மக்கள் அதிகாரக் கழகம் பொதுக்குழுத் தீர்மானங்கள் 2026 | தீர்மானம் 1
மே 25: மாபெரும் நக்சல்பாரி உழவர் எழுச்சியின் 60ஆம் ஆண்டு!
1967 மே 25, அன்றைக்கு மேற்குவங்கம் மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தில் இருந்த நக்சல்பாரி உள்ளிட்ட கிராமங்களில் எழுந்த விவசாயிகளின் இயக்கத்தின் எழுச்சி நாளாகும். பண்ணையாதிக்கத்திற்கும் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திற்கும் எதிராக, “உழுபவருக்கே நிலம் சொந்தம், உழைப்பவருக்கே அதிகாரம்” என்ற முழக்கத்தின் கீழ் விவசாயிகள் மாபெரும் இயக்கமாக எழுந்தனர். இது, போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்புக்கு வெளியே மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தை முன்னெடுத்தனர். கம்யூனிச இயக்கத்தில் பீடித்திருந்த நாடாளுமன்ற சுய அழிவுப் பாதைக்கு எதிராக புரட்சி திசையைக் காட்டிய இவ்வியக்கம், ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் புரட்சியின் பால் ஈர்த்தது.
இன்று, நமது நாட்டில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. அம்பானி-அதானி பாசிசக் கும்பல் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி சட்டவழிமுறைகளைப் பயன்படுத்தி பாசிசத்தை அரங்கேற்றி வருகிறது. பாசிசத்தை இந்த நாடாளுமன்றக் கட்டமைப்பைப் பயன்படுத்தி வீழ்த்த முடியாது. மாறாக, பாசிச சக்திகள் அரசியல் அதிகாரத்திற்கு வருவதைத் தடுக்கும் வகையிலான பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை நிலைநாட்டுவதன் மூலமாக மட்டுமே பாசிசத்தை வீழ்த்த முடியும். அந்தவகையில், பாசிசத்தை வீழ்த்த நக்சல்பாரி எழுச்சியின் 60-ஆம் ஆண்டில் உறுதியேற்போம்!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





