PP Letter head

பத்திரிக்கைச் செய்தி

06.11.2020

நேற்றையதினம் உயர்நீதிமன்றத்தில் பாஜக நடத்தக்கூடிய வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று கூறிய தமிழக அரசு இன்று திருத்தணி வரை செல்ல அனுமதி அளித்துவிட்டு பின்னர் கைது செய்வதாக நாடகமாடி இருக்கிறது.

மக்கள் தங்களுடைய பிரச்சனைக்கு கூடக்கூடாது, அமைதியான முறையில் போராட கூடாது ,கொரானா ஏற்படும் என்றெல்லாம் மக்களை ஏமாற்றி அடக்குமுறை செலுத்துகிறது எடப்பாடி அரசு.

தமிழர்களுக்கும் தமிழ் இனத்திற்கும் தீங்கு விளைவிப்பதை ஒரே நோக்கமாக கொண்டு செயல்படும் பாரதிய ஜனதா கட்சி தற்போது நடத்தியிருக்கும் வேல் யாத்திரை என்பது, சாதி மதக் கலவரங்களைத் தூண்டுவதற்காக நடத்தப்படும் ஒன்றாகும்.

படிக்க :
♦ டானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் !
♦ டானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் ?

இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் அமைப்புக்களும் தொடர்ச்சியாக கண்டனக் குரல் கொடுத்து வந்தனர். இந்த எதிர்ப்புக்களில் இருந்து ஆர்எஸ்எஸ் – பிஜேபியை காப்பாற்றும் பொருட்டு வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டு இன்று திருத்தணி வரை செல்ல அனுமதி அளித்திருக்கிறது.

தமிழக அரசும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் ஆர்எஸ்எஸ் – பிஜேபியை காப்பாற்றுவதையே ஒரே நோக்கமாக கொண்டு செயல்படுகின்றன. மனுநீதியை நடைமுறைப்படுத்த வேல் யாத்திரைக்கு அனுமதி அளித்திருக்கிறது அரசு என்பதுதான் இதன் பொருள் .

மக்களிடையே சாதி, மத வெறியைத் தூண்டி வன்முறையை ஏற்படுத்த திட்டமிட்ட பிஜேபி நிர்வாகிகளை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இல்லையெனில் தமிழகம் சாதி, மத வெறியர்களின் வன்முறைக் களமாக மாறுவதை தடுக்கவும் முடியாது. அதற்கு எதிரான மக்களின், கட்சிகளின் போராட்டங்களையும் தடுக்கவும் முடியாது.


தோழமையுடன்
மருது
செய்தித் தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க