மேலிடத்து உத்தரவு என்ற பெயரில் தமிழகத்தில் மோடி ஆட்சியைத்தான் போலீசு நடத்துகிறது. நெடுவாசல் போராட்டத்தை, டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டத்தை ஆதரித்து சென்னையில் போராட முயன்ற மாணவர்கள், இளைஞர்களை தீவிரவாதி போல் துரத்தி துரத்தி வேட்டையாடியது போலீசு. பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தத் தடை விதிப்பது, போராட்டம் நடத்துபவர்களை கைது செய்யும் போது கடுமையாகத் தாக்குவது, பொய் வழக்கில் சிறையில் அடைப்பது என தொடர்ந்து ஒடுக்குவதோடு போராடும் உரிமைகளை மறுத்து வருகிறது.
டாஸ்மாக் கடையை திறக்காதே மூடு என போராடும் மக்களை கொடூரமாகத் தாக்குவது, கைது செய்வது என போலீசு தொடர்ந்து செயல்படுகிறது. அமைதியாக நடந்த மெரினா போராட்டத்தை சதித்தனமாக போலீசு வன்முறையில் முடித்ததை மறக்க முடியாது. மாட்டிறைச்சி தடைக்கு எதிராகப் போராடிய சூரஜ் என்ற சென்னை ஐ.ஐ.டி மாணவர் தாக்கபட்டதைக் கண்டித்து போராடிய மாணவர்களைத் தாக்கி கையை முறிப்பது, இடுப்பு எலும்பை முறிக்க முயல்வது என காவல்துறை வன்முறை தாக்குதல் நடத்தியது. இத்தகைய தவறு செய்யும் போலீசார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் சூரஜைத் தாக்கிய ஆர்.எஸ்.எஸ் குண்டர் மனீஸ் என்ற மாணவர் கைது செய்யப்படவில்லை. தமிழகத்தை ஆள்வது டெல்லியா? சென்னையா என்ற கேள்வி தொடர்கிறது.
மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடத்த முயன்றதற்காக திருமுருகன் காந்தி மற்றும் மூன்று பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிமுக, பி.ஜே.பி.யைத் தவிர பெரும்பான்மையான கட்சிகள், அமைப்புகள் தமிழக அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்துள்ளன. மக்கள் அதிகாரமும் வன்மையாக கண்டிப்பதுடன் ஆள்தூக்கி சட்டமான குண்டர் தடுப்பு சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய அனைவரும் போராட வேண்டும் எனக் கோருகிறது. அரசியல் உரிமைகளுக்காக, மக்களுக்காக போராடுபவர்களை சமூக விரோதி போல் கருதி சிறையில் அடைக்கிறது. ஒவ்வொரு போராட்டத்திற்கும் ஒரு எப்.ஐ.ஆர். போட்டு வைத்துக் கொண்டு அதையே காரணம் காட்டி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை வைப்பதென்றால் போடலாம் என்றால், போராடும் எந்த இயக்க தலைவர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் போட்டு அச்சுறுத்தி ஒடுக்கலாம். ஆனால் நத்தம் விசுவநாதன், அமைச்சர் காமராஜ், டிடிவி தினகரன் போன்றோர் மீதும் சங்பரிவார் அமைப்புகள் மீதும் குண்டர் சட்டம் பாய மறுக்கிறது.
மெரினா சீரணி அரங்கத்தில் கடந்த காலங்களில் நடந்தது போன்று மீண்டும் அரசியல் கூட்டங்கள் நடத்தும் உரிமைக்காக அனைத்து கட்சிகளும் குரல் எழுப்ப வேண்டும். போலீசின் பிடியிலிருந்து மெரினாவை விடுவிக்க வேண்டும். ஜல்லிக்கட்டிற்கு போராட்டம் நடத்தி உலகத்தின் கவனத்தை ஈர்த்து வெற்றி பெற்ற மெரினா எழுச்சி, இது வேற தமிழ்நாடு என நிரூபித்த போராட்டம். இன்று மெரினாவில் வருவோர் போவோரை எல்லாம் சந்தேகிப்பது, விரட்டுவது, கைது செய்வது மிரட்டுவது என காஷ்மீர் போல் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க போலீசாருக்கு யார் அதிகாரம் வழங்கியது?
மாட்டுக் கறி உழைக்கும் மக்களின் உணவு உரிமை, அதற்குத் தடை போட ஆர்.எஸ்.எஸ் யார்? – மோடி யார்? மாடு வளர்ப்பது, விற்பது, உண்பது விவசாயியின் வாழ்வாதாரம். அதை அழிப்பது சமூக விரோத பார்ப்பன மதவெறி பயங்கரவாதமாகும். உள்நாட்டு கால்நடை சந்தைகளை அழித்து அந்நிய கார்ப்பரேட் கம்பெனிகளின் மாட்டிறைச்சி, பால்பொருள்களை தாராளமாக இறக்குமதி செய்யவே மோடி அரசின் சதித்தனமான இந்த மாட்டு விற்பனை தடை உத்தரவு ஆகும். மோடி அரசுக்கு அடியாள் வேலை பார்ப்பது போல் தமிழக அரசு செயல்படுகிறது.
மாடு திண்ணும் புலையா உனக்கு மார்கழி திருநாளோ என நந்தனை அன்று எரித்தார்கள் தில்லை தீட்சிதப்பார்ப்பனர்கள். இன்று உ.பி.-யில் மாட்டுக்கறி தின்றார் என அக்லக் கொல்லப்பட்டார். செத்த மாட்டு தோலை உறித்தார்கள் என குஜராத்தில் தலித்துகள் கட்டிவைத்து தாக்கப்பட்டார்கள். சென்னை ஐ.ஐ.டி.யில் மாட்டுக்கறி தின்றார் என சூரஜ் என்ற மாணவர் கொடூரமாகத் தாக்கப்பட்டார். இவை அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். காவிக் கும்பல் நடத்திய மதவெறியாட்டம்.
தற்போது சட்டபூர்வமாக இந்த அராஜகத்தை நிறைவேற்ற மோடி அரசு மாடு விற்கத் தடை விதித்து விட்டு மாட்டுக்கறிக்குத் தடையில்லை எனப் பித்தலாட்டம் பேசுகிறது. நாட்டில் ராமன், மாடு, சாதிவெறி மதவெறி, சமஸ்கிருதத் திணிப்பு, முஸ்லிம் எதிர்ப்பு ஆகியவற்றைக் கொண்டு மீண்டும் மீண்டும் கலவரத்தைத் தூண்டி எதிர்மறை விளம்பரம் மூலம் ஆட்சியை தக்க வைக்கும் தந்திரத்தை அமல்படுத்துகிறது.
ஆர்.எஸ்.எஸ்.- பி.ஜே.பியின் இத்தகைய நடவடிக்கை, ஒட்டு மொத்த மக்களுக்கும் நாட்டுக்கும் பெரும் ஆபத்தாக முடியும். எனவே அனைவரும் மோடியின் இத்தகைய மதவெறி, கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளை ஒன்றிணைந்து எதிர்த்துப் போராட வேண்டும். இந்த அரசு கட்டமைப்பின் மூலம் மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
உழைக்கும் மக்களின் உணவு உரிமைக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் மோடியின் பார்ப்பன மதவெறி தாக்குதலை முறியடிப்போம் !
மக்களின் போராட்டக்களமாகிய மெரீனாவை போலீசின் பிடியில் இருந்து மீட்போம் !
போராடுபவர்களை அச்சுறுத்தி ஒடுக்க ஏவிவிடப்படும் குண்டர் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யப் போராடுவோம் !
– இக்கோரிக்கைகளுக்காக அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்துப் போராடுவோம்.
தங்கள் சி.ராஜூ மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்
ஹரியானாவைச் சேர்ந்த மாட்டு பயங்கரவாதிகள் (கௌரக்ஷக்) மீண்டும் கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தில்லியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு இளங்கலை மாணவர் சிவம் என்பவரை கௌரக்ஷக் தள் என்கிற கும்பலைச் சேர்ந்த மாட்டு பயங்கரவாதிகள் பலமுறை கத்தியால் குத்தி மரண காயங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவர் சிவம் தில்லி அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
மாணவர் சிவம் செய்த ‘குற்றம்’ என்ன?
சமீபத்தில் மத்திய அரசு மாட்டுச் சந்தைகளுக்காக சில நெறிமுறைகளை வகுத்தளித்தது. மாட்டுக்கு கக்கூஸ் கட்ட வேண்டும், முக்கணாங்கயிறு கட்டக்கூடாது, கொம்புக்கு சாயம் பூசக்கூடாது உள்ளிட்ட கேலிக்கூத்தான விதிமுறைகளுக்கு இடையே இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தடைகளை ஏற்படுத்தியிருந்தது. மக்களின் உணவு உரிமையில் தலையிடும் இந்தப் பார்ப்பன சதிக்கெதிராக பரவலாக மக்கள் கொதித்தெழுந்தனர் – குறிப்பாக தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்களில் இந்த நெறிமுறைகளுக்கு எதிராக மாட்டுக்கறித் திருவிழாக்கள் நடத்தப்பட்டன.
இங்குள்ள இந்துத்துவ கும்பலின் தளகர்த்தர்களான ஹெச்.ராஜா, தமிழிசை போன்ற கோமாளிகளால் மாட்டிறைச்சித் திருவிழாவையோ, மக்கள் மாட்டிறைச்சி உண்பதையோ தடுக்கமுடியவில்லை. ஆனால், தெற்கே ”அசுரர்களின் பூமியிலிருந்து”’ கிளம்பிய கோமாதா பிரியாணி வாசனையை முகர்ந்த வடநாட்டுக் காவிக் குரங்குகளுக்கு வெறியேறியது. அதிலும், மாட்டைத் தொட்டதற்கெல்லாம் மரண தண்டனை வழங்கும் ஹரியானாவைச் சேர்ந்த காவிப் பண்டாரங்களோ ஆசனவாயில் மிளகாய்ப் பொடியை அப்பிக் கொண்ட பைத்தியக்காரக் குரங்கின் நிலைக்கு ஆளானார்கள்.
இந்நிலையில், ”கௌ ரக்ஷக் தள்” அதாவது பசுப் பாதுகாப்புப் படை என்கிற ஆர்.எஸ்.எஸ் பரிவார கூட்டம் ஒன்று ஹரியானா மாநிலத்தில் தமிழகம் மற்றும் கேரளாவில் நடந்த மாட்டுக்கறித் திருவிழாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை அறிவித்திருந்தது. இந்த கேலிக்கூத்தை எல்லாம் செய்தியாக்க வேண்டிய தலையெழுத்து உள்ளூர் பத்திரிகையாளர்களுக்கு இருக்கிறதல்லவா? அதற்காக போராட்டத்தைக் காணச் சென்ற பத்திரிகையாளர் ஒருவரோடு வேடிக்கை பார்க்க சென்ற நண்பர் தான் மாணவர் சிவம்.
நிற்க.
மாணவர் சிவனுக்கு நேர்ந்த கொடூரத்தைப் பற்றிய செய்திக்குள் செல்லும் முன் இந்துத்துவ வெறித்தனத்தைப் பற்றி கொஞ்சமாவது அறிந்து கொள்வது அவசியம். மலத்தொட்டிக்குள் இருக்கும் மொத்த நாற்றத்தையும் முகர்ந்து பார்க்கும் கொடுமைக்கு உங்களை ஆளாக்க நாங்கள் விரும்பவில்லை; அதற்கு மாறாக ஒரு சோறு பதமான ஹரியானாவைப் பற்றி மேலோட்டமாக அறிந்து கொள்ளுங்கள்.
