Sunday, August 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 559

Get 100% Ready to Boycott

1

[To view the notice in larger size, click on the images]

Hello Friends,

It’s election time again. As IT professionals, we need answers to some important questions  :

boycott-election-ndlf-it-poster-41. A year back, TCS laid off 25,000 of its senior employees. It was followed by secret and illegal layoffs by several IT/ITES companies including Syntel, Vestas etc. Will voting in the election stop future layoffs? Will it guarantee job security for us? Can any of the political parties promise this to us?

2. Like Freedom of speech and expression, freedom of association is also a fundamental right guaranteed by Part III of our constitution. This right was won by the Indian working class  during British colonial rule. Are we in a position to exercise this right now? Can the election commission, which campaigns for 100% voting, ensure us 100% right to form Unions?  Even in US, employees of large corporates like IBM, Verizon have their own trade unions. But, in our country, IT Employees are denied the right to form unions. Is it democracy?

3. Remember the horrors of Chennai floods? Illegal encroachment of lakes, ponds and river beds by corporates and real estate mafia was the sole cause of that devastation. The encroachments were made with the connivance of politicians, government officials and the judiciary.

The government led by Jayalalithaa let out a huge amount of flood water, several times the carrying capacity of Adyar river, from Chembarambakkam lake in a single day. The state administration abjectly failed to provide rescue and relief to the affected people. Six months have passed, but encroachments of water bodies such as MIOT hospital, are not removed.

boycott-election-ndlf-it-poster-1Is the Govt really capable of saving us from a natural disaster? Is our vote capable of changing this situation?

4. Vaikuntharajan, the chieftain of the mineral sand mafia operating from Tuticorin district, has plundered mineral sand worth several lakh crores of rupees over the past 20 years. However, the courts have dismissed all the cases filed against him and have helpded him continue the plunder. Likewise P.R. Palanichami looted granite stones from Madurai district laying waste many hillocks, ponds and farm lands in villages. Mr.Sagayam an upright IAS officer was appointed by the high court to probe this scam. During his investigations, Sagayam slept in a grave-yard to prevent the police from destroying crucial evidence related to the case. After considerable effort, he submitted a lengthy report to the High Court.

But, a magistrate discharged P.R.P from several cases and went to the extent of ordering to initiate criminal proceedings against the district collector and the public prosecutor who dared to implicate P.R.P in criminal cases. Now P.R.Palanisamy is roaming free while Mr.Sagayam’s investigation report is gathering dust in the High Court. Almost all the political parties are in the payroll of P.R.P, Vaikuntharajan and the like. Are we going to vote for these parties who are agents to the plunderers of our country?

boycott-election-ndlf-it-poster-25. In the disproportionate assets case, Jayalalithaa was convicted by the special court after a prolonged legal battle. But, Justice Kumarasamy of the Karnataka High Court cooked up the case to set Jayalalithaa and her corrupt associates free. Justice Dattu of the Supreme court ensured their bail. Likewise, Vijay Mallya who swindled thousands of crores of rupees from public sector banks was helped by the politicians and bureaucrats to flee the country. In many such cases the judiciary is hand in gloves with the executive. Will voting in the elections help to punish these criminals and the judges who protect these criminals?

6. Election commission campaigns for ensuring 100% Voting.

Will 100% voting ensure 100% corruption free State? Can election commission guarantee this?
Will 100% voting ensure 100% job security for us? Can election commission guarantee this too?

Election commission boasts of conducting fair elections. But it lets corrupt politicians roam freely but curtails the rights of law abiding citizens. Election commission is an unelected body displaying dictatorial traits in the name of ensuring democracy to people.

7. Election Commission advises us to vote for honest candidates. Do you know any honest candidate contesting the elections? Will they be able to change anything in this system?
This system has lost even the semblance of democracy and is filled with criminals, crooks and rowdies. Whom should we elect?

boycott-election-ndlf-it-poster-38. These parties vying with each other to come to power, are they democratic? Most of the major parties are run like family run businesses
A.I.A.D.M.K – Jayalalithaa, Sasikala – Mannargudi mafia
D.M.K – Karunanidhi, Stalin, Kanimozhi, Maran family
D.M.D.K – Vijayakanth, Premalatha, Sutheesh family
P.M.K – Ramadoss, Anbumani, Sowmya family
How can they provide democratic governance to people?

9. A crore of money is a great deal of money for any average voter. But every major candidate spends several crores of rupees for the election. They treat this as an investment to be looted back during the next five years of power.
All parties are filled with corrupt business men, real estate mafia and rowdies. You only have to choose one from among the devils. You only queue up to grant licence to your looter. Election commission says that voting is our democratic duty. Are we going to choose?

10. People say that, if we don’t vote someone else will cast our vote. Should we jump to death for that ‘reason’?
What is the alternative, you may ask! We can build an alternative! Let’s discuss.

Please call 90031 98576
NDLF I.T. Employees Wing

யூரின் போற எடத்துல எட்டி எட்டி உதைக்கிறான் !

2

மதுரவாயல் மே 5, 2016 டாஸ்மாக் முற்றுகை
போர்க்களத்தில்………பாகம் 4

சட்டக் கல்லூரி மாணவியான கனிமொழி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக நடந்த பச்சையப்பன் கல்லூரி டாஸ்மாக் மூடும் போராட்டத்தில் கலந்து கொண்டவர். போலீசின் தாக்குதலுக்கு ஆளானதோடு ஒரு மாதத்திற்கும் மேலாக சிறை சென்றவர். இந்த மே 5 போராட்டத்திலும் கலந்து கொண்டு கடும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்.

கீதா மூன்று குழந்தைகளுக்கு தாய். பகுதியில் டாஸ்மாக் கடையால் பல்வேறு குடும்பங்களில் நடக்கும் துன்பங்களை அறிந்தவர். அதைப் பற்றி பேசும் போது கோபமடைகிறார். அவரது கணவர், மூன்று குழந்தைகள் என முழுக்குடும்பமுமே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு போலிசால் தாக்கப்பட்டிருக்கின்றார்கள். பாதுகாப்பாக வாழ்வதற்கு விதவிதமான ஆயுள் காப்பீடுகள் துவங்கி வீட்டிற்கான பாதுகாப்பு கருவிகள் உட்பட ஏகப்பட்ட முன்னெச்செரிக்கையுடன் வாழ்வோருக்கு ஒரு குடும்பமே இப்படி ஒரு மக்கள் கோரிக்கைக்கு பணயம் வைத்திருப்பது அசட்டுத்தனமாக தோன்றலாம்.

உழைக்கும் மக்களைப் பொறுத்தவரை போராட்டமும், இழப்பும், போர்க்குணமும் அவர்களோடு ஒட்டிப் பிறந்தவை. பிறர் நலத்திற்காக இப்படி முன் வந்து அவர்கள் போராடுவதால்தான் இந்த உலகில் மனித குலம் சேர்ந்து வாழ்வதற்கான பல்வேறு சாதகமான நிலைகள் உருவாகியிருக்கின்றன.

ஒரு இளம் பெண் என்ற முறையில் இப்படி தொடர்ந்து போராட்டங்களில் கலந்து கொண்டு அடி வாங்குவதும், சிறை செல்வதும் பயமாக இல்லையா, எதிர்கால வாழ்க்கை குறித்து அச்சமில்லையா என்று கேட்ட போது கனிமொழி அழுத்தமாக பயமில்லை என்றார். போராட்டக் களத்தில் அவரை நான்கு போலிசார் ஆளுக்கொரு கை, கால்களை தூக்கிச் செல்வதும் தர தரவென இழுத்துச் செல்வதுமான காட்சிகளைப் பார்க்கும் எவரும் அதிர்ச்சியடைவர்.

அழகு நிலையங்களிலும், அன்பான கணவருக்கான கனவுகளிலும் நாட்களை கடத்தும் வயதில் அடுத்த போராட்டம் என்ன என்று இவரைப் போன்ற பல இளம்பெண்கள் மக்கள் அதிகாரத்தின் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். ஆணாதிக்கத்தை எதிர்த்து கருத்திலும், கவிதையிலும், கட்டுரையிலும் வாழ்வதைக் காட்டிலும் இத்தகைய போராட்டக் களத்தில் வாழ்வது கடினமானது.

மக்கள் அதிகாரத்தின் போர்க்குணமிக்க போராட்டங்களில் இத்தகைய இளைஞர்கள் அதிகம் ஈடுபவடுவதால் போலிசார் பல திட்டங்களையும், பயிற்சிகளையும் தயார் செய்து அமல்படுத்துகின்றனர். உடலை பிடிப்பதிலும், இழுப்பதிலும் கடுமையான வலியோடு உட்காயத்தை ஏற்படுத்துவது, ஆடைகளைக் கிழித்து மான உணர்ச்சியை கிளப்பி பணிய வைப்பது, பெண்களாக இருந்தால் அவர்களது அங்கங்களை பிடித்து அதிர்ச்சி ஏற்படுத்தி முடக்க நினைப்பது, தகாத வார்த்தைகளோடு திரும்பத் திரும்பத் திட்டுவது என்று ஒரு வேட்டை நாய் போல பயிற்சி பெற்று கடிக்கின்றனர்.

ஆனால் மணிப்பூரில் இந்திய இராணுவத்தின் பாலியல் அடக்குமுறையை எதிர்த்து “இந்திய இராணுவமே எங்களை வன்புணர்வு செய்” என்று ஆடைகளைக் களைந்து போராடிய பெண்களின் போராட்டத்தை நினைவுகூறும் கனிமொழி இந்த பாலியல் வக்கிரங்களுக்கு அஞ்சமாட்டோம், அடிபணியமாட்டோம் என்று கூறுகிறார்.

“மூடு டாஸ்மாக்” போராட்ட இயக்கம் கட்சிகள், சமூகம் எனும் அரசியல் களத்தில் மட்டுமல்ல பண்பாட்டு ரீதியான பல்வேறு களங்களுக்கும் புதிய விசயங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

“இது மக்கள் அதிகாரம், நீங்க எப்ப வந்து சேரப்போறீங்க” என்று கேட்கிறார் கனிமொழி. அந்த அழைப்பை யாரும் மறுக்க முடியாது என்றே தோன்றுகிறது.

-நேர்காணல்: வினவு செய்தியாளர்கள்.

ஒரு அரசு பள்ளி மாணவரின் போராட்டம் – வீடியோ

1

மதுரவாயல் மே 5, 2016 டாஸ்மாக் முற்றுகை
போர்க்களத்தில்………பாகம் 3shutdown-tasmac-maduravoyal-poster-1

துரவாயில் அரசு பள்ளியில் +2 படிக்கும் மாணவர் மாரிமுத்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியில் சேர்ந்து மாணவர் பிரச்சினைகளுக்காக போராடும் அவர் ஏற்கனவே பச்சையப்பா மாணவர்களின் டாஸ்மாக் மூடும் போராட்டத்தில் சிறை சென்றவர். பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பில் இணைத்து மதுக்கடைகளை மூடுவதற்கு போராடுகிறார். மே 5 மதுரவாயல் நொளம்பூர் டாஸ்மாக் கடையை மூடும் போராட்டத்தில் இவரும் காவல் துறையால் கடுமையாக அடிக்கப்பட்டிருந்தார்.

இன்றும் அவரால் இயல்பாக நடக்க முடியவில்லை. இந்த நேர்காணல் எடுக்கப்பட்ட அடுத்த நாள் இரவில் அவர் மீண்டும் போலிசால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். குற்றம் என்ன? மே 5 போராட்டத்தில் போலிஸ் நடத்திய அடக்குமுறையை கண்டித்து சுவரொட்டி ஒட்டியதுதான் அந்த குற்றம்.

தனது பள்ளி மாணவர்கள் பலரை அரசு குடிகாரர்களாகவும் பொறுக்கிகளாகவும் மாற்றியிருக்கும் கொடுமையினை விவரிக்கிறார் மாரிமுத்து. வாரம் இருமுறை குடிப்பது, பிறகு குடிக்காமல் இருக்க முடிவதில்லை எனும் நிலையினை மாணவர்களும் அடைகிறார்கள். காசுக்கு வழிப்பறி செய்வது, மாணவர்களிடம் தட்டிப் பறிப்பது எல்லாம் நடக்கிறது. இந்நிலையினை மாற்றி பல மாணவர்களை புடம் போட்டிருக்கிறது பு.மா.இ.மு.

அப்படித்தான் மே 5 போராட்டத்தில் சுமார் 40 மாணவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு முன்னரும் பல போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் இவர்கள். போராட்டக் களத்தில் போலிசின் கொடூரத்தை விவரிக்கும் மாரிமுத்து அதனால் மாணவர்கள் பயப்படாமல் போலீசின் அடக்குமுறையை அங்கேயே தட்டிக் கேட்டதை பெருமையுடன் விவரிக்கிறார்.

வீடியோவின் இறுதிப் பகுதியில் தனது நண்பனுக்கு ஏற்பட்ட சோகத்தை விவரிக்கிறார். குடியால் அந்த நண்பனது தந்தை இறந்ததை கண் கலங்க கூறும் மாரிமுத்து, இத்தகைய சோகங்களை நிறுத்தும் பொருட்டே தன்னைப் போன்ற மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் உறுதியாக இருப்பதாக கூறுகிறார்.

இந்த போராட்டம் காசு வாங்கிக் கொண்டு நடத்தப்படுவதாக கூறுப்படுவதைக் கேட்கும் போது அத்தகைய அவதூறுகளை எழுப்புபவர்கள் தைரியமிருந்தால் மதுரவாயில் பள்ளி பக்கம் வந்து கூறுமாறு கேட்கிறார். இப்போது அவர் சிறையில் இருக்கிறார். இந்த போராட்டத்திற்காக அவர் இரண்டாம் முறையாக சிறை சென்றிருக்கிறார்.

நேர்காணல்: வினவு செய்தியாளர்கள்

மூடு டாஸ்மாக்கை – தொடரும் மக்கள் போராட்டம்

0

ஓட்டுப்பொறுக்க அரசியல் ரவுடிகள் ! பொறுக்கி தின்ன அதிகாரிகள்!!

shutdown-tasmac-vpm-black-flag-protest-8விழுப்புரம் மாவட்டம் அயினம்பாளையம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி கடந்த 2-ம் தேதி முதல் மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமையில் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 5-ம் தேதி டாஸ்மாக் கடை எதிரே அமர்ந்து முழக்கமிட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள், கிராம மக்கள் அனைவரையும் கடுமையாக தாக்கியது காவல்துறை.

தொடர்ந்து 6-ம் தேதி கடை எதிரே அமர்ந்து போராட்டம் நடத்திய கிராம மக்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து சென்றது காவல்துறை. விழுப்புரம் டாஸ்மாக் மேலாளர் இருதயமேரி, “கடையை எங்களால் மூட முடியாது. அதற்கான அதிகாரம் எனக்கு இல்லை. எங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள் கலெக்டரிடம் பேசி முடிவெடுக்கிறோம்” என்று கூறியதால், கோபமடைந்த கிராம மக்கள் “கடையை இன்றே மூடுவது என்றால் மூடுங்கள் இல்லையேல் எங்கள் போராட்டம் தொடரும்” என்று அறிவித்து விட்டு வந்தனர்.

நேற்று இரவு 7 மணி முதல் கிராமத்தில் உள்ள அனைவரின் வீடுகளிலும் கருப்பு கொடியை ஏற்றி விட்டனர். “எங்கள் ஊரில் உள்ள டாஸ்மாக் கடையை மூடும் வரை கொடியை அகற்ற போவதில்லை” என அறிவித்து விட்டனர். பத்திரிகை, தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியானதால் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்தனர் அதிகாரிகள்.

shutdown-tasmac-vpm-black-flag-protest-5குறிப்பாக அ.தி.மு.க.-ன் விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் சிந்தாமணி சேவல் வேலு இன்று கிராமத்திற்குள் ஓட்டு கேட்க வருவதால் அ.தி.மு.க.-ன் அல்லக்கைகளும், அதிகாரிகள் ஆர்.ஐ மற்றும் வி.ஏ.ஓ-க்கள் அன்பழகன், உதயகுமார், பால்ராஜ் ஆகிய மூன்று பேரும் கிராம மக்களிடம் கொடியை எடுக்கச் சொல்லி மிரட்டியுள்ளனர்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் விழுப்புரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன்ராஜை போனில் தொடர்பு கொண்டு “வீடுகளில் கட்டியுள்ள கருப்புக் கொடியை எடுக்க சொல்லுமாறு” கேட்டுள்ளனர். “மக்கள் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என போராடி வருகிறார்கள். இது மக்கள் முடிவு” என்று கூறியுள்ளார்.

கிராம மக்களும் கொடியை எடுக்க முடியாது என்று கூறியதும், அதிகாரிகளும், அம்மாவின் அல்லக்கைகளும் வீடு வீடாக சென்று கொடியை பிடுங்கி எறிந்தனர்.

DCCver0077

கிராமத்தின் 3-வது தெருவிற்குள் நுழைந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தியதும், “யாரைக் கேட்டு கொடியை நட்டீர்கள்” என்று பாய்ந்தார்கள் அ.தி.மு.க.-ன் அல்லக்கைகள். அதற்கு மக்கள், “நீங்களும் தான் கொடி கட்டியுள்ளீர்கள். அதை யாரைக் கேட்டு நட்டீர்கள்” என்று கேட்டதும் அமைதியாகி விட்டனர்.

அதிகாரியோ, “இது தேர்தல் நேரம். இது போல் எதுவும் செய்யாதீர்கள். நாங்கள் டாஸ்மாக் கடையை எடுப்பதற்கு எல்லா வேலைகளையும் செய்கிறோம், தயவு செய்து கொடியை கழற்றி விடுங்கள்” என்று நைச்சியமாக கூறினார்.

shutdown-tasmac-vpm-black-flag-protest-6கொதிப்படைந்த மக்கள் “நாங்கள் மழை வெள்ளத்தில் தவிக்கும் போது நீங்கள் வரவில்லை, கடையை மூட சொல்லி நாங்கள் போராடும் போது வரவில்லை, இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு நீங்கள் வருகிறீர்கள், உங்களால் முடிந்தால் கடையை மூடி விட்டு ஊருக்குள் வாங்க” என்று மக்கள் அதிகாரிகள் முகத்தில் காரி உமிழவே வெட்கமின்றி ஓடிவிட்டனர்.

ஓட்டுக்கேட்டு வந்த தொகுதி வேட்பாளரோ, கிராம மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வராததால், வந்த சீக்கிரம் தெரியாமல் திரும்பிவிட்டார்.

இந்த அரசையோ, ஓட்டுக்கட்சிகளையோ நம்புவதனால் டாஸ்மாக் கடைகளை மூட முடியாது. மக்கள் அதிகாரம் தான் கடைகளை மூடும் என்பதில் உறுதியாக நின்று போராடி வருகின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்

may5-shutdown-tasmac-madurai-prpc-poster

shutdown-tasmac-may5-pp-poster

 

போலிஸ் சித்திரவதையின் தருணங்கள் – வீடியோ

3

மதுரவாயல் மே 5, 2016 டாஸ்மாக் முற்றுகை போர்க்களத்தில்………பாகம் 1

க்கள் அதிகாரம் அமைப்பின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன், மதுரவாயல் பகுதி டாஸ்மாக் எதிர்ப்புக் குழுவை சார்ந்த தோழர் கணேசன், பு.மா.இமு-வை சார்ந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர் வாசு மூவரும் தமது அனுபவங்களை இந்த வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

tasmac-struggle-vetrivel-chezhiyan-attacked-3போலிஸ் சித்திரவதை எப்படி இருக்கும் என்பது தோழர்களுக்கு புதிதல்ல. ஆனால் நேரடியாக எதிர்கொள்ளும் வரை கொட்டடி வதை என்பது பொதுவான போலிஸ் பற்றிய ஒரு கருத்து மட்டுமே. அதே நேரம் மற்றவர் போல தோழர்கள் அந்த கொடூரத்தை முதல் முறையாக எதிர் கொண்டாலும் முன்னர் கண்ட கோட்பாட்டுத் தெளிவினால் தைரியமாக எதிர் கொள்கிறார்கள். முக்கியமாக அதை அரசியல் உறுதியுடனும், மக்கள் சார்பிலும் சந்திக்கிறார்கள். வேட்டை நாயாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கும் போலிசுக்கு இந்த வேறுபாடு பொதுவில் புரியாது.

சாதா கிரிமினலோ, ஸ்பெஷல் கிரிமினலோ அனைவரும் போலிஸின் முதல் அடியிலேயே சரணடைந்து விடுவார்கள். இருப்பினும் கிடைக்க இருக்கும் அடி குறையாது என்றாலும் அதன் கடுமை மற்றும் வீரியம் கூடிக் கொண்டே போகாது. பொது மக்களாக இருந்தால் இந்த சித்ரவதை முதலில் கடுமையான அதிர்ச்சியாகவும் பின்னர் பயமாகவும் கோபமாகவும் இறுதியில் விரக்தியாகவும் மாறும். இது ஏன், எப்படி என்று பார்க்க முடியாத படி அந்த அதிர்ச்சி இருக்குமென்பதால் பாதிக்கப்பட்ட ஒரு சாமானியனாக அவர்கள் சரிந்து போகிறார்கள்.

தோழர்களும் மக்கள் போன்றே இதை துவக்கத்தில் எதிர் கொள்கிறார்கள். பிறகே அது ஒரு அரசியல் உறுதி, தெளிவுடன் வலியையும், அதிர்ச்சியையும் கடந்து போக வைக்கிறது. என்ன இருந்தாலும் அந்த வலி அவருக்குத்தான் என்று கண்ணீர் விடுகிறார், தோழர் வெற்றிவேல் செழியனின் தங்கை. அவரது பெற்றோருக்கு 12 வருடங்கள் கழித்து பிறந்த பிள்ளை என்று கூறுபவர் தொலைபேசியில் அம்மா அடைந்த அதிர்ச்சியை வருத்தத்துடன் விவரிக்கிறார். பள்ளி மாணவியான அவரது மகளோ குடும்ப உறவினராக பார்க்கும் போது இது வலித்தாலும், மக்கள் தரப்பில் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது என்கிறார். செழியனின் தங்கையோ நாங்கள் செய்ய முடியாததை அவர் செய்திருக்கிறார், அவரது அரசியல் நடவடிக்கைகளுக்கு முடிந்த அளவில் உதவுவோம், இந்த அடியால் துளியளவு சமூக மாற்றம் வந்தால் கூட அது வெற்றிதான் என்று கண்ணீரைக் கடந்து பேசுகிறார்.

