முழுத் துயரில் நின் கண்ணீர் சிந்து என் நாடே,
நின் சேகமான மண்ணின் சோகமான விதியையிட்டுப் போய் அழு.
உனக்கு வேதனையாயும் அயலானுக்கு அவனது ஊட்டமாயும்
நினைச் சூழும் அவலத்தில் குடங் குடமாய் நின் கண்ணீர் சிந்து.

நின் அடையாளங்கூறுங் கொடி ஒரு அந்நியக்கொடியின் கீழ்ப்பட்டுக் கிடக்கிறது.
நின் மரபுரிமையான மொழி மற்ற மொழியின் தாழ்வான அடிமையாய் உள்ளது.
அவர்கள் பெருமையாய்க் கொண்டாடுகையில் நின் கண்ணீர் சிந்து
சிறியதின் சவ அடக்கத்தில் பெரியதின் களிப்புக்காக
நின் செல்வமனைத்தும் பிடிபிடியாக நுகர்வுறும்
நின் சுதந்திரமனைத்தும் அதேவேளை கட்டுண்ணும்.

இலக்கு இதயத்தில் நெகிழ்ந்தானதும் நின் கண்ணீர் சிந்து
நின் நெஞ்சில் எரிமலை உறுமுவதை நிறுத்தியதும்
எழுச்சியின் இரவில் எவரும் காவலிராத போது
நின் விடுதலை மரித்ததும் போய் நின் கண்ணீர் சிந்து

நின் கண்ணீர்த்துளிகள் யாவும் பாவித்து முடிந்து உலரும் ஒரு நாள் வரும்
நின் கண்களில் கண்ணீர்த்துளிகள் இனியுந் திரளாத ஒரு நாள் வரும்
ஆனால் நின் குருதி கொதிக்கின்ற உருக்காகும் வேளை
பாய்வது தீயாய் குருதி நிறத் தீயாய் இருக்கும்.

ஆயிரம் தீவட்டிகளின் தீச்சுடரில் நீ வீரமாய் முழங்குவாய்.
நின் கண்ணீர்ச் சங்கிலியை ஒரு தோட்டாவால் அறுப்பாய்.

அமாடோ ஏ. ஹெர்னான்டெஸ்
(13 செப். 1903- 24 மாச் 1970)

(பிலிப்பினியக் (பிலிப்பைன்ஸ்) கவிதை. 1970-களில் அந்நிய அரசியல், பொருளாதார ஆதிக்கத்துக்கும் ஒடுக்கலுக்கும் எதிரான மாணவர்களின் அரசியற் செயற்பாட்டின் போராட்டச் சங்கொலியாயிருந்த பாடல்)

நன்றி: செம்பதாகை, ஆகஸ்டு-2018.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி – இலங்கை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க