Sunday, November 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 67

தேர்தலை புறக்கணிக்கும் கீழ மூவக்கரை மீனவ கிராம மக்கள்

“தேர்தலின் போது மட்டும் வரும் வேட்பாளர்கள் பிறகு திரும்பி கூட பார்ப்பதில்லை” என தேர்தலை புறக்கணிக்கும் கீழ மூவக்கரை மீனவ கிராம மக்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கீழ மூவக்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் தங்களின் அடிப்படை வசதியான ரேஷன் கடை, சமுதாயக் கூடம், மீன் ஏல கூடம், மீன் வலை பின்னும் கூடம், மின் விளக்குகள், மானியத்தில் டீசல், கடலில் தூண்டில் வளைவு என அடிப்படை வசதிகளை கேட்டு 20 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்திடம் போராடியும் தங்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் தேர்தலின் மீது அதிருப்தி அடைந்த மீனவர்கள் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி, கிராம மக்கள் அனைவரையும் கூட்டி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாகவும், கறுப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டம் நடத்தப்போவதாகும், அதனைத் தொடர்ந்து தங்களின் ரேஷன் அட்டை மற்றும் ஆதார் அட்டையை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி அன்று பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கறுப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மக்களிடம் பேச்சுவார்த்தைக்கு வந்த சட்டமன்ற உறுப்பினரை “இத்தனை ஆண்டுகளாக எங்களை பார்க்க வராத நீங்கள் இப்போது ஏன் பேச்சு வார்த்தைக்கு வந்துள்ளீர்கள்” என திருப்பி அனுப்பியுள்ளனர்.


படிக்க: சாலைகளே இல்லாத கிராமங்களுக்கு தேர்தல் எதற்கு? தேர்தலைப் புறக்கணிக்கும் ஏர்வாடி மக்கள்


”தேர்தலின் போது மட்டுமே எங்கள் கிராமங்களுக்கு வரும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் முடிந்த பிறகு எங்களை துளியும் கண்டுகொள்ளப் போவதில்லை, பிறகு நாங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? வாக்களித்தும் எங்களின் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை தேவைகள் இதுவரை நிறைவேற்றித் தரப்படவில்லை” என்று தங்களின் வேதனையை மீனவ மக்கள் வெளிப்படுத்தினர். “எங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தந்த பிறகே நாங்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்போம்; இல்லை என்றால் நாங்கள் தேர்தல் தேதி அன்று வாக்களிக்க போகாமல் வீட்டிலேயே இருக்கப் போகிறோம்” என்று மக்கள் தங்கள் முடிவு குறித்துக் கூறியுள்ளனர்.

வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவின் திசைவழியைத் தீர்மானிக்கும் தேர்தலாகக் கருதப்படுகிறது. எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து வேலை செய்கிறார்களோ, அதேபோல் மக்களின் வாழ்க்கை பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும். இல்லையென்றால் மக்களின் குரல்களுக்கு செவி சாய்க்காத கட்சிகளையும் தேர்தலையும் மக்கள் புறக்கணிக்கவே செய்வார்கள்.

மக்களை பாதிக்கும் பிரச்சினைகளான புதிய கல்வி கொள்கை, ஜி.எஸ்.டி., தொழிலாளர் நல சட்டம் 2022, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 என அனைத்து பாசிச சட்டங்களையும் திரும்பப்பெறுவோம் என்ற வாக்குறுதியை எதிர்க்கட்சிகள் தர வேண்டும்.


தமிழ் பிரியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



சங்கப் பரிவார கும்பலின் கைகளில் சைனிக் பள்ளிகள்

0

ன்றிய அரசின் 62 சதவிகித புதிய சைனிக் பள்ளிகளை (Sainik Schools) நிர்வகிக்கும் பொறுப்பு ஆர்.எஸ்.எஸ் சங்கப் பரிவார அமைப்புகளையும் பா.ஜ.க-வையும் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியளிக்கும் தகவல் ஆர்.டி.ஐ (தகவல் அறியும் உரிமைச் சட்டம்) மூலம் அம்பலமாகியுள்ளது.

ஒன்றிய அரசின் சைனிக் பள்ளிகள் எனப்படும் இராணுவ பள்ளிகள், இந்திய இராணுவத்தில் சேருவதற்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தும் பள்ளிகள் ஆகும். சைனிக் பள்ளிகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான சைனிக் பள்ளிகள் சங்கத்தால் (Sainik Schools Society) நிர்வகிக்கப்படுகின்றன. 2013 – 2014 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற நிலைக்குழு வெளியிட்ட அறிக்கையின்படி, தேசிய பாதுகாப்பு அகாடமி (National Defence Academy) மற்றும் இந்திய கடற்படை அகாடமியில் (Indian Naval Academy) சேர்ந்த கேடட்களில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் பேர் சைனிக் பள்ளிகளின் மாணவர்கள் ஆவர்.

2022-ஆம் ஆண்டுக்கு முன்னதாக, நாடு முழுவதும் ஒன்றிய மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் 33 சைனிக் பள்ளிகள் இயங்கி வந்தன. இந்நிலையில், அக்டோபர் 2021-இல் ஒன்றிய பா.ஜ.க அரசு, தனியார் நிறுவனங்கள் சைனிக் பள்ளிகள் சங்கத்துடன் இணைந்து புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் மேலும் 100 சைனிக் பள்ளிகளை நிறுவ அனுமதி அளித்தது.

அதன்படி மே 05, 2022 மற்றும் டிசம்பர் 27, 2023 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில், 40 புதிய இராணுவப் பள்ளிகளை நிறுவ தனியார் நிறுவனங்கள் சைனிக் பள்ளிகள் சங்கத்தோடு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இதில் குறைந்தது 25 பள்ளிகளை (62 சதவிகித பள்ளிகளை) அமைக்கும் உரிமம் சங்கப் பரிவார கும்பல்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், 11 பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பை பா.ஜ.க-வினர் பெற்றுள்ளனர். ஆர்.எஸ்.எஸ் வசம் 8 சைனிக் பள்ளிகள் சென்றுள்ளன; பிற இந்துத்துவ அமைப்புகளிடம் 6 சைனிக் பள்ளிகள் சென்றுள்ளன. அதானி குழுமத்தின் கீழ் செயல்படும் அறக்கட்டளை ஒன்றும் ஒரு பள்ளியை நிர்வகிக்கும் உரிமையைப் பெற்றுள்ளது.


படிக்க: உ.பி. யில் இராணுவ பள்ளியைத் தொடங்குகிறது ஆர்எஸ்எஸ் !


ஆனால் கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்பின் கீழ் செயல்படும் இந்தியாவின் எந்தவொரு மத சிறுபான்மையின அமைப்புகளுக்கும் இதுவரை சைனிக் பள்ளிகளை நடத்தும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

குஜராத், உத்தரப் பிரதேசம், ஹரியானா, அருணாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பா.ஜ.க ஆளும் / ஆதரவு மாநிலங்களில் மட்டுமே புதிய சைனிக் பள்ளிகளை நடத்தும் ஒப்பந்தம் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தியாவின் முதல் பெண்கள் இராணுவப் பள்ளிகளை இந்துத்துவவாதி சாத்வி ரிதம்பரா நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் பெண்கள் பிரிவான துர்கா வாஹினியின் நிறுவனர் சாத்வி ரிதம்பரா என்பது குறிப்பிடத்தக்கது. பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான ராம ஜன்மபூமி இயக்கத்தை முன்னின்று நடத்திய நபர்களில் ஒருவராக இவர் இருந்துள்ளார். ஜனவரி 2-ஆம் தேதி சைனிக் பள்ளி திறப்பு விழாவில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரிதம்பராவின் இந்த ’கரசேவை’யை அங்கீகரித்துப் பேசியுள்ளார்.


