரி, திறமையற்றவர், கபட நாடகம், பொய், போலித்தனம், பாலியல் வன்முறை உள்ளிட்டு பல சொற்கள் விவாதங்களில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறிப் பேசினால் அவைக்குறிப்பிலிருந்து அவை நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “மோடியையும் பா.ஜ.க. ஆட்சியையும் விமர்சனம் செய்கின்ற சொற்களை பொறுக்கியெடுத்து தடைவிதிக்கப்பட்டுள்ளது; இந்த அடிப்படையான சொற்களைக்கூட பேசக்கூடாது என்றால் எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வை விமர்சிக்கவே முடியாது” என்று குற்றஞ்சாட்டுகின்றன எதிர்கட்சிகள்.

இதுகுறித்து ஊடக விவாதம் ஒன்றில் பேசிய தி.மு.க. வழக்கறிஞர் சரவணன், “எதிர்காலத்தில் இந்த அவைக்குறிப்பைப் படிப்பவர்கள் பா.ஜ.க. ஆட்சி இவ்வளவு தூய்மையான ஆட்சியா என்று வியக்க வேண்டும்; அத்தகைய ஒரு ’பொற்கால வரலாற்றை’ உருவாக்கத்தான் பா.ஜ.க. இச்சொற்களுக்குத் தடைவிதித்துள்ளது என்றார்.

ஜெர்மனியிலும் இத்தாலியிலும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை அதிரடியாக ரத்துசெய்ததைப் போல் அல்லாமல், நிலவுகின்ற போலி ஜனநாயகத்தையே பாசிசத் தன்மைகொண்டதாக மாற்றிக் கொண்டுவருகிறது பா.ஜ.க. நாடாளுமன்றம் இருக்கிறது, எதிர்கட்சி உறுப்பினர்களும் இருக்கிறார்கள், ஆனால் அவர்களால் அவையில் பேச முடியாது. விவாதம் நடத்தி சட்ட மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்வதற்குப் பதிலாக, குரல் வாக்கெடுப்பு மூலமாகவே அனைத்து சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்படும். இனிமேலும் இதை ‘நாடாளுமன்ற ஜனநாயகம்’ என்று சொல்லமுடியாது. ‘நாடாளுமன்ற பாசிசம்’ என்று அழைப்பதே பொருந்தும்.

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2022 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஆகஸ்ட் – 2022 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா- ரூ.240
இரண்டாண்டு சந்தா- ரூ.480
ஐந்தாண்டு சந்தா- ரூ.1,200
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561
வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

♦ தலையங்கம்: நாடாளுமன்ற பாசிசம்!

♦ உழைக்கும் மக்களைப் பேரழிவுக்குள் தள்ளிய பாசிச மோடி அரசு!

♦ சிறுபான்மை மக்களை ஒடுக்கும் காவி பாசிசம்!

♦ நாட்டை சூறையாடும் காவி – கார்ப்பரேட் கூட்டணி ஆட்சி!

♦ அரசு பயங்கரவாதத்தை ஏவும் பாசிஸ்டு ரணிலே, எம் மக்கள் உனக்கும் பாடம் புகட்டுவார்கள்!

♦ திரெளபதி முர்மு, இளையராஜா: பதவி வேண்டுமா? துரோகம் செய்!

♦ உதய்பூர், காஷ்மீர் சம்பவங்கள்: திரை கிழிந்தது காவிகளின் பயங்கரவாத சதி!

♦ டிஜிட்டல் செய்தி ஊடகங்களை ஒடுக்கத் துடிக்கும் மோடி அரசு!

♦ அரசு பயங்கரத்தை ஏவும் தி.மு.க. அரசே! கல்வித் தனியார்மயத்தை ஒழிக்கும் வரை கள்ளக்குறிச்சிகள் ஓயாது!

♦ மேக்கேதாட்டு அணை மூலம் காவிரியைத் தடுக்குப் பார்க்கிறது (காவி)ரி மேலாண்மை வாரியம்!

♦ இந்து உணர்வைப் புண்படுத்தியதாக சிவபெருமான் கைது!

உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்கள் – பாகம் 2

உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்கள் – பாகம் 1

உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்கள் – பாகம் 2

விளையாட்டில் திறமையை அளவிடும் திறன்

இத்தகைய விளையாட்டுகளில் திறமையின் கூறுகளை எவ்வாறு அளவிடுவது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களிடையே பல்வேறு வழிமுறைகள் உள்ளன. ஒரு பொதுவான சோதனையானது, ஒரு குழுவில் ஒருவர் மற்றொருவருடன் தொடர்ந்து விளையாட அனுமதித்து, ஒவ்வொரு ஆட்டத்திற்குப் பிறகும் ஆட்டக்காரர்களின் முடிவை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுவதும் ஆகும். சிலரால் மற்றவர்களை தொடர்ந்து தோற்கடிக்க முடிந்தால், அந்த விளையாட்டில் திறமையின் கூறு உள்ளது, மேலும் அது நிலையான வெற்றியாளர்களைக் கொண்டுள்ளது. இதுபோன்ற மற்றொரு நிலையில், குறைந்த தர மதிப்பீட்டை பெற்ற வீரர், அதிக மதிப்பீட்டைப் பெற்ற வீரரை தோற்கடிக்கும் எண்ணிக்கையை வைத்து விளையாட்டின் சீரற்ற தன்மையின் ஆதிக்கம் தீர்மானிக்கப்படுகிறது. இதில் அதிக மதிப்பீட்டைப் பெற்ற வீரர் கணிசமான முறையில் தொடர்ந்து தோற்கடிக்கப்படும் போது அவற்றில் மற்ற காரணிகளின் தாக்கமும் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை கண்டறியமுடியும். இதையே விளையாட்டில் உள்ள சீரற்ற தன்மை என்கிறோம்.

இத்தகைய சோதனைகள் முடிவுகள் பலவிதமான விவரங்களை வழங்குகின்றன. இதன் மூலம் இரண்டு வகையான விளையாட்டுகளுக்கும் (திறன் அல்லது வாய்ப்பு) இடையேயான எல்லைகளை வரையறுக்க முடியும். இத்தகைய தொழில்நுட்ப முடிவுகள் வசதியானவை, இவற்றிலிருந்து விளையாட்டுகளை வாய்ப்பு அடிப்படையிலானதா அல்லது திறன் அடிப்படையிலானதா என எளிதில் வகைப்படுத்தலாம். ஆனால் வீரர்கள் ஏன் இவ்வகை விளையாட்டுகளில் மூழ்கி, யதார்த்த உணர்வை இழந்து மீண்டும் மீண்டும் விளையாட தூண்டப்படுகிறார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் விளக்கவில்லை.

நீதிமன்றங்கள் இந்த விளையாட்டுகள் தொடர்பான தந்திரமான கேள்விகளை சரியான கோணத்தில் விவாதிக்குமேயானால், இவை வாய்ப்பு அல்லது திறன் அடிப்படையிலானது என்பதையும் தாண்டி வேறு நிலைக்கும் செல்லக்கூடும். இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய கேள்வி என்னவென்றால், ‘லுடோ’வில் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்ய ஒருவரைத் தூண்டுவது எது?”என்பதாகும்.

“தொடக்கத்தில் நான் சில ஆட்டங்களில் வெற்றி பெற்றேன், பணம் சம்பாதிக்க இது எளிதான வழியாக இருக்கும் என்று நினைத்தேன்” என்கிறார் மகேஷ்.


படிக்க : ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்டுகளின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள் ! என்ன செய்ய வேண்டும்?


இத்தகைய சூதாட்டங்கள் விளையாடுபவரை அதிக பணத்தை வெல்ல முடியும் என்ற கற்பனையில் மூழ்கடிக்கும் தன்மையை கொண்டுள்ளன. போட்டியில் பணத்தை வெல்ல தனக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நினைக்கும் போது மட்டுமே ஒரு வீரர் அந்த விளையாட்டில் பங்குபெறுகிறார். அவர் தன்னை புத்திசாலி என்று கற்பனை செய்து கொள்வதோடு, குறைந்த முயற்சிகளுக்கு ஈடாக பெரிய வெகுமதிகளை வெல்ல முடியும் என நம்புகிறார். இது யதார்த்தத்தை புறக்கணிப்பவர்களின்  கருத்தாகும்.

சீரற்ற நிலையில் இருக்கும், ஆனால் பந்தயம் கட்டப்படாத ‘லுடோ’ விளையாட்டில், நகர்த்துவதற்கு ஒரு துண்டைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே விளையாட்டில் வெற்றிபெறத் தேவைப்படும். இருப்பினும், பந்தயம் கட்டப்பட்ட சூதாட்டத்தில், வீரர்கள் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல், பந்தயம் கட்டப்படும் பணத்தை பெறவேண்டும் என்ற அழுத்தின் காரணமாக கடினமாக போராட வேண்டியுள்ளது. ஒரு பெரிய வெகுமதி பெற போகிறோம் என்ற எதிர்பார்ப்பின் மாயையில் இத்தகைய சூதாட்டங்களை விளையாடுகிறவர்கள், இதில் பந்தயம் கட்டப்பட்ட பணத்தை சேமிக்க அல்லது சம்பாதிக்க தம்மால் செலுத்தப்பட்ட உழைப்பை மறந்துவிடுகின்றனர்.

“நான் சிறப்பாகவே வியூகம் வகுத்தேன், இருப்பினும் தொடர்ந்து பணத்தை இழந்து கொண்டே இருந்தேன்,” – மகேஷ்.

இதனால் ‘லுடோ’வில் திறன் கூறு இல்லை என்பதல்ல வாதம்; வெல்வதற்கு வீரர்கள் சிந்தித்தே செயல்படுகிறார்கள். ஆனால், அவர்களின் சிந்தனை ‘பகடையின் எண்’ என்ற அதிர்ஷ்டத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது. பகடை விரும்பத்தகாத எண்ணைக் கொண்டிருந்தால் ஒரு வீரர்களால் சிறப்பான தேர்வுகளைச் செய்ய முடியாது. வீரர்கள் ஒரு நகர்வைச் செய்ய ‘திறமையை பயன்படுத்துகிறார்கள், அதனாலேயே அவர்களின் தேர்வுகள் தான் விளையாட்டின் முடிவுகளை தீர்மானிப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் விளையாட்டிற்குள் அவர்களின் சிந்தனையும், தேர்வும் பகடை எண்களால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை அவர்கள் உணரத் தவறிவிடுகிறார்கள். அவர்கள் மோசமாக செயல்பட்டால் தம் தேர்வுகளால் தான் காரணம் என தங்களையே குற்றம் சாட்டிக் கொள்கிறார்களே தவிர, பகடையின் சீரற்ற தன்மை குறித்து சிறிதும் சிந்திப்பதில்லை.

“விளையாடுவதற்காக நான் கடன் வாங்க வேண்டியிருந்தது. நான் அதை மீண்டும் வெல்ல முடியும், பகடை எனக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தேன்” – மகேஷ்

மகேஷ் எந்த அளவிற்கு அதிகமாக விளையாடினரோ, அந்த அளவிற்கு அதிக பணத்தை இழந்தார்.

சீற்ற காரணிகள்

தனது பணம் முழுவதையும் இழந்த பிறகும், மகேஷ் அதை மீண்டும் வெல்ல முடியும் என்று நினைத்தார்.

பகடை உருட்டப்படும் ஒவ்வொரு புதிய நிகழ்விலும், அதிர்ஷ்டம் தனக்கு சாதகமாக இருக்கும் என்று வீரர் நம்புகிறார். விளையாட்டின் சீரற்ற தன்மையின் கூறுகள், வீரர்களின் மனநிலையை தொடர்ந்து எதிர்பார்ப்பு நிலையில் இருக்கும்படி செய்கின்றன. மேலும் இந்த எதிர்பார்ப்பு அவரை தொடர்ந்து விளையாடவும் தூண்டுகிறது. இந்த உணர்வுகளே ஒரு வீரரின் மனதை அடிமையாக்கும் தன்மையையும் கொண்டிருக்கின்றன. எனவே, ஆன்லைன் விளையாட்டுகளில் அதன் சீரற்ற தன்மை எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை ஆராய்வது மிகவும் முக்கியமானது.

‘லுடோ’ போன்ற ஆன்லைன் பகடை அடிப்படையிலான விளையாட்டுகளில், பகடையில் விழும் எண்கள் வீரர்களிடம் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆஃப்லைனில் ‘லுடோ’ விளையாடும் போது, பகடை நியாயமாகவே இருக்கிறது என்ற நம்பிக்கை வீரர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் ஆன்லைனில் இது அப்படியா என்றால் இல்லை என்றே கூறவேண்டும். இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் மற்ற வீரர்கள் மனிதர்களா என்பதை கூட சரிபார்க்க வழி இல்லை. மனிதர்கள் விளையாடுவதாக நினைத்து, அதிக தொகை கொண்ட போட்டிகளை விளையாடும் நிகழ்வுகளும் நடக்கின்றன. விளையாட்டில் சீரற்ற தன்மையின் ஆதிக்கம் எதுவாக இருந்தாலும், வீரர்கள் தங்கள் தவறுகள் தான் விளையாட்டைப் பாதிக்கிறது என்றும், தாங்கள் சரியாக செயல்பட்டால் போட்டியில் வெல்ல முடியும் எனவும் கற்பனை செய்துகொள்கிறார்கள். ஆட்ட துண்டின் நிறத்தைத் தேர்ந்தெடுக்கும் செயல்களாலும், பகடை வெவ்வேறு வழிகளில் உருட்டப்படும் காட்சிகளை காண்பதாலும், போட்டி நேர்மையாகவே நடக்கிறது என்ற மாயை உருவாக்கப்படுகிறது.

“எனது சேமிப்பு அனைத்தும் போய்விட்டது, நான் எவ்வளவு பணம் இழந்தேன் என்பதை நான் கணக்கிடவே முடியவில்லை” – மகேஷ்.

ஒரு வீரர் மாதம் வருமானம் ரூ.20,000 சம்பாதிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், அதில் ரூ.5,000 சேமித்து ரூ.4,000-தை சூதாட்டத்தில் இழக்கிறார். கணித ரீதியாக அவர் இழந்த தொகை என்பது அவரது வருமானத்தில் 20 சதவீதம் மட்டுமே, ஆனால் அவரது சேமிப்பில் 80 சதவீதம் ஆகும். ஒரு ஆன்லைன் சூதாட்டத்தில், இந்த வீரரின் பந்தயம் குறைவாகவும், மற்ற செலவுகளுடன் ஒப்பிடும் போது பெரிதாகத் தெரிவதில்லை. ஆனால் பந்தயம் விளையாடும் போது, வீரர்கள் பணத்தை சேமிப்பாக நினைப்பதை நிறுத்திவிட்டு, அவர்களுக்கு இருக்கும் உண்மையான செலவுகளை மறந்துவிடுகிறார்கள். அவர்களின் சேமிப்பு மற்றும் வருமானம் ஆகியவற்றுடன் பந்தயம் கட்டப்படும் பணத்தின் விகிதத்தை அவர்கள் கற்பனை கூட செய்து பார்ப்பதில்லை. பந்தயம் கட்டப்பட்ட தொகை வெறும் எண்ணாக மட்டுமே திரையில் தோன்றுகிறது. வீரர்கள் எவ்வளவு இழந்தார்கள் என்ற புள்ளி விவரங்களின் பதிவுகள் பெரும்பாலும் காட்டப்படுவதில்லை. இது வீரரை ஏமாற்றும் மற்றொரு வேலையாகும். இத்தகைய சூதாட்டங்கள் அவசர காலங்களில் தேவைப்படும் சேமிப்பு பணத்தின் உன்னதத்தை மறைக்கின்றன. தனது சேமிப்புப் பணத்தை இந்த செயலிகள் வெறும் எண்களாக மட்டுமே காட்டுவதாலேயோ அல்லது அதிக பணத்தை வெல்ல முடியும் என்ற எதிர்பார்ப்பை தூண்டும் மாயைகளாலேயோ சேமிப்பின் இழப்பையும், அந்த இழப்புகளின் விளைவுகளையும் விளையாடுபவர் மறந்துவிடுகிறார்.

முதலில், ஒரு வீரர் தனது முயற்சிகள் விளையாட்டின் முடிவை மாற்றும் என்று உறுதியாக நம்ப வைக்கப்படுகிறார். ஆனால் தேர்வுகள் பகடையைச் சார்ந்தது என்பதால் இது மிகப்பெரிய ஏமாற்று வேலையாகும்.

இரண்டாவதாக, பெரிய எழுத்துக்களில் திரைப்படுத்தப்படும் வெகுமதிகளுடன் ஒப்பிடும்போது விளையாட்டில் அவரது கடினமாக போராட்டத்தை மிக சொற்பம் என்று அவர் எண்ணுகிறார்.

கடைசியாக, அவர் வென்ற தொகை முழுமையானது என்றும், அதில் தனது பங்களிப்பையும் தன் போராட்டங்களையும் மறந்துவிடுகிறார்.

இவை அனைத்தும் வாய்ப்பை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் விளையாட்டின் கூறுகளே தவிர வேறில்லை. எனவே ஒரு விளையாட்டில் ‘திறமை மேலாதிக்கம் அல்லது வாய்ப்பு மேலாதிக்கம்’ என்பதை தீர்மானிப்பது பணம் சம்பந்தப்பட்ட விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கக்கூடாது.

இத்தகைய சூதாட்டங்களிலிருந்து பெற்ற உண்மையான அனுபவத்திலிருந்து, அவை நடத்தையில் ஏற்படுத்தும் விளைவுகள் மற்றும் அவற்றின் சமூக பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவையும் இதன் பகுதியாக இருக்க வேண்டும்.

மக்களை கவர்ந்திழுத்து அவர்களை வீரர்களாக மாற்றும் இவற்றின் விளம்பரங்கள் அனைத்து தளங்களிலும் மண்டிகிடக்கின்றன். கேஷ் பேக் மற்றும் வெகுமதிகள் வழங்கப்படுகின்றன, பிரபலங்கள் தன் சுய லாபத்திற்காக இத்தகைய செயலிகளை அங்கீகரிப்பதுடன், விளம்பரங்களில் அவற்றின் நம்பகத் தன்மையைச் சரிபார்க்காமல் சான்றுகளையும் வழங்குகின்றனர். ஆனால் விளையாட்டிற்குள் “பகடையில் விழும் எண் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது?” போன்ற பல கேள்விகள் இன்னும் பதிலளிக்கப்படாமலே உள்ளன. மேலும் நீதிமன்றங்களிலும் இன்னும் இது போன்ற கேள்விகள் எழுப்பப்படவும் இல்லை.


