18.02.2023

அருந்ததியர் மக்களை வந்தேறி என்று தமிழரை பிளந்து
தமிழ் இனத்தை உடைக்கும் சீமான்!

கண்டன அறிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியின மக்களை வந்தேறிகள் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் டிஎன்ஏ சோதனை செய்யாமலேயே யார் தமிழர்? யார் வந்தேறிகள்? என்கின்ற மாபெரும் ஆராய்ச்சியை செய்து வருகிறார் சீமான். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் முதலியார் சாதியை சேர்ந்த மக்கள் அதிகமாக இருப்பதால் தன்னுடைய கட்சியும் முதலியார் சாதியை சேர்ந்தவரை நிறுத்தியுள்ளது என்று பெருமையாக கூறியுள்ளார் சீமான்.இப்படி சாதிப்பெருமையை பேசிக் கொண்டிருக்கும் சீமான் நாம் தமிழர் என்ற பேசுவதே கேலிக்கூத்தானது. அவரே அருந்ததியர்கள் வந்தேறிகள் என்ற கருத்தையும் உதிர்த்துள்ளார்.

இதற்கு எதிராக ஈரோடு பகுதியைச் சேர்ந்த அருந்ததி சாதியை சேர்ந்த மக்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் தமிழகத்திலே தோன்றியது என்றால் அக்காலம் முதல் நடைபெற்ற அனைத்து விடுதலைப் போர்களிலும் சாதி வேறுபாடு இன்றி அனைவரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை.

வேலு நாச்சியாரின் படைத்தளபதியாய் குயிலியும் பூலித்தேவனின் தளபதியாய் ஒண்டிவீரனும் இருந்த வரலாறுதான் தமிழ்நாட்டின் வரலாறு. இது எதுவும் அறியாத சீமான், வந்தேறிகள் என்று தமிழரை பிளவுபடுத்துகிறார்.

தமிழரைப் பிளவு படுத்தி தமிழினத்தை உடைத்து தமிழ்நாட்டை கூறுபோடும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க பாசிச கும்பலின் நிகிழ்ச்சி நிரலையே சீமான் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை உண்மை.

அருந்ததியின மக்களை வந்தேறிகள் என்று கூறி தமிழின ஓர்மையை உடைக்கும் சீமானின் பேச்சினை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ; அம்பானி- அதானி பாசிசத்தால்
ஒடுக்கப்படும் மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி தமிழ்நாட்டை பாசிசத்துக்கு எதிரான அரணாக மாற்றுவோம். அதற்கு எதிரான மக்கள் விரோத சக்திகளை புறக்கணிப்போம் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச்செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு- புதுவை
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க