privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மாருதி: கார்ப்பரேட் பயங்கரவாதத்துக்குத் தொழிலாளி வர்க்கத்தின் பதிலடி!

மாருதி: கார்ப்பரேட் பயங்கரவாதத்துக்குத் தொழிலாளி வர்க்கத்தின் பதிலடி!

-

மாருதி

மாருதி எரிந்து கொண்டிருக்கிறது. மாருதி சுசுகியின் மானேசர் ஆலையின் மனித வளத்துறை (எச்.ஆர்.) பொதுமேலாளர் அவனிஷ் குமார் தேவின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. 90 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் கிடப்பதாகவும், அவர்களில் 35 பேர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மேலாளர்கள் என்றும் கூறுகிறது நிர்வாகம். இரண்டு ஜப்பானிய உயர் அதிகாரிகளும் இவர்களில் அடக்கம். பங்குச் சந்தையில் மாருதி சுசுகியின் பங்குகள் மட்டுமின்றி, ஜப்பானில் சுசுகி நிறுவனத்தின் பங்குகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. ஆலை இயங்காததால் மாருதிக்கு ஏற்படும் இழப்பு நாளொன்றுக்கு 70 கோடி ரூபாயாம்.

“கலவரத்துக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்காமல், ஊழியர்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்லாமல் ஆலையைத் திறக்கப் போவதில்லை. எனக்குப் பணம் முக்கியமில்லை. ஊழியர்களின் பாதுகாப்புதான் முக்கியம்” என்று கூறி கதவடைப்பை அறிவித்திருக்கிறார் மாருதி சுசுகியின் தலைவர் பார்கவா. “அந்நிய முதலீட்டாளர்களுக்கு இந்த நாட்டில் என்ன பாதுகாப்பு இருக்கிறது?” என்று கவலை தெரிவித்திருக்கின்றன தரகு முதலாளிகளின் சங்கங்கள். 3000 தொழிலாளர்கள் மீதும் கொலை முயற்சி வழக்கு போட்டு, நூறு பேரைக் கைது செய்து மீதிப் பேரை தேடுவது என்ற பெயரில் சுற்றுவட்டாரம் முழுவதும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது அரியானா போலீசு. தொழிலாளர்கள் அனைவரும் தலைமறைவாகியிருக்கின்றனர்.

பேயறைந்து வெளிறிப்போன ஆளும் வர்க்கத்தின் முகத்தைத் தரிசிப்பதற்கான அரியதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக மாருதி தொழிலாளர்களுக்கு  நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறது இந்தியத் தொழிலாளிவர்க்கம்.

ஜூலை 18 அன்று நடைபெற்ற ஒரு சம்பவம்தான் “திரி” பற்றிக் கொண்டதற்கான காரணம் என்று கூறுகிறார்கள் தொழிலாளர்கள். “ஜியாலால் என்ற தொழிலாளியை மேலாளர் ஒருவன், சாதியைச் சொல்லி திட்டினான். தீண்டாமைக் குற்றத்துக்காக அந்த மேலாளர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, மேலாளருக்கு விடுப்பு கொடுத்து அனுப்பிவிட்டு, தட்டிக் கேட்ட அந்தத் தொழிலாளியை நிர்வாகம் தற்காலிகப் பணி நீக்கம் செய்தது. தற்காலிகப் பணிநீக்கத்தை அகற்றவேண்டும் என்ற கோரிக்கையை நிர்வாகம் எற்கவில்லை. அன்று மாலை பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே, அடியாட்களைக் கொண்டுவந்து இறக்கி நிர்வாகம்தான் தொழிலாளிகள் மீதான தாக்குதலைத் தொடங்கி வைத்தது” என்கிறது மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ராம் மெகர் விடுத்துள்ள அறிக்கை.

தற்காலிகப் பணிநீக்கத்தை நிறுத்தி வைப்பதாகப் பேச்சுவார்த்தையில் நிர்வாகம் ஒப்புக்கொண்டுவிட்டதாகவும், அதன் பின்னரும் ஏன் இப்படி நடந்தது என்பதைத்தான் தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் வெகுளித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தார், மாருதி நிறுவனத்தின் தலைவர் பார்கவா.

யாரோ ஒரு தொழிலாளியை, எவனோ ஒரு மேலாளர், ஏதோ ஒரு நாள் சாதியைச் சொல்லி இழிவாகப் பேசியிருந்தால், அதற்காக ஆலை எரிந்திருக்குமா? இல்லை. கொடூரமான பணிநிலைமைகளாலும் அடக்குமுறையாலும் அன்றாடம் கிடிக்கப்பட்ட வெடிமருந்தாகக் காய்ந்திருந்தனர் தொழிலாளர்கள். வெடிப்பதற்கு ஒரு சிறுபொறி மட்டுமே தேவைப்பட்டது. அந்தப் பொறி அரியானா மாநிலத்தின் இழிபுகழ் வாய்ந்த ஆதிக்க சாதிவெறியாக அமைந்ததையும், அதுவே தொழிலாளிகளின் வர்க்கக் கோபத்தைப் பற்றவைத்து வெடிக்கச் செய்திருப்பதையும் நாம் ஒரு கவித்துவ நீதியாகக்தான் கொண்டாட வேண்டும்.

மாருதி

மாருதி சுசுகி நிறுவனம், ஜப்பானிய சுசுகி மோட்டார் கார்ப்பரேசனின் ஒரு கிளை. இந்திய கார் சந்தையில் பாதி மாருதியின் கையில். மாருதி உற்பத்தி செய்கின்ற 14 மாடல்களில், சொகுசு ரகத்தைச் சேர்ந்தவையான சுவிப்ட், டிசையர், ஏ ஸ்டார், செடான் ஆகிய கார்கள் குர்கான் அருகில் உள்ள இந்த மானேசர் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாளொன்றுக்கு 1152 கார்கள். ஜப்பானிய பன்னாட்டு நிறுவனமான சுசுகியின் ஆண்டு விற்பனையில் (201011) மாருதியின் பங்கு 48%.

நாளொன்றுக்கு இரண்டு ஷிப்டுகள். முதல் ஷிப்ட் காலை 7 மணிக்கு தொடங்குகிறது. மாருதி தொழிலாளி காலை 5 மணிக்கு பேருந்தைப் பிடிக்க வேண்டும். 6.30க்கு ஆலைக்குள் நுழைய வேண்டும். ஒரு நிமிடம் தாமதமானாலும் அரை நாள் சம்பள வெட்டு. “சம்பளம்தான் இல்லையே” என்று திரும்பிப் போக முடியாது. ஆலைக்குள் நுழைந்துவிட்டால் வேலைக்குப் போய்தான் தீரவேண்டும். சம்பளவெட்டு என்பது தாமதத்துக்கான தண்டனை.

மாருதி சுசுகி காரின் 4 மாடல்களுடைய 180 வேறுபட்ட வடிவங்கள் இந்த ஆலையில் உற்பத்தி ஆகின்றன. அசெம்பிளி லைனில் நகர்ந்து வரும் ஒரு கார் இந்த 180இல் எந்த வகையைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம். அதன் ஸ்டியரிங் வலது புறமாஇடது புறமா, அதன் எரிபொருள் பெட்ரோலாடீசலாஎரிவாயுவா, ஏ.சி உள்ளதாஇல்லாததா, 32 வகை இருக்கைகளில் என்ன ரகம், 90 வகை டயர்கள் மற்றும் வீல் அசெம்பிளிகளில் எந்த வகை, கதவுகள், பூட்டுகள், கியர் பாக்ஸ்கள் போன்ற காரின் அங்க அவயங்கள் என்னென்ன வகையைச் சேர்ந்தவை என்ற  பட்டியலை நெற்றியில் சுமந்தபடியே அந்த கார் அசெம்பிளி லைனில் நகர்ந்து வரும். அதைப் பார்த்துப் புரிந்து கொண்டு, பொருத்தமான பாகத்தை தொழிலாளி அந்தக் காரில் பொருத்த வேண்டும். இதற்கு ஒரு தொழிலாளிக்குத் தரப்படும் அவகாசம் 48 நொடிகள். (அமன்சேத்தி, தி இந்து, 6.11.2011)

ஒரு நொடி தாமதமானாலும் விளக்கு எரியும். எந்த தொழிலாளியினால் உற்பத்தி தாமதம் என்று பதிவாகும். அந்த உற்பத்தி இழப்புக்கு ஒவ்வொரு தொழிலாளியும் பொறுப்பேற்க வேண்டும்.

நரம்புகள் முறுக்கேறித் தெறிக்கும் பதற்றத்தில் வேலை செய்யவேண்டியிருப்பினும், கை நடுக்கம் இல்லாத நிதானத்துடன் ஐம்புலன்களையும் குவித்து ஒரு தொழிலாளி வேலை செய்யவேண்டும்.

ஒரு தொழிலாளி குனிவதற்கும், நிமிருவதற்கும், திரும்புவதற்கும், ஸ்குரூ டிரைவரை வைத்து திருகுவதற்கும் ஒவ்வொரு மாடல் காருக்கும்  தேவைப்படும் நொடிகளை  மைக்ரோ செகண்டு துல்லியத்துடன் கணக்கிட்டு, கணித அல்கோரிதம்களின் அடிப்படையில் அசெம்பிளி லைனின் வேகம் நிர்ணயிக்கப்படுகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன் 100 நொடிகளாக இருந்த இந்த நேரம் படிப்படியாக குறைக்கப்பட்டு கன்வேயர் பெல்ட்டின் வேகம் கூட்டப்பட்டு விட்டது. எனவே உற்பத்தியும் இரு மடங்காகிவிட்டது.

கணினிமயமாக்கப்பட்ட இந்த எந்திர வலைப்பின்னலில், மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போல தொழிலாளி வெறும் உப உறுப்பு. மனிதன் என்கிற காரணத்தால் அவனுக்கு, உணவுக்கு 30 நிமிட இடைவேளை. கான்டீனுக்கு போக 10 நிமிடம், வர 10 நிமிடம், சாப்பிட 10 நிமிடம். தேநீர் இடைவேளை 7.5 நிமிடம்  இருமுறை. கழிவறையில் நின்று சிறுநீர் கழித்தபடியே பிஸ்கெட்டைத் தின்று, தேநீரைக் குடித்துக் கொள்ள வேண்டும். ஒரு நிமிடம் தாமதமாகத் திரும்பினாலும் அரைநாள் சம்பள வெட்டு.

மாருதிதொழிலாளர்கள் தமது பணி நிலைமைகளை மேம்படுத்துவது பற்றிப் பேசுவதைக்கூட மாருதி சுசுகி நிர்வாகம் அனுமதித்ததில்லை. மாருதி நிறுவனத்தின் கட்டுப்பாடு சுசுகியின் கைக்கு மாறியவுடனே, தொழிற்சங்க உரிமைக்காகப் போராடிய தொழிலாளர்கள் 1000 பேர் விருப்ப ஓய்வில் வெளியேற்றப்பட்டனர். மாருதி உத்யோக் காம்கார் யூனியன் என்ற கைக்கூலி சங்கத்தை சுசுகி நிர்வாகம் 2001இல் உருவாக்கியது. 11 ஆண்டுகளாக அந்த சங்கத்தில் தேர்தலே நடந்ததில்லை.

அதிகரித்துக் கொண்டே போகும் அசெம்பிளி லைனின் வேகம், குறைந்த கூலி, ஒப்பந்தக் கூலி முறை ஆகியவற்றைச் சகிக்க முடியாத தொழிலாளர்கள், நிர்வாகத்தின் கைக்கூலி சங்கத்தை ஒழித்து, சுயேச்சையான தமது சங்கத்தைக் கட்டுவதன் மூலம்தான் இதற்கெல்லாம் தீர்வு காண முடியும் என்று, புதிய சங்கத்துக்கான போராட்டத்தை சென்ற ஆண்டு துவங்கினர்.

உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்த தொழிலாளிகளை வெளியேறச் சொல்லி உத்தரவிட்டது அரியானா உயர் நீதிமன்றம். உடனே ஆலையின் கதவை இழுத்துப் பூட்டி, தண்ணீர் சப்ளையைத் துண்டித்து, உணவு கொண்டு செல்வதையும் தடுத்தது போலீசு. தொழிலாளர்கள் வெளியே வந்தார்கள்.  “ஆலைவாசலிலும் உட்காரக் கூடாது” என்றது நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு. 33 நாட்கள் கதவடைப்பு செய்தது நிர்வாகம். புதிய சங்கத்தைப் பதிவு செய்ய விடாமல் இழுத்தடித்தது மாநில அரசு.

புதிய தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் மீது அடுக்கடுக்காகப் பொய்வழக்குப் போட்டது நிர்வாகம். 16 இலட்சம் வாங்கிக் கொண்டு ராஜினாமா செய்தால், வழக்கை வாபஸ் பெறுவதாகக் கூறி அவர்களை விலை பேசியது. அவர்கள் சரணடைந்தவுடன், “தலைவர்கள் விலைபோய்விட்டார்கள்” என்ற பிரச்சாரத்தையும் நிர்வாகமே ஊடகங்களில் கட்டவிழ்த்துவிட்டு தொழிலாளிகளின் உறுதியைக் குலைக்க முயன்றது, முடியவில்லை.

பிறகு 103 கூடா நடத்தைகளைப் பட்டியலிட்டு, அவற்றை ஏற்றுக் கொண்டு நன்னடத்தைப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பவர்களுக்கு மட்டுமே வேலை என்று அறிவித்தது. 2 மாதங்கள் தொழிலாளிகள் கையொப்பமிட மறுத்துப் போராடினர். “இவ்வாறு கையெழுத்து கேட்பது 1947 தொழில் தகராறு சட்டத்தின்படி முறைகேடானது” என்று மத்திய தொழில்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே நாடாளுமன்றத்திலேயே ஒப்புக் கொண்டார்.

ஆனால், எந்த அமைச்சனையும் சுசுகி நிர்வாகம் சட்டை செய்யவில்லை. “பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் வேலை” என்றது. பக்கத்திலுள்ள தொழிலாளியுடன் வம்பு பேசுவது, பாட்டுப் பாடுவது, சுத்தமாக இல்லாதிருப்பது, நேர்த்தியாக உடையணியாமலிருப்பது, கழிவறையில் கூடுதல் நேரம் செலவிடுவது  இவையெல்லாம் பத்திரத்தில் நிர்வாகம் குறிப்பிடும் கூடாநடத்தைகளில் சில. இவற்றுக்காக அபராதம், தற்காலிக பணிநீக்கம் முதல் நிரந்தப் பணிநீக்கம் வரை எதையும் செய்யும் அதிகாரம் நிர்வாகத்துக்கு உள்ளது என்று கூறுகிறது இந்தப் பத்திரம். கம்பெனியின் நிலை ஆணையோ, “ஆலை வளாகத்தில் மட்டுமின்றி, ஆலைக்கு வெளியேயும் எந்த நேரத்திலும் தொழிலாளியைச் சோதனை போடுவதற்கு நிர்வாகத்துக்கு உரிமை உண்டு” என்கிறது.

மாருதி

1947 தொழிற்தகராறு சட்டத்தின்படி இவையெல்லாம் சட்டவிரோதமானவை என்பது மட்டுமல்ல, விதிகள் என்ற பெயரில் கொத்தடிமைத்தனத்தைத்தான் தொழிலாளி வர்க்கத்தின் மீது திணிக்கிறது மாருதி. மாருதி நிறுவசனத்தின் தொழிலாளர்களில் மூன்றில் ஒருவர்தான் நிரந்தரத் தொழிலாளி. மூன்றில் இருவர் பல்வேறு வகைகளைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள்.

ஒரு நிரந்தரத் தொழிலாளியின் நிச்சயமான மாத ஊதியம் 8000 ரூபாய். மீதி 8000 ரூபாய் “நிபந்தனைக்குட்பட்ட” மாத ஊதியம். ஒரு நாள் விடுப்பு எடுத்தால் இந்த 8000 ரூபாயில் 1500 ரூபாய் வெட்டப்படும் என்பதுதான் நிபந்தனை. 5 நாள் லீவு எடுத்தால் 7500 ரூபாய் காலி. பயிற்சித் தொழிலாளர்கள் என்று 500 பேர் உள்ளனர். இவர்களது மாத ஊதியம் 6500. நிபந்தனைக்குட்பட்ட மாத ஊதியம் 2250. ஒரு நாள் விடுப்பு எடுத்தால் வெட்டப்படும் தொகை 800 ரூபாய். அப்பிரன்டீஸ்களின் மாத ஊதியமோ வெறும் 3000 ரூபாய்.

2001-02இல் 900 கோடி ரூபாயாக இருந்த மாருதி சுசுகியின் ஆண்டு வருவாய், 2010-11 இல் 36,000 கோடி ரூபாயாக உயர்ந்தது. அவர்களே கணக்கு காட்டியபடி வரி விதிப்புக்குப் பிந்தைய இலாபம் 2200 விழுக்காடு ( 105 கோடி ரூபாயிலிருந்து 2289 கோடி ரூபாயாக) உயர்ந்தது. 2007ஆம் ஆண்டில் மாருதி சுசுகியின் மானேஜிங் டைரக்டர் பெற்ற ஆண்டு ஊதியம் 47.3 இலட்சம் ரூபாய். 2010-11இல் அவரது ஊதியம் 2.45 கோடி ரூபாய். அதாவது 419% உயர்வு.

2007ஆம் ஆண்டில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆக மூத்த தொழிலாளிக்கு கிடைத்த மாத ஊதியம் சுமார் 23,000 ரூபாய். இன்று அவரது மாத ஊதியம் 25,000 ரூபாய். 5.5 % ஊதிய உயர்வு. இந்த நான்கு ஆண்டுகளில் அரியானா மாநிலத்தின் அதிகார பூர்வ நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணே 50% உயர்ந்திருக்கிறது. அதாவது, 4 ஆண்டுகளில் தொழிலாளியின் உண்மை ஊதியமும் வாழ்க்கைத் தரமும் பன்மடங்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

“கோன் உயரக் குடி உயரும். முதலாளிகள் உயரக் தொழிலாளிகள் உயர்வார்கள். ஜி.டி.பி. உயர மக்கள் வாழ்க்கைத்தரம் உயரும்”  என்று தலைகீழ் சூத்திரம் கூறி வருகிறார்கள் புதிய பொருளாதாரக் கொள்கையின் அப்போஸ்தலர்கள். பத்தாண்டுகளில் மாருதியின் விற்பனை 40 மடங்கு உயர்ந்திருக்கிறது. இலாபம் 22 மடங்கு உயர்ந்திருக்கிறது. புல்லுக்கு எதுவும் பொசியவில்லை. குடி மென்மேலும் தாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

இந்திய அரசு வெளியிட்டுள்ள தொழில்துறை குறித்த ஆண்டு சர்வேயின்படி, 2004-05இல் 85 இலட்சமாக இருந்த வாகன உற்பத்தி         (இருசக்கரம் முதல் லாரி வரையிலான அனைத்து வாகனங்களும்) 2011-12இல் 204 இலட்சமாக உயர்ந்திருக்கிறது. கார்களின் ஆண்டு உற்பத்தி மட்டும் ஆண்டுக்கு 12 இலட்சத்திலிருந்து 30 இலட்சமாக உயர்ந்திருக்கிறது. உலகின் ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றியமைக்கும் பொருட்டு முதலாளிகளுக்கு மானியங்களை வாரி வழங்கி வருகின்றன மத்தியமாநில அரசுகள். (ஆஸ்பெக்ட்ஸ் ஆப் இந்தியாஸ் எகானமி, ஜூன், 2012 )

டெல்லிக்கு அருகில் இருக்கும் குர்கான்  மானேசர்  பவால் பகுதியில்தான் இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியில் 60% நடைபெறுகிறது. அங்கிருக்கும் 10 இலட்சம் தொழிலாளர்களில் 80% பேர் காண்டிராக்ட் தொழிலாளர்கள் (பிசினெஸ் ஸ்டாண்டர்டு, 6.6.2011 )

மாருதியில் மட்டுமல்ல, எந்த ஆட்டோமொபைல் துறை நாடு முழுவதும் நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்களோ, அந்த துறை முழுவதும் ஏறத்தாழ இதுதான் நிலைமை.

