Wednesday, July 30, 2025
முகப்பு பதிவு பக்கம் 157

திரைவிமர்சனம்: சூரரைப் போற்ற முடியாது – பாகம் 1 | சு.விஜயபாஸ்கர்

சூரரைப் போற்ற முடியாது – பாகம் 1

சூர்யா நடித்த சூரரைப்போற்று என்ற ஒரு திரைப்படம் அண்மையில் அமேசான் இணையதளத்தில் நேரடியாக வெளிவந்து பரவலான விவாதங்களை கிளப்பியது. அந்தப் படத்தை இயக்கியவர் மணிரத்னத்திடம் துணை இயக்குனராக பயிற்சி பெற்ற சுதா கொங்கரா என்ற பெண். 2000 ஆண்டுகளில் ஏர் டெக்கான் என்ற விமான போக்குவரத்து நிறுவனத்தை நிறுவி, நடத்திய கர்நாடகாவைச் சேர்ந்த பார்ப்பனர் கேப்டன் கோபிநாத் என்பவர்தான் இந்தப்படத்தில் வரும் சூரர்.

ஒரு புத்தகத்தையோ அல்லது ஒருவரது வாழ்க்கையையோ தழுவி எடுக்கப்படும் படங்கள் உண்மை கதைக்கு மிக நெருக்கத்தில் இருப்பதுதான் நியாயம், அவ்வாறின்றி படத்தின் விளம்பரத்திற்காக சில வணிக விடயங்களை சேர்த்துக் கொண்டாலும் நாம் அதை விமர்சிக்கப் போவதில்லை. ஆனால் நிஜக்கதைக்கும், உண்மைக்கும் தொடர்பில்லாத விடயங்களை மக்கள் மத்தியில், மக்களின் மூளைகளில் ஏற்றும்போது அதை விமர்சிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படுகிறது.

விமான் நிறுவனம் தொடங்கினாரா, விமானம் பறந்ததா இல்லையா என்பதே சூரரைப்போற்று திரைப்படத்தின் கதைக்களமாக இருந்தாலும், விமான நிறுவனம் தொடங்க சொல்லும் காரணமாக ”Not only cost barrier, break the damn caste barrier” எனச் சொல்லுவதாக எடுத்துக்கொள்ளலாம். அதாவது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் ஜாதிய ஏற்றத்தாழ்வுகளையும் ஒழிக்கவே விமானப் போக்குவரத்து நிறுவனத்தை தொடங்க விரும்புகிறார் நாயகன்.

திரைப்படத்தில் விமான நிறுவன விமான போக்குவரத்து நிறுவனத்தை துவங்கும் சூர்யா, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், சாதிய ஏற்றத் தாழ்வுகளையும் கடந்து அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் விமானப் போக்குவரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிறார்.


படிக்க : விக்ரம்  திரைப்பட வசூல் : மக்கள் அளித்த பணம் கவர்ச்சிக்கா? கருத்துக்கா?


பணக்காரர்களுக்கும் உயர் ஜாதியினருக்கு மட்டுமானது அல்ல விமானப் போக்குவரத்து, மாறாக ஏழைகளுக்கும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமத்து, விவசாய மக்களுக்கும் விமானம், பறக்க வேண்டும் என்கிறார் கதாநாயகன். கருப்புச்சட்டை அணிந்து சுயமரியாதை திருமணம் நடத்துகிறார். தங்களது ஊரில் நிற்காத ரயிலை மறித்து போராட்டம் எதிர்த்து போராட்டம் நடத்துகிறார் கதா நாயகன்.
மாறன் என்ற திராவிட இயக்க, தனித்தமிழ் பெயரையும் கதையின் நாயகனுக்கு சூட்டியுள்ளனர். பெரியார் படத்தையும் அங்காங்கே காட்டியுள்ளனர். பெரு நிறுவனங்களை விமர்சிக்கும் வகையிலான சில விமர்சனங்களையும் சேர்த்துள்ளனர்.
சாதியை விமர்சிக்கும் வசனங்களையும் ஆங்காங்கே தூவி விட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் பின்தங்கிய கிராமத்தில் இருந்து, பிறந்து வளர்ந்த, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் விமான நிறுவனத்தை தொடங்கியதாக காட்டுகிறார்கள்.

மேற்சொன்ன படத்தில் காட்டப்பட்ட மேற்சொன்ன கதைக்கும் கோபிநாத்தின் உண்மை கதைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கோபிநாத் கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த அய்யங்கார் ஜாதியை சேர்ந்தவர்.

ஏன் இப்படி உண்மைக்கு தொடர்பில்லாத வகையில் கதாபாத்திரத்தை வடிவமைக்க வேண்டும்? காரணங்கள் பல.

அகரம் அறக்கட்டளை, நீட் விஷயத்தில் சூர்யாவின் கண்டன அறிக்கை, அவரது மனைவி ஜோதிகாவின் சமீபத்திய ”கோயில்கள் தேவையில்லை, மருத்துவமனைகள் தேவை” என்ற பேச்சு ஆகியவை சூர்யாவுக்கு அண்மைக்காலத்தில் ஒரு முற்போக்கு பாத்திரத்தை தந்துள்ளன.

தமிழ்நாட்டில் எடுக்கப்படும் கதை என்பதாலும், படத்தைப் பார்ப்பவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்க அல்லது அதற்கும் கீழான பொருளாதார பார்க்க பின்னணியில் இருப்பவர்கள் என்பதாலும், தொழில் முனைவோர் கனவில் இருப்போர் என்பதாலும், விமானத்தில் ஒருமுறையாவது பறந்து விட மாட்டோமா என்ற ஏக்கத்தில் இருக்கும் ஒரு பெருங்கூட்டம், நாமும் பெரு முதலாளி ஆகிவிடுமோ நாம் விட மாட்டோமா என்ற கற்பனையில் இருக்கும் சிறு-குறு முதலாளிகள் போன்றோரை குறி வைத்தும்,
பார்ப்பன எதிர்ப்பிற்கு தமிழ்நாட்டில் உள்ள ஆதரவு என்ற பல காரணிகளை இணைத்து, எடுக்கப்பட்ட திரைப்படம் சூரரைப் போற்று.

கோபிநாத்தின் ஒரிஜினல் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட படத்தில் சொல்லப்பட்டுள்ள கதைக்கும் கோபிநாத்தின் ஒரிஜினல் கதைக்கும் தொடர்பே இல்லை.

யார் அந்த உண்மையான கோபிநாத்?

1990-களின் தொடக்கத்தில் இந்தியாவில் வணிக சந்தை தனியாருக்கு வரம்பின்றி திறந்துவிடப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு துறைகள் முழுமையாக தனியாரின் கட்டுப்பாட்டில் வந்தன. கருப்பட்டி மிட்டாயை ஈ மொய்ப்பது போல், 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட இந்தியாவை கார்ப்பரேட்களும், முதலாளித்துவ நிறுவனங்களும் மொய்த்தனர். அவற்றில் ஒரு வகை விமான போக்குவரத்து நிறுவனங்கள்.

பொதுத்துறை நிறுவனங்களான ஏர் இந்தியாவும் இந்தியன் ஏர்லைன்ஸ் மட்டுமே விமான சேவை வழங்கி வந்த நிலையில், இந்தியாவை உய்விக்க ”தனியார்மயம், தாராளமயம், உலகமயம்” வந்தால்தான் முடியும் என்ற முதலாளித்துவ திட்டத்தின் ஒரு பகுதிதான் தனியார் விமான சேவை நிறுவனங்கள். ஜெட் ஏர்வேஸ், பரமௌண்ட், பைஸ்ஜெட், இண்டிகோ, கிங்ஃபிஷர், என பற்பல தனியார் விமான நிறுவனங்கள் புற்றீசல் போல் முளைத்தன.

சில காலம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த கோபிநாத்துக்கு தொழில் முனைவர் ஆகும் ஆசை வந்தது எட்டு ஆண்டுகளில் ராணுவத்தை விட்டு விலகி, பட்டுப்பூச்சி பண்ணை, வாகன விற்பனை, ஹோட்டல் என பல சிறு சிறு தொழில்களை முயன்ற கோபிநாத்துக்கு இலக்கு பெரும் முதலாளியாக மாறுவது. அதன் நுழைவு வாயிலாக விமான போக்குவரத்து தொழிலை தேர்ந்தெடுத்தார் கோபிநாத். 1997 ஆம் ஆண்டில் தனது நண்பருடன் நண்பர் சாமுவேல் உடன் இணைந்து டெக்கான் ஏவியேஷன் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார் சாமுவேல் ஓர் தொழில்முறை விமானி. அவர்கள் இணைந்து தொடங்கிய டெக்கான் ஏவியேஷன் ஆரம்பத்தில் தனி நபர்களுக்கான விமான சேவை எனப்படும் ”சார்ட்டர் விமான சேவையை” வழங்கியது. அரசியல்வாதிகளும் கொழுத்த பணக்காரர்களும் கோபிநாத்தின் வாடிக்கையாளர்கள். சிறு குறு தொழில்களை செய்து வந்த கோபிநாத் இப்போது நடுத்தர முதலாளி ஆகிவிட்டார். ஆனால் முதலீட்டும் எண்ணம் அத்தோடு நின்று விடுமா?

கேட்பாரின்றி இறந்து கிடந்த இந்திய சந்தையும் நூறு கோடி மக்களும் கோபிநாத் கோபிநாத் பெரு முதலாளி கனவிற்கு தூண்டில் போட்டன. அதன் விளைவாக அரசியல்வாதிகளுக்கும், கொழுத்த பணக்காரர்களுக்கு மட்டுமே பறந்த டெக்கான் ஏவியேஷன், ஏர் டெக்கான் ஆக உருமாறி அனைத்து தரப்பு மக்களுக்குமான பொதுப் போக்குவரத்து விமான நிறுவனமாக பறந்தது. 2003இல் உருவெடுத்த ஏர் டெக்கானை, விளம்பரப்படுத்தி, பெரிய அளவில் சந்தை படுத்துவது எப்படி என முதலாளி கோபிநாத் சிந்திக்காமல் இருப்பாரா? சந்தை படுத்தாமல் எப்படி பெரு முதலாளி ஆவது?

உலகெங்கும் இன்று வரை பயணிகள் விமான போக்குவரத்து தொழில் முதலாளிகளுக்கு கொள்ளை லாபத்தை ஈட்டித் தரவில்லை. மிகக் குறைந்த நிறுவனங்களே லாபத்தில் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

தொழிற்போட்டி, ஏர்பஸ், போயிங் என்ற இரு நிறுவனங்களின் ஏகபோக உரிமையில் உள்ள விமானத் தயாரிப்பு, சர்வதேச சட்டங்கள், விதிமுறைகள், எரிபொருள் செலவு, விமான நிலையங்களுக்கு தர வேண்டிய கட்டணம் போன்ற பல்வேறு காரணிகளால் பல விமான நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன அல்லது நட்டத்தில் இயங்குகின்றன.


படிக்க : முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் !


லாபத்தில் பல்லிளிக்கவும், கும்மாளம் போடவும் எந்த முதலாளிக்கும் கசக்காது. ஆனால் நட்டத்தை பொறுப்பேற்க எந்த முதலாளி முன் வருவார்? குறைவான லாபம் அல்லது நட்டம் என்ற அளவில் இயங்கி வரும் விமான போக்குவரத்து நிறுவனங்கள் தங்கள் நட்டத்தை, அதாவது செலவுகளை குறைத்து, லாபத்தை அதிகரிக்க, கையிலெடுத்த யுத்தி No Frill Service, அதாவது எவ்வகையிலாவது விமானத்தை இயக்கும் செலவைக் குறைப்பது தான் இந்த மாடல்.

விமான வடிவமைப்பை மாற்றுவது, இருக்கைகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை குறைத்து அதிக இருக்கைகளை வடிவமைப்பது, பயணிகளுக்கு வழமையாக பயணச் சீட்டோடு வழங்கி வந்த உணவுப்பொருட்கள், மது போன்றவற்றை தனியாக பணம் பெற்று வழங்குதல்,
குறைந்த அளவிலான தொழிலாளர்களைப் பணியமர்த்துதல், முடிந்த அளவு குறைவான ஊதியம் வழங்குதல், டிக்கெட்டுகளை நேரடியாக விற்றல் என முடிந்த வகையில் செலவுகளை குறைத்து லாபத்தை கூட்டும் முயற்சியில் ஈடுபட்டன. குறைந்த விலையில் டிக்கெட்டுகளை விற்பதின் மூலம், அதிகப் பயணிகளை ஈர்க்க முடியும் என்ற உத்தியும் உண்டு.

Lean and Mean, No Frill, low-cost service என பல பெயர்களில் அறியப்பட்டாலும் குறைந்த செலவில் விமானத்தை இயக்கி அதிக அளவில் பயணிகளை ஈர்த்து, அதிக லாபத்தை ஈட்டுவது தான் விமான நிறுவனங்களில் அடிப்படை நோக்கம். இம்முறையில் அமெரிக்காவைச் சேர்ந்த சவுத் வெஸ்ட் ஏர்வேஸ் , அயர்லாந்தைச் சேர்ந்த ரியான் ஏர் போன்ற சில நிறுவனங்கள் மலிவு விலையில் பயண டிக்கெட்டுகளை தந்து அதிக லாபத்தை ஈட்டி வந்தனர், அதைப் பின்பற்றிய கோபிநாத், இந்திய பயணிகள் விமான போக்குவரத்து துறையில் பல செலவு குறைப்பு முறைகளை அறிமுகப்படுத்தினார்.

(தொடரும்…)

சு.விஜயபாஸ்கர்

disclaimer

மக்களிடயே அறிவியல் கண்ணோட்டத்தை உருவாக்க, பார்ப்பன பாசிசத்தை எதிர்த்த புஷ்ப மித்ர பர்கவா! – பாகம் 1

1

குறிப்பு : அறிவியலாளர் புஷ்ப மித்ர பர்கவா 2017-ம் ஆண்டு, ஆகஸ்ட் 1-ம் தேதி நம்மைவிட்டு பிரிந்தார். ஐதராபாத்தில் Centre for Cellular and Molecular Biology என்ற ஒன்றிய அரசின் ஆய்வகத்தை நிறுவி அதன் இயக்குனராக இருந்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய –  சர்வதேசிய கௌரவ பட்டங்களையும் விருதுகளையும், – பத்ம பூஷன், பிரான்ஸ் அதிபரிடமிருந்து லீஜன் தி’ஹானர், தேசிய குடிமகன் விருது உட்பட – வாங்கியவர். ஒன்றிய அரசின் பல துறைகளிலும், தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு உட்பட, ஆலோசகராக இருந்தவர். தனது இறுதி மூச்சு வரை அறிவியல் கண்ணோட்டத்தைப் பரப்பி வந்த பர்கவா, 1975-ம் ஆண்டில் அறிவியல் சிந்தனைகளை உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் மனதில் பதிய வைப்பதற்கு முடிவு செய்து, அறிவியல் கண்காட்சி ஒன்றை நிறுவ வேண்டும் என முனைந்தார். இதற்காக கடுமையாக 2 ஆண்டுகள் உழைத்து டில்லியில் ஒரு நிரந்தர கண்காட்சியையும் அமைத்தார்.

‘எதையும் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று ஏற்காதே! உனக்கு சரி எனப்படும் வரை எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என கேள்வி கேள்’ என கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ் (அடிமைச் சமூகத்தில் ஆண்டையாக வாழ்ந்த இவர் நம்மைப் போன்ற மனிதர்கள் ஏன், எப்படி, எதற்காக அடிமையானார்கள் என்ற கேள்வியைக் கேட்கவே இல்லை என்பது தனியே பரிசீலிக்க வேண்டிய ஒன்று) சொன்னார் அல்லவா, அந்த வழியில் உண்மையான அறிவியல் அறிஞர். அவரது அறிவியல் கண்காட்சியின் இறுதியில், இங்கு சொல்லப்பட்டவை நிரந்தர உண்மைகள் என்று ஏற்காதே, கேள்வி கேள் என்று மனதில் ஆழப் பதியும் வண்ணம் கூறியவர். ஆனால் அந்தக் கண்காட்சி தலைநகர் தில்லியில் அமையவில்லை! ஐதராபாத்தில் அமைந்தது. இன்று பார்ப்பன பாசிச கும்பல் அறிவுத் துறையினரை நரவேட்டையாடி வருகிறதே, அந்தக் கொடுமைகளை அன்றே அனுபவித்தவர் தான் இந்த அறிவியல் அறிஞர் பர்கவா! அது பற்றிய வரலாற்றை (பர்கவா அவர்களே எழுதியதிலிருந்து) இக்கட்டுரை சுருக்கமாகக் கூறுகிறது.

மக்களிடயே அறிவியல் கண்ணோட்டத்தை உருவாக்க, பார்ப்பன பாசிசத்தை எதிர்த்த புஷ்ப மித்ர பர்கவா!

***

அறிவியல் சிந்தனை முறை பற்றிய கண்காட்சியின் வரலாறு

இந்த வரலாறு ரியாஸ் அகமதுவிலிருந்து தொடங்குகிறது. கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சிஇஆர்டி) என்ற அமைப்பின் இயக்குனரான ரியாஸ் அகமது, அலிகார் இசுலாமிய பல்கலைக் கழகத்தின் பௌதிகப் பேராசிரியராக, விஞ்ஞானியாக இருந்தவர். என்சிஇஆர்டி இயக்குனர்களிலேயே மிகவும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டவர் இவர். வாழ்நாள் முழுதும் பகுத்தறிவாளராகவும் தேசியவாதியாகவும் வாழ்ந்தவர். இன்று நாடு முழுதும் உள்ள 10+2+3 கல்வி முறையை ஏற்படுத்தியவர். அதே போல உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும் வொகேசனல் கல்வி (ஐடிஐ, டிப்ளமோ என தொழிற்கல்வி), பல்கலைக் கழக கல்வி என இரு துறைகளாகப் பிரித்துப் பயிலும் முறையை உருவாக்கியவர்.

நேருவின் பிறந்த நாளில் தில்லியில் ஆண்டு தோறும் கல்வி கண்காட்சி நடைபெரும். 1975 மே 14 அன்று தில்லி சென்ற போது, ரியாஸ் அகமதுவைச் சென்று சந்தித்தேன். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் கண்ணோட்டம், அறிவியல் முறை பற்றி எழுதி வருகிறீகளே, நீங்கள் தேசிய அறிவியல் கண்காட்சியின் ஒரு அங்கமாக அறிவியல் முறை பற்றிய கண்காட்சியை ஏன் நிறுவ முன்வரக் கூடாது என என்னிடம் கேள்வி எழுப்பினார். இதைச் செய்ய ஏற்றுக் கொண்டால் என்சிஇஆர்டி பொருளாதார ரீதியாக உதவும் எனக் கூறினார்.

அறிவுப்பூர்வமாக சவாலானதாக இருந்ததால், இந்த யோசனை என்னைக் கவர்ந்தது. அறிவியல் முறை என்பது பற்றி கருத்து ரீதியாகவும் அறிவியல் நிபுனத்துவம் கொண்டவர்களுக்குப் புரியும் படியும் விளக்கி வந்த அறிவியல் முறை பற்றி, இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை புரிந்து கொள்ளும்படியாக, காட்சி வடிவில் ஒரு கண்காட்சியை நிறுவுவது என்பது உயர்ந்த மட்டத்திலான படைப்பாற்றலைக் கோருகின்ற ஒன்று. இதனாலேயே ரியாஸ் அகமதுவின் அழைப்பை நான் ஏற்றுக் கொண்டேன்.

ஐதராபாத் திரும்பிய உடனே ஒரு நாள் இரவு முழுதும் விழித்திருந்து, 50 பக்கங்களில் ஒரு திட்டத்தை அந்த இரவே எழுதித் தயாரித்தேன். அடுத்த சில நாட்கள் திட்டத்தில் எழுதியுள்ளதை காட்சிப் படுத்த ஆடியோ-வீடியோ காட்சிகள் என்னென்ன தேவைப்படும், நேரடியான பரிசோதனைகள் என்னென்ன செய்வது என தோராயமாக எழுதினேன். நான் என்ன எழுதியுள்ளேனோ அது கண்காட்சியை ஆதிக்கம் செய்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த திட்டமும் ஆடியோ-வீடியோ காட்சிகளும் (நேரடி பரிசோதனைகள், செய்முறை விளக்கங்கள் உட்பட) பல மாற்றங்களுக்கு ஆளானது. ஆனால் முதல் ஓரிரு நாட்களில் முடிவு செய்த அடிப்படையான திட்டங்கள் எந்த மாற்றமுமின்றி கடைசிவரை நின்று நீடித்தது.


