பொள்ளாச்சி கொடூரத்தின் தாக்கத்திலிருந்து மீண்டு வருவதற்குள், கோவை துடியலூரில் ஒரு சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கிறாள். என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறது தமிழகம்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தொடரும் இத்தகைய பாலியல் வன்முறைக்கு யார் காரணம் ? கடந்த 2018-ம் ஆண்டின் இறுதியில் சில மாதங்களாக நடந்த மீ டூ இயக்கத்தை எடுத்துக் கொள்வோம். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று மதிக்கப்படும் ஊடகங்களில்தான், மிகவும் அதிகமான பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். அவர்கள்தான் முதலில் இவ்விசயத்தை துணிந்து பேசினார்கள். அதைத் தொடர்ந்து சினிமா உள்ளிட்டு பல்வேறு துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றவாளிகளை அம்பலப்படுத்தினர்.

ஆனால், இத்தகைய படிப்பறிவும், சமூகத் தகுதியும் இல்லாத லட்சக்கணக்கான பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் எங்கேயும் பதியப்படுவதில்லை. ஏனெனில், நடைமுறையில், ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்புமே குற்றவாளிகளைப் பாதுகாத்து நிற்கிறது. பொள்ளாச்சி கொடூரத்தை எடுத்துக் கொண்டால், எஸ்.பி முதல் ஆய்வாளர் வரை அனைவரும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக களமாடுகிறார்கள். கடந்த 7 ஆண்டுகளாக நடந்த இந்தப் பாலியல் கொடூரத்தில், அதிமுக தலைவர்கள் முதல் அதிகார வர்க்கம் வரை அனைவருக்கும் பங்கிருக்கிறது.

இந்தக் குற்றக்கும்பலைக் காப்பதற்காக பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டும் விதமாக புகாரளித்த பெண்ணின் அடையாளத்தை போலீசே வெளியிட்டது. அதன் பின் தமிழக உள்துறை செயலர் அப்பெண்ணின் அடையாளத்தை அரசாணையில் வெளியிடுகிறார். இவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், வெறும் அபராதத்தோடு தனது கடமையை முடித்துக் கொண்டது நீதிமன்றம்.

படிக்க:
♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
♦ நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்

நீதிபதி கங்குலியாக இருக்கட்டும், துறவி என்ற பெயரில் களியாட்டம் போடும் நித்தியானந்தாவாக இருக்கட்டும், இவர்கள் அனைவரும் தம்மை கேட்பார் இல்லை என்றே கருதுகிறார்கள். சரியாகச் சொல்வதானால், அத்தகைய அதிகாரமும், சட்ட பூர்வ நிறுவனங்களின் பாதுகாப்பும் கொண்டோரே இத்தகைய கயமைத்தனத்தைத் துணிந்து செய்கிறார்கள்.

ஆதிக்க சாதிக் கட்சிகளும் மதவெறி அமைப்புகளும் கூட இத்தகைய பாலியல் வன்முறையின் போது தமது சமூகப் பெண்களுக்கு ஆதரவாகப் பேசுவதில்லை. பல சமயங்களில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே துணிந்து குரல் கொடுக்கின்றன. அதை முன்னர் கதுவாவில் பார்த்திருக்கிறோம். இப்போது பொள்ளாச்சியிலும் கண்கூடாகப் பார்க்கிறோம்…

பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து பல்வேறு பரிமாணங்களை இத்தொகுப்பு அலசுகிறது. அதற்கு தீர்வாக சில கருத்துக்களையும் முன்வைக்கிறது.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

***

பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் – புதிய கலாச்சாரம் ஏப்ரல் 2019 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்துங்கள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 20) எமது வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

” பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • நூல் விமர்சனம்: சூனியப் புள்ளியில் பெண்
  • பாலுறவை மேலும் ஆபத்தானதாக மாற்றுகிறோமா நாம் ?
  • #MeToo: இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல, வதைக்கப்பட்ட கதை !
  • ஊடகங்களா ? பாலியல் வக்கிரக் கூடங்களா ?
  • பாலியல் குற்றங்கள்: பள்ளி மாணவர்கள் நிலை என்ன ?
  • படுக்கை அறைக்கு வந்தால் பாட வாய்ப்பு: கர்நாடக சங்கீதத்தின் பார்ப்பன ராகம் !
  • பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: குற்றவாளிகளே ஆட்சியாளர்களாக…!
  • பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: மாணவர்கள் எதிர்க்கிறார்கள் செளகிதார்கள் பாதுகாக்கிறார்கள்!
  • பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: புதிய சட்டங்கள் குற்றங்களைக் குறைக்குமா ?
  • பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: குற்றவாளிகளைப் பாதுகாக்கும் சாதிச் சங்கங்கள்!
  • பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: நுகர்ந்தபின் வீசியெறியும் பண்டங்களா பெண்கள் ?
  • பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: பிரச்சினை ஃபேஸ்புக்கிலா சமூகத்திலா?
  • பெண்கள் அடக்க ஒடுக்கமாக வாழ்வது தீர்வாகுமா ?

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

 

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.

வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

____________

புதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

5 மாநில தேர்தலில் பாஜக தோல்வி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க