மகிந்திரா, நாசிக் (மே 2009), சன்பீம் ஆட்டோ, குர்கான் (மே,2009), போஸ்ச் சேஸிஸ், புனே (ஜுலை,2009), ஹோண்டா மோட்டர் சைக்கிள், மானேசர் (ஆக,2009), ரிக்கோ ஆட்டோ, குர்கான்(ஆக,2009), பிரிகால், கோவை (செப்,2009), வோல்வோ, ஹஸ்கொடே(ஆக,2010), எம்.ஆர்.எப்., சென்னை, (அக்,2010; ஜூன்,2011), ஜெனரல் மோட்டார்ஸ், ஹலோல், குஜராத் (மார்ச், 2011), மாருதி சுசுகி, மானேசர், ஜன்,அக் 2011), போஸ்ச், பெங்களூரு(செப், 2011), டன்லப், ஹூக்ளி(அக் 2011), காபாரோ, சிறீபெரும்புதூர்(டிச, 2011), டன்லப், அம்பத்தூர்(பிப் 2012), ஹூண்டாய், சென்னை (ஏப், டிச. 2011, ஜன. 2012)  இது கடந்த 3 ஆண்டுகளாக ஆட்டோமொபைல் தொழில் துறையில் தொழிலாளி வர்க்கம் நடத்திவரும் போராட்டங்களின் பட்டியல்.

மானேசர் வன்முறை காரணமாக இந்த “235 ரூபாய் கவர்னர் உத்தியோகம்” இந்தியாவிடமிருந்து கை நழுவிப் போய்விடுமென்றும், அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறிவிடுவார்கள் என்றும் பூச்சாண்டி காட்டுகின்றன முதலாளித்துவ ஊடகங்கள். பத்து ஆண்டுகளில் 900 கோடியிலிருந்து 36,000 கோடியாக வருவாயை உயர்த்திக் கொண்டிருக்கும் சுசுகி நிறுவனம், ஒரேயொரு செருப்படிக்கா ரோசப்பட்டுக் கொண்டு கிளம்பி விடும்? இந்தியாவிலிருந்து பிரிட்டனோ, இராக்கிலிருந்து அமெரிக்காவோ அப்படி ஓடியதாக வரலாறில்லையே!

இருப்பினும் அந்தப் பகுதியில் ஆலைகளுக்கு நிலத்தை விற்றுவிட்டு, கிடைத்த காசில் வீடு கட்டி வாடகைக்கு விட்டும், கடை வைத்தும், லாரிவேன் ஓட்டியும் வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கும் முன்னாள் விவசாயிகளை, ரியல் எஸ்டேட் தரகர்கள், லேபர் காண்டிராக்டர்கள் போன்ற ஒட்டுண்ணிகள் தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராகத் தூண்டி விடுகிறார்கள். வெளியூரிலிருந்து பிழைக்க வந்த தொழிலாளர்கள், அமைதியைக் கெடுப்பதால், உள்ளூர்க்காரர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளுமாறும், செங்கொடிக்காரர்களின் பிரச்சினை இல்லாமல் தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும் வெளிநாட்டு சுசுகி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கின்றனர், உள்ளூர் ஆதிக்கசாதி “கப்” பஞ்சாயத்துகளின் தலைவர்கள்.

மாருதிபன்னாட்டு மூலதனத்தைக் காப்பாற்றுவதற்காக சொந்த நாட்டு மக்களுக்குள்ளேயே மோதலைத் தூண்டிவிடும் சதிகளை மாநில அரசும் போலீசும் ஓட்டுப் பொறுக்கிகளும் இணைந்து அரங்கேற்றுகிறார்கள். எட்டப்பனும் தொண்டமானும் கூடிப்பெற்ற கைக்கூலியான நரேந்திர மோடியோ ஜப்பானுக்கே சென்று சுசுகி கார்ப்பரேசனின் தலைவர் ஒசுமா சுசுகியின் காலை நக்கி, குஜராத்துக்கு அழைக்கிறார்.

துரோகிகளும் அடிமைகளும் வன்முறையின் ஆபத்து குறித்து தொழிலாளி வர்க்கத்தை எச்சரிக்கிறார்கள். அகிம்சை வழியில் நடக்குமாறு அறிவுரை வழங்குகிறார்கள். ஏழு ஆண்டுகளுக்கு முன் அகிம்சை வழியில் தொழிற்சங்க உரிமை கேட்டுப் போராடிய ஹோண்டா தொழிலாளர்களை இரத்தத்தில் குளிப்பாட்டியது அரியானா போலீசு. ஆனால், கொலைமுயற்சி குற்றம் சாட்டப்பட்டு 63 தொழிலாளர்கள் தான் இன்று வரை கோர்ட்டுக்கு நடந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு போலீசுக்காரன் மீதோ, மானேஜர் மீதோ எந்த வழக்கும் இல்லை.  3 ஆண்டுகளுக்கு முன் இதே குர்கானில் அஜித்சிங் என்ற தொழிலாளியை ஆள் வைத்துக் கொன்ற முதலாளிகள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். கொலை வழக்கு தூங்குகிறது.

தொழிலாளி வர்க்கத்துக்கு  எச்சரிக்கையும் அறிவுரையும் வழங்கும் ஊடகங்கள் எவையும், தொழிலாளர் நல சட்டங்களையும் தொழிற்சங்க உரிமைகளையும் கடுகளவும் மதிக்காத மாருதி உள்ளிட்ட நிறுவனங்களை ஒப்புக்குக் கூட எச்சரிப்பதில்லை. 2008இல் குர்கானில் கிரேசியானோ என்ற பன்னாட்டு நிறுவனத்தின் எம்.டி. லலித் கிஷோர் சவுத்திரி தொழிலாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டபோது, அன்றைய மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆஸ்கார் பெர்னான்டஸ், “இந்தச் சம்பவத்தை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு, பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர் நல சட்டங்களை மதித்து மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்” என்று வாய்தவறிச் சொல்லிவிட்டார். இதைக் கேட்டு கார்ப்பரேட் உலகம் கொதித்தெழுந்தவுடன், “தான் சொன்னது தவறு” என்று முதலாளிகளிடம் வருத்தம் தெரிவித்தார்.

அது தவறுதான். பன்னாட்டு முதலாளிகள் தொழிலாளிகளிடம் மனிதத்ததன்மையுடன் நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு என்பதை நாடு முழுவதும் நாள்தோறும் அவர்கள் நிரூபித்து வருகிறார்கள். தனியார்மய  தாராளமயக் கொள்கைகளின் கீழ் மதம் கொண்ட மிருகமாகவே மாறியிருக்கும் முதலாளி வர்க்கத்தின் முகத்தின் மீது விழுந்திருக்கிறது மாருதி தொழிலாளர்கள் கொடுத்த அடி!

மத்திய அரசு, மாநில அரசு, அதிகாரிகள், போலீசு, நீதிமன்றம், ஊடகங்கள் அனைத்தையும் தனது ஏவலாட்களாக வைத்திருக்கும் திமிரில், தொழிலாளி வர்க்கத்தை புழுவைப் போலக் கருதி நடத்திய மாருதி சுசுகி நிர்வாகம் அவமானத்தில் புழுங்குகிறது. அதன் அதிகாரிகளோ அச்சத்தில் நடுங்குகிறார்கள்.

மருத்துவமனையில் கிடக்கும் ஜப்பானிய அதிகாரிகள், தங்கள் சொந்தக் கம்பெனியின் வளாகத்துக்குள்ளேயே, உயிர் பிழைப்பதற்கு ஓடி ஒளிந்த கதையை, சக பன்னாட்டு நிறுவன அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறட்டும்!

முதலாளித்துவ நிறுவனங்களில் தொழிலாளிகளை அச்சுறுத்தும் எச்.ஆர். வேட்டை நாய்கள், அவனீஷ் குமார் தேவின் புகைப்படத்தை முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒட்டி வைத்து, நாள்தோறும் தம் அச்சத்தைப் புதுப்பித்துக் கொள்ளட்டும்!

எட்டு மணி நேரமோ, பனிரெண்டு மணி நேரமோ தனது ஆற்றலைப் பிழிந்து விற்கும் தொழிலாளி வர்க்கம், ஒரே ஒரு கணம் எதிர்காலம் குறித்த தனது பொருளற்ற அச்சத்தைக் கைவிடுமானால், அந்தக் கணத்தின் ஆற்றல் எப்படி இருக்கும் என்பதை எதிரிகள் உணர்ந்து கொள்ளட்டும்!

மாருதி எரியட்டும்! இந்த அனுமனின் வாலில் தொழிலாளி வர்க்கம் வைத்திருக்கும் தீ, ஒவ்வொரு ஆலையின் மீதும் தாவிப் படரட்டும்! மரணபயத்தை மூலதனம் உணரட்டும்!

“பயங்கரவாதம் என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  ஆனால் அதனை அன்றுதான் முதன் முறையாக அனுபவித்தோம்” என்று பேட்டியளித்திருக்கிறார்கள், மருத்துவமனையில் கிடக்கும் சில மாருதி அதிகாரிகள். பயங்கரம்தான்! ஒவ்வொரு நாளும் தங்கள் மீது பயங்கரத்தை ஏவும் முதலாளி வர்க்கம் சுவைக்கும் பொருட்டு, தொழிலாளி வர்க்கத்தால் பரிமாறப்பட்ட சிவப்பு பயங்கரம்!

_______________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

    • Marana Bayam ? for whom? Why? Gentleman, please recall, how the worker leaders last time got money from the company and deserted the workers and ran away. As long as there is greed, and as long as corporates have money to feed that greed, no need for them to have Marana Bayam. Jai ho Capitalism

      • முதலாளிகளுக்கு பயமில்லேன்னு சொன்னவனெல்லாம் இந்த கட்டுரைக்கு வரிசையா வாங்க பாக்கலாம் https://www.vinavu.com/2012/08/06/efsi-jaya/
        வீராதி வீரர்களெல்லாம் ஆத்தாவிடம் போய் பிஞ்சிங் மீ மிஸ் என்று அழுதார்களாமே ;)))

  1. Hi,

    You have to obey your master rules right? They are giving money to you. if you dont want to work under that condition, then you have to quit job and go some foreign countries where opportunities are there. There also you can find management like this. They having money.you don’t have money. If you want money and work , then you need to obey their rules. That is private company where you cant expect respect and flexibility.

