Tuesday, August 12, 2025
முகப்பு பதிவு பக்கம் 261

உத்திரப் பிரதேசம் : இந்து ராஷ்டிரத்தின் புதிய சோதனைச் சாலை !

த்திரப் பிரதேசம் இந்து ராஷ்டிரத்தின் புதிய சோதனைச் சாலையாக மாற்றப்பட்டிருப்பதை, அம்மாநில முசுலிம்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் மீது அம்மாநிலத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் கும்பல் அடுத்தடுத்து ஏவிவிட்டிருக்கும் அடக்குமுறைகள் எடுத்துக் காட்டுகின்றன.

டெல்லியில் நடத்தப்பட்ட இந்து மதவெறித் தாக்குதலில் தளபதிகளாகச் செயல்பட்ட பா.ஜ.க.வைச் சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாக்குர், பர்வேஷ் வர்மா ஆகியோர் மீதும்; இத்தாக்குதலை நடத்துவதற்காக உ.பி. உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து டெல்லிக்குக் கொண்டுவரப்பட்ட ஆர்.எஸ்.எஸ். காலிகள் மீதும் இதுநாள் வரையில் ஒரு முதல் தகவல் அறிக்கைகூடப் பதிவு செய்யப்படவில்லை.

அதேசமயம், உ.பி.யிலோ குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய முசுலிம்கள் மீதும், அப்போராட்டத்திற்கு ஆதரவளித்து வரும் ஜனநாயக சக்திகள் மீதும் அடுத்தடுத்துப் பல்வேறு வழக்குகள் போடப்பட்டு, அவர்கள் அனைவரையும் தேசத் துரோகிகளாக, அரசின் எதிரிகளாகப் பொது வெளியில் சித்தரிக்கும் ஆள்காட்டி வேலையைச் செய்து முடித்திருக்கிறது, யோகி ஆதித்யநாத் அரசு.

உ.பி.யில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டங்களின் மீது போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் கொல்லப்பட்டனர். சிறுவர்கள் உள்ளிட்டு 1,640 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் அனைவரின் மீதும் 450-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. 27 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழும் வழக்கு தொடுக்கப்பட்டது.

இக்கிரிமினல் வழக்குகள் உ.பி. போலீசால் புனையப்பட்ட பொய் வழக்குகள் என்பது முதற்கட்ட நீதிமன்ற விசாரணையிலேயே அம்பலமாகிவிட்டது. எனினும், இந்து மதவெறி பாசிஸ்டான யோகி ஆதித்யநாத்தின் பழி தீர்க்கும் வெறியோ சற்றும் அடங்கிவிடவில்லை.

உ.பி. தலைநகர் லக்னோவில் நடந்த ஆர்ப்பாட்டங்களின்போது கைது செய்யப்பட்டுப் பின்னர் பிணையில் வெளியே வந்துவிட்டவர்களுள் 57 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் புகைப்படங்கள் மற்றும் முகவரிகள் அடங்கிய தட்டிகளை லக்னோ நகரின் 100 இடங்களில் நிறுவி, அவர்கள் அனைவரையும் அரசின் எதிரிகளாக அடையாளப்படுத்தி அவமதிக்கும் சட்டவிரோதமான, கீழ்த்தரமான தாக்குதலை ஏவியிருக்கிறது, ஆதித்யநாத் அரசு.

இந்த ஆட்காட்டி வேலையின் தொடர்ச்சியாக, அந்த 57 பேரும் ஆர்ப்பாட்டத்தின்போது வன்முறையில் இறங்கி அரசு மற்றும் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகக் குற்றஞ்சுமத்தி, அவர்கள் அனைவரும் 1.56 கோடி ரூபாய் நட்ட ஈடும், அத்தொகையின் மீது 10 சதவீத வசூல் கட்டணத்தையும் சேர்த்து, மொத்தத் தொகையையும் உடனடியாகக் கட்டக் கோரும் நீதிமன்றத் தாக்கீதையும் அனுப்பி வைத்திருக்கிறது.

அலகாபாத் உயர் நீதிமன்றம் உ.பி. அரசின் இந்த ஆட்காட்டி விளம்பரத் தட்டிப் பிரச்சாரத்தைத் தானே முன்வந்து, இரண்டு நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு அமர்வை நியமித்து, விடுமுறை தினமான ஞாயிறு என்றும் பாராமல் விசாரித்தது. அவ்வமர்வு இந்த ஆட்காட்டி நடவடிக்கையை, “அரசியல் சாசனப் பிரிவு 21 மற்றும் தனி மனித உரிமைக்கு எதிரானது எனச் சுட்டிக் காட்டியதோடு, அரசின் நிறச் சார்பை (colourable exercise) வெளிக்காட்டுகிறது” என்றும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தச் சுவரொட்டிகளை உடனே அகற்ற வேண்டுமென்றும், அகற்றப்பட்டது குறித்த அறிக்கையை உயர் நீதிமன்றத்திடம் அளிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டது.

உ.பி. மாநில இந்து மதவெறி அரசோ ஆட்காட்டி விளம்பரத் தட்டிகளை அகற்றுவதற்குப் பதிலாக,  அவற்றை அகற்றச் சொன்ன உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல் முறையீடு செய்ததோடு, அந்த 57 பேர் மீதும் குண்டர் சட்டத்தை ஏவித் தனது பாசிச குரூரப் புத்தியை வெளிக்காட்டிக் கொண்டது.

இந்த 57 பேர் மீதான வழக்குகள் முடிவடையாத நிலையில், அவர்களுள் ஒருவர்கூட இன்னும் எந்தவொரு நீதிமன்றத்தாலும் குற்றவாளியாக அறிவிக்கப்படாத நிலையில் அவர்களின் புகைப்படங்களையும் முகவரிகளையும் சுவரொட்டியில் அச்சிட்டு வெளியிட்டது அடிப்படையிலேயே சட்டவிரோதமானது என்கிறார்கள் வழக்குரைஞர்கள்.

ஆனால், இம்மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வோ, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்குத் தடை விதிக்க மறுத்துவிட்டாலும், இந்த வழக்கைச் சட்டரீதியாக ஆராய வேண்டியிருப்பதால், அதிக எண்ணிக்கை கொண்ட அமர்வு இவ்வழக்கை விசாரிக்கப் பரிந்துரை செய்து தீர்ப்பளிப்பதிலிருந்து நழுவிக் கொண்டுவிட்டது.

உ.பி. அரசின் இந்த ஆட்காட்டி நடவடிக்கையை அரசியல் சாசனப் பிரிவு 21-க்கு எதிரானது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டிய பிறகும்கூட உச்ச நீதிமன்ற அமர்வு இந்த வழக்கைச் சட்டரீதியாக ஆராய வேண்டியிருக்கிறது எனக் கூறியிருப்பது இந்து மதவெறிக் கும்பலுக்குக் காட்டப்பட்ட சலுகை தவிர வேறில்லை.

படிக்க:
கொரொனா ஊரடங்கு : 1700 கி.மீ. சைக்கில் பயணம் மேற்கொண்ட ஒடிசா இளைஞர் !
ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு ! பாசிச UAPA சட்டங்களை ரத்து செய் !

இந்தச் சலுகையை அளித்த இரண்டு நீதிபதிகளுள் ஒருவர் நீதிபதி யு.யு.லலித் என்பது குறிப்பிடத்தக்கது. யு.யு. லலித் உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தபோது, சோராபுதின் போலி மோதல் கொலை வழக்கில் அமித் ஷாவின் சார்பாக வழக்காடி வந்தார். அதற்குச் சன்மானமாக, நரேந்தர மோடி மே 2014-இல் பிரதமராகப் பதவியேற்ற ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே யு.யு. லலித்திற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியை அளித்தார் என்பது சமீபத்திய வரலாறு.

உச்ச நீதிமன்ற அமர்வு இவ்வழக்கைக் கூடுதல் நீதிபதிகள் விசாரிக்கப் பரிந்துரைத்திருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் ஆர்ப்பாட்டங்களின்போது பொதுச் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்களை ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து வசூலிப்பதற்கு ஏற்றவாறு போடப்பட்ட அரசு உத்தரவைச் சட்டமாக இயற்றிக் கொண்டுவிட்டது, யோகி ஆதித்யநாத் அரசு.

***

“லக்னோ நகரில் வன்முறையைத் திட்டமிட்டுத் தூண்டிவிட்ட இந்த 57 பேரும் செல்வாக்குமிக்க நபர்கள்; இவர்கள் தமது செல்வாக்கைக் கொண்டு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடுவார்கள்” என அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வாதாடியது, உ.பி. அரசு. ஆனால், உண்மையோ இதற்கு நேர் எதிரானது.

இந்த 57 பேரில், லக்னோ-ஹஸன்கஞ்ச் பகுதியில் வசித்துவரும் இருபது வயதான கல்லூரி மாணவன் ஒசாமா சித்திக்கும் ஒருவன். சித்திக்கும் அதே பகுதியில் வசித்துவரும் வேறு பன்னிரெண்டு பேரும் 21.76 இலட்ச ரூபாய் நட்ட ஈடாகத் தர வேண்டுமென தாக்கீது அனுப்பியிருக்கிறது, உ.பி அரசு.

சித்திக்கை கலவரம் நடந்த பகுதியில் கையும் களவுமாகப் பிடித்ததாகக் கூறுகிறது, போலீசு. ஆனால், மதியம் இரண்டு மணி வரை வீட்டில் இருந்த சித்திக், தனக்குத் தேவையான எழுது பொருட்களை வாங்குவதற்காகக் கடைவீதிக்குச் சென்றிருந்தபோது போலீசார் அவனைப் பிடித்துக் கைது செய்துவிட்டதாகக் கூறுகிறார், சித்திக்கின் தாய்.

“தனது வீட்டிலிருந்து இரண்டு கி.மீ. தூரம் தள்ளியுள்ள பகுதிக்குக் கலவரம் நடந்த சமயத்தில் வர வேண்டிய அவசியமென்ன?” எனக் கேட்டு சித்திக் கூறியதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது, நீதிமன்றம். அதேசமயம், சித்திக் நேரடியாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதற்கோ, வன்முறையில் இறங்கியதற்கோ எந்தவிதமான நேரடியான ஆதாரம், சாட்சியங்களை போலீசும் அளிக்கவில்லை. எனினும், நட்ட ஈடு கேட்டு சித்திக்கிற்கு நீதிமன்ற நோட்டீசு அனுப்பப்பட்டிருக்கிறது.

சித்திக்கின் தந்தைக்கு நிரந்தர வருமானம் தரும் வேலையெதுவும் கிடையாது. அவர்கள் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு, அதில் கிடைக்கும் வாடகைப் பணம்தான் குடும்ப வருமானம். “இப்படிப்பட்ட நிலையில் எங்களால் எப்படி நட்ட ஈடைச் செலுத்த முடியும்?” எனக் கேள்வி எழுப்புகிறார், சித்திக்கின் தாய்.

உ.பி. அரசால் கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கும் 25 பேரின் வழக்குரைஞரான ஆஷ்மா இஜ்ஜத், “தனது கட்சிக்காரர்கள் பெரும்பாலோர் தினக் கூலிகள். சிலரோ வேலையில்லாத பரம ஏழைகள். இந்த 25 பேரில் ஒருவரான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வாசீம் சையத் சிறிய உணவகமொன்றில் உணவு பரிமாறும் தினக் கூலி. கலீம் என்பவர் ரிக்சா ஓட்டி வாழ்க்கை நடத்திவரும் ஏழைத் தொழிலாளி. நட்ட ஈடு கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டவர்களுள் இருவர் சிறுவர்கள்” எனப் பட்டியில் இடுகிறார்.

பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டிருக்கும் முகம்மது ஆனஸ், வணிகவியல் பட்டப்படிப்புப் படித்துவரும் மாணவன். சம்பவ நாளன்று தனிப்பயிற்சி வகுப்புக்குச் சென்று கொண்டிருந்த தன்னை போலீசு பிடித்துச் சென்று வழக்குப் போட்டதாகக் கூறுகிறார், ஆனஸ்.

உ.பி. அரசால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முகம்மது தாரிக், கல்லூரி மாணவன். “தனது தந்தைக்கு மருந்து வாங்குவதற்காகக் கடைவீதிக்குச் சென்றிருந்த தன்னை போலீசு பிடித்துச் சென்றதாகவும், அப்பொழுது ஆர்ப்பாட்டம் தொடங்கியிருக்கவேயில்லை” என்றும் கூறுகிறார், தாரிக்.

லக்னோவின் பரிவர்தன் சௌக் என்ற பகுதியில் இருந்து மட்டும் 15 இளைஞர்களை, அவர்கள் இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது பிடித்துச் சென்று வழக்குத் தொடுத்திருக்கிறது, உ.பி. அரசு. இவர்கள் அனைவருமே அந்தப் பகுதிகளில் உள்ள சிறு உணவகங்களில் வேலை செய்து வரும் தினக்கூலிகள். இவர்களுள் ஒரு சிலர் அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முசுலிம்கள் என்பதைச் சாக்காகக் கொண்டு, அவர்கள் வங்க தேசத்தைச் சேர்ந்த ‘ஊடுருவிகள்’ எனக் குற்றஞ்சுமத்தி, தனது கைது நடவடிக்கையை நியாயப்படுத்தியிருக்கிறது, உ.பி. போலிசு.

உ.பி. அரசால் குற்றவாளியென அடையாளப்படுத்தப்பட்டிருப்பவர்களுள் முன்னாள் ஐ.பி.எஸ். போலீசு அதிகாரியும் அம்பேத்கர் இயக்கமொன்றை நடத்தி வருபவருமான எஸ்.ஆர்.தாராபுரியும் ஒருவர். உ.பி. மாநிலமெங்கும் குடியுரிமைச் சட்டத் திருத்ததற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்ற டிசம்பர் 19-ஆம் தேதிக்கு முன்பே அவரை வீட்டுக் காவலில் அடைத்துவிட்டது உ.பி. போலீசு. ஆனாலும், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நாளன்று அவர் தனது முகநூலில், “அரசியல் சாசனத்தைக் காப்போம்” எனப் பதிவிட்டதால், மறுநாள் காலையில் தாராபுரியைக் கைது செய்த போலீசு, தனது குற்றப்பத்திரிக்கையில் டிசம்பர் 20 அன்று இரவு ஏழு மணிக்கு தாராபுரியைப் பொது இடத்தில் வைத்துக் கைது செய்ததாகப் புளுகியிருந்தது. நீதிமன்றமும் இந்தப் புளுகை மறுவார்த்தையின்றி ஏற்றுக்கொண்டு, தாராபுரியைச் சிறைக்கு அனுப்பியதோடு, அவர் அரசுக்கு நட்ட ஈடு செலுத்த வேண்டுமென்றும் தாக்கீது அனுப்பியிருக்கிறது.

ரிஹாய் மஞ்ச் என்ற பெயரில் மனித உரிமை அமைப்பொன்றை நடத்திவரும் மூத்த வழக்குரைஞரான முகம்மது ஷோயிப்பும் தாராபுரியைப் போலவே, ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாகவே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். உ.பி. போலீசின் போலி மோதல் கொலைகளைத் தொடர்ச்சியாக அம்பலப்படுத்திவரும் முகம்மது ஷோயிப்பைப் பழிதீர்த்துக் கொள்ளக் காத்திருந்த உ.பி. அரசு இச்சந்தர்ப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, அவரையும் கைது செய்து சிறையில் தள்ளியதோடு, சுவரொட்டியில் புகைப்படமாக வெளியிட்டும் அவமானப்படுத்தியிருக்கிறது.

உ.பி. மாநிலத்தில் மிகப் பிரபலமான ஷியா மத போதகர் கல்ரே சாதிக்கின் மகனான கல்பே சிப்தைன் நூரியும் அவரது நண்பருமான மௌலானா சாயிப் அப்பாஸும் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற டிசம்பர் 19 அன்று இமாம்பதா என்ற பகுதியில் முசுலிம்கள் மத்தியில் அமைதியாக இருக்கும்படி பிரச்சாரம் செய்துள்ளனர். இவர்கள் முசுலிம்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ததையே சாட்சியமாகக் காட்டி, கலவரத்தைத் தூண்டிய சதிகாரர்கள் என அவர்கள் இருவர் மீதும் குற்றஞ்சுமத்தி வழக்குத் தொடுத்திருக்கிறது, உ.பி. போலீசு.

உ.பி போலீசால் கைது செய்யப்பட்ட ஏழை முசுலிம்களின் வாக்குமூலத்தை மட்டுமல்ல, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி தாராபுரி, மூத்த வழக்குரைஞர் முகம்மது ஷோயிப், காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவரும் சமூகச் செயல்பாட்டளுருமான சதாஃப் ஜாபர் ஆகியோரும் தம்மை போலீசார் கெடுமதி நோக்கத்தோடு வழக்கில் இணைத்திருப்பதாக அளித்த வாக்குமூலங்களையும் கூடுதல் மாவட்ட குற்றவியல் நீதிபதி காது கொடுத்துக் கேட்கவில்லை. மாறாக, “10,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்த ஆர்ப்பாட்டங்களில் வெறும் 57 பேர் மீது மட்டுமே நட்ட ஈடு கேட்டு தாக்கீது அனுப்பப்பட்டிருப்பது, உ.பி. போலீசின் திறமையின்மையைக் காட்டுவதாக”க் குற்றஞ்சுமத்தியிருக்கிறார், அரசனை விஞ்சிய விசுவாசி போலும் அந்நீதிபதி!

படிக்க:
யோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு ! போலீசைக் கொன்றவர்களுக்கு விடுதலை !
♦ கொரொனா நிவாரணப் பொருட்கள் : ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி மற்ற கட்சிகளுக்கு தடையா ?

சுவரொட்டியில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் 57 பேரில் 52 பேர் முசுலிம்கள் என்பது தற்செயலானது அல்ல. யோகி ஆதித்யநாத் அரசு தனது முசுலிம் வெறுப்பு-காழ்ப்புணர்ச்சியை இந்நடவடிக்கையின் மூலம் மிகவும் வெளிப்படையாகக் காட்டிக்கொண்டிருப்பதோடு, யார் போராடினாலும் அவர்களுக்கும் இதே கதிதான் எனப் பீதியூட்டவும் இந்நடவடிக்கையைப் பயன்படுத்தியிருக்கிறது. உ.பி மாநில அமைச்சரும், அவ்வரசின் பத்திரிகை தொடர்பாளருமான சித்தார்த் நாத் சிங், “யோகி அரசுக்கு எதிராகப் போராடத் துணிபவர்களை இப்படி விளம்பரப்படுத்தி அவமானப்படுத்துவது தடுப்பு நடவடிக்கையைப் போன்றதாகும்” எனக் கூறி, இச்சட்டவிரோதச் செயலை வெளிப்படையாகவே நியாயப்படுத்தியிருக்கிறார்.

அவ்விளம்பரத் தட்டியில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் இந்த 57 பேர் மீதான வழக்குகள் நிலுவையில் இருப்பதை உ.பி. அரசு அத்தட்டிகளில் எங்கும் குறிப்பிடவில்லை. மாறாக, அவர்களைத் தேசத்தின், அரசின் எதிரிகளாக காட்டியிருப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். கும்பலால் அவர்கள் எளிதில் அடையாளம் காணப்பட்டுத் தாக்கப்படும் அபாயகரமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இட்லரின் ஜெர்மனியில் யூதர்கள் மீதான இன அழித்தொழிப்பு நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பாக, யூதர்களை இழிவான வெறுக்கத்தக்க குடிமக்களாகவும், இட்லரைத் தேவதூதனைப் போன்றும் சித்தரிக்கும் சுவரொட்டி பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. மோடி அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமைச் சட்டத் திருத்தமும், உ.பி.யில் அச்சட்டத்திற்கு எதிராகப் போராடத் துணிந்த முசுலிம்களை, ஜனநாயக சக்திகளைத் தேசத் துரோகிகளாகச் சித்தரிக்கும் இந்தச் சுவரொட்டிப் பிரச்சாரமும் நாடு இட்லரின் பாதையில் இழுத்துச் செல்லப்படுவதை எடுத்துக் காட்டுகின்றன.

– குப்பன்

ஏழை இஸ்லாமியர்கள் தட்டில் மண்ணை அள்ளி போடும் வதந்திகள் !

போலிச் செய்திகளை வைத்து ஏழை இஸ்லாமியர்கள் தட்டில் மண்ணை அள்ளி போடாதீர்கள் !

சம்பவம் 1 – மூன்று முஸ்லிம் மீனவர்களை 10-15 பேர் கொண்ட குழு ஒன்று சூழ்ந்து கொண்டு முற்றுகை இடுகிறது. மூன்று மீனவர்களும் பயத்தோடு கைகூப்பி கெஞ்சுகிறார்கள். ‘இவர்களைத் தொடாதீர்கள்; இவர்கள்தான் கொரோனாவைப் பரப்புகிறார்கள்’ என்று சுற்றியிருக்கும் கும்பல் உள்ளூர் மொழியில் கூச்சலிடுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோவும் வெளிவந்துள்ளது, அதில் கிராமவாசிகளின் கைகளில் கம்புகளும், தடிகளும் உள்ளன. இந்த மீனவர்கள் கைகூப்பி மன்றாடி அழுவதை பார்க்க முடிகிறது. – இது கர்நாடகாவில் நடைபெற்ற சம்பவம்.

சம்பவம் 2 – ‘ஜாவேத் பாய், இங்கிருந்து கடையை எடுத்துவிடுங்கள். இங்கே கடை போட வேண்டாம். உங்களைப் போன்றவர்களிடமிருந்து இந்த நோய் பரவுகிறது. இங்கிருந்து உங்கள் கடையை எடுத்துவிடுங்கள்.’ – இது உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹல்த்வானியில் நடைபெற்ற சம்பவம்.