படிக்க : பார்ப்பனியத்தை ஏற்காத அறிவியலாளர் புஷ்ப மித்ரா பர்கவா மறைவு


அடுத்ததாக கண்காட்சிக்கு தேவையானவற்றைத் தயாரிக்க ஐதராபாத்தில் உள்ள துறை சார்ந்த வல்லுனர்கள் 11 பேரிடம் பேசியதில் அனைவரும் இதில் பங்கேற்க ஆர்வமுடன் இசைந்தனர். முதல் கூட்டம் எனது (பர்கவா) வீட்டில் நள்ளிரவு வரை உற்சாகமாக நடந்தது. அன்றைக்கு இளம் வயதினராக இருந்த அந்த வல்லுனர்கள், இன்றைக்கு அவரவர் துறைகளில் பல்வேறு சாதனைகள் புரிந்து அறிவியல் உலகில் மட்டுமல்ல பொதுவில் நன்கு அறிமுகமானவர்களாக உள்ளனர். இந்தக் கண்காட்சி வேலைகள் என்னை எப்படி மாற்றியதோ, அதே போல அவர்கள் வாழ்விலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

என்சிஇஆர்டி தரும் பணம் கண்காட்சி வேலைகளுக்குப் போதுமானதாக இருக்காது என்பதை உணர்ந்தேன். இந்தக் கண்காட்சி அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்றால், தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமான ஒன்றாக நிறுவப்பட வேண்டும் என அனைவருமே விவாதித்து முடிவுக்கு வந்தோம். இந்த இரு முடிவுகள் பற்றி என்சிஇஆர்டி-யிலும் அதன் இயக்குனர் ரியாஸ் அகமதுவிடமும் பேசி ஒப்புதல் பெற்றோம்.

நிதிக்காக விஎஸ்டி தொழிற்சாலைகளின் தலைவர் ஆன்ந்த்லால் என்பவரை அணுகினேன். அவர் உடனடியாகவே ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார். இவர் நிதி தரவில்லை என்றால் இந்தக் கண்காட்சியே உருவாகியிருக்காது. (இன்றைய பிஜேபி ஆட்சி அன்று இருந்திருந்தால் இந்த திட்டமே உருவாகியிருக்காது. ஒரு வேளை தொடங்கியிருந்தால் ஆன்ந்த்லாலிடம் பணம் வாங்கி மோசடி செய்துவிட்டார் என பர்கவா மீது குற்றம் சாட்டி சிறையிலடைத்து, சாகும்வரை கம்பி எண்ணிக் கொண்டிருந்திருப்பார் என்பதே உண்மை. – நாகராசு). தவிர நான் பணிபுரியும் ஆய்வகமும் நல்ல ஒத்துழைப்பு நல்கி, கண்காட்சி வேலைகள் நடக்க, தனி ஒரு கட்டிடமும் ஒதுக்கித் தந்தது. எனது ஆய்வகம் (Centre for Cellular and Molecular Biology) அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆய்வு மையத்தின் (சிஎஸ்ஐஆர்) கீழ் தனித்து இயங்கும் ஒரு நிறுவனம். இது கடைசிவரை தடையின்றி கண்காட்சியை நிறுவ உதவியது. அன்றைய சிஎஸ்ஐஆர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த நாயுடம்மாவும் முழு ஆதரவு தந்தார்.

இவர்கள் தவிர உலகம் முழுவதிலுமிருந்து தனிநபர்களும், நிறுவனங்களும் அரிதான, மதிப்பு மிக்க பொருட்கள், விவரங்கள், காட்சிப் படுத்த ஆடியோ-வீடியோ கொடுத்து உதவினர். தனிநபர்கள் துறை சார்ந்த வல்லுனர்கள் ஆவர். மேலும் தேசிய ஜியோபிசிகல் ஆய்வுக் கழகம்-ஐதராபாத், மாக்ஸ் முல்லர் பவன்-ஐதராபாத், ஆந்திர பிரதேஷ் விவசாய பல்கலைக் கழகம்-ஐதராபாத். தெற்கு மத்திய ரயில்வே, இந்திய வானிலையியல் துறை-புது தில்லி, பாபா அணு ஆராய்ச்சி மையம்-ட்ராம்பே, இந்துஸ்தான் ஆண்டிபயாடிக்ஸ் லிட்.-பிம்ப்ரி, வைரஸ் ஆய்வு மையம்-பூனா, பிரிட்டிஷ் கவுன்சில்-சென்னை, அமெரிக்க தகவல் சேவை-சென்னை,பம்பாய், ராயல் சொசைட்டி-லண்டன், பாஸ்டர் இன்ஸ்டிடூட்-பாரிஸ் போன்ற பல நிறுவனங்களும் உதவின.  பல்வேறு பதிப்பகத்தினர், எழுத்தாளர்களின் நூல்களில் இருந்து விவரங்கள், அரிய புகைப்படங்களை எடுத்துக் கையாண்டோம்.

இந்தக் கண்காட்சியை உருவாக்க சுமார் 2 ஆண்டுகள் ஆனது. 1976 இறுதியில் கண்காட்சி முழு வடிவம் பெற்ற போது, இதைக் காட்சிப் படுத்தவே 5000 சதுர அடிக்கும் மேலான இடம் தேவைப்படுவதோடு, நிர்வாகத்திற்கும் கூடுதலாக இடம் இருந்தால் தான் சிறப்பாக அமையும் என உணர்ந்தோம்! ஐதராபாத்தில் அமைத்தபோது வந்து பார்த்த பலரும், இது நாட்டின் தலைநகரான தில்லியில் நிரந்தரமாக அமைக்கப்படுவதே சிறப்பாக இருக்கும் என்றனர்.

ரியாஸ் அகமது, அன்றைய ஒன்றிய கல்வி அமைச்சர் நூருல் ஹாசன் இருவருமே கண்காட்சி நிரந்தரமானதாக நிறுவப்பட வேண்டும் என முழு மனதோடு ஏற்றுக் கொண்டனர். தில்லி கோட்லா மார்க்கில் உள்ள பால பவன் வளாகத்தில் உள்ள போலிஷ் பெவிலியன் இதற்கு ஏற்ற இடம் என தெரிவு செய்தனர். அது தனியாக உள்ள கட்டிடம். கண்காட்சி தனித்துவமாக விளங்கும் என முடிவானது.

கண்காட்சி அமைக்கும் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். என்சிஇஆர்டி-யின் அறிவியல் பிரிவு தலைமையில் இருந்த அதிந்திர போஸ், என்னுடன் லக்னௌ பல்கலைக் கழகத்தில் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பில் 1942-1946ல் ஒன்றாகப் படித்தவர். என்சிஇஆர்டி-யில் ஒரு பாடப் புத்தகம் எழுதுகையில் நெருங்கிப் பழக வேண்டியது வந்தது. லேனிங் சயின்ஸ்-பார்ட் 1 (Learning Science-Part 1) என்ற 6ம் வகுப்புக்கான அறிவியல் பாட நூல் எழுதும் அமர்வில் நானும் இருந்தேன். (இந்த நூல்தான் 6ம் வகுப்பு அறிவியல் நூலாக பல ஆண்டுகள் இருந்தது.) இது பல வழிகளிலும் மரபான நூலிலிருந்து மாறி இருந்தது. தீவிர வலதுசாரி சிந்தனை கொண்ட போஸ் நூலை எழுதும் போது நிறைய சிக்கல்களை ஏற்படுத்தினார். அதையெல்லாம் கடந்து வந்தோம். ஆனால் அறிவியல் கண்ணோட்டத்துடன் அறிவியல் முறை பற்றிய கண்காட்சி அமைக்கும் எங்களின் அறிவியல் பற்றிய சிந்தனை, போசின் சிந்தனை முறைக்கு முற்றிலும் நேர் எதிரானதாக இருந்தது.


படிக்க : வரலாற்றுப் பார்வையில் E = mc2 – வீடியோவும் விளக்கமும்


கண்காட்சிக்கான பொருட்கள் தில்லி பாலபவனுக்கு ஐதராபாத்திலிருந்து கொண்டுவரப்பட்டன. ஒரு குட்ஸ் ரயில் பெட்டி நிறைய எடுத்து வந்தது மட்டுமின்றி நாங்களும் கைகளில் கணிசமாக கொண்டுவர வேண்டியதாகியது. 1977 பிப்ரவரி 6 – 17க்குள் எல்லா பொருட்களும் வந்து சேர்ந்தன. இதற்கான செலவுகள் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமானது. தவிர வேலை செய்தவர்களுக்கான கூலியும் தர வேண்டும். என்சிஇஆர்டி பணம் தந்துவிடும் என்ற தைரியம் இருந்தது. 1977 மார்ச் 7ம் தேதி கல்வி அமைச்சர் நூருல் ஹாசன் சாஸ்திரி பவனுக்கு தேநீர் அருந்த அழைத்தார். எனது தோளில் தட்டிக் கொடுத்து இந்திய அறிவுத்துறை வரலாற்றிலேயே இந்தக் கண்காட்சி ஒரு மைல்கல்லாக இருக்கப் போகிறது எனப் பாராட்டினார்.

நாங்கள் மேலும் உற்சாகம், ஊக்கத்துடன் திறப்பு விழாவிற்கு வேலை செய்தோம். அதைத் திறந்து வைக்க இருந்தவர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள்! அவர் நூருல் ஹாசன், ரியாஸ் அகமது மூலம் மட்டுமின்றி மேலும் பலர் மூலம் கண்காட்சி பற்றித் தெரிந்து கொண்டார். தில்லியில் கண்காட்சியை நிறுவிக் கொண்டிருந்த போது, சிஎஸ்ஐஆர் டைரக்டர் ஜெனரல் மறைந்த நாயுடம்மா, ஐஎஸ்ஆர்ஓ தலைவரும் விண்வெளித் துறை செயலாளருமான மறைந்த சதீஷ் தாவன், யஷ் பால் இன்னும் இது போன்ற எண்ணற்ற பிரபலங்கள் வந்து பார்த்துப் பாராட்டியது எங்களை மேலும் உற்சாகப்படுத்தியது. மார்ச் மத்தியில் கண்காட்சி பற்றி ஏகமாக பலரும் தெரிந்து கொண்டதோடு, அதைக் காணவும் ஆவலாக இருந்தனர்.

நாங்கள் எல்லோரும் பரபரப்பாக இரவு பகல் பாராது வேலை செய்தோம். எங்களுக்கு என்சிஇஆர்டி வளாகத்திலேயே ஒரு வீடும் கொடுத்து விட்டனர். நண்பர்களிடமிருந்து பொருட்களை வாங்கியும் ஐதராபத்திலிருந்து சில கொண்டு வந்தும் அங்கேயே அனைவரும் ஒரு குடும்பமாக சமைத்து சாப்பிட்டோம்! தொடர்ந்து 8 வாரங்கள் கடுமையாக வேலை செய்து மார்ச் 3வது வாரம் கண்காட்சி திறப்பு விழாவிற்குத் தயாராகி விட்டது. கண்காட்சியின் மின் இணைப்பு வயர்கள் மட்டும் பல மைல்கள் நீளம் கொண்டதாக இருந்தது.

(தொடரும்…)

(Angel, Devil and Science என்ற புஷ்ப மித்ர பர்கவா எழுதிய புத்தகத்தை தழுவி எழுதிய சுருக்கமான கட்டுரை.)


நாகராசு

தொழிலாளிகள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம் !

1

ண்மை காலமாக தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகள் தீவிரமடைந்து வருகிறது. தனியார்மய – தராளமய – உலகமய கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு தொழிலாளர்கள் மீதான அடக்குமுறை வடிவங்களில் பல புதிய பரிணாமங்கள் ஏற்பட்டுள்ளது. தனியார் முதலாளித்துவ நிறுவனத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர்கள் மற்றும் அரசுத் துறையின் கீழ் செயல்படும் தொழிலாளர்கள் என எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லா துறைகளிலும் காண்ட்ராக்ட்மயம் புகுத்தப்படுகிறது.

காண்டிராக்ட் தொழிலாளர்களுக்கு எவ்வித அடிப்படை உரிமைகளும் வழங்கப்படுவதில்லை. குறைந்த ஊதியத்திற்கு அவர்களின் உழைப்பானது மிகக் கொடுமையான முறையில் சுரண்டப்படுகிறது. பெரும்பாலான காண்டிராக்ட் தொழிலாளர்கள் தினக்கூலியாக அல்லது வாரக்கூலிகளாக மாற்றபட்டுள்ளனர்.

கூலியை குறைக்கும் விதமாக பெரும்பான்மையான தொழில்நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்துவது அதிகரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பல இலட்சக்கணக்கான குடும்பங்கள் தங்கள் சொந்த மண்ணைவிட்டு பல கிலோமீட்டர் தொலைவிற்கு வேலைதேடி பயணம் செய்து, இடம்பெயர வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

உ.பி, ராஜஸ்தான், பீகார் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் இருந்து தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்களுக்கு அதிகப்படியான வெளிமாநில தொழிலாளர்கள் படையெடுக்கின்றனர்.


படிக்க : பெங்களுரு: போராடும் டெலிவரி தொழிலாளர்கள் – கண்டுகொள்ளாத ஸ்விகி!


வெளிமாநில தொழிலாளர்களிடம் குறைந்த கூலிக்கு உழைப்பை சுரண்டுவதன் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள பணிநிரந்தர தொழிலாளர்களுக்கு பணிபாதுகாப்பு, ஊதிய உயர்வு என்பது எல்லாம் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது.

தொழிலாளர்கள் தங்களின் அடிப்படை உரிமைக்காக போராடினால், நாம் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்படுவோம்; கூலி குறைக்கப்படும் என்ற அச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் தமிழக தொழிற்பேட்டைகளில் பணிநிரந்தரம் கேட்டு நடத்திய போராட்டங்கள் எல்லாம் தற்போது மிக கணிசமான அளவு குறைந்து உள்ளது.

***

கடந்த 2011-14 ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து நடத்திய ஊதிய உயர்வு போராட்டம் மிக முக்கியமான போராட்டமாகும். போக்குவரத்து தொழிலாளர்களும் ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி மிகத்தீவிரமான வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்விக்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களால் போர்க்குணமிக்க முறையில் நடத்தப்பட்ட போராட்டம், மிகக் கடுமையான முறையில் அரசால் ஒடுக்கப்பட்டது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது டெஸ்மா, எஸ்மா போன்ற கடும் ஒடுக்குமுறை சட்டங்கள் எல்லாம் போடப்பட்டன. அரசு இயந்திரங்கள் முடங்கின. தொழிலாளர்களின் போரட்டங்களை கண்டு ஆவேசம் அடைந்த பாசிச ஜெயலலிதா, 1.5 லட்சம் பேரை கைது செய்ய உத்தரவிட்டார். அரசு ஊழியர்கள் மீது பாசிச அடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இந்த இரண்டு நிகழ்வுகளும் தமிழக தொழிலாளர்களின் மீதான தாக்குதலில் மிக முக்கியமான நிகழ்வாகும்.

இத்தாக்குதலுக்கு பிறகு ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்ட பரிணாமமே மாறிவிட்டன. போராட்டங்கள் மேலும் மேலும் சுருங்கிவிட்டன. ஏற்கெனவே நடத்தப்பட்ட போராட்டங்களின் வரம்புகள் மாற்றியமைக்கப்பட்டன. போராட்டத்தின் தன்மையே மாறியது.

***

தொழிலாளர்களை அமைப்பாக திரட்டி வைத்துள்ள, அடிப்படை உரிமைகளுக்காக போராடக்கூடிய தொழிலாளர் அமைப்புகள் அனைத்தும் பொருளாதாரப் போராட்டம் என்ற வரம்புக்குள்ளேயே பெயரளவிலான போராட்டங்கள் நடத்துவது என்ற வரம்புக்குள் சுருக்கப்பட்டுவிட்டன. கடந்த காலங்களில் இவ்வாறான தொழிற்சங்களில் செல்வாக்கு செலுத்திய குசேலர், மைக்கெல் பெர்ணாண்டர்ஸ், வி.பிரகாஷ் போன்ற தொழிற்சங்க தலைவர்களெல்லாம் செல்வாக்கு இழந்து பொய்க்கொண்டிருக்கிறார்கள்

புரட்சிகர தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் உரிமைக்காக நேர்மையாக போராடுவது என்ற நிலை இருக்கிறது. ஆனால் குறைந்த அளவே தொழிலாளர்கள் போரட்டங்களில் பங்காற்றுகின்றனர். தற்போது 44 தொழிலாளர் சட்டங்கள் 4 சட்டத்தொகுப்பாக திருத்தப்பட்டதும், பெயரிலாவிலான உரிமைகளைக் கூட சட்டப்போராட்டம் நடத்தி பெறுவது என்பது எல்லாம் கேள்விக்குறியாகிவிட்டது. குறிப்பாக சங்கமாக திரளும் உரிமை தற்போது பல்வேறு தொழிற்சாலைகளில் மறுக்கப்பட்டு வருகிறது.

***

அண்மைகாலங்களில் தொழிலாளர்கள் அமேசான், ஸ்விகி, சுமேட்டோ போன்ற நிறுவனங்களில் விற்பனை பிரதிநிதிகளாகவும், டெலிவிரிபாய் ஆகவும் மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறான தொழிலாளர்கள் சமூகத்தில் உருவாவதன் மூலம், தொழிலாளர்களை அமைப்பாக்கும் நடவடிக்கை என்பது மேலும் மேலும் குறைத்து வருகிறது. மிகப்பெரிய மால்கள், விற்பனையகங்கள், ஜவுளி ஸ்டோர்கள் ஆகியவற்றில் பணிபுரிகின்ற தொழிலாளர்கள் ஒன்று சேராத வண்ணம் தனித்தனியாக பிரிக்கபட்டு பணியமர்த்தப் படுகின்றனர். இந்நிறுவனங்களில் பணிபுரிகின்றவர்களுக்கு பணிநிரந்தரம், பாதுகாப்பு, மருத்துவ உதவி, வைப்புத்தொகை போன்ற எவ்வித உரிமையும் கிடையாது. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இவர்கள் உழைப்பை சுரண்ட முடியும் என்ற கொடுமையான அடக்குமுறை, இவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படுகிறது.

***

ஆலைக்குள் இல்லாமல், ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட முதலாளியின் கீழ் பணி புரியும் நிலை அதிகரித்துள்ளது. பல்வேறு தொழில் பிரிவுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் தங்களை ஒரு வர்க்கம் அல்லது தொழிலாளி என்று உணரும் போக்கு என்பது அண்மை காலங்களில் சுருங்கி வருகிறது.

ஒலா நிறுவனத்தில் பணிபுரியும் ஆட்டோ தொழிலாளியோ அல்லது ஸ்விகி போன்ற நிறுவனங்களில் பணிபுரிபவர்களோ, தன்னை ஒரு தொழிலாளி என்று கருதுபவதை விட தன்னை ஒரு நிறுவனத்தின் ஊழியராக கருதிக் கொள்கின்றனர். நினைத்தால் வேலைக்கு செல்லலாம், வேலைக்கு சென்றால் ஊதியம் என்ற ஒரு சுருக்கப்பட்டுவிட்டது.

இதன் மூலம் ஊதியம் என்று சொல்லப்படுகின்ற சட்டபூர்வமான வரைமுறைகள் எல்லாம் மாறிவிட்டது. ஊதியம் என்ற மதிப்பீடுகள் மறைந்து அத்துக்கூலி என்ற நிலைமை வந்தடைந்துவிட்டது. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில், அடிப்படை உரிமைகளான வீட்டு வாடகைப்படி, மருத்தவ வசதி, நீண்ட கால வைப்பு நிதி போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுவிட்டது.

இன்று வந்தாய், வேலை செய்தாய், அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை என்று அதன் ஒட்டு மொத்த சாராம்சம் சுருக்கப்பட்டு கொடுரமான ஒரு உழைப்பு சுரண்டல் அரங்கேறி கொண்டு இருக்கிறது.