    அவனீஷ் குமார் தேவின் புகைப்படத்தை முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒட்டி வைத்து, நாள்தோறும் தம் அச்சத்தைப் புதுப்பித்துக் கொள்ளட்டும்

    The line is very dangerous. He is also a employee like you. Becuase of these kind of words only, world hates you

    • Employees are not dogs to obey the masters dude. it is obvious u r product of capitalist masters who taught u to obey them. Go and study about labor laws and human rights before commenting on things like this.
      “The line is very dangerous. He is also a employee like you. Becuase of these kind of words only, world hates you” – Who hates who? Avanish kumar? he is also a boot-licker like u.

    • முதலாளித்துவத்தின் கைக்கூலி இப்படித்தான் பேச முடியும். ஆண்டானின் சட்டங்களை மதித்து நடத்தல் அதன் முன் மண்டியிட்டு நக்கிப் பிழைக்கும் (காலை) உம்போன்றவர்களுக்கு சரியாகும். அவர்களின் சட்டங்கள் தொழிலாளிகளை காலில் போட்டு நசுக்கவே இயற்றப்பட்டன. கட்டுரையிலேயே அதற்கு ஆதாரம் உள்ளது. திரும்பப் படியுங்கள்.

      \\
      You have to obey your master rules right? They are giving money to you. if you dont want to work under that condition, then you have to quit job and go some foreign countries where opportunities are there.
      \\

      இது திமிர் வாதம். பிரஞ்சு புரட்சியின் முன்னர் ராணி கூறிய வார்த்தைகள் இவை. அதே போல் இவர்களும் அறுக்கப்படுவார்கள்.
      \\
      They having money.you don’t have money. If you want money and work , then you need to obey their rules. That is private company where you cant expect respect and flexibility
      \\

      அதன் படி அவனுக்கு கழுவி விட்டுதான் வாழ வேண்டும், உங்களுக்கு மரியாதையெல்லாம் கிடைக்காது. இருந்தால் இருங்கள், அல்லது ஓடி போங்கள். அப்படித்தானே. இப்படியெல்லாம் மனிதம் பேசாது.

      \\
      The line is very dangerous. He is also a employee like you.
      \\

      நாய் போல் வாழ்ந்து நாய் போல் செத்த அவனீசும் போல் முதலாளியின் அடிவருடியே. அவனை தொழிலாளி என்று கூறி அந்த வார்த்தைக்கு அவமானம் ஏற்படுத்திவிடாதீர்.

    • U cant exploit someone and earn billions .. Its just the result of human exploitation. I born in this country .. and u should not say me to work in some other countries .. If i dont have money , it doesnt mean that you can multiply your money exploiting me.. We have resources .. and u have money and buy the resources and multiply your money buy selling it to us ..

  2. வினோத், நாங்க அடிமைகள் இல்லை, எங்க நேரத்தை விற்கிறோம். அவ்வளவுதான், இந்த மாஸ்டர் பேச்செல்லாம் இங்க வேணாம். அவனென்ன நோட்டு அடிக்கிறானா? குறைவான சம்பளத்துக்கு எங்களை ரெண்டு மடங்கா வேலை செய்ய வச்சு, எங்க்கிட்டேன்த்து சுரண்டி கொள்ளையடிச் எங்க பணம்தானே அது.

    அவனோட சட்டத்தை நாங்க மதிக்கனும்னு புத்தி சொல்லுற வாயை அந்தப்பக்கம் திரும்பி தொழிலாளிகளின் உரிமையை மதிக்கனும்னு சொல்லிப்பாருங்க…மறுபடி பேச வாயும், திரும்பி பாக்க கழுத்தும் இருக்காது.

    • போகட்டுமே, அவன் ஊருல கட்டுப்படியாகாம இங்க வந்தான், இப்ப இங்கேந்து வேற இடம், நாளைக்கு அங்கேயிருந்து வேற இடம், இப்படி எத்தனை இடத்துக்குத்தான் போவான், அதையும் பார்த்திடலாம்

    • அவன் (மாருதி) குஜராத் போறானாம். போகட்டும் அதனால் குஜராத் சிவப்பாகட்டுமே.

    • people like u are the ones actually dangerous! self-centred, ignorant and narrow-minded. are u a corporate agent? u ppl seriously think companies establish here to give employment to indigeneous population? Pls read other articles by vinavu to know more.

    • விலை மாதர்களுக்குத்தான் இப்படி கோ ஆப்பரேட் செய்வதற்கும் அட்ஜஸ்டு செய்வதற்கும் அவசியம் உண்டு. மான ரோசம் உள்ள எவனும் இப்படி பேச மாட்டான்.

      இவர் கூறுவது என்னவென்றால் :

      பாருங்கள் மக்களே, எல்லாத்துக்கும் பணம் தேவை. நீங்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வில்லையென்றால் அவன் வேறு அடிமைகளைத் தேடிப் போய் விடுவான், அப்புறம் உங்கள் இஷ்டம்.

  3. இங்கு.. வன்முறை தவறில்லை…எனும் போது எதுவுமே தவறில்லை! ஒவ்வொரு வன்முறையின் பின்னாலும் சில நியாயங்கள் ஒளிந்திருக்கும்!
    வன்முறைக்கு எல்லாத் தரப்பும் பலியாகும்!

    ஜெய் வன்முறை! ஒழுகுக ரத்தம்!

    • என்ன செய்யறது ரம்மி, தொழிலாளிகளின் இரத்ததைத் ஒட்டக் குடித்தால் என்ன ஆகும்னு முதலாளிகள் அப்பப்ப மறந்து போயிடறாங்களே

    • ஆமாம் தவறில்லைதான். எங்கள் நியாயங்கள் இப்படித்தான் கிடைக்கும் என்றால் இதை விடவும் காட்டமான பதிலடி கிடைக்கும்.

      தோழர் சேயின் வார்த்தைகள் :

      நின்று கொண்டு சாவேனே தவிர முழங்காலிட்டு வாழ மாட்டேன்.

      உங்களுக்கு எல்லாம் இது எங்கே புரியப்போகிறது.

    • வினோத், இந்த பூச்சாண்டிக்கு பயந்து தினம் தினம் செத்துப் பிழைக்கும் தொழிலாளி இருக்கும் வரைதான் முதலாளிகள் மற்றும் அவர்கள் அல்லக்கைகளின் ஆட்டம். பயம் மட்டும் போயிடுச்சுன்னு வையுங்களேன்…..

    • //you are going to be affected. Govt wont start any new plant for you to work.//
      நல்ல ம*ராச்சு! ஆணியே புடுங்க வேண்டாம்..

    • ஐயோ எனக்கு பயந்து வருதே. அப்போ கவுருமெண்டு மரம் நட்டு தண்ணி ஊத்தாதா.

  4. முதலாளி பயந்திட்டான்..பயப்படுவான்னு சொல்லிட்டு 3000 தொழிலாளிகள் ஏன் ஓடி ஓளிந்து கொண்டுள்ளார்கள்? அங்கேயே நின்று வருவதை எதிர் கொள்ள(ல்ல) வேண்டாமா? இதன் பேர் என்ன? பயமா..இல்லை ராஜதந்திரமா..இல்லை கொரில்லா போர்முறையா?

    • ஆமா அநியாயமா அவன் கொலைமுயற்சி கேசு போடுவான், தொழிலாளிகளும் டிக்கிலோனா டிக்கிலோனான்னு லோன் குட்துகுனே போய் ஜெயிலுக்குள்ள உக்காந்துக்கனுமாம். கேக்குற கேள்வியைப்பாரு

      • நடந்தது தொழிலாளர் வன்முறை தான்..கொள்கைப் போராட்டம் அல்ல என்பதை ஒப்புக் கொண்டுள்ளீர்!

        • ஆமாம், நடந்தது பயங்கரம்தான்! ஒவ்வொரு நாளும் தங்கள் மீது பயங்கரத்தை ஏவும் முதலாளி வர்க்கம் சுவைக்கும் பொருட்டு, தொழிலாளி வர்க்கத்தால் பரிமாறப்பட்ட சிவப்பு பயங்கரம்!

          • கொலையைச் செய்..பலனை எதிர்பாராதே! ஓடிவிடு! நவீன கிருஷ்ணர்களின் உபதேசம்!
            சமையலறையின் அடுப்பை அணைத்து விட்டு..தொழிற்சாலைக்கு தீ வைத்த நவயுக அனுமன்கள்!
            முதலாளியையும் பயமுறுத்திவிட்டு தன் குடும்பத்தினரையும் அலற வைக்கும் சாணக்கியர்கள்!

            வெ(ற்)றிக் கொக்கரிப்பு!

            • ஆமா இவர்தான் நவீன கண்ணாம்பாள், புழிய புழிய அழுதுகினு பக்கம் பக்கமா வசனம் பேச ஆரம்பிக்கரத்துக்குள்ள எஸ்கேப்பு ஆயிடுடா ஊசி

              • வசனம் பேசுவது மட்டுமல்ல மூளையை மழுங்கடிக்க எழுதுவது எப்படி என்பதையும் உங்கள் பாசறையில் தானே பயில வேண்டும்!

            • ஏனாமில் தொழிலாளிகள் முன்னர் தீ வைத்து பழி தீர்த்த, ரீஜென்சி செராமிக்ஸ் டைல்ஸ் தொழிற்சாலையின், முதலாளியின்,தொழிலாளிகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து ஒரு கட்டுரை போடலாமே! யார் எவ்வாறு பாடம் கற்றுக் கொண்டனர் என்பதை அலசலாமே!