சம்பவம் 3 – பெங்களூருவின் அமருதாலியில் திங்கட்கிழமையன்று ஜரின் தாஜ், தனது மகன் தப்ரெஸுடன் குடியிருப்புப் பகுதிகளில் ரேஷன் பொருட்களை விநியோகித்துக் கொண்டிருந்தார். சிலர் அவர் விநியோகம் செய்வதை தடுத்தனர். “இந்துக்களுக்கு உணவு விநியோகிக்க வேண்டாம், உங்கள் மக்களுக்கு (முஸ்லிம்களுக்கு) மட்டும் கொடுங்கள் என்று சுமார் 20 பேர் எங்களிடம் சொன்னார்கள். நாங்கள் அவர்களுடன் வாக்குவாதம் செய்யவில்லை. அருகிலுள்ள வேறொரு காலனிக்குச் சென்றுவிட்டோம். இதற்குப் பிறகு, கூட்டம் வந்து எங்களைத் தாக்கியது” என்கிறார் தப்ரேஸ். அவரது வலது கையில் மூன்று தையல்கள் போடப்பட்டுள்ளன. தலையிலும் சில தையல்கள் போடப்பட்டுள்ளன.

தப்லிக் ஜமாத்தை சேர்ந்த சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக செய்திகள் வெளி வந்ததிலிருந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏழை முஸ்லிம்களை குறிவைத்து பல சம்பவங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன.

தில்லியின் தப்லிக் ஜமாத்தின் மார்க்கஸில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற 8,000 பேரால் இந்த வைரஸ் நிச்சயமாக பரவியுள்ளது. ஆனால், மார்கஸில் இருந்து வந்தவர்களையும் மற்ற கோடிக் கணக்கான முஸ்லிம்களையும், மக்கள் பிரித்துப் பார்ப்பதில்லை.

கோவிட் -19 என்பது எந்தவொரு மதம், பாலினம் மற்றும் இனம் ஆகியவற்றைத் தாண்டிய ஒரு தொற்றுநோய். தப்லிக் ஜமாத் கூட்டம் நடைபெற்ற பிறகு தான் கோவிட் -19 நோய்த்தொற்று நாட்டில் வேகமாக அதிகரித்தது என்பதும் உண்மைதான். ஆனால் இப்போது சாமானிய மக்களின் கோபமானது ஜமாத்துடன் எந்த தொடர்பும் இல்லாத இஸ்லாமிய மக்கள் மீதும் திரும்பியிருக்கிறது.

படிக்க:
♦ கொரோனா – கருத்துப்படங்கள் !
♦ கொரொனா நிவாரணப் பொருட்கள் : ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி மற்ற கட்சிகளுக்கு தடையா ?

மதம் தொடர்பான ஒரு அமைப்பின் தவறின் காரணமாக கோவிட் -19 நோய்த்தொற்று பரவிய முதல் நாடு இந்தியா அல்ல. தென் கொரியாவின் டேகு நகரில் உள்ள சின்ஜியோன்ஜி தேவாலயத்தின் தலைவர் லீமைன், நான்காயிரம் பேருக்கு கொரோனா பரவுவதற்கு மூலக் காரணமாக இருந்துள்ளார். அதாவது தென் கொரியாவின் மொத்த கொரொனா பாதிப்பில் 60 சதவீதம் இது. ஆனால், அதை யாரும் மதத்தோடு தொடர்புபடுத்தவில்லை.

கொரோனாவை மதத்துடன் இணைக்கும் இதுபோன்ற செயல்கள் இயல்பாக இந்தியாவில் தொடங்கவில்லை. மிக நேர்த்தியாக திட்டமிடப்பட்ட முறையில் போலிதகவல்கள், வீடியோக்கள் பரப்பப்பட்டன. இதற்காக பல போலி மற்றும் தவறாக சித்தரிக்கப்படும் வீடியோக்கள் வைரலாக்கப்படுகின்றன. வேறு எப்போதோ ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை தற்போது கொரோனாவுடன் இணைத்து தவறான செய்திகளை பரப்புவதற்கு பயன்படுத்தி சித்தரிக்கப்படும் வீடியோக்கள் உருவாக்கப்படுகின்றன.

உதாரணமாக, ஏப்ரல் 2 ஆம் தேதி சோனம் மகாஜன் ஒரு வீடியோவை ட்வீட் செய்திருக்கிறார். 45 விநாடிகள் கொண்ட இந்த வீடியோவில், ஒரு முஸ்லிம் உணவு பொட்டலத்தின் மீது துப்புகிறார். ஆனால், இது ஒரு பழைய வீடியோ.

“இவை தற்செயலானவை அல்ல, யாரோ ஒருவர் அவற்றைத் தேடி எடுத்து தூசி தட்டி, தவறான செய்திகளுடன் வெளியிடுகிறார்கள். இதுபோன்ற செய்திகளைப் பரப்புவதற்காகவே ஒரு முழு நெட்வொர்க் இயங்குகிறது. சாமானிய மக்களுக்கு ஒரே மாதிரியான செய்திகள் தொடர்ந்து கிடைக்கும்போது, அவர்கள் அவற்றை சுலபமாக நம்பி விடுகின்றனர்.” என்கிரார் ஆல்ட் நியூஸின் பிரதீக் சின்ஹா.

இஸ்லாமியர்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் ஒவ்வொருவரும் ஏழை முஸ்லிம்களின் தட்டில் மண்ணள்ளிப் போடுகிறார்கள்.


இது தொடர்பான பிபிசியின் விரிவான கட்டுரை இணைப்பு கீழே.

கொரோனா வைரஸ் தொற்று : பரவும் போலி செய்திகளும், பாதிக்கப்படும் ஏழை முஸ்லிம்களும்

நன்றி : ஃபேஸ்புக்கில் முரளிதரன் காசி விஸ்வநாதன் 

கொரோனா – கருத்துப்படங்கள் !

 

கொரோனா : பணக்காரர்கள் கொண்டு வந்து பரப்பினார்கள். ஏழைகள் அதற்குப் பலியாகிறார்கள் !

கொரொனா ஒரு வைரஸ்… முதலாளித்துவம் ஒரு நோய்த்தொற்று !

கொரோனா என்றால் அமெரிக்காவும் நடுங்கும் !

நன்றி : ஃபேஸ்புக்கில் கலையரசன்

கொரொனா ஊரடங்கு : 1700 கி.மீ. சைக்கில் பயணம் மேற்கொண்ட ஒடிசா இளைஞர் !

கனை அழைத்து வருவதற்காக 1400 கி.மீ. டூவீலர் ஓட்டிச்சென்ற ஒரு தாயின் கதையைப் படித்தோம். இது ஊருக்குப் போய் சேர 1,700 கி.மீ. சைக்கிள் மிதித்த ஓர் இளைஞனின் கதை.

ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள Bichitrapur- ஐ சேர்ந்தவர் மகேஷ் ஜெனா. 20 வயதான இந்த இளைஞர், மகாராஷ்டிரா மாநிலம் Sangli Miraj என்ற பகுதியில் உள்ள இரும்பு உருக்கு ஆலையொன்றில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைப் பார்த்து வந்தார்.

மார்ச் 24-ம் தேதி தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது பலரையும் போல், இவரும் நிலைமை சரியாகிவிடும் என்று நினைத்து காத்திருந்தார். ஆனால், அவர் பணிபுரிந்த தொழிற்சாலை மூடப்பட்டது. கையில் பணம் இல்லை. குறைந்தபட்ச தேவைகளுடன் ஒரு மாத வாழ்க்கையை நகர்த்த அவருக்கு 6,000 ரூபாயாவது தேவை. அவரிடம் இருந்ததோ 3,000 ரூபா. ஊரடங்கு எப்போது முடியும் என்று தெரியவில்லை. மறுபடியும் நீட்டிக்கப்படலாம் என்றும் சொல்லப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

காத்திருப்பதில் பொருள் இல்லை என்று நினைத்த மகேஷ், ஏப்ரல் 1-ம் தேதி தன் சைக்கிளில் கிளம்பினார். சராசரியாக ஒரு நாளைக்கு 200 கி.மீ. பயணம். இடையிடையே, தேசிய நெடுஞ்சாலைகளில் ஓட்டுனர்களுக்காக திறக்கப்பட்டுள்ள தாபாவில் உணவு. ஆங்காங்கே உறக்கம். தாபாக்களில் அவர் சந்தித்த சில லாரி டிரைவர்கள், அவர் மீது இரக்கப்பட்டு சைக்கிளுடன் லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். “ஆனால், இடையில் வழிமறித்த காவல்துறையினர் டிரைவர்களிடம் பெர்மிட்டை ரத்து செய்துவிடுவதாக மிரட்டியதால் அவர்கள் இறக்கி விட்டுவிட்டனர்” என்கிறார் மகேஷ்.

நான்கு மாநில எல்லைகளை கடந்து இருக்கும் தன் ஊருக்கு சைக்கிளில் கிளம்பிவிட்டாலும் இந்த இளைஞருக்கு எப்படி செல்வது என வழி தெரியாது. இருப்பினும், ரயில் நிலையங்களின் பெயர்களை நினைவில் வைத்து, அதைக்கொண்டு விசாரித்து சென்றுள்ளார்.

படிக்க:
கோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா ?
♦ கொரொனா நிவாரணப் பொருட்கள் : ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி மற்ற கட்சிகளுக்கு தடையா ?

மகாராஷ்டிராவில் கிளம்பி… சோலாப்பூரில் இருந்து ஹைதராபாத், விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டணம்… இவ்வாறு… நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் என்ற அளவில் நான்கு நாட்கள் பயணத்துக்குப் பிறகு ஒடிசா எல்லைக்குள் நுழைந்தார். அதன்பிறகு வீட்டுக்கு போன் செய்யலாம் என்றால் சார்ஜ் இல்லை. யாரோ ஒருவரிடம் போனை வாங்கி வீட்டுக்குப் போன் செய்து வந்துகொண்டிருப்பதைச் சொன்னார். வீட்டினர், மிகுந்த அச்சத்துடன் காத்திருந்தனர்.

ஏப்ரல் 7-ம் தேதி, வெற்றிகரமாக தன் சொந்த ஊருக்குச் சென்றார். ஆனால், ஊர் வாயிலிலேயே மக்கள் அவரை தடுத்து நிறுத்தி உரிய பரிசோதனைக்குப் பிறகே ஊருக்குள் விட முடியும் என்று சொல்லி, மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இப்போது அந்த இளைஞர் Bichitrapur-ல் உள்ள பள்ளிக்கூடத்தில் 10 நாட்கள் தனிமைபடுத்தி வைக்கப்பட்டுள்ளார்.

நன்றி : ஃபேஸ்புக்கில் பாரதி தம்பி

ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு ! பாசிச UAPA சட்டங்களை ரத்து செய் !

0

♦ கொரோனாவை கட்டுப்படுத்துவதைவிட பேராசிரியர். ஆனந்த் தெல்தும்டே, கௌதம் நவ்லகாவை சிறையிலடைப்பதில் தீவிரம் காட்டும் மோடி அரசு!

♦ ஊபா (UAPA) உள்ளிட்ட பாசிச சட்டங்களை ரத்து செய் !

***

ரும் ஏப்ரல் – 14ந் தேதி மனித உரிமைப் போராளிகளான முனைவர் ஆனந்த் தெல்தும்டே, கௌதம் நவ்லகா ஆகியோரை சிறை அதிகாரிகள் முன்னிலையில் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. நாடு முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வரும் சூழலில் ஏற்கனவே ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று வரலாற்று அறிஞர் ரொமிலாதப்பர், எழுத்தாளர் அருந்ததிராய் உள்ளிட்டவர்கள் கோரினர். அதனை நிராகரித்தது மட்டுமின்றி, இவர்கள் இருவரையும் சிறையிலடைப்பதிலும் தீவிரம் காட்டுகின்றது உச்சநீதிமன்றம்.

ஆனந்த் தெல்தும்டே மற்றும் கௌதம் நவ்லகா.

பாசிச ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ள அவர்களது கைதுக்கு முந்தைய பிணை (pre-arrest bail) மனுக்களை கடந்த மார்ச் 16-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதோடு, அவர்கள் இருவரும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதியன்று போலீசாரிடம் சரணடைய வேண்டுமென உத்தரவிட்டது. அதனை பின்னர் ஏப்ரல் 14-ம் தேதி என நீட்டித்தது. உரிய ஆதாரங்கள் எதுவுமின்றி ஒரு பொய்வழக்கு போலீசாரால் சோடிக்கப்பட்டுள்ள போதிலும், அது குறித்து விசாரணையை மேற்கொள்ளாமலேயே, பிணை மறுக்கப்பட்டு ஊபா சட்டத்தின் கீழ் அவர்கள் சிறையிலடைக்கப்படுகின்றனர்.

2018-ஆம் ஆண்டின் பீமா கோரேகான் நிகழ்வைத் தொடர்ந்து, “மோடியைக் கொல்ல மாவோயிஸ்டு சதி” என்ற பெயரில் புனையப்பட்ட பொய்வழக்கில் ஏற்கெனவே சுதா பரத்வாஜ், வெர்னன் கொன்சால்வேஸ், அருண் பெரேரா, தெலுங்கு கவிஞர் வரவர ராவ் உள்ளிட்ட 9 பேர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் எனப்படும் ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பல மாதங்களாகத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே பொய் வழக்கில் தொடர்புடையவர்கள் என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள இவ்விருவரும் இப்போது பாசிச ஊபா சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்படுகின்றனர்.

படிக்க:
செயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு !
♦ கொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன ? | மக்கள் அதிகாரம்

மகாராஷ்டிராவின் புனே நகரப் போலீசாரால் தாக்கல் செய்யப்பட்ட பொய்யான முதல் தகவல் அறிக்கை, அதைத் தள்ளுபடி செய்யக்கோரி ஆனந்த் தெல்தும்டே உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் நிராகரிப்பு, பிணைபெறும் பொருட்டு உச்ச நீதிமன்றம் அளித்த கால அவகாசம், அதை மீறி புனே போலீசாரின் கைது நடவடிக்கை, அதற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் தெல்தும்டே தாக்கல் செய்த கைதுக்கு முந்தைய பிணை மனுவினை தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர்.

இப்பாசிச ஊபா சட்டத்தின்படி, விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்காமல் ஒருவரை எவ்விதக் காரணமும் இன்றி தனிமைச் சிறையில் அடைத்து வதைக்க முடியும். வாரண்டு இல்லாமல் போலீசார்  வீட்டைச் சோதனையிட்டுப் பொருட்களைக் கைப்பற்ற முடியும். தீவிரவாதம் என்ற சொல்லுக்கு தெளிவற்ற விளக்கமளிப்பதன் மூலம் அனைத்து அரசியல், பொருளாதார, தொழிற்சங்க போராட்டங்களையும் சட்டத்தின்கீழ் கொண்டுவந்து ஒடுக்க முடியும். அரசால் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தாலோ, தடை செய்யப்பட்ட அமைப்புகளின் நோட்டீசைக் கையில் வைத்திருந்தாலோ, ஒருவரைக் கைது செய்ய முடியும்.

இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபர், எந்த நீதிமன்றத்திலும் முன்ஜாமீன் பெற முடியாது. நீதிபதியாகப் பார்த்து இரக்கப்பட்டால் ஒருவேளை பிணை கிடைக்கலாம். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் அதற்காக அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்கள். இந்த நீதிமன்ற நடவடிக்கையை பொதுமக்களோ, பத்திரிகையாளர்களோ பார்ப்பதற்கு அனுமதியுமில்லை.

இக்கொடிய ஊபா சட்டத்தின் கீழ் கைதானால் பல ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவிக்க நேரிடும் என்பதை நம்மில் பலர் அறிந்திருக்க முடியாது. கொடுஞ்செயல்கள் புரிந்த குற்றவாளிகூட ஒருசில ஆண்டுகள் தண்டனை பெற்று தப்பிவிட முடியும். ஆனால், ஊபா சட்டத்தின் கீழ் போலீசார் ஒரு அப்பாவிக்கு எதிராக தங்களிடம் வலுவான ஆதாரம் இருப்பதாகக் கூறினால், அந்த நபர் ஆண்டு கணக்கில் சிறையில் இருக்க நேரிடும். இக்கொடிய பாசிச சட்டத்தின் கீழ்தான் ஆனந்த் தெல்தும்டேவும் கௌதம் நவ்லகாவும் இப்போது சிறையிடப்படுகின்றனர்.

படிக்க:
புதிய தாராளவாத வைரஸின் சகாப்தம் !
♦ ஜம்மு காஷ்மீர் : பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் …

“பயங்கரவாத நக்சல்பாரிகளின் செயல்பாட்டுக்கு அவர்கள் உதவுகிறார்கள்”, “பிரதமர் நரேந்திர மோடியை ‘ராஜீவ் காந்தி மாதிரியான’ படுகொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்” என்பதுவரை பல கதைகளை போலீசு சொல்லிக் கொண்டிருக்கிறது. இதன்படி, முனைவர் ஆனந்த் தெல்தும்டேவின் கணினியைச் சோதனையிட்டதில் இதற்கு ஆதாரமாகச் சில கடிதங்கள் கிடைத்துள்ளதாகப் போலீசு கூறுகிறது. பொதுவாக, இதுபோன்ற சோதனைகளில் பாதிக்கப்பட்டவர்களின் எலக்ட்ரானிக் பொருட்களை கையகப்படுத்தி, அதன் மூலம் தங்களுக்கு என்ன வேண்டுமோ அதை போலீசார் சொல்லிக் கொள்வார்கள். பொது வெளிக்கு வந்துவிட்ட இந்தக் கடிதங்களை ஏராளமானோர் அலசி ஆராய்ந்து இவற்றின் போலித்தன்மையை தோலுரித்துவிட்டனர். மோதல் மேலாண்மை நிறுவனத்தின் (Institute of Conflict Management) செயல் இயக்குனராக உள்ள அஜய் சகானி என்ற நிபுணர்கூட, இந்தக் கடிதங்கள் போலியானவை என சொல்லிவிட்டார். ஆனாலும், வாதாடுவதற்கு எந்தவித வாய்ப்பும் அளிக்கவில்லை.

பிணை மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளான அருண் மிஸ்ரா, முகேஷ் குமார் ரசிக்பாய் ஷா ஆகியோர் சார்பில் பேசிய நீதிபதி மிஸ்ரா, “நாங்கள் மார்ச் 16-லிருந்து ஏப்ரல் 6-ஆம் தேதிவரை இவ்விருவருக்கும் 3 வார கால அவகாசம் அளிக்கிறோம். அதன் பிறகு அவர்கள் சரணடைய வேண்டும். கைது செய்யப்படுவதிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொண்டு, கடந்த ஜனவரி 2018 முதலாக ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளை இவர்கள் மகிழ்வுடன் அனுபவித்துள்ளனர்” என்கிறார்.

தான் கைது செய்யப்பட்டு சிறையிடப்படுவதையும், அதன்மூலம் தான் விரும்பி செய்து வரும் மனித உரிமைப்பனியை, எழுத்துப் பணியை செய்ய முடியாமல் போய்விடுமே என்பதை எண்ணி முனைவர் ஆனந்த் தெல்தும்டே பல நாட்கள் உறங்க முடியாத நிலையில் உள்ளார் என்று அவரது மகள்களான ராஷ்மியும் ப்ராச்சியும் எழுதியுள்ள பகிரங்கக் கடிதமே, இந்த வேதனையை உணர்த்துகிறது. ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ, அவர் ஒன்றரை ஆண்டுக் காலத்தை மகிழ்வுடன் அனுபவித்துள்ளார் என்கிறார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பாசிச வக்கிரத்துக்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?

“இது தனிநபர்களுக்கு எதிரான தாக்குதல் அல்ல; மாறாக, நாட்டுக்கு எதிரான செயல். இதனாலேயே கைது செய்ய விசாரணையை மேற்கொள்ள வேண்டியுள்ளது” என்கிறார் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா. இந்திய சட்டத்துறையின் பாசிச வக்கிரத்துக்கு இதைவிட வேறென்ற சான்று வேண்டும்?

மனித உரிமைப் போராளிகள், தொழிலாளர் நல வழக்குரைஞர்கள், அறிவுத்துறையினர் – என சமூகத்தின் முற்போக்கு சக்திகள் அனைவரையும் அச்சுறுத்தி அடக்குவதற்கு மிகக் கொடிய பாசிச ஊபா சட்டத்தை மோடி அரசு ஏவி விடுவதையும், அதற்கு அடிபணிந்து இந்திய அரசியல், நீதி, சட்டம் உள்ளிட்ட கட்டமைப்பே பாசிசக் காட்டாட்சிக்குப் பாதையமைத்துக் கொடுப்பதையும் நிரூபித்துக் காட்டுவதற்கு இதைவிட வேறேன்ன சான்று வேண்டும்?

மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியத்தில் நிலமற்ற விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவரான  முனைவர் ஆனந்த் தெல்தும்ப்டே, எழுத்தாளர், விமர்சகர், ஆய்வாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர், கல்வியாளர்; பொறியியல், கார்ப்பரேட்டு நிர்வாகம், சமூகவியல் – என பல துறைகளில் உயர்ந்த பொறுப்புகளிலும், காரக்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழக(IIT)த்தின் பேராசிரியராகவும் பணியாற்றியவர். தற்போது கோவா நிர்வாகவியல் கழகத்தில் முதுநிலைப் பேராசிரியராகவும், பெருந்தரவு பரிசீலனைத் துறையின் தலைவராகவும் உள்ளார். ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் கமிட்டி(CPDR)யின் பொதுச் செயலாளராகவும், கல்வி பெறும் உரிமைக்கான அனைத்திந்திய அரங்கத்தின் (AIFRTE) தலைமைக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.

கௌதம் நவ்லகா, பத்திரிகையாளரும் ஜனநாயக உரிமை – மனித உரிமைப் போராளியுமாவார். டெல்லியைச் சேர்ந்த ஜனநாயக உரிமைக்கான மக்கள் கழகத்தில் (PUDR) முன்னிணியாளராக இயங்கிவரும் இவர், எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி இதழின் ஆசிரியர் குழுவின் ஆலாசகராகவும் இயங்குகிறார்.

பார்ப்பன பாசிசத்தின் இரும்புப் பிடியில் சிக்கி முஸ்லிம்களும், தாழ்த்தப்பட்டோரும், தொழிலாளர்களும், அறிவுத்துறையினரும், புரட்சியாளர்களும் அன்றாடம் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். எண்ணற்ற போராளிகள் சிறை வைக்கப்படுகிறார்கள். பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான போராட்டங்களின் கூர்முனையாக விளங்கும் அமைப்புகளும் அறிவுத்துறையினரும் “நகர்ப்புற நக்சல்கள்” என்று முத்திரை குத்தி வேட்டையாடப்படுகிறார்கள்.