ஊதிய உரிமை என்பது பல நாடுகளின் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக போராடி பெற்ற உரிமையாகும். தற்போது தொழிலாளர்களிடம் அந்த போராட்ட உணர்வும் மறைந்து வருகின்றது.


படிக்க : தொழிலாளர்களை வஞ்சிக்கும் ஃபோர்டு ஆலை : கண்டுகொள்ளாத அரசு !


தொழிலாளர்கள் மனநிலையானது, ஒரு நாள் 500 ரூபாய் சம்பாதித்தால் போதும், அதைகொண்டு வாழ்நிலைமைகளை சமாளித்துவிடலாம் என்ற நிலைமையில் உள்ளது. அதற்குமேல் அதிக ஊதியம் பெறுவதற்கு அதற்கு ஏற்றாற்போல அதிக நேரம் வேலைபார்க்கின்றனர்.

ஆனால், அன்றாடம் விலைவாசியானது தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கல்வி கட்டணம், மருத்துவக் கட்டனம், போக்குவரத்துக் கட்டனம் அதிகரிப்பால் மக்களின் சேமிப்பானது கரைந்துக்கொண்டே செல்கிறது. இப்பொருளாதார நெருக்கடியானது மக்களை வாழவழியில்லாத நிலையை நோக்கி தள்ளுகிறது.

ஆகவே, நாம் வாழ வேண்டும் என்றால் போராட்டங்களின் மூலம் நம்முடைய உரிமையை நாம் நிலைநாட்டிக் கொள்வது காலத்தின் கட்டாயம்.

நாம் ஒரு ஆலை தொழிலாளியாகவோ, அரசு தொழிலாளியாகவோ அல்லது எவ்வாறாக செயல்பட்டாலும், லாரிஓட்டுநர், ஆட்டோ ஒட்டுநர், அரசு ஊழியர், சலவைத் தொழிலாளி, மின் ஊழியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் என்று பல வகையில் பிரிந்து இருந்தாலும் எல்லோரும் அத்துக்கூலிகள், அன்றாடங் காட்சிகள்தான். எல்லோரும் தினக்கூலி என்ற நிலைமையை நோக்கி மிக விரைவாக நாம் வந்துக்கொண்டிருக்கிறோம்.

இன்றைய காவி – கார்ப்பரேட் பாசிச மோடி ஆட்சி விலைவாசி உயர்வு, தனியார்மயமாக்கல், மக்களுக்கு எதிரான வரிக்கொள்கை போன்ற எண்ணற்ற தாக்குதல்களை தீவிரப்படுத்தி கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாம் ஆலைத்தொழிலாளி, அரசு ஊழியர், ஸ்விகி ஊழியர் என்று தனித்தனியாக நம்மை நாம் பிரித்து பார்த்து கொள்ளக் கூடாது. மாறாக இன்றைய நவீன ஊடகத்தின் வளர்ச்சி காரணமாக நாம் அனைவரும் தொழிலாளர் வர்க்கமாக ஒன்று திரள்வதற்கான வாய்ப்புகள் பலவாறு பெருகிவிட்டன. இந்த வாய்ப்பினை எப்படி பயன்படுத்தி கொள்ள போகிறோம் என்பது குறித்து சிந்திப்பதே காலத்தின் கட்டாயம்.

நாம் ஓரணியில் தொழிலாளி வர்க்கம் என்ற முறையில் திரண்டு எழுந்து நமக்கான நமது உரிமையை நிலைநாட்டிட வீதி போராட்டங்களில் இறங்கிவிட வேண்டும். தொழிலாளர்கள் தனது உரிமையை பெற மறுத்து நிற்கும் முதலாளிகளுக்கு பணிவிடை செய்யும் இந்த காவி கும்பலையும், முதலாளிகளின் நலனை பாதுகாக்கும் சமூக அமைப்பையும் அடியோடு மாற்றி அமைக்கும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.


ராமசாமி

உலக ஆளும் வர்க்கம், முடிவில்லாத போர், மக்களின் கொத்துக் கொத்தான மரணம்! – பாகம் 2

0

உலக ஆளும் வர்க்கம், முடிவில்லாத போர், மக்களின் கொத்துக் கொத்தான மரணம்! – பாகம் 1

உலக ஆளும் வர்க்கம், முடிவில்லாத போர், மக்களின் கொத்துக் கொத்தான மரணம்! – பாகம் 2

முதாயம் சிதைந்து கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள அமெரிக்கா, இராணுவ ஆயுத தளவாட உற்பத்தி மூலம் மட்டுமே தனது உலக மேலாதிக்கத்திற்கான போட்டியாளர்களை, குறிப்பாக ரசியா மற்றும் சீனாவை ஒழித்துவிடலாம் எனப் பார்க்கிறது. அமெரிக்கா நேட்டோவை மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா வரை விரிவுபடுத்துகிறது. தெற்கு சீனக் கடலில் குவாட் கூட்டணி மூலம் இராணுவ ஒத்திகை நடத்தி, இது தனது நாட்டின் நலனுக்கானது எனக் கூறும் அமெரிக்கா சீனாவையும் அச்சுறுத்துகிறது! இதனால் சீனா, ரசியா இரண்டும் அமெரிக்காவிற்கு எதிராக கூட்டு சேர்கின்றன!

சீனா ஆசியாவிலும் பசிபிக்கிலும் உள்ள கடல் வழிகள் தனது செல்வாக்குப் பகுதி எனப் பார்க்கிறது! ரசியாவும் தன்னிடமிருந்து பிரிந்து சென்ற உக்ரைன் மற்றும் அருகாமை நாடுகளை தனது செல்வாக்குப் பிரதேசம் எனப் பார்க்கிறது! இந்த சீன, ரசிய எல்லைப் பகுதியில் அமெரிக்கா இராணுவ ஆக்கிரமிப்பில் ஈடுபடுவது தேவையற்ற ஒரு கெடுபிடிப் போரை உருவாக்குகிறது! வாசிங்டன் கொள்கை வகுப்பாளர்கள் எதிர்ப்பின்றி எடுத்துள்ள இந்த முடிவானது இந்த புவிப்பரப்பையே முற்றாக அழித்தொழிக்கும் அணு ஆயுதப் போருக்கு இட்டுச் செல்லக் கூடும்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் மேற்கு பசிபிக்கின் ஆசியக் கடலோர நெடுகிலும் ஜப்பானிலிருந்து ஆஸ்திரேலியா வரை சீனா விமான தளங்களை கட்டியெழுப்பியதன் மூலம், அந்தப் பகுதியில் விமானம் தாங்கி கப்பல்கள் உட்பட போர்க்கப்பல்களைத் தாக்கும் திறனை அது கொடுத்துள்ள நிலையில், இப்பகுதிகளில் தங்களின் கட்டுப்பாட்டிற்கான அதி தீவிர நாய்ச் சண்டை நிலவுகிறது. பலதுருவ உலகினை அமெரிக்கா ஏற்றுக் கொள்ள மறுத்தது மட்டுமல்ல ஒரு முடிசூடா மன்னனைப் போல தானே உலகை ஒற்றைத் துருவமாக மேலாதிக்கம் செய்ய முனைவதும் ரஷ்யாவும் சீனாவும் கூட்டணி கட்டுவதை உறுதிப்படுத்தியுள்ளது, இப்படியான ஒரு கெடுபிடிப் போரைத் தடுக்கத் தான் இதை எதிர்ப்பவர்கள் கடினமாக உழைத்தனர். இந்தப் பகைத்தன்மையானது, அமெரிக்கப் போர் வெறியர்களின் போர் வெறிக்கு தீனி போடுவதாக அமைந்துள்ளது. இது, ஒரு முடிவற்ற போரை நடத்த விரும்பும் வாசிங்டன் ஆட்சியாளர்களை களிவெறி கொள்ள வைத்துள்ளது!


படிக்க : இரஷ்ய-உக்ரைன் போர்: இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் ! – பாகம் 2


ரசியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ள உக்ரேனை அழைத்து, மாஸ்கோவுடன் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தும்படி பதட்டம் தோன்றியதுமே ஹென்றி ஹிஸ்ஸிங்கர் அறிவுறுத்தினார். “இன்னும் இரு மாதங்களில் செய்து முடிக்கவில்லை என்றால் அது எளிதில் தீர்க்க இயலாத பெரும் பதட்டத்தையும் நெருக்கடியையும் தோற்றுவிக்கும்” என கிஸ்ஸிங்கர் கூறியது செவிடன் காதில் ஊதிய சங்கானது.

சர்வாதிகார அரசாங்கங்களுக்கு மாற்றுக் கருத்துக் கொண்டோர் மீது அடக்குமுறையை ஏவி விடவும், சமூக நலத் திட்டங்களை வெட்டிக் குறுக்கவும், ஒழிக்கவும், செய்தி ஊடகங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும் ஒரு எதிரி தேவைப்படுகிறது! யுத்தம் நியாயப்படுத்த முடியாதவற்றை நியாயப்படுத்தும்! ஆள்கடத்தல்கள், சித்திரவதைக் கொடூரங்கள், திட்டமிட்ட தனிமனிதப் படுகொலைகள், செய்தித் தணிக்கைகள், வரைமுறையற்ற தடுப்புக் காவல்கள், ஒடுக்குமுறைப் பகுதிகள் என போர்க் கிரிமினல் குற்றங்கள் கட்டவிழ்த்து விடப்படும்! போரானது மக்களை நிரந்தர சித்தப்பிரமையிலும், பயத்திலும் வைத்திருக்கும்! அது பொது மக்களை கேள்விக்கிடமற்ற முறையில் அடிமைத்தனத்தில் இருத்தும்!

”இந்தப் போரானது வெற்றி பெறுவதற்காக அல்ல, தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே” என 1984-ல் ஜியார்ஜ் ஆர்வெல் எழுதினார். ”வறுமையினாலும் அறியாமையினாலும் தான் தந்தைவழி ஒடுக்குமுறை சமூகம் சாத்தியம். இந்தப் புதிய பதிப்பு கடந்த காலத்தியதே தான். கடந்த காலத்தில் இதைத் தவிர வேறு எதுவும் இருந்திருக்கவில்லை! போர் நடவடிக்கைகளின் மூலம் சமூகத்தை வறுமைக் கொடுமையில் வைத்திருக்க வேண்டும் என்பதே கொள்கை! இந்தப் போர் ஆளும் வர்க்க கும்பல்களால் தமது சொந்த நாட்டு மக்கள் மீது நடத்தப்படுவதே அன்றி யுரேசியா அல்லது கிழக்காசியா மீது வெற்றி பெறுவதற்காக அல்ல! மாறாக நிலவும் சமூக கட்டமைப்பை அப்படியே பாதுகாப்பதற்காகத் தான்!

முடிவற்ற இந்தப் போரின் செய்தி இதுதான்: ஆளும் வர்க்கத்திற்கு, இராணுவத்திற்கு, அரசாங்கத்திற்கு கட்டுப்பட மறுத்தால் நீங்கள் தேசத் துரோகி!

பெருந்தொற்றின் விளைவாகவும் சுற்றுச் சூழல் நாசம் மற்றும் உக்ரைன் போரினால் உலகம் முழுதும் சுமார் 14 கோடிப் பேர் பட்டினிக் கொடுமையில் அவதிப்படுகின்றனர். இவர்களும் தமது எதிர்காலம் பற்றித் தெரிந்துள்ளனர். பெருந்தொற்றினால் ஒன்றரைக் கோடி மக்கள் செத்து மடிந்துள்ளனர். இவர்களில் பல்லாயிரக் கணக்கானோர் உரிய பாதுகாப்பும் மருத்துவ உதவியும் கிடைத்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார்கள். உலகின் தெற்குப் பகுதியில் சுற்றுச் சூழல் பேரழிவாலும் தோற்றுப் போன அரசுகளின் நடவடிக்கையாலும் மக்கள் அகதிகளாக விரட்டப்படுகிறார்கள். 2050-ல் இந்த அகதிகளின் எண்ணிக்கை 120 கோடியாக அதிகரித்திருக்கும்.

ஏழை எளியவர்களுக்கும் நோயுற்றவர்கள், பலவீனமானவர்களுக்கும் இவை சொல்லுகின்ற செய்தி இதுதான்: உங்களின் மற்றும் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை ஒரு பொருட்டே அல்ல!

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிக் கோமான்களுக்கு அவர்கள் அரசியல் நெருக்கடியில் இருப்பது தெரியும். இது ரசியாவின் குளறுபடியாலா? ட்ரம்ப் மற்றும் அவரது பாசிச கும்பலாலா? பத்திரிகையாளர்கள் மற்றும் அசாஞ்சே போன்ற இணையப் பதிப்பாளர்கள் இவர்களை அம்பலப்படுத்தி கெட்ட பெயர் ஏற்படுத்தியதாலா? தீவிர வலதுசாரி, இடதுசாரி விமர்சகர்களை கடும் தணிக்கைக்கு உட்படுத்தாததாலா?

தற்போது ஜனநாயகக் கட்சி குடியரசுக் கட்சியோடு நெருங்கியிருப்பினும் சிக்கலுக்குத் தீர்வுகாண இயலாமல் தோற்றுக் கொண்டுள்ளது. ட்ரம்ப்பும் அவரது பாசிச கும்பலும் கேபிடால் மீது நடத்திய தாக்குதலை, அந்த வழக்கை வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டி வரும் ஜோ பிடன் நிர்வாகம் அனைத்துத் துறைகளிலும் தோல்விகளையே தழுவி வருகிறது. மக்கள் நலத்திட்டங்களை வெட்டி நாசமாக்கி, மத்திய ஆசியப் பகுதியில் வெட்டி இராணுவச் செலவு செய்து வேடிக்கை காட்டிவரும் பிடன் தான், உலகிலேயே மிக பூதாகரமான சிறைத் துறை அமைப்பைக் கட்டி வருவதோடு, போலீசை ராணுவமயமாக்கி வருகிறார்.

நல்ல நிர்வாகத்தைக் கட்டியமைப்போம் என வாக்குறுதி தந்த பிடன் நிர்வாகம், மக்களின் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி வருகிறது. குறைந்த பட்ச கூலியைக் கூட்டுவதற்குக் கூட மறுக்கிறது. இது கானல் நீரைக் காட்டி, கண்கட்டி வித்தை செய்து, வெற்றுச் சொல்லாடல், கவர்ச்சி மற்றும் அச்சத்தின் மூலம் வாக்காளர்களை அச்சுறுத்திப் பணிய வைக்க முயல்கிறது. இது எப்படி இருக்கிறது என்றால், கிழக்கு ஐரோப்பிய தொங்கு சதை நாடுகளின் ஆட்சியாளர்கள், உயிர் பயத்தில் வெற்றுச் சொல்லாடல்களைப் பயன்படுத்தினார்களே அதுபோல உள்ளது என கட்டுரையாளர் ஒப்பீடு செய்கிறார்.

கோடீசுவர வர்க்கம், அவர்களில் பலரும் இந்தப் பழைய உளுத்துப் போன அரசியலை மெருகூட்டிக் காட்டியும் வெற்றுச் சொல்லாடல் மூலமும் பகாசுரக் கொள்ளைச் சுரண்டலைத் தொடரவே விரும்புகின்றனர். அவர்கள் ஒரு இழிந்த ஜனநாயகத்திற்கு மரியாதை செலுத்தும் புனைகதைகளை நம்புகிறார்கள். அது அவர்களுக்கு மரியாதையை அளிக்கிறது.


படிக்க : இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் !


ஆனால், இது நீடிக்கக் கூடாது! மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்களாட்சி என படாடோபமாக பீற்றிக் கொண்டு, மக்களை அடக்கி, ஒடுக்கிச் சுரண்டி, அவர்களின் அற்ப உடமைகளையும் உழைப்பையும் சூறையாடிக் கொண்டுள்ள கேடுகெட்ட கழிசடை அரசியல் கும்பல்களிடமிருந்து என்ன வரும்? கார்ப்பரேட்டுகளும் கோடீஸ்வர வர்க்கங்களும் தமது பகாசுர சுரண்டல்களையும் சூறையாடல்களையும் முரட்டுத்தனமான மற்றும் கொடூரமான எதேச்சதிகாரத்தின் கீழ், சுதந்திரமாக எந்தத் தங்கு தடையுமின்றித் தொடர்வார்கள்.

சமூக, அரசியல், பொருளாதார மற்றும் சுற்றுச் சூழல் முதலியன சர்வநாசமாக்கப்படுவது வேகமாக முடுக்கிவிடப்படும். அதிர்ச்சியூட்டுகின்ற, அதனாலேயே ஏற்றுக் கொள்ள இயலாத புறநிலை உண்மைகளைப் பற்றி பொது வெளியில் விவாதிப்பது முற்றாக நின்றுவிடும். கிறித்துவ பாசிசம், கேளிக்கூத்தான சதிக் கோட்பாடுகள் போன்றவற்றை மாற்றாக முன்வைப்பார்கள். எல்லா கெட்ட செயல்களுக்கும் காராணம் என தனி நபரையோ அல்லது குழுவையோ பொறுபாக்கி அவர்கள் முற்றாக ஒழித்துக் கட்டப்பட்டு விட்டார்கள் என்கிற குழந்தைப் பிள்ளை மாயாஜாலக் கதைகளில் மக்களை மூழ்கடித்து பின்னுக்கு இழுப்பார்கள்.

உண்மையையும் பொய்யையும் பிரித்தறிய இயலாது. பலவீனமான பிரிவினரைப் புறக்கணித்து, அவர்களது சிக்கல்களுக்கும் அவர்களே காரணம் என்பது மட்டுமின்றி, நமது எல்லா சிக்கல்களுக்கும் காரணம் அவர்களே என பழி தூற்றுவார்கள். யார் இவற்றை எதிர்க்கிறார்களோ அவர்கள் கிரிமினல் குற்றவாளியாக்கப்படுவார்கள். மக்கள் கொத்துக் கொத்தாகச் செத்து மடிவது உலகம் முழுதும் நடக்கும். இன்றைக்கு நம்மை ஒடுக்குபவர்களிடம் உள்ள அதிகாரம் பறிக்கப்பட்டு, துரத்தப்படவில்லை என்றால் இந்த அழுகி, சிதைந்து கொண்டுள்ள உலகத்தை தான் நாம் நமது குழந்தைகளுக்குக் கையளிப்போம்!

(முற்றும்)

(குறிப்பு: கிரிஸ் ஹெட்ஜெஸ் என்ற புலிட்சர் பரிசு பெற்ற அமெரிக்கப் பத்திரிகையாளர் எழுதிய கட்டுரையினைத் தழுவியது. இவர் தி நியூயார்க் டைம்ஸ் இதழில் 15 ஆண்டுகள் பணியாற்றியவர். Scheer Post-ல் 2020ல் வெளியான கட்டுரை. முதலாளித்துவ எழுத்தாளர்களே முதலாளித்துவத்தின் தோல்வியை எழுதுகின்றனர். அது நீடிக்கக் கூடாது என்கின்றனர்.)


நாகராசு

மீள்பதிவு : நீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா ?

1

நண்பர்களே,
பார்வையாளர்கள் படைப்பாளிகளாக மாறும் வாய்ப்புகளை வழங்குகிறது இன்றைய தொழில் நுட்பம். உங்களிடம் இருக்கும் செல்பேசியை எடுங்கள்! உங்களைச் சுற்றியுள்ள வாழ்வின் பரிமாணங்களை படம் பிடியுங்கள்! வினவு புகைப்படக் கட்டுரைகளில் உங்கள் படங்களும் இடம்பெற வேண்டும். நமது காலத்தின் அழகை, போராட்டத்தை, மாற்றத்தை பதிவு செய்வோம்
அன்புடன் அழைக்கிறோம்
நட்புடன்
வினவு

காட்சியுலகம் கருத்துலகை விஞ்சி நிற்கும் காலமிது! கருத்துலகமே காட்சியுலகை தீர்மானிக்கிறது என்றாலும் காட்சியுலகமே அதிக பார்வைகளைப் பெற்று வருகிறது. ஒளிச்சுருள் காலத்தில் காமரா ஒரு தனிவகையான சிறப்புக் கருவி. செல்பேசி காலத்தில் செல்ஃபியாக மாறிய காமரா நம்முடன் எப்போதும் இருப்பது அவசியமாகி விட்டது.