படிக்க: தயாராகிறது இந்துராஷ்டிர இராணுவம் !


ஆர்.எஸ்.எஸ்-இன் கல்விப் பிரிவான வித்யா பாரதி அகில பாரதிய சிக்ஷா சன்ஸ்தானுக்கு (Vidya Bharati Akhil Bharatiya Shiksha Sansthan), 7 சைனிக் பள்ளி ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

1937 ஆம் ஆண்டில் மூஞ்சேவால் நிறுவப்பட்டு, தற்போது மத்திய இந்து இராணுவ கல்வி சங்கத்தால் (Central Hindu Military Education Society) நடத்தப்படும் நாசிக்கின் போன்சாலா இராணுவப் பள்ளியும் சைனிக் பள்ளியாக செயல்பட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2006 நாந்தேட் குண்டுவெடிப்பு மற்றும் 2008 மாலேகான் குண்டுவெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் போன்சாலா இராணுவப் பள்ளியில் பயிற்சி பெற்றதாக மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை (Anti-Terror Squad) குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசு கட்டமைப்பை பாசிசமயமாக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலின் செயல்பாடுகள் தீவிரமடைந்து வருவதையே இது நமக்கு உணர்த்துகிறது. இராணுவத்தில் நேரடியாக ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு ஆட்பட்டவர்களை உள்ளே நுழைப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இதன்மூலம் காவி கும்பல் தனது இந்துராஷ்டிர இலட்சியத்தை அடைவதற்கு இராணுவத்தை நேரடியாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய பேரபாயம் ஏற்பட்டுள்ளது.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஊட்டச்சத்து குறைபாட்டால் பரிதவிக்கும் ஆப்கான் குழந்தைகள்

ந்து வயதுக்குட்பட்ட ஆப்கானிஸ்தான் குழந்தைகளில் 10-இல் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களாக இருக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த இரண்டரை வருடங்களில் பொருளாதார நெருக்கடி, காலநிலை நெருக்கடி மற்றும் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் கடுமையான ஊட்டச்சத்து பற்றாக்குறை நிலவுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தானில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 10 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாகவும் 45 சதவீதம் குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாகவும் உள்ளனர்.

உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி குன்றிய விகிதமானது, ஆப்கானிஸ்தானில் தான் அதிகமாக உள்ளது என்று யுனிசெஃப் (UNICEF) இன் தகவல் தொடர்புத் தலைவர் டேனியல் டிம்மே கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் கிடைக்கக்கூடிய உதவிகளின் வீழ்ச்சி மற்றும் நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவ வல்லுநர்கள் போன்ற சூழல்கள் ஏற்கெனவே பலவீனமாக இருந்த சுகாதார கட்டமைப்பை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது.

ஐ.நாவின் வளர்ச்சித் திட்டத்தின் ஆய்வின்படி, ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 80 சதவீத மக்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை.

ஆப்கானிஸ்தானின் பதாக்‌ஷான் மாகாணத்தில் உள்ள ஆர்கோ மாவட்டத்தில் உள்ள ஆப் பரீக் கிராமத்தில் தடுப்பூசி போடுவதற்காக சுகாதார நிலையத்திற்கு செல்லும் பெண்குழந்தையும் அவரது தாயும். [வகில் கோஹ்சார்/AFP]
வடகிழக்கு ஆப்கானிஸ்தானின் பதாக்‌ஷானில் உள்ள கந்தன்சுஸ்மா கிராமத்தில் உள்ள ஒரு சுகாதார நிலையத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டை மதிப்பிடுவதற்காக, ஒரு டேப்பைக் கொண்டு குழந்தையைப் பரிசோதிக்கும் மருத்துவர். [வகில் கோஹ்சார்/AFP]
வலது புறம் உள்ள ஆர்யன் அதாஹி என்ற குடும்பக் கட்டுப்பாடு செவிலியர், பதாக்‌ஷானின் பஹாராக் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கிறார்.

 

சமூக சுகாதாரப் பணியாளர்களின் உறுப்பினரான ஹசீனா, கந்தன்சுஸ்மாவில் உள்ள ஒரு சுகாதார நிலையத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டை மதிப்பிடுவதற்காக ஒரு குழந்தையை எடைபோடுகிறார்.

 

ஆப் பரீக்கில் உள்ள சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடுவதற்காக பெண்களும் அவர்களது குழந்தைகளும் காத்திருக்கும் காட்சி.

 

ஆப் பரீக்கில் உள்ள சுகாதார நிலையத்தில் ஒரு சுகாதார ஊழியர் குழந்தைக்கு போலியோ தடுப்பூசி போடும் காட்சி.


‌ஆதன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாசிச மோடியும் ஊடக சுதந்திரமும்

0

ல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் (Reporters Sans Frontières) என்ற சர்வதேச ஊடக கண்காணிப்பு அமைப்பு ஆண்டுதோறும் 180 நாடுகளுக்கான உலக பத்திரிகை சுதந்திர குறியீடு தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதில் 2014-ஆம் ஆண்டில் உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் 140-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2023-ஆம் ஆண்டில் 161-ஆவது இடத்திற்குச் சரிந்தது.

மோடி பிரதமராகப் பதவியேற்றது முதல் இந்தியாவில் நடந்த எந்த செய்தியாளர் சந்திப்பிலும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததில்லை. பத்திரிகையாளர்களைச் சந்தித்தாலும் தனது உரையை மட்டும் நிறைவு செய்துவிட்டுச் சென்றுவிடுவார். பத்திரிகையாளர்கள் என்றாலே அவருக்கு ஒவ்வாமை தான். டென்மார்க் நாட்டில் மே, 2022-இல் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்பதற்காக மோடியை சூழ்ந்துகொண்ட போது “ஓ மை காட்” என்று அவர் பயந்தோடியது உலகறிந்ததே. வெளிநாடுகளில் மட்டும் இரண்டு முறை, 2015-இல் இங்கிலாந்திலும் 2023-இல் அமெரிக்காவிலும், மோடி பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது பத்தாண்டுக்கால பதவிக்காலத்தில் 117 பத்திரிகையாளர் சந்திப்புகளில் பங்கேற்றுள்ளதாக, 2012 மற்றும் 2014 காலகட்டத்தில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராக இருந்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி மோடி மீதான தனது விமர்சனத்தை முன்வைக்கும் போது கூறினார்.

பத்திரிகையாளர்கள் நாடாளுமன்றம் மற்றும் மத்திய அமைச்சகங்களை அணுகுவதில் தடைகளை எதிர்கொண்டு வருகின்றனர். சான்றாக, 2019 ஆம் ஆண்டில், அதிகாரிகளைச் சந்திக்க விரும்பும் பத்திரிகையாளர்களுக்கு முன் அனுமதி முறையை (system of prior appointment) நிதி அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. கோவிட் -19 தொற்றுநோய்க்குப் பிறகு, ஊடகவியலாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.


படிக்க: நியூஸ் கிளிக் நிறுவனம் மீது பாசிச அடக்குமுறையை ஏவிய மோடி அரசு!


இந்தியாவில் வெளிநாட்டு பத்திரிகையாளர்களும் மோடி ஆட்சியில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். 2018-ஆம் ஆண்டு முதல் காஷ்மீரில் இருந்தும், 2019-ஆம் ஆண்டு முதல் அசாமில் இருந்தும் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் செய்தி அறிக்கை அளிக்க வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் அனுமதியைப் பெறவேண்டும் என்று மோடி அரசு கூறியது. வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி, விசா ஆகியவை இந்திய அதிகாரிகளால் அதிகளவில் நிராகரிக்கப்படுகின்றன.