தன்னுடைய பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுபவர்களை, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கைது செய்து நிரந்தரமாக சிறையில் அடைப்பது என்று இந்து மதவெறி பாசிச கும்பல் செயல்படுகிறது. அறுபத்தைந்து வயதைக் கடந்துவிட்ட ஆனந்த் தெல்தும்டே, கௌதம் நவ்லகா ஆகியோரையும், எழுபத்தைந்து வயதைக் கடந்துவிட்ட வரவரராவையும், சுதா பரத்வாஜ் போன்ற பெண் வழக்குரைஞர்களையும், உடல் ஊனமுற்று சக்கர நாற்காலியை விட்டு அகல முடியாத தோழர் சாய்பாபாவையும் ஊபா சட்டத்தில் சிறையிலிட்டு வதைப்பதற்கும், சித்திரவதை செய்து கொல்வதற்கும் பெரிய அளவில் வேறுபாடு ஏதுமில்லை.

இது வெறும் மனித உரிமை மீறல் விவகாரம் மட்டுமல்ல, இந்தியாவின் அரசியல் ஜனநாயக நிகழ்ச்சிப் போக்கை மாற்றியமைத்து பாசிசத்தைத் திணிக்கும் நடவடிக்கையை முன்னறிவிப்பதாகும். கோழைகளாகவும் அடிமைகளாகவும் ஆகப் பெரும்பான்மையான அறிவுத்துறையினர் மாறியிருக்கும் இன்றைய சூழலில், ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் இப்பாசிசத் தாக்குதலுக்கு எதிராக வாய்மூடிக் கிடக்கும் சூழலில், தம் வாழ்நாளை மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்துள்ள இத்தகையப் போராளிகளை விடுவிக்கக் கோரிப் போராடுவதென்பது, நமது ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பதற்கான பாசிச எதிர்ப்புப் போராட்டமாகும்.

கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் காட்டும் வேகத்தைவிட இவர்களை கைது செய்து சிறையிடைப்பதில் காட்டும் வேகம்தான் மோடி அரசுக்கும், உச்சநீதிமன்றத்திற்கும் அதிகமாக உள்ளது.  நாடும், மக்களும் பாசிச இருண்ட காலத்திற்குள் தள்ளப்பட்டுவரும் சூழலில், மனித உரிமைப் போராளிகளான முனைவர் ஆனந்த் தெல்தும்ப்டே, கௌதம் நவ்லகா மற்றும் பிற மனித உரிமைப் போராளிகளின் விடுதலைக்காக உரத்த குரலெழுப்புவோம்! மிகக் கொடிய ஊபா உள்ளிட்ட பாசிசச் சட்டங்களுக்கு எதிராகவும், மோடி கும்பலின் கார்ப்பரேட் – காவி பாசிசத்துக்கு எதிராகவும் போராடுவோம்!

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடு. தொடர்புக்கு : 94451 12675.

தேசிய பேரிடரான கொரானா தடுப்பு நடவடிக்கை குறித்து உயர் நீதிமன்றத்தில் PRPC வழக்கு !

தேசிய பேரிடரான கொரானா நோயை தடுக்க மற்றும் கட்டுப்படுத்த சிறப்பு செயல்பாட்டு குழு அமைக்கவும், தனியார் மருத்துவமனை கட்டணக்கொள்ளைக்கு வழிவகுக்கும் அரசாணையை ரத்து செய்யவும் கோரி – 2 பொதுநலவழக்குகள் !

***

க்கள் உரிமை பாதுகாப்பு மையம் சென்னைகிளை செயலாளர் வழக்கறிஞர் திரு.ஜிம்ராஜ் மில்ட்டன், சென்னை உயர்நீதிமன்றத்தில்,

1. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் செயல்பாட்டுக்குழு அமைத்து தேசிய நோய்த்தடுப்பு மைய வழிகாட்டுதலின்படி பருண்மையாக செயல்திட்டம் வகுத்து கொரோனா நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

2. கொரோனா தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பார்க்கவேண்டும் என்ற அரசாணையை ரத்துசெய்து இலவச சிகிச்சை வழங்கவும் இரண்டு பொதுநல வழக்குகள் (W.P.7414 of 2020, W.P.7456 of 2020) தாக்கல் செய்தார்.

மேற்கண்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் S. பார்த்தசாரதி ஆஜரானார். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் திரு. அரவிந்த் பாண்டியன் அவர்கள் பல்வேறு விஷயங்களை வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட இம்மனுவின் மீது அரசு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் குறிப்பான விவரங்கள் இருந்தால் தெரிவிக்கும்படியும் தெரிவித்தார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

• மனுதாரர் தரப்பில் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், தமிழகம் முழுவதும் அடித்தட்டு மக்களுக்கு பொது சமையற்கூடம் அமைத்து உணவு வழங்கவும், சாலையோரங்களில் வசிக்கின்ற மக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவுக்கு உத்திரவாதம் அளிக்கவும், வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்சனை பற்றியும் முன்வைக்கப்பட்டது.

மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாவட்ட, வட்டார அளவில் செயல்பாட்டு குழுக்கள் அமைத்து நிவாரணப்பணிகளை செய்யவும், இவற்றில் ஏற்கனவே அரசிடம் தன்னார்வலர்களாக பதிவு செய்துள்ள 1100 மருத்துவர்கள், 3500 மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட 45,000 பேரை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.

மேற்படி கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு பதிலளிக்க வேண்டும் என வழக்கு இருவாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவண்
S. ஜிம்ராஜ் மில்ட்டன், வழக்கறிஞர்,
செயலாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

***

உலகிலுள்ள அனைத்து நாடுகளும் COVID-19 எனப்படும் தொற்றுநோயினால் உயிரிழப்புகளை சந்தித்து வரும் சூழலில், இந்நோயினை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. COVID-19 நோய் தமிழகத்தில் மூன்றாவது நிலையினை (சமூக பரவல் – community Transmit) எட்டியுள்ள நிலையில் இத்தகைய சமூகவிலக்கு என்பது (Social distancing) கட்டுக்குள் கொண்டுவரும் முறைதானெயொழிய, முழுமையான தீர்வு அல்ல.

எனவே கூடுதலாக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம்- 2005 ன் கீழ் (Disaster Management Act – 2005) தமிழக அரசு தலைமைச்செயலர் தலைமையில், சுகாதாரம், சமூகநலம், நிதி, பொதுப்பணித்துறை, தொழிலாளர் துறை சார்ந்த அரசுச் செயலாளர்கள், தன்னார்வலர்கள், சுகாதாரம் – சமூக சேவையில் நிபுணத்துவம் உள்ளவர்களை உள்ளடக்கிய ”செயல்பாட்டுக்குழுவினை (Executive Committee)” அமைக்கவேண்டும். அதேபோல தன்னார்வலர்களை உள்ளடக்கிய மாவட்டம், தாலுக்கா/மண்டல அளவிலான செயல்பாட்டுக்குழுவை அமைக்கவேண்டும். மேலும்,

• பள்ளி, கல்லூரி, திருமண மண்டபங்கள் போன்ற இடங்களை தற்காலிக மருத்துவமனைகளாகவும் மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களாகவும் மாற்றவேண்டும்.

படிக்க:
புதிய தாராளவாத வைரஸின் சகாப்தம் !
♦ கொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன ? | மக்கள் அதிகாரம்

• வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை சிறப்பு முகாம்களில் தங்கவைத்து சிகிச்சை அளிக்கவும் மற்றும் கண்காணிக்கவும் வேண்டும்.

• தனியார் மருத்துவமனைகளில் COVID-19 தொற்றுநோய்க்குஇலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்க வேண்டும்.

• COVID-19 தொற்றுநோய் தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள், காவல்துறை போன்ற அத்தியவாசிய பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு சாதனங்கள் அளித்து அவர்களது பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்தவேண்டும்.

– ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் உரிமைப்பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளை செயலாளர் திரு.ஜிம்ராஜ் மில்டன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். (W.P.No.7414/2020).

இந்த பொதுநல வழக்குடன் கூடுதலாக கீழ்கண்ட இடைக்கால கோரிக்கைகள் அடங்கிய இடைக்கால கோரிக்கைமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

1. தமிழக அரசு தனியே“COVID-19 நிவாரண நிதி (COVID -19 RELIEF FUND)”எனும் பெயரில் வங்கிக்கணக்குதுவக்கி நன்கொடைகளை பெறவேண்டும் (W.M.P.No. 8879/2020).

2. தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அறிவியல் மாணவர்கள் கொண்ட தன்னார்வு குழுக்களை உருவாக்கி, பயிற்சியளித்து வீடு தோறும் COVID-19 தொற்றுநோய்தடுப்பு, மருத்துவபரிசோதனை, உணவு வழங்கல்மற்றும் விழிப்புணர்வு போன்ற பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் (W.M.P.No. 8880/2020).

3. ஒவ்வொரு குடும்பஅட்டைதாரருக்கும் தமிழக அரசு அறிவித்துள்ளரூ.1000 நிவாரணத் தொகையினை உயர்த்தி, நகர்ப்புற குடும்பங்களுக்கு ரூ.10,000 மற்றும் கிராமப்புற குடும்பங்களுக்கு ரூ.5,000 என வழங்கவேண்டும் (W.M.P.8881/2020).

4. அனைத்து மக்களுக்கும் தேவையான உணவினை உத்திரவாதப்படுத்த தாலுக்காவாரியாக மற்றும் தேவையான இடங்களில் சமூக உணவுக்கூடங்கள் (Community Kitchen) அமைத்து தன்னார்வ குழுக்கள்மூலம் வீட்டிற்கே சென்று விநியோகிக்கவேண்டும் (W.M.P.8882/2020).

5. டெங்குவிற்கு நிலவேம்பு குடிநீர் பயன்படுத்தியதுபோல, COVID-19 நோய்த்தடுப்பில் பாரம்பரிய சித்த மருத்துவம், ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவ முறைகளையும் பயன்படுத்தவேண்டும் (W.M.P.8883/2020).

இந்த பொதுநலவழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 27.03.2020 அன்று மாண்புமிகு நீதிபதிகள் சுப்பையா & பொங்கியப்பன் அடங்கிய அமர்வின் முன்பாக சிறப்பு அனுமதியின் பேரில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் திரு.பாலன் ஹரிதாஸ் ஆஜராகி, மேற்சொன்ன பரிந்துரைகளை சட்டரீதியாக விளக்கி வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் திரு.அரவிந்த் பாண்டியன் மனுதாரரின் பரிந்துரைகளை கவனத்தில் கொள்ளவும், பரிசீலிக்கவும் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாகக் கூறி, வழக்கு குறித்த அரசின் கருத்துகளை தெரிவிக்க கால அவகாசம் கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கினை இரண்டு வாரங்கள் கழித்து விசாரணைக்கு பட்டியலிடவும், அவசர நிலையெனில் நீதிமன்றத்தில் தெரிவித்து உடனடியாக விசாரணைக்கு கொண்டு வரவும் உத்தரவிட்டனர்.


தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னைக் கிளை.

ஜம்மு காஷ்மீர் : பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் …

பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் …

கைபேசியைப் பயன்படுத்த இயலாமல் உங்களால் ஒரேயொரு நாளைக் கழித்துவிட முடியுமா? இணைய தளங்கள், முகநூல், டிவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட நவீன தொலைத்தொடர்பு வசதிகளைப் பயன்படுத்த முடியாமல் இன்றைய இளைஞர்களால் ஒரு நிமிட நேரத்தைக் கடந்துவிட முடியுமா? தகவல் தொடர்புக்கும் பொழுதுபோக்கிற்கும் மட்டுமின்றி, கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும் வியாபாரத்திற்கும்கூட கைபேசியும் இணைய தள இணைப்பும் இன்றியமையாச் சாதனங்களாக மாறிவிட்ட காலத்தில் வாழ்ந்துவரும் நமக்கு, இந்த நவீன சாதனங்கள் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதுகூட அச்சமூட்டக்கூடிய கொடுங்கனவாகவே இருக்கும். ஆனால், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கோ இந்தக் கொடுங்கனவுதான் அன்றாடம் முகங்கொடுக்க வேண்டிய நிஜம்.

ஜம்மு காஷ்மீரில் இந்த அடிப்படையான நவீன தொலைத்தொடர்பு சேவைகளைப் பயன்படுத்துவதற்குக் கடந்த ஆண்டு ஆகஸ்டில், அரசியல் சாசனப் பிரிவு 370 முடமாக்குவதற்கு ஒரு நாள் முன்பாக விதிக்கப்பட்ட தடை, ஐந்து மாதங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருந்துவருகிறது.

நெருக்கடி நிலை காலத்தில்கூடத் தொலைபேசியைப் பயன்படுத்தி ஒருவரையொருவர் தொடர்பு  கொள்ளும் உரிமை ரத்து செய்யப்படவில்லை. ஆனால், இந்து சாம்ராட் மோடியோ தமது அரசியல் உரிமைகளுக்காகப் போராடிவரும் காஷ்மீரிகள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவதில் புதிய வரலாற்றைப் படைத்து வருகிறார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமையை முடக்கியது; மாநிலத் தகுதியைப் பறித்து, ஜம்மு காஷ்மீரை இரண்டாக உடைத்து, அவற்றைத் தனித்தனி ஒன்றியப் பிரதேசங்களாக மாற்றியது ஆகியவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு சேவைகளை ரத்து செய்ததும் காஷ்மீரிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையாகும்.

“ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ள முடியாமலும், ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள முடியாமலும், தொலைத்தொடர்பு வசதிகள் அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையில் இருப்பதையும்விட அதிகபட்ச தண்டனை இருந்துவிட முடியுமா?” எனத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எகத்தாளமாகப் பேசியிருப்பதே இத்தண்டனையின் அத்தாட்சி.

காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் அனுராதா பாசினும் காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர் குலாம் நபி ஆசாத்தும் இந்த “தண்டனையை” ரத்துசெய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் 160 நாட்கள் கழித்து, ஜனவரி 10 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பும்கூட காஷ்மீர் மக்களின் முதுகில் குத்துவதாகவே அமைந்துவிட்டது. இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து இரத்தினச் சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால், “குரைக்கிற நாய் கடிக்காது” என்ற பழமொழியைத்தான் உவமானமாகக் கூற முடியும்.

130 பக்கங்களைக் கொண்ட அத்தீர்ப்பில், குடிமக்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை, நடமாடும் உரிமை குறித்துப் பல்வேறு விளக்கங்களும், அவற்றைத் தடை செய்வது குறித்துப் பல்வேறு எச்சரிக்கைளும் தரப்பட்டிருப்பினும், இறுதியாக, தொலைத்தொடர்பு சேவையை காஷ்மீரிகளுக்குத் தடையின்றி வழங்கும் பொறுப்பை மோடி – ஷா கும்பலின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பித்துவிட்டனர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

“இணையதளம் வாயிலாகக் கருத்துக்களை வெளியிடுவதற்கும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கும் அரசமைப்புச் சட்டத்தின் கூறு 19 (1) (ஏ) மற்றும் (ஜி) ஆகியவற்றின் கீழ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவை போன்ற அடிப்படை உரிமைகள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அரசமைப்புச் சட்டத்தின் கூறு 19 (2) மற்றும் (6) ஆகியவற்றுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இவற்றுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்போது கள நிலவரத்துக்கும் கட்டுப்பாடுகளால் ஏற்படும் தாக்கத்துக்கும் இடையிலான மதிப்பீட்டைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.”

“இணைய தள சேவைகளை நியாயமான காரணங்கள் இல்லாமல் தன்னிச்சையாக மட்டுமின்றி, கால வரம்பின்றியும் தடை செய்ய முடியாது.”

“144 தடையுத்தரவை நியாயமான கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை ஒடுக்கப் பயன்படுத்தக் கூடாது. பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளைப் பாதுகாக்கும் பொருட்டும், சட்டம்  ஒழுங்கிற்கு வரவிருந்த அபாயத்தைத் தடுப்பதற்குமே ஜம்மு காஷ்மீரில் 144 கீழ் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அரசு அளித்திருக்கும் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள மறுப்பது மற்றும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பது ஆகியவற்றின் காரணமாக 144 தடையுத்தரவைப் பிறப்பிக்க முடியாது.”

படிக்க:
காஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு !
கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்

”தேசப் பாதுகாப்பு என்ற அம்சத்தை எடுத்துக் கொண்டாலும்கூட எதிர்ப்புக்கு ஏற்ற நடவடிக்கைதான் எடுக்கப்பட வேண்டுமெயொழிய, அதனை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்திவிடக் கூடாது.”

“ஒரு மாநிலத்தில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அரசு தடையுத்தரவுகளைப் பிறப்பித்தால், அந்த உத்தரவுகள் அனைத்தும் வெளியிடப்பட வேண்டும். அப்போதுதான் அவற்றை எதிர்த்துப் பொதுமக்கள் வழக்குத் தொடர முடியும்.”

இவை அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கும் வரையறைகள், விளக்கங்கள். குறிப்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமது தீர்ப்பில் தொலைத்தொடர்பு சேவைகளை ரத்து செய்யும்போது அது குறித்த ஆணையைத் தக்க காரணங்களோடு பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை ஏற்க மறுத்த மோடி அரசு, “அவ்வாறு வெளியிட வேண்டுமென்று சட்டத்தில் கூறப்படவில்லையென்றும், வெளியிடாமல் இருப்பதற்கு அரசிற்குத் தனியுரிமை உள்ளதென்றும்” வாதாடியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

இணைய தள சேவையைத் தீவிரவாதிகளும் பயன்படுத்துவார்கள் என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக்கொண்டாலும், எதார்த்தமான சூழ்நிலைக்கு ஏற்ப குறைந்தபட்ச கட்டுப்பாடுகளைத்தான் விதிக்க வேண்டுமென்றும், அவ்வாறு குறைந்தபட்ச கட்டுப்பாடு விதிக்கப்படுவதை நியாயப்படுத்தும் காரணிகள் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவைகளுக்குத் தடைவிதித்துப் பிறப்பிக்கப்பட்டிருக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் மனுதாரர்களின் கோரிக்கை. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டிருக்கும்படி விரிவான, விளக்கமான அரசாணை வெளியிடப்பட்டதாகவோ, பொறுப்பான அதிகாரிகள் வாரம் ஒருமுறை கூடி அத்தடையை நீட்டிப்பதா, வேண்டாமா எனப் பரிசீலித்து முடிவெடுத்ததாகவோ எவ்விதமான ஆதாரங்களும் விசாரணையில் சமர்ப்பிக்கப்படவில்லை. எதார்த்தமான சூழ்நிலைகளுக்கு ஏற்றபடிதான் இந்தக் கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதையும் மைய அரசு நிரூபிக்கவில்லை. மோடி அரசின் நோக்கமென்பது தொலைத்தொடர்பு சேவைகளைக் காலவரையின்றி ரத்து செய்து காஷ்மீரிகளைத் தண்டிக்க வேண்டும் என்பது தவிர வேறல்ல என்பதை இதன் வழியாக யாரும் புரிந்துகொள்ள முடியும். இந்த ஒரு காரணத்தை அடிப்படையாகக் கொண்டே காஷ்மீரிகளின் மீது விதிக்கப்பட்டிருக்கும் இந்தப் பாரதூரமான தண்டனையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்திருக்க முடியும்.

ஆனால், நீதிபதிகளோ, இந்த இயற்கை நீதிக்கு மாறாகவும், தீர்ப்பில் தாங்கள் அளித்த விளக்கங்களுக்கு எதிராகவும் நடந்துகொண்டு, இத்தடையை மறுஆய்வு செய்யும் பொறுப்பை மோடி அரசிடமே ஒப்படைத்தனர். இந்த உத்தரவுப்படி மோடி அரசு நடத்திய மறு ஆய்வோ தடை விலக்கல் என்ற நாடகத்தை அரங்கேற்றி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கழிப்பறைக் காகிதம் போலத் துடைத்துப் போட்டுவிட்டது.

இந்நாடகத்தின்படி, ஜம்மு காஷ்மீர் முழுவதும் “ப்ரீ பெய்டு” செல்லிடப் பேசி சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், இணைய தள சேவை அனுமதிக்கப்படவில்லை. ஜம்மு பகுதியிலுள்ள பத்து மாவட்டங்களிலும், காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த இரண்டு மாவட்டப் பகுதிகளிலும் “போஸ்டு பெய்டு” சேவையைப் பயன்படுத்துவோருக்கு மட்டும் 2ஜி இணைய தள சேவை அனுமதிக்கப்பட்டிருக்கிறது. பள்ளத்தாக்கிலுள்ள எட்டு மாவட்டங்களில் இந்தளவிற்குக்கூட இணைய தள சேவை அனுமதிக்கப்படவில்லை. சிறீநகரில் வசிப்பவர்கள் இணைய தள வசதியைப் பயன்படுத்த வேண்டுமென்றால், 300 கி.மீட்டருக்கு அப்பாலுள்ள ஜம்முவுக்குத்தான் செல்ல வேண்டும்.

இன்றைய நிலையில் 2-ஜி இணைய தள சேவை என்பதே காலாவதியாகிப் போன ஒன்று. மேலும், இந்த சேவை அனுமதிக்கப்பட்ட பகுதிகளிலும் அனைத்து இணைய தளங்களுக்கும் சென்றுவிட முடியாது. மோடி அரசு அனுமதித்திருக்கும் இணைய தளங்களை மட்டுமே பார்வையிட முடியும், பயன்படுத்திக் கொள்ள முடியும். அனுமதிக்கப்பட்ட இந்த இணைய தளங்களில் தொலைக்காட்சி செய்தி சேனல்கள் எதுவும் கிடையாது. முகநூல், டிவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியாது. அரசின் சேவைகளை வழங்கும் தளங்கள் மற்றும் மோடி அரசைத் துதிபாடும் தளங்கள் ஆகியவற்றை மட்டுமே பார்வையிட முடியும்.

தொலைத்தொடர்புகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை அநீதியானது என்றால், இந்தத் தடை விலக்கமோ வக்கிரமானது. மேலும், இந்தத் தடை விலக்கமும் வாரம் ஒருமுறை அரசு அதிகாரிகளால் பரிசீலிக்கப்படும் என்பதால், எந்த நேரத்திலும் தொலைத்தொடர்பு சேவைகளை மீண்டும் முற்றிலுமாகத் தடைசெய்யும் வாய்ப்பு இருப்பதையும் மறுத்துவிட முடியாது.