ன்னையும் தம்மையும் சுற்றம் – நட்பையும், வார இறுதி மகிழ்ச்சிகளையும் படம் பிடிக்கும் ஆண்ட்ராய்டு செல்பேசியை ஒரு மக்கள் பத்திரிகையளராய் நாம் பயன்படுத்தலாம். கொஞ்சம் பார்வை, ஓரளவு திறன், பயண நாட்டம் இருந்தால் போதும். உங்களைச் சுற்றி இருக்கும் நிகழ்வுகள், மனிதர்கள், தருணங்கள் உங்களது கேமரா படமெடுப்பதற்காக எப்போதும் காத்துக் கொண்டிருக்கின்றன.

க்கள் பத்திரிகையாளர்கள் – இது இணையம் வளர்ந்த பிறகு தோன்றிய முன்னேற்றம். கார்ப்பரேட் ஊடகங்களே இப்படி செய்தி – படங்களை அனுப்புமாறு மக்களைக் கோருகின்றன. அப்படியானால் மக்கள் ஊடகமான வினவு தளத்தில் உங்கள் பங்கேற்பு வேண்டுமல்லவா?

நீங்கள் சென்னையில் இருக்கலாம். கொழும்புவில் இருக்கலாம். இலண்டனில் நடக்கலாம். சிங்கப்பூரில் வாழலாம். அரபுலகில் வசிக்கலாம். அமெரிக்காவில் வேலை செய்யலாம். உங்களைச் சுற்றி எண்ணிறந்த மனிதர்கள் இருக்கிறார்கள். வேறுபட்ட பண்பாட்டு சூழல் நிலவுகிறது. மொழி-மதம்-பாலினம்-வேலை என வேறுபட்டிருந்தாலும் மக்களை மனித சமூகமாய் ஒன்றிணைய வைக்கும் இழை ஒன்றிருக்கிறது. அதை கண்டுபிடிக்கலாம்.

ங்கள் செல்பேசியை எடுத்துக் கொள்ளுங்கள். புகைப்பட ஏற்பாடுகளை சரிபாருங்கள். வெளியே செல்லுங்கள். உங்களுக்கே தெரியாத ஒரு விசயம், மற்றவரிடம் தெரிவித்தே ஆகவேண்டிய ஒரு விசயத்தை முடிவு செய்யுங்கள். பிறகு அதை படமெடுங்கள்.

ஏதோ ஒரு நிலையில்தான் மக்கள் அழகாக இருக்கிறார்கள். அல்லது அவர்களது ஆளுமை தெரிய வருகிறது. மக்கள், காட்சிகளை நேருக்கு நேர் மையப்படுத்தி எடுக்காமல் ஏதாவது ஒரு ஓரத்தில் இருந்து எடுங்கள். அவர்கள் – அவற்றின் பக்கவாட்டில் இருந்து எடுங்கள். அதையும் நெருக்கமாக, தூரமாக, மையமாக என்று மூன்று நிலைகளில் எடுங்கள். அவர்களது சூழலை விளக்கும் பின்னணிக் காட்சியோடு எடுங்கள். பிறகு அந்த படத்தில் இருக்கும் காட்சிகள் – மனிதர்கள் பேசுவார்கள். அவ்வளவுதான். இதையே தொடர்ந்து செய்யும் போது நீங்கள் ஒரு புகைப்படச் செய்தியாளர்.

இந்த வாரம் உங்களுக்குரிய தலைப்பு – காத்திருப்பு!

து மக்கள் அன்றாட வாழ்க்கையின் பொருட்டு எங்கோ எதற்கோ காத்திருக்கிறார்கள். நீண்ட நேரமோ, குறுகிய நேரமோ, சலிப்புடனே, உற்சாகத்துடனோ காத்திருக்கிறார்கள். இந்த உலகின் எந்த இடத்திலும் மேன் மக்கள் காத்திருக்க தேவையில்லை. நாம்தான் காத்திருக்க வேண்டியிருக்கிறது. காத்திருத்தல் தவறல்ல. அது ஒரு ஒழுங்கு முறை. ஆனால் அந்த காத்திருத்தல் பல நேரம் மகிழ்வாக இருக்கிறதா? பேருந்து வருமா? ரேசனில் அரிசி கிடைக்குமா? இன்று சித்தாள் வேலை கிடைக்குமா? ரயிலில் அமர இடம் கிடைக்குமா? மருத்துவமனையில் உடன் வேலை முடியுமா? என்று ஏகப்பட்ட காத்திருப்புகள் இருக்கின்றன

வெளிநாட்டிலும் இத்தகைய காத்திருப்புகள் இருக்கலாம். விமான நிலையத்திலோ, பெட்ரோல் பங்கிலோ, உணவக விடுதிகளிலோ, திரையரங்குகளிலோ கூட இருக்கலாம். காத்திருப்பவர் ஒரு கேப் டிரைவர், ஒரு லாரி ஓட்டுநர், ஒரு தொழிலாளி, ஒரு மாணவர், பெற்றோர் யாராக வேண்டுமானால் இருக்கலாம். அங்கே பல்தேசிய மக்கள் இருப்பார்கள். அவர்களிடம் அன்றாட வாழ்க்கைக்காக ஏதாவது ஒரு இடத்தில் காத்து நிற்கும் போது என்ன தோன்றும் எனக் கேளுங்கள்! ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு கவிதை வரும்!

விதையை எழுத்தாக்குங்கள். காட்சியை படமாக்குங்கள்! இந்தக் கருவில் எத்தனை படம் வேண்டுமானாலும் எடுங்கள். எடுக்க எடுக்க உங்கள் பார்வை செதுக்கப்படும். செல்பேசியோடும் பிணைந்துள்ள வாழ்வை உற்சாகத்தோடும், பயனுள்ள முறையிலும் கழிக்கலாம்.

vinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது
வினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 93 8465 9191 உடன் அனுப்புங்கள்.
கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்!
தெரிவு செய்யப்படும் படங்கள் வரும் வார இறுதியில் வெளியிடப்படும்.
அடுத்த வாரம் இன்னொரு தலைப்பு!

புகைப்படங்களை எடுக்கப் போகும் மக்கள் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் படங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

ஆர்.எஸ்.எஸ் – பாஜக, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம் ! மாநாடு துண்டறிக்கை !

ஆர்.எஸ்.எஸ் – பாஜக, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்!

செப்டம்பர் 17 – சென்னையில் மாநாடு

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

பேயாட்சியின் பிடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம். உழைக்கும் மக்கள் நிம்மதியாக வாழ முடிகிறதா இந்த ஆட்சியில் பசி, பட்டினிச்சாவு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வரி உயர்வு, வேலையின்மை, கார்ப்பரேட் நாசகரத் திட்டங்களால் வாழ்வாதாரப் பறிப்பு – என அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது நமது வாழ்வு!

2014-ல் ரூபாய் 400-க்கும் குறைவாக இருந்த  சிலிண்டர்  விலை, 170 சதவிகிதம் உயர்ந்து 1,100-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் என எதையும் வாங்கிச் சமைக்க முடியவில்லை. விலைவாசி விஷம் போல ஏறுகிறது. தயிருக்கும் உப்புக்கும் கூட ஜி.எஸ்.டி வரியைக் கூட்டுகிறது பாசிச மோடி ஆட்சி.

வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. அதன் சதவிகிதம் 7.83 ஆக உயர்ந்திருக்கிறது. 15 முதல் 19 வயதே உள்ள இளந்தலைமுறையினரின் வேலையின்மை சதவிகிதம்தான் 50-க்கு மேல் உள்ளது. கடந்த மே-ஜூன் வரையிலான ஒரே மாதத்தில் 1.6 கோடி பேர் வேலையிழந்திருக்கிறார்கள். ‘அக்னிபத்’ என்ற பெயரில் இராணுவமே காண்டிராக்ட்மயமாக்கம். இனி அனைத்து அரசு வேலைகளும் காண்டிராக்ட் கொத்தடிமை மயமே என்பதற்கான கட்டியம் கூறல் இது.

2018 – 2020-க்கு  இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில், கடன் நெருக்கடி, வேலையின்மை, வியாபார நெருக்கடி போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 25,000 பேர். 20 ஆண்டுகளில் இல்லாத அளவு தானிய உற்பத்தி பெருகியிருக்கிறது. ஆனால், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் நாளொன்றுக்கு 4,500 குழந்தைகள் பட்டினியால் சாகின்றன. 70 சதவிகித மக்கள் சத்தான உணவு உட்கொள்ள முடிவதில்லை என்கிறது ஒரு ஆய்வறிக்கை.


படிக்க : ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! | மாநாடு அறிவிப்பு !


மதவெறி, சாதிவெறி கலவரங்களைத் தூண்டிவிட்டு முசுலீம்கள், கிறித்தவர்கள், தலித்துகள் என சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஒரு உள்நாட்டு போரையே நடத்திவருகிறது ஆர்.எஸ்.எஸ் என்ற பாசிச குண்டர் படை. அதன் அரசியல் கட்சிதான் பாஜக.

ஒட்டுமொத்த முசுலீம்களையும் இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக அறைகூவுகிறது ஆர்.எஸ்.எஸ். இந்துப் பண்டிகைகளில் மதவெறி ஊர்வலங்கள் நடத்தி முசுலீம் மக்கள் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறார்கள் காவி குண்டர்கள்.  ஹிஜாப் அணியத் தடை, பாங்கு ஓதத் தடை, வியாபாரம் செய்யத் தடை என குடிமக்களின் அடிப்படை உரிமைகள் கூட பறிக்கப்படுகிறது. பாபர் மசூதி தீர்ப்பு தொடங்கி எல்லா வழக்கிலும் நீதிமன்றம் உட்பட அவர்களை வஞ்சிக்கிறது. இந்த அநீதிகளை எதிர்த்து போராடினால், புல்டோசரை வைத்து வீட்டை இடிக்கிறார்கள். அனைத்து உரிமைகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பாடுகிறார்கள் முசுலீம்கள்.

உண்மையில் இந்த ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி யாருக்கானது? கார்ப்பரேட்டுகளின் அதிலும் குறிப்பாக பார்ப்பன – பனியா சாதியைச் சேர்ந்த அம்பானி, அதானி கும்பலுக்கே இந்த ஆட்சி சுபிட்சம்.

அதானிக்கு ஆஸ்திரேலியாவில் சுரங்கம் வாங்க பேரம் பேசுவதற்கு மோடியே விமானத்தில் போகிறார்; மின் உற்பத்தி டெண்டர் தரச்சொல்லி இலங்கை அரசிடம் பேசுகிறார். இப்படி எட்டாண்டுகளில் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் மட்டும் அதானி அடைந்த லாபம் 3,39,700 கோடி. அம்பானியின் ஜியோவுக்கு மோடியே விளம்பரதாரராக நடித்ததை நாம் மறந்திருக்க முடியாது. கடந்த பத்தாண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 1830 சதவீதமும் அம்பானியின் சொத்து மதிப்பு 400 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. இவர்கள் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டாப் 10-இல் உள்ளார்கள். இதற்கு கைமாறாக தேர்தல் நிதி என்ற பெயரில் பாஜகவை கோடிகளால் குளிப்பாட்டுகிறது அம்பானி – அதானி கும்பல். இரயில்வே, விமானம், நெடுஞ்சாலை, மருத்துவம், எல்.ஐ.சி என மக்களுக்கு சேவையாற்றும் அனைத்து துறைகளையும் இக்கார்ப்பரேட்டுகளுக்கு விற்றுத் தள்ளுகிறது மோடி ஆட்சி.

இந்த ஆட்சிக்கு எதிராக துணிச்சலோடு களத்தில் நிற்கும் செயல்பாட்டாளர்கள் பொய்வழக்கில் கைதுசெய்யப்படுகிறார்கள். ‘மோடியைக் கொல்ல சதி’ என்ற பெயரில், ஒரு மொட்டைக் கடிதத்தை ஆதாரமாகக் கொண்டு 16 செயல்பாட்டாளார்கள் கைதுசெய்யப்பட்டார்கள். பழங்குடிகளுக்காக போராடிய 83 வயதான பாதிரியார் ஸ்டான் சுவாமி, சிறைக் கொடுமையால் கொல்லப்பட்டார். குஜராத் படுகொலை வழக்கில் மோடிக்கு எதிராக வழக்கு தொடுத்த தீஸ்தா சேதல்வாட், போலீசு அதிகாரி சிறீகுமார் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்; கொலைக்குற்றவாளி மோடியோ சட்டப்படி விடுதலை செய்யப்படுகிறார். ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் போலிச் செய்திகளை அம்பலடுத்திய குற்றத்திற்காக ஆல்ட் நியூஸ் நிறுவனத்தின் இணையாசிரியர் ஜீபைர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மோடிக்கு எதிராக வாயைத் திறந்தாலே கைது வழக்குதான் என்பதை இயல்புநிலையாக்குகிறார்கள்.

ஏதோ ஐந்தாண்டுகள் ஆண்டுவிட்டுப் போகும் கட்சி அல்ல பாஜக. இதற்கு பின் ஆர்.எஸ்.எஸ். என்ற பாசிச பயங்கரவாத அமைப்பு இருக்கிறது. மக்களை நூறுகூறாகப் பிரித்து, சாதி ஏற்றத்தாழ்வை – பார்ப்பன ஆதிக்கத்தை மீண்டும் நவீன வடிவில் நிலைநாட்டுவதே இதன் குறிக்கோள். இதைத்தான் அவர்கள் ‘இந்துராஷ்டிரம்’ என்கிறார்கள். மறுபக்கம் தங்களுக்கு புரவலர்களாக இருக்கும் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் கும்பல் நாட்டை சூறையாட ஏற்பாடு செய்துகொடுக்கிறார்கள். இந்த இரண்டு நோக்கத்திற்கும் சேவைசெய்யும் வகையில் பாராளுமன்றம், தேர்தல் ஆணையம், சிபிஐ, ரிசர்வ வங்கி, இராணுவம் என பல துறைகளின் உயர் மட்டங்களிலும் தங்கள் ஆட்களை நிரப்பியிருறார்கள். அரசமைப்புச் சட்டத்தையே கூட அவர்களுக்கு தோதான வகையில் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன், நாடாளுமன்றத்தில் என்னென்ன வார்த்தைகள் பேசவேண்டும் என பட்டியல் வெளியிட்டிருகிறார்கள்; நாடாளுமன்ற வளாகத்தில் போராடக்கூடாதாம். எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கிடையே கூட எத்தனையோ சட்டங்களை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. கூக்குரலிடவும் போரடவும் மட்டும்தான் எதிர்கட்சிகளால் முடிந்தது. தற்போது அதற்கும் தடை.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற பெயரில் அனைத்து அதிகாரங்களையும் ஒற்றையாட்சியின் கீழ் கொண்டுவந்துகொண்டிருக்கிறார்கள். நீட், ஜி.எஸ்.டி. புதிய கல்விக் கொள்கை, வேளாண் சட்டங்கள், அணைகள் பாதுகாப்பு மசோதா என பல்வேறு சட்டங்களின் மூலம் பெயரளவிலான மாநில உரிமைகள் கூட பறிக்கப்பட்டுவிட்டன.


படிக்க : இந்து ராஷ்டிரத்தை அடித்து நொறுக்குவோம்!


தான் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்டவற்றை ஏவி அச்சுறுத்துவது; எம்.எல்.ஏ.க்களை விலைபேசுவது ஆகியவற்றின் மூலம் இதுவரை 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது பாஜக. புதுச்சேரி, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், தற்போது மஹாராஷ்டிரம் என நாறுகிறது சொல்லிக் கொள்ளப்படும் மக்களாட்சி. மற்றொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ். ஆளுநர்களைக் கொண்டு அறிவிக்கப்படாத இணையாட்சியை நடத்துகிறார்கள். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியே அதற்கு சாட்சி.

பாசிசப் பேயாட்சியால் நாடே குமுறி வருகிறது. ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, வேளாண் திருத்தச் சட்ட எதிர்ப்பு, குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, பொதுத்துறை தனியார்மயமாக்க எதிர்ப்பு, காண்டிராக்ட் மயமாக்க எதிர்ப்பு, வேலையின்மைக்கு எதிராக, விலைவாசி உயர்வுக்கு எதிராக, மதவெறி-சாதிவெறித் தாக்குதல்களுக்கு எதிராக என உழைக்கும் மக்களாகிய நமது அனைத்து வகை குமுறலும் இந்த ஆட்சிக்கு எதிராகத்தான் நிற்கிறது.

இசுலாமியர்கள், தலித்துகள், வணிகர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என அனைவரும் தனித்தனியாப் போராடி வருகிறோம். நம்முடைய போராட்டங்களின் இலக்கு ஆர்.எஸ்.எஸ் – பாஜக அம்பானி அதானி பாசிசத்தை முறியடிப்பதாக மாறவேண்டும். ஆர்.எஸ்.எஸ் – பாஜக மக்கள் அடித்தளத்தில் ஊடுருவி ஆதரவு பெறுகிறார்கள். அதுபோல நாமும் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு தொழிற்சாலையிலும், ஒவ்வொரு பள்ளியிலும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிகளை கட்டி காவி – கார்ப்பரேட் பாசிசக் கும்பலை நேருக்குநேர் சந்தித்து முறியடிக்க வேண்டும். அப்படிப்பட்ட முன்னணிகளே பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணிக்கு பின்புலமாக அமையும். அதுவே ஆர்.எஸ்.எஸ் – பாஜக, அம்பானி – அதானி பாசிச கும்பலை வீழ்த்தும். அதற்காகத்தான் உங்களை அறைகூவி அழைக்கிறோம்…! எங்களோடு இணையுங்கள், மாநாட்டுக்கு நிதி தாருங்கள் !

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை
தொடர்புக்கு :- 97916 53200, 94448 36642, 73974 04242, 99623 66321.


பதினைந்தாம் ஆண்டில் வினவு: சூறாவளியாய் சுழன்றடிப்போம்! கை கோருங்கள் வாசகர்களே!

5

அன்பார்ந்த வாசகர்களே, தோழர்களே,

வினவு 15-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அந்த வகையில் தங்களுக்கு எமது புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உலகத்தின் மாபெரும் மந்தம் அமெரிக்காவில் தொடங்கிய போது வினவு வலைப்பூவாகத் தொடங்கப்பட்டது. அது 2008. இன்று, 14 ஆண்டுகளைக் கடந்து 15-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. உலகம் முழுவதும் தமிழ் அறிந்த அரசியல் முன்னணியாளர்களிடம் வினவு ஒரு அங்கமாகியிருக்கிறது.

2008 ஜூலை 17 வினவு தொடக்க நாள்!

இந்த 13 ஆண்டுகள் தொடர்ச்சியான முன்னேற்றத்தை சந்தித்து வந்த வினவும் தனது 13-வது ஆண்டில் பெரும் நெருக்கடிக்குள்ளாகியது. மக்களுக்கு ஏற்பட்டது கோவிட் நெருக்கடி எனில், வினவில் ஏற்பட்டது அரசியல்-அமைப்பு நெருக்கடி. ஆளும் வர்க்கங்களால் உழைக்கும் மக்கள் சந்தித்த நெருக்கடிகளின் ஒரு அங்கமாக, சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமாக நடந்து கொண்டிருந்த தருணத்தில் வினவு முடங்கியது.

வினவின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்கள் இணைந்து சதித்தனமாக, வினவிலேயே தமது விலகல் கடிதத்தையும் வெளியிட்டு, தலைமறைவாகினர். அதனைத் தொடர்ந்து வினவின் ஆசிரியர் குழு பொறுப்பில் இருந்து விலகுவதாக வினவிலேயே அறிவித்தது. இவையெல்லாம், வினவின் வாசகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இத்தனை ஆண்டுகள் முன்னேற்றகரமாக இருந்த வினவு என்ன ஆகும் என்று அஞ்சத் தொடங்கினர்.

புரட்சிகர அரசியலுக்கு நம்பிக்கைக்குரிய இடமாக இருந்த வினவு தளத்தில் நடந்த இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து சுமார் ஒரு மாதம் வினவும் முடக்கப்பட்டதானது, வினவுக்கும் அதன் வாசகர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும்.

