PP Letter head25.01.2022
பத்திரிகைச் செய்தி
க்கள் அதிகாரம் தஞ்சை மண்டலத்தின் திருவாரூர், வேதாரண்யம் கிளை முதல் மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது!
வேதாரண்யம் கிளை:
25.01.2022 அன்று தோழர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வேதாரண்யம் கிளை மாநாடு வெற்றிகரமாக நடந்தேறியது.
தேர்தல் அலுவலராக நிகழ்ச்சியை நெறிப்படுத்திய தோழர் தங்க. சண்முகசுந்தரம் முன்னிலையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிளையின் செயலாளராக தோழர் கிருஷ்ணமூர்த்தி, இணைச் செயலாளராக தோழர் வெங்கடேசன், பொருளாளராக தோழர் ராஜேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளை சார்பாக செயலாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி ஏற்புரையும், உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டார்.

This slideshow requires JavaScript.

திருவாரூர் கிளை:
25.01.2022 அன்று, தோழர் தங்க.சண்முக சுந்தரம் தலைமையில் திருவாரூர் கிளை மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது.
தேர்தல் அலுவலராக பங்கேற்ற தோழர் சாந்தகுமார் நெறிப்படுத்தலின் அடிப்படையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிளையின் செயலாளராக தோழர் தங்க. சண்முகசுந்தரம், இணைச் செயலாளராக தோழர் ஆசாத், பொருளாளராக தோழர் முரளி தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளை சார்பாக செயலாளர் தோழர் தங்க. சண்முகசுந்தரம் ஏற்புரையும், உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டார்.
♦ காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
♦ பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைப்போம்!
♦ புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்!
ஆகிய முழக்கங்களின் அடிப்படையில் நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் முழக்கமிட்டு, மக்கள் அதிகார கிளைகளை பல கிராமங்களில் கட்டியமைக்கவும், இலட்சகணக்கான மக்களைத் திரட்டவும், உழைக்கும் மக்களின் விடுதலையை சாதிக்கவும் உறுதிமொழி ஏற்றனர்.
தோழமையுடன்,

கிளைச் செயலாளர்கள்,
தோழர் தங்க. சண்முகசுந்தரம்,
தோழர் கிருஷ்ணமூர்த்தி,
மக்கள் அதிகாரம்,
தஞ்சை மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க