தன்னுடைய துணைவியார் நேரில் வந்து பார்த்து விட்டு  பக்கத்து அறையில் அழுததாகவும் பிறகு சமாதானப்படுத்தியதாகவும் புன்னகையுடன் கூறுகிறார் வெற்றிவேல் செழியன். தங்கை அழும் போது அண்ணன் சிரித்துக் கொண்டே அதை பேசுவது என்பதற்கு ஒரு பின்னணி இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு முன்னர் அவரை எத்தனையோ தருணங்களில் பார்த்த போது, எப்படி ஒரு தொழிலாளிகளிடையே உருவான தலைவனுக்குரிய உறுதியோடும், பொறுமையோடும் பேசுவாரோ அது இப்போதும் குறையவில்லை. இந்த அடிதடி அவரை இம்மியளவு கூட மாற்றிவிடவில்லை – அதாவது சோர்வு என்ற கோணத்தில்.

சாராய ஜேப்பியார் கல்லூரியில் ஒரு தொழிலாளியாக ஆரம்பித்து பின்னர் தொழிற்சங்க தலைவராக உயர்ந்து தற்போது “மக்கள் அதிகாரம் – சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளராக” பணியாற்றும் வரை அவரது வாழ்க்கை நிறைய திருப்பங்களையும், சாகசங்களையும் கொண்டிருக்கிறது. வேலை போனதும் தான் முழுநேர ஊழியராக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் பணியாற்றதையும் சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக தனது பொருளாதாரத்தை சக தொழிலாளிகளே பராமரிக்கிறார்கள் என்று பெருமையுடன் தெரிவிக்கிறார் அவர். இந்த சமூக உறவின் பலம்தான் அவரை போலிசின் சித்திரவதையை பதறாமல் எதிர்கொள்வதற்கு உதவியிருக்கும்.

மதுரவாயல் போலிசால் தான் அடிபடுவதை விட தோழர் வெற்றிவேல் செழியன் மீது விழுந்த அடிகள் தன்னை நிலைகுலைய வைத்ததாகவும் அதனால் தான் மயக்கத்துடன் வாந்தி எடுத்தாகவும் கூறுகிறார் தோழர் கணேசன். இவர் பகுதி டாஸ்மாக் எதிர்ப்புக் குழுவில் செயல்படுகிறார்.

மதுரவாயிலில் ஒரு குடிசை வீட்டில் தனது மனைவி, மகன்களுடன் அப்பளம் தயாரிக்கும் தொழிலாளியாக வாழ்க்கையை நடத்தும் கணேசனை இன்றும் அவருக்கு அப்பள ஆர்டர் கொடுக்கும் சிறு வியாபாரிகள் “நீதான் அடிக்கடி போராட்டம் சிறையின்னு போற, உன் குடும்பத்தையும் ஏன் அழைச்சுட்டு போற?” என்று கேட்கிறார்கள்.

“காக்க காக்க” சூர்யா போல தன்னைக் கருதிக் கொண்டு அடித்த மதுரவாயல் காவல் உதவி ஆய்வாளர் செல்லதுரையின் வெற்று உதாரை கேலி செய்கிறார் கணேசன். அதே நேரம் முடிந்தால் எங்களை அடித்துக் கொன்றாலும் இந்த போராட்டத்தை விடமாட்டோம் என்று சவாலும் விட்டிருக்கிறார். இதனால் அவருக்கு கூடுதலாக அடிகள் கிடைத்திருக்கும் என்றாலும் இனி போலிஸ் எனும் கிரிமினல் கும்பலைக் கண்டு அவரோ அவரது பகுதி தோழர்களோ பயப்படப்போவதில்லை. ஆம். போலிஸ் தோற்றுவிக்கும் பயம் என்பது உடல் வலியில் அல்ல, உள்ளத்தின் அதிர்ச்சியில்தான்.

எவ்வளவு அடிபட்டாலும் வெற்றிவேல் செழியன் இரும்பு போல நிற்கிறார் என்று கணேசன் தெரிவிக்கிறார். செழியனோ பச்சையப்பன் கல்லூரி மாணவர் வாசுவின் உறுதியைப் பார்த்து கற்றுக் கொண்டேன் என்று பணிவாகவும் பெருமையாகவும் தெரிவிக்கிறார். அவர்களது உடைகளை கழட்டுமாறு போலிஸ் உத்தரவிடுகிறது, தோழர்கள் மறுக்கிறார்கள். பின்னர் பலவந்தப் படுத்தியும் அதை செய்ய முடியவில்லை. ஒருவரை கழட்டியதும், கழட்டிய அடுத்தவர் உடையை மீண்டும் போடுகிறார். இப்படி போகிறது அந்த போராட்டம். இந்த ஆட்டத்தை திறம்பட நடத்தியதற்காக வாசுவைப் பாராட்டுகிறார் செழியன்.

ஆமாம், இத்தகைய உறுதியையும், போர்க்குணத்தையும், முக்கியமாக தங்களை மக்களின் அங்கமாக கருதிக் கொள்ளும் பணிவான மனிதர்களை நீங்கள் எந்தக் கட்சியில் சந்திக்க முடியும்?

இந்த வீடியோ வேலைகளின் போது ஒரு தோழர் கேட்டார். “இந்த சித்திரவதையின் கதையை நாம் காண்பித்தால் மக்களோ புதிய தோழர்களோ பயந்து போய்விடமாட்டார்களா, இனி நமது போராட்டங்களில் பங்கேற்க தயங்கமாட்டார்களா?”.

பொதுவில் இந்த கேள்வி சரியானது போலத் தோன்றலாம். ஆனால் உண்மையில் இனி போலிஸ் எனும் கிரிமினல் கும்பலின் அடிகளையும், வதைகளையும் கடந்து வருவது பெரிய சோதனை அல்ல என்ற தைரியத்தையும் அளப்பறிய நம்பிக்கையையும், தோழர்களது நேர்காணல் அளிக்கும் என்று நம்புகிறோம்.

வெற்றிவேல் செழியனது இரண்டு கால்கள் மற்றும் ஒரு கையில் எலும்புகள் முறிக்கப்பட்டிருக்கின்றன. அவர் இயல்பாக நடமாட, எப்படியும் மூன்று மாதங்கள் ஆகலாம். ஆனால் அவரோ “மக்கள் அதிகாரம்” சார்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கே அடுத்த நாளிலேயே சென்று விட்டார். தோழர்கள் அவரை தூக்கிச் சென்றிருந்தாலும், போராடும் ஒரு மனிதனை ஒரு சித்திரவதை முடக்கிவிட முடியுமா என்ன?

மாணவர் வாசுவின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த நேர்காணல் இடைவெளியில் சாப்பிடும் போது தட்டுக்கள் குறைவு என்பதால் எங்களுக்கு முழுத்தட்டு அளித்துவிட்டு அவர் ஒரே தட்டில் மற்றொரு தோழரோடு மதிய உணவை பகிர்ந்து கொண்டு சாப்பிடுகிறார். இவரையெல்லாம் மதுரவாயில் காவல் நிலைய காக்கி கும்பல்கள் “பூச்சாண்டி” பயம் காட்டி முடக்க முடியுமா என்ன?

விசாரணை படம் பார்த்தவர்கள் பொதுவில் போலிசைப் பார்த்து பயந்தார்கள். தோழர்களின் கதையைப் பார்த்தவர்களுக்கு அந்த பயம் ஏற்படாது மட்டுமல்ல, வாழ்வில் நேர்மையாகவும் உறுதியாகவும் இருந்து போராடுபவர்களின் மகிழ்ச்சியையும் அது அறிமுகப்படுத்தக் கூடும்.

inner_design450x150

இது மக்களின் போர் ! போலிஸ் சித்திரவதையில் தோழர்கள் !

6
போராட்டத்தில் குழந்தை

துரவாயல் நொளம்பூர் பகுதி டாஸ்மாக் மூடும் போராட்டம் – போலீஸ் கொலைவெறி தாக்குதல்

க்கள் அதிகாரம் அமைப்பு ஒருவருட காலமாக டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி, மக்களை அணிதிரட்டி தொடர்ச்சியாக போராடி வருகிறது. அதன்படி கடந்த மே 2-ம் தேதி “மதுரவாயல் பகுதியில், மக்களுக்கு இடையூறாகவும், சட்ட விரோதமாகவும் இயங்கிவரும் டாஸ்மாக் கடையை வரும் 5-ம் தேதிக்குள் மூடவேண்டும், இல்லையெனில் நாங்களே மூடுவோம்” என அந்த பகுதி வட்டாட்சியரிடம் மனு கொடுத்து எச்சரிக்கை செய்திருந்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

shutdown-tasmac-nolambur-siege-04
பறை இசை முழங்க கடையை மூடச் சென்ற மக்கள்

ஆனால் கடையை மூடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், ஏற்கனவே அறிவித்திருந்தது போல, மக்கள் அதிகாரம் அமைப்பினரும், அப்பகுதி டாஸ்மாக் எதிர்ப்பு குழுவினரும் 05-05-2016 காலை டாஸ்மாக்கை மூடும் போராட்டத்திற்கு மக்களை அணிதிரட்டிக் கொண்டிருந்தனர்.

4-ம் தேதி இரவே டாஸ்மாக் கடை வாயிலில் தடுப்புகள் அமைத்து காவல் காக்க தொடங்கிய போலீசு, காலை 8 மணியளவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன், அப்பகுதி டாஸ்மாக் எதிர்ப்புக் குழுவை சார்ந்த தோழர் கணேசன், பு.மா.இமு-வை சார்ந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர் வாசு ஆகிய மூவரை, பகுதிக்குள் புகுந்து அடித்து இழுத்து சென்று மதுரவாயல் காவல்நிலையத்தில் அடைத்து அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது.

மேலும் டாஸ்மாக்கை சுற்றியுள்ள ஓம்சக்தி நகர், சின்ன நொளம்பூர், மாதாகோவில் நகர் பகுதிகளுக்குள் போலீசு புகுந்து அப்பகுதி மக்களை போராட்டத்திற்கு செல்ல கூடாது என மிரட்டியது.

shutdown-tasmac-nolambur-siege-01
“சரக்கு வாங்கப்போறியா உள்ளே போ!”

டாஸ்மாக் கடையை சுற்றி வளையம் போல் தடுப்புகளை அமைத்து பாரில் குடிப்பவர்களுக்கு பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தது போலீசு. இத்தனை ஆண்டுகளாக அந்தவழியாக சென்று கொண்டிருந்த மக்களை இன்று இந்த வழியாக செல்ல கூடாது. என அனைவரையும் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தது. அதில் ஓர் காமெடி என்னவெனில், இந்த சூழலில் ஒருவர் அந்த வழியில் செல்ல முயன்றார். அவரிடம் “நீ இப்படி போக முடியாது ஊரை சுற்றிப் போ” என்றது போலீசு. அதற்கு அவர் “சார் நான் பாட்டில் வாங்க வந்தேன்” எனக் கூறியதும், சிறிதும் வெட்கம், மானம் இல்லாமல் “சாரி நீ உள்ளே போ!” என கூறியது போலீசு.

ஏற்கனவே அறிவித்தது போல காலை 11.40 மணியளவில் மதுரவாயல் ரேசன்கடை பேருந்து நிறுத்தத்தில் பறை இசையுடன் டாஸ்மாக்கை மூடும் போராட்டம் துவங்கியது. தோழர்கள் முழக்கமிட்டுக் கொண்டே சாலையை கடந்து வந்தனர். பத்திரிகையாளர்கள் எதிரில் போகவே, சாலையில் அனைவரும் நின்றதும், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எதிர்பாராதவிதமாக இயல்பான சாலை மறியலாக மாறியது.

shutdown-tasmac-nolambur-siege-14
மக்களை பாதுகாக்க சங்கிலி அமைத்து நிற்கும் தோழர்கள்,

தோழர்களும், பகுதி மக்களும் முழக்கமிட்டுக் கொண்டு வருவதை பார்த்த போலீசு, டாஸ்மாக் கடைக்கு 10 மீட்டருக்கு முன்பு ஒரு தடுப்பும், 20 மீட்டருக்கு முன்பு ஒருதடுப்பும், சாலையில் இருந்து உள்ளே வரமுடியாத அளவிற்கு ஒரு தடுப்பும் என மூன்று அடுக்கு தடுப்புகள் அமைத்து, மிகவும் ‘சிறப்பான’ முறையில் டாஸ்மாக் கடைக்கு காவல் அமைத்து, தங்களை உண்மையான டாஸ்மாக் காவலர்கள் என்று நிரூபித்துக் கொண்டனர்.

நெடுஞ்சாலையில் போராட்டம் கம்பீரமான முழக்கமும், பறை இசையும் என பகிரங்கமாக நடந்துக் கொண்டிருந்தது. சாலை மறியலாக நடந்துக் கொண்டிருப்பதை பார்த்து போலீசு முதல் தடுப்பை அகற்றி தோழர்களை உள்ளே வரவிட்டது. தோழர்கள், பள்ளி மாணவர்கள், ஊர்மக்கள் என கிட்டத்தட்ட 300-க்கும் மேற்ப்பட்டோர் “மூடு டாஸ்மாக்கை” என போர்க்குணமாக முழக்கமிட்டுக் கொண்டு டாஸ்மாக் கடையை நோக்கி முன்னேறினர். “டாஸ்மாக்கை மூடும் வரை இந்த இடத்தை விட்டு நாங்கள் நகர மாட்டோம்” என்று முழங்கினர் அப்பகுதி மக்கள்.

இந்தப் போராட்டத்தை அந்த பகுதியை சுற்றி இருக்கும் பொதுமக்கள், கடை வணிகர்கள், சாலையில் செல்பவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்களை பார்க்கவிட்டால், காவல்துறை டாஸ்மாக்கை காவல் காப்பது அம்பலமாகிவிடும் என அஞ்சி அனைவரையும் மிரட்டி கலைத்துக் கொண்டிருந்தது போலீசு.

shutdown-tasmac-nolambur-siege-03
பள்ளி மாணவர் ஆகாஷ்யை ரோட்டில் போட்டு இரண்டாம் முறை சாலை மறியல்

டாஸ்மாக் எதிர்ப்புக்குழு தோழர்களையும், மக்களையும் கைதுசெய்ய முயற்சித்தது போலீசு. அவர்கள் “டாஸ்மாக்கை மூடும் வரை நாங்கள் இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம்” என கூறவே போலீசு தன் கொலைவெறித் தாக்குதலை ஆரம்பித்தது. இந்த தாக்குதலில் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தோழர்களையும், மக்களையும் அடிப்பதை அறிந்த மதுரவாயல் நொளம்பூர் பகுதி மக்கள் அனைவரும் போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தனர். கொலைவெறி தாக்குதலை நடத்தும் போலீசைப் பார்த்து “அவங்க என்ன சொல்லுறாங்க, எங்க ஊருக்குள்ள டாஸ்மாக் கடை வேணாம் என சொல்லுறாங்க, யோவ்! அவங்கள எதுக்குயா அடிக்கிறீங்க” என மக்கள், போலீசை இடைவிடாமல் திட்டிக் கொண்டும், கேள்விகளைக் கேட்டுக் கொண்டும் இருந்தனர்.

ஒரு பெண் போலீசு, சத்யா என்ற 50 வயதான தோழரை அடித்து மண்டையை உடைத்தது. அப்பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் ஆகாஷ் என்பவரை போலீஸ் அடித்ததில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவரை தூக்கிக்கொண்டு 5 நிமிடங்களாக தோழர்கள் அலைந்தனர். போலீசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. உடனே தோழர்கள் அவரை சாலையில் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் 10 நிமிடம் நீடித்தது. அதன் பின் தான் போலீசு ஆம்புலன்சை வரவழைத்தது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தோழர்கள் பலரை அடித்து, பெண்களின் துணிகளை கிழித்து, மண்டையை உடைத்து மிகவும் வக்கிரமாக நடந்துக் கொண்டது. போலீசு வாகனத்தில் ஏற்றியும், தோழர்களையும் மக்களையும் உள்ளே வைத்து தாக்கியுள்ளனர். குறிப்பாக எஸ்.ஐ செல்லதுரை என்ற போலீசு ரவுடி, லட்டியை எடுத்துக்கொண்டு போராட்டத்தில் முக்கியமாக தோழர்களை குறிவைத்து கொலைவெறியுடன் தாக்கினான்.

போலீசை தலைகுனியச் செய்யும் வகையில் கேள்வி கேட்ட மூதாட்டி (வலதுபுறம்)
போலீசை தலைகுனியச் செய்யும் வகையில் கேள்வி கேட்ட மூதாட்டி (வலதுபுறம்)

கணிசமான தோழர்கள் கைது செய்யப்பட்டனர். எஞ்சி இருந்த அந்தப் பகுதி பெண்கள் 20 பேர் உட்பட மொத்தம் 30 பெண்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். பெண்கள் தானே என்று அலட்சியமாக நினைத்தது போலீசு. ஆனால் இவர்களை நெடுஞ்சாலையில் இருந்து 15 நிமிடத்திற்கு, ஒரு அடி கூட நகர்த்த முடியவில்லை. இதுதான் பெண்களுக்கே உரிய போர்க்குணம்.

15 நிமிடத்திற்கு பின் கயிற்றை கொண்டுவந்து சுற்றி வளைத்து தான் அவர்களை சாலைவோரமாக கொண்டு வரமுடிந்தது.

“யோவ்! இத்தன பேர அடிச்சியே, உங்க குடும்பம் எப்படி நல்ல வாழும்னு பாரு, நீங்கயெல்லாம் நல்லவே இருக்க மாட்டிங்க! டாஸ்மாக்கை பாதுகாக்க நிக்கிறீங்களே உங்களுக்கு சூடு சொரண, மானம் எதுவுமே கிடையாதா” என அங்கிருந்த பெண்கள் பலர் போலீசை கேவலமாக திட்டினர். அதற்கு ஏ.சி புகழேந்தி என்ற பொறுக்கி போலீசு “சரிதான் போடி மயிரு” என்று தகாத வார்த்தையில் வக்கிரமாக திட்டினான்.

அதற்கு மக்கள் “யோவ்! நீங்கலெல்லாம் வாங்குற காசுக்கு மேல கூவுறீங்க” என்று போலீசை அசிங்கப்படுத்தினர். போலீசும் இதை கேட்டு வெட்கமே இல்லாமல் நின்று கொண்டு இருந்தது.

“அடிப்பட்டு போனவங்க உயிருக்கு எதாவது ஆச்சின்ன உங்க ஒருத்தரையும் சும்மா விடமாட்டேன்” என 70 வயது நிரம்பிய மூதாட்டி போலீசின் முகத்தில் காரி உமிழ்வது போல் கூறினார்.

போராட்டத்தில் பள்ளி மாணவர்கள்
போராட்டத்தில் பள்ளி மாணவர்கள்

அ.தி.மு.க.-வை சார்ந்த 2 பேர், போராட்டம் நடக்கும் இடத்திற்கு அருகில் இருந்த பெண்களிடம், “இவங்க எப்படி அராஜகம் பண்ணுறாங்க பாருங்க, இவங்களால எப்படி டாஸ்மாக்கை மூடமுடியும்” என பேசினர். “நீங்க மக்களுக்கு இடையூறாக இருக்குற டாஸ்மாக் கடையை மூடியிருந்தா இவங்க ஏன் போராட போறாங்க!” என அங்கிருந்த பெண் கேட்டார்.

“இல்லமா டாஸ்மாகை மூட அமைதியான வழியில போனா மூடிடலாம்” என்று அ.தி.மு.க கட்சிகாரர் கூறினார்.

“நாங்க பலமுறை மனு கொடுத்திருக்கோம், பலரை சந்தித்து பேசிருக்கோம் யாரும் மூடல, மே 2-ம் தேதி கூட மனு கொடுத்து இருக்காங்க, அப்பவும் அரசாங்கம் மூடலயே, இப்ப கூட கடைய திறந்து சரக்கு விக்குது உங்க ஜெ.அரசு” என கேள்வியெழுப்பினர்,

“டாஸ்மாக்கை மூடினால் பல பேர் செத்துருவாங்கமா” என கூறினார் அ.தி.மு.க உறுப்பினர்.

“இந்தப் பகுதியில ஆத்த கடக்குற பாலம் பாதி உடைஞ்சி போச்சி, அதுல வந்து, போயிட்டு இருக்க நாங்க எப்ப வேணாலும் சாகலாம், அந்த பாலத்த கட்டிதர வக்கில்ல உங்க கட்சிக்கு” என அங்கிருந்த பெண் பேசியதும். எதையும் பேசமுடியாமல் நின்றுவிட்டார் அதிமுக கட்சிகாரர்.

போராட்டத்தில் குழந்தை
போராட்டத்தில் குழந்தை

“ஓட்டு கேட்டு யாரவது ஊருக்குள்ள வாங்க அப்ப பாத்துக்குறேன் உங்கள” என ஒரு மூதாட்டி கூறினார்.

“என் பொண்ணுங்க ரெண்டு பேரும் இப்படிதான் நடந்து போகனும், போகும் போது குடிச்சிட்டு என் பொண்ணுக்கிட்ட தப்ப நடத்துகுறானுங்க, அப்ப என் பொண்ண பாதுகாக்க இந்த போலீசு வருமா? வராது. என் குடும்பத்தையோ இல்ல இந்த ஊரு மக்களையோ காப்பாத்த இந்த போலீசு வராது. டாஸ்மாக் கடைய காப்பாத்த, இவளோ கஷ்ட படுது இந்த போலீசு, ஏனு தெரியுமா, டாஸ்மாக் கடைய மூடிட்டா அவங்களுக்கு மாமூல் பணம் வராது அதனாலதான், இவ்ளோ கஷ்டப்பட்டு டாஸ்மாக்கடைய காவல் காக்குறாங்க!” என ஆவேசமாக போலீசிடம் பேசினார், அந்த ஊரை சேர்ந்த ஒரு பெண். இதைக் கேட்டுக்கொண்டு போலீசு சிறிதும் குற்றவுணர்வு கூட இல்லாமல், எருமை மாடுகள் போல, நின்றுக்கொண்டு இருந்தனர். இன்னும் இந்த போராட்டம் 30 நிமிடம் அதிகமாக நீடித்திருந்தால், இந்த டாஸ்மாக்கை மூடும் போராட்டம் ஒட்டுமொத்த மதுரவாயல் மக்கள் போராட்டமாக மாறியிருக்கும்.

தோழர்களையும், மக்களையும் கைது செய்து மதுரவாயல் பாக்கியலட்சுமி மண்டபத்தில் அடைத்தது போலீசு. அங்கு காயம் அடைந்த தோழர்களுக்கு சிகிச்சை அளிக்க எந்த ஏற்பாடும் செய்யாததால், இங்கு இருந்த 200 பேரும் உண்ணாநிலை போராட்டத்தின் ஈடுபட்டனர். அதன்பின் தோழர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மாலை 5 மணியளவில், இந்த பகுதி த.மு.மு.க கட்சியினர் மற்றும் உள்ளூர் மக்கள் என 20-க்கும் மேற்பட்டோர், “கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசு தாக்கியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்” என தோழர்களை கைதுசெய்து அடைத்துவைத்திருந்த மதுரவாயல் பாக்கிய லட்சுமி மண்டபத்தின் வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி நடந்த இப்போராட்டம், அப்பகுதி மக்களிடையேயும், அப்பகுதி ஜனநாயக சக்திகளிடையும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போராட்டம் மக்கள் எழுச்சியாக மாறும் தருணம் வந்துவிட்டது என்பதை இந்த சம்பவங்கள் நமக்கு உணர்த்துகிறது.

மேலும் மக்கள், அதிகாரத்தை தங்கள் கையில் எடுக்கும் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது; விரைவில் மக்களே அதிகாரத்தைக் கையில் எடுப்பார்கள்; எதற்கும் பயனற்று எதிர்நிலையாக மாறிப்போய் உள்ள இந்த ஒட்டு மொத்த அரசுக் கட்டமைப்பையும் தகர்ப்பார்கள்!…நம்முடைய போராட்டங்கள் தொடரும்…

தகவல்
மக்கள் அதிகாரம்,
சென்னை

_______________

க்கள் அதிகாரம் சென்னை ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் செழியன், கணேசன், வாசுதேவன் ஆகிய மூவரும் நேற்று காலை 7.30 மணியளவில் மதுரவாயல் ஓம்சக்தி நகரில் உள்ள பகுதி வாழ் மக்களிடம் போய் அன்று காலை 11 மணி டாஸ்மாக் கடையை மூடக் கோரும் ஆர்பாட்டத்திற்கு வருமாறு அழைத்து கொண்டிருந்தோம்.

shutdown-tasmac-may5-pressmeet-1ஒரு வீட்டில் டீ போட்டு கொடுத்ததை குடித்து விட்டு வெளியில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ம்துரவாயல் காவல் ஆய்வாளர் சீனிவாசனும், காவலர் ஒருவரும் போலீஸ் வண்டியில் வந்தனர்.

“இங்கு என்ன செய்கிறீர்கள்” எனக் கேட்ட போது

“இன்று நடைபெறவுள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரும் போராட்டத்திற்கு மக்களை அழைக்க வந்தோம்” எனக் கூறினோம்.

உடனே காவல் ஆய்வாளர் ”இதை செய்ய நீ யார்; வேணுமின்னா கவர்மண்டுகிட்ட போயி கேளு. மக்களிடம் ஏன் பேசுகிறாய்?” எனக் கூறினார்.

“நாங்கள் மக்கள் அதிகாரம் அமைப்பினை சேர்ந்தவர்கள், மக்களை போராட்டத்திற்கு அழைக்க வந்தோம்” என நாங்கள் பதிலளித்த போது

“நீ எவனா வேணா இரு; நீ யாருடா கடைய மூடுறதுக்கு, நீ என்ன பெரிய கவர்மெண்டா, வண்டியில ஏறு, ஏசி ஏதோ பேசனுமாம்” எனக் கூறி வண்டியில் ஏத்த முயன்றனர்.

நாங்கள் ஏற மறுத்து மக்களிடம் போய் “உங்கள் பிரச்சனைக்காக தான் வந்துள்ளோம், எங்களை அடாவடியாக அரஸ்ட் பண்ண பாக்குறாங்க” எனக் கூறிய போது சத்தம் கேட்டு வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வரத் துவங்கினர். இதற்குள் வாக்கி டாக்கியில் போலீசினை அழைக்கவே 40 போலீசார் ஓடி வந்தனர். காவல் ஆய்வாளர் சீனிவாசனுடன் சேர்ந்து அவர்கள் எங்களை அடித்து வண்டியில் எற்றினர். மதுரவாயல் காவல் நிலையம் கொண்டு செல்லும் வரை மாறி மாறி அடித்தனர்.

shutdown-tasmac-may5-pressmeet-2காவல் நிலையம் கொண்டு சென்றவுடன் லாக்கப்-ல் வைத்து மதுரவாயல் உதவி ஆய்வாளர் செல்லத்துரை, மப்டியிலிருந்த காவலர் பரத் மற்றும் அடையாளம் காட்டக் கூடிய காவலர்கள் மூவர் என 5 பேர் லத்தி மற்றும் பிவிசி பைப் போன்றவற்றால் அடித்தனர். சட்டையினை கழட்ட சொன்ன போது மறுத்ததால் சட்டையினை பிடித்து கிழித்தனர். பேண்டினை கழட்ட முயற்சித்த போது நாங்கள் அதனை கெட்டியாக பிடித்து கொள்ள உதவி ஆய்வாளர் செல்லத்துரை, மப்டியிலிருந்த காவலர் பரத் மாறி மாறி மூட்டிற்கு கீழ் லத்தியால் அடித்தனர். இதனால் வெற்றி வேல் செழியன் நிலை குலைந்து கீழே விழ அவரது காலில் மப்டியிலிருந்த காவலர் பரத் ஏறி உட்கார்ந்து கொள்ள உதவி ஆய்வாளர் செல்லத்துரை லத்தியால் வெற்றிவேல் செழியன் பாதத்தில் அடித்தார். மற்றுமொரு அடையாளம் காட்டக் கூடிய காவலர் வெற்றிவேல் செழியனை லத்தியால் தோள்பட்டை, கை என அடித்துள்ளார்.

அதே போன்று ஏற்கனவே கணேசன் என்பவருக்கு குடலிரக்க அறுவை சிகிச்சை செய்துள்ளதை கூறிய போதும் உதவி ஆய்வாளர் செல்லத்துரை அவரது வயித்திலும் முகத்திலும் மாறி மாறி குத்தியதில் அவர் வாந்தி எடுத்து கீழே விழுந்து விட்டார். இருந்த போதிலும் மப்டியிலிருந்த காவலர் பரத் அவரை பூட்ஸ் காலால் இரு கால்களிலும் ஏறி மிதித்ததோடு லத்தியால் கடுமையாக தாக்கியுள்ளார். இதே போன்று வாசுதேவனை அடையாளம் காட்டக் கூடிய காவலர் ஒருவர் லத்தியால் கை கால் என உடல் முழுவதும் தாக்கிய்ள்ளார்.

மேற்கூறிய அரை மணி நேரத் தாக்குதலிற்கு பின் காவல் நிலையத்திற்கு வெளியே கொண்டு வந்தனர். அப்போது “இழுத்து மூடுவோம், இழுத்து மூடுவோம்! டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம்!” என முழக்கமிட்ட போது கழுத்தினை பிடித்து அடித்து கொண்டே தரதர வென இழுத்து வந்து வண்டியில் ஏற்றினர். பின் மாலை வரை பத்து காவலர்களின் காவலில் பல்வேறு இடங்களில் வைத்திருந்தனர். காலை முதல் மாலை வரை உணவு ஏதும் கொடுக்கவில்லை. எங்களை விடுவிக்கக் கோரி டாஸ்மாக் போராட்டத்தில் கைதான தோழர்கள் மண்டபத்தில் போராடியதால் மாலை 6.30 மணியளவில் வானகரத்தில் உள்ள பாக்கியலட்சுமி மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு மற்றவர்களுடன் காவலில் வைக்கப்பட்டோம். அங்கிருந்து 7.30 மணியளவில் தோழர்களுடன் சேர்ந்து விடுவிக்கப்பட்டோம். அங்கிருந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டோம்.

வெற்றிவேல் செழியனுக்கு வலது கால் முட்டிக்கு கீழ் எலும்பு விரிசல், இடது கால் பாதமுட்டியில் எலும்பு விரிசல், இரு கால்களிலும் லத்தியால் அடித்த காயங்கள், வலது கை மணிக்கட்டிற்கு கீழ் எலும்பு விரிசல், வலது தோள்பட்டைக்கு கீழ் லத்தியால் அடித்த காயம் என ஏற்பட்டதில் இரு கால்களிலும், வலது கையிலும் மாவுகட்டு போடப்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கணேசனுக்கு இடுப்புக்கு கீழ் பாதம் வரை ஏற்பட்டுள்ள உள்காயங்களினால் கால்களை ஊன்ற இயலாத நிலையில் கடும் தலைவலியும் ஏற்பட்டுள்ளது. வாசுதேவனுக்கு வலது கை ம்ணிக்கட்டிற்கு கீழ் எலும்பு விரிசல், வலது தோள்பட்டைக்கு கீழ் லத்தியால் அடித்த காயம் மற்றும் உடல் முழுவதும் உள்காயங்கள் ஏற்பட்டது. வலது கையில் மாவுகட்டு போடப்பட்டு வலது கையினை அசைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

தகவல்
மக்கள் அதிகாரம்,
சென்னை

சாராய ஜனநாயகம் !

0
குடி : கௌடில்யன் முதல் டாஸ்மாக் வரை !

சாராயத்துக்காகவே
ஒரு ஆட்சி நடக்குது
மக்கள் எதிர்த்துக் கேட்டால்
மண்டையைப் பிளக்குது

இது சாராய ஆட்சி
காவலுக்கு நிற்கும்
போலீசே சாட்சி!

இது சாராய ஜனநாயகம்
இதில் கிடைக்காது நியாயம்!

எங்கள் பெண்களை விதவையாக்கி விட்டது
இந்த டாஸ்மாக்,
எங்கள் பிள்ளைகளை சாகடித்து விட்டது
இந்த டாஸ்மாக்
எங்கள் ஊரையே சீரழித்து விட்டது
இந்த டாஸ்மாக்
நாங்கள் போராடாமல்
யார் போராடுவது?

குடியால்
குடும்பத்தையே தெருவில் நிறுத்தியது
குற்றமில்லையாம்,
பாதிக்கப்பட்டவர்கள்
குடும்பமாக தெருவுக்கு வந்து
போராடுவதுதான் குற்றமாம்!

மணிக்கணக்கில்
ரோட்டை அடைத்து ஓட்டு வேட்டை
எங்கே உன் தடியடி?

ஊரே சிரிப்பாய் சிரிக்குது
ஒவ்வொரு பினாமி பெயரிலும்
ஊழல் பணம் பல கோடி…
எங்கே உன் கொக்கிப்பிடி?

கொள்ளையர்க்கு பாதுகாப்பு
கொள்கையர்க்கு கைகால் முறிப்பு…

போஸ்டரை மட்டுமே
கிழித்துக் கொண்டிருந்த போலீசு
புடவையையும் கிழிப்பதுதான்
சட்டம் ஒழுங்கின் சிறப்பு!

சாராயத்தை
நிறுத்தச் சொன்னதற்கேன்
இத்தனை ஆத்திரம்
சாராயம் இல்லாமல்
இயங்காதோ அரசு எந்திரம்?
டாஸ்மாக்கின் ஒவ்வொரு துளியிலும்
குடிகெடுக்கும் வெறித்தனம்
மக்களின் குரலை மதிக்காத
இந்தத் தேர்தல் வெறும் சதித்தனம்!

மதுவிலக்கு படிப்படியாகவாம்
மதுவை விலக்கக் கோருபவர்களை
ஒடுக்குவது உடனடியாகவாம்!

பெண்களின் முடியை பிடித்து இழுத்து
பிள்ளைகள் கன்னத்தை கிழித்து
ஆடைகளை அவிழ்த்து
அடித்து பூட்ஸ் காலால் மிதித்து
கைது செய்து கை கால் முறித்து
குழந்தைகள் அழுகுரல் ரசித்து…
வேடிக்கை பார்க்கும் அரசமைப்பிற்கு
இன்னும் வேண்டுமா ஓட்டு?
டாஸ்மாக்கோடு இதற்கும் சேர்த்து
போடுவோம் பூட்டு!

– துரை.சண்முகம்,

தீப்பிடிக்கும் டாஸ்மாக் முற்றுகை – தஞ்சை, பென்னாகரம், கடலூர், விழுப்புரம்

2
DCCver0077

1. தஞ்சாவூர்

குடிகாரர்களை நோயாளிகளாக்கி நோயாளிகளை குடிகாரர்களாக்கும் தஞ்சை மருத்துவக் கல்லூரி டாஸ்மாக் கடைகளை உடனே மூடு.

shutdown-tasmac-tnj-demo-01மருத்துவமனைகள், பள்ளி கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள், ஆகியவற்றின் அருகில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்ற விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு எல்லா இடங்களிலும் நீக்கமற டாஸ்மாக் கடைகளை திறந்து தமிழக மக்களை சீரழிக்கிறது குடிகெடுக்கும் கொலைகார ஜெயா அரசு. தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தமிழகத்தில் அதிகமான நோயாளிகள் வரும் முக்கிய மருத்துவமனைகளில் ஒன்று. ஆறு, ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் இங்கு மருத்துவம் பார்க்க வருகின்றனர். அத்துடன் உள்நோயாளிகளைப் பார்க்க வரும் உறவினர்கள், நண்பர்கள் என பல ஆயிரம் பேர் அன்றாடம் வந்து போகின்றனர்.

மேலும், இம்மருத்துவக் கல்லூரியைச் சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அரசு ஊழியர்கள் முதல் கூலித் தொழிலாளர்கள் வரை பல்லாயிரம் பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் குறி வைத்து மருத்துவக் கல்லூரி வாசலிலேயே மூன்று டாஸ்மாக் கடைகளைத் திறந்து சீரழிக்கிறது, ஜெயா அரசு. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நோயை குணமாக்கும் இடமாக இல்லாமல் குடிகாரர்களை உருவாக்கும் இடமாக மாறிவிட்டது. உள்நோயாளிகளாக இருக்கும் பலர் குறிப்பாக எலும்பு முறிவு பிரிவு நோயாளிகள் மாவுக் கட்டுடன் டாஸ்மாக் வாசயில் நிற்பது அன்றாடக் காட்சி. மருத்துவப் பணியாளர்களும் குடித்து விட்டு வருகின்றனர்.

கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்ட போதும், நோயாளிகள் குடிப்பதால் நோய் குணமாவது தடைபடுவதுடன், புதிய நோய்களுக்கும் ஆளாகின்றனர். குடிபோதையுல் இருக்கும் பணியாளர்களால் என்ன ஆபத்து நேரும் என்று சொல்ல முடியாது. மருத்துவர்களது பணி நோய்க்கு மருத்துவம் பார்ப்பது மட்டுமல்ல, நோய் குணமடைய தடையாக இருக்கும் சூழலை ஒழிப்பதும் அவர்கள் கடமை. ஆனால், இது பற்றி எந்த அக்கறையும் இன்றி மருத்துவர்களும், நிர்வாகமும் செயல்படுகின்றன. உழைப்பாளி மக்களாகிய நாம் அவ்வாறு இருக்க முடியாது. டாஸ்மாக்கால் அழிவது ஏழை எளிய உழைப்பாளிகள். சொல்லவொண்ணா துயரங்களையும், குடும்பச் சுமைகளையும் தாங்குவது நம்முடைய பெண்கள். எனவே டாஸ்மாக்கை ஒழிப்பது நமது உடனடித் தேவை. உடனடிக் கடமை. குடி குடியைக் கெடுக்கும் என்று தெரிந்தே சாராயம் விற்கும் அரசை எப்படி நம்ப முடியும்?

shutdown-tasmac-tnj-demo-07இன்று அரசுத் துறைகள் அனைத்தும் லஞ்ச ஊழலில் மூழ்கி மக்கள் விரோத சக்திகளாகச் சீரழிந்து விட்டன. மிக அடிப்படையான கல்வி, மருத்துவம், குடிநீர் போனவற்றைக் கூட வழங்கும் தகுதியற்றுப் போனதோடு அனைத்தையும் தனியார் மயமாக்கி, தனியார் கொள்ளையர்களின் அடியாளாக அரசமைப்பே மாறிவிட்டது. அரசியல் கட்சிகளின் கூட்டணி பேரங்கள் சந்தி சிரிக்கின்றன.

எனவே, உழைக்கும் மக்கள் தங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள ஒரே வழி மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவது ஒன்றுதான். சுய சிந்தனை, சுய மரியாதை, பண்பாடு இவற்றை இழந்து டாஸ்மாக் போதையில் மூழ்கிக் கிடக்கும் மக்களை மீட்காமல் ஒரு அடி கூட நகர முடியாது. எனவேதான், “மூடு டாஸ்மாக்கை” இயக்கத்தை மக்கள் அதிகாரம் முன்னெடுத்து மக்களைத் திரட்டி வருகிறது.

மேலும், ஆறு, ஏழு மாவட்ட மக்களின் உடல்நலனுக்கும், உயிருக்கும் உலை வைக்கும் மருத்துவக் கல்லூரி டாஸ்மாக் கடைகளை உடனே மூடும் போராட்டத்தை முன்னெடுப்போம்

உழைக்கும் மக்களே, ஜனநாயகப் பற்றும், மக்கள் பற்றும் கொண்ட பெரியோர்களே, பெண்களே, இளைஞர்களே!

தெரு தோறும் சாராய எதிர்ப்புக் குழுக்களை உருவாக்குவோம்!
உழைக்கும் மக்களாகிய நாம் அதிகாரத்தை கையிலெடுப்போம், டாஸ்மாக் எனும் சனியனை ஒழிப்போம்!


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

முற்றுகைப் போராட்டம்
05-05-2016 காலை 10 மணி
தஞ்சை மருத்துவக் கல்லூரி மூன்றாம் கேட்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
தஞ்சை

2. விழுப்புரம் அயனம்பாளையத்தில் தொடரும் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம் அயினம்பாளையம் கிராமத்தில் “மூடு டாஸ்மாக்கை” என கோரிக்கை வைத்து கடந்த 5-ம் தேதி அன்று டாஸ்மாக் கடை எதிரே அமர்ந்து போராட்டம் நடத்திய கிராம மக்கள், மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதோடு போராட்டத்தில் முன்னணியாக இருந்த கிராம மக்களையும், தோழர்களையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவித்தனர்.

டாஸ்மாக்கை மூடியே தீர வேண்டும் என்று மக்களின் கோபக்கனல் தணியவில்லை. அதன் தொடர்ச்சியாக 06-05-2016 aன்றும் போராட்டகளத்திற்கு மக்களை அழைத்து வந்தது. கிராமத்தின் உள்ளே இருந்து முழக்கமிட்டவாறு சிறுவர்கள், தோழர்கள், பெண்கள் என அனைவரும் டாஸ்மாக் கடை எதிரில் அமர்ந்து முழக்கமிட்டனர்.

டாஸ்மாக் கடைக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய போலீசு கும்பல் மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி விட வேண்டும் என்ற நோக்கத்தோடு கையில் கிடைத்த முள் தடி, நொனா மரத்தின் தடி ஆகியவற்றை எடுத்து வந்து போராட்டம் நடத்தும் மக்களை சுற்றி வளைத்துக் கொண்டு, “பெண்களையும், சிறுவர்களையும் அடித்து மண்டையை எல்லாம் உடைத்து விடுவேன், உங்கள் வாழக்கை எல்லாம் வீணாகி போய்விடும்” என்று கூறி ஒரு ரவுடியை போல மிரட்டினார்கள். மருது என்ற உதவி ஆய்வாளர் தனது கைத்துப்பாக்கியை காட்டி பூச்சாண்டி செய்தார். எதற்கும் அஞ்சாத பெண்களும், சிறுவர்களும் “டாஸ்மாக்கை மூடும் வரை நாங்கள் போக மாட்டோம்” என்று கூறி தங்களது வீரத்தை நிலைநாட்டினார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்த பதிலை எதிர்பார்க்காத “ரவுடித்துறை” வேறுவழி இல்லாமல் மக்கள் அதிகாரம் விழுப்புரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன்ராஜிடம் பேச்சு வார்த்தைக்கு முன் வந்தது. “தேர்தல் நேரத்தில் இதுபோன்று செய்யாதீர்கள். நாங்கள் உங்களை டாஸ்மாக் மேலாளரிடம் அழைத்து செல்கிறோம். அவரிடம் உங்களுடைய கோரிக்கையை சொல்லுங்கள். நாங்களும் பேசுகிறோம்” என்று வாக்குறுதியளித்தார். அதனை மக்களிடம் கூறியபோது மக்கள் அதனை ஏற்றுக்கொண்டு ஊர் மக்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் என 7 பேரை மட்டும் தாலுக்கா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார்கள்.

காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று சுமார் மூன்று மணி நேரம் கால்கடுக்க தோழர்களையும், மக்களையும் நிற்க வைத்துவிட்டு இரண்டு டி.எஸ்.பி-க்கள் தலைமையில் தோழர்கள், கிராமத்து மக்கள் அனைவரையும் உள்ளே அழைத்து “இந்த சூழலில் நீங்கள் போராட்டம் நடத்துவது சரியல்ல, நீங்கள் போராடினால் நாங்கள் உங்களை ரிமான்ட் செய்ய வேண்டிய நிலை” வரும் என்று மிரட்டினார்கள். “நீங்கள் எங்களை ரிமான்ட் செய்தாலும் மக்கள் அங்கே தொடர்ந்து போராடுவார்கள்” என்று கூறி விட்டு வெளியில் வந்த தோழர்களை நிறுத்தி, “கடைசி வாய்ப்பாக டி.எம்-மிடம் அழைத்து செல்கிறோம் அவரிடம் பேசுங்கள்” என்றனர்.

சரியாக மூன்று மணிக்கு டாஸ்மாக் மேலாளரை சந்தித்து பேசுகையில் தனக்கேயுரிய அதிகாரத் திமிரில் “கடையை மூட முடியாது” என்று கூறினார். அதற்கு தோழர்கள் “மூட முடியாது என்றால் எந்த அடிப்படையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டிற்கு “மக்களுக்கு இடையூறாக உள்ள கடையை மூடுவோம்” என்று பேட்டியளித்தீர்கள்” என்று கேட்டதற்கு, “பேட்டி கொடுத்தேன். ஆனால், டாஸ்மாக் கடையை மூடுவதற்கான அதிகாரம் எனக்கில்லை. எதுவாக இருந்தாலும் கலெக்டர்தான் முடிவெடுக்க முடியும். நாங்கள் உங்கள் கோரிக்கையை மனுவாக தருகிறோம். ஒரு வாரம் எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்” என்று நய வஞ்சகமாக பேசினார்.

“அதுவரை காத்திருக்க முடியாது. இன்றே மூட முடியும் என்றால் மூடுங்கள். இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடரும்” என்று மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் கூறிவிட்டு வெளியேறினார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அரசும், அதிகாரிகளும்,காவல்துறையும் டாஸ்மாக்கை மூடாது என்று நடைமுறை அனுபவங்கள் மக்களுக்கு உணர்த்தியுள்ளது. எனவே அடுத்த கட்ட போராட்டத்திற்கு கிராம மக்கள் தயாராகி வருகின்றார்கள்.