வினவு தொடங்கிய காலத்தில், வலைப்பூக்களும், இணைய தளங்கள் மட்டுமே இணைய உலகில் இருந்தன. அதிலும் வினவு அளவிற்கு செல்வாக்குள்ள ஒரு தளம் அன்று இல்லையென்றே சொல்லலாம்.

ஆனால், 2020-ஆம் ஆண்டிலோ நிலைமை முற்றிலும் வேறானது. பல சமூக ஊடகங்கள் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருந்தன. தமிழில் அரசியல் இணைய தளங்களும் வந்திருந்தன. இதனால், வினவில் நடக்கும் விவாதங்கள் தொடக்க காலங்களில் இருந்த அளவிற்கு இல்லாமல் போயிருந்தது.

இந்த சூழலில், வினவை முடக்கியதானது, புரட்சிகர அரசியலுக்கும் வினவுக்கும் செய்த துரோகத்தைத் தவிர வேறெதுவும் இல்லை.

2020-ஆம் ஆண்டில் மீண்டும் வினவு எழுந்து நடக்கத் தொடங்கினாலும் நெருக்கடியில்தான் அதுவும் நடந்தது. அரசியல் தலைமையில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து வினவுக்கு இருந்த நெருக்கடிகள் 2020 ஆகஸ்டில் முடிவுக்கு வந்தன. இதனைத் தொடர்ந்து வினவானது இரண்டாவதாக பிறப்பெடுத்து பயணிக்கத் தொடங்கியது.

இது வினவுக்கு மட்டுமல்ல, புரட்சிகர இதழ்கள் பலவற்றிற்கும் கடந்த காலங்களில் நடந்ததுதான். வினவும் கடந்து வந்துள்ளது!

வாசகர்கள் குறைந்துவிட்டனர், கும்பலாக பல தோழர்களுடன் சுறுசுறுப்பாக இயங்கிய வினவு அலுவலகம் ஒருசிலருடன் சுருங்கிவிட்டது. இனி, வினவு ஒழிந்துவிடும் என்று எதிரிகளும் துரோகிகளும் நகைத்துக் கொண்டிருந்தனர்.

2021 தொடக்கத்தில் வினவில் சில பதிவுகள் மட்டுமே வந்து கொண்டிருந்தன. பதிவுகளே வெளிவராத நாட்களும் பல. சமூகத்தின் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் போனவற்றில், வினவின் இரண்டு பிறந்த நாள்களும் அடங்கும்.

வினவு முடக்கப்பட்டது – 2020 பிப்ரவரி 25
மீண்டும் வினவு செயல்படத் தொடங்கியது – 2020 மார்ச் 23
இது வினவுக்கு ஒரு லாக்டவுன்

இந்த சமகாலத்தில் மக்களின் நிலைமை என்ன?

வரலாற்றில் முன்னுதாரணமில்லாத வகையில், மக்கள் கோவிட் பெருந்தொற்றால் தவித்துக் கொண்டிருந்தனர். உலகமே ஸ்தம்பித்திருந்தது; அச்சு ஊடகங்களின் காலமும் இத்துடன் முடிந்துவிடும் என்று சொல்லுமளவிற்கு எல்லா பணிகளும் முடங்கி இருந்தன. தொலைக்காட்சி மற்றும் இணைய உலகம் மட்டும்தான் மக்களுக்கு உலக நடப்புகளை தெரிந்து கொள்வதற்கு ஒரே வழியாக இருந்தது.

மக்கள் படும் துன்பங்களையும் அரசின் அலட்சியங்களையும் கோவிட் பெருந்தொற்றின் பின்னே உள்ள அரசியலையும் வீச்சாகப் பேச வேண்டிய தருணத்தில்தான், வினவில் நெருக்கடியும் உருவானது. அந்த நெருக்கடியுடனேயே தன்னால் இயன்ற அளவு இப்பிரச்சினைகளை வெளி உலகிற்குக் கொண்டுவந்தது.

பல முக்கியமான கட்டுரைகள் வாசகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றன.

கோவிட் பெருந்தொற்றை ஒட்டி ஒன்றிய அரசின் செயல்பாடுகளை அம்பலப்படுத்திக் கொண்டுவரப்பட்ட கட்டுரைகள், தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக கொண்டுவரப்பட்ட கட்டுரைகள், காவி எதிர்ப்பில் திமுகவின் சந்தர்ப்பவாதங்கள், அதன் கார்ப்பரேட் சேவை தொடர்பான கட்டுரைகள், இலங்கை அரசியலைக் கூர்ந்து கவனித்துக் கொண்டுவரப்பட்ட கட்டுரைகள், காவி-கார்ப்பர்ரேட் பாசிச அடக்குமுறைகளை அம்பலப்படுத்திய கட்டுரைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.

***

சர்வதேச அளவில் அமெரிக்காவின் ஒற்றைத் துருவ மேலாதிக்கம், அதன் இறுதிக்கட்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கைநழுவிக் கொண்டிருக்கும் உலக மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டிக் கொள்ளும் பொருட்டு, மூர்க்கமான போர்வெறியுடன் உக்ரைனைத் தூண்டிவிட்டுள்ளது. இதன் மூலம், இரசிய, உக்ரைன் போர் மூண்டு 150-க்கும் மேற்பட்ட நாட்களைக் கடந்துள்ள இன்றைய நிலையில், உலக பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது.

பொருளாதார நெருக்கடி, பாசிஸ்டுகளின் ஆட்சிகள், உலகப் போர் போன்றவை உலக மக்களை வாட்டி வதைக்கின்றன. பல நாடுகள் தொடர்ந்து போர்க் களத்திலும் போராட்டக் களத்திலுமே இருக்கின்றன. ஒரு அலை போல இந்த போராட்டங்கள் உலக நாடுகளைச் சுற்றிவருகிறது.

வினவு உச்சத்தில் இருந்த போது
மாதம் 200 பதிவுகள் வரை வெளிவந்தன.
அதிகபட்சமாக 224 பதிவுகள் வந்துள்ளன.

நமது நாட்டில், காவி-கார்ப்பரேட் பாசிசம் அனைத்து துறைகளிலும் வேகமாக அரங்கேறி வருகிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இதனை எதிர்ப்பதில் சந்தர்ப்பவாதமாக செயல்பட்டு வருகின்றன. எந்தக் கட்சியும் கார்ப்பரேட் சேவை மட்டும் கைவிடவில்லை. புரட்சிகர ஜனநாயக சக்திகள், சிறுபான்மை மக்கள், தலித் மக்கள், பழங்குடியின மக்கள்தான் பாசிசத்தை நேரடியாக எதிர்கொண்டு வருகின்றனர். பாசிஸ்டுகள் ஒருங்கிணைந்த வகையில் திட்டமிட்டு செயல்படும் இச்சூழலில், பாசிச எதிர்ப்பு சக்திகளில் ஒருங்கிணைப்போ பலவீனமாக உள்ளது.

ஆனால், அண்டை நாடான இலங்கையில் மக்கள் வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டம் இந்தியாவிற்கும் பரவிவிடுமோ என்று ஆளும் வர்க்கங்கள் அஞ்சிக் கொண்டிருக்கின்றன.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவாசாயிகளின் போராட்டம், அக்னிபாத்திற்கு எதிராக மாணவர்-இளைஞர்கள் போராட்டம், தனியார் கல்வி நிறுவனத்திற்கு எதிரான கள்ளக்குறிச்சிப் போராட்டம் என்று போராட்டங்கள் நாள் தோறும் புதிய உச்சத்தை அடைந்து கொண்டிருக்கின்றன.

பாசிஸ்டுகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருப்பதால், கடுமையான ஒடுக்குமுறைகளைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி, இந்துராஷ்டிரத்தைப் படைத்துவிடலாம் என கனவு காண்கின்றனர். ஆனால், உழைக்கும் மக்களோ தங்களால் இயன்ற பல்வேறு வகைகளில் இவற்றை எதிர்க்கொண்டு வருகிறனர்.

அந்த மக்களுடன் வினவும் தொடர்ந்து பயணிக்கும், மக்களுக்கு தோள்கொடுக்கும்!

***

நெருக்கடிகள் பல பாடங்களை விட்டுச் செல்கின்றன. புரட்சிகர ஊக்கமான சக்திகள்தான் அதில் இருந்து கற்றுக்கொள்கின்றன. வினவும் இதற்கு விதிவிலக்கல்ல.

வினவின் எழுத்தாளர்களும் பதிவாளர்களும் அலுவலகத்தில் நிறைந்து இருந்த சுழல் இன்று மாறி உள்ளது. பல கள எழுத்தாளர்கள் வினவுக்கு எழுதத் தொடங்கி உள்ளனர். புதிய எழுத்தாளர்கள் பலர் உருவாகி வினவில் பதிவுகளை எழுதி வருகின்றனர். 2021 மார்ச் இறுதியிலிருந்து சொந்தப் பதிவுகளை மட்டுமே கொண்டு வினவு இயங்கி வருகிறது.

வினவின் கட்டமைப்பில் ஏற்பட்ட இந்த மாற்றமானது வினவை மேலும் விரிவுப்படுத்துவதாகவும், மீண்டும் ஒரு நெருக்கடி வினவுக்கு வந்தாலும் மீளும் வழிவகை கொண்டதாகவும் அமைந்துள்ளது. வினவை மக்களிடமும் புதிய எழுத்தாளர்களிடமும் கொண்டுசென்று சேர்த்துள்ளது.

தோழர் மாவோ சொல்வது போல, தீமை நன்மையாக மாற்றப்பட்டுவிட்டது!

ஜூலை 2021-இல் இருந்து களச் செய்திகள் உழைக்கும் மக்களின் அனுபவங்களை எழுதத் தொடங்கியுள்ளோம். தூய்மைப் பணியாளர் போராட்டங்கள், செவிலியர் போராட்டம், தற்காலிக விரிவுரையாளர் போராட்டம், திம்பம் மலைப்பாதையில் மக்கள் போராட்டம், கோவை மலுமிசைப்பட்டி தலித் மக்கள் போராட்டம், பாலியப்பட்டு மக்கள் போராட்டம், ஆத்தூர் தலித் மக்கள் கோவில் நுழைவைத் தடுப்புக்கு எதிரான போராட்டம்,மேச்சேரி தலித் ஆசிரியர் மீதான அடக்குமுறை கண்டித்து மக்கள் நடத்திய போராட்டம், ஜி.எஸ்.டி., கல்விக் கொள்ளை போன்றவை தொடர்பான உழைக்கும் மக்களுடன் கருத்துரையாடல்… என பல பதிவுகள், களச்செய்தியாளர்களால் எழுதப்பட்டவையாகும். இதன் மூலமாக, வினவு பல்லாயிரம் புதிய மக்களுக்கு அறிமுகமாகியுள்ளது.

இந்தக் கட்டுரைகள் வெறுமனே செய்திகளைச் சொல்வதாக மட்டுமின்றி, உழைக்கும் மக்களின் வலியை நமக்கு கடத்துபவையாகவும் அமைந்திருந்தன என பல வாசகர்கள் தெரிவித்தனர்.

வினவு காத்திரமான பல கட்டுரைகளையும் கொண்டு வருகிறது.

மக்கள் போரட்டம் என்றால் அதற்கு தொடர்ச்சிக் கொடுக்க முயன்று வருகிறோம். கள்ளக்குறிச்சி மக்கள் போராட்டத்தின் மீதான அரசின் அடக்குமுறை தொடர்பாக வினவு வெளியிட்ட பதிவுகள் சிறு முயற்சியாகும். இன்னும் இந்த திசையில் வினவு அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து கட்டுரைகளைக் கொண்டுவருகிறோம். வீடியோ பதிவுகளை அதிக்கப்படுத்தியுள்ளோம். தோழமை அமைப்புகள் மூலமாக களச்செய்திகளைக் கொண்டுவருகிறோம்.

மேலும், வீடியோ பதிவுகளை அதிகரிக்க வேண்டியுள்ளது; கேலிச்சித்திரங்கள், நூல் அறிமுகம், கேள்வி-பதில் உள்ளிட்ட பல வடிவங்களில் பதிவுகளைக் கொண்டுவர வேண்டியுள்ளது.

இன்று, இணையதளம் மட்டுமின்றி, வினவின் யூடியுப், முகநூல் பக்கங்கள், டிவிட்டர் பக்கங்கள் என பல லட்சம் பேர் வினவைப் பின் தொடர்கிறார்கள். இது கடந்த நான்காண்டுகளில் பெரிய வளர்ச்சியாகும். மற்ற மாற்று ஊடகங்களுடன் வினவை ஒப்பிடும் போது இது மிகப் பெரும் சரிவாகும். ஆனால், நெருக்கடிகளை கடந்து மீண்டு வந்துள்ள வினவிற்கு இது வெற்றியாகும்.

வாசகர்களின் ஆதரவு தான், இன்றைய சூழலில் முற்போக்கு, புரட்சிகர அரசியலை பரப்பும் ஊடகங்களில் வினவை முன்னிலைக்கு கொண்டுவந்துள்ளது.

வினவில் ஏற்பட்ட நெருக்கடியின் போது அனைத்து வாசகர்களும் மாத சந்தா தருவதை நிறுத்திவிட்டனர். வினவு மீண்டும் செயல்பட தொடங்கிய பின்னர், வினவின் செயல்பாடுகளில் நம்பிக்கை ஏற்பட்டு ஒரு சில வாசகர்கள் மீண்டும் நன்கொடை கொடுக்கத் தொடங்கி இருப்பது ஆறுதலை அளிக்கிறது.

வினவு கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. உங்களது நிதி ஆதரவை பெரிதும் எதிர்நோக்கியுள்ளது.

மேலும், வினவு அலுவலக எழுத்தாளர்களைவிட, கள மற்றும் வெளி எழுத்தாளர்கள், பதிவர்களையே அதிக அளவில் சார்ந்திருக்கிறது. வாசகர்களாகிய நீங்களும் அவ்வாறு பங்களிக்க முடியும், பங்களிக்க வேண்டும்.

2022-ஆம் ஆண்டில் வினவு பல ஏற்றங்களை சந்திக்கும் என்று நம்புகிறோம். காவி-கார்ப்பரேட் காரிருள் சூழ்ந்துள்ள இன்றைய சூழலில் மக்கள் போராட்டங்களும் வளர்ந்து வருகின்றன. இந்தக் காலத்தில் ஒரு புரட்சிகர பலம் என்ற வகையில் வினவு மேலும் வேகமாக செயல்பட வேண்டி உள்ளது.

போகும் பாதை வெகு தூரம். புரட்சிகர சமூக மாற்றத்தை தவிர, பின்னடைவுகளும் வேற எந்த முன்னேற்றங்களும் நாம் கற்றுக்கொள்ளத்தக்கவையே.

கற்றுக்கொள்வோம், மீண்டெழுவோம்!
சூறாவளியாய் சுழன்றடிப்போம்!
கை, கோருங்கள் வாசகர்களே!

வினவு

 


உலக ஆளும் வர்க்கம், முடிவில்லாத போர், மக்களின் கொத்துக் கொத்தான மரணம்! – பாகம் 1

0

லகை ஆளுகின்ற ஆளும் வர்க்கக் கும்பல் எந்தவித பொறுப்புணர்வுமின்றி ஆட்சியை நடத்திக் கொண்டுள்ளது. மக்கள் அடிமை முறைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சுற்றுச் சூழல் மிக மோசமாக நாசமாகிக் கொண்டுள்ளது. மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிவது அன்றாட நிகழ்வாக மாறிக் கொண்டுள்ளது.

எதிர்காலம் பற்றி எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாமல் உள்ளது. சுற்றுச் சூழல் முற்றாக நாசமாகிக் கொண்டிருப்பது பற்றி ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன. இந்த சுற்றுச் சூழல் நாசமாவதைத் தடுத்து நிறுத்தக் கூடிய எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுப்பதற்கு உலக ஆளும் வர்க்கம் தயாராக இல்லை. பூமியில் புதைந்துள்ள கரிம எரிபொருள் எடுப்பதை விரைவுபடுத்தி வருகிறோம்! அதை எந்த வரம்புமற்று சுவீகரித்து வருகிறோம்! இவை தவிர, காணுயிர்கள் சுவீகரிப்பு பூதாகரமாகப் பெருகி வருகிறது! ஃப்ராய்டிய மரண விருப்பத்தால் பீடிக்கப்பட்டுள்ளது போல புதுப் புதுப் போர்களை நடத்தி வருகிறோம்! அபோகலிப்சோவின் நான்கு குதிரை ஓட்டிகளைப் போல – ஆக்கிரமிப்பு, போர், வறட்சி மற்றும் மரணம் – இவற்றுடன் 21-ம் நூற்றாண்டிற்குள் பாய்ச்சலில் சென்று கொண்டுள்ளோம்!

ஆள்பவர்கள் யார்? கார்ப்பரேட் நிறுவனங்களின், உலக கோடீசுவர வர்க்கத்தின் ஏவல், எடுபிடி நாய்கள்! இந்த கையளவேயான கார்ப்பரேட்டுகளின் தற்கொலைப் பாதையான பேரழிவுப் பாதையில் ஆட்சியாளர்கள் உலகை இழுத்துச் செல்கின்றனர். கார்ப்பரேட் பகாசுர சூறையாடலை சீர்திருத்துவது பற்றி கூட இந்த ஆட்சியாளர்களின் திட்டத்திலேயே இல்லை. மாறாக இந்த சூறையாடலுக்குப் பணிந்து சேவை செய்கின்றனர்.


படிக்க : இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் !


இந்த பகாசுர சூறையாடலால் உலக மக்கள் சொல்லொனா துன்ப துயரங்களுக்கு ஆளாக்கப் படுகிறார்கள்! இதனால் மரபான சட்ட முறையிலான ஆட்சியை நடத்த முடிவதில்லை. ஒரு பாசிசக் கொடுங்கோண்மை ஆட்சி தேவைப்படுகிறது! அங்கு கோடீசுவர ஆளும் வர்க்க கும்பல் உல்லாச ஊதாரி வாழ்க்கை நடத்தும்! உழைப்பாளிகளோ அடிமைகளாக நடத்தப்படுவார்கள்!

மனித உரிமைகளும் இயற்கை நீதிகளும் செல்லாக்காசாக இருக்கும்! 24 மணி நேரமும் 365 நாட்களும் பெரியண்ணனின் கண்காணிப்பின் கீழ் உலக மக்கள் உழல வேண்டும்! அரசே சாவு வியாபாரிகளாகவும், போர் மட்டுமே அதன் தொழிலாகவும் இருக்கும்! மாற்றுக் கருத்துக்களுக்கு இம்மியளவும் இடமிருக்காதது மட்டுமல்ல அவர்கள் கிரிமினல் குற்றவாளிகளாக்கப்பட்டு நரவேட்டையாடப்படுவார்கள்!

ஏகாதிபத்தியங்களின் இலாப வெறிக்காக தூண்டிவிடப்படும் உள்நாட்டுப் போர்களாலும், சுற்றுச் சூழல் நாசத்தாலும் சொந்த மண்ணிலிருந்து விரட்டப்படும் மக்கள், அகதிகளாக, அந்த மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளில் இப்படிப்பட்ட நாசங்கள் இல்லயே என அங்கு தஞ்சம் புகச் சென்றால் அங்கு நுழைய விடாமல் விரட்டியடிப்பார்கள்!

அன்றாடம் அகதிகள் செத்து மடியும் நெஞ்சை உலுக்கும் செய்திகள் தினசரி நிகழ்வுகளாக எவ்வித எதிர்ப்புமின்றி, பதைபதைப்புமின்றி கடந்து சென்று கொண்டிருக்கின்றன! இன்றைக்கு இப்படிப்பட்ட கொடுமைகள் நமக்கில்லை என மகிழ்ந்து கொண்டுள்ள உல்லாச ஊதாரி கும்பல் நாளை இதே கொடுமைகளுக்குப் பலியாகி செத்து மடியும் அவலத்தைக் காண உலகில் யாரும் இருக்க மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி!

