Monday, August 11, 2025
முகப்பு பதிவு பக்கம் 254

தன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் !

“1911 ஜூலை 11 ஆம் தேதி சாவர்க்கர் அந்தமானுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்ற ஒன்றரை மாதங்களுக்குள் அதாவது ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று அவர் தனது முதல் மன்னிப்புக் கோரிக்கையை எழுதினார். அதன்பிறகு 9 ஆண்டுகளில், அவர் 6 முறை மன்னிப்புக் கடிதங்களை கொடுத்தார்.

“சாவர்க்கர் சகோதரர்கள் சிறைச்சாலைக்கு எதிராக கிளர்ச்சி செய்ய எங்களை ரகசியமாக தூண்டிவிடுவார்கள். ஆனால் எங்களுடன் வெளிப்படையாக இணைந்து கொள்ள சொன்னால் பின்வாங்கிவிடுவார்கள். சாவர்கர் சகோதரர்களுக்கு கடின உழைப்பு கொண்ட வேலைகள் வழங்கப்படவில்லை” என்று பரிந்திர கோஷ் என்ற மற்றொரு கைதி பின்னர் ஒரு சமயம் தெரிவித்தார்.

நிரஞ்சன் தக்லேவின் கருத்துப்படி, “15 நாட்களுக்கு ஒருமுறை கைதிகளின் எடை அளவிடப்படும். சாவர்க்கர் செல்லுலார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, 112 பவுண்டுகள் எடை இருந்தார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, சர் ரெஜினோல்ட் கிரீடோக்கிடம் அவர் நான்காவது முறை மன்னிப்பு கேட்டபோது, அவரது எடை 126 பவுண்டுகளாக அதிகரித்திருந்தது. அதாவது அவர் சிறையில் தண்டனை அனுபவித்தக் காலத்தில் அவரது எடை 14 பவுண்டுகள் அதிகரித்திருந்தது. ”

“தன் மீது கருணை காட்டுமாறும், தன்னை இந்தியாவில் உள்ள எதேனும் ஒரு சிறைக்கு அனுப்புமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திந்தார். பதிலுக்கு, அவர் எந்தவொரு நிலையிலும் அரசாங்கத்திற்காக பணியாற்ற தயாராக இருந்தார்.”

சிறையில் இருந்து வெளியேறவே இந்த உத்தி செய்யப்பட்டது

பகத் சிங்கிற்கும் மன்னிப்பு கேட்கும் தெரிவு இருந்தது, ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

“இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள் மற்றும் சமணர்கள் மட்டுமே இந்தியாவை புனித நிலமாக கருதுவார்கள். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இது புனித நிலம் அல்ல. இந்த வரையறையின்படி, முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்த நாட்டில் இருந்தாலும் ஒருபோதும் குடிமக்களாக இருக்க முடியாது” என்கிறார் சாவர்கர்.

“அவர்கள் இந்துக்களாக மாறினால் மட்டுமே இங்கே அவர்கள் இருக்க முடியும் என்று நினைத்தார் அவர். ஒருவர் இந்துவாக இருந்தாலும் கூட இந்து மதத்தையோ, மத நம்பிக்கையையோ பின்பற்றாமல் இருக்கலாம் என்ற முரண்பாட்டை அவர் ஒருபோதும் புரிந்துக் கொள்ளவில்லை”.

எந்த அரசியல் நடவடிக்கையிலும் பங்கேற்கக்கூடாது; ரத்னகிரி மாவட்ட ஆட்சியர் அனுமதியின்றி மாவட்டத்தை விட்டு வெளியேறக்கூடாது என்ற இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் 1924 ஆம் ஆண்டில் புனேவில் உள்ள எர்வாடா சிறையில் இருந்து சாவர்க்கர் விடுவிக்கப்பட்டார்.

படிக்க:
கரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு !
♦ பிரிட்டிஷ் கைக்கூலியாகவும் தயார் ! என்னை விட்டுவிடுங்கள் | ‘வீர’ சாவர்க்கர் கடிதம் !

“ஆங்கிலேயர்கள் அவருக்கு ஓய்வூதியமாக மாதம் அறுபது ரூபாய் வழங்கினார்கள். அவருக்கு மாத ஓய்வூதியம் கொடுக்கும் அளவிற்கு ஆங்கிலேயருக்கு அவர் என்ன சேவை செய்தார்? அவருக்கு ஓய்வூதியம் கொடுக்கப்பட்ட காரனம் என்ன என பல கேள்விகள் எழுகின்றன. அதேபோல், இப்படிப்பட்ட ஓய்வூதியத்தைப் பெற்ற ஒரே நபர் சாவர்க்கர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது” என்கிறார் நிரஞ்சன்.

அவருக்கு சாக்லேட்டுகளும் ‘ஜிண்டான்’ பிராண்ட் விஸ்கியும் மிகவும் பிடித்தமானது.

“சாவர்க்கர் சிகரெட் மற்றும் சுருட்டுகளையும் புகைப்பார். ஆனால் அதில் அவருக்கு நாட்டம் இல்லை. எப்போதாவது மது அருந்துவார். காலை உணவில் வேகவைத்த முட்டைகள் இரண்டை சாப்பிடுவார். அதிலும் குறிப்பாக மீன் மிகவும் பிடித்தமானது. ”

1949 இல் காந்தி படுகொலையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட எட்டு பேரில் சாவர்க்கரும் ஒருவர் என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் உறுதியான ஆதாரங்கள் இல்லாததால் இறுதியில் அவர் விடுவிக்கப்பட்டார். காந்தி கொலை தொடர்பாக சாவர்க்கர் மீதான சந்தேகம் எப்போதும் மறையவே இல்லை. சாவர்கருக்கு தெரியாமல் காந்தி படுகொலை நடந்திருக்க முடியாது என்று கபூர் கமிஷன் அறிக்கையிலும் தெளிவாக கூறிவிட்டது.”

“நீங்கள் சாவர்க்கரை மதிக்க விரும்பினால், காந்தியின் சித்தாந்தத்தை முற்றிலும் பின்தள்ள வேண்டும். அதேபோல் காந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் சாவர்க்கரின் சித்தாந்தத்தை நிராகரிக்க வேண்டும்”.

கீழே உள்ள புகைப்படத்தில்: நானா ஆப்தே, தாமோதர் சாவர்க்கர், நாதுராம் கோட்சே, விஷ்ணுபந்த் கர்கரே, திகம்பர் பட்கே, மதன்லால் பஹாவா (வலதுபுறம் நிற்பவர்), கோபால் கோட்சே, சங்கர் கிஸ்தய்யா (இடமிருந்து வலமாக அமர்ந்திருப்பது)

கரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு !

ரோனா வைரஸ் (Covid-19) பரவலின் காரணமாக அனைத்து நாடுகளும் பள்ளிகளையும் கல்லூரிகளையும் மூடிவிட்டன. இந்தியாவிலோ மார்ச் 17-ஆம் தேதியில் இருந்து மறுதேதி குறிப்பிடாமல் கல்வி நிலையங்களை மத்திய அரசு மூடியுள்ளது. கரோனா வைரஸ்ஸின் பரவல் அதிகரிக்கும் நிலையில் உயர்கல்வி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றிய வாய்ப்புகளை ஆராய்வதற்காக பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஹரியானா மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேரா. குஹத் தலைமையில் குழுவை அமைத்தது.

இக்குழு இப்பருவத்திற்கான பாடங்களை முடிப்பது, தேர்வுகளை நடத்துவது அடுத்த பருவத்திற்கான மாணவர் சேர்க்கை நடத்துவது மற்றும் ஆராய்ச்சிகளை தொடர்வது பற்றிய பரிந்துரைகளை பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு அளித்தது. அதனடிப்படையில் ஏப்ரல் 27-ஆம் தேதி பல்கலைக்கழக மானியக் குழு Covid-19 சூழலில் உயர்கல்வி நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அதில் தேர்வுகளை ஜுலையில் நடத்துவது, அடுத்த பருவத்திற்கான (Odd semester) வகுப்புகளை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குவது, முதலாமாண்டு வகுப்புகள் செப்டம்பரில் தொடங்குவது, இந்த பருவத்திற்கான (Even semester) முடிக்காதப் பாடப்பகுதிகள் மற்றும் இறுதியாண்டு மாணவர்களின் ஆய்வுரைகளை இணையதள வாயிலாக நடத்தி முடிப்பது போன்ற வழிக்காட்டுதல் உள்ளடக்கிய சுற்றறிக்கையை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பியுள்ளது. வருங்காலங்களில் Covid-19 போன்ற சூழலை எதிர்கொள்ளவதற்கான முன்தயாரிப்பாக மொத்த பாடத்தில் 75%-த்தை வகுப்புகளிலும் 25%-த்தை இணையதளம் வழியாகவும் (Online mode) நடத்தவும் UGC கூறியுள்ளது. (கலை-அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்த குழு அறிக்கை பரிந்துரைத்ததாக செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அப்பரிந்துரையையை UGC தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது).

மார்ச் 26-ஆம் தேதி மத்திய பள்ளிக் கல்விக் குழு (CBSE Central Board of Secondary Education) தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 23,000 பள்ளிகளுக்கு “Lockdown-A Golden Opportunity for Education” என்று தலைப்பிட்டு அனுப்பியிருந்த சுற்றறிக்கையில் மாணவர்கள் கல்வி இணையதளங்களை (Online Education Platform) பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது. மேலும் ஆசிரியர்கள் இணையவழியில் பாடம் எடுப்பதற்கு தேவையான திறமைகளை வளர்த்துகொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து மத்திய அரசின் CBSE பள்ளிகளான கேந்திர வித்யாலயா பள்ளிகளில் பணிபுரியும் 35,000 ஆசிரியர்களுக்கு இணையவழியாக வகுப்பு நடத்துவது, பற்றிய பயிற்சி வகுப்புகளை நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. மத்திய அரசு மேற்கண்ட அறிவிப்புகளை கரோனா நெருக்கடி காலத்திற்கானதாக கூறிக்கொண்டாலும் அத்திட்டத்தின் நோக்கம் அதன் விளைவுகள் பெரும்பான்மை மக்களுக்கு மிகவும் தீங்கானதாகும்.

படிக்க:
என்னால் மூச்சுவிட முடியவில்லை ! அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் !
♦ வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன ?

***

ந்தியா மட்டுமின்றி கொரோனா தனிமைப்படுத்தலின் காரணமாக வளர்ந்த நாடுகள் தொலைக்காட்சி, ரேடியோ, இணையம் போன்ற தளங்களின் வாயிலான கற்பித்தல் முறைக்கு மாறிவருகின்றன (இதற்கான கட்டமைப்பு வசதிகளை இந்நாடுகள் உருவாக்கியுள்ளது). அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா அரசு பல்கலைக்கழகம் (CSU) தன்னுடைய 23 கல்லூரிகளிலும் அடுத்த பருவத்தை (Fall Semester) இணைய வழியில் நடத்தபோவதாக அறிவித்துள்ளது. சீனா ஊரடங்கை அறித்த சில வாரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகளை இணையதள முறையில் பயிற்றுவிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தது. சீனா கல்வி அமைச்சகமும் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து (அலிபாபா-DingTalk) இதனை செய்துள்ளது. ஆகான் மாகாணத்திலுள்ள பள்ளி மாணவர்களில் 81% பேர் (7,30,000 மாணவர்கள்) Tencet K-12 online school என்ற இணையதள வகுப்பின் வாயிலாக பயிற்றுவிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் ZOOM, Google class room செயலிகள் உதவியுடன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பாடம் நடத்துமாறு கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. மத்திய அரசின் MOOCs’ ஆன SWAYAM இணையக் கல்வி தளத்தை பயன்படுத்துமாறு பல்கலைக்கழகங்களை UGC வலியுறுத்தியுள்ளது. மேலும் Coursera’, Edx, Udacity, Khan Academy, BYJU’S, Mindspark, Simple learn, Toppr போன்ற தனியார் இணையக் கல்வி தளங்களில் மாணவர்கள் அதிகமாக படிக்கின்றனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு 700 கல்லூரிகள் இணையதள வாயிலாக பாடங்களை நடத்த Coursera உடன் ஒப்பந்தம் போட்டுள்ளன. இதம் மூலம் Coursera-ல் உள்ள 4,100 தலைப்புகளிலான பாடங்களை இக்கல்லூரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு BYJU’S-ன் இணையவழி கல்வியில் சேர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை 200 மடங்கு அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. கரோனா ஊரடங்கு தனியார் இணையக் கல்வி தளங்களின் வளர்ச்சியை தீவிரப்படுத்தியுள்ளது.

உலகளவில் கல்வி தொழில்நுட்பச் (EduTech) சந்தையில் செய்யப்பட்டுள்ள முதலீடு 18.66 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது 2025-க்குள் 350 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிலோ கல்விதொழில்நுட்பச் (EduTech) சந்தையின் மதிப்பு 2021-ல் 1.96 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என கூகுள் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. கரோனா ஊரடங்கு இந்த மதிப்பீடுகளை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. குறிப்பாக பெங்களூரை அடிப்படையாகக் கொண்ட BYJU’S உலகிலேயே அதிக மதிப்புள்ள கல்வி தொழில்நுட்ப நிறுவனமாகும்.

2020 ஜனவரியில் இந்நிறுவனத்தின் மதிப்பு எட்டு பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதில் Tiger global, Atlantic போன்ற நிதிநிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. 2019 ல் Coursera-வின் மதிப்பு ஒரு பில்லியன் அமெரிக்க டாலராக நிர்ணியக்கப்பட்டது. இந்த கல்வி இணையதளங்கள் Microsoft, Google, Facebook மற்றும் இணையதள சேவை வழங்குபவர்கள் ஆகியோரின் (Tech giants) நிதி மற்றும் தொழில்நுட்பக் கூட்டுடனே செயல்படுகிறது. பல private equity மற்றும் venture capital நிறுவனங்கள் இணையக் கல்வி சந்தையில் முதலீடு செய்துள்ளன.

இணையவழிக் கல்வியை மத்திய அரசு ஊக்குவிப்பதற்கு இரண்டு பிரதான நோக்கங்கள் இருப்பதாகத் தெரிகிறது.

  1. இணையவழி பட்டப்படிப்புகளை வழங்க அனுமதிப்பதன் மூலம் உயர்கல்வி நிறுவனங்கள் தங்களுக்கான நிதியை தாங்களே ஈட்டிக்கொள்ள செய்வது. NIRF தரப்பட்டியலில் முதல் 100 கல்லூரிகள் பட்டப்படிப்புகளை இணையவழியில் வழங்குவதற்கான அறிவிப்பை நிதியமைச்சர் பிப்ரவரி மாதம் செய்திருந்தார். முதல் 100 கல்லூரிகளில் 75 கல்லூரிகள் மத்திய மாநில அரசால் நடத்தப்படுகின்ற இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.டி, என்.ஐ.டி, மத்திய பல்கலைக்கழகம், மாநில பல்கலைக்கழகம்). இக்கல்லூரிகள் தங்களுக்கான நிதியை உருவாக்கிகொள்ள வேண்டும் என்று கடந்த சில வருடங்களாகவே மோடி அரசு அழுத்தம் கொடுத்து வந்தது. அதையொட்டி கல்விக் கட்டணங்களும் உயர்த்தப்பட்டன. தற்போது இக்கல்லூரிகளுக்கு இணையவழி படிப்புகளுக்கான ஒப்புதல் வழங்கியிருப்பதின் மூலம் இக்கல்லூரிகளுக்கு அரசு வழங்கி வந்த நிதியை (தேவையை விட குறைவு தான்) அரசு நிறுத்திவிடும். மேலும் இத்திட்டத்தினை இதர பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளுக்கு விரிவுப்படுத்தவும் செய்யும். (பல்கலைக்கழகங்கள் தொலைதூரக் கல்வியின் வருவாயைக் கொண்டே நிதிப்பற்றாக்குறையை சமாளிக்கின்றன. இணையவழி பட்டப்படிப்பு திட்டத்தின் மூலம் தொலைதூரக் கல்விமுறையை விட குறைந்த செலவில் அதிக வருவாய் பெறமுடியும்).
  2. உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையை (GRE) 2030-க்குள் 50%-மாக உயர்த்துவது என மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. (2019-ல் GRE 25%-மாக உள்ளது). தற்போதைய அளவைவிட (1.36 கோடி) கூடுதலாக 1.5 கோடி இளைஞர்களுக்கு உயர்கல்வி வழங்குவது. இதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள், பேராசிரியர்கள் நியமனங்கள் என அதிக முதலீடுகளை மத்திய மாநில அரசுகள் ஒதுக்க வேண்டி வரும். இணைய வழி பட்டப்படிப்பு திட்டத்திற்கு முக்கியத்துவம் தருவதன் மூலம் நிதி ஒதுக்கீடு மற்றும் கல்வி வழங்க வேண்டிய பொறுப்பிலிருந்தே அரசு தன்னை படிப்படியாக விடுவித்துக் கொள்ளலாம். (தேசிய கல்விக் கொள்கையில் கல்லூரிகளின் எண்ணிக்கையை குறைப்பதையும் இணையவழியில் பட்டப்படிப்புகளை வழங்குவதற்கான பரிந்துரைகளையும் முன்வைத்திருந்தது)

கரோனா ஊரடங்கைப் பயன்படுத்திக் கொண்டு இணையவழிக் கல்வி முறையை new normal (புதிய இயல்புநிலையாக்க) ஆக்க மோடி அரசு திட்டமிடுகிறது. தனியார் கல்வி முதலாளிகளோ குறைவான ஆசிரியர்களைக் கொண்டு கல்லூரிகளை இயக்கலாம், பராமரிப்பு செலவுகள் குறைவு, NIRF ranking பெறலாம் என்ற கனவுகளிலிருந்து இணையவழி கற்பித்தல் முறைக்கு ஆதரவாக உள்ளனர்.

MOOCs (Massive Online Open Courses) எனப்படும் இணையவழி கற்கும் முறையில் பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் பட்டப்படிப்புகளை வழங்குகின்றன. இதற்காக அதிகக் கட்டணங்களை வசூலிக்கின்றன. உதாரணமாக ஜான் ஹோப்கின் பல்கலைக்கழகம் இணையவழி கணிப்பொறி பட்ட மேற்படிப்பிற்காக (Online degree – Master of computer science) 42,500 டாலர் (சுமார் 29,75,000 ரூபாய்) கட்டணமாகப் பெறுகிறது. USC’s பல்கலைக்கழகம் இணையவழி Master of Social work படிப்பிற்கு 107,484 டாலர் (சுமார் 75,23,880 ரூபாய்) கட்டணமாக பெறுகிறது. Coursera, Udacity நிறுவனங்கள் பல்கலைக்கழகங்களுடன் சேர்ந்து இணையவழி பட்டப் படிப்புகளை வழங்குகின்றன. அப்படிப்புகளின் சந்தை தேவையை பொறுத்து அதற்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. (Machine learning, IoT படிப்புகளுக்கு கட்டணம் அதிகம்). வகுப்பறைகள் குறைவு, கல்லூரி பராமரிப்புக்கான செலவுகள் இல்லை, குறைவான ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்கள் என மிகக் குறைவான முதலீட்டில் மிக அதிக லாபத்தை அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் ஈட்டுகின்றன. பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி Coursera. Udacity, Biju’s போன்ற MOOCs தளங்கள், மென்பொருள்-இணைய சேவை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களும் லாபத்தை பங்கிட்டுக் கொள்கின்றன. உதாரணமாக, அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் வழங்குகின்ற இணையவழி படிப்புகளுக்கான விளம்பரங்களினால் Google, Facebook நிறுவனங்கள் ஒரு பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. இணையவழி கல்வி என்பது ஒரு பொன்முட்டையிடும் வாத்து. எனவே தான் கல்வித்துறையில் அடுத்தகட்ட வளர்ச்சி என்றும் ஊரடங்கு காலகட்டத்தில் சிறந்த தீர்வு என்றும் கல்வியாளர் என்ற போர்வையில் முதலாளித்துவ ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.

இணையவழி பட்டப் படிப்பிறக்கான மத்திய அரசின் அனுமதி, 25 சதவிகித படிப்புகளை online முறையில் வழங்குவதற்கான UGC-ன் வழிகாட்டுதல், GER-ஐ 50 சதவிகிதமாக உயர்த்துவது என்ற தேசிய கல்விக் கொள்கையின் இலக்கு ஆகியவை இந்திய கல்வி சந்தையானது குறிப்பாக உயர் கல்வியானது இணையவழி கற்பித்தல் முறையை (Online Education Mode) நோக்கி நகர்கிறது என்று கூறலாம். இணைய கல்வித் தளங்கள் – மென்பொருள் / தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் என்ற ஒரு சிறு குழுவின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும். அச்சிறு குழுவே ஒட்டுமொத்த கல்வியையும் கட்டுப்படுத்துகின்ற பிரதான சக்தியாக இருக்கும். இவர்கள் தரமான கல்வி என்ற போர்வையில் தற்போது நடைமுறையில் உள்ள ஆசிரியர்-மாணவர்-பள்ளி கல்லூரி கட்டமைப்பை சிதைப்பதுடன் மொத்த கல்வியையுமே கட்டுப்படுத்துவதின் வாயிலாக தடையற்ற கொள்ளைக்கு முயற்சிக்கின்றனர். இதற்கு தோதாக இணையதளக் கல்வியின் வாயிலாக பட்டப்படிப்புகளை வழங்குவதற்கான திட்டத்தை தேசியக் கல்விக்கொள்கை பரிந்துரைத்திருந்தது. உடனே தேசிய தரப் பட்டியலில் (NIRF) முதல் 100 இடங்களில் உள்ள கல்லூரிகள் இணையதள வழி பட்டப்படிப்புகளை வழங்கலாம் என 2020 பட்ஜெட்டில் நியமைச்சர் அறிவித்தார். கூடவே உயர்கல்வியில் அந்நிய நேரடி முதலீடும் (FDI), Extra Commercial Borrowing (ECB)-யும் அனுமதிப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.