இன்று இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கிலுமே அடக்குமுறைகளை ஏவிவிடும் அரசுகளுக்கு எதிராகக் கருத்துக்களைப் பரப்பிப் பொதுமக்களை ஒருங்கிணைப்பதிலும், அவர்களைப் போராட்டக்களத்துக்குக் கொண்டு சேர்ப்பதிலும் சமூக வலைத்தளங்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகின்றன. அப்படிபட்டதொரு நிலைமை ஜம்மு காஷ்மீரில் உருவாகிவிடக் கூடாது என்ற அச்சத்தின் காரணமாகவே தொலைத்தொடர்பு சேவைகளைத் தடை செய்திருக்கிறது, மோடி அரசு. உண்மையில், இப்பார்ப்பன பாசிசக் கும்பல் தீவிரவாதிகளைக் கண்டு அச்சப்படுவதைக் காட்டிலும், 370-ஐ முடமாக்கியதற்கு எதிராக மக்கள் திரள் போராட்டம் வெடித்துவிடக் கூடாது என்றுதான் கடும் அச்சம் கொண்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் மட்டுமல்ல, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீவிரமான போராட்டங்கள் நடைபெற்ற வட இந்திய நகரங்களில்கூட இணைய தள சேவையைத் தற்காலிகமாகத் தடை செய்யும் அடக்குமுறையை அரசுகள் கையில் எடுத்துவருகின்றன. இந்த நிலையில்தான் பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் என்ற விதத்தில் சந்தர்ப்பவாதமான தீர்ப்பை அளித்திருக்கிறது, உச்ச நீதிமன்றம். பாபர் மசூதி, ஐயப்பன் கோவிலில் வழிபட பெண்களை அனுமதிப்பது ஆகிய வழக்குகளைத் தொடர்ந்து பார்ப்பன பாசிசக் கும்பலுக்கு உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் புத்தாண்டு பரிசுதான் இத்தீர்ப்பு.

நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டபோது இந்திய அரசியல் சாசனத்தில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் உயிர்வாழும் உரிமையைக்கூட ரத்து செய்து தீர்ப்பை அளித்த இழிபுகழ் கொண்டது இந்திய உச்ச நீதிமன்றம். தற்பொழுது, இந்து மதவெறி பாசிசக் கும்பலின் அரசியல் அஜெண்டாக்களை நிறைவேற்றிக் கொடுக்கும் காலாட்படையாக அந்நீதிமன்றம் சேவையாற்றிவருவதைப் பார்க்கிறோம்.

ஆர்.ஆர்.டி.

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2020


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

புதிய தாராளவாத வைரஸின் சகாப்தம் !

முன்னுரை :

பணமதிப்பழிப்பு நடவடிக்கையைப் போலவே, கரோனா நோய்த் தொற்றுக்கு எதிரானஊரடங்கு உத்தரவையும் திடீரென அறிவித்து,  பெரும்பான்மையான மக்களை, குறிப்பாக தினக் கூலித்தொழிலாளர்களை,  புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பங்களைத் திண்டாடவைத்துவிட்டது, மோடி அரசு.

ஊரடங்கு உத்தரவு திணிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமது சொந்த கிராமங்களுக்குத் திரும்ப உ.பி. காஸியாபாத் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பங்கள்.

அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு அலைமோதிய மக்கள் திரளும்; சென்னை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்லுவதற்காகப் பேருந்து நிலையங்களிலும் தொடர்வண்டி நிலையங்களிலும் குவிந்த குடும்பங்களும்; தமது கிராமங்களுக்குத் திரும்ப முடியாத வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பங்கள் சென்னை தெருக்களில் தத்தளித்து நின்றதுமான காட்சிகள் அனைத்தும் மொகலாயப் பேரரசன் முகம்மது பின் துக்ளக்கை, இந்து சாம்ராட் நரேந்திர தாமோதரதாஸ் மோடி வென்றுவிட்டதை எடுத்துக் காட்டின.

பிரதமர் மோடி கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக நாட்டு மக்களிடம் இரண்டாம் முறையாக உரையாற்றப் போகிறார் என்ற செய்தி வந்தவுடன், இந்தக் கொள்ளை நோயால் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கும் பிரிவினர் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய சலுகைகளை, நிதி ஒதுக்கீடை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு பொருளாதார நிபுணர்களிடமும்கூட நிலவியது. ஆனால், மோடியோ, சலுகைகளை அறிவிப்பதற்குப் பதிலாக, ஊரடங்கு உத்தரவு மூலம் இந்த வைரஸை எதிர்த்துப் போராடும் பெரும் சுமையைப் பொதுமக்களின் தலையின் மீது சுமத்திவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.

இந்தக் கொள்ளை நோயை மருத்துவம், பொது சுகாதாரம், சமூக நிதியுதவித் திட்டங்கள் உள்ளிட்டு பல்வேறு வழிகளில் போராடி ஒழிப்பதற்கு ஐந்து முதல் ஆறு இலட்சம் கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என்றும், இது இக்கொள்ளை நோய் ஏற்படுத்தவல்ல பேரழிவை ஒப்பிடும்போது பெரும் நிதிச் சுமையல்ல என்றும் ப.சிதம்பரம் உள்ளிட்டுப் பல்வேறு பொருளாதார நிபுணர்களும் சுட்டிக்காட்டி வரும்போது, மோடி அரசோ முதல் கட்டமாக வெறும் 15,000 கோடி ரூபாயை மட்டுமே ஒதுக்கிவிட்டு, வீட்டினுள் அடைந்து கிடப்பது மட்டும்தான் இந்த வைரஸை ஒழிக்கக்கூடிய ஒரே சாத்தியமான வழி என அறிவுரை வழங்கிவிட்டு ஒதுங்கிப் போய்விட்டது. 

சிறுதொழில், சிறு வணிகம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்களின் முடக்கத்தால் ஏறத்தாழ 40 கோடி அமைப்புசாராத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட 1.70 இலட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்பது புதிய மொந்தை பழைய கள்ளு எனக் கூறத்தக்க மோசடி. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களையே மறு ஒலிபரப்பு செய்திருக்கிறது, மோடி அரசு. பட்ஜெட் பற்றாக்குறை அதிகரித்து விடக்கூடாது என்பதற்காகவே இவ்வளவு குறைவாக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அம்பலப்படுத்தியிருக்கிறது, இந்து நாளிதழ்.

பொருளாதார மந்தத்தால் உள்நாட்டு தரகு முதலாளிகளின் இலாபம் சரிந்துவிடாமல் தூக்கி நிறுத்துவதற்காக இரண்டு இலட்சம் கோடி ரூபாய் வரையில் வரித் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை ஓரிரு மாதங்களுக்கு முன்பு வாரி வழங்கிய மோடி அரசு, பொதுமக்களின் நலன் என வரும்போதோ கஜானாவை இறுக மூடிவைக்கிறது.

மோடி மட்டுமின்றி, பெரும்பாலான நாடுகளின் அரசுத் தலைவர்கள் அனைவருமே கரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதைப் பொதுமக்களின் தலையின் மீதுதான் ஏற்றி வைத்து வருகின்றனர். டென்மார்க்கில் வாழ்ந்துவரும் இந்திய நாவலாசிரியரும் கல்வியாளருமான தாபிஷ் கைர் முதலாளித்துவ அரசுகளின் இந்த அணுகுமுறையின் அடிப்படையில் கரோனா வைரஸை உலகின் முதல் புதிய தாராளாவாத வைரஸ் என வரையறுக்கிறார். அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் அனுபவத்தின் வழியாக அவர் வந்தடைந்திருக்கும் இந்த முடிவு இந்திய அரசுக்கும் பொருந்தும்.

கடந்த மார்ச் 24 அன்று ஆங்கில இந்து இதழில், “புதிய தாராளவாத வைரஸின் சகாப்தம்” (The age of the neoliberal virus) என்ற தலைப்பில் வெளியான தாபிஷ் கைர் எழுதிய கட்டுரை வாசகர்களுக்காக மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது.

***

கோவிட்-19 என்ற நோயை உருவாக்கக்கூடிய கரோனா வைரஸ்தான் இந்த உலகின் முதல் புதிய தாராளவாத வைரஸ். இப்படிக் கூறுவது ஏற்கெனவே பாதுகாப்பற்று வாழும் நோயுற்றவர்களை, வயது முதிர்ந்தோரை, ஏழைகளை (பட்டினி கிடக்காமல் இவர்களால் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாது) இந்த வைரஸ் எளிதாகத் தாக்கக்கூடிய அபாயத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகாது. மாறாக, உலகின் பல்வேறு நாட்டு அரசுகள் இந்த வைரஸை எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பதைத்தான் விமர்சிக்க வேண்டியிருக்கிறது. ஐரோப்பாவில் ஒப்பீட்டளவில் சிறப்பான சமூக நல முதலாளித்துவ அரசுகளாக உள்ள, நான் வசித்துவரும் டென்மார்க் உள்ளிட்ட நாடுகளுக்கும்கூட இந்த விமர்சனம் பொருந்தக்கூடியதுதான்.

பல்வேறு ஐரோப்பிய நாடுகளைப் போலவே டென்மார்க்கிலும் மார்ச் 12 தொடங்கி இரண்டு வார காலத்திற்கு ஊரடங்கு நடவடிக்கைகள் அமலுக்கு வந்தன. இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் மட்டும்தான் இதற்கு விதிவிலக்காக இயங்கி வந்தன. அறுபது இலட்சம் மக்கள் தொகை கொண்ட டென்மார்க்கில் மார்ச் 12 வாக்கில் 500 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தது.

படிக்க:
கொரோனா வைரஸ் என் உடலைத் தின்று வருகிறது ! – இரயாகரன்
கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்

அவசியமான இந்த ஊரடங்கு நடவடிக்கையை முன்னரே எடுத்திருக்க வேண்டும். எனினும், இந்த ஊரடங்கைத் தவிர, இந்த நோயைக் கட்டுப்படுத்தத் தேவையான மற்றைய அவசியமான நடவடிக்கைள் எதுவும், நான் இந்தக் கட்டுரையை எழுதும் தருணத்திலும், மார்ச் 17 வரை டென்மார்க்கில் எடுக்கப்படவில்லை.

மற்றைய நடவடிக்கைகளுள் மிக முக்கியமான, இன்றியமையாத ஒன்று மருத்துவப் பரிசோதனை. மற்றைய ஐரோப்பிய நாடுகளைப் போலவே, டென்மார்க்கிலும் நோய்த்தொற்று தீவிரமடைந்த நோயாளிகளுக்கு மட்டும்தான் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது. மிதமான தொற்று அறிகுறிகள் உள்ளவர்களைப் பொருத்தவரை – நூற்றுக்கும் மேற்பட்ட பிற நோய்களும் இதே போன்ற அறிகுறிகளை வெளிபடுத்தக்கூடியவைதான் – தனிமைப்படுத்திக் கொள்வது மட்டுமே அறிவுறுத்தப்படுகிறது. உள்நாட்டினுள் மருத்துவப் பரிசோதனை விரிவாக நடத்தப்படாத அதேவேளையில், டென்மார்க் அரசு, அரசியல்ரீதியான நடவடிக்கையாக, பிற நாடுகளுடனான தனது எல்லைகளை மூடிவிட்டது. செல்வ வளமிக்க மேற்குலக நாடுகளில் மருத்துவப் பரிசோதனையின் முடிவு தெரிவதற்கு இரண்டிலிருந்து நான்கு நாட்கள் வரை கால தாமதம் ஆகும் அதேவேளையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட சீனப் பகுதிகளில் நான்கு மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடியும் என்பது ஆச்சரியமான விடயம்தான்.

கரோனா தாக்குதலையடுத்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஒப்பிடும்போது மருத்துவ, சுகாதாரத் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைவானது என்கிறார், கட்டுரையாளர் தாபிஷ் கைர்.

ஆக, இதிலிருந்து நாம் விளங்கிக்கொள்வதென்ன? டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் சமூக நல மற்றும் மருத்துவ வசதிக் கட்டமைப்புகளைக் கொண்டிருந்த போதும், புதிய தாராளவாத அணுகுமுறையைத்தான் வெளிப்படுத்துகின்றன என்பதுதான் ஐயத்துக்கு இடமின்றித் தெரிகிறது. இந்த வைரஸைக் கட்டுப்படுத்தக்கூடிய பொறுப்பின் பெரும்பகுதி, தனிமைப்படுத்திக் கொள் என்ற கட்டளையின் வழியாகச் சாதாரண குடிமகனிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. சாதாரண சளித் தொல்லகளால் பீடிக்கப்பட்டவர்கள்கூடத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், அறிவுரைகளையும் கட்டளைகளையும் அள்ளிவிடும் அரசுகளோ மிகக் குறைந்த அளவிற்கே நிதி ஒதுக்கியுள்ளன.

இது வியப்புக்குரியதல்ல. கடந்த இரண்டு பத்தாண்டுகளில், எப்பொழுதெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களோ அல்லது குறிப்பிடத்தக்க பெரிய வங்கிகளோ தடுமாறத் தொடங்கியவுடனேயே, தேசிய அரசுகள், சுகாதாரம், ஆராய்ச்சி உள்ளிட்ட பொது சேவைகளுக்கான  நிதி ஒதுக்கீடுகளை வெட்டி, அதன் மூலம் கிடைக்கும் பொதுப் பணத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கியுள்ளன. இது உலகெங்கும் நடந்திருக்கிறது. இது மீண்டும் நடந்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்னர்தான், டென்மார்க் அரசு கரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்வதற்காகத் தனது நாட்டைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 5,000 கோடி அமெரிக்க டாலர் (ஏறத்தாழ 3,50,000 கோடி ரூபாய்) மதிப்புடைய சலுகைகளை வழங்கியது. இத்தொற்று நோய் ஓர் அபாயமாக உருவாவதற்கு முன்னரே, அமெரிக்காவின் டிரம்ப் அரசு, தனது நாட்டின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், நிதி மூலதனத் துறைக்கும் 1.5 இலட்சம் கோடி அமெரிக்க டாலர்களை வாரி வழங்கியது. இத்தொற்று அமெரிக்காவில் பரவி, தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்ட சமயத்தில் மேலும் 70,000 கோடி அமெரிக்க டாலர்கள் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிதியதவியாக வழங்கப்பட்டது. இங்கிலாந்து அரசு, இத்தொற்று அபாயத்தை முழுமையாக ஏற்க மறுத்தாலும், தனது நாட்டின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 90,000 கோடி அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்கியிருக்கிறது. மற்றைய நாடுகளிலும் இதே கதைதான்.

தேசியப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்காமல் தடுப்பதற்கு இத்தகைய முட்டுக் கொடுத்தல்கள் அவசியம்தான் எனினும், இதில் இரண்டு பெரிய சிக்கல்கள் உள்ளன. இந்தச் சலுகைகளின் பெரும் பகுதி வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற கண்டிப்பான நிபந்தனையோடு ஒதுக்கப்படவில்லை. அதிலும் குறிப்பாக, மிகவும் குறைவான கூலி பெறும் தொழிலாளி வர்க்கத்தின் பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. டென்மார்க், நார்வே, ஸ்வீடன் நாடுகள் கூட்டாக இணைந்து இயக்கும் ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏற்கெனவே 10,000 ஊழியர்களை இடைநீக்கம் செய்துவிட்டது. மற்றைய நாடுகளிலும் தனியார் துறையைச் சேர்ந்த ஊழியர்களும் தொழிலாளர்களும் வேலையிலிருந்து தூக்கியெறியப்படுவது நடந்து வருகிறது.

பெர்னீ சாண்டர்ஸ்

அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயகக் கட்சியின் சார்பில் சீட்டு கேட்டுப் போட்டியிட்டு வரும் பெர்னீ சாண்டர்ஸ் என்ற அரசியல் தலைவர் ஒருவர் மட்டும்தான், “இந்தச் சலுகைகள் மக்கட் தொகையில் 95 சதவீதமாக உள்ள உழைக்கும் மக்களின் வேலைகளைப் பாதுகாப்பதற்காகக் கொடுக்கப்பட வேண்டுமெயொழிய, 5 சதவீத மேட்டுக் குடியினரின் பங்கு மதிப்பு வீழ்ந்துவிடாமல் முட்டுக் கொடுக்க வழங்கப்படக் கூடாது” என வலியுறுத்தி வருகிறார். மற்றொரு சிக்கல் என்னவென்றால், அநேகமாக எந்தவொரு நாடும் இதற்கு இணையான தொகையை இத்தொற்று நோயை எதிர்கொள்ளும் விதத்தில், மக்கள் நல்வாழ்வு, சமூகத் துறைகளுக்கு ஒதுக்கவில்லை.

வெள்ளையர் அல்லாத நாடுகளில் எந்தவொரு அசம்பாவிதம் ஏற்பட்டாலும், அது மேற்குலக நாடுகளில் கனன்று கொண்டிருக்கும் இன வெறியைத் தூண்டிவிடும் என்பதோடு, சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த வைரஸ் பீதி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிதி மூலதனக் கும்பலைத் தமது பங்குகளை அவசர அவசரமாக விற்கும் நிலைக்கும் தள்ளியிருக்கிறது. சீனாவின் குறிப்பிடத்தக்க தொழில்துறைகளைக் கட்டுப்படுத்தும் அளவிற்குப் பங்குகளை வைத்திருக்கும் இந்தக் கும்பல், அப்பங்குகளை மிகவும் மலிவாக விற்பதை சீன அரசும், சீன முதலீட்டாளர்களும் வாங்கி வருகின்றனர். சீனா, தற்சமயம் இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நிலையை எட்டியிருப்பதோடு, தனது நாட்டின் பொருளாதாரத்தையும் தொழில்துறைகளையும் முன்னைக் காட்டிலும் அதிக அளவில் கட்டுப்படுத்தும் நிலையை மீண்டும் பெற்றிருக்கிறது எனக் கூறலாம். இதன் மறுபக்கத்தில் அமெரிக்காவின் காங்கிரசு மற்றும் செனட் சபைகளைச் சேர்ந்த மாண்புமிகு உறுப்பினர்கள், அமெரிக்கப் பங்குச் சந்தை வீழ்ச்சியடைவதற்குச் சற்று முன்பே, உள்பேரத்தின் மூலம் தமது பங்குளை விற்றுக் காசாக்கிவிட்டனர். மீண்டுமொரு ஒரு புதிய தாராளவாத வைரஸ்: இந்தப் போக்கு உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளைப் பாதிக்கும் வண்ணம் கணினிமயமாக்கம் (digitalisation) மற்றும் இயந்திர மனிதமயமாக்கம் (robotisation) ஆகிய துறைகளிலும் தொடரும்.

“இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு முன்பாக பல பேர் இறப்பது தேவையானதுதான்” என வெளிப்படையாக ஒப்புக்கொண்ட முதல் நாடு இங்கிலாந்துதான். இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்குப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாத தருணத்தில் அரசியல்வாதிகள் கூறவருவது இதுதான்: “இந்த வைரஸ் அநேகமாக வயது முதிர்ந்தவர்கள், நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள், ஊட்டச்சத்துக் கிடைக்காத ஏழைகள் ஆகியோரைத்தான் கொல்கிறது. பொருளாதார உற்பத்திக்குப் பயனற்ற இந்தக் கூட்டம் வாழ்ந்தால் என்ன, செத்தால் என்ன என்பது பற்றி நாம் உண்மையில் அக்கறை கொள்ளத் தேவையில்லை.”

அரசியல் விமர்சகர்கள் அரசியல்வாதிகளின் இந்த உள்ளக்கிடக்கையை சுட்டிக்காட்டியவுடனேயே, அந்த வர்க்கம் தாம் கூறியதிலிருந்து பின்வாங்கியதோடு, ” நாங்கள் மக்களிடம் பொய் கூறாமல் தமது கடமையைச் செய்வதாக”த் தமது கூற்றுக்கு விளக்கமளித்தார்கள்.

அவர்கள் உண்மையைப் பேசுகிறார்களா? அல்லது, நிதி மூலதனத்தின் மதிப்பு மட்டுமே அக்கறைக்குரியது என்ற புதிய தாராளவாத தர்க்கத்திற்கு ஆட்பட்டுப் பேசுகிறார்களா? பசி என்ற கொள்ளை நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய தடுப்பு மருந்தான உணவுப் பொருட்கள் கையிலிருந்தும், ஒவ்வொரு நாளும் 8,000 குழந்தைகள் பசி என்ற வைரஸுக்குப் பலியாவது இந்தப் புதிய தாராளவாத சமன்பாட்டின் ஒரு பகுதியாகும். கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள நாம் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில், மற்ற கொள்ளை நோய்களை எதிர்த்த போராட்டம் தவிர்க்கவியலாதவாறு பாதிக்கப்படும்.

இந்தக் கொள்ளை நோயை எதிர்கொள்வதற்கு இன்னும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது. இன வெறியும் தேசியவாதமும் இதற்கு உதவாது. இந்தக் கொள்ளை நோயைப் போல எதிர்காலத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி வரக்கூடிய கொள்ளை நோய்களை எதிர்கொள்வதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக, 1918-இல் உருவான ஸ்பானிஷ் ஃப்ளு என்ற கொள்ளை நோய் – பிரிட்டிஷ் அல்லது நேச நாட்டுப் படையினர் மத்தியில் உருவாகிப் பரவியது – 5 கோடி மக்களைக் காவு வாங்கியது. இந்த கரோனா வைரஸை முதல் புதிய தாராளவாத வைரஸ் என்ற முறையில் அணுகி, அதற்கேற்ப செயல்படவில்லை என்றால், பெரிதாக எதுவொன்றும் நடவாது.