தண்டிக்கப்பட்டு கைவிடப்பட்ட கோடானு கோடி மக்கள் தமது எதிர் காலம் பற்றித் தெரிந்து வைத்துள்ளனர். அவர்களுக்கான எதிர்காலம் இப்போதே வந்து விட்டது. நமது தலைமுறையின் மிக முக்கியமான பதிப்பாளரும் ஆஸ்த்திரேலிய குடிமகனுமான ஜூலியன் அசாஞ்சேவை அகதி என்று கூடப் பார்க்காமல் சர்வதேச சட்ட விதிகளை மீறி பிரிட்டன் அரசு கைது செய்தது! ஏகாதிபத்தியங்கள் நடத்தும் ரகசிய சதிச் செயல்களை விக்கி லீக்ஸ் என்ற இணைய இதழில் அம்பலப்படுத்தி உலக மக்களை எச்சரித்த அவரை கைது செய்ய அலைபாய்ந்த அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்த பிரிட்டன் அரசு அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடிவு செய்த செய்தி நமக்கெல்லாம் தெரிந்த ஒரு உதாரணம் தான்!

உலக சாவு வியாபாரிகளின் ரகசிய சதித் திட்டங்களை, பழிவாங்கும் நடவடிக்கைகளை, அவர்களின் இழிவான பண்புகளை, கார்ப்பரேட்டுகளின் – அரசுகளின் ஊழல் கிரிமினல் குற்றங்களை அம்பலப்படுத்தும் யாராயிருந்தாலும் அவர்கள் கிரிமினல்களாக முத்திரை குத்தப்பட்டு வேட்டையாடப் படுவார்கள் என்றால் எத்தனை பத்திரிகையாளர்கள் தமது உயிருக்குத் துணிந்து உண்மைகளை வெளிக்கொண்டு வருவார்கள் என எதிர் பார்ப்பீர்கள்? இன்றைக்கு ஜனநாயகத்தின் தூண் என சொல்லப்படும் பத்திரிகை தர்மம் கிரிமினல் குற்றமாக்கப்பட்டு விட்டது! (இந்தியாவிலும் பத்திரிகையாளர்கள் ஒடுக்கப்படுவதும், கொல்லப்படுவதும் நினைவுக்கு வருகிறதா?)

அசாஞ்சே பக்கவாத பாதிப்புக்குள்ளாகி உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது ஒரு பொருட்டல்ல! அவர் அமெரிக்க குடிமகன் இல்லை என்பதோ அவரது விக்கி லீக்ஸ், அமெரிக்க பதிப்பகம் இல்லை என்பதோ ஒரு பொருட்டல்ல! அசாங்கே தஞ்சம் புகுந்து 7 ஆண்டுகள் வாழ்ந்து வந்த ஈகுடேரிய தூதராலயத்தில் பாதுகாப்புப் பணி புரிந்த ஸ்பெயின் நாட்டின் யுசி குலோபல் (UC Glopal) நிறுவனம் தனிப்பட அசாஞ்சேயும் அவரது வழக்குரைஞரும் பேசியதை அவர்களுக்கே தெரியாமல் சட்ட விரோதமாகப் பதிவு செய்து அமெரிக்காவிடம் கொடுத்தது.

Julian-Assange
ஈக்வடார் தூதரகத்தில் இருந்து வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து செல்லப்படும் அசாஞ்சே.

இது சர்வதேச விதி மீறல்! யாரிடம் போய்ச் சொல்வது? அசாஞ்சேக்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பிரச்சாரம் செய்யப்பட்டது! அவரது வழக்கு விசாரணை ஒரு மோசடி நாடகம்! ஒருமுறை இந்தக் கட்டுரையாளர் நீதிமன்றம் சென்று விசாரணையைப் பார்த்த போது எந்தக் குற்றமுமற்ற, ஹீரோவான அசாஞ்சே, கேளிக்குறிய நபராக எந்த ஜனநாயக உரிமைகளும் அற்றவராக நடத்தப்பட்டார்! அவரை நடத்திய விதத்தில் ஒரு செய்தி சொல்லப்பட்டது! அதாவது, நீ எங்களை அம்பலப்படுத்தினால், நாங்கள் உங்களை ஒழித்துவிடுவோம் என்பதுதான்! (மோடி அரசின் செயல்பாடு போலவே இருக்கிறதே என உங்கள் மனதில் ஓடுகிறதா?)

சீனாவின் பரந்து விரிந்த வியர்வைக் கூடங்களான தொழிலகங்களிலோ துருப்பிடித்துப் போன டெட்ராய்டின் கார்ப்பரேட் நிறுவனங்களிலோ தொழிலாளர்கள் வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட போதாத அற்பக் கூலிக்கு அல்லற்படுகின்றனர். அங்கு பணிப்பாதுகாப்புமில்லை, தொழிற்சங்கங்களுமில்லை! வணிக ஒப்பந்தங்கள், ஆலை மூடல்கள், உயரும் வட்டி வீதம், விலைவாசி உயர்வு என அனைத்தும் தொழிலாளர்களை அழித்தொழித்து வருகின்றன! (இந்தியாவின் நிலைமைகளை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறதா?) அவர்களுக்கும் தமது எதிர்காலம் தெரிகிறது!

வட்டி விகிதம் அதிகரிப்பது மறுதலையாக கூலியைக் குறைக்கிறது. பல பத்தாண்டுகளாக கூலி உயராமல் தேங்கியுள்ளது! இது வேலையின்மையையும், அதனால் தனிநபரின் கடனையும் அதிகரித்து விட்டது! உணவு மற்றும் பிற அடிப்படைத் தேவைகளின் விலை உயர்ந்துவிட்டது! வட்டி விகிதத்தை உயர்த்துவது பொதுவில் பொருளாதார மந்தத்தை உருவாக்கும்! ஆனால் கார்ப்பரேட் பகாசுரக் கொள்ளையர்கள் டிராகுலாக்களைப் போல தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சுவதிலேயே வெறி பிடித்து அலைகின்றனர்! பணவீக்கம் முதலீட்டிலான இலாபத்தைக் குறைப்பதால், ஆலையில் போடப்படும் மூலதனம் குறைகிறது!

கூலி உயர்வதால் விலைகள் உயர்வதில்லை! விலை உயர்வுக்கு சந்தையில் பொருள் வரத்து குறைவதுதான் முக்கிய காரணம்! மறுபுறம் எரிபொருள் விலை உயர்வாலும் கார்ப்பரேட்டுகளின் இலாப வெறியாலும் பொருட்களின் விலை அதிகரிக்கிறது! இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் அமெரிக்க பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது உற்பத்திப் பொருட்களின் விலைகளை உயர்த்தி வரலாறு காணாத இலாபத்தை ஈட்டியுள்ளனர்! (இந்தியாவிலும் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் கார்ப்பரேட்டுகள் பெரும் லாபம் சம்பாதித்து உலகப் பணக்கார வரிசையில் சேர்ந்திருப்பதை பல கட்டுரைகளில் வினவே அம்பலப்படுத்தியுள்ளது!)

அமெரிக்க பொருளாதார பகுப்பாய்வகத்தின் கூற்றுப்படி, வரி செலுத்துவதற்கு முன்பான இலாப விகிதம் 25% அதிகரித்தது, அதாவது 2.81 இலட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 1976-க்குப் பின் இதுவே மிக அதிக ஆண்டு இலாபம்! 1948 முதல் மத்திய வங்கி இலாபம் பற்றி பகுப்பாய்வு செய்யத் தொடங்கியதிலிருந்து கடந்த ஆண்டு வரி செலுத்திய பின்பான இலாப விகிதம் மிக அதிக அளவாக 37% அதிகரித்துள்ளது.


படிக்க : இரஷ்ய-உக்ரைன் போர்: இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் ! – பாகம் 2


அமெரிக்காவின் டிரஸ்டுகளுக்கு எதிரான சட்டம் மற்றும் ஏகபோகத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை பணவீக்கத்தின் பாதிப்புகளைச் சற்று மட்டுப்படுத்தி விலைவாசியைக் குறைக்கும்! பொருட்களை கட்டுப்பாட்டுடன் பகிர்ந்தளிக்கையில் பணவீக்கம் குறையும். இதே போல கூலியையும் விலையையும் உயர்த்தாமல் அதே நிலையில் இருத்தும் போது பண வீக்கம் குறையும்.

நாட்டுடமையாக்கள், பொதுத் துறைகளை கார்ப்பரேட்டுகள் கைப்பற்றுவதை – பொது சுகாதாரம், வங்கி முதலியன – கைவிடும் போது விலைவாசி குறையும்! ஆனால் கோடீசுவரர்கள் தமது இலாபத்தைக் குறைக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் ஏற்கமாட்டார்கள்! தமது ஏகபோகத்தை பாதுகாப்பார்கள்! பொதுத் துறைகளை தமது கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பார்கள்! கோடீசுவரர்களின் செய்தி இதுதான்: ‘பொருளாதாரம் எங்களின் இலாபத்திற்காகத் தான் இயங்குகிறது, உங்களுக்காக இல்லை!’.

ஆயிரக்கணக்கான கோடி டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை அமெரிக்காவும் ஐரோப்பாவும் உக்ரைனுக்கு வழங்குவதால் போரைத் தொடர்ந்து கொண்டுள்ள உக்ரேனியர்களுக்கும் அவர்களது எதிர்காலம் பற்றித் தெரியும்! அரசின் தலையாய வணிகமே போர்தான்! சாவு வியாபாரிகள்! போர்த் தளவாட உற்பத்தி ஆலைகள் கொழிக்கின்றன! இராணுவத்திற்கான வரவு செலவு பட்ஜெட் விரிவடைகிறது! இன்றைய தேதிக்கு அமெரிக்கா நாளொன்றுக்கு 13 கோடி டாலர் மதிப்பிலான ஆயுதங்களைக் கொடுத்து உதவுகிறது! இது மொத்தமாக உதவி செய்ய உறுதியளித்த 5,500 கோடி டாலரில் ஒரு பகுதிதான்!

(தொடரும்…)

(குறிப்பு: கிரிஸ் ஹெட்ஜெஸ் என்ற புலிட்சர் பரிசு பெற்ற அமெரிக்கப் பத்திரிகையாளர் எழுதிய கட்டுரையினைத் தழுவியது. இவர் தி நியூயார்க் டைம்ஸ் இதழில் 15 ஆண்டுகள் பணியாற்றியவர். Scheer Post-ல் 2020ல் வெளியான கட்டுரை. முதலாளித்துவ எழுத்தாளர்களே முதலாளித்துவத்தின் தோல்வியை எழுதுகின்றனர். அது நீடிக்கக் கூடாது என்கின்றனர்.)


நாகராசு

‘அக்னிபத் திட்டம்’: காண்டிராக்ட்மயம், கார்ப்பரேட் நலன், காவி பயங்கரவாதம்!

டந்த 14.06.2022 அன்று, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் ‘வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு’, ‘புரட்சிகரமான திட்டம்’ என்று பா.ஜ.க. அரசால் படாடோபமாக அறிவித்துக் கொண்டுவரப்பட்டது ‘அக்னிபத்’ என்ற திட்டம்.

17.5 முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்களை, 6 மாதங்கள் பயிற்சிகொடுத்து 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த முறையில் (காண்டிராக்ட்) இராணுவத்தில் வீரர்களாக சேர்த்துக் கொள்வதே அக்னிபத் திட்டமாகும். இவ்வாறு சேர்த்துக் கொள்ளப்படும் வீரர்கள் ‘அக்னி வீரர்கள்’ என்று அழைக்கப் படுவார்களாம்.

இவர்களுக்கு தொடக்கத்தில் 30 ஆயிரம் சம்பளமாகவும் பின்னர் படிப்படியாக அதிகரித்து இறுதியாண்டில் 40 ஆயிரம் சம்பளமாகவும் வழங்கப்படும். 4 ஆண்டுகள் பணி முடித்தவுடன் இவர்களில் 25 சதவிகிதம் பேர் மாத்திரம் இராணுவத்தில் நிரந்தரப் பணியாளர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மீதமுள்ள 75 சதவிகிதம் பேர் வெளியேற்றப்படுவார்கள். மற்ற இராணுவ வீரர்களைப் போல இவர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படாது. பணியிலிருந்து விடுவிக்கபடும்போது, இதுவரை சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையோடு, கூடுதலாக அரசு செலுத்தும் தொகையும் சேர்த்து சேவா நிதி என்ற பெயரில் 12 இலட்சம் வழங்கப்படும். அக்னிபத் வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் இவை.


படிக்க : இந்து ராஷ்டிரத்தை அடித்து நொறுக்குவோம் | தோழர் ரவி வீடியோ


முப்படைகளுக்குமான இராணுவச் செலவுகளுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் 5.26 இலட்சம் கோடியில் 1.20 இலட்சம் கோடி ஓய்வூதியத்திற்கு மட்டுமே செலவிடப்படுகிறது; மொத்த பட்ஜெட் தொகையில் 48.8 சதவிகிதம் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கும் ஓய்வூதியத்திற்கும் மட்டுமே செலவிடப்படுகிறது; அக்னிபத் என்ற பெயரில் இராணுவத்தில் காண்டிராக்ட் முறையைப் புகுத்துவதன் மூலம் இச்செலவினங்களை மிச்சப்படுத்தி, ‘இராணுவத்துறையை நவீனமயப்படுத்தப் போகிறோம்’ என்கிறது பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு.

அக்னிபத்-க்கு எதிரான போராட்டத் தீ!

“இந்திய இராணுவத்தை வலுப்படுத்தும் திட்டம்”, “இராணுவத்துறையை நவீனமயமாக்கும் திட்டம்” அத்துடன் இலவச இணைப்பாக, “தேசபக்தி மிக்க இளைஞர்கள் நாட்டுக்கு சேவையாற்றுவதற்கு பொன்னான வாய்ப்பை வழங்கும் திட்டம்” – என மிகக் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தப்பட்டாலும் இராணுவத்தில் காண்டிராக்ட் முறையை புகுத்தும் இத்திட்டம் பா.ஜ.க.வாலே நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இளைஞர்களின் எதிர்ப்புகளை சம்பாதித்துள்ளது.

குறிப்பாக, இராணுவத்தில் சேரும் கனவோடு பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள் நாடு முழுக்க வீரியமான பல போராட்டங்களை முன்னெடுத்துவருகிறார்கள். உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, பீகார், இராஜஸ்தான் ஆகிய வடமாநிலங்கள் தொடங்கி தெலுங்கானா வரை மொத்தம் 18 மாநிலங்களில் இளைஞர்களின் போராட்டங்கள் மிகப் போர்குணமாக நடைபெற்றன.

தமிழகத்திலும் சென்னை, வேலூர், திருப்பத்தூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், இராணுவத்தில் சேர்வதற்காக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் நடத்தினர்.

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரயிலை மறித்து போராடும் இளைஞர்கள். இடம் தெலுங்கானா மாநில செகந்திரபாத்.

பல மாநிலங்களிலும் போராட்டக்காரர்கள் இரயில் மறியலில் ஈடுப்பட்டனர். 12 இரயில்கள் போராட்டக்காரர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் போராட்டக்காரர்கள் இரயிலுக்குத் தீவைத்தபோது, போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். இளைஞர்களின் போராட்டத்தால் சுமார் 300 இரயில்கள் இரத்துசெய்யப்பட்டன. 1,000 கோடிகளுக்கு மேல் இரயில்வே துறைக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 700-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுப்பட்டதற்காக போலீசால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வேலையில்லாத் திண்டாட்டம் – வெடித்தெழுந்த கோபம்

15 ஆண்டுகால இராணுவ வீரர் பணியை, 4 ஆண்டு தற்காலிக ஒப்பந்த பணியாக மாற்றும் அக்னிபத் திட்டம், 21 வயதே ஆன இளைஞனை உத்தரவாதமில்லாத வாழ்க்கைச் சூழலில் வெளியே தள்ளுகிறது. அடுத்த வேலைக்கு உத்தரவாதம் இல்லை. இளைஞர்களின் கோபத்திற்கு முக்கியக் காரணம் இது.

தற்போது இராணுவப் பணி காண்டிராக்ட்மயத்தை எதிர்த்துப் போராடுவதைப் போலவே, கடந்த ஜனவரி மாதம் இரயில்வே தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி) நடத்திய தேர்வில் மோசடி நடைபெற்றதாகக்கூறி பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அரசுத் தேர்வெழுதிய மாணவர்கள் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டது நினைவிருக்கலாம்.

இச்செய்தி குறித்து, 2022 பிப்ரவரி மாத புதிய ஜனநாயகம் இதழில், “வேலை உத்தரவாதமின்மை, வாழ்க்கைச் செலவினங்களுக்கு கூட போதிய வருவாயின்மை ஆகிய பிரச்சினைகள் மக்களை ஒரு கிளர்ச்சிகர சூழலின் தருவாயில் நிறுத்தியுள்ளது. அதில் ஒரு சிறு தீப்பொறியைத்தான் பீகாரில் பார்க்கிறோம்.” என்று எழுதியிருந்தோம். இதோ இன்று அக்னிபத் பிரச்சினையில் நாடு முழுவது பற்றிப் பரவுகிறது இளைஞர்களின் போராட்டங்கள்.

எந்தெந்த மாநிலங்களில் அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் மிகத் தீவிரமாக நடைபெறுகின்றனவோ, அந்த மாநிலங்களெல்லாம் மிகக் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுவதைப் பார்க்கலாம். சான்றாக, இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் (Centre for Monitoring Indian Economy) மே மாதத் தரவுகளின்படி, பீகாரில் 13.3 சதவிகிதம் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது; இதுவே ஹரியானாவில் 24.6 சதவிகிதமாகவும், இராஜஸ்தானில் 22.2 சதவிகிதமாகவும், ஜார்கண்டில் 13.1 சதவிகிதமாகவும் உள்ளது.

எப்பாடு பட்டாவது, மத்திய அல்லது மாநில அரசுப் பணியிடங்களில் நுழைந்துவிட்டாலோ இராணுவம், போலீசு ஆகிய துறைகளில் சேர்ந்துவிட்டாலோ வாழ்க்கையை உத்தரவாதப் படுத்திக் கொள்ளலாம் என ஒருபிரிவு இளைஞர்கள் தவம் கிடக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பில் இடியை இறக்குவது போல இறங்கியிருக்கிறது இராணுவத்துறையில் காண்டிராக்ட் முறையைப் புகுத்தும் அக்னிபத் திட்டம். இளைஞர்களின் கோபத் தீ, மேலோங்கிப் படர்ந்துவருவதற்கு இதுவே அடிப்படை.

நிரந்தர வேலை பறிப்பே, புதிய வேலைவாய்ப்புகளாக…

இதில் கொடுமை என்னவென்றால், 2024 முடிய, ஒன்றரை ஆண்டுக்குள் மத்திய அரசுப் பணிகளில் 10 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கப்போவதாக அறித்துள்ளார் மோடி; அக்னிபத் திட்டம் மூலம் 4 ஆண்டுகளில் உருவாக்கப் போவதாகச் சொல்லும் 1.86 இலட்சம் வேலைவாய்ப்புகள், மேற்சொன்ன 10 இலட்சத்தில் ஓர் அங்கமாகக் குறிப்பிடப்படுகிறது.

இரயில்வே தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபடும் பீகார் மாணவர்கள்.

2020 மார்ச் 01 அன்று, நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், மத்திய அரசுப் பணியிடங்களில் இன்றைய புள்ளிவிவரப்படி, 8.72 இலட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாகக் குறிப்பிட்டார். அரசுத் துறைகளில் நிரந்த ஊழியர்கள் நிரப்பப்பட வேண்டிய இலட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் அனைத்தும் காண்டிராக்ட்மயமாக்கப்பட இருக்கின்றன என்பதை மோடியின் ‘10 இலட்சம் வேலைவாய்ப்பு’ திட்டத்தை அக்னிபத் திட்டத்தோடு இணைத்துப் பார்த்துப் புரிந்துகொள்ளலாம்.

வேலைவாய்ப்பை அழிப்பதையே ‘வேலைவாய்ப்பை உருவாக்குவதாக’ நா கூசாமல் பிரச்சாரம் செய்கிறார்கள் மோடியும் அவரது அடிவருடிகளும்.

எனவே ‘வேலைவாய்ப்பு உருவாக்கம்’ என்ற பெயரில், அனைத்துத் துறை அரசுப் பணிகளையும் காண்டிராக்ட்மயமாக்கும் விரிந்த திட்டத்தின் ஓர் அங்கமே அக்னிபத். ஆகவே பாசிச மோடி அரசு இதிலிருந்து பின்வாங்குவது அவ்வளவு எளிதானதல்ல.