2023-ஆம் ஆண்டில், 2002 குஜராத் இனப்படுகொலையில் மோடியின் பங்கை விமர்சிக்கும் பி.பி.சி ஆவணப்படத்தின் மீதான தடையும், அதனைத்தொடர்ந்து டெல்லி பி.பி.சி அலுவலகத்தில் நடந்த சோதனைகளும் வெளிநாட்டு பத்திரிகையாளர்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.

பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களின் போது அவருடன் பத்திரிகையாளர்களை அழைத்துச் செல்லும் நடைமுறை இந்தியாவில் இருந்தது. அந்த நடைமுறையையும் பிரதமர் மோடி முடிவுக்குக் கொண்டுவந்து விட்டார்.

இந்தியாவின் செய்தித் துறையின் முக்கிய வருவாய் ஆதாரமாக விளம்பரங்கள் உள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது பதவிக்காலத்துடன் ஒப்பிடும்போது, 2014 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், மோடி அரசு அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் விளம்பரங்களை உயர்த்தியுள்ளதாக அரசின் தகவல்கள் காட்டுகின்றன. ஆனால் 2017 முதல், இந்த எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.

விமர்சனப்பூர்வமாக செய்திகளை வெளியிட்டதற்காக, 2019 ஆம் ஆண்டில், டைம்ஸ், ஏபிபி (ABP) மற்றும் இந்து (Hindu) ஆகிய மூன்று செய்தித்தாள் குழுக்களுக்கு அரசு விளம்பரங்களை நிறுத்திவிட்டது.


படிக்க: “தி காஷ்மீர் வாலா” சுதந்திர ஊடகம் முடக்கம்: கருத்துச் சுதந்திரத்தின் மீதான மோடி அரசின் கொலைவெறித் தாக்குதல்!


மேலும், இணையத்தை ஒழுங்குபடுத்துதல் என்ற பெயரில் மோடி அரசு டிஜிட்டல் ஊடகங்களை தணிக்கை செய்யும் வகையில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை உருவாக்கியது.

தொலைக்காட்சி செய்தி சேனல்களுக்கு உரிமங்களை வழங்குவதிலும் மோடி அரசு தன்னிச்சையாக செயல்படுகிறது. புதிய சேனலைத் தொடங்குவதற்காக குவின்டில்லியன் மீடியா மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ப்ளூம்பெர்க் மீடியா ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான ”ப்ளூம்பெர்க் குயின்ட்”, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் உரிமத்திற்காக மூன்று ஆண்டுகளாக காத்திருந்தது. உரிமம் கிடைக்காததால் இந்த திட்டத்தை கைவிட்டுவிட்டது. ஆனால், சங்கி அர்னாப் கோஸ்வாமியின் செய்தி சேனலான ”ரிபப்ளிக் டிவி” தொடங்கப்படுவதற்கு மிக விரைவாக சில மாதங்களிலேயே அரசால் உரிமம் வழங்கப்பட்டது.

அதேபோல், மலையாள செய்தி சேனலான ”மீடியா ஒன்”னின் உரிமத்தைப் புதுப்பிக்க ஜனவரி 2022-இல் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மறுத்துவிட்டது. பின்னர் ஏப்ரல் 2023-இல் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அனுமதி அளிக்குமாறு கூறியது.

மோடி ஆட்சியில் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுவது நான்கு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது. பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (Committee to Protect Journalists) சேகரித்த தரவுகளின்படி, 2014 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 36 பத்திரிகையாளர்கள் இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்த எண்ணிக்கை 8 ஆக இருந்தது.


படிக்க: “இந்தியா: மோடி மீதான கேள்வி” ஆவணப்படம்: மீண்டும் அம்பலமாகும் பாசிச மோடி!


எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் (Reporters Sans Frontières) நிறுவனத்தின் தரவுகளின்படி, மோடி ஆட்சியில், 2014 முதல் 2024 வரை, இந்தியாவில் 28 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கருப்புச் சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 இன் கீழ் மோடி அரசு 16 பத்திரிகையாளர்களின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர்களில் 7 பேர் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். 2019-ஆம் ஆண்டு திருத்தத்திற்குப் பிறகு இச்சட்டம் மிகவும் கடுமையானதாக மாற்றப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்களுக்கு எதிராக அரசின் கண்காணிப்பு மற்றும் ஸ்பைவேர் பயன்பாடு, செய்தி நிறுவனங்களில் வருமான வரி ’ஆய்வுகள்’, இளம் பத்திரிகையாளர்களின் வீடுகளில் அச்சுறுத்தும் வகையிலான சோதனைகள் ஆகியவை பாசிச மோடி ஆட்சியில் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன.

பாசிஸ்டுகளிடம் கருத்துச் சுதந்திரத்தைக் கோரிப் பெற முடியாது. பாசிசத்தை வீழ்த்துவதன் மூலம் மட்டுமே, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைப்பதன் மூலம் மட்டுமே, நமது ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள முடியும்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஆர்.எஸ்.எஸ் ஊதுகுழல் தந்தி டிவி | தோழர் அமிர்தா

ஆர்.எஸ்.எஸ் ஊதுகுழல் தந்தி டிவி | தோழர் அமிர்தா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



நெதன்யாகு பதவி விலகக் கோரி இஸ்ரேலிய மக்கள் போராட்டம்

டந்த மார்ச் 31 அன்று பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஜெருசலேமின் வீதிகளில் திரண்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காசாவில் சிறைக்கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்களை மீட்க வேண்டும் என்றும் தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்த பின்பு நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போராட்டத்தால் நெதன்யாகுவுக்கு உள் நாட்டிலேயே நெருக்கடி அதிகரித்துள்ளது.

“எங்களுடைய குடும்பத்தினரை மீட்டு கொண்டுவரும் வரை இந்த வாரம் முழுவதும்  ஒவ்வொரு இரவிலும் தெருக்களில் இறங்குவோம்” என்று போராடும் மக்கள் கூறியுள்ளனர்.

நெத்தன்யாகுவின் முகத்தில் இரத்தம் இருக்கக்கூடிய பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். மேலும் “நீதான் பொறுப்பு, நீதான் குற்றவாளி” என்ற பதாகைகளையும் வைத்திருந்தனர். எங்களுக்கு “இப்போதே தேர்தல் வேண்டும்!” எனவும் போராட்டக்காரர்கள் முழங்கினர்.

காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை தொடங்குவதற்கு முன்பே, நீதித்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக நெதன்யாகுவுக்கு எதிராக பல மாதங்களாக இஸ்ரேல் தெருக்களில் போராட்டங்கள் நடைபெற்றது நினைவு கொள்ளத்தக்கது.

இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 32,782-க்கும் அதிகமான பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளது.

போராட்டத்தின் புகைப்படங்களை வாசகர்களுக்குத் தொகுத்து வழங்குகிறோம்.

 

 

 

 

 

 

 


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



சாலைகளே இல்லாத கிராமங்களுக்கு தேர்தல் எதற்கு? தேர்தலைப் புறக்கணிக்கும் ஏர்வாடி மக்கள்

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டப்பாடி, குருநாதபுரம், குரும்பூர், விச்சூர், சித்தம்பல்,  மருதாவூர், பத்தபாலூர் என ஏழு கிராம மக்கள் பல ஆண்டுகளாகப் போராடியும் தங்களுக்கான அடிப்படை வசதிகள் ஏதும் செய்துதரபடாததால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் கிராமங்களில் சாலைகள் சீரமைக்கபடாமல் மண் சாலை குண்டும் குழியாகவும், மின்கம்பிகள் பழுதடைந்து சரி செய்யப்படாமலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து வருகின்றன.  இதன் காரணமாக மழை வரும் போது சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பதால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. பள்ளி மாணவர்கள் மழைக் காலங்களில் பள்ளிக்கு  செல்லமுடியாத நிலையில் உள்ளனர் என்றும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். 3 கிலோமீட்டர் வரை மண் சாலையாக உள்ளதால் மக்களின் அன்றாட அடிப்படை தேவைகளுக்கு  நகர்புறங்களுக்கு செல்வது சிரமமாக இருக்கிறது. சீரமைக்கப்படாமல் உள்ள சாலையை சீரமைக்க   வேண்டும் என்ற  எங்களின் குரல்கள் கேட்கபடாமல் ஏர்வாடி ஊராட்சி மட்டும்  தனித்து விடப்பட்டதாக இருக்கிறது.

இதையொட்டி பல முறை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரை நேரடியாக சந்தித்து மனுக்கள் கொடுக்கப்பட்ட போதும் இதுவரை எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினரும் ஒருமுறை கூட தங்கள் கிராமத்திற்கு வந்து தங்களின் அவலநிலையைப் பார்கவில்லை என  வேதனைப்படுகின்றனர் கிராம மக்கள்.


படிக்க: கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம் | மக்கள் அதிகாரம் வரவேற்கிறது


இதனால் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்த மக்கள் “எங்களுக்கான அடிப்படை வசதிகளை துளியும் செய்து தராத இந்த தேர்தல் முறையில் நாங்கள் வாக்களிக்க மாட்டோம். அடிப்படை வசதிகளை செய்து தந்தபிறகே நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்போம். இல்லையென்றால் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்” என ஏழு கிராம மக்களும் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இந்தியா கூட்டணி கட்சிகள் மக்கள் பிரச்சினைகளைத் தங்களின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் அது அவர்களுக்கு பின்னடைவாகவே அமையும்.

தேர்தல் சமயத்தில் போராடுவதன் மூலம் மட்டுமே தங்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை இப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர். அதனால், தேர்தல் புறக்கணிப்பை ஒரு போராட்ட வடிவமாக மேற்கொள்ள துணிந்துவிட்டனர்.


தமிழ் பிரியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாசிச பி.ஜே.பி கும்பல் இஸ்லாமிய குடும்பத்தினர் மீது தாக்குதல்! | மக்கள் அதிகாரம் கண்டனம்

கோவையில் பாசிச பி.ஜே.பி கும்பல் “ஜெய் ஸ்ரீ ராம்” கோஷமிட்டு
இஸ்லாமிய குடும்பத்தினர் மீது தாக்குதல்!

மக்கள் அதிகாரம் கண்டனம்!

02.04.2024

டந்த வெள்ளிகிழமை (29.3.2024) அன்று கோவை சங்கனூர் பகுதி சண்முகா நகரில் வசித்துவரும் ஜீனத் என்பவரின் மகனான நவ்ஷாத் என்பவரை 30 பேரை கொண்ட பி.ஜே.பி.யின் குண்டர்படை தாக்கியுள்ளது. இப்பகுதியில் பி.ஜே.பி தேர்தல் பிரச்சாரம் செய்த போது, ஜீனத் குடும்பத்தினர் வீட்டிற்குள் நோன்பு தொழுகை செய்துகொண்டிருந்தனர். அப்போது தேர்தல் பிரச்சாரத்திற்காக பி.ஜே.பி கும்பல் வீட்டின் கதவைத் தட்டியுள்ளது. அதன்பின் அவரது இளைய மகன் கதவைத் திறந்து என்னவென்று கேட்டுள்ளார். அதற்க்கு பி.ஜே.பி குண்டர்படையினர் “உள்ளே இருப்பவர்களை வெளியே வர சொல்” என்று மிரட்டியுள்ளனர். பேசிக்கொண்டிருந்த போது ஜெய் ஸ்ரீ ராம் முழக்கமிட்டுக்கொண்டும் ”உன் பெயர் என்னடா” என்று கேட்ட பின் ”துலுக்கனுக நீங்க எல்லாரும் இப்படி தான் இருப்பீங்களா” என்று கூறிய படி அவரை தாக்கியுள்ளனர்.

மேலும், இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட ஜீனத்தின் இளைய மகன் மீது போலீசால் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து 15 நாட்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டதோடு பினை கிடைக்காதபடி செய்துள்ளது கவுண்டம்பாளையம் போலீசு. இந்த விவகாரத்தில் பாசிச பி.ஜே.பி குண்டர்படையினரின் மதவெறி தாக்குதலுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ள போலீசு அதிகாரிகளை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

பாதிக்கப்பட்ட நபர்கள் கொடுத்த புகரை ஏற்க மறுத்த போலீசு அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இத்தாக்குதலை நடத்திய பாசிச பி.ஜே.பி குண்டர்படையினரை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதோடு, அப்பகுதியை சேர்ந்த பி.ஜே.பி பிரமுகர் சங்கர் மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.

இதேபோல், கடந்த 27.03.2024 அன்று நேசனல் ஜனசக்தி காங்கிரஸ் கட்சியின் சார்பில் “NO MODI, NO GUARANTEE” என்று சுவரொட்டிகள் ஒட்டிய, அக்கட்சியின் தலைவரான ரஹ்மான் கே மூப்பனார் என்பவரை பி.ஜே.பியின் குண்டர்படையினர் “யாரு டா நீ தீவிரவாதியா உன்ன எவன்டா போஸ்டர் ஒட்ட சொன்னது அவன இங்க வர சொல்லு இல்ல உனக்கு அவ்வளவு தான்” என்று மிரட்டியதோடு 30க்கும் மேற்பட்ட பி.ஜே.பி குண்டர்படையினர் கடுமையாக தாக்குதல் நடத்தியது.


படிக்க: மோடிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியவர் மீது தாக்குதல்! | மக்கள் அதிகாரம் கண்டனம்


இதுபோன்று, பாசிச பி.ஜே.பி குண்டர்படையினரின் தாக்குதல் தொடர்ந்துக்கொண்டிருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு சவால் விடுவதாகும். களத்தில் இக்கும்பலுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் எதுவும் பதிலடி கொடுக்காமல் இருப்பது இக்கும்பலுக்கு இன்னும் துணிச்சலை கொடுக்கிறது. இந்த பாசிச கும்பலுக்கு எதிராக களத்தில் இன்னும் தீவிரமாக பிரச்சாரம் செய்வதும், இக்கும்பலை எதிர்கொண்டு களத்தில் தக்க பதிலடி கொடுத்து முறியடிப்பதும் அவசியமாகும்.

பி.ஜே.பி குண்டர்படையினரால் தாக்குலுக்குள்ளான குடும்பத்தினர் பேசும் போது “இது தமிழ்நாடு தானா, இல்லை வட மாநிலமா” என்ற கேள்வியை எழுப்புயுள்ளனர். தமிழ்நாடு அரசே, ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் “ஜெய் ஸ்ரீ ராம்” கோஷ்மிட்ட தாக்குதல் நடவடிக்கைகள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளது. இதனை, உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லையெனில் உத்தரபிரதேசம், குஜராத், திரிபுரா போன்ற வட மாநிலங்களின் நிலை இங்கும் வருவதை யாராலும் தடுக்க முடியாது.


மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய அண்ணாமலை | மக்கள் அதிகாரம் கண்டனம்

மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய அண்ணாமலைக்கு தமிழ்நாடு பதிலடி கொடுக்கும்!

மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை

31.03.2024

சில நாட்களுக்கு முன்பு திருப்பெரும்புதூரில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட பாசிச பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, ‘மக்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒருத்தர் சம்பந்தமே இல்லாமல் 1980-இல் பேசிய அதையே இப்போதும் பேசுகிறார். இந்தி, சமஸ்கிருதம் இது அது என்கிறார். இன்னும் இந்த பிஞ்சு போன சப்பலை அவர்கள் தூக்கி எறியவில்லை’’ என்று கூறி தமிழ்நாட்டில் நடைபெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை இழிவுபடுத்தியுள்ளார்.

1965 ஆம் ஆண்டு இந்தி தேசிய மொழியாகும் என்று ஒன்றை அரசு அறிவித்ததற்கு எதிராக நஞ்சருந்தியும் தீக்குளித்தும் போலீசாலும் இராணுவத்தாலும் குண்டடி பட்டும் உயிர் நீத்தவர்கள் நூற்றுக்கணக்கானோர். தொடர்ந்து பல மாதங்களாக நடைபெற்ற அந்த மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாகத்தான், இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை இந்தி தேசிய மொழியாக இருக்காது என்ற அறிவிப்பை வெளியிட்டது ஒன்றிய அரசு.

மதுரையில் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு வீடுகளிலும் கொழுந்து விட்டு எரிந்தது. அந்த நெருப்பில் தான் ஒன்றிய அரசின் ஆணவம் பொசுங்கியது.


படிக்க: ரவுடிசம் செய்த அண்ணாமலை | தோழர் மருது


இந்தியை பல்வேறு வழிகளில் திணித்து வரும் மோடி – அமித்ஷா கும்பல், தமிழ் மீது பாசம் இருப்பது போல பல இடங்களில் பேசினாலும் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடவில்லை. எனக்கு தமிழ் தெரியவில்லை என்று நீலிக் கண்ணீரை வடிக்கும் மோடியும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை செருப்பு என்று வர்ணிக்கும் அண்ணாமலையும் பாசிச பாஜகவின் முகங்கள் தான் என்பதை அறியாதது அல்ல தமிழ்நாடு.

மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய அண்ணாமலை உடனடியாக மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அதற்கான உரிய பதிலை, உரிய முறையில் தமிழ்நாடு அளிக்கும், அளிக்க வேண்டும் என்ற மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஊழல்: அம்பலப்பட்ட பாசிச பா.ஜ.க அரசு!

0

2023-ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில், 143 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர் எதேச்சதிகார முறையில் தொலைத்தொடர்பு மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. டிசம்பர் 18 அன்று மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு டிசம்பர் 20 அன்று நிறைவேற்றப்படுகிறது; டிசம்பர் 21 அன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்படுகிறது; டிசம்பர் 24 அன்று குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

இச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாசிச மோடி அரசு காட்டிய அதீத அக்கறைக்கான காரணத்தை தற்போது தேர்தல் நிதிப் பத்திரம் தொடர்பான விவரங்கள் வெளிவந்த பின்னர் தான் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

இச்சட்டமானது, போட்டி ஏலங்கள் இல்லாமல் செயற்கைக்கோள் அலைக்கற்றை (satellite spectrum) ஒதுக்கீட்டை நிர்வாக உத்தரவு மூலம் மேற்கொள்ள வழிவகை செய்கிறது. மேலும், ஏலம் விடும் முறையைப் பின்பற்றாமல் இருப்பதற்கான ஒப்புதலை வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

மன்மோகன் சிங் அரசாங்கத்தில் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது வழங்கப்பட்ட 122 தொலைத்தொடர்பு அலைக்கற்றை (2ஜி ஸ்பெக்ட்ரம்) உரிமங்கள் உச்ச நீதிமன்றத்தால் கடந்த 2012-ஆம் ஆண்டில் இரத்து செய்யப்பட்டன. அவ்வழக்கில் அலைக்கற்றை உரிமங்கள் ஏலம் வழியாக மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவு “ஊழலுக்கு எதிரான சம்மட்டி அடி” என்று ஊடகங்களால் அப்போது கொண்டாடப்பட்டது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் வெற்றிக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடும் முக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.


படிக்க: “ஊழல் நாயகன்” மோடி!


2012-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவை புறந்தள்ளி விட்டுத்தான் தற்போது பாசிச மோடி அரசு செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை மேற்கொள்ள இருக்கிறது.

புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின்படி, செயற்கைக்கோள் மூலம் ஒளிபரப்பு சேவைகளை வழங்குவதற்கு, ஒரு நிறுவனம் இரண்டு அனுமதிகளைப் பெற வேண்டும். முதலாவது, தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து GMPCS உரிமத்தை (Global Mobile Personal Communications by Satellite licence) பெற வேண்டும். இரண்டாவது, இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையதின் (Indian National Space Promotion and Authorization Centre IN-SPACe) அனுமதியைப் பெற வேண்டும்.

ஒன்வெப் இந்தியா (OneWeb India) என்ற நிறுவனம் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் யூடெல்சாட் ஒன்வெப் (Eutelsat OneWeb) என்ற சர்வதேச செயற்கைக்கோள் மற்றும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தின் இந்திய கிளையாகும். ஒன்வெப் இந்தியா நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீட்டாளராக இருப்பது தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஏர்டெல்-இன் (Airtel) தாய் நிறுவனமான பார்தி எண்டர்பிரைசஸ் (Bharti Enterprises) ஆகும்.

ஒன்வெப் இந்தியா நிறுவனம் ஆகஸ்ட் 24, 2021 அன்று தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து GMPCS உரிமத்தைப் பெற்றுவிட்டது. இந்தியாவில் இந்த உரிமத்தைப் பெற்ற முதல் நிறுவனம் இதுதான்.


படிக்க: அம்பலப்பட்டுப்போன பாசிச மோடி அரசின் ’ஊழல் ஒழிப்பு’ நாடகம்


அடுத்ததாக நவம்பர் 9, 2023 அன்று பா.ஜ.க-விற்கு 100 கோடி ரூபாயை தேர்தல் பத்திரம் மூலம் பார்தி குழுமம் அளிக்கிறது. இதை நவம்பர் 13 அன்று பணமாக மாற்றி கொள்ளும் பாஜக, நவம்பர் 21 அன்று IN-SPACe இன் அனுமதியை இந்நிறுவனத்திற்கு வழங்குகிறது.

இதனைத்தொடர்ந்து, டிசம்பர் மாதத்தில் புதிய தொலைத்தொடர்பு மசோதா அதிவிரைவாக மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலையும் பெற்று சட்டமாகிறது. ஜனவரியில் பார்தி குழுமம் மீண்டும் 50 கோடி ரூபாயை தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க-வுக்கு அளிக்கிறது. ஜனவரி 12, 2024 அன்று பா.ஜ.க அதையும் பணமாக மாற்றிக் கொள்கிறது.

இந்த 150 கோடி ரூபாய் மட்டுமல்ல, 2019 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், பார்தி குழும நிறுவனங்கள் 247 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன. இதில் 95 சதவிகிதத்துக்கும் அதிகமான நிதி பா.ஜ.க-வுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பத்திரங்கள் அல்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் இணைந்து தேர்தல் நிதி அளிப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்தியேக அமைப்பு தேர்தல் அறக்கட்டளை (Electoral Trusts) எனப்படுகிறது. 2013-ஆம் ஆண்டு முதல் இந்த அறக்கட்டளைகள் கார்ப்பரேட்களால் அமைக்கப்படுகின்றன. மொத்தமுள்ள 18 தேர்தல் அறக்கட்டளைகளில் முதன்மையானது புரூடெண்ட் தேர்தல் டிரஸ்ட் (Prudent Electoral Trust) நிறுவனம். 2013 ஆம் ஆண்டில் பாரதி குழுமத்தால் முன்கையெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்நிறுவனம், 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது பா.ஜ.க-வுக்கு 218 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளது. இதில் பார்தி குழுமத்தால் மட்டும் 27.25 கோடி ரூபாய் நேரடியாக இந்த அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுள்ளது.


படிக்க: கார்ப்பரேட்டுகளுக்காக மோடி செய்த ஊழல்களின் பட்டியல் !


இவ்வாறு பார்தி நிறுவனத்திடம் கையூட்டு பெற்றுக்கொண்டு ஏலம் / டெண்டர் முறை இல்லாமல் செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் வழங்க சட்ட வழிவகையை உருவாக்கியுள்ளது பாசிச பா.ஜ.க அரசு. ’ஊழல் ஒழிப்பு நாயகன்’ என்று பாசிச கும்பலால் கட்டமைக்கப்பட்ட மோடியின் பிம்பம் தற்போது சுக்குநூறாக நொறுங்கியுள்ளது.

தற்போது மோடி அரசு கையாண்டுள்ளதைப் போன்றதொரு வழிமுறையைப் பயன்படுத்தி, 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கப்பட்ட போது கூச்சலிட்ட மோடி ஆதரவு ஊடகங்களும், அண்ணா ஹசாரே, கிரண் பேடி, பாபா ராம்தேவ் உள்ளிட்ட பா.ஜ.க-வின் நண்பர்களும் தற்போது தங்களின் நவ துவாரங்களையும் பொத்திக்கொண்டு அமைதிகாத்து வருகின்றனர்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம் | மக்கள் அதிகாரம் வரவேற்கிறது

கெஜ்ரிவால் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பாக
தில்லி ராம்லீலா மைதானத்தில் நடத்தப்படும்
ஆர்ப்பாட்டத்தை
மக்கள் அதிகாரம் வரவேற்கிறது!

31.03.2024

துபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் பழிவாங்கும் நோக்கில் டெல்லியின் முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு எதிர்க் கட்சிகள் மீது தொடர்ச்சியான பல்வேறு தாக்குதல்களை ஏவி விடுகிறது பாசிச பா.ஜ.க.

கடந்த 10 ஆண்டுகளில் இந்த நாட்டையே மிகப் பெரிய பேரழிவுக்குள் தள்ளியுள்ள மோடி – அமித் ஷா பாசிச கும்பல், மக்கள் போராட்டங்களைப் பார்த்து அஞ்சுகிறது. விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டங்கள் மோடி – அமித்ஷா பாசிசக்கும்பலின் வயிற்றில் புளியை கரைப்பதால் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தோல்வி பயத்தில் இருக்கிறது. இதன் காரணமாக வெறிபிடித்த மிருகமாய் அனைத்து எதிர்கட்சிகளையும் தாக்கிக் கொண்டிருக்கிறது. தனக்கு கட்டுப்படாத கட்சிகளை ஒழித்துக் கட்டுவது, பிளவுபடுத்துவது போன்ற செயல்களை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ மூலம் மேற்கொண்டு வருகின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் அமலாக்கத்துறை மூலம் கைது செய்வது, அமலாக்கத்துறை சோதனைகள், வருமானவரித்துறை சோதனைகள் என்று தினமும் நடந்தேறி வருகின்றன. அண்மையில் கூட காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கையே முடக்கி அதன் பொருளாதாரத்தையே முடக்கி வைத்திருக்கிறது.

இந்த நிலையில் தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நடத்தப்படும் போராட்டம் மிகவும் சரியானதாகும். அதனை மக்கள் அதிகாரம் வரவேற்பதுடன் பாசிச மோடி அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் அனைத்திலும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக நின்று களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஊழிக்காலம் (காலநிலை மாற்றம்: ஒரு விரிவான அறிமுகம்) | நூல் மதிப்புரை

ஊழிக்காலம்
(காலநிலை மாற்றம்: ஒரு விரிவான அறிமுகம்)

இப்புத்தகம் மிக எளிய நடையில் எழுதப்பட்டிருக்கிறது. சிக்கலான காலநிலை மாற்றம் குறித்த அறிவியல் பார்வையை மிகச் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இந்த பூமியில் வாழும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம் என்றே சொல்லலாம்.

இந்நூல் சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைகளை எழுதி வரும் “நாராயணி சுப்ரமணியன்” அவர்களால் விகடன்.காம்-ல் எழுதப்பட்ட தொடர் கட்டுரைகளின் தொகுப்பாகும். Nomad Fairy Tales & Hope Emoji Publications வெளியீடு.

இந்நூல் கூறும் விஷயங்கள் நமக்கு ஒரு ரெட் அலர்ட்

ஆம். ரெட் அலர்ட் என்ற சொல் சமீப காலங்களில் சகஜமாகி வருவதை சுட்டிக்காட்டுகிறது இந்நூல். சில ஹாலிவுட் படங்களில் வருவதுபோல கற்பனையான, பூமிப்பந்தின் சிதைந்த எதிர்காலம் பற்றியதாக இல்லாமல் அறிவியல் பூர்வமாக நமது எதிர்காலம் ஆபத்து நிறைந்ததாக இருக்கப்போவதாக எச்சரிக்கிறது இந்நூல்.


படிக்க: மகத்தான மக்கள் விஞ்ஞானி மேக்நாட் சாகா


காலநிலை மாற்றத்தால் மனிதர்களுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகளை இந்த இந்நூல் மையப்படுத்தியிருக்கிறது. உலக அளவில் காலநிலை மாற்றத்தால் அதிகமாக பாதிக்கப்படப்போகிற 181 நாடுகளின் பட்டியலில் இந்தியா 5 ஆவது இடத்தில் இருக்கிறது என்கிற செய்தி நம்மை காலநிலை மாற்றத்தை கூர்ந்து கவனிக்க வைக்கும் என்று நம்புகிறேன்.

“மிக கன மழை” “அதி கன மழை” என்கிற சொல்லாடல்களெல்லாம் சமீப காலங்களில் நமக்கு அறிமுகமாகவை. சமீபத்தில் யாருமே கணிக்க முடியாத வகையில் நெல்லை சுற்றவட்டாரப் பகுதிகளில் “அதி கனமழை” பெய்து பல ஊர்கள் வெள்ளத்தில் மூழ்கியதை நாம் பார்த்தோம். இப்படி பேரழிவுகள் அடிக்கடி நடக்கிற நிகழ்வுகளாகி வருகின்றன என்ற எச்சரிக்கையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் காரணம் என்ன?

இதற்கான அடிப்படைக் காரணத்தை ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் “புவி வெப்பமடைதல்” என்பதுதான். புவி வெப்பமடைவதற்கு அடிப்படைக் காரணம் என்ன? அதிகப்படியான பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றம் தான் புவி வெப்பமடைவதற்கு அடிப்படைக் காரணம் என்பதை எளிமையாக விளக்கியிருக்கிறது இந்நூல்.

வாகனங்களின் எரிபொருள் பயன்பாடு, மின்சார உற்பத்தி, தொழிற்சாலைகள், காடுகள் அழிக்கப்படுவது, செயற்கை உரங்கள், சிமெண்ட் தொழிற்சாலைகள் ஆகியவை அதிகமான பசுமைக்குடில் வாயுக்களை வெளியேற்றுவதாக காலநிலை விஞ்ஞானிகள் தெரிவிப்பதைப் பட்டியலிடுகிறது இந்நூல். பத்து நிமிடத்திற்கு ஒருமுறை 1 மில்லியன் டன் பசுமைக்குடில் வாயுக்கள் காற்றில் கலக்கிறதாம். பசுமைக்குடில் வாயுக்களிலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது CO2 என்கிற கரியமில வாயு தான்.


படிக்க: ஸ்பார்ட்டகஸ் (அடிமைச் சமுதாய சரித்திர நாவல்) | நூல் அனுபவம்


இந்த சூழலியல் பிரச்சினையை முன்பு ’புவி வெப்பமடைதல்’ என்று மட்டும் சொல்லிக்கொண்டிருந்த விஞ்ஞானிகள், இப்பிரச்சினையின் பரிணாமத்தின் அடிப்படையில் ”காலநிலை மாற்றம்” என்று பெயர் மாற்றியுள்ளனர்.

வளிமண்டத்தில் கலந்துள்ள இந்தக் கரியமிலவாயு உமிழ்வை மீண்டும் திரும்ப உறிஞ்சுக்கொள்ள முடியுமா என்பது குறித்தெல்லாம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ளது இந்நூல். ஆனால் அதற்கான தொழில்நுட்பம் அவ்வளவு எளிதானதல்ல என்பதையும் விளக்குகிறது.

புவி சராசரி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ் முதல் 2.0 டிகிரி வரை மட்டும் அதிகரிக்கலாம் என்பதே “காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசுக் குழுவின்” (IPCC) பரிந்துரை என்பதை சுட்டிக்காட்டுகிறது இந்நூல். அதற்கு காற்றில் கரியமிலவாயுவின் அளவு 450 PPM (parts per million) ஆக இருக்க வேண்டும் என்கிறது.

காலநிலை மாற்றத்தால் எதுவெல்லாம் பாதிக்கப்படும்?

நம் அன்றாட உணவு, அதிலுள்ள சத்துக்கள், விவசாயம், கால்நடை வளர்ப்பு, மனிதர்களின் வாழிடம், மனிதர்களின் உளவியல் என இதனால் பாதிக்கப்படாத விஷயமே இல்லை எனும் அளவிற்கு காலநிலை மாற்றத்தின் தாக்கம் மிக மோசமானது என்பதை என்பதை உணர முடிகிறது.

முக்கியமாக காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படப் போவது விளிம்புநிலை மக்கள் தான். காலநிலை அகதிகள் உருவாகும் அவலத்தையும் அப்படியான அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க முடியாத நிலைமை ஏற்படும் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

காலநிலை மாற்றத்தால் அதீத வெப்பம், தண்ணீர் தட்டுப்பாடு, கடல்மட்டம் உயர்தல் என பல்வேறு பிரச்சினைகளை நாம் சந்திக்க வேண்டிவரும்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல்மட்ட உயர்வால் உலகின் பல்வேறு கடலோரப் பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயத்தை சுட்டிக்காட்டுகிறது இந்நூல். இதனால் அங்கு வசிக்கும் விளிம்புநிலை மக்களின் வாழிடம் முற்றிலும் மூழ்கும் அபாயத்தை எச்சரிக்கிறது இந்நூல்.

இன்னும் அச்சுறுத்தலான விஷயம் குடிநீர் தட்டுப்பாடு. 2018 ஆகஸ்ட் மாதம் தென் ஆப்பிரிக்க நகரம் கேப்டவுனில் ஜீரோ டே (ZERO DAY) கடைபிடிக்கப்பட்டதே அதைப்போல உலகின் பல்வேறு நகரங்களில் உள்ள மொத்த நீர்வளம் 2050-ஆம் ஆண்டுக்குள் மூன்றில் ஒரு பங்காகக் குறையும் என்ற உலக வங்கியின் எச்சரிக்கையை கோடிட்டுக் காட்டி நம்மை சிந்திக்க வைக்கிறது இந்நூல்.

இன்னும் “காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச ஒப்பந்தங்கள்”, மரங்களை நடுவதால் காலநிலைப் பேரிடர்களைத் தடுக்க முடியுமா? அளவுக்கதிகமாக வெப்சீரியஸ் பார்த்தால் காலநிலைக்கு ஆபத்தா? CARBON FOOTPRINT என்றால் என்ன? நிலக்கரி, பெட்ரோல், டீசலைத் தடை செய்தால் காலநிலை மாற்றம் தடுக்கப்படுமா? காலநிலை மாற்றத்தைத் தடுக்க கற்கால வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டுமா? என பல்வேறு தலைப்புகளில் உள்ள கட்டுரைகள் காலநிலை மாற்றம் குறித்த அறிவியல்பூர்வமான புரிதலை ஏற்படுத்துகின்றன.

காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை முன்வைக்கிறதா இந்நூல்?

காலநிலைத் தீர்வுகளின் சில முக்கிய அம்சங்களை இந்நூல் பேசுகிறது. தனிநபர் தீர்வுகள், தனிநபர் உந்துதலால் சுற்றமும் நண்பர்களும் தீர்வு செயல்பாடுகளில் இணைந்துகொள்ளுதல், சமூகமாக முன்னெடுக்கப்படும் தீர்வுகள், அரசு அளவிலான தீர்வுகள், சர்வதேச அளவிலான தீர்வுகள் என பல கோணங்களில் தீர்வுகளை அணுக வேண்டிய அவசியத்தை முன்வைக்கிறது இந்நூல்.

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த சர்வதேச அளவிலும் அரசு அளவிலும் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் முக்கியமானவையாகவும் முதன்மையானவையாகவும் இருக்கின்றன என்கிறது இந்நூல்.

காலநிலை மாற்றத்திற்கு மிக முக்கியக் காரணம் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் தான் என்பதை நிறுவுகிறது இந்நூல். வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது, ஏழை நாடுகள் நூறில் ஒருபங்கு உமிழ்வுகளை மட்டுமே வெளியிடுகின்றன; ஆனால் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிப்படையப் போவது ஏழை நாடுகள் தான் என்பதையும் பேசுகிறது இந்நூல்.

‘காலநிலை மாற்றம் எல்லாம் வெறும் புனைவு; அது ஒரு பேய்க்கதை’ என்பன போன்ற கருத்துக்களைப் பரப்ப பெருநிறுவனங்கள் பல்வேறு பிரச்சாரங்களை முன்னெடுப்பதை அடையாளம் காட்டுகிறது இந்நூல். ஏனெனில் 1988 முதல் வெளியிடப்பட்ட கரிம உமிழ்வுகளில் கிட்டத்தட்ட 71% உமிழ்வுகளுக்கு வெறும் 100 பெருநிறுவனங்களே காரணமாம்.

கரிம உமிழ்வுகளைக் கட்டுப்படுத்த தங்களது லாபத்தில் ஒருபகுதியை செலவு செய்ய வேண்டும் என்பதால் காலநிலை மாற்றம் ஒன்றே இல்லை என்பதுபோன்ற பிரசாரத்திற்கு பல மில்லியன் டாலர்களை இந்த பெருநிறுவனங்கள் செலவு செய்கின்றன என்கிற தகவலையும் முன்வைக்கிறது இந்நூல்.


படிக்க: நூல் அறிமுகம்: மறுகாலனியாக்கத்தின் இரும்புப்பிடியில் இந்திய விவசாயம்!


முதலாளித்துவ அரசுகள் காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை முன்னெடுக்குமா என்பதை இந்நூல் வலுவாக முன்வைக்கவில்லை.

இன்றைய அரசுகளைப் பொறுத்தவரையில் அனைத்து நாடுகளின் அரசுகளும் பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன.