ஆயிரம் ஆண்களுக்கு வெறும் 877 பெண்களே கொண்ட ஹரியானா மாநிலத்தில், ஆண்டொன்றுக்கு சுமார் 35,000 பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர். நாட்டின் மொத்த குழந்தைப் பிறப்பில் 2.2 சதவீதம் ஹரியானா பங்களிக்கிறது – ஆனால், பிறப்பதில் நான்கு சதவீத பெண்குழந்தைகளைக் கொன்று விடுகின்றது. 1947-க்கு பிந்தைய புள்ளி விவரங்களை மொத்தமாக தொகுத்துப் பார்த்தால், பெண்களின் மேல் ஒரு இனப் படுகொலையையே ஏவிவிட்டுள்ளது ஹரியானா என்கிற ஒரே ஒரு மாநிலம்.
பார்ப்பனிய இந்துத்துவ கலாச்சாரத்தின் புகுந்த வீடு குஜராத் என்றாலும், அது பிறந்தது ’வேத நாகரீகத்தின்’ தொட்டிலான கங்கைக் கரையோர மாநிலங்களில் தான். பொதுவில் இந்துத்துவ பார்ப்பனியம் மனிதகுலத்துக்கும், இயற்கை நியதிக்கும், அறிவுக்கும், அறிவியலுக்கும் எதிரானது என்று சொன்னாலும், குறிப்பாக அதன் ஆணாதிக்க கண்ணோட்டம் பெண்களுக்கும், மதவெறிக் கண்ணோட்டம் முசுலீம், கிருஸ்தவ மக்களுக்கும், சாதியக் கண்ணோட்டம் ஒடுக்கப்பட்ட ‘இந்து’ மக்களுக்குமே எதிரானது என்பதன் துலக்கமான உதாரணம் ஹரியானா.
இந்தப் பின்புலத்தில் சிவனின் கதைக்கு மீண்டும் வருவோம். தனது பத்திரிகையாளர் நண்பருடன் போராட்டத்தை வேடிக்கை பார்க்க கூட்டத்துக்குச் சென்ற சிவன், நண்பரது புகைப்படக் கருவியை வாங்கி வைத்திருந்திருக்கிறார். போராட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில் தனது கையிலிருந்த புகைப்படக் கருவியை நோண்டிக் கொண்டிருந்திருக்கிறார் சிவன். கையில் புகைப்படக் கருவியுடன் ஒருவன் தங்களது பராக்கிரமங்களைப் படமெடுக்காமல் அதை நோண்டிக் கொண்டிருப்பதைப் பார்த்த காவி கும்பல் வெறியேறிய நிலையில் “ஏன் தங்களைப் படமெடுக்கவில்லை?” என்று கேட்டு மிரட்டியதுடன், படமெடுக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளது.
தான் ஒரு மாணவரென்பதையும், தனக்குப் புகைப்படக் கருவியை இயக்கத் தெரியாது என்பதையும் சிவன் விளக்கிப் பார்த்துள்ளார் – ஆனால், பார்ப்பன போதை தலைக்கேறிய மாட்டுத் தீவிரவாதிகள் அதை நம்பாமல் தாக்க முயற்சித்துள்ளனர். அருகில் இருந்த பொதுமக்கள் சிலர் தலையிட்டு மாட்டு மூளை இந்துத்துவ கும்பல் “கொம்பில் பால்கறக்க முயற்சிக்கும்” கோமாளித்தனத்தை எடுத்துச் சொல்லி சிவனை தற்காலிகமாக காப்பாற்றியுள்ளனர்.
போராட்டம் முடிந்து சிவன் திரும்பிச் செல்லும் வழியில் மோகித் எனும் மாட்டுப் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவன் தனது கூட்டாளிகளுடன் அவரைப் பின் தொடர்ந்துள்ளான். அருகில் உள்ள சந்தைப் பகுதியில் வைத்து சிவனை வழி மறித்த இந்த கும்பல், அவரைக் கத்தியால் சராமாரியாக குத்தி விட்டுத் தப்பியோடி உள்ளது. மக்களில் சிலர் உயிருக்குப் போராடிய சிவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கத்திக் குத்தில் ஏற்பட்ட காயங்கள் அபாயகரமாக இருந்ததால் அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் கையை விரித்து விடவே, தற்போது தில்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார் சிவன். சம்பவத்துக்குப் பின் மோகித்தை மட்டும் கைது செய்துள்ள் ஹரியானா மாநில போலீசார், மோகித்தின் கூட்டாளிகளும் மாட்டுப் பாதுகாப்புப் படையின் உறுப்பினர்களுமான மற்ற தீவிரவாதிகளைத் ‘தேடி வருவதாக’ அறிவித்துள்ளது.
இச்சம்பவத்தை எங்கோ நடந்ததெனக் கடந்து செல்ல முடியாது; இதில் தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்களுக்கு நேரடியான செய்தி ஒன்று உள்ளது – குறிப்பாக செய்தித் தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்களுக்கு.
தமிழக செய்தித் தொலைகாட்சிகள் அனைத்தும் கார்ப்பரேட்டுகளின் கையில் உள்ளன – கார்ப்பரேட்டுகள் அனைத்தும் மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பாரதிய ஜனதாவின் பையில் உள்ளன. எனவே தமிழ்நாட்டு இந்துத்துவ அற்பர்கள் அர்த்த ராத்திரியில் மட்டுமல்ல, ஏடாகூடமான இடங்களில் கூட குடை பிடித்து அலைகின்றனர். சென்ற சட்டமன்றத் தேர்தலில் நோட்டாவை விட ஒன்றரை சதவீத ஓட்டுக்கள் கூடுதலாக பெற்ற பாரதிய ஜனதா, தமிழ்நாட்டின் எல்லா செய்தித் தொலைக்காட்சிகளின் விவாதங்களிலும் இடம் பிடித்துக் கொள்கின்றனர்.
கோணவாய்காம் பாளையத்தின் பொதுக் கக்கூசு அடைத்துக் கொள்ளும் அதிமுக்கியமான பிரச்சினையை மோடியால் எப்படித் தீர்க்க முடியும் என்று “கட்டிடக்கலை நிபுணர்” ராமசுப்பிரமணியம் விளக்குகிறார். உண்மையில் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த இந்த ஆசாமி, பொருளாதார நிபுணராகவும், நிதி ஆலோசகராகவும், மருத்துவ நிபுணராகவும், கல்வியாளராகவும் பல்வேறு அவதாரங்களை எடுக்கிறார். கோமாளியாகத் தெரிந்தாலும் பரவாயில்லை, ஆனால் மக்கள் தினசரி தங்கள் மூஞ்சிகளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென்பது பாரதிய ஜனதாவின் கணக்கு.
ஊடக வெளிச்சம் தங்கள் மேல் தொடர்ந்து விழுவதன் மூலம் என்றாவது பவர் ஸ்டார் ஹீரோவானதைப் போல் தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடிக்கும் நிலைக்கு மேலேறிச் சென்று விடலாம் என்பது பாரதி ஜனதாவின் கனவு. ராமசுப்பு கோமாளியாக இருந்தாலும், கேடி ராகவன், நாராயணன், கல்யாண் ராம் போன்ற ‘ரவுடி’ பார்ப்பான்கள் வேறு ரகம். விவாதங்களில் நேரடியாக மிரட்டுவது, பச்சையாக புளுகுவது, பொய்யான புள்ளிவிவரங்களை அடுக்குவது – இதையெல்லாம் “ரைட் ராயலாக” செய்வது இவர்கள் பாணி.
இதற்கு ஊடக முதலாளிகள் துணை போவதைப் புரிந்து கொள்ள முடிகின்றது – பச்சமுத்துவுக்கு ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களும், கணிமக் கொள்ளையன் வைகுண்ட ராஜனுக்கு சி.பி.ஐ விசாரணையும், இன்னபிற முதலாளிகளுக்கு மோடியின் வருமானவரித் துறையும் கண் முன்னே வந்து செல்லும் என்பதையும் கூட புரிந்து கொள்ள முடிகின்றது.
ஆனால், கார்ப்பரேட் ஊடகங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களும், ஊழியர்களும் ஹரியானாவை நினைத்துப் பார்க்க வேண்டும். நாளை இங்கும் இந்துத்துவ குரங்குகளின் கையில் அதிகாரம் கிடைத்தால் அவை முதலில் உங்கள் காதுகளைத் தான் கடித்துத் துப்பும். இன்று ஹரியானாவில் சிவனின் வயிற்றில் பாய்ச்சப்பட்ட கத்தி நாளை பாரதிய ஜனதா அதிகாரத்துக்கு வந்தால் உங்கள் கழுத்திலும் இறங்கலாம். அதற்குக் காரணம் ஹெச்.ராஜா பேசும் போது விளம்பர இடைவெளி விட்ட “மாபெரும் ஹிந்து தர்ம விரோத நடவடிக்கையாக” கூட இருக்கலாம்.
மாட்டுக்கறி தடையை மோடி அரசு அறிவித்த மறுநாளே திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் செயல்பட்டுவரும் மாட்டிறைச்சி கடைகளில் வேலை செய்பவர்களை சந்தித்தோம்.
இங்கு இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலான மக்கள் பல ஆண்டுகளாக இத்தொழிலையே செய்து வருகின்றனர். முசுலீம்களின் ஈகைத் திருநாளில் விற்பனையாவதை விட தீபாவளி நாளன்று அதிக மாடுகள் வெட்டப்படுகின்றது. முசுலீம்கள் மட்டுமல்ல தற்போது பரவலாக அனைவரும் மாட்டுக்கறி சாப்பிடுகின்றனர். மேலும் மாட்டுக்கறி மீதான தடை என்பது விவசாயிகளைத் தான் பெரிதும் பாதிக்கும். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இத்தொழிலை நம்பித் தான் வாழ்கின்றனர்.
ஒரு பக்கம் இப்படி தடை செய்ய வேண்டும் எனக்கூறும் ஆர்.எஸ்.எஸ் கும்பலை சேர்ந்தவர்கள் தான் வெளிநாட்டுக்கு ஏற்றுமதியும் செய்து வருகின்றனர். மாட்டிறைச்சி மீதான தடை என்பது மொத்த சமூகத்துக்குமே எதிரானது என்பதை தங்கள் அனுபவத்தில் இருந்தே தொழிலாளிகளும் வணிகர்களும் அம்பலப்படுத்துகின்றனர். திருவாரூர் மாட்டிறைச்சி வளாகத்தில் எடுக்கப்பட்ட நேர்காணல் இது. வீடியோக்களை பாருங்கள், பகிருங்கள்.
வரலாறு தெரியாமல் –
அசுரன் என்றால்
நம்மையே
அருவெறுப்பாய்ப் பார்க்கின்றாய்… சுரா என்ற பார்ப்பன மதுவை கறாராகக் குடிக்க மறுத்த
திராவிடப் பிரிவே அ-சுரா!
முதலில்
சாராயம் குடித்த சாதி – பார்ப்பனச் சாதி
முதலில்
சாராயம் காய்ச்சிய சாதியும் பார்ப்பனச் சாதியே!
கூட்டுக்கறி தின்பவன்தான்
பார்ப்பான் என்று
குழம்பவேண்டாம் யாரும்!
முதலில் –
மாட்டுக்கறி குழம்பு கொதித்ததும்
ஆரிய பவன்தான்.
புல்மேயும் இளம் கன்றுக்குட்டியை
எப்படியெல்லாம்
நம் பல் மேயவேண்டும் என்று
பாடி வைத்திருக்கிறான் யாக்ஞவல்கியன்.
அது மனுதர்மமா
இல்லை இல்லை
பார்ப்பன ருசியின் ‘மெனு தர்மம்’.
பார்ப்பனப் பசிக்குப் பலியான
கணக்கற்ற
நம் கால்நடைகளுக்காகவும்
நாம் பழிதீர்க்க வேண்டும் பார்ப்பனியத்தை.
அன்று:
ஊரான் மாட்டை
அவாள் ஓசியில் தின்றது
உபச்சாரம்;
இன்று:
உழைத்திடும் மக்கள்
காசுக்கு கறி வாங்கித் தின்றால்
அபச்சாரம்! அபச்சாரம்!
ஒரு தொழிற்சாலையில் வைத்து உற்பத்தி செய்ய இயலாத பொருள் தண்ணீர். அது நமக்கு மட்டுமல்ல எதிர்கால தலைமுறைகளுக்கும் சொந்தமானது. அதனை தனியார் லாபத்துக்காகவோ அல்லது கேளிக்கை களியாட்டங்களுக்காகவோ வீணாக்கவது கூடாது. தற்போதுள்ள வறட்சிக்கும் குடிநீர் பஞ்சத்துக்கும் முதன்மையான காரணம் தனியார்மயம்தான். அந்த தனியார்மயத்துக்கு முடிவு கட்டாமல் வறட்சிக்கு விடிவில்லை. தண்ணீர் தாகத்துக்கே அன்றி லாபத்திற்கில்லை என்பதை உணர்த்தும் பாடல்.
இந்திய அரசுக்கு எதிராக, குறிப்பாக நரேந்திர தாமோதர தாஸ் மோடி தலைமையில் அமைந்துள்ள இந்து மதவெறி பாசிச அரசுக்கு எதிராக, ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியைப் பிரசவிக்கும் தருணத்தில் இருக்கிறது காஷ்மீர் பள்ளத்தாக்கு. கடந்த ஓரிரு மாதங்களில் அங்கு நடந்த மூன்று சம்பவங்கள், எந்த நேரத்திலும் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை போல காஷ்மீர் குமுறிக் கொண்டிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளன. “காஷ்மீர் நம் கையைவிட்டுப் போய்விடுமோ?” என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உள்ளிட்டுப் பலரும் பதறி நிற்கும் அளவிற்கு அம்மூன்று சம்பவங்களும் “இந்து” இந்தியாவின் ஆக்கிரமிப்பிற்கும் அடக்குமுறைக்கும் சவால்விட்டுள்ளன.
முதல் சம்பவம், கடந்த மார்ச் மாதம் பட்காம் மாவட்டத்தில் நடந்தது. அம்மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் தலைமறைவாகப் பதுங்கியிருந்த ஒரு போராளியைச் சுட்டுக் கொல்வதற்காக வந்த இந்திய இராணுவத்தைத் தடுத்து நிறுத்திய அக்கிராம மக்கள், அப்போராளியைத் தப்ப வைக்கும் நோக்கில் இராணுவச் சிப்பாய்களைக் கற்களைக் கொண்டு தாக்கினர். அச்சமயத்தில் இராணுவத்துக்கும் கிராம மக்களுக்கும் இடையே நடந்த மோதலில், மூன்று பேர் கொல்லப்பட்டனர், 18 பேர் படுகாயமடைந்தனர். கிராம மக்களின் இரத்தத்தில் தனது பூட்ஸ் கால்களை நனைத்த பிறகுதான், அந்தப் போராளியை இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்ல முடிந்தது.
சீறிநகரில் அரசுப் படைகளைக் கல்லெறிந்து விரட்டும் கல்லூரி மாணவர்கள்.
“முன்பெல்லாம் இராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் நடக்கும்போது, பொதுமக்கள் அந்த இடத்திலிருந்து விலகி ஓடிவிடுவார்கள். இப்பொழுதோ பொதுமக்கள் தீவிரவாதிகளின் கேடயமாக மாறி, இராணுவத்தை எதிர்த்து நிற்கிறார்கள்” என இப்புதிய நிலைமையைப் பற்றி பத்திரிகையாளர் ஷுஜாத் புகாரி குறிப்பிடுகிறார்.
இரண்டாவது சம்பவம், ஏப்ரல் மாதத்தில் சிறீநகர் மற்றும் ஆனந்த்நாக் நாடாளுமன்ற இடைத்தேர்தல்களையொட்டி நடந்தது. 35,000 வாக்காளர்களை மட்டுமே கொண்டுள்ள சிறீநகர் இடைத்தேர்தலை நடத்துவதற்கு 17,000 சிப்பாய்களை இறக்கியிருந்தது, இந்திய அரசு. தேர்தலுக்கு முதல்நாள் இணைய தள சேவையும் அரசால் தடை செய்யப்பட்டது. ஆனாலும், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் ஏப்ரல் 9 அன்று சிறீநகர் இடைத்தேர்தலை “அமைதியான” முறையில் நடத்தி முடிக்க முடியவில்லை. அத்தேர்தலை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டங்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக்கு மத்தியில் ஏப்ரல் 9 அன்று நடந்த சிறீநகர் இடைத்தேர்தலில் வெறும் ஏழு சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. அத்தொகுதியின் சில வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 12 அன்று நடத்தப்பட்ட மறுவாக்குப் பதிவில் வெறும் இரண்டு சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. 28 வாக்குச் சாவடிகளில் ஒரு வாக்குகூடப் பதிவாகவில்லை. “காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதம் உச்சத்தில் இருந்த நேரத்தில்கூட, இவ்வளவு குறைவான வாக்குகள் பதிவானதில்லை” எனக் குறிப்பிட்டுள்ள காஷ்மீர் பத்திரிகையாளர்கள், “இத்தேர்தல் புறக்கணிப்பு 1989 காலகட்டத்திலிருந்து வேறுபட்டது, காஷ்மீர் முசுலீம்களின் தன்னெழுச்சியான எதிர்ப்புணர்வின் வெளிப்பாடு” எனச் சுட்டிக் காட்டுகிறார்கள்.
சிறீநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலின்போது, ஓட்டுப்போட ஒருவர்கூட வராமல் வெறிச்சோடிப் போன ஒரு வாக்குச்சாவடி.
90 சதவீதத்துக்கும் மேலான வாக்காளர்களால் புறக்கணிக்கப்பட்ட சிறீநகர் இடைத்தேர்தல் முடிவும்கூட, அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க.-பி.டி.பி. கூட்டணிக்கு எதிரானதாகவே அமைந்தது. அத்தேர்தலில் காங்கிரசு-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி வேட்பாளரான பரூக் அப்துல்லா வெற்றி பெற்றார். ஆனந்த்நாக் இடைத்தேர்தலில் இதைவிடத் தீவிரமான எதிர்ப்பையும், தோல்வியையும் ஆளுங்கூட்டணி சந்திக்க வேண்டியிருக்கும் என்ற நிலையில், மோடியின் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக இடைத்தேர்தலையே காலவரையின்றி ஒத்திவைத்துவிட்டது, இந்தியத் தேர்தல் ஆணையம்.
இவ்விரண்டு சம்பவங்களைக் காட்டிலும், ஏப்ரல் 24 அன்று சிறீநகரில் நடந்த கல்லூரி, பள்ளி மாணவிகளின் போராட்டம்தான் ஆளுங்கும்பலையும் தேசியவாதிகளையும் திகைப்பிலும் அச்சத்திலும் ஆழ்த்தியது. அந்தப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற ஒரு மாணவி, தனது ஒரு கையில் கூடைப்பந்தையும், இன்னொரு கையில் கல்லையும் ஏந்தியிருந்தார். அப்போராட்டத்தில் கற்களைக் கையில் ஏந்தியிருந்த ஒவ்வொரு மாணவியின் முதுகிலும் புத்தகப் பை இருந்தது. “கணினியை ஏந்த வேண்டிய காஷ்மீர் இளைஞர்கள், கற்களைத் தூக்குவதா?” என முதலைக் கண்ணீர் வடித்த மோடிக்கு, “நாங்கள் புத்தகப் பையையும் சுமப்போம், கல்லையும் ஏந்துவோம்” என காஷ்மீர் மாணவிகள் பதிலடி கொடுத்துள்ளனர்.
சிறீநகர் மாணவிகள் போராட்டத்தின் தொடக்கப் புள்ளி புல்வாமா கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டமாகும். கடந்த ஏப்ரல் 12 அன்று புல்வாமா அரசுக் கல்லூரிக்குள் நுழைந்து சோதனையிட முயன்ற இராணுவத்தை எதிர்த்து அக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். கண்ணீர் புகை குண்டுகளையும், பாவா (PAVA) என அழைக்கப்படும் மூச்சைத் திணறச் செய்யும் குண்டுகளையும் கொண்டு மாணவர்களைத் தாக்கிய அரசுப் படைகளை, அவர்கள் கற்களைக் கொண்டு தடுத்து நிறுத்தினர்.
இராணுவத்துக்கும் மாணவர்களுக்கும் இடையே நடந்த அம்மோதலில் 40 மாணவிகள் உள்ளிட்டு, 64 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்த மாணவர்களை மருத்துவமனைக்குத் தூக்கிவரச் சென்ற அவசர ஊர்தியின் ஓட்டுநர், “எனது வண்டி கல்லூரிக்குள் நுழைவது போல எனக்குத் தோன்றவில்லை. மாறாக, ஒரு போர்க்களத்திற்குள் நுழைந்தது போல இருந்தது” என்கிறார். இந்திய இராணுவம், கல்லூரி மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலின் தீவிரத்தையும் கொடூரத்தையும் அந்த ஓட்டுநரின் வார்த்தைகள் எடுத்துக் காட்டுகின்றன.
இந்தத் தாக்குதலைக் கண்டித்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள சிறீநகர், பந்திபோரா, பாரமுல்லா, ஆனந்த்நாக், புல்வாமா, குப்வாரா, குல்காம், சோபியன் மாவட்டங்களில் கல்லூரி மாணவர்களின் போராட்டங்கள் வெடித்தன. இப்போராட்டங்களுக்கு முகங்கொடுக்க முடியாத மாநில அரசு, அனைத்துக் கல்லூரிகளுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை அளித்து, மாணவர்களின் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியில் இறங்கியது.
சிறீநகரிலுள்ள அரசு கல்லூரி மற்றும் அரசு மேநிலைப் பள்ளி மாணவிகள் லால் சௌக் பகுதியில் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்த்து நடத்திய போர்.
ஆனால், கல்லூரிகள் திறக்கப்பட்ட ஏப்ரல் 24 அன்றே சிறீநகரிலுள்ள அரசு மகளிர் கல்லூரி மற்றும் அரசு மேநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் போராட்டத்தில் இறங்கி, மாநில அரசின் முகத்தில் கரியைப் பூசினர். இந்தப் போராட்டத்தைத் தடுக்க முயன்ற பேராசிரியர்களை, “நீங்கள் மாடா, இல்லை மனுசங்களா?” என எதிர்த்துக் கேட்டு, மாணவிகள் நையாண்டி செய்துள்ளனர்.
கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி போராட்டத்தைக் கலைக்க முயன்ற போலீசைக் கற்களைக் கொண்டு தாக்கிப் பின்வாங்கச் செய்த மாணவிகள், போலீசின் கவச வாகனங்களைத் துரத்தித் துரத்தித் தாக்கினர். அன்று, சீறிநகரின் புகழ்பெற்ற லால் சௌக் பகுதி முழுவதும் போராடிய மாணவிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததாகக் கூறுகிறார்கள், அப்பகுதி வணிகர்கள்.
கடந்த ஆண்டு ஜூலையில் இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி என்ற இளம் வயது போராளி இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து வெடித்த காஷ்மீர் மக்களின் கலகம் இன்னமும் தணிந்துவிடவில்லை. இக்கலகத்தை ஒடுக்க ஜூலை 2016 தொடங்கி டிசம்பர் 2016 முடியவுள்ள ஆறு மாத காலத்தில் மட்டும் காஷ்மீர் முசுலீம்களின் மீது 1,60,000 கண்ணீர்ப் புகை குண்டுகளும், பாவா குண்டுகளும் வீசப்பட்டுள்ளன. இவையல்லாமல், பல இலட்சம் பெல்லட் குண்டுகளால் காஷ்மீர் மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். பெல்லட் குண்டுகள் தாக்கி கண்பார்வையை இழந்துபோனவர்களின் எண்ணிக்கையோ ஆயிரத்தைத் தாண்டுகிறது. பொது பாதுகாப்புச் சட்டம் என்ற கருப்புச் சட்டத்தின் கீழ் எட்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணையின்றிச் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இத்துணைக்கும் பிறகுதான் மேலே கூறப்பட்டுள்ள மூன்று சம்பவங்களும் நடந்துள்ளன.
புர்ஹான் வானி இறுதி ஊற்வலம்
“காஷ்மீர் மக்கள் ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களை எல்லாத் திசைகளிலும் நசுக்கி வருகிறது, அரசு. இந்த நிகழ்வுகளைப் பார்த்துவிட்டு, எங்களால் எப்படி ஒதுங்கிப் போய்விட முடியும்? காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணுவதற்கான நேரம் வந்துவிட்டது” எனக் கூறுகிறார் பன்னிரெண்டாவது படிக்கும் ஒரு மாணவி. இந்திய அரசுக்கு எதிரான வெறுப்பையும் விடுதலை வேட்கையையும் கொண்ட இந்த மாணவர்களை, இளைஞர்களை வேலைவாய்ப்பு, வளர்ச்சி என்ற வார்த்தை ஜாலங்களைக் கொண்டோ, துப்பாக்கி தோட்டாக்கள், பெல்லட் குண்டுகள், கருப்புச் சட்டங்கள், சிறை தண்டனை – என நீளும் அடக்குமுறையின் மூலமோ வீழ்த்திவிட முடியாது என்பதை இந்திய ஆளுங்கும்பல், குறிப்பாக மோடி அரசு உணர மறுக்கிறது.
மாறாக, இந்தியாவின் மீது இன்னமும் கொஞ்சநெஞ்சம் நம்பிக்கை வைத்திருப்பவர்களையும்கூடத் தமது அடக்குமுறையின் மூலமாக போராளிகள் பக்கம் தள்ளிவிடும் நல்ல காரியத்தைச் செய்து வருகிறது. அதற்கு உதாரணமாக இருப்பவர்தான் 26 வயதான பரூக் அகமது தர்.
இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து சிறீநகர் இடைத்தேர்தலில் வாக்களித்த 7 சதவீத காஷ்மீர் முசுலீம்களுள் பரூக் அகமது தர்ரும் ஒருவர். வாக்களித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பரூக் அகமது தர்ரைப் பிடித்த இந்திய இராணுவச் சிப்பாய்கள், அவரைத் துப்பாக்கியாலும், தடிகளாலும் மயங்கிச் சரியும் அளவிற்குத் தாக்கியுள்ளனர். அரை மயக்க நிலையில் இருந்த அவரை, ஒரு இராணுவ ஜீப்பின் முன்பகுதியில் உட்கார வைத்து, இறுகக் கட்டி, “இராணுத்தின் மீது கல்லெறிபவர்களுக்கு இந்தக் கதிதான் ஏற்படும்” என ஒலிபெருக்கியில் எச்சரிக்கை செய்துகொண்டே இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக அவரை இழுத்துச் சென்று அவமானப்படுத்தி, பீதியூட்டி அதன் பிறகு விடுவித்திருக்கிறது, இந்திய இராணுவம்.
இந்திய இராணுவத்தின் அட்டூழியம்: ஜீப்பில் கட்டி வைத்து இழுத்துச் செல்லப்படும் பரூக் அகமது தர்.
இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்துபோய், தனது வீட்டைவிட்டு வெளியே வரவே அச்சப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பரூக் அகமது தர், “நான் செய்த குற்றமென்ன?” எனப் புலம்பி வருகிறார். காஷ்மீரியாக, அதுவும் முசுலீமாக இருப்பதே குற்றம் எனக் கொக்கரிக்கிறது, இந்து மதவெறிக் கும்பல்.
மோடி அரசின் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, “காதலிலும் போரிலும் அத்துமீறல்களெல்லாம் வாடிக்கையாக நடப்பதுதான்” என அலட்சியமாகப் பதில் அளித்து, பரூக் அகமது தர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நியாயப்படுத்துகிறார்.
இந்திய இராணுவம் கடந்த முப்பது ஆண்டுகளாக காஷ்மீர் முசுலீம்களுக்கு இழைத்திருக்கும் அநீதிகளைக் கண்டிக்கவோ, அதனால் பாதிக்கப்பட்ட காஷ்மீரி முசுலீம்களுக்கு நீதி வழங்கவோ தயாராக இல்லாத உச்ச நீதிமன்றம், கற்களைக் கீழே போடுமாறு காஷ்மீர் இளைஞர்களுக்குக் கட்டளையிடுகிறது. பெல்லட் குண்டுகளுக்குப் பதிலாக வேறு எந்தச் சனியனைக் கொண்டு காஷ்மீர் இளைஞர்களை அடக்கி ஆளலாம் என மூளையைக் கசக்கி வருகிறது.
ஆர்.எஸ்.எஸ். வானரப் படையைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமியோ இன்னும் ஒருபடி மேலே சென்று, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் வாழும் முசுலீம்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, முகாம்களில் அடைக்க வேண்டும் எனக் கூறி, இட்லரின் யூத அழித்தொழிப்பை நினைவுபடுத்துகிறார்.
ஜம்முவிலுள்ள வர்த்தக சங்கத்தின் தலைவர் ராகேஷ் குப்தா, முசுலீம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிவிடும் நோக்கத்தோடு, ஜம்முவில் குடியேறியிருக்கும் வங்கதேச மற்றும் பர்மிய முசுலீம்களை அடையாளம் கண்டு, அவர்களைக் கொல்லுமாறு அறிவிக்கிறார்.
இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள மேவார் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் காஷ்மீர் மாணவர்களுள் ஆறு பேர் உள்ளூர் இந்து மதவெறிக் கும்பலால் தாக்கப்பட்டுள்ளனர். அம்மாணவர்களைத் தீவிரவாதிகள் எனப் பழிபோட்டு அவமானப்படுத்திய அக்கும்பல், படிப்பைக் கைவிட்டு காஷ்மீருக்கு ஓடிப்போய்விடுமாறு மிரட்டியிருக்கிறது.
உ.பி. மாநிலத்தின் மீரட் நகரில், உத்தரப் பிரதேச நவ நிர்மாண் சேனா என்ற இந்து மதவெறி அமைப்பு, ஏப்ரல் 30-க்குள் அந்நகரத்தில் படித்துவரும் காஷ்மீர் மாணவர்கள் அனைவரும் வெளியேறிவிட வேண்டும் என்று எச்சரித்தும், காஷ்மீரிகளைப் புறக்கணிக்குமாறு உள்ளூர் இந்துக்களைத் தூண்டிவிட்டும் பிரச்சாரத் தட்டிகளைக் கட்டி வைத்திருக்கிறது.
இந்திய இராணுவத்தின் கீழ்த்தரமான அடக்குமுறைகளுக்கு எதிராகவும், சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட ஜனநாயக, குடியுரிமைகளுக்காகவும் போராடி வரும் காஷ்மீர் முசுலீம்களைத் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், பாகிஸ்தான் கைக்கூலிகள், மத அடிப்படைவாதிகள் எனப் பலவாறாக அவதூறு செய்து கொச்சைப்படுத்துவதன் மூலம், இந்தியாவின் பிற மாநில மக்களிடம் அவர்கள் மீது வெறுப்புணர்வைத் திட்டமிட்டு வளர்த்து வருகிறது, இந்திய ஆளுங்கும்பல்.
காஷ்மீர் முசுலீம்களும் மாணவர்களும் இந்தியாவின் பிற பகுதிகளில் வாழ முடியாது, கல்வி பயில முடியாது என்றால், இந்திய அரசு காஷ்மீரைச் சொந்தம் கொண்டாடுவதற்கு, அதனை அடக்கி ஆளுவதற்கு என்ன தகுதியும் உரிமையும் இருக்கிறது? தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் காஷ்மீர் முசுலீம்களின் வாழ்வுரிமையைக் காலில் போட்டு மிதித்துவரும் இந்திய அரசுக்கும், அதனின் சட்டங்களுக்கும், இராணுவம் உள்ளிட்ட அதனின் நிறுவனங்களுக்கும் அவர்கள் ஏன் விசுவாசமாக நடந்துகொள்ள வேண்டும்?
தற்போது அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க.-பி.டி.பி. கூட்டணியைத் துரோகத்தின் மறுஉருவாகவே கருதி வெறுக்கிறார்கள், காஷ்மீரி முசுலீம்கள். ஒருபுறம் இராணுவ அடக்குமுறைகளைத் தீவிரப்படுத்துவதன் மூலமும், இன்னொருபுறம் – ஜம்மு காஷ்மீரில் பசுவதைச் சட்டத்தை அமல்படுத்துவது, காஷ்மீரி தேசியக் கொடியை ஒழித்துக் கட்டுவது, ஜம்முவைச் சேர்ந்த மேல்சாதி பார்ப்பன பண்டிட்டுகளுக்கும் முன்னாள் இராணுவச் சிப்பாய்களுக்கும் தனி காலனிகளை உருவாக்குவது ஆகிய திட்டங்களின் வழியாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இந்துமயமாக்குவதன் மூலமும் காஷ்மீரை இந்தியாவின் நிரந்தரக் காலனியாக வைத்துக் கொள்ள முடியும் என மனப்பால் குடிக்கிறது, மோடி கும்பல்.
ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்தத் திட்டங்கள், கடந்த சில ஆண்டுகள் “அமைதியாக” இருந்த காஷ்மீரை எழுச்சியின் எல்லைக்குத் தள்ளிச் சென்றுவிட்டது. “தீவிரவாதிகளின்” கோரிக்கையாக இருந்த விடுதலைக் கோரிக்கையை, பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த மக்களின் உடனடி அரசியல் கோரிக்கையாக மாற்றிவிட்டது. சிறீநகர் தொகுதி தேர்தல் புறக்கணிப்பும், இளைஞர்கள்-மாணவர்கள் நடத்திவரும் கல்லெறி போராட்டங்களும் இந்த மாற்றத்தின் சாட்சியங்களாக உள்ளன.
நொய்யல், நல்லாறு, அமராவதி, பாலாறு, சின்னாறு ஆகியவையே திருப்பூர் மாவட்ட எல்லைகளுக்குள் ஓடும் ஆறுகள்; இவையே திருப்பூரின் முக்கியமான நீராதாரங்கள். இதில் நொய்யலாறு திருப்பூர் நகர எல்லைகளுக்குள்ளாக ஓடுகின்றது. மேற்குத் தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரியில் உற்பத்தியாகும் நொய்யல், கோவை நகரின் குறுக்காக ஓடி, அவினாசி தாலுக்காவைக் கடந்து திருப்பூருக்குள் நுழைந்து பின்னர் ஒரத்தபாளையம் அணையைக் கடந்து கரூரில் காவரியாற்றில் கலக்கின்றது.
சோழர்களின் காலத்தில் நொய்யலாற்றை மையமாக வைத்து சுமார் 32 தடுப்பணைகளும், குளங்களும், இணைப்புக் கால்வாய்களும் வெட்டி விரிவான நீர் மேலாண்மை ஏற்பாடுகள் செய்திருந்தனர். மங்கலம் தடுப்பணை, ஆண்டிபாளையம் குளம், பெரியபாளையம் குளம் போன்றவை முக்கியமான குளங்கள். திருப்பூர் நகர நிர்வாகம் மற்றும் நீர் வழித்தடங்கள் குறித்து சி.பி.ஐ கட்சியின் முன்னாள் உறுப்பினரும், தொட்டிபாளையம் பஞ்சாயத்தின் முன்னாள் தலைவருமான தோழர் மோகனிடம் பேசினோம்.
“திருப்பூரில் முன்பு இயற்கையான மழை பொழிவை நம்பி பல்வேறு குளம் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. காவிரி கடைமடைப் பகுதிகளைப் போல் குளம் குட்டைகளுக்கு இடையே விரிவான இணைப்புக் கால்வாய் வலைப்பின்னல் இல்லையென்றாலும், பெய்யும் மழை சிறு சிறு குட்டைகளிலும், பின் அங்கிருந்து குளங்களுக்கும் பின்னர் நொய்யல் ஆற்றுக்கும் சென்ரு கலந்து விடுவதைப் போன்ற ஏற்பாடு இருந்தது” என்றார் தோழர் மோகன்.
தோழர் மோகன்
முப்பது நாற்பதாண்டுகளுக்கு முன், அதாவது பின்னலாடை ஏற்றுமதி விறுவிறுப்பான தொழிலாக மாறும் முன் இங்கே விவசாயம் நடந்ததா?
“நடந்தது. கால்வாய் பாசனம் நடக்கவில்லை. ஆனால், இங்கே இருந்த நீர் மேலாண்மை ஏற்பாடுகளின் காரணமாக நிலத்தடி நீர் வளம் மிகுந்து இருந்தது. ஐம்பது அறுபது அடிகளிலேயே நல்ல தண்ணீர் கிடைக்கும். எனவே இங்கே கிணற்றுப் பாசன முறை நடைமுறையில் இருந்தது. புகையிலை, கரும்பு போன்ற பணப்பயிர்களும், நெல்லும் விளைந்தது” என்றார்.
திருப்பூர் இன்றைக்கு சந்திக்கும் பிரச்சினைகளுக்கு பனியன் கம்பெனிகளே காரணம் என்று புரிந்து கொள்ளலாமா?
“அப்படிச் சொல்ல முடியாது. திருப்பூரின் நீராதாரங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட் முதலைகளால் படிப்படியாக திட்டமிட்ட ரீதியில் சீரழிக்கப்பட்டன. பல இடங்களில் விவசாயம் நடந்தபட்ட நிலத்துக்கு மத்தியிலேயே கூட ஒன்றிரண்டு ஏக்கர் பரப்பளவுள்ள குட்டைகள் இருக்கும். பின்னாடி ரியல் எஸ்டேட் காரர்கள் நிலங்களை வாங்கி வீட்டு மனைகளாக்கிய போது மொத்தமாக குட்டைகளை மூடி விட்டனர். இது ஒருபக்கம் என்றால், புறம்போக்கு நிலங்களில் இருக்கும் பெரிய குளங்களையும் ஆக்கிரமித்தனர். இதையெல்லாம் அரசாங்கம் கண்டும் காணாமலும் விட்டு விட்டது. அரசே போட்ட சாலைகளுக்காக கூட குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன..” எனத் தொடர்ந்தார் தோழர் மோகன்.
ஆக்கிரமிக்கப்படும் நல்லாத்துப் பாளையம் குளம்
ஒருபக்கம் திருப்பூரின் நீராதாரங்களும், நீர் வழித்தடங்களும் அரசின் ஆசீர்வாதத்தோடு நாசமாக்கப்பட்டன. இதன் காரணமாக நிலத்தடி நீர் பலநூறு அடிகளுக்கும் கீழ் இறங்கி பின் மறைந்தே போனது. சாயப்பட்டறைகள் பல லட்சம் செலவு செய்து அமைத்த ஆழ்துளைக் கிணறுகள் பூமிக்கடியில் நீரோட்டமில்லாத வெற்றுப் பகுதியில் முடிந்து வெறும் காற்றையே மேலே அனுப்பின. வேறு வழியில்லாமல் அதே ஆழ்துளாய்க் கிணற்றின் குழாய்களின் வழியே சாயக் கழிவுகளை பூமிக்குக் கீழ் அனுப்பி தங்கள் பங்குக்கு நிலத்தடி நீரை நஞ்சாக்கும் வேலையைச் சாயப்பட்டறைகள் செய்த போதும் அரசு முறைப்படுத்த முன்வரவில்லை.
இதற்கிடையே என்பதுகளில் இருந்தே திருப்பூர் நகரத்திற்குள் இடம்பெயர் தொழிலாளிகள் வந்து குவியத் துவங்கினர். அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ற நகர அபிவிருத்தி திட்டங்களையும் அரசு புறக்கணித்ததோடு, முறையான கழிவு நீர் வடிவால் வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. திருப்பூர் நகரின் மொத்த கழிவுகளும் நொய்யலில் கலந்து இன்றைய நிலையில் நொய்யல் ஒரு சாக்கடை ஆறாகவே ஓடிக் கொண்டிருக்கின்றது.
நாங்கள் சி.கே ரோட்டரி பிரிண்ட்ஸ் நிறுவனத்தின் குலோத்துங்கனைக் காண நொய்யல் ஆற்றின் கரையோரமாகவே பயணித்துச் சென்றோம். நல்லாத்தம்பாளையத்தைக் கடந்த போது அங்கிருந்த மிகப் பெரிய குளம் ஒன்று படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை கண்கூடாகவே காண முடிந்தது, சில பத்தாண்டுகளுக்கு முன் மிகப் பெரிதாக இருந்த நல்லாத்தம்பாளையம் குளத்தில் இப்போது சில பத்து சதுர அடிகளுக்கு சாக்கடைச் சகதி மட்டுமே தேங்கி நிற்கிறது.
நல்லாத்தம்பாளைய குளத்திற்கு சுற்றுவட்டாரத்திலிருந்து நீரைக் கொண்டு வந்து சேர்க்கும் கால்வாய்கள் அனைத்துமே இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருந்தன. தேங்கி நின்ற சாக்கடைச் சகதியினுள் மீனைத் தேடி எங்கிருந்தோ வந்த நாரைக் கூட்டம் ஒன்று வந்திருந்தது. அந்த நாரைகள் விடாமுயற்சியோடு தமது அலகால் கிளறிக் கிளறி மீனைத் தேடி ஏமாந்து கொண்டிருந்த காட்சி நமது இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டதை தெளிவுபடுத்தியது.
நால்லாத்தம்பாளைய குளத்தை ஒட்டிச் சென்ற தார் சாலைக்கு மறுபுறம் இன்னொரு சிறிய குட்டை ஒன்று இருந்தது; அதனுள் கரும்பச்சை நிறத்தில் தேங்கி நின்ற இடுப்பளவு தண்ணீருக்குள் சிறுவர்கள் சிலர் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இதுவும் சாக்கடைச் சகதிகளால் நிரம்பி விடும்.
திரூப்பூரில் செயல்படுத்தப்பட்டு வரும் மூன்று கட்ட குடிநீர் திட்டங்கள் குறித்து தோழர் மோகனிடம் கேட்டோம்
“முதல் மற்றும் இரண்டாம் கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்காக மேட்டுப்பாளையம் பில்லூர் அனையில் இருந்து நீர் எடுக்கப்படுகின்றது. இவ்விரண்டு திட்டங்களின் மூலம் அதிகபட்சம் 60 எம்.எல்.டி (1 எம்.எல்.டி = ஒரு கோடி லிட்டர்) தண்ணீர் எடுக்க முடியும். ஆனால், தற்போது இவ்விரண்டு திட்டங்களின் மூலமும் சுமார் 25 எம்.எல்.டி தண்ணீர் தான் திருப்பூர் மாநகராட்சி பெற்றுக் கொண்டுள்ளது. புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் அதிகபட்சம் 185 எம்.எல்.டி தண்ணீர் எடுக்க முடியும்; என்றாலும், வறட்சியின் காரணமாக சராசரியாக நூறு எம்.எல்.டி தண்ணீருக்கும் குறைவாகவே கிடைத்து வருகின்றது. கடந்த மாதங்களில் அதுவும் கூட இல்லாமல் சுத்தமாக வறண்டு விட்டது”
மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை எல் & டி தண்ணீர் என்று மக்கள் அழைக்கின்றார்களே?
“புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழகத்தில் அரசுக்கு பத்து சதவீத பங்குகள் உள்ளது – மற்றபடி அதில் தணியார் முதலீட்டார்களின் பங்குகள் தான் அதிகம். புதிய பொருளாதார கொள்கைகள் அறிவிக்கப்பட்ட பின், திருப்பூரின் குடிநீர் வழங்கலை முழுக்க தனியாருக்கு அளித்த விட வேண்டும் என்று முடிவெடுத்து 1995-ம் ஆண்டு ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தின் போது புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழகத்துக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது. குடிநீர் திட்டத்தை அமல்படுத்தும் வேலையை செய்தது எல் & டி நிறுவனம் – ஆனால், தற்போது அதன் பராமரிப்பு முழுவதும் மகிந்திரா & மகிந்திரா நிறுவனத்திடம் தான் உள்ளது. மக்கள் ஒரு பழக்கத்தின் காரணமாக எல் & டி தண்ணீர் என்று சொல்வார்கள்” என்றார்.
மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டம் எல்&டி நிறுவனத்தால் முதலீடு செய்யப்பட்டது தற்போது மகிந்திரா & மகிந்திரா நிறுவனத்தால் நடத்தப்படுகிறது
தண்ணீரை ஒரு சந்தைப் பொருளாக மாற்றி விலை வைத்து விற்பது என்பது இன்றைக்கும் கூட கேட்பதற்கே ஆத்திரமூட்டுவதாக உள்ளது. ஆனால், இருபது வருடங்களுக்கு முன் இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட போது மக்களிடையே எந்த எதிர்ப்பும் எழவில்லை. இவ்வாறு எதிர்ப்புகள் இன்றி தனியார்மய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல அரசு தரப்பில் சில ஏற்பாடுகளை ஏற்கனவே செய்திருந்தனர்.
முதலாவதாக, மாநகராட்சி சார்பாக முதல் இரண்டு கூட்டுக் குடிநீர் திட்டங்களில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. அதற்கான அடிக்கட்டமைப்பு முறையாக பராமரிக்கப்படவில்லை. பில்லூரில் இருந்து ஏற்கனவே குழாய்கள் அமைக்கப்பட்ட வழித்தடத்திலேயே இன்னும் அகலமான குழாய்கள் அமைத்திருந்தால், மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கே தேவையில்லாமல் போயிருக்கும். இரண்டாவதாக, பவானியில் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை உபரியாக செல்லும் நீரைத் திருப்பி திருப்பூரின் குளம் குட்டைகளை நிறைத்து இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளத்தை அதிகரிக்க வகை செய்யும் அவனாசி அத்திக்கடவு திட்டமும் பல பத்தாண்டுகளாக வெறும் பேச்சளவிலேயே இருக்கின்றது. இதன் காரணமாக திருப்பூர் தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறையிலேயே வைக்கப்பட்டிருந்தது. எப்படியாவது தண்ணீர் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு மக்களையும் தொழில் நிறுவனங்களையும் ஒரு சூழலுக்குள் நெட்டித் தள்ளி விட்ட பின் தான் மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டம் அறிவிக்கப்படுகிறது. அந்த சூழலில் தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்ட மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை மக்கள் வரப்பிரசாதமாகவே பார்த்துள்ளனர்.
காவிரியும் பவானியும் இணையும் ஈரோடு மாவட்டம் கோணவாய்க்கள் பகுதியில் ஆசியாவிலேயே மிகப் பெரிய நீர் உறிஞ்சு மையம் ஒன்றை அமைத்துள்ளது புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகம். தற்போது காவிரியில் தண்ணீர் வரத்து நின்று போன நிலையில் பவானியில் நீர்வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் பல்லாயிரம் அடி ஆழத்திலிருந்து உறிஞ்சப்படும் சொற்ப நீரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு கருமையான நிறத்திலேயே வருகின்றது. இந்தாண்டு மழை பொழிவும் இல்லாமல், காவிரிநீரும் இல்லாமல் போனால், திருப்பூர் தாகத்தால் மரணிக்கும் நிலை தான் ஏற்படும்.
வினவு செய்தியாளர்கள் மக்களைச் சந்தித்த போது பலரும் இந்த தண்ணீர் பஞ்சத்துக்கு வானத்தையே நோக்கியே விரல் சுட்டினர். “மழையில்லை, கர்நாடகா காரன் தண்ணி விடலை…” என்றே மக்களில் பலரும் விரக்தியாக பேசினர். ஆனால், திருப்பூரின் தண்ணீர் பஞ்சத்திற்கு இயற்கையையோ ‘கடவுளையோ’ கர்நாடகாவையோ முழுவதுமாக பழி சொல்வதற்கில்லை. திருப்பூரின் தொண்டைக் குழியைத் தாகத்தில் தவிக்க விட்ட குற்றவாளி அரசு தான்.
நகர விரிவாக்கத்தை கண்டு கொள்ளாமல் ரியல் எஸ்டேட் முதலைகளின் சூறையாடலுக்கு வழி விட்டது, இயற்கையான நீர்வழித் தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதை அனுமதித்தது, நிலத்தடி நீரைச் செறிவூட்ட, பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புறக்கணித்தது, திருப்பூரின் ஆறுகளும் கால்வாய்களும் சாக்கடைகளானதை தடுக்கத் தவறியது, இன்றும் அவை சாக்கடைகளாகவே ஓடிக் கொண்டிருப்பதைத் தடுக்காமல் அனுமதிப்பது, பனியன் தொழிலுக்காக இயற்கை வளங்கள் பயன்படுத்தப்படுவதை முறைப்படுத்த தவறியது என அரசின் குற்றப்பட்டியல் மிக நீண்டது.
நீர் மேலாண்மை, நகர்புற மேம்பாடு என ஒரு சிவில் சமூகத்தில் அரசும் அதன் உறுப்புகளும் செய்திருக்க வேண்டிய மிகக் குறைந்தபட்சமான அரசாளுகை தொடர்பான கடமைகளைக் கூட நிறைவேற்றாததுடன், சூழல் சீர்கேட்டுக்கும், தண்ணீர் பஞ்சத்துக்கும் திருப்பூரைத் தள்ளிவிட்டது அரசும் அதன் இயந்திரங்களும் தான்.
தற்போது நிலைமை மிகத் தீவிரமான திசையில் செல்லத் துவங்கிய பின், நடந்து வரும் மக்கள் போராட்டங்களின் இலக்காக தற்காலிக தீர்வுகளே உள்ளன; இந்நிலை மாறி, அரசு கட்டமைப்பின் தோல்வியையும் அது எதிர்நிலை சக்தியாக மாறி தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்திய குற்றவாளியாக இருப்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். அரசே தங்களது எதிரியாக இருப்பதை மக்கள் உணர்ந்து போராட்டங்களை அந்த திசையில் செலுத்தினால் தான் திருப்பூரின் தண்ணீர் பஞ்சத்திற்கு ஒரு முடிவு ஏற்படும்.
கடந்த மே, 9 2017 அன்று காலை முதல் மணப்பாறை பகுதி வீரப்பூர் பெண்கள் சுமார் 100-பேர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, அங்கேயே தங்கி போராட்டம் நடத்தி வந்தனர். மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய இப்போராட்ட செய்தி அறிந்து அப்பகுதி மக்கள் அதிகாரம் தோழர்கள் அங்கு சென்று கலந்து கொண்டனர்.
அதன் பின் மக்களிடம் டாஸ்மாக் போராட்ட அனுபவங்கள் பற்றியும், மக்களின் விடாப்பிடியான போராட்டங்களே டாஸ்மாக் கடைகளை மூடும் என்று விளக்கியதை மக்கள் சொந்த அனுபவத்திலேயே புரிந்து கொண்டிருக்கின்றனர். ஆதலால் டாஸ்மாக்கை மூடும் அதிகாரம் நம்மிடம்தான் உள்ளது என மக்கள் புரிந்து கொண்டனர். அவர்களின் முழக்கமும் அப்படியாக மாறிவிட்டது.
இதையறிந்த போலீசு அப்பகுதி குடிகாரர்களின் துணையுடன் மக்களைக் கலைக்க முயற்சி செய்து வந்தது. அவற்றைத் தாண்டி பெண்கள் விடாப்பிடியாக தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதன் விளைவாக ஊர்சபை கூடி டாஸ்மாக்கை அகற்ற தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
மாட்டுக்கறிக்குத் தடை! மோடி அரசின் பார்ப்பனத் திமிருக்கெதிராக தமிழகத்தையே மெரினாவாக்குவோம்!
கண்டனக் கூட்டம்
இடம் : நேருபார்க் (சங்கம் தியேட்டர் அருகில்) நாள் : மே 31, 2017. நேரம் : காலை 9 மணி,
பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவ
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல்
கையிலெடுத்திருக்கும் பண்பாட்டு ஆயுதம்தான்
மாட்டை விற்க தடை!
‘மிருகவதை’ தடுப்பு என்ற பெயரில்
மனிதவதை செய்கிறது பார்ப்பன பாசிச மோடி அரசு!
சைவ உணவு பழக்கமே மேலானது,
இதுதான் இந்து பண்பாடு என்று நிலைநாட்ட
அசைவ உணவுப் பழக்கத்தை அசிங்கம் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.
மாட்டின் மூத்திரத்தை குடிக்கும் ஆர்.எஸ்.எஸ் –பி.ஜே.பி கும்பல்
மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கிறது.
மாட்டை கோ மாதா, தாய் என்று பாசம் பொங்க பிதற்றும்
பார்ப்பன பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி வெறியர்களின் வீடுகளை
செத்த மாடுகளால் அலங்கரிப்போம்!
மாட்டுக்கறி பிரியாணி, பீப்ரைஸ், சில்லி பீஃப்,
ஜிஞ்சர் பீஃப், பீஃப் மசாலா, பீஃப் பக்கோடா உண்ணும் பிரியர்கள்
அனைவரும் இங்கே கொண்டு வாருங்கள் உண்போம்!
பார்ப்பனியத்திற்கு எதிரான பண்பாட்டுப் போராட்டத்தில் அணி வகுப்போம்!
மாட்டுக்கறி……… நம் உணவு….. நம் உரிமை….!
மோடி அரசின் பார்ப்பனத் திமிருக்கெதிராக தமிழகத்தையே மெரினாவாக்குவோம்!
தகவல் : மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, சென்னை. தொடர்புக்கு – 95518 69588, 94451 12675.
உழவன் வேதனை கவர்மெண்டுக்குத் தெரியுமா? கலகம் செய்யாமல் விவசாயிகளுக்கு கௌரவம் கிடைக்குமா? ஊர் உலகை திரட்டுவோம்! ஏர்கலகம் செய்வோம்! – என்ற முழக்கத்தின் கீழ் மதுரை மாவட்டம், திருப்பறங்குன்றம் தாலுகா, செக்கானூரணியில் முருகவிலாஸ் மகாலில் கடந்த 14.05.2017 அன்று மாலை 5:00 மணியளவில். விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
வி.வி.மு தோழர் ஆசை தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தேனி மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பாளர் தோழர் மோகன், 58 கால்வாய் கிராம விவசாய சங்க செயலர் பச்சைத்துண்டு பெருமாள், கூட்டுறவு வீட்டு வசதி பணியாளர் சங்கம் எம்.பி.லட்சுமணன், விவிமு உசிலை வட்ட செயலாளர் தோழர் போஸ், விவிமு திருமங்கலம் அமைப்பாளர் தோழர் வீரணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.
இந்த கருத்தரங்கத்திற்கு செக்கானூரணியைச் சுற்றியுள்ள 20 கிராமங்களில் விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் விவசாய நேசர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் திரண்டு வந்திருந்தனர்.
தோழர் ஆசை தனது தலைமை உரையில் விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை இந்த அரசு உதாசீனப்படுத்தும் நிலையில் விவசாயிகள் தம்மை இழிவு படுத்திக் கொண்டும், வருத்திக்கொண்டும் போராடும் முறையை மாற்றிக் கொண்டு மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோர்களை இணைத்துக் கொண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று அரசின் தோளில் துண்டைப் போட்டு இழக்கும் போராட்டமாக முன்னெடுக்க வேண்டும் என்று பேசினார்.
எம்.பி.லட்சுமணன் தனது சிறப்புரையில் விவசாயிகளின் அனைத்து தேசிய வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மல்லையாவுக்கும் அம்பானிக்கும் வழங்கும் தள்ளுபடியை,விவசாயிகளுக்கு ஏன் செய்யச்கூடாது என்று மத்திய, மாநில அரசை சாடினார். மேலும் விவசாய சங்கங்களை அனைத்து கிராமங்களிலும் கட்டுவதன் வாயிலாகத்தான் விவசயிகள் பிரச்சனையை தீர்க்க முடியும் என்று கூறினார்.
அய்யா பச்சைத்துண்டு பெருமாள் தனது சிறப்புரையில் உசிலம்பட்டியைச் சேர்ந்த 58 கிராம மக்கள் பயன்படுத்தும் தொட்டி பாலத்தை நிறைவேற்ற 28 ஆண்டுகளாக போராடி வருகிறோம். அரசு அது இல்லை இது இல்லை என்று காரணம் சொல்லி இழுத்து கொண்டே இருக்கிறது, கேட்பதற்கு நாதியில்லா நிலையில் விவசாயிகளின் மீது உண்மையான அக்கறையுடன் இது போன்ற கருத்தரங்கு நடவடிக்கைளை விவசாசாயிகள் விடுதலை முன்னணி செயல்படுத்தும் போது நம்பிக்கை வந்துள்ளது என்று மகிழ்ச்சியுடன் பேசினார்.
தோழர் மோகன் தனது சிறப்புரையில் பன்னாட்டு நிறுவனங்களின் லாப வெறிக்காகவிவசாயம் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. குறிப்பாக இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு மிச்சமான ஆயுத மூலப்பொருட்களைக் கொண்டு வந்து உரமாக நம்ம மண்னில் இறக்கி எம்.எஸ்.சுவாமிநாதன் போன்றவர்கள் மூலமாக விவசாயம் அழிக்கப்பட்டது. நம்முடைய பாரம்பரிய நெல் ரகம் உயரமாக இருந்தது. அந்தப் பயிர் அடியில் மண்ணுக்கும், மேல்பகுதி மாட்டுக்கும், நுனிப் பகுதி மனிதர்களுக்கும் என்ற விவசாயமுறை அழிந்து, மாட்டுக்கு தீவனமும் குறைந்து போனது. இதுதான் மாடு வளர்க்க முடியாமல் போனதற்கு காரணம். ஒட்டுமொத்தமாக விவசாயிகளின் விவசாயத்தின் அழிவுக்கு காரணமான பன்னாட்டு கம்பெனிகளை எதிர்த்து விவசாயிகள் பேராடவேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
கருத்தரங்ககு முடிந்து விவசாயிகள் கலைந்து செல்லும் போது இந்த கருத்தரங்கை பொதுக்கூட்டமாக நடத்தியிருந்தால் இன்னும் நிறைய விவசாயிகள் வந்திருப்பார்கள். இந்த விசயங்களையெல்லாம் அறிந்திருப்பார்கள் என்று கூறினார்கள். விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க விவசாய சங்கம் அனி அணியாக கிராமங்கள் முழுவதும் கட்ட வேண்டும் என ஆர்வமாகக் சென்றார் ஒரு விவசாயி.
மேலும் கூட்டத்திற்கு வராத விவசாயிகளை நேரில் சென்று சந்தித்தோம். என்ன தீர்மானம் போட்டீர்கள் என்று ஆர்வமாக விசாரித்தனர். விவசாயிகளின் குரலை அலட்சியப்படுத்தி நிர்வாணமாக்கும் அரசுக்கு எப்படி தெரியும் நமது உள்ளக் குமுறல். அதை கேளாத அந்த செவிகளை கேட்க வைக்கப் போராடுவோம் என இப்பகுதி விவசாயிகளிடம் ஒரு புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது, விவசாயிகள் விடுதலை முன்னணி.
ஓசூர் சூளகிரி அருகே சப்படி மற்றும் காமன் தொட்டி பகுதிகளில் செயல்பட்டு வந்த இரண்டு டாஸ்மாக் கடைகளை மக்கள் அதிகாரத்தோடு இணைந்து கிராம மக்கள் பெண்கள் உள்ளிட்ட பலரும் திரளாக திரண்டு மூட வைத்தனர்.
இதுவரை ஒட்டுக் கட்சிகளுக்கு கூட்டம் காட்ட பயன்படுத்தி வந்த ஏழைப் பெண்கள் தங்கள் குடியைக் கெடுக்கும் டாஸ்மாக்கிற்கு மூடு விழா நடத்தியுள்ளனர். சப்படியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை மூடுவதற்கு வட்டாட்சியரிடம் மனு கொடுக்க வேண்டும். மேலும் கலெக்டருக்கும் மனு கொடுக்க வேண்டும் என மக்கள் அதிகாரம் தோழர்களை நாடினர் சப்படி கிராம மக்கள். வட்டாட்சியரிடம் சென்று மனு கொடுத்தால் எனக்கு அதிகாரம் இல்லை என்பார். கலெக்டரிடம் சென்றால் மனுவை பரிசீலிக்கிறேன் என்பார். காரணம் டாஸ்மாக் டெவலப்மெண்ட் ஆபீசரு கலெக்டர் தான், தாசில்தார் – வி.ஏ.ஒ அவருக்கு கீழே வேலை செய்பவர்கள். இதனால், மனு கொடுத்து பயனில்லை என விளக்கினார்கள் தோழர்கள்.
மக்கள் அதிகாரம் சொன்ன விளக்கத்தை நடைமுறையில் புரியவைத்த தாசில்தார்.
“இவ்வளவு தூரம் வந்து விட்டோம், தாசில்தாரிடம் மனு கொடுத்து விடலாம்” என்று தாசில்தாரிடம் மக்கள் சென்றனர். மக்கள் அதிகாரம் தோழர்கள் சொன்னதை அப்படியே வார்த்தை மாறாமல், ”எனக்கு அதிகாரம் இல்லை எல்லாம் கலெக்டர் தான்” என்று தாசில்தார் சொல்லி மக்களுக்கு இந்த அரசுக்கட்டமைப்பின் யோக்கியதையைப் புரிய வைத்தார்.
இதன் பின்னர் கிராமத்தில் கூட்டம் போட்டனர். 24 வயது கொண்ட இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான கட்டிடத் தொழிலாளி குடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே வேளையில், தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் பெண்களின் போராட்டங்களையும் எடுத்து விளக்கப்பட்டது. இதன் பின்னர் மக்கள் வீரத்துடன் களமிறங்கினர்.
200 -க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் 22.05.2017 திங்கள்கிழமை அன்று டாஸ்மாக் கடை உடைப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து அதன்படி அன்று காலை 10:00 மணிக்கே திரண்டனர். 12:00 மணிக்கு வழக்கமாக கடையை திறக்க வரும் டாஸ்மாக் ஊழியர்கள் யாரும் மக்கள் சக்தியைக் கண்டு கடையை திறக்க முன் வரவில்லை. மாறாக, வட்டாட்சியர் பெருமாள் உள்ளிட்ட போலீசு அதிகாரிகள் ஓடோடி வந்து கூடியிருந்த மக்களிடம் நைச்சியமாகப் பேசி போராட்டத்தை கைவிடச்சொல்லி கேட்டுக் கொண்டிருந்தனர்.
மக்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகளை காது கொடுத்து கேட்கத் தயாரில்லை. அதிகாரிகளையும், போலீசையும் திட்டிக் கொண்டே கடையின் பூட்டை இரும்பு ராடு மற்றும் பெரிய அளவிலான கருங்கற்களை கொண்டு அடித்து உடைத்தனர். பதறிப்போன டாஸ்மாக் ஊழியர்கள் ஓடிவந்து மக்களிடம் மன்றாடினர். உடனே கடையை காலிசெய்து விடுகிறோம் என்று வாக்களித்து அதன்படியே கடையில் இருந்த மதுபானங்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
இப்பகுதியில் டாஸ்மாக் கடை செயல்படாது என அதிகாரிகள் உறுதியளித்தபிறகே, மக்கள் தங்களின் போராட்டத்தை முடித்துக்கொண்டனர். தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
உணவுப் பொட்டலங்கலை வரவழைத்து அங்கேயா உணவருந்தும் மக்கள்
கொளுத்தும் வெயில் என்றும் பாராமல் போராடிய மக்களுக்கு உணவுப் பொட்டலம் வரவழைக்கப்பட்டு அங்கே தங்களின் மதிய உணவை முடித்துக் கொண்டனர். மீண்டும் அனைவரும் கூடி தங்களுக்குள்ளே பேசிக் கொண்டு 3 கி.மீ. தொலைவில் உள்ள காமன்தொட்டியில் உள்ள டாஸ்மாக் கடையையும் இவ்வாறே அகற்றவேண்டும் என முடிவெடுத்துக் கொண்டு புறப்பட்டனர். அங்கிருத்து சுமார் 3 கி.மீ தூரம் ஊர்வலமாக சென்று கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக போலீசு அதிகாரிகள் டாஸ்மாக் கடைக்கு பாதுகாப்பு வளையம் போட்டு பாதுகாத்தனர். இதனை சற்றும் பொருட்படுத்தாமல் தடையை உடைத்துக்கொண்டு போலீசின் பயமுறுத்தல்கள் அனைத்தையும் அலட்சியப்படுத்திக்கொண்டே கடையின் பூட்டு மற்றும் கேட்டை உடைத்துக் கொண்டு முன்னேறினர். செய்வதறியாது திகைத்த ஊழியர்கள் மக்களின் போர்க்குணத்திற்கு அடிபணிந்து கடையில் இருந்த ரூ22 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களை வாகனத்தில் ஏற்றி அனுப்பிவிட்டு கடையை நிரந்திரமாக பூட்டினர்.
மக்கள் போராட்டத்தால் போலீசார் பாதுகாப்புடன் கடையை காலி செய்து ஓடும் டாஸ்மாக் நிவாகம்.
அடுத்ததாக, ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் செல்லும் சாலையில் ஒரு மதுக்கடை இயங்கி வந்த நிலையில் தற்போது இரண்டாவது கடையை அதே பகுதியில் திறந்துள்ளதை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்காவிடில் இதேபோன்று போராட்டம் நடத்தி அகற்றப்படும் என திரண்டிருந்த மக்கள் ஆவேசமாக பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல், மேலும், மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்பவர்களின் வீடுகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
புக்கசாதம் – உத்தனப்பள்ளி — சூளகிரி சாலை, சின்னாறு தேசிய நெடுஞ்சாலை, சூளகிரி கீழ் தெரு ஆகிய பகுதிகளிலிருந்து அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைகளை புதிய இடங்களில் அமைப்பதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தருமபுரி பாலக்கோடு அருகே அண்ணாமலைஅள்ளி டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய அப்பகுதி பெண்களின் போராட்ட அனுபவம் !
இப்பகுதியில் கடந்த ஓருமாதகாலமாக டாஸ்மாக் இருக்கிறது என்கிறீர்கள் இதனால் என்ன மாதிரியான பாதிப்புகளை அனுபவித்துவந்தீர்கள்?
பஸ்டாப்பை ஒட்டியே டாஸ்மாக் கடை, இங்கு எந்த நேரமும் கூட்டம் கூட்டமாக குடிச்சிட்டுதான் இருப்பாங்க. கெட்ட கெட்ட வார்த்தையால பேசுவானுங்க. பொம்பளங்க யாராவது வந்தா வெறிச்சி பாத்துக்கிட்டே இருப்பானுங்க.அதுமட்டுமா? 10,15, வயசு பசங்க குடிக்குறாங்க,10 வயசு பொண்ணுங்க கூட பள்ளிக்கூடத்துக்கு போகமுடியல.
பாலக்கோடு பகுதி மக்கள் போராட்டம் ( கோப்புப் படம் )
நாங்க சங்கத்துல இருக்கிறோம்,வாரம்வாரம் பணத்தை பேங்கல போடனும் அந்த வழியா வந்தா பயமா? இருக்கும். பள்ளிக்கூடத்துக்கு போற பொண்ணுங்களுக்கு பலாத்தாரம் ஏதாவது நடந்திருமோ? என்கிற பயம் அதிகமா இருந்துச்சு. எங்கள்ல பலபேரு வீட்டுக்காரங்க குடிக்கிறதில்ல, ஆனா பொதுவா இவ்வளவு பிரச்சினைகள் இருக்கிறதால இந்த கடை இருக்க கூடாதுங்கிற கோபமும் ஆத்திரமும் எங்களுக்குள்ள இருந்துச்சு.
இந்த கடையை மூடுவதற்கு என்ன மாதிரியான முயற்சியை மேற்கொண்டிங்க?
2 முறை 200 பெண்கள் சேர்ந்து கலெக்கடர் அலுவலகத்தில் மனுக்கொடுத்தோம். அப்போது 15 நாள் அவகாசம் கொடுத்து அதுக்குள்ள எடுத்துடுறோம் என்று சொன்னாங்க. 15 நாளுக்கு அப்புறம் கடையை எடுக்காம, சாராய லோடை கொண்டுவந்து இறக்கினாங்க. அப்பதான் எங்களுக்கு புரிஞ்சிச்சு எங்கள ஏமாத்துறாங்கனு; அதுக்கப்புறம் என்ன செய்யறதுனு புரியாம இருந்தோம் .
பாலக்கோடு பகுதி மக்கள் போராட்டம் ( கோப்புப் படம் )
அப்பதான் மக்கள் அதிகாரத்துக்கார அண்ணனுங்க இரண்டுபேர் வந்து எங்ககிட்ட பேசினாங்க, நீங்களும் இரண்டு முறை மனுக் கொடுத்துட்டீங்க கலெக்டர் கண்டுக்கவே இல்லை சாராயத்தை விற்க சொல்லறதே கலக்டருதான். அவருக்கிட்ட மனுக் கொடுத்தா சாராய கடையை மூடமுடியாது. அதனால உடைப்பதுதான் தீர்வுனு சொன்னாங்க, அதுக்கப்புறம்தான் எங்களுக்கு ஒரு நம்பிக்கை வந்துச்சு,நாங்களும் உறுதியா யாருக்கும் பயப்படாம எறங்கி உடைச்சோம்.
இந்தமாதிரி சாராயக் கடையை உடைச்சா இது அரசாங்கத்தோட பொதுசொத்து அதனை சேதபடுத்திட்டாங்க என்று குற்றம் சுமத்துகிறார்களே?
அராசாங்க பொது சொத்துனு சொன்னா? மளிகைகடைய வச்சி கம்மி விலையில அரிசி, பருப்ப கொடுத்தா மக்களுக்கு உபயோகமா இருக்கும். அதவுட்டுட்டு டாஸ்மாக்கை வைச்சதால படிக்கிற பசங்க குடிக்கிதுங்க. போற வழியில பொண்ணுங்களுக்கு ஏதாவது ஆயிடுமோனு பயந்து சாகறதா இருக்குது. பல பெண்களின் பூவையும்,பொட்டையும் இழந்து நிற்கிறோம்.
இரண்டு நாளுக்கு முன்னாடிதான் இந்த சாராயத்தை குடிச்சிட்டு இங்க ஒருத்தன் செத்துபோனான். அவனோட குடும்பம், குழந்தைங்க நடுத்தெருவுல நிக்குது. பல பெண்களோட வாழ்க்கை இப்படிதான் இருக்குது. இதுவா பொதுசொத்து ?
பாலக்கோடு பகுதி மக்கள் போராட்டம் ( கோப்புப் படம் )
இப்போராட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டு பெண்களுக்கு என்ன சொல்ல வருகிறீர்கள் ?
அவங்க அவங்க ஊர்ல வரக்கூடிய டாஸ்மாக்கை விரட்ட மனுக்கொடுக்கிறத விட்டுட்டு, அடிச்சி விரட்டுங்க. ஊருக்கள் விடக்கூடாது. அப்போதுதான் எங்கள மாதிரி நிம்மதியா நடமாட முடியும்,வாழ முடியும்.
-பு.ஜ செய்தியாளர்.
வங்கியில் சேமிக்கப்பட்ட பணத்தை பறிக்கொடுத்து ஏமாந்த தருமபுரி அரசு ஊழியர்கள் !
ஆதார் இந்திய குடிமகனின் அடையாளம், பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு என்றெல்லாம் நியாயப்படுத்தி அதனை கட்டாயமாக்கியது மோடி கும்பல். இதன் விளைவாக இந்திய குடிமகனின் தனிமனித சுதந்திரம் பறிக்கப்பட்ட கையோடு, அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் ரேசன் மானியம் , சிலிண்டர் மானியத்தை வெட்டி வருகிறார்கள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல சிறுக சிறுக வங்கில் சேமித்து வைத்திருக்கும் பணத்திற்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
படிப்பறிவில்லாத பல கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில் பணப்பரிவர்த்தணை, டிஜிட்டல் முறையை கொண்டு வந்து ஒட்டுமொத்த மக்களையும் கழுத்தை பிடித்து நெட்டி தள்ளி வரும் வேளையில் படித்த அறிவுஜீவிகளே பணத்தை பறிக்கொடுக்கும் சம்பவம் நாடு முழுவதும் அரங்கேறிவருகிறது.அதுதான் தருமபுரியில் சென்ற மாதம் நடந்தது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அரசு மருத்துவ மனையில் உதவியாளராக பணிபுரிந்து ஒய்வு பெற்றவர் ஜெயமணி . அவர் கூறுகையில், என்னுடைய செல்லுக்கு போன் வந்தது, அப்போது உங்க பெயர் ஜெயமணிதானே என்று கேட்டனர். அதற்கு நானும் ஆமாம் என்றேன். பிறகு நான் எஸ்.பி.ஐ -யில் இருந்து பேசுகிறேன். உங்களுடைய வங்கி கணக்கு காலாவதியாகிவிட்டது. அதனை ஆதார் எண்ணுடன் இணைத்து புதுப்பிக்க வேண்டும் அதனால் உங்களுடைய ஏடிஎம் நெம்பரும்,ஆதார் நெம்பரும் சொல்லுங்கள் என்றதும் நானும் சொல்லிவிட்டேன்.
பிறகு 5 நிமிடத்தில் என்னுடைய வங்கிகணக்கில் இருந்து ரூ.1,000 எடுத்ததாக என்னுடைய செல்லுக்கு தகவல் வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். பிறகு அருகில் இருக்கும் எஸ்.பி.ஐ கிளையில் விசாரிக்கும் போது அந்த தொகை மும்பையில் எடுத்தாக வங்கி மேளாலர் கூறினார். பிறகு அந்த மேளாலரை கேட்கும் போது நீங்கதான் எச்சரிக்கையாக இருக்கனும்னு செல்லி, இந்த அக்கவுண்டை மூடிவிட்டு புதியதாக அக்கவுண்டை வைத்து இனிமேல் எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறி அனுப்பினாங்க, புதியதாக வங்கிகணக்கை தொடங்கிய அவர் பணத்துக்கே பாதுகாப்பு இல்லை அதனால இனிமேல் 500 ரூபாய்க்கு மேல நான் பணத்த வைச்சிக்கே மாட்டேன் என்று கூறி என்ன நாடோ? என்ன கவர்மண்டோ? என்று பதறினார்.
சீரியம்பட்டியை சார்ந்த அண்ணாமலை என்பவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக வேலைபார்த்து வருபவர். அவர் கூறுகையில், என்னுடைய மகள் திருமணம் கடந்த 9 ஆம் தேதி நடக்க இருந்தது. இந்நிலையில் தான் ஒருத்தன் என்னை தொடர்பு கொண்டான். உங்கள் பேர் அண்ணாமலையா? என்று கேட்ட உடனே நானும் ஆமாம் என்றேன். உங்கள் கணக்கு குளறுபடியாக இருக்கிறது. அதை சரிபார்க்க வேண்டும் அதனால் உங்களுடைய ஏடிஎம் நெம்பர் மற்றும் ஆதார் நெம்பரை கூறுங்கள் என்று கேட்டான். உடனே நானும் சொல்லிவிட்டேன். அடுத்த நிமிடமே என்னுடைய வங்கி கணக்கில் ரூ. 3,000 எடுத்தாக என்னுடைய செல்லுக்கு தகவல் வந்ததை பார்த்து என்ன செய்றதுன்னு தெரியாம திகைச்சி போய்ட்டேன். என்று அழாத குறையாக வெளிபடுத்தினார். இப்படி பரவலாக பலரும் ஏமாற்றமடைவதை பார்க்க முடிகிறது.
இந்த திருட்டு ஒரு மோசடி என்பதில் சந்தேகமில்லை. இதனாலேயே பல வங்கிகள் தொலைபேசியில் ஏடிஎம் பின் எண்ணை சொல்லாதீர்கள் என்றெல்லாம் விளம்பரம் கொடுக்கிறார்கள். பிரச்சினை அதுவல்ல. மும்பையில் இருந்து தருமபுரி மக்களிடமிருந்து பணத்தை எடுத்த திருட்டு கும்பல் தனது அடையாளம் அல்லது ஆதார் எண்ணை மறைத்து விட்டு எப்படி எடுக்க முடிகிறது? ஆதார் எண்ணை வங்கிக் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று மிரட்டும் அரசு இத்தகைய திருட்டுக் கும்பலை பிடிக்க முடியாமல் இருக்கிறதே ஏன்?
எதற்கெடுத்தாலும் ஆதாரைக் கொடு என்று கேட்கிறார்கள். அதன் விளைவாகத்தான் இத்தகைய திருட்டுக் கும்பல்கள் நாடு முழுவதும் அப்பாவி மக்களின் சேமிப்பை கொள்ளையடிக்கின்றன.
அரசாங்கமே டாஸ்மாக்கை தெருத்தெருவுக்கு திறந்துவிட்டு குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு என்று கூறி குடிப்பவர்கள் திருந்த வேண்டும் என்று அறிவுரை கூறுவது போல, ஆதாரை பலநாடுகளில் சாத்தியமில்லை என்று அறிந்தும் ஆதார் மூலம் ஊழலை ஒழிக்க போகிறேன் என்று சவடால் அடித்த மோடியால் இதுபோன்ற மோசடியை தடுக்க முடியுமா? பறி கொடுத்த பணத்தைதான் மீட்டுக்கொடுப்பாரா? மாறாக ஏமாறக்கூடிய மக்களை பார்த்து ; மக்கள் ஏமாறாமல் இருக்க மக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். என்று அரசு அறிவுரை கூறுவதை வேடிக்கை பார்த்து ஏமாறுவதை கைவிட்டுவிட்டு வெகுண்டெழுந்து போராடுவது, அரசை கேள்விக்குள்ளாக்குவது என்று செய்தால்தான் நம்முடைய பணத்திற்கு, நம்முடைய சேமிப்பிற்கும் பாதுகாப்பு இருக்கும். அதற்கு அணைவரும் ஒண்றினைவதுதான் தீர்வு.