தகவல்
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்

3. தருமபுரி – பென்னாகரம்

பென்னாகரத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக நடந்த டாஸ்மாக்கை மூடும் போராட்டம்.

பென்னாரம் பேருந்து நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடுவதற்காக கடந்த பத்து நாட்களாக மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு 02-05-2016 அன்று சுமார் 40 பேரைத்திரட்டி தாசில்தாரிடமும், கலால் அதிகாரியிடமும் மக்கள் அதிகாரம் தோழர்கள் மனு கொடுத்தனர். 05-05-2016 அன்று மக்கள் அதிகாரம் மக்களை திரட்டி போராட்டத்திற்கு தயாராகி கொண்டிருந்தது. இதனை முன்கூட்டியே தடுத்து நிறுத்தி டாஸ்மாக்கை பாதுகாக்க, துணைராணுவ படை, அதிரடிபடை, போலீசு, உளவுத்துறை உள்ளிட்ட அனைத்து படைகளையும் குவித்து தடுப்பு வேலி அமைத்துக்கொண்டு, மக்களிடையே பீதியூட்டி கொண்டுயிருந்தது.

தோழர்களின் தொடர் பிரச்சாரம் மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததால் போராட்டத்தை பார்க்க மக்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். மேலும் துணைஇராணுவம் மற்றும் உள்ளூர் போலிசு அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டதால் ஏதோ நடக்கப்போகிறது என மக்கள் எதிர்பார்த்து வந்திருந்தனர். இவ்வாறு, சுமார் முக்கால் மணிநேரம் நடந்த இந்தப் போராட்டத்தை ஆயிரக்கணக்கானோர் நின்று கவனித்தனர். “எங்களுடைய நோக்கமே டாஸ்மாக்கை மூடுவதுதான் அதனால் உடனடியாக டாஸ்மாக் அதிகாரியை வரச்சொல்லுங்கள்” என்றுகூறி உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த பீதியை அடித்து நொறுக்கும் வகையில் களம்இறங்கினர் மக்கள் அதிகாரம் தோழர்கள். பேருந்து நிறுத்தத்திலிருந்து டாஸ்மாக்கை நோக்கி ஊர்வலமாக சென்ற தோழர்களை போலீசார் உடனடியாக சுற்றி வளைத்துக்கொண்டனர். இருப்பினும் விடாபிடியாக தோழர்கள் முழக்கமிட்டவாறே போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்தை ஒடுக்க தோழர்களை கடுமையாக தாக்கியும், மண்டையை உடைத்தும் வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்துச்சென்றும் போலீசு கைது செய்தது. இதனால் பல தோழர்களுக்கு காயம் ஏற்பட்டது.

கைது செய்து மண்டபத்தில் வைத்திருந்த போது காயம் அடைந்து இரத்தம் வழிந்த போதும் அவர்களுக்கு மருத்துவம் பார்க்காமல் காலம் தாழ்த்தியது. போலிசின் பொறுப்புணர்ச்சியை அம்பலப்படுத்தி போலிசிடம் தோழர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். “அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றால் மட்டுமே முகவரியை தருவோம்” என தோழர்கள் போராடிய பிறகே மருத்துவணைக்கு அழைத்துச் சென்றது போலிசு.

கைதுசெய்கிற போது, “உடனே கைதாகியிருந்தால் காயம் ஏற்பட்டிருக்காது” என எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர்கள் கூறினர். “டாஸ்மாக்கை மூடினால் இந்த போராட்டமே நடந்திருக்காது” என்று தோழர்கள் பதில் கொடுத்த போது, எந்த பதிலும் கூறாமல் மெளனமானது.

ஒரு படி மேலே போய் டி.எஸ்.பி, “குடிப்பவர்களே திருந்தினால்தான் குடியை ஒழிக்க முடியும்” என்றார், இதற்கு, “திருடனே பார்த்து திருந்துவான் என்றால் போலிசு எதற்கு, சட்டம் எதற்கு?” என பதில் அளித்த போது பதில் சொல்ல முடியாமல் சிரித்தவாறே நழுவிக்கொண்டார்.

police-use-toilet-paper
“டாஸ்மாக் போராட்டத்தை ஜெயாவும், ஜெயா போலிசும் எவ்வாறு கொச்சைப்படுத்துகின்றனர்”

மக்களுக்கு வினியோகம் செய்துகொண்டிருந்த பிரசுரத்தை பிடுங்கிய போலிசு, அதை தோழர்களை கைது செய்து வைத்திருந்த வைத்திருந்த மண்டபத்தின் கழிவறையில் கொட்டியிருந்தது. இதை பார்த்த தோழர்கள் “டாஸ்மாக் போராட்டத்தை ஜெயாவும், ஜெயா போலிசும் எவ்வாறு கொச்சைப்படுத்துகின்றனர்” என்பதை தமிழக மக்களுக்கு உணர்த்தும் வகையில் இதை வினவு இணைய தளத்திற்கு அனுப்பினர்.

பிறகு அன்று மாலை 7 மணிக்கு விடுதலை செய்தனர்.

இப்போராட்டம் பகுதி மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. “டாஸ்மாக்கை மூடச் சொல்லி போராடினாலே இராணுவத்தை கொண்டு வந்து நிறுத்தியிருக்குறாங்க… என்னடா கொடுமை” என்று இளைஞர்கள் காறி உமிழ்ந்தனர். கடையில் கூட்டமாக நின்று கவனித்து கொண்டுயிருந்த சி.பி.ஐ யை சார்ந்தவர்களை பார்த்து அருகிலே இருந்தவர், “நீங்களும் சிவப்பு துண்டுதான் போட்டுயிருக்கிறீங்க, முடிஞ்சா அவங்கள மாதிரி போராடுங்க பார்க்கலாம்” என்று ஆதங்கத்தோடு அவர்களுக்கு உறைக்கும் வகையில் பேசினார். பூக்கடை வைத்திருக்கும் பெண்கள், “அரசாங்கத்துக்கு ஏதாவது சூடு சுரணை இருந்தா மெட்ராஸல பள்ளிகூடத்து பசங்க போராடும்போதே மூடியிருக்கனும்” என்று அரசினுடைய கையாலகதனத்தை அம்பலப்படுத்தினார். மேலும், “போராடினால் இவர்களை போலதான் உறுதியா போராடுணும்” என்று வியந்து பேசியதை பரவலாக காணமுடிந்தது.

எனவே இப்போராட்டமானது பகுதி மக்களிடையே போராட்ட வழிமுறையை கற்றுக்கொடுத்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் சரியான போராட்டம் என்பதனை உணர்த்தியும், புதிய உத்வேகத்தையும்,நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது.

தகவல்
மக்கள் அதிகாரம்
தருமபுரி
8148573417

4. கடலூர் தீர்த்தங்கரை

டலூர் மாவட்டம், தீர்த்தங்கரை கிராமத்தில் டாஸ்மாக் முற்றுகை போராட்டத்தை ஒட்டி டாஸ்மாக் கடை 5-ம் தேதி மூடப்பட்டிருந்தது

 சிதம்பரம் டி.எஸ்.பி சுந்தரவடிவேல் மக்களிடம் பேச்சுவார்த்தை

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
கடலூர் மாவட்டம்

5. விழுப்புரம் ஏனாதிமங்கலம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியம் ஏனாதிமங்கலம் கிராமத்தில் பள்ளிக்கு அருகாமையில் இருக்கும் டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்பது அக்கிராமத்தில் ஆய்வு செய்ததன் அடிப்படையில் தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த டாஸ்மாக் கடையால், ஏனாதிமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள எரலூர், மேலமங்கலம், புதுப்பாளையம் ஆகிய கிராம மக்களும் பாதிப்படைகிறார்கள் என்பதால், மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள் அக்கிராம மக்களுடன் மூன்று நாட்கள் தங்கி அவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர்.

மகளிர் குழுக்கள் மூலம் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என கூட்டிப் பேசிய போது,  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். அவர்களிடம், இந்த அரசு யாருக்கானது என்பதையும், டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க இலக்கு தீர்மானித்து மக்களைக் குடிகாரர்களாக்கும் அரசும், ஓட்டுக்கட்சிகளும் எப்படி கடையை மூடுவார்கள் எனவும் விளக்கிப் பேசப்பட்டது. மேலும், ஓட்டுக்கட்சிகள் தாங்கள் ஆட்சிக்காலத்தில் நிகழ்த்தும் லஞ்சம், ஊழல் முறைகேடுகளையும், நிர்வாக சீர்கேடுகளையும் மக்கள் கேள்வி கேட்காத வகையில் மந்தைகளாகவும், எதையும் யோசிக்காத காட்டுமிராண்டிகளாகவும் இருக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றனர். இவர்கள் எப்படி டாஸ்மாக்கை ஒழிப்பார்கள் எனவும் விளக்கிப் பேசப்பட்டது. எனவே, இந்த அரசும் ஓட்டுக்கட்சிகளும் கடையை மூடமாட்டர்கள், மக்கள் நாம் நினைத்தால் இன்றே கடையை மூட முடியும். இதற்கு கடலூர் மாவட்டம் மேலப்பாலையூர் கிராம மக்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர் என உதாரணங்களோடு விளக்கிப் பேசப்பட்டது. இப்போது மதுவிலக்கு எனப் பேசுவது கூட எப்படியாவது ஓட்டு வாங்கி பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என்ற வெறி தான் காரணம் என்பதையும் விளக்கிப் பேசப்பட்டது.

பிரச்சாரத்தின் போது, தேர்வில் வெற்றி பெற்ற எட்டாம் வகுப்பு மாணவன் அவ்வெற்றியை நண்பர்களுடன் கொண்டாட டாஸ்மாக் சாராயத்தைக் கேட்டுள்ளான். கொடுக்க மறுத்த கடை ஊழியரிடம், யார் கொடுத்தாலும் காசு காசு தானே என வாக்குவாதம் செய்து, காசு கொடுத்தா சரக்கு கொடுக்க வேண்டும் என சண்டை போட்டு சாராயம் வாங்கிச் சென்று நண்பர்களுக்கு விருந்து வைத்துள்ளான். பிஞ்சு வயசுலேயே கேட்டுப் போகிறார்கள் என ஒருவர் சொல்லி தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

நமது பிரச்சாரம் மக்களிடம் புது நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ஆனால், ஏனாதிமங்கலம் கிராமத்தில் அ.தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர், தான் இம்முறை எம்.எல்.ஏ சீட்டு கேட்டுள்ளதாகவும், அதனால் அம்மா சாராயத்தை எதிர்க்க முடியாது என பகிரங்கமாக தெரிவித்தார். மக்களின் நலனை விட தனது பதவி தான் முக்கியம் என நினைக்கும் ஜெயாவைப் போலவே அவரது அடிமைகளும் இருக்கிறார்கள் என மக்கள் உணர்ந்து கொண்டனர். அக்கிராமத்தின் அதிமுக குண்டர்களோ, நாங்கள் இருக்கும் போது எங்கள் கிராமத்து மக்களுக்கு நல்லது செய்ய நீ யார் என ஜெயாவின் பாசிச குணத்தை அப்படியே வாந்தி எடுத்தனர். அதிமுக அடிமைகள் தாங்கள் ஜெயாவுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்பதை தங்களது நடவடிக்கைகளாலேயே நிரூபித்துக் கொண்டனர்.

தொடர்ந்து பிரச்சாரம் செய்து, சுற்றுவட்டார கிராம மக்களிடம் கையெழுத்து வாங்கி நூறுக்கும் மேற்பட்ட மக்களுடன் பேரணியாகச் சென்று மனுவை விழுப்புரம் கோட்டாட்சியரிடம் கொடுத்து, மே-5-ம் தேதிக்குள் கடையை மூட வேண்டும் இல்லையெனில் மக்களே மூடுவோம் என ஆணையிட்டு வந்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

வழக்கம் போலவே எருமைமாட்டு தடித்தோல் கொண்ட அரசு அதிகாரிகள் இம்மனுவையும் குப்பைக் காகிதமாக மதித்தனர். ஆனால், மக்கள் ஏற்கனவே அறிவித்த அடிப்படையில் மே-5 ஆம் தேதி காலையிலேயே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குறிப்பிட கடையை மூட அணிதிரண்டு பேரணியாகச் சென்றனர். டாஸ்மாக் கடையைக் காவல் காக்க போலிசின் பெறும் படை கடையை முற்றுகையிட்டுக் காவல் காத்தது.   போலிசு படையைப் பொருட்படுத்தாமல் மக்கள் முன்னேற, மக்களையும் மக்கள்  அதிகாரத் தோழர்களையும் தடுத்தது போலிசு. நாங்கள் என்ன தவறு செய்தோம், எங்களை எதற்கு தடுக்கிறீர்கள் எனக் கேட்டு மக்கள் போலிசிடம் வாக்குவாதம் செய்தனர். நாங்கள் டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி ஏற்கனவே முறையாக கோட்டாட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம். அந்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியாமல் இந்த இடத்தை விட்டு செல்லமாட்டோம் எனச் சொல்லி போராடிய மக்களை பலவந்தமாக கைது செய்தது போலிசு.

ஏற்கனவே, கிராமத்தில் தங்கி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்த போது மிரட்டிய அ.தி.மு.க குண்டர்கள், மக்கள் போராடும் போது யார் உள்ளூர் வாசிகள், யாரை தனிமைப்படுத்துவது, யாரை மிரட்டுவது என ஆள் காட்டி வேலை செய்து தனது அடியாள் புத்தியைக் காட்டினர்.

நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை, நாங்கள் கொடுத்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கோட்டாட்சியர் விளக்கமளிக்க வேண்டும், அது வரை போலிசுக்கு எந்த ஒத்துழைப்பும் தரமாட்டோம் என்று சொல்லி கைதான மக்களும் மக்கள் அதிகாரத் தோழர்களும் உண்ணாவிரதத்தை அறிவித்தனர். போலிசும் பலவாறு பேசிப் பார்த்தது. ஆனால், மக்கள் அசைந்து கொடுக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்ட போலிசு எந்த வழக்கும் போடாமல் மக்களை விடுவிப்பதாக அறிவித்து இடத்தைக் காலி செய்தது.

எங்கள் ஊரில் உள்ள டாஸ்மாக் கடையை மூடாமல் எங்கள் போராட்டம் ஓயாது என்று அறிவித்த மக்கள் மக்கள் அதிகாரம் தோழர்களுடன் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்:
மக்கள் அதிகாரம்
திருவெண்ணை நல்லூர் வட்டாரம்

எழுந்தது மக்களின் அதிகாரம் – உணர்வூட்டும் போராட்டச் செய்திகள் !

5

1. ஆனைவாரி

shutdown-tasmac-anaivari-siege-1005-05-2016 வியாழன் அன்று சுமார் காலை 10.30 மணி அளவில் ஆனைவாரி பகுதி சுற்று வட்டார மக்களை மக்கள் அதிகாரத்தின் சார்பாக அணி திரட்டி கொண்டு டாஸ்மாக் கடையை மூடுவதற்கு தோழர்கள் பொதுமக்களுடன் “ஆனைவாரி டாஸ்மாக் கடையை மூடு” என்ற விண் அதிரும் முழக்கத்துடன் தோழர்கள் டாஸ்மாக் கடை மூடுவதற்காக சென்றனர். கடை அருகாமையிலேயே காவல் துறையின் சுமார் 100-க்கு மேற்பட்டோர் தடுத்து நிறுத்தினர். கடை அருகில் போகாமலே 10 நிமிடத்திற்கு மேலாக முழக்கமிட்டனர். அப்போது மக்களிடம் பேசிய தோழர் முருகானந்தம், “காவல் துறையினருக்கு இங்கு வேலையில்லை, காவல் துறையால் டாஸ்மாக்கை மூட முடியாது. கடந்த 02-05-2016 அன்று சிதம்பரம் ஆர்.டி.ஓ-விடம் கடையை மூடுவதற்கு மனுகொடுத்தோம். இன்று வரை மூடவில்லை. ஆர்.டி.ஓ-வை இங்கு வரசொல்லுங்கள்” என்றதற்கு போலீசு, “அவருக்கு தேர்தல் வேலை இருப்பதாக” கூறினர்.

“சரி அவர் தேர்தல் வேலையை பார்க்கட்டும். நாங்களே மூடிக்கொள்கிறோம். டாஸ்மாக் கடையை உடனடியாக மூடாமல் இங்கிருந்து போவதில்லை” என்று கூறிவிட்டு தொடர்ந்து முழக்கமிட்டனர்.

உடனே காவல் துறை, “நீங்கள் சொல்லுவதை எல்லாம் கேட்க முடியாது. உங்களை கைது செய்கிறோம். உடன் வண்டியில் ஏறுங்கள்” என்று கூறி மிக வலுக்கட்டாயமாக தோழர்களையும், ஊர்மக்களையும் தள்ளியும் தூக்கிக்கொண்டும் கைது செய்து வண்டியில் ஏற்றினர்.

இந்த போராட்டத்தில் மக்கள் அதிகாரத்தோழர்கள் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டனர். புவனகிரி தி.மு.க மாணவரணி நிர்வாகி பாலசுப்ரமணியன் இணைந்து கைதானார். அருகாமையில் உள்ள எறும்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து உள்ளனர். அங்கு கடையை மூடாமல் சாப்பிட முடியாது என காவல் துறையினர் அளித்த உணவை மறுத்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.

உடன் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் / PUSER நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் காவல் துறையிடம் பெயர் ஏதும் தறாமல் மறுத்தனர். காவல் துறை வழக்கறிஞரை சந்தித்து, “உங்கள் தோழர்கள் பெயர் தர ஒத்துழைப்பு தறாமல் மறுக்கின்றனர். நீங்கள் தயவு செய்து பெயர் தர வேண்டும் சொல்லுங்கள்” போயி கெஞ்சுகிறது. மண்டபத்தில் உள்ள அனைத்து தோழர்களது போன்களை பறிமுதல் செய்து விட்டனர்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
விருத்தாசலம்

2. ஒசூர்

சூர் : பாகலூர் அருகிலுள்ள சத்தியமங்கலம் கேட் அருகே 100 கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவ்வழியே செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் ஒருவித பதட்டத்துடன் அந்தப் பகுதி முழுவதும் இருந்தது.

இந்நிலையில் சத்தியமங்கலம் கேட்டுக்கு அருகே இருக்கின்ற இரண்டு டாஸ்மாக் சாராயக் கடைகளையும் முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்த மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள், சத்தியமங்கலம் கிராமத்தில் தெருத்தெருவாக சென்று பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என ஊர்வலமாக திரண்டு முழக்கமிட்டபடியே அணிதிரட்டிக்கொண்டிருந்தனர்.

தோழர்கள் அணிதிரட்டிக்கொண்டிருப்பதை அறிந்த போலீசு ஊருக்குள் வந்து தோழர்களையும், ஊர்மக்களையும் பிளவுபடுத்தும் சதிவேலைத்திட்டத்தோடே அணுகியது. குறிப்பாக, “தேர்தல் நேரம் என்பதால் இங்கே யாரும் கூட்டம் கூடக்கூடாது. சட்டம் ஒழுங்கு பாதிக்கும்” என்ற வழக்கமான அறிவிப்பை மிரட்டும் தொனியிலும், நைச்சியமான முறையிலும் கூடியிருந்த தோழர்கள் மக்களிடம் முன்வைத்தது.

அதற்கு தோழர்கள், “டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடுவது எங்களது உரிமை என்றும், நாங்கள் உழைக்கும் மக்கள்! எங்கள் ஊரில் டாஸ்மாக் வேண்டாம் என்றுதான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். கடையை மூடினால் பிரச்சனை ஏதுமில்லை. எங்களால் எப்போதும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படுவதில்லை. கடையை மூடினால் நாங்கள் போராட்டத்தை விலக்கிக்கொள்கிறோம். இல்லையேல், டாஸ்மாக்கை மூடும் வரை நாங்கள் எங்களின் முற்றுகைப் போராட்டத்தை தொடர்வோம்” என்றனர்.

“கடையை மூடுவதற்கெல்லாம் எங்களுக்கு அதிகாரம் இல்லை, நீங்கள் போராட்டம் நடத்தினால் நாங்கள் கைது செய்து ரிமாண்ட் செய்வோம்” என்று அச்சுறுத்தியது போலிசு. போலீசின் மிரட்டலுக்கு பணியாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். ஊர்வலமாக முழக்கமிட்டபடியே முற்றுகையிட சென்றனர். சத்தியமங்கலம் கேட் அருகில் ஏற்கனவே குவிக்கப்பட்டிருந்த போலீசு ஊர்வலமாக வந்த மக்களை சுற்றி வளைத்தது. பெண்கள் போலீசை முற்றுகையிட்டு டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக் கோரினர். வாதாடினர்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

உடனடியாக, அதிகார போதையேறிய போலீசு திமிராக அவர்களை தரதரவென இழுத்துச் சென்று வேனில் ஏற்றியது. உள்ளுர் மக்கள்,வேடிக்கை பார்த்தவர்கள் என எல்லோரையும் கைது செய்தது. மேலும் கைதாகாமல் ஒதுங்கிய பெண்கள், முதியவர்களை கேவலமான முறையில் விரட்டிச் சென்றது. மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், ரமேஷ் உள்ளிட்ட அணைவர்களையும் கைது செய்தது. அது மட்டுமில்லாமல், சாலையில் நிற்பவர்களையும் பேருந்து நிலையத்தில் நிற்பவர்களையும் கைது செய்வதாக மிரட்டி விரட்டியது. மேலும், போலீசுக்குத் துணையாக அ.தி.மு.க-வினர் இணைந்து கொண்டு உள்ளூர் மக்கள் யார், வெளியூர் மக்கள் யார் என காட்டிக் கொடுக்கும் வேலையை செய்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
ஒசூர்

3. அன்பில், திருச்சி

trichy-anbil-shutdown-tasmac-siege-21திருச்சி பகுதியின் புறநகர் பகுதியான லால்குடி வட்டத்தில் உள்ள அன்பில் கிராமத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூட மே 5 கெடு விதித்து 2-ம் தேதி மாவட்ட ஆட்சியரின் உதவியாளரிடம் மக்கள் அதிகாரமும், ஊர்ப்பொதுமக்களும் இணைந்து மனுகொடுத்தோம். அதையொட்டி மக்கள் அதிகார தோழர்கள் அப்பகுதியில் உள்ள கிராமங்களில் தங்கி, மக்கள் கலை இலக்கியக் கழக கலைக்குழுவின் பாடல்களுடன் தெருமுனைப் பிரச்சாரமும், பரவலாக சுவரொட்டி விளம்பரமும் செய்தோம். கெடு விதித்து மக்கள் மத்தியில் தங்கி வேலை செய்ததால் பீதியடைந்த அரசு 04-05-2016 இரவு 9.30 மணி முதலே மக்களிடமிருந்து சாராயக் கடையை ‘பாதுகாக்க’ 2 போலீசை நிறுத்தியதுடன், அதிகாலை 6 மணி முதல் தீயணைப்பு வாகனம், 50-க்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சகிதமாக நிறுத்தியிருந்தனர். 3 கி.மீ முன்பே தடையரண்கள் அமைத்து போக்குவரத்தை மாற்றிவிட்டனர்.

உள்ளூர் பகுதியில் உள்ள முன்னணியாளர்களுக்கு அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்வது, உளவு பார்ப்பது போன்ற வேலைகளை செய்து வந்தது. மேலும், மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதை தடுக்க அப்பகுதியில் மக்களை அணிதிரட்டிய நம் தோழர்கள் உட்பட 4 பேரை கைது செய்து பீதியூட்டும் முயற்சியில் ஈடுபட்டதுடன், பல பகுதிகளிலிருந்து, 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாகனங்களில் வந்திறங்கியதை கண்டு, டாஸ்மாக் பாதுகாப்பு டியூட்டியில் ஈடுபட்ட போலீசாரை (போராடும்) மக்கள் கூடும் இடத்திற்கு 200 மீட்டருக்கு முன் வரவழைத்தது.

திருச்சி பகுதி மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் தோழர் தர்மராஜ் போராட்டத்தை பற்றி விளக்கினார். தமிழக விவசாய சங்கத்தை சேர்ந்த மா.பா. சின்னதுரை, ஆதிதமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 [படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அதன் பின் ம.க.இ.க மைய கலைக் குழுவின் பாடல்கள் பாடப்பட்டது. இதற்கிடையே, காவல்துறை ஆய்வாளர் பாலாஜி, தாசில்தார் ஜெயக்குமார் ‘பேச்சுவார்த்தை’க்கு வந்தனர். அவரிடம் மக்களின் கோரிக்கைகளை தோழர் தர்மராஜ் விளக்கினார். “தற்போதைக்கு மூடுவது சாத்தியமில்லை” எனக் கூறியவர், “கலெக்டரை சந்திக்க 10 பேர் வாருங்கள்” என அழைத்தார். “மக்கள் முன்பு விவாதிக்கலாம்” எனக் கூறியதற்கு, “எப்படிங்க மக்கள் முன்னாடி பேச முடியும்” என்றார். மேலும், “என்னைப்பற்றி இப்பகுதி மக்களிடம் நல்லபெயர் உள்ளது” எனக் கூறியதும், அதற்கு காவல் ஆய்வாளர் சர்டிபிகேட் கொடுத்தார்!

“கோரிக்கையை மக்கள் முன்பு தான் விவாதிக்க வேண்டும்” என அவரை அழைத்து மக்கள் முன் நிறுத்தி தாசில்தார் கூறியதை மக்களிடம் சொன்னது தான் தாமதம், மக்கள் தங்கள் வேதனையை (குடித்துவிட்டு கணவன் அடிப்பது, வீட்டிலுள்ள பானைகளை உடைப்பது, தாய் முன்பே நிர்வாணமாக நிற்பது, உணவில் சிறுநீர் கழிப்பது) கொட்டித் தீர்த்தனர். ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல், “கடையை மூடவில்லையென்றால் பால் டாயிலை குடித்து இங்கேயே சாகப்போகிறோம், தீக்குளித்து சாகப்போகிறோம்” என தங்கள் கையறு நிலையை ஆத்திரமாக வெளிப்படுத்தினர். இதற்கு பதில் சொல்ல முடியாத தாசில்தார் பின்வாங்கினார்.

ஒரு மணி நேரத்திற்கு பின் ஏ.டி.எஸ்.பி நடராஜனுடன் வந்தவர், “கலெக்டரிடம் பேசியதில் ‘விதிமுறைப்படி’ அமைந்துள்ள கடையை உடனடியாக எடுப்பது சாத்தியமில்லை” என விளக்கம் கொடுத்தார்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள், குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CRPC) பிரிவு 133-ன் படி அமைதிக்குலைவு ஏற்படுத்தக் கூடிய தடைகளை நீக்க தாசில்தாருக்கு அதிகாரம் இருப்பதை சுட்டிக்காட்டியும் ஏற்க மறுத்து, கடையை மூடுவது பற்றி மூன்று நாள் கழித்து பதில் சொல்வதாகவும், இதை ஏற்கவில்லையென்றால் ‘சட்டவிரோதமாக’ கூடியுள்ளீர்கள் எனக் கலைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். 3 நாளில் நடவடிக்கை எடுப்பது பற்றி எழுத்துப்பூர்வமாக கேட்டதற்கு சரி எனக்கூறி நழுவி காரில் ஏறி தப்பினார்.

அதன் பின் மக்களை அச்சுறுத்தும் வகையில் போலீசார் நெருங்கினர். இதை முன் கூட்டியே கணித்த நம் தோழர்கள், ஏற்கனவே மனிதச் சங்கிலித் தொடர் அமைத்து மக்களுக்கு அரணாக நின்றனர். மக்களிடம் நடந்ததை விளக்கியதில், “டாஸ்மாக்கை மூடவில்லையென்றால் நாங்கள் அனைவரும் கைதாகத் தயார்” என போர்க்குணமாக ஒரே குரலில் முழக்கமிட்டனர். அவர்கள் விருப்பத்திற்கிணங்க கைதாக முடிவெடுக்கப்பட்டு அனைவரும் கைதாகினர்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவை கையாள கடையை மூடுவது, கைது செய்வது என்ற இருவேறு வழிமுறைகளில் கைது செய்வதை தேர்ந்தெடுத்ததின் மூலம் இந்த அரசமைப்பு மக்களுக்கு எதிராக உள்ளதை நிரூபித்துள்ளது அதிகார வர்க்கம்! இனி அதிகாரத்தை கையிலெடுப்பதைத் தவிர மக்களுக்கு வேறு வழியில்லை என்பதை உணர்த்தியுள்ளது இப்போராட்டம்!

மண்டபத்தில் அடைக்கப்பட்ட பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர். மக்களை உற்சாகப்படுத்த போராட்ட அனுபவகள் மற்றும் ம.க.இ.க மையக் கலைக்குழு தோழர்களின் புரட்சிகர பாடல்கள் இடம் பெற்றன. டாஸ்மாக் கடையை மூடும் வரை போராடலாம் என கோரியதன் அடிப்படையில் உள்ளேயே கையெழுத்து போடாமல் எதிர்ப்பை பதிவு செய்தோம். காவல்துறை உயர்அதிகாரிகள் பலர் வந்து பேசியும் மக்கள் உறுதியாடு இருந்ததால் இறுதியில் சப்கலெக்டர் வந்து மக்களிடம் பேசியும் பயனில்லை மக்கள் அதிகாரத் தோழர்களும்,பொது மக்களும் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாத அதிகாரி, “என்னால் எதுவும் செய்ய முடியாது எனக்கு அதிகாரம் இல்லை” என தெரிவித்தனர். உடனே ஊர் மக்களில் இருந்த சாந்தி என்ற பெண்மணி சப்கலெடரிடம் “அப்போ அதிகாரம் இருப்பவர்களை வரச்சொல்லுங்க நீங்க கிளம்புங்க” என கூற அதிகாரிகள் அதிர்சியில் உறைந்தனர்.

பிறகு, “எவரும் கையெழுத்து கூட போட வேண்டாம் உங்களை கூட்டிட்டு வந்த வேனிலேயே கொண்டு போய் விட்டு விடுகிறோம். நாளை ஒரு வாரத்திற்குள் டாஸ்மாக்கை மூடுவதற்கான நகலை தருகிறேன். நீங்கள் தற்போது கிளம்புங்கள்” என காவல்துறை அதிகாரி கெஞ்சி நிற்க, “அதிகாரிகள் உரிய தேதிக்குள் சொன்னதை செய்ய மறுத்தால் நாம் இன்னும் மக்களை அதிகப்படியாக திரட்டி நாமே டாஸ்மாக்கை மூடுவோம்” என மக்களுடன் கூடி பேசி முடிவெடுத்து அறிவித்தோம்.

இரவு மண்டபத்தை விட்டு அனைவரும் போராட்ட குணம் குறையாமல் சென்றது காவல் துறையினரை வியப்பில் ஆழ்த்தியது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
திருச்சி கிளை.

4. விழுப்புரம்


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

5. கோவை

கோவைப் பகுதியில் கோவை, உடுமலை, கோத்தகிரி என மூன்று இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூடும் போராட்டம் நடைபெற்றது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

 

6. மதுரை

மதுரை, யா.ஒத்தக்கடையில் “டாஸ்மாக்கை மூடு” என மக்கள் அதிகாரம் முற்றுகை

மே 5 அன்று காலை 11 மணிக்கு, யா.ஒத்தக்கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை “நாமே மூடுவோம், அரசு மூடாது” எனக் கூறி1௦௦ க்கும் அதிகமான மக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக சென்று டாஸ்மாக் கடையை முற்றுகை இட்டனர்.

அதிகாலை முதலே, ஒத்தக்கடையில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளுக்கும் இரும்புத் தடுப்பரண்கள் அமைத்து பெரும் போலீசுபடையே காவல் காத்து வந்தது.

திடிரென பேரணியாக வந்தவர்களை பாய்ந்து வந்து மறித்தது போலீசு. மக்களோ, போலீசை தள்ளி விட்டு விட்டு டாஸ்மாக் கடையை நோக்கி விண்ணதிரும் முழக்கங்களுடன் முன்னேறினர். இரும்புத் தடுப்புகளின் பின்னே பாதுகாப்பாக நின்று கொண்டு சாராயக்கடையை மக்கள் நெருங்க விடாமல் தடுக்கப் பார்த்தது போலீசு.

அந்தத் தடுப்பரண்களையும் தள்ளிக்கொண்டு முன்னேற முயன்றனர் மக்கள். சுற்றி வளைத்த போலீசு, பின்னணியில் நின்றவர்களை அடித்தும், இழுத்துச் சென்றும் அப்புறப் படுத்தியது. எஞ்சியவர்கள் விடாது போலீசுடன் மல்லுக் கட்டினர். மக்களையும்தோழர்களையும் அடித்தும் இழுத்துச சென்றும் காவல் வாகனத்தில் ஏற்றியது போலீசு. ஒவ்வொரு நபரையும் கைது செய்ய மூன்று நான்கு போலீசார்போராடினர்.

பெண் தோழர்களையும் கூட அடித்து வேனில் தூக்கி எறிந்தனர் ஆண் போலீசார்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

மண்டபத்தில் அடைக்கப்பபட்ட உடன் அனைவரும் பாடல்கள் பாடுவது, உரைகள் நிகழ்த்துவது என முறையாக நிகழ்ச்சிகளை நடத்தத் துவங்கினர்.

பெயர், முகவரி கொடுக்க போலீசு அழைத்தபோது செல்லாமல், தலைமையிடம் கேளுங்கள் என போலீசிடம் கூறினர். தலைமையின் வழிகாட்டல் படி பெயர் முகவரி குடுக்க முடியாதென்றும், டாஸ்மாக் அதிகாரி வரவேண்டும் என்றும் கூறினர். அதுவரை போலீசு வழங்கிய உணவையும் ஏற்க முடியாது என கூறிவிட்டனர்.

பெயர் கொடுக்காவிட்டால் ரிமாண்டு செய்து விடுவோம் என மிரட்டிய போலீசை யாரும் கண்டு கொள்ளவே இல்லை.

மாலை 7.3௦ வரை அதிகாரிகள் யாரும் வரவில்லை. தோழர்களும் போராட்டக் கனலை அனையவிடவே இல்லை. இறுதியில், ஒத்தக்கடை வி.எ.ஓ மற்றும் ஆர்.ஐ. வந்தனர். குறிப்பிட்ட டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என கேட்ட போது, தற்போது தேர்தல் நேரம், பிறகு பார்க்கலாம் என கூறினர். தோழர்கள் ஏற்கமறுத்து உடனே மூட வேண்டும் என கூறினர். முற்றிலும் சட்ட விரோதமாக நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கடையை மூட என்ன தயக்கம் என கேட்டனர். உடன், எங்களுக்கு அதிகாரம் இல்லை என்றனர். எனில், அதிகாரம் உள்ளவரை வரச் சொல்லுங்கள் என கூறிவிட்டு, நிகழ்ச்சிகளில் மூழ்கினர் தோழர்கள்.

பெயர்,முகவரியும் வாங்க முடியவில்லை, பேச்சு வார்த்தையும் வெற்றியடையவில்லை, “என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை” என விழி பிதுங்கிய போலிசு, மொத்தமாக மண்டபத்தை விட்டு வெளியேறியது. தனக்கும் தான் கைது செய்தவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல ஒதுங்கிக் கொண்டது.

மீண்டும் முழக்கங்கள் அதிர் வேட்டுகளாக வெடித்துச் சிதறின. ஓடி வந்த வி.எ.ஒ. “டெபுடி கலக்டர் வருகிறார் பொறுமையாக இருங்கள்” என கெஞ்சினார். தூழர்களோ, அவருக்காக நாளெல்லாம் காத்திருக்க முடியாது. வேண்டுமானால் இன்னும் ஒரூ பத்து நிமிடம் இருக்கிறோம். அதற்குள் அவர் வந்தால் பேசலாம். இல்லாவிட்டால், இன்றைய போராட்டத்தை விட மிகச் சிறப்பான போராட்டம் விரைவில் நடத்துவோம். அப்போது பார்க்கலாம். என கூறிவிட்டனர்.

கூறிய நேரம் கடந்ததும், தோழர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி அவரவர்கள் குழுக்குழுவாக விவாதித்தபடி வெளியேறினார்கள்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

7. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பத்திரிகை செய்தி

டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது போலீசின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வண்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழகத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கடந்த ஓராண்டிற்கும் மேலாக மக்களைக் கொல்லும் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி போராடி வருவது அனைவரும் அறிந்ததே.

சட்டமன்றத்திலேயே டாஸ்மாக் கடைகளை மூட முடியாது என்று அறிவித்த பாசிச ஜெயா, தேர்தலில் மக்களை ஏமாற்ற – மீண்டும் ஆட்சியைப் பிடிக்க, படிப்படியாக கடைகளை மூடுவதாக பசப்பினார்.

இன்று தமிழகம் முழுவதும் 25 இடங்களுக்கும் மேல் போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது கண்மூடித்தனமாக போலீசு அடித்து இழுத்துச் சென்று கைது செய்தனர். பெண்களையும், குழந்தைகளையும் கூட ஆண் போலீசார் வெறித்தனமாக அடித்தனர்.

தமிழக மக்கள் தொலைக்காட்சிகளில் இந்த கொடுமைகளைப் பார்த்து வெதும்புகின்றனர்.

டாஸ்மாக் கடைகளை மூடும் வரை இந்த போராட்டத்தை அனைத்து மக்களும் ஆதரிக்க வேண்டுமென கோருகிறோம்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி, போராடும் தோழர்களை வாழ்த்துகிறது. எந்த அடக்குமுறைக்கும் அஞ்சாமல் போராட்டம் தொடரும் என மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் அறிவித்துள்ளார். அனைவரும் ஆதரவு தருங்கள்.

அ.முகுந்தன்,
தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தமிழ்நாடு

8. மக்கள் கலை இலக்கியக் கழகம் பத்திரிகை செய்தி

டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுப் போடும் ‘மக்கள் அதிகாரம்’ போராட்டம்
தமிழகம் முழுவதும் 1000 பேர் கைது!
சென்னையில் நூற்றுக் கணக்கில் கைது

இன்று 05-05-2016 அன்று காலை சென்னையை அடுத்து பொன்னேரி நாப்பாளையம் மற்றும் மதுரவாயல் நொளம்பூரில் போராட்டம் நடத்தப்பட்டு மூன்று கடைகளுக்கு பூட்டு போடப்பட்டது. பெண்கள் மற்றும் சிறுவர் நூற்றுக்கணக்கானவர் மீது “ஜெ”வின் போலீஸ் தடிஅடி நடத்தியது. பெண்களின் சேலைகள் கிழிக்கப்பட்டன. மண்டை உடைத்து ரத்த காயத்தோடு தரதரவென்று இழுத்துச் சென்று வேனில் தூக்கி எறியப்பட்டனர்.

2. கொந்தளிப்பில் உள்ள உள்ளூர் மக்கள் நாளை மீண்டும் கடை திறக்கப்பட்டு நடக்குமானால் நிரந்தரமாக மூடப்படும் வரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து போராடுவோம். கைது செய்யப்படுவதற்கு அஞ்சவும் மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.

3. போராடியவரைத் தாக்குகின்ற ‘ஜெ’ அரசு, ‘படிப்படியாக மூடுவேன்’ என்று பேசுவது தேர்தல் பசப்பும் வெற்றுப் பேச்சுமே ஆகும்; ஜெயா அரசை தூக்கி எறியாமல் உழைக்கும் மக்களுக்கு வாழ்வு இல்லை; சாராய போதையில் இருந்து தமிழக மக்களுக்கு விடுதலையும் இல்லை. இச்செய்தியை தமிழகம் முழுவதும் எழுச்சியாக தீ பரவுவது போத அறிவித்துள்ள மக்கள் அதிகாரம் மற்றும் போராடிவரும் மக்களுக்கு எங்கள் ம.க.இ.க சார்பில் புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வே.வெங்கடேசன்,
செயலாளர்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை மாவட்டம்

மூடு டாஸ்மாக்கை – மதுரவாயல், பென்னாகரம், கோவில்பட்டி – படங்கள்

0

மதுரவாயல் போராட்டத்தில் போலீசு கொலைவெறித்தாக்குதல்.

மே 5 ஆம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பு கெடு விதித்திருந்தது. குறிப்பிட்ட தேதிக்குள் மூடாவிட்டால் மக்களை அணிதிரட்டி நாங்களே மூடுவோம் என்றும் கூறியிருந்தது.

அதன்படி இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூடும் போராட்டம் காலை துவங்கியது. சென்னையில் மதுரவாயல், பொன்னேரி, மீஞ்சூர்..  மூன்று இடங்களில் போராட்டம் நடந்தது. மதுரவாயல், பொன்னேரி, மீஞ்சூர்.. மதுரவாயலில் போலீசு கும்பல் மக்களை மிகவும் கொடூரமான முறையில் தாக்கியுள்ளது.

மதுரவாயல் நொளம்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி பகுதி மக்களுடன் இணைந்து காலை 11.30 மணிக்கு மக்கள் அதிகாரம் தோழர்கள் போராட்டத்தை துவங்கினர். இன்று போராட்டம் என்று அறிவித்திருந்தும் திமிருடன் கடைக்கு முழுப் பாதுகாப்பு போட்டு திறந்து வைத்திருந்தது ஜெயா அரசு. தோழர்களும் மக்களும் கடையை மூடக்கோரி முழக்கமிட்டவாறே பூந்தமல்லி சாலையை கடந்து கடையை நோக்கி முன்னேறத்துவங்கியதும், இதற்காகவே காத்திருந்த வெறிகொண்ட மிருகம் போல அனைவரையும் காட்டுமிராண்டித்தனத்துடன் தாக்கத் துவங்கியது போலீசு.

பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் என்று அனைவரையும் கொடூரமாக தாக்கினர். லத்திக்கம்புகளைக் கொண்டு நாலா பக்கங்களிலிருந்தும் நிராயுதபாணிகளான தோழர்களையும் மக்களையும் சுழற்றி சுழற்றி அடித்தனர். இந்த தாக்குதலில் அனைவருக்கும் மிகக்கடுமையான காயங்கள் ஏற்பட்டது. சத்யா என்கிற பெண்ணின் மண்டையை உடைத்துவிட்டனர். தற்போது அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆகாஷ் என்கிற 16 வயது பள்ளி சிறுவனை வயிற்றிலும், நெஞ்சிலும் கடுமையாக தாக்கியதில் முச்சுத்திணறல் ஏற்பட்டு அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

வண்டியில் ஏற்றிய பிறகும் உள்ளுக்குள் வைத்து தாக்கியுள்ளனர். அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கின்றனர். கைதானவர்களை பார்க்கச் சென்ற தோழர்களையும் உறவினர்களையும் கூட போலீசு தாக்கியுள்ளனர்.

பிற்சேர்க்கை: மாலை 5.00 மணி

இன்று காலை மதுவரவாயல் டாஸ்மாக் மூடும் போராட்டத்தில் ஈடுப்பட்டு சிறைபிடிக்கப்பட்ட மக்கள் அதிகாரம் மற்றும் மக்கள் உண்ணாநிலை போராட்டம்!

மதுரவாயல் ரேசன் கடை அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூடும் போராட்டத்தில் ஈடுப்பட்ட அப்பகுதி மக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல் 24 பேர் படுகாயம். பெண்களுக்கு மண்டை உடைப்பு. தற்போது மதுரவாயல் பாக்கிய லட்சுமி மண்டபத்தில் சிறைவைப்பு. படுகாயம் அடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்காததை எதிர்த்து மதிய உணவு சாப்பிட மறுத்து  உண்ணாநிலை போராட்டம்.

image6

 

image5

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
———————————————————————————–
மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெளியிடும் கண்டன அறிக்கை
மீஞ்சூர் அருகில் உள்ள நாப்பாளையம் மற்றும் மதுரவாயலில் டாஸ்மாக் கடையை மூடு என்று போராடிய மக்கள் மீதும் மக்கள் அதிகாரம் தோழர்கள் மீதும் போலீசார் கொலைவெறி தாக்குதல் நடத்தியதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

பெறுநர்: ஆசிரியர்/நிர்வாகி அவர்கள் பத்திரிக்கை/தொலைக்காட்சி

அன்புடையீர்,

வணக்கம். கடந்த ஒரு வருட காலமாக டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பு தொடந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மே 5ம் தேதிக்குள் கடையை மூட வேண்டும் என்று எச்சரித்து மனு கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மதுரவாயல் நொளம்பூர் பகுதியிலும், மீஞ்சூர் அடுத்த நாப்பாளையம் பகுதியில் உள்ள இரு டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் என்று மக்கள் மனு கொடுத்து இருந்தனர். அதன் பின்னும் கடை அகற்றப்படாததால், அப்பகுதி மக்கள் இணைந்து கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளது. பெண்கள் என்றும் பாராமல், அவர்களின் ஆடைகளைக் கிழுத்தும், அவர்களைக் கீழே தள்ளி பூட்ஸ் காலால் உதைத்தும், வக்கிரமாக நடந்து கொண்டுள்ளனர். மதுரவாயலில் நடந்த போராட்டத்தில் சிறுவன் ஆகாஷ் மீது நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்து மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சத்யா என்ற 50 வயது மதிக்கத்தக்க பெண்மணியை மண்டையை உடைத்து இரத்த காயம் ஏற்படுத்தினர். மீஞ்சூரில் நடந்த போராட்டத்தில் ஒரு பெண்ணை ஆண் போலீசு வக்கிரமாக தாக்கியுள்ளார். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். ஜெயா போலீசின் இந்த நடவடிக்கைகளை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டிய காவல்துறை இன்று டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராடுகின்ற மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்துகிறது. முழுக்க முழுக்க மக்களுக்கு எதிரானதாக மாறிப்போய் உள்ளது. காவல்துறை மட்டும் அல்ல இந்த ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்புமே திவாலாகி, தோற்றுப்போய், நிலைகுலைந்து, எதிர்நிலை சக்தியாக மாறிவிட்டது. இவற்றை அகற்றிவிட்டு மக்கள் தங்களுடைய கையில் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஜெயா போலீசின் இந்த காட்டுமிராண்டித் தாக்குதலால், ஒரு நாளும் மக்கள் அதிகாரம் அமைப்பும், மக்களும் பின்வாங்கப்போவதில்லை. டாஸ்மாக் கடைகளை முழுமையாக அகற்றும் வரை இந்த போராட்டங்கள் தொடரும்.