மொழியாக்கம்: ரஹீம்

கொரோனா வைரஸ் என் உடலைத் தின்று வருகிறது ! – இரயாகரன்

னது நோய் எதிர்ப்புச் சக்தி, என் உயிருக்காக போராடுகின்றது. அந்தப் போராட்டம் உடல் வேதனையைத் தருகின்றது. எது வெற்றி பெறும் என்பதை, காலம் தீர்மானிக்கும். எனக்காக போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவ மருந்தில்லை. ஒட்சிசனை வழங்கி போராட்டத்தை வீரியமாக்கும் இடத்தில் அரசு இல்லை. வைரஸ்சுக்கு எதிராக யுத்தம், ஆயத்தம் என்று கொக்கரித்த அரசியல் பின்னணியில், அவையின்றி மரணங்கள் தொடருகின்றது. நோயாளிகள் கவனிப்பாரின்றி கைவிடப்படுகின்றனர். நாளை எனக்கு – உனக்கு இதுவே கதியாகலாம்!

என் வீட்டுக்குள்ளும் வரும், மரணம் என்னைச் சுற்றியும் நிகழும் என்பது கற்பனையல்ல – கடந்த நான்கு நாட்களாக என்னைக் கொரோனா (SARS-CoV-2) வைரஸ் மெதுவாக தின்று வருகின்றது. இன்று கொரோனா (SARS-CoV-2) வைரஸ் தொற்று என்று, மருத்துவரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது வயது மற்றும் வைரஸ் இலகுவாக பலியெடுக்கும் நோய்களைக் கொண்ட எனது உடல், இந்தச் சூழலில் எனக்கான சுயபலம் – கடந்த 40 வருடமாக நான் நேசித்த சமூகத்தைக் குறித்து தொடர்ந்து அக்கறையோடு எழுதுவது மட்டும் தான். அண்மையில் பொதுவில் கொரோனா குறித்த 20க்கும் மேற்பட்ட கட்டுரையில் எதை பேசினேனோ, அதை என்னிலையில் இருந்து எழுதுகின்றேன்.

மனிதனாக மனிதனை மதிக்காத சிந்தனைகள், கோட்பாடுகள் – அனைத்தையும் தன்னிலையில் இருந்து தன்னை முன்னிலைப்படுத்திச் சிந்திக்கின்ற தனிமனித வாதங்கள், ஒட்டுமொத்த சமூகம் குறித்தோ, இயற்கையைப் பற்றியோ, இயற்கையின் பிற உயிர்கள் குறித்தோ அக்கறையற்ற வரட்டுவாதங்கள் – இன்று எத்தனை மனிதர்களை பலியெடுத்துக் கொண்டு இருக்கின்றது. சமூகம் என்ற வகையில் நாங்கள் எல்லாம் குற்றவாளிகள். சமூகத்தை மாற்ற என்ன செய்தோம்!? இதை வரட்டுவாதம் என்று சொல்லி நகரும் உங்கள் உளவியலில், மனிதர்கள் உயிர்வாழ முடியாது மரணிக்கின்றனர். இன்று அல்ல அன்று முதல்.. யார் இதற்காக அக்கறைப்படுகின்றீர்கள்?

படிக்க:
கொரொனா ஊரடங்கு : 800 கிலோ மீட்டர் நடைபயணம் – தொழிலாளர் துயரம் !
♦ கொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் !

அரசுகள் முன்னெடுத்த வைரஸ் நடவடிக்கை, மருத்துவ அறிவியல், வைரஸ் பரவல் பற்றி அரசு மக்கள் முன் வைத்த வாதங்கள், நாட்டுக்கு நாடு வேறுபட்டன. அதற்கு அமைவாக மரணங்கள், மனித துயரங்கள் எங்குமாக இருக்கின்றது. தங்கள் கொள்கை முடிவுகளை மக்களில் இருந்து எடுக்கவில்லை, பொய்கள், புனைவுகள்.. இதை இனங்கண்டு இருந்த எனக்கு – என் வீட்டுக்குள், அரசு வைரசை வலிந்து கொண்டு வந்தது.

நான் 15.03.2020 முதல் (24 நாள்), என்னைத் தனிமைப்படுத்தி இருந்த காலம். அதற்கு முதல் ஒரு மாதமாகவே எச்சரிக்கை உணர்வோடு சூழலை எதிர்கொள்ளும் எச்சரிக்கை போராட்டத்தை நடத்தியவன். பிரஞ்சு அரசு வெளியில் செல்ல அனுமதித்த வடிவத்தில் கூட, அது தவறானது என்பதால் வெளியில் செல்லவில்லை. வீட்டில் என்னுடன் இருக்கும் இரு பிள்ளைகள் (20 வயதுக்கு கூட) வெளியில் செல்லவில்லை.

எனது துணைவியார் கட்டாயம் வேலை செய்ய வேண்டி இருந்தது. சுப்பர்மாக்கற் விற்பனையாளர். இந்தியாவில் ஊரடங்கு அறிவித்த பின் மக்கள் வீதியில் நடந்தது போல், இங்கு சுப்பர்மாக்கற் வைரஸ்சை பரப்பும் இலாப வேட்டையில் இறங்கியது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை என்ற பெயரில் எந்த ஒழுங்குவிதியையும் முன்வைக்காது அரசு, மூடிய கட்டடத்தில் ஒரு சதுர மீற்றருக்கு எத்தனை பேர் என்ற வரப்பைக் கூட போடாது கொள்ளை அடிக்கத் திறந்துவிட்டது. ஒரு விற்பனையாளர் செயின் அறுபடும் அளவுக்கு 2,3 நிமிடத்துக்கு பொருட்களை வாங்குவோர் விற்பனையாளரை கடந்து சென்றனர். இந்தளவுக்கும் துணைவியார் வேலை செய்த இடத்தில் அண்ணளவாக ஐந்து விற்பனையாளர்கள். வழமையான திறந்திருக்கும் நேரமும் கூட. விற்பனையோ முன்பை விட அதிகம். வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகம். அரசு அறிவித்த தனிமைப்படுத்தல் 17.03.2020 முதல் துணைவியார் மருத்துவ விடுப்பெடுத்த 31.03.2020 வரையும் இது தான் நிலை. 31.03.2020 எனது துணைவியார் மருத்துவ வீவு எடுத்தார். அடுத்த நாள் அவருக்கு காய்ச்சல்.

இந்த இடைக் கட்டத்தில் விற்பனையாளர்களின் அச்சத்தைப் போக்க, விற்பனையாளர் முன் கண்ணாடியை போட்டதன் மூலம் வைரஸ் தொற்றாது என்ற பிரமையை உருவாக்கினர். இதன் மூலம் வைரஸ் காற்றில் அதிகம் நேரம் இருக்குமாறு பார்த்துக்கொண்டனர். மக்கள் கூட்டத்தின் சுவாசம் விற்பனையாளரின் கண்ணாடியில் பட்டு, எதிரில் இருக்கும் மற்றைய விற்பனையாளரின் கண்ணாடியில் தெறித்து முகத்திற்கு நேராக கீழ் இறங்கி சுவாசிக்க விட்டனர். காற்றோட்டமற்ற மூடிய கட்டிடம், நெருக்கமாக மக்கள் .. எந்த சுகாதார ஒழுங்கும் கிடையாது, சந்தைக்கு ஏற்ப வைரஸ் பரவல் கொள்கை. இப்படித்தான் வைரஸ் என் வீட்டுக்குள் வந்து சேர்ந்துள்ளது. எம் வீட்டில் உள்ள நால்வருக்கும் கொரோனா (SARS-CoV-2) வைரஸ் தொற்றுக்குரிய அடையாளங்கள் காணப்பட்டுள்ளது.

படிக்க:
சனாதன இந்தியாவா, புதிய ஜனநாயக இந்தியாவா ?
♦ நிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் !

எனது உடல்நிலை தீவிரம் காரணமாக மருத்துவரை சந்திப்பதற்காகவும், கொரோனா (SARS-CoV-2) வைரஸ் தொற்று பரிசோதனைக்காகவும் (07.04.2020) 6 கி.மீ நடந்து (இரண்டு மணி நேரம்) வெளியே சென்றேன். 500க்கு மேற்பட்ட மக்களை வீதிகளில் காண முடிந்தது. எந்தப் பரிசோதனையம் கிடையாது. இதன் பொருள் கொரோனா (SARS-CoV-2) வைரஸ் பரவுகின்றது என்பது தான். எனக்கு வைரைஸ் தொற்று சந்தேகம் – உறுதிப்படுத்தப்பட்ட சூழல், மற்றவர்களுக்கு பரவலைத் தடுக்க முகத் தடுப்பு கிடையாது. வைத்தியர் அதை எனக்கு கொடுக்கும்படி கூறிய போதும், அதைப் பெற முடியவில்லை. தொற்று என் வீட்டில் உறுதியான நிலையில், காய்ச்சல் மருந்து வாங்க நாங்களே செல்ல வேண்டும். இதன் பொருள் நோய் காவியாக இருக்கும் நாங்கள், இதை விட மாற்று எம்முன் கிடையாது.

எனக்கு நான்கு, ஐந்து நாட்களுக்கு முன் வரண்ட இருமல். தலையிடி, தலைப்பாரம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, உடல் உதறல், இருமி துப்பும் போது இரத்தம் கலந்த சளி , உடம்பெங்கும் உளைவு, காய்ச்சல், கண் எரிவு, கண் நோவு, கண்ணீர் வெளியேறல், மூட்டு நோ .. இவை கடந்த 5 நாட்களாக கூடிக் குறைந்தளவில் வெவ்வேறளவில் காணப்பட்டது, காணப்படுகின்றது.

மருத்துவர் இனி வரும் நாட்கள் தான் கவனம், சுவாசப்பிரச்சனை ஏற்பட்டால் மருத்துவமனைக்கு தொடர்பு கொள்ள கூறி உள்ளார். ஒருவர் மரணித்தால் தான், இடம் கிடைக்கும் என்ற நிலை. மருத்துவமனைகள் முட்டி வழிகின்றது. மருத்துவ உதவி அலட்சியப்படுத்தப்படுகின்றது. முதியோர் இல்லங்களில் நோய்த் தொற்றைக் கண்டுகொள்ளாமல் மரணிக்க விடப்படுகின்றனர். இது தான் பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் கதை.

அரசின் கொள்கையால் வைரஸ் தொற்று தொடர்ந்து பரவிக் கொண்டு இருக்கின்றது. என் வீட்டுக்குள் நாலு பேருக்கு தொற்று ஏற்பட்டது போல்.

குறிப்பு : யாரும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளாதீர்கள். அந்த மருந்து, இந்த மருந்து என, யாருக்கும் – யாரும் உபதேசம் செய்யாதீர்கள். சமூகத்தை முதன்மைப்படுத்திச் சிந்தியுங்கள். இயற்கை குறித்தும், பிற உயிரினங்கள் குறித்தும் அக்கறை கொள்ளுங்கள். நாளைய சமூகத்திற்கு எதை கற்றுக் கொடுக்கப் போகின்றீர்கள் என்பதைப் பற்றி அக்கறைப்படுங்கள். வதந்திகளை, வாந்திகளை, நம்பிக்கைகளை கைவிட்டு, பகுத்தறிவோடு மனிதனாக சிந்திக்கவும் – வாழவும் கற்றுக் கொள்ளுங்கள். இதுதான் நாளைய வாழ்க்கையைக் கட்டியெழுப்பும். என்னுடன் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம், இந்த எதார்த்தம் கடந்து யாரும் வாழவில்லை.

– இரயாகரன்

நன்றி: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

disclaimer

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் சித்தாந்த வேர்கள் !

2014 இல் மோடி பிரதமராக பதவி ஏற்றுக்கொண்ட சில மாதங்களில் ஆர்.எ.ஸ்.எஸ். பிரச்சாரக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான ராஜேஷ்வர் சிங், டிசம்பர் 31, 2021 உடன் இந்தியாவிலிருந்து முஸ்லிம்களும் கிறித்தவர்களும் துடைத்தெறியப்படுவார்கள் என்று பிரகடனம் செய்தார். அது உதிரி  சக்திகளின் வெறித்தனமான பேச்சு என்றும் பொருட்படுத்தத்தக்கது அல்ல என்றும் அன்று ஒதுக்கித் தள்ளப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜேஷ்வர் சிங்

ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, இன்று, மோடி அரசு அந்தப் பிரகடனத்தை உண்மையாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்தம், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வருவதற்கு முஸ்லிம்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கிறது. இந்த நாடுகளைச் சேர்ந்த மற்ற சிறுபான்மை  மதத்தினர் அனைவருக்கும் அவர்கள் அங்கே மதரீதியாக துன்புறுத்தப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்று இச்சட்டத் திருத்தம் கூறுகிறது. அதாவது, மேற்சொன்ன நாடுகளில் இஸ்லாமிய  மதத்தில் பிறந்த ஒருவர்  வேறு எந்த விதத்தில் துன்புறுத்தப்பட்டாலும், அவர் இந்தியாவுக்குள்  நுழையவோ குடியுரிமை பெறவோ முடியாது என்கிறது இந்த சட்டத் திருத்தம்.

1947-இல் நாட்டுப் பிரிவினையின்போது இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பகுதிக்குக் குடிபெயர்ந்த முஸ்லிம்கள், முஜாகிர்கள் (வந்தேறிகள்) என்று பாகிஸ்தானில் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டு வருகிறார்கள். இதனை எதிர்த்து அங்கே போராடிவரும் “முத்தா ஹிதா குவாமி” இயக்கம் என்ற கட்சியின் தலைவர் அல்தாஃப் ஹுசேன், பாகிஸ்தான் அரசின் அடக்குமுறை காரணமாகத் தலைமறைவாக இருப்பவர். இவர் இந்தியாவில் அடைக்கலமும் குடியுரிமையும் கோரிய அடுத்த சில நாட்களில் இங்கே இந்த மசோதா நிறைவேற்றப் பட்டிருக்கிறது என்பதுதான் ஒரு விசித்திரம்! ஹூசேனுக்கு பிரிட்டன் குடியுரிமை வழங்கி விட்டது.  ஆனால், இந்திய அரசு அவருடைய கோரிக்கையை என்ன செய்தது என்று நமக்குத்  தெரியவில்லை.

படிக்க:
சனாதன இந்தியாவா, புதிய ஜனநாயக இந்தியாவா ?
♦ கொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன ? | மக்கள் அதிகாரம்

“குடியுரிமைச் சட்ட திருத்தத்தைத் தேசியக் குடிமக்கள் பதிவேட்டுடன் இணைத்துத்தான் பார்க்க வேண்டும்” என்று ஏற்கனவே அமித் ஷா தெளிவாகப் பேசியிருக்கிறார். அதாவது, ஒரு இந்தியர் தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் தனது குடியுரிமையை நிரூபிக்க முடியவில்லையென்றால், திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் கீழ் இந்தியக் குடியுரிமை பெறுகின்ற வாய்ப்பு அவருக்கு உண்டு. ஆனால், முஸ்லிம்களுக்கு மட்டும் இது பொருந்தாது என்கிறது மோடி அரசின் சட்டத் திருத்தம். அதாவது, தேசியக் குடிமக்கள் பதிவேடும், குடியுரிமைச் சட்டத் திருத்தமும் முஸ்லிம்களை இரண்டாம்தரக் குடிமக்களாக்குகின்றன. இந்தியாவில் தற்போது வசித்து வருகின்ற முஸ்லிம்களைத் தவிர்த்த மற்றவர்கள் தேசியக் குடியுரிமைப் பதிவேட்டில் இடம் பெறுவதற்குத் தேவையான ஆவணங்களைக் காட்டத் தவறிய போதிலும், அவர்கள் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின்படி இந்தியக் குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. இந்த வாய்ப்பு முஸ்லிம்களுக்குக் கிடையாது.

யாருக்கெல்லாம் தந்தையர் நாடாகவும்,  மதரீதியான புண்ணிய பூமியாகவும் இந்தியா இருக்கிறதோ, அவர்கள் மட்டும்தான் இந்தியக் குடிமக்களாக இருக்க முடியும். தந்தையர் நாடாக இந்தியா இருந்த போதிலும், புனித பூமி இந்தியாவுக்கு வெளியில் இருப்பதாக நம்புகிறவர்களை  (மெக்காவைப் புனித பூமியாகக் கருதும் இஸ்லாமியர்கள் மற்றும் ஜெருசலேமைப் புனித பூமியாகக் கருதும் கிறிஸ்தவர்கள்)  “உண்மையான இந்தியர்களாகக் கருதவியலாது” என்பது கோல்வால்கரின் கருத்து.

மதத்தின் அடிப்படையில் குடிமக்களைப் பாகுபடுத்தி, இஸ்லாமியர்களை இந்தியரல்லாதவர்கள் ஆக்குகின்ற கோல்வால்கரின் கருத்தையும், இந்து மகாசபா தலைவர் சாவர்க்கரின் கருத்தையும் நடைமுறைக்குக் கொண்டு வருகிறது மோடி அரசின் குடியுரிமைச் சட்டம். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், “செமிட்டிக் மதங்களான கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்தியர்களாக இருக்க முடியாது என்றும் அவர்கள் பெரும்பான்மை இந்து மதத்தினரின் தயவில் வாழ வேண்டும்” என்பதுதான் இதன் பொருள்.

நாம் அல்லது நமது தேசியத்தின் வரையறை என்ற தலைப்பில் கோல்வால்கர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: “இந்துஸ்தானில் (இந்தியாவில்) வசிக்கும் இந்துக்கள் அல்லாதவர்கள் இந்து கலாச்சாரத்திற்கும் மொழிக்கும் மாறிக்கொள்ள வேண்டும். இந்து மதத்தைப் புனிதமாகக் கருதவும் மதிக்கவும் கற்றுக் கொள்ளவேண்டும். இந்து இனத்தையும் அதன் கலாச்சாரத்தையும் போற்றிப் புகழ்வதைத் தவிர வேறு விதமாகச் சிந்திப்பதை நிறுத்த வேண்டும். இந்த மண்ணுக்கும் இதன் தொன்மையான பாரம்பரியத்துக்கும் எதிரான சகிப்பின்மையையும் நன்றி கெட்டத்தனத்தையும் கைவிட்டு, இவற்றின்பால் நேசத்தையும் பக்தியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.  சுருங்கக் கூறின், வெளிநாட்டுக்காரர்களாக நடந்து கொள்வதை அவர்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும். அல்லது அவர்கள் இந்து தேசத்துக்குக் கட்டுப்பட்டவர்களாக இங்கே தங்கியிருக்கலாம். மற்றபடி, அவர்கள் இங்கே எந்தவித சலுகைகளையும் கோர முடியாது. குடியுரிமையையும் கோர முடியாது. இதைத் தவிர வேறெந்த விதமான வாய்ப்பும் இவர்களுக்கு வழங்கப்படக்கூடாது. நாம் ஒரு புராதனமான தேசம். புராதனமான தேசங்கள் தமது நாட்டில் குடியேறிய அந்நிய இனத்தாரை எப்படி நடத்துகின்றனவோ, எப்படி நடத்த வேண்டுமோ அவ்வாறு நடத்துவோம்.”

அதேபோல, இந்துத்துவா என்ற சொல்லை உருவாக்கிய சாவர்க்கர், “யார் இந்து?” என்ற தலைப்பில் இவ்வாறு எழுதுகிறார்: சிந்து நதியில் தொடங்கி சமுத்திரங்கள் வரை பரவியிருக்கும் பாரத வர்ஷம் எனப்படும் இந்த மண்ணைத் தனது தந்தையர் நாடாகவும், தனது மதத்தின் தொட்டிலாகவும் புனித பூமியாகவும் கருதுபவனே இந்து. ஒரு பொது தேசம் (ராஷ்டிரம்), ஒரு பொது இனம் (ஜாதி), ஒரு பொது நாகரிகம் (கலாச்சாரம்) இவைதான் இந்துத்துவத்தின் அத்தியாவசியமான கூறுகள். இவற்றைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். சிந்துஸ்தானம் என்பது எவனொருவனுக்கு பித்ரு பூமியாக (தந்தையர் நாடாக) மட்டுமின்றிப் புண்ணிய பூமியாகவும் இருக்கிறதோ, அவனே இந்து. இந்துத்துவ தேசத்தின் முதல் இரண்டு கூறுகளான தேசம், இனம் ஆகியவை தந்தையர் நாடு என்பதைக் குறிக்கின்றன. புண்ணிய பூமி என்பது கலாச்சாரத்தைக் குறிக்கிறது. எந்த மதச் சடங்குகளும் புனித நூல்களும் இந்த மண்ணைப் புனித மண்ணாக ஆக்குகின்றனவோ, அவையனைத்தையும்தான் கலாச்சாரம் என்கிற சொல்லால் குறிக்கிறோம்.

படிக்க:
சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம் : பல்லிளிக்கும் பொய் வழக்குகள் !
♦ இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை ! வழக்கறிஞர்கள் கோரிக்கை வெற்றி !

பாகிஸ்தான் என்ற கோரிக்கையை ஜின்னா வைப்பதற்குச் சற்று முன்னரே, புண்ணிய பூமி என்ற அடிப்படையில் இந்தியாவைத் துண்டாடும் இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டு விட்டது. தங்களது புனித பூமி இந்தியாவுக்கு வெளியில் இருப்பதாகக் கருதுகிறவர்கள் இந்து தேசத்தின் அங்கமாக இருக்க முடியாது என்றால், மற்றவர்களெல்லாம் தனியொரு நாடாக அமைகிறார்களா? அப்படியானால், இந்தியாவுக்குள்ளேயே இரண்டு தேசங்கள் உள்ளனவா என்ற கேள்வி எழுகிறது என்கிறார் வரலாற்றாய்வாளர் ஆதித்ய முகர்ஜி.

இதற்கான விடை 1937-இல் இந்து மகாசபாவில் சாவர்க்கர் ஆற்றிய தலைமையுரையில் இருக்கிறது என ஆர்.எஸ்.எஸ்ஸும், பள்ளிப் பாடநூல்களும் மகாத்மா காந்தி கொலையும் என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் முகர்ஜி. “இந்தியாவை ஒன்றுபட்ட ஒரு படித்தான தேசமாகக் கருத முடியாது. மாறாக, இந்து – முஸ்லிம் என்று இந்தியாவுக்குள் பிரதானமாக இரண்டு தேசங்கள் உள்ளன” என்று அந்த உரையில் கூறுகிறார் சாவர்க்கர். பண்பாட்டு ரீதியாகவும், மத ரீதியாகவும், தேசம் என்ற அடிப்படையிலும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பல நூற்றாண்டுகளாக முரண்பாடு நிலவி வருவதாகக் கூறி, இரண்டு தேசங்கள் என்ற தனது கருத்தை நிறுவுகிறார், சாவர்க்கர். வேறு வார்த்தைகளில் கூறுவதாயின், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே தேசத்தில் வாழ முடியாது என்கிறார். இதே கருத்தைத்தான் குடியுரிமைச் சட்டத் திருத்தமும் வலியுறுத்துகிறது.