இணையவழி கல்வி முறைக்கு மாறுவது பற்றிய அதீத ஆசை ஆளும் வர்க்கத்திற்கு இருந்தாலும் அதனை அமல்படுத்துவதற்கு தேவையான இணைய தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இந்தியாவில் இன்னும் உருவாக்கவில்லை . கல்வி பற்றிய 2017-18 தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி (NSSO-75″ round on education) இந்திய குடும்பங்களில் 23.8% குடும்பங்களில் மட்டுமே இணையதள வசதியைக் கொண்டுள்ளது. (14.9% கிராமப்புற குடும்பங்கள் 42% நகர்புறக் குடும்பங்கள்), கணிப்பொறி, மடிக்கணினி (Desktop, laptop, Tap) போன்றவற்றை வைத்துள்ள குடும்பங்கள் வெறும் 11% மட்டுமே. முக்கியமாக 8% குடும்பங்கள் மட்டுமே கணிப்பொறி மற்றும் இணையதள வசதி இரண்டையும் பெற்றுள்ளன. இந்நிலையில் UGC மற்றும் CBSE-யின் வழிகாட்டுதல்களை எவ்வாறு அமல்படுத்துவது? இது மேட்டிக்குடி மக்களுக்கு மட்டுமே சத்தியம்.

உயர்கல்விக்கான திட்டங்களும் நிதி உதவிகளும் NIRF ranking/NAAC மதிப்பெண் அடிப்படையிலேயே பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகளுக்கு வழங்கப்படுகிறது. NIRF/NAAC/NBA-ன் மதிப்பீடுகளுக்குள் செல்லாத ஆயிரக்கணக்கான அரசு உயர்கல்வி நிறுவனங்கள் கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வியை வழங்கிவருகின்றன. இக்கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளோ, ஆய்வகங்களோ கிடையாது. இக்கல்லூரிகளில் இணைய தொழில்நுட்ப வசதிகள் என்பது பெருங்கனவு. அரசுப் பள்ளிகளிலும் இதே நிலைதான் உள்ளது. இச்சூழலில் இணையவழி கல்வி முறையையானது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எவ்வகையில் சாத்தியம்?

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி மிகச்சிக்கலான கருதுகோள்களையும் மிக எளிமையாக மாணவர்களுக்கு விளக்கமுடியும். நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க முடியும் என்பது உண்மைதான். ஆனால், அதற்கான நடவடிக்கைகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் செய்யாமல் இருக்கின்ற கல்வியமைப்பை சீர்குலைத்து அதனை தொழில்நுட்ப நிதி ஏகபோகங்களின் கைகளில் ஒப்படைப்பதின் ஆரம்பகட்ட நடவடிக்கையாக இந்த கரோனா ஊரடங்கு காலக்கட்டத்தை மோடி அரசு பயன்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கல்வியானது அனைவருக்குமானதாக ஒருபோதும் இருந்ததில்லை. ஒருவருடைய சாதிய-சமூக-பொருளாதார ஏற்றத்தாழவுகளுக்கு தகுந்தாற் போலவே கல்வி கிடைக்கும் வாய்ப்பும் இருந்து வந்துள்ளது. கடந்த இருபதாண்டுகால புதிய பொருளாதர கொள்கையோ கிடைத்துவந்த ஒருசில கல்விச் சலுகைகளுக்கும் தடைப்போட்டு கல்வியை சரக்காகவே மாற்றியுள்ளது. இந்நிலையில் இணையவழிக் கல்விமுறை என்பது ஏற்கனவே இருந்துவந்த ஏற்றத்தாழ்வுகளை இன்னும் ஆழமாக்குவதன் மூலம் பெரும்பான்மையான மக்களை கல்வியிலிருந்தே வெளியேற்றச் செய்யும்.

– மலரவன், சமூக அரசியல் ஆர்வலர்.

குறிப்பு :

1. MOOCs – Massive Open Online Courses

2. இந்தியாவில் மத்திய அரசின் MOOCs ஆன SWAYAM என்ற இணைய கல்வி தளம் உயர்கல்வி பாடங்களை (கலை, அறிவியல், பொறியியல், பொருளாதாரம், மருத்துவம்) தருகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியியலாளர்கள், மருத்துவர்கள் என பணியில் உள்ளவர்கள் பலரும் SWAYAMல் தங்களுடைய துறை சார்ந்த பாடங்களை தேர்ந்தெடுத்து படித்துக்கொள்ளலாம். SWAYAM இணைய கல்வி தளத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு (System integrator) மைக்ரோசாப்ட்டிடம் மத்திய அரசால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி மைக்ரோசப்ட்டிடம் ஒப்படைத்தாக பேராசிரியர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

3. Courdera, Edax, Udacity, Khan Academy ஆகியவை அமெரிக்க நிறுவனங்கள். BYJU’S, Khan Academy, MindSpark போன்றவைகள் பள்ளி மாணவர்களுக்கானது.

disclaimer

என்னால் மூச்சுவிட முடியவில்லை ! அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் !

2

மெரிக்காவின் மின்னெசொடா மாநிலத்தைச் சேர்ந்த மின்னியபொலிஸ் நகரில்,
கடந்த திங்கள் கிழமை (25.05.2020) கருப்பின வாலிபர் ஒருவரின் கழுத்தை அழுத்திக் கொன்றது போலீசு. அதனைத் தொடர்ந்து அந்நகரத்தில் நடைபெற்ற போராட்டங்களின் உச்சமாக கடந்த வியாழனன்று (28.05.2020) இரவு போலீசு நிலையம் தீவைத்து எரிக்கப்பட்டது.

அமெரிக்க சமூக வலைத்தளங்களில் கடந்த திங்கள்கிழமை ஒரு காணொளி மிகவும் வைரலாகப் பரவத் தொடங்கியது. அந்தக் காணொளியில் ஒரு கருப்பின வாலிபரைத் தரையில் படுக்க வைத்து அவரது கழுத்தில் போலீசு தனது முட்டியை வைத்து அழுத்துகிறது. அந்த வாலிபரோ, “ என்னால் மூச்சு விடமுடியவில்லை. குடிப்பதற்கு தயவு செய்து தண்ணீர் அல்லது ஏதேனும் தாருங்கள். எனது வயிறு, கழுத்து மற்றும் உடலெல்லாம் வலி எடுக்கிறது.” என்று அந்த கருப்பின வாலிபர் மூச்சுத் திணற பேசும் காட்சியும் பதிவாகியிருந்தது.

ஜார்ஜ் ஃபிளாய்ட்

இந்தக் காணொளி பார்ப்பவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. போலீசால் கழுத்து நெறிக்கப்பட்ட நபரின் பெயர் ஃபளாய்ட். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், போலீசின் இந்த இனவெறித் தாக்குதலில் உயிரிழந்துவிட்டார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீசு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருகின்றனர்.

ஃப்ளாய்டை பட்டப்பகலில் இனவெறிப் படுகொலை செய்த போலீசின் பெயர் சௌவின். சௌவின்-ஐயும் அவரது கூட்டாளிகளான 4 போலீசையும் கைது செய்யக் கோரி, மின்னாபோலிஸ் நகரின் வீதிகளில் கடந்த நான்கு நாட்களாக மக்கள் குவிந்து போராடத் துவங்கியுள்ளனர்.

அமெரிக்காவில் நடைபெறும் இனவெறிப் படுகொலைகள் நமது நாட்டில் அன்றாடம் நடைபெறும் சாதியப் படுகொலைகளுக்கு நிகரானவையே. மிகப்பெரும் அளவில் சமுக வலைத்தளங்களில் பேசப்படும் படுகொலைகள் வெகு சிலவாக இருக்கும் போது, சட்டப்பூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் அன்றாடம் நடத்தப்படும் படுகொலைகள் ஏராளம்.

கடந்த 2014-ம் ஆண்டு இதே போன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்தது. எரிக் கார்னர் என்பவரின் கழுத்தை நெறித்துக் கொன்றது நியூயார்க் போலீசு. “என்னால் மூச்சுவிட முடியவில்லை” என கார்னரும் அந்தப் போலீசிடம் கெஞ்சினார். ஈவிரக்கமற்ற முறையில் கார்னரைப் படுகொலை செய்தது நியூயார்க் போலீசு. ”கொல்லப்படும் போது எரிக் கார்னருக்கு இருந்த வயதுதான் தற்போது கொல்லப்பட்டிருக்கும் ஃப்ளாய்டுக்கும் இருக்கும். இது, எனது மகன் மறுபடியும் கொல்லப்பட்டதற்கு இணையானது” என்கிறார் எரிக் கார்னரின் தாய் க்வென் கர்.

46 வயதான ஃப்ளாய்டின் மரணத்திற்கு நீதி கேட்டு மக்கள் வீதியில் போராடத் தொடங்கிய பின்னர்தான் அமெரிக்க அரசியல்வாதிகள் வாயைத் திறக்க ஆரம்பித்தனர். அதுவும் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றுதான் கூறுகிறார்களே தவிர, தவறு செய்த அதிகாரியைக் கைது செய்யக் கோரவில்லை.

ஃப்ளாய்டின் கழுத்தில் கால்முட்டியை வைத்து போலீசு அழுத்திக் கொண்டிருப்பது காணொளியில் மிகத் தெளிவாகத் தெரிகிறது. அதிகாரத் திமிரும், இனவெறியும் ஒருங்கே சேர்ந்த மிருகமாய் ஃப்ளாய்டின் கழுத்தை அழுத்தும் அந்த அதிகாரிக்கான தண்டனை பணி நீக்கம் மட்டும்தான். அவன் மீது கொலை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

இவையெல்லாம் மக்களின் ஆத்திரத்தை அதிகரித்தது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் நூற்றுக்கணக்கான மின்னியாபோலிஸ் மக்கள். “என்னால் சுவாசிக்க முடியவில்லை” என்ற ஃப்ளாய்டின் வாசகத்தை அட்டைகளில் ஏந்தி வீதியில் இறங்கிப் போராடுகின்றனர்.

ஃப்ளாய்டைப் படுகொலை செய்த போலீசு அதிகாரி சௌவின், தனது 19 ஆண்டுகால போலீசுப் பணியில் இதற்கு முன்னர் மூன்று துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் என்பதோடு இவர் மீது இதுவரையில் 17 புகார்கள் எழுந்துள்ளன. இப்படிப்பட்ட குற்ற வரலாறு கொண்ட போலீசு அதிகாரிக் சௌவினின் வீட்டிற்கு ஆயுதமேந்திய போலீசு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சௌவினின் மீது கொலைவழக்குப் பதிவு செய்யும்படி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் கலந்து கொண்ட நிலையில்., புதன் கிழமை இரவு சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போலீசு நிலையத்திற்கு முன்னர் நடந்த இந்தப் போராட்டத்தைத் தடுத்து நிறுத்த தடுப்பரண்களுடன் போலீசார் தயாராக இருந்தனர். கூட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து கண்ணீர்ப்புகை குண்டை வீசி கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். போராட்டக்காரர்களும் கற்களையும், தம் மீது விழுந்த கண்ணீர்ப்புகை குண்டுகளையும் போலீசு நிலையத்தின் மீது திருப்பி வீசித் தாக்கினர். புதன், வியாழன் ஆகிய இரு நாட்களில் பல்வேறு கட்டிடங்களும் கடைகளும் சூறையாடப்பட்டன.

வியாழன் அன்று இரவு மக்களின் மீது ரப்பர் குண்டுகளை சுட்டு போராட்டத்தைக் கலைக்க முயற்சித்தது போலீசு. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மக்களும் திருப்பி அடித்தனர், ஒரு கட்டத்தில் மக்கள் ஆத்திரமடைந்து போலீசு நிலையத்திற்கு அருகில் இருந்த ஒரு கட்டிடத்திற்கு தீவைத்துக் கொழுத்தினர். இதனால் பீதியுற்ற போலீசு, உடனடியாக போலீசு நிலையத்திலிருந்து வெளியேறி தப்பிச் சென்றது. அதன் பின்னர் போலீசு நிலையத்திற்கும் தீ வைத்தனர் மக்கள்.

ஃப்ளாய்ட் மரணம் குறித்து வாய் திறக்காத டிரம்ப், இந்த தீவைப்பு சம்பவத்திற்குப் பிறகு திருவாய் மலர்ந்துள்ளார். ”இந்த பொறுக்கிகள் ஜார்ஜ் ஃப்ளாய்டின் நினைவை அவம்ரியாதை செய்துள்ளனர். அவ்வாறு நடப்பதை நான் அனுமதிக்கமாட்டேன். அம்மாநில கவர்னர் டிம் வால்ஸ்-இடம் இராணுவம் அவருக்குத் துணையாக எப்போதும் இருக்கும் என்று கூறினேன். ஏதேனும் சிரமம் இருந்தால், நாங்கள் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்வோம். கொள்ளை துவங்கும்போது, துப்பாக்கிச் சூடு துவங்கும். நன்றி !” என்று தனது டிவிட்டரில் மிரட்டல் விட்டுள்ளார். வலதுசாரி ட்ரம்பிடம் இதை மட்டுமே எதிர்பார்க்க முடியும்.
https://twitter.com/realDonaldTrump/status/1266231100780744704
ஆறாண்டுகளுக்கு முன்னர், ”கருப்பினத்தவர்களின் உயிரும் முக்கியமானது” என்ற முழக்கத்தின் கீழ் அமெரிக்காவில் பெரும் போராட்டங்கள் நடக்கத் துவங்கின. கருப்பினத்தவருக்கும், வெள்ளையினத்தவர்களுக்குமான நீதியில் பாரபட்சம் கூடாது என்பதுதான் அவர்களது அதிகபட்சக் கோரிக்கையே. அவர்களது கோரிக்கைகளுக்கு இன்றுவரை செவிசாய்க்கப்படவில்லை. அமெரிக்காவில் இன்று நடக்கும் தீவைப்பு, சூறையாடல், கலவரம் ஆகியவற்றிற்கான காரணத்தை இப்போராட்டத்தில் காணப்பட்ட பதாகைகள் சுட்டிக்காட்டின.
“கலகம் என்பது செவிசாய்க்கப்படாதவர்களின் மொழி” – மார்ட்டின் லூதர் கிங்.

– நந்தன்
As heated protests over George Floyd’s death continue, Minnesota governor warns of ‘extremely dangerous situation’

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன ?

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு

கொரோனா தொற்று ஏற்கெனவே பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில் locust swarm எனப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களின் விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவருவது அதிர்ச்சியளிக்கிறது.

வெட்டுக்கிளிகளின் வாழ்வுமுறை

இப்போது விளைநிலங்களை ஆக்கிரமித்திருக்கும் வெட்டுக்கிளிகள் நாம் சாதாரணமாக நம் பகுதிகளில் காணும் வெட்டுக்கிளிகளுக்கு நெருங்கிய உறவினர்கள். ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த வெட்டுக்கிளிகளின் வாழ்வுமுறை மிகவும் விசித்திரமானது.

பொதுவாகத் தனித்தனியாகக் (Solitary Phase) குறைந்த எண்ணிக்கையில் ஆங்காங்கு நிலத்தில் காணப்படும் இந்த வெட்டுக்கிளிகள் எப்போதும் ஆபத்தானவை அல்ல. வறட்சி ஏற்படும் காலகட்டங்களில் ஆங்காங்கே உதிரிகளாய் இருக்கும் இவை பசுமையான சிறிய நிலப்பரப்புகளுக்கு வந்து சேர்கின்றன. அவ்வாறு பல வெட்டுக்கிளிகள் ஒரே இடத்தில் நெருங்கி உணவுதேட நேரும்போது அவற்றின் நரம்புமண்டலம் தூண்டப்பட்டு செரட்டோனின் (serotonin) என்னும் வேதிப்பொருள் அதிக அளவில் அதன் உடலில் உற்பத்தி செய்யப்படுகிறது. அப்போதுதான் அவை ஆபத்தான அச்சுறுத்தும் உயிரினங்களாக மாற்றம் பெறுகின்றன.

வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தும் படிநிலை

இந்த செரட்டோனின் உடலில் சுரந்த சில மணி நேரங்களில் அவற்றின் குணநலங்களில் பெரும் மாறுதல் ஏற்படுத்துகிறது. தனித்து வாழும் வெட்டுக்கிளிகள் அப்போதுதான் சமூகமாய் ஓத்துழைத்து வாழும் கூட்டு வாழ்வுக்குத் (Gregarious phase) தூண்டப்படுகின்றன. அவற்றின் உணவு உண்ணும் பழக்கம், நடத்தை, வேகம் என அத்தனையும் மாற்றமடைகின்றன. இந்நிலையில் சரியான ஈரப்பதமும் ஈரமண்ணும் வாய்க்கப்பெற்றால் அவற்றின் முட்டைகளிலிருந்து வெளிவரும் அடுத்த தலைமுறை வெட்டுக்கிளிகள் உருவ அமைப்பிலும் நிறத்திலும் ஏன் மூளை அளவிலும்கூட மாறுதல் பெறுகின்றன. இந்த மாற்றங்கள் முட்டைகள் பொரித்தபின் அவற்றின் வளரிளம் பருவத்தில் (Nymph) நடைபெறுகின்றது. பெற்றோரிடமிருந்து முற்றிலும் தோற்றத்திலும் நடத்தையிலும் வேறுபட்ட இந்தத் தலைமுறை பெரிய மூளை, குட்டையான கால்களுடன் அதிக தூரம் பயணிக்கும் தகவமைப்பைப் பெறுவதோடு பெரும் அழிவு சக்தியாக உருவெடுக்கின்றது.

படிக்க:
சுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” !
♦ சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாள் கட்டணம் ரூ. 60,000 !

பலநூறு முட்டைகளையிடும் ஒரு வெட்டுக்கிளி தன் வாழ்நாளில் மூன்று முறைகள் வரை முட்டையிடுகிறது. இவை இலைகளில் மட்டுமின்றி மண்ணிற்கு அடியிலும் முட்டையிடுகின்றன. பெரும் கூட்டமாக மிகக்குறைந்த கால அவகாசத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையில் பெருகும் இந்த வெட்டுக்கிளிகள் தம் கண்ணில் படும் பசுமை அத்தனையையும் அழித்து உண்டபடி பெரும்பசியுடன் கூட்டமாய் அடுத்தடுத்த பசுமை நிலங்களை நோக்கி நகர்கின்றன. இவற்றின் கண்ணில்படும் எந்தத் தாவரமும் தப்ப முடியாது. இவை ஒரு நாளைக்கு நூறு கிலோமீட்டர்களுக்கும் மேல்கூட பயணிக்க வல்லவை. தொடர்ந்து பசுமையை நோக்கி பயணித்துக்கொண்டே இருக்கும் இவை செங்கடலையே தரையிறங்காது தாண்டக் கூடியவை. சில ஆண்டுகள்கூட தொடர்ந்து அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டே தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கும் திறன் கொண்டவை. பாலைவன லோகஸ்ட் என்ற வெட்டுக்கிளி இரண்டரை மாதங்கள் முதல் ஐந்து மாதங்கள்வரை வாழக்கூடியது.

ஆச்சரியகரமாக ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பின் அவை தாமாகவே தமது முந்தைய solitary phase ஐ அடைந்து மீண்டும் ஆபத்தற்ற ஒன்றாக மாறிவிடுகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெட்டுக்கிளி இனங்களில் வெறும் 22 இனங்களே இந்த Locust swarm எனப்படும் அழிவு சக்தியாக மாற்றம் பெறும் திறனுள்ளவை.

உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை அழித்து பத்தில் ஒரு பங்கு உலக மக்கட்தொகையை பட்டினிக்குத் தள்ளும் அளவுக்கு அவை திறன் பெற்றவை என்று National Geographic இவற்றைப்பற்றி பெரும் கவலைதரும் தகவலைப் பதிவு செய்கிறது.

இந்த ஆபத்தை உலகம் எப்படிக் கையாளுகிறது?

அடுத்ததாக இந்த ஆபத்தை எப்படி உலகம் எதிர்கொள்கிறது என்று பார்க்கும்போது ஏறக்குறைய கொரோனா போன்ற கையறு நிலையே காணப்படுகிறது. இந்த வெட்டுக்கிளிகளின் விரைவான இனப்பெருக்கம், தொடர்ந்த வலசை (migration), பெரும் பரவல் மற்றும் எண்ணிக்கையால் இவற்றைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலான ஒன்றாக இருக்கிறது. தற்போதைய சூழலில் வானிலிருந்து தெளிக்கப்படும் வேதிப் பூச்சிக்கொல்லிகளே உலகம் முழுதும் இதற்கு தீர்வாகக் கருதப்படுகிறது. இந்திய அரசும் மாலத்தியான் எனப்படும் பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் (!) தாக்கி அழிக்கும் நச்சை இந்த வெட்டுக்கிளிகளுக்கு எதிராகப் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இது அதிகம் நீர்க்கப்பட்டுதான் (Ultra Low Volume) பயன்படுத்தப்பட வேண்டும் என்றாலும் இதன் நச்சுத்தன்மை விவசாயத்துக்கு நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்தே அழிக்கும் என்பதோடு அதன் நச்சு எச்சம் நீரிலும் நிலத்திலும் கலக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த வெட்டுக்கிளிகள் விரைவில் தொடர்ந்து இடப்பெயற்சி அடைந்து விடுவதாலும் பல சதுரகிலோமீட்டர் தொலைவுகளுக்கு இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் காணப்படுவதாலும் இந்த பூச்சிக்கொல்லித் தெளிப்பு பெரிய அளவில் பயனளிப்பதில்லை. இந்நேரத்தில் இயற்கையிலேயே பூச்சிகளை கட்டுப்படுத்தும் பறவைகள் மற்றும் விலங்குகளை நாம் பெருமளவில் ஒழித்து விட்டதையும் வருத்தத்துடன் நினைவுகூர வேண்டியிருக்கிறது.

விழிப்புடன் இருக்கிறதா தமிழகம்?

ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு அரேபியாவைக் கடந்து ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பயணிக்கும் இந்த வெட்டுக்கிளிகள் சாதாரணமாக தம் வலசையை இராஜஸ்தானின் மேற்கு எல்லையோடு முடித்துவிடுவது வழக்கம். ஆனால் 27 ஆண்டுகளுக்குப்பிறகு இவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பதை நாம் நம்முடைய உணவுப் பாதுகாப்பின் மீதான பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இவை தமிழகத்துக்கு வராது என்று அரசு கூறினாலும் இவற்றின் இடப்பெயற்சியை சரியாக யாராலும் கணிக்கமுடியாது என்பதே அறிவியல் உண்மை. இவை தமிழகத்துக்கு வராது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது என்று பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் சொல்வதைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் இதுகுறித்த பேட்டி ஒன்றில் பேராசிரியர் அவர்கள் தமிழக அரசும் விவசாயிகளும் தகுந்த முன்னேற்பாடுகளுடன் இருக்கவேண்டும் என்று குறிப்பிடுவதோடு வேதிப் பூச்சிக்கொல்லிக்கு மாற்றாகச் சில பாதுகாப்பான மாற்றுகளையும் முன்வைக்கிறார்.

படிக்க:
தொழிலாளிகளுக்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது இருண்ட காலம் !
♦ உணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் !

கொரோனா விஷயத்தில் முதலில் அரசு மெத்தனமாக இருந்துகொண்டு பின்னர் கைவிரித்தது போன்றில்லாது இப்போதே நம்மிடமிருக்கும் மக்களையும் மண்ணையும் நேசிக்கும் நிபுணர்களிடம் கலந்தாலோசித்து உரிய தயாரிப்புடன் இருப்பதே விவேகமானது. ஆபத்து நெருங்க வாய்ப்புகள் இருக்கும் நேரத்தில் எவ்வித தாமதமும் இன்றி சில சோதனை முயற்சிகளைச் செய்து முடித்துவிடுவதே விவேகமானது.

தொடரும் அச்சுறுத்தல்களும் காலநிலை மாற்றமும்

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இவ்வுலகத்துக்குப் புதியதல்ல. இஸ்ரயேலர்களிடமிருந்த எகிப்தியர்களைக் காக்க எகிப்தியர்களின் நிலத்தின்மீது கடவுள் வெட்டுக்கிளிகளை ஏவியதான குறிப்புகள் பைபிளில் காணக் கிடக்கின்றன. அக்காலத்திலேயே வெட்டுக்கிளிகள் ஒரு அச்சுறுத்தும் சக்தியாகவே இருந்திருக்கின்றன. எனினும் இன்றைய அதிகரிக்கும் புவி வெப்பமும் காலநிலை மாற்றமும் இந்த அழிவு சக்திக்கு இன்னும் அதிக சாதகமாக இருப்பதை அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆபத்தற்ற solitary phase இல் வாழும் வெட்டுக்கிளிகளை ஆபத்தான Gregarious phase க்கு மாற்றுவது அவற்றின் சுற்றுச்சூழலும் காலநிலையுமே. அதிகரிக்கும் கடல்களின் வெப்பநிலை அதிக ஈரப்பதத்தையும் அபூர்வமான புயல்களையும் கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய தீபகற்பத்தில் ஏற்படுத்தி இந்த வெட்டுக்கிளிகளின் Gregarious phase க்கு மேலும் மேலும் தூண்டக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.

கொரோனா உட்பட உலகெங்கும் நடக்கும் விசித்திரமான தொடர் நிகழ்வுகள் நமக்குச் சுட்டிக்காட்டுவது ஒன்றே ஒன்றுதான். காலநிலை மாற்றம். உலக வெப்பமயமாதலின் விளைவுகளை நம் தலைமுறை ஏற்கெனவே சந்திக்கத் தொடங்கிவிட்டது. உலக வெப்பமயமாதல் பூச்சிகளின் பெருக்கத்திலும் நடத்தியிலும் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அறிவியலாளர்கள் ஏற்கனெவே எச்சரித்திருக்கின்றார்கள்.

வரலாறு காணாத மழை, வரலாறு காணாத வெள்ளம், வரலாறு காணாத வெப்பம், வரலாறு காணாத வறட்சி, என புதிய புதிய மொழியில் இந்த பூமி மனிதனிடம் ஏதேதோ பேச முயல்கிறது. கூர்மதியுள்ள மனித சமூகமும் அதை ஆளும் வல்லரசுகளும் எப்போது பூவுலகின் குரலுக்குச் செவிசாய்க்கப் போகிறார்கள்?

– பூவுலகின் நண்பர்கள்

நன்றி : ஃபேஸ்புக்கில் Sundar Rajan 

disclaimer

கொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் !

கீழே தரப்பட்டுள்ளது தோழர் வரவர ராவின் உறவினரும் பத்திரிகையாளருமான வேணுகோபால் அவர்களின் முக நூல் வழியான கடிதம் ஆகும்.

தோழர் வரவர ராவ் தற்போது மாற்றப்பட்டுள்ள சிறையில் ஒரு சிறைவாசி கொரானா தொற்று உயிரிழந்திருப்பது நமக்கு மிகவும் கவலை அளிக்கிறது.

80 வயதிற்கு மேல் ஆகிவிட்ட, பல்வேறு தீவிர உடல்நல சிக்கல்கள் கொண்ட தோழர் வரவர ராவை குறைந்தபட்சம் பரோலில் கூட விட மறுக்கும் காவல்துறையின் மனிதாபிமானமற்ற செயலை அனைத்து ஜனநாயக சக்திகளும் கண்டிக்க வேண்டும்.

இது மறைமுகமாக அவரை படுகொலை செய்வதற்கு ஒப்பானதாகும்.

மேலும் பல்வேறு சிறைகளில் உள்ள எண்ணற்ற அரசியல் கைதிகள் யு.ஏ.பி.ஏ போன்ற கொடும் சட்டங்களின் காரணமாக பிணை கிடைக்காமல் இதே அபாயத்தை எதிர் கொள்கின்றனர்.

வரவர ராவின் நிலை இதற்கு ஒரு உச்சகட்டமான எடுத்துக்காட்டாகும். எனவே தோழர் வரவர ராவ்,தோழர் சாய்பாபா மற்றும் இதர அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தொடர்ந்து குரல் கொடுப்பது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.

***

நன்றி…

கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில், வரவர ராவின் உடல்நிலை தொடர்பாக, அவருடன் தொடர்பு கொள்ள முடியாத மோசமான சூழ்நிலையை பகிர்ந்து கொண்டதிலிருந்து, ஆதரவும் அக்கறையும் கொண்ட பல விசாரிப்புகளும் எதிர்வினைகளும் வந்த வண்ணமுள்ளன..

நூற்றுக்கணக்கான நண்பர்கள் எங்களை அலைபேசியில் அழைத்தனர், அவர்கள் வரவர ராவின் குடும்பத்திற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

அவர்கள் சிறை அதிகாரிகளை தாமே அழைத்துப் பேசினர், மகாராஷ்டிரா அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் தொடர்பு கொள்ள முயன்றனர். பத்திரிகை அறிக்கைகளை வெளியிட்டனர்.

சமூக ஊடகங்களில் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்… அவர்கள் தமது கவலை, கோபம், அக்கறை, ஆதரவு ஆகியவற்றை சாத்தியமான அனைத்து வழிகளிலும் வெளிப்படுத்தினர்.

தெலுங்கானாவின் அனைத்து எதிர்க்கட்சிகளும் (சிபிஐ, சிபிஎம், டி.ஜே.எஸ், சிபிஐ எம்.எல்., விப்லவ ராச்சாய்தலா சங்கம், பூரா ஸ்பந்தனா வேதிகா (வாரங்கல்), தெலுங்கானா வித்யவந்துலா வேதிகா மற்றும் பல அமைப்புகள்) அவரை விடுவிக்கக் கோரி அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

வரவர ராவின் மகள்களின் முறையீட்டை தி இந்து, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஆந்திர ஜோதி ஆகிய இதழ்கள் வெளியிட்டுள்ளன.

சிறை அதிகாரிகளும் மாநில அரசு அதிகாரிகளும் “வரவர ராவ் நலமாக உள்ளார்” என்று கூறுவதாக நண்பர்கள் மூலம் நாங்கள் அறிந்தோம். இதன் அர்த்தம் என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை என்றாலும், வி.வி “நலமாக இருப்பார்” என்று நம்புகிறோம்.

எப்படியிருந்தாலும், நாளை அவரது ஜாமீன் மனு மீதான நீதிமன்ற விசாரணை வருகிறது. அப்போது சிறை அதிகாரிகள் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

கடந்த மூன்ற வாய்தாக்களிலும் நீதிமன்றம் இந்த அறிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

படிக்க:
<சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாள் கட்டணம் ரூ. 60,000 !
♦ <செயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு !

ஆனால் துறை அதிகாரிகள் அதை கண்டு கொள்ளவில்லை. குறைந்தபட்சம் நாளைய வாய்தாவிலாவது அவர்கள் வரவர ராவின் உடல்நிலை குறித்த சமீபத்திய அறிக்கையை தாக்கல் செய்வார்கள் என்றும், உண்மையான நிலையை எங்களுக்குத் தெரிவிப்பார்கள் என்றும் நம்புகிறோம்.

அதுவரை நாங்கள் பதட்டத்துடன் தான் இருக்க வேண்டியுள்ளது.

இருப்பினும், , குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சார்பாக, இதயத்தின் ஆழத்திலிருந்து, தங்களால் இயன்றதைச் செய்ய முயன்ற ஒவ்வொருவருக்கும் நன்றி கூறுகிறோம்…

நன்றி : ஃபேஸ்புக்கில்Venugopal

disclaimer

சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாள் கட்டணம் ரூ. 60,000 !

நேற்று மதியம் தொலைபேசியில் எனக்கு நெருக்கமான இளம் பெண்ணின் தந்தை, அவளுக்கு ஒரு வாரக் காய்ச்சலுக்குப் பின் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகச் சொன்னார். மேலும் வடபழனி அருகிலிருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு நாளொன்றுக்கு 60,000 ஆகும் என்று சொன்னார்கள் எனவும் கூறினார்.

நான் நம்பும் சென்னை அரசு பொதுமருத்துவ மனைக்கு (RGGH) அவளை அழைத்துச் செல்லுமாறு பரிந்துரைத்தேன்.

rajiv_gandhi_GHஇரவு அவள் எப்படி இருக்கிறாள் என்று கேட்க தொடர்பு கொண்டால் அவளே தொலைபேசியில் –

மதியம் அரசு பொது மருத்துவமனை சென்றால், இரண்டு மணி நேரக் காத்திருப்புக்குப் பின், இது எங்கள் zoneல் வராது, kmc போகச் சொன்னார்கள்,
அங்கே ஒரு மணி நேரம் கழித்து இப்போது காய்ச்சல் இல்லை, வீட்டுக்குப் போகலாம், நாளை மாநகராட்சியிலிருந்து வந்து ஏதாவது quarantine கூட்டிப் போவார்கள் என்றார்கள்.

அருகில் உள்ள வேறொரு மருத்துவமனையில் ஒரு நாள் கட்டணம் 15,000 என்று சொன்னதால் அங்கே சேர முடிவு செய்ததாகச் சொன்னாள்.

பரிசோதனையில் தொற்று என்றால் வீட்டில் இருந்து மற்றவர்க்கும் தொற்று வரலாம், மருத்துவமனைக்குப் போ என்று நான் தான் சொன்னேன். அவள் அப்படி அநாயாசமாகச் செலவழிக்கக் கூடிய பணக்கார வர்க்கத்தைச் சார்ந்தவளும் அல்ல.

இப்படி எத்தனை பேர் இருக்கிறார்களோ.. இனி யாராவது என்னிடம் தொற்று இருக்கிறது என்ன செய்யலாம் என்று கேட்டால் எங்கே அனுப்புவது என்று தெரியவில்லை.

அதே போல் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்க என்ன மண்டலக் கட்டுப்பாடு என்பதும் புரியவில்லை.

குறிப்பு : எந்த மண்டலத்துக்கு எந்த மருத்துவமனை போக வேண்டும் என்று மாநகராட்சி / சுகாதாரத்துறை மக்களிடம் சொல்வது இப்போது அவசரம், அவசியம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் ருத்ரன் மனநல மருத்துவர்.,

சுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” !

0

ந்தியாவில் பெருநிறுவனங்களும், ஆலைகளும், சுரங்கங்களும் பின்பற்ற வேண்டிய சுற்றுச் சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை மதிப்பீடு செய்து கட்டுப்படுத்துவதற்காக நிறைவேற்றப்பட்ட சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா -2006- ஐ ரத்து செய்துவிட்டு, அதனை கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமான வகையில் திருத்தி சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020 என்ற பெயரில் ஒரு சட்ட வரைவை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் ஆலைகள், சுரங்கங்கள் மற்றும் பல்வேறு கட்டுமானங்களால் உண்டாகும் சுற்றுச் சூழல் பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்கான விதிமுறைகளை உள்ளடக்கி கொண்டுவரப்பட்டதுதான் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2006. இந்த மசோதாவில் உள்ள பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களை நீக்கிவிட்டு இந்த புதிய மசோதாவைக் கொண்டு வந்துள்ளது.

தொழில் செய்வதை எளிமையாக்குவது மற்றும் நிறுவனங்கள், ஆலைகள், சுரங்கங்களின் விரிவாக்கத்தை எளிமைப்படுத்தும் விதமாகவும் இந்த புதிய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020 கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.

குஜராத், கர்நாடகா, சட்டீஸ்கர், ஒடீசா ஆகிய மாநிலங்களில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மீறப்படுவதால் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் கொள்கை ஆய்வுக்கான மையமும் நமதி சுற்றுச்சூழல் நீதித் திட்டத்தைச் சேர்ந்த நிபுணர் குழுவும், தற்போதைய சு.பா.ம. மசோதா – 2020 (சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா 2020) – வரைவில் உள்ள பல்வேறு குளறுபடிகளை எதிர்த்துக் குரல் எழுப்பியிருக்கிறது.

இந்த வரைவில், சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் ஆலைகள், நிறுவனங்கள், சுரங்கங்களுக்கான மூன்றாம் தரப்புக் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தெளிவாக கொடுக்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டுகின்றனர்.
“தேசிய முக்கியத்துவம் கொண்ட அரசு நிறுவனங்கள் மூன்றாம் தரப்பு கண்காணிப்பில் ஈடுபடலாம் என்று இந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டுக்கான மத்திய கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில், சுமார் 201 திட்டங்களைக் கண்காணிப்பதில் மூன்றாம் தரப்பு கண்காணிப்பு நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள சுணக்கங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூன்றாம் தரப்பு கண்காணிப்பு நிறுவனங்களின் நம்பகத்தன்மை பல சமயங்களில் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.” என்கிறார் கொள்கை ஆய்வுக்கான மையத்தைச் சேர்ந்த மஞ்சு மேனன்.

படிக்க:
குஜராத்திலிருந்து உத்தர பிரதேசம் கிளம்பிய தொழிலாளி வீடு சேரும் முன் உயிரிழந்தார்
♦ உணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் !

இந்த புதிய வரைவில் மூன்றாம் தரப்பு கண்காணிப்பு நிறுவனங்கள் குறித்த தெளிவான விளக்கம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும், ஏற்கெனவே மூன்றாம் தரப்பு கண்காணிப்பில் பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் போன சுமார் 235 திட்டங்களில், சுற்றுச்சூழல் விதிமீறல்கள் நடந்துள்ளன. இதனால் சுமார் 3 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுச் சூழலிய வழக்கறிஞர் மணீஷ் ஜேஸ்வானி இது குறித்துக் கூறுகையில், ”தற்போது முன் மொழியப்படும் வரைவு அப்படியே நடைமுறைப்படுத்தப்படுமானால், இந்த நாட்டின் சுற்றுச் சூழலுக்கு, மிகப்பெரும் சூழலியல் பேரழிவைக் கொண்டுவரும். காட்டுவாழ் விலங்குகள், காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய அனைத்திற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.” என்கிறார்.

சுற்றுச்சூழலியல் நடைமுறையில், பொதுமக்கள் கருத்துக் கேட்பு, ஆலோசனை ஆகியவை அனைத்தும் அதன் ஒருங்கிணைந்த பாகமாகும். இது பகுதி மக்களுக்கும், பங்குதாரர்களுக்கும் அத்திட்டத்தால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து தங்களது அக்கறையைக் காட்டவும், குரலை எழுப்பவும் உரிமை வழங்குகிறது. சட்டத்தில் இந்த வழிமுறைகள் இருக்கும்போதே கார்ப்பரேட் நிறுவனஙக்ள் அதனை மீறிச் செயல்படுகின்றன. இந்த புதிய வரைவு பல்வேறு திட்டங்களுக்கு இத்தகைய ஒப்புதல் எதையும் நிறுவனங்கள் பெறத் தேவையில்லை என்று கூறுகிறது.

பாசனத் திட்டங்கள், கட்டிடங்கள், கட்டுமானங்கள் மற்றும் பகுதி மேம்பாட்டுத் திட்டங்களை நவீனப்படுத்துதல், உள்நாட்டு நீர்ப் போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல், தேசியப் பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள், மத்திய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட ”சிறப்பம்ச திட்டங்கள்”, எல்லைப் பகுதிகளில் குழாய் பதிப்பு, 12 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடல்சார் திட்டங்கள் ஆகியவற்றிற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு வழங்குகிறது இந்த மசோதா.

”சிறப்பம்ச திட்டங்கள்” என்ற பதம் புதியதாக இந்தமுறைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவான இந்தப் பதத்தைப் பயன்படுத்தி, எந்த ஒரு திட்டத்தையும் இந்த வகையினத்திற்குள் கொண்டுவந்து பொதுமக்கள் கருத்துக் கேட்பில் இருந்து மத்திய அரசு நினைத்தால் விலக்கு அளிக்க முடியும்.

அதே போல மொத்தத்தில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக்கான கால அவகாசத்தை 30 நாட்களிலிருந்து வெறும் 20 நாட்களாக சுருக்கி விட்டது அரசு. இந்த 20 நாட்களில் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கொண்டு வரப்படும் புதிய திட்டத்தைப் புரிந்து கொண்டு, அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பரிசீலித்து தங்களது கருத்துக்களைப் பதிவு செய்வது சாத்தியமற்றது. கருத்துக் கேட்கக் கூடாது. ஒரு வேளை கேட்டாலும் அது பெயரளவிற்கு இருக்க வேண்டும் என்பதே மோடி அரசின் நோக்கமாக உள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சு.பா.ம.மசோதாவில், திட்டங்களை செயல்முறைப்படுத்துவோர் 6 மாதத்திற்கு ஒருமுறை, சுற்றுச் சூழல் விதிமுறையை ஒழுகுவதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இந்த புதிய 2020-ம் ஆண்டு மசோதா, அதனை ஓராண்டிற்கு ஒருமுறை சமர்ப்பித்தால் போதும் எனகுறிப்பிடுகிறது.

மேலும் கடந்த காலங்களில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் பல்வேறு உத்தரவுகளை மறுதலிக்கும் வகையில் பல்வேறு பிரிவுகள் இந்த சட்ட வரைவில் உள்ளன. மொத்தத்தில் இந்த புதிய சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020, கார்ப்ப்பரேட் நிறுவனங்களின் பகாசுரக் கொள்ளைக்குத் துணை நிற்கும் வகையிலும், சுற்றுச் சூழலை பேரழிவுக்கு உள்ளாக்கும் வகையிலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படப் போகும் பாதிப்பு, திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அந்தப் பகுதி மக்களோடு மட்டும் நின்றுவிடப் போவதில்லை.

உலகளாவிய சூழலியல் மாற்றங்கள் ஏற்படுத்தும் அதீத மழை, அதீத வறட்சியால் பாதிக்கப்படப் போவது நாமும்தான் என்பதை நினைவில் கொள்வோம். !


நந்தன்
நன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா. 

தொழிலாளிகளுக்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது இருண்ட காலம் !

கொரோனா ஊரடங்கு காலத்தில், முதலாளிகள் தமது தொழிலாளிகளுக்கு முழுமையாக சம்பளம் கொடுக்க வேண்டுமென உத்தரவிட்டது மத்திய அரசு. உடனே, “தொழிலாளிகள் எந்தவொரு வேலையும் செய்யாதபோது, சம்பளம் கொடுக்காமல் இருக்க ஒரு முதலாளிக்கு உரிமை உண்டு” என்று முதலாளின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றது உச்ச நீதிமன்றம். மத்திய அரசோ, நீதிமன்றத்துக்குச் சென்று பதில் அளிக்கும் வரைகூட காத்திராமல், தான் போட்ட உத்தரவை உடனடியாக வாபஸ் வாங்கியது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கு ஒரு நிவாரணமாக அமைந்திருக்கும் இந்த உதவியை அரசு திரும்பப் பறித்துக் கொண்டது என்பது தற்செயலானதல்ல, அரசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒரு உத்தரவைப் போட்டதுதான் தற்செயலானதாக உள்ளது.

கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை இத்தனை ஆண்டுகாலம் குறைந்த கூலி கொடுத்து சுரண்டிக் கொழுத்த முதலாளிகளும், கமிசன் வாங்கிய ஒப்பந்தக்காரர்களும் கைவிட்ட நிலையில், அரசின் நிவாரணமோ உணவோ கிடைக்காதததால், உயிரைப் பணயம் வைத்து வேகாத வெயிலில் சொந்த கிராமங்களை நோக்கி நடந்து கொண்டிருக்கிறார்கள் தொழிலாளார்கள்.

காலில் செருப்பில்லாமல் நடப்போர், கைக்குழந்தையுடன் செல்வோர், கால் ஒடிந்த மனைவியைத் தோளில் சுமக்கும் கணவன், வெயில்கொடுமைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் பாதிவழியில் செத்துமடியும் குழந்தைகள் – தொழிலாளிகள் எனக் காண்போரைக் கண்ணீர்விடச் செய்கின்றன புலம்பெயர்த் தொழிலாளரின் துயரங்கள்.

வருடக்கணக்கில் அடிமாட்டுக் கூலி கொடுத்து 12, 14 மணி நேரம் வேலைவாங்கிய முதலாளிகளுக்கு ஈவிரக்கம் இல்லாமல் போனது ஏன்? தானியக் கிடங்குகள் நிரம்பி வழியும் போதும், கோடிக்கணக்கான மக்களைப் பட்டினி போடுகிறதே அரசு, இது நியாயமா? உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இப்படி நடக்கலாமா? என்றெல்லாம் பலரும் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

படிக்க:
அந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா ? – ஒரு வேடிக்கைப் பேச்சு
♦ மறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் !

ஆனால், எதார்த்தம் வேறுமாதிரியாக உள்ளது. ஊரடங்கு காலத்தில் சம்பளம் கொடுக்காமல் தொழிலாளிகளை விரட்டியிருப்பது மட்டுமல்ல, ஊரடங்கிற்கு பிறகு வேலைக்கு வரும் தொழிலாளி வர்க்கத்துக்கு எந்த உரிமையும் கிடையாது என்றல்லவா இந்த அரசு அறிவிக்கிறது.

ஆம், இனி இந்த ‘ஜனநாயக’ நாட்டின் பல மாநிலங்களிலும் தொழிலாளிகள் 8 மணிநேர வேலையையோ, தமது உழைப்புக்கேற்ற ஊதியத்தையோ கேட்க முடியாது. தமது உரிமை கேட்டுப் போராட சங்கம் வைக்க முடியாது. குடிநீர், உணவு, கழிவறை, காற்றோட்டமான சூழல், பாதுகாப்பான வேலைநிலைமை என எந்தவித அடிப்படைத் தேவைகளையும் கேட்க முடியாது. முதலாளிகளின் பொருளாதார வளர்ச்சிக்காக, தொழிலாளி வர்க்கத்தை வலுக்கட்டாயமாக ‘தியாகம்’ செய்ய வைத்திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

இதையெல்லாம் மீறி, 8 மணி நேரத்துக்கு மேல் உழைக்க மறுத்தாலோ, உழைப்புக்கேற்ற ஊதியம் கேட்டாலோ, முதலாளியின் அனுமதியின்றி சிறுநீர் கழிக்கச் சென்றாலோ அவை தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படும். இதற்காக, வேலைநீக்கம் என்ற பழைய பாணியில் முதலாளிகள் நடந்து கொள்வார்கள் என்று நாம் கருதக் கூடாது; உரிமை கேட்ட தொழிலாளியைக் கட்டிவைத்து அடிப்பது அல்லது போலீசை வைத்து தாக்குவது, சிறையில் அடைப்பது போன்ற அடக்குமுறைகளைத்தான் இனி எதிர்பார்க்க நேரிடும்.

இந்த அடக்குமுறைகளுக்கு அஞ்சியோ, வேலையில் இருந்து துரத்தப்பட்டோ வெளியேறுபவர்கள், வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை பெருகினால் என்ன நடக்கும். நாடு முழுவதும் கொள்ளையும், கொலையும் பெருகி சமூகமே சீரழியும். பிச்சைக்காரர்கள், நாடோடிகள் கூட்டம் அலைமோதும். ஆனால், அரசு இவர்களை எல்லாம் குற்றவாளிகள் என அறிவித்து கொடூர அடக்குமுறைகளை ஏவும். இது உங்களுக்கு மிகையான கற்பனை போலத் தோன்றலாம், ஊரடங்கின் போது வெளியே வந்தவர்களையே கொடிய குற்றவாளிகள் போல போலீசு தாக்கியதையும் சொந்த ஊருக்குத் திரும்ப விரும்பும் தொழிலாளர்கள் மீது தடியடி நடத்துவதும், அவர்களை சிறையில் அடைப்பதையும் நாம் இன்றைக்கு அன்றாட செய்திகளாகப் பார்த்து வருகிறோம் அல்லவா? இதில் இருந்தே, எதிர்காலம் எப்படி இருக்குமென ஊகிக்க முடியும்.

***

ப்படியெல்லாம் நடக்குமா, முதலாளிகளும் ஆட்சியாளர்களும் அவ்வளவு கொடூரமானவர்களா என அப்பாவித்தனமாக நம்மில் பலர் கேட்கலாம். உங்களது இந்தக் கேள்விக்கு வரலாறு விடை தருகிறது.

இந்த முதலாளிகள் தாம் உருவான காலந்தொட்டே தொழிலாளி வர்க்கத்தை அடிமை நிலைக்குத் தாழ்த்தி அவர்களின் உழைப்போடு சேர்த்து இரத்தத்தையும் உயிரையும் குடித்து வளர்ந்தவர்கள்தான் என்பதை தனது “மூலதனம்” என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார் பேராசான் காரல்மார்க்ஸ்.

முதலாளி வர்க்கமானது அரசு அதிகாரத்தின் துணையோடு, விவசாய நிலவுடைமை வர்க்கத்தினரை உடைமையிழக்கச் செய்து ஏதுமற்றவர்களாக மாற்றியது குறித்தும், கொடிய சுரண்டல் மிகுந்த உழைப்புக்கு அவர்களைப் பழக்கப்படுத்த அரசுகள் போட்ட கொடூர சட்டங்கள் – தண்டனை முறைகள் குறித்தும் தனது மூலதனம் நூலில் விளக்கியிருக்கிறார்.

தொழிற்புரட்சி ஏற்பட்ட நவீன தேசங்கள் எனப் புகழப்படும் இங்கிலாந்திலும், பிரான்சிலும் பாட்டாளி வர்க்கமானது இரத்தச்சகதியில் தோய்த்தெடுத்து உருவாக்கப்பட்டது. இதைத் தமது மூலதனம் நூலின் முதல்பாகத்தில், “உடைமை பறிக்கப்பட்டோருக்கு எதிரான கொலைகாரச் சட்டங்கள்” என்ற தலைப்பிலான 28-வது அத்தியாயத்தில் விரிவாக விளக்குகிறார் மார்க்ஸ்.

“… முதலில் விவசாயக் குடிகளின் நிலவுடைமையை வலுவந்தமாகப் பறித்து, அவர்களை வீடுவாசல்களில் இருந்து விரட்டியடித்து, வேலையற்ற ஊர்சுற்றிகளாய் மாற்றி, பின்னர் கசையால் அடித்து, சூட்டுக் குறியிட்டு, அகோரமான பயங்கரச் சட்டங்களால் வதைத்து கூலியுழைப்பு முறைக்கு வேண்டிய கட்டுப்பாட்டுக்குப் பணிய வைத்தார்கள்.” என்கிறார் மார்க்ஸ்.

1530-ஆம் ஆண்டு முதலே உழைப்பாளிகளுக்கு எதிரான கொடிய சட்டங்கள் இங்கிலாந்தில் போடப்பட்டு வந்தன. அதில் ஒருவகை மாதிரிதான், எலிசபெத் இராணியின் ஆட்சியில் 1572-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டம்:

“14 வயதுக்கு மேற்பட்டவர்கள் உரிமம் இல்லாமல் பிச்சையெடுத்தால், யாரும் அவர்களை ஈராண்டு காலத்துக்கு வேலைக்கு எடுத்துக் கொள்ளாதபட்சத்தில் அவர்களுக்கு கடும் கசையடி தந்து, இடது காதில் சூட்டுக்குறி பொறிக்க வேண்டும். மீண்டும் குற்றம் புரிந்தால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களானால், யாரும் அவர்களை ஈராண்டு காலத்துக்கு வேலைக்கு எடுத்துக் கொள்ளாதபட்சத்தில் மரண தண்டனை கிடைக்கும். மூன்றாவது முறை குற்றம் புரிந்தால், கடுங்குற்றவாளிகளாகக் கருதி கருணை காட்டாமல் மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும்.”

கிராமத்தில் விவசாயக் குடிகளாக இருந்தவர்களை, சொந்த நிலங்களில் இருந்து விரட்டியதோடு அல்லாமல், நகரங்களில் அவர்களுக்கு வேலையும் கொடுக்காமல், வேலையற்றவர்கள் – ஊர்சுற்றிகள் என்று முத்திரை குத்துவது எவ்வளவு கொடூரமானது. தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்து கொண்டிருக்கும் புலம்பெயர்த் தொழிலாளர்களின் எதிர்காலம் இப்படித்தானே இருக்கப் போகிறது.

தொழிலாளி வர்க்கத்தை நாள் முழுக்கக் கசக்கிப் பிழிந்த பின்னரும் முதலாளிகளின் இலாபவெறி அடங்கவில்லை. அதே சமயத்தில், கடுமையான சுரண்டலுக்கு ஆளாகும் தொழிலாளி வர்க்கத்தைக் கண்டு அவர்கள் அஞ்சவும் செய்தார்கள். தனது உழைப்புக்கேற்ற்ற கூலி கேட்பதே, மிகப்பெரிய குற்றம்; தாம் கொடுப்பதை வாங்கிக் கொண்டு வாய்திறவாது உழைக்க வேண்டுமென முதலாளிகள் கருதினார்கள். இதைச் சட்டமாகவும் ஆக்கிக் கொண்டார்கள்.

படிக்க:
காயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா ? பெருமையா ?
♦ வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) – முதலாளித்துவத்தின் நவீன சுரண்டல் முகம்

இங்கிலாந்தில் மூன்றாம் எட்வர்டு மன்னனின் ஆட்சியில் 1349 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தொழிலாளர் சட்டத்தில்,

“நகரத்துக்கும் கிராமத்துக்கும், பலன்வீத வேலைக்கும் நாள்வீத வேலைக்கும் கூலி விகிதம் சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்டது. விவசாயத் தொழிலாளர்கள் ஆண்டுக்கு இவ்வளவு கூலி என்ற அடிப்படையில் வேலைசெய்ய வேண்டும்; நகரத் தொழிலாளர்கள் “பகிரங்கச் சந்தை” நிலவரப்படி கூலிக்கு வேலைசெய்ய வேண்டும். சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்டதைக் காட்டிலும் உயர்ந்த கூலி கொடுப்பது தடை செய்யப்பட்டது; தடையை மீறினால் சிறை தண்டனை கிடைக்கும். ஆனால், உயர்ந்த கூலி கொடுப்பதற்குரிய தண்டனையைவிட பெறுவதற்குரிய தண்டனை கடுமையானதாக இருந்தது. [இவ்வாறே எலிசபெத்தின் பழகு தொழிலாளர் சட்டத்தின் பிரிவுகள் 18,19 இல், உயர்ந்த கூலி கொடுத்தால் 10 நாள் சிறைத் தண்டனையும், பெற்றால் 21 நாள் சிறைத் தண்டனையும் விதிக்க ஆணையிடப்படுகிறது]” என்று உழைப்புக்கேற்ற ஊதியம் கேட்பதையே மாபெரும் குற்றமாகக் காட்டப்பட்டிருக்கிறது.

தொழிலாளிக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கலாம் என்று வரம்பிடுவதில், அரசு எவ்வளவு அயோக்கியத்தனமாக, முதலாளி வர்க்க ஆதரவாக நடந்து கொண்டது என்பதை,

“அரசானது கூலிக்குத் திட்டவட்டமான உச்சவரம்பு விதிக்கிறதே தவிர, எவ்விதத்திலும் அடிவரம்பு நிர்ணயிக்கவில்லை.” என்று அம்பலப்படுத்துகிறார் மார்க்ஸ்.

அடுத்தடுத்து வந்த நூற்றாண்டுகளில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை மென்மேலும் மோசமடைந்து விட்டதைப் பின்வரும் வரிகளில் மார்க்ஸ் விளக்குகிறார்.

“16-ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் படுமோசமாகி விட்டதென்பது தெரிந்ததே. பணக் கூலி உயர்ந்தது; ஆனால் பணத்தின் மதிப்பிறக்கத்துக்கும், அதையொட்டி சரக்குகளின் விலைகளில் நேரிட்ட உயர்வுக்கும் ஏற்ற விகிதத்தில் உயரவில்லை. எனவே உண்மைக் கூலி குறைந்தது. ஆனால், கூலி உயர்ந்து விடாமல் தடுப்பதற்கான சட்டங்கள் அமலில் இருந்தன;”

கூலியைத் தொடர்ந்து குறைத்துக்கொண்டே வந்ததோடு மட்டுமல்லாமல், இந்த அடிமாட்டுக் கூலிக்கு உழைக்க மறுத்த தொழிலாளர்களைக் கொடுமையான முறையில் ஆட்சியாளர்கள் தண்டிக்கவும் செய்திருக்கிறார்கள். “யாரும் வேலைக்கு எடுத்துக் கொள்ள விரும்பாத ஆட்களை” காதறுப்பதும், சூட்டுக் குறியிடுவதும் நூற்றாண்டுகள் கடந்தும் தொடர்ந்து நீடித்தன.

கூலி கேட்பவர்களையும், குறைவான கூலிக்கு உழைக்க மறுப்பவர்களையும் தண்டித்த முதலாளிகள், தம்மிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் சங்கமாக ஒன்றுசேர்வதை ஒருபோதும் விரும்புவதில்லை. 200 ஆண்டுகளுக்கு முன்பே இப்படியொரு சட்டத்தைப் போட்டதன் மூலம், இப்போதைய மோடிக்கும் ஆதித்யநாத்துக்கும் முன்னோடிகளாக இருந்திருக்கிறார்கள் பிரெஞ்சு ஆட்சியாளர்கள்.

“பிரெஞ்சு முதலாளிகள், 1791 – ஜூன் 14 ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை மூலம், தொழிலாளர்கள் சங்கங்கள் யாவும், “சுதந்திரத்திற்கும் மனித உரிமைகள் பிரகடனத்திற்கும் எதிரான முயற்சி” என்று அறிவித்தார்கள்; இந்தக் குற்றத்தைச் செய்தால் அதற்குத் தண்டனையாக 500 லீவர் அபராதம் விதிக்கப்படும்; செயல்படும் குடிமகனுக்குரிய உரிமைகளையும் ஓராண்டு காலத்துக்கு இழக்க நேரிடும்.” என்று அறிவித்தார்கள்.

அன்று முதல் இன்று வரை தொழிலாளி வர்க்கம் அமைப்பாக, சங்கமாக சேர்வதை, உரிமைகள் கேட்பதையே வெறுத்து வருகிறார்கள் முதலாளிகள். அவர்களது விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றிக் கொடுக்கும் ஆட்சியாளர்கள் மன்னராட்சி முதல் ‘மக்களாட்சி’ வரை தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறார்கள். அன்று ஆறாம் ஹென்றி, எட்டாம் ஜேம்ஸ் என்றால் இன்று மோடி, ஆதித்யநாத்.

தன்மீது ஏவப்பட்ட இத்தனை அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு, அமைப்பாய் – சங்கமாய்த் திரண்டு அடக்குமுறைகளுக்கு எதிராய் சமர் புரிந்து, எண்ணற்ற தொழிலாளிகளின் உதிரத்தையும், உயிரையும் கொடுத்து பல்வேறு உரிமைகளைப் பெற்றது தொழிலாளி வர்க்கம்.

ஆனால் இன்றோ, தனது தேவைகளுக்காக கிராமத்து விவசாயிகளின் உடைமைகளைப் பறித்து நகரங்களில் குவித்து, குறைந்த கூலிக்கு அவர்களைச் சுரண்டிக் கொண்டிருந்த முதலாளி வர்க்கம், தனக்கு தேவை குறைந்தபின், தொழிலாளி வர்க்கத்தை ஊரைவிட்டே விரட்டுகிறது.

16, 17-ஆம் நூற்றாண்டுகளில் ஆலை முதலாளித்துவ வர்க்கத்தால் ஆலைத் தொழிலாளி வர்க்கத்தின் முன்னோடிகள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த அந்த இருண்ட காலம் இப்போது மீண்டும் நம்முன் விரிகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் தமது இரத்தச்சுவடுகளைப் பதித்து, இருண்ட காலத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கிறது இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் மிகப்பெரும் பகுதி.

தொழிலாளிகளை கிராமங்களை நோக்கி விரட்டி சிதறவைத்து, முதலாளிகளும் ஆட்சியாளர்களும் காலச்சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழற்ற நினைப்பதை நாம் அனுமதிக்கப் போகிறோமா? அல்லது அமைப்பாய்த் திரட்டி அடிமைத்தளையை உடைக்கப் போகிறோமா?

– புதியவன் (அரசியல் சமூக ஆர்வலர்)

disclaimer

உணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் !

1

ரடங்கு அறிவிக்கப்பட்ட நேரத்திலிருந்து ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருந்தபின், பெரிய நகரங்களின் தீவிர நிச்சயமற்ற தன்மையிலிருந்து தற்காலிக நிவாரணம் கிடைக்கும் என்று நம்பி ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். ஆனால், நெரிசல் மற்றும் உயரும் வெப்பநிலை காரணமாக ரயில்கள் வெவ்வேறு பாதைகளுக்கு திருப்பி விடப்படுவதால், இந்த ரயில்களில் பலர் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

ரயில் நிலையம் ஒன்றில், தனது தாய் இறந்து விட்டதைக்கூட அறியாமல், தாய் மீது போர்த்தியிருக்கும் துணியை இழுத்து, அவரை எழுப்ப முயற்சிக்கும் சிறுவனின் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி, பல செய்தி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த வீடியோ பீகார் முசாபர்பூரில் உள்ள ஒரு நிலையத்தில் எடுக்கப்பட்டது என்றும், இடம்பெயர்ந்தோருக்கான சிறப்பு ரயிலில் 23 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அங்கு வந்திருக்கிறார் என்றும் என்.டி.டீ.வி சேனல் கூறியது.

ஞாயிற்றுக்கிழமை குஜராத்தில் இருந்து ரயில் ஏறியதாக, அவரது குடும்பத்தினர் கூறியதாக தொலைக்காட்சி சேனல் தெரிவித்துள்ளது. ரயிலில் தண்ணீர் மற்றும் உணவு இல்லாததால், அவர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். ரயில் முசாபர்பூருக்குள் செல்லத் தொடங்குவதற்கு சற்று முன்பு, அவர் மயங்கி விழுந்ததாக என்.டி.டீ.வி தெரிவித்துள்ளது.

தனது சகோதரியின் குடும்பத்தினருடன் கதிஹார் சென்ற அந்தப் பெண் உடல்நிலை சரியில்லாமல் ரயிலில் இறந்துவிட்டதால், முசாபர்பூர் ரயில் நிலையத்தில் அவருடைய குடும்பத்தினரை இறங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

மற்றொரு, ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் டெல்லியில் இருந்து பாட்னாவுக்குச் செல்ல 39 மணிநேரம் பிடித்ததால், பசியால் அழுத நான்கு வயது சிறுவனின் மரணம் குறித்து டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. டெல்லியிலிருந்து பாட்னாவுக்குச் செல்ல 39 மணி நேரம் என்பது வழக்கமான நேரத்தை விட இரண்டு மடங்கு அதிகம்.

தையல்காரராக பணிபுரிந்த பிந்து ஆலம், தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன், ஊரடங்கின் மூன்றாவது நீட்டிப்புக்குப் பிறகு டெல்லியை விட்டு வெளியேற முடிவு செய்திருந்தார்.

மே 23 சனிக்கிழமை காலை மருத்துவ பரிசோதனை முடிந்ததும் அவர்கள் , அன்று மதியம் 2 மணிக்கு ஆனந்த் விஹார் நிலையத்திலிருந்து டெல்லியில் இருந்து புறப்பட்டனர்.

ரயில் லக்னோவை அடைந்ததும் உணவு விநியோகிக்கப்பட்டது. 16 பேர் கொண்ட அவர்களின் பயணக் குழுவுக்கு ஐந்து பாக்கெட்டுகள் மட்டுமே கிடைத்தன. அவர்கள் அனைவரும் 10 பூரிகளை பகிர்ந்து கொண்டனர், குழந்தைகள் டெல்லியில் இருந்து கொண்டு பாலைக் குடித்தனர்.

படிக்க:
குஜராத்திலிருந்து உத்தர பிரதேசம் கிளம்பிய தொழிலாளி வீடு சேரும் முன் உயிரிழந்தார்
♦ காயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா ? பெருமையா ?

ஞாயிற்றுக்கிழமை காலைக்குள் பாட்னாவை அடைவதற்கு பதிலாக, ரயில் நாள் முழுவதும் ஊர்ந்து, ஆங்காங்கே நின்றது, வெப்பநிலை 40 டிகிரிக்கு மேல் அடைந்தது. பகலில் உணவு எதுவும் விநியோகிக்கப்படவில்லை.

“இறுதியாக திங்களன்று அதிகாலை 5 மணியளவில் ரயில் பாட்னாவை அடைந்தது … என் மகன் (நான்கு வயது முகமது இர்ஷாத்) உணவுக்காக அழுகிறான், ஆனால் பாட்னா சந்திப்பில் உணவு எதுவும் கொடுக்கப்படவில்லை” என்று ஆலம் கூறினார்.

பாட்னாவில், பயணிகள் தங்களது ஊர்களுக்குச் செல்ல பேருந்துகளைப் பிடிக்க வேண்டியிருந்தது, போக்குவரத்து குறைவாக இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

“ஒரு சிறிய டிரக் வாடகைக்கு கிடைத்தது, நாங்கள் அதை தானாபூருக்கு கொண்டு சென்றோம். தானாபூரிலும் உணவு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. முசாபர்பூருக்குச் செல்ல வேண்டிய ரயிலில் ஏறினோம். இது ஒன்றரை மணி நேரம் ஆனது, நாங்கள் காலை 10 மணியளவில் அடைந்தோம். எல்லா நேரங்களிலும் குழந்தைகள் உணவுக்காக அழுது கொண்டிருந்தார்கள்” என ஆலம் கூறுகிறார்.

முசாபர்பூர் நிலையத்தை அடைந்ததும், மேற்கு சம்பாரனுக்கான பேருந்தைக் கண்டுபிடிப்பதற்காக அவர்கள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர், அவர்களில் ஒருவர் இர்ஷாத் நகரவில்லை என்பதைக் கண்டார். “நாங்கள் சோதித்தோம், அவன் இறந்துவிட்டான். நாங்கள் அழுதோம்; கதறினோம். அவன் பசியாலும் வெப்பத்தாலும் இறந்துவிட்டான் என நான் நினைக்கிறேன்” என்கிறார் ஆலம்.

கூடுதல் மாவட்ட நீதிபதி ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்த பின்னர், ஈத்-க்கு ஒரு நாள் கழித்து இர்ஷாத் அவர்களின் கிராமமான துலரம் காட்டில் அடக்கம் செய்யப்பட்டான்.

“அவர்கள் எங்கள் மூத்த மகனை எங்களிடமிருந்து பறித்துக் கொண்டார்கள். அதுவும் ஈத் நாளில். இந்த விழாவை என் வாழ்க்கையில் இனி எப்போதும் கொண்டாட முடியாது, இந்த தவறான நிர்வாகத்திற்கு முதலமைச்சர் நிதீஷ் குமாரை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்” என ஆலம் மேலும் கூறினார்.

முசாபர்பூர் மாவட்ட நீதிபதி சந்திரசேகர் சிங், கடந்த சில நாட்களாக பயணிகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் இதனால் உணவு ஏற்பாடு செய்வது கடினமாகி விட்டது என்றும் கூறுகிறார்.

“பல ரயில்கள் எந்த தகவலும் இல்லாமல் வருகின்றன. எங்களுக்கு தகவல் வழங்கப்பட்ட ரயில்கள் தாமதமாக வந்து கொண்டிருக்கின்றன, ஒரு ரயிலில் 1,200 அல்லது 1,500 பயணிகளின் பட்டியல் இருந்தால், சுமார் 2,000 அல்லது 2,500 பேர் வருகிறார்கள்” என்று சிங் கூறினார்.

ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் நீண்ட கால தாமதத்திற்கு, ரயில் பாதையில் நெரிசல் இருப்பதே காரணம் என ரயில்வே அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

முன்னதாக சனிக்கிழமை, 46 வயதான புலம்பெயர்ந்த தொழிலாளி, ஷ்ராமிக் சிறப்பு ரயிலில், ஜான்பூருக்கு பயணம் செய்யும் போது, 60 மணி நேரம் தண்ணீர் அல்லது உணவு கிடைக்காததால் இறந்தார். கோரக்பூருக்கு சென்ற மற்றொரு ரயிலில் திங்கள்கிழமை ஒரு மாத குழந்தை வெப்பம் மற்றும் நீரிழப்பு காரணமாக இறந்தது.

மற்றொரு ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் புதன்கிழமை, மாண்டுவாடி ரயில் நிலையத்தில் மற்ற பயணிகள் ரயிலில் இருந்து இறங்கிய போது, இரண்டு பயணிகள் இறந்து கிடந்ததை ரயில்வே ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.

இறந்தவர்களில் ஒருவர் மும்பையில் இருந்து ஜான்பூரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த 20 வயது தஷ்ரத் பிரஜாபதி மற்றும் மற்றொரு 63 வயது ராம் ரத்தன் கவுட் என அடையாளம் காணப்பட்டனர்.

பிரஜாபதி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது, அதே நேரத்தில் கவுட் “பல நோய்களுடன்” போராடிக்கொண்டிருந்தார் என தெரித்துள்ளது.

மத்திய,மாநில அரசுகள் கைவிட்ட நிலையில், நடந்து சென்று செத்துமடிந்தவர்கள், இப்போது ரயிலில் செத்து மடிகிறார்கள். இதுதான் இந்த அரசுகள் மக்களை காப்பாற்றும் இலட்சணம். இந்த அநீதிக்கு எதிராக என்ன செய்யப் போகிறோம்?


 கலைமதி
நன்றி : த வயர். 

அந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா ? – ஒரு வேடிக்கைப் பேச்சு

டந்த ஏப்ரல் 28 அன்று கொரோனா தாக்குதலால் ஏற்பட்டுள்ள நிலைமையைப் பற்றி மாநில முதல்வர்களுடன் விவாதித்த பிரதமர் நரேந்திர மோடி, வழக்கத்துக்கு மாறானதொரு பெருமையை உரிமையுடன் கூறிக் கொண்டார். அதாவது, பல நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறும் என்றும், அவற்றை வரவேற்று இந்தியாவில் முதலீடு செய்யவைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, ஏராளமான மனித ஆற்றல், தொழில் திறமை, மேம்பட்ட அடிக்கட்டுமானம் ஆகியவற்றை இந்தியா கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உடனே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “ஒட்டுமொத்த உலகத்தில் சீனாவுக்கும் சீனப் பொருளாதாரத்துக்கும் எதிரான வெறுப்புணர்வு நீடிக்கிறது… அத்தகைய அருவருப்பினூடாக இதுவொரு மகிழ்ச்சியான செய்தி… இந்தியாவுக்கும் இந்திய முதலீட்டாளர்களுக்கும், குறிப்பாக குறுந்தொழில், சிறுதொழில், நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் (micro,small and medium enterprises – MSME) ஒரு நல்வாய்ப்பு… இந்தியாவுக்கு ஒரு நல்வாய்ப்பு; அந்நிய முதலீட்டுக்கு நல்வாய்ப்பு” என்று ஒரு தொலைக்காட்சியில் தொழில் வர்த்தகம் தொடர்பான செய்தியில் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து, “சீனாவிலிருந்து புலம்பெயர ஆலோசித்துவரும் நிறுவனங்களைக் கவர்ந்திழுக்க இந்தியா தனது நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது” என்று நாளேடுகளில் செய்திகள் வெளிவரத் தொடங்கின. உலகளாவிய முதலீடுகளை இந்தியாவில் செய்யுமாறு ஊக்கமளித்தும், இடர்ப்பாடுகளை எளிதாக்கும் கொள்கையையும் ஆயுதமாகக் கொண்டுள்ள “இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்” என்ற இந்திய அரசின் கொள்கையின் மூலமாக, ஏற்கெனவே ஏறத்தாழ 1,000 உலகளாவிய நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

“சீனாவிலிருந்து வெளியேறும் தொழில் – வர்த்தக நிறுவனங்களைக் கவர்ந்திழுக்க, ஐரோப்பாவின் லக்சம்பர்க் நகரத்தைப் போல இரு மடங்கு நிலத்தை அந்நிய முதலீட்டாளர்களுக்கு இந்தியா ஒதுக்கீடு செய்து, அபிவிருத்தி செய்து வருகிறது. …நாடு முழுவதும் 4,61,589 ஹெக்டேர் பரப்பளவுக்கு நிலங்கள் இனங்காணப்பட்டுள்ளன” என்று பிசினஸ் ஸ்டாண்டர்டு நாளேட்டில் ஒரு செய்தித் துணுக்கு வெளிவந்தது. அசாம் மாநிலத்தில் உற்பத்தியைத் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்து, சீனாவிலிருந்து வெளியேற விரும்பும் பன்னாட்டு நிறுவனங்களைக் கவர்ந்திழுக்கத் திட்டமிட்டுள்ளதாக அசாம் மாநில அரசாங்கம் அறிவித்தது.

திடீரென பா.ஜ.க. ஆளும் உ.பி மற்றும் ம.பி அரசாங்கங்கள் அடுத்த நான்காண்டுகளுக்கு ஒரு டஜனுக்கும் மேலான அனைத்து தொழிலாளர் சட்டங்களைக் கிட்டத்தட்ட முடக்குவதாகவும், சில சட்டங்களை முற்றாக ரத்து செய்வதாகவும் அறிவித்தன. ஏனெனில், முதலாளிகள் கடும் சுமையாக உள்ள தொழிலாளர் சட்டங்களைப் பற்றி புகார் கூறினார்களாம்; அவர்களது ஆட்சியின் கீழ் “இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியம்” (தொழிற்சாலைக் கண்காணிப்பாளர்கள் மூலம் சோதிக்கும் முறை) ஓங்குவதால், அது வளர்ச்சியைத் தடுக்கிறதாம்; எனவே, தொழிலாளர் சட்டங்களை முடக்குவதன் மூலம் அரசாங்கம் பல்லாயிரம் கோடி டாலர்களைக் கவர்ந்திழுக்கப் போகிறதாம்.

படிக்க:
மறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் !
♦ பணக்காரர்கள் மீது வரி போடலாம் என்றால் பதறும் அரசு !

அப்படி நடக்குமா என்ன? ஒரு கடுகளவான அந்நிய முதலீடு சீனாவிலிருந்து முட்டிமோதி வெளியேறி இந்தியாவுக்கு வருகிறது என்று வைத்துக் கொண்டால் கூட, அது எனக்கு ஆச்சரியத்தைத்தான் ஏற்படுத்தும். அதற்கான காரணங்கள் இவை:

  1. உண்மையில், எந்த முதலாளியாவது சீனாவிலிருந்து வெளியேறுகிறாரா?

நாடுகள் என்பன, வேறுபட்ட விலையில் ஒரே பொருளை விற்கின்ற பலசரக்குக் கடைகள் அல்ல; நுகர்வோரை ஊக்குவித்து, ஒரு கடைக்குப் பதிலாக வேறு கடைக்கு மாற்றுவதைப் போன்றதுமல்ல என்று பொருளாதாரவாதியும், சீன விவகாரத்தில் நிபுணருமான டாக்டர் சுப்பிரமணியசாமி குறிப்பிடுகிறார்.

ஒரு நாட்டில் முதலீடு செய்வதற்கான இத்தகைய முடிவுகள் உணர்ச்சிவயப்பட்டதல்ல. ஒரு நிகழ்வின் உந்துதலுமல்ல. மாறாக, இவை மிகவும் சிக்கலானவையாகும்.

சீனாவிலுள்ள அமெரிக்க முதலாளிகள் சங்கம் (AmCham China), கடந்த மார்ச் மாதத்தில் தமது சங்கத்தில் அங்கம் வகிக்கும் முதலாளிகளிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இதன்படி, சீனாவில் கொரோனா தாக்குதல் நிலவும் சூழலில், 70 சதவீதத்துக்கும் மேலான நிறுவனங்கள் தங்களது உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி நடவடிக்கைகளை சீனாவிலிருந்து இடம் மாற்றப் போவதில்லை என்றும், சீனாவுக்கு வெளியே அவற்றைத் தொடங்கும் திட்டம் ஏதுமில்லை என்றும் அறிவித்துள்ளன. இதில் வியப்படைய ஒன்றுமில்லை.

அந்நிய முதலாளிகள் சீனாவை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்கள் எனப்படும் இந்த எல்லா அனுமானக் கட்டுக்கதைகளும் பொய்யானது. இதற்கான காரணம் என்ன?

பெருமளவிலான விநியோகச் சங்கிலிகளின் செயல்திறன், தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் மற்றும் உலகத் தரமான அடிக்கட்டுமானம் ஆகியவையே அந்நிய நிறுவனங்கள் சீனாவுக்குச் செல்ல முதன்மையான காரணங்களாகும். மேலும், சீனாவில் மிகப் பெரிய உள்நாட்டுச் சந்தை இருப்பதால்தான் அந்நிய முதலாளிகள் அங்கே செல்கிறார்கள். ஒரு தொற்றுநோய் இதனை மாற்றிவிட முடியாது என்பது மட்டுமல்ல; நடைமுறையில், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் வெளிப்பட்ட சீன அரசின் திறமை ஆகியவற்றையும் பன்னாட்டுக் கம்பெனிகள் பார்த்தன.

சீனாவிலுள்ள அமெரிக்க முதலாளிகள் சங்கத்தின் தலைவரான ஆலன் பீபி, “கொரானா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்குக்குப் பிந்தைய மாதங்களில் சீனா தனது பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்து, குறுகிய காலத்தில் பழைய நிலைக்குக் கொண்டு வந்ததில் பிற நாடுகளைவிட சீனா முன்னணியில் இருந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, எந்தக் காரணங்களுக்காக அந்நிய நிறுவனங்கள் சீனாவை நாடி வந்தனவோ, அந்தக் காரணங்கள் இன்னமும் நீடிக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய மக்கள் அனைவரும் உற்சாகமாக இருப்பதற்காகத்தான், சீனாவிலிருந்து தொழிலும் வர்த்தகமும் வெளியேறி இந்தியாவுக்கு வருகின்றன என்று கூறப்படுகிறதா? ஆனால், இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. உண்மையில், பெருமளவில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ள தானியங்கித் (ஆட்டோமொபைல்) தொழில் போன்ற நிறுவனங்கள், திடீரென சீனாவிலிருந்து கிளம்பி வேறொரு நாட்டில் தம்மை நிறுவிக் கொள்வதென்பது ஒருக்காலும் சாத்தியமே இல்லை. மேலும், ஒருக்கால் சில தொழில் – வர்த்தக நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறினாலும், அவை பிற நாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவுக்குத்தான் வந்தாக வேண்டுமா என்ன?

  1. அந்நிய முதலீட்டாளர்களின் கவனத்தைக் கவரக்கூடிய நாடாக இந்தியா இல்லை

உலகின் முன்னணி 1,000 நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீடு (FDI) பற்றியும், பெருமளவு முதலீடு செய்யப்பட்டுள்ள முதல் 25 நாடுகளின் தரவரிசையைக் கணக்கீடு செய்த பட்டியலையும் ஏ.டி. கியார்னே (A.T. Kearney) என்ற அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ள முன்னணியிலுள்ள முதல் 10 நாடுகள் என்ற வரிசைப் பட்டியலில் முதன்முறையாக 2015-இலிருந்து இந்தியா இல்லாமல் போய்விட்டது. அதேசமயம், தென்கிழக்காசிய நாடுகள் அந்நிய நேரடி முதலீட்டைப் பெறுவதில் முன்னணியில் இருப்பதோடு, கடந்த 2018-இல் அவை 11 சதவீத அளவுக்கு அதிகரிப்பையும் கொண்டுள்ளன. அதன் பிறகு இந்தப் புள்ளிவிவரமானது, தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையால் (DPIIT) கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அது, 2018-19ஆம் ஆண்டில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு சரிவைச் சந்தித்துள்ளதைப் படம் பிடித்துக் காட்டியதோடு, முதன்முறையாக கடந்த ஆறு ஆண்டுகளில் இவ்வாறு நிகழ்ந்துள்ளதையும் வெளிப்படுத்தியது.

இல்லை; இந்தியாவானது அந்நிய முதலீட்டாளர்களைக் கவரக்கூடியதாக இல்லவே இல்லை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இவையனைத்தும் சமமான முக்கியத்துவமுடையவை. இது வெறும் நில ஒதுக்கீடு அல்லது கடுமையான விதிகளைக் கொண்ட தொழிலாளர் சட்டங்களால் ஏற்பட்டதல்ல. மாறாக, சிவப்பு நாடாத்தனம் (கடுமையான விதிமுறைகளைக் காட்டி இழுத்தடிப்பது), மிரட்டிப் பணம் பறிப்பது, கடந்தகால நோக்கிலான பின்னோக்கிய சட்டத் திருத்தங்கள், விதிகளில் மனம்போன போக்கிலான மாற்றங்கள், வரி பயங்கரவாதம், மோசமான உற்பத்தித் திறன், துறைமுகங்களில் பைத்தியக்காரத்தனமான தாமதங்கள், இறையாண்மைக்கு ஆபத்து என்ற பெயரில் தடைகள், இன்னும் பலவாறானவற்றால் உருவானவை.

  1. உள்நாட்டு முதலாளிகளுக்குக்கூட கவரக்கூடிய நாடாக இந்தியா இல்லை

நல்லது. அந்நிய முதலீடு பற்றிய இத்தகைய எல்லா வண்ணமயமான விவாதங்களும் வெறும் வேடிக்கைப் பேச்சுதான். ஏனெனில், இந்திய முதலாளிகள் கூட இந்தியாவில் பெருமளவு முதலீடு செய்ய விரும்புவதில்லை என்பது யாவரும் அறிந்ததுதான். கடந்த ஆறு ஆண்டுகளில் உள்நாட்டில் முதலீடு மிகவும் மந்தமான நிலையில் உள்ளதை பொருளுற்பத்திக்கான இயந்திரச் சாதனங்கள், மின்சார சாதனங்கள், பொறியியல் சாதனங்கள் முதலானவற்றை உற்பத்தி செய்யும் மூலதன அழுத்தம் கொண்ட நிறுவனங்கள் துறையில் நிலவும் மந்தநிலைமைகளே படம் பிடித்துக் காட்டுகின்றன.

உள்நாட்டில் தேவை (demand) மிகவும் குறைந்து வற்றிப்போன நிலைமை, மறுபுறம் ஆலைகள் அதிகத் திறன் கொண்டுள்ள நிலைமை, பொதுத்துறையில் அரசின் மிகக் குறைவான முதலீடு – ஆகியன இதற்குக் காரணங்களாக உள்ளன. இதன் விளைவாக, உள்நாட்டுத் தொழில் – வர்த்தகத்தில் முதலாளிகள் கூடுதலாக முதலீடு செய்வதில் ஊக்கமற்ற நிலைமையே உள்ளது. எவ்வாறாயினும், தனியார் முதலீட்டில் நிலவும் வறட்சியால் இந்திய நாடானது பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய மூன்று அம்சங்களும், குறிப்பாக கடைசி இரண்டு அம்சங்களும் யாவரும் அறிந்தவைதான். நிலைமை இப்படியிருக்க, சீனாவிலிருந்து வெளியேறி அந்நிய முதலீடுகள் இந்தியாவுக்கு வரும் என்ற நம்பிக்கை எங்கிருந்து வருகிறது? அதேபோல, பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளின் நடவடிக்கைகள் எங்கிருந்து ஊற்றெடுக்கின்றன?

படிக்க:
காயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா ? பெருமையா ?
♦ திருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் !

இது, கொரோனா தாக்குதலை எதிர்கொள்ள அரசாங்கம் எத்தகைய திட்டங்களைச் செயல்படுத்துகிறது என்ற கேள்விகளையும் நிர்பந்தங்களையும் தடுக்கும் நோக்கத்துடன், ஊடகங்கள் மூலம் பரபரப்பான செய்திகளை வெளியிட வைத்து, பொருத்தமற்ற செய்திகளின் பின்னே நாட்டு மக்களை ஓடவைக்க அரசியல்வாதிகள் கையாளும் உத்தியாகவே தெரிகிறது. இது, பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. அந்நிய நேரடி முதலீடுகள் சீனாவிலிருந்து புலம்பெயரப் போவதாகவும், இதுவொரு நல்வாய்ப்பாக அமையும் என்றும் அவர் மாநில முதல்வர்களிடம் கூறினார். இருப்பினும், இதற்கு எந்த அடிப்படையும் இல்லை. ஆனால், பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் உடனே களத்தில் குதித்தன. இதேபோன்ற கூச்சலை எழுப்பி பக்கமேளம் வாசிக்கத் தொடங்கின.

இங்கே ஒரு சுவையான முரண் உள்ளதை நாம் கவனிக்கத் தவறிவிடக் கூடாது. கடந்த 2014-15ஆம் ஆண்டின் அந்நிய நேரடி முதலீடுகளின் எண்ணிக்கையை வைத்து பெருமிதம் கொண்ட பிரதமர், மகிழ்ச்சியில் பூரித்துப் போனார். அதன் பிறகு, அந்நிய முதலீடுகளின் எண்ணிக்கையில் தொய்வு ஏற்பட்டபோது, அரசின் சாதனைப் பட்டியலிலிருந்து அந்நிய நேரடி முதலீடு பற்றிய செய்திகள் கைவிடப்பட்டன. முட்களால் மூடப்பட்டிருக்கும் இந்தப் பாதையில் சென்று, கூடுதலாக அந்நிய நேரடி முதலீட்டைக் கவர்ந்திழுக்க மத்திய அரசின் பல்வேறு அமைச்சர்கள் முயற்சித்து தோல்வியடைந்துள்ள நிலையில், சீனாவிலிருந்து வெளியேறுவதாகச் சொல்லப்படும் அந்நிய நேரடி முதலீடுகளைக் கவர்ந்திழுக்க, இப்போது மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

– புதியவன்

(11.5.2020 தேதியிட்ட பிசினஸ் ஸ்டாண்டர்டு ஆங்கில நாளேட்டில் தேபஷிஸ் பாசு எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

காயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா ? பெருமையா ?

0

ந்த நாட்டின் தற்போதைய காலத்தின் வரலாறு எழுதப்படும்போது, ஒரு நெருக்கடியை நிர்வகிப்பதில் தற்போதைய ஆட்சியின் தோல்வியை மட்டும் அது பதிவு செய்யாது; அரசாங்கத்தின் எவ்வித உதவியும் இன்றி, நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற எளிய மக்கள், தொழிலாளர்கள், குழந்தைகள் மற்றும் பெண்களின் போராட்டங்களையும் அது பதிவு செய்யும்.