உதாரணமாக இந்தியாவில் இவ்வளவு பேரிடர்களுக்கு மத்தியிலும் கார்பரேட் பகாசுர கம்பெனிகளின் பேரழிவுத் திட்டங்களுக்காக, கார்பரேட் கம்பெனிகள் இயற்கை வளங்களை சூறையாட ஏதுவாக ”சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020” ”உயிரியல் பன்முகத்தன்மை (திருத்தம்) மசோதா-2021” ”வன (பாதுகாப்பு) திருத்த மசோதா 2023” உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

பிரேசிலை எடுத்துக்கொண்டால், உலகின் நுரையீரல் என்று சொல்லப்படும் அமேசான் காடுகளை அழித்து பெருநிறுவனங்களுக்கு வனத்தை திறந்துவிடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பிரேசில் முன்னாள் அதிபர் பொல்சனரோ மேற்கொண்டதைப் பார்த்தோம்.

இப்படி பூமியே அழிந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் தனது எஜமானர்களான கார்பரேட் முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்காக இயற்கை வளங்களை சூறையாடுவதை இலக்காகக் கொண்டு வேலை செய்து வருகின்றன அரசுகள் என்ற நிதர்சன உண்மையை புரிந்துகொள்வதும் அவசியமாகும்.

அந்த அரசுகள் ஒருபோதும் காலநிலை மாற்றத்திற்கான ஆக்கப்பூர்வமான தீர்வுகளை முன்னெடுக்கப்போவதில்லை. பல்வேறு பேரழிவுத் திட்டங்களால் பாதிக்கப்படும் உழைக்கின்ற மக்களும் சூழலியல் ஆர்வலர்களும் இந்த பூமிப்பந்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் இந்த முதலாளித்துவ அரசுகளை நோக்கி நமது கரங்களை உயர்த்த வேண்டியிருக்கிறது. அந்தவகையில் உலக அளவில் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தக் கோரி நடைபெறும் மாணவர்கள் இளைஞர்கள் போராட்டங்கள் நம்பிக்கையளிக்கின்றன என்பதை பகிர்கிறது இந்நூல்.

சமூக மாற்றத்தை விரும்பும், இயற்கையை நேசிக்கும் ஒவ்வொருவரும் காலநிலை மாற்றம் குறித்து படித்து விவாதிப்பதோடு மட்டுமல்லாமல் களச் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை இந்நூல் நமக்கு உணர்த்துகிறது.

அதனால் தான் இந்நூல் கீழ்கண்ட வார்த்தைகளோடு முடிவடைகிறது. ”இந்த நூல் மட்டுமே முடிவடைந்திருக்கிறது, செயல்பாடுகள் இல்லாவிட்டால் ஊழிக்காலம் தொடரும்” வாருங்கள் நம் பூமிப்பந்தைக் காக்க செயல்பாடுகளில் இறங்குவோம்.


நூலின் பெயர்: ஊழிக்காலம் (காலநிலை மாற்றம்: ஒரு விரிவான அறிமுகம்)

ஆசிரியர்: நாராயணி சுப்ரமணியன்

விலை: ₹ 170

பதிப்பகம்: Nomad fairy tales and Hope Emoji Publications

 


 


அஜய்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



இளையராஜா | கம்யூனிசம் முதல் மோடி வரை

இளையராஜா |கம்யூனிசம் முதல் மோடி வரை

https://youtu.be/WT61S5f1_MU


காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாசிச பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி? | சிறுநூல் அறிமுக உரை | தோழர் குருசாமி

பாசிச பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி?
| சிறுநூல் அறிமுக உரை | தோழர் குருசாமி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மோடிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியவர் மீது தாக்குதல்! | மக்கள் அதிகாரம் கண்டனம்

மோடிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியவர் மீது தாக்குதல்!
கோவையில் அதிகரித்து வரும் பி.ஜே.பி குண்டர்படையின் அடாவடித்தனம்!

கோவை மக்கள் அதிகாரம் கண்டனம்!

29.03.2024

கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் நேசனல் ஜனசக்தி காங்கிரஸ் கட்சியின் சார்பில் “NO MODI, NO GUARANTEE” என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த, சுவரொட்டியில் பாசிச மோடி மற்றும் பி.ஜே.பி-க்கு எதிராகவும், இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றும் எழுதப்பட்டிருந்தன.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு (27-03-2024), அக்கட்சியின் தலைவரான ரஹ்மான் கே மூப்பனார் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் சுவரொட்டியை ஒட்டிக்கொண்டிருந்த போது, பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பி.ஜே.பியின் குண்டர்படையினர் அவரை சுற்றிவளைத்து மிரட்டியுள்ளனர். மேலும், சுவரொட்டி ஒட்ட வைத்திருந்தப் பசையை அவர் மீது ஊற்றியும், “யாரு டா நீ தீவிரவாதியா உன்ன எவன்டா போஸ்டர் ஒட்டச் சொன்னது அவன இங்க வர சொல்லு இல்ல உனக்கு அவ்வளவு தான்” என்றும் மிரட்டினர், அவர்தான் அக்கட்சியின் தலைவர் என்று கூறியுள்ளார். எனினும், அங்கு வந்த 30க்கும் மேற்பட்ட பி.ஜே.பி குண்டர்படையினர் அவரை மிரட்டியதோடு மட்டுமல்லாமல் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதோடு, பி.ஜே.பி குண்டர்படையினர் ஒருவர் பின் ஒருவராக வந்து மிரட்டுவதும் தாக்குவதுமாக நடந்து கொண்டனர். பின்னர், பெரியநாயக்கன்பாளையம் காவல்துறை அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.


படிக்க: பாசிச பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி? || சிறுநூல்


எந்தவொரு கட்சியையும் விமர்சித்து சுவரொட்டி ஒட்ட அனைத்து இந்திய குடிமக்களுக்கும் உரிமையுண்டு. எனினும், தேர்தல் நேரத்தில் இந்தியா கூட்டணி கட்சியின் சார்பின் ஒருவர் சுவரொட்டி ஒட்டுவது சாதாரணமான நிகழ்வு தான். ஆனால், கோவையிலுள்ள பி.ஜே.பி குண்டர்படையினர் மோடிக்கும், பி.ஜே.பிக்கும் எதிராக ஏதேனும் சுவரொட்டி இருந்தால் கிழிப்பது, சுவரெழுத்தை அழிப்பது, ஒட்டுபவரை மிரட்டுவது, தாக்குதல் நடத்துவது போன்ற அடாவடித்தனங்களில் ஈடுபடுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாசிச பி.ஜே.பி கும்பலுக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது தாக்குதல் நடத்துவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

கோவையில், இனிவரும் காலங்களில் மோடிக்கு எதிராக பொதுவெளியில் பேசவும், பிரச்சாரம் செய்யவும் முடியாத நிலையை உருவாக்க ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் முயற்சித்து வருகிறது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து ஆர்.எஸ்.எஸ்- பி.ஜே.பி குண்டர்படையினருக்கு எதிரான களப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

சுவரொட்டி ஒட்டிய நபரை மனிதாபிமானமற்ற நடத்தியதோடு தாக்குதல் நடத்திய பி.ஜே.பி குண்டர்படையின் நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக அரசு இச்சம்பவத்தை விசாரணை செய்து, உடனடியாக பி.ஜே.பி குண்டர்படையினரை கைது செய்ய வேண்டும். இந்நிலை தொடர்ந்தால் இனிவரும் காலங்களில் உத்தரப்பிரதேசம், குஜராத், திரிபுரா போன்ற நிலை கோவைக்கும் வர நேரிடும்.


மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube