12.05.2022
உழைக்கும் மக்களை நகரத்திலிருந்து விரட்டிவிட்டு
பசுமடம் அமைப்பதுதான் திராவிட மாடலா?
கண்டன அறிக்கை !
கொரோனா கொடுந்தொற்றில் மக்கள் ஆக்சிஜன் இன்றி தவிக்கும்போது மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பாசிச செயல்பாடுகள் மக்களால் காரி உமிழப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் ஆளுகின்ற மாநிலங்களில் பசு மடங்கள் அமைப்பது, அசைவ உணவுக்கு தடைவிதிப்பது, சாமி சிலைகளுக்கு வைத்தியம் பார்ப்பது போன்ற பைத்தியக்காரத்தனமான, மூடத்தனமான வேலைகளை அரசே முன்னின்று செய்து வருகிறது.
தமிழ்நாட்டுக்கு என பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியம் இருக்கிறது. தந்தை பெரியாரின் வாரிசாக திராவிட மாடலாக கருதிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கும் இந்த திமுக அரசு, பசுமடம் அமைப்பதற்கு ஆவடி அருகில் 25 ஏக்கர் தேடும் பணியில் ஈடுபடும் செய்திகள் படத்துடன் நாளிதழ்களில் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, மனிதனை மனிதன் சுமக்கும் இழிவான பட்டினப் பிரவேசத்துக்கு   ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் கடும் எதிர்ப்பின் காரணமாக அனுமதி அளித்து  பணிந்து போனது திமுக அரசு. வாயளவில் திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டாலும், செயலளவில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு பணிந்து போவதே வழக்கமாக இருக்கிறது.
சென்னையின் உழைக்கும் மக்கள் பல இடங்களிலும் நகரத்தை விட்டு அராஜகமாக துரத்தப்படுகிறார்கள். அதற்கு ராஜா அண்ணாமலைபுரத்தில் இடிக்கப்பட்ட வீடுகளும் எரிந்து போன கண்ணையாவும் சமீபத்திய சாட்சி.
இந்த நிலையில், தமிழக அரசின் சார்பில் பசு மடம் 25 ஏக்கரில் அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திமுக அரசின் இந்த பசுமடம் அமைக்கும் நடவடிக்கைக்கு  மக்கள் அதிகாரம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் தங்கள் மாநிலங்களில் மக்களை பார்ப்பனிய மயமாக்க செய்துவரும் வேலைகளை திராவிட மாடல் என்ற பெயரில் செய்வதை ஒருபோதும் தமிழகத்தில் அனுமதிக்க முடியாது. எனவே,  பசுமடம் அமைக்கும் வேலையை  தமிழக அரசு உடனே நிறுத்த வேண்டும் என மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க