“முத்தா ஹிதா குவாமி” கட்சியின் தலைவர் அல்தாஃப் ஹுசேன்

பாகிஸ்தானில் ஷியா பிரிவு மற்றும் அகமதியா பிரிவு முஸ்லிம்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டப்படுவது குறித்து ஊடகங்கள் ஏராளமான செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. இந்தச் சட்டத் திருத்தம் மேற்சொன்ன முஸ்லிம் மதப் பிரிவினருக்கு ஆதரவுக்கரம் நீட்ட மறுக்கிறது. அது மட்டுமல்ல, பிரிவினைக் காலத்தில் இந்தியப் பகுதியிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்றவர்களும், அங்கே முஜாகிர்கள் (வந்தேறிகள்) என இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுபவர்களும், அல்தாஃப் ஹுசேனின் தலைமையில் திரண்டிருப்பவர்களுமான ஏழை முஸ்லிம்கள் யாரேனும் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பிவிட விரும்பினால், அவர்களுக்கும் கதவைச் சாத்துகிறது இந்தச் சட்டத்திருத்தம்.

மதத்தின் அடிப்படையிலான தேசியம் என்பது பித்ரு பூமி (தந்தையர் நாடு) புண்ய பூமி என்கின்ற சாவர்க்கரின் கருத்துகளிலிருந்துதான் வருகிறது. இந்தச் சட்டத்திருத்தம் உதவுவதற்கானதேயொழிய, யாரையும் ஒதுக்குவதற்கானது அல்ல என்கிறார் அமித் ஷா. இதை நான் மறுக்கிறேன். குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை மட்டும் பார்த்தால், அதனால் ஆபத்தில்லை என்பது போலத் தோன்றும். ஆனால், அதனைத் தனியே பார்க்கவியலாது. தேசியக் குடிமக்கள் பதிவேட்டுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும். அதன் இலக்கு சமூகத்தில் ஒரு பிரிவினரை நாடற்றவர்களாக மாற்றுவதாகும். அசாமில் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டின் முடிவுகள் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாகப் போய்விட்டன. அவர்களுக்கு வேறு வழியில்லை. இந்துக்களின் குடியுரிமையை அங்கீகரிக்க வேண்டும். முஸ்லிம்களை நிராகரிக்க வேண்டும். அதனால்தான் ஏற்கனவே கிடப்பில் போட்டு வைத்திருந்த குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை புதுப்பித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிறார் முகர்ஜி.

அசாமில் வாழும் பெங்காலி முஸ்லிம்களைக் கரையான்கள் என்று சாடினார்கள் பா.ஜ.க. தலைவர்கள். அந்தக் கரையான்கள் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் இடம் பிடிக்க முடியாமல் மாட்டிக்கொள்வார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அசாமில் நடைபெற்ற குடிமக்கள் கணக்கெடுப்பின் முடிவுகள் முற்றிலும் வேறுவிதமாக அமைந்து விட்டன. இந்தக் கணக்கெடுப்பால் துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் மத்தியிலிருந்து கரையான்களை மதரீதியாகப் பிரிக்கமுடியவில்லை. “குடியுரிமைச் சட்டத் திருத்தமும் குடிமக்கள் பதிவேடும் ஒரு அபாயகரமான சேர்க்கை. சமூகத்தில் வெறுப்பையும் பிளவையும் விதைக்கும் கோல்வால்கர் மற்றும் சாவர்க்கரின் சித்தாந்தத்தை இது நடைமுறைக்கு கொண்டு வருகிறது” என்கிறார் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் வரலாற்றாய்வாளர் ரிஸ்வான் குவைசர்.

கோல்வால்கரால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்பதுதான் ஒரே ஒரு வேறுபாடு. நாம் இந்த நாட்டை ஆளக்கூடிய காலம் ஒன்று வரும் என்று கூட அவர் நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அது அவருடைய கற்பனைக்கு அப்பாற்பட்டதாக மட்டுமல்ல, நம் எல்லோருடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டதாகத்தான் இருந்தது. “1952-இல் இந்து மகாசபா சுறுசுறுப்பாக இயங்கி வந்த காலத்திலேயே, அதன் ஆகப் பெரும்பான்மையான வேட்பாளர்களால் தேர்தலில் வெற்றி பெற இயலவில்லை. பிந்தைய நாட்களிலும்கூட தேர்தலில் அவர்கள் தோல்வியைத்தான் தழுவினர். ஏனென்றால், இந்த வெறுப்பரசியலை அன்றைய இந்து சமூகம் அங்கீகரிக்கவில்லை. இன்றைய இந்து சமூகம் வெறுப்பரசியலை அங்கீகரிப்பதோடு நிற்கவில்லை, அதற்கு மேலேயும் சென்று விட்டது” எனக் குறிப்பிடும் ரிஸ்வான் குவைசர், இந்த சட்டத்தை முறியடிப்பதற்கான வழிகளை நாம் கண்டறிய வேண்டும். இல்லையேல், இந்தியா என்பது இந்துக்களுக்கு மட்டும்தான் என்ற சாவர்க்கர், கோல்வால்கரின் கனவு நனவாகிவிடும் என எச்சரிக்கிறார்.

கோல்வால்கர்: ஆர்.எஸ்.எஸ். -ஸும்  இந்தியாவும் என்ற நூலின் ஆசிரியரான ஜோதிர்மயா சர்மா இது தொடர்பாக ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்டுகிறார். 1954-இல் சிந்தி இனத்தவர் மத்தியில் பேசிய கோல்வால்கர், நாக்பூரில் அவர் எதிர்கொண்ட ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டாராம். பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதாருக்கும் இடையிலான முரண்பாடுகள் குறித்த பிரச்சினைகளைப் பேசுவதற்கு அங்கே ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். அந்தக் கூட்டத்துக்கு அவர் சென்றிருந்தாராம். இவர் உள்ளே நுழையும்போது அங்கே ஒரு முஸ்லிம் உரையாற்றிக் கொண்டிருந்தாராம். துணுக்குற்றுப்போன கோல்வால்கர், இந்தக் கூட்டத்திற்கு ஒரு முஸ்லிமை எப்படி அழைத்தீர்கள்? என்று கூட்ட ஏற்பாட்டாளர்களிடம் கேட்டாராம். அதற்கு அவர்கள், முஸ்லிம்களும் பார்ப்பனரல்லாதவர்கள்தானே என்று பதிலளித்தார்களாம். பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதவர்களுக்கும் இடையில் பிரச்சனைகள் இருக்கலாம். அது இந்து சமூகத்துக்குள் இருக்கும் பிரச்சனை. ஆனால், முஸ்லிம்கள் பிராமணர்களுக்கு மட்டும் எதிரிகள் அல்ல, மொத்த இந்து சமூகத்துக்குமே எதிரிகள். நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், முஸ்லிம்களை மட்டும் விலக்கி வையுங்கள் என்று அவர்களுக்கு அறிவுரை கூறினாராம் கோல்வால்கர்.

அன்று கோல்வால்கர் எதைச் சொன்னாரோ அதைத்தான் குடியுரிமைச் சட்டத் திருத்தம் இன்று அமல்படுத்துகிறது.

(ஃபிரண்ட்லைன், ஜன.3, 2020 இதழில் ஜியா உஸ் சலாம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

மொழியாக்கம்: கதிரவன்

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2020


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

கார்ப்பரேட் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் புதிய விதை மசோதா !

விவசாய இடுபொருட்களுக்கான செலவைக் கட்டுப்படுத்த வேண்டும் என இந்திய விவசாயிகள் கோரி வரும் வேளையில், இந்த நிதியாண்டுக்கான வரவு-செலவு அறிக்கையில் உர மானியத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஏறத்தாழ 9,000 கோடி ரூபாய் அளவிற்கு வெட்டப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக, வெட்டப்பட்ட அத்தொகையை இந்திய விவசாயிகள் தமது சொந்தக் காசிலிருந்து செலவழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

உர மானியத்தை வெட்டியதோடு திருப்தி கொள்ளாத மோடி அரசு, விதைகளுக்குச் சான்றளிப்பது, சந்தைப்படுத்துவது தொடர்பாக புதிய விதை மசோதா ஒன்றையும் தயாரித்து நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்குத் தயாராகி வருகிறது. இம்மசோதா சட்டமானால், “குறைந்த விலையில் தரமான விதைகள்” என்ற விவசாயிகளின் உரிமை காலாவதியாகிவிடும்.

இந்திய அரசு காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, உலக வர்த்தகக் கழகத்தில் இணைந்த பிறகு இந்திய விதைச் சந்தையை இந்தியச் சட்டங்கள் மட்டுமின்றி, பன்னாட்டு அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுங்குமுறை விதிகளும் கட்டுப்படுத்தி வருகின்றன. இவற்றின் அடிப்படையில், 2001-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட “பயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமைச் சட்டம்”, பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்குச் சாதகமான வணிகம் சார்ந்த அறிவுசார் சொத்துடமை உரிமைகள் மற்றும் புதிய பயிர் வகைகள் பாதுகாப்பு ஒழுங்கு விதிகள் ஆகியவற்றை மறுதலிக்காத அதேசமயம், இந்திய விவசாயிகளின் உரிமைகளையும் ஓரளவு பாதுகாப்பதாக அமைந்தது.

இந்திய விதைச் சந்தையின் மதிப்பு ஏறத்தாழ 15,000 கோடி ரூபாயாகும். இதில் 50 சதவீதத்தைத் தனியார் நிறுவனங்கள்தான் கைப்பற்றிக் கட்டுப்படுத்தி வருகின்றன. தனியார் நிறுவனங்களிலும், மான்சாண்டோ, டௌ கெமிக்கல்ஸ் உள்ளிட்ட நான்கு பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள்தான் 34 சதவீத விதைச் சந்தையைக் கட்டுப்படுத்தி வருகின்றன.

“விதைகளின் விலைகளைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும், விதைகளின் தரத்திற்குத் தாமே சான்றளித்துக் கொள்ளும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும், விதைகளின் மூலக்கூறுகளைச் சுதந்திரமாக ஏற்றுமதி, இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும், அறுவடை செய்யப்பட்ட தானியங்களைச் சேமித்து விதைகளாகப் பயன்படுத்தும் இந்திய விவசாயிகளின் உரிமையைக் கட்டுப்படுத்த வேண்டும்” என இப்பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் கோரி வந்ததை நிறைவேற்றித் தரும் விதமாக இப்புதிய மசோதா தயாரிக்கப்பட்டிருப்பதோடு, இந்திய விவசாயிகளின் மீது “இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியத்தை” ஏவிவிடும் அடிப்படைகளையும் கொண்டிருக்கிறது.

படிக்க:
கொரொனா ஊரடங்கு : 800 கிலோ மீட்டர் நடைபயணம் – தொழிலாளர் துயரம் !
கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்

விதை வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் விவசாயிகள் என்ற வரையறைக்குள் வராதவாறு முந்தைய விதைச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டிருந்த விலக்கை இப்புதிய மசோதா விலக்கிக் கொண்டுவிட்ட அதேசமயம், கார்ப்பரேட் நிறுவனங்களையும் விவசாயிகள் என வரையறுப்பதற்கு ஏற்ப தொளதொளப்பான விளக்கத்தை அளித்திருக்கிறது. இதன்படி, விளைநிலங்களைச் சொந்தமாகக் கொண்டிருப்பவர்களையும் மைய மற்றும் மாநில அரசுகளால் வரையறுக்கப்படும் விவசாயம் தொடர்பான வேலைகளில் ஈடுபடுபவர்களையும் விவசாயிகள் என வரையறுக்கிறது புதிய மசோதா.

இந்த வரையறையின்படி விதை உற்பத்தியில் ஈடுபடும் பாயர், மான்சாண்டோ உள்ளிட்ட பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும்கூட விவசாயிகள் எனக் கருதப்பட்டு, புதிய விதை மசோதாவில் சிறு, குறு விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சலுகைகள், விலக்குகளை இந்தப் பன்னாட்டு நிறுவனங்களும் அனுபவிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

2002-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட பயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமைச் சட்டத்தின்படி, ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்துவரும் விதைகளை மூலமாகக் கொண்டு அதனினும் மேம்பட்ட விதையைத் தனிநபரோ, நிறுவனமோ சந்தைப்படுத்தினால், அம்மேம்படுத்தப்பட்ட விதை விற்பனை வழியாகக் கிடைக்கும் இலாபத்தின் ஒரு பகுதியைத் தேசிய விதை வங்கிக்கு வழங்க வேண்டும் என்ற விதி இருந்தது. இப்புதிய மசோதாவில் அவ்விதி ரத்து செய்யப்பட்டுவிட்டது.

இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் இலாபம் முழுவதையும் அபகரித்துக் கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதோடு, புதிய வீரியமிக்க, மேம்பட்ட விதைகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், தாம் கண்டுபிடித்த விதைகள் எந்த மூல விதையிலிருந்து வந்தன என்பதையோ, அதில் விவசாயிகளின் பங்கு குறித்தோ குறிப்பிடத் தேவையில்லை எனச் சலுகை காட்டப்பட்டிருக்கிறது. இனி, பன்னாட்டு ஏகபோக விதை நிறுவனங்கள் இந்த சலுகையைப் பயன்படுத்திக்கொண்டு நமது நாட்டின் பாரம்பரிய விதைகள் அனைத்தையும் திருடிக்கொண்டு, அவற்றைப் புதிய மேம்படுத்தப்பட்ட விதைகளாகச் சந்தைப்படுத்தும் அயோக்கியத்தனத்தில் சட்டபூர்வமாக ஈடுபடக் கூடும்.

2001-ஆம் ஆண்டு சட்டப்படி, புதிய மேம்படுத்த விதைளை உருவாக்கும் நிறுவனங்கள் அவ்விதை மீது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உரிமை கோர முடியாது. ஆனால், புதிய விதை மசோதா அக்காலக்கெடுவை ரத்து செய்து, தனியார் நிறுவனங்கள் எத்துணை முறை வேண்டுமானாலும் தமது விதைகளுக்குத் திரும்பத்திரும்பச் சான்றிதழ் பெற்றுச் சந்தையில் விற்றுக்கொள்ள அனுமதித்திருக்கிறது. இதன் மூலம் விதை நிறுவனங்களின் நீண்ட கால ஏகபோக கொள்ளைக்குச் சட்டபூர்வ தகுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

2001 சட்டப்படி பயிர் செய்யும் பருவ காலங்களில் சந்தையில் விதைத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுத்துப் போதுமான அளவு விதைகள் விற்பனை செய்யப்படுவதையும், அக்காலங்களில் விதைகளின் விலைகளை நிர்ணயம் செய்து கட்டுப்படுத்தும் அதிகாரமும் உறுதி செய்யப்பட்டிருந்தது. புதிய விதை மசோதாவில் இவை இரண்டுமே உறுதி செய்யப்படவில்லை. இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களும் வியாபாரிகளும் விதைகளைப் பதுக்கிக் கொள்ளவும், விதைகளின் விலைகளைச் செயற்கையாக ஊதிப் பெருக்கிக் கொள்ளவும் வழி ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கிறது.

அறுவடைக்குப் பின் விதைகளைச் சேமித்து வைத்து அடுத்த மகசூலுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும், அதனை விவசாயிகளுக்கு இடையே பரிமாறிக் கொள்ளவும் இப்புதிய மசோதா விவசாயிகளை அனுமதித்தாலும், விவசாயிகள் தமது விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கிறது. விவசாயிகள் சான்று பெறாத விதைகளை விற்பனை செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்கவும் சோதனையிடவும் போலீசு அதிகாரிகளுக்கு நிகரான அதிகாரங்களுடன் கூடிய அமைப்பு உருவாக்கப்பட்டு, விதைகளின் மீதான விவசாயிகளின் சுதந்திரமும் உரிமையும் பறிக்கப்பட்டிருக்கிறது.

தரமற்ற விதைகளால் மகசூல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நட்டமடையும்போது அவர்களைப் பாதுகாப்பதற்கு 2001-ஆம் ஆண்டு சட்டத்தில் ஏற்பாடுகள் இருந்தன. புதிய மசோதாவின்படி, இப்படிப்பட்ட பிரச்சினைகளில் அரசு நேரடியாக விவசாயிகளின் பக்கம் நிற்காது. மாறாக, விவசாயிகள் நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து, தங்களுக்கு வழங்கப்பட்ட விதை தரமற்றது என நிரூபித்து நட்ட ஈடு பெற்றுக் கொள்ள வேண்டுமென என நட்டாற்றில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். மேலும், தரமற்ற விதைகளை விற்கும் நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் அபராதத்தை மிகக் குறைவாக நிர்ணயித்திருக்கும் இம்மசோதா, சான்று பெறாத விதைகளை விற்கும் விவசாயிகள் மீது கிரிமினல் வழக்குத் தொடுத்து ஒரு இலட்சம் வரை அபராதம் விதிக்கப் பரிந்துரைக்கிறது.

தரமான விதை, சான்றிதழ் பெற்ற விதை என்ற பெயரில் இந்தியப் பாரம்பரிய விவசாயத்தின் மீது பன்னாட்டு ஏகபோக விதை நிறுவனங்களின் கட்டுப்பாட்டை மென்மேலும் இறுக்குகிறது இம்மசோதா. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போவதாகத் தம்பட்டம் அடித்து வருகிறார், மோடி. ஆனால், அவரது அரசு கொண்டு வந்திருக்கும் இம்மசோதாவோ கார்ப்பரேட் விதை நிறுவனங்கள் இந்திய விவசாயிகளைக் கொள்ளையிடுவதற்கு வழி ஏற்படுத்தித் தருகிறது.

பரணிதரன்

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2020


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

கொரொனா ஊரடங்கு : 800 கிலோ மீட்டர் நடைபயணம் – தொழிலாளர் துயரம் !

“கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வீட்டிலேயே தனித்திருப்பது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை சோப்பினால் சுத்தம் செய்து கொள்வது, விட்டமின் சி கொண்ட ஆரோக்கியமான உணவு, இத்தியாதி, இத்தியாதி..” – சமீபமாக இது போன்ற அறிவுரைகளை அதிகமாக கேட்டு வருகின்றோம்.

இதில் உண்மை உள்ளதை மறுக்க முடியாது. மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், நோய்க் கிருமியை அண்ட விடாமல் பார்த்துக் கொள்வது தான் ஒரே தீர்வு. ஆனால், இதெல்லாம் எல்லோருக்கும் சாத்தியமா?

இயக்க நிறுத்தம் (Lock down) அறிவிக்கப்பட்ட பின், கையில் இருக்கும் காசுக்கு தகுந்தாற் போல் மளிகை சாமான் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி ஓரிரு மாதங்களுக்கு சேமித்து வைத்து வைத்துள்ளனர் பலர். ஆனால், அன்றாடங்காய்ச்சிகள் என்ன செய்வார்கள்? அவர்கள், கும்பலாக ரேஷன் கடைகளில் கூடி அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகைக்கு முண்டியடித்துக் கொண்டிருந்தனர்.

புலம் பெயர் தொழிலாளர்களின் நிலையோ திகைக்கச் செய்யும் அளவிற்கு துயரம் நிறைந்ததாக இருக்கின்றது. பல்வேறு வட இந்திய மாநிலங்களில் இருந்து தில்லி, மும்பை, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களுக்கு அத்துக் கூலிகளாய்ச் சென்ற ஏழைத் தொழிலாளிகள் தங்கள் ஊர்களை நோக்கி கால் நடையாகவே புறப்பட்டு விட்டனர். சுட்டெறிக்கும் வெயிலில் தார் உருகி ஓடும் சாலையில் அறுந்து போன செருப்புகளோடு அவர்கள் நடந்து சென்றனர். முதுகில் துணி மூட்டைகள், தலையில் சிறு சிறு பாத்திரங்கள், தோளில் குழந்தைகளோடு அவர்களை ‘வல்லரசு’ இந்தியா நடக்கவிட்டு அழகு பார்த்ததை உலகம் மௌனமாய்க் கடந்து சென்றது.

“நாங்கள் கட்டிடக் கூலித் தொழிலாளிகள். நாங்கள் அழைத்த போது எங்களது மேஸ்திரி தொலைபேசியை எடுக்கவில்லை. எங்களுக்கு கூலியும் கிடைக்கவில்லை. கையில் காசும் இல்லாமல், சாப்பிட வழியும் இல்லாமல், போக்குவரத்தும் இல்லாமல் என்ன செய்ய முடியும்? அது தான் வேறு வழியின்றி கால்நடையாகவாவது ஊருக்கே போய் விடலாம் என நடக்கத் துவங்கினோம்” என்கிறார் மத்திய பிரதேசத்தின் பெடூல் மாவட்டத்தைச் சேர்ந்த தயாள் மண்டல்.

நடந்தே போய்ச் சேர்ந்து விடலாம் என அவர்கள் கடக்க நினைத்த தொலைவு – 800 கிலோ மீட்டர்கள்.

படிக்க:
நிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் !
கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்

இவரோடு சேர்த்து மொத்தம் ஐம்பது தொழிலாளர்கள். அவர்கள் மொத்த பேரும் ஹைதராபாத்தின் துக்கூகுடா எனும் பகுதியில் ஒரு கட்டிடத்தில் கூலி வேலை பார்த்து வந்தனர். அவர்கள் சொகுசு கட்டிடங்களைக் கட்டும் ஒரு காண்டிராக்டரிடம் வேலை பார்த்துள்ளனர்.

இவர்கள் நெடுஞ்சாலையில் நடந்து செல்வதைப் பார்த்த அங்கூரம் என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம், இவர்களை அணுகி விசாரித்துள்ளனர். 800 கிலோ மீட்டர்கள் நடந்து சொந்த ஊருக்குப் போகும் தீர்மானத்தில் இவர்கள் இருப்பதை அறிந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் வந்து அருகில் உள்ள தற்காலிக உறைவிடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், சமைப்பதற்கான மளிகைப் பொருட்களைகளையும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் வழங்கி உள்ளது.