இவண்
வெற்றிவேல் செழியன்
மண்டல ஒருங்கிணைப்பாளர்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்

__________________

பென்னாகரம்

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் இருக்கும் டாஸ்மாக்கை மூட கோரி போராடிய
நான்கு பெண்கள், இரண்டு கைக்குழந்தைகள் உட்பட போராடிய மக்கள், தோழர்கள் கைது !
பாசிச ஜெயா போலீசின் கொடுரமான காட்டு மிரண்டித் தாக்குதல் !

ன்பார்ந்த உழைக்கும் மக்களே

டாஸ்மாக்கை மூட போராடினால் தேசத்துரோகம் என்கிறது அரசு. போராடுபவர்கள் மீது காட்டுமிரண்டி தாக்குதலை தொடுத்து வருகிறது போலீசு. பென்னாகரம் பேருந்து நிலையத்திற்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து  தினமும் ஆயிரக்கனக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் மக்கள் இப்படி நெருக்கமாக கூடும் பேருந்து நிலையத்திலேயே டாஸ்மாக்கை திறந்து வைத்திருக்கிறது அரசு. இதனை மூட கோரி மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக பென்னாகரம் நகரம் மற்றும் அதனை சுற்றி இருக்கின்ற கிராமங்களில் உள்ள மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து  கடந்த 2/5/2016 தேதி தாசில்தார்/ தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டது. நாங்கள் மூடுவதாக  கூறி வாக்குறுதி கொடுத்தனர் அதிகாரிகள். 5 – ம் தேதிக்குள் மூடவில்லை எனில் மக்களை திரட்டி நாங்கள் மூடுவோம் என பகுதி வாழ் மக்கள் எச்சரித்து இருந்தனர்.

அப்போது பேசிய தேர்தல் அதிகாரி கண்டிப்பாக நடவடிக்கை இருக்கும் என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால் 5/5/2016 அன்று வரை அந்த கோரிக்கை நிறைவேறவில்லை என்பதாலேயே மக்கள் அதிகாரம் சார்பாக டாஸ்மாக்கை மூட சென்றனர். ஆயிரக்கணக்கான பெண்களின் தாலியை அறுக்கும் டாஸ்மாக்கை மூடுவற்கு பதிலாக நூற்றுக்கணக்கான வந்திருந்த  துணை ரானுவ படையினரை கொண்டு பேருந்து நிலையத்தில் குவித்திருந்தனர் அதிகாரிகள். ஆயிரக்கனக்கான மக்கள் கூடி இருக்கும்  பேருந்து நிலையத்தில் டாஸ்மாக்கை மூடு என போராடிய பெண்கள், கைகுழந்தைகள் என்று பாரபட்சம் பாராமல் எடுத்த எடுப்பில் தாக்குதல் தொடுத்தனர்.

போராட்டத்திற்கு கூடியிருந்த பொது மக்களை மிரட்டுகிற வேலையையும்  மக்களை கலைக்கும் வேலையையும் உள்ளூர் போலீசு   செய்தனர். போலீசு பட்டளத்தை கண்டு மிரளாத தோழர்கள் முழக்கமிட்டவாறே இருந்தனர். கைது  செய்ய முயற்ச்சித்த போது எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டதால் தரதரவென இழுத்து சென்றனர். தோழர் முத்துக்குமார், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் டாஸ்மாக் அதிகாரிகளை வரச்சொல்லுங்கள் என்று பேசி கொண்டு இருக்கும் போதே நூற்றுக்கணக்கான போலீசு  நான்கு பக்கமும் இழுத்து காட்டுமிரண்டித்தனமாக தாக்கினர். துணிந்து எதிர்கொண்ட தோழர்கள் பெண்கள் 35 பேர் கைதாகினர். இதில் 7 தோழர்களுக்கு ரத்த காயம் ஏற்ப்பட்டது நான்கு தோழர்களை பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தேர்தலில் ஓட்டுக்காக ஊருக்குஊரு எல்லா கட்சிகளும் பணத்தை வினியோகம் செய்து வருகின்றனர். இதற்கு பாதுகாப்பாக இருப்பது தேர்தல் அதிகாரிகள் தான், மாலை கொடுக்கிற பணத்தை மீண்டும் காலையே டாஸ்மாக்கில் வசூல் செய்து கொள்கின்றனர். இந்த மானகெட்ட வேலைக்கு பெயர் தேர்தல் அதிகாரியாம் ? தோற்றுபோன இந்த அரசமைப்பை காறி உமிழ்வோம்.  டாஸ்மாக்கை மூடும் வரை போராட்டத்தை போராடுவோம்.

மக்கள் அதிகாரம்
தருமபுரி.
8148573417

______________________

 

20160505_111526_13665

20160505_112142_3137

 

 

மக்கள் அதிகாரத்தின் துண்டுப் பிரசுரங்களை பிடுங்கி கழிப்பறையில் வீசியிருக்கும் தருமபுரி போலீசு!

police-use-toilet-paper

 

கோவில்பட்டி போராட்டம் – படங்கள்:

கோவில்பட்டி

டாஸ்மாக்கை மூடு – தமிழகம் போர்க்களமானது – வீடியோ

9

மதுரவாயல்

புமாஇமு மாநில ஒருங்கிணைப்பாளர் வெளியிடும் கண்டன அறிக்கை

மதுரவாயலில் டாஸ்மாக் கடையை மூடு என்று போராடிய மக்கள் மீதும் மக்கள் அதிகாரம் தோழர்கள் மீதும் போலீசார் கொலைவெறி தாக்குதல் நடத்தியதை பு.மா.இ.மு வன்மையாக கண்டிக்கிறது.

பெறுநர்: ஆசிரியர்/நிர்வாகி அவர்கள் பத்திரிக்கை/தொலைக்காட்சி

அன்புடையீர்,

வணக்கம். சென்னை மதுரவாயல் ரேசன் கடை அருகில், உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று மதுரவாயல் நொளம்பூர் மாதாகோயில் நகர், ஓம் சக்தி நகர் ஆகிய பகுதிகளை சார்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்டு கடந்த 2-ம் தேதி மனு கொடுத்து எச்சரித்திருந்தனர். அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படாததால், மேற்படி பகுதிகளை சார்ந்த மக்களை அப்பகுதி டாஸ்மாக் எதிர்ப்பு குழுவும், மக்கள் அதிகாரமும் ஒருங்கிணைத்து, இன்று காலை 11.30 மணி அளவில், ரேசன் கடை அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூடுவதற்காக சென்றனர். சுமார் 500 பெண்கள், 100 சிறுவர்கள் என 1000 பேர் திரண்டு முழக்கம் எழுப்பியதும் அவர்கள் மீது போலீசார் கொலை வெறி தாக்குதலை நடத்தினர். பெண்கள் என்றும் பாராமல், ஆண் போலீசார் அவர்களைக் கீழே தள்ளி வக்கிரமாக பூட்ஸ் காலால் மிதித்தனர். பெண்களின் ஆடையை கிழித்து வக்கிரமாக நடந்து கொண்டனர். சிறுவர்கள் மீது நடத்திய தாக்குதலில் ஆகாஷ் என்ற பள்ளி மாணவர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சத்யா என்ற 50 வயது பெண்மணியின் மண்டையை உடைத்து இரத்த காயம் ஏற்படுத்தினர். அப்போராட்டதிற்கு ஆதரவாக சென்ற என் மீதும் (த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு) கொலை வெறித் தாக்குதலை நடத்தினர். பேசக் கூட அனுமதிக்காமல், சுமார் 20 -க்கும் மேற்பட்ட போலீசார் சூழ்ந்து கொண்டு தாக்கினர். தலையிலும், முதுகிலும், முகத்திலும் என லத்தி கொண்டு கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இதில் இடது கண் அருகே காயம் ஏற்பட்டுள்ளது. என்னைப் போல் சுமார் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் யாருக்கும் மருத்துவம் கூட பார்க்காமல், மதுரவாயல் பாக்கியலஷ்மி மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது போலீசு. டாஸ்மாக்கை மூடாமல் காவல் காக்கும் ஜெயா அரசின் போலீசு போராடிய மக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதையும், மண்டபத்தில் அடைத்து வைத்து மருத்துவம் பார்க்காமல் சித்திரவதை செய்வதையும், பு.மா.இ.மு வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தில் செயல்படும் அனைத்து மாணவர் அமைப்புகளும் ஜனநாயக அமைப்புகளும் ஜெயாவின் பாசிச நடவடிக்கையை கண்டிக்க வேண்டுமென பு.மா.இ.மு கோருகிறது.

இவண்
த. கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு
41, பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை. 9445112675

கோவை

மீஞ்சூர்

 

100% புறக்கணிக்கத் தயாராவீர் !

1

Hello IT Friends

ndlf-it-boycott-electionசட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஐ.டி. ஊழியர்களான நாம் சில கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது.

1. ஓராண்டுக்கு முன்பு டி.சி.எஸ் 25,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அதன் பிறகு சின்டெல், வெஸ்டாஸ் என்று பல்வேறு ஐ.டி நிறுவனங்கள் ரகசியமாகவும், சட்டவிரோதமான முறையிலும் Layoffசெய்து கொண்டிருக்கின்றன.

தேர்தலில் வாக்களித்தால் லே ஆஃப்-ஐ தடுக்க முடியுமா? ஜாப் செக்யூரிட்டி கிடைக்குமா? இதற்கு எந்தக் கட்சியாவது வாக்குறுதி அளித்திருக்கின்றதா?

2. பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற அடிப்படை உரிமையாக யூனியன்–ல் சேரும் உரிமையை அரசியல் சட்டம் அங்கீகரித்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் கிடைத்திட்ட இந்த உரிமையை தொழிற்சாலைகளில் பயன்படுத்த முடிகிறதா? யூனியன் சேர விடாமல் தடுக்கப்படுகின்றனர், தொழிலாளர்கள். 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் தேர்தல் ஆணையத்தால், 100% யூனியன்–ல் சேரும் உரிமையை நடைமுறைப்படுத்த முடியுமா?

அமெரிக்காவில் கூட வெரிசான், ஐ.பி.எம் போன்ற நிறுவன ஊழியர்கள் தொழிற்சங்கம் வைத்திருக்கின்றனர். நம் நாட்டிலோ, ஐ.டி. ஊழியர்களான நாம் யூனியன் வைத்துக் கொள்ள அனுமதிக்கிறோமா? இதுதான் ஜனநாயகமா?

3. சென்னை பெருவெள்ளத்தை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். கார்ப்பரேட்கள், ரியல் எஸ்டேட் மாபியாக்கள் செய்த ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்புதான் இப்பேரழிவிற்கே காரணம். ஆக்கிரமிப்புக்கு அரசியல் கட்சிகள், அதிகாரிகள், நீதித்துறை என அனைவரும் உடந்தை. செம்பரம்பாக்கம் ஏரி நீரை ஒரே நாளில் மொத்தமாக திறந்து விட்ட அரசு மக்களைக் காப்பாற்றாமல் வேடிக்கைதான் பார்த்தது. இன்று வரைக்கும் மியாட் உள்ளிட்ட கார்ப்பரேட்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதா?  இயற்கை மீதான இத்தகைய சூறையாடலை அரசாலோ, இந்தத் தேர்தலாலோ நிறுத்திவிட முடியுமா?

4. பல லட்சம் கோடி மதிப்பிலான தாதுமணலைக் கொள்ளையிட்டு வரும் வைகுண்டராஜன் மீதான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து, கொள்ளையைத் தொடர நீதிமன்றமே துணைபோனது.

அதேபோல மதுரை மாவட்டத்தின் பல குன்றுகளையும், குளங்களையும் அழித்துவிட்ட P.R. பழனிச்சாமியின் கிரானைட் கொள்ளை பற்றி விசாரணை நடத்த”நேர்மை”யான அதிகாரி சகாயம் நியமிக்கப்பட்டார். விசாரணையின் போது வழக்கிற்கு தேவையான தடயங்களை போலீசே அழித்துவிடும் என்று பயந்து சுடுகாட்டில் படுத்து உறங்கினார்.

ஆனால், மேலூர் மாஜிஸ்ட்ரேட்  பி.ஆர்.பி-யிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு அவரை விடுவித்ததுடன், வழக்கு தொடுத்த கலெக்டர் மீதே வழக்கு போட்டுவிட்டார். கொள்ளைக்காரன் பழனிச்சாமியோ சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கின்றான். சகாயத்தின் விசாரணை அறிக்கையோ நீதிமன்றத்தின் டாய்லெட் பேப்பராக தொங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தத் தேர்தலில் கூட பி.ஆர்.பி, வைகுண்டராஜன் முதலானோர் பல கோடிகளை கொட்டி அனைத்துக் கட்சிகளையும் சிறப்பாக கவனித்திருக்கின்றனர். நம் நாட்டை கொள்ளையடிக்க தரகு வேலை பார்க்கும் இந்தக் கட்சிகளுக்குத்தான் வாக்களிக்க போகிறோமா?

5. ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு நாடே அறிந்து நாறிப்போன ஒன்று. வழக்கை விசாரித்த நீதிபதி குன்ஹா ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கினார். ஆனால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்துவும், பெங்களூரு உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியும் சரியாக “கணக்கு” போட்டு அம்மாவை விடுவித்து விட்டனர்.

அதுமட்டுமின்றி, பல்லாயிரம் கோடிகளை ஏப்பம் விட்டு விஜய்மல்லையா லண்டனுக்குத் தப்பிப் போகும் வரை ஒட்டுமொத்த அமைப்பும் உதவியது. ஜெயலலிதா, வைகுண்டராஜன், பி.ஆர்.பி, மல்லையா இவர்களைப் போன்ற எண்ணற்ற கிரிமினல்களுடன் கைகோர்த்துக் கொண்டுதான் நீதித்துறையே இயங்குகிறது.

இந்தத் தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் இவர்களைப் போன்ற குற்றவாளிகளையும், குற்றவாளிகளை காப்பாற்றும் நீதிபதிகளையும் தண்டிக்க முடியுமா?

6. 100% வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்கிறது தேர்தல் ஆணையம்.
100% வாக்களித்தால் 100% ஊழல் ஒழியுமா?
இதற்கு தேர்தல் ஆணையம் உத்திரவாதம் தருமா?
100% வாக்களித்தால் நமக்கு 100% JOB SECURITY கிடைக்குமா?
இதற்கும் தேர்தல் ஆணையம் உத்தரவாதம் தருமா?

நேர்மையான தேர்தல் எனக் கூறிக்கொண்டு, அரசியல் தலைவர்களை எல்லாம் விட்டுவிட்டு அப்பாவி மக்களை சோதனை போடுகின்ற தேர்தல் ஆணையம், நம்மால் தேர்வு செய்யப்பட்ட அமைப்பா? இதன் கேட்பாரில்லாத சர்வாதிகாரம், எவ்வாறு உண்மையான ஜனநாயகத்தைத் தரும்?

7. நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என்கிறது தேர்தல் ஆணையம்.

தேர்தலில் நிற்கும் நல்லவர்கள் யாரையாவது உங்களுக்கு தெரியுமா?

பெயரளவு போலி ஜனநாயகத்திற்கு கூட இடமில்லாதபடி கிரிமினல்களும், ரவுடிகளும் நிறைந்திருக்கும் இந்தத் தேர்தல் முறையில் நாம் யாரைத் தேர்ந்தெடுப்பது?

எனக்கு உனக்கு என்று போட்டி போட்டுக்கொண்டு ஓட்டு கேட்கும் கட்சிகள் எல்லாம் எப்படிப்பட்டவை? அ.தி.மு.க – ஜெயலலிதா,சசிகலா மன்னார்குடி மாஃபியா கும்பலின் குடும்பம், தி.மு.க -கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, மாறன் குடும்பம்,  தே.மு.தி.க -விஜயகாந்த்,  பிரேமலதா, சுதீஷ் குடும்பம், பா.ம.க – ராமதாஸ்,  அன்புமணி, சவுமியா குடும்பம். இவ்வாறு கட்சிகள் அனைத்தும் குடும்பக் கட்சிகளாக இருக்கின்றன.

நமக்கோ, கோடி ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை. ஆனால் தேர்தலில் நிற்பவர்கள் பல கோடிகளை சாதாரணமாக செலவு செய்கிறார்கள். வெற்றி பெற்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல கோடிகளைக் கொள்ளையடிப்பார்கள். மற்ற கட்சிகளும் ஊழல், கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து, ரவுடியிசம் செய்கின்ற பொறுக்கிக் கட்சிகள்தான். பேய்களும், பிசாசுகளும் போட்டியிடும் தேர்தலில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? பேயையா, பிசாசையா?

வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என்கிறது தேர்தல் ஆணையம். இந்தத் தேர்தலில் வாக்களிப்பது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வதாகும். இன்னும் தெளிவாக கூறினால் நம்மை கொள்ளையடிக்க நாமே வரிசையில் காத்திருந்து லைசென்ஸ் வழங்குவதாகும்!

8.  நாம் போடாவிட்டால் நமது ஓட்டை வேறு யாராவது போட்டுவிடுவார்களே என்கிறார்கள் சிலர். அதற்காக புதைகுழி என்று தெரிந்தே விழ முடியுமா?

சரி, என்ன தான் செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா? அந்த மாற்றைப் பற்றி வாருங்கள் விவாதிப்போம்! தொடர்புக்கு: 9003198576

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி. ஊழியர்கள் பிரிவு
NDLF I.T. Employees Wing

இன்று டாஸ்மாக் மூடுவிழா ! அனைவரும் வருக !

0

ஆனைவாரி

“பிராத்தல் கேஸ் போடுவேன் கை, காலை உடைத்து விடுவேன்”  ஆனைவாரி டாஸ்மாக் கடையை மூட பிரச்சாரம் செய்த பெண்கள் மக்கள் அதிகாரம் தோழர்களிடம் சேத்தியாதோப்பு டி.எஸ்.பி குத்தாலிங்கம் ரவுடித்தனம்.

புவனகிரி தாலுக்கா, ஆனைவாரி டாஸ்மாக் கடையை மூட மே 5-ம் தேதி வரை கெடுவிடுத்து ஆனைவாரி கிராமம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களும், விருத்தாசலம் மக்கள் அதிகாரம் அமைப்பினரும் சிதம்பரம் கோட்டாட்சியரிடம் தேதி மனு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து மனு கொடுக்க வந்த பெண்களும், மக்கள் அதிகாரம் தோழர்களும் இணைந்து சிதம்பரம் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தது பற்றியும். மே 5-ம் தேதி போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தும் தெருமுனை கூட்டங்கள் போட்டு விளக்கினார்.

காட்டு நாயக்கன் தெருவில் தெருமுனை கூட்டம் நடந்து கொண்டிருந்த போது அங்கு வந்த போலிசு “யாரிடம் அனுமதி வாங்கி பிராச்சாரம் செய்தீர்கள், தேர்தல் நேரத்தில் இப்படி கூட்டம் போடுவது சட்டவிரோதம்” என்று கூறி தோழர்களிடம் இருந்த மெகா போனை பிடுங்கிக் கொண்டு தோழர்களையும் கைது செய்து வண்டியில் ஏற்ற முயன்றனர். அதற்கு ஒத்துழைக்காமல் தோழர்கள் தொடர்ந்து முழக்கமிட்டு போலிசிடம் போராடினார்கள்.

“நீங்கள் எல்லாம் எந்த ஊர்? இங்கு வந்து மக்களை ஏன் போராட துண்டுகிறீர்கள் சொன்னா ஒழுங்க ஏற மாட்டீர்களா? சோறுதான் தின்றீங்களா, வேறா ஏதாவது சாப்பிடுறீர்களா?” என்றவாறு திட்டித் தீர்த்தனர். கூடுதலான போலீசு வந்து ஆண் தோழர்களை ஜீப்பில் ஏற்றியது. பெண் தோழர்கள் “பெண் போலீஸ் இல்லாமல் கைது செய்ய முடியாது” என்று வாதாடிய பிறகு பெண் போலீசை வரவழைத்து கைது செய்ய முயன்றனர்.

இதற்கிடையே கைது செய்த ஆண் தோழர்களை கொண்ட ஜீப்பை எடுக்க போலீசு முயன்ற போது பெண் தோழர்களுடன் இணைந்து மக்களும் ஜீப்பை மறித்து நின்று போராடினார்கள். இது சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதனால் செய்வதறியாது திகைத்து போனது போலீசு.

ஜீப்பை பின்னால் எடுத்த போலீசு வேறு வழியில் 3 கி.மீ தொலைவில் உள்ள காவல் நிலையத்திற்கு 25 கி.மீ சுற்றிக் கொண்டு தோழர்களை காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றது. போகிற வழியில் தோழர்களிடம் இருந்து செல்போனை பிடுங்கியது. செல் போனை பிடுங்கியவுடன் தோழர்கள் “மூடு டாஸ்மாக்கை” என்று பாடியவாறு வந்ததும் போலிசை ஆத்திரமடைய செய்தது.

பெண் போலிசு வந்து தோழர்களை கைது செய்ய முயன்ற போது உடன் வந்த DSP குத்தாலிங்கம் “உங்களை எல்லாம் பிராத்தல் கேஸ் போட்டு உள்ளே தள்ளி விடுவேன் இங்கு வந்து ஏன் பிரச்சினை பன்றீங்க, இது வி.ஐ.பி தொகுதி (அ.தி.மு.க செல்வி. இராமஜெயம்)” என தோழர்களையும் “நீங்க என்னிடம் தான் வந்தாக வேண்டும். உங்கள் பிள்ளைகள் வேலைக்கு போகாமல் செய்துவிடுவேன்” என்று மக்களையும் மிரட்டினார்.

பெண் தோழர்களை கைது செய்ய முயடியாமல் திணறிய போலிசு தோழர்களை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கைது செய்தது. தோழர்களை போட்டோ பிடிக்க சி.ஐ.டி உளவுப்பிரிவு, எஸ்.ஐ என அனைவரும் அணிவகுத்தனர்.

கைது செய்த தோழர்களை தனித்தனியாக விசாரித்த டி.எஸ்.பி எதும் பதில் ஏதும் கிடைக்கததால் மேலும் ஆத்திரமடைந்தார். மக்கள் அதிகாரம் விருத்தாசலம் ஒருங்கிணைப்பாளர் முருகானந்தத்தை தனி அறையில் அடைத்தனர். தோழர் மணிவாசகத்திடம் “மக்கள் அதிகாரம் என்ன மயிர் அதிகாரம்” என்றும் “ நீங்கள் அதிகாரத்தை கையில் எடுத்தால் நாங்கள் என்ன செரைக்கவா இருக்கிறோம். கை காலை உடைத்து விடுவேன்” என்றும் மிரட்டினார்.

அதற்கு தோழர், “நீங்கள் என்னை அடித்துக்கூட கொல்லலாம் அமைப்பைப் பற்றி தவறாகப் பேசினால் நடப்பதே வேறு” என பதிலடி கொடுத்தவுடன் அமைதியாக சென்றார்.

கைதான பெண் தோழர்கள் 3 பேர் உட்பட 10 பேர் மீதும் பிரிவு 143 மற்றும் 188 ன் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் கடலூர் மாவட்ட துணை செயலாளர் செந்தில் தலைமையிலான வழக்கறிஞர் குழு, போலீசார்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகு தோழர்கள் விடுவிக்கப்பட்டனர்.

விடுதலையான தோழர்கள் மறுநாளே அதே கிராமத்திற்கு சென்று, “மே 5 -ம் தேதி கடையை மூட வாருங்கள், அதிகாரிகள் மூட மாட்டார்கள் போலீசு கண்டு அஞ்சத் தேவையில்லை. நாம் ஒன்று திரண்டால் நிச்சயம் மூடமுடியும்” என்று பிரச்சாரம் செய்தனர். பிரச்சாரம் செய்ய மீண்டும் வரமாட்டார்கள் என்று நினைத்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். கடையை மூட பெருமளவில் திரள்வோம் என உறுதியாக கூறினர்.

shutdown-tasmac-anaivari

shutdown-tasmac-anaivari-poster

தகவல்
மக்கள் அதிகாரம்,
விருத்தாசலம்

சென்னை மதுரவாயல்

shutdown-tasmac-maduravoyal-poster-2

shutdown-tasmac-maduravoyal-banner

தகவல்
மக்கள் அதிகாரம்,
சென்னை

சீர்காழி

shutdown-tasmac-sirkazhi-banner

தகவல்
மக்கள் அதிகாரம்,
சீர்காழி வட்டம்

தஞ்சை

shutdown-tasmac-thanjai-poster

தகவல்
மக்கள் அதிகாரம்,
தஞ்சை

தமிழகமெங்கும் மே தினப் போராட்டங்கள் – பாகம் 4

0

10. புதுச்சேரி

விவசாயம் – நெசவு – சிறுவணிகம் – சிறுதொழில்களை அழித்து காண்டிராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவுகட்டுவோம்!

puduvai-may-day-21இது மேதினத்தின் 130-வது ஆண்டு நிறைவு. 1886-வது ஆண்டில் தொழிலாளி வர்க்கம் எத்தகைய அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றை எதிர்த்தும், 8 மணிநேர வேலை என்கிற உரிமைக்காகவும் போராடி ரத்தம் சிந்தியதோ அந்தக் கொடிய நிலைமை இன்றைக்கு மீண்டும் வந்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால் அடக்குமுறையும், சுரண்டலும் அப்போது இருந்ததை விட பன்மடங்கு கொடூரமானதாகவும், நவீனப்படுத்தப்பட்டும் அமல்படுத்தப்படுகிறது.

கார்ப்பரேட்மயம் – காண்டிராக்ட்மயம்!

எந்த ஒரு ஆலையிலும், நேரடி உற்பத்தி சாராத வேலைகளில் மட்டும் காண்டிராக்ட் தொழிலாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், நேரடி உற்பத்தி நடக்கிற வேலையிலும் காண்டிராக்ட் தொழிலாளர்களைப் பயன்படுத்திக் கொள்வது அதிகரித்து வருகிறது. எந்த ஆலையிலும் நிரந்தரத் தொழிலாளர்களது எண்ணிக்கையை விட காண்டிராக்ட் தொழிலாளர்களது எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. காண்டிராக்ட் தொழிலாளர்கள் இல்லையென்றால் ஆலையே ஓடாது என்கிற அளவுக்கு ஒட்டுமொத்த ஆலையுமே காண்டிராக்ட் தொழிலாளிமயமாகி விட்டது.

puduvai-may-day-banners-32-2நெருப்புக் குழம்பு ஓடுகின்ற இரும்பு உருக்காலையானாலும், தூசும், மாசும் மூச்சை முட்டுகிற சிமெண்ட் ஆலையானாலும், பாறைகள் சரிந்து உயிரைப் பறிக்கிற சுரங்கமாக இருந்தாலும் காண்டிராக்ட் தொழிலாளி இல்லாமல் ஒரு துரும்பு கூட நகர முடியாது. கல்லூரி பேராசிரியர் நியமனம் கூட காண்டிராக்ட் முறையில் நடக்கிறதென்றால் இதை விட அவலம் வேறென்ன இருக்க முடியும்?

தொழில்துறையின் உயிர்த்துடிப்பு! ஆனால், உயிராதாரம் பறிப்பு!

தொழிலின் உயிர்த்துடிப்பாகிவிட்ட காண்டிராக்ட் தொழிலாளிக்கு உயிர்வாழும் உரிமை கூட மறுக்கப்படுகிறது. வேலை நிரந்தரம் கேட்டால் கேலி பேசுகிறான், முதலாளி. ஆபத்துகள் மிகுந்த வேலைகளில் கூட எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் வேலை செய்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம். அப்போது விபத்து ஏற்பட்டு உயிரே போனாலும், அற்பப் பணத்தை வீசி எறிந்து விட்டு அடுத்த காண்டிராக்டுக்கு மாறி விடுகிறான், முதலாளி. ஆலை விபத்துகளில் செத்துப்போன பல்லாயிரக்கணக்கான காண்டிராக்ட் தொழிலாளர்களது கதியும், கதையும் இப்படித்தான் முடிக்கப்பட்டது.

puduvai-may-day-banners-32-8காண்டிராக்ட் தொழிலாளிக்கு முறையான சம்பளம் கூட கிடைப்பதில்லை. நிரந்தரத் தொழிலாளிக்கு கிடைக்கின்ற சம்பளத்தில் பாதிகூட கிடைப்பதில்லை. இரண்டு பேரும் ஒரே வேலையை செய்தாலும், காண்டிராக்ட் தொழிலாளி என்றால் கொத்தடிமைதான். சம்பளத்தில் மட்டுமல்ல, சாப்பிடும் சோற்றிலும் கூட இரண்டாம் தரமாக நடத்தப்பட்டு, அவமானத்தில் குன்றிப் போகிறான். காண்டிராக்ட் தொழிலாளி. இதனை நிரந்தரத் தொழிலாளியும் அவர்களது சங்கமும் கண்டும் காணாமல் இருப்பது மானக்கேடு. இன்னும் ஒரு படி மேலே போய் நிரந்தரத் தொழிலாளிக்கு சம்பள உயர்வு கொடுத்து காண்டிராக்ட் தொழிலாளி மீதான சுரண்டலை பாதுகாத்துக் கொள்கின்றனர், முதலாளிகள். ஊழல்படுத்தப்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களோ, முதலாளியின் இளைய பங்காளிகளாக மாறி காண்டிராக்ட் தொழிலாளிக்கு எதிரியாக மாறி, தனக்குத் தானே குழி தோண்டிக் கொள்கின்றனர்.

மறுகாலனியாக்கத்தால் தீவிரமாகும் நிலைமை!

puduvai-may-day-19தனியார்மய – தாராளமய – உலகமய – மறுகாலனியாக்க நடவடிக்கைகளின் விளைவாக விவசாயம் நாசமாகிப் போன நிலையில் தற்கொலை செய்து கொள்வதை விட நகரத்துக்குப் போய் பிழைத்துக் கொள்ளலாம் என்று ஓடி வருகின்ற விவசாயிகளுக்கும், விவசாயக் கூலிகளுக்கும் வேறென்ன வழி இருக்கிறது? நெசவும், நூற்பும் பன்னாட்டுக் கம்பெனிகளது ஏகபோகத்துக்குப் போய்விட்டதால் நவீன எந்திரங்களுடன் போட்டி போட முடியாமல் உடைந்த தறியோடும், முதுகு நிறைந்த கடனோடும் வருகின்ற நெசவு தொழிலாளிக்கு வேறு போக்கிடம் என்ன இருக்கிறது?

செய்து வந்த சிறுதொழிலை நவீன எந்திரங்கள் முழுங்கிவிட்டன. சிறுவணிகத்தை கார்ப்பரேட் கடைகளும், ஆன்லைன் வர்த்தகமும் காவு வாங்கி விட்டன. இதனால் பிழைப்பு தேடி, அலைபவர்கள் வேறெங்கு போக முடியும்? இவர்கள் அனைவரும் தொழிற்பேட்டை என்கிற நரகத்து தள்ளி விடப்படுகின்ற நிலையில் காண்டிராக்ட் புரோக்கர்களைத் தவிர வேறு யாரும் கை கொடுப்பதில்லை. காண்டிராக்ட் கூலிகளில் பெரும்பாலானோர் இப்படி வந்தவர்கள் தான். எந்த மலிவான கூலிக்கும் உழைப்பது, எத்தனை ஆபத்தான வேலையையும் செய்வது என்கிற நிர்ப்பந்தத்தில் வாழ்கின்ற இவர்களை வைத்துத் தான் கார்ப்பரேட் உலகம் தன்னுடைய லாபவெறியைத் தீர்த்துக் கொள்கிறது.

puduvai-may-day-banner-83-220 காண்டிராக்ட் தொழிலாளிக்கு மேல் வைத்துக் கொண்டால் லைசென்சு வாங்க வேண்டும் என்கின்ற விதிமுறையினை மாற்றி 100 பேர் வரை லைசென்சு இல்லாமலேயே வைத்துக் கொள்ளலாம் எனவும், எந்த வேலையிலும் எத்தனை மணிநேரத்துக்கும் காண்டிராக்ட் தொழிலாளியை ஈடுபடுத்தலாம் எனவும் சட்டதிருத்தம் செய்ய மோடி அரசு தயாராகி வருகிறது. சட்டத்தின் பெயரால் கட்டுப்பாடுகள் இருக்கின்ற போதே கசக்கிப் பிழிகின்ற முதலாளிகள், சுரண்டலுக்கும், அடக்குமுறைக்கும் சட்டப் பூர்வமாகவே அங்கீகாரம் கிடைத்து விட்டால் எப்படி நசுக்குவார்கள் என்பதை நினைத்தாலே நெஞ்சு கொதிக்கிறது.

தொழிலாளர்களது உரிமைகளை உத்திரவாதம் செய்வதற்காக உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற தொழிலாளர் நலத்துறையானது, முதலாளிகள் நலத்துறையாக அப்பட்டமாக செயல்படுகிறது. தொழிலாளர்களது சட்டப்பூர்வமான கோரிக்கைகளைக் கூட பரிசீலிக்க மறுப்பதோடு, நாங்கள் முதலாளிகளின் பக்கம்தான் நிற்போம் என்று பகிரங்கமாக சொல்கின்றனர். புதுச்சேரி தொழிலாளர் அதிகாரி தயாளன், தொழிலாளர் ஆய்வாளர் ரவி போன்ற அதிகாரிகளும், வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் தொழிலாளர்களை வேட்டையாடுவதற்கு பயிற்சி வகுப்பு நடத்தி வருகின்ற முன்னாள் தொழிலாளர் நலத்துறை ஆணையரான ரவீந்திரனும் இதற்கு எடுத்துக்காட்டு.

puduvai-may-day-20தொழிலாளர் நலத்துறையின் தொழிலாளர் விரோதப்போக்கு அரியானாவில் மாருதி ஆலை, ராஜஸ்தானில் ஹோண்டா மோட்டார்ஸ், மராட்டியத்தில் பஜாஜ் ஸ்கூட்டர்ஸ், குஜராத்தில் நானோ, கர்நாடகத்தில் டயோட்டா, தமிழகத்தில் ஹூண்டாய், நோக்கியா, ஜி.எஸ்.எச்., புதுச்சேரியில் சுஸ்லான், ஹைடிசைன், என பலநூறு உதாரணங்களையும், ஆதாரங்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம். ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும், தான் ஏற்றுக் கொண்ட பொறுப்புக்கு எதிர்நிலையாகவும், செயல்படுவதற்கு தகுதியற்றதாகவும் மாறியுள்ள நிலையில் தொழிலாளர் நலத்துறையானது ஒரு சுற்று அதிகமாக நாறுகிறது,

மூடப்பட்ட கதவு தானாக திறக்காது! உடைத்தெறி!

சமீபத்தில் பெங்களூருவில் ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தொழிலாளர்கள் தங்களது சேமிப்பினை பெறுவதற்கு மத்திய அரசு போட்ட புதிய விதிமுறைகளை தகர்த்தெறிந்தது, பெண் தொழிலாளர்கள் முன்நின்று நடத்திய போராட்டம். தினம் தினம் தீவிரமடைந்து வருகின்ற முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு மென்மையான வார்த்தைகளோ, சாந்தமான, சட்டப்பூர்வமான போராட்டங்களோ புரியாது. அவற்றை நசுக்கத்தான் செய்யும். 1886-ல் மேதினத்தில் தொழிலாளி வர்க்கம் சிந்திய இரத்தமும், மேதினத் தியாகிகளது உயிர்பலியும் நமக்கு திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுப்பது ஒன்றைத்தான். தொழிலாளி வரிக்கமே அடங்கிக் கிடக்கின்ற உனது குரலையும், கைகளையும் உயர்த்து; மூடப்பட்டுள்ள நெடுங்கதவை நொறுக்கு; காட்டுத்தீயாய் பரவிடு; கார்ப்பரேட் கொட்டத்தைப் பொசுக்கிடு!

உழைக்கும் மக்களே,

  • உலகையே சூறையாடி வருகின்ற சர்வதேச நிதியாதிக்கக் கும்பலை முறியடிப்போம்!
  • தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையைப் பறிக்கின்ற முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம்!

  • நாட்டை சுடுகாடாக்கி வருகின்ற மறுகாலனியாக்கத்திற்கும், இந்துமதவெறி பாசிசத்திற்கும், முடிவுகட்டுவோம்!

  • அழுகி நாறிவரும் அரசுக் கட்டமைப்பை அப்புறப்படுத்துவோம்!

  • போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்!

  • புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

என்ற மே நாள் சூளுரையோடு 131 -வது மேதினப் பேரணி – ஆர்ப்பாட்டம் புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் நடத்தப்பட்டது.

மே நாள் காலை முதல், மேதின சூளுரை ஏற்று, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இயங்கும், கிளை மற்றும் இணைப்பு சங்கங்களில் திரளான தொழிலாளர்கள் பங்கேற்புடன் கொடியேற்றப்பட்டது.

மறுபுறம், மேதின பேரணி – ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதியை தேர்தல் துறை நிகழ்ச்சி துவங்கும் வரை இழுத்தடித்தது. ஏற்கனவே, ஒலிபெருக்கி அமைக்கும் சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர்களைக் கூட்டி பல்வேறு கெடுபிடி உத்தரவுகளைப் போட்டிருந்ததால், ஒலிபெருக்கி உரிமையாளர், அனுமதி உத்தரவு இருந்தால் மட்டுமே தன்னால், வரமுடியும் என்று தெரிவித்திருந்ததால், அனுமதிக்கு இறுதிவரை தேர்தல்துறையில் முட்டி மோதி அனுமதி பெறப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைவர் தோழர். சரவணன் பேரணியை துவக்கி வைத்தார்.

போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எல்லா ஓட்டுக் கட்சிகளும் தேர்தல் திருவிழாவில் சங்கமமாகி, மேதினத் தியாகிகளின் தியாகத்தை, தங்களது வாக்குறுதிகளில் தேடிக் கொண்டிருந்தனர். அதே வேளையில், பேரணி, இன்னுமொரு மேதினப் போராட்டத்திற்கு அறைகூவிய படியே நகரத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஆர்ப்பாட்டம் நடக்கும் சாரம் பெரியார் சிலையை வந்தடைந்தது.

puduvai-may-day-18ஆர்ப்பாட்டத்தில், நமது உரிமைகளுக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்திப் போராடாமல், அவர்களின் தியாகத்தையும், மேநாள் போராட்டத்தின் இன்றைய தேவையையும் இருட்டடிப்பு செய்யும் வகையில் வெடிவெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாடும் ஓட்டுக்கட்சிகளை அம்பலப்படுத்தியும், இன்றைய தேவை, சாதி, மத, இன உணர்வல்ல, மே நாள் போராட்டத்தால் உருவான உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்! என்ற சர்வதேசப் பாட்டாளிவர்க்க முழக்கம் என்று கூறி புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைவர் தோழர் சரவணன், தலைமை உரையாற்றினார்.

puduvai-may-day-01புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர். லோகநாதன், சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளாத வகையில் முதலாளிகள் தொழிலாளர்களை உழைக்கும் இயந்திரங்களாக மாற்றி வைத்துள்ளனர். அவர்களைப் புரியவைத்து போராட்டத்திற்கு அழைத்து வருவதே நம்முன் உள்ள சவாலான விசயம். இதற்கு தொடர்ந்து தொழிலாளர்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டிய தேவையை விளக்கிப் பேசினார்.

இறுதியாகப் பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். ராஜூ, “இந்தியாவில் பல கோடி தொழிலாளர்கள் இருந்தாலும் 2 கோடி பேர் தான், சொல்லிக் கொள்ளும் வகையில் ஓரளவு சட்டப் பாதுகாப்புடன் உள்ளனர். மீதமுள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை ஒடுக்குமுறை மிகுந்ததாகவே உள்ளது. puduvai-may-day-22எனினும், தொழிலாளர்கள் போராடுவதற்குத் தயாராகவே உள்ளனர். இதை பெங்களூரு ஆயத்த ஆடை தொழிலாளர்களின் போராட்டம் உணர்த்துகிறது. எந்த ஓட்டுக்கட்சிகளின் துணையில்லாமல், சுயமாக தங்களது பலத்தில் அந்தப் பெண் தொழிலாளர்கள் போராடியுள்ளனர். அது தான் அவர்களின் முதல் வெற்றி! ஆண்டுக்கணக்கில் தொழிலாளர்களின் பல கோரிக்கைகள் நீதிமன்றங்களில் தூங்கும் போது, காலை 06.30 மணிக்குத் துவங்கிய போராட்டம், ஒரே நாளில் கோரிக்கையை வென்றெடுத்துள்ளது எனில், அத்தொழிலாளர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். தொழிலாளர்களிடம் உள்ளது அச்சம் என்ற ஒரே தடைக்கல் தான். அதை தகர்த்தெறியும் போது, உலகமே நமது காலடியில் என்பதை உணர வேண்டும். மக்கள் தான் தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டவர்கள். இது ஆற்று மணல் கொள்ளை மற்றும் டாஸ்மாக் எதிரான போராட்டங்கள் நிரூபிக்கிறது. எனவே, இந்த அரசுக் கட்டமைப்பை தகர்த்தெறிந்து, மக்கள் தங்களது அதிகாரத்தைக் கையில் எடுக்கும் போது அனைத்து தரப்பு உழைக்கும் மக்களுக்கான விடுதலை சாத்தியமாகும்” என்று கூறி நிறைவு செய்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மே நாள் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி, மேநாள் சூளுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி

மே 5 முதல் டாஸ்மாக் மூடப்படும் ஊர்கள் – பட்டியல் 2

0

6. கரூர்

டாஸ்மாக் சாராயத்தின் மூலம் ஒட்டுமொத்த சமூகமே சீரழிந்து வருகிறது என்பதை நாடே அறியும். தற்பொழுது தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா அதிகமாக உள்ளதால், மக்கள் அதிக அளவில் குடித்துவிட்டு இறக்கும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது இந்த அரசு. அதற்கு பலியான கரூர் டாஸ்மாக்கில் சென்ற வாரத்தில் திருப்பூரைச் சேர்ந்த துரைசாமி, ஈரோட்டைச் சேர்ந்த கணேசன், பொன்னமராவதியைச் சேர்ந்த கருப்பையா என்று தினம் தினம் டாஸ்மாக் சாராயத்திற்கு மக்கள் பலியாகி வருகின்றனர்.

karuru-tasmac-shutdown-campaign-3இந்நிலையில் ராயனூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் (கடை எண் 4952) கடையை அகற்றக் கோரி, முதல் கட்டமாக ராயனூர் சுற்றுவட்டாரப் பகுதியான தில்லைநகர், எம்.ஜி.ஆர்.நகர், அன்புநகர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விரிவான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ராயனூர் பகுதியில் 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள பகுதியாகும். பெரும்பாலும் டெக்ஸ்டைல்ஸில் வேலை செய்யும் கூலித்தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் அதிகமாக இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் நாளொன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் மதுவிற்பனை நடைபெறுவதாக புள்ளி விபரத்தின் மூலம் தெரியவருகிறது. எனவே இந்த டாஸ்மாக் சாராயக்கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்களிடையே கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு அதனை மாவட்ட ஆட்சியர், தேர்தல் ஆணையர் அவர்களிடம் மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

karuru-tasmac-shutdown-campaign-1பிரச்சாரத்தின்போது தில்லைநகர் பகுதிமக்கள் பெருத்த ஆதரவு இருந்தது. மேற்கண்ட பகுதியில் உள்ள இளைஞர்கள் டாஸ்மாக் சாரயத்தின் மூலம் வீட்டுக்கொரு குடிகாரர்களாக மாறிவிட்டனர் என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

அதோடு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், “நானும் குடியால் பாதிக்கப்பட்டுள்ளேன். இந்த பழக்கத்திலிருந்து என்னால் மீள முடியவில்லை. அந்தக் கடையை மூடுங்க, நானும் வருகிறேன்” என்றார்.

மேலும் 65 வயதுள்ள இளஞ்சியம் என்பவர், “என் கணவர் குடியினால் இறந்தார். இந்தக் குடிக்கு என் மகனும் அடிமையாகி விட்டான்” என்று பேசிக்கொண்டிருக்கும்போது, “பாருங்க, என் மகன் வீட்டிற்குள்ள குடிச்சிட்டிருக்கிறான் பாருங்க” என்று கண்ணீரோடும், வேதனையுடனும் கூறினார்.

karuru-tasmac-shutdown-campaign-2மூன்று மாதத்திற்கு முன்பு இதே பகுதியைச் சேர்ந்த வேலன் என்கின்ற 27 வயதுள்ள இளைஞர் ஒருவர் ராயனூர் டாஸ்மாக் அருகில் குடித்துவிட்டு ரோட்டு அருகில் தண்ணீர் கேட்டவாறே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்தவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இச்சம்பவத்தை சோகத்தோடும், ஆதங்கத்தோடும் எங்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

அப்பகுதி இளைஞர் அருண் என்பவர் கூறுகையில், “எங்கள் வீட்டில் எங்கள் தாத்தா குடிச்சாரு, அப்புறம் எங்க அப்பா குடிச்சாரு, அப்புறம் நானும் குடிச்சே, இந்த குடியினால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை, மற்றவர்கள் என்னை தரக்குறைவாக பார்த்தனர். இதனால் நான் கடந்த 6 வருடமாக குடிக்கிறத நிறுத்திட்டேன், இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற நானும் உங்களுடன் சேர்ந்து போராடுவேன்” என்று உறுதியுடன் கூறினார்.

karuru-tasmac-shutdown-campaign-4அதன்பின்னர் அப்பகுதி மக்களிடம் கையெழுத்து பெற்று இன்று 02-05-2016 அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியாததால், கரூர் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம்  அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவினை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர், “இது சம்மந்தப்பட்ட அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” என்று எந்திரகதியில் பதிலளித்தார்.

அவரிடம் தோழர்கள், “மக்கள் அதிகாரம் அமைப்பு கரூர் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தொடர்ந்து டாஸ்மாக் பிரச்சினையில் தலையிட்டு போராடி வருகிறது. கடந்த வாரம் கணேசன், துரைசாமி, கருப்பையா ஆகிய மூன்றுபேர் கரூர் டாஸ்மாக் சாராயத்தால் இறந்து போனார்கள்; எனவே சாராயச் சாவை தடுத்து நிறுத்தவும், அதனை தொடர்ந்து ராயனூர் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை எண் 4952 கடையை உடனடியாக அகற்ற வேண்டும்” என்றும் இல்லையென்றால் மக்களே மூடுவார்கள் என்று சொல்லப்பட்டது..

மேற்கண்ட பகுதி இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் இதில் கலந்து கொண்டனர். அடுத்த கட்டமாக டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கான களப்பணி இப்பகுதி மக்களோடு சேர்ந்து செயல்படுத்தப்படுகிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம், கரூர்

7. கோவை

டாஸ்மாக்கை மூடு! மே 5 கெடு!!

கோவை மாவட்ட மக்களுக்கு மக்கள் அதிகாரம் தோழர்களின் அறிமுகமே, அதிரடியாக சாய்பாபா காலனி டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய காட்சிகளை தொலைக்காட்சியில் காணும் போது தான். அந்த நிகழ்வை தொடர்ந்து மக்கள்அதிகாரம் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் சாராயக் கடைக்கு எதிராக போராடி வருகிறார்கள். ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற்ற டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் என கோவை மாவட்டத்தில் மக்கள் அதிகாரம் சாராயத்துக்கும் பணத்துக்கும் அடிபணியாத அதிகார வர்க்கத்தின் புதிய பிரதான பிரச்சினையாக மக்களுக்காக போராடும் புத்தம்புதிய தூய ஆற்றலாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

இதன் அடுத்த கட்ட நகர்வாக, மே 2-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
மே 5-ம் தேதி பாப்பநாயக்கன் பாளையம் டாஸ்மாக் சாராயக் கடையை மூடப் போகும் போராட்ட அறிவிப்பினை ஒரு மனுவாக மாற்றி கொடுக்க மக்கள் அதிகாரம் தோழர்கள் சென்றோம். இது தேர்தல் காலமாதலால் அனைத்து அதிகாரிகளும் அந்த பரபரப்பில் இருப்பதாகவும் எனவே இன்று ஆட்சியரை பார்த்து மனுக் கொடுக்க வாய்ப்பில்லை என்றும், எனவே கலால் துறை அதிகாரியை பார்க்குமாறு கூறவே அவரை சற்று நேரம் தேடினோம். அரை மணி நேர தேடுதலுக்கு பிறகு ஒரு வழியாக அந்த அதிகாரியை கண்டுபிடித்து மனுவை அவரிடம் நீட்டி,

“சார்,  நாங்க மக்கள் அதிகாரத்திலிருந்து வரோம். வர மே 5 ஆம் தேதி
பாப்பநாயக்கன் பாளையம் பகுதி டாஸ்மாக் கடையை மூடப் போறோம் அதுக்காக மனு இந்தாங்க ”

முகத்தில் கேள்வி ரேகைகளுடன் மனுவை வாங்கியவர் இந்த வார்த்தையை கேட்க கேட்க அதிர்ச்சியில் அப்படியே மனுவை டேபிளில் நழுவ விட்டுவிட்டு நம்மை நோக்கினார்.

பின்பு, “என்ன நீங்க இப்பிடி பேசுறீங்க இப்பிடிலாம் பேசக் கூடாது ஒரு அதிகாரிகிட்ட, மொதல்ல எப்பிடி பேசணும்னு கத்துக்கங்க, இப்படியெல்லாம் அதிகாரம் பண்ணி பேசக் கூடாது. தப்பு இப்பிடி பேசுனா செய்றவன் கூட செய்ய மாட்டான். உங்க பேரு என்ன ?” எனக் கேட்க பின்பு மீண்டும் நமது அறிமுகம் முடிந்தவுடன் மனுவை படிக்காமலே எடுத்து வைத்து கொண்டு, பேச ஆரம்பித்தவர் பேசிக் கொண்டே அந்த மனுவை உதவியாளரின் மூலம் உள்ளே அனுப்பினார்.

பின்பு , எப்படி அதிகாரிகளை அணுக வேண்டும் என பல்வேறு மாடுலெசன்கலில் பேசி நமக்கு வகுப்பு எடுக்க ஆரம்பித்தார்.

“சார் நாங்க பாதிக்கப்பட்டவங்க அந்த கடைய மூடச் சொல்லி பல கட்ட போராட்டம் நடத்தினோம். நீங்க மூடல, அதுனால நாங்க இப்ப இப்பிடி பேசுறோம். இல்ல வேற எப்படி கேட்டா டாஸ்மாக்கை மூடுவீங்கன்னு சொல்லுங்க” என்று கேட்டதற்கு பதில் பேசாமல் வெறித்து பார்த்தார்.

இதற்கிடையில், வெளியே நின்றிருந்த நமது தோழர்கள் மூவரை கிட்டத்தட்ட 10 உளவுத் துறை அதிகாரிகள் சுற்றி வளைத்துக் கொண்டு “மக்கள் அதிகாரமா, என்ன செய்யப் போறீங்க ? சொல்லுங்க., இங்க கலெக்டர் ஆபீசுக்குள்ள எதாச்சும் செய்ய போறீங்களா…? இல்லை வெளியவா…? எத்தன பேரு வந்துருக்கீங்க, யார் யாரு பேரு என்ன போன் நம்பர் என்ன?” என அவசர பரபரப்பில் கேள்விகளாக அடுக்கினார்கள்.

நாம் நடந்தால் கழிவறை சென்றால் தண்ணீர் குடிக்க சென்றால் என எங்கு சென்றாலும் பின்னாடியே வந்து, “நண்பா., நண்பா என்ன செய்ய போறீங்க சொல்லுங்க. சொல்லுங்க” என குடைந்து கொண்டே இருந்தனர். பின்னர் மீண்டும் ஒரு உளவு அதிகாரி நம்மை அணுகி, “ஏதாவது ஒரு க்ளூ’வாச்சும் குடுங்க” என ஆரம்பித்தார்.

இதில் க்ளூ கொடுக்க என்ன இருக்கிறது, நீங்களா டாஸ்மாக்கை மூடப்போகிறீர்களா, இல்லை மக்களே மூடட்டுமா?

தகவல்: மக்கள் அதிகாரம், கோவை
தொடர்புக்கு :: 9585822157

8. குறிஞ்சிப்பாடி

டலூர் மாவட்டம் ஆயித்துறை தீர்த்தனகிரி கிராம பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், சிறுவர்கள் மக்கள் அதிகாரம் தோழர்களுடன் இணைந்து குறிஞ்சிப்பாடி கோட்டாட்சியரிடம், டாஸ்மாக் ஆயித்துறை கடை எண் 2521-ஐ மூடக் கோரி மனு கொடுத்தனர்.

Jpeg

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம், குறிஞ்சிப்பாடி.

9. சென்னை மதுரவாயல்

ரும் மே 5-ம் தேதி நாளை மறுநாள் மதுரவாயல் ரேசன்கடை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடும் போராட்டம், அப்பகுதி டாஸ்மாக் எதிர்ப்புக்குழு மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமையில் காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது.

அந்த டாஸ்மாக் கடை அரசு விதிமுறைகளை மீறி இயங்கி வருகிறது. தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் உள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ளது. எனவே அந்த டாஸ்மாக் கடையை மூட அந்த பகுதி டாஸ்மாக் எதிர்ப்புக்குழு மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமையில் வரும் வியாழன் அன்று ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து அந்த அரசு விதியை மீறி இயங்கக்கூடிய டாஸ்மாக் கடையை மூடப்போவதாக அறிவித்துள்ளனர்.

அனைத்து பத்திரிகையாளர்களும் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இடம் : மதுரவாயல் ரேசன் கடை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை

நேரம் : காலை 11.30 மணிக்கு

நாள் : 05-05-2016

தகவல்: மக்கள் அதிகாரம், சென்னை
9176801656

10. கடலூர் மாவட்டம் ஆனைவாரி

ஆனைவாரி டாஸ்மாக் கடையை மூட அதிகாரிக்கு மக்கள் உத்தரவு

vdm-shutdown-tasmac-1கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகாமையில் உள்ள ஆனைவாரி கிராமத்தில் பேருந்து நிறுத்தத்தில் டாஸ்மாக் சாராயக்கடை உள்ளது. இந்தக் கடைதான் ஆனைவாரி கிராமத்தை சுற்றியுள்ள நல்ல தண்ணீர்குளம், மணக்காடு, பெரிய நெல்லிக்கொல்லை, சின்ன நெல்லிக்கொல்லை, துருஞ்சிக்கொல்லை, மதுவானமேடு, எறும்புர் உட்பட 10 கிராம பெண்களின் தாலியறுப்பது.

இந்தக் கடையை மூடக்கோரி ஓராண்டிற்கு முன்பாகவே தாசில்தாரிடம் மனுகொடுத்து பார்த்தனர். அவர்களாகவே தன்னெழுச்சியாக டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராடினர். அப்போது போலீசார் மக்களை கைது செய்து சிறையில் வைத்துவிடுவேன் என்று அச்சுறுத்தி மதுவிற்கு எதிராக போராடிய மக்களை களைத்தனர். இது இந்த பகுதி மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. போராடி கடையை மூடமுடியாது, அவர்களே கடையை மூடினால் உண்டு. இல்லையெனில் இது நம் சாபக்கேடு, அனுபவித்து ஆக வேண்டும் என்று விரக்தி அடைந்தனர். இந்த ஓராண்டு காலத்தில் இப்பகுதியில் குடிக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை பெருகியது.

vdm-shutdown-tasmac-2இந்நிலையில் கடந்த எட்டு மாதகாலமாக “மூடு டாஸ்மாக்கை, குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே” என்ற முழக்கத்தை முன்னிறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பு பிரச்சாரம் செய்தது. தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியது ஆகியவற்றை ஊடகங்கள் மூலம் பார்த்து வந்தனர். இதை தொடர்ந்து அருகாமை பகுதி தோழர்கள் மூலமாக திருச்சி மாநாடு, விருத்தாசலம் பொதுக்கூட்டம், விழுப்புரம் டாஸ்மாக் அலுவலக முற்றுகை ஆகியவற்றில் இப்பகுதியை சார்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.

இவை இந்த பகுதி மக்கள் மத்தியில் நம்பிக்கை கீற்றை உருவாக்கியது. தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட மக்கள் அதிகாரம் துணை புரிய வேண்டும் என்று கோரினர்.

vdm-shutdown-tasmac-8இதை அடுத்து கடந்த ஒருவார காலமாக மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்கள் அந்த மக்களுடனேயே தங்கி ஆனைவாரி கடையை மூட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்சாரத்தின் போது தேர்தல் சமயத்தில் கட்சிகள் மதுவிலக்கு பற்றி பேசுவதை நம்ப தயாராக இல்லை. இருந்தாலும் வேறு வழியில்லை என்று தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்தினர். அவர்களிடம் கடையை மூட தேர்தல் வரை காத்திருக்கத் தேவையில்லை, கட்சிகளின் வாக்குறுதியை நம்பி ஏமாறத் தேவையில்லை, விருத்தாசலம் மேலப்பாலையூர் கடையை மக்களே மூடியதைபோல் நீங்கள் வந்தால் நிச்சயம் ஆனைவாரி கடையையும் மூடமுடியும் என்று நம்பிக்கை ஊட்டப்பட்டது.

இந்த பிரச்சாரத்தை கண்டு பீதியடைந்து உளவுத்துறை போலீசு ஊர் முக்கியஸ்தர்களிடம் சென்று மக்கள் அதிகாரம் அமைப்புடன் செல்லாதீர்கள். சென்றால் சிறை நிச்சயம் என மிரட்டியுள்ளனர். இந்த அச்சுறுத்தும் வேலையை அப்பகுதி வி.சி.க. பா.ம.க. அதிமுக வை சார்ந்த சிலரும் மக்களிடையே செய்தனர்.

vdm-shutdown-tasmac-9இந்த நிலையில், தமிழகம் தழுவிய அளவில் மக்களுடன் இணைந்து மக்கள் அதிகாரம் அமைப்பு 10க்கும் மேற்பட்ட டாஸ்மாக் சாராய கடைகளை மூட மே 5 கெடு விதித்ததும் அதை அறிவிக்கும் விதமாக மே 20ம் தேதி அந்தந்த பகுதி கோட்டாட்சியரிடம் மனுவாக தெரிவிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

இந்த முடிவை அறிவிக்கும் விதமாக மனுவில் மக்கள், மாணவர்கள் 1200-க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டனர்.

சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க 70 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டடோர் திரண்டனர். ஆரம்பத்தில் மனு கொடுப்பதற்கு வர தயங்கிய பெண்கள் , மற்ற பெண்கள் கிளம்புவதை பார்த்து அவர்களுடன் இணைந்து கொண்டனர். இப்படி பெண்கள் அணிதிரண்டுவிடக்கூடாது என்பதற்காக பொய்ப்பிரச்சாரம், போலீசு பீதியூட்டியவர்கள் வாயடைத்துப் போயினர்.

vdm-shutdown-tasmac-7சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மக்களிடம் தோழர்கள், “இந்த மனு என்பது அரசிடம் கெஞ்சுவது அல்ல, மே 5-க்குள் மூட வுண்டும் என்ற முடிவை அறிவிப்பது. போலீசுக்கு அஞ்சாமல் போராடினால்தான் கடையை மூட முடியும்” என்பதை விளக்கி பேசினர். இந்தக் கூட்டத்தில் புகைப்படம் எடுக்க வந்த உளவுப் பிரிவு போலீசை தோழர்கள் விரட்டியதை பார்த்து போலீசிடம் இப்படித்தான் பேச வேண்டும் என்று கூறினர்.

vdm-shutdown-tasmac-6கோட்டாட்சியரிடம் மனு கொடுத்த பெண்கள், “எனக்கு பெண் குழந்தை உள்ளது, கணவனின் குடியால் இப்போது எப்படி அவர்களை வளர்க்க போகிறேன் என்று தெரியவில்லை. அதற்கு யார் பொறுப்பு? கடையை மூடாவிட்டால் தீக்குளிக்கவும் தயங்கமாட்டேன். மே 5-க்குள் கடையை மூடவில்லையெனில் நாங்களே மூடுவோம்” என பேசினர். இவற்றை அங்கு சூழ்ந்து இருந்த பத்திரிகை தொலைக்காட்சி நிரூபர்கள் படம் பிடித்தனர்.

வழக்கமாக தன்னிடம் வந்து மனுகொடுத்து கெஞ்சியவர்களை பார்த்து பழகிய கோட்டாட்சியர் மக்கள் குறிப்பாக உழைக்கும் பெண்கள் உத்தரவிடுவதை கண்டு அதிர்ச்சியில் அமைதியாக இருந்தார். வலியுறுத்தி பதில் கேட்டபோது நடவடிக்கை எடுப்பதாக கூறி முடித்துக்கொண்டார்.

மனு கொடுக்க வந்த பெண்கள், “இந்த அதிகாரி சாராயக் கடையை மூட மாட்டார். மே 5 -ம் தேதி போராட்டத்திற்கு மக்களை திரட்டி மூடிக்காட்டுவோம்” என்று உறுதியாக கூறினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம், விருத்தாசலம்

11. பென்னாகரம்

மிழகம் முழுவதும் டாஸ்மாக்கை மூடியே தீருவோம் என்கிற தொடர்போராட்டத்தில் களம் இறங்கியுள்ளது மக்கள் அதிகாரம். அதனுடைய ஒருபகுதியாக தருமபுரியில் நடந்த போராட்டம் .

pennagaram-shutdown-tasmac-2தேர்தல் வந்தால் திருவிழா வந்ததை போல தெருத்தெருவாக வீடு வீடாக களம் இறங்கியிருக்கிறார்கள் ஓட்டுக்கட்சிகள் இவர்களை ஆர்த்தி எடுத்து அழைக்கும் காலம் போய் ஆர்த்தெழுந்து போராடவும் தயாராகியிருக்கிறார்கள் மக்கள். இந்தப் போராட்டத் தீயை அணையவிடாமல் வளர்த்தெடுக்கும் வகையில் மக்கள் அதிகாரம் சார்பாக டாஸ்மாக்கை மூட வேண்டும் என்ற அடிப்படையில் மக்களை திரட்டி 05-05-2016-க்குள் டாஸ்மாக்கை மூட அரசுக்கு கெடு வைக்கப்பட்டுள்ளது. அதனுடைய ஒரு பகுதியாக பென்னாகரம் வட்டாச்சியரிடம் மனு அளித்து தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறது, மக்கள் அதிகாரம்.

மக்கள் அதிகாரம் கடந்த 10 மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வந்ததை நீங்கள் அறிவீர்கள். இதனுடை பிரதிபலிப்பாக மதுவை பற்றி பேசாமல் எந்த கட்சியும் ஓட்டுக்கேட்க முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். இருப்பினும் எந்தப் போராட்டத்தையும் கண்டு கொள்ளாத ஜெயலலிதா தேர்தல் வந்தவுடனே படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவேன். அதுதான் என்னுடைய லட்சியம், கொள்கை என்றெல்லாம் பேசுகிறார். யாரை ஏமாற்றுவதற்கு?தமிழ்நாட்டு மக்கள் என்றால் தன்மானமற்றவர்கள் என்று எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அத்தனை வேலைகளையும் செய்து வருகிறார்.

pennagaram-shutdown-tasmac-1இப்படி எல்லா கட்சிகளுமே பேசுகிறார்கள். இவர்கள் பேசுவது எல்லாமே ஒரு ஏமாற்று என்பதை கிராமத்து பாணியில் சொன்னால் போதைக்காரன் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சு என்பதை போல இன்றைக்கு தேர்தல் மயக்கத்தில் உளறிகொண்டு இருக்கிறார்கள். இதை நம்பி நாம் ஏமாற போகிறோமா?இல்லை போராட போகிறோமா?

அந்த மயக்கத்தை தெளிய வைக்க வேண்டுமென்றால் மக்கள் அதிகாரம் என்னும் சுயமரியாதை மருந்தை எடுக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலே கடந்த ஒரு வாரகாலமாக தருமபுரியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு 1300 கையெழுத்து இயக்கம் நடத்தி இதனை 02-05-2016 நண்பகல் 12 மணியளவில் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் பேரணியை மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் துவக்கிவைத்து உரையாற்றினார்.

அப்போது அன்றாடம், “ஆயிரக்கணக்கான பெண்கள் தாலியறுப்பதும், மாணவர்கள், இளைஞர்கள் சீரழிவதும் என அன்றாடம் வேதனைகளை துடித்துக்கொண்டு இருக்கிறோம். இதனை எல்லாம் கண்டு கொள்ளாமல் தேர்தல் வரை காத்திருங்கள் என்று நமக்கு ஆறுதல் சொல்கிறார்கள். இதெல்லாம் ஏமாற்று நாம் ஏன் தேர்தல் வரை காத்தியிருக்க வேண்டும். இன்றே களம் இறங்குவோம் டாஸ்மாக்கை மூடுவோம். நம் வாழ்க்கையை பாதுகாப்போம்” என்று மக்களிடம் நம்பிக்கையூட்டினார்.

இதனை நூற்றுக்கணக்கான மக்கள் நின்று கவனித்தனர். பிறகு பேரணியாக வழிநெடுகிலும் பிரசுரம் வினியோகித்து சென்றது மக்கள் வியப்பாக நின்று கவனித்தனர். வட்டாட்சியர் அலுவலகம் சென்று வட்டாட்சியர், டாஸ்மாக் அலுவலக அதிகாரி முன்னிலையில் மனு அளிக்கப்பட்டது.

அப்போது, “நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம்” என்று அவர்களுக்கே உரிய பாணியில் பேசினர். இதனை ஏற்றுக்கொண்ட தோழர்கள், “கடையை மூடவில்லை என்றால் மீண்டும் 05-05-2016 அன்று மக்களை திரட்டி கடையை மூடுவோம்” என்று எச்சரிக்கை விடுத்து கலைந்து சென்றனர்.

இது அதிகாரிகள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போராட்டத்தின் மூலமாக தான் டாஸ்மாக்கை மூட முடியும், போராட்டத்தின் மூலமாகத்தான் அனைத்து உரிமைகளையும் பெறமுடியும் என்பதை உணர்த்தும் வகையில்,அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் தயாராகி வருகிறது.

தகவல்:மக்கள் அதிகாரம், தருமபுரி.
தொடர்புக்கு: 8148573417.