            • உரிமைக்காக போராடுரத வன்முறை பயமுறுத்தல் என்று நீங்கள் சொன்னால் அது உண்மை ஆயிடாது . இங்க சொல்ற அறிவுரை எல்லாம் பொய் உங்க முதலாளி கிட்ட சொல்லுங்க , என்ன ஆகும்னு பாப்போம்.

              • மறுபடியும் முதல்ல இருந்தா..? வன்முறை செய்வது போராட்டவழி என்கிறீர்கள்..சொல்லிக் கொள்ளுங்கள்..!ஆனால் தொடர்ந்து நின்று போராடாமல் ஓடி ஒளிவது ஏன்? கொள்கையும்,நியாயமும் ஊனம் அடைகிறதே!

                • ரம்மி அவர்களே,

                  முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போது மூன்றாவதாக அரசு என்ற முதலாளிகளின் கூலிப்படை உள்நுழைவதுதான் தொழிலாளிகள் பதுங்க நேரிடுகின்றது. வோட்டை உழைக்கும் மக்களிடம் வாங்கிக்கொண்டு முதலாளிகளீன் ஏவல் நாயாக செயல்படும் இந்த அரசை வீழ்த்துவதுதான் இதற்கெல்லாம் தீர்வு.

    • இந்த போலீஸ், அதிகாரிகள், ஒட்டு போரிக்கிகள் எல்லோருமே உழைபருக்கு எதிரி தான், இப்படி அரசே பாட்டாளி வருகத்துக்கு எதிரியாக இருக்கும் பொது என்ன செய்ய முடியும், ஆனால் இது நிரந்தரம் இல்லை, எல்லாம் ஓடி ஒழிய வேண்டிய காலம் இன்னும் விரைவில் வரும்……

  5. MANNANKATTI… AVAVLAVU KOVAM IRUNTHA NEENGA THOLILAI AHIRUKA KOODATHU… VIVSAI AHIRUKANUM.
    EPPADI VELA PAKURNGANU FACTARIKULLA VANTHU PARUNGA…
    YARU ULAIPPA YARU SURANDURANU THERIUM.

    • வெங்காயம், விவசாயியானா என்ன தொழிலாளியானா என்ன, அடக்குமுறை செய்தால் ஆப்படிக்கப்படும்!

      • In the same way, if they dont obey the rules (which they said they will when they join the company), Thozilalikkum aappu adikkapadum. Wait and watch the Great Maruti story to unfold in the coming weeks and see how the “Thozhilarkal” react

    • சார் , இப்படி டைப் பண்றதுக்கு நீங்க மறுமொழியே போடாம இருக்குறது பரவாயில்லை, படிக்க முடில….

  6. I will come to oosi and kovai sathish point. last 60 years we dont invented any new thing. we have taken the technology from foreigners only and developed ourselves. you can take every thing as examples.you need foreigners technology and you dont need their policy it means. what you gonna do without foreigners support. you can do only one thing that is agriculture.we have only man power.

    • வினோத், இப்ப வெளிநாட்டுலேருந்து தொழில்நுட்பத்த கொண்டாந்து நம்ம நாட்டு முன்னேற்றத்துக்காக நாம என்ன கிழிச்சிட்டோம். நம்மகிட்ட இருக்கும் மலிவான உழைப்பை பயன்படுத்தி அவன்தானே கத்தைகத்தையா அள்ளுறான்?

      இவனுங்களையெல்லாம் வெரட்டி வுட்டுட்டு இவனுங்களுக்கு அடிமை வேலை செய்யுறாமாதிரியே இருக்கும் படிப்பையும் கடாசிட்டு, நம்ம நாட்டுக்கு நம்ம எதிர்காலத்துக்கு தேவையான திட்டத்தோடுகூடிய இலவச கல்வியை 15 வருசம் அமல் படுத்துனா போதும் அப்படியே விஞ்ஞானிகளை அள்ளு அள்ளுன்னு அள்ளலாம்.

      • who told you that the current education system favours them and who is going to invest money in research?

        Our politicians have no time to loot the money and put it in swiss bank and now you are saying the reason for our dependency is those guys and not our politicians.

        • வந்திட்டாருடா அப்பாடக்கரு, நான் என்ன எழுதியிருக்கேன் இவர் என்ன புரிஞ்சிகிட்டு என்ன பேசுறாரு பாருங்க.

          ஈஸ்வரா

          சுப்பிரமணி நீங்க ஏன் அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு போகாம இங்க வந்து இவாளோட பேஷிண்டுருக்கேள். அப்புடீன்னு உங்களாண்ட கேக்க ஆளே கிடையாதா? ;))) ஏங்காணும் எல்லா எடதுதேலயும் அட்டெண்டன்சு போட்டு தப்புத்தப்பா விவாதிச்சு படுத்துறீரு ;))

          • You are saying foriegners are using us to their benefits and we are following them.

            I am saying it is not like that and we gain and not lose from being like this.

            This is all there is to it,which part of this did you not understand?

            I am saying our politicians are the ones who loot our wealth and park it outside and we dont gain anything but only lose from it.

            I dont believe in fasting and all,violence is the only way to get rid of traitors.

            • சந்தேகமே இல்லாம அவனோட இலாபத்துக்காகத்தான் இங்க வந்து கம்பெனி நடத்தறான். இங்க கூலி குறைவு. வளங்கள் அதிகம், சலுகைகள் அதிகம் அதனால வறான். இங்க அவன் நாட்டளவுக்கு செலவாகும்னா அவன் ஏன் இங்க வரப்போறான்.

              இதுல நம்ம நாட்டுக்கு என்ன ஆதாயம்?
              நம்ம வரிப்பணம் அவனுக்கு சலுகையா போவுது.
              நம்ம விவசாய நிலம் கார் கம்பெனிக்காக போவுது
              அவனுக்கு வரிச்சலுகை கொடுத்துட்டு வரியை நம்ம தலையில ஏத்துறான்
              நம்ம நாட்டு மக்களை ஒட்டச் சுரண்டி சாவடிக்கிறான்.
              இவனுக்கு ஏத்தா மாதிரி நம்ம நாட்டு சட்டதிட்டங்கள் வளைக்கப்படுது.
              முடிவா கிடைக்கும் லாபத்தில் சல்லிக்காசு நமக்கு கிடையாது

              முன்னால இதைத்தானே காலனியாதிக்கம்னு சொல்லி விடுதலைப் போராட்டமெல்லாம் நடந்திச்சு, இப்ப என்ன மாறிப்போச்சு.

              துரோகியை ஒழிப்பது இருக்கட்டும், எதிரி யாருன்னு மொதல்ல புரிஞ்சுக்கங்க

              • Our people also buy companies in the west,China has bought a lot of companies in the west.

                He comes here because it is profitable,but do you think we gain nothing from that.

                Dont we learn technology? And why do we sell our agricultural land?

                is the government idiotic to not allocate development around places which are arid and dry with lesser agricultural land?

                So having coca cola is the same as having a car/bike factory?

                I dont think so.Do you think our own industralists wont exploit our workers.

                if your believe capitalism is so exploitative,why dont a bunch of workers so start their own businesse.why dont you guys start a co operative thing and be successful?

                If people give you their support,then nobody will come from abroad to do these businesses.

                • மொதல்ல உங்களுக்கு என்ன நடக்குதுன்னே விவரம் தெரியலங்க, இந்த அரசாங்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த பன்னாட்டு கம்பெனி ஏஜெண்டாகத்தான் செயல்படுதுன்னு இன்னிக்கு மெயின்ஸ்டிரீம் மீடியாவே எழுதுமளவுக்கு இருக்கு நிலைமை. இதே கட்டுரையிலேயே அதை பேசும் பத்திகள் உண்டு. வினவு இது தொடர்ப்பா 300 கட்டுரைகளுக்கு குறையாம இருக்கும். ஆனா எதையும் படிச்சு புரிஞ்சுக்காம நீங்கபாட்டுக்கு எதோதே சொல்றீங்க.

              • Who is the enemy? Whoever takes credit or whoever tries to make the most of any opportunity . Like the “Comrade leaders”, like the ones who without understanding the reality talks non sense, whoever takes “pallakkku” for the rowdy workers of Maruti…. list goes on.

                There is no Problem in understanding the enemy. and also there is no problem in defeating these enemies, because of the weekness they possess which is called “greed” and there are multiple ways to feed that “greed” and defeat the enemy.

                Jai Ho capitalism.

        • இந்த கல்வி முறையும் , பொறியியல் போன்ற படிப்புகளும் முதலாளிகளுக்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு மீடியாவால் பிரபலமாக்கப்பட்டவை . இதை எப்படி இல்லைன்னு சொல்றீங்க? இதனை பேர் பொறியியல் கலந்தாய்வுக்கு போறது அந்த துறை மேல் உள்ள விருப்பமா இல்ல அதன் மூலம் வரும் வேலை மற்றும் சம்பளமா?

      • வினோத், இப்ப வெளிநாட்டுலேருந்து தொழில்நுட்பத்த கொண்டாந்து நம்ம நாட்டு முன்னேற்றத்துக்காக நாம என்ன கிழிச்சிட்டோம். //

        இறக்குமதி செய்யப்பட்ட கொள்கைகளுக்கும் இது பொருந்துமா..நண்பரே!

        • இறக்குமதி செய்யப்பட்ட தொழில்நுட்பத்தை வைத்து முதலாளிகள் தங்கள் பையை நிரப்பியிருக்கிறார்கள். அது முதலாளிகள் நலன் மட்டும் சார்ந்தது. நாட்டின் முன்னேற்றத்திற்காக அது பயன்படுத்தப்படவில்லை.

          மாறாக கொள்கை மக்களிடம் போராட்ட உணர்வை தூண்டி தங்கள் பையை ரொப்பிக்கொள்ளும் முதலாளிகளை வீழ்த்தி நாட்டை முன்னேற்ற வைப்பது.