நாடெங்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்களின் போராட்டங்கள் வெடித்தபோதும், அதைப் பார்த்து மோடி அரசு பின்வாங்கிவிடவில்லை. “முப்படைகளிலும் தற்காலிக வீரர்களைச் சேர்க்கும் அக்னிபத் திட்டம் திரும்பப் பெறப்படாது” – என தெளிவாகவே அறிவித்திருக்கிறார் இராணுவ விவகாரங்களுக்கான கூடுதல் செயலர் ஜெனரல் அனில் புரி.

ஆனால், சில சலுகைகளை அறிவிப்பதன் மூலமும் பொய் நம்பிக்கைகளை ஊட்டுவதன் மூலமும் எதிர்ப்புகளை ஓரளவு சிதறடிக்க முயற்சிக்கிறது பாசிச பா.ஜ.க.

இந்த ஆண்டு மட்டும் அக்னிபத் வீரர்களுக்கான வயது வரம்பு தளர்த்தப்பட்டு 23 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அக்னிபத் திட்டத்தில் வேலை பார்த்த வீரர்களுக்கு, மத்திய அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், மத்திய ஆயுத போலீஸ் படை, அசாம் ரைஃபில் படை ஆகிய படைப்பிரிவுகளில் அக்னி வீரர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங். கர்நாடகம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநில அரசாங்கங்கள், பணி முடித்து வெளியே வரும் அக்னி வீரர்களுக்கு மாநில அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்குவோம் என அறிவித்திருக்கிறார்கள்.

கார்ப்பரேட்டுகளுக்கான குண்டர் படைகளா அக்னி வீரர்கள்?

பா.ஜ.க. மற்றும் அதன் ஊதுகுழுல் ஊடகங்களின் ஆதரவுப் பிரச்சாரங்களுக்கு இடையே, கார்ப்பரேட் முதலாளிகளும் அக்னிபத் திட்டத்திற்கு வெளிப்படையாகத் தங்கள் பேராதரவுகளை வழங்கி வருகிறார்கள்.

ஆர்.பி.ஜி. எண்டர்பிரைசஸ் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, பயோகான் லிமிடெட் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா, மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் சுதர்சன் வேனு, டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் ஆகியோர் அக்னிபாத் திட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இத்திட்டம் கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வேட்டைக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கப் போகிறது என்பதை இந்த வெளிப்படையான ஆதரவுகளே நமக்கு உணர்த்துகின்றன.

“இந்த திட்டத்தின் கீழ் ஒழுக்கம் மற்றும் திறன் பயிற்சி பெறும் வீரர்கள் வேலைவாய்ப்பிற்கு ஏற்றவர்களாக மாறுவார்கள்; தலைமைப் பண்பு, குழுப் பணி மற்றும் உடல் பயிற்சி ஆகியவற்றுடன், அக்னி வீரர்கள் தொழில்துறையில் சந்தைக்கு ஏற்றத் தீர்வுகளை வழங்குவார்கள்” என்று டுவிட் செய்திருந்தார் ஆனந்த் மஹிந்திரா.

ஒன்னரை ஆண்டுகளில், 10 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கப்போவதாக அறிவித்துள்ள மோடி.

தொழிலாளர் நலச் சட்டங்களெல்லாம் வெட்டி வீசப்பட்டு, தொழிலாளர்கள் மீது கொடூரச் சுரண்டல்கள் நிகழ்த்தப்படும் தீவிர மறுகாலனியாக்கக் காலம் இது; சங்கம் வைக்க உரிமை இல்லை, 12 மணி நேரம் வேலை, நீம் – எஃப்.டி.ஈ உள்ளிட்ட காண்டிராக்ட் கொத்தடிமைத்தனங்கள் என தாக்குதல் மேல் தாக்குதல்கள் தொழிலாளர் வர்க்கத்தின் மீது ஏவப்படுகின்றன; இதற்கெல்லாம் தாக்குப் பிடித்து, உரிமைகளைப் பற்றி கவலைப்படாமல் மாடுபோல் உழைக்கும் நபர்களை, கட்டளைக்கு சிரமேற்கொண்டு கீழ்படியும் நபர்களை தொழிலாளர்களாக தேடுகிறார்கள் மஹிந்திரா உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகள். அவர்களுக்கான ரெடிமெட் தயாரிப்புகளாக கிடைக்கிறார்கள் அக்னி வீரர்கள். இதைத்தான் ஆனந்த மஹிந்திரா அவரது மொழியில் டுவிட் செய்திருக்கிறார். ஏனெனில் இராணுவ சிப்பாய்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுவது இந்த வகையான ‘தலைமைப் பண்புதான்’.

மேலும் ஆயுதப் பயிற்சி பெற்ற இந்த முன்னாள் அக்னி வீரர்களை, கார்ப்பரேட்டுகள் தங்களது குண்டர் படையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் உண்டு. ஆலையில் போராடும் தொழிலாளர்கள், ஸ்டெர்லைட் ஆலை போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் சூறையாடலுக்கு எதிராக போராடும் மக்கள் ஆகியோர் மீது வன்முறையை ஏவி அடக்கி ஒடுக்க இப்பிரிவினர் பயன்படுத்தப்படலாம். “இப்படியெல்லாம் நடக்குமா, நீங்கள் பிரச்சினையை மிகைப்படுத்திச் சொல்கிறீர்கள்” என்று தோன்றலாம்.-

இதில் சற்றும் மிகைப்படுத்தல் இல்லை. சதீஷ்கர், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் கார்ப்பரேட்டுகளின் கனிமவளச் சூறையாடலை ஒடுக்குவதற்காக அம்மக்கள் மத்தியிலிருந்தே சில கருங்காலிகளைப் பொறுக்கியெடுத்து, அவர்களுக்கு காசு கொடுத்து ‘சல்வாஜூடும்’ என்ற ஆயுதம் தாங்கிய கூலிப் படையை, அரசே உருவாக்கவில்லையா? கார்ப்பரேட் சூறையாடல் மிகத் தீவிரமாக நடைபெறும் பகுதிகளில், அரசுப் படைகளையும் தாண்டி மக்களின் ஒருபிரிவு மத்தியிலிருந்தே உருவாக்கப்படும் சல்வாஜீடும் போன்ற கூலிப் படைகள், போராடுபவர்களை அடக்கி ஒடுக்குவதற்கான சிறந்த கருவி.

ஆளும் வர்க்கங்களின் சுரண்டல் வெறி தீவிரமடையும்போது, அதற்கெதிராக புரட்சிகர போராட்டங்கள் மக்களிடையே வெடித்துக் கிளம்பும்போது, மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக மக்களின் ஒருபிரிவு மத்தியிலிருந்தே எதிர்ப்புரட்சி குண்டர் படைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்ற வரலாறை நாம் உலகின் பலநாடுகளின் வரலாற்றிலும் காணாலாம். இத்தகைய குண்டர் படைகள் அனைத்தும் உதிரிப் பிரிவு மக்களிடமிருந்தே (சமூகத்தின் கடைநிலையிலுள்ள, தங்கள் வாழ்க்கையை முறையாக அமைத்துக் கொள்ள வாய்ப்பில்லாத மக்கள் பிரிவினர்) கட்டப்பட்டிருக்கின்றன.

வேலையில்லாத் திண்டாட்டம் என்பது சாதாரணப் பிரச்சினை இல்லை. சமூகத்தில் குற்றங்கள் பெருகிவருவதற்கு அது ஒரு முக்கிய காரணம். தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக காசு கொடுத்தால் எதையும் செய்யும் ஒரு பிரிவினரை (உதிரிகள்) இது நிச்சயம் உருவாக்கும். 21 வயதே முடிந்த முறையாக ஆயுதப்பயிற்சி பெற்ற ஒரு இளைஞர் கூட்டம், ஒவ்வொரு ஆண்டும் வேலையில்லா பட்டாளத்தில் சேரும்போது, அவர்களின் நிர்கதியான நிலை எதற்கு வேண்டுமானால் அவர்களை தயார் செய்யும்.

காவி பயங்கரவாதத் திட்டமே அக்னிபத்!

சல்வாஜீடும் பழங்குடிகளை விரட்டுவதற்காக, பழங்குடிகளைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ள கூலிப்படை.

அக்னிபத் திட்டம் என்பது இராணுவத் துறையில் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களை புகுத்தும் திட்டம் என்ற கூற்று நாம் கவனிக்க வேண்டிய அடுத்த முக்கியமான விசயம். காவிகளும் கார்ப்பரேட்டுகளும் ஒருசேர தங்கள் நோக்கங்கங்களை நிறைவேற்றிக் கொள்ள இருக்கிறார்கள். புரட்சிகர சக்திகள் மட்டுமல்லாது, தி.க. தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. தலைவர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டு பல அரசியல் கட்சித் தலைவர்களும் “இது இராணுவத் துறையில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் கொண்டவர்களை புகுத்தும் திட்டம்” என வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.

2021 ஆம் ஆண்டு, நாடுமுழுவதும் புதிதாக 100 இராணுவப் பள்ளிகளை தொடங்கப் போவதாக அறிவித்த பாதுகாப்புத் துறை அமைச்சகம், கடந்த மார்ச் மாதம் முதல்கட்டமாக 21 பள்ளிகளை தொடங்கியுள்ளது. அரசு – தனியார் கூட்டு அடிப்படையில், இந்த இராணுவப் பள்ளிகளை தொடங்கி நடத்த தனியார் பள்ளிகள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு அனுதியளிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகள் மற்றும் அறக்கட்டளைகளில் பெரும்பாலானவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் இயக்கப்படுபவை ஆகும்.

இத்திட்டம் மூலம் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தால் பயிற்றுவிக்கப்பட்ட ஏராளமானோர் அலைஅலையாக இராணுவத்தில் நுழைக்கப்படும் அபாயம் இருப்பதையும் இது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பது குறித்தும் மே மாதம் புதிய ஜனநாயகத்தில், “தயாராகிறது இந்துராஷ்டிர இராணுவம்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தோம். இது அக்னிபத் திட்டத்திற்கும் பொருந்தும்.

“இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் நாஜி சித்தாந்தம் கொண்ட பாசிச கும்பல் இராணுவத்தில் ஊடுருவி வருகிறது. இரசியாவுக்கும் உக்ரைனுக்கும் நடக்கின்ற போரில், உக்ரைன் இராணுவத்தில் நவநாஜி ஆயுதப்படையான அசோவ் படைப்பிரிவு பங்குபெற்றிருப்பது அம்பலமாகியுள்ளது. இந்த அசோவ் பாசிசக் கும்பல் சொந்தநாட்டு சிறுபான்மையினரைக் கொல்வதையும், அவர்களது சொத்துக்களைக் கொள்ளையடிப்பதையும் செய்து வருகிறது.


படிக்க : கார்ப்பரேட்டின் நலனுக்காக நாட்டின் மனித வளத்தை நாசம் செய்யும் நடவடிக்கையே அக்னிபாத்! | வீடியோ


உக்ரைனிலாவது அசோவ் படைப்பிரிவு இராணுவத்துடன் இணைத்து பணியாற்றுகிறது. மோடி அரசின் இத்திட்டம் அமலானால், இந்திய இராணுவமே ஆர்.எஸ்.எஸ்-இன் பாசிச படையணியாகிவிடும்.

ஹரித்துவார் மாநாட்டில், முசுலீம்களை இனப்படுகொலை செய்துவிட்டு இந்தியாவை இந்துராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும் என்று காவி கும்பல் அறைகூவல் விடுத்துள்ள நிலையில், இராணுவம் அலைஅலையாக ஆர்.எஸ்.எஸ்.மயமாக உள்ளது” – தயாராகிறது இந்துராஷ்டிர இராணுவம்.

தனது பாசிச நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளுவதில் அடுத்தடுத்த படிகளில் முன்னேறி வருகிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. இலங்கை உழைக்கும் மக்கள் இராஜபக்சேவுக்கு பாடம் புகட்டியது போல, நாம் மோடி அரசுக்கு, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பரிவாரங்களுக்கு பாடம் புகட்டியாக வேண்டும். அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில், பீகார் மாநில இளைஞர்கள் அம்மாநில துணை முதல்வரும் பா.ஜ.க. தலைவருமான ரேணு தேவியின் வீட்டை தாக்கினார்கள், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். எதிரியை நேரடியாக குறிவைத்து தாக்கும் இத்தகைய போராட்டங்களை நாடு முழுக்க பரப்புவோம், பாசிச சர்வாதிகாரத்தை நிறுவத் துடிக்கிற ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலை வேரறுப்போம்!


ரவி

இந்து ராஷ்டிரத்தை அடித்து நொறுக்குவோம் | தோழர் ரவி வீடியோ

மோடியை அம்பலப்படுத்தியது தான் திஸ்தா செதல்வாட் செய்த குற்றம் அதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுபுர் சர்மாவை அம்பலப்படுத்திய ஆல்ட் நியூஸ் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தபோல்கர், கல்புர்கி, பன்சாரே, கௌரிலங்கேஷ் போன்ற முற்போக்காளர்களை கொலை செய்துவிட்டார்கள் காவி பயங்கரவாதிகள்.

ஸ்டான் சுவாமியை சிறையிலேயே சித்திரதை செய்து கொன்றுவிட்டது அரசு. அடுத்து பலர் சிறையில் சித்தரவதைக்குள் இருக்கிறார்கள். அதவாது மோடி அரசை எதிர்த்து பேசுபவர்கள் அனைவரையும் ஒடுக்குகிறார்கள். அவர்களை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று சித்தரிக்கிறார்கள்.

நாட்டின் இசுலாமிய மக்கள் மீது பொய்வழக்குகள், புல்டோசர் நீதிகள் பாய்கின்றனர். காவி பயங்கரவாதிகளால், தாக்குதலுக்குள்ளாகிறார்கள்; கொலை செய்யபடுகிறார்கள்.

மோடி அரசின் கார்ப்பரேட் கொள்கைகளால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து,,, அவர்கள் பயன்படுத்து அதியாவசிய பொருட்களின் விலை விண்ணைமுட்டி வருகிறது. பெட்ரோல் – டீசல் விலை உயர்வு அதை தொடர்ந்து அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. ஜி.எஸ்.டி வரி விதிப்பால் சிறு-குறு தொழில்கள் அழிக்கப்படுவருகிறது.

வேலையில்லாத்திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராடிய இளைஞர்களை அச்சுருத்துவதற்காகவே உ.பி யோகி அரசு புல்டோசர் பேரணி நடத்துகிறது.

ம.பி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆளே இல்லாமலும் ஆட்சியை கவிழ்த்து, பாஜக ஆட்சிக்கட்டிலில் ஏறிவருகிறது. எனவே இனியும் தேர்தல் ஜனநாயம் என்னும் கேலிக்கூத்தை நம்புவது முட்டாள் தன்ம்.

இவை அனைத்தினும் நாம் கூறவருவது என்ன? இந்துராஷ்டிரம் நடைமுறையில் இருக்கிறது. இதனை அடித்து நொறுக்காமல் உழைக்கும் மக்களுக்கு வாழ்க்கை இல்லை என்பதே!

புமாஇமு அமைப்பின் மாநில ஒருங்கிணைப்புக்குழு தோழர் ரவி இந்து ராஷ்டிரத்தின் பாசிச தாக்குதல்கள் பற்றி இந்த காணொலியில் விரிவாக விளக்குகிறார்….

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள்!!

ஜி.எஸ்.டி வரி உயர்வு: மக்களை வாட்டிவதைக்கிறார்கள் | மக்கள் நேர்காணல்

ஜி.எஸ்.டி அதிகரிப்பதால், உழைக்கும் மக்கள் வறுமையிலும், பட்டினியிலும் தள்ளப்படுவார்கள். ஆனால் மறுபக்கம் முதலாளிகள் செல்வ செழிப்பாக இருக்கிறார்கள். உழைக்கும் மக்கள் ஜி.எஸ்.டி வரி உயர்வை பற்றி பாதிப்புகளை நம்முடன் இக்காணொலியில் பகிர்ந்து கொள்கிறார்கள்…

வீடியோ ஆக்கம்:
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

தனியார் கல்விக்கு எதிரான போராட்ட(கள்ளக்குறிச்சி)மாடல் பரவி விடக்கூடாது என்பதே திமுக அரசின் நோக்கம்! | மருது வீடியோ

ள்ளக்குறிச்சி படுகொலை பற்றி உளவுத்துறை சாதிய பிரச்சினை என்று கூறியுள்ளது. உளவுத்துறையின் நோக்கமே போராடியவர்களை போக்கிரிகளாகவும், பயங்கரவாதிகளாக்வும் கூறி தனிமைப்படுத்துவது தான் நோக்கம்.

அரசின் நோக்கம் எப்போதும் மக்கள் பிளவுபட்டே இருக்க வேண்டும். தனியார் பள்ளியில் ஏதேனும் பிரச்சினையேன்றால் பள்ளி முன் அமரவேண்டும் போராட்டவேண்டும் என்ற இந்த நடைமுறை தமிழகம் முழுவதும் உள்ள 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் நிலைமை என்ன ஆகும் என்பதுதான் அரசுக்கு பிரச்சினை.

அனைவரிடமும் பேசும் முதல்வர் ஸ்டாலின் ஏன் மாணவி ஸ்ரீமதியின் பேற்றோர்களிடம் பேசவில்லை.

தூத்துக்குடி மாடல் என்பது அரசுக்கு துப்பாக்கிச்சூடு மாடல்; மக்களுக்கு சாதி மதம் கடந்த கார்ப்பரேட் கம்பெனிக்கு எதிராக போராடி வெற்றிபெற்ற வீரம் செறிந்த போராட்ட மாடல். அதேபோல், ஜல்லிக்கட்டு மாடல் என்பது அரசுக்கு வன்முறை செய்து ஒடுக்கிய மாடல்; மக்களுக்கு ஒரு பொதுக்கோரிக்கைக்கான தமிழகமே பலநாட்கள் அமைதி வழியில் போராட்டி சாதித்த மாடல். அதேபோல் கள்ளக்குறிச்சி மாடல் என்பது அரசுக்கு கலவரம் செய்தவர்களை ஒடுக்கிய மாடல்; மக்களுக்கு தனியார் பள்ளிகளை எதிர்த்து இப்படித்தான் போராடவேண்டும் என்று சொல்லும் தனியார் கல்விக்கு எதிரான போராட்ட மாடல். இந்த மாடல் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் பரவினால், உழைக்கும் மக்களின் போராட்டம் என்ன பரிமானத்தை அடையும் என்று யோசித்து பாருங்கள்!

கொலைகார சக்தி பள்ளியின் உரிமையாளரை காப்பாற்ற துடிப்பதன் காரணம் என்ன? இந்த பள்ளிக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் சாதித்து காட்டிவிட்டார்கள் என்றால் இந்த போராட்டம் வடிவம், அடுத்து பல தனியார்பள்ளிகளுக்கு பரவும். தொழிற்சாலை தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு பரவும் இது முதலாளிகலுக்கு மிகப்பெரிய பிரச்சினை.

எந்த காலத்திலும் முதல்வர் ஸ்டாலினும் டிஜிபி சைலேந்திரபாபுவும் தனக்கு கீழ் இருக்கும் அதிகார வர்க்கத்தை காட்டிக்கொடுக்க மாட்டார்கள்.

இதுபோன்ற பல கேள்விகளுக்கு ரெட் பிக்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் பேட்டி வீடியோவில் விடையளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மாணவி ஸ்ரீமதி மரணம்: தனியார் கல்வியை ஒழிப்பதே தீர்வு | A.ஜான் வின்சென்ட் | வீடியோ

கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியின் மாணவி ஸ்ரீமதியின் மரணம் பல்வேறு சந்தேகங்கள் ஏற்படுத்துகிறது. ஆனால் அந்த சந்தேகங்களுக்கு இன்று வரை விடைக்கவில்லை. எனவே தனியார் கல்வியில் நடக்கும் இதுபோன்ற மர்ம மரணங்களை தெளிவாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதுப்போன்ற தனியார் கல்வி நிறுவனங்களின் மர்ம மரணங்களுக்கு முக்கிய காரணமான தனியார் கல்வியை ஒழிக்காமல் இப்பிரச்சினை தீராது.