மாதிரிப் படம்

“அவர்களிடம் சொற்பமான அளவுக்கு மளிகைப் பொருட்கள் இருந்தன. போகும் வழியில் ஆங்காங்கே சமைத்து சாப்பிட்டுக் கொள்ளும் தீர்மானத்தில் இருந்தனர். நாங்கள் அதிர்ச்சியடைந்து விட்டோம். போலீசாருக்கு தகவல் தெரிவித்த பின் போகாராமில் உள்ள தற்காலிக உறைவிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆனால், இவர்களை அங்கேயே வைத்திருப்பது கடினம். எப்பாடு பாட்டாவது சொந்த ஊருக்குப் போயே தீர வேண்டும் என்கிற உறுதியில் இருக்கின்றனர். அதற்காக 800 கிலோ மீட்டர்கள் நடக்க வேண்டியிருந்தாலும் பரவாயில்லை என்கிற முடிவில் உள்ளனர்” என்கிறார் அங்கூரம் தொண்டு நிறுவனத்தின் தலைவர் சுமித்ரா.

“என் மனைவியும் பெற்றோரும் பயந்து போய் உள்ளனர். அவர்களுக்கு இந்த சூழலில் ஊருக்கு திரும்புவது கடினம் என்று தெரியும். ஆனால், வெளியே எங்கேயும் இருப்பதை விட எப்படியாவது வீட்டுக்கு வந்து விட்டால் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள். எங்கள் குடும்பங்கள் பயந்து போய் உள்ளன. எனவே இந்த லாக்டவுன் நீக்கப்படும் வரை நாங்கள் காத்திருக்க முடியாது.. எங்களுக்கு பைத்தியம் பிடித்து விடும். எனவே என்னவானாலும் சரி, நாங்கள் நடந்தாவது ஊருக்குப் போய் விடுகிறோம். நாங்கள் இது பற்றி தன்னார்வ தொண்டு நிறுவனத்திடமும் போலீசிடமும் பேசப் போகிறோம்” என்கிறார் மோகன். இவர் நடைபயணம் மேற்கொண்ட குழுவில் உள்ள ஒரு தொழிலாளி.

தங்குவதற்கு இடமும், சாப்பிட உணவும் இருந்தும் கூட அந்த தொழிலாளர்கள் ஏன் தங்கள் ஊருக்குத் திரும்ப வேண்டும் என்கிறார்கள்?

***

உலகமயமாக்கல், புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கை போன்றவற்றின் விளைவாக அதிகரித்துள்ள நகரமயமாக்கலுக்கு அத்துக்கூலிகள் அவசியம். குறைந்த கூலிக்கு அசாதாரணமான உழைப்பை உறிஞ்சி சுரண்ட கொத்துக் கொத்தாக பின் தங்கிய மாநிலங்களில் இருந்து படிப்பறிவில்லாத, ஏழை தொழிலாளிகளை ஏஜெண்டுகள் மூலம் பெரு நகரங்களுக்கு அள்ளி வந்து கொட்டுகின்றனர் காண்டிராக்டர்கள். இவர்களிடம் இருந்து உழைப்பை சுரண்டிக் கொண்டு உயிர் பிழைத்துக் கிடப்பதற்கு மட்டுமே போதுமான கூலியைக் கொடுக்கின்றனர்.

தங்கள் உழைப்பால் அழகூட்டப்படும் நகரங்களிலேயே அந்நிய மனிதர்களாக தகரக் கொட்டகைகளுக்குள் விலங்குகளைப் போல வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்த நகரங்கள் தம்மைக் காப்பாற்றாது என்பதையும், தங்களது குடும்பங்கள் மட்டுமல்ல, வாழ்க்கைக்கான நம்பிக்கையும், வேர்களும் ஏதோருவொரு மாட்டுவளைய மாநிலத்தின் பின் தங்கிய கிராமத்தில் தான் உள்ளது என்பதையும் இவர்கள் அறிந்து வைத்துள்ளனர். எனவே தான் ஆபத்துக் காலத்தில் சிறிய உயிர்கள் தங்களது வளைகளைத் தேடி மருண்டு ஓடுவதைப் போல் இடம்பெயர் கூலித் தொழிளர்கள் தங்களது சொந்த ஊர்களை நோக்கி ஓடுகின்றனர்.

உழைக்கும் இடத்தில் மட்டுமல்ல – பிழைக்கச் சென்ற ஊரிலும் இந்த மனிதர்கள் அந்நியப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை “வந்தேறிகள்” என்றும், தங்களது வாய்ப்புகளைப் பறிக்க வந்த வடநாட்டு “சதிகாரர்கள்” என்றும் தமிழ் நாஜிகள் அவ்வப் போது குறிப்பிடுவார்கள்.


தமிழ் அண்ணல்
செய்தி ஆதாரம் : இந்தியன் எக்ஸ்பிரஸ்.

சனாதன இந்தியாவா, புதிய ஜனநாயக இந்தியாவா ?

ரேந்திர மோடி அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டமும், அதற்கு எதிராக நாடெங்கும் பரவலாக நடைபெற்று வரும் மக்கள்திரள் போராட்டங்களும் ஒரு  மாபெரும் சமூகக் கொந்தளிப்பை முன்னறிவிக்கின்றன. இப்போராட்டங்களின் வளர்ச்சிப்போக்கு இந்திய அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்க வல்லதாக இருக்கும்.

மோடியும் அவரது ஆதரவாளர்களும் வெற்றி அடைந்தால், மதச்சார்பின்மை, ஜனநாயகம், அறிவியல் உணர்வு ஆகிய மதிப்பீடுகளெல்லாம் இந்தியாவில் பெயருக்குக்கூட இல்லாது ஒழிக்கப்படும். அதற்கு மாறாக, மக்கள்திரள் போராட்டங்கள் வெற்றியடைந்தால், அவ்வெற்றி புதிய இந்தியாவைப் படைப்பதற்கான வாசலைத் திறந்துவிடுவதாக அமையும்.

இந்தப் போராட்டத்தைத் தோற்கடிக்கப் பார்ப்பன பாசிசக் கும்பலும் அவர்களது அடிவருடிகளும் இரண்டு வழிகளில் முயலுகிறார்கள். ஒன்று, மிகக் கொடூரமான, மிருகத்தனமான அடக்குமுறை; மற்றொன்று, அவதூறுகளின் மூலமும் பொய் வழக்குகளின் மூலமும் போராட்டக்காரர்களைத் தனிமைப்படுத்துவது. எனினும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும் அதனைத் தொடர்ந்து வரவுள்ள தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றையும் எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டங்கள் இந்த இரட்டைத் தாக்குதல்களை எதிர்கொண்டு தொய்வின்றி நடந்துவருகின்றன.

  • “இந்துக்களும் முசுலீம்களும் இணைந்துவிட்டால், நாஜியால் என்ன செய்துவிட முடியும்?”
  • “பாசிசத்திலிருந்து விடுதலை!”
  • “நாங்கள் குடியுரிமைக்கான சான்றுகளைத் தரமாட்டோம்; நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம்!”
  • “எனது குடியுரிமையை நிரூபிக்குமாறு கேட்க நீ யார்?”

இவையெல்லாம் போராட்டத்தில் எதிரொலிக்கும் முழக்கங்கள்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தில் உரையாற்றிய ஒரு முஸ்லிம் மாணவன், “நான் இறக்கும் தருவாயில் மீண்டும் இங்கேயே பிறக்க அல்லாவிடம் வேண்டுவேன்” எனக் கூற, அதற்கு மற்றொரு மாணவன், “முஸ்லிம் மதத்தில் மறுபிறவி என்ற நம்பிக்கை கிடையாது” எனக் கிண்டல் செய்ய, அதற்கு அம்முஸ்லிம் மாணவன், இருக்கலாம்; “நான் பெங்காலியும்கூட” எனப் பதில் அளிக்க, அப்போராட்டக் களமே வெடிச்சிரிப்பில் மூழ்கியது.

மகாராஷ்டிராவில் மும்பய் நகரிலுள்ள கிராந்தி மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஹிஜாப் உடை அணிந்து நெற்றியில் குங்குமமும் இட்டு வந்த இளம் பெண், “உங்களை எது அதிகமாகக் காயப்படுத்துகிறது? எனது ஹிஜாபா, அல்லது நான் ஹிஜாப் அணிந்து நெற்றியில் குங்குமம் இட்டிருப்பதா?” எனக் கேட்க, ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் அக்கேள்வியை எதிரொலித்தார்கள்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மதம் கடந்து உருவாகி வரும் இந்த ஒற்றுமையும், ஜனநாயக உணர்வும்தான் பார்ப்பன பாசிசக் கும்பலை அச்சங்கொள்ள வைக்கிறது. பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி., பொருளாதார மந்தம், வேலையிழப்பு, விலைவாசி உயர்வு, தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம், 370 முடக்கம் ஆகிய தாக்குதல்களைச் சகித்துக்கொண்டதைப் போன்று, குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசியக் குடியுரிமை பதிவேடு  ஆகியவற்றையும் இந்திய மக்கள் பொறுத்துப் போவார்கள் என்ற அவர்களின் கனவு மண்கோட்டையாகச் சரிந்துவிட்டது.

படிக்க:
இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை ! வழக்கறிஞர்கள் கோரிக்கை வெற்றி !
♦ நிதி மூலதன ஆட்சி !

***

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசியக் குடியுரிமை பதிவேடு என்ற இந்துத்துவ திரிசூலத்தை எதிர்த்து நிற்பதில் முஸ்லிம்கள் முன்னணியில் நின்றாலும், இப்போராட்டம் முஸ்லிம் மத அடையாளத்தை முன்னிறுத்தி நடத்தப்படவில்லை. அவர்கள் பச்சைக் கொடிக்குப் பதிலாக மூவர்ண தேசியக் கொடியைக் கையில் ஏந்தி வருகிறார்கள்.

“குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட வேண்டாம்” எனக் கூறிய டெல்லி ஜும்மா மசூதி இமாம் அகமது புகாரியின் அறிவுரையைப் புறக்கணித்துவிட்டு, பழைய டெல்லியைச் சேர்ந்த முஸ்லிம்கள் உ.பி.யைச் சேர்ந்த தலித் தலைவர் சந்திரசேகர் ராவணன் தலைமையில் திரண்டு போராடினார்கள். “அல்லாஹு அக்பர்” என்ற முழக்கம் அப்போராட்டத்தில் கேட்கவில்லை. மாறாக, அரசியல் சாசனத்தின் முகவுரையை முழக்கமாக எழுப்பினார்கள்.

டெல்லியில் மட்டுமல்ல, இராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்கா திவான் சையத் சைனுல் ஹுசைன் சிஸ்டியின் அறிவுரையைப் புறக்கணித்துவிட்டு, இராஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பிற மதத்தினரோடு கலந்துகொண்டார்கள்.

இந்த இந்துத்துவ திரிசூலத்தை எதிர்த்த போராட்டம் முஸ்லிம் மாணவர்கள் பெருவாரியாகப் பயிலும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஜாமியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மட்டும் நடைபெறவில்லை. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், மேற்கு வங்கம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், உ.பி. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் எனப் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் நூற்றுக்கணக்கான கல்லூரிகளிலும் நடைபெற்றிருக்கிறது, நடைபெற்று வருகிறது. குறிப்பாக, டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது டெல்லி போலீசு இந்து மதவெறியோடு நடத்திய தாக்குதல்தான் இப்போராட்டத்தை நாடு தழுவிய போராட்டமாக மாற்றியது.

மத வேறுபாடுகளைக் கடந்து, பல்வேறு வர்க்கங்கள் மற்றும் சமூகத் தட்டுக்களைச் சேர்ந்த பொதுமக்களை, குறிப்பாக, மாணவர்களை, இளைஞர்களைப் பெருவாரியாக ஈர்த்து, நாடெங்கும் பரவலாக நடைபெற்று வரும் போராட்டங்கள் இந்து மதவெறிக்கு எதிராக மதச்சார்பின்மையையும், பாசிசத்திற்குப் பதிலாக ஜனநாயகத்தையும் முன்வைக்கின்றன என்றால், இப்போராட்டத்தை ஒடுக்க முயலும் அரசின் அனைத்து நடவடிக்கைகளும் இந்து மதவெறியையும் அரசு பயங்கரவாதத்தையும் இணைத்துக் கொண்டுள்ளன.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலும்; உ.பி. முஸ்லிம்கள் மீது யோகி ஆதித்யநாத் அரசு கட்டவிழ்த்துவிட்டு வரும் அடக்குமுறைகளும்; மோடி, அமித் ஷா தொடங்கி எச்ச.ராஜா வரையிலான பா.ஜ.க. தலைவர்கள் இப்போராட்டங்களைக் கொச்சைப்படுத்திக் கூறும் அவதூறுகளும் இந்த உண்மையை நிரூபிக்கின்றன.

***

.பி. முசுலீம்கள் மீது ஆதித்யநாத் அரசு நடத்திவரும் இந்து மதவெறி அரசு பயங்கரவாதக் கூட்டுத் தாக்குதலை, நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அம்மாநிலத்தில் நடத்திய முஸ்லிம்படுகொலையோடு ஒப்பிட முடியும். “இந்துக்கள் தமது ஆத்திரத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கக்கூடாது” என குஜராத் இனப்படுகொலையின்போது மோடி போலீசு அதிகாரிகளிடம் கூறினார் என்றால், “முசுலீம்களைப் பழிக்குப் பழித் தீர்த்துக்கொள்ள வேண்டும்” என இந்து மதவெறியைக் கக்கித் தாக்குதலை நடத்திவருகிறார், ஆதித்யநாத்.

குஜராத்தில் பஜ்ரங் தள் உள்ளிட்ட சங்கப் பரிவார அமைப்புகள் முசுலீம்கள் மீது நடத்திய தாக்குதலை குஜராத் போலீசு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது என்றால், உ.பி.யிலோ போலீசு நண்பர்கள் என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்து மதவெறி குண்டர் படையும் போலீசும் இணைந்து முசுலீம்கள் மீது தாக்குதலை நடத்திவருகின்றன. பா.ஜ.க.வைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்களும் அவர்களது கையாட்களும் போலீசு நடத்திய தாக்குதலின் தளபதியாகச் செயல்பட்டுள்ளனர். குறிப்பாக, முசாஃபர் நகரில் முசுலீம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த இடத்திற்கு பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரும் மைய இணை அமைச்சருமான சஞ்ஜீவ் பல்யான் வந்து போலீசைத் தூண்டிவிட்ட பிறகுதான் தடியடியும் துப்பாக்கிச் சூடும் நடந்ததாக அவ்வூரைச் சேர்ந்த முசுலீம்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

ஏழை முசுலீம்களைச் சுட்டுக் கொல்வதும், வசதியான முஸ்லிம் குடும்பங்களின் சொத்துக்களை அடித்து நொறுக்கிக் கொள்ளையிடுவதும்  உ.பி.யில் திட்டமிட்ட முறையில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

படிக்க:
குடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் ! புதிய கலாச்சாரம் ஜனவரி 2020 வெளியீடு
♦ குளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் !

***

ஃபெரோசாபாத் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களுள் ஒருவரான இருபத்தாறு வயதான ரஷீத் ஒப்பந்தத் தொழிலாளி; தனது கூலியை வாங்கிக் கொண்டு திரும்பும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டார் ரஷீத். முப்பது வயதான ஹரூன் தனது எருதை விற்றுவிட்டுத் திரும்பும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

முசாஃபர் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியான நூர் முகம்மதுவின் கூலியை நம்பித்தான் அவரது குடும்பமே காலத்தை ஓட்டிவருகிறது. இவர் போலீசின் துப்பாக்கிக்குப் பலியானரா அல்லது ஆர்.எஸ்.எஸ். குண்டர் படையின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியானரா என்பது விவாதப் பொருளாகியிருக்கிறது.

துப்பாக்கியால் சுடப்பட்ட அனைவரும் சம்பவ இடத்திலேயே இறந்து போகவில்லை. காப்பாற்றுவதற்கு வாய்ப்பிருந்தும்கூட நூர் முகம்மதுவிற்கு முசாஃபர் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டதால், அவரை மீரட் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இறந்து போனார்.

குண்டடிபட்ட மீரட் நகரைச் சேர்ந்த முகம்மது மோசின், ஆசிப் உள்ளிட்ட மூன்று பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதால், அவர்கள் மூவரும் இரத்தப் போக்கு நிற்காமல் இறந்து போனார்கள்.

“குண்டடிபட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் முஸ்லிம்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாதென மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருப்பதாக” வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்கள் அரசு மருத்துவர்கள்.

கர்நாடகா மாநிலத்தில் மங்களூரு நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 49 வயதான அப்துல் ஜலீலும், 24 வயதான நௌஷினும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். எனினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் குண்டடிபட்ட அந்த இருவரையும், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மற்றொரு முஸ்லிமையும், அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றால் சிகிச்சை அளிக்கமாட்டார்கள் என முன் அனுமானித்து, முஸ்லிம் மருத்துவர் நடத்தும் ஹைலாண்ட் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள்.

இந்த ஒரு காரணத்துக்காகவே, மங்களூரு போலீசு அந்த மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து உள்நோயாளிகளைத் தாக்க முயன்றதோடு, கண்ணீர்ப் புகை குண்டுகளையும் மருத்துவமனை வளாகத்தில் வீசியது. போர்ச் சூழலில்கூட மருத்துவமனைகளைத் தாக்கக்கூடாதென்ற சர்வதேச நியதியைக் காலில் போட்டு மிதித்திருக்கிறது, மங்களூரு போலீசு.

முசாஃபர் நகரில் ஆர்ப்பாட்டம் நடந்த அன்றைய இரவில் தெரு விளக்குகளை அணைத்துவிட்டு, உள்ளூர் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் துணையோடு, அவர்கள் அடையாளம் காட்டிய முஸ்லிம் வீடுகளுக்குள் எல்லாம் புகுந்த போலீசு அவ்வீடுகளில் இருந்த பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கி, பணம் நகைகளைத் திருடிச் சென்றிருக்கிறது.

தனது பேத்திகளின் திருமணத்திற்காக எடுத்து வைத்திருந்த ஐந்து இலட்ச ரூபாய் பெறுமான நகைகளை “போலீசு திருடிச் சென்றுவிட்டதாக”க் குற்றஞ்சுமத்துகிறார், முசாஃபர் நகரைச் சேர்ந்த ஹமீத் ஹசன்.

மீரட் நகரில் தெற்கு சிவில் லைன்ஸ் பகுதியில் செல்ஃபோன் / கணினி விற்பனை நிலையம் நடத்திவரும் நசீர் கான், ஆஸிஃப் ஆகிய இருவரும், “ஆர்.எஸ்.எஸ். கும்பல் தமது கடையிலிருந்து ஏழு இலட்சம் ரூபாய் பெறுமான மின்னணுப் பொருட்களை அடித்து நொறுக்கியும் திருடியும் சென்றுவிட்டதாக” போலீசில் புகார் அளித்துள்ளனர்.

உ.பி. மாநில போலீசு அறிவிக்கப்படாத ஆர்.எஸ்.எஸ். அடியாள் படை என்பது ஏற்கெனவே அம்பலமான ஒன்று. தற்பொழுது, யோகியின் ஆட்சியில் அவ்வரசுப் படை மிகவும் வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ். விசுவாசியாக மாறி, முஸ்லிம்களை வேட்டையாடியிருக்கிறது.

மீரட் நகரின் காவல்துறை கண்காணிப்பாளர் அகிலேஷ் என்.சிங், ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறியனுக்கே சவால் விடும் வகையில், உ.பி. முசுலீம்களை பாகிஸ்தானுக்கு ஓடுமாறு பேசி, அம்மதவெறிப் பேச்சை சமூக வலைத்தளங்களில் ஒளிப்படமாகவும் வெளியிட்டிருக்கிறார்.

முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்த உ.பி. மாநில போலீசார், “இனி இந்த வீடெல்லாம் எங்களுக்குத்தான் சொந்தம். குடியுரிமைச் சட்டம் உங்களை பாகிஸ்தானுக்குத் துரத்திவிடும்” எனக் கூறியிருக்கிறார்கள்.

முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆத்திரமூட்டி, அவர்களை வன்முறையில் இறங்க வைக்க வேண்டும் என்பதற்காகவே, மதரீதியான கொச்சையான அவதூறுகளை உ.பி. மாநில போலீசு ஆர்ப்பாட்டத்தின்போது சரளமாகப் பயன்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, முஸ்லிம்களின் சுன்னத் மதச் சடங்கைக் கேலி செய்யும் வகையில், முக்கா துலுக்கன் என வார்த்தைக்கு வார்த்தை கூறி முஸ்லிம்களை அவமானப்படுத்தியிருக்கிறது.

மங்களூரு நகரில் முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை ஆய்வாளர் சாந்தாராம் குந்தர், “இத்துணை முறை சுட்ட பிறகும் ஒருத்தன்கூட சாகவில்லையே” என வன்மத்தோடு சக போலீசுக்காரர்களிடம் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்.

மைய அரசின் துணை நிதியமைச்சர் அனுராக் தாக்குர், “துரோகிகளைச் சுட்டுக் கொல்ல வேண்டும்” என்றும்; பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான பர்வேஷ் வர்மா, “முஸ்லிம்கள் இந்துக்களின் வீடு புகுந்து நமது மகளை, சகோதரிகளைப் பாலியல் பலாத்காரம் செய்வார்கள்” என்றும்; மேற்கு வங்க மாநில பா.ஜ.க. தலைவர் திலிப் கோஷ், “எமது அரசு ஆர்ப்பாட்டக்காரர்களை நாயைப் போல சுட்டுக் கொன்றது” என்றும் விஷமத்தனமாகப் பேசியிருப்பதெல்லாம், முஸ்லிம்களை வன்முறையில் இறங்கச் செய்து, அவர்களைத் தனிமைப்படுத்திவிட வேண்டும் என்ற தீய நோக்கம் கொண்டவையாகும்.

நியாயப்படியும், சட்டப்படியும் பார்த்தால், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற கர்நாடகா மற்றும் உ.பி. மாநில முஸ்லிம்கள் மீதும் அலிகர் மற்றும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதும் இந்து மதவெறியோடு அரசு பயங்கரவாத வன்முறையை ஏவிவிட்ட உ.பி., கர்நாடகா மற்றும் டெல்லி போலீசு மீதும்; அவ்வரசுப் படையை வழிநடத்திச் சென்ற ஆர்.எஸ்.எஸ்.  பா.ஜ.க. தலைவர்கள் மீதும்தான் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்திருக்க வேண்டும்.