அப்படிப்பட்ட பல கதைகளில், தைரியமும் விடாமுயற்சியும் கொண்ட ஜோதி குமாரியின் கதையும் ஒன்று. பீகாரின் தர்பங்காவைச் சேர்ந்த 15 வயதான ஜோதி குமாரி, காயமடைந்த தனது தந்தையை சுமந்து ஹரியானாவின் குர்கானில் இருந்து தனது கிராமத்திற்கு 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்திருக்கிறார்.

ஜோதியின் தந்தை மோகன் பாஸ்வான் கடந்த 20 ஆண்டுகளாக குர்கானில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். ஜனவரி 26 அன்று, அவர் ஒரு சாலை விபத்தை சந்தித்து காயமடைந்தார். அதைத் தொடர்ந்து ஜோதி மற்றும் அவரது தாயார் அவரை கவனித்துக்கொள்வதற்காக ஜனவரி 31 அன்று குர்கானுக்கு வந்தனர்.

ஜோதியின் தாயார், ஃபுலோ தேவி, அங்கன்வாடியில் சமையல்காரராக பணிபுரிவதால், அவரால் குர்கானில் 10 நாட்களுக்கு மேல் தங்க முடியவில்லை. மோகனைக் கவனிப்பதற்காக ஜோதியை அங்கேயே விட்டுவிட்டு, அவர் தர்பங்காவுக்குத் திரும்பினார்.

அனைத்தும் வழக்கமாக சென்றுகொண்டிருந்தது, மோகனும் குணமாகி வந்தார். அப்போது திடீரென்று கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக மார்ச் 24 அன்று தேசிய அளவிலான ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தொடக்கத்தில், மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தின் முடிவில், ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. பின்னர், மூன்றாவது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது, தற்போது, நாம் நான்காவது கட்டத்தில் இருக்கிறோம்.

படிக்க:
மறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் !
♦ “அவர்கள் எங்களை கைவிட்டு விட்டார்கள்” தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் !

மோகன் பாஸ்வானைப் போல, ஊரடங்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான இடம்பெயர் தொழிலாளர்களை பாதித்தது. அவருக்கு வருமான ஆதாரங்கள் எதுவும் இல்லை, இருந்த உணவுப் பொருட்களும் தீர்ந்துகொண்டு வந்தன. அவர்கள் வாடகை செலுத்த பணம் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டது.

“ஊரடங்குக்குப் பிறகு சிக்கல்கள் அதிகரித்தன” என்கிறார் ஜோதி. “எங்கள் வீட்டு உரிமையாளர் எங்களை தங்கியிருந்த அறையிலிருந்து வெளியேற்ற விரும்பினார். நாங்கள் வாடகை செலுத்தாததால் அவர் இரண்டு முறை மின் இணைப்பையும் துண்டித்து விட்டார். நாங்கள் உணவில்லாமல் இருந்தோம். நாங்கள் எதை சாப்பிட முடியும்? அப்பாவுக்கு எந்த வருமானமும் இல்லை, எனவே எப்படியாவது வீடு திரும்ப வேண்டும் என முடிவு செய்தோம்”

மே 8 ஆம் தேதி, ஜோதி குர்கானில் இருந்து தனது சைக்கிளில் தந்தையை பின்னால் அமர வைத்துக்கு கிளம்பினார். நடுவில் ஒரு லாரி ஓட்டுநர் அவர்களுக்கு ஒரு குறுகிய தூரத்தை கடக்க உதவியைத் தவிர, தனது கிராமத்துக்கு திரும்பும் முழு தூரத்தையும் சைக்கிள் மிதித்தே வந்தார்.

மே 17 அன்று இரவு 9 மணியளவில் அவர்கள், 10 நாட்கள் பயணத்திற்குப் பிறகு சிர்ஹுல்லியை அடைந்தனர். “டிரக் டிரைவர் எங்களுக்கு சிறிது தூரம் ஒரு லிப்ட் கொடுத்தார், ஆனால் அவர்கள் வேறு பாதையில் செல்வதால் நாங்கள் கீழே இறங்க வேண்டியிருந்தது”

மோகன் தற்போது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருக்கிறார், ஜோதி வீட்டில் இருக்கிறார். மே 17 அன்று முசாபர்பூரை அடைந்ததும், ஜோதி தனது குடும்பத்தினரிடம் இரவில் வீட்டிற்கு வருவதாக அறிவித்தார். மற்ற கிராமங்களைப் போலவே, சிர்ஹுல்லியில் உள்ளவர்களும் கொரோனா வைரஸைப் பார்த்து பயப்படுகிறார்கள், வெளியில் இருந்து யாரையும் கிராமத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. அந்த நாளில் வேறு சிலரும் ஊருக்கு வந்த நிலையில், இவர்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

தனது சைக்கிள் பயணத்தைப் பற்றி பேசும் ஜோதி, “நான் ஒவ்வொரு நாளும் 100 கி.மீ.க்கு மேல் சைக்கிள் ஓட்டினேன். நாங்கள் ஒரு பெட்ரோல் பம்பில் நிறுத்தி, அங்கே இரவைக் கழித்துவிட்டு, மறுநாள் காலையில் எங்கள் பயணத்தைத் தொடங்குவோம். நாங்கள் நிறுத்திய அனைத்து பெட்ரோல் பம்புகளிலும், மக்கள் எங்களுக்கு உணவு மற்றும் பானங்களை வழங்கினர். அவர்கள் எங்களை நன்றாக நடத்தினார்கள்”

படிக்க:
குஜராத்திலிருந்து உத்தர பிரதேசம் கிளம்பிய தொழிலாளி வீடு சேரும் முன் உயிரிழந்தார்
♦ திருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் !

மோகன் பாஸ்வானுக்கு எந்த நிலமும் இல்லை. இவருக்கு மூன்று மகள்களும் இரண்டு மகன்களும் உள்ளனர். ஒரு மகள் ஜோதியை விட மூத்தவள், மற்றவர்கள் இளையவர்கள்.

தன் தந்தையுடன் சைக்கிளில் வீட்டிற்குச் செல்லும் எண்ணம் எப்படி வந்தது? “வீட்டில் எந்த உணவுப் பொருட்களும் இல்லை, மக்கள் நடைப் பயணமாக, மிதிவண்டிகளில் வீடு திரும்பும் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வீட்டு உரிமையாளர் எங்களை வெளியே தூக்கி எறிந்தால், எங்களுக்கு தங்குவதற்கு இடமும் சாப்பிட ஒன்றும் இருக்காது என்று நான் பயந்தேன்”என்கிறார் ஜோதி.

“நான் என் தந்தையிடம் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக சொன்னபோது, அவர் ஒப்புக் கொள்ளவில்லை. என்னால் அதை சமாளிக்க முடியாது என அவர் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார்” என தொடர்ந்தார் ஜோதி.

மோகனுக்கு சந்தேகம் இருந்திருக்கலாம், ஆனால் ஜோதி நம்பிக்கையுடன் இருந்தார். “நான் கிராமத்தில் இருந்தபோது, அதிகமாக சைக்கிள் ஓட்டுகிறேன். தந்தை வீட்டுக்கு வரும்போது, நான் அவரை அமர வைத்து சைக்கிள் ஓட்டுவேன். எனவே, நான் அதற்குப் பழகி விட்டேன். அதனால் அவரை பாதுகாப்பாக கிராமத்திற்கு அழைத்துச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. என் தந்தை என்னை ஒரு மகனைப் போலவே நடத்துகிறார், எனவே ஒரு மகன் என்ன செய்வானோ அதை செய்ய நினைத்தேன்”

சாலை விபத்துக்குப் பிறகு, மோகன் பாஸ்வானால் வேலை செய்ய முடியவில்லை. “ஆட்டோவின் உரிமையாளர் எங்களை அழைத்து கணவரின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் தரமுடியாது என கூறினார்” என ஃபூலோ தேவி கூறுகிறார்.

“ஆகவே, நான் ரூ. 38,000 வங்கிக் கடனை எடுத்து ஜனவரி 31 அன்று குர்கானுக்குச் சென்றேன். இதில் குறிப்பிட்ட பணம், அவரது சிகிச்சைக்காக செலவிடப்பட்டது. மீதமுள்ளதை நான் ஜோதிவிடம் ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பினேன்”

“இதற்கிடையில், நான் ஒவ்வொரு மாதமும் எனது சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை அனுப்பிக் கொண்டிருந்தேன், ஆனால் ஊரடங்குக்குப் பிறகு இது கடினமாகி விட்டது. நான் இதைப் பற்றி அவர்களிடம் கூறினேன்” என்கிறார் அவர்.

“ஜோதி என்னிடம் சைக்கிளில் வீடு திரும்ப இருப்பதாகக் கூறினாள். ஆரம்பத்தில், நான் அவளை அனுமதிக்க மறுத்துவிட்டேன், ஆனால் வேறு வழியில்லை” என்று அவர் கூறுகிறார்.

ஜோதி வீடு திரும்பிய சைக்கிள் மே 8 அன்று வாங்கப்பட்டது. “அருகில் வசித்த ஒரு அறிமுகமானவரிடமிருந்து நான் அதை வாங்கினேன்” என ஜோதி நினைவு கூர்ந்தார். “அவர் அந்த சைக்கிளுக்கு ரூ. 1,600 கேட்டுக் கொண்டிருந்தார். மத்திய அரசு வங்கியில் போட்ட ரூ. 1,000 பணத்திலிருந்து அவரிடம் ரூ. 500 கொடுத்துவிட்டு, மீதமுள்ளதை பின்னர் கொடுப்பதாகக் கூறினேன். கொடுத்ததுபோக மீதியிருந்த 500 ரூபாயுடன் தந்தையை அழைத்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பினேன்”

கடினமான பயணத்தைத் தவிர, தனது தந்தையை அமர வைத்து அழைத்து வந்ததைப் பார்த்து கேலி செய்தவர்களை சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது என ஜோதி கூறுகிறார். “அப்பா பின்னால் அமர்ந்திருக்கும்போது ஒரு மகள் சைக்கிளில் சவாரி செய்வதைக் கண்டதால் மக்கள் எங்களை கேலி செய்கிறார்கள். இதுபோன்ற விஷயங்களைக் கேட்கும்போது அப்பா வருத்தப்படுவார், ஆனால் அவர் காயமடைந்திருக்கிறார் என மக்கள் அறியமாட்டார்கள் என்பதால் கவலைப்பட வேண்டாம் என்று நான் அவரிடம் சொன்னேன்” என்கிறார் அவர்.

“என் அப்பாவின் காயங்களைப் பற்றி எனக்குத் தெரிந்ததால் அவர்கள் எங்களை கேலி செய்தார்கள் என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல. அந்த மக்களுக்கு தெரியாது” என்கிறார் ஜோதி.

நீண்ட மற்றும் கடினமான பயணம் ஜோதியை சோர்வடைய வைத்துள்ளது. “அவள் திரும்பியதிலிருந்து, அவள் உடல் வலி பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவள் சோர்வாக இருக்கிறாள், தூங்க விரும்புகிறாள்” என ஜோதியின் தாய் கூறுகிறார்.

ஜோதி குமாரி எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். “எனக்கு படிப்பது பிடிக்கும், எங்கள் நிதி நிலைமை அதற்கு உகந்ததாக இல்லை” என்று அவர் கூறுகிறார். “நான் பள்ளிக்குச் சென்றால், நாங்கள் நிதி நெருக்கடியை எதிர் கொள்வோம். எனவே, நான் ஒரு வருடம் முன்பு பள்ளியை விட்டு நின்று விட்டேன். ஆனால், நான் மேலும் படிக்க விரும்புகிறேன். யாராவது எனக்கு உதவி செய்தால், நான் படிப்பேன்”

ஜோதி குமாரியின் கதை ஊடகங்களில் வெளியான பிறகு, அவருடைய அவல நிலை மகிமைப் படுத்தப்பட்டது. ஜோதியையும் அவரைப் போன்ற லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் இந்த நிலைக்குத் தள்ளிய அரசாங்கத்தின் கையாலாகத்தனத்தை கேள்விக் கேட்பதைத் தவிர்த்து, ஜோதியின் சைக்கிள் ஓட்டும் ‘திறமை’யை விதந்தனர். சைக்கிள் ஓட்டும் பயிற்சிக்கு வந்து, இந்தியாவுக்கு பதக்கம் வாங்கித்தர அழைத்தது சைக்கிள் ஃபெடரேசன். அமெரிக்க அதிபரின் மகள், ஜோதியைப் பார்த்து இந்தியாவே பெருமைப்பட வேண்டும் என்றார்.

ஆனால், எளிய பெண்ணான ஜோதிக்கு தனக்கு எது தேவை என தெரிந்திருக்கிறது. இவர்களின் வெற்று கைத்தட்டல் ஒன்றுக்கும் உதவாது என ஒதுக்கிய அவர், தனக்கு படிப்பு கிடைத்தால் போதும் என கூறிவிட்டார். ஜோதிக்கு படிப்பாவது கிடைத்தது, மற்றவர்கள் இந்த ஆட்சியாளர்களால் 60 நாட்களுக்குப் பிறகும் நடந்தபடியே இருக்கின்றனர்.


கட்டுரையாளர் : உமேஷ் குமார் ரே

தமிழாக்கம் : கலைமதி
நன்றி : த வயர். 

மறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் !

லகை அரசியல், பொருளாதார ரீதியில் மேலாதிக்கம் செய்து வருகின்ற ஒரே ஒரு மேல்நிலை வல்லரசான அமெரிக்காவின் வலிமையும் செல்வாக்கும் கடந்த பத்தாண்டுகளாக குறைந்து வருகிறது. அமெரிக்காவை எதிர்க்கின்ற சக்திகளின் பலமும் குரலும் அதிகரித்துக் கொண்டு வருகின்றன.

ஆசியாவில் வடகொரியா, மத்திய கிழக்கில் ஈரான், தென்னமெரிக்காவில் வெனிசுலா என எதிரணி வலுத்துக்கொண்டு வருகிறது. அதன் நெருங்கிய கூட்டாளிகளான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்தே குறிப்பாக ஜெர்மனி, ஃபிரான்சு ஆகிய நாடுகளிடமிருந்து தொழில், வர்த்தகப் போட்டியும் வரிவிதிப்புகளும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. நேட்டோவின் மீதான அமெரிக்க நாட்டாமையை எதிர்த்து ஃப்ரான்சின் குடியரசுத் தலைவர், பகிரங்கமாக டிரம்பை மேடையில் வைத்துக்கொண்டே தாக்கிப் பேசியதும் அண்மை ஆண்டுகளில் அமெரிக்கா சந்தித்துவரும் அவலங்கள்.

கொரோனா கிருமித்தொற்றின் பரவலைத் தடுக்கக் கூடத் தகுதியற்று உலகிலேயே அதிகம் பேர் கொரோனா தொற்றால் இறந்த நாடாக அமெரிக்கா மாறியிருக்கிறது.இது அமெரிக்க அரசின் அருகதையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

அதுமட்டுமல்ல, அமெரிக்காவின் பொருளாதாரக் கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கி மந்தத்தை (Depression) நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. நான்கு கோடி பேர் வேலையின்றித் தவிக்கின்றனர். அதன் பொருளாதார வளர்ச்சி 4 சதவீதம் விழுந்துவிட்டது. நெருக்கடியில் இருந்து தப்பிக்க வழிவகையின்றி நிற்கிறது அமெரிக்கா. இந்நிலையில் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க மேல்நிலை வல்லரசின் சரிவையும் தனது ஆட்சியின் தோல்வியையும் மறைக்க சீன எதிர்ப்புவெறியை அன்றாடம் கிளறிவிட்டுக் கொண்டிருக்கிறார்.

மேலும், அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்துக்கு தொழில், வர்த்தகம், முதலீடுகள், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் சீனா கடும் போட்டியாளராக வளர்ந்துள்ளது. இத்துறைகளில், சீனாவின் திறனுக்கு முன் நிற்க முடியாமல் பின்தங்கியுள்ள அமெரிக்கா, தனது செல்வக்கைத் தொடர்ந்து இழந்து வருகிறது. எனவே, சீனாவின் முதலீடுகளை நிராகரித்தல், சீனப் பொருட்களின் மீதான வரிகளை உயர்த்துதல், சீனத்தின் நவீனத் தொழில்நுட்பங்களை அமெரிக்காவிற்குள் நுழையவிடாமல் செய்தல் என அமெரிக்கா பனிப்போர் நடத்தி வருகின்றது.

தனது அமெரிக்க எஜமானனின் உத்தரவுப்படி இந்தியத் தரகு அதிகார வர்க்க பெருமுதலாளிகளின் பெரும்பிரிவினரும் அவர்களின் அரசியல் அடியாளான ஆர்.எஸ்.எஸ். –  மோடி அரசும் தீவிர சீன எதிர்ப்பு-புறக்கணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். புவிசார் போர்த்தந்திரரீதியில், அமெரிக்காவின் தெற்காசிய பிராந்திய அடியாளாகவும் இந்தியா செயல்பட்டு வருகின்றது. இன்னொரு பக்கம், தனது பொருளாதார நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு கட்டுமானச் சீர்த்திருத்தங்களைச் செய்வதில் மோடி அரசு மேலும் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏற்கெனவே, மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த, இந்தியப் பொருளாதாரம் கொரோனா கிருமித் தாக்குதலை ஒட்டிய ஊரடங்கின் விளைவாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் மூழ்கிவிட்டது. இந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 0% தான்  இருக்குமென்று நிபுணர்கள் சொல்கின்றனர்.

நெருக்கடிக்குத் தீர்வாக மோடி அரசு, தனியார்மய-தாராளமய-உலகமயக் கட்டுமானச் சீர்த்திருத்தங்களை மேலும் தீவிரமாக மேற்கொள்வதைத்தான் முன்வைக்கிறது. புதிய தாராளவாதக் கட்டுமானச் சீர்த்திருத்தங்களை வளர்ச்சிக்கான சிறந்த வழி என்று பெருமையடித்துக் கொண்டு அமுல்படுத்துவது; அதில் நெருக்கடி ஏற்பட்டால், அதற்குக் காரணம் கட்டுமானச் சீர்த்திருத்தங்களை அரைகுறையாகவும் ஒருசில துறைகளிலும் மட்டும் அமுல்படுத்தியதே என்று சொல்லி, தீர்வாக புதுப்புதுத் துறைகளுக்கும் முழுமையாகவும் இன்னும் தீவிரமாக அமுல்படுத்துவதே என்று செயல்படுவதும்தான் உலகம் முழுவதும் கையாளப்பட்டு வருகிறது.

இதே சறுக்குப் பாதையைத்தான் மோடி அரசும் பின்பற்றப் போகிறது என்பதை 13-05-2020 அன்று 20 இலட்சம் கோடி ரூபாய் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்த போது பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

படிக்க:
இந்திய கொரோனா நிலவரம் : வாயில் வடைசுடும் மோடி அரசு !
♦ திருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் !

கொரோனா தாக்குதலால் ஏற்பட்டுள்ள நிலைமைகளைப் பற்றி ஏப்ரல் 28-ம் தேதி நான்காவது முறை மாநில முதல்வர்களுடன் விவாதித்த மோடி தனது அறிவிப்பில் முக்கியமான ஒரு செய்தியை உற்சாகமாகக் குறிப்பிட்டார். அதாவது, பல வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறப் போகின்றன என்றும் அவற்றை ஒன்றுவிடாமல் வரவேற்று இந்தியாவில் முதலீடு செய்யவைத்து இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்றப் போவதாகவும் அறிவித்தார். அவரது பேச்சின் உட்கிடக்கை அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் தரகு அதிகாரவர்க்க முதலாளியப் பிரிவினரின் உள்ளக்கிடக்கையாகும். 2020 ஏப்ரல் மாதத்திற்கு முன்பே இந்தியாவில் எச்.டி.எஃப்.சி. நிறுவனத்தின் 1%க்கும் மேற்பட்ட பங்குகளை சீன நிறுவனம் வாங்கியதை மோடி அரசு சாதாரணமாகப் பார்க்கவில்லை. சீன நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு என்று பார்த்த மோடி அரசு இந்தியாவோடு நில எல்லை ரீதியாக தொடர்பு கொண்டுள்ள ஏழு நாடுகளில் உள்ள சீன நிறுவனம் எதுவும் இந்தியாவில் அன்னிய நிறுவன முதலீடுகள் செய்ய தடை விதித்தது.

இன்னொருவகையில் பார்த்தால், மருந்து, எலெக்ட்ரானிக்ஸ் போன்ற சில துறைகளில் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் கச்சாப் பொருட்கள், இடைநிலை உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றை நம்பியே இந்தியப் பொருளாதாரம் இருக்கிறது. உலகின் உற்பத்திக் கூடமாக (Manufacturing Hub) சீனா வளர்ந்திருப்பதை இந்திய ஆளும் வர்க்கங்களால், குறிப்பாக, அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் அடிவருடிக் குழுவினரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தியாவில் சீன முதலீடுகளைத் தடுப்பது, சீனப் பொருட்களை இந்தியாவிலும் அண்டைநாடுகளிலும் விற்பதை ஒழிப்பது, அந்த இடத்தைக் கைப்பற்றிக் கொள்வது என்ற பேராசையுடன் இந்திய ஆளும் வர்க்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா கிருமித் தாக்குதலை ஒட்டி சீனா மீது அமெரிக்கா தொடுத்துவரும் தாக்குதல் – புறக்கணிப்பை அமெரிக்காவுடன் அடிபணிந்து நெருக்கமாக்கிக் கொள்வதன் மூலம் தனது இந்த நோக்கத்தைச் சாதித்துவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறது.

சீனாவில் செயல்பட்டுவரும் மருத்துவத்துறைக் கருவிகளைத் தயாரிக்கும் அமெரிக்க பன்னாட்டுக் கம்பெனியான அப்பாட் லேபரேட்டரீஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்கள், தங்களது உற்பத்தி நிலையங்களை இந்தியாவிற்குக் கொண்டுவந்து அமைக்க வேண்டுமென்று அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகளிடமும் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டிரம்ப்பிடமும் பணிவுடன் கேட்டு வருகிறது மோடி அரசு. வெளியில் பெயர் சொல்ல விரும்பாத, இந்திய அதிகாரிகள் வட்டம் சொல்வது என்னவென்றால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கக் கம்பெனிகளிடமும் வெளியுறவுத்துறை உட்பட, இந்திய அரசின் நிறுவனங்கள் மூலமும் சீனாவில் இருந்து வெளியேற இருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிற்கு வரவேண்டுமென்று ஏப்ரல் மாதத்திலேயே இந்திய அரசு கேட்டு வருகின்றது. மருத்துவத்துறை உபகரணங்களை அளிப்பவர்கள், உணவுப் பதப்படுத்தும் கம்பெனிகள், ஜவுளி, தோல், தானியங்கித்துறைப் பொருட்கள் உட்பட, 500-க்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் கம்பெனிகளிடம் விவாதங்கள் நடந்துள்ளன.

மோடி அரசைப் பொருத்தவரையில் கொரோனா ஊரடங்கால் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிகர உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 15% ஆக உள்ள பொருள் உற்பத்தித்துறையின் பங்கை 2022-ல் 25% ஆக உயர்த்த வெளிநாட்டு முதலீடுகள் மிகவும் தேவை என்று பார்க்கிறது. கொரோனா தொற்றுநோய் காரணமாக 12.2 கோடி மக்கள் வேலையிழந்துள்ளனர். எனவே, வேலைவாய்ப்பை உருவாக்குவது உடனடி அவசியமாகவும் உள்ளது.

படிக்க:
வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) – முதலாளித்துவத்தின் நவீன சுரண்டல் முகம்
♦ பணக்காரர்கள் மீது வரி போடலாம் என்றால் பதறும் அரசு !

தெற்கு மற்றும் தென்கிழக்காசியப் பகுதிகளில் இந்தியா கடுமையான போட்டியைச் சந்தித்து வருகிறது. இந்தப் போட்டியில் நின்று வளரவேண்டுமானால், அடிக்கட்டுமானத் துறையிலும் நிர்வாகத்துறையிலும் பெரிய முன்னேற்றங்களைக் கொண்டுவர நிறைய முதலீடுகள் தேவையாக உள்ளன. இப்படிச் செய்வதன் மூலமே உலக விநியோகச் சங்கிலியில் இந்தியா தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்க முடியும் என்று முதலாளித்துவப் பொருளாதார வல்லுநர்கள், நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், முதலீடுகளை ஈர்க்க வழக்கமாக புதிய தாராளவாத சித்தாந்தவாதிகளும் பொருளாதார நிபுணர்களும் பரிந்துரைப்பது என்னவென்றால், எந்தப் புதிய தாராளவாதக் கட்டுமானச் சீர்த்திருத்தங்கள் (தனியார்மய-தாராளமய-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள்) பொருளாதாரப் படுகுழியில் தள்ளியுள்ளனவோ, அந்தக் கட்டுமானச் சீர்த்திருத்தங்களை இன்னும் அதிகமாகவும் முழுமையாகவும் மேற்கொள்ள வேண்டுமென்பதே அது.

குறிப்பாக, இந்தியாவைப் பொருத்தவரையில், நிலங்களைக் கையகப்படுத்துவது, தொழிலாளர் நலச்சட்டங்கள், வரிவிதிப்பு ஆகிய துறைகளில் சீர்த்திருத்தங்கள் செய்வது கட்டாயம் என்று தற்போது மோடி அரசு கருதுகிறது. குறிப்பாக, நடப்பில் இருக்கின்ற தொழிலாளர் நலச்சட்டங்கள் தான் புதிய முதலீடுகள் வருவதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளன என்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே கூறிவருகின்றனர். அதேபோல, இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் பரிமாற்ற வரியை நீக்க வேண்டுமென இ-வணிக நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.

தொழிலாளர் நலச்சட்டங்கள் மற்றும் வரிவிதிப்பு முறைகளில் தங்களுக்குச் சாதகமாக என்னென்ன மாற்றங்கள், சலுகைகள் கொண்டுவர வேண்டுமென்ற தங்களது விருப்பங்களை விரிவாக முன்வைக்குமாறு அமெரிக்கக் கம்பெனிகளிடம் இந்தியாவின் வர்த்தக அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது என அந்த அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும், நீண்டகால நோக்கில் என்னென்ன தீர்வுகளை முன்வைக்கலாம் என்று மத்திய அரசு மாநில அரசுகளிடம் ஆலோசித்து வருகிறது. குறிப்பாக, கம்பெனிகளை உடனடியாக தொடங்குவதற்கு ஏதுவாக தேவையான நிலங்களைக் கையகப்படுத்தி நிலவங்கிகளை உருவாக்க விரைந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. டிரம்ப் பதவிக்கு வந்த பின்னர், அவர் சீனாவுடன் வர்த்தகப் போரை நடத்தத் தொடங்கியதிலிருந்து அமெரிக்கக் கம்பெனிகள் சீனாவைத் தவிர்த்து இந்தியாவிற்கு வரவிரும்பின.

ஆனால், அப்போது மேலே சொன்ன துறைகளில் முதலீட்டாளர்களுக்கு உவப்பான சீர்த்திருத்தங்கள் செய்யப்படாததால் அவை வியட்நாமுக்கும் வேறு நாடுகளுக்கும் சென்றுவிட்டன. இவ்வாறு இழந்ததை மீட்டெடுக்கும் வகையில், அவர்கள் மனம் குளிரும் வகையில், அவர்களின் வேட்கைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் என்னென்ன சீர்த்திருத்தங்கள் வேண்டுமோ அவற்றையெல்லாம் பணிந்து, குனிந்து செய்யக் கைகூப்பி நிற்கிறது பிரதமர் மோடி – நிதியமைச்சர் லேடி கும்பல்.

பாசிச மோடி இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்ததில் இருந்தே டிரம்ப்புடன் நெருக்கமான உறவைப் பேணுவதில் கண்ணுங்கருத்துமாக செயல்பட்டு வந்தார். அப்போதிருந்தே (ஏனென்றால் அப்போதே இந்தியப் பொருளாதாரம் மிகவும் பாரதூரமான, திக்குத்தெரியாத நெருக்கடியில் வீழ்ந்துவிட்டது) அமெரிக்க முதலீடுகளுக்கும் கம்பெனிகளுக்கும் இந்தியாவை அகலத் திறந்துவிட திட்டம் போட்டு செயல்பட்டு வந்தார். டிரம்புடன் சேர்ந்து மோடி அமெரிக்காவிலும் (ஹூஸ்டன்) இந்தியாவிலும் (அகமதாபாத்) நடத்திய பிரம்மாண்ட பேரணிகள், கார்ப்பரேட்டுகளின் வரியைக் குறைத்தது, 300 கோடி அமெரிக்க டாலர்களுக்கு அமெரிக்காவிடமிருந்து இராணுவத் தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் போட்டது, கடைசியாக, ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை உடனடியாக அனுப்பி வையுங்கள், இல்லாவிட்டால் எதிர்நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரம்ப் பகிரங்கமாக உலகறிய மிரட்டல் விடுத்ததை ஒட்டி, அடித்துப்பிடித்துக் கொண்டு அவசர அவசரமாக அவைகளை மோடி அனுப்பி வைத்தது ஆகியவையெல்லாம் இதற்கான முயற்சிகளே.

சீனத்தில் முதலீடு செய்துள்ள கம்பெனிகளைக் கவர்ந்திழுக்க தொழிலாளர் நலச்சட்டங்கள், விவசாய நிலங்களையும் தொழிற்சாலைகள் கட்டவும் பிற பொருளாதார வர்த்தக நடவடிக்கைகளுக்குக் கையகப்படுத்தவும் விதிகளைத் தாராளமாகத் தளர்த்த வேண்டுமென்றும் இவை தொடர்பாக கொள்கைரீதியான முடிவுகளை எடுப்பதோடு, அவற்றில் ஊன்றி நின்று அவை தொடர்ந்து நீடிக்க உத்தரவாதம் அளிப்பதும் மிகமிக அவசியம் என்றும் வல்லுநர்கள் வற்புறுத்துகின்றனர்.

கடற்கரையோர பொருளாதார மண்டலங்களை சீனா நிறுவியது வெளிநாட்டு நிறுவனங்களைக் கவர்ந்திழுப்பதில் முக்கிய பங்காற்றியது என்று நிதி ஆயோக்கின் முன்னாள் தலைவர் அரவிந்த பனகாரியா கூறியுள்ளார். இந்தியாவிற்கோ இந்தோனேசியாவுக்கோ வராமல் வியட்நாமுக்கும் பங்களாதேசத்திற்கும் சீனாவில் இருந்து வெளியேறும் கம்பெனிகள் செல்வதற்குக் காரணம் இந்தியா அளிக்கின்ற சலுகைகளை, ஊக்குவிப்புத் திட்டங்களைவிட தொழில் நடத்துவதற்கு உகந்த சூழ்நிலைகளை, எளிதான சாதகமான விதிமுறைகளை உருவாக்கித் தராததுதான்.

எடுத்துக்காட்டாக, புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு கார்ப்பரேட் வரியாக 17% மட்டுமே விதிக்கிறோம். இந்தச் சலுகை, ஊக்குவிப்பைவிட தொழிலாளர் சந்தை மற்றும் நிலச்சந்தைகளில் முதலீட்டாளர்களின் முகம் சுழிக்கும்படி நமது ஏற்பாடுகள் உள்ளன. தன்னாட்சி பெற்ற வேலைவாய்ப்பு மண்டலங்களை இவர் வலியுறுத்துகிறார். இந்தத் தன்னாட்சி பெற்ற வேலைவாய்ப்பு மண்டலங்கள் ஏறத்தாழ 300 – 350 ச.கீ.மீட்டர் பரப்பளவு கொண்டதாகவும் மிகச்சிறப்பாக செயல்படக் கூடிய நில மற்றும் தொழிலாளர் சந்தைகளை வழங்கவும் எளிதான மற்றும் விரைந்து அனுமதியளிக்க கூடிய சுங்கச் சாவடிகளைக் கொண்டதாகவும் இந்த மண்டலங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்று ஆலோசனைகளை முன்வைக்கும் அரவிந்த பனகாரியா, சீனாவில் ஷென்ஜென் (Shenzhen) பிராந்தியத்தில் தாங்களே வரி, நிலம் மற்றும் தொழிலாளர் நலன் தொடர்பான சட்டங்களை இயற்றிக் கொள்ளும் அதிகாரம் கொண்ட, சுங்கவரியில் இருந்து விலக்கு பெற்ற 300-500 ச.கீ.மீட்டர் கொண்ட தன்னாட்சி கொண்ட வேலைவாய்ப்பு மண்டலங்கள் உள்ளதாகக் கூறியுள்ளார். இப்படிப்பட்ட கடற்கரை ஓர பொருளாதார மண்டலங்களால், நகரத்தில் இயங்கிவரும் கம்பெனிகளின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வைக்க முடிகின்றது என்கிறார்.

முன்பு, தென்கிழக்கு சீனாவில் அமைதியான ஒரு மீன்பிடிக் கிராமமாக ஷென்ஜென் இருந்தது. சுதந்திரப் பொருளாதார மண்டலமாக அதை ஆக்கியதன் விளைவாக இன்று மெட்ரோபாலிடன் பெருநகரமாக மாறிவிட்டது. தனது சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு ஒரு மாடலாக இந்தப் பெருநகரத்தை சீன அரசு காட்டுகிறது. மகாராஷ்டிராவில் உள்ள வாதவான் (Vadhawan) பகுதி, மேற்குவங்கத்தில் உள்ள சாகர் (Sagar) பகுதிகளில் 14 கடற்கரையோர பொருளாதார மண்டலங்களை உருவாக்க இந்தியா திட்டமிட்டிருக்கிறது. தொழில் நடத்துவதை எளிதாக்குவது (Ease of Doing Business) என்பதை இந்தியா உத்தரவாதப்படுத்த வேண்டும். குறிப்பாக, இது தொடர்பான கொள்கை முடிவுகளை பதவிக்கு வருகிற கட்சியின் எண்ணத்திற்கு ஏற்ப மாற்றுவதுதான் பிரச்சினை; அப்படி மாற்றும்போது முந்தைய அரசின் கொள்கைகளால் ஏற்பட்ட விளைவுகளையும் மாற்றங்களையும் புதிய அரசு தனது புதிய கொள்கை காரணமாக மாற்றி அமைக்கின்றது.

இதற்கேற்ப கம்பெனிகள் தங்களது செயல்பாடுகளை மாற்றியமைக்க வேண்டியுள்ளது. இது அவைகளுக்குப் பெருத்த இடையூறுகளையும் தொல்லைகளையும் பாதகங்களையும் ஏற்படுத்துகின்றது. எனவே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கொள்கை முடிவுகளில் எந்த மாற்றமும் ஏற்படாத நிலையை உருவாக்குவது மிகமிக அவசியம் என்று முன்னாள் தலைமை புள்ளியியல் நிபுணர் பிரனோப் சென் கூறியுள்ளார்.

இன்று, உலகளாவிய அளவில் எல்லா நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் உள்ளன. அமெரிக்கா உட்பட பல வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியும் வீழ்ந்துவிட்டன. கீழ்நோக்கிய வளர்ச்சிதான் அதிகரித்து வருகின்றது. அதேவேளையில் சீனாவின் நிகர உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி, ஐ.எம்.எஃப்.-ன் மதிப்பீட்டின்படி 2020-ல் 1.2% இருக்கும். மேலும், சீனாவின் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டுமான அமைப்புகளும் தொழில்நடத்தத் தேவையான எல்லாச் சூழ்நிலைகளும் பன்னாட்டுக் கம்பெனிகளின் மனம் குளிரத்தக்க வகையில் உள்ளன. அந்நாட்டின் வினியோக அல்லது மதிப்புச் சங்கிலியின் அமைப்பு முன்னேறியது.

உலகளாவிய வினியோகச் சங்கிலியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டது. 2020-ல் இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் நிகர உள்நாட்டு உற்பத்தி முறையே -7.2%, -7.0%, -6.5% தான் இருக்கும் என்று ஐ.எம்.எஃப். கணித்துள்ளது. எனவே, இப்படிப்பட்ட சூழ்நிலையில் சீனாவில் இயங்கும் அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பான் போன்ற நாடுகளின் கம்பெனிகள் சீனாவை விட்டு வெளியேறுவதற்கான எந்தத் தூண்டுதலோ, தொழில் வர்த்தக ரீதியான ஆதாயத்திற்கான தர்க்கமோ ஏதும் இல்லை. உலக மேலாதிக்கப் போட்டி எனும் அரசியல் சித்தாந்தக் காரணங்களுக்காக டிரம்ப் எவ்வளவு ஆவேசமாக சீன எதிர்ப்புப் பேசி சீனாவிலுள்ள முதலீடுகளை எடுத்துக்கொண்டு அமெரிக்கக் கம்பெனிகள் வெளியேற வேண்டும் என்று கரடியாகக் கத்தினாலும் அவைகள் வெளியேற எவ்விதக் காரணமும் இல்லை. சீனாவிலேயே தங்களை உறுதியாக நிலைநிறுத்திக் கொள்வதோடு தங்களது இலாப விதிதங்களை தக்க வைத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்றுதான் அவை சிந்திக்கும்.

இந்த எதார்த்தத்தை இந்தியத் தரகு அதிகாரவர்க்க முதலாளிகளும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.-மோடி கார்ப்பரேட்-காவி பாசிசக் கும்பலும் எதிர்கொண்டுள்ளனர். 2019-ல் இரண்டாவது முறையாக மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அவர்கள் எதிர்கொண்டுவரும் இந்த உலகப் பொருளாதார-முதலீட்டுச் சூழ்நிலையயை, இன்று கோவிட்-19 கொள்ளை நோய் பன்மடங்கு தீவிரமாக்கி விட்டுள்ளது. இது அவர்களை தாங்கள் ஏற்கனவே பின்பற்றி வந்த நாட்டை மறுகாலனியாக்கும் புதிய தாராளவாதக் கொள்கைகளையும் அமெரிக்க சார்பு – சீன எதிர்ப்பு நிலையையும் இன்னும் தீவிரமாகக் கொண்டுச் செல்ல நிர்பந்தித்துள்ளது. அவர்கள் முன் நிற்கும் ஒரே வழியும் இதுமட்டுமே.

பன்னாட்டு நிதியாதிக்கக் கும்பல்களும் கார்ப்பரேட்டுகளும் வரி, சுற்றுச்சூழல், தொழிலாளர் சட்டம், நிலம் கையகப்படுத்தும் சட்டம் போன்று பல துறைகளில், முனைகளில் எண்ணற்ற கட்டுமானச் சீர்த்திருத்தங்களைச் செய்ய உத்தரவிடுகிறார்கள். அவற்றை எவ்வித அடிப்படையும் இன்றி அப்படியே ஏற்று அமுல்படுத்தி பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு மட்டுமே உகந்ததாகக் கருதப்படும் வியட்நாம், தாய்லாந்து போன்ற தெற்காசிய நாடுகள் கொடுக்கும் சலுகைகள், காட்டும் பவ்வியம், அடிவருடித்தனம் ஆகியவற்றைக் காட்டிலும் அதிகமாக வழங்கி அவர்களது மனங்களை எந்த அளவிற்கு குளிர்விக்க, குதூகலம் கொள்ளச் செய்ய முடியுமோ அந்த அளவிற்கும் பரிமாணத்திற்கும் செய்ய, எல்லாவற்றையும் துறக்கத் தயாராகிவிட்டார்கள். அதற்கேற்ப எந்த அளவுக்கு மக்களை ஈவிரக்கமற்ற கொடூர முறைகளில் அடக்கி ஒடுக்கி கசக்கிப் பிழிய, மக்கள் தொகையில் 10-15% பேர் மடிந்து மண்ணாகிப் போனால்தான் இது நடக்கும் என்று நன்றாகத் தெரிந்தும் மக்களின் மென்னியை நெறித்துச் சுரண்ட, கொடிய பாசிசச் சட்டங்களைப் போட்டு – சமூகத்தையும் அரசின் எல்லாத் துறைகளையும் பாசிசமயமாக்கி வருகிறார்கள்.

இதன் வெளிப்பாட்டு அறிவிப்புதான் 20 இலட்சம் கோடி மீட்புத்திட்டம். இதற்கு அவர்கள் வைத்துள்ள பெயர், “ஆத்மநிர்பார் பாரத் அபியான் – சுயசார்பு பாரதத் திட்டம்” ஆனால் உண்மையில் அது ஆத்மகுலாம் பாரத் அபியான்சுய அடிமை பாரதத் திட்டம் என்பதே சரி!

– புதியவன்

கட்டுரை ஆதாரங்கள்:

08-05-2020 தேதியிட்ட பிஸினஸ் ஸ்டாண்டர்ட் இதழில் வெளிவந்த கட்டுரைகள்

  • India to attract 1,000 US firms out of China – Blooberg
  • Offer Stable policy regime to woo companies: Experts – BS reporters

திருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் !

3

திருச்சியில் சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் அதிகமாக நடக்கும் சின்னக்கடைவீதி, கல்யாணி கவரிங் பஸ் ஸ்டாப் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள கடைகள் கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக திறக்கவில்லை. தற்போது அறிவித்துள்ள தளர்வின் காரணமாக சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அவர்களிடம் தற்போதைய நிலைமை குறித்து விவாதித்தோம்.

ராணி (வயது:45)

“என் கணவர் இறந்து 20 வருசமாகுது. நான் இளநீர் வியாபாரம் பன்றேன். ரெண்டு மாசமா வியாபாரம் இல்ல. இப்பத்தான் இருவதாயிரத்துக்கு காய் வாங்கி ரெண்டாயிரத்துக்கு வித்தேன். அதயும் காய்க்காரன் வந்து வாங்கிட்டு போயிட்டான். இன்னைக்கு வித்ததே ரெண்டு இளநீதான். பர்சுல நூறூ ரூவாதான் காசு இருக்கு. இன்னும் கொஞ்சம் நேரத்துல போலிசுக்காரன் வந்து எடு எடுனு சொல்லுவான். இந்த நூறு ரூவாய வச்சி வாடக கட்டனும், கரண்டு பில் கட்டனும், காய்கறி வாங்கனும் என்ன பன்றது? இதுல வேற இந்த போலிசு வந்து கடையை போடதனு இளநீயயும், கத்தியயும் துக்கிட்டு போகுது.

500 ரூவா பணத்த கட்டித்தான் வாங்கிட்டு வந்தேன். ரொம்பக் கஷ்டமா இருக்கு. எனக்கு ரெண்டு புள்ளைங்க ஒருத்தன் ஆட்டோ ஒட்டுறான். இப்ப வேலைக்கு போகல. அவனுக்கு பொம்பள புள்ளைங்க இருக்கு. எங்க எல்லாத்துக்கும் இந்த நூறு ரூவா பத்துமா? இதுல வேற ஒருபக்கம் பஸ் டிக்கெட், பால் விலைனு ஏத்துறானுங்க. இன்னொரு பக்கம் சாராய கடையை திறந்து சாவடிக்குறானுங்க. கொரானாவால சாகறமோ இல்லையோ சாரயத்தால சாவறது உறுதி.