        • ரம்மி ஏனுங்க படுத்தறீங்க, அவரு நம்ம நாட்டுல 60வருசமா புதுசா விஞ்ஞானமோ தொழில்நுட்பமோ இல்ல நாம அவனைத்தான் சார்ந்திருக்கனும்னு சொன்னதுக்கு இப்படி கேட்டேன்

          @@@@வினோத், இப்ப வெளிநாட்டுலேருந்து தொழில்நுட்பத்த கொண்டாந்து நம்ம நாட்டு முன்னேற்றத்துக்காக நாம என்ன கிழிச்சிட்டோம். நம்மகிட்ட இருக்கும் மலிவான உழைப்பை பயன்படுத்தி அவன்தானே கத்தைகத்தையா அள்ளுறான்?@@@@

          இதுல கருத்து மாறுபாடு இருந்தா சொல்லுங்க? ஏன் நம்ம நாட்டுல 60வருசமா விஞ்ஞானம் வளராம போயிருக்குன்னு அதை எப்படி வளர்க்கனும்னும் நான் எழுதியிருக்கேன், அதுக்கு மேல விவாதம் செய்யலாம். ஆனா நட்ப்பு விவாத்ததுக்கு சற்றும் பொறுந்தாத இறக்குமதி கொள்கைன்னு மதம்,ஜனநாயகம் போன்றவர்றுக்கு திசை திருப்பி விவாதத்தை ஹைஜாக் செய்யப்பார்க்கும் கயமைத்தனத்துக்கு லோன் கொடுக்கறதுக்கு வேற ஆளை பாருங்க.

          • கொள்கையைத் தான் விமர்சிக்கிறேன்! உம்மைப் போல,
            மாற்றுக் கருத்துக்களை போட வரும் ஆட்களை மேதாவிலாசத்தோடு விமர்சனம் செய்து திசை திருப்பும் கயமைத்தனம் எமக்கில்லை..நண்பரே! எதையும் நியாயப்’படுத்தும்’ திரிபு’வாதமும்’ எமக்கில்லை!

            • மறுபடியும் விவாதிக்கும் பொருளிலிருந்து ஓடிப்போகும் உத்தி. அந்த விவாதத்துக்கும் நீங்கள் எழுதியதற்கும் எதாவது தொடர்பிருக்கிறதா? அது இல்லாத போது சும்மா எதனாவது எழுதி எதற்கு நேரத்தை வீண்டிக்கவேண்டும்? நீங்க விவாதிக்க விரும்பும் திரி வரும்போது அதில் இணைந்து கொள்ளலாமில்லையா?

    • in which school u studied vinoth? haven’t u read about how communism was evolved? capitalists have the same policy all over the world “exploit labour and increase profit”. To do this they will go to any extent. Agriculture in india was totally exploited for the interests of west, by the name of green revolution. we did not invent any new things because our attitude was changed by these corporate giants.

  7. Exactly,

    These guys are frustrated randomly.They wont use their brains and they want to make money by sitting and doing nothing.

    They have made a grave mistake now by killing the HR manager,the backlash will be very bad and then they ll say that it is capitalistic abuse of worker rights.

    Same old pussy politics,but behave like a warrior when they are at an advantage.

    • சேம் ஒல்டு சூப்புரமணி பாலிடிக்ஸ்.
      டூ மச் வோர்ட்ஸ் சீரோ சப்ஸ்டேன்ஸ்

        • indigenous education நான் சொல்லவருவதை இப்படி புரிஞ்சுக்க கூடாது நான் சொல்வது, இவங்களுடைய இலாபத்துக்கான உற்பத்தி, அதுக்கான கல்வின்னு செக்குமாடு போல ஒரே விசயத்தை சுத்திசுத்தி வராம, நம் நாட்டுக்கு என்ன தேவையோ, நம் எதிர்காலத்துக்கு என்ன தேவையோ அதை உருவாக்கும் அளவுக்கு சுதந்திர இலவச கல்வி வேணும்னு, அதுக்காகத்தான் நாங்க ஏற்கனவே வேலை செஞ்சுகிட்டிருக்கோம் https://www.vinavu.com/category/education/

  8. இந்த அம்பேத்,மன்னாரு,ரிஷி,அன்பு,கடவுள்,மயில்,ரியல்என்கவுண்டர் இவங்கள்ளாம் எங்க?

  9. இப்படியே சீப் லேபரை பத்தி பேசிக்கிட்டிருங்க. அங்க ரோபோக்களை வைத்து இதவிட சீப்பா
    காரை செய்யப்போறான் ஜெர்மானியனும் ஜப்பானியனும்.

    • தாராளமா செய்யட்டும், அப்புறம் அவன் நாட்டிலேயே அவன் தொழில் பண்ண முடியாது. இங்கயும் வரமுடியாது.. வேணுமின்னா மார்ஸ்ல தொழிற்சாலை கட்டி அங்க உற்பத்தி செஞ்சுக்கலாம் ;))

      • Instead of talking so much,why dont you try a workers revolution here?

        Do you want to see how many people will support you here?

        I would love to see that comedy.

        • இப்படி காமெடின்னு சிரிச்சவங்கதான் ஒரே ஒரு பொணம் விழுந்ததுக்கு மணிக்கணக்கா குத்த வச்சு அழுவுறானுங்கோ…

            • போகட்டுமே…, அவன் ஊருல கட்டுப்படியாகாம இங்க வந்தான், இப்ப இங்கேந்து வேற இடம், நாளைக்கு அங்கேயிருந்து வேற இடம், இப்படி எத்தனை இடத்துக்குத்தான் போவான், அதையும் பார்த்திடலாம்

              • Your are very blind here..You are telling that it is no problem if Maruti moves to Gujarat and he will face problem there also. Agreed. One thing did you note ? In all your comments above you tracking only the companys future, Comfortably forgetting affected workers future. Not a word you are mentioning. What will he do next now? What about sudden financial crunch that his family is facing now ? You people hail all the time porattam, but never look the hindsight of the victims. What I mean is not you have to forego your rights. You can go on for strike and until yours demands are met. This way you will achieve what you demand atleast to a acceptable level even if not completely. And we can find a progress positivley. But burning down somebody and taking the violence path will only create unempoyment and some scape goats. And there is always some worker who is ready to replace another in India. Will Gujarat workers say no to Maruti bcoz he has dismissed Manesar workers?. Eventhere ig they face problem from MS they can go for a strike and demand hike. All I am saying that is going on strike is called chaanakiyathanam, not this violence. Evenafter this you say capatalists are afraid now, I resign from what I want to prove my point.

            • ஒ வெறி குட்!!!!! அங்க போயும் அடிதான வாங்க போறானுங்க. ஆமா இப்படி ஜால்ரா போடுறீங்களே உங்களுக்கு கொஞ்சம் கூட மானம் இல்லையா ?

        • கரெக்ட்! சப்போர்ட் பண்ண மாட்டாங்க ஏன்னா உங்கள மாதிரி ஆளுங்க தான் இங்க பெரும்பாண்மையா இருக்கீங்க. போராட்டம் என்று சொன்னா நீங்க நான்சென்ஸ் என்று சொல்லிட்டு போயிருவீங்க

  10. oosi,

    you mean to say that we have to follow different education system that will take 15 years to effect.In the mean time you will throw the private companies out of india. We have to suffer. After 15 years all will be right?

    • வினோத், நான் சொன்னது, 15 வருசத்துல அள்ள அள்ள குறையாத விஞ்ஞானிகளை உருவாக்கும் வழியை.

      அது போகட்டும் இப்ப என்னமோ நல்லாயிருக்குற மாதிரியும், இவனுங்க போயிட்டா அவ்ளோதாங்கற மாதிரியும் பேசுறீங்களே, அப்படியெல்லாம் பயப்படவேத்தேவையில்ல.
      நமக்கு தேவையானதை உற்பத்தி செய்யவும், அந்த உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்பமும், உழைப்புச்சக்தியும் நம்மகிட்ட இப்பவே இருக்கு. எவனுடைய பொருளாதார முன்னேற்றத்துக்கோ வேலை செய்யாம நம்ம நாட்டுக்கு தேவையானதை செய்யத்துவங்கினாலே வேலையின்னமை வறுமையெல்லாம் சீக்கிரம் ஒழிச்சிடலாம்.

    • வினோத் இவனுங்க ஒன்னும் இங்க சேவை செய்ய வரல, சம்பாதிக்க கொள்ளை அடிக்க வந்து இருக்கானுங்க அதா மொதல்ல புரிஞ்சிக்கோங்க.

  11. Dear Mr.Vinoth and Mr.Rammy

    Please try to understand what is capital. How the capital is accumulated and what is the role of capitalists and workers. How the present society is functioning and what are the contradiction in it. Your argument is not based on any historical facts or logic.

    • Dear Mr.Kumaran,

      Here we are condemning the violence and it’s consequences @ factory site! and Of cores everywhere! violent trade unionism wouldn’t bring the required results.You can’t achieve positive, out of it!

      Capital..capitalism..communism..socialism .in .all isms.!. there are dictators calling themselves as Leaders,Masters with different names!

      Power center and mass people! Order of this world!

  12. தம்பி,ராமி,வினோது,

    தொழிலாளிங்க அடிச்ச அடியில இப்பதான், முதலாளியிங்க வாயிலேர்ந்து முத்துக் கொட்டுது. உண்மைவருது.

    70% தொழிலாளிங்க தினக்கூலி! எப்படி, கம்பெனிக்கு அவங்க விசுவாசமா இருப்பாங்க?

    வேலை நிரந்தரமாக்க முதலாளிக்குக் கசக்குது. அவங்க்கிட்டயிருந்து வர லாபம் மட்டும் இனிக்குதா? கடமைய செய்யாத முதலாளி, பலனமட்டும் வழிச்சு நக்கினா, கூலிக்கும் வக்கத்த, தொழிலாளி தோப்புக்குக்கரணம் போடனுமா?

    ஆசைக்கு நாய் வளர்க்கரவங்கூட என்ன செய்யிரான்? அதுக்கு நோய் நொடி வரமா பாதுக்காக்கரது, மெனுக்கார்ட் கணக்கா

    டப்பா தீனீ, பொண்டாட்டி, பொண்ணு மாதிரி அதுங்களுக்கு பேரு, காலையில வாக்கிங்னு, பின்னால ஓடல?

    ஆனா, தொழிலாளிங்க மட்டும் பணங்காய்ச்சி மரங்களா என்ன?
    சாதி சொல்லி திட்டரவன், முறையா கூலிக்கொடுக்காம ஏய்க்கிரவன் எல்லாம் முதலாளினு நெஞ்ச நிமித்தினா, அவனுங்கள கஞ்சி கசாம, பின்ன கொஞ்ஞிகினா இருப்பாங்க!

    குமரன் அய்யா! நீங்க, மருவாதையா பள்ளிக்கூடத்தில சொல்லறாமாதிரி சொன்னா இவங்களுக்கு எங்க, ஒரைக்க போவுது?

  13. சரியான பதில், தலையில் இருந்து முடிகொட்டினாக்கூட வருத்தப்படுவாங்க, ஆனா தொழிலாளிகளின் உயிரே போனாலும் திரும்பிக்கூட பார்க்காத பேய்களுக்காக முதலாளித்துவ வேதாளங்களின் ஆதரவு,,,

  14. அந்நிய முதலீட்டாளர்கள் இங்கு தொழில் தொடங்கி நமக்கு வேலை கொடுக்கிறார்கள்.நம்மை வாழ வைக்கிறார்கள் என்பதை விட முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது.
    அவன் இங்க வந்ததே கொள்ளை லாபம் பாக்குரதுக்குதான்.இங்குள்ள ஆட்சியாளர்களுடன் கள்ளக் கூட்டு வைத்துக்கொண்டு அவனுகளுக்கு சில எலும்பு துண்டுகளை வீசுவதன் மூலம் நமது நிலத்தையும் வளங்களையும் ஆட்டைய போட்டு வருகிறான்கள்.தொழிலாளர் வர்க்கம் போராடி பெற்ற உரிமைகள் அனைத்தையும் இந்த அரசாங்கத்தின் உதவியுடன் காலில் போட்டு மிதிக்கிறான்.இந்த நாட்டு சட்டங்கள் செல்லுபடியாகாத சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைத்து தருகின்றது அரசாங்கம்.[இப்படித்தான் அன்றைய பல இந்திய மன்னர்கள் பிரிட்டிஷ்காரனுக்கு நாட்டை காட்டிக் கொடுத்து மாமா வேலை பார்த்தார்கள்.]அவனுகளுக்கு தடையற்ற மின்சாரம் அதுவும் மலிவு விலையில் குடுக்கிரதுனால நமக்கு பவர் கட்.இதுனால எத்தனை சிறு தொழில் நிறுவனங்கள் நொடிச்சு போய் மூடப்பட்டு வருகின்றன என்று இங்கு கார்பரேட் கொள்ளையர்களுக்கு ஆதரவாக கூச்சல் போடுவோருக்கு தெரியுமா.சில ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கிறான்.உண்மைதான்.ஆனால் நிலத்தை விட்டு,விவசாயத்தை விட்டு, தொழிலை விட்டு விரட்டி பல லட்சம் பேரின் வாழ்வாதாரத்தை பறிக்கிறான்.

    அவன் வருகை யாருக்கானது என்பதை ஒரு எடுப்பான உதாரணம் மூலம் விளங்கி கொள்ளலாம்.சமீபத்துல இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களின் வேகம் போதாது என்று இந்திய ஆளும் வர்க்கங்களின் எஜமான் ஒபாமா ஊளை இட்டிருந்தார்.அதுக்கு அவர் சொன்ன எடுத்துக்காட்டு.”சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை இந்தியா இன்னும் அனுமதிக்கவில்லை”.நான் கேட்கிறேன்.இந்தியாவுல யாரும் பொருட்கள் வாங்க கடை இல்லையா.வால்மார்ட் வந்துதான் வாங்கி தரணுமா.
    வால்மார்ட் வந்தா வேலை வாய்ப்பு பெருகுமாம்.உற்பத்தி பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்குமாம்.மண்ணுமோகன் கும்பல் சொல்லுது. ஆமாய்யா வால்மார்த்டோடு போட்டி போட முடியாம கடையை இழுத்து மூடும் சில்லறை வியாபாரிகளுக்கு அங்க செக்யூரிட்டி கார்ட் வேலை கிடக்கும்.அதுவும் சில பேருக்குதான்.கோடிக்கணக்கில் செக்யூரிட்டி வேலைக்கு ஆள் எடுக்க மாட்டான்.இந்த அநியாயத்தை நாட்டுக்கு நன்மை தரும்னு யாராவது சொல்ல முடியுமா.

    • I agree with all that you say but do you think becoming socialist will help us.

      Even a country like China is not socialist,but they have ways in which they allow Foreign investment to come into the country.

      The problem is India is not foreign investment,it is consumption.Personally i see over abuse of consumption in the Indian society.Do we need to consume so much.

      I still remember how people used to drink 10 years ago,they ll buy a bottle,meet up,buy some soda and sit on a terrace and cook some food at home and eat it.The cost ll be very minimal.

      Today we see people going to a bar and wasting too much money spending a lot.

      Why cant we allow FDI and everything but only choose items that fit out level.

      I remember as a kid,my mom will not let me eat outside at all.Cycle to school and there was no internet/facebook.

      Today i see kids with multiple gadgets sitting on their couch and munching chips and coca cola all the time.

      So,whose fault is it?

      Anything beyond a level is too much,FDI is very halpful to us and not all foriegn money is FDI,we also have FII where people invest money in Indian stock market.

      We can use all this money to really develop our people,this is what happens in China and many countries in South East Asia but we on the other hand dont do enough to uplift our poor people and the problem lies in our politics and not so much in a foriegn investment.

      SEZ/Eelecticity is no problem.It is upto how we manage things.

      And at any point is the balance of Foriegn investment is favourable only to the foriegners,we will not be allowing it.

      The problem of India is our greediness,disunity,abuse of power and resources by our politicians.

  15. Indians are slaves. They have been trained to be slaves. India is the only country which have lower level adn Higher level humans. In other countries there are only humans. Indians think foreign people are higher level humans. Indians make themselves slaves. Indian education system is based on British system which was made for making Indians slaves. it is continuing. Tamils become slaves of English and the English culture. Unless you learn and study in your own language you can never become masters. Indians will be slaves forever

  16. Learning english is no harm,speaking good english is also no harm but there has to be a clear line as to how much english influences your lifestyle.

    For that u need culture markers,family reunions,grandparents often in touch with grandkids and so on.Otherwise the media and the confused ones will reap harvest at everyone’s benefit.

  17. புரட்சிக்கான ஒத்திகைக்கே இவ்வளவு வீரியம் என்றால் புரட்சி வரும் போது அது திருவிழாவாக கொண்டாடப்படும். இது முதல் அடி. தீ மூள்க மூள்கவே, முதலாளித்துவம் மாள்க மாள்கவே, வீழ்க வீழ்கவே.

    • அடேங்கப்பா அடி குடுத்த கைபிள்ளைக்கே சட்ட கிளிஞ்சிருக்குன்னா அடி வாங்கினவன் உயிரோட இருப்பான்னா நினைக்கிற?

  18. வன்முறை கூடாது என்று கூறும் அறிவாளிகளுக்கு தோழர் சேயின் வார்த்தைகள்:

    Hatred as an element of the struggle; a relentless hatred of the enemy, impelling us over and beyond the natural limitations that man is heir to and transforming him into an effective, violent, selective and cold killing machine. Our soldiers must be thus; a people without hatred cannot vanquish a brutal enemy.

    in 1967 a message to tricontinental

  19. அந்நிய முதலீட்டின் மூலம் பன்னாட்டு கம்பெனிகள் கொள்ளை இலாபம் அடிப்பதும், பொதுச்சொத்துக்கள் நாசமாக்கப்படுவதும், தொழிலாளர்களின் இரத்தம் உறிஞ்சப்படுவதும் பன்னாட்டு கம்பெனிகளை ஆதரிக்கும் தெரியாமல் இல்லை. அவன் மூலம் கிடைக்கும் சில ஆயிர எலும்புத்துண்டுகளுக்காகத்தான் இவர்கள் அலைகின்றனர். இந்தியத் தொழிலாளர்கள் எக்கேடு கெட்டு போனால் நமக்கென்ன என்ற கொள்கையுடையவர்கள். மற்றபடி எனது சாதி மதம், சகோதரர்கள், இனம், நமது தாய்நாடு என்பதெல்லாம் உழைப்பவர்களின் காதில் பூ சுற்றும் வேலை.

  20. இங்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் தவறுகளுக்கு போராடுகிறீர்கள் இது எல்லாம் சரிதான், அனால் பர்மாவில் உங்கள் கம்யூனிஸ்ட் காரன் இது வரை 22000 முஸ்லிம்களை அநியாயமாக கொன்று குவித்து வருகிறான் ……..

    • முபாரக்கு, பர்மால நடப்பது மிலிட்டரி சர்வாதிகாரம். பேசனும்கறத்துக்காக இப்படியா உளருவது.

      இப்படி ஒரு இனப்படுகொலை நடப்பது அநீதிதான். அமெரிக்காவாகவும், அமெரிக்கா அடிவருடி நாடுகளாக இருந்தாலும் முதலில் முசுலீமைத்தான் வதைக்கிறான்.

      உங்கள் கோவம் நியாயமானது, காட்டும் இடம்தான் தவறு

    • பேர் முஸ்லிம்கள் இல்லேன்னா கோப பட மாடீன்களா? நல்ல இருக்குங்க உங்க நியாயம்….

    • பங்களாதேஷி ரோங்கியா முஸ்லிம்கள் பர்மாவில் கள்ளத்தனமாக குடியேறியதை எதிர்த்து பர்மியர்கள் நடத்தும் தாக்குதல் அது. போடோக்கள் அஸ்ஸாமில் தாக்குவதப்போல.பிரச்சினை முஸ்லிம் நாடான பங்களாதேஷில் உள்ளது.பர்மியர்கள் கம்யூனிஸ்ட்களாக இருந்தாலும் கார்ப்பொரேட்டுகளாக இருந்தாலும் வந்தேறிகளை தாக்குவது நிகழத்தான் செய்யும். வாய்ப்புகள் குறையும் போதும்,இருக்கின்ற சொற்ப வளங்களை பங்கு வைத்துக் கொள்ளும் போதும் வந்தேறிகள் மீது வன்மத்தை தூண்டிவிடுவது அரசியல்வாதிகளுக்கு எளிது.

  21. மாருதி தொழிற்சாலையில் நிகழ்ந்த வன்முறைகளுக்கு வாஸ்து சரியில்லாததுதான் காரணம் என்று வாஸ்து சாஸ்த்திர வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மாருதி நிர்வாகம் வாஸ்து வல்லுனர்கள் பரிந்துரைக்கும் மாற்றங்களை
    செய்யும் என்று நம்பப்படுகிறது.
    http://www.dw.de/dw/article/0,,16142879,00.html

    வாஸ்து நிபுனர்கள் கருத்துப்படி மேற்கு திசை வாயு மூலை எனப்படும். மாருதி – வாயுபுத்திரர் ஆனதால் அவருக்கு உகந்த இடம் மேற்கு. குஜராத் மேற்கு மூலையில் இருப்பதால் அங்கே இடம் பெயர்ந்தால் அனைத்து சங்கடங்களும் தீர்ந்துவிடும்.

    • போற நிலமையப் பாத்தா, இந்தியாவில் எங்குமே வாஸ்து சரியில்லை என்று தோன்றுகிறது. பேசாம சீனாவுக்குக் கொண்டு போனால் நல்லது என்று ஜப்பானில் ஜோசியர்கள் சொல்வதாகக் கூறப்படுகிறது.

  22. பல தலைமுறைகளாக உழைக்கும் வர்க்கம் எதிர்கொள்ளும் “முதலாளித்துவ பயங்கரவாதம், இன்றைய ஏகாதிபத்திய பயங்கரவாதம்”, ஒரே தலைமுறையில் முதலாளிகளையும் அவர்களுக்கு வால் பிடிக்கும் அடிபொடிகளையும் அதே பயங்கரவாதத்தோடு தாக்கும்.

  23. மாருதி: “டைம்ஸ் ஆஃப் இந்தியா” கும்பலுக்கு பாடம் புகட்டுவோம் – இன்று (6.8.12) மாலை ஆர்ப்பாட்டம்! அனைவரும் வருக!

    நாள்: 6.8.12 மாலை 5 மணி இடம்: மெமோரியல் ஹால்

    http://rsyf.wordpress.com/2012/08/06/ndlf-aarpattam-for-maruti-workers/

  24. Burning alive a person and factory assets are not correct way to get their rights. Because it(Violence) will become a habbit of everyone and then all factories will be closed or moved to another country. Already we experienced many things and the workers are now begging for their daily needs. So, workers unions are misleading the workers and now they have lost support fully from public.

  25. Dear Mr.Rammy

    I want you to look at the truth. But you are confusing with so many isms. What you learn more by just condemning the violence. If you want to analyse the sunami in Tamilnadu, then you must know what happened under the sea in Indonesian coast. With out that your analysis will be a total waste. Similarly, you have to analyse the root cause of the violence. Please note that I am not supporting anybody for the violence.

  26. மாருதி விவகாரம் நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் ஆப்பு.

    இந்த அறிவு ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன் மாருதி கம்பெனி வருமுன் வந்திருந்தால் வரவேற்கலாம்.

    இப்படித்தான் பழைய பிரதமர் மொரார்ஜி தேசாய் அன்னிய கம்பெனிகளையெல்லாம் 1960 களில் விரட்டியடித்தார். அப்போதிருந்து நக்க ஆரம்பிச்சவங்க நாம. இப்பத்தான் ஒரு 20 வருசமா நல்ல சோறு பாக்குறோம்.

    போங்க, எல்லா கம்பெனிகளயும் வெரட்டுங்க. சீனா ரெடியா காத்துக்கிட்டிருக்கு. அங்கேயெல்லாம் யூனியன்னு பேசினால், இழுத்து வச்சு அறுத்துறுவாங்க.

    நாம பழைய படி நக்கலாம்.

    பட்டாத்தான் தெரியும். (பாப்பானுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும்)

  27. மிகச் சிறந்த கட்டுரை. 1970 ம் ஆண்டுகளில் சென்னை சிம்சன் தொழிலாளர் போராட்டத்தில் ரவுடி பிரதாப்சந்திரன் கொல்லப்பட்டது நினைவுக்கு வருகிறது .

    – ஜவஹர் (மூத்தப்பத்திரிக்கையாளர்)

    //எட்டு மணி நேரமோ, பனிரெண்டு மணி நேரமோ தனது ஆற்றலைப் பிழிந்து விற்கும் தொழிலாளி வர்க்கம், ஒரே ஒரு கணம் எதிர்காலம் குறித்த தனது பொருளற்ற அச்சத்தைக் கைவிடுமானால், அந்தக் கணத்தின் ஆற்றல் எப்படி இருக்கும் என்பதை எதிரிகள் உணர்ந்து கொள்ளட்டும்!//

    அந்த ஆற்றலின் வேகத்தை ஊசி முனையளவு உணர்ந்ததர்க்கே முதலாளி வர்க்கம் இந்த அலறு அலறுகிறதே ! நல்ல கட்டுரை!
    – இரா. உமா

    மின்னஞ்சலிருந்து…

  28. இந்த கட்டுரை ஆதாரங்களுடன், அழுத்தமாகவும், வர்க்க கோபத்துடனும் அருமையாக எழுதப்பட்டிருக்கிறது.

    சீனாவிற்கு போய்விடும்! பங்களாதேஷ்க்கு போய்விடும் என்பதெல்லாம் வெறும் உதார். அதற்கு பதிலும் கட்டுரையிலேயே எழுதப்பட்டிருக்கிறது.

    தொழிலாளர்கள் தினமும் முதலாளித்துவ பயங்கரவதிகளால் கொல்லப்பட்டு கொண்டிருக்கிறார்கள். திருப்பி அடித்தால், அய்யோ அம்மா என முதலாளிகளும், முதலாளித்துவ எடுபிடிகளும் அலறுகிறார்கள்.

    தொழிலாளர்கள் சங்கம் வைப்பது என்பது ஓட்டுரிமை போலவே இயல்பானது சங்கம் வைக்கும் உரிமை. ஆனால், தொழிற்சங்கம் என்றாலே அலர்ஜியாகிறார்கள். ஆனால், இவர்கள் மட்டும் முதலாளிகள் சங்கம் வைத்துகொண்டு, அரசிடம் பேரம் பேசுகிறார்கள். மானியம் பெறுகிறார்கள். தொழிற்சங்கங்களை ஒடுக்க அழுகாச்சி கடிதம் தருகிறார்கள்.

  29. I heard a news that management is going to dismiss 1000 permanent employees and going to hire new employees. what you gonna do.. no will care about those ex employees. those who are jobless will apply for those jobs. loss is on your side.

  30. நண்பரே,

    இப்படியொரு அபத்தமான கட்டுரையை உங்களால் மட்டுமே எழுதமுடியும்.

    1. வேலையில் கண்டிப்பாக இருப்பது கொத்தடிமைத்தனம் அல்ல. கொத்தடிமை என்றால், நிர்ப்பந்தப்படுத்தி வேலைக்கு வைத்திருப்பது. இங்கே 8000 சம்பளம் கிடைக்காதவர்கள் ஏராளமானவர்கள் இருக்கும்போது, அந்த 8000 ரூபாய் வேலைக்கு பெரிய அடிதடி நடக்கும்போது, வேலைக்கான நியமங்கள் பிடிக்காதவர்கள் வேலையை விட்டுவிட்டு அந்த வேலையை நிபந்தனைகளுக்குட்பட்டு செய்யத்தயாராக இருப்பவர்களுக்கு கொடுத்துவிட்டு போகவேண்டியதுதான் முறை.

    2. ஒட்டுமொத்த கட்டுரையும் சீனாவுக்கு சாதகமாக எழுதப்பட்டிருப்பது போலத்தோன்றுகிறது. இதைவிட மோசமான வேலை ஒப்பந்தங்கள் இருக்கிறது சீனாவில். அவர்கள் அதனால் இந்தியர்களின் வேலைவாய்ப்பை எடுத்துக்கொண்டு 8000 ரூபாய்க்கு பதில் 6000 ரூபாய் அவர்களது தொழிலாளர்களுக்கு கிடைத்தால் போதும் என்று எல்லா முதலீடுகளையும் அங்கே கொண்டுபோய் விடுகிறார்கள்.

    3. முதலாளிகளை அடித்து உதைத்தால் ஃபேக்டரியை மூடிக்கொண்டு போய்விடுவார்கள். 36000 கோடி ரூபாய் இருப்பதால் போகமாட்டார்கள் என்பது உங்களின் அறியாமையைக் காட்டுகிறது. இது போன்ற பிரச்சினைகள் காரணமாக ஏற்கெனவே பல தொழிற்சாலைகள் ஹரியானாவை விட்டு போய்விட்டார்கள். இப்போதும் கூட இந்த மாருதியை வரவேற்க பிற மாநிலங்கள் தயாராகவே உள்ளன. மனேசர் ஃபேக்டரியில் வேலை செய்பவர்கள் பலர் உ.பி மற்றும் பீஹார் மாநிலத்தவர்கள். அந்த மாநிலங்களில் இதே ஃபேக்டரி துவங்கினால், இதே வேலையை 5000 ரூபாய் மாதசம்பளத்தில் செய்யத்தயாராக இருப்பார்கள். அவர்களுக்கு வயிறு நிரம்ப வேண்டும் என்ற கவலை. உங்களைப் போன்று தூண்டிவிடுபவர்களால் எத்தனை கோடி தொழிலாளிகளின் வாழ்வு இருண்டு கிடக்கிறது என்பதை நினைத்துப்பாருங்கள்.

    4. யூரின் போய்க்கொண்டே பிஸ்கட் சாப்பிடுவதைப் பற்றி எழுதுகிறீர்களே, சீனாவில் யூரினுக்கு கூட அசம்பிளி லைனில் இருந்து வெளியே போகமுடியாது தெரியுமா? சீனா இன்று பல கோடி தொழிலாளிகளுக்கு மூன்று வேலை சாப்பட்டை காட்டியுள்ளது இதனால் தான் தெரியுமா?

Leave a Reply to நான் கடவுள் இல்லை பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க