privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
2963 பதிவுகள் 3 மறுமொழிகள்

கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை

“குப்பை எடுக்க போகும் இடங்களில் வயது முதிர்ந்தவராக இருந்தாலும் “ஏய் குப்பை” “குப்ப காரரே” என்றுதான் அழைப்பார்கள். அதிலும் ஒருவர் “நேற்று குப்பை எடுக்க சென்ற வீட்டில் ஒரு அம்மா மூன்றாவது மாடியில் இருந்து கீழே தூக்கி எறிகிறார்” என்றார்.

பாலஸ்தீனயர்களுக்கு எதிராக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் || படக்கட்டுரை

பாலஸ்தீனியர்களின் வீரம் இராக்கெட்டுகளின் எண்ணிக்கையில் அல்ல. ஒட்டுமொத்த உலகமும் புறக்கணித்து விட்ட நிலையில், ஒவ்வொரு வீழ்ச்சிக்கு பின்னரும் மீண்டெழுந்துப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் அவர்களது எதிர்கால நம்பிக்கையில் மட்டுமே.

இந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்

அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் அளவு ஒரு நாளைக்கு சற்றேறக்குறைய 4,00,000-ஆக அதிகரித்தள்ளது. அதனால் விளையும் உயிர்பலிகளின் அளவு 1.7 சதவீதத்திற்கு குறையாமல் இருந்தால் நாம் ஒரு நாளைக்கு 6,800 அளவுக்கு பலிகளை எதிர்பார்க்கலாமா?

பாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றும் உ.அ.குழு அறிக்கை || APSC Unom கண்டனம்

மெஸ் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும், பழிவாங்கும் நோக்கத்தோடு மாணவர்களை பெயில் செய்ததோடு மாணவியிடம் நாகரீகமற்ற முறையில் நடந்துக் கொண்ட பேரா.சௌந்திரராஜனை கண்டித்தும் இரண்டரை மாத காலமாக வெவ்வேறு கட்டங்களில் சமரசமின்றி மாணவர்கள் நடத்தியப் போராட்டத்தினை ஆதாரமற்றப் பொய்க்குற்றச்சாட்டுகளின் மூலம் களங்கப் படுத்தியுள்ளது உ.அ.குழு.

தோழர் சம்புகனிடம் கற்போம் || ம.க.இ.க.

சாதி, மதவெறிப் பண்பாடு, சீரழிவுக் கலாச்சாரத்தின் நடுவே அமைப்பின் பத்திரிக்கைகளையும் துண்டறிக்கைகளையும் மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் மத்தியில் எடுத்துச் சென்று பல இளம் கம்யூனிசப் போராளிகளை உருவாக்கியவர் தோழர் சம்புகன்.

கொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்

இந்த கொரோனா மக்களுக்கு ஏற்படுத்தும் துயரத்தைவிட அரசு மக்களுக்கு ஏற்படுத்து துயரம்தான் அதிகம். உழைக்கும் மக்களை கொண்ட மக்கள் நல அரசு உருவானால் மட்டுமே இது போன்ற பேரழிவில் இருந்து உழைக்கும் மக்களை காப்பாற்ற முடியும்

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 16 அமைப்புகளை தடை செய்த தெலுங்கானா அரசு

தடை செய்யப்பட்ட அமைப்புகள் மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் மோடி அரசின் பாசிசக் கொள்கைகளை எதிர்த்தும் போராடிய ஜனநாயக, புரட்சிகர அமைப்புகளாகும்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிறந்தரமாக அகற்ற கோரும் விதமாகவும், ஓட்டுக்கட்சிகள் மற்றும் அரசை அம்பலப்படுத்தும் விதமாகவும் மக்கள் அதிகாரம் தர்மபுரி மண்டலம், புரட்சிகர கலைக்குழு தோழர்கள் பாடிய பாடலை காணொளி வடிவில் வெளியிடுகிறோம்!

கொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு!

இந்திய அரசாங்கம் 2019-ல் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கிட்டதட்ட ரூபாய் 1.45 இலட்சம் கோடி தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கடுமையாகப் பொருளாதார இழப்பில் இருக்கும் நிலையில் இந்த நடவடிக்கையை மோடி அரசாங்கம் எடுத்தது.

கொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் ! அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி !

இந்த அபாயகரமானக் காலகட்டத்தில் எதை செய்திருக்கக் கூடாதோ, இந்த காலகட்டத்தில் எப்படி மக்களைப் பாதுகாத்திருக்க வேண்டுமோ, அதே காலகட்டத்தில் மக்களை நரபலி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பிரதமர் தனது மக்கள் கொடூரமான நோய் தொற்றில் சிக்கி சீரழிந்துக் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருக்கும்போது 50 நாட்களை தான் சார்ந்த கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் செலவழித்திருக்கிறார்.

கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் ? பிரச்சனை தீருமா ?

அறிவுசார் சொத்துரிமை பொது உரிமையாக இருக்கும் போது பாரத் பயோடெக் என்ற ஒரு கம்பெனிக்கு மட்டும் தயாரிப்புக்கானப் பிரத்யோகமான உரிமம் வழங்கப் பட்டிருப்பது ஏன்? தடுப்பூசி தயாரிப்பதற்கான பிரத்யோகமற்ற உரிமங்களை பல உற்பத்தியாளர்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை.

ஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி

இந்த அறிக்கைகையை 2 வாரங்களுக்கு பின்புதான் அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. மேலும், அந்த அறிவிப்பில் அறிவியலாளர்கள் குழு எச்சரித்த “மிகுந்த கவனம் தேவை” என்ற சொற்கள் இடம்பெறவி

தமிழகம் முழுவதும் நடைபெற்ற மே நாள் விழா !

தற்போது ஏற்பட்டுள்ள இந்த கொரோனா ஊரடங்கு காலக் கட்டத்தில் பெரும்பாண்மையான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்பது நாம் அறிந்த ஒன்று. மேலும், தற்போது நிகழும் இந்த மோடி அரசின் காவி - கார்ப்பரேட்...

இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் என்ன தவறு ஏற்பட்டுள்ளது? || தாமஸ் ஆபிரகாம் || நாகராசு

மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளை உண்மையில் நன்கொடையாக வழங்கிய உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்: அண்டை நாடுகளுக்கும், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கும் 10.5 மில்லியன் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த நாடுகளில் உள்ள மக்கள் அவசரமாக தேவைப்படும் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் என்ற உண்மையிலிருந்து இது திசைதிருப்பவில்லை.

கம்போடியா : நாட்டு மக்களின் நிலங்களை அபகரித்து சுற்றுச்சூழலை நாசம் செய்யும் அரசு

ஜீன் 2020, உலக வங்கி 93 மில்லியன் டாலரை கம்போடியா நில அனுபோகக் காலதிட்டத்தின் மூன்றாவது கட்டத்திற்கென அறிவித்தது. இந்த முறைமையில் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தப் போதிலும், நில அபகரிப்பு மற்றும் அது ஏற்படுத்திய சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உலக வங்கி உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.