ஆனால், அதற்கு எதிராக, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்குச் சட்டப்படி எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற முஸ்லிம்கள், மனித உரிமை ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டர்கள், மாணவர்கள் ஆகியோர் மீது பிணையில் வெளிவரமுடியாதபடி பொய்வழக்குகளைப் போட்டுச் சிறையில் அடைத்திருக்கிறது, பார்ப்பன பாசிசக் கும்பல். இதன் மூலம் போராடிய முஸ்லிம்களை வன்முறையாளர்களாகச் சித்திரிக்கும் சதியை அரங்கேற்றியிருக்கிறது.

***

மிழகத்தில் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஓர் எழுச்சி உருவானதைப் போன்றே, ஒரு வெகுமக்கள் எழுச்சி நாடு தழுவிய அளவில் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசியக் குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக உருவாகியிருக்கிறது. இந்த மூன்றும் ஆர்.எஸ்.எஸ்.  இந்து ராஷ்டிரக் கனவை நிறைவேற்றிக் கொடுக்கும் முன்னெடுப்பு என்பதை உணர்ந்து இந்த எழுச்சி நடைபெற்று வருவதுதான் இதனின் தனிச்சிறப்பு.

இப்போராட்டத்திற்குப் பல்வேறு எதிர்க்கட்சிகளும் புரட்சிகர ஜனநாயக சக்திகளும் முஸ்லிம் அமைப்புகளும் ஆதரவளித்தாலும், இந்த மக்கள் எழுச்சி எதிர்க்கட்சிகள் உள்ளிட்டு எந்தவொரு தனிப்பட்ட அமைப்பின் தலைமையிலும் நடைபெறவில்லை என்பதைப் பல்கலைக்கழக- மாணவர்களின் போராட்டங்களும் டெல்லி ஷாஹீன் பாக் போராட்டம், கொல்கத்தா சர்க்கஸ் பார்க் போராட்டம் ஆகியவையும் உணர்த்துகின்றன.

போராட்டங்கள் தன்னெழுச்சியாகவும், துண்டு துண்டாகவும் நடைபெறுகின்றன; ஒருங்கிணைப்பு இல்லை என்பதையெல்லாம் பலவீனமாகக் கருதிக் கவலை கொள்வதைக் காட்டிலும், தேர்தல் அரசியல் கட்சிகளின் செயலின்மைக்கும், தேர்தல் அரசியலுக்கு வெளியே மாற்று அரசியல் தலைமை எதுவும் உருவாகாத வெறுமை நிலைக்கும் இடையில், இவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டும் முந்திக்கொண்டும் செல்லும் மக்களின் உணர்வு நிலையை எண்ணி மகிழ்ச்சியடைவதே பொருத்தமாக இருக்கும்.

1917 மார்ச்சில் ரசியப் பெண்கள் ரொட்டிக்காகவும் சமாதானத்திற்காகவும் நடத்திய போராட்டம் அக்டோபர் புரட்சியின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

பார்ப்பன பாசிஸ்டுகளை இந்திய சமூக, அரசியல் அரங்கிலிருந்து தூக்கியெறிய வேண்டும் என விருப்பங்கொண்டுள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள் களத்தில் நிற்கிறார்கள். “என்னை எதிர்த்து நிற்கும் தலைவன் யார்?” என்று காங்கிரசுக்கும் பிற எதிர்க்கட்சிகளுக்கும் சவால் விட்ட மோடி, தன்னை எதிர்த்து நிற்கும் இலட்சக்கணக்கான இளைஞர்களை, மாணவர்களை, தாய்மார்களைக் கண்டு திகைத்து நிற்கிறார். புதிய தலைமைகளை இந்தப் போராட்டம் நிச்சயம் உருவாக்கித் தரும்.

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2020 


பிப்ரவரி மாத புதிய ஜனநாயகம் இதழில் வெளியான இக்கட்டுரையை தாமதமாக ஏப்ப்ரல் மாதத்தில் வெளியிடுவதற்கு வருந்துகிறோம்.


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம் : பல்லிளிக்கும் பொய் வழக்குகள் !

உ.பி. மாநிலத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்துவரும் போராட்டங்களைத் தொடர்ந்து 1,240 பேர் கிரிமினல் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டனர்; 5,558 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்; 370 கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டன; பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 498 பேருக்கு தண்டம் விதித்தோ அல்லது அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது தொடர்பாகவோ நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

கொலை, கொலை முயற்சி, தீ வைத்தல், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துதல், அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்டுப் பல்வேறு கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் மீது வழக்குகள்  பதிவு செய்யப்பட்டுள்ளன.

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, காங்கிரசு கட்சியைச் சேர்ந்த சதாஃப் ஜாபர், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர்.தாரபுரி, தலித் விரிவுரையாளர் பவன் ராவ், மூத்த வழக்குரைஞர் முகம்மது ஷோயிப், அவரது உதவியாளர் ராஜீவ் யாதவ் உள்ளிட்டுப் பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களும், தன்னார்வத் தொண்டர்களும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்குகள் அனைத்துமே பொய் வழக்குகள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும், போராட முன்வரும் அனைவரையும் வன்முறையாளர்களாகப் பழி சுமத்திச் சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடுக்கப்பட்டவை என்பது முதல் கட்ட நீதிமன்ற விசாரணையிலேயே அம்பலமாகி வருகிறது.

எடுத்துக்காட்டாக, நாகினா என்ற ஊரில் நடந்த போராட்டத்தையடுத்து 83 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது, போலீசார் மேல் துப்பாக்கிச் சூடு நடத்தியது, அரசு மற்றும் தனியார் சொத்துக்களைச் சேதப்படுத்தியது உள்ளிட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட 83 பேரில் 48 பேருக்குப் பிணை வழங்கியிருக்கும் பிஜ்னோர் மாவட்டக் குற்றவியல் நீதிமன்றம், தனது உத்தரவில், ஆர்ப்பாட்டக்காரர்கள் தரப்பிலிருந்து போலீசை நோக்கிச் சுட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்கு எவ்விதமான ஆதாரத்தையும் அரசு தரப்பு தரவில்லை. ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திலிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் எதுவுமில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைப்பு உள்ளிட்ட வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரம் எதையும் அரசு தரப்பு காட்டவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது 13 போலீசார் கடுமையாகக் காயமடைந்ததாக அரசு தரப்பு கூறினாலும், அவர்களுள் 12 பேருக்கு சாதாரண சிராய்ப்புகள் மட்டும்தான் ஏற்பட்டிருக்கிறது எனக் குறிப்பிட்டு யோகி ஆதித்யநாத் அரசின் புளுகு மூட்டையை அம்பலப்படுத்தியிருக்கிறது.

படிக்க:
நிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் !
♦ கொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன ? | மக்கள் அதிகாரம்

இது போல ராம்புர் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது 34 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் அனைவர் மீதும் கொலை, கொலை முயற்சி, கொள்ளை ஆகிய கிரிமினல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருந்தது, போலீசு. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றஞ்சுமத்தப்பட்ட 34 பேரில் 26 பேர் மீதான குற்றச்சாட்டுக்களை போலீசே கைவிட்டுவிட்டது.

முசாஃபர் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட காங்கிரசு கட்சியைச் சேர்ந்த சதாஃப் ஜாபர், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி தாரபுரி ஆகிய இருவரின் பிணை மனுக்கள் லக்னோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை என போலீசே ஒப்புக்கொண்டு குற்றச்சாட்டுக்களைக் கைவிட்டுவிட்டது.

சுடலை

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

நிதி மூலதன ஆட்சி !

பொருளாதார மந்தத்தால் இந்திய மக்கள் அனுபவித்து வரும் வேதனைகளை, நெருக்கடிகளைக் கண்டு கொள்ளாத மோடி அரசு, இந்த மந்தத்தால் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திற்கு நேர்ந்துவிட்ட நெருக்கடிகளைக் களையக் கிடைத்த வாய்ப்பாக பட்ஜெட்டையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பெருநிறுவன வரிச் சீர்திருத்தங்களின் மூலமும், பொதுச் சொத்துக்களைத் தனியார்மயமாக்குவதன் மூலமும், பொதுமக்களுக்குப் பயன் அளிக்கக்கூடிய மானியங்களுக்கும் சமூக நலத் திட்டங்களுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய மறுத்திருப்பதன் மூலமும் நிதி மூலதனக் கும்பலின் மனதைக் குளிரவைத்து, தம்மை கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் தாசாதி தாசனாக, மற்ற ஆளும் வர்க்கக் கட்சிகளை விஞ்சிய முதலாளித்துவ சேவகனாகக் காட்டிக்கொண்டுவிட்டது.

பொருளாதார மந்தம் எனக் கூறப்படும் இந்த நிகழ்ச்சிப் போக்கின் உண்மையான பொருள் வேலையிழப்பு, ஆட்குறைப்பு, வேலையின்மை, கூலிவெட்டு ஆகியவைதான். இந்தப் பொருளில் மட்டும்தான் சாமானிய உழைக்கும் மக்கள் இந்த நெருக்கடியின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள வேண்டும்.

வேலையிழப்பும், வேலையின்மையும், கூலி வெட்டும் இந்திய உழைக்கும் வர்க்கத்தைத் தாக்கிய அதேவேளையில், கடந்த நவம்பர் மாதம் தொடங்கியே அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வும் அவர்களைத் தாக்கியது. இது இந்திய உழைக்கும் மக்களின் மீது இறங்கியிருக்கும் இரட்டைத் தாக்குதல்.

இதனை மந்த வீக்கம் எனப் பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். அடித்தட்டு உழைக்கும் வர்க்கம் எந்தளவிற்கு வயிற்றைச் சுருக்கிக் கொள்கிறதோ அந்தளவிற்கு மட்டுமே அன்றாட வாழ்க்கையை ஓட்ட முடியும் என்பதுதான் மந்த வீக்கம் எனப்படுவதன் பொருள்.

ஓரிரு மாதங்களுக்கு முன்பாக வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி நாடே குமுறிக் கொண்டிருந்த வேளையில், “நான் வெங்காயமும் பூண்டும் அதிகம் சாப்பிடுவதில்லை. வெங்காயம் அதிகம் பயன்படுத்தாத குடும்பத்திலிருந்து வந்தவள் நான்” என நாடாளுமன்ற விவாதத்தின்போதே பார்ப்பன சாதித் திமிரோடு பதில் அளித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இது அவரது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, மோடி அரசின் மனோநிலையே இதுதான். அதனைப் பிரதிபலிக்கும் விதமாக, உணவு மானியத்தையும் அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டத்தையும் கைவிட வேண்டுமென பட்ஜெட்டுக்கு முன்பாக வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை ஆலோசனை கூறியிருக்கிறது.

கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும் காய்கறி 60 சதவீதமும், பருப்பு வகைகள் 15 சதவீதமும், முட்டை 8.79 சதவீதமும், மீன், இறைச்சி உள்ளிட்டவை 9.57 சதவீதமும் விலை உயர்ந்துள்ளன. இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத மோடி அரசு, உணவுப் பொருள் பதுக்கலையும் கள்ளச் சந்தை வியாபாரத்தையும் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டத்தைக் கைகழுவிவிட விரும்புகிறது.

உணவு மானியத்தைக் கைவிடுவது என்பது நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கு ஒப்பானது என்பதோடு, உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்க்கையை, வருமானத்தைச் சந்தை சூதாடிகளின் கையில் ஒப்படைப்பதாகும்.

இப்படிப்பட்ட “நல்லெண்ணம்” கொண்ட மோடி அரசிடமிருந்து உழைக்கும் மக்கள் “அச்சே தின்” – நல்ல காலம் எதையும் சிறிதளவும் எதிர்பார்க்க முடியாது.

அதனை நிரூபிக்கும் விதத்தில்தான், மந்த வீக்கத்தால் ஓர் அரைப்பட்டினி நிலையை இந்திய உழைக்கும் வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் இந்தப் பாரதூரமான நிலையில்கூட, ரேஷன் பொருட்களுக்குத் தரப்படும் உணவு மானியத்தையும், விவசாயிகளுக்குத் தரப்படும் இடுபொருட்களுக்கான மானியத்தையும், ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், ஊட்டச்சத்துத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியையும் அதிகரித்துக் கொடுக்க மறுத்திருக்கிறது மோடி அரசு.

***

கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதைத் தேசிய மாதிரி புள்ளிவிவர ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையே அம்பலப்படுத்துகிறது. இந்தப் பாரதூரமான வேலைவாய்ப்பின்மையை எதிர்கொள்வதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதலாளித்துவ நிபுணர்கள் பலரும் பட்ஜெட்டுக்கு முன்பிருந்தே மோடி அரசிற்குச் சுட்டிக் காட்டி வந்தனர். இந்தத் திட்டத்திற்குக் குறைந்தபட்சமாக 76,000 கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்க வேண்டும் என அவர்கள் கூறி வந்த நிலையில், மோடி அரசோ இந்த பட்ஜெட்டில், கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியைக்கூட (71,000 கோடி ரூபாய்) ஒதுக்காமல், 10,000 கோடி ரூபாயை வெட்டிவிட்டு 61,500 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருக்கிறது.

கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவுப் பொருட்களின் விலைகள் ஏறியிருக்கும் நிலையில் உணவு, எரிபொருள் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி, கடந்த பட்ஜெட்டைவிட 0.24 சதவீதம் மட்டுமே கூட்டி வழங்கப்பட்டிருக்கிறது.

இடுபொருட்களுக்கான விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிவரும் வேளையில் உரத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் மானியத் தொகை கடந்த பட்ஜெட்டை ஒப்பிடும்போது (79,997 கோடி ரூபாய்) 8,500 கோடி ரூபாய் வெட்டப்பட்டு, 71,309 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

வயதுக்கு ஏற்ற உடல் வளர்ச்சியின்றி நோஞ்சான் குழந்தைகளின் தலைநகராக இந்தியா உருவாகியிருக்கும் சூழலில், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைக்கான நிதி 27 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 22 ஆயிரம் கோடியாகவும்; மதிய உணவுத் திட்டத்துக்கான நிதி 11 ஆயிரம் கோடியிலிருந்து 9 ஆயிரம் கோடி ரூபாயாகவும் குறைக்கப்பட்டிருக்கிறது.

குறைவாக ஒதுக்கப்பட்டிருக்கும் இந்த நிதியையும் மோடி அரசு முழுமையாகச் செலவு செய்யும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 27.86 இலட்சம் கோடி ரூபாய் நிதியில் 9.66 இலட்சம் கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை. அதற்கு முந்தைய ஆண்டில் செலவழிக்கப்படாத தொகை 7.83 இலட்சம் கோடி ரூபாய். இப்படிச் சதித்தனமாக மிச்சம் பிடிக்கப்படும் நிதி, பற்றாக்குறையை ஈடுகட்டப் பயன்படுத்தப்படுகிறது.

***

பொதுமக்கள் விடயத்தில் பற்றாக்குறை என மூக்கைச் சிந்தி வரும் மோடி அரசு, கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தள்ளுபடியோ சலுகையோ வழங்கும்போது எந்தக் கணக்கு வழக்கும் பார்ப்பதில்லை. பட்ஜெட்டுக்கு முன்பாகவே கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திற்கு 1.50 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வருமான வரித் தள்ளுபடியை அறிவித்திருந்த மோடி அரசு, அதுவும் போதாதென்று இந்த பட்ஜெட்டில் 25,000 கோடி ரூபாய் அளவிற்கு பங்கு ஈவு வரியைத் தள்ளுபடி செய்திருக்கிறது. ஏகாதிபத்திய அரசுகள் இந்தியாவின் அடிக்கட்டுமானத் திட்டங்களில் முதலீடு செய்தால், அம்மூதலீடு ஈட்டும் இலாபத்தின் மீதான வரி மற்றும் பங்கு ஈவு வரிகளைத் தள்ளுபடி செய்திருக்கிறது.

வருமான வரி ஏய்ப்பு வழக்குகளை கிரிமினல் சட்டங்களின் கீழ் விசாரித்துத் தண்டிப்பதற்குப் பதிலாக அவ்வழக்குகளை சிவில் வழக்குகளாக நடத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும், முதலாளி வர்க்கத்தினர் மீது வரி ஏய்ப்பு வழக்குகளைத் தொடுப்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு வரி வசூலில் ஈடுபடும் நிறுவனங்களின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் முகமாக, பொது மன்னிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் வரித் தொகையைச் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்கள் மார்ச் 31, 2020 செலுத்த முன்வந்தால், அவ்வரித் தொகை மீதான வட்டி, அபராதத் தொகை மட்டுமின்றி, அந்நிறுவனங்களின் மீதான வழக்குகளும் கைவிடப்படும். வாய்ப்பு கிடைத்தால், இந்தியாவை வரியில்லாத சொர்க்க பூமியாக அறிவிக்கவும் நரேந்திர மோடி தயங்க மாட்டார் போலும்!

நரேந்திர மோடி இரண்டாம் முறையாகப் பதவியேற்ற இந்த ஆறேழு மாதங்களுக்குள்ளாகவே கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இரண்டு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான வரித் தள்ளுபடிகள், சலுகைகளை வாரிக் கொடுத்திருக்கிறார். மேலும், 2019 நிதியாண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய வருமான வரியில் இரண்டு இலட்சம் கோடி ரூபாய் வரை துண்டு விழும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் அரசிற்கு ஏற்படவுள்ள இழப்பை ஈடுகட்ட ஏற்கெனவே ரிசர்வ் வங்கியிடமிருந்து 1.75 இலட்சம் கோடி ரூபாயைப் பிடுங்கிக் கொண்டுவிட்டது மைய அரசு. மேலும், இந்த பட்ஜெட்டில் இரண்டு இலட்சம் கோடி ரூபாய் பெறுமான பொதுத்துறை நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, கடந்த ஆண்டில் மட்டும் 48,436 கோடி ரூபாயை மதிப்பீட்டு உபரியாக ஈட்டியிருக்கும், 31.11 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான சொத்துக்களை நிர்வகித்து வரும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவு நிதி மூலதனக் கும்பலுக்கு அளிக்கப்பட்டிருக்கும் கறி விருந்து என்றுதான் சொல்ல முடியும்.

***

நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது சர்வதேச நிதி மூலதன நிறுவனங்களின் கட்டளை. இக்கட்டளையை நிறைவேற்றும் முகமாக நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டம் என்றொரு சட்டத்தையே உருவாக்கி வைத்திருக்கிறது, இந்திய அரசு.

பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தி வரம்பிற்குள் வைப்பது என்பதன் பொருள் கார்ப்பரேட் முதலாளிமார்களுக்கும் சலுகை அளிக்கக்கூடாது என்பதல்ல. மாறாக, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மானியத்தைப் படிப்படியாக வெட்டி முற்றிலுமாக நிறுத்திவிட வேண்டும் என்பதுதான்.

பா.ஜ.க.விற்கு முந்தைய அரசுகளும் இந்தக் கட்டளைக்கு அடிபணிந்துதான் பட்ஜெட்டைத் தயாரித்தார்கள் என்றாலும், பார்ப்பன பாசிஸ்டுகளைப் பொருத்தவரை, பொதுமக்களுக்கு மானியம் வழங்குவது, மானிய விலையில், கட்டணத்தில் சேவைகளை வழங்குவதையெல்லாம் அடியோடு நிறுத்த வேண்டும் என்பதுதான் அவர்களது இலட்சியமும்கூட.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் மானியங்களைத் தண்டச் செலவு என்றும் இலவசங்கள் மக்களைச் சோம்பேறிகளாக்குகிறது என்றும் இழிவுபடுத்தி வரும் இக்கும்பல், முதலாளிகளுக்கு அளிக்கப்படும் மானியங்களையெல்லாம் வளர்ச்சிக்கான தூண்டுகோல்கள் (stimulus packages) என நாமகரணம் சூட்டிப் புனிதப்படுத்துகிறார்கள்.

சமையல் எரிவாயுவுக்கும் உரத்திற்கும் தரப்படும் மானியங்களை வங்கிக் கணக்கில் செலுத்தும் நடைமுறையெல்லாம் மானியங்களை வெட்டும் நோக்கில்தான் கொண்டுவரப்பட்டிருக்கிறதே ஒழிய, முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்படவில்லை. தண்ணீரை விலைக்கு வாங்கப் பழக்கப்படுத்திவிட்டதைப் போல, இவற்றையும் சந்தை விலைக்கு வாங்கும் மனநிலைக்கு மக்களைத் தள்ளிவிடும் சூது நிறைந்தது இந்த நடைமுறை.

இந்த அடிப்படையில்தான் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடியால் யார் குடி அழிந்தாலும் நிதி மூலதனக் கும்பலின், கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் இலாபம் சரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே பொது மக்களுக்கான மானியங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன; வரித் தள்ளுபடிகளும் வரி சீர்திருத்தங்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இலாபமீட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்கள் நிதி மூலதனக் கும்பலின் ஆதிக்கத்துக்கும் கொள்ளைக்கும் திறந்துவிடப்பட்டிருக்கின்றன.

“அனைவருடனும் அனைவருக்குமான வளர்ச்சி” எனத் தேனொழுகப் பேசி அதிகாரத்தைக் கைப்பற்றிய நரேந்திர மோடியின் ஆட்சியில் வலுத்தவர் மென்மேலும் கொழுத்ததைத்தான் கண்டோம். உண்மையில் நரேந்திர மோடி அரசு, நிதி மூலதனக் கும்பல் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசு. மக்களுக்குப் புரியும் மொழியில் சொல்வதென்றால், ராகுல் காந்தி பயன்படுத்திய வார்த்தைகளைத்தான் திரும்பக் கூற வேண்டும் – “சூட்-பூட் கி சர்க்கார்!”

– புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020


பிப்ரவரி மாதம் வெளியான புதிய ஜனநாயகம் இதழில் வெளியான இக்கட்டுரையை தாமதமாக ஏப்ரல் மாதத்தில் வெளியிடுவதற்கு வருந்துகிறோம்.


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart