Saturday, June 20, 2026
முகப்பு பதிவு பக்கம் 157

‘பெரு’வின் தேவை : இளஞ்சிவப்பு அல்ல, புரட்சிப் பேரலை!

தென்னமெரிக்க நாடான பெருவில், கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிப் பெற்று ‘சுதந்திர பெரு’ என்ற ‘இடதுசாரி கட்சி’யைச் சேர்ந்த பெட்ரோ கேஸ்டிலோ அதிபரானார். இவரது வெற்றியை உலகம் முழுவதும் உள்ள கம்யூனிசத் திரிபுவாதிகள் பெரிதும் போற்றி வரவேற்றனர். தற்போது பெரு அதிபர் பெட்ரோவின் துரோக ஆட்சியும் அவருக்கு எதிரான ஆட்சிக் கவிழ்ப்பும் ‘இளஞ்சிவப்பு அலை’யின் உண்மை முகத்தை மீண்டும் ஒருமுறை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

‘சட்டப்பூர்வ’ ஆட்சிக் கவிழ்ப்பு

பெட்ரோ கேஸ்டிலோ அதிபரான 18 மாதங்களில் அவர் மீதும் அவரது அரசாங்க அமைச்சர்கள் மீதும் ஊழல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதிபர் பெட்ரோவுக்கு எதிராக ஊழல் புகார் குறித்து பெரு காங்கிரஸ் (நாடாளுமன்றம்) டிசம்பர் 7-ஆம் தேதி கூடி விவாதிக்க தீர்மானித்திருந்தது. பெட்ரோவுக்கு எதிராக காங்கிரஸ் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கை என்பது முதல்முறை நடப்பதல்ல; இதற்கு முன்னர் இதே ஊழல் குற்றச்சாட்டின்கீழ் பெட்ரோவை பதவிநீக்கம் செய்ய காங்கிரஸ் இரண்டு முறை முயற்சித்தது. ஆனால், பெரும்பான்மை வாக்கு கிடைக்காததால் அவரது பதவி நீக்கம் சற்று தள்ளிப்போனது.

இம்முறை ஆட்சியைத் தக்கவைத்து கொள்ள காங்கிரஸ் கூடுவதற்கு முன்னரே தொலைக்காட்சி ஊடகத்தில் காட்சியளித்த பெட்ரோ, “அவசரகால சட்டத்தைக் கொண்டு காங்கிரசைக் கலைத்துவிட்டு, புதிய தேர்தலை நடத்தப் போவதாக” அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

ஏற்கனவே, பெட்ரோவின் ஆட்சியைக் கலைக்க காத்துக்கொண்டிருந்த வலதுசாரிகள் பெரும்பான்மைக் கொண்ட பெரு காங்கிரசுக்கு இதுவொரு நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட காங்கிரஸ், “அரசாங்கத்திற்கு எதிராக பெட்ரோ கேஸ்டிலோ சதி செய்ததாக” குற்றஞ்சாட்டி அதிபர் பதவியில் இருந்து நீக்கியதோடு, கைது செய்து சிறையிலும் அடைக்க உத்தரவிட்டது. மேலும், ‘நிரந்தர தார்மீக திறமையற்றவர்’ என்ற அடிப்படையில் காங்கிரஸில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 130-க்கு 101 என்று பெட்ரோவுக்கு எதிராக வாக்குப் பதிவானது.

சூழல் தனக்கு எதிராக இருப்பதைப் புரிந்து கொண்ட பெட்ரோ, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மெக்சிகோ, அர்ஜென்டீனா நாடுகளின் தூதரகத்தை அடைய முயன்றபோது அவரது பாதுகாப்பு அதிகாரிகளாலேயே கைது செய்யப்பட்டார். பெரு இராணுவம், போலீசுதுறை மட்டுமல்ல துணை அதிபர் உள்ளிட்ட பெட்ரோவின் சொந்த அமைச்சரவை உறுப்பினர்களே பெட்ரோவுக்கு எதிரணியில் நின்றனர்.


படிக்க: சிறிதெனினும், சிவப்பு இவர்களை அச்சுறுத்துகிறது!


பெட்ரோவை அதிபர் பதவியில் இருந்து நீக்கிய உடன், அவரது அரசாங்கத்தில் துணை அதிபராக இருந்த டினா பொலுவார்டே என்பவரை அதிபராக நிறுத்தியதன் மூலம் இதனை ‘சட்டப்பூர்வ’ ஆட்சிக் கவிழ்ப்பாக காட்டி, மக்களின் எதிர்ப்பினை திசைத்திருப்பலாம் என்று எண்ணிருந்தது பெரு காங்கிரஸ். ஆனால், தேர்ந்தெடுத்த அதிபரின் பதவியைப் பறித்ததோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத புதிய அதிபரை நியமித்த பெரு காங்கிரஸ்மீது கடும் கோபமடைந்த மக்கள், “பெட்ரோவை விடுதலை செய்; புதிய அதிபரை பதவி நீக்கு. காங்கிரசைக் கலைக்கவேண்டும்; மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பெரு தலைநகர் லிமா, அரேகுய்பா, ட்ரூஜில்லோ உள்ளிட்ட பல பகுதிகளில் இரண்டு வாரத்திற்கு மேலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொலுவார்டேவுக்கு பெரு வலதுசாரிகள், அமெரிக்க ஆதரவு

பெட்ரோவின் அதிபர் பதவி பறிக்கப்பட்ட இரண்டு மணிநேரத்திற்குள்ளேயே, துணை அதிபராக இருந்த டினா பொலுவார்டே என்பவரை அதிபராக்கியது பெரு காங்கிரஸ். ஊழலுக்கு எதிராகவும் நாட்டை முன்னோக்கி எடுத்து செல்லவும் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க பொலுவார்டே அழைப்பு விடுத்ததற்கு தனது முழு ஆதரவையும் அளிப்பதாகத் தெரிவித்திருக்கிறார் தேர்தலில் பெட்ரோவை எதிர்த்து நின்றவரும் “பாப்புலர் ஃபோர்ஸ்” என்ற வலதுசாரி கட்சியைச் சேர்ந்தவருமான கெய்கோ புஜிமோரி.

டினா பொலுவார்டே அதிபரானதையும் தேசிய ஒற்றுமைக்கான அவர் விடுத்திருக்கும் அழைப்பையும் வரவேற்றுள்ளது அமெரிக்க நாடுகளின் அமைப்பு (Organisation of American States (OAS)). “ஜனநாயகம், அமைதி, அமைப்புமுறைகள் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அதிகாரப்பூர்வ ஆதரவு அளிப்பதாக” தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேவையை குறிப்பறிந்து செய்து முடிக்கக்கூடிய இந்த ஓ.ஏ.எஸ். அமைப்பு அளித்திருக்கும் இத்தகைய ஆதரவு என்பது பெட்ரோ பதவி நீக்கப்பட்டத்தையும் பொலுவார்டே நியமிக்கப்பட்டதையும் அமெரிக்கா ஆதரிக்கிறது என்பதையே குறிக்கிறது.

பெட்ரோவின் சாயம் வெளுத்தது

பெட்ரோ அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்றிருந்தாலும் 79 இடங்களைப் பெற்ற வலதுசாரிகளை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறது பெரு காங்கிரஸ். தற்போது நடந்திருக்கும் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முன்னரும் பெட்ரோ மீதும் அவரின் அமைச்சர்கள் மீதும் ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த காங்கிரஸ் இரண்டு முறை அதிபர் பதவியில் இருந்து நீக்கவும் முயன்றது.

பெரு காங்கிரசில் எதிர்ப்பு இருந்த அதேநேரம் சொந்த கட்சிக்குள்ளும் பெட்ரோவுக்கு எதிரான மனநிலை வளர்ந்து வந்தது. பெட்ரோ அதிபராக பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் ஐந்து பிரதமர்கள் தங்களது பதவியினை ராஜினாமா செய்தனர். அதேபோல், தான் நிராகரித்த பிரதமரை பெட்ரோ நியமித்ததால், தான் வகித்த கூடுதல் மந்திரி பதவியை இரண்டு வாரத்திலேயே ராஜினாமா செய்தவர்தான் தற்பொது அதிபராக பதவியேற்றிருக்கும் டினா பொலுவார்டே. காங்கிரசை கலைப்பது குறித்த பெட்ரோவின் அறிவிப்பு வெளியானதும் முற்றிலும் எதிரணியில் நின்றார் பொலுவார்டே.

அமைச்சரவையில் நிலவிய கருத்து முரண்பாடுகளாலும், வலதுசாரி மற்றும் அமெரிக்காவின் கைப்பாவையாக விலைபேசப்பட்ட சொந்த உறுப்பினர்களாலும் தனது அமைச்சரவையிலேயே எதிர்ப்பு வளர்ந்து, பலமிழந்து வந்த பெட்ரோ, மக்கள் மத்தியிலும் ஆதரவினை இழந்துவந்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தான் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அதிபரான பின்னர் வாயே திறக்கவில்லை என்பது மக்களின் ஆதரவினை இழக்க முக்கிய காரணமாக அமைந்தது.

பெட்ரோவின் முகத்திரை கிழிய வெகு நாட்கள் பிடிக்கவில்லை. பெட்ரோவின் முதல் பிரதமர், எரிவாயு துறையை தேசியமயமாக்குவதாக உறுதியளித்தபோது, “அத்தகைய திட்டம் எதுவும் இல்லை” என மறுத்தார் அதிபர் பெட்ரோ. இரண்டாவது, பிரதமர் மிர்தா வாஸ்குவஸ், “தனியாருக்கு சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளிச் சுரங்கங்கள் மூடப்படும்” என அறிவித்தவுடன் வட, தென் அமெரிக்க நாடுகளில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுவரும் பிரிட்டனைச் சேர்ந்த ஹோச்ஸ்ஷைல்டு (Hochschild) என்ற தனியார் நிறுவனம் 25 சதவிகித பங்கு மதிப்பை இழந்தது.


படிக்க: சிலியின் வசந்தம் !


பிரதமரின் இத்தகைய அறிவிப்பு வெளியான ஒருசில நாட்களிலேயே, “சுரங்கங்களை மூடும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை; சட்ட வழிகளில் நடத்தப்படும் சுரங்க நிறுவனங்களின் உரிமங்கள் நீட்டிக்கப்படும்” என தனது ஏகாதிபத்திய விசுவாசத்தைக் காட்டினார். இதன்மூலம் தனது ஆட்சியை தற்காலிகமாக தக்கவைக்கப் பயன்படுத்திக் கொண்டார். பெட்ரோவின் அறிவிப்புக்கு முன்னர்தான் “சுரங்கங்கள் பாதுகாப்பான சுற்றுச்சூழல் தரத்தின் கீழ் செயல்படும்” என்று தெரிவித்திருந்தது ஹோச்ஷைல்டு நிறுவனம்.

பெட்ரோ ஆட்சியிலும் தங்களது வாழ்வாதாரத்தில் ஏதும் மாற்ற மேற்படாமல் மேலும் பாதிக்கப்பட்டு குமுறிக் கொண்டிருந்த மக்கள் வீதியில் திரண்டனர். சென்ற ஆண்டு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் பல நாட்கள் நடந்தப் போராட்டங்களில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

ஆம், “இளஞ்சிவப்பு அலை”யின் வெற்றியால் தனியார்மயக் கொள்கையை ஒழிக்கமுடியாது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பது மட்டுமல்ல, “இளஞ்சிவப்பு” வீரரான பெட்ரோ கேஸ்டிலோ அந்த நேர்மையுடையவரும் அல்ல என்பதைதான் அவரது நடவடிக்கைகளும் அதற்கு எதிரான மக்களின் போராட்டங்களும் உணர்த்துகின்றன.

அமெரிக்காவிடம் சரணடைந்த பிழைப்புவாதி பெட்ரோ

பொதுவாக, தான் வகுத்துக் கொண்ட கொள்கையையும் மக்கள் நலத் திட்டங்களையும் நிலவுகின்ற அரசு கட்டமைப்புக்குள் செயற்படுத்த முடியாமல் திணறும்; தாங்கள் ஏற்றுகொண்ட கொள்கைகளுக்கு உண்மையாக செயல்படுத்த முயன்று எதிரிகளால் கொல்லப்பட்ட தலைவர்கள் பலரை “இளஞ்சிவப்பு அலை” பார்த்துள்ளது. ஆனால், இத்தகைய பட்டியலில் பெட்ரோவின் பெயரை ஒருபோதும் சேர்க்க முடியாது.

தனக்கு எதிராக வளர்ந்து வரும் மக்கள் போராட்டங்கள் ஒருபக்கம். நிலைக்குலைந்திருக்கும் அமைச்சரவை, ஆட்சியைக் கவிழ்க்க கழுகுபோல் அமெரிக்க ஆதரவோடு காத்துக்கொண்டிருக்கும் பெரு காங்கிரஸ் ஆகியவை மற்றொரு பக்கம். இம்மூன்று கத்திகளுக்கு இடையில் சிக்கியிருக்கும் பெட்ரோ இறுதியாக தனது ஆட்சியினை தக்கவைத்துக் கொள்ள புகலிடம் தேடி சென்றது அமெரிக்காவிடம்.

தனக்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு அச்சுறுத்தல் வளர்ந்து வருவதை எதிர்கொள்ளவும் பெரு ஜனநாயகத்தை பாதுகாக்கவும் தனக்கு உதவுமாறு கடந்த அக்டோபர் மாதம், அமெரிக்க கட்டப் பஞ்சாயத்து அமைப்பான ஓ.ஏ.எஸ்-சை நாடினார் பிழைப்புவாதி பெட்ரோ. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள ஓ.ஏ.எஸ்-சை நாடிய போது, பெருவின் அரசியல் நிலைமையை ஆய்வு செய்ய தனது உயர்மட்டக் குழுவை பெருவுக்கு அனுப்பிய ஓ.ஏ.எஸ், பெருவின் ஜனநாயக நிறுவனங்கள் ஆபத்தில் உள்ளதாகவும் ஸ்திரத்தன்மையின்மையால் பெரு நாட்டை நிர்வகிப்பதும் அவசர பிரச்சினையில் தலையிடுவதும் கடினம் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்ததன் மூலம் பெட்ரோவை கைகழுவிவிட்டது.

அதன் பின்னர் நெருக்கடி முற்றி முட்டுசந்தில் நின்ற பெட்ரோ தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள மேற்கொண்ட சமீபத்திய நடவடிக்கைதான் காங்கிரசை கலைத்து அவசர தேர்தலுக்கான அறைகூவலாகும்.

மக்கள் படும் துன்ப துயரங்களையும் மக்களிடையே நிலவிய ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வையும் கவர்ச்சிகரமான முழக்கங்களை முன்வைத்து வாக்குகளாக மாற்றி வெற்றிப் பெற்று அதிபரான பெட்ரோ, தனியார்மயக் கொள்கைகளை அமல்படுத்தியதோடு அமெரிக்க ஏகாதிபத்தியத்திடமே சரணாகதி அடைத்திருப்பது அப்பட்டமான பிழைப்புவாதம், பச்சை துரோகமாகும்.

தற்போது அவரது ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராகவும் பெட்ரோ சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் திரண்டி போராடி வருகின்றனர். இதில் 34-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டு பலர் படுகாயமுற்றிருக்கின்றனர். இதற்குக் காரணம், மக்களிடம் அடங்காது கொழுந்துவிட்டு எரியும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு – ஜனநாயக உணர்வின் வெளிப்பாடுகளாகும்.


படிக்க:பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ளவே துருக்கியின் ஸ்வீடன் எதிர்ப்பு!


தங்களை ஆண்ட வலதுசாரிகளின் ஆட்சியில் அனுபவித்த துன்பதுயரங்கள் பெட்ரோ ஆட்சியிலாவது மாறாதா என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். பெட்ரோ மக்களின் அந்த எதிர்பார்ப்புக்கு துரோகமிழைத்தாலும், ஏகாதிபத்திய அடிவருடி வலதுசாரிகளுக்கு பெட்ரோவை கைது செய்ய அருகதை இல்லை என்பதே மக்கள் போராட்டங்களின் வெளிப்பாடாகும். மக்களின் இந்த நம்பிக்கைக்கு சிறிதும் அருகதையில்லாதவர்தான் இந்த பெட்ரோ.

அதுதான் அமெரிக்காவிடம் பெட்ரோ சராணாகதியடைந்துவிட்டாரே பிறகு ஏன் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டது என கேள்வி எழலாம். “தனியார்மயத்தை ஒழிப்பேன், அரசுடைமையாக்குவேன்” என்று பேச்சளவிலும்கூட இருக்கக்கூடாது என்பதே அமெரிக்க மேலாதிக்கத்தின் எண்ணம்.

டினா பொலுவார்டேவுக்கு பெருவின் வலதுசாரி கட்சிகளும் அமெரிக்காவும் ஆதரவு அளித்திருப்பதன் காரணம் என்னவென்றால், தான் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்புக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுப்பதற்காகவும் தனது கைப்பாவையாக அரசை மாற்றுவதற்காகதான். தேவையில்லையென்றால் பொலுவார்டேவை மாற்றி தனது ஆதரவாளர்களை அதிபராக்கவும் சிறந்த வழி இதுவே. 2026-ஆம் ஆண்டு வரை இருந்த அதிபர் பதவி காலத்தை குறைத்து 2024 ஆண்டில் தேர்தல் நடத்தப்போவதாக பெரு காங்கிரஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது புதிய அதிபர் நியமனத்தை எதிர்த்து வளர்ந்துவரும் மக்கள் போராட்டத்தின் வீரியத்தினை தணிக்கதான்.

எனவே, ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்ட மக்களை இப்போலி இளஞ்சிவப்பு பாதைக்கு வெளியே புரட்சிப்பாதையில் அணிதிரட்ட, மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிக்கரக் கட்சியைக் கட்டியமைப்பதுதான் பெரு மக்களுக்கு மட்டுமல்ல ‘இளஞ்சிவப்பு அலை’ மாயையில் கட்டுண்டு கிடக்கும் தென்னமெரிக்க நாடுகளின் மக்களுக்கு அவசர அவசிய தேவையாக உள்ளது.

வெண்பா

மோடி உரை: பாசிச பாராளுமன்றம்! | தோழர் அமிர்தா வீடியோ

மோடி என்கிற பிம்பம் வீழ்த்தப்பட அழிக்கப்பட முடியாத ஒரு பிம்பமாக வளர்ந்து நிற்கிறது. ராஜ்யசபா கூட்டத்தில் கிட்டத்தட்ட 1¾ மணி நேரம் பேசிய மோடி, எதிர்க்கட்சிகள் அதானி பற்றி பேசக் கோரி உரக்க அமலிகளில் ஈடுபட்ட போதும் கூட “நான் இந்த நாட்டுக்காகத் தான் இருக்கின்றேன்; எனக்கு குடும்பமே இல்லை” என்று பாசிஸ்டுகள் பேசக்கூடிய தொணியில் பொய்யாக பேசினார். கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்வது என்பது அவரது அகராதியிலேயே கிடையாது. பொய் சொல்வது, கேள்வி கேட்பவர்களுடைய தகுதி என்ன என்று மாற்றி பேசுவது, இதன் மூலமாக தன்னை தக்க வைத்துக் கொள்வது; இதுதான் மோடியின் வழக்கம். அதானியின் நண்பரா நீங்கள் என்று கேட்டால், தேசநலன் என்று பேசுவது; அல்லது பொதுவான ஒரு எதிரியை முன்னிறுத்தி தன்னை தற்காத்துக் கொள்வது என்பது அவருடைய நடைமுறை.

இந்த அரசியலமைப்பு சட்டத்திற்குள்ளேயே நின்று அதை பாதுகாப்பதன் மூலமாக பி.ஜே.பி-ஆர்.எஸ்.எஸ் கும்பலை அழித்துவிட முடியும் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கிறார்கள். இந்த அரசியலமைப்பை வைத்துக்கொண்டே, சட்டத்தை வைத்துக் கொண்டே இந்திராஷ்டத்தை அமைத்துவிட முடியும் என்பதுதான் 8 ஆண்டுகால பி.ஜே.பி ஆட்சியின் அனுபவம். இதை பாதுகாப்பதன் மூலமாக அவர்களை ஒருபோதும் வீழ்த்த முடியாது.

எதிர்க்கட்சிகளின் மௌனம் என்பதுதான் இன்று ஒரு அவலமாக இருக்கிறது. ஜனநாயக சக்திகளாகிய நாம் ஒரு அணியில் திரள வேண்டியிருக்கிறது. பாசிசத்திற்கு மாற்றாக பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை கட்டியமைப்பதற்கான திட்டங்களை முன்வைப்பதன் மூலமே அவர்களை வீழ்த்த முடியும்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கொலீஜிய பரிந்துரைகளை தணிக்கை செய்யும் பாசிச மோடி அரசு!

0

டந்த ஜனவரி 17-ஆம் தேதி அன்று உச்சநீதிமன்ற கொலீஜியம் வழக்கறிஞர் லெக்‌ஷ்மனா விக்டோரியா கௌரி என்பவரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்தது. விக்டோரியா கௌரியின் பா.ஜ.க தொடர்பை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு வழக்கறிஞர்கள் இந்த பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய வெறுப்பு கொண்ட ஒருவரை கொலீஜியம் எவ்வாறு பரிந்துரைத்தது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த விடோரியா கௌரி, செப்டம்பர் 2020 முதல் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றி வந்தவர். உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பதவியேற்றதற்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பாகத்தான் பா.ஜ.க-வின் கட்சி உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டதாக அவரே கூறியிருக்கிறார்.

2019-ஆம் ஆண்டு ஆகஸ்டில் பா.ஜ.க-வில் இணைந்த விக்டோரியா கௌரி, சுமார் ஒரு வருட காலம் அக்கட்சி உறுப்பினராக இருந்தார். தனது ட்விட்டர் பக்கத்தில் “சௌகிதார் விக்டோரியா கௌரி” என தனது பெயரை வைத்திருந்தார். மேலும் அவர் பா.ஜ.க மகிளா மோர்ச்சாவின் தேசிய பொதுச் செயலாளராகவும் செயல்பட்டுள்ளார். அவரது ட்விட்டர் டைம்லைனில் (timeline) பெரும்பாலும் மோடி மற்றும் அமித் ஷாவின் பதிவுகளின் ரீடுவீட்கள் (retweets) இடம்பெற்றுள்ளன. மாணவப் பருவத்திலேயே அவர் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2018-ஆம் ஆண்டில் ஒரு நேர்காணலில் “பச்சை பயங்கரவாதமாக இஸ்லாம் இருப்பதைப் போல, கிறிஸ்தவம் வெள்ளை பயங்கரவாதமாக இருக்கிறது” என்று கௌரி கூறியுள்ளார். மேலும், இந்த இரு சமூகங்களும் “லவ் ஜிஹாதில்” ஈடுபடுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். முஸ்லீம் ஆண்கள் இந்துப் பெண்களை இஸ்லாத்திற்கு மதம் மாற்றுவதற்காகத் தான் காதலிக்கிறார்கள் என்பது இந்துத்துவா குழுக்களால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு சதிக் கோட்பாடு. மேலும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்கு கிறிஸ்தவம் அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


படிக்க: பாசிசத்தைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம் !


அவரை நீதிபதியாக உயர்த்துவதற்கு ஆட்சேபனை தெரிவித்து 21 சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற கொலீஜியத்திற்கு பிப்ரவரி 1-அன்று கடிதம் எழுதினர். ஆனால் அதே சமயத்தில், மதுரையை சேர்ந்த 50-ற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கௌரிக்கு ஆதரவாக பிப்ரவரி 3-அன்று  குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய அவலமும் அரங்கேறியது.

இதற்கிடையில், கௌரியின் நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால்  உச்சநீதிமன்றம் அம்மனுவை தள்ளுபடி செய்தது. குறிப்பாக நீதிபதி கவாய், “நானே மாணவனாக இருந்தபோது அரசியல் கட்சி தொடர்பில் இருந்திருக்கிறேன். ஆனால், நீதி வழங்கும்போது சார்பு இருக்கக் கூடாது” என்று தனது கருத்தை பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து பிப்ரவரி 7-அன்று விக்டோரியா கௌரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார்.

முதலில், உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட உள்ளவர்களின் பெயர்கள், அந்த உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியால் அந்நீதிமன்றத்தின் இரண்டு மூத்த நீதிபதிகளுடன் கலந்தாலோசித்த பிறகு  பரிந்துரைக்கப்படும். அந்தப் பெயர்கள் மாநில முதல்வர் மற்றும் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், அந்தப் பெயர்களையும் முதலமைச்சரின் கருத்துக்களையும் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு ஆளுநர் அனுப்பி வைப்பார். உளவுத்துறையை (Intelligence Bureau) பயன்படுத்தி அவர்களின் பின்னணி சரிபார்க்கப்படும். சட்ட அமைச்சகம் இந்தத் தகவலை இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கும். அவர் உச்ச நீதிமன்றத்தில் உள்ள இரண்டு மூத்த நீதிபதிகளைக் கலந்தாலோசித்து பரிந்துரையை முடிவு செய்வார். இவ்வாறு தான் கௌரியின் பரிந்துரையும் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இவர்களில் யார் கண்களுக்குமே விக்டோரியா கௌரி ஆர்.எஸ்.எஸ்-பாஜக தொடர்பு கொண்டவர் என்பது புலப்படவில்லை போலும்! தற்போது உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள அவர் அடுத்த 13 ஆண்டுகளுக்கு நீதிபதியாக பதவி வகிப்பார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு கொலிஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் சவுரப் கிர்பால், ஜான் சத்யன் மற்றும் சோமசேகரன் சுந்தரேசன் ஆகிய மூன்று உயர் நீதிமன்ற நியமனங்களை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. அதற்கான காரணத்தை ஜனவரி 19, 2023 அன்று கொலிஜியம் வெளியிட்டது.

அதில், சவுரப் கிர்பால் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் மற்றும் அவரது துணை சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்று காரணம் கூறி அவரின் நியமனத்தை அரசு திருப்பி அனுப்பியுள்ளது.

பிப்ரவரி 16, 2022 அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்டார் ஜான் சத்யன். அவர் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து இரண்டு சமூக ஊடகப் பதிவுகளை வெளியிட்டுள்ளதாக உளவுத்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதனை அடுத்து ஜான் சத்தியனின் நியமனமும் திருப்பி அனுப்பப்பட்டது.

ஒரு பதிவில், சத்யன் மோடியை விமர்சித்து தி குவின்ட்-இல் (The Quint) வெளியான ஒரு கட்டுரையைப் பகிர்ந்துள்ளார். இன்னொரு பதிவு, 2017-ல் நீட் (NEET) தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவைப் பற்றியது. அந்தப் பதிவில் “அரசியல் துரோகத்தால் செய்யப்பட்ட கொலை” என்று குறிப்பிட்டு இருந்ததாகவும் “தேசத்தின் அவமானம்” (shame of you India) என்ற டேக்-ஐ (tag) கொண்டிருந்ததாகவும் உளவுத்துறை கூறியது.


படிக்க: ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பற்றாக்குறை | வழக்குகள் தேக்கம் !


பம்பாய் உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட சுந்தரேசன் அரசின் முக்கியமான கொள்கைகள், முன்முயற்சிகள், நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ள பல விடயங்கள் குறித்து சமூக ஊடகங்களில் கருத்து கூறியிருப்பதால் அவர் ஒருபக்க சார்புடையவர் என்ற அடிப்படையில் அவரின் பரிந்துரையை திருப்பி அனுப்பியுள்ளதாக அரசு கூறியிருக்கிறது.

அரசையும் உளவுத்துறையும் பொறுத்தவரை பா.ஜ.க-வின் மகளிர் அணியான பா.ஜ.க மகிளா மோர்ச்சாவின் தேசிய பொதுச் செயலாளராக இருந்த விக்டோரியா கௌரி அரசியல் சார்பு உடையவர் அல்ல. வழக்கறிஞர்களாக இருந்தபோது, மோடியை விமர்சனம் செய்த ஜான் சத்யனும் அரசின் கொள்கைகளை கேள்வி எழுப்பிய சுந்தரேசனும் தான் அரசியல் சார்புடையவர்களாக பாசிச மோடி அரசின் கண்களுக்குத் தெரிகிறார்கள். எதிர் குரல்களை விரும்பாதது தான் இந்துராஷ்டிர நீதி என்பதற்கு இது ஒரு துலக்கமான சான்று.

பொம்மி

ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானியை பற்றி வாய்திறக்காத மோடி அரசு! | தோழர் பரசுராமன் வீடியோ

ன்பான உழைக்கும் மக்களே! தொழிலாளர்களே! தோழர்களே! அமெரிக்காவைச் சார்ந்த ஹின்டன்பர்க் (Hindenburg) ஆய்வு நிறுவனம் அதானி குழுமம் குறித்து வெளியிட்ட ஒரு அறிக்கையின் மூலமாக உலகில் மூன்றாவது பணக்காரராக இருந்த அதானி என்றைக்கு ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். ₹10 இலட்சம் கோடி சொத்து மதிப்பு என்று காட்டியிருந்த அதானி குழுமம் இன்றைக்கு ₹2.40 இலட்சம் கோடி மதிப்பை இழந்து இருக்கிறது.

எதனால் இந்த இழப்பு ஏற்பட்டிருக்கிறது? கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹின்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்தை ஆய்வு செய்ததாகவும், அதனுடைய பங்கு மதிப்புகள் ஊதிப் பெருக்கப்பட்டதாகவும், அதனுடைய நிறுவனங்கள் பல போலியானதாகவும், அவருடைய குடும்ப உறுப்பினர்களை கொண்டு ஏற்படுத்தப்பட்டதாகவும், இந்த பங்குச்சந்தை விதிகளுக்கு புறம்பாக பெருவாரியான பங்குகளை அவர்களே வைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறியது. 70 சதவிகித பங்குகள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற விதியை மீறி 80 – 90 சதவிகித பங்குகளை அவர்களே வைத்துக்கொண்டு எஞ்சி இருக்கக்கூடிய 10 – 20 சதவிகித பங்குகளை எல்.ஐ.சி போன்ற அரசு நிறுவனங்களை வாங்க வைத்து ஊதிப் பெருக்கியிருக்கிறார்கள். ஹின்டன்பர்க் நிறுவனம் 88 கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2023 | மின்னிதழ்

ன்பார்ந்த வாசகத் தோழர்களே,

பிப்ரவரி – 2023 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜி−பே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ. 20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

♦ தலையங்கம்: ‘இந்துராஷ்டிரம்’ அதானிகளின் தேசம்!
♦ “ஒரே நாடு”! ஒன்றுகலக்காத “தமிழ்நாடு”!
♦ ஆக்ஸ்ஃபாம் அறிக்கை: இதோ மோடியின் ‘புதிய இந்தியா’!
♦ மலத்தைவிடக் கொடியது சாதிய அரசு!
♦ பேய் நாடாள்கிறது! சாத்திரங்கள் பிணந்தின்ன வேண்டாமா?
♦ திரிபுரா மாடல் தேர்தல் வன்முறை: பாசிஸ்டுகள் கற்றுத்தரும் பாடம் என்ன?
♦ சத்தீஸ்கர்: கிறிஸ்தவப் பழங்குடியின மக்கள்மீது பெருகி வரும் காவி பாசிசத் தாக்குதல்கள்!
♦ புதைந்து வரும் ஜோஷிமத் நகரம்! ‘வளர்ச்சி’யின் பெயரால் நடத்தப்படும் பேரழிவு!
♦ மக்களை வாட்டும் பொருளாதார நெருக்கடி: நேற்று – இலங்கை, இன்று – பாகிஸ்தான்!
♦ தொலைத்தொடர்பு மசோதா 2022: பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான நடவடிக்கை!

தூய்மை பணியாளர்களை சுரண்டும் கிரிஸ்டல் நிறுவனமும் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகமும்!

தூய்மை பணியாளர்கள் மீது கிரிஸ்டல் (Krystal) தனியார் நிறுவனம் மற்றும் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் இணைந்து நடத்தும் உழைப்பு சுரண்டல்!

கோவை மாவட்டம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஈ.எஸ்.ஐ அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கிரிஸ்டல் நிறுவனத்திற்கு கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.

9.02.2023 அன்று மருத்துவமனை வளாகத்திற்குள் மாநகராட்சி நிர்ணயித்த ஊதியத்தை வழங்கவும், பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் ஒடுக்கு முறைக்கு எதிராகவும் மூன்றாவது  நாளாக இரவு, பகலாக போராடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் தூய்மை பணியாளர்களுக்கான புதிய ஊதிய பட்டியல் மாவட்ட ஆட்சியர் சார்பில் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. அதில், தூய்மை பணியாளர்களுக்கு 721 ரூபாய் ஊதியமாக கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதன்பின் வழங்காமல் இருந்ததை அடுத்து, அக்டோபர் மாதம் மாவட்ட ஆட்சியர், மருத்துவமனை முதல்வர் ஆகியோரின் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு 721 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து, அதற்கான ஆணையையும் மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.

ஆனால், பணியாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு 420 ரூபாய் மட்டும் வழங்கிவிட்டு 721 ரூபாய் வழங்கியுள்ளதாக அரசுக்கு கணக்கு காண்பித்துள்ளனர். கோவை அரசு மருத்துவமனை சமூக நீதி தூய்மை பணியாளர் சங்க தலைவர் கவிதா அவர்கள் கல்லூரி முதல்வர் நிர்மலாவிடம் “எங்களுக்கு கொடுத்த ஆணையின்படி ஊதியத்தை வழங்க வேண்டும்” என்று கேட்டுள்ளார். அதற்கு, கல்லூரி முதல்வர் “நீங்கள் என்ன அரசு ஊழியர்களா உங்களுக்கு இவ்வளவு ஊதியம் கொடுக்க”, பின், மாவட்ட ஆட்சியர் கொடுத்த ஆணையையும் கொடுத்துப் பேசும்போதும்  “அப்படியெல்லாம் கொடுக்க உங்களுக்கு எந்த ஒரு உத்தரவும் வரவில்லை” என்று கூறியுள்ளார்.

படிக்க: சேலம் ஆதிக்க சாதி வெறியனின் ஆபாச பேச்சு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில் “மருத்துவமனை முதல்வரும், மாவட்ட ஆட்சித் தலைவரும் ஒன்றாக தான் இருந்தனர். இப்போது அந்த அரசாணை தெரியாதது போல் எங்களிடம் கேள்வி கேட்கிறார்” என்கிறார் கவிதா அவர்கள்.

இதனை ஒப்பந்த நிறுவனமான கிரிஸ்டல் (Krystal) நிறுவனத்திடம் கூறியதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. “இவர்கள் யாரும் நமக்காக குரல் கொடுக்க மாட்டார்கள், நமக்கான அடிப்படை வசதிகளை செய்து தரமாட்டார்கள் நாமே போராடி பெற்றுக் கொள்வோம் என்று இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறோம்” என்று கூறி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை  நடத்தி வருகின்றனர்.

***

தூய்மை பணியாளர்கள் பேசும் போது, “நாங்கள் பணிக்கு சேர்ந்தது இரண்டு வேலைகளுக்கு மட்டுமே, ஆனால் முதல்வரோ எங்களை பல்வேறு வேலைகளில் ஈடுபட வைக்கிறார். குறிப்பாக நாங்கள் ஹவுஸ் கீப்பிங் பணி செய்யவே வந்துள்ளோம். ஆனால், மருத்துவமனை முதல்வர் நிர்மலா எங்களை அசிஸ்டன்ட் வேலை, கழிவுகளை அல்லும் வேலை, வெவ்வேறு தளங்களில் உள்ள மருத்துவர்களிடம் கையெழுத்து வாங்குவது என எங்களது பணி நேரம் முடிந்த பின்பும் இந்த வேலைகளை செய்ய நிர்பந்திக்கிறார்” என்கின்றனர்.

அதுமட்டுமின்றி, “படித்த மருத்துவர்கள் பயோ மெடிக்கல் வேஷ்டை போடுவதில்லை. கையுறை மற்றும் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தபடும் கழிவுகள் போடும் இடத்தில் ஊசிகளை ஒரே பெட்டியில் உடைத்துப் போட்டு விடுகின்றனர். நாங்கள் மறுநாள் அந்த குப்பைகளை கைகளால் சுத்தம் செய்யும்போது அது எங்கள் கைகளில் காயத்தை ஏற்படுத்துகிறது”. இதனால் கடந்த மாதம், “சாமிநாதன் என்ற தொழிலாளிக்கு விரலில் நீடில் குத்தியது அதை நீக்கும் போது அவருக்கு ஏற்பட்ட வலி எங்கள் கண்களால் காண முடிந்தது”.

இதனை முறையாக மருத்துவர்களிடம் சென்று கூறினால் “நீங்கள் அந்தப் பணிக்கு தானே வந்தீர்கள் என்று எங்களை இழிவாக பேசுகின்றனர்”.

படிக்க: இறையூர் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: விசாரணை என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களை துன்புறுத்தாதே! | மக்கள் அதிகாரம்

“உடல் உபாதைகள் மற்றும் குளிப்பதற்கு வழங்கியுள்ள அறையில் குடிநீர் குழாய் முறையாக இல்லை, அந்தக் கழிவறைக்கு நாங்கள் சென்று வந்தால் அனைத்து விதமான நோய்களும் வந்துவிடும்”.

கொடுக்கப்பட்ட அறை உணவு அருந்த முடியாத துர்நாற்றம் வீசும் நிலையிலே இருக்கிறது. ஆனால், “இன்று வரை நாங்கள் அங்கு தான் அமர்ந்து சாப்பிடுகிறோம். அப்படி ஒரு நாள் உணவு அருந்தி கொண்டிருக்கும்போது அந்த வழியாக வந்த  மூர்த்தி  (கல்லூரி நிர்வாகி) உங்களை யாரு இங்க உட்கார்ந்து சாப்பிட சொன்னது, நீங்கெல்லாம் ரோட்ல போய் உட்கார்ந்து சாப்பிடுங்க” என்று கூறியுள்ளார். அதற்கு தூய்மை பணியாளர்கள் “நீங்கள் முதலில் அங்கு அமர்ந்து சாப்பிட்டு காமிங்க பின்பு நாங்கள் அங்கு சாப்பிடுகிறோம்” என்று கூறி அதிகார திமிருக்கு செருப்படி கொடுத்துள்ளனர்.

“நாங்கள் பணிக்கு போகும் நேரம் காலை 7 மணி. ஆனால் பணி முடிந்து வீடு செல்வது என்பது எந்த ஒரு நேரம் வரம்பின்றி வேலையில் ஈடுபடுகிறோம்”.

“பலமுறை நிர்வாகத்திடமும், ஒப்பந்ததாரர் நிறுவனத்திடமும் கூறியும் எந்தவொரு கோரிக்கையும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. இது எங்களை மனதளவில் பாதிப்படையை செய்துள்ளது. எனவே இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படவில்லை என்றால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்” என்று கூறுகின்றனர்.

***

இப்போராட்டத்தை, சீர்குலைக்கும் வகையில் வட மாநில தொழிலாளர்களைக் கொண்டு பணியை தொடர கிரிஸ்டல் நிறுவனம் அழைத்து வந்து பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இதை கேள்விக்கேட்ட போராடும் தூய்மை பணியாளர்களை “நீங்கள் அனைவரும் சேர்ந்து வட மாநிலத் தொழிலாளர்களை தாக்கியுள்ளீர்கள், உங்களை கைது செய்வோம் மண்டபம் தயாராக உள்ளது” என்று போராட்டத்தை கலைக்க முயற்சித்து போலீசை குவித்து மிரட்டியுள்ளனர்.

“மருத்துவமனைக்கு உள்ளே அமர்ந்து போராடக்கூடாது உங்கள் நிறுவனத்தில் போய் போராடுங்கள்” என்று பெண் போலீஸ் அதிகாரிகள் மிரட்டியுள்ளனர். அதற்கு, “நாங்கள் இந்த மருத்துவமனையில் தான் வேலை செய்கிறோம். அப்படி சொல்லி தான் எங்களை Krystal நிறுவனம் பணியமர்த்தியுள்ளது. எனவே நாங்கள் இங்கு அமர்ந்து தான் போராடுவோம். மும்பைக்குச் சென்று அல்ல” என்று அனைவரும் கேள்வி கேட்டவுடன் அந்தப் பெண் போலீஸ் அதிகாரி அங்கிருந்து சென்றிருக்கிறார்.

இப்படி அவர்களிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கும்போது கிரிஸ்டல் நிறுவனத்தின்  மேலாளர் தினேஷ், கவிதா அவர்களை “ஏ கவிதா இங்க வா” என்று ஒருமையில் அழைத்தார். அவர்களிடம் கேட்கும் போது “எப்போதும் இப்படித்தான் எங்களை அழைக்கின்றனர், இவர்கள் மட்டுமல்ல இங்கு இருக்கும் படித்த மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் எங்களை மனிதனாக கூட மதிப்பதில்லை” என்று வேதனையோடு கூறுகின்றனர்.

***

இவையெல்லாம் ஏதோ கோவை அரசு மருத்துவமனைகளில் மட்டும் நடக்கும் அவலமல்ல. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளின் அவலநிலையும் இதுதான். இந்த அரசு தனியார்மய கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. இதுதான் தூய்மை பணியாளர்களின் அவலநிலைக்கு முக்கிய காரணம்.

பல்வேறு துறைகளில் ஒப்பந்த அடிப்படையிலான பணிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அனைத்தும் தனியாருக்கே வழங்குவோம் என்று இந்த அரசு கட்டமைப்பு முதலாளித்துவ உழைப்பு சுரண்டலுக்கு ஆதராவாக நிற்கிறது.

உழைப்பு சுரண்டலுக்கு எதிராக அனைத்து தூய்மை பணியாளர்களையும் களப்போராட்டத்தில் ஒன்று சேர்க்கிறது முதலாளித்துவ விசக்கிருமி. அதை சுத்தம் செய்வது தான் நாம் அனைவரின் கடமையாகும்.

மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்.
94889 02202

இணையவழி கல்வி உதவித் தொகை விண்ணப்பம்: பாதிக்கப்படும் ஆதிராவிடர்-பழங்குடி மாணவர்கள்!

இணையவழி என்று மாணவர்களை வஞ்சிக்காமல் மாணவர்களிடம் விண்ணப்பத்தை நேரடியாக  பெற்று உதவி தொகையை வழங்கிடு!

ரசு கலைக் கல்லூரியில் படிக்கும் ஆதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக  வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பத்தை இந்த முறை இணையவழியில்  பூர்த்தி செய்ய அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால் இணையவழியில் எப்படி விண்ணப்பங்கள் பூர்த்தி செய்வது, அதற்கு என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்ற வழிகாட்டுதலை  இதுவரை அரசும் கல்லூரி நிர்வாகமும் மாணவர்களுக்கு வழங்கவில்லை. அதற்கான இணைய வசதிகளும் அரசு கல்லூரிகளில்  கிடையாது.

ஒவ்வொரு ஆண்டும் ஆதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு 4000 முதல் 8000 வரை கல்வி உதவித் தொகையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு 1000 முதல் 2000 வரை கல்வி உதவித் தொகையும்  அரசு சார்பில் மாணவர்களின் வங்கி கணக்கில்  செலுத்தப்பட்டு வருகிறது.  ஆனால் இந்த ஆண்டு அதற்கான விண்ணப்பத்தை ஜனவரி மாதம்   மாணவர்களிடம் கொடுத்து கைகளால் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஒவ்வொரு துறையின் வகுப்பு  ஆசிரியரும் ஜனவரி இறுதியில் வாங்கி கொண்டனர்.

ஆனால் தீடிரென்று  பிப்ரவரி 1 தேதி எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல்  இதுவரை கைகளால் பூர்த்தி செய்யப்பட்ட  கல்வி உதவி தொகைக்கான விண்ணப்பத்தை இணைவழியில் மீண்டும் பதிவு செய்ய வேண்டுமென அரசு சார்பில் சுற்றறிக்கை கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டது.  விண்ணப்பத்தை பதிவு செய்து முடிக்க வேண்டிய காலக்கெடுவும், பிப்பிரவரி 1 முதல் 15 வரை, நிர்ணைத்துள்ளது அரசு.

ஆனால் இதுவரையிலும் இணைவழியில் கல்வி உதவி தொகைக்கான விண்ணப்பத்தை பதிவு செய்த அனுபவம் இல்லாத மாணவர்களுக்கு இது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.

படிக்க: கேரளா: திரைப்பட கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

அரசு சார்பில் இணையவழியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முதலில் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் தேவைப்படுகிறது. ஆதார் கார்டு எண் போட்டவுடன் அந்த தொலைபேசி எண்ணிற்கு வரும்   OTP யை பயன்படுத்தி அடுத்தகட்ட  விண்ணப்பத்திற்குள் செல்ல முடியும். ஆனால் ஆதார் கார்டு எடுத்த தருணத்தில் பெரும்பாலான மக்களிடம் தொலைபேசி கிடையாது. அப்பா இல்லையென்றால் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் தொலைபேசி எண் தான் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதால் முதல் பக்கம் விண்ணப்பத்தை கூட பூர்த்தி செய்ய முடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர். எல்லா மாணவர்களும் ஒரே நேரத்தில் விண்ணப்பம் பூர்த்தி செய்ய அரசு வழங்கப்பட்ட‌ இணைப்பிற்குள் செல்வதால் தொடர்ச்சியாக இணையவழி பிரச்சினைகளும் வந்து கொண்டிகிறது. TN யுடன் தொடங்கும் புதிய  வருமானவரி சான்றிதழும், கணினி வழியாக பெறப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சாதி சான்றிதழ்களும் அரசு வழங்கிய இணைப்பில் குறிப்பிட்ட தேதிக்குள் பதிவேற்றப்பட வேண்டும். ஆனால் அதிகப்படியாக மாணவர்கள் அட்டை வடிவிலான சான்றிதழ் தான் வைத்துள்ளனர் இதனால் எதன் அடிப்படையில் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறதோ அந்த முக்கிய ஆவணத்தை கூட  மாணவர்களால் பதிவேற்றம் செய்ய முடியவில்லை.

இணையவழியில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய சொல்லிய அரசை  கண்டித்தும் கால நீட்டிப்பு செய்ய வலியுறுத்தியும் 6-2-2022 அன்று திருவாரூர் திரு.வி.க கலை கல்லூரியிலும், 7-2-2023 நன்னிலம் அரசு கல்லூரியிலும், 8-2-2023 திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரியிலும் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த உதவித் தொகையை பெறக்கூடிய மாணவர்களில் பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புற மாணவர்கள், இவர்கள் இதுவரை  இதுபோன்ற இணையவழிகளை பயன்படுத்தியது கிடையாது அதை பற்றி வழிகாட்டுதலையும் அரசு வழங்காமல் இருக்கிறது. இந்த கல்வி உதவி தொகை மூலம் தான்  ஒரளவு தன்னுடைய கல்லூரி கட்டணத்தையும், தேர்வு செலவுகளையும், போக்குவரத்து செலவுகளையும் மாணவர்கள் சமாளித்து வருகின்றனர். ஆனால் அதை தடுப்பதற்கு அரசு இணையவழி என்ற முறையை கொண்டுவந்துள்ளது.   100 ரூபாய் செலவு செய்து கணினி ‌மையத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய அளவிற்கு மாணவர்கள் யாரும்  தயாராக இல்லை. 100 ரூபாய் செலவாகும் என்பதால் அந்த விண்ணப்பங்களை பதிவு செய்யாமல் மாணவர்கள் விட்டு விடுகின்றனர்.

படிக்க: பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் போராட்டம்! பாராமுகம் காட்டிவரும் தமிழக அரசு!

முந்தைய ஆண்டுகளில் கைகளால்  விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நிர்வாகத்தில் நேரடியாக கொடுத்திருந்த போதும் சில மாணவர்களுக்கு இன்றுவரை உதவி தொகை வராமல் இருக்கிறது.  இப்படி இருக்கையில் இணையவழி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பினால் வங்கி கணக்கோடு ஆதார் எண் இணையவில்லை, வாங்கி கணக்கோடு பயன்படுத்தும் தொலைபேசி எண் இணையவில்லை, வருமானவரி சான்றிதழில் சரியாக பதிவேறவில்லை என‌‌ நொண்டி சாக்கு களை எல்லாம் சொல்லி கல்வி உதவி தொகையை நிறுத்தும் வேலையில் இப்போது அரசு இறங்கியுள்ளது.

ஏன் வங்கி கணக்கில் பணம் ஏறவில்லை என‌ கேள்வி எழுப்பி அதை அடுத்தகட்டமாக நகர்த்திச் செல்ல தொடர்ச்சியாக அலை‌ய வேண்டி‌ இருப்பதால்  கிராமப்புற மாணவர்களும் அதை விரும்புவதில்லை.

எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல்  அதற்கான பயிற்சி இல்லாத மாணவர்களிடம் தீடீரென்று இப்படி இணையவழியில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய சொல்லுவதானது மாணவர்களை வஞ்சிக்கும் போக்காகும். மாணவர்களிடமே கல்வி உதவி தொகையின் மீது வெறுப்பை ஏற்படுத்தி அடுத்தடுத்த ஆண்டு இந்த கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்; தற்போது விண்ணப்பிக்காமல் இருப்பதே நல்லது என்ற‌ மனநிலையை மாணவர்கள் மத்தியில் உருவாக்கி வருகிறது அரசு. இப்படி எல்லா மாணவர்களும் சோர்வுற்று யாரும் விண்ணப்பம் பதிவு செய்யாமல் இருந்தால் இந்த கல்வி உதவி தொகை முழுவதும் நிறுத்தும் வேலையை அரசு திட்டம் போட்டு செய்து வருகிறது.

வழக்கம் போல் இந்த ஆண்டும்‌ மாணவர்களால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‌நேரடியாக வாங்கி அதை சரிபார்த்து கல்வி உதவி தொகையை மாணவர்களுக்கு அரசு வழங்கிட வேண்டும்.

பாவெல் கார்க்கி

பேனா சிலைக்கும் அருணா ஜெகதீசன் அறிக்கைக்கும் என்ன சம்பந்தம் | மருது வீடியோ

பேனா சிலைக்கும் அருணா ஜெகதீசன் அறிக்கைக்கும் என்ன சம்பந்தம்!
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை முறைகேடாக பயன்படுத்தாதே!

திருவாளர் மருதையன் திமுகவிற்கு ஆதரவாக நின்றுகொண்டு செய்யும் சகுனி வேலைகளை இந்த காணொலியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

‘கிருத்துவர்களையும், முஸ்லிம்களையும் எப்போது கொல்வீர்கள்’ – வெறுப்பு விஷத்தை கக்கும் காவி குண்டர்கள்!

பிப்ரவரி 5 ஆம் தேதியன்று டெல்லி ஜந்தர்மந்திரில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட இந்துத்துவ (காவி) அமைப்புகள், சிறுபான்மை மக்களுக்கு எதிராக பேசிய வெறுப்பு பேச்சுக்கள் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பாகேஷ்வர் தாம் என்கிற கோவிலுடன் தொடர்புடைய திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி என்னும் சாமியாருக்கு ஆதரவாக டில்லியில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் காவி உடையணிந்த ஒருவர், “இந்தியாவை பிரிட்டிஷும், காங்கிரசும் பிரித்து ஆட்சி செய்யுங்கள் என்றார்கள். கிருத்துவர்களும் அப்படியே ஆட்சி செய்யுங்கள் என்றார்கள். ஆனால் முஸ்லிம்கள் மட்டும் கொன்றுவிட்டு ஆட்சி செய்யுங்கள் என்றார்கள். இந்துக்களாகிய நீங்கள் எப்போது கொல்வீர்கள்? நீங்கள் இறந்த பிறகா கொல்வீர்கள்? கிருத்துவர்களையும், முஸ்லிம்களையும் எப்போது கொல்வீர்கள்?” என்று இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு விஷத்தை கக்கியுள்ளார்.

இந்துக்கள் தங்களது வீடுகளில் துப்பாக்கி, வாள் போன்ற ஆயுதங்களை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஒரு கையில் ஆயுதங்களையும் மற்றொரு கையில் மத நூலையும் வைத்துக்கொள்ளுமாறும் கூறியுள்ளார் அந்த காவி சாமியார்.

படிக்க : மணிப்பால் பல்கலை: மாணவர் மீதான பேராசிரியரின் முஸ்லீம் வெறுப்பு!

இந்துக்களுக்கு எதிராக வேதங்களையும், தாய்மார்களையும், சகோதரிகளையும் தாக்குபவர்களை  தேசத்துரோக குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று கூறிய அவர், “இந்துக்களுக்கு எதிராக செயல்படும் நபர்களை எல்லையில் சுட்டுக் கொல்லுங்கள், சாலைகளில் கொல்லுங்கள்” என்று துளியும் அச்சமின்றி இஸ்லாமியர்களை கொன்று குவிக்க நேரடியாக அழைப்பு விடுத்தார்.

காவி குண்டர்களை தட்டி கேட்பவர்களே இங்கு குற்றவாளிகள்!

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த மற்றொரு கூட்டத்தில் சுதர்சன் செய்தி ஆசிரியர் சுரேஷ் சவாங்கே மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் வன்முறை வெடிக்கும் என்று ஹரியானாவில் உள்ள பாஜகவின் தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளரும், கர்னி சேனாவின் தலைவருமான சூரஜ் பால் அமு பேசினார்.

தீவிர வலதுசாரி கூட்டங்களை ஏற்பாடு செய்து அதில் கலந்துக்கொண்டு வன்முறையை தூண்டும் வகையில் பேசக்கூடியவர் சுதர்சன் செய்தி ஆசிரியர் சுரேஷ் சாவாங்கே என்பவர். இவர் இந்தியாவை இந்துராஷ்டிரமாக மாற்ற நாம் எல்லோரும் தியாகம் செய்ய வேண்டும் என 2021-ல் கூறினார்.

சுரேஷ் சாவாங்கே பற்றி சூரஜ் பால் அமு பேசுகையில், “சுரேஷ் சாவாங்கேவை யாராவது தொட்டால், நாங்கள் அவர்களை அனுமதிப்போமா? இந்துராஷ்டிரத்தை உருவாக்க விடாமல் யாராவது எங்களைத் தடுத்தால் அவரைக் காப்பாற்றுவீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். இந்த இரண்டு கேள்விகளுக்கும் “இல்லை” என்று அங்கிருந்த காவிக்குண்டர்கள் ஆக்ரோசமாக கத்தி கூச்சலிட்டனர்.

இந்நிகழ்வில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்களை பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி “மோல்டிக்ஸ்” என்ற செய்தி நிறுவனம் டெல்லி போலீசிடம் புகாராளித்தது. ஆனால், வெறுப்பு பேச்சுக்களை பேசிய காவிக் குண்டர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் புகாராளித்த செய்தி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது போலீசு.

குற்றவியல் நடைமுறை சட்டம் 149-வது பிரிவின் அடிப்படையில் வன்முறையை தூண்டும் வகையில் செய்தியை வெளியிட்டதாகவும், பதிவுகளை எழுதுவதை நிறுத்த வேண்டும் என்றும் பதிவுகள் எழுதுவதை நிறுத்தவில்லை என்றால் நடவடிக்கை எடுப்போம் என்று போலீசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

படிக்க : ’முஸ்லீம்களை கொளுத்த வேண்டும்’- வெறுப்பு விஷத்தை கக்கும் பாஜக எம்.எல்.ஏ ஹரிபூஷன் தாக்கூர் !

போலீசு நோட்டீஸ் அனுப்பியதற்கு பதில் அளிக்கும் விதமாக மோல்டிக்ஸ் நிறுவனர் அனுதீப் ஜக்லன் தனது ட்விட்டரில் “நான் இன்னும் குழப்பத்தில் இருக்கிறேன். எதற்காக எங்களுக்கு போலீசுத்துறை இதை அனுப்பி இருக்கிறார்கள்? காவி உடையணிந்த குற்றவாளிகளுக்கும் நோட்டீஸ் சென்றிருக்க வேண்டும் என்று நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு விஷத்தை கக்கும் வகையில் காவிக் குண்டர்களை பேச அனுமதிக்கும் போலீசு, வெறுப்பு பேச்சுக்கு எதிராக புகாராளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது. இந்நிகழ்வு ஒட்டுமொத்த அரசுத்துறையும் காவிமயமாகி வருவதையே மீண்டும் நமக்கு உணர்த்துகிறது.

வன்முறையை தூண்டுபவன் நிராபராதி. அதற்கு எதிராக புகார் அளிப்பவன் குற்றவாளி. இதுதான் இன்றைய இந்தியாவின் (மனு)நீதி!

ரோகித் வெமுலா

குழந்தைத் திருமண ஒழிப்பு: சிறுபான்மையினரை ஒடுக்கும் கருவி!

சாம் மாநிலத்தில் குழந்தைத் திருமண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் சிறுபான்மையினரை ஒடுக்கும் வேலையை செய்து வருகிறது ஹிமந்த பிஸ்வா ஷர்மா தலைமையிலான பாஜக அரசு. “2026 ஆம் ஆண்டிற்குள் பிற்போக்கு நடவடிக்கையான குழந்தைத் திருமணங்களை முற்றிலும் ஒழிப்பேன்” என கடந்த ஜனவரி மாத இறுதியில் தெரிவித்திருந்த ஹிமந்த பிஸ்வா அரசு, முஸ்லீம் மற்றும் பழங்குடியின மக்களை ஒடுக்கும் கருவியாக இதனை பயன்படுத்திவருகிறது.

அரசு மேற்கொண்டுவரும் ‘குழந்தைத் திருமண ஒழிப்பு’ நடவடிக்கையில், கடந்த நான்கு நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேர் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது; போக்சோ சட்டத்தின் கீழ் இதுவரை 2,442 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கை தொடருமானால் இந்த எண்ணிக்கை மேலும் கூடும்.

தற்போது குழந்தைத் திருமணத்தில் ஈடுபடுவோரை மட்டுமின்றி, நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற குழந்தைத் திருமணத்தில் ஈடுபட்ட பெற்றோர்களையும், திருமணங்களைச் செய்துவைத்த மதபோதகர்களையும் தேடி தேடி கைது செய்துவருகிறது பாஜக அரசு. கைதுசெய்யப்படுவோரில் பெரும்பான்மையானோர் முஸ்லீம் ஆண்கள்.

படிக்க : இந்தியாவில் அதிகரித்துவரும் கிறித்துவ சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்!

கணவன்களை இழந்த பெண்களும், மகன்களை இழந்த தாய்மார்களும் வாழ வழியின்றி நிர்கதியாக்கப்பட்டிருகின்றனர். எங்கே தனது வீட்டிற்குள் போலீசு நுழைந்து தனது தந்தையை கைது செய்து சிறையில் அடைத்துவிடுமோ என்ற பயத்தில், கணவனை இழந்த, 2 குழந்தையின் தாயான பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இனியும் பொறுத்துபோக முடியாது என, கடந்த 4 ஆம் தேதி மோரிகான் மாவட்டத்தில் உள்ள லஹரிகாட் போலீஸ் நிலையத்திற்கு முன்கூடிய பெண்கள், கைது செய்யப்பட்ட தனது கணவன்களையும் மகன்களையும் விடுவிக்கும்படி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைக்குழந்தைகளுடன் வந்திருந்த பெண்கள் என்றும் பாராமல் அவர்கள்மீது காட்டுமிரண்டாண்டிதனமாக நடந்து கொண்டது போலீசு. அவர்கள் கேட்கும் கேள்வி ஒன்றுதான் – “திருமணம் நடந்து இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது குழந்தைகளுடன் குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் எங்களை ஏன் கைது செய்கிறீர்கள்” என்பதுதான்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா, “குழந்தைத் திருமணத் தடுப்பு நடவடிக்கையில் இருந்து பின் வாங்கப் போவதில்லை” என்று கூறியவர், “5 ஆண்டு நடவடிக்கையில் இதுவொரு பகுதி மட்டும்தான்” என திமிராக பதிலளித்துள்ளார். பாஜக அரசின் இத்தகைய நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

பாஜகவின் இத்தகைய நடவடிக்கையை விமர்சிப்பதால் குழந்தைத் திருமணங்களை நாம் ஆதரிக்கிறோம் என்பதல்ல. ஆனால் சாதிய வர்ணாசிரம பிற்போக்கில் மூழ்கித் திழைத்திருக்கும் பாசிச பாஜகவுக்கு இதில் பேசவேண்டிய தேவை என்ன என்பதுதான் நமது கேள்வி. பெண்களை பாதுகாக்கவேண்டுமானால், கிராமப்புறங்களில் பள்ளிக்கூடங்களைத் திறந்திருக்க வேண்டும். கல்விபயில உதவித் தொகை வழங்கியிருக்க வேண்டும். வாழ்க்கைக்கு உத்தரவாதமான வேலைவாய்ப்பினை வழங்கியிருக்க வேண்டும். மாறாக, 2020 இல் முஸ்லீம் பிள்ளைகள் குறிப்பாக பெண்கள் பயிலும் அசாம் மாநில அரசு நடத்திவந்த பல மதராஸாக்கள் மூடப்பட்டன. இது நடந்தது பாஜக ஆட்சியில்தான்; அப்போது கல்வி அமைச்சராக இருந்தவர் இதே ஹிமந்த பிஸ்வா தான்.

படிக்க : அதிகரித்துவரும் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் மீதான காவி குண்டர்களின் தாக்குதல்கள்!

பெண்கள் பாதுகாப்பு குறித்தோ பிற்போக்குதனம் குறித்து பேச முதலில் பாஜகவுக்கு யோக்கியதை இருக்கிறதா? பாஜக ஆளும் மாநிலங்கள்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கூடாரங்களாக இருக்கின்றன. பாஜக முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்கள்தான் பாலியல் பொறுக்கிகளாக உள்ளனர். இதற்கு சமீபத்திய சான்று பாஜக எம்.பி பிரிஜ் பூஜன் சிங் மீதான மல்யுத்த வீரர்களின் பாலியல் புகார். இத்தகைய பின்னணியில் உள்ள பாஜக குழந்தைத் திருமண ஒழிப்பு என்று பேசுவது வெற்று நாடகம் என்று சுருக்கிப் பார்க்க முடியாது. மத பண்பாடுகளைக் கடைப் பிடித்துவரும் முஸ்லீம், பழங்குடியின மக்களை ஒடுக்க பயன்படுத்த கையாண்டுவரும் ஓர் கருவியே இந்த நடவடிக்கை. பல்தேசிய கலாச்சாரம், பண்பாட்டை அழித்து ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே பண்பாடு, கலாச்சாரம் கொண்ட இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்கான காவிகளின் நகர்வு இது.

ஆதினி

சாலை விரிவாக்கத்தைக் கைவிடு! மக்களை வாழவிடு!

நாமக்கல் மாவட்டம் எம்.மேட்டுப்பட்டியிலிருந்து, திருச்சி மாவட்டம் முசிறி இடையிலான தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்துவதற்காக கடந்த செப்டம்பர் 30, 2022 அன்று தமிழக நகர்ப்புற வளார்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு அடிக்கல் நாட்டினார். இச்சாலையானது, குறுகலானதும், வளைவுகளையும், வாய்க்கால்களையும் கொண்டது என்பதால், இச்சாலையில் அதிக விபத்துகள் நடக்கிறது. எனவே இச்சாலையை நான்கு வழிச்சாலை மாற்றுவது அவசியமாக இருக்கிறது என்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நாமக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது.

அரசு செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளபடி, இவ்விரிவாக்கப்பணி நடைபெறுகிற மேட்டுப்பட்டி முதல் முசிறி வரையில் சாலையின் இருபுறங்களிலும், குறுக்கும் நெடுக்குமாக வாய்க்கால்கள், ஏரிகள் இருக்கின்றன. தற்பொழுது நடைபெறுகிற இந்த விரிவாக்கப்பணியில், சாலையின் ஒரங்களில் உள்ள பழமையான மரங்கள் வேரோடு வெட்டி சாய்க்கப்படுகின்றன, போடப்படுகிற சாலையும், இருபுறங்களிலும் உள்ள வாய்க்கால்கள் மற்றும் ஏரிகளை ஆக்கிரமித்துதான் போடப்படுகின்றன. இதனால் இந்த வாய்க்கால்களும், ஏரிகளும் நீர்வழிப்பாதைகளும் நிரந்தரமாக அழிக்கப்படும்.

படிக்க : NH744 – தென்காசி நான்கு வழிச்சாலை : கார்ப்பரேட்டுகளுக்காக விவசாயிகளை அழிக்கும் திட்டம் !

ஏற்கனவே, இப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தடங்களும் பத்தாண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாததால் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து உவர்நீராக மாறியிருக்கிறது. இந்த அபாயகரமான சூழலில்,  வாய்க்கால்கள், ஏரிகளை அழித்து நான்கு வழிச்சாலையாக்குவதன் மூலம் அப்பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரம் பெருமளவில் பாதிக்கப்படும். குடிநீருக்காகவும் அலைய நேரிடும். விவசாயத்திலிருந்து விவசாயிகள் வெளியேறக் கூடிய சூழலில் குற்றுயிரும், குலையுருமாக நடக்கிற விவசாயத்திற்கும் பேராபத்தாகவே இருக்கும்.

2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி,  தமிழகத்தில் உள்ள பாசனக் கட்டமைப்புகள் முறையாகப் பராமரிக்கப்படாததால் ஒவ்வொரு ஆண்டும் 12 சதவீத தமிழக விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெளியேறுகின்றனர். எனவே, நீர்வழிப்பாதைகளை அழிப்பதானது விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றுவதை தீவிரப்படுத்தும்.

இந்த சாலை விரிவாக்கப்பணியால், நீர்வழிப்பாதைகளும், நீர்நிலைகளும் அழிக்கப்படும் என்று தெரிந்தேதான் இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தி வருகிறது. எதேச்சதிகார முடியாட்சிக் காலத்தில், விவசாயத்திற்கு தேவையான நீர்ப்பாசனக் கட்டமைப்பை உருவாக்கித்தராமல் விவசாயிகளை வரி மூலம் கசக்கிப் பிழிய முடியாது என்று உணர்ந்திருந்தார்கள் அரசர்கள்.

அதனால்தான் பொதுமராமத்து செய்வது நிலவுடைமை சமூகத்தில் அரசின்/அரசனின் கடமையாக  இருந்தது. ஆனால், இந்த போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பும், அதன் ஆட்சியாளர்களும் விவசாயத்திற்கு அத்தியாவசியமான மராமத்து பணிகளை செய்வதில்லை.

கோப்புப்படம்

ஒருபுறம், ஏராளமான வரிகளை விதித்து மக்களை ஒட்டச் சுரண்டுவதை செவ்வனே செய்துவருகிறார்கள். மற்றொருபுறம் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்துவதன் மூலம் தங்கள் எஜமானர்களாகிய கார்ப்பரேட் கும்பலின்  லாபவெறிக்கு சேவை  செய்வதையே கடமையாகக் கொண்டிருக்கிறார்கள்.

கார்ப்பரேட் கும்பலின் நலனுக்காக பரந்தூரில் அப்பகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி அத்திட்டத்தை செயல்படுத்த உறுதியாக நிற்கிற தமிழக அரசுதான், சாமானிய மக்களின் நலனுக்காக வாய்க்கால்களை மீட்டெடுப்பதுகூட செய்வதில்லை. தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு மரம் வளர்க்க நிதி உதவி செய்வதாக அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. ஆனால், சாலையின் இருபுறங்களிலும் உள்ள மரங்களை வேரோடு பிடுங்கி வேறொரு இடத்தில் வைப்பதற்கு எந்த முயற்சி மேற்கொள்ளவில்லை. மாறாக சாலையோரங்களில் உள்ள அத்தனை மரங்களையும் துண்டுதுண்டாக வெட்ட அனுமதித்திருக்கிறது.

மேலும், இந்த சாலை விரிவாக்கத்தினால் மட்டும் விபத்துகளைத் தடுத்துவிட முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இருக்கின்ற சாலையின் தரத்தை உயர்த்தினாலே பெருமளவில் விபத்துக்களைக் குறைக்க முடியும். திருச்சியை மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களுடன் இணைப்பதற்கு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை,  கோவை – கரூர்- திருச்சி நெடுஞ்சாலை இருக்கிறது. எனவே இந்த குறுகிய, வளைவுகள் நிறைந்த, வாய்க்கால்களைக் கொண்ட இந்த சாலையில் போக்குவரத்தைக் குறைப்பதுதான் முதன்மையாகும். இந்த சாலையில் அதிக அளவு போக்குவரத்து நடைபெறுவதற்கு அன்றாட வேலைகளுக்காக செல்லும் மக்களின் இடப்பெயர்வுதான் முக்கிய காரணமாகும். திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இச்சாலையானது, குறுகலானதும், வளைவுகளையும், வாய்க்கால்களையும் கொண்டதுமாகும் விவசாயம்தான் பிரதானமாக நடைபெறுகிறது.

படிக்க : ரத்தினகிரி பெட்ரோலிய ஆலை – சேலம் எட்டு வழிச்சாலை : விவசாயிகளை விரட்டும் பாஜக அரசு !

அந்த வகையில், விவசாயத்தையும், அதன் துணைத்தொழில்களையும் லாபகரமானதாக மாற்றுவதன் மூலம், உள்ளூர் தேவைகளுக்கான அரசு தொழில் நிறுவனங்களை வளர்த்தெடுப்பதன் மூலமாக மட்டுமே இத்தகைய இடப்பெயர்வுகளைக் குறைக்க முடியும். அத்தகையத் திட்டங்களை உருவாக்கினால், ஒரு இடத்தில் மக்களைக் குவிப்பதையும், போக்குவரத்து நெரிசலைத் தடுக்கவும், தேவையின்றி மேம்பாலங்கள் – சாலை விரிவாக்கப்பணிகளில் மக்கள் வரிப்பணம் வீணாவதைத் தடுக்கவும் முடியும்.  ஆகையால், விபத்துகளுக்கான ஊற்றுமூலத்தை சரிசெய்வதற்கான திட்டங்களை உருவாக்காமல், வெறும் சாலைகளை விரிவுபடுத்துவதனால் மட்டும் விபத்துக்களைத் தடுக்க முடியாது.

ஆனால், கார்ப்பரேட் கும்பலின் நலனுக்காக சேவை செய்வதையே கடமையாகக் கொண்டிருக்கிற இந்த அரசுக் கட்டமைப்பில் மக்கள் நலனுக்கான திட்டங்களை எதிர்ப்பார்க்க முடியாது. இந்த அரசு மக்களுக்கான நலத்திட்டங்களை வகுக்கவில்லையென்றாலும், இருக்கின்ற குறைந்தபட்ச வாழ்வாதாரக் கூறுகளை அழித்தொழிக்காமல் இருந்தால்கூட போதும், மக்கள் பிழைத்துக் கொள்வார்கள்.  ஆகவே, உங்க சாலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்; இருப்பதைக் கொண்டு எங்களை வாழவிடுங்கள் அதுவே போதும்! என்பதே மக்களின் உள்ளக் குமுறலாக இருக்கிறது. எட்டுவழிச்சாலை, பரந்தூர், காட்டுப்பள்ளி துறைமுகம், விழிஞ்ஞம், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் என நாடு முழுவதும் பற்றி எரியும் போராட்டங்களின் அடிநாதமும் இதுதான்.

வாகைச்சூடி.

தேச விரோதி, கொள்ளைக்கார அதானியை தூக்கில் போடு! சொத்துக்களை பறிமுதல் செய்! | மக்கள் அதிகாரம்

தேச விரோதி, கொள்ளைக்கார அதானியை தூக்கில் போடு!
சொத்துக்களை பறிமுதல் செய்!

மக்கள் அதிகாரம் பிரச்சார இயக்கம் – ஆர்ப்பாட்டம்

லகிலேயே இரண்டாவது பணக்காரன், ஆசியாவிலேயே முதல் பணக்காரன் இப்படி பல பெருமைகளையும்’ அடைமொழிகளையும் வாங்கிக்குவித்தவன் அதானி. இவன் பங்குகள் எல்லாம் தற்போது பலூன் போல வெடித்துச்சிதறிவிட்டன. மற்ற நாட்டு அதிபர்கள் எல்லாம் சுற்றுப்பயணம் செல்லும்போது தங்கள் மனைவியை அழைத்துச் செல்வார்கள். ஆனால் மோடியோ எல்லா நாடுகளுக்கும் அதானியைத்தான் அழைத்துச்சென்றார். பாகிஸ்தான் முதல் ஆஸ்திரேலியா, இலங்கை, இஸ்ரேல் வரை அதானி முதலீடு செய்யாத நாடே இல்லை. அதானியின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி என்று ஊதிப்பெருக்கினார்கள். ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான நான்கு நாட்களிலேயே உலகப் பணக்கார வரிசையில் 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டான் அதானி.

அயோக்கியனின் கடைசிப்புகலிடம் தேசபக்தி என்பார்கள்; அதுபோல, பதறி அடித்துக்கொண்டு ஒடி வந்த அதானியும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிஸ்டுகளும் “இது இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்” என்று பொங்கினார்கள். அடுத்தடுத்த நாட்களில் 4 லட்சம் கோடிகளை பங்குச் சந்தையில் இழந்தது அதானி குழுமம். அதானி ஒரு பிராடு, மோசடி மன்னன் என்பது ஊரறிந்த விசயம்தான் என்றாலும் ஹிண்டன்பர்க் அறிக்கை படம் பிடித்து ஆதாரத்துடன் நிரூபித்திருக்கிறது.

இந்த அறிக்கை வெளியானதற்குப் பிறகு மொத்த பங்குசந்தை உலகமும் ஆடிப்போனப் பின்னரும் நிர்மலா சீதாராமன், “இந்திய வங்கி அமைப்பு மிகவும் பலமாக உள்ளது. எந்தப் பிரச்சினையும் இல்லை” என்கிறார். அதானி குழுமத்தில் எல்.ஐ.சி.யின் முதலீடு ரூ.24000 கோடிகள் சரிந்துள்ளன. ஆனாலும் எல்.ஐ.சி நிர்வாகம் “மொத்த சொத்தில் 1% மட்டுமே அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளோம்” என்று திமிராக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

படிக்க : அதானியே நமோ நமஹா!

2 லட்சம் கோடி கடன்காரனான அதானி, பாரத ஸ்டேட் வங்கிக்கு தர வேண்டிய தொகை மட்டும் இருபதாயிரம் கோடிகளுக்கு மேல். எல்.ஐ.சி.யின் முதலீடும் எஸ்.பி.ஐ கொடுத்த கடன்களும் பொது மக்களின் சொத்து. மாதம் ஆயிரம், ஐநூறு என்று பொதுமக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றும் என்று நம்பி எல்.ஐ.சி.யிலும்  எஸ்.பி.ஐ.யிலும் சேர்த்து வைத்த பணத்தைத் திருடி அதானியின் வாயில் போட்டுவிட்டார் மோடி.

அதானி பாசிச ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் உருவாக்கப்பட்டவன். அவனுக்காகத்தான் கடல்வளத்தை அழிக்கும் காட்டுப்பள்ளி துறைமுகம் தமிழ்நாட்டிலும், விழிஞம் துறைமுகம் கேரளத்திலும் அமைக்கப்படுகின்றன. அதானி, சிமெண்ட் ஆலைகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து சிமெண்ட் விலையை ஏற்றிக்கொண்டிருக்கிறான். தன்னுடைய தனியார் மின் உற்பத்தி, விநியோக நிலையங்கள் கொள்ளை லாபம் அடிப்பதற்காக அரசு மின் நிறுவனங்களை ஒழித்துக்கட்டினான். மீத்தேன், ஹைட்ரோ-கார்பனை கொள்ளையடிக்க விவசாய நிலங்களை சூறையாடுகிறான். எஸ்.பி.ஐ வங்கியில் பல்லாயிரம் கோடிகள் கடன் வாங்கி பைனான்ஸ் தொழில் செய்கிறான்.

தனது சமையல் எண்ணை நிறுவனம் மூலம் மற்ற எண்ணை நிறுவனங்களை எல்லாவற்றையும் புதைகுழிக்கு அனுப்பினான். காப்பர், அலுமினியம், பெட்ரோ கெமிக்கல், சோலார் என நாட்டின் அனைத்து வளங்களையும் தனது ஆக்டோபஸ் கரங்களால் நெறித்துக் கொண்டிருக்கிறான். இவையெல்லாம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காகத்தான் தொலைக்காட்சி நிறுவனங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். இதைப்போலத்தான் அம்பானியும் செய்து கொண்டு வருகிறான்.

இப்போது அதானியின் மோசடிகள் வெளியாகிவிட்டன. அம்பானியின் மோசடிகள் வேறொரு நாள் வெளியாகலாம். ஆனால், இவை எல்லாம் அரசுக்கு எதுவும் தெரியாமல் நடந்ததா என்ன? மோடி – அமித்ஷா – நிர்மலா என அனைவருமே அதானியின் கூட்டுக் களவாணிகள்தான். அதானால்தான் அதானி கையும் களவுமாக சிக்கிக்கொண்ட பின்னரும் அவனை காப்பாற்றுவதற்கு இவர்கள் துடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கொரோனா காலத்தில் நாடே பசி, பஞ்சம், பட்டினி, சாவை எதிர் கொண்ட போது அதானியின் சொத்து மட்டும் 800 மடங்கு உயர்ந்தது. அதானி நிறுவனங்கள் மீதிருந்த 17 வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. 2004 ஆண்டு கருப்புப்பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதானியின் தம்பி ராஜேஷ் அதானி, தற்போது அதானி குழுமத்தின் மேலாண்மை இயக்குநர்.

பல ஊழல் வழக்குகள் உள்ள அதானியின் மைத்துனன் சமீர் வாரா ஆஸ்திரேலியாவில் உள்ள அதானி குழுமத்தின் சி.ஈ.ஓ., அதானியின் இன்னொரு தம்பி வினோத் அதானியின் மகள் வின்சம் வைர வியாபாரியின் மகனையும், வினோத் அதானியின் மகன் ரோட்டோமேக் முதலாளியின் மகளையும் திருமணம் செய்துள்ளனர். வின்சம் வைர வியாபாரியும் ரோட்டோமேக் முதலாளியும் பல்லாயிரம் கோடிகள் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர்கள். அதானியின் மகனோ பங்குச்சந்தைகளை கட்டுப்பாடுத்தும் செ.பி.யின் கமிட்டி உறுப்பினர் மகளை திருமணம் செய்திருக்கிறார்.

இந்த நாட்டை கொள்ளையடித்த அதானி, அம்பானி, கேத்தன் பரேக், முகுல் சோஷி என அனைத்து பனியா கிரிமினல்களும் குஜராத்தை சேர்ந்தவர்களே. இவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் முதுகெலும்பாக செயல்பட்டவர்கள். பா.ஜக.வுக்கும் பல்லாயிரம் கோடிகளை தேர்தல் நிதியாக அளித்தவர்கள். இதுதான் மோடி உருவாக்கிய குஜராத் மாடல்.

நீதிமன்றம், சட்டம், அரசியல் அதிகாரம் என அனைத்துமே இவர்கள் கையில். இந்தக் கிரிமினல் முதலாளிகளை பாதுகாப்பதுதான் பாசிச மோடி அரசின் வேலை. இதை அம்பலப்படுத்திப் போராடுபவர்களைத்தான் அர்பன் நக்சலைட்டுகளாக சித்தரித்து ஊ.பா போன்ற கருப்புச்சட்டங்களால் கைது செய்து சித்தரவதை செய்கின்றனர்.

அதானியும் அம்பானியும் வெறும் கார்ப்பரேட் முதலாளிகள் மட்டுமல்ல; அவர்கள் பாசிஸ்டுகள். இந்த நாட்டை கொள்ளையடிக்கவும் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் இருக்கவும் அவர்களுக்குத் தேவை இந்துராஷ்டிரம்.

படிக்க : நாட்டை சூறையாடிய கொள்ளைக்காரனே அதானி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிஸ்டுகளுக்கு இந்த நாட்டின் இயற்களை வளங்களை சூறையாடவும் கார்ப்பரேட் முதலாளிகளை கட்டுப்படுத்தவும் அதானி – அம்பானி பாசிசக் கும்பல் தேவை. ஆக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசமே இந்த நாட்டின் நாட்டு மக்களின் எதிரி என்பதையும் இந்த நாட்டு மக்களின் அனைத்து துன்பங்களுக்கும் அவர்களே காரணம் என்பதைத்தான் நாம் உணர வேண்டும்.

ஆக, தேச விரோதியும் கொள்ளைக்காரனும் பயங்கரவாதியுமான அதானி பகிரங்கமாக தூக்கிலிடப்பட்டு அவனுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவேண்டும்.

ஆனால், இதெல்லாம் இப்போதிருக்கிற ஆட்சி முறையிலே சாத்தியமில்லை. ஏனென்றால் இது காவி – கார்ப்பரேட் பாசிச ஆட்சி. நீதித்துறை, ராணுவம், நிர்வாகம் என அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பலை முறியடிக்காமல் நமக்கு வாழ்வே இல்லை.

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிகளை கட்டியமைத்து நாடு முழுவதும் ஒவ்வொரு வீதியிலும் இந்த பாசிசக்கும்பலை எதிர்த்துப்போராடி முறியடிப்போம்! ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பலுக்கு மாற்றான பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை கட்டியமைப்போம்!

மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
99623 66321

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் பிப்ரவரி – 2023 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561

வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

♦ தலையங்கம்: ‘இந்துராஷ்டிரம்’ அதானிகளின் தேசம்!
♦ “ஒரே நாடு”! ஒன்றுகலக்காத “தமிழ்நாடு”!
♦ ஆக்ஸ்ஃபாம் அறிக்கை: இதோ மோடியின் ‘புதிய இந்தியா’!
♦ மலத்தைவிடக் கொடியது சாதிய அரசு!
♦ பேய் நாடாள்கிறது! சாத்திரங்கள் பிணந்தின்ன வேண்டாமா?
♦ திரிபுரா மாடல் தேர்தல் வன்முறை: பாசிஸ்டுகள் கற்றுத்தரும் பாடம் என்ன?
♦ சத்தீஸ்கர்: கிறிஸ்தவப் பழங்குடியின மக்கள்மீது பெருகி வரும் காவி பாசிசத் தாக்குதல்கள்!
♦ புதைந்து வரும் ஜோஷிமத் நகரம்! ‘வளர்ச்சி’யின் பெயரால் நடத்தப்படும் பேரழிவு!
♦ மக்களை வாட்டும் பொருளாதார நெருக்கடி: நேற்று – இலங்கை, இன்று – பாகிஸ்தான்!
♦ தொலைத்தொடர்பு மசோதா 2022: பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான நடவடிக்கை!

 

மதுரை: தலித்துகள் மீதான ஆதிக்க சாதியினரின் கொலைவெறித் தாக்குதல்!

0

துரை மாவட்டம் ஒத்தக்கடை அருகில் உள்ள காயாம்பட்டி கிராமத்தில் கடந்த ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் அன்று ஆதிக்க சாதி வெறி பிடித்த கும்பல் ஒன்று தாழ்த்தப்பட்ட இளைஞர் கண்ணன் என்பவரை நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்தி உள்ளனர். உடன் இருந்த அவருடைய மனைவியையும் சேலையைப் பிடித்து இழுத்து மானபங்கம் படுத்தியுள்ளனர்.

தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த கண்ணன் தனது மனைவி குழந்தைகளுடன் சொந்த ஊரான காயம்பட்டிக்கு வந்திருந்தார்.

பக்கத்து ஊரில் இருந்த உறவினர்களை பார்க்க மனைவி குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஆதிக்க சாதி வெறி கும்பல்(7 பேர்) ஒன்று கண்ணன் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளனர். இருசக்கர வாகனத்தை ஏன் ஊருக்குள் வேகமாக ஓட்டுகிறாய் எனக்கேட்டு தாக்கியுள்ளனர். அவர் அணிந்திருந்த துணிகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி உள்ளனர். தனது கணவன் உடல் நலம் பாதிக்கப்பட்டவர் அவரை விட்டுவிடுங்கள் என கதறிய போதும் அவர்கள் நிறுத்தவில்லை. தடுத்துப் பார்த்தபோது அவர் அணிந்திருந்த சேலையையும் உருவியுள்ளனர். அருகில் உள்ள ஆடு மாடு மேய்க்கும் மக்கள் வந்த பிறகே நிறுத்தியுள்ளனர்.

இதைக் கேட்டு கொதித்துப் போன தாழ்த்தப்பட்ட மக்கள் உடனே காவல் நிலையத்திற்கு சென்று மனு கொடுத்தனர். அதன் பேரில் ஆதிக்க சாதி வெறியர்கள் ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏழு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் பிறகும் ஆதிக்க சாதி வெறியர்களின் கொட்டம் அடங்கவில்லை. மறுநாளே தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியினரின் தெருக்களை கடந்து செல்லும் போது துரத்தி அடிக்க வருவது ஆபாச வசவுகலால் திட்டுவது பெண்களை விரட்டுவது என திமிர் தனத்தை மேலும் மேலும் செய்து கொண்டிருந்தனர். கண்ணன் தாக்கப்பட்ட அன்றே கேள்விக்கு கேட்க போன மக்களை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களின் 26 பேர் மீது பொய் வழக்கை தொடுத்துள்ளனர். இதை போலீசும் எந்த விசாரணையும் இன்றி 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் மீது வழக்கு போட்டு ஆதிக்க சாதியினரின் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் வாங்குவதற்கு திட்டமிட்டு வேலை செய்கிறது போலீசு.இதே வேலையைத்தான் காயாம்பட்டிக்கு அருகில் உள்ள சிட்டம்பட்டி என்ற பக்கத்து கிராமத்தில் உள்ள ஆதிக்க சாதியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் வழக்கை திரும்ப பெற சொல்லி தலித் மக்களுக்கு பல்வேறு நெருக்கடிகளையும் கொடுத்து வருகிறார்.


படிக்க: மதுரை: காயாம்பட்டி ஆதிக்க சாதி வெறியர்களால் தலித் இளைஞர் தாக்கப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!


எந்த ஒரு தவறும் செய்யாத 26 பேர் வீட்டிற்கு கூட செல்ல முடியாமல் பொய் வழக்கை காண்பித்து போலீசு அச்சுறுத்துகிறது.

வேங்கை வயல் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த ஆதிக்க சாதி வெறியர்களுக்கு எதிராக பல்வேறு ஜனநாயக சக்திகளும் போராடிக் கொண்டிருக்கும் இந்த வேலையில் தான் ஆதிக்க சாதி வெறியர்கள் திமிராக இப்படிப்பட்ட தாக்குதல்களை நடத்துகின்றனர். இந்த அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் மீது குற்றத்தை சுமத்த முயற்சிக்கிறது.

இந்த காயாம்பட்டி கிராமத்தில் ஆதிக்க சாதியினர் குறிப்பாக கள்ளர்,அகமுடையார்,நாடார் கவுண்டர், நாயுடு போன்றோர் வசித்து வருகின்றனர். காயாம்பட்டி கிராமத்தைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளே அதிகமாக உள்ளன. 30 வருடங்களுக்கு முன்பு ஆதிக்கசாதி வெறியர்கள் இது போன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அதன் பிறகு இப்படிப்பட்ட வன்முறைகள் நடப்பது கடந்த இரண்டு வருடங்களாக தான்.

ஆதிக்க சாதியில் உள்ள சிலர் பிஜேபியில் உள்ளனர். இவர்கள் ஊரில் உள்ள பலரையும் இணைத்துக் கொண்டு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒரு சிறிய விநாயகர் கோவிலை கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு கட்டி உள்ளனர். அந்த கோவில் அமைந்திருப்பது சாலையை ஒட்டியான இடம் அந்த வழியில் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்கு போக முடியும். இந்த சாலையில் போகும் தலித் மக்களை திருவிழாக்களின் போது முறைத்துப் பார்ப்பது சீண்டுவது போன்ற வேலைகளை தொடர்ச்சியாக செய்து வந்துள்ளார்கள்.


படிக்க: மதுரை காயாம்பட்டி சாதிய வன்முறை | களவீடியோ


கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழாவின்போது காயாம்பட்டி மேடு என்ற அருகில் உள்ள கிராமத்தில் இருந்த தலித் மக்கள் காயாம்பட்டி விநாயகர் கோவில் வழியில் சென்றபோது ஆதிக்க சாதி வெறியர்களால் தாக்கப்பட்டனர்.
போலீஸோ வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு போட்டுவிட்டு ஆதிக்க சாதி வெறியர்களை மென்மையாக கையாண்டது. கைது கூட செய்யவில்லை.

இதன் நீட்சிதான் பொங்கல் அன்று நடந்த தாக்குதல். மத வெறியர்களின் வருகை சாதி வெறியையும் ஊக்கப்படுத்தியுள்ளது.

இதேபோல் மதுரை அருகில் உள்ள கள்ளந்திரி, மேலூர் அருகே உள்ள பழையூர்பட்டி, திருவண்ணாமலை, சேலம் போன்ற இடங்களிலும் பொங்கல் அன்று நடந்த தலித் மக்களுக்கு எதிரான சாதிய வன்முறைகள் வெளிவந்துள்ளன.

ஜல்லிக்கட்டு, நீட், காவிரி நதிநீர் பகிர்வு, முல்லைப் பெரியாறு, ஸ்டெர்லைட், எட்டுவழிச்சாலை, மீத்தேன் ஹைட்ரோகார்பன் பிரச்சனை,அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது, தில்லை நடராசர் கோவிலில் தமிழ் பாடும் உரிமை, கோ பேக் மோடி என பல்வேறு போராட்டங்களின் ஊடாக தமிழ் மக்கள் உயர்த்திப் பிடித்த சாதி மதம் கடந்த தமிழக மரபினை ஒழித்துக் கட்ட துடிக்கிறது காவி பாசிச கும்பல். சாதியை வைத்து மீண்டும் மக்களை பிளப்பதின் மூலம் தங்கள் உருவாக்க இருக்கும் இந்துராஷ்டிர கட்டமைப்பிற்குள் சூத்திர அடிமைகளையும் நவீன கார்ப்பரேட் அடிமைகளையும் உருவாக்க எத்தனிக்கிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல். இந்த சாதி மத வெறியர்களுடன் இணைந்து எட்டப்பன்களாக மாறப் போகிறோமா என்பது நம் அனைவரின் முன்னுள்ள கேள்வி?

ரவி

தமிழ்நாடு: பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள், ஓ.எச்.டி ஆபரேட்டர்கள் போராட்டம்!

0

னவரி 30 அன்று தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்கள் (overhead water tank (OHD) operators) ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு-இன் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் ஒருங்கிணைப்பு குழு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. தூய்மை காவலர்களுக்கு மாதம் ₹10 ஆயிரம் வழங்க வேண்டும்; பொங்கல் போனஸ் ₹3000 வழங்க வேண்டும்; ஓய்வு பெறும் ஓ.எச்.டி ஆபரேட்டர்களுக்கு ₹3 லட்சம் பணிக்கொடையும் ₹3000 மாதாந்திர ஓய்வூதியமும் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததை போல, பத்து வருடங்களுக்கு மேலாக பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. 12,618 கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்.


படிக்க: மதுரை : தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தூய்மைப் பணியாளர்கள் !


“ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவதற்கான அரசாணை (நிலை) எண். 303 (நாள்: 11.10.2017) வெளியிடப்பட்டு 63 மாதங்கள் ஆகியும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மூன்று ஆண்டுகள் பணி புரிந்தால் நிரந்தரமாக்குவதற்கான அரசாணை (நிலை) எண். 385 (நாள்: 10.01.2010), ₹15000 கொரோனா சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணை (நிலை) எண். 256 (நாள் 28.05.2021), குறைந்தபட்ச ஊதியத்தை உத்தரவாதம் செய்யும் அரசாணை (நிலை) எண். 62 (2D) (நாள்: 11.10.2017), மாதாமாதம் 5-ஆம் தேதியன்று ஊதியம் வழங்குவதற்கான அரசாணை (நிலை) எண். 89, மேல்நிலை ஓ.எச்.டி ஆபரேட்டர்களுக்கு ஊதிய உயர்வுக்கான அரசாணை (நிலை) எண். 20 (நாள்: 04.02.2021) போன்ற பல்வேறு அரசாணைகள் உள்ளன. அவை பின்பற்றப்படுவது தான் இல்லை” என்று தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் மாநிலத் தலைவர் சந்தானம் கூறினார்.

“வருகிற தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வழிவகை செய்ய வேண்டும். அவர்களுக்கு மாதாந்திர ஊதியமாக ₹1000 – ₹2500 மட்டுமே வழங்கப்படுகிறது; இதனை உயர்த்தி வழங்க வேண்டும்” என்று மாநில ஒருங்கிணைப்பு குழு கோரியுள்ளது. 40,276 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 40,000-ம் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணி புரிகின்றனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டில், பாஜக அரசு 66,025 தூய்மை பணியாளர்களை தமிழ்நாட்டில் பணியமர்த்தியது. அவர்களுக்கு மாதாந்திர ஊதியமாக ₹2600 வழங்குவதற்காக ₹206.04 கோடி நிதியையும் ஒதுக்கியது. அரசு நேரடியாக ஊதியம் வழங்கினால், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை தூய்மை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். அதனால் சுய உதவி குழுக்கள் போன்றவற்றின் மூலம் தூய்மை பணியாளர்களுக்கு அரசு ஊதியத்தை வழங்கி வருகிறது. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகுதான் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் இவர்களின் ஊதியம் ₹2600-இல் இருந்து ₹3600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


படிக்க: தூய்மைப் பணியாளர்கள் : எடப்பாடியின் துரோகத்தைத் தொடரும் ஸ்டாலின் !


கொசுக்களை கட்டுப்படுத்துவதற்காக பணி புரியும் ஊழியர்களுக்கு தினசரி கூலியாக ₹451 வழங்கப்படுகிறது. இதில் வாகனம், எரிபொருள், உணவுக்கான செலவுகள் ₹200. மீதம் இருக்கும் ₹250-ஐ கொண்டுதான் அவர்கள் வாழ்க்கையை ஓட்ட வேண்டும். மாநிலம் முழுக்க கிட்டத்தட்ட 13,000 தொழிலாளர்கள் இதில் பணி புரிகின்றனர். அடுத்த நாள் வேலை இருக்குமா என்ற உத்தரவாதமற்ற நிலையே இவர்கள் நிலை.

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (ஓ.எச்.டி) ஆபரேட்டர்களின் அடிப்படை ஊதியத்தை ₹2600-இல் இருந்து ₹4000-ஆக ஏப்ரல் 2021 முதல் வழங்குவதற்கான உத்தரவை முந்தைய அதிமுக அரசாங்கம் பிறப்பித்தது. ஆனால் அந்த உத்தரவு தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை. தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் வெவ்வேறு ஊதியம் வழங்கப்படுகிறது. சீரான ஊதியம் வழங்க அரசு அக்கறை காட்டுவதில்லை.

திமுக அதிமுக என எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தூய்மைப் பணியாளர்களை கண்டு கொள்வதில்லை. அவர்களின் அவல நிலையும் தொடர் போராட்டங்களும் இயல்பு நிலையாகவே மாறிவிட்டன.

பொம்மி

நன்றி: நியூஸ் கிளிக்