மேலும் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் இந்த பேட்டி வீடியோவில் எழுப்புகிறார் PUCL அமைப்பின் மாநில செயலாளர், A.ஜான் வின்சென்ட் அவர்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

திருவள்ளூர் பள்ளி மாணவி மர்ம மரணம் – அதிகார வர்க்கத்தை அடிபணிய வைத்த மக்கள்!

திருவள்ளூர் பள்ளி மாணவி மர்ம மரணம்
– அதிகார வர்க்கத்தை அடிபணிய வைத்த மக்கள்!

கள்ளக்குறிச்சி மக்களின் போர்க்குணமிக்க போராட்டம் வழிகாட்டுகிறது!

கலகங்களின் தேவையை இறுகப் பற்றிக் கொள்ளும் தருணமிது!

திருவள்ளூர் மாவட்டம் – திருத்தணி அருகே கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி சரளா (17) ஜூலை 25 அன்று மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

பள்ளி நிர்வாகம் மாணவியின் மரணம் குறித்து முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்ததால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய பதிலை தர வேண்டும் எனக்கோரி மாணவியின் சொந்த ஊரான தெக்களூரில் பொதட்டூர்பேட்டை – திருத்தணி சாலையில் 4 அரசுப் பேருந்துகளை மக்கள் சிறைப்பிடித்து, சாலை மறியலிலும் ஈடுபடுகின்றனர். உடனடியாக அங்கு வந்த திருத்தணி போலீசும், எம்.எல்.ஏ சந்திரனும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதிகள் அளிக்கின்றனர்.

இது தொடர்பாக மப்பேடு போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்கின்றனர். டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்படுகிறது. மாணவியின் மரணம் குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுகிறது. அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி விடுதியின் முன்பு குவிந்தனர்.


படிக்க : கள்ளக்குறிச்சி-போராடியவர்கள் மீது ஒடுக்குமுறை: கண்டனப் பதிவுகள் | வீடியோ


திருவள்ளூர் எஸ்.பி பெகர்லா செபாஸ் கல்யாண், வட்டாட்சியர் செந்தில்குமார், குழந்தைகள் நல அதிகாரிகள் உடனடியாக பள்ளி விடுதிக்கு வந்து விசாரணை நடத்தினர். காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா பள்ளி விடுதியில் விசாரணை மேற்கொள்கிறார்.

மாணவியின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.க்கள் வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உடனடியாக விசாரணை மேற்கொள்கிறார். தங்களது மகள் சரளாவின் மர்ம மரணத்திற்கு நியாயமான பதில் கிடைக்கும் வரை உடலை வாங்கப் போவதில்லை என பெற்றோர் தெரிவித்ததை தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். இதில் மாணவி சரளாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்படுகிறது.

இதன் பின்பே மாணவியின் உடல் பெற்றோர்களால் பெற்றுக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட சம்பவங்கள் அனைத்தும் ஒரே நாளில் நடக்கின்றன.

கள்ளக்குறிச்சி போராட்டத்தில் நான்கு நாட்களாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், போராடிய மக்களை துச்சமென நினைத்து, இழுத்தடித்து, அடக்குமுறைகளை ஏவி வந்த அதிகார வர்க்கம் திருவள்ளூரில் நடந்த சம்பவத்துக்கு ஒரே நாளில் நடவடிக்கை எடுக்கிறது என்றால்,  மக்களின் மேல் அக்கறை உள்ளவர்கள் போல்  காட்டிக் கொள்கிறது என்றால் என்ன காரணம்?

தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் திருவள்ளூரானது கள்ளக்குறிச்சி போராட்ட வடிவத்தை கைக்கொண்டு விடும் என்பதுதான் காரணம். “கலகம் செய்யாமல் நியாயம் பிறக்காது” என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுவிட்டார்கள் என்பதே காரணம். அதை கள்ளக்குறிச்சியில் மக்கள் நடத்திய போர்க்குணமிக்க போராட்டம் ஒருபடி மேலே கொண்டு சென்றுவிட்டது. மக்கள் அமைதியாக இருக்கும் வரை அவர்களின் மீது வரைமுறையற்ற ஒடுக்குமுறைகளை ஏவுபவர்கள் உழைக்கும் மக்களின் கலகத்தை கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள். அதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு  தள்ளப்படுகிறார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், கள்ளக்குறிச்சி போராட்டம் ஆகியவை தமிழக மக்களின் போராட்ட வடிவத்தை தீர்மானிக்கும் முன்னுதாரணமான விசயங்களாக மாறுகின்றன. அடுத்தடுத்து இந்த வடிவங்களை நிரந்தரமாக்கிக் கொள்ளும் நிலைக்கு மக்களை தள்ளிவிடக் கூடாது என்ற எச்சரிக்கைதான் திருவள்ளூரில் அதிகார வர்க்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு முக்கியமான காரணம்.

கள்ளக்குறிச்சி போராட்டத்தின் மூலம் பெற்ற போராட்ட உணர்வை திருவள்ளூரிலும் தெக்களூர் பகுதி மக்கள் பேருந்துகளை சிறைப்பிடித்தன் மூலம், சாலைகளை மறித்ததன் மூலம் வெளிக்காட்டத் தொடங்குகின்றனர். இனியும் தாமதித்தால் தமிழகமே கலகத்தில் இறங்கும் என்ற அச்சம்தான் ஆளும் வர்க்கத்தை உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தள்ளுகிறது.

கள்ளக்குறிச்சியில் போர்க்குணமிக்க போராட்டத்தை நடத்தியதால் போலீசின் அடக்குமுறைக்கு ஆளாகி நூற்றுக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் சிறைக்கு சென்றார்கள் என்பது உண்மைதான்.

உலகளாவிய கார்ப்பரேட் பயங்கரவாத நிறுவனமான ஸ்டெர்லைட்டை தூத்துக்குடி மக்கள் 13 பேரின் இன்னுயிரை கொடுத்துத்தான் மூடியுள்ளார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் போலீசின் தாக்குலை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு களத்தில் நின்றார்கள் தமிழக இளைஞர்கள்.

இந்தப் போராட்டங்கள் இந்த அரசும், போலீசும் யாருக்காக நிற்கிறது முற்றிலும் அம்பலமாகின.

இத்தகைய தியாகமும், அர்ப்பணிப்பும் மிக்க கலகங்கள்தான் ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்துகின்றன. அதுதான் திருவள்ளூரில் விரைவான நடவடிக்கையை நோக்கி ஆளும் வர்க்கத்தை  தள்ளியது என்பதை நாம் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும்.


படிக்க : கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? | Press Meet


அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் போர்க்குணத்துடன் போராடிய மக்களின் நியாயத்தை திருவள்ளூரில் எடுத்த நடவடிக்கையின் மூலம் ஆளும் வர்க்கம் ஒத்துக் கொண்டுள்ளது என்பதே தர்க்கரீதியான உண்மை.

தற்போது அதிகார வர்க்கம் எடுக்கும் நடவடிக்கைகள் நம்மை வாழவைப்பதற்காக அல்ல. தனது எஜமானனான சுரண்டும் வர்க்கத்தை பாதுகாப்பதற்கும், மக்கள் மீது பாய்வதற்கான தருணத்தை எதிர்நோக்கி பதுங்கிக் கொள்கிறது என்பதே உண்மை. ஏனெனில் அதன் இயல்பே அதுதான்!

அதிகார வர்க்கத்தின் தயவின் மூலம் நமது உரிமைகளை ஒருநாளும் பெற முடியாது!

போர்க்குணமிக்க உழைக்கும் மக்களின் போராட்டத்தை நிபந்தனையின்றி ஆதரிப்போம்!

உழைக்கும் மக்களின் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கான கலகங்களை நிரந்தரமாக்குவதன் மூலம் வர்க்கப் போராட்டத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம்!


இனியன்

இலங்கை மின் உற்பத்தி ஒப்பந்தம்: அதானியின் பகற்கொள்ளைக்கு மோடியின் கரசேவை!

ஸ்.பி.ஐ வங்கித் தலைவரை கையோடு அழைத்துச் சென்று அதானிக்கு ஆஸ்திரேலியாவில் 7500 கோடி செலவில் நிலக்கரி சுரங்கம் வாங்கிக் கொடுத்தது, காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம், இனயம் துறைமுகம்  உருவாக்க அனுமதி, அதானியின் மின் உற்பத்தி ஏகபோகத்திற்காக கொண்டுவரப்பட்ட உதய்மின் திட்டம் உள்ளிட்டவற்றால் அதானியை ஆசியாவின் நம்பர் ஒன்  பணக்காரராக்கிய மோடி தனது கைங்கரியத்தை இலங்கையிலும் செய்திருக்கிறார்.

கடந்த மார்ச் 2022-இல்,  இலங்கை வடக்கு மாகாணத்தின் மன்னார் மற்றும் பூநேரி ஆகிய பகுதிகளில்  500 கோடி டாலர் முதலீட்டில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி ஆகிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காக  அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது இலங்கை மின்சார வாரியம் (Ceylon Electricity Board (CEB)). எந்தவித சட்டபூர்வ ஏல வழிமுறைகளையும் பின்பற்றாமல் நேரடியாகவே இவ்வொப்பந்தத்தை அதானி குழுமத்திற்கு வழங்கியிருக்கிறது இலங்கை அரசு.

அதானி குழுமத்திற்கு இவ்வொப்பந்தம் கிடைத்தது குறித்து, கடந்த ஜூன் 10-ஆம் தேதி இலங்கையின் பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழு (Committee on Public Enterprises (COPE) இலங்கை மின்சார வாரியத் தலைவரான எம்.எம்.சி. ஃபெர்டினாண்டோவிடம் விசாரணை நடத்தியது.  இதில் பல ‘தேவரகசியங்கள்’ வெளியே கசிந்தன. அரசு நிறுவனங்களில் ஏற்படும் முறைகேடுகளை விசாரணை செய்வது மற்றும் வெளிக்கொணர்வது இக்குழுவின் வேலையாகும்.


படிக்க : ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! | மாநாடு அறிவிப்பு !


பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழுவிடம் பதிலளித்த ஃபெர்டினாண்டோ, “இந்தியப் பிரதமர் மோடியின் அழுத்தத்தால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அதானி குழுமத்திற்கு அனுமதி வழங்க தன்னைப் பணித்தார். இது குறித்து, நவம்பர் 16, 2021 அன்று நடந்த சந்திப்பின் போது, ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்ட நேரடி அந்நிய மூதலீடு என்ற அடிப்படையில் மன்னார் மற்றும் பூநேரி ஆகிய பகுதிகளில் காற்றாலை மற்றும் சூரியசக்தி ஆகியவற்றின் மூலம் 500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க  அதானி குழுமத்திற்கு அனுமதியளிக்க வலியுறுத்தினார். இதனடிப்படையில், நவம்பர் 25, 2021 தேதியிட்ட கடிதத்தை இலங்கை நிதியமைச்சகத்தின் கருவூலச் செயலாளரான எஸ்.ஆர். அடிகலாவிற்கு அனுப்பினேன். இவ்விவகாரத்தை அதிபரே பார்த்துக் கொள்வதாகக் கூறியதால்தான், அதானி குழுமத்திற்கு ஒப்பந்தம் கிடைப்பதற்கு தேவையானவற்றை செய்யுமாறு கருவூலச் செயலாளாருக்கு கடிதம் எழுதினேன்” என்று ரகசியங்களை போட்டுடைத்திருக்கிறார்.

ஃ பெர்டினாண்டோ  பேசிய வீடியோ சமூக வலைதளங்களில்  பெருமளவில் பகிரப்பட்டு இலங்கை அரசியலில் பெரும் சூறாவளியைக் கிளப்பியிருக்கிறது. இவ்வீடியோ வெளிவந்தவுடன், அதிபர் கோத்தபய, “ எந்தவொரு தனிநபருக்கும் அல்லது நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் வழங்க நான் அங்கீகரித்ததாகக் கூறுவதை திட்டவட்டமாக மறுக்கிறேன்” என்று ட்வீட் செய்தார். இதையடுத்து, பசிக்களைப்பாலும், மன அழுத்தத்தாலும் ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கால் அவ்வாறு கூறியதாக அந்தர் பல்டியடித்தார் ஃபெர்டினாண்டோ . இறுதியில், கடந்த ஜூன் 15 அன்று ‘தனிப்பட்ட காரணங்களுக்காக’ மின்சார வாரிய தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் ஃபெர்டினாண்டோ.

அதே நாளில் ஃபெர்டினாண்டினோவின் விலகலை ஏற்றுக் கொண்டதாகவும், புதிய தலைவராக நலிந்த இளங்கோ கோன் பதவியேற்க உள்ளதாகவும் இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ட்வீட்டரில் அறிவித்தார்.

அதானிக்கு எதிராக பதாகைகளைத் தாங்கி நின்று போராடும் இலங்கை மக்கள்.

கடந்த ஆண்டு அக்டோபரில் அதானி இலங்கை சென்ற போதே இவ்வொப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த பிறகு, தனது சொந்த ஹெலிகாப்டர் மூலம் மின் உற்பத்தி தொடங்கவிருக்கும் மன்னாரை அதானி பார்வையிட்டார். அப்பொழுதே இவ்விவகாரம் இலங்கை அரசியலில் விவாதப் பொருளாகியது.

அதானியின் இலங்கை பயணத்திற்கு பிறகு, கடந்த ஆண்டு டிசம்பரில் 1 பில்லியன் டாலர் முதலீட்டில் 1000 மெகாவாட் திறன் கொண்ட முதல் காற்றாலைத் திட்டத்தை மன்னார் பகுதியிலும், இரண்டாவது காற்றாலை திட்டத்தை பூநேரி பகுதியிலும் அமைக்க இலங்கை முதலீட்டாளர்  வாரியத்திடமும் (Board of Investments of Sri Lanka), இலங்கை மின்சார வாரியத்திடமும் அதானி குழுமம் அனுமதி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமம் அனுமதி கோருவதற்கு முன்பே டெல்ஃப் தீவு, அனலை தீவு, நைனா தீவு ஆகிய இடங்களில் 12 மில்லியன் டாலர் முதலீட்டில் கலப்பு மின் உற்பத்தி மையங்கள் அமைக்க சீன நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தியப் பிரதமர் மோடியின் அழுத்தத்தால், ஏல முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சீன நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தங்களைக் கடந்த ஆண்டு ரத்து செய்து, தற்போது அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது இலங்கை அரசு. சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ததற்கு, சர்வதேச நிதி நிறுவனத்தின் கடன் உதவியால் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருந்ததாகவும், அதற்காக ஏல முறையில் சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்ததாகவும் கூறியிருந்தார், அன்றைய அரசுத்துறை விவகாரங்களுக்கான அமைச்சர் துமிந்த திசனாயகே. ஆனால் இந்திய அரசு 75 சதவீத மானியம் வழங்குவதாகக் கூறியதால் சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாக கூறியிருக்கிறார் திசனாயகே.

சட்டவிரோதமாக அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட இவ்வொப்பந்தத்தை இலங்கையின் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. இவ்வொப்பந்தத்தின் மூலம் ராஜபக்ச அரசு, மோடியின் நண்பருக்கு கொல்லைப்புற வழியாக அனுமதியளித்திருப்பதாக குற்றம் சுமத்துகின்றன.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைத் துளியும் பொருட்படுத்தாமல், இலங்கையின் மின்சார நெருக்கடியை சாதகமாக்கிக் கொண்டு இலங்கை மின்சார சட்டம் 2009-இல் திருத்தத்தைக் கொண்டு வந்து அதானியின் கொல்லைப்புற நுழைவை  சட்டப்பூர்வமாக்கியிருக்கிறது, இலங்கையின் கோத்தபய-ரணில் அரசு.  இத்திருத்தத்திற்கு 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், 36 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்திருக்கின்றனர், 13 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்திருக்கின்றனர்.

இச்சட்டத்திருத்தத்தில், மின்சார சட்டம் 2009 பகுதி 8-இல் இருந்த, “மின் உற்பத்தி செய்கிற எந்த ஒரு நபரும் ஏல முறையில் பங்கேற்க வேண்டும் என்ற விதிமுறையை ரத்து செய்து, ஏல முறையில் எந்த ஒரு நபரும் பங்கு பெறலாம் என்று திருத்தப்பட்டிருக்கிறது”. இதன் மூலம் மின் உற்பத்தி நிறுவனங்கள் ஏல முறையில் பங்கேற்றாக வேண்டிய கட்டாயமில்லை. அதானி குழுமம் போல் ஏல முறையில் பங்கேற்காமல், இலங்கை அரசு விரும்பும் ஒருவருக்கு  ஒப்பந்தத்தை வழங்க முடியும்.

இலங்கையின் உடனடி  ‘வளர்ச்சி’க்கு இச்சட்டத்திருத்தம் இன்றியமையாதது என்று கூறியிருக்கிறார், காஞ்சன விஜேசேகர.  இச்சட்டத்திருத்தத்தால் இலங்கையில் முதலீடுகள் அதிகரிக்கும் எனக் கூறுவதன் மூலம் விஜேசேகரவும் கார்ப்பரேட் சேவையே வளர்ச்சி என்கிற நிதியமைச்சர் நிர்மலாவுடன் ஒத்திசைகிறார். இலங்கையின் பிரதமர் ரணிலும் இச்சட்டத்திருத்தத்தை வரவேற்று மோடியை மிஞ்சிய ஏகாதிபத்திய அடிவருடி என்று நிரூபித்துக் கொண்டுள்ளார்.

இலங்கையின் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, காலிமுகத் திடலில் போராடும் மக்கள், இலங்கையின் மின்சாரத் துறை ஊழியர்கள் மற்றும் இலங்கையின் மின் உற்பத்தி முதலாளிகளின் கூட்டமைப்பான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கழகத்தினரும் இச்சட்டத்திருத்தத்திற்கும், ஏல முறை ஒழிக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர்.

இச்சட்டத் திருத்தம் கொண்டுவந்த உடனேயே மின்சாரத்துறை ஊழியர்கள் காலவரையற்றப் போராட்டம் அறிவித்தனர். அதிபர் கோத்தபயவோ, “மின்சாரம் இன்றியாமையாத சேவை” என்று அறிவித்ததால் ஊழியர்களது  போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. எனினும் கோத்தபய-வுக்கு எதிராக காலிமுகத் திடலில் போராடும் மக்கள் இந்திய தூதரகத்தின் முன்பும், அதிபர் கோத்தபய அலுவலக வாசலின் முன்பும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.


படிக்க : கடந்த ஆண்டில் மட்டும் 49 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த அதானி !


மின்சாரம் இன்றியமையாதது என்று அதிபர் கூறிக் கொண்டிருக்கும் போது, கடும் மின் தட்டுப்பாட்டால் இருளில் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை மக்களோ அதானிக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். ‘அதானியை நிறுத்து’ (#StopAdani) என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனதே இதற்கு ஒரு சான்று.

மேலும், தலைநகர் கொழும்புவில் உள்ள மெஜஸ்டிக் பகுதியில் போராடிய மக்கள் “அதானியை நிறுத்து”,  “இலங்கையிலிருந்து வெளியேறு” என முழக்கங்கள் எழுப்பினர். “வெளிநாட்டைச் சேர்ந்த அதானிக்கு ஏன் இலங்கையின் மின் திட்டங்களை டெண்டர்கூட விடாமல் கொடுக்க வேண்டும்? அப்படிக் கொடுப்பதால், நம் நாட்டின் வளங்கள் சுரண்டப்படும். மேலும், நம் நாட்டின் மின்சார உற்பத்தி முறையும் சீர்குலைந்துவிடும்; இது இலங்கையின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல; அதானி குழுமம் இலங்கையில் கால்பதிக்கக் கூடாது!”  என்கின்றனர் போராடும் மக்கள்.

அதானிக்கு எதிராகத் தொடங்கியுள்ள இந்தச் சிறுபொறி, இலங்கையின் எதிர்கால நம்பிக்கையின் கீற்று. எனினும், இக்கார்ப்பரேட் எதிர்ப்புப் போராட்டத்தை இலங்கையை மேலாதிக்கம் செய்யத் துடிக்கும் இந்தியாவுக்கு எதிராகவும், அமெரிக்க, சீன மேலாதிக்கத்திற்கு எதிராகவும் வளர்த்தெடுக்க வேண்டியிருக்கிறது.


அப்பு