படிக்க : ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்களின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள்


இவ்வகையான நிறுவனங்கள் பணத்திற்காக விளையாடும் விளையாட்டுகளை அறிமுகப்படுத்தும் முன் அவற்றின் உள்ள நேர்மையின் தன்மை வெளிப்படையாக பரிசோதிக்கப்பட வேண்டும், மேலும் அது ஒரு முறைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

சமூகத்தில் ஏற்படுத்தப்படும் தாக்கம்

மகேஷின் இழப்பானது ஒரு உதாரணம் மட்டுமே, இவை நாம் வசிக்கும் தெருக்களிலேயே கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.

திறமைகளை வளர்த்துக்கொள்வது மற்றும் கடினமாக உழைப்பதே ஒரு சிறந்த வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்று இனியும் நம்பாத ஒரு சமூகம்; அதற்கு மாற்றாக அதிர்ஷ்டம் என்ற கற்பனை குதிரையின் மூலம் பொருளாதார விடுதலையை அடையமுடியும் என நம்புகிறது.

எத்தகைய விளையாட்டுகளையும் சட்ட-ஒழுங்குமுறை முன் வைக்கும் கேள்விகளுக்கும் அப்பால் நாம் பார்க்க வேண்டியுள்ளது. விளையாட்டுகள் சமூகத்தின் கூறு மற்றும் சமூகநலன்களை அடிப்படையாக கொண்டவைகளாக இருக்க வேண்டும் என்பதே நம் எண்ணமாகும். எனவே இவற்றை மதிப்பிட புதிய கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன, அவை சட்டம் மற்றும் சட்டமன்றத்தின் நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட கட்டமைப்புகளைப் பெற்றிருப்பதோடு, ஒரு விளையாட்டு தனிநபர் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராயும் தன்மையையும் கொண்டிருக்க வேண்டும்.

(முற்றும்)

GIRISH DALVI AND MALAY DHAMELIA

நம் வீட்டுப் பிள்ளை ஸ்ரீமதி “அடையாளம் தெரியாத உடல்” என்றால் ஓ, தொழிலாளி வர்க்கமே! நாம் யார்?

துவரை கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் குறித்து நடக்கும் விசாரணையும், அது குறித்து வெளியிடப்படும் செய்திகளும் குற்றம் சாட்டப்பட்டுள்ள தனியார் பள்ளி முதலாளியின் குடும்பத்தினர் மீது நடப்பதாக ஒரு செய்தியும் வரவில்லை.

ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக தற்போது வெளிவரும் செய்திகள் குறிப்பாக ஒரு செய்தியை நம் எல்லோருக்கும் சுட்டிக் காட்டுகின்றன.

அரசின் ஒவ்வொரு உறுப்புகளும் சக்தி இண்டர்நேசனல் தனியார் பள்ளி முதலாளிக்கு சாதகமாக மிக இயல்பாக செயல்பட்டிருக்கின்றன, செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான செய்தி.

இது ஒருபக்கமிருக்க, தற்போது வருகின்ற தகவல்களின்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஸ்ரீமதி “அடையாளம் தெரியாத உடல்” (Unidentified body) என்று குறிப்பிடப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாக தெரிய வருகிறது. இதைவிட வேறென்ன நம்மை இழிவுபடுத்த முடியும்?

பள்ளி நிர்வாகத்தில் இருந்துதான் மருத்துவமனைக்கு ஸ்ரீமதியின் உடலை கொண்டு வந்துள்ளனர். அப்படியென்றால் அனைத்து விபரமும் தெரிந்துதான் இருக்கும். ஆனாலும் “அடையாளம் தெரியாத உடல்” என்று மருத்துவமனை ஆவணத்தில் குறிப்பிட முடிகிறதென்றால் இந்த விசயத்தை முதுகெலும்புள்ள யாராவது அமைதியாக கடந்து செல்ல முடியுமா?


படிக்க : தனியார் கல்விக்கு எதிரான போராட்ட(கள்ளக்குறிச்சி)மாடல் பரவி விடக்கூடாது என்பதே திமுக அரசின் நோக்கம்! | மருது வீடியோ


கல்வி தனியார்மய பயங்கரவாதத்தால் அரசின் துணையோடு பணக் கொழுப்பெடுத்து திரியும் சக்தி இண்டர்நேசனல் போன்ற முதலாளிகளின் லாபம் மட்டுமே புனிதமானது. அவர்களின் லாபத்தின் முன் நம் வீட்டுப் பிள்ளைகளின் உயிரெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பதுதானே மருத்துவமனை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைக்கு பொருள்.

போலீசால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார்கள் சாத்தான்குளம் ஜெயராஜும், பென்னிக்ஸும். சிறைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட அவர்களின் உடல்நிலை குறித்த சான்றிதழில் இருவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று போலீசுக்கு சாதகமாக குறிப்பிட்டு மருத்துவர்களே கொலைக்கு துணை போனார்களே, அந்த சம்பவம் நம் நினைவை விட்டு இன்னும் அகலவில்லை.

அரசின் உறுப்புகள் ஒன்றுக்கொன்று இணைந்து உழைக்கும் மக்கள் மீது தொடர்ந்து நடத்திக் கொண்டே இருக்கும் இந்தக் கொடூரத்திற்கும் “அடையாளம் தெரியாத உடல்” என்று ஸ்ரீமதியின் உடலுக்கு கொடுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையின் குறிப்புக்கும் ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா?

தொழிலாளி வர்க்கம் இந்தப் பிரச்சினையில் இருந்து ஒதுங்கியிருக்க முடியுமா? ஓ, தொழிலாளி வர்க்கமே! நீயும், ஸ்ரீமதியும் வேறுவேறா? யோசித்துப் பார்! நம் வர்க்கத்துப் பிள்ளை என்பதால்தானே அவளுக்கு இந்தக் கதி! நாளை நாமும் ”அடையாளம் தெரியாத உடல்கள்தானே!” அப்படித்தானே முதலாளிகளும், அரசும் நம்மைக் கருதுகின்றனர்.

முதலாளித்துவப் பயங்கரவாதம் ஒவ்வொரு ஆலையிலும், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தொழிலாளி வர்க்கத்தின் மீது ஏவும் கொடூரங்களை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். கொரோனா காலகட்டத்தில் பாசிசக் கோமாளியின் முட்டாள்தனமான நடவடிக்கையால் சொந்த ஊர்களை நோக்கி அநாதைகளைப் போல விரட்டப்பட்ட தொழிலாளிகள் இரயில்களில் அடிபட்டு உடல் சிதைந்தும், பசியினாலும் மடிந்தார்களே, அப்போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா? “அடையாளம் தெரியாத உடல்கள்” என்பதுதான்.

முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்காக எந்தப் பணிப் பாதுகாப்புமின்றி, எந்த உத்தரவாதமுமின்றி பாய்லர்களில் விழுந்து உருக்குலைந்த தொழிலாளிகளின் உடல்களுக்கு கொடுக்கும் பெயர் என்ன? இன்று ஸ்ரீமதிக்கு என்ன பெயர் கொடுத்தார்களோ அதேதான்.

ஒவ்வொரு நாளும் நாடெங்கும் ஆலைகளிலும், சுரங்கங்களிலும், முதலாளி வர்க்கத்தின் ஏவல்நாயான அரசின் பயங்கரவாதத்தாலும், முதலாளித்துவம் உருவாக்கும் பசியாலும், பட்டினியாலும், வேலையின்மையாலும் உழைக்கும் வர்க்கத்தின் ”அடையாளம் தெரியாத உடல்கள்” உருவாகிக் கொண்டே இருக்கின்றன. கேட்பாரற்று அநாதையாக மண்ணுக்குள் செல்கின்றன.

முதலாளித்துவப் பயங்கரவாதமோ ”உயிருள்ள லாபத்தை” நம் உடலில் இருந்து எடுத்துக் கொண்டு தன்னை யாரும் அசைக்க முடியாதென்று கொக்கரிக்கிறது.

இன்று தொழிலாளர் நலச் சட்டத்தை திருத்தி, எவ்வித உரிமைகளுமற்ற அடிமைகளாக நம்மை மாற்றி நம்மீது மிகப் பெரிய பயங்கரத்தை ஏவக் காத்திருக்கும் இந்த முதலாளித்துவப் பயங்கரவாதிகளுக்கு நாம் உயிரோடிருக்கும்போதே ”அடையாளம் தெரியாத உடல்கள்” தானே. நம் உழைப்பைச் சுரண்டிக் கொள்வதைத் தவிர வேறெதைப் பற்றியும் எக்காலத்திலும் அவர்கள் கவலைப்படப் பட்டதுமில்லை, கவலைப்படப் போவதுமில்லை.


படிக்க : கள்ளக்குறிச்சியில் போராடியவர்கள் மீதான ஒடுக்குமுறை: உ.பி.யோகிக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை! | மருது வீடியோ


ஸ்ரீமதிக்காக தொழிலாளி வர்க்கம் தனது குரலை உயர்த்த வேண்டும். அவ்வாறு உயர்த்துவது தனக்காகவும்தான் என்பதை உணர வேண்டும்.

நாம் அடையாளம் தெரியாத உடல்கள் அல்ல. நமக்கென்று ”வர்க்கம்” என்ற அடையாளம் உள்ளது. அந்த வர்க்கத் திமிர் மட்டும்தான் முதலாளித்துவப் பயங்கரவாதத்தை அச்சுறுத்தும். முதலாளித்துவச் சுரண்டலை அடியோடு வீழ்த்தும்.

முதலாளித்துவச் சுரண்டலை அடியோடு வீழ்த்துவது மட்டும்தான் ஸ்ரீமதி என்ற நம் வீட்டுப் பிள்ளைக்கு நேர்ந்த துயரம் மற்ற பிள்ளைகளுக்கும் நேராமல் நிரந்தரமாக தடுக்கும்.

இனியன்

உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்கள் – பாகம் 1

ந்தியாவில் பணத்தை வைத்து விளையாடும் எண்ணற்ற ஆன்லைன் சூதாட்ட செயலிகள் பெருகிவிட்டன. இந்த செயலிகளால் கடனில் சிக்கி தற்கொலை முயற்சிகளை மேற்கொள்பவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

“நான் மோசமான தவறு செய்துவிட்டேன், என் பணம் அனைத்தையும் இழந்துவிட்டேன்,” என ஆன்லைன் சூதாட்டத்தில் தனது பணத்தை இழந்த மகேஷ் என்பவரின் வார்த்தைகள் இவை.

இதை கூறும்போது அவரது முகபாவனை கவலையளிப்பதாக இருந்தது. மகேஷ் தோட்ட வேலை செய்து தான் சேமித்து வைத்திருந்த பணத்தை வைத்து விளையாடியதுடன், கடன் பெற்றும் விளையாடியுள்ளார். தற்போது பணம் அனைத்தையும் இழந்து, கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் உள்ளார்.

ஆரம்பத்தில் இவை பரவலாகவே உபயோகப்படுத்தப்பட்டன. ஆனால் தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த போது, வெற்றியாளர்களுக்கு நிறைய பணம் என இந்த சூதாட்டங்களைப் பற்றிய ஆயிரக்கணக்கான வஞ்சகத்தனமான குறுஞ்செய்திகள் மக்களுக்கு அனுப்பபட்டன. இதில் “வரவேற்பு தொகை ரூ. 2,000, லூடோ விளையாடுங்கள் பணத்தை வெல்லுங்கள், மேலும் இலவசமாகப் பதிவு செய்யுங்கள்” என்பதும் ஒன்றாகும். யூடியுபில் பிரபலமாக இருபவர்கள் அவர்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்கள் என்று பெருமை பேசி, இந்த செயலிகளை பெரிய அளவில் விளம்பரப்படுத்தினர். மேலும் இந்த சூதாட்டங்களின் மூலம் நிலையான தினசரி வருமானத்தை திரட்டுவதற்கான குறிப்புகளையும், தந்திரங்களையும் அவர்கள் பகிர்ந்தனர். எதிர்விளைவுகளை பற்றி சிறிதும் சிந்திக்காமல் செய்யப்படும் இத்தகைய கீழ்த்தரமான விளம்பரங்களுக்கு மகேஷ் போன்றவர்கள் எளிதில் இரையாகிவிடுகின்றனர்.


படிக்க : ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்டுகளின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள் ! என்ன செய்ய வேண்டும்?


வேலை நீக்கம் அதிகரித்து, ஊதிய குறைப்பு போன்றவை மிகவும் சாதாரணமாகிப்போன அந்த சமயத்தில், பலர் நிச்சயமற்ற வாழ்க்கையை எதிர்நோக்கியிருந்தனர். ஆனால் அவர்கள் தங்கள் வாழ்வை மீட்டு கட்டமைக்க தேவையான முயற்சிகளை செய்வதை விடுத்து, கைப்பேசியில் நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தனர். மேலும் சூதாட்டங்களில் மூலம் தனது ஒவ்வொரு வெற்றிக்கும் பணத்தை பரிசாக பெறமுடியும் என எண்ணி, சிறிது பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்யத் தொடங்கினர்.

“வரவேற்பு தொகையில் எனது அதிர்ஷ்டத்தை முயற்சி செய்ய சில ஆட்டங்கள் மட்டும் விளையாடலாம் என்று நினைத்தேன்,” என மகேஷ் கூறினார்.

ஆரம்பத்தில் மக்கள் தாங்கள் கட்டுப்பாட்டில் தான் இருப்பதாக நம்பி, வரவேற்பு தொகையில் மட்டும் விளையாடி விட்டு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தப்பித்து விடலாம் என எண்ணுகின்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது அரிதாகவே நிகழ்கிறது. ஏனெனில் பெரும்பாலான செயலிகளில் வரவேற்பு தொகையை பெறுவதற்கு ஆரம்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. இதற்காக நீங்கள் உங்கள் வங்கி கணக்கை இதனுடன் இணைக்கும் படி செய்துவிடுகின்றனர். எனவே செயலியில் உள்ள பணத்தை இழந்தவுடன், இழந்ததை மீட்க நாம் தன்னிச்சையாகவே வங்கி கணக்கில் உள்ள பணத்தை மீண்டும் அந்த செயலியில் கொட்ட இது வழிவகுக்கிறது. இதுவே இத்தகைய விளையாட்டுகளில் ஆரம்ப நிலையாகும். வரவேற்பு தொகையை தொடக்கத்திலேயே பயன்படுத்தும் நிலை இருந்தால் அதை மட்டும் வைத்து விளையாடிவிட்டு தம்மால் இதில் வெற்றி பெறமுடியாது என்பதை உணர்ந்தது வெளியேறிவிடுவர் என்பதை திட்டமிட்டே இந்த கன்னி வைக்கப்பட்டுள்ளது.

சூதாட கவர்ந்திழுக்கப்படும் பயனாளர்கள்

இந்த செயலிகள் தங்கள் சதித்திட்டங்களை இத்துடன் நிறுத்திக் கொள்வதில்லை, இதன் பின்னர் பயனாளர்களை சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் பற்றிய அறிவிப்புகளை இடைவிடாமல் அனுப்புவதன் மூலம் செயலியில் மேலும் அதிகப் பணத்தை கொட்ட பலவிதமான நுட்பங்களை இந்நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

எச்சரிக்கையானவர்கள் இதில் உள்ள பொறிகளை விரைவாக உணர்ந்து அதிக பணத்தை இழக்கும் முன் வெளியேறிவிடுகின்றனர். இச்செயலிகளின் நோக்கங்களை கணிக்க தெரியாதவர்கள் மென்மேலும் அதிக பணத்தை இழக்கிறார்கள். இன்னும் சில ஏமாளிகளோ பணத்தை இழப்பதுடன், வாழ்க்கையையே இழந்ததாக எண்ணி தற்கொலை முடிவை நாடுகின்றனர். இது இந்த வகையான சூதாட்டங்களினால் ஏற்பட்ட கடன் தொல்லைகளின் காரணமான தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையில் இருந்து தெளிவாக தெரிகிறது.

இந்த ஆன்லைன் சூதாட்டங்களில் புழங்கும் பணம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு (FICCI) மற்றும் எர்ன்ஸ்ட் &யங் (EY) ஆகியவற்றால் வெளியிடப்பட்ட மதிப்பீட்டின் படி, 2022-இல் பரிவர்த்தனை அடிப்படையிலான இவ்வகையான சூதாட்டங்களின் மூலம் ரூ.8,500 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இதில் ஈடுபடும் நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.61,000 கோடியாகும். இதை இன்னும் தெளிவாக  கூற வேண்டுமானால், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) இன் சந்தை மதிப்பை விட இது அதிகமாகும். மற்ற வணிகங்களுடன் ஒப்பிடும் போது இந்நிறுவனங்களின் முதலீடு மிக குறைவாக இருப்பதால், இதன் செலவுகள் பெருமளவில் விளம்பரத்திற்காக மட்டுமே செலவிடப்படுகின்றன. இதைத்தான் அனைத்து தளங்களிலும் அன்றாடம் காண்கிறோம்.

மேற்கண்ட விவரங்கள் நன்கு அறியப்பட்டவையாக இருந்தாலும், சூதாட்டங்களில் தொடர்புடையவர்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களை எவரும் கணக்கில் கொள்வதில்லை. எங்கள்  மதிப்பீடுகளின் படி, சுமார் 10லட்சத்திற்கும் மேற்பட்டோர் இது போன்ற விளையாட்டுகளால் ‘மனச்சோர்வு, கவலை, தற்கொலை எண்ணம் மற்றும் தற்கொலை முயற்சிகள்’ உள்ளிட்ட ஆபத்தான பழக்கங்களின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றனர்.

நடத்தையில் ஏற்படும் மாற்றம்

மகேஷுக்கு அவரது விரக்தி கோபமாக மாறிவிட்டது. “இந்த ஏமாற்றுக்காரர்கள் எனது பணத்தை பறித்துக்கொண்டனர், அரசாங்கம் அவற்றைத் தடை செய்ய வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.

இத்தகைய செயலிகள், சூதாட்டங்களின் பின்னணியில் என்னென்ன நாசகர வேலைகளை செய்கின்றன என்பது தெரியவில்லை. மேலும் அவை எவ்வளவு நேர்மையானவை என்பதைக் கண்டறிவது சாத்தியமற்றதாகவே உள்ளது. வாடிக்கையாளரின் ‘உடல்நலம் – நிதி’ ஆகியவற்றின் அபாயத்தை உள்ளடக்கிய வணிகங்களில் குறிப்பாக ‘மருந்துப் பொருட்கள், புகையிலை மற்றும் பங்குச் சந்தைகள்’ போன்றவை அரசால் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அதே நேரத்தில், நிதி ஆபத்து சம்பந்தப்பட்ட இத்தகைய சூதாட்டங்களை கண்காணிக்கும் அமைப்பும், அதற்கான ஒரு ஒழுங்குமுறையும் இந்தியாவில் இல்லை.

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்வதற்கானத் தனி சட்டங்களை சமீபத்தில் இயற்றியது. இருப்பினும், இந்நிறுவனங்கள் இந்த சட்டங்களின் மீது விரைவாக நீதிமன்றங்களில் முறையீடு செய்தன. நீதிமன்றமும் இவற்றை சூதாட்டமாக எண்ணாமல் “திறமை சார்ந்த விளையாட்டுகள்” எனவும், இவற்றை தடை செய்வது அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் கூறி இத்தனிச் சட்டங்களை ரத்து செய்து உத்தரவிட்டது. இதில் நீதிமன்றத்தின் கருத்து என்னவென்றால் “திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது அரசியலமைப்பின் 19 வது பிரிவுக்கு எதிரானது’’ என்பதாகும். ஏனெனில் “திறமை சார்ந்த விளையாட்டுகள்” பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. இந்த வழக்கின் மையப்புள்ளியானது, “எவை திறமை சார்ந்த விளையாட்டுகள்?” என்பது தொடர்பான விளக்கத்தில் உள்ளது.

சதுரங்கம் போன்ற விளையாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி திறமை சார்ந்த விளையாட்டுகளாகும், ஏனெனில் அவை சீரற்ற தன்மையில் இயங்குவது இல்லை. இவ்விளையாட்டில் வீரர்கள் தங்களிடம் உள்ள திறமையின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறார்கள். உதாரணமாக,


படிக்க : ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்களின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள்


‘அதிக மதிப்பீட்டைப் பெற்ற ஒரு வீரர் சதுரங்கத்தில் புதியவர்களை எப்போதும் தோற்கடிக்கிறார்’, என ஒரு கிராண்ட்மாஸ்டர் கூறுகிறார்.

மறுபுறம், ‘பாம்புகள் மற்றும் ஏணிகள்’ விளையாட்டை பார்க்கும் பொழுது அது ஒரு வாய்ப்பு விளையாட்டாக உள்ளது. அது முழுவதும் பகடையில் விழும் எண்களை சார்ந்து உள்ளது, ஆனால் பகடையின் எண்ணானது சீரற்றதாக உள்ளது. இந்த விளையாட்டில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் அல்லது எல்லா வீரர்களுக்கும் விளையாட்டில் வெற்றி பெறுவதற்கு சமமான வாய்ப்பு உள்ளது, அதனால் தான் குழந்தைகள் அதை விளையாட விரும்புகிறார்கள். இதுவே ‘லுடோ’ போன்ற விளையாட்டுகளை எடுத்துக்கொண்டால், இதில் திறன் மற்றும் வாய்ப்பு ஆகிய இரண்டு கூறுகளும் உள்ளன. இதுவே இந்த விளையாட்டின் ஒவ்வொரு நிகழ்வையும் புதியதாகவும், வீரர்களுக்கு உற்சாகத்தை அளிப்பதாகவும் இருக்கிறது.

‘லுடோ’-வில், ஒரு துண்டு எவ்வளவு நகர்கிறது என்பது பகடையில் விழும் சீரற்ற எண்ணை சார்ந்தும் (வாய்ப்பு அம்சம்) மற்றும் எந்த துண்டை நகர்த்துவது என்பது வீரரை (திறன் அம்சம்) சார்ந்ததும் அமைகிறது. எனவே, இத்தகைய விளையாட்டுளை ‘திறமை சார்ந்த விளையாட்டா அல்லது “வாய்ப்பு சார்ந்த விளையாட்டா’ என தீர்மானிக்க கடினமாக உள்ளது. இந்த கேள்விதான் நீதிமன்றத்திலும் வந்துள்ளது.

கிரெய்ல் பிரைவேட் லிமிடெட் (லுடோ சுப்ரீம் ஆப் டெவலப்பர்கள்) மீது கேசவ் முலே தாக்கல் செய்த மனுவில், ‘லுடோ’ திறமை சார்ந்த விளையாட்டா அல்லது வாய்ப்பு சார்ந்த விளையாட்டா என்பதை மும்பை உயர்நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும். இது திறமை சார்ந்த விளையாட்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தால், பணத்துடன் ‘லூடோ’ விளையாடுவது சட்டப்பூர்வமாக இருக்கும்; இல்லையெனில், பணத்தை வைத்து விளையாடுவது சூதாட்டமாகவும், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் சட்ட விரோதமாகவும் கருதப்படும்.

(தொடரும்…)

GIRISH DALVI AND MALAY DHAMELIA

திரைவிமர்சனம்: சூரரைப் போற்ற முடியாது – பாகம் 3 | சு.விஜயபாஸ்கர்

சூரரைப் போற்ற முடியாது – பாகம் 3

நல்ல முதலாளிகள் இல்லையா?

விப்ரோ முதலாளி அசீம் பிரேம்ஜி பல பில்லியன் கணக்கிலான தனது சொத்தை கல்விக்கு பொதுமக்களுக்கு என நன்கொடை செய்து வருகிறார். ஆண்டுதோறும் தனது சொத்தில் பெரும் பகுதியை ஏழைகளுக்கு கல்வி மருத்துவம் போன்ற பொது விடயங்களுக்கும் செலவு செய்கிறார்கள். இவர்களைப் போல நல்ல முதலாளி இருக்கவே முடியாதா என சந்தேகம் கொள்பவர்களுக்கு, ஆங்கிலத்தில் கதாசிரியரும் நடிகருமான டின் கவானாக் “தொண்டின் மூலம் தன்னை மீட்டுருவாக்கம் செய்ய முயற்சிக்கும் கார்ப்பரேட்டிசமானது தனது குற்றங்களுக்கு அபதாரம் செலுத்துவதாக சொல்லும் தொடர் கொலையாளியை ஒத்துள்ளது” என பதிலளித்தார்.

முதலாளிகள் செய்யும் எந்த காரியமும் லாபத்தை, தன்னலத்தை நோக்கியதாகவே இருக்கும். காரண காரியங்கள் இல்லாமல் முதலாளிகள் விலை குறைப்பு அல்லது நன்கொடை என பண விரயம் செய்வதில்லை. தன்னை சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் மக்களை அமைதிப்படுத்த ஆயுதங்களை விட மருந்தே சாதகமானது என்ற புத்தி ராக்பெல்லர் முதல் கோபிநாத் வரை செயல்படுகிறது. இப்படிப்பட்ட முதலாளிகளைத்தான் நல்லெண்ணத் தூதர்களாக, ரோல்மாடலாக, இளைய தலைமுறையின் முன்னோடிகளாக நம் முன்னே காண்பிக்கின்றனர்.

திரைப்படத்தில் ஜெட் ஏர்வேஸ் நரேஷ் கோயல் டிஸ்கோ சாமி விஜய் மல்லையா போன்ற முதலாளிகளை தீயவர்களாக வில்லன்களாக சித்தரித்து, புரட்சியாளராக, சமத்துவத்தை விரும்பும் நாயகனாக ஏழைப்பங்காளனாக காண்பிக்கப்பட்ட கோபிநாத் நிஜத்தில் என்ன செய்தார் தெரியுமா?


படிக்க : தி கிரேட் இந்தியன் கிச்சன் || ஆணாதிக்கமும் மதமும் இங்கு தோலுரிக்கப்படும்


திரைக்குள் யார் கோபிநாத்தை விமான நிறுவனம் தொடங்க விடாமல் சூழ்ச்சி செய்தார்களோ அவருடன் இணைந்து அதாவது 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிங்ஃபிஷர் விஜய் மல்லையா, ஜெட் ஏர்வேஸ் நரேஷ் கோயல், ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ போன்றவர்களுடன் இணைந்து ” ஏர் டெக்கான்” அடையாள வேலை நிறுத்தம் செய்தது.
ஏழை மக்களை இலவசமாக தங்கள் விமானத்தில் ஏற்ற வேண்டும் என்பதற்காகவா வேலை நிறுத்தம் செய்தார்கள்? விமானத்தில் பறக்கும் கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காகவா? இல்லை. மாறாக விமான எரிபொருள் விலையை குறைக்க வேண்டும்.

விமான நிலையங்களில் விதிக்கப்படும் கட்டணங்களை குறைக்க வேண்டும். நட்டத்தில் நடக்கும் தங்கள் நிறுவனங்களுக்கு அரசு நிதி உதவி செய்திட வேண்டும். இதுதான் இவர்கள் கோரிக்கை இல்லையென்றால் வேலை நிறுத்தம் செய்வோம். தனியார் விமானங்கள் பறக்க விட்டால் என்ன கதி நேரும் என்பதை அரசுக்கும் மக்களுக்கும் நாங்கள் புரிய வைப்போம் என்றார் மல்லையா. அதற்கு துணை நின்றார் கோபிநாத்.

முதலாளி வர்க்கக் கனவு

எல்லாவிடயங்களிலும் திரைக்கதையும் உண்மை கதையும் வெவ்வாறாக இருந்தாலும் ஒரு விடயத்தில் சூரரைப் போற்று திரைக்கதைக்கும் நிஜத்திற்கும் ஒற்றுமை இருக்கிறது.
படத்தில், சூர்யாவின் கிராம மக்கள் தங்களது நகையை, நிலத்தை விற்று. சேமிப்பை வைத்து, கடன் வாங்கி, திருமணத்திற்கு வைத்திருந்த பணத்தை தந்து, விமானம் வாங்க போவதாக அறிவித்த சூர்யாவுக்கு உதவுவார்கள்.

இது உண்மையில் ஏழை மக்களின் ஆசை இல்லை. மாறாக முதலாளிகளின் ஆசை. கனவும் கூட.

கோபிநாத் ஏர் டெக்கானை வாங்கிய விஜய் மல்லையா நட்டத்தில் ஓடிய தனது கிங்பிஷர் விமான நிறுவனத்தை நடத்த முடியாமல், ஏழை, எளிய மக்களின் வரிப்பணத்தில் இயங்கிய அரசு வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்காமல், நாட்டைவிட்டு அரசியல்வாதிகளின் துணையோடு தப்பி ஓடினார். அந்த விஜய் மல்லையாவின் நிறுவனத்தைக் காப்பாற்ற அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என்று திருவாய் மலர்ந்தார் கோபிநாத்.

அரசு நிறுவனமான ஏர் இந்தியாவிற்கு பல ஆயிரம் கோடிகளை செலவழிக்கும் அரசு, கிங் பிஷரை காப்பாற்ற சில ஆயிரம் கோடிகளை செலவழிக்க வேண்டும் என சக முதலாளிக்கு மக்களின் வரி பணத்தை கொடுக்கச் சொன்னார் கோபிநாத். லாபத்தை தங்கள் கணக்கில் சேர்த்துக் கொண்டு, நட்டத்தை மக்கள் வரிப்பணத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோபிநாத்தின் கோரிக்கை ஒன்றும் புதிதல்ல. லாபம் தனியுடமை, நட்டம் பொதுவுடமை என்பது தான் முதலாளித்துவ கோட்பாடு. இந்த விதியின் கீழ் தான் 2008 ஆம் ஆண்டில் உலக பெருமந்தத்தில் வீழ்ந்த பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து அமெரிக்க அரசு உதவி செய்தது.

சினிமா முதலாளிகள் சளைத்தவர்களா?

கோபிநாத்தாக நடிக்கும் சூர்யாவும் திரைத்துறையினரும் முதலாளிகளுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல. சினிமாவுக்கு வரிச்சலுகை வேண்டும், மானியம் வேண்டும் என கோரிக்கை வைத்து வைத்திருப்பவர்கள் தான் இந்த ஆகாய சூரர்கள். பெருந்தொற்றினால் உலகமே முடங்கிய சில மாதங்களுக்குள்ளாகவே படப்பிடிப்புகளை நடத்த அனுமதி தாருங்கள் என தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நடிகர்களும் கோரிக்கை வைத்தனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா? படப்பிடிப்பு நடத்தப்படாமல், எண்ணற்ற சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்து, வாழ்வாதாரம் இழந்து, வீடுகளுக்குள் முடங்கி வறுமையில் வாடுகின்றனர் என்று நீலிக் கண்ணீர் வடித்தனர்.

தங்கள் சேமிப்புகளை கரைத்து, தொழிலாளியின் துயரைப் போக்க இவர்கள் முன்வராதது ஏன்?

தங்களைக் காத்துக்கொள்ள தொழிலாளர்களைக் கால் கொடுப்பதை வழக்கமான விதியாக வைத்திருக்கிறது முதலாளிவர்க்கம்

“பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பை தடுத்து நிறுத்த சில ஆயிரம் கோடிகளை அரசு செலவு செய்தால் என்ன?” என கிங்பிஷர் நிறுவனத்தின் நட்டத்தை மக்கள் தலையில் எழுதச் சொன்னார் கோபிநாத்.

தங்கள் தொழில் போட்டியால் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க அரசு நிதி உதவி கேட்கும் முதலாளிகள் தங்களது லாபத்தை அரசுக்கு தருவார்களா? அரசை விடுங்கள், தங்களது லாபத்திற்கு காரணமாக இருந்த தொழிலாளர்களோடு பங்கீடு செய்வார்களா?

அப்படி ஒரு சூழ்நிலை இருக்குமானால் தொழில் செய்வதை கைவிடுவார்கள் இந்த நியாயவான்கள். லாபமே குறி, அதற்காக எதையும் செய்ய தயாராக இருப்பவர்கள் முதலாளிகள்.

கொரோனா பெருந்தொற்றின் போது கைகளை கழுவு, வீட்டுக்குள்ளேயே இரு, சமூக இடைவெளியை கடைப்பிடி என நொடிக்கு ஒரு முறை நமக்கு அறிவுரை வழங்கிய திரைத்துறை மகான்கள். தொற்று அபாயம் நீங்கும் முன்னே திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று அறிவற்ற முறையில் எடப்பாடி அரசு நடந்து கொண்டபோது, கனவுலக கோமான்கள், பசியறிந்து, படியளந்த எடப்பாடியாரை சத்தமின்றி மனமுருகி வேண்டி இருப்பார்கள். வெளியே சத்தம் கேட்டால் தங்களை ரசிக்கும் ரசிகர்கள் காறித்துப்புவான் அல்லவா.

வெறும் முதலாளி மட்டுமல்ல கோபிநாத் ஆளும்வர்க்கத்தின் செல்லப்பிள்ளை

1994 ஆண்டு கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டார். 2009 மக்களவைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட கோபிநாத்தை இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, மோகன்தாஸ் பய் போன்றவர்கள் ஆதரித்தனர். மோகன் தாஸ் பய் அதிதீவிரமாக மோடியையும் பாஜகவையும் ஆதரிப்பவர். நாராயணமூர்த்தியும் அவ்வப்போது மோடி ஆதரிப்பவர் தான். 2014 ஆம் ஆத்மி டிக்கெட்டில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார் கோபிநாத். சமீபத்தில் கர்நாடக மாநில ஹாசன் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பாக கோபிநாத் போட்டியிடப்போவதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

அதிகாரவர்க்கம், அரசியல்வாதிகள், முதலாளிகள் என அனைவரும் ஒருசேர கோபிநாத்தை ஆதரிப்பதன் மர்மம் என்ன? தனியார்மயத்தை, உலகமயத்தை, தாராளமயத்தை, மக்களிடம் பரவலாக விளம்பரப் படுத்தும் நோக்கத்தில் அவ்வப்போது கோபிநாத் போன்றவர்கள் தோன்றுவார்கள். கோபிநாத் வழியில் நீங்களும் உழைத்தால் பூலோக சொர்க்கம் காத்திருக்கிறது என்று தன்னை விளம்பரம் செய்கிறது முதலாளித்துவம்.

மாட்டாதவரை சாமியார் மாட்டிக்கொண்டால் போலிச்சாமியார்

வாயிலிருந்து லிங்கம் எடுத்த சாமியார், வெறும் கையில் விபூதி எடுத்த சாமியார், காட்டை அழித்த சாமியார், பாலியல் வழக்கில் கைதான சாமியார், கொலைகார லோககுரு, கருவறைக்குள் பாலியல் வன்புணர்வு செய்த குருக்கள் என ஆன்மீகம் நமக்கு தந்திருக்கும் மாடல் மாட்டும் வரை சாமியார் மாட்டியபின் போலிச்சாமியார். ஆன்மீக வியாபாரிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல முதலாளிகள்

அம்பலமாகும் வரை ரோல்மாடல் தொழிலதிபர், பிடிபட்ட பின் கிரிமினல், இதுதான் தனியார்மயம் நமக்கு அளித்திருக்கும் மாடல். விஜய் மல்லையா கேத்தன் தேசாய், ஹர்ஷத் மேத்தா, சத்யம் ராஜூ என வெற்றிகரமான தொழிலதிபர்களாக திகழ்ந்தவர்கள் பலர். எப்போது வரை? அவர்கள் செய்த குற்றங்கள் அம்பலமாகும் வரை. இப்படிப்பட்டவர்களை தனியார்மயம் நமக்கான ரோல்மாடலாக நம் மீது திணிப்பதை விளம்பரம் செய்யும் பணி கலைத்துறையின் பெரும்பணி. அதற்கு சம்பளம் தான் அவர்களுக்கான வெகுமதி.

இப்படிப்பட்ட சூழலில்தான் இயக்குனர்கள் முதலாளிகளை, கதாநாயக பிம்பம் போட்டு நம் மீது திணிக்கின்றனர். இந்த வெற்று பிம்பங்களின் முகமூடியைக் கிழித்து உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுவது அவசியமான செயலாக மாறி விட்டது. ஒரு வணிக சினிமாவில் வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரத்தை விமர்சிப்பதன் அவசியமும் தேவையும் என்ன என்ற கேள்வி எழலாம். சினிமாக்கள் வரும் பொழுது போக்கோடு நின்றுவிடவில்லை. மக்களிடம் ரசனை ஊட்டுவதில் வளர்ப்பதில், கற்றுக் கொடுப்பதில் சினிமா, கலை – இலக்கியத்துக்குப் பங்குண்டு.

எனவே தான் கலை இலக்கியத்தைப் பற்றி மாவோ சொல்கிறார்: ”எம்முடைய இலக்கியமும் கலையும் அடிப்படையாகத் தொழிலாளர்கள், விவசாயிகள், படைவீரர்களுக்கானவை. பரவலாக்குதல் என்பதன் பொருள் அவர்களிடம் பரவலாக்குதல்; தராதரங்களை உயர்த்துதல் என்பதன் பொருள் அவர்களுடைய தற்போதைய நிலையிலிருந்து, அந்த மட்டத்திலிருந்து முன்னேற்றுவது என்பதாகும். அவர்களுக்குச் சாதகமானதும், அவர்களால் உடனே ஏற்றுக் கொள்ளக் கூடியதும் எதுவோ அதையே நாம் பரவலாக்க வேண்டும். எனவே, அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு முன், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் பணி இருக்கிறது. தராதரங்களை உயர்த்துவதற்கு இது இன்னும் அதிகமாகப் பொருந்தும்.

உயர்த்தத் தொடங்குவதற்கே அடித்தளம் தேவை. ஒரு வாளித் தண்ணீரை எடுத்துக் கொள்வோம். அதைத் தரையிலிருந்து தானே மேலே இழுக்கிறோம்? அந்தரத்திலிருந்தா இழுக்கிறோம்? அப்படியானால், இலக்கியமும் கலையும் எந்த அடித்தளத்திலிருந்து உயர்த்தப்படுவது? நிலப் புரபுத்துவ வர்க்கங்களின் அடித்தளத்திலிருந்தா? முதலாளி வர்க்கங்களின் அடித்தளத்திலிருந்தா? சிறுமுதலாளி வர்க்க அறிவுஜீவிகளின் அடித்தளத்திலிருந்தா? இல்லை, இவை எதிலிருந்தும் அல்ல, பரந்துபட்ட தொழிலாளர், விவசாயிகள், படை வீரர்களின் அடித்தளத்திலிருந்தே”


படிக்க : NGK : செல்வராகவன் – சூர்யா கூட்டணி Hangover-ல் ஒரு அரசியல் படம் !


அப்படியானால், பரவலாக்குதலுக்கும் தரத்திற்குமான உறவு என்ன? பிரச்சனையை மக்களின் தேவையிலிருந்து பார்க்கலாம். மக்களுக்கு எளிய, தெளிவான படைப்புகள் வேண்டும். எதிரியுடன் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு, எதிரிகளால் எழுத்தறிவற்ற கல்வியற்ற மூடர்களாக, அடிமைகளாக நசுக்கப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு போராட உற்சாகம் வேண்டும்; வெற்றி மீது நம்பிக்கை வளர வேண்டும்; எதிரிக்கு எதிராக ஒரே மனத்தோடு, ஒரே சிந்தனையோடு போராடுவதற்காக பரந்த பொது அறிவு அவர்களுக்கு வேண்டும்; பரந்த கலாச்சார அறிவு வேண்டும்; நிறையக் கலை இலக்கியப் படைப்புகள் வேண்டும்.
ஆனால் எதார்த்தத்தில், இந்திய, தமிழ்ச் சூழல் இன்று மேல் வர்க்க, மேல்சாதி மனோபாவத்தை பிரதிபலிக்கக் கூடியதாகவே சினிமா உள்ளது.

அரிதான சில படைப்புகளைத் தவிர்த்து பெரும்பான்மையான வணிக சினிமாக்கள் சந்தைக் கலாச்சாரத்தின் உள்ளடக்கமாக இருக்கிறது. அத்தோடு மட்டுமின்றி, சினிமாவுக்குள் தனக்கான அடையாளத்தை உருவாக்கி, வெகுமக்கள் மத்தியில் பரவலாக்கம் செய்துவருகிறது அதிகாரவர்க்கம். நேர்மையின் மறு உருவமாக வடிவமைக்கப்பட்ட கதாநாயகர்கள், திரைக்கு வெளியே இந்த உலகை உய்விக்க வந்த நாயகர்களாக தங்களை விளம்பரப்படுத்தி, அதன்மூலம் அரசியலை தனதாக்கி, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முனைகிறார்கள். ”சூரரைப்போற்று” சூர்யா என்ற நடிகரை போற்றுவதற்காக உருவாக்கப்பட்ட படமும் அல்ல, நெடுமாறன் ஆக தோன்றிய கோபிநாத் சமத்துவத்தைப் படைக்க விரும்பும் புரட்சியாளனும் இல்லை.
எனவே சினிமா புகட்ட விரும்பும் மேட்டுக்குடி, மேல்சாதி மனோபாவத்தை வெட்டி வீழ்த்துவது நமது முதன்மைக் கடமையாகும்.

நிஜத்தில் லாபவெறியை மையமாக கொண்டு செயல்படும் முதலாளிகளும், அதே நோக்கத்தை திரையில் காட்சியாக்கும் சினிமாக்காரர்களும் சேர்ந்து செய்த போலிப் பிம்பம் தான் “சூரரைப் போற்று”. நம்மால் இந்த சூரரைப் போற்ற முடியாது.

(முற்றும்)

சு.விஜயபாஸ்கர்

disclaimer

நீட் என்னும் அயோக்கியத்தனம்

டந்த 18 ம் தேதி கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வு மையம் ஒன்றில் மாணவிகளின் உள்ளாடையில் உலோக கொக்கி இருப்பதால் அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என உள்ளாடையை அகற்ற வற்புறுத்தியுள்ளனர்.

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு என தொடர்ச்சியாக மூன்று பொது தேர்வுகள் எழுதுவதே மாணவர்களுக்கு பெரும் சவாலாகவும் சுமையாகவும்  இருக்கிறது. இதனை நம்மால்  எப்பொழுது புரிந்து கொள்ள முடியும் என்றால் தேர்வு முடிவு வெளியாகும் பொழுது மாணவர்கள் அநேகர் தற்கொலை செய்து கொள்வதன் மூலம் நமக்கு தெரிய வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் நீட் தேர்வு வந்ததிலிருந்து, அத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ படிப்பு  படிக்க  முடியும்  என்ற  சூழ்நிலை  உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் அந்தந்த மாநில பாடத்திட்டத்தில் படித்து இருப்பார்கள். ஆனால் அவர்களுக்குள் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் இருக்கும். அந்த அடிப்படையில்  ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் இதுவரை படிக்காத என்.சி.இ.ஆர்.டி. (NCERT) பாடப்புத்தகத்தை படித்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற கட்டாயத்திற்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். இது மாணவர்களுக்கு மேலும் ஒரு சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் பெரும் சுமையாகவும் இருக்கிறது.

நீட் தேர்வு : சட்டப் போராட்ட அனுபவம், களப்போராட்ட அவசியத்தை போதிக்கிறது!

இதையெல்லாம் கடந்து நீட் தேர்வு எழுத போனால் அங்கு பெண்கள் உள்ளாடையில் உலோக கொக்கி இருக்கிறது என்றும் அவர்கள் உள்ளாடையை கழற்றினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என்றும் கூறி, அவர்களை கட்டாயப்படுத்தி உள்ளாடையை கழற்ற வைக்கிறார்கள் தேர்வு மைய ‘உத்தமபுத்திரர்கள்’. தேர்வு எழுத சென்ற பல மாணவிகள் வேறு வழியின்றி உள்ளாடையில் இருந்த உலோக கொக்கியை அகற்றிவிட்டு துணியை கட்டிக்கொண்டு தேர்வு எழுத சென்றார்கள்.

இதனையடுத்து கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த மாணவியின் தந்தை ஒருவர், “பல மாதங்கள் கடுமையாக படித்தும் இது போன்ற மன ரீதியான தொல்லையால் என் மகள் சரியாக தேர்வு எழுதவில்லை; அழுது கொண்டே வெளியே வந்தாள்” என போலீஸில் புகார் அளித்துள்ளார். மேலும் இஸ்லாமிய மாணவிகளை ஹிஜாப் மற்றும் புர்காவையும் அகற்ற சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது போன்ற கேவலமான நடவடிக்கைகளின் மூலம், நீட் தேர்வுகள் மிகவும் கண்டிப்போடும் கட்டுப்பாடோடும்  நடக்கிறது என்று பொதுமக்கள் மத்தியில் பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கும் இவர்களின் லட்சணம் என்ன தெரியுமா? மாணவிகளின் உள்ளாடை வரை பரிசோதித்த இதே நீட் தேர்வில், டெல்லி மற்றும் ஹரியானாவில் தேர்வர்களுக்கு பதிலாக வேறு சிலர் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது  அம்பலமாகியுள்ளது.

மேலும், டெல்லியில் கவுதம் நகரை சேர்ந்த சுசில் ரஞ்சன் என்பவர் ஆள் மாறாட்ட முறைகேடுக்கு மூளையாக செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் பல்வேறு போட்டித் தேர்வு பயிற்சி மையங்களுடன் சேர்ந்து போலி நுழைவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டைகளை தயாரித்து மாணவர்களுக்கு பதில் வேறு நபர்களை தேர்வு எழுத அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூளையாக செயல்பட்டு வந்த சுசில் ரஞ்சன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

அறை கண்காணிப்பாளரின் துணை இல்லாமல் எப்படி ஆள் மாறாட்டம் செய்ய முடியும்?  ஆள் மாறாட்டம் செய்வதற்கு அந்நிறுவனமும் ஹால் கண்காணிப்பாளரும் ஒத்துழைத்தால் மட்டுமே செய்திருக்க முடியும். இதுபோல் அதிகாரிகள் பணக்கார மாணவர்களிடமிருந்து லஞ்சம் வாங்கி கொண்டு களவாணித்தனம் செய்திருப்பது பல இடங்களில் அம்பலமாகியுள்ளது. ஆனால் நேர்மையாக தன்னை நம்பி மட்டுமே தேர்வு எழுத வரும் மாணவ மாணவிகளை மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டு சோதிக்கப்படுகின்றனர்.

“நீட் தேர்வு என்பது தகுதியுள்ள மாணவர்களை தேடிக் காண விழையும் பெரும் முயற்சி” என்று கதை அளந்து விடுபவர்களின் முகத்தில் காரி உமிழும் வண்ணம் வகையில் தான் தொடர்ச்சியாக நீட் தேர்வு நடந்து வருகிறது. சமீபத்தில், கேரீயர்ஸ் 360 (Careers 360) என்ற நிறுவனம் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. கடந்த மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், “நீட் தேர்வு என்பதே சுயநிதி கல்லூரிகள் அதிகளவில் பணம் சம்பாதிப்பதற்கான எளிய வழிமுறை” என்பதனை தரவுகளுடன் அம்பலப்படுத்தியுள்ளது.

“நீட் தேர்வின் விதியோ தரமான மாணவர்களை” தேர்ந்தெடுப்பது என்று நீட் தேர்வை ஆதரிக்கும் கும்பல்கள் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் நடைமுறையில் உள்ள விதியோ தனியார் சுயநிதி கல்லூரிகள், தனியார் பயிற்சி நிறுவனங்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என ஆளும் வர்க்கத்தின் லாப வேட்டைக்கானதாக தான் உள்ளது.

கேரளா : நீட் தேர்வு – மாணவர்கள் மீது ஏவப்படும் ஒடுக்குமுறை!

மொத்தமாக பார்த்தால் நீட் தேர்வில் இரண்டு முரணான அம்சங்கள் வெளிப்படுகின்றன. ஒன்று பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித்துகள், பொருளாதாரத்தில் தாழ்ந்தவர்கள் யாரும் மருத்துவராகக் கூடாது. அவர்கள் இந்த சமூகத்தில் முன்னேறக்கூடாது என்பது. மற்றொன்று இந்தத் தேர்வை வைத்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நீட் பயிற்சி மையம் வைத்திருப்பவர்களும் கொழுத்து கொண்டிருக்கின்றனர்.

பணம் உள்ளவர்கள் மட்டுமே கனவு காண வேண்டும் என்று ஒவ்வொரு தேர்வின் போதும் எளிய மக்களின் முகத்தில் ஓங்கி அறைகிறது நீட் தேர்வு. ஆனால் ஆரம்பத்தில் போராட்டங்களின் மூலம் திருப்பி அறைந்து கொண்டிருந்த தமிழகம், அனிதா இறந்த போது போர்க்களமான தமிழகம், இன்று பல அனிதாக்களை இழந்த போதும் எழவு வீட்டில் எந்த சலனமும் இல்லாமல் ஓய்ந்து கிடப்பது போல் ஓய்ந்து கிடக்கின்றது. இது தான் இங்குள்ள சமரச சக்திகளின் மிகப் பெரிய வெற்றி.

இதுவரை தமிழகத்தில் மட்டும் ஏறக்குறைய 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வால் கொல்லப்பட்டுள்ளனர். நீட் தேர்வினால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். இத்தாக்குதலை தொடுப்பது இரட்டை குழாய் கொண்ட தனியார்மயம் – தாரளமயம் – உலகமயம் என்ற கொலைகார துப்பாக்கி தான். இந்த துப்பாக்கியின் விந்தை என்னவென்றால் ஒரு துளையின் மூலம் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் உயிரைக் கொன்று குவித்து வருகிறது. இன்னொரு துளையோ பண முதலைகளுக்கு பண மாலையாக விழுகிறது. இந்த துப்பாக்கியை அடித்து நொறுக்காமல் நீட்டிலிருந்து நமக்கு விடிவில்லை.

ஆதி

திரைவிமர்சனம்: சூரரைப் போற்ற முடியாது – பாகம் 2 | சு.விஜயபாஸ்கர்

சூரரைப் போற்ற முடியாது – பாகம் 2

அதற்காக கோபிநாத்தின் தகிடுதித்தங்கள் ஒன்றல்ல இரண்டல்ல.

1. ஆம்னி பஸ்களுக்கு வழிகாட்டி ஏர் டெக்கான். கடைசி நேரத்தில் டிக்கெட் வாங்கினால் உச்சபட்ச விலை.
2. பொதுமாக்களின் விமான ஆசைக்கு தூண்டிலாக சில டிக்கெட்டுகள் குறைந்த விலையில் தரப்பட்டன.
3. டிக்கெட்டை கேன்சல் பண்ணினால் அபராதம் விதிக்கப்படும் என்ற நடைமுறையை முதன்முதலில் கொண்டு வந்தது ஏர்டெக்கான்.
4. எவ்வளவு குறைவான தொழிலாளர்களை வைக்க முடியுமோ, அவ்வளவு குறைவான தொழிலாளர்களை வைத்து, எவ்வளவு அதிகமான வேலை வாங்க முடியுமோ, அவ்வளவு அதிகமான வேலை வாங்கியது ஏர் டெக்கான். செலவை குறைக்க வேண்டுமெனில் ஆட்களைக் குறை அல்லது சம்பளத்தை குறை. இது தான் தனியார் முதலாளிகளின் தாரக மந்திரம். இதுவே கோபிநாத்தின் தந்திரம்.
5. பழைய ஹெலிகாப்டர்கள், பழைய விமானங்கள் என வாங்கி அதை வைத்து விமான நிறுவனம் நடத்தி, உயிருக்கு உலை வைக்கும் வேலையை செய்தார் கோபிநாத்.
6. தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இருப்பது, வேலையை விட்டு நீக்குவது போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் கோபிநாத்துக்கு அத்துப்படி.
7. SBI, AXIS என பல வங்கிகளிடம் கடன் வாங்கி விட்டு, திருப்பித்தரவில்லை கோபிநாத். கடனை திருப்பி தராததால், SBI கோபிநாத்தின் சொத்துக்களை ஏலம் விட்டது.
8. ரைட் சகோதரர்கள் இன்று உயிரோடு இருந்து, விமான நிறுவனம் நடத்தினால், வில்பர் ரைட் தனது தம்பி ஆர்வில் ரைட்டை வேலையை விட்டு தூக்கிருப்பான் என ஒருமுறை சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனர் (Herb Kelleher) காமெடியாக சொன்னார். இதைத் தான் அனைத்து தனியார் முதலாளிகளும் செய்கிறார்கள். கேப்டன் கோபி நாத் செய்ததும் இதுதான். 2020 மார்ச் 22ல் லாக்டவுனை இந்திய அரசு அறிவிக்கிறது. ஏப்ரல் 5 ஆம் தேதி ஏர் டெக்கான் தனது அனைத்து தொழிலாளர்களையும் வேலையை விட்டு விலகச் சொல்லிவிட்டது அல்லது சம்பளம் இல்லாத நீண்ட கால விடுப்பில் போகச்சொல்லி விட்டது. மற்ற எந்த விமான நிறுவனங்களும் இதைச் செய்யவில்லை. முதன் முதலில் ஏர் டெக்கான் செய்தது.


படிக்க : சர்தார் உத்தம்சிங் திரைப்படம் : பயங்கரவாதியா ? புரட்சியாளரா ?


பல நாள் திருடன் ஒரு நாளும் அகப்படவில்லை

2003 இல் துவங்கிய ஏர் டெக்கான் கடுமையான நட்டத்தை சந்தித்தது, 2007 இல் விஜய் மல்லையாவுக்கு விற்று விட்டார். ஏர் டெக்கானை வாங்கியது விஜய் மல்லையாவின் சரிவுக்கு முக்கிய காரணம். 2009 இல் டெக்கான் 360 என்ற சரக்கு விமான போக்குவரத்தை ஆரம்பித்து, நட்டத்தினால் 2011 இல் இழுத்து மூடினார். 2012 இல் குஜராத்தின் சில நகரங்களுக்கு (அகமதாபாத், சூரத், ஜாம் நகர், பாவ் நகர், கண்டலா) இடையேயான விமானப் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பித்து 2013 இல் நட்டத்தினால் மூடிவிட்டார். இத்தனை முறை நட்டத்தினால் மூடிவிட்டாலும், 2017 இல் மோடி அரசாங்கம், குறுநகரங்களுக்கான விமானப் பயணம் என்ற நோக்கத்திற்காக கொண்டு வந்த UDAN என்ற திட்டத்தின் கீழ் 34 நகரங்களுக்காக விமானப் பயண அனுமதியை கோபிநாத் வாங்கியுள்ளார்.

ஜெட் ஏர்வேஸ், பாரமவுண்ட், ஏர் சஹாரா, கிங்பிஷர் என பல விமான நிறுவனங்கள் நட்டத்தை சமாளிக்க இயலாமல் நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு ஒடிய போதும், பல முறை நட்டமடைந்தாலும், 2017 இல் மீண்டும் ஏர் டெக்கானை ஆரம்பித்த கோபி நாத், 2020 ஆம் ஆண்டு ஏப்ரலில் அதனை தற்காலிகமாக இழுத்து மூடிவிட்டார். இதன் பின்னரும் UDAN என்ற இந்திய அரசின் திட்டத்தின் தலைமை ஆலோசகராக கோபிநாத் உள்ளார்.

அதன் மர்மம் என்ன?

பாரத் மகாதேவன் என்ற விமானத்துறையைச் சார்ந்த உயரதிகாரி, “விமானத்துறையில் கோபிநாத் செய்த தவறுகளுக்கும் குற்றங்களுக்கும்” ஒருபோதும் மாட்டவில்லை என்கிறார். அவரைத் தப்ப விடுவது யார்? பார்ப்பன லாபியா?

இதற்கு கோபி நாத்தே பதில் சொல்லுகிறார். 2017 இல் ஏர் டெக்கானை மீண்டும் ஆரம்பித்தபோது ஒரு பேட்டியில், ”ஏர் டெக்கானை விஜய் மல்லையாவுக்கு விற்ற போது, இவ்வளவு பிரச்சினைகள் வருமென கணித்தீர்களா” என Network 18 பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு, “விஜய் மல்லையா புத்திசாலித்தனமாகவும் அரசியல் சூழலை சிறப்பாக நிர்வகிக்கவும் செய்திருக்க வேண்டும், ஏனெனில் மற்ற சில பெரு நிறுவனங்களின் கடனுடன் ஒப்பிடும்போது விஜய் மல்லையாவின் கடன் மிகக் குறைவு. மற்ற பெரு நிறுவனங்கள் கடனை திருப்பிச்செலுத்தாமல் சமாளிக்கின்றன. ஆனால் அவரால் தனது கடனை சமாளிக்கவோ அல்லது விமானச் சேவையை மறுதொடக்கம் செய்யவோ முடியவில்லை” என்கிறார். சுருக்கமாக, தனக்கு உள்ள புத்திசாலித்தனம் மல்லையாவுக்கு இல்லை எனக் கூறுகிறார் என எடுத்துக் கொள்ளலாமா?

சிலமுறை தேர்தலில்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தும், சில அரசியல் கட்சிகளோடும் இன்றும் இணக்கமாகவும் உள்ள அந்த தந்திரம் மல்லையாவுக்கு இல்லை எனக் கூறுகிறார் என எடுத்துக் கொள்ளலாமா?.

கையில் எடுத்த தொழிலெல்லாம் தோல்வியில் முடிந்தாலும், இன்றும் அதிகார வர்க்கத்தின் செல்லப்பிள்ளையாக இருக்கும் கோபிநாத்தின் திறமை மல்லையாவுக்கு இல்லை எனக் கூறுகிறார் என எடுத்துக் கொள்ளலாமா?

எப்படி எடுத்துக்கொண்டாலும் தவறில்லை.

சேவை கண்ணோட்டம் கொண்ட முதலாளி சாத்தியமா?

எந்த முதலாளி தனது லாபத்தை கைவிடுவார் அல்லது லாபத்தை கைவிட்டு மக்களுக்கு சேவை செய்ய அவர் ஏன் முதலாளி ஆகவேண்டும்? கோபி நாத் அறிமுகப்படுத்திய மலிவுவிலை விமானம் ஜாதியை பொருளாதார ஏற்றத் தாழ்வை ஒழிக்க வந்த வாகனம் இல்லை.
ஆண்டுக்கு சராசரியாக 0.2 முறை விமானத்தில் பறக்கும் இந்திய குடிமக்களை, அதைவிட அதிக முறை பறக்க வைத்து லாபம் சம்பாதிக்க கோபிநாத் பெரும்படு தேர்ந்தெடுத்த வியாபார உத்திதான் மலிவு விலை விமான பயணம். ஒரு ரூபாய் டிக்கெட் என்பது விமானத்தில் பறக்க அவர்களை விமானத்தை நோக்கி கவர்ந்திழுக்கும் இனிப்பு மிட்டாய் போல தூண்டில் போட்டு மீனை இழுக்கும் வியாபாரத் தந்திரமே அன்றி மக்கள் சேவை அல்ல. பணக்காரர்கள் மட்டுமே வைத்திருந்த செல்போன் இன்று ஒருவருக்கு ஒன்று என பரவலானதின் பின்னணி தனியார் தொலைத்தொடர்பு கம்பெனிகளின் தொழில்தந்திரமும் வியாபார உத்தியும் அன்றி, அனைத்தையும் அனைவருக்கும் பரவலாக்கும் பொதுவுடமை இல்லை. 500 ரூபாய்க்கு செல்போன் விற்று அனில் அம்பானி லாபம் சம்பாதித்தாரா இல்லை அதை வாங்கிய 500 ரூபாய் மாதச் சம்பளம் பெற்ற தொழிலாளி லாபம் சம்பாதித்தாரா?

தொழில் போட்டியும், புதிய சந்தையை உருவாக்குவதும், பழைய சந்தைகளை அழிப்பதும், முதலாளித்துவத்தின் அடிப்படை இயங்கு முறை. முதலாளித்துவம் தனக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை, ”ஒருபுறம் வலுக்கட்டாயமாக உற்பத்தி சக்திகளில் ஒரு பெரும் பகுதியை அழிப்பதன் மூலமும், மறுபுறம் புதிய சந்தைகளை கைப்பற்றுதல், பழைய சந்தைகளை கடைசிவரை கடைசி சொட்டு வரை சுரண்டுதல் மூலமும் சமாளிக்க முயற்சிக்கிறது” என்றார் காரல் மார்க்ஸ.

தொழில் போட்டிகளுக்காக விலையை குறைப்பது ஒன்றும் புதிதல்ல. அது பழைய கடைச்சரக்கு. தொலைதொடர்பு துறையில் திடீரென நுழைந்த முகேஷ் அம்பானி மற்ற நிறுவனங்களின் கையில் இருந்த சந்தையைக் கைப்பற்ற, ஜியோ சிம் கார்டை விலையில்லாமல் மூன்று மாதங்களுக்கு தந்தார். அதன் விளைவாக ஏராளமான பேர் மற்ற நிறுவனங்களிலிருந்து விலகி, ஜியோ சிம் கார்டை பயன்படுத்த ஆரம்பித்தனர். ஏற்கனவே நெருக்கடியில் இருந்த வோடபோன், ஏர்செல், ஐடியா, போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முகேஷ் அம்பானியோடு சண்டை செய்ய இயலாமல் வீழ்ந்தன. ”அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்போது காலியாகும்” என காத்திருந்த முகேஷ் அம்பானி தொலைதொடர்பு கட்டணத்தை 30 சதவிகிதம் உயர்த்தினார். 2015 ஆம் ஆண்டில் தொலைத்தொடர்புத் துறையில் நுழைந்த முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டில் இன்று 50 சதவீத செல்போன் சந்தை உள்ளது.

குறைந்த விலைக்கு பொருட்களை விற்று, போட்டியாளர்களை வீழ்த்தி சந்தையைக் கைப்பற்றி பின்னர் விலையை உயர்த்தி லாபத்தை அதிகரிப்பது முதலாளிகளுக்கு பாலபாடம். முகேஷ் அம்பானி இன்று செய்ததை கோபிநாத் அன்று செய்தார். 2003 ஆம் ஆண்டில் மலிவு விலை டிக்கெட் என்ற வியாபார யுத்தியுடன் விமானச் சந்தைக்குள் நுழைந்த கோபிநாத் 3 ஆண்டுகளில் 20 சதவீத சந்தையை கைப்பற்றினார். தனிப்பெரும் முதலாளி கனவோடு இருந்த கோபிநாத்தை இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற மலிவு விலை விமான நிறுவன முதலாளிகள் கோபிநாத்தின் உத்தியை வைத்தே அவரை வீழ்த்தின. தொழில் போட்டியும் கடனும் நெருக்க தனது நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை 550 கோடி விஜய் மல்லையாவுக்கு விற்று நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொண்டார். ஏர் டெக்கானை வாங்கிய விஜய் மல்லையா விழுந்தது தனிக்கதை.

ஒரு ரூபாய்க்கு டிக்கெட் விற்றவர் ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர் ஆனது எப்படி? சேவை மனப்பான்மையுடன் இருந்ததாலா?

வரம்பின்றி திறந்து விடப்பட்ட இந்திய பெரு சந்தையில் கால்பதித்த முதலாளி வர்க்கத்தின் உற்பத்திப் பொருட்களுக்கு மென்மேலும் விரிவடைந்து வரும் சந்தைத் தேவை. அதற்கு அந்தத் தேவை, முதலாளி வர்க்கத்தை இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் ஓடும்படி விரட்டுகிறது. அது எல்லா இடங்களிலும் கால் பதிக்க இடம் தேடி தேட வேண்டியதாகிறது. எல்லா இடங்களிலும் தொடர்புகளை நிறுவ வேண்டியதாகிறது. ஏர் டெக்கான் மூலம் கோபிநாத் இந்தியாவின் சிறு குறு நகரங்களை நோக்கிப் போனார். ஒவ்வொரு முதலாளியும் தனது தொழிலை வளர்க்க லாபத்தை பெருக்க செய்யும் செயல் அது. அதற்காக எதையும் செய்ய துணிந்தால் தான் அவர்களால் முதலாளியாக நீடிக்க முடியும். கோபிநாத்தும் இதற்கு விதிவிலக்கல்ல.


படிக்க : சாராஸ் திரைப்படம் : குழந்தைப் பேறு வரமா ? சாபமா ? || ராஜசங்கீதன்


மனிதகுலம் சந்திக்கும் துன்ப, துயரங்களை பயன்படுத்தி மூலதனக் குவிப்பை செய்வது முதலாளித்துவ அமைப்பின் தவிர்க்க முடியாத குணாம்சமாக இருக்கிறது. எதையும் லாபமாக பார்க்கும் முதலாளி வர்க்கம், கொரானா பெருந்தொற்று காலத்தையும் லாபம் சம்பாதிக்கும் வாய்ப்பாகவே பார்த்தது. அதனால் தான் கொரானா காலத்திலும் யுபிஎஸ் (UBS), பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் (Price Waterhouse Cooper’s -PWC) அறிக்கையில் இந்திய பணக்காரர்களின் நிகர வருமானம் 2020 ஏப்ரல் – ஜுலையில் மட்டும் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 423 பில்லியன் டாலர். நாடு முழுவதும் மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு பொதுமுடக்கம் கடும் அமலில் இருந்த காலகட்டத்தில் பணக்காரர்களின் வருமானம் இவ்வளவு உயர்ந்துள்ளது.

பணக்காரர்களை எனது வாடிக்கையாளராக கருதவில்லை மாறாக எனது அலுவலகத்தில் சுத்தம் செய்யும் பெண்ணும், ஆட்டோ ஓட்டுநரும், மற்றும் இவர்களைப் போன்ற ஏழை மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறோம், ஏழை மக்களும் பறக்க முடியும் என கனவு காண வேண்டும். அந்தக் கனவை நாங்கள் நனவாக்குவோம் என்றார் கோபிநாத். அந்தக் கனவு உண்மையில் மக்களின் கனவல்ல. அது கோபிநாத் என்ற முதலாளியின் கனவு. ஏழை எளிய மக்கள் விமானத்தில் பறப்பதின் மூலம் தன் வாழ்வில் எந்தப் பிரச்சினைகளையும் திருத்தி விடப்போவதில்லை. ஆனால் முதலாளிகள் கொள்ளை லாபம் சம்பாதிப்பது நிச்சயம். எனவே மக்களுக்கு இல்லாத கனவைத் தூண்டி, அதன் முலம் நுகர்வை அதிகரித்து, தங்கள் மூலதனத்தை பெருக்குவதே முதலாளித்துவம் காணும் கனவு.

தாங்கள் காணும் கனவை மக்களின் கனவாக மாற்றுவதுதான் முதலாளிகள் செய்யும் சேவை.

(தொடரும்…)

சு.விஜயபாஸ்கர்

disclaimer

மக்களிடயே அறிவியல் கண்ணோட்டத்தை உருவாக்க, பார்ப்பன பாசிசத்தை எதிர்த்த புஷ்ப மித்ர பர்கவா! – பாகம் 2

0

மக்களிடயே அறிவியல் கண்ணோட்டத்தை உருவாக்க, பார்ப்பன பாசிசத்தை எதிர்த்த புஷ்ப மித்ர பர்கவா! – பாகம் 1

மக்களிடயே அறிவியல் கண்ணோட்டத்தை உருவாக்க,
பார்ப்பன பாசிசத்தை எதிர்த்த புஷ்ப மித்ர பர்கவா! – பாகம் 2

திருட்டு!

ஜனவரி 7-ம் தேதி தில்லி வந்தபோது அவசரநிலை ஆட்சி இருந்தது. தேர்தல் அறிவித்து, தேர்தல் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. நாங்கள் கண்காட்சி வேலைகளை முழுதும் முடித்து திறப்பு விழாவிற்கு தயாராயிருந்த மார்ச் 21ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்திரா காந்தி தோற்று, மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். புதிய அரசாங்கத்திற்கு, இன்று நாம் வெளிப்படையாக அனுபவித்து வருகிறோமே அந்த இந்துத்துவ அஜண்டா, மறைமுகமானதாக இருந்தது. ஏற்கனவே குறிப்பிட்ட போஸ் போன்றோர் ஆதிக்கம் செலுத்தவும், திறன் மிக்க ரியாஸ் அகமது போன்றோர் அடங்கியிருக்கவும் ஆனது. எங்கள் கண்காட்சியில் இருந்த பல செய்திகளும் மத அடிப்படைவாதத்திற்கு எதிரானதாக இருந்தது. மூடநம்பிக்கைகளை எதிர்த்து, அறிவியல் கண்ணோட்டம், காரண-காரிய தேடல், பகுத்தறிவு, புறநிலை உண்மையிலிருந்து முடிவுக்கு வருவது போன்றவை இயல்பாகவே மத அடிப்படைவாதங்களுக்கு எதிரானதாகத்தானே இருக்கும்!

மார்ச் 21க்குப் பின் காட்சிகள் வேகமாக மாறத் தொடங்கின. சில நாட்களில் ரியாஸ் அகமது தனது என்சிஇஆர்டி இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார். போஸ் போன்றோர் காட்டில் மழை! எங்களுக்கு உள்ள பாராளுமன்ற தொடர்புகள் மூலம் பிரதமர் மொரார்ஜி தேசாயை வைத்து திறப்பு விழா நடத்த முயன்றோம். என்சிஇஆர்டி-யும் புதிய கல்வி அமைச்சரும் ஒத்துழைக்கவில்லை. வேறு வழியின்றி கண்காட்சியைப் பூட்டி வைத்து விட்டு அனைவரும் ஐதராபாத் திரும்பினோம்!


படிக்க : ஜூலை 1, 1921 : சீன கம்யூனிஸ்ட் கட்சி உதய நாளை நினைவுக்கூறுவோம்!


தற்செயல் நிகழ்வாக எனது மிக நெருங்கிய உறவுப் பெண் ஆஷா சிங் பால் பவனில் பணியாற்றி வந்தார். பால் பவன் இயக்குனருடன் எனக்கு நல்லுறவும் இருந்தது. அவரிடம் பேசி, ஆஷாவிடம் ஒரு சாவியைக் கொடுத்து கண்காட்சி அரங்கை பராமரித்து வரச் சொன்னேன். அரசாங்கத்தை அணுகி கண்காட்சியை அரசே ஏற்று நடத்த பேசுவது, அல்லது கண்காட்சியை யாருக்காவது விற்றுவிடுவது என இரு யோசனைகள் இருந்தது. முதல் வாய்ப்பு மிகக் குறைவு எனத் தெரிந்தது. எனவே விற்பதற்கான ஆட்களைத் தேடத் தொடங்கினேன்.

ஆந்திரப் பிரதேச அரசு கண்காட்சியை வாங்கி, ஐதராபாத்தில் அமைக்க முன்வந்தது. கல்வித் துறை அதிகாரிகளும், கல்வி அமைச்சரும் தில்லி சென்று கண்காட்சியைப் பார்த்து மிகவும் திருப்தியுற்று, கட்டாயம் வாங்கிக் கொள்வதாக கூறினர். 6000 சதுர அடிக்கு மேல் மத்திய நூலகத்தில் இடமும் ஏற்பாடு செய்தனர். 1978 ஆகஸ்ட் 7 அன்று ஆந்திர அரசின் முதன்மை நிதித் துறை செயலர் எனது அலுவலகம் வந்து, கண்காட்சியை வாங்கிக் கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது என்றார். அன்றே, இந்திய தேசிய அறிவியல் அகாடமி கவுன்சிலில் என்னை உறுப்பினராக தேர்வு செய்ததைப் பற்றி பாதுகாப்புத் துறை அறிவியல் ஆலோசகர் என்னிடம் நேரில் வந்து தெரிவித்தார். அதே நேரம் தில்லி பால் பவனிலிருந்த உறவுப் பெண் ஆஷா தொலைபேசியில் அழைத்து, கண்காட்சியை மொத்தமாகக் காணோம் என்றார். இடி விழுந்தது போலாயிற்று.

உடனடியாக ஆகஸ்ட் 9ம் தேதியே தில்லி விரைந்து சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பார்த்தேன். யாரும் என்னுடன் முகம் கொடுத்துப் பேசாதது மட்டுமின்றி, குறிப்பாக கண்காட்சி பற்றி வாயே திறக்க மறுத்தனர். அரசாங்கம் மாறியதும் எல்லோரும் மாறி விட்டனர். யார் எடுத்துச் சென்றனர், எங்கே உள்ளது என எதையும் என்னிடமே சொல்ல மறுத்தனர். என்சிஇஆர்டி-யின் புதிய இயக்குனரைச் சந்திக்க முயன்று, அவரைப் பார்க்கவே முடியவில்லை. வேறு வழியின்றி, ஆகஸ்ட் 11ல் தில்லியிலேயே செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினேன். நிறையப் பேர் கலந்து கொண்டனர். அடுத்த இரண்டு நாட்களுக்கு நாட்டின் எல்லா இதழ்களிலும் கண்காட்சி திருடப்பட்டு, காணாமற் போனதுதான் பரபரப்புச் செய்தியாகவும் தலைப்புச் செய்தியாகவும் ஆனது. அலெக்சாண்ட்ரியா நூலகம், வெற்றி பெற்ற ரோமானியர்களால் எரிக்கப்பட்டதுடன் ஒப்பிட்டு செய்திகளை எழுதினார்கள். உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் அறிவியல் கண்காட்சி மறைந்த மாயம் பற்றி விரிவாக எழுதினர். புகழ் பெற்ற அறிவியல் இதழ்களான நேச்சர் (NATURE), சயின்ஸ் (SCIENCE) இதழ்களும் விரிவாகவே எழுதின.

ஜனதா அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் உத்தரவில், என்சிஇஆர்டி-யின் தூண்டுதலின் பேரில் கண்காட்சி சில மணி நேரங்களில் வாரிச் சுருட்டி, களவாடப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் தான் வாகனங்களில் வந்து வழித்தெடுத்துச் சென்றுள்ளனர். (இன்று சாலைகளில் மனித உயிர்களை படுகொலை செய்யும்) இந்த கொலைகார கும்பல், அறிவியல் உபகரணங்களைப் பற்றி அறிந்திருக்குமா? விலைமதிப்பற்ற வண்ணப் படக்  காட்சிகளைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? முறையாக, விவரம் தெரிந்தோர் இதை எடுப்பது என்றால் கூட இரு வாரங்கள் ஆகும்! இரவு பகல் பாராமல் பரபரப்பாக செய்தால் கூட ஒரு வாரமாவது ஆகும்! சிலமணி நேரங்களில் அப்புறப்படுத்துவது என்றால் அழித்தொழித்து விட்டார்கள் என்றே பொருள்! மின் வயர்கள் மட்டும் பல மைல் நீளம் என்றால் எத்தனை கருவிகள், மின்விளக்குகள் உட்பட மின்சாதனங்கள் எனக் கணக்கிட்டுப் பாருங்கள்!

இந்தக் கண்காட்சி இந்தியாவில் எங்குமே நடக்கக் கூடாது என்றே ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள் இதைப் பெயர்த்தெடுத்துள்ளனர். (அன்றைய ஜனதா அரசாங்கத்தில் கேபினட் அந்தஸ்தில் ஒரு பிஜேபி அமைச்சர்தான் இருந்தார். இன்றோ அவர்களின் ஆட்சி. அதனால்தான் பயமே இன்றி தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கௌரி லொங்கேஷ் என பகுத்தறிவாளர்களும், அறிவியல் சிந்தனையைப் பரப்புவோரும் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இது மக்களிடம் எதிர்க் கருத்துக்களை உருவாக்கவே, அதிலிருந்து  கற்றுக் கொண்டு, இன்று சுய சிந்தனை உள்ள அறிவுத் துறையினரை நகர்ப்புற நக்சல்கள் என அவதூறு செய்து, சிறையிலிட்டு சித்திரவதை செய்து கொல்கிறார்கள்!) 2500 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமிராண்டிக் காலத்திற்கு சமூகத்தை பின்னுக்கு இழுத்துச் செல்ல முனையும் மத அடிப்படைவாதிகள், முன்னோக்கிச் செல்லத் தூண்டும் அறிவியல் கண்காட்சியை அனுமதிப்பார்களா?

கண்காட்சி பற்றி பிரதமர் மொரார்ஜியை செப்டம்பர் 27ல் சந்திக்க முடிந்தது. அவரது அறையில் நுழைந்தபோது வரவேற்கவுமில்லை, அமரச் சொல்லவுமில்லை. கீழே குனிந்து கொண்டிருந்தார். நானே சென்று அவருக்கு முன் உள்ள நாற்காலியில் அமர்ந்து காணாமற் போன கண்காட்சி பற்றிக் கூறினேன். தலையை உயர்த்தாமலே ஏன் முதலிலேயே என்னிடம் கூறவில்லை எனக் கேட்டார். எல்லாப் பத்திரிகைகளிலும் செய்தியாக வந்ததே என்ற போது நான் பத்திரிக்கை படிப்பதில்லை என்றார்! பாராளுமன்றத்திலேயே கடும் விவாதம் நடந்ததே என்றேன். நல்லவேலை பாராளுமன்றமே செல்வதில்லை என்று கூறவில்லை. பின்னர் டாக்டர் மாத்தூர் என்பவர் தலைமையில் ஒருநபர் விசாரனைக் கமிசன் அமைத்தார். அது எதிர்பார்த்தது போலவே அரசாங்கம், என்சிஇஆர்டி இரண்டுக்கும் இதில் (களவாடியதில்) தொடர்பில்லை என நற்சான்று தந்து முடித்துக் கொண்டது.

இந்தியப் பகுத்தறிவாளர் கழகம் ஆந்திர உயர்நீதி மன்றத்தில் ஒரு ரிட் மனுப் போட்டு, அது விசாரணைக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது. என்சிஇஆர்டி-யின் நடவடிக்கை இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்ற அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது. புகழ்பெற்ற மனித உரிமைப் போராளி, வழக்கறிஞர் கண்ணபிரான் அவர்கள் எங்கள் தரப்புக்கு ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்பட்டது. ஆயினும் நீதி மட்டும் கிட்டவில்லை. (எப்போது இந்திய நீதிமன்றங்கள் இயற்கை நீதி வழங்கியிருக்கின்றன? நீதி என்பது விதிவிலக்கானதாகி வருகிறது.)

அறிவியல் கண்காட்சி மீண்டும் உயிர்த்தெழுந்தது!

இதற்கிடையே ஆந்திர கல்வித் துறை அதிகாரிகள் மெனக்கெட்டு தில்லி சென்று, பலரிடமும் பேசி, கடைசியில் ஒருவழியாக கண்காட்சியைக் கண்டு பிடித்துவிட்டார்கள்! இவர்களின் இமாலய முயற்சியைப் பாராட்டியே ஆக வேண்டும்! என்சிஇஆர்டி வளாகத்திலேயே, அங்குள்ள ஒரு குடௌனில் குப்பையாக கண்காட்சிப் பொருட்கள் போடப்பட்டிருந்தது. ஆந்திர கல்வித் துறை அதிகாரிகள், என்சிஇஆர்டி அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி, அவர்கள் செலவு செய்த தொகையைத் தந்து கண்காட்சிப் பொருட்கள் அனைத்தையும் 1980ல் எடுத்து வந்தனர். மீண்டும் 2 ஆண்டுகள் வேலை செய்து கண்காட்சி உருவாக்கப்பட்டது. கண்காட்சி காணாமல் போய் ஆந்திர அரசு கண்டு பிடித்து எடுத்த அந்த இடைப்பட்ட காலத்தில் வெளிநாடுகள் பலவும் (ஹாலந்து, அமெரிக்கா போல) அந்தக் கண்காட்சியை தங்கள் நாடுகளுக்கு அனுப்ப இயலுமா என விசாரித்தனர். அந்த அளவு கண்காட்சி பற்றிய செய்தி உலகம் முழுவதும் கல்வித் துறை வட்டாரத்தில் பிரபலமாகி இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை!

மத்தியில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு, மீண்டும் இந்திரா காந்தி பிரதமர் ஆனார். ஆந்திராவிலோ என்டிஆர் முதல்வராகி விட்டார். இதன் காரணமாக, கண்காட்சி திறப்பு விழா தள்ளித் தள்ளிப் போய் இறுதியில் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பின்பு 1984 நவம்பர் 12ல் திறக்கப்பட்டது. புகழ் பெற்ற அறிவியலாளர்கள் பலரும் வந்து திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். ஆந்திர முதல்வர் என்டிஆரும் கலந்து கொண்டார். மக்கள் ஆர்வமாக வந்து கண்காட்சியைப் பார்த்து கொண்டாடினர் என்றே சொல்ல வேண்டும். இதை தொடர்ந்து நடத்துவதற்கு மாணவர்கள், அரசு-தனியார் ஊழியர்கள், குடும்பப் பெண்கள் என 700க்கும் மேற்பட்டோர் தன்னார்வலர்களாக தொண்டாற்ற முன்வந்தனர். அவர்களை நேர்காணல் செய்து சில நூறு பேரை தெரிவு செய்து, முறையான பயிற்சி அளித்து பயன்படுத்தினோம். அறிவியல் கண்ணோட்டம் தந்து மக்களை மூட நம்பிக்கைகளிலிருந்து மீட்க வேண்டிய ஆட்சியாளர்களோ, இன்று, பிற்போக்கு சாதி-மத மோதல்களைத் தூண்டி மக்களைக் கூறு போட்டு படுகொலைகளைச் செய்கின்றனர்!


படிக்க : பாசிச எதிர்ப்புப் போராளி நிகோலா வாப்சரோவ்–வை நினைவு கூர்வோம்!


அறிவியல் முறை பற்றிய இந்தக் கண்காட்சியை இந்திய அரசாங்கத்தின் ஃபிலிம்ஸ் டிவிசன் 35mm திரைப்படமாக எடுத்து, 1980களின் இறுதியில் வெளியிடப்பட்டது. அது வீடியோவாகவும் வெளிவந்தது. இதே ஃப்லிம்ஸ் டிவிசன் இக் கண்காட்சியை ஒரு குறும்படமாகவும் எடுத்து வெளியிட்டது. நாடு முழுவதும் 700க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இக் குறும்படம் 1980 களின் இறுதியில் திரையிடப்பட்டது.

***

அறிவியல் கண்ணோட்டத்தை மக்களிடம் உருவாக்க வேண்டும் என 1970களிலேயே போராடிய அறிவியலாளர் புஷ்ப மித்ர பர்கவா போன்றவர்கள் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? 1977 கூட்டணி மந்திரி சபையில் இடம் பெற்ற உடனே பாஜக-வும் ஆர்.எஸ்.எஸ். கும்பலும் தங்களின் இந்துத்துவா அஜண்டாவைத் துவங்கி விட்டனர் என்பது மேற்கூறிய சம்பவத்திலிருந்து தெரிய வருகிறது. இந்த பார்ப்பன பாசிச கும்பல் ஏன் இந்த அளவு வெறி பிடித்து அலைந்தது என்பது பற்றி சயன்ஸ் இதழ் கட்டுரை மூலம் தெரிய வருகிறது. சாய்பாபா போன்ற மோசடி நபர்களை அறிவியல் கண்ணோட்டம் கேள்வி கேட்க வைக்கிறது.

சாமியார்கள், சாதுக்கள், வேதங்கள், ஜோதிடங்கள் எல்லாம் கேள்வி கேட்கக் கூடாதவை என பார்ப்பன பாசிசம் கட்டமைக்கிறது. ஆனால் எதையும் ஏன், எதற்கு, எப்படி என கேள்வி கேட்கச் சொல்கிறது அறிவியல் கண்ணோட்டம். தவிர அறிவியலின் வரலாறு பகுதியில் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் படங்கள் வைத்து அறிவியல் கோட்பாடுகளை சமூக மாற்றங்களுக்கும் பொருளாதார திட்டங்களுக்கும் பயன்படுத்தியவர்கள் என விளக்கப்பட்டிருந்தது என சயன்ஸ் இதழ் கட்டுரை குறிப்பிடுகிறது.

பார்ப்பன பாசிச கும்பல் வெறியாட்டம் போட இவை போதாதா? இந்த பார்ப்பன பாசிச கும்பலை வீழ்த்தி, நாம் என்றைக்கு அரசியல் சட்டம் குறிப்பிடும் அறிவியல் கண்ணோட்டத்தை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கப் போராடப் போகிறோம்? அந்த நாள் தான் பர்கவா போன்ற அறிவியலாளர்களை உண்மையாக நாம் நினைவு கூறும் நாளாகும்!

(முற்றும்)

(Angel, Devil and Science என்ற புஷ்ப மித்ர பர்கவா எழுதிய புத்தகத்தை தழுவி எழுதிய சுருக்கமான கட்டுரை.)


நாகராசு

சனாதனதுக்கு எதிராக பேசினால் துப்பாக்கி குண்டுகள் பாயும்; மிரட்டும் ஆர் (எஸ்.எஸ்) என். ரவி..!

கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். இல்லை இல்லை ஆர்.எஸ்.எஸ் ரவி கலந்துகொண்டார்.

இந்தியாவில் ஆளும் அரசுக்கு எதிராக துப்பாக்கியை பயன்படுத்துவோருக்கு துப்பாக்கியால் தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார். அதாவது வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் சில குழுக்கள் தங்களது வாழ்க்கை மற்றும் உரிமையை மறுக்கும் இந்த அரசுக்கு எதிராக ஆயுதந்தாங்கி போராடி வருகிறன்றனர். இந்த குழுக்களையும் நக்சலைட் மவோயிஸ்டுகளையும் துப்பாக்கி கொண்டு அடக்குவோம் என்று அவர் பேசியுள்ளார்.

இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்காக காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் உழைக்கும் மக்களை இந்திய ராணுவ அடியாள்படை கொன்று குவித்து வருகிறது. அங்கு இருக்கும் சிறப்பு ராணுவ ஆயுத சட்டத்தை பயன்படுத்தி கொண்டு பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சொல்லிமாளாத பல்வேறு கொடுமைகளை செய்து வருவதை தனது வாடிக்கையான தொழிலாக இந்திய ராணுவத்தினர் வைத்துள்ளனர். ஆயுதம் காட்டி அடக்குமுறை செய்யும் இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு எதிராகதான் அந்த குழுக்கள் ஆயுதம் தாங்கி போராடி வருகிறது. அதுபோல் உழைக்கும் மக்களின் விடியலுக்காவும் இந்திய அரசின் அடக்குமுறை மற்றும் இயற்கை கொள்ளைக்கும் எதிராக ஆயுதம் தாங்கி போராடி வருகிறார்கள் நக்சலைட்கள் மற்றும் மாவோயிஸ்டுகள். ஆயுதம் தாங்கிய தனது போராட்டத்தின் மூலம் இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று நோக்கத்தில் செயல்படும் அவர்களை கொன்று ஒழிப்பதுதான் தீர்வு என்ற பொருளில் பேசியுள்ளார் இந்த ஆர் எஸ் எஸ் உளவாளி.

ஆனால் பீமாகொரேன்கான், மாலேகான் கலவரம், கோத்ரா ரயில் எரிப்பு, குஜராத் கலவரம், ஜாகின்பாக் கலவரம், பாபர் மசூதி இடிப்பு போன்றவற்றை நடத்திக்காட்டிய இந்துத்துவ ஆயுதந்தாங்கிய பயங்கரவாத கும்பல்களுக்கு அவர்கள் சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்பு தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் அனைவரும் இந்தியாவில் இந்துராஷ்டிரம் அமைக்க போராடுபவர்கள். அதனால் அவர்களை ஊக்குவித்து சட்டப்பாதுகாப்பும் அளிப்பதுதான் இந்த அரசின் நோக்கம்.

‘பாசிச படையெடுப்பின் கை தேர்ந்த உளவாளி’ ஆர்.என். ரவி !

தொடர்ந்து பேசிய அவர், ’’தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடுக்கு எதிராக பேசுபவர்களுடன் பேச்சுவார்த்தை அவசியமில்லை” என்று கூறியுள்ளார். அதாவது நாம் ஆயுதம் தாங்கி போராடவில்லை என்றாலும் கூட அரசின் அக்கப்போர்கள், அடக்குமுறைகள், உரிமை பறிப்பு மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக பேசினால் கூட ஆளும் வர்க்கத்தின் துப்பாக்கி நம்மை நோக்கி பாயும். அது ராணுவத்தின் துப்பாக்கியாக கூட இருக்கலாம் அல்லது கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்ற முற்போக்கு அறிவு ஜீவிகளை கொன்ற ஆர் எஸ் எஸ் அமைத்து இருக்கும் நிழல் ராணுவத்தின் துப்பாக்கி குண்டாக கூடா இருக்கலாம்.

மேலும் அவர் தேச ஒருமைப்பாடு என்று கூறுவது தற்போது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இருக்கும் ஒருமைப்பாடு அல்ல என்றும் அவர்கள் இந்தியாவில் மிகவேகமாக நடைமுறைபடுத்தி வரும் இந்து ராஷ்டிரத்தின் ஒருமைப்பாடுதான் என்று அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசியதிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.

ரவி தொடர்ந்து இப்படி பேசுவது என்பது அவர் ஏற்றுக்கொண்ட இந்துத்துவ சனாதன சித்தாந்தத்தின் அடைப்படியில் தான். அவருக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அதுதான் அகண்ட பாரத்தத்தில் இந்துராஷ்டிரா அமைப்பது. அந்த இந்து ராஷ்டிராவில் சனாதன தர்மம் சட்டமாக இருக்கும். அதற்கான பணிகளை அடித்தளத்தில் அவர்களது அடியாட்படை செய்து கொண்டு இருக்கும்போது அதை வெளிக்கூறும் நபராக தான் ரவி இருக்கிறார்.

ஏற்கனவே, சென்னை வானகரத்தில் உள்ள சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய ஆர்.என்.ரவி, ‘பாரதம் என்பது சனாதன தர்மத்தால் உருவாக்கப்பட்டது. மரத்தில் உள்ள இலைகள், கிளைகள் ஆகியவற்றைப் போல நமது எண்ணங்களும் செயல்பாடுகளும் கொள்கைகளும் மாறுபடலாம். வேற்றுமையில் ஒற்றுமையைப் போன்று பரமேஸ்வரா என்பது ஒன்றே என சனாதனம் கூறுகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதைத்தான் சனாதன தர்மமும் கூறுகிறது. நாட்டில் ராணுவம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைப் போல ஆன்மிகத்திலும் வளர்ச்சி என்பது அவசியம். அதுவே இந்தியாவின் வளர்ச்சியாக அமையும்’ எனக் குறிப்பிட்டார்.

ரிஷிகள், முனிவர்கள் மற்றும் சனாதன தர்மத்தின் ஒளியால் இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அரசியலைப்புச் சட்டமானது, சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது. என்று தான் ஏற்றுக்கொண்ட ஆர் எஸ் எஸ் சித்தாந்த கருத்தை வெளிப்படுத்தினார். ஏற்கனவே இருக்கும் சட்டத்தில் சானதன தர்மம் அடங்கி இருப்பதாகவும் அது தேவைக்கு ஏற்றவாறு வளர்ச்சியடைய வேண்டும் என்றும் கூறுகிறார். அதாவது இனிமேல் உருவாக்கப்படும் சட்டங்கள் அனைத்தும் வெளிப்படையாக சனாதன தர்மத்தின் அடிப்படையில் இருக்கும் என்றும் இலைமறைக்காயாக எடுத்து இயம்புகிறார். தற்போது பாசிச மோடி அரசால் இயற்றப்பட்ட பல்வேறு சட்டங்கள் இந்து ராஷ்டிரத்தை கட்டமைக்கும் வகையில் தான் உள்ளன. உபா சட்ட திருத்தம், பசுவதை தடை சட்டம், மதமாற்ற தடை சட்டம், மாட்டுக்கறி உண்ண தடை, லவ் ஜிகாத, கலால் ஜிகாத் என்று பல்வேறு செயல்பாடுகளை நாம் கூறலாம். இதுதான் தற்போது இருக்கும் இந்திய தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு. இதற்கு எதிராக யார் பேசினாலும் துப்பாக்கி குண்டுகள் பாயும். அது அமைப்பாக இருந்தாலும் தனி நபராக இருந்தாலும் சரி. இந்துத்துவ துப்பாக்கிகுண்டுகள் நம் உடலில் பாய்ந்தே தீரும் என்றும் திருவாளர் தமிழக ஆளுநர் கூறுகிறார்.

இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் !

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுந‌ர், திரு.ஆர்.என்.ரவி, அவர்கள் சென்னை ஸ்ரீ  ராம் சமாஜத்தில் ராம நவமி விழாவை தொடங்கி வைத்து, இன்றைய மிக முக்கிய காலத்தில் நம் நாடு அனைவரின் வளர்ச்சியையும் உள்ளடக்கி ராமராஜ்யத்தை நோக்கி முன்னேறி வருவதை விளக்கினார் என்று கூறப்பட்டிருந்தது. இதுபோன்ற கருத்துகள் மற்றும் ஒன்றிய அரசின் செயல்பாடுகள், இந்துத்துவ காலிகளின் களியாட்டங்கள் ஆகியவை இந்தியாவில் இந்துராஷ்டிரம் கட்டமைக்கப்பட்டு மிக தீவிரமாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது என்பது நன்கு புலனாகிறது.

ரவி தமிழக ஆளுநராக பதவியேற்றது முதல் அவர் செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் வெறும் மாநில அரசின் உரிமை பறிப்பு மட்டும் அல்ல. அது அகண்ட பாரதத்திற்கான அடித்தளம். தற்போது இந்த இந்துராஷ்டிரத்திரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விரைவில் ஆர் எஸ் எஸ், பாஜக அறிவிக்கும் இது இந்து ரஷ்டிரம் என்று. அந்த அறிவிப்பு 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகோ அல்லது முன்பாக கூட இருக்கலாம். அறிவிப்புக்காக மட்டும்தான் காத்து இருக்கிறது. தற்போது நம்மை ஆளும் இந்த இந்து ராஷ்டிரா.

மூச்சுவிட நேரம் தரும் என்று ’’இடைவெளியும்’’ அவர்களின் இளவல்களும் எடுத்து கூறிய, எந்த முன்னேற்ற கழகங்களும் நம்மை இந்த இந்துத்துவ அதானி அம்பானி பாசிசத்தில் இருந்து காத்துவிடாது. நாம் களம் புகாதவரை இந்த பாசிசத்தையும் வீழ்த்த முடியாது.

ராவண வடிவேல்

ஆர்.எஸ்.எஸ்-.பி.ஜே.பி, அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம்! சிறப்பு வெளியீடு!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

வரும் செப்டம்பர்17-ஆம் தேதி சென்னையில் ஆர்.எஸ்.எஸ்-.பி.ஜே.பி, அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம் என்ற முழக்கத்தின் அடிப்படையில், முற்போக்கு ஜனநாயக சக்திகளை அணிதிரட்டி நாம் மாநாடு நடத்தவிருக்கிறோம். இம்மாநாடு தொடர்பான அறிவிப்பு மற்றும் மாநாட்டிற்கான துண்டறிக்கையை நம் இணையத்தில் வெளியிட்டுள்ளோம்.

மாநாடு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அரசியல் கட்சி தலைவர்கள் & அமைப்புகளிடம் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் சார்பில் துண்டறிக்கை வினியோகம் செய்யப்பட்டது.

மக்கள் அதிகாரத்தின் சார்பில் சென்னையில் நடக்கும் மாநாட்டின் பிரசுரம் மற்றும் சிறப்பு வெளியீடு விடுதலை சிறுத்தைகளின் தலைவர்.தொல். திருமாவளவன் அவர்களிடத்தில் வழங்கப்பட்டது.
மக்கள் அதிகாரத்தின் சார்பில் சென்னையில் நடக்கும் மாநாட்டின் பிரசுரம் மற்றும் சிறப்பு வெளியீடு CPI(M) மாநில செயற்குழு உறுப்பினர் தோழர்.கனகராஜ் அவர்களிடத்தில் வழங்கப்பட்டது.
மக்கள் அதிகாரத்தின் சார்பில் சென்னையில் நடக்கும் மாநாட்டின் பிரசுரம் மற்றும் சிறப்பு வெளியீடு தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் தோழர்.பொழிலன் அவர்களிடத்தில் வழங்கப்பட்டது.
மக்கள் அதிகாரத்தின் சார்பில் சென்னையில் நடக்கும் மாநாட்டின் பிரசுரம் மற்றும் சிறப்பு வெளியீடு தமிழ்தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் மகிழன் அவர்களிடத்தில் வழங்கப்பட்டது

ற்போது மாநாடு தொடர்பான மைய முழக்கத்தின் அடிப்படையில், இந்த மைய இயக்கம் தொடர்பாக விரிவாக விளக்கும் வகையில், வெளியீடு ஒன்றை அச்சிட்டு வெளியிட்டுள்ளோம்! படியுங்கள்! பரப்புங்கள்!

வெளியீடு நன்கொடை : ரூ.10

இந்த வெளியீட்டை வாங்கி படித்து ஆதரவு அளிக்குமாறு, கேட்டுக்கொள்கிறோம்.

சுவரெழுத்து விளம்பரம்:

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை
தொடர்புக்கு :- 97916 53200, 94448 36642, 73974 04242, 99623 66321.

மாநாட்டில் கலந்து கொண்டு பாசிசத்தை வீழ்த்தும் பணியில் இணைந்து செயல்பட அறைக்கூவி அழைக்கிறோம். நன்றி!

திரைவிமர்சனம்: சூரரைப் போற்ற முடியாது – பாகம் 1 | சு.விஜயபாஸ்கர்

சூரரைப் போற்ற முடியாது – பாகம் 1

சூர்யா நடித்த சூரரைப்போற்று என்ற ஒரு திரைப்படம் அண்மையில் அமேசான் இணையதளத்தில் நேரடியாக வெளிவந்து பரவலான விவாதங்களை கிளப்பியது. அந்தப் படத்தை இயக்கியவர் மணிரத்னத்திடம் துணை இயக்குனராக பயிற்சி பெற்ற சுதா கொங்கரா என்ற பெண். 2000 ஆண்டுகளில் ஏர் டெக்கான் என்ற விமான போக்குவரத்து நிறுவனத்தை நிறுவி, நடத்திய கர்நாடகாவைச் சேர்ந்த பார்ப்பனர் கேப்டன் கோபிநாத் என்பவர்தான் இந்தப்படத்தில் வரும் சூரர்.

ஒரு புத்தகத்தையோ அல்லது ஒருவரது வாழ்க்கையையோ தழுவி எடுக்கப்படும் படங்கள் உண்மை கதைக்கு மிக நெருக்கத்தில் இருப்பதுதான் நியாயம், அவ்வாறின்றி படத்தின் விளம்பரத்திற்காக சில வணிக விடயங்களை சேர்த்துக் கொண்டாலும் நாம் அதை விமர்சிக்கப் போவதில்லை. ஆனால் நிஜக்கதைக்கும், உண்மைக்கும் தொடர்பில்லாத விடயங்களை மக்கள் மத்தியில், மக்களின் மூளைகளில் ஏற்றும்போது அதை விமர்சிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படுகிறது.

விமான் நிறுவனம் தொடங்கினாரா, விமானம் பறந்ததா இல்லையா என்பதே சூரரைப்போற்று திரைப்படத்தின் கதைக்களமாக இருந்தாலும், விமான நிறுவனம் தொடங்க சொல்லும் காரணமாக ”Not only cost barrier, break the damn caste barrier” எனச் சொல்லுவதாக எடுத்துக்கொள்ளலாம். அதாவது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் ஜாதிய ஏற்றத்தாழ்வுகளையும் ஒழிக்கவே விமானப் போக்குவரத்து நிறுவனத்தை தொடங்க விரும்புகிறார் நாயகன்.

திரைப்படத்தில் விமான நிறுவன விமான போக்குவரத்து நிறுவனத்தை துவங்கும் சூர்யா, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், சாதிய ஏற்றத் தாழ்வுகளையும் கடந்து அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் விமானப் போக்குவரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிறார்.


படிக்க : விக்ரம்  திரைப்பட வசூல் : மக்கள் அளித்த பணம் கவர்ச்சிக்கா? கருத்துக்கா?


பணக்காரர்களுக்கும் உயர் ஜாதியினருக்கு மட்டுமானது அல்ல விமானப் போக்குவரத்து, மாறாக ஏழைகளுக்கும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமத்து, விவசாய மக்களுக்கும் விமானம், பறக்க வேண்டும் என்கிறார் கதாநாயகன். கருப்புச்சட்டை அணிந்து சுயமரியாதை திருமணம் நடத்துகிறார். தங்களது ஊரில் நிற்காத ரயிலை மறித்து போராட்டம் எதிர்த்து போராட்டம் நடத்துகிறார் கதா நாயகன்.
மாறன் என்ற திராவிட இயக்க, தனித்தமிழ் பெயரையும் கதையின் நாயகனுக்கு சூட்டியுள்ளனர். பெரியார் படத்தையும் அங்காங்கே காட்டியுள்ளனர். பெரு நிறுவனங்களை விமர்சிக்கும் வகையிலான சில விமர்சனங்களையும் சேர்த்துள்ளனர்.
சாதியை விமர்சிக்கும் வசனங்களையும் ஆங்காங்கே தூவி விட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் பின்தங்கிய கிராமத்தில் இருந்து, பிறந்து வளர்ந்த, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் விமான நிறுவனத்தை தொடங்கியதாக காட்டுகிறார்கள்.

மேற்சொன்ன படத்தில் காட்டப்பட்ட மேற்சொன்ன கதைக்கும் கோபிநாத்தின் உண்மை கதைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கோபிநாத் கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த அய்யங்கார் ஜாதியை சேர்ந்தவர்.

ஏன் இப்படி உண்மைக்கு தொடர்பில்லாத வகையில் கதாபாத்திரத்தை வடிவமைக்க வேண்டும்? காரணங்கள் பல.

அகரம் அறக்கட்டளை, நீட் விஷயத்தில் சூர்யாவின் கண்டன அறிக்கை, அவரது மனைவி ஜோதிகாவின் சமீபத்திய ”கோயில்கள் தேவையில்லை, மருத்துவமனைகள் தேவை” என்ற பேச்சு ஆகியவை சூர்யாவுக்கு அண்மைக்காலத்தில் ஒரு முற்போக்கு பாத்திரத்தை தந்துள்ளன.

தமிழ்நாட்டில் எடுக்கப்படும் கதை என்பதாலும், படத்தைப் பார்ப்பவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்க அல்லது அதற்கும் கீழான பொருளாதார பார்க்க பின்னணியில் இருப்பவர்கள் என்பதாலும், தொழில் முனைவோர் கனவில் இருப்போர் என்பதாலும், விமானத்தில் ஒருமுறையாவது பறந்து விட மாட்டோமா என்ற ஏக்கத்தில் இருக்கும் ஒரு பெருங்கூட்டம், நாமும் பெரு முதலாளி ஆகிவிடுமோ நாம் விட மாட்டோமா என்ற கற்பனையில் இருக்கும் சிறு-குறு முதலாளிகள் போன்றோரை குறி வைத்தும்,
பார்ப்பன எதிர்ப்பிற்கு தமிழ்நாட்டில் உள்ள ஆதரவு என்ற பல காரணிகளை இணைத்து, எடுக்கப்பட்ட திரைப்படம் சூரரைப் போற்று.

கோபிநாத்தின் ஒரிஜினல் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட படத்தில் சொல்லப்பட்டுள்ள கதைக்கும் கோபிநாத்தின் ஒரிஜினல் கதைக்கும் தொடர்பே இல்லை.

யார் அந்த உண்மையான கோபிநாத்?

1990-களின் தொடக்கத்தில் இந்தியாவில் வணிக சந்தை தனியாருக்கு வரம்பின்றி திறந்துவிடப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு துறைகள் முழுமையாக தனியாரின் கட்டுப்பாட்டில் வந்தன. கருப்பட்டி மிட்டாயை ஈ மொய்ப்பது போல், 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட இந்தியாவை கார்ப்பரேட்களும், முதலாளித்துவ நிறுவனங்களும் மொய்த்தனர். அவற்றில் ஒரு வகை விமான போக்குவரத்து நிறுவனங்கள்.

பொதுத்துறை நிறுவனங்களான ஏர் இந்தியாவும் இந்தியன் ஏர்லைன்ஸ் மட்டுமே விமான சேவை வழங்கி வந்த நிலையில், இந்தியாவை உய்விக்க ”தனியார்மயம், தாராளமயம், உலகமயம்” வந்தால்தான் முடியும் என்ற முதலாளித்துவ திட்டத்தின் ஒரு பகுதிதான் தனியார் விமான சேவை நிறுவனங்கள். ஜெட் ஏர்வேஸ், பரமௌண்ட், பைஸ்ஜெட், இண்டிகோ, கிங்ஃபிஷர், என பற்பல தனியார் விமான நிறுவனங்கள் புற்றீசல் போல் முளைத்தன.

சில காலம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த கோபிநாத்துக்கு தொழில் முனைவர் ஆகும் ஆசை வந்தது எட்டு ஆண்டுகளில் ராணுவத்தை விட்டு விலகி, பட்டுப்பூச்சி பண்ணை, வாகன விற்பனை, ஹோட்டல் என பல சிறு சிறு தொழில்களை முயன்ற கோபிநாத்துக்கு இலக்கு பெரும் முதலாளியாக மாறுவது. அதன் நுழைவு வாயிலாக விமான போக்குவரத்து தொழிலை தேர்ந்தெடுத்தார் கோபிநாத். 1997 ஆம் ஆண்டில் தனது நண்பருடன் நண்பர் சாமுவேல் உடன் இணைந்து டெக்கான் ஏவியேஷன் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார் சாமுவேல் ஓர் தொழில்முறை விமானி. அவர்கள் இணைந்து தொடங்கிய டெக்கான் ஏவியேஷன் ஆரம்பத்தில் தனி நபர்களுக்கான விமான சேவை எனப்படும் ”சார்ட்டர் விமான சேவையை” வழங்கியது. அரசியல்வாதிகளும் கொழுத்த பணக்காரர்களும் கோபிநாத்தின் வாடிக்கையாளர்கள். சிறு குறு தொழில்களை செய்து வந்த கோபிநாத் இப்போது நடுத்தர முதலாளி ஆகிவிட்டார். ஆனால் முதலீட்டும் எண்ணம் அத்தோடு நின்று விடுமா?

கேட்பாரின்றி இறந்து கிடந்த இந்திய சந்தையும் நூறு கோடி மக்களும் கோபிநாத் கோபிநாத் பெரு முதலாளி கனவிற்கு தூண்டில் போட்டன. அதன் விளைவாக அரசியல்வாதிகளுக்கும், கொழுத்த பணக்காரர்களுக்கு மட்டுமே பறந்த டெக்கான் ஏவியேஷன், ஏர் டெக்கான் ஆக உருமாறி அனைத்து தரப்பு மக்களுக்குமான பொதுப் போக்குவரத்து விமான நிறுவனமாக பறந்தது. 2003இல் உருவெடுத்த ஏர் டெக்கானை, விளம்பரப்படுத்தி, பெரிய அளவில் சந்தை படுத்துவது எப்படி என முதலாளி கோபிநாத் சிந்திக்காமல் இருப்பாரா? சந்தை படுத்தாமல் எப்படி பெரு முதலாளி ஆவது?

உலகெங்கும் இன்று வரை பயணிகள் விமான போக்குவரத்து தொழில் முதலாளிகளுக்கு கொள்ளை லாபத்தை ஈட்டித் தரவில்லை. மிகக் குறைந்த நிறுவனங்களே லாபத்தில் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

தொழிற்போட்டி, ஏர்பஸ், போயிங் என்ற இரு நிறுவனங்களின் ஏகபோக உரிமையில் உள்ள விமானத் தயாரிப்பு, சர்வதேச சட்டங்கள், விதிமுறைகள், எரிபொருள் செலவு, விமான நிலையங்களுக்கு தர வேண்டிய கட்டணம் போன்ற பல்வேறு காரணிகளால் பல விமான நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன அல்லது நட்டத்தில் இயங்குகின்றன.


படிக்க : முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் !


லாபத்தில் பல்லிளிக்கவும், கும்மாளம் போடவும் எந்த முதலாளிக்கும் கசக்காது. ஆனால் நட்டத்தை பொறுப்பேற்க எந்த முதலாளி முன் வருவார்? குறைவான லாபம் அல்லது நட்டம் என்ற அளவில் இயங்கி வரும் விமான போக்குவரத்து நிறுவனங்கள் தங்கள் நட்டத்தை, அதாவது செலவுகளை குறைத்து, லாபத்தை அதிகரிக்க, கையிலெடுத்த யுத்தி No Frill Service, அதாவது எவ்வகையிலாவது விமானத்தை இயக்கும் செலவைக் குறைப்பது தான் இந்த மாடல்.

விமான வடிவமைப்பை மாற்றுவது, இருக்கைகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை குறைத்து அதிக இருக்கைகளை வடிவமைப்பது, பயணிகளுக்கு வழமையாக பயணச் சீட்டோடு வழங்கி வந்த உணவுப்பொருட்கள், மது போன்றவற்றை தனியாக பணம் பெற்று வழங்குதல்,
குறைந்த அளவிலான தொழிலாளர்களைப் பணியமர்த்துதல், முடிந்த அளவு குறைவான ஊதியம் வழங்குதல், டிக்கெட்டுகளை நேரடியாக விற்றல் என முடிந்த வகையில் செலவுகளை குறைத்து லாபத்தை கூட்டும் முயற்சியில் ஈடுபட்டன. குறைந்த விலையில் டிக்கெட்டுகளை விற்பதின் மூலம், அதிகப் பயணிகளை ஈர்க்க முடியும் என்ற உத்தியும் உண்டு.

Lean and Mean, No Frill, low-cost service என பல பெயர்களில் அறியப்பட்டாலும் குறைந்த செலவில் விமானத்தை இயக்கி அதிக அளவில் பயணிகளை ஈர்த்து, அதிக லாபத்தை ஈட்டுவது தான் விமான நிறுவனங்களில் அடிப்படை நோக்கம். இம்முறையில் அமெரிக்காவைச் சேர்ந்த சவுத் வெஸ்ட் ஏர்வேஸ் , அயர்லாந்தைச் சேர்ந்த ரியான் ஏர் போன்ற சில நிறுவனங்கள் மலிவு விலையில் பயண டிக்கெட்டுகளை தந்து அதிக லாபத்தை ஈட்டி வந்தனர், அதைப் பின்பற்றிய கோபிநாத், இந்திய பயணிகள் விமான போக்குவரத்து துறையில் பல செலவு குறைப்பு முறைகளை அறிமுகப்படுத்தினார்.

(தொடரும்…)

சு.விஜயபாஸ்கர்

disclaimer

மக்களிடயே அறிவியல் கண்ணோட்டத்தை உருவாக்க, பார்ப்பன பாசிசத்தை எதிர்த்த புஷ்ப மித்ர பர்கவா! – பாகம் 1

1

குறிப்பு : அறிவியலாளர் புஷ்ப மித்ர பர்கவா 2017-ம் ஆண்டு, ஆகஸ்ட் 1-ம் தேதி நம்மைவிட்டு பிரிந்தார். ஐதராபாத்தில் Centre for Cellular and Molecular Biology என்ற ஒன்றிய அரசின் ஆய்வகத்தை நிறுவி அதன் இயக்குனராக இருந்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய –  சர்வதேசிய கௌரவ பட்டங்களையும் விருதுகளையும், – பத்ம பூஷன், பிரான்ஸ் அதிபரிடமிருந்து லீஜன் தி’ஹானர், தேசிய குடிமகன் விருது உட்பட – வாங்கியவர். ஒன்றிய அரசின் பல துறைகளிலும், தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு உட்பட, ஆலோசகராக இருந்தவர். தனது இறுதி மூச்சு வரை அறிவியல் கண்ணோட்டத்தைப் பரப்பி வந்த பர்கவா, 1975-ம் ஆண்டில் அறிவியல் சிந்தனைகளை உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் மனதில் பதிய வைப்பதற்கு முடிவு செய்து, அறிவியல் கண்காட்சி ஒன்றை நிறுவ வேண்டும் என முனைந்தார். இதற்காக கடுமையாக 2 ஆண்டுகள் உழைத்து டில்லியில் ஒரு நிரந்தர கண்காட்சியையும் அமைத்தார்.

‘எதையும் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று ஏற்காதே! உனக்கு சரி எனப்படும் வரை எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என கேள்வி கேள்’ என கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ் (அடிமைச் சமூகத்தில் ஆண்டையாக வாழ்ந்த இவர் நம்மைப் போன்ற மனிதர்கள் ஏன், எப்படி, எதற்காக அடிமையானார்கள் என்ற கேள்வியைக் கேட்கவே இல்லை என்பது தனியே பரிசீலிக்க வேண்டிய ஒன்று) சொன்னார் அல்லவா, அந்த வழியில் உண்மையான அறிவியல் அறிஞர். அவரது அறிவியல் கண்காட்சியின் இறுதியில், இங்கு சொல்லப்பட்டவை நிரந்தர உண்மைகள் என்று ஏற்காதே, கேள்வி கேள் என்று மனதில் ஆழப் பதியும் வண்ணம் கூறியவர். ஆனால் அந்தக் கண்காட்சி தலைநகர் தில்லியில் அமையவில்லை! ஐதராபாத்தில் அமைந்தது. இன்று பார்ப்பன பாசிச கும்பல் அறிவுத் துறையினரை நரவேட்டையாடி வருகிறதே, அந்தக் கொடுமைகளை அன்றே அனுபவித்தவர் தான் இந்த அறிவியல் அறிஞர் பர்கவா! அது பற்றிய வரலாற்றை (பர்கவா அவர்களே எழுதியதிலிருந்து) இக்கட்டுரை சுருக்கமாகக் கூறுகிறது.

மக்களிடயே அறிவியல் கண்ணோட்டத்தை உருவாக்க, பார்ப்பன பாசிசத்தை எதிர்த்த புஷ்ப மித்ர பர்கவா!

***

அறிவியல் சிந்தனை முறை பற்றிய கண்காட்சியின் வரலாறு

இந்த வரலாறு ரியாஸ் அகமதுவிலிருந்து தொடங்குகிறது. கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சிஇஆர்டி) என்ற அமைப்பின் இயக்குனரான ரியாஸ் அகமது, அலிகார் இசுலாமிய பல்கலைக் கழகத்தின் பௌதிகப் பேராசிரியராக, விஞ்ஞானியாக இருந்தவர். என்சிஇஆர்டி இயக்குனர்களிலேயே மிகவும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டவர் இவர். வாழ்நாள் முழுதும் பகுத்தறிவாளராகவும் தேசியவாதியாகவும் வாழ்ந்தவர். இன்று நாடு முழுதும் உள்ள 10+2+3 கல்வி முறையை ஏற்படுத்தியவர். அதே போல உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும் வொகேசனல் கல்வி (ஐடிஐ, டிப்ளமோ என தொழிற்கல்வி), பல்கலைக் கழக கல்வி என இரு துறைகளாகப் பிரித்துப் பயிலும் முறையை உருவாக்கியவர்.

நேருவின் பிறந்த நாளில் தில்லியில் ஆண்டு தோறும் கல்வி கண்காட்சி நடைபெரும். 1975 மே 14 அன்று தில்லி சென்ற போது, ரியாஸ் அகமதுவைச் சென்று சந்தித்தேன். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் கண்ணோட்டம், அறிவியல் முறை பற்றி எழுதி வருகிறீகளே, நீங்கள் தேசிய அறிவியல் கண்காட்சியின் ஒரு அங்கமாக அறிவியல் முறை பற்றிய கண்காட்சியை ஏன் நிறுவ முன்வரக் கூடாது என என்னிடம் கேள்வி எழுப்பினார். இதைச் செய்ய ஏற்றுக் கொண்டால் என்சிஇஆர்டி பொருளாதார ரீதியாக உதவும் எனக் கூறினார்.

அறிவுப்பூர்வமாக சவாலானதாக இருந்ததால், இந்த யோசனை என்னைக் கவர்ந்தது. அறிவியல் முறை என்பது பற்றி கருத்து ரீதியாகவும் அறிவியல் நிபுனத்துவம் கொண்டவர்களுக்குப் புரியும் படியும் விளக்கி வந்த அறிவியல் முறை பற்றி, இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை புரிந்து கொள்ளும்படியாக, காட்சி வடிவில் ஒரு கண்காட்சியை நிறுவுவது என்பது உயர்ந்த மட்டத்திலான படைப்பாற்றலைக் கோருகின்ற ஒன்று. இதனாலேயே ரியாஸ் அகமதுவின் அழைப்பை நான் ஏற்றுக் கொண்டேன்.

ஐதராபாத் திரும்பிய உடனே ஒரு நாள் இரவு முழுதும் விழித்திருந்து, 50 பக்கங்களில் ஒரு திட்டத்தை அந்த இரவே எழுதித் தயாரித்தேன். அடுத்த சில நாட்கள் திட்டத்தில் எழுதியுள்ளதை காட்சிப் படுத்த ஆடியோ-வீடியோ காட்சிகள் என்னென்ன தேவைப்படும், நேரடியான பரிசோதனைகள் என்னென்ன செய்வது என தோராயமாக எழுதினேன். நான் என்ன எழுதியுள்ளேனோ அது கண்காட்சியை ஆதிக்கம் செய்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த திட்டமும் ஆடியோ-வீடியோ காட்சிகளும் (நேரடி பரிசோதனைகள், செய்முறை விளக்கங்கள் உட்பட) பல மாற்றங்களுக்கு ஆளானது. ஆனால் முதல் ஓரிரு நாட்களில் முடிவு செய்த அடிப்படையான திட்டங்கள் எந்த மாற்றமுமின்றி கடைசிவரை நின்று நீடித்தது.


படிக்க : பார்ப்பனியத்தை ஏற்காத அறிவியலாளர் புஷ்ப மித்ரா பர்கவா மறைவு


அடுத்ததாக கண்காட்சிக்கு தேவையானவற்றைத் தயாரிக்க ஐதராபாத்தில் உள்ள துறை சார்ந்த வல்லுனர்கள் 11 பேரிடம் பேசியதில் அனைவரும் இதில் பங்கேற்க ஆர்வமுடன் இசைந்தனர். முதல் கூட்டம் எனது (பர்கவா) வீட்டில் நள்ளிரவு வரை உற்சாகமாக நடந்தது. அன்றைக்கு இளம் வயதினராக இருந்த அந்த வல்லுனர்கள், இன்றைக்கு அவரவர் துறைகளில் பல்வேறு சாதனைகள் புரிந்து அறிவியல் உலகில் மட்டுமல்ல பொதுவில் நன்கு அறிமுகமானவர்களாக உள்ளனர். இந்தக் கண்காட்சி வேலைகள் என்னை எப்படி மாற்றியதோ, அதே போல அவர்கள் வாழ்விலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

என்சிஇஆர்டி தரும் பணம் கண்காட்சி வேலைகளுக்குப் போதுமானதாக இருக்காது என்பதை உணர்ந்தேன். இந்தக் கண்காட்சி அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்றால், தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமான ஒன்றாக நிறுவப்பட வேண்டும் என அனைவருமே விவாதித்து முடிவுக்கு வந்தோம். இந்த இரு முடிவுகள் பற்றி என்சிஇஆர்டி-யிலும் அதன் இயக்குனர் ரியாஸ் அகமதுவிடமும் பேசி ஒப்புதல் பெற்றோம்.

நிதிக்காக விஎஸ்டி தொழிற்சாலைகளின் தலைவர் ஆன்ந்த்லால் என்பவரை அணுகினேன். அவர் உடனடியாகவே ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார். இவர் நிதி தரவில்லை என்றால் இந்தக் கண்காட்சியே உருவாகியிருக்காது. (இன்றைய பிஜேபி ஆட்சி அன்று இருந்திருந்தால் இந்த திட்டமே உருவாகியிருக்காது. ஒரு வேளை தொடங்கியிருந்தால் ஆன்ந்த்லாலிடம் பணம் வாங்கி மோசடி செய்துவிட்டார் என பர்கவா மீது குற்றம் சாட்டி சிறையிலடைத்து, சாகும்வரை கம்பி எண்ணிக் கொண்டிருந்திருப்பார் என்பதே உண்மை. – நாகராசு). தவிர நான் பணிபுரியும் ஆய்வகமும் நல்ல ஒத்துழைப்பு நல்கி, கண்காட்சி வேலைகள் நடக்க, தனி ஒரு கட்டிடமும் ஒதுக்கித் தந்தது. எனது ஆய்வகம் (Centre for Cellular and Molecular Biology) அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆய்வு மையத்தின் (சிஎஸ்ஐஆர்) கீழ் தனித்து இயங்கும் ஒரு நிறுவனம். இது கடைசிவரை தடையின்றி கண்காட்சியை நிறுவ உதவியது. அன்றைய சிஎஸ்ஐஆர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த நாயுடம்மாவும் முழு ஆதரவு தந்தார்.

இவர்கள் தவிர உலகம் முழுவதிலுமிருந்து தனிநபர்களும், நிறுவனங்களும் அரிதான, மதிப்பு மிக்க பொருட்கள், விவரங்கள், காட்சிப் படுத்த ஆடியோ-வீடியோ கொடுத்து உதவினர். தனிநபர்கள் துறை சார்ந்த வல்லுனர்கள் ஆவர். மேலும் தேசிய ஜியோபிசிகல் ஆய்வுக் கழகம்-ஐதராபாத், மாக்ஸ் முல்லர் பவன்-ஐதராபாத், ஆந்திர பிரதேஷ் விவசாய பல்கலைக் கழகம்-ஐதராபாத். தெற்கு மத்திய ரயில்வே, இந்திய வானிலையியல் துறை-புது தில்லி, பாபா அணு ஆராய்ச்சி மையம்-ட்ராம்பே, இந்துஸ்தான் ஆண்டிபயாடிக்ஸ் லிட்.-பிம்ப்ரி, வைரஸ் ஆய்வு மையம்-பூனா, பிரிட்டிஷ் கவுன்சில்-சென்னை, அமெரிக்க தகவல் சேவை-சென்னை,பம்பாய், ராயல் சொசைட்டி-லண்டன், பாஸ்டர் இன்ஸ்டிடூட்-பாரிஸ் போன்ற பல நிறுவனங்களும் உதவின.  பல்வேறு பதிப்பகத்தினர், எழுத்தாளர்களின் நூல்களில் இருந்து விவரங்கள், அரிய புகைப்படங்களை எடுத்துக் கையாண்டோம்.

இந்தக் கண்காட்சியை உருவாக்க சுமார் 2 ஆண்டுகள் ஆனது. 1976 இறுதியில் கண்காட்சி முழு வடிவம் பெற்ற போது, இதைக் காட்சிப் படுத்தவே 5000 சதுர அடிக்கும் மேலான இடம் தேவைப்படுவதோடு, நிர்வாகத்திற்கும் கூடுதலாக இடம் இருந்தால் தான் சிறப்பாக அமையும் என உணர்ந்தோம்! ஐதராபாத்தில் அமைத்தபோது வந்து பார்த்த பலரும், இது நாட்டின் தலைநகரான தில்லியில் நிரந்தரமாக அமைக்கப்படுவதே சிறப்பாக இருக்கும் என்றனர்.

ரியாஸ் அகமது, அன்றைய ஒன்றிய கல்வி அமைச்சர் நூருல் ஹாசன் இருவருமே கண்காட்சி நிரந்தரமானதாக நிறுவப்பட வேண்டும் என முழு மனதோடு ஏற்றுக் கொண்டனர். தில்லி கோட்லா மார்க்கில் உள்ள பால பவன் வளாகத்தில் உள்ள போலிஷ் பெவிலியன் இதற்கு ஏற்ற இடம் என தெரிவு செய்தனர். அது தனியாக உள்ள கட்டிடம். கண்காட்சி தனித்துவமாக விளங்கும் என முடிவானது.

கண்காட்சி அமைக்கும் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். என்சிஇஆர்டி-யின் அறிவியல் பிரிவு தலைமையில் இருந்த அதிந்திர போஸ், என்னுடன் லக்னௌ பல்கலைக் கழகத்தில் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பில் 1942-1946ல் ஒன்றாகப் படித்தவர். என்சிஇஆர்டி-யில் ஒரு பாடப் புத்தகம் எழுதுகையில் நெருங்கிப் பழக வேண்டியது வந்தது. லேனிங் சயின்ஸ்-பார்ட் 1 (Learning Science-Part 1) என்ற 6ம் வகுப்புக்கான அறிவியல் பாட நூல் எழுதும் அமர்வில் நானும் இருந்தேன். (இந்த நூல்தான் 6ம் வகுப்பு அறிவியல் நூலாக பல ஆண்டுகள் இருந்தது.) இது பல வழிகளிலும் மரபான நூலிலிருந்து மாறி இருந்தது. தீவிர வலதுசாரி சிந்தனை கொண்ட போஸ் நூலை எழுதும் போது நிறைய சிக்கல்களை ஏற்படுத்தினார். அதையெல்லாம் கடந்து வந்தோம். ஆனால் அறிவியல் கண்ணோட்டத்துடன் அறிவியல் முறை பற்றிய கண்காட்சி அமைக்கும் எங்களின் அறிவியல் பற்றிய சிந்தனை, போசின் சிந்தனை முறைக்கு முற்றிலும் நேர் எதிரானதாக இருந்தது.


படிக்க : வரலாற்றுப் பார்வையில் E = mc2 – வீடியோவும் விளக்கமும்


கண்காட்சிக்கான பொருட்கள் தில்லி பாலபவனுக்கு ஐதராபாத்திலிருந்து கொண்டுவரப்பட்டன. ஒரு குட்ஸ் ரயில் பெட்டி நிறைய எடுத்து வந்தது மட்டுமின்றி நாங்களும் கைகளில் கணிசமாக கொண்டுவர வேண்டியதாகியது. 1977 பிப்ரவரி 6 – 17க்குள் எல்லா பொருட்களும் வந்து சேர்ந்தன. இதற்கான செலவுகள் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமானது. தவிர வேலை செய்தவர்களுக்கான கூலியும் தர வேண்டும். என்சிஇஆர்டி பணம் தந்துவிடும் என்ற தைரியம் இருந்தது. 1977 மார்ச் 7ம் தேதி கல்வி அமைச்சர் நூருல் ஹாசன் சாஸ்திரி பவனுக்கு தேநீர் அருந்த அழைத்தார். எனது தோளில் தட்டிக் கொடுத்து இந்திய அறிவுத்துறை வரலாற்றிலேயே இந்தக் கண்காட்சி ஒரு மைல்கல்லாக இருக்கப் போகிறது எனப் பாராட்டினார்.

நாங்கள் மேலும் உற்சாகம், ஊக்கத்துடன் திறப்பு விழாவிற்கு வேலை செய்தோம். அதைத் திறந்து வைக்க இருந்தவர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள்! அவர் நூருல் ஹாசன், ரியாஸ் அகமது மூலம் மட்டுமின்றி மேலும் பலர் மூலம் கண்காட்சி பற்றித் தெரிந்து கொண்டார். தில்லியில் கண்காட்சியை நிறுவிக் கொண்டிருந்த போது, சிஎஸ்ஐஆர் டைரக்டர் ஜெனரல் மறைந்த நாயுடம்மா, ஐஎஸ்ஆர்ஓ தலைவரும் விண்வெளித் துறை செயலாளருமான மறைந்த சதீஷ் தாவன், யஷ் பால் இன்னும் இது போன்ற எண்ணற்ற பிரபலங்கள் வந்து பார்த்துப் பாராட்டியது எங்களை மேலும் உற்சாகப்படுத்தியது. மார்ச் மத்தியில் கண்காட்சி பற்றி ஏகமாக பலரும் தெரிந்து கொண்டதோடு, அதைக் காணவும் ஆவலாக இருந்தனர்.

நாங்கள் எல்லோரும் பரபரப்பாக இரவு பகல் பாராது வேலை செய்தோம். எங்களுக்கு என்சிஇஆர்டி வளாகத்திலேயே ஒரு வீடும் கொடுத்து விட்டனர். நண்பர்களிடமிருந்து பொருட்களை வாங்கியும் ஐதராபத்திலிருந்து சில கொண்டு வந்தும் அங்கேயே அனைவரும் ஒரு குடும்பமாக சமைத்து சாப்பிட்டோம்! தொடர்ந்து 8 வாரங்கள் கடுமையாக வேலை செய்து மார்ச் 3வது வாரம் கண்காட்சி திறப்பு விழாவிற்குத் தயாராகி விட்டது. கண்காட்சியின் மின் இணைப்பு வயர்கள் மட்டும் பல மைல்கள் நீளம் கொண்டதாக இருந்தது.

(தொடரும்…)

(Angel, Devil and Science என்ற புஷ்ப மித்ர பர்கவா எழுதிய புத்தகத்தை தழுவி எழுதிய சுருக்கமான கட்டுரை.)


நாகராசு