மோடியும் எடப்பாடியும் என்ன ஆட்டம் போடுறானுங்க நம்ம கிட்ட போக முடியுமா? போலிசு பந்தோபஸ்து. எல்லா வசதியும் எல்லாம் இருக்குது அவனுங்கல என்ன செய்றது, அவனுங்கள நாலு நாளைக்கு இளநீ வியாபாரம் பண்ண விடனும். நாலு இளநீ வெட்டறதுக்குள்ள நாப்பது பிரச்சனை வந்துடுது, நாம் தான் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறோம். இவனுங்க நம்ம பிரச்சனைய எதுவும் தீர்க்க மாட்டனுங்க அடுத்த முறை ஓட்டு கேட்டு வரட்டும் வெட்டு… தான்.”

சண்முகம், பழ வியாபாரி (வயது:45)

“ரெண்டு மாசமா கடையே போடவிடல. இப்பத்தான் ரெண்டு நாளா கடை போடுறோம். மொத்த வியாபார கடையில 10,000-த்துக்கு 15,000-த்துக்கு சரக்கு எடுப்போம். அதை வித்து அவங்க கடனை அடைச்சிட்டு அதுல மீதி தான் வருமானம். இப்ப கட ஓடவேயில்ல. அடுத்தவன் காசுல கடன் வாங்கி திங்குற மாதிரிதான் எங்க வாழக்கை. அத்தியாவசியப்பொருள், பழம் விக்கலாம்னு சொல்லுறாங்க, ஆனா போலிசு வந்து கடையை மூடுன்னு சொல்லுது. போலிசு வரப்போ மூடிக்குறோம், அப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சி வியாபாரம் பாக்குறம். ரொம்ப சிரமமாத்தான் இருக்கு வீட்டு வாடகை ரெண்டு மாசமாக கட்ட முடியல, பால் டீ குடிக்கிறதயே நிறுத்திட்டோம்.

திடீர்னு ஊரடங்குனு சொல்லுறாங்க கடன் கொடுக்குறவன் கூட கடன் தர யோசிக்கிரான். இருந்த காச வைச்சி ஒரு வாரம் ஓட்டுனோம். அப்புறம் அஞ்சு வட்டிக்கு கடனா வாங்கித்தான் பொழப்ப ஒட்டுறோம். வீட்டுக்காரவங்க வாடகை கேக்குறாங்க. வேலைக்கு போயி தறோம்னு சொல்லி சமாளிக்கிறோம்.

கவர்மெண்டு 1000 ரூவா பணம் கொடுத்துது. அதை வாங்க போனப்ப வண்டிக்கு 500 ரூவா ஃபைன் போட்டு புட்டுங்கிகிச்சு. வியாபாரிகளுக்கு 10,000 கடன் உதவினு அறிவிச்சுருக்கான் நாம போயி கேட்டா எந்த பேங்குல தருவான். எவனும் தரமாட்டன். கேட்டா வருமான வரி, பான் கார்டு இருக்கா, என்ன வருமானம் அப்படினு ஆயிரம் கேள்வி கேட்பான். அரசியல்வாதி திட்டத்த அறிவிக்கிறது எல்லாம் கவர்ச்சிக்கு தான் அடுத்த முறை ஒட்டு வாங்கத்தான். நமக்கு ஒன்னும் கிடையாது.”

கெஜலட்சுமி (வயது 32)

“வீட்டு வேலை செய்யுறேன். ரெண்டு மாசமா அப்பார்ட்மெண்டுக்கு வேலைக்கு போகல. கொரானா பயத்துல வர வேணாம்னு சொல்லிட்டாங்க. வார்த்தையால சொல்ல முடியல அந்த அளவுக்கு கஷ்டத்த அனுபவிச்சிட்டோம். இப்படி ஒரு நெருக்கடி இதுவரைக்கும் பார்த்தது இல்லை. 1000 ரூபாய் காசு எம்மாத்திரம். கூலி வேலைக்கு போறவங்க எதை வைச்சி சாப்பாடுவாங்கனு தெரியவேணா. வீட்டு வாடகை, குழுக்கடன் எப்படி கொடுக்க போறேனு நினச்சாவே தூக்கம் வர மாட்டங்குது.”

படிக்க:
இந்திய கொரோனா நிலவரம் : வாயில் வடைசுடும் மோடி அரசு !
♦ விகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை !

உஷா

“கணவர் பெயிண்ட் அடிக்குற வேல… அன்னாடம் வேலைக்கு போனாதான் காசு. இப்ப ரொம்ப கஷ்டம். 40 நாளா குடிக்காம அவரும் நிம்மதியாக இருந்தாரு, நாங்களும் நிம்மதியா இருந்தோம், பிள்ளைங்களோடயும் பாசமாக இருந்தாரு. சாரய கடைய திறக்கிறாங்கனு சொன்னவுடனேயே பிள்ளைங்க அழுதுடுச்சி. மறுபடியும் அவரு யார் கிட்டயோ கடன் வாங்கி குடிச்சிட்டு வந்துட்டாரு. மக்களுக்கு நல்லதே செய்யாதா கவர்மெண்ட் எதுக்கு? இப்படி ஏழைகள போட்டு கஷ்டப்படுத்துது.

ஸ்டாலின் கட்சி காரங்க 5 கிலோ அரிசி கொடுத்தாங்க அதுவும் நல்லா இல்ல. ஏதோ கிடச்சதுனு தின்னோம். குழம்புக்கு காசு இல்லை. துவையல், புளிரசம், தக்காளி கடஞ்சி திங்கிறோம். 1000 ரூபாய் டீ செலவுக்கே சரியா போயிடுச்சி. இவங்கள கேக்க ஆளே இல்லையா, மோடியாலயும் நமக்கு எதுவும் இல்லை. எடப்பாடியாலயும் புண்ணியமில்லை.”

ஊரடங்கால் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தள்ளுவண்டிக் கடைகள்.

ரேவதி (வயது 40)

“கோயில் வாசால்ல பூ கட்டி விக்கிறேன். கோயில் மூடியதால வேலைக்கும் வழியில்லாமல் போய்டுச்சு. இந்நேரம் ஏப்ரல் தொடங்கி எங்களுக்கு நல்லகாலம். திருவிழா, பண்டிகைன்னு நிறைய வேலை கிடச்சிருக்கும். நம்பி கடன் வாங்கலாம் வியாபாரம் பண்ணி அடைச்சிக்கலாம்னு நினச்சோம் ஆனால் கடனாளி ஆயிட்டோம். ஜூன் மாதம் பொறந்தா பள்ளிகூடம் பீஸ் கட்டனும், லாக்டவுன் முடிஞ்சா குழுக்கடன் கட்டனும். வீட்டுல இருந்தா கடன் கட்ட முடியுமா. கவர்மெண்ட் அரிசியை மாடு கூட திங்காது. மோசமான கவர்மெண்டுங்க… போராடுனாலும் ஒன்னும் செய்யமாட்டான். நம்ம கஷ்டத்த நாம தான் பாத்துக்கனும்.”

செல்வி அயனிங் வண்டி

“துணி அயனிங் தரவங்க மாடி வீட்டுல இருக்காங்க. 2 மாசமா துணி கேட்டதுக்கு வீட்டுக்கு வரவேண்டாம் நாங்க கூப்பிடறப்ப வாமான்னு சொல்லிட்டாங்க. துணியை தேய்த்து தான் வீட்டு வாடகை, சாப்பாடு எல்லாம் பாக்கனும் ஏதோ கையில இருந்து கொஞ்சம் காச வச்சி செலவு செய்தாச்சு இனியும் ஊரடங்க நீட்டினால் என்ன செய்ய போறோம் தெரியாது. காசு இல்லை, நகையும் இல்லை. ரேசன் பொருள வச்சிதான் சாப்பிடறோம் கூலி வேலை செய்றவங்கள அரசு கவனிக்கல. எடப்பாடி, மோடி ஏழைகளுக்கு இல்ல. எங்கள பொழைக்க விட்டா தேவல்ல. இன்னும் என்னத்த தான் குறைக்கிறது.” என்று வேதனையுடன் பேசினார்.”

அலமேலு (வயது 38)

“ஓட்டலில் வேலை செய்பவர், பாத்திரம் விளக்குவது, கூட்டுவது, என முழு நாளைக்கும் வேலை மாசம் 6000 ஆயிரம் கொடுப்பாங்க. கொரானா வந்ததால 2 மாசமா வேலை இல்லை. இப்ப ஒட்டல் திறந்தாச்சுனு சொன்னாங்க போன் பண்ணி கேட்டா அப்புறம் சொல்லுறோம்னு முதலாளி சொல்றாரு. ரெண்டு புள்ளைங்கள வைச்சிகிட்டு எப்படி சாப்புடுறது. அவருக்கும் பொழப்பு இல்லை. இன்னும் மிச்ச நாள கடத்த என்ன செய்ய போறோம்னு தெரியல. பால் வாங்றது இல்லை. வெறும் வரக்காபித்தான். ஒரு நாளைக்கு சாப்பாடு இரண்டு நேரம் தான். காய் போட்டு குழம்பு வச்சி ரொம்ப நாளு ஆச்சு. அரசாங்கத்த பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்லை.”

இப்படி மக்கள் அன்றாடம் தங்களால் சொல்ல முடியாத துன்ப, துயரங்களை சந்தித்தித்து வருகின்றனர். ஆனால் அரசியல் வாதிகளோ ஆளும் வர்க்கத்தின் நலனை பாதுகாப்பதற்காக பல லட்சம் கோடிகளில் சலுகைகளை வாரி வழங்குவதையே தனது பொருளாதாரக் கொள்கையெனக் கொண்டுள்ளது. சமீபத்தில் அரசு அறிவித்த 20 லட்சம் கோடி பொருளாதார திட்டமும் மக்களுக்கு கானல் நீராகவே உள்ளது. ஆனால் கொழுத்த முதலாளிகளுக்கோ அறுசுவை விருந்தாகியுள்ளது.

நமது வாழ்க்கை பிரச்சனையை தீர்க்க நாம் ஒன்று பட்டு நிற்க வேண்டும். போராட வேண்டும்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருச்சி.

கன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி !

நாகர்கோவில் காசி, பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள், திருமணம் ஆகாத இளம்பெண்கள், திருமணமான பெண்கள் என சுமார் 100 பெண்களை திட்டமிட்டு ஏமாற்றியதால் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவர் புகார் தைரியமாக கொடுத்ததன் அடிப்படையில் இன்று காசியும் அவனது கூட்டாளியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காசியோடு இந்த அயோக்கியத்தனத்தில் இன்னும் பலருக்கு தொடர்பு உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. இந்த வழக்கு விசாரணை முறையாக நடைபெற்று இந்த அயோக்கியத்தனத்தில் காசியுடன் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.

காசியுடன் இந்த அயோக்கியத்தனத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமெனில் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் தைரியமாக புகார் அளிக்க வேண்டும், அவர்களுக்கு அவர்களுடைய குடும்பத்தினர் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இந்த குற்றத்தில் ஈடுபட்ட அயோக்கியர்கள் அனைவரும் தண்டிக்கப்படவும், இதுபோன்ற அயோக்கியத்தனங்கள் மேலும் நடைபெறாமல் இருக்கவும் காசி உள்ளிட்ட அயோக்கியர்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் வழக்கு கட்டணம் வாங்காமல் அனைத்து விதத்திலும் சட்ட உதவி செய்ய தயாராக இருக்கின்றோம்.

படிக்க:
விகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை !
♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் ! புதிய கலாச்சாரம் ஏப்ரல் மின்னிதழ்

மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுடைய பெயர் முகவரி உள்ளிட்ட அடையாளங்கள் வெளியே தெரிய வேண்டாம் என்று கருதினால் அது குறித்த ரகசியம் காக்கப்படும்.

மேலும் இந்த வழக்கு விசாரணை முறையாக நடை பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றால் ஆரம்பம் முதல் இறுதிவரை இந்த வழக்கு விசாரணை நேர்மையான இயக்கங்கள், நேர்மையான வழக்கறிஞர்கள், நேர்மையான பத்திரிக்கையாளர்கள், உள்ளிட்ட பலராலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் கோருகின்றோம்.

இவன்
க. சிவராஜ பூபதி, வழக்குரைஞர், நாகர்கோவில்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.
தொடர்பு எண் – 9486643116.

விகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை !

விகடன் குழுமத்தில் நடைபெறும் ஆட்குறைப்பின் மூலம், சமூகம், அரசியல் சார்ந்த படைப்புகள் எழுதி வரும் பத்திரிகையாளர்கள் குறிவைக்கப்பட்டு வருகின்றனர். நிர்வாக நலனிற்கேற்ற அரசியலைப் பின்பற்றாத காரணத்தால், சமூகம், அரசியல் ஆகிய துறைகளின் எழுதி வந்த பத்திரிகையாளர்கள், கடந்த 3 ஆண்டுகளில் வெளியேறியுள்ளனர் / வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நான் கடந்த மார்ச் மாதம் விகடன் நிறுவனத்தின் பணிகளில் இருந்து விலகினேன். அதற்கான காரணத்தை, கடிதமாக விகடன் குழுமத்தின் ஆசிரியர் ச.அறிவழகனுக்கும், அதன் நகலை நிர்வாக இயக்குநர் பா.ஸ்ரீனிவாசனுக்கும் அனுப்பியிருந்தேன். தற்போது அதனைப் பொதுவெளியில் வெளியிடுகிறேன்.

***

ணக்கம் சார்,

கடந்த மார்ச் 16 அன்று, தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட எனது பணி விலகல் தொடர்பான கடிதத்திற்குத் தாங்கள் அளித்த பதில் கடிதத்தின்படி, கடந்த ஏப்ரல் 15 அன்று விகடன் குழுமத்தின் பணிகளில் இருந்து முழுமையாக விலகிவிட்டேன். ஊடகத்துறையில் எனது முதல் அனுபவமாக அமைந்தது விகடன். கடந்த ஒன்றரை ஆண்டுகளில், பல்வேறு அனுபவங்களை இந்தப் பணியில் கற்றுக் கொண்டேன். விகடன் குழுமத்தின் ஊழியராக ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே பணிபுரிந்திருந்த போதும், இந்த நிறுவனத்திற்கும் எனக்குமான உறவு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு, சுட்டி விகடன் இதழின் ‘பேனா பிடிக்கலாம்; பின்னி எடுக்கலாம்’ திட்டத்தின் கீழ் சுட்டி ஸ்டாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டு, நான் முயன்றும் என்னால் இந்தத் திட்டத்தில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது இருந்தே ஊடகத்துறை மீதான ஈர்ப்பினால், எனது இளங்கலை, முதுகலை ஆகியப் பட்டப்படிப்புகளில் இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தேன். 2018ஆம் ஆண்டு மாணவப் பத்திரிகையாளர் திட்டத்திலும், அதன்பிறகு விகடன் ஊழியராகவும் பணிபுரிந்தேன். ஊடகத்துறை மீதும், இதழியல் மீதும் எனது சிறுவயதிலேயே ஈர்ப்பை உருவாக்கிய விகடன் குழுமத்தில் பணியாற்றியது என் வாழ்நாளின் மிகப்பெரிய சாதனையாக எனக்குத் தெரிந்தது. தற்போது மிகுந்த மன வருத்தத்துடன் நான் மிகவும் நேசித்த ஊடகத்துறையை விட்டும், அதுகுறித்த விதையை என்னுள் விதைத்த நிறுவனத்தை விட்டும் வெளியேறுகிறேன்.

எனது பணிவிலகல் தொடர்பாகத் தங்களிடம் பேசிய போது, Freelance செய்யுமாறு அறிவுறுத்தினீர்கள். அதை நானும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டேன். அதன்பிறகு, நீங்கள் சொன்னவற்றை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘ர.முகமது இல்யாஸ்’ என்ற எனது பெயரை, கட்டுரைகளில் இடம்பெறச் செய்தால் ‘வாசகர்கள் முன்முடிவோடு கட்டுரையை அணுகக் கூடும்; பி.ஜே.பிக்கு எதிரான கட்டுரை என்று வாசகர்கள் உங்கள் பெயரை வைத்து முடிவு செய்துவிடுவார்கள்’ என்று கூறினீர்கள். மேலும், எனது பெயருடன், மற்றொரு நிருபரின் பெயரையும் சுட்டிக்காட்டி, அவரது கட்டுரைகளுக்கும் இந்தப் பிரச்னை பொருந்தும் என்றும் நீங்கள் சொன்னது வருத்தத்தை ஏற்படுத்தியது. நான் ஏப்ரல் 15 அன்று பணியில் இருந்து விலகும் போது, தங்களிடம் இதுகுறித்து பேசிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். எனினும், கொரோனா லாக்டௌன் பிரச்னையால் அது நடைபெறவில்லை. அதனால் எனது கருத்துகளை எழுத்து வடிவில் பதிவு செய்கிறேன்.

உங்கள் வாதப்படி, முஸ்லிம் பெயரில் நான் எழுதும் கட்டுரைகளில் வாசகர்கள் ‘பி.ஜே.பி எதிர்ப்புக் கட்டுரை’ என்று முன்முடிவு செய்தால், இந்துப் பெயரில் பிறர் எழுதும் கட்டுரைகளை வாசகர்கள் ‘பி.ஜே.பி ஆதரவுக் கட்டுரை’ என்று முன்முடிவு செய்வார்களா என்று தெரியவில்லை. பி.ஜே.பியின் 40 ஆண்டு குறித்து கடந்த ஏப்ரல் 6 அன்று, நான் எழுதிய கட்டுரையில் எனது பெயரைச் சேர்ப்பதும், நீக்குவதுமாக இருந்தார்கள். எனது கட்டுரைகளில் இந்தியா மதப் பெரும்பான்மைவாதத்தை நோக்கி நகர்வதைக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அதில் இருந்து எனது பெயரை நீக்கி, பெரும்பான்மைவாதத்திற்கு ஆதரவாக செயல்படவே விரும்புகிறீர்கள். தங்களைப் போன்ற நீண்ட கால அனுபவம் ஏதும் எனக்கு இல்லையென்ற போதும், இதுதான் நீங்கள் அடிக்கடி வலியுறுத்தும் நடுநிலைமையா என்று கேட்கத் தோன்றுகிறது.

நடுநிலைமை குறித்தும் எனது கட்டுரைகளில் தங்களுக்கு விமர்சனம் இருப்பதாக எனக்கு தோன்றியது. சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனக் குழு தொடர்பாக ஜூ.விக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் இந்தப் பிரச்னை வெளிப்பட்டது. “The job of the newspaper is to comfort the afflicted and afflict the comfortable” என்ற இதழியல் தொடர்பான பிரபல வாசகத்தை, முதுகலைப் பட்டப்படிப்பின் போது, எனது ஆசிரியர்கள் எனக்குக் கற்பித்தனர். என்னால் இயன்ற வரை, அதன்படி செயல்படுகிறேன். சர்வ வல்லமை பொருந்திய, நிறுவனமயமாக்கப்பட்ட அரசுக் கட்டமைப்பையும், உதிரிகளாக எந்த நிறுவனப் பிடிப்பும் இல்லாமல், பல்வேறு காரணங்களால் பிரிந்து கிடக்கும் எளிய மக்களையும் என்னால் ஒரே தராசு கொண்டு அணுக முடியவில்லை. பாதிக்கப்பட்டவனிடமும், பாதிப்பை ஏற்படுத்தியவனிடமும் கருத்து கேட்டு பதிவுசெய்வது மட்டுமே இதழியல் என்று நான் கற்றுக்கொள்ளவில்லை.

படிக்க:
வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) – முதலாளித்துவத்தின் நவீன சுரண்டல் முகம்
♦ பணக்காரர்கள் மீது வரி போடலாம் என்றால் பதறும் அரசு !

நான் மேலே குறிப்பிட்டவற்றுள், தங்களுக்கு விமர்சனங்கள் இருக்கலாம்; இவை மிகச் சாதாரண ஒன்றாகத் தோன்றலாம். எனினும், இது என்னுடைய ஆதங்கத்தின் வெளிப்பாடு. ஒரு மனிதனாக, சக ஊழியனாகத் தங்களுடன் நான் பணியாற்றிய போதும், எனது மதிப்பு என்பது முதலில் எனது கருத்தாகவும், பிறகு எனது பெயராகவும், எனது பெயரில் இருக்கும் சிறுபான்மை மத அடையாளமாகவும் சுருக்கப்பட்ட பிறகு என்னால் இங்கு தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. பிற ஊடகங்களிலும், எனக்கு இதே பிரச்னைகள் எழும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், இந்தத் துறையை விட்டு தற்போது தற்காலிகமாக விலகுகிறேன். நான் கற்றுக்கொண்ட இதழியல் பண்புகளை எனது தலைமுறை இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் பொருட்டு, தனியார் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்துள்ளேன்.

தங்களுக்குக் கீழ் பணியாற்றியதில் பலவற்றைக் கற்றுக் கொண்டேன். பணியில் சேர்ந்த முதல் நாளில், நான் வேலை செய்த முதல் கட்டுரை infograph ஒன்றை அச்சிடச் செய்து, அதில் நீங்கள் செய்து தந்த பிழைதிருத்தங்களை இன்றுவரை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் என்பதையும் இந்தக் கடிதத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

இதழியல் துறை பெரும்பான்மைவாதத்திற்குப் பலியாகியுள்ளது.

எனது பணிவிலகல் அதற்கு ஓர் சான்று.
மிகுந்த மன வருத்ததுடன்,

ர. முகமது இல்யாஸ்.
(இது மட்டுமே எனது பெயர்; எனக்கு வேறு புனைப்பெயர்கள் கிடையாது)
20/04/2020

முகநூலில்:Ilyas Muhammed Raffiudeen

disclaimer