ளவரசன் மரணம் குறித்து நாம் தமிழர் இயக்கம் சார்பாக சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையினை முதலில் படியுங்கள்!
__________________________

“தர்மபுரியைச் சேர்ந்த இளைஞர் இளவரசனின் மரணம் அவரது குடும்பத்தாருக்கு ஏற்பட்ட பெரும் துயரம் என்பது மட்டுமின்றி, அது காதலையும் வீரத்தையும் போற்றும் எம் தமிழ் தேசிய இனத்தின் மாண்பிற்கும், பண்பாட்டிற்கும் ஏற்பட்ட ஒரு இழிவாகும்.

சீமான்தமிழினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும், ஒரு இளைஞனுக்கும் இடையே இயற்கையாகவும், இயல்பாகவும் ஏற்பட்ட ஒரு உறவை, சாதியமாக்கி, அரசியலாக்கியதன் விளைவு, அது முதலில் திவ்யாவின் தந்தையையும், இப்போது அவரை காதலித்து மணமுடித்த இளைஞர் இளவரசனையும் பலிகொண்டுள்ளது பெரும் வேதனையாகும்.

தமிழர் இலக்கியத்தில் காதல் போற்றப்படுகிறது, தமிழர் வாழ்வியலில் வீரத்திற்கு இணையான உன்னத இடம் காதலுக்கு தரப்பட்டுள்ளது, நமது கல்வியிலும் கூட காதல் இலக்கியங்கள் இடம் பெறுகின்றன, காதலை மையக் கருவாக வைத்து வெளியான பல நூற்றுக்கணக்கான தமிழ்த் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றதோடு, காலத்தால் அழியாத காவியங்களாக இன்றளவும் போற்றப்படுகின்றன. இப்படி தமிழரின் வாழ்வியலில் நீக்க முடியாத ஒரு இடத்தைப் பெற்ற காதல் இன்றைக்கு தமிழினத்தை கூறுபோடும் சாதியப் பகைக்கும், தமிழ்த் தேசிய அரசியலுக்கும், தமிழினத்தின் ஒற்றுமைக்கும் ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால், அதற்கு முழு முதற் காரணம், திவ்யா – இளவரசன் காதல் உரிய வகையில் கையாளப்படாததும், தாங்கள் செய்துவரும் அரசியலுக்கான கருவியாக ஆக்கப்பட்டதே. சமூக நீதிக்காக அரசியல் செய்யலாம், அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் சாதிக்காக அரசியல் செய்வதை ஒரு நாகரீக சமூகம் ஏற்றுக்கொள்ளலாகுமா?

தமிழ்நாட்டின் சமூக வாழ்வில் ஒவ்வொரு நாளும் பல நூற்றுக்கணக்கான காதலர்கள் பெற்றோர்களின் சம்மதத்துடனும், ஆதரவுடனும் மணம் செய்து கொண்டுதான் வருகிறார்கள். ஆனால், சில காதல் திருமணங்கள் மட்டுமே இப்படி சாதிய பார்வையாலும், தங்கள் சாதியின் மாண்பைக் காக்க புறப்பட்ட சாதிய அரசியல்வாதிகளாலும் பிரச்சனையாக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட பிரச்சனைகள், தமிழினமும், தமிழ்நாடும் தன்னை எதிர்நோக்கியுள்ள பல்வேறு பெரும் சிக்கல்களுக்காக போராட ஒன்றுபட்டு நிற்க வேண்டிய அடிப்படையை தகர்த்து விடுகிறது.

இதனை தமிழின மக்கள் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும், அதிலும் குறிப்பாக இளைய சமூதாயம், நம் இனத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும் சக்திகளை, அவைகளின் அரசியலை ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும். நம்மை பிளக்கும் சாதிய சக்திகளையும், அவைகள் உருவாக்கும் கீழ்த்தரமான உணர்வுகளையும் புறந்தள்ளிட வேண்டும். இதனை செய்யத் தவறினால், தமிழனுக்கு என்று ஒரு அரசியலை உருவாக்கும் நமது முயற்சியும், நம் இனத்தின் விடுதலையும், உரிமை மீட்பும் கேள்விக்குறியாகிவிடும் என்பதை தமிழினத்திற்கு நாம் தமிழர் கட்சி வலியுறுத்திக் கூற கடமைபட்டுள்ளது.”

நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்
_________________________________

இனி நமது விமரிசனத்தினை பார்ப்போம்.

இளவரசன் மரணம் தமிழ் தேசிய இனத்தின் மாண்பு, பண்பாட்டிற்கு ஏற்பட்ட ஒரு இழிவு என்று ஆரம்பிக்கிறார் அண்ணன் சீமான். அதுவும் காதலையும் வீரத்தையும் போற்றும் தமிழ் தேசிய இனத்தின் இழப்பாம். சரி, காதலும், வீரமும் தமிழ் தேசிய இனத்திற்கு மட்டும் சொந்தமான மரபு என்று எந்த அடி முட்டாள் ஆரம்பித்து வைத்தாரோ தெரியவில்லை. உலகில் ஆர்டிக் முதல் அண்டார்டிக் வரை உள்ள வளர்ச்சியடைந்த, வளர்ச்சி அடையாத தேசிய இனங்கள் அனைத்தையும் கேட்டீர்கள் என்றால் இந்த காதல், வீரம் குறித்த மரபும், பெருமையும் காது கொள்ளாத அளவுக்கு கேட்கலாம். ஆனால் அந்த மரபு எங்களுக்கு மட்டும்தான் உண்டு என்று மல்லுக்கட்டும் முட்டாள்தனம் தமிழினவாதிகளுக்கு மட்டும்தான் உண்டு.

முதலாளித்துவ உற்பத்தி முறை அறிமுகமாகாத, வளர்ச்சியடைந்த அல்லது வளர்ந்து கொண்டிருக்கும் நிலவுடைமை சமூகங்களில் மக்களின் உணர்ச்சிகள் இந்த இரண்டில்தான் இயங்குகிறது. இன்றைக்கு இருக்கும் பண உணர்ச்சி, சினிமா உணர்ச்சி, நுகர்வுக் கலாச்சார உணர்ச்சி, பங்குச் சந்தை உணர்ச்சி, செல்பேசி உணர்ச்சி, முகநூல் உணர்ச்சி இன்னபிற உணர்ச்சிகளுக்கெல்லாம் அங்கு வாய்ப்போ, இடமோ, அடிப்படையோ இல்லை. ஆகவே ஆதி காலம் தொட்டு இருந்து வரும் பாலியல் உறவில் காதல் என்ற பரிணாம வளர்ச்சியும், மாற்று இனக்குழுக்கள், அரசுகளை வென்று காட்டும் ‘வீரமும்’தான் அந்த சமூகங்களின் அடிப்படைகள். அதனாலேயே நிலவுடைமை காலங்களில் உள்ள இலக்கியங்கள் இந்த இரண்டை மட்டும் – காதல்,வீரத்தை – அதிகம் பேசுகின்றன.

மேலும் இந்தக் காதலும், வீரமும் கூட பெரும்பான்மை மக்களின் இயக்கம் சார்ந்து முன்வைக்கப்படவில்லை. ஆளும் வர்க்கம் மற்றும் அரசர்களின் பெருமையாகவே இலக்கியங்கள் பேசுகின்றன. நிலவுடைமை சமூகம் விதித்திருக்கும் அகமண முறைகளுக்கு கட்டுப்பட்டு வாழும் மக்கள் அதை மீறுவதற்கு உரிமை கொண்டவர்கள் இல்லை. அந்த ஏக்கத்தையும் இத்தகைய இலக்கியங்கள் கொஞ்சம் பேசுகின்றன. ஆனால் ஆண்டான்களையும், அரசர்களையும், ஆளும் வர்க்கங்களையும் எதிர்த்து போராடிய வர்க்கப் போராட்டம்தான் மனித குலத்தை அடுத்தடுத்த வளர்ச்சி கட்டங்களுக்கு எடுத்துச் சென்றன. ஒரு தேசிய இனம் பெருமை கொள்ள வேண்டுமென்றால் அத்தகைய போராட்டங்களைத்தான் பற்றிக் கொள்ள வேண்டும். மேலும் நிலவுடைமை சமூகங்களில் தேசிய இன உணர்வு என்பது இன்றைக்கு இருப்பது போன்று இல்லை. வளர்ச்சியடைந்த தேசிய இன உணர்வும், உணர்ச்சியும் முதலாளித்துவ சந்தையின் விரிவு காரணமாக மட்டுமே தோன்றுகின்றன. ஆக அந்தக் காலத்தில் இந்தக் காலத்து தமிழ் உணர்வு இருப்பதாக பீற்றுவதும், அதில் காதல், வீரம் கொப்பளிப்பதாக கதைப்பதும் முட்டாள்தனம் மட்டுமே.

மாறாக அந்தக் காலத்து தமிழகத்திலும், இந்தக்காலத்து தமிழகத்திலும் நீடித்து இருக்கும் ஒரு மரபு என்னவென்றால் அது பார்ப்பனிய மதமும், அதன் படைப்பான சாதியும்தான். ஒருவேளை தமிழினவாதிகள் பெருமை கொள்ள வேண்டுமென்றால் இதைத்தான் எடுக்க வேண்டும். அப்போது அவர்களது பெரிய பங்காளிகளாக இந்துமத வெறியர்களும் கூட வருவார்கள். நாமோ இந்த பார்ப்பனிய மதம், சமூகத்தை எதிர்த்து நின்ற மரபை பெருமையாகவும், வாரிசாகவும் கொள்வோம். அது தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவெங்கும் உண்டு.

இந்தப் பின்புலத்தில் தமிழினவாதிகள் இந்துமதவெறி பால்தாக்கரே, சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவித்ததும், அய்யா நெடுமாறன் இந்துமத வெறியர் அர்ஜூன் சம்பத்தை மேடையேற்றுவதும் வேறு வேறு அல்ல.

திவ்யா, இளவரசன் இருவருக்கும் இயல்பாக ஏற்பட்ட காதலை அரசியலாக்கியதன் விளைவுதான் இரண்டு தற்கொலைகளுக்கும் காரணம் என்று கூறுகிறார் சீமான். அரசியல் என்றால் ஆனந்த விகடன் உருவாக்கியிருக்கும் புரிதலையே சீமான் கொண்டிருப்பது கூட பிரச்சினையில்லை. ஆனால் அப்படி ‘அரசியலாக்கியது’ யார் என்று கூற வேண்டுமல்லவா? இல்லையெனில் அரசியலாக்குதல் எனும் வார்த்தைதான் இளவரசன் மரணத்திற்கு காரணம் என்றாகிவிடும். இதற்கு குறிப்பான காரணம் யாருமில்லை, பொதுவில் சாதியத்தை அரசியலாக்கிவிடுவதுதான் காரணமென்றால் என்ன பொருள்?

ஈழப்பிரச்சினைக்கு மட்டும் சிங்கள இனவெறி ராஜபக்சே அரசு என்று குறிப்பாக சொல்லும் அரசியல் புரிதல் கொண்ட சீமானுக்கு இளவரசனின் தற்கொலைக்கு காரணமான அரசியல்வாதிகள் யார், அரசியல் கட்சிகள் எது என்று தெரியாதா? இப்படி நெருக்கிப் பிடித்துக் கேட்டால் சீமானின் அடிப்பொடிகள் இன்னும் தெளிவாகச் சொல்லக்கூடும். அதாவது திவ்யா, இளவரசன் காதலை ஆதரித்தும், எதிர்த்தும் அரசியல் செய்த கட்சிகளைத்தான் அண்ணன் கூறுகிறார், அதனால்தான் குறிப்பாக யாரையும் கூறவில்லை என்று எடுத்துக் கொடுக்கலாம். எனில் இந்தக் காதலை அண்ணன் சீமான் ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா? நிச்சயமாக ஆதரிக்கிறார் என்று கூறுவார்கள் தம்பிமார்கள். அப்படியானால் திவ்யாவின் காதலை ஆதரித்து சீமான் முழங்குவது மட்டும் அரசியலாக்குதல் இல்லையா?

அல்லது இந்தக் காதல் அரசியலாக்கப்பட்டதால்தான் தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன என்று இப்போது வகுப்பெடுக்கும் நாம் தமிழர்கள் முன்பேயே இந்த அரசியலாக்கப்பட்டதை தடுத்து நிறுத்தியிருக்கலாம் அல்லவா? இல்லை, இந்தக் காதலர்களை யாரும் பேசாமல் இருந்திருந்தால் அவர்களே அவர்களது பிரச்சினையை தீர்த்திருப்பார்கள், ஆளாளுக்கு ஆதரித்தும், எதிர்த்தும் சவுண்டு கொடுத்ததுதான் இந்த முடிவுக்கு காரணம், இது தெரிந்துதான் அண்ணன் ஆரம்பத்திலேயே டீசண்டாக சவுண்டு விடாமல் ஒதுங்கி இருந்தார் என்று கூட அடிப்பொடிகள் பொழிப்புரை சொல்லக்கூடும்.

அப்படி என்றால் தமிழ்நாட்டில் ஒரு தலித் இளைஞன் எந்த விதமான சமூக, அரசியல் குறுக்கீடும் இன்றி ஒரு ஆதிக்க சாதிப் பெண்ணை மணமுடிக்க முடியுமா? இல்லை, யாரும் தலையிடாமல் அவர்களுக்குள்ளே காதலிக்கவும், திருமணம் செய்யவும் உரிமை இருக்கிறதா? இந்தப் பிரச்சினையை ஒடுக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையிலிருந்து பார்த்தால் “அவர்களுக்கு ஆதரவாக” தலையிடுதல் வேண்டும் என்பது புரிய வரும். மாறாக ஆதிக்க சாதி உணர்வில் இருப்பவரை வைத்துத்தான் தமிழ் தேசம் கட்ட முடியும் என்றால் இப்படித்தான் அடிமுட்டாள்தனமாக பேச முடியும்.

தமிழர் இலக்கியத்தில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவிலும் காதல் படங்கள் பெரும் வெற்றி பெற்றதை வைத்துப் பார்த்தால் இங்கே காதல் என்பது தமிழரின் வாழ்வியலில் நீங்காத இடத்தை பெற்றிருக்கிறது என்று கூறுகிறார் சீமான். தமிழர் இலக்கியம் குறித்து ஏற்கனவே பார்த்து விட்டோம். சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுடைய கதையை மதுரை வீரன் போன்ற ஒரு சில நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள், வழக்குகள் மூலம் அறிகிறோம். மற்றபடி சாதி விட்டு சாதி திருமணம் செய்வது சமூகத்திலேயே நடக்க முடியாத ஒன்றாக இருக்கும் போது இலக்கியத்திலாவது இருக்கட்டுமே என விரும்பவது தமிழினவாதிகளின் அசட்டுக் கனவில் மட்டுமே சாத்தியம். தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டாலும் கூட ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர சாதி மறுப்பு, தீண்டாமை மறுப்பு காதல்களையும் அதன் பிரச்சினைகளையும், சமூக பரிமாணங்களையும் ஒரு போதும் பேசியது கிடையாது. அப்படி ஒரு படத்தை உண்மையாக எடுப்பதற்கு கூட இங்கே துப்பு கிடையாது.

நுகர்வுக் கலாச்சாரம் வழங்கியிருக்கும் ஜிகினாக் காதல்தான் தமிழ் சினிமாவில் கரை புரண்டு ஓடுகிறது. இதில் நடை, உடை, பாவனை, பாட்டு, பெற்றோர் சம்மதம், என்று சென்டிமென்டும், மார்க்கெட்டும் கலந்து கட்டிய வினோதமான பொருளாகத்தான் காதல் வருகிறதே அன்றி வேறல்ல. முக்கியமாக தமிழ் சமூகத்திலும் கூட ஒத்த சமூக அந்தஸ்து உடைய சாதிகளுக்கிடையே வேண்டுமானால் காதல் நடக்கலாம். ஆனால் தாழ்த்தப்பட்டவர்களோடோ இல்லை குறிப்பிட்ட சாதியை விட சில படிகள் கீழே இருக்கும் சாதிகளோடோ திருமணமோ, காதலோ சாத்தியமே இல்லை. அப்படி மீறி நடந்தால் திவ்யா, இளவரசன் ஜோடி சந்தித்த எல்லா பிரச்சினைகளையும் மற்ற காதலர்கள் சந்திக்க வேண்டும். இன்றும் கூட அப்படி காதலித்து மணம் புரிந்து வாழ்பவர்கள் தமது சொந்த ஊருக்கு போகமுடியாமல் ஆண்டுக் கணக்கில் இருந்து வருகிறார்கள். பலர் ஜோடி ஜோடியாக கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

எனவே தமிழ்வாழ்வில் காதல் திருமணங்கள் சகஜமாக நடந்து வருகிறது என்றால் அது தமிழ் சமூகத்தையும் தமிழ் சினிமாவைப் போல கருதும் முட்டாள்களால் மட்டுமே சாத்தியம். திவ்யா, இளவரசனது காதலை அரசியலாக்கி விட்டார்கள் என்று குட்டிச்சுவரைப் பார்த்து புலம்பும் சீமான் உண்மையில் இந்தக் காதல் பிரச்சினையின் அரசியல் என்ன என்பதை கிஞ்சித்தும் அறிந்தவரில்லை. ஒரு வேளை அறிந்திருந்தாலும் அதை வெளியே சொன்னால் தமிழ் தேசியத்திற்கு பேதியாகிவிடும் என்ற பயம் காரணமாக அமுக்கப் பார்க்கிறார்.

சீமான்இந்தக் காதல் விவகாரம் உரிய முறையில் கையாளப்படவில்லை என்று சொல்லும் சீமான் யார் அப்படி தவறாக கையாண்டார்கள் என்று கூறவில்லை. சரி, மற்றவர்கள்தான் தப்புத் தப்பாக கையாண்டார்கள் என்றால் அண்ணன் முன்னமே சரியாக கையாள்வது எப்படி என்று ஒரு வகுப்பு எடுத்து எல்லோரையும் வந்து படிக்கச் சொல்லியிருக்கலாமே? சில காதல் திருமணங்கள் சாதிய பார்வையாலும், சாதியின் மாண்பைக் காக்க புறப்பட்ட சாதிய அரசியல்வாதிகளாலும் பிரச்சினையாக்கப்படுகின்றன என்று கூறும் சீமான் ஏன் ஒரு மர்மக் கதை போல மறைக்க வேண்டும்.? யாராய்யா அந்த சாதி மாண்பை காப்பாற்றுவர்கள்? சொன்னால் உங்களை தலையை எடுத்து விடுவார்களா? இதுதான் சங்க இலக்கியத்திலிருந்து இன்றைய சங்கர் சினிமா வரைக்கும் வியந்தோதப்படும் தமிழனது வீரமா? ஒரு இளவரசனது மரணத்திற்கு கூட வில்லன்கள் பெயரைக் கூற பயப்படும் நீங்களா இலட்சோப இலட்சம் ஈழத்தமிழர்களின் விடுதலையை வாங்கித் தருவீர்கள்? இதில் அடிக்கடி முஷ்டியை உயர்த்தியவாறு போஸ் வேறு? வெட்கமாயில்லையா சீமான் அவர்களே?

இளவரசனது தற்கொலை போன்ற காதல் பிரச்சினைகள் தமிழினமும், தமிழ்நாடும் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்காக ஒன்று போட்டு போராட வேண்டிய அடிப்படையை தகர்த்து விடுவதாக கவலைப்படுகிறார் சீமான். ஒருவேளை இளவரசன் எனும் தலித் இளைஞர் திவ்யா எனும் வன்னியப் பெண்ணை காதலிக்காமல் தனது சாதிக்குள்ளேயே யாரையாவது திருமணம் செய்து வாழ்ந்திருந்தால் அவர் மட்டுமல்ல, தமிழினமும் நிம்மதியாக வாழ்ந்திருக்கும் என்பதாகவும் இதை நாம் புரிந்து கொள்ளலாம். வார்த்தைகளுக்கு இடையே உள்ள மவுனத்தின் அழகை புரிந்து கொள்வதுதான் கவிதை என்றால் தமிழினவாதிகளின் வார்த்தைகளுக்கிடையே உள்ள கோடிட்ட இடங்களை நிரப்பினால் அவர்களது சந்தர்ப்பவாத அழகு பளிச்சென்று தெரியும்.

அதாவது தலித்துக்கள் ஆதிக்க சாதியினரோடு காதல் கொண்டால் பிரச்சினை வருகிறது. அப்படி பிரச்சினை வந்தால் தமிழினம் இரண்டுபட்டு பிரிகிறது. இப்படி இரண்டு பட்டு நிற்கும் போது ஆதிக்க சாதியினரை பார்த்து கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்று கேட்பதற்கு கூட பயம். இந்நிலையில் என்ன செய்யலாம்? பேசாமல் தலித்துக்கள் யாரும் ஆதிக்க சாதியினரை காதலிக்காமல் இருங்கள், தமிழினம் ஒற்றுமையோடு இருப்பதற்கு இந்த தியாகத்தை செய்யுங்கள் என்று நேரடியாகவே கேட்கலாமே சீமான் அவர்களே?

இப்படி தமிழனத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும் சக்திகளை, அரசியலை தமிழக மக்கள் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டுமாம். இல்லையேல் தமிழனுக்கு என்று ஒரு அரசியலை உருவாக்கும் சீமானது முயற்சி தோற்றுவிடுமாம். பிறகு தமிழினத்தின் விடுதலை, உரிமை மீட்பு எல்லாம் கேள்விக்குறியாகிவிடும் என்கிறார் சீமான். சரி, தமிழனத்தின் ஒற்றுமைக்கே, உரிமைக்கே, விடுதலைக்கே உலை வைக்கும் அந்த சக்திகளை சீமான் ஏன் பெயரிட்டு அடையாளம் காட்டவில்லை?

முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்களை கொன்று குவித்தது யார்? ஏதாவது டிராகுலா பேயா, இல்லை சிங்கள இனவெறி ராஜபக்சே அரசா? அங்கே வாய் புடைக்க ராஜபக்சேவை அடையாளம் காட்டும் சீமான் இங்கே வாய் மௌனிக்க புலம்ப வேண்டிய அவசியம் என்ன? தமிழினத்திற்கு வேட்டு வைக்கும் சாதிய சக்திகளை அடையாளம் காட்டி தமிழக மக்கள் புறக்கணித்தால்தானே ஒற்றுமை வரும். பிறகு அது யார் என்று சொல்லாமல் போங்காட்டம் ஆடுவது ஏன்?

விசயம் எளிமையானது. இங்கே தமிழ் உணர்வு என்பது இல்லை, சாதிய உணர்வுதான் மக்களிடையே செல்வாக்கோடு உள்ளது என்பதை சீமான் ஏற்கிறார். எனவே குறிப்பிட்டு ஒரு சாதியின் சாதிவெறியை கண்டித்தால் நாம் பிழைப்பு நடத்தும் தமிழின அரசியலுக்கு ஆள் இருக்காது என்று அண்ணன் உறுதியாக நம்புகிறார். சாதிய சக்திகளை பொதுவாக பேசிவிட்டு அடையாளம் காட்டாமல் இருந்தால் தமிழ் உணர்வு தப்பிப் பிழைக்கும். சாதிய வெறியை இன்னது என்று குறிப்பிட்டுச் சுட்டிக் காட்டினால் தமிழ் உணர்வு உருகி ஓடிவிடும்.

திவ்யாவின் தந்தை தற்கொலைக்கோ, இல்லை இளவரசனது மரணத்திற்கோ காரணம் வன்னிய சாதிவெறிதான். இந்த வன்னிய சாதிய வெறியை உருவாக்கி உலவ விட்டு ஆட்டம் போடுவது வன்னியர் சங்கமும், பாமகவும்தான். அதிலும் ராமராஸ், அன்புமணி, காடுவெட்டி குரு, டாக்டர் செந்தில் என்று குறிப்பாக மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். ஆக இளவரசனது மரணத்திற்கு நீதி வேண்டுமென்றால் இவர்களை குறிப்பாக கண்டிக்க வேண்டும். இந்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று போராட வேண்டும். அதை கவனமாக தவிர்த்து விட்டு மக்களுக்கு அட்வைசு செய்வது என்பது சாதிய ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டும், அதை எதிர்க்க முடியாதபடி உள்ள கோழைத்தனத்தின் வெளிப்பாடும் ஆகும்.

ஆழம் பத்திரிகை பேட்டி ஒன்றில் பாமகதான் தமிழனது கட்சி என்று பாராட்டு பத்திரம் வாசித்த சீமான் திராவிடர் கட்சியெல்லாம் தமிழன் கட்சியில்லை என்று சாடுகிறார். ஆனால் பாமக எனும் தமிழனது கட்சியின் யோக்கியதை என்ன, வன்னிய சாதிவெறியை முன்வைத்து கட்சி ஆரம்பித்த நாள் முதல் அதன் செயல்பாடு என்ன என்பதை நாம் அறிவோம்.

சுருங்கச் சொன்னால் சீமானது தமிழ் உணர்வு என்பது வன்னிய சாதிவெறிக்கு கட்டுப்பட்டதுதான். பரமக்குடி துப்பாக்கி சூடின் போது இது தேவர் சாதிவெறிக்கு கட்டுப்பட்டது. இப்படி ஆதிக்க சாதிகளுக்கு கட்டுப்பட்டு இவர்கள் உருவாக்கும் தமிழ் தேசியம்தான் தமிழக மக்களுக்கும், ஈழத்தமிழ் மக்களுக்கும் விடுதலையைத் தருமாம். அதை நாம் நம்ப வேண்டுமாம்.

ஒருவேளை சீமான் தலைமையில் இங்கும், ஈழத்திலும் தமிழர் நாடு உருவானால் எப்படி இருக்கும்? நிச்சயமாக அங்கே காதல் பிரச்சினைகளுக்காக தற்கொலைகள் இருக்காது. ஏனெனில் அங்கே யாரும் சாதி விட்டு சாதி காதலிப்பதற்கு அனுமதியே இருக்காது.

ஆம், நண்பர்களே! சீமான் பெருமையுடன் இலவசமாக அளிக்கும் தமிழ் தேசியம் என்பது ஆதிக்க சாதி கண்டிசன்ஸ் அப்ளைக்கு உட்பட்டது.

289 மறுமொழிகள்

  1. கலுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதையாக……தென் மாவட்டங்களில் இவருடைய கட்சி இப்போது “நாம் தேவர் கட்சி” ஆகி விட்டது.முத்து ராமலிங்கம் எப்படி நேதாஜியொடு தான் இருக்கும் புகைபடத்தை வைத்து அளந்து விட்டாரோ……அதே போல இவருக்கு தேசிய தலைவர் பிரபாகரன்.

    • ஒரு வேளை அடுத்த கார்த்திக்கோ !!!! அட இவர் நாடருன்னு ல கேள்விப்பட்டேன் ….

    • மற்றவர்கள் என்ன சொன்னாலும் அதில் குற்றம் கண்டு பிடித்து அவர்கள் தாம் சார்ந்த சாதி அபிமானம் கொண்டு அவ்வாறு பேசுகிறார்கள் நடந்து கொள்கிறாகள் என மற் றவர்களை காயடிக்கும் வினவும் , தங்களை போன்றவர்களும் இங்கு தெரிவிக்கும் கருத்துகளே அப்பட்டமான சாதி வெறியை பறை சாற்றுகின்றன .

      இதனை சொல்ல உங்களுக்கு எந்த விதமான யோக்யதையோ அருகதையோ இல்லை.

        • எங்கே என்று தேட சொல்கிறீர்களா ? தங்களது ஆக்கம் முழுவதும் சாதீய கண்ணோட்டத்தோடே காணப்படுகிறது . மனிதாபிமானம் எஙிற போர்வையில்.

          குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு எதிரான சாதிய வெறி காணப்படுகிறது.

          • குரு, ராமதாசு, குட்டி ராமதாசு மாதிரி காட்டுமிராண்டிங்க இருக்கானுங்க இல்லையா அந்த வன்னிய சாதிவெறியன்களை நீங்க திட்றீங்களாம், அதை தான் இவரு சாதிவெறீங்கிறாரு, அட கூமுட்ட பர அதை வினவு மட்டும் பன்னல சொந்த வன்னிய மக்களே பன்றாங்க அது தெரியுமா ஒனக்கு.. பேரிக்கா பேரிக்கா

            • அப்போ வன்னியர்கள் சாதி வெறிக்கு அப்பாற்பட்டவர்கள் என நீயே ஒப்புக்குறே..

          • மேற்கே வன்னியனும் பறையனும் கவுண்டனுக்கு ஒரே சாதி….

              • கோவை மாவட்டத்தில் வன்னியர்களை கவுண்டர்கள் பறையர்களை போல தான் நடத்துவார்கள். இதுக்கு படிக்க வேண்டியதில்லை பார்த்தாலே போதும் நான் பார்த்திருக்கேன்.

                  • உன்னோட சாதிப் புத்தி அதாவது நாம் தமிழர் கட்சியோட சாதிப்புத்தி எப்படி இருக்கு பாத்தியா ? இப்படி ஒரு கேள்வியை கேக்குறது மூலமா நான் என்ன சாதின்னு தெரிஞ்சிக்க விரும்புற

                    • னான் எதுக்கு கேக்கணும் /நீதான் அப்பட்டமா காண்பீக்கிறியே

        • நீங்கள் பறையர் அமைப்புக்கு பம்மாத்து செய்கிறீர்கள் என்று இழுத்துச் செல்வதை தவிர்க்க விரும்புகிறேன்.

      • ஆமா இவரு பெரிய சாதி ஒழிப்பு போராளி பேசவந்துட்டாரு. ராமதாசை நாலு வார்த்தை கண்டிக்க வக்கில்ல இந்த பேரிக்கா எல்லாம் பெருசா பேச வந்துருச்சு.

  2. //தலித்துக்கள் ஆதிக்க சாதியினரோடு காதல் கொண்டால் பிரச்சினை வருகிறது. அப்படி பிரச்சினை வந்தால் தமிழினம் இரண்டுபட்டு பிரிகிறது. இப்படி இரண்டு பட்டு நிற்கும் போது ஆதிக்க சாதியினரை பார்த்து கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்று கேட்பதற்கு கூட பயம். இந்நிலையில் என்ன செய்யலாம்? பேசாமல் தலித்துக்கள் யாரும் ஆதிக்க சாதியினரை காதலிக்காமல் இருங்கள், தமிழினம் ஒற்றுமையோடு இருப்பதற்கு இந்த தியாகத்தை செய்யுங்கள் என்று நேரடியாகவே கேட்கலாமே சீமான் அவர்களே?//

    இது தான் இன்றைக்கு நடுநிலையாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது. சீமானின் இனவாதத்திற்கும் பா.மா.கா.வின் ஜாதி வெறிக்கும் பெரிய வித்தியாசமில்லை . இரண்டுமே அடிநாதத்தில் ஒன்றுதான் .

    • அப்படியானால் மானிலங்கள் அனைத்தும் ஏன் மொழி வாரியாகவும் இன வாரியாகவும் பிரிக்கப்பட்டன ? வடகிழக்கு , தெற்கு மேற்கு ,வட மத்திய மானிலம் , மத்திய மேல் மானிலம் என்று பிரிக்க பட்டிருக்கலாமே ? அல்லது தங்கள் விருப்பபடி எந்த பகுதியில் எந்த சாதி அதிகாமாக இருக்கிறதோ அந்த சாதியின் பேர் கொண்டு அழைக்கப்பட்டிருக்கலாமே ?

          • தொடை நடுங்கி சீமானைப் பத்தி தானேய்யா இங்க பேசிட்ருக்கோம், அப்புறம் அந்த சூரனின் வீரத்தை பத்தி பேசாம வேற என்னத்தை பத்தி பேசுறது.

      • இனம் என்றால் என்னவென்று தெரியுமா?எந்த மாநிலம் இனரீதியாக பிரிக்கப்பட்டுள்ளது?நிறைய படியுங்க para

  3. பா ம க என்ற கட்சியை கண்டிகாமல் இந்த விசயத்தை யார் அனுகினாலும் அது ஏமாற்று தான்

  4. //பாமக என்றால் சீமானுக்கு பயம் பயம் !//

    இஸ்லாம் என்றால், வினவுக்கு பயமோ பயம்.! யாரையாவது குறை கூறிக்கொண்டே இருக்க வேண்டும் வினவுக்கு…நேர்மை, தர்மம், நியாயம் என்று எதுவும் பார்க்க வேண்டியதில்லை என்பதால், இது மிகவும் எளிது…முதலில் பா.ம.க., பிறகு சீமான், பிறகு ஆர்.எஸ்.எஸ்., …ஆனால், அமைதிக்குப் பெயர் போன புத்த கயா-வில் பாம் வெடித்ததைப் பற்றி, மூச்சு விடவில்லை…!! ஏன்????

    • நீங்கள் ஆர்.எஸ்.எஸ் பற்றியோ ரேப் ஸ்வயம் சேவக் பற்றியோ பேசாமல் இருந்து விட்டால் உங்களை நான் மனதாரா ஆதரிப்பேன் என்று ஒரு மோசடி உடன்பாட்டுக்கு அழைக்கும் ஸ்ரீதர் அவர்களே, முதலில் உங்களது காவிக் கட்சி விசுவாசம் உங்களிடத்தில் எத்தகைய ஒரு ஊழ்ல் மனதை ஏற்படுத்தியிருக்கிறது என்று பரிசீலியுங்கள்.

      • அப்போ ஒங்க பயம் நேசம்தான். நடத்துங்க நடத்துங்க.

      • ரேப் ஸ்வயம் சேவக் ???? நல்ல காமெடி பண்ணுறீங்க போங்க.

      • சிறிதர் சொல்வது அதை அல்ல .

        இஸ்லாமியர்களால் வன்முறை நிகழ்த்தபடும்போ து அதனை கண்டிக்க மறுப்பவர்களை பயந்தாங்கொள்ளிகள் என் கிறார். சீமான் தர்மபுரியில் நடந்த வன்முறைக்கு காரணமானவர்களை நெரடியாக குற்றம் சாட்டாததனால் அவர் பயந்து விட்டார் என நீங்கள் சொல்ல வில்லயா ? அதே போல் .

        உங்களுக்கு ஒரு நியாயம் மற்றவகளுக்கு ஒரு நியாயமா ?

        • தர்மபுரியில் வன்முறை வெறியாட்டம் போட்டது வன்னிய சாதிவெறி கும்பலைப் பற்றி இந்த கோழை சீமான் ஒரு வார்த்தை கூட கண்டித்து பேசவில்லை. இவருக்கு மீசை ஒரு கேடு.

          • அவர் மரக்காணம் படுகொலைகளையும் பத்திதான் ஒண்ணுமே பேசலை .

            அதுக்கு நீ இப்படி துள்ளி குதிச்சியா ..

            • அதுக்கும் ராம்தாஸ் கும்பல் தானே காரணம் பின்ன எப்படி வயைத் தொறப்பார் உங்க தலைவர்.

      • //நீங்கள் ஆர்.எஸ்.எஸ் பற்றியோ ரேப் ஸ்வயம் சேவக் பற்றியோ பேசாமல் இருந்து விட்டால் உங்களை நான் மனதாரா ஆதரிப்பேன் என்று ஒரு மோசடி உடன்பாட்டுக்கு அழைக்கும் ஸ்ரீதர் அவர்களே,//

        நீங்கள் ஆர்.எஸ்.எஸ் பற்றி தாராளமாக பேசுங்கள்…உங்களை யாரும் தடுக்கவில்லை. ஆனால், இஸ்லாமில் உள்ள ப்ரச்சனைகளையும் பற்றியும் பேசுங்கள் என்று தான் கூறுகிறேன். அதற்கு உங்களிடம் தைரியம் உள்ளதா? எல்லா சாதியினரையும், மதத்தினரையும் சமமாக கருதி ப்ரச்சனைகளை அலசுங்கள்…அப்போது உங்களை நான் மனதார ஆதரிக்கிறேன்…இஸ்லாமில் உள்ள ஜிகாத்தை “இறுக்கி அணைத்து ஒரு உம்மா” கொடுக்கும் நீங்கள், இஸ்லாமிய தீவிரவாதிகளால் ஒவ்வொறு முறையும் குண்டு வெடிக்கும் போது உங்களுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாததுபோல் கண்ணை மூடிக்கொள்வது ஏன்?

        அதை மையக் கருவாக வைத்து “சத்ய சாய் அபார்ட்மெண்ட்ஸ்” போன்ற ஒரு கற்பனைக் கதை எழுதுங்களேன் பார்ப்போம்..!! இஸ்லாமியர்கள், இந்திய விடுதலைக்குப் பிறகு இந்துக்களின் கோவில்கலை தொட்டது கூட கிடையாது என்று பொய்யுரைத்தீர்…அதற்கு நான் கொடுத்த மறுமொழியை உங்களுக்கேற்றவாறு கட் செய்தீர்கள்…ஏன்? இஸ்லாமியர்களைக் கண்டால் பயம்..!!

    • வினவு என்றால் சிறீதருக்கு வெறுப்பு வெறுப்பு.

  5. பாமக என்றால் சீமான் தடுமாறுவது போல் சீனா ரஷ்யா என்றால் வினவு தடுமாறுகிறது என்று பதில் போட்டுக் கொண்டு போகலாம். ஆனால் போகும் ஊருக்கு வழியதுவல்ல.

    ஏதோ செய்ய நினைத்து தவறுகிறவர்களைக் கவிழ்க்கிறது, கிடைத்த எல்லாரையும் வசைபாடுவது என்பதை விட்டு வினவு குழு முன்னுதாரணமாய் செய்து காட்டுவது தான் என்ன?

    பழித்தே வாழப் பழகியவர்கள் வினவு குழு என்ற எண்ணமே என் மனதில் நிலைபெற்று வருகிறது.

    வினவின் ஆக்கப்பூர்வமான பணிகள் என்று முன்னிருத்துபவை யாவை? அடிக்கடி அவற்றையே வாசிக்க விரும்புகிறேன். சேர் வாரிப் பூசும் செய்திகளை அல்ல.

    உங்கள் செயல்களை பற்றி அதிகம் அறிந்து கொள்ள வேண்டும் வாசிக்க வருபவர்கள். சலிப்பு தட்டுகிறது.

    • இளவரசன் மரணத்திற்கு காரணமாக பாமவை தண்டிக்குமாறு கோருவதும் அப்படி இல்லாமல் பம்மாத்து செய்வோரை அம்பல்ப்படுத்துவதும் ஆக்கப்பூர்வமான பணிகள் இல்லை என்றால் நேரடியாகவே இளவரசன் தற்கொலையை ஆதரிக்கிறேன் என்று நீங்கள் சொல்லலாமே! இது மாதிரி காதல், தற்கொலையெல்லாம் ஒரு விசயமே இல்லை என்று உங்கள் ஆக்கபூர்வ பட்டியிலில் இருக்கலாம். எனில் ஆக்கபூர்வமாக நாம் நமது சமூகத்திற்கு ஏன் இதுவரை பங்களிப்பு செய்யவில்லை என்று நீங்கள்தான் பரிசீலிக்க வேண்டும்.

      • இந்த வெங்காய கேள்விகள் எல்லாம் எதிர் கட்சி விஜயகாந்த், சரத் குமார், வைகோ போன்ற கட்சி தலைவர்களிடம் இல்லாத திராவிடத்திற்கு செம்பு தூக்கும் அறிவாளிகளிடம் போய் கேக்காத காரணம் என்ன?????

        • உங்களிடம் கேட்ட கேள்விக்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும், உங்களுக்கு பதில் தெரியாத பட்சத்தில் தெரியவில்லை என்று அடக்கமாக இருப்பதை விடுத்து நான் முட்டாள்தான் ஆனால் நீ மத்தவங்க கிட்ட கேள்வி கேட்டால்தான் உன்னை புத்திசாலின்னு ஒத்துக்குவேன் என்று கேட்பது சிரிப்பாக இல்லையா?

          • முட்டாள் யார் என்று இந்த பதிவை பார்த்தவுடன் புரியும்… “வினவு ” கேட்ட கேள்விகளுக்கு பதில் பதிவு பண்ணி உள்ளேன்…. அது சரி நான் கேட்ட கேள்விகளுக்கு வினவல் பதில் சொல்ல முடிய வில்லை என்றால் வினவு தன்னை முட்டாள் என்று ஒத்து கொளுவீர்களா???

            • ராஜண்ணே, உங்கள மாதிரி புத்திசாலிங்களோட ஒப்பிடும்போது நாங்க எல்லாம் முட்டாளுங்கதாண்ணே!

            • ஆமாம் நம்ம ஆர்ராஜ் தான் தமிழகத்திலேயே சீமானுக்கு அடுத்த அறிவாளி.

          • நீங்கள் கேட்ட கேள்வியை உங்களிடம் திருப்பி கேட்டால் எப்படி முட்டாள் தனமாக இருக்க முடியும்??? அது எப்படி சிரிப்பாக இருக்க முடியும்??? புரியவில்லை??? இந்த கேள்விகள் உங்களிடம் நாங்கள் புத்திசாலி என்று கூறுவதற்கு இல்லை…. இதை வாய் யை மூடி கொண்டு இருக்கும் திராவிட கழகங்களிடம் ஏன் கேக்கவில்லை என்பதுதான் என் விவாதம்………

            • பெரிய வாதம் அவனுங்க இந்தியாவோட காலை நக்குறானுங்க, நீங்க பார்ப்பனியத்தோட காலை நக்குறீங்க, வாதமாம் வாதம்..

        • கேட்டக் கேள்விக்கு பதைச் சொல்லு வெண்ணெய். ஏன் உங்களை மாதிரி பார்ப்பனியத்துக்கு சொம்பு தூக்கும் அறிவாளிகலிடம் கேட்கக்கூடாதா???

        • கேட்டக் கேள்விக்கு பதிலைச் சொல்லு வெண்ணெ, ஏன் இந்தக் கேள்விகளை உங்களை மாதிரி பார்ப்பனியத்துக்கு சொம்பு தூக்கும் அறிவாளிகளிடம் எல்லாம் கேட்கக்கூடாதோ???

      • ஒரு கலப்பு மணத்திருமணம் அரசியலாக்கப்படுகிறது . இதற்கு பா.ம.க , விடுதலை சிறுத்தைகளொடு வினவும் சேர்ந்து கொள்கிறது..

        • பா.ம.க. ராமதாஸ் சாதிவெறி கும்பல் இளவரசனை கொலை செய்துவிட்டது (கொலையானாலும் தற்கொலையானாலும் அது கொலை தான் அதற்கு ராமதாஸ் கும்பல் தான் காரணம்)அதை வினவு தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது, ஆம் அரசியலாக்கி வருகிறது. அதை பேசாமல் தவிர்ப்பதன் மூலம் சீமான் அதை அமுக்கப்பார்க்கிறார், ஆம் அதை அரசியலாக்கி வருகிறார்.

          • ஆமா இனி போலிஸ் விசாரணை எல்லாம் தேவையில்லை .

            நாட்டாமை தீர்ப்பு சொல்லிட்டாரு..

            • நீங்க என்னை நாட்டாமைன்னு சொன்னாலும் சீமான் பயந்தது பொய்யாகிடாதே அது உண்மை தானே..

      • சீமான் மீதான வசைபாடல் இது. அதற்கான பதில் மட்டுமே.

        இளவசரன் விஷயத்தில் சீமான் என்ன நிலை எடுத்திருக்கிறார் என்ற தகவல் என்னிடம் இல்லை.

        சீமான் வன்னியர் அமைப்புக்கு பம்மாத்து செய்கிறார். நீங்கள் பறையர் அமைப்புக்கு பம்மாத்து செய்கிறீர்கள் என்று இழுத்துச் செல்வதை தவிர்க்க விரும்புகிறேன்.

        http://masessaynotosexism.wordpress.com/2012/12/15/கோகிலா-என்பவரின்-சந்தேகத/

        • அப்படின்னா முதலில் பதிவை படிங்க ஆமாச்சு, இளவரசன் விசயத்தில் சீமான் என்ன நிலை எடுத்திருக்கிறார் என்பது பதிவில் இருக்கிறது.

          • அதை வாசித்திருந்தேன். வினவு சீமான் சொல்வதாக ஒத்தியிருப்பதாய். நாம் தமிழர் தளங்களையும் அணுகிப் பார்க்கிறேன். நன்றி.

    • நீங்கள் சொல்வதெல்லாம் நீங்களாகவே வலிந்து சொல்பவை, ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்றால் வினவு விமர்சனம் செய்யும் விசயத்தை, அது உண்மை என்றாலும் அதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அது உங்களுக்கு ரொம்ப பிடிக்கிறது. அதே போல உங்களுக்கு பிடித்த விசயங்களும் வினவில் இருக்கிறது, உங்களுக்கு பிடிக்காததை வினவு விமர்சிக்கும் போது அது உங்களுக்கு ரொம்ப பிடிக்கிறது. மற்றபடி இது பல்லாயிரக்கணக்கானவர்கள் வாசிக்கும் இணையம், உங்களைப் போல கூறுபவர்கள் மிக மிக சொற்பம். எனவே உங்களுடைய நலனிலிருந்து பார்க்காமல் பொது நலனிலிருந்து விசயத்தை பாருங்கள் சலிப்பு வராது.

    • மேலும் இந்த கொலையை பற்றியும் அண்ணன் சீமானின் பயந்தாங்கொள்ளிதனத்தை பற்றியும் உங்களுடைய கருத்து என்ன என்பதை முதலில் சொல்லுங்கள்.

  6. ////காதலும், வீரமும் தமிழ் தேசிய இனத்திற்கு மட்டும் சொந்தமான மரபு என்று எந்த அடி முட்டாள் ஆரம்பித்து வைத்தாரோ தெரியவில்லை. ///

    காதலும் வீரமும் நம் தமிழ் மரபு இலக்கியங்களில் காவியங்களில் குறிப்பிட வில்லையா என்ன??? அடி முட்டாள் யார்???….
    எந்த ஒரு சாதிக்கும் செம்பு அடிக்கும் யாரும் சாதி வெறியர்கள் தான் அது “வினாவுக்கும்” சேர்த்து தான்….

    • //காதலும் வீரமும் நம் தமிழ் மரபு இலக்கியங்களில் காவியங்களில் குறிப்பிட வில்லையா என்ன??? அடி முட்டாள் யார்???/// அதைத்தாங்கனா கட்டுரையும் சொல்லுது மேலும் சொல்லுது அந்த இலக்கியங்கள் எல்லாம் யாரை பற்ரியதுன்னும் கொஞ்சம் முழுவதும் படிங்க…
      அப்புறம் இன்னொன்னு தமிழருக்கு மட்டுமல்ல உலகின் எல்லா மொழி(மொழி இனமாகாது) இன தேசியத்தவருக்கும் வீரமும் காதலும் உண்டு
      அதுக்குத்தான் தமிழ் தாண்டி (அது கூட தானா படிப்பது இல்லை பிறர் சொல்ல கேட்ட கதை வைத்து பம்மாத்து விடுவது) எல்லா நாட்டு இலக்க்கியமும் படிக்கனும்கிறது
      உதாரணமாக சீன, பாலஸ்தீன, இரஷ்ய, இலக்கியங்கள் எல்லாம் படியுங்க….
      கண்முன்னே உங்க அண்ணன் ரெட் டமிலன் சீமானின் கூட்டத்துக்கு வந்து சென்றானே நம் பக்கத்து நாடு காஷ்மீரில் போராடும் வீரம் செரிந்த மக்களின் பிரதிநிதியாக யாசீன் மாலிக் அவனிடம் கேட்டுப்பாருங்கள் வீரம் என்பது எங்கள் தமிழ் மரபு என்று வந்தவன் மைக்கில பேசரதுக்கு முன்னாடி பின்னாடி திரும்பி நல்லா நாலு முறை சிரிச்சிருப்பான்

  7. அறிக்கை விடாத, சரத் குமார், விஜய காந்த, மற்றும் அணைத்து திராவிட கட்சிகளை பற்றி விமர்சனம் வைக்காத காரணம் என்ன??? தமிழ் என்றால் இளிச்ச வாயான என்ன????

        • சீமானின் தமிழ்தேசியம் + வன்னிய சாதிவெறி இரண்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசினால் அதை தலித் பார்ப்பனீயம் என்கிறது.

          • மரக்காணத்தில் கொலை வெறி ஆட்டம் போட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்களா ?

  8. 9 வருடம் விடுதை சிறுத்தைகள் மத்திய கொலை கார காங்கிரஸ் அரசுடன் திருடர் கழகத்திடம் சேர்ந்து கூட்டனி வைத்து இருந்ததே அதை பற்றி விமர்சனம் இல்லை??????

    இன துரோகி கருணாவுடன் கூட்டணி வைத்தது அதை பற்றி விமர்சனம் இல்லை????

    கடைசிவரை திருடர் கழகத்திற்கு விசுவாசமாக இருப்பேன் என்று சொன்னது, விடுதை சிறுத்தைகள் மக்களுக்கு விசுவாசமா இல்லை திருடர் கழகம் கருணாவுக்கு விசுவாசமா இதை பற்றி விமர்சனம் இல்லை??????

    அனால் இந்த மரணத்தால், இந்த ஜாதி வெறியால் நம் தமிழ் சமுதாயத்திற்கு இழிவு என்று சொன்னது வினாவுக்கு பொத்துகிட்டு வருது.
    நீங்க எல்லாம் நல்லா வருவிங்க…..

  9. தமிழ் மக்களின் சொத்துகளை ஆண்டு முழுங்கி எஅபம் விட்ட திராவிட கட்சிகளை, தமிழ் நாடு என்ன என்று தெரியாத ஒரு எதிர் கட்சி, திராவிட கட்சி, ஜெயலலிதாவுக்கு செப்பு அடிக்கும் ஒரு சரர்குமார் கட்சி இவைகள் எல்லா விட்டுவிட்டு, நேத்து வந்த சீமான் னிடம் கேக்கும் கேள்வி இது…. இந்த கேள்விகள் எல்லாம் 60 வருடம் தோற்று கொளுத்த திராவிட பன்னிகள் இடத்தில கேக்கவில்லை?????????
    வினவு சீமான் ஜெயலலிதவை “ஈழ தாய்” என்று சொன்னார் என பதிவு போட்டதற்கு அதரத்தை “வினவு” இன்னும் பதிவு பண்ண வில்லை……

    • ராஜண்ணே, உங்க கோபம்தான் என்ன? திமுக, அதிமுக, சரத்குமார், விஜயகாந்த் இவர்களைப் பற்றி வினவு ஏற்கனவே கேட்டு இருக்கிறது, எழுதி இருக்கிறது என்பதை உங்களுக்கு காட்டினால், இனிமே நான் வினவுகிட்ட முட்டாள்தனமாக கேள்வி கேட்க மாட்டேன்னு பத்து நோட்டு புக்கு வாங்கி ஒரு இலட்சம் தடவை எழுதி நேரில் வந்து காண்பிக்கணும். சம்மதமா?

      • சாதியை பற்றி வாய் திறக்காமல் இருக்கும் இந்த திராவிட கூடங்களிடத்தில் நீங்கள் இந்த கேள்விகளை கேட்டு இருந்தால்… நான் என் கேள்விகளை கண்டிப்பாக திரும்ப பெறுகிறேன்…. நான் “நாம் தமிழர் கட்சி” யை சர்தவன் என்று நீங்கள் தப்பு கணக்கு போட்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல

        • திராவிடத்தை நாங்கள் கேள்வி கேட்கவில்லை என்றே இருக்கட்டும். சீமானிடம் கேட்ட கேள்விக்கு உங்கள் கருத்து என்ன? நாங்க மட்டும் அயோக்கியனில்லை, திராவிடமும்தான் அயோக்கியன் என்று கூறுகிறீர்கள?

          • முதலில் நீங்கள் சீமான் ஈழ தாய் என்று போட்ட பதிவுக்கு அதாரம் சொல்லுங்கள்???? அதன் பிறகு சாதியை வைத்து அரசியலை கண்டிக வில்லை என்று நீங்கள் சொல்லுவது அறியாமை என்று நினைக்கிறன்…… you tube இல் சீமான் பேசியது அனைத்தும் சாதியை எதிர்கு பேசின வார்த்தைகள் தான்….

            • ஜெயலலிதா ஈழத்தாயா இல்லையான்னு போயி சீமான்கிட்டயே கேளுங்கண்ணே.

    • சீமானுக்கு வக்காலத்துவாங்கவும் 4 பேரு மன்னிக்கவும் 2 பேரு இருக்கறாங்களா! பெரிய விசியம்தான்.

      யப்பா டமிலர்களே சீமான் யாரு என்பதை தெரிந்துக்கொள்ள ‘எவனோ ஒருவன்’ படம் பாருங்கயா. பாப்பானின் காலை தன் நாக்காலே நக்கி சுத்தம் செய்யும் அளவுக்கு மானம் உள்ளவர் என்று புரியும்.

      ”பார்ப்பன அரிப்புக்கு உடுகை இழந்தவன் கைப்போல் உதவும் அண்ணன் சீமான்”

      என்று வரலாற்றில் பதியபோகும் பெரியண்ணன் சீ மான் வாழ்க!

      டமில் வாழ்க!!

        • ஆமாம் ஆமாம் ஷகிலா கூட குடும்ப பெண்தான் சினிமாவில் விபச்சாரியாக நடித்திருக்கலாம் அதற்காக வாழ்க்கையும் அப்படி இருக்குமா??

          அப்புறம் ‘சினிமா இல்லை என்றால்
          சீமான் இல்லை’
          இதுக்கூட தெரியாம அந்த கட்சியில் இருக்குராங்களே!

          சரி சினிமாவில்தான் அப்படி உண்மையில் எப்படி?

          ஜெயலலிதா காலில் சரண்டர் ஆவது,

          இந்து மதவெறியோடு கூட்டு சேருவது,

          சாதிவெறியர்களோடு ஒத்துப்போவது,

          இதெல்லாம் எதை காட்டுகிறது?

          சீமான் ஒரு பார்ப்பனதாசன் என்று.

          • தமிழ் தேசியத்தை பார்ப்பான் என்று சொல்ல வாய்த்த வந்தேறி திராவிட கூட்ட வேணிகள் பதிவு… யாரும் சீமானுக்கு வக்ளது வங்க வில்லை… நாம் தமிழர் என்ற தமிழருக்கான கட்சிக்கு தான்…

            • ஆர்ராஜிக்கு ஒன்றுமில்லை இலேசாக திராவிடமேனியா இருக்கிறது, அடிக்கடி வினவுக்கு வந்து விவாதித்தால் அது சரியாகிவிடும்.

          • ஆமாம் அத்தனை நாள் திருமாவோடு ஓத்துப்போனாரே அதை ஏன் விட்டு விட்டீர்கள் ?

          • ஷகிலா படம் பார்க்கும் அடப்பாவிக்கு உடம்பெல்லாம் பொய்தான் .
            ய்
            ஒருவரை எதிர்ப்பதென்றால் கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் செய்வது எல்லாவற்றையுமா எதிர்ப்பது ?
            அதனைத்தான் வினவுவும் , அடப்பாவி போன்றவர்களும் செய்து வருகிறார்கள்.

            இலங்கை அரசு ,ஈழப்பிரச்சனையில் ஜெயாவின் எடுத்த சரியான நிலப்பாட்டினை ஆதரித்து பேசியிருக்கிறார்,

            அதுக்கு உனக்கு ஏன் வயிறு எரியுது ?

            மேலும் சீமான் ஒருபோதும் இந்து மத வெறியோடு கூட்டு சேர்ந்தவர் அல்ல.

            வினவுவும் , அடப்பாவி போன்றவர்களும்தான் இஸ்லாமிய வெறியர்களோடு கூட்டு சேர்ந்ததாக தெரிகிறது.

            சீமானைப்பற்றி பச்சை பச்சையாக பொய்களை பேசும்போதே உமக்கும் அரசியலுக்கும் வெகு தூரம் என தெரிகிறது .

            ஷகிலா படம் பார்ப்பதோடு நிறுத்தி கொள்.

            • /ஷகிலா படம் பார்க்கும் அடப்பாவிக்கு உடம்பெல்லாம் பொய்தான் .
              ய்/
              ha ha ha….

              சீமான் வாயில் இருந்து பொய்யே வராது ஏனென்றால்?……

              பேசுவது அனைத்தும் பொய் என்பதால் தனியே பொய் என்று பிரிக்க முடியாது. உதாரணம்:

              சீமான் ‘உருவாக்கும்’ புதிய வரலாறு:

              //எம்.ஜி.ஆர். முதலமைச்சராகி விடுகிறார். தந்தை பெரியார் அவர்களுக்குப் பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். பெரியார் அவர்களை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். சக்கர நாற்காலியில் அழைத்து வருகிறார்கள்.

              – சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் 25.12.2010,சனிக்கிழமை, நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சீமான்.

              எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதலமைச்சராக 1977 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். தந்தைபெரியார் அவர்களோ 1973 ஆம் ஆண்டு இறுதியில் இறந்து போய் விட்டார். தான் முதல்வர் ஆவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போய்விட்ட பெரியாரைச் சக்கர நாற்காலியில் வைத்து எம்.ஜி.ஆர் எப்படி மேடைக்கு அழைத்து வந்திருக்க முடியும் என்பது நமக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது.//

              http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=12616&Itemid=139

      • சினிமா வேறு….கொள்கை வேறு….
        எந்த அரசியல் கட்ஷியையும் சேராதவன் நான்

        • ஆளையும் மூஞ்சையும் பாரு நாயிடாம் நாயிடு, இப்படி பேஎரு வச்சிக்க வெக்கமா இல்ல த்தூ..

          • நீங்கள் காறி உமிழ வேண்டியது என் மீது அல்ல…
            உங்களது தமிழ் இனம்,காலம் காலமாக கொர்…கொர்ர் நிலையில்
            இருந்துகொண்டு…தமிழன் அல்லாதோருக்கு பல்லக்கு தூக்கும்
            “அல்லக்கைகள்” மீதுதான்….
            நாயுடு பட்டத்துடன் அலைவது டாக்டர்,கலிஐர்,புரட்சி,கேப்டன்
            பட்டத்தை நோக்கி நகரும் ஓனாய் அல்ல…

      • சீமான் யார் என்று தெரிந்து கொள்ள படம் பார்கனுமா???? சரி உங்கள் வழிக்கு வருகிறேன்………அப்படி என்றால் சீமான் நடித்த மற்ற படங்களை பற்றி ஒனும் சொல்லவில்லை???

  10. பதிலுரைகள் :

    1. \\தேசிய இனத்திற்கு மட்டும் சொந்தமான மரபு \\

    அந்த அறிக்கையில் “காதலையும் வீரத்தையும் போற்றும் எம் தமிழ் தேசிய இனத்தின் மாண்பிற்கும், பண்பாட்டிற்கும் ” என்றுதான் கூறப்பட்டுள்ளதே தவிர தமிழுக்கு மட்டும் என்று கூறவில்லை…நீங்களாக எந்த வார்த்தையும் சேர்க்க வேண்டாம் …மல்லுக்கட்டும் முட்டாள்தனம் யாருக்கு உள்ளது என்று நீங்களே முடிவு செய்து கொள்ளவும் ….

    2. \\நிலவுடைமை காலங்களில் உள்ள இலக்கியங்கள் இந்த இரண்டை மட்டும் – காதல்,வீரத்தை – அதிகம் பேசுகின்றன\\ இது ஓரளவு எற்று கொள்ள கூடியது… அல்லது நமக்கு கிடைத்த இலக்கியங்கள் அது மட்டும் தானா விவாதத்ரிக்குரியது….

    3. \\தமிழினவாதிகள் இந்துமதவெறி பால்தாக்கரே, சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவித்ததும், அய்யா நெடுமாறன் இந்துமத வெறியர் அர்ஜூன் சம்பத்தை மேடையேற்றுவதும் வேறு வேறு அல்ல.\\\ முழுக்க முழுக்க் உண்மை …இவர்கள் தமிழ் அதரவு என்ற பெயரில் மத வெறியையும் , ஜெயாவையும் ஆதரிப்பது கேலி கூத்து ..

    4. \\சிங்கள இனவெறி ராஜபக்சே அரசு என்று குறிப்பாக சொல்லும் அரசியல் புரிதல் \\ சீமானின் பிரச்சனையே இதுதான் ..எந்த சாதியையும் நான் புன்படுவதில்லை என்ற பெயரில் , தவறுகளை தட்டி கேட்ட சற்றே பம்முகிறார் ..

    5. \\தமிழ்த் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றதோடு, காலத்தால் அழியாத காவியங்களாக இன்றளவும் போற்றப்படுகின்றன\\.. அண்ணன் சீமான் இன்னும் காபி வரல …நீங்க இன்னும் வளரனும் ..

    6. \\அடிக்கடி முஷ்டியை உயர்த்தியவாறு போஸ் வேறு? வெட்கமாயில்லையா சீமான் அவர்களே?\\\ இதே போல் திருமா வும் போஸ் கொடுக்கிறாரே !!! இன்று வெட்கம் இல்லாமல் சென்னை கோர்ட்டில் பேட்டி வேறு ..செத்ததுக்கு அப்புறம் எதுக்குலே கேசு ….

    7. \\தமிழனத்தின் ஒற்றுமைக்கே, உரிமைக்கே, விடுதலைக்கே உலை வைக்கும் அந்த சக்திகளை சீமான் ஏன் பெயரிட்டு அடையாளம் காட்டவில்லை?\\\ இதே கேள்வி , சீமானிடம் பரமக்குடி கலவரத்தின் போதே கேட்கப்பட்டது ..அருமையான பதில் கூறினார், புதிய தலைமுறையில் ..தப்பித்துகொள்ள …

    சீமான் தந்தி முதலாளியின் அடிவருடி ஆகி ரொம்ப நாளாசுலே \……

  11. //9 வருடம் விடுதை சிறுத்தைகள் மத்திய கொலை கார காங்கிரஸ் அரசுடன் திருடர் கழகத்திடம் சேர்ந்து கூட்டனி வைத்து இருந்ததே அதை பற்றி விமர்சனம் இல்லை??????

    இன துரோகி கருணாவுடன் கூட்டணி வைத்தது அதை பற்றி விமர்சனம் இல்லை????

    கடைசிவரை திருடர் கழகத்திற்கு விசுவாசமாக இருப்பேன் என்று சொன்னது, விடுதை சிறுத்தைகள் மக்களுக்கு விசுவாசமா இல்லை திருடர் கழகம் கருணாவுக்கு விசுவாசமா இதை பற்றி விமர்சனம் இல்லை??????

    அனால் இந்த மரணத்தால், இந்த ஜாதி வெறியால் நம் தமிழ் சமுதாயத்திற்கு இழிவு என்று சொன்னது வினாவுக்கு பொத்துகிட்டு வருது.
    நீங்க எல்லாம் நல்லா வருவிங்க…../// அய்யா அறிவாளி வினவுல ரைட் சிட்ல ஓ மன்னிக்கனும் வலது பக்கமா “search”னு ஒரு பெட்டி வருது பாரு அதுல போய் திருமாவளவன்னோ விடுதலை சிறுத்தைகள்னோ போட்டு பாரு அப்புறம் ஃப்ரீயா இருக்கும் போது கருணாநிதி ஜெயா தா.பா எல்லாத்தையும் போட்டு படிச்சுப்பாரு ஒரு விஷயத்தை முழுமையா தெரிஞ்சுகிடாம பேசுவதே டமில் டேசியவியாதிகளின் பொழப்பா போச்சு

  12. ///// யாராய்யா அந்த சாதி மாண்பை காப்பாற்றுவர்கள்? சொன்னால் உங்களை தலையை எடுத்து விடுவார்களா? இதுதான் சங்க இலக்கியத்திலிருந்து இன்றைய சங்கர் சினிமா வரைக்கும் வியந்தோதப்படும் தமிழனது வீரமா? ஒரு இளவரசனது மரணத்திற்கு கூட வில்லன்கள் பெயரைக் கூற பயப்படும் நீங்களா இலட்சோப இலட்சம் ஈழத்தமிழர்களின் விடுதலையை வாங்கித் தருவீர்கள்? இதில் அடிக்கடி முஷ்டியை உயர்த்தியவாறு போஸ் வேறு? வெட்கமாயில்லையா சீமான் அவர்களே?//////

    ஒரு காதல் விவகாரத்தை ஈழத்துடன் ஒப்பிட்டு பேசுவது என்பது ஒரு அடி முட்டாள் தனம்…..

    மறந்து விட வேண்டாம், 2009 இல் பிரபாகரன் பெயரை சொன்னால் கைது பண்ணி எங்கு போடுவார்கள் என்ற நிலை இருந்த போது, கைகளில் புலி கொடியை பிடித்து, தலைவர் பிரபாகரன் படத்துடன் வளம் வந்த சீமான் உங்களுக்கு எப்படி தெரிகிறார் கோழை என்ற???? மொக்கை பதிவு இது

    • //ஒரு காதல் விவகாரத்தை ஈழத்துடன் ஒப்பிட்டு பேசுவது//

      என்ன இப்பிடி அசால்ட்டா சொல்லிடீங்க. சீமான் வேற மாதிரில்லா சொல்றாரு?

      “தமிழர் இலக்கியத்தில் காதல் போற்றப்படுகிறது, தமிழர் வாழ்வியலில் வீரத்திற்கு இணையான உன்னத இடம் காதலுக்கு தரப்பட்டுள்ளது”

  13. ///ஒருவேளை இளவரசன் எனும் தலித் இளைஞர் திவ்யா எனும் வன்னியப் பெண்ணை காதலிக்காமல் ////
    வினவின் பதவில் “வரிக்கு வரி” சாதியை வைத்து இருக்கிறது அனால் சீமான் பதிவில் சாதியை வைத்து ஒரு பதிவு கூட இல்லை… இந்த ஒரு உதரணம் போதும் யார் சாதி வெறி புடித்து பதிவு செய்கிறார்கள் என்று……….

    • ராஜண்ணே, நாம் தமிழர் கட்சியில உங்கள விட பெரிய ஆள் யாருமில்லையா அண்ணே, இருந்தா அவங்களை கூட்டிட்டு வாங்கண்ணே!

      • உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல சின்ன பயலுகளே போதும்ன்னு நாம் தமிழர் கட்சி நினைச்சு இருக்கலாம் 😉

        • //உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல சின்ன பயலுகளே போதும்ன்னு நாம் தமிழர் கட்சி நினைச்சு இருக்கலாம் //

          எப்படியோ ராஜ் ஒரு பொடிப்பயல் என ஒத்துக்கொள்ளும் உங்கள் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு மணி..

        • சீமானை விட சின்ன பயலுக இருக்காங்களா அந்த கட்சில.

      • நக்கல் எல்லாம் பண்ண வேண்டாம்… நான் “நாம் தமிழர் கட்சி”யை சார்ந்தவன் இல்லை…. என் விவாதம் தவறாக இருந்தால் சுட்டி காட்டுங்கள், அதை விட்டுவிட்டு இப்படி நக்கல் பண்ண வேண்டாம்…. எல்லாரும் முதல் படிகளில் இருதுதன் மேல் வந்தார்கள்.. எல்லாவற்றிலும் அது “வினாவுக்கும்” பொருந்தும் என்று நினைகிறேன்

        • ராஜணன்னே கோவிச்சுக்காதீங்க, உங்கள நக்கல் செய்யல, நறுக்குனு சில கேள்விகள்தான் கேட்டோம்.

      • பதில் சொல்வதற்கு கருத்து பஞ்ஜம் ஏற்பட்டால் வேறை யாரையாவது கூட்டிட்டு வாங்கன்னு இப்படிதான் பம்ம வேண்டி வரும்…

          • பாத்தீங்களா இப்பவும் உங்க கிட்ட இருந்து பதிலே வரல ? பதிலே சொல்லாம பம்முறதுங்கிறது இதைத்தான்..

            • பதிலை நீ தானய்யா சொல்லனும் சீமான் பேசுனது சரியா இல்லையான்னு.

              • பின்னூட்டத்தை படித்து விட்டு பேசு . அப்ப தெரியும் யார் யாருக்கு பதில் சொல்றதுன்னு …

                • நீ தான் எனக்கு பதில் சொல்லனும் சீமான் வன்னிய சாதிவெறியர்களைப் பத்தி வாயையே திறக்காமல் சாதிவெறியை எதிர்ப்பதாக கூறுவதன் மூலம் ராமதாஸ் கும்பலை மறைமுகமாக ஆதரிக்கிறாரா இல்லையான்னு நீதான்யா பதில் சொல்லனும் சொல்லு..

              • முதல்ல உன்னோட இனிஷியலை தெரிந்து கொண்டு வா.

                நீ குறிப்பிடும் அந்த மூன்று பேர்தான் உனது இனிஷியலுக்கு காரணமா ?

                • உன்னோட இன்ஷியல் சீமானோ ராமதாசோ தெரியவில்லை ஆனாலும் நீ அவிங்களுக்கு ரொம்ப விசுவாசமா நடந்துக்கிறய்யா.

                  • அவர்களது இனிஷியலை நான் பயன்படுத்தவில்லை .

                    நீதான் பயன்படுத்துகிறாய்.அப்படியானால் அவர்கல் உனக்கு என்ன முறை ?

                    • இது இன்ஷியல் இல்லய்யா இது உங்க தலைவரை பத்திய பாட்டு பாட்டக் கேக்குறியா.

                      வைகோ நெடுமா சீமா கெளம்பிட்டாய்ங்க டீமா..
                      போயசு காலத் தொட்டு ஆசிர்வாதம் வாங்கிக்கிட்டு
                      ஈழம் தனி ஈழம்முன்னு கூவலாமா நம்ம் தமிழினத்த
                      இளிச்சவாயு ஆக்கலாமா

                      வைகோ நெடுமா சீமா…

                      பாட்டு எப்படி இருக்கு ?

      • இவ்வளவு சின்ன காமெடி கே உங்களுக்கு வயிறு சரியில்லை , இன்னும் பெரிய பெரிய காமெடி எல்லாம் பார்த்தா வவுறு புண்ணாகி விடும். உங்க அடுத்த ஹீரோ வை ரெடி பண்ணுங்க இன்னொரு வாழற குடும்பத்துக்கு வில்லத்தனம் பண்ண.எந்த இனமோ எந்த நிறமோ எந்த கட்சியோ குறிப்பா நல்லா படிச்சா எல்லாம் தெரிந்த ஆனால் வாழ தெரியாதா தமிழர்களை வாழ சொல்லுங்க வினவு மாப்பிள்ளே .

  14. /////முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்களை கொன்று குவித்தது யார்? ஏதாவது டிராகுலா பேயா, இல்லை சிங்கள இனவெறி ராஜபக்சே அரசா? அங்கே வாய் புடைக்க ராஜபக்சேவை அடையாளம் காட்டும் சீமான் இங்கே வாய் மௌனிக்க புலம்ப வேண்டிய அவசியம் என்ன? தமிழினத்திற்கு வேட்டு வைக்கும் சாதிய சக்திகளை அடையாளம் காட்டி தமிழக மக்கள் புறக்கணித்தால்தானே ஒற்றுமை வரும்//////

    இந்த வெங்காயத்துக்கு தான் சாதியை விட்டு வெளில் வாருங்கள் என்று சொல்லுவது… சாதி இன் வலைக்கு உள்ளால் இருந்து விட்டு குரல் கொடுக்க வில்லை குரல் கொடுக்க வில்லை என்று ஒபறி வைக்க வேண்டாம்………. முதலில் “வினவு” தமிழ் மக்களை அந்த ஜாதி இந்த ஜாதி என்று சொல்லுவதை நிறுத்துங்கள்….

    • //அங்கே வாய் புடைக்க ராஜபக்சேவை அடையாளம் காட்டும் சீமான் இங்கே வாய் மௌனிக்க புலம்ப வேண்டிய அவசியம் என்ன?//

      வினவு எத்தனை விதமா கேட்டு பாத்தாலும் உங்க கிட்ட இருந்து பதில் மட்டும் வர மாட்டேங்குதப்பா.. ஒருவேளை வீரங்க்ய எல்லாம் இப்பிடித்தான் பேசுவாங்க்யளோ ??

      • ஈழத்தில் நடைபெற்றது யூதர்களுக்கும் , ஆமெனியர்களுக்கும் நடந்த படுகொலைகளுக்கு நிகரானது . சுமார் ஒரு லட்சம் மக்கள் குழந்தைகள் , பெண்கள் உட்பட சிங்கள இன வெறி அரசாலும் அதன் படைகளாலும் கொல்லப்படிருக்கிறார்கள்.

        இதனை ஒரு தனிப்பட்ட கலப்பு மணத்தோடும் . அதனையொட்டி நடந்த ஒரு மரணத்தொடும் ஒப்பிட்டு ஒருவர் தமது இணைய தளத்தில் எழுதினால் அதற்கெல்லாம் பதில் கொடுக்க வேண்டுமா ? என நினைத்து விட்டிருக்கலாம்.

        வினவு போன்ற மேதாவிகளுக்கெல்லாம் சாமானியர்களால் பதில் கொடுக்க முடியுமா ?

        இந்த தளத்திலேயே வினவுக்கு தொடுக்கபட்டிருக்கிற பல கேள்விகளுக்கு வினவுவிடம் பதில்களே இல்லை .

        • அண்ணே உங்க கேள்விய திருப்பி போடுங்க, ஒரு கலப்பு திருமணம் செய்த காதலனை தற்கொலை செய்யவைச்ச வில்லனை கூட உங்க தலைவர் சீமானால் எதிர்க்க முடியவில்லை என்றால் பல ஆயிரம் ஈழத்தமிழர்களை கொன்றவரை மட்டும் எப்படி எதிர்க்க முடியும்?

          • ஒரு தனி மனித சோகத்தையும் ஒரு இனத்தின் சோகத்தையும் ஒன்றாக போட்டு குழப்பும் (வேண்டுமென்றே) உமது மூளையை என்ன வென்பது ?

            • தம்பி, அப்படின்னா தனி மனித சோகத்துக்கு சொவத்தை தேய்ச்சிகிட்டு சும்மா ஒக்காந்திருந்த சீமான், இனத்தோடு சோகத்துக்கு பீரங்கியைத் தூக்கிட்டுப் போய் ராஜபக்சே கிட்ட சண்டை போட்டு வந்தாரா? அதான் இப்ப டயர்டா இருக்காரா?

              • ஙீல தமிழா பெரியவங்க பேசும்போது சும்மா குறுக்க வராதை.

                சமத்தா தள்ளியே இருங்க….

          • யாரை எதிர்ப்பது ? பா மா கா , ராமதாஸ் , காடு வெட்டி குருவையா ? அவர்களை ஏன் குற்றம் சாட்ட வேண்டும் ? நடந்த சம்பவத்துக்கும் அவர்களுக்கும் நேரடியாகவோ அல்லய்கு மறை முகமாகவோ சம்பந்தம் இல்லயே ?

            அப்படியானால் மரகாணத்தில் நடந்த கொலைகளுக்கு யாரை எதிர்ப்பது ?

            சிறுத்தகளயா ? திருமாவையா ?

            வினவு அவ்வாறு எதிர்த்ததா ? சுண்டு விரலாவது நீட்டியதா ?

            • //யாரை எதிர்ப்பது ? பா மா கா , ராமதாஸ் , காடு வெட்டி குருவையா ? அவர்களை ஏன் குற்றம் சாட்ட வேண்டும் ? நடந்த சம்பவத்துக்கும் அவர்களுக்கும் நேரடியாகவோ அல்லய்கு மறை முகமாகவோ சம்பந்தம் இல்லயே ?//
              ஏன்யா நான் சரியாத்தான் பேசுறேனா?

              • உதய குமாரா கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியலன்னா அல்லது பதிலே இல்லைன்னா காமெடி சானல் பார்ப்பதோடு நிறுத்திக்கொள்..

            • அப்படின்னா சீமான அப்படி அறிக்கை விடச்சொல்லுங்களே பொடிப்பயலுகளா.

              • சொந்த பெயரில கருத்து சொல்ல முடியல . அடுத்தவன் பெயரில ஒளிந்து கொண்டு . வெக்கங்கெட்ட பொழப்பு…

                • இப்ப அதுவா கண்ணா பிரச்சினை, என் பேரு ஊரு செல் நெம்பரு எல்லாம் தர்றேன், அதை தந்தா மட்டும் நீ நேர்மையா பதில் சொல்லிருவியா என்ன ? ராமதாசையும், ராமதாஸ் கும்பலுக்கு பயப்படும் சீமானையும் ஆதரித்து சொம்படிப்படிப்பது என்று முடிவு செய்து களத்தில் குதித்திருக்கும் உனக்கு எதுக்கு ஒரிஜினல் டூப்ளிகேட் ஆராய்ச்சியெல்லாம், கேக்குற கேள்விக்கு பதிலைச் சொல்லுய்யா. அப்புறம் உனக்கு யாரு பர ன்னு பேரு வச்சது. பேரு நல்லா இருக்குய்யா…

                  • குடுப்பே , குடுப்பே . பெயருக்கு முன்னால என்ன போடறதுன்னே தெரியலை.

                    வினவுக்கு வக்காலத்து வாங்க வந்துட்ட.

                    எதுக்கு இவ்வளவு கஷ்டப்படுற , பேசாம வினவு என்றே போடலாம்

                    • இளவரசன் கொலைக்கு ராமதாஸ் சாதிவெறி கும்பல் காரணமா இல்லையா, அந்த கொலைகாரக் கும்பலை சீமான் தனது அறிக்கையில் கண்டிக்காமல் மறைமுகமாக ஆதரிக்கிறாரா இல்லையா இதுக்கு மட்டும் பதிலைச் சொல்லு பர நான் போயிடுறேன்.

                • சொந்தப் பேர்ல அறிக்கை விடும் சீமானுக்கு தைரியமா பேச கூட முடியலையே அது வெட்கங்கெட்ட பொழப்பு இல்லையா, மானங்கெட்ட பொழப்பு இல்லையா, சாதிவெறி கும்பலை ஆதரிப்பது இல்லையா பர.

                • எந்த பேரில் சொன்னா என்ன உண்மையை தானே சொல்றேன்.

            • பெரோஸ் சொன்ன மாதிரி வினவுல தெடி பாரு… குறிப்பாக மரக்காணம் கலவரம் குறித்து…

            • வினவு எப்போதும் சாதிவெறியர்களை எதிர்த்துக் கொண்டு தானிருக்கிறது.

        • சீமானுக்கு கூரை ஏறியே கோழிப்புடிக்கத்தெரியல இதுல இவரு வானம் ஏறி வைகுந்தம் போறாராம் உங்க மூளைக்கு இப்ப புரியிதா பர .

          • உனக்கு சொந்த பெயரிலேயே கருத்து சொல்ல முடியலை.நீ கோழி பிடிக்க போறியா ? நீ அதுக்கு கூட லாயக்கில்ல…

            • நான் கோழி புடிக்கிறேனா இல்லை வாத்து புடிக்கிறேன்னாங்கிறதா பிரச்சினை, உங்க அண்ணன் இது எதையும் செய்யாம வானம் ஏறிப் போறேங்கிறது தானேய்யா பிரச்சினை.

    • வீட்டுக்குள்ளேயே இருந்தாள் வீட்டுக்கு வெளியே என்ன நடக்கிறது என்று எப்படி தெரியும்? வேண்டுமானால் TV பார்த்துக்கொண்டு கேளிக்கை,நடனத்தை பார்த்துக் கொண்டிருக்களாம்.

      அதேபோல வினவு தனது தலித் சாதிக்கு ஆதரவாக எழுதவேண்டம் என்ற எண்ணத்தில் (தலித் என்ற வீட்டினுள் இருந்து கொண்டு). மற்ற சாதியில் உள்ள நியாயங்கள் வினவுக்கு எப்படி தெறிய வாய்ப்பு உண்டு?

      • ஈழா,

        வினவு இதுவரை எந்த சாதிக்கும் ஆதரவாக எழுதவில்லை… ஆனால், அனைத்து சாதிவெறியையும் எதிர்த்து எழுதி இருக்கிறது…

        இக்கட்டுரையில், எங்கு சாதி ஆதரவாக எழுதப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டால் நன்று…

        தோழமையுடன்,
        மாரிமுத்து…

        • எல்லா சாதிகளையும் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சாதிகளை வக்கிரமாக எதிர்த்து எழுதி விட்டு குறிப்பிட்ட சாதியை அல்லது சாதிகளை பற்றி ஒன்றும் சொல்லா விட்டால் வினவு அந்த சாதிகளுக்கு அல்லது சாதிக்கு ஆதரவாக இருக்கிறது என்று பொருள்..

          • வன்னியர் குல சத்திரியர்கள், ஆண்ட பரம்பரை என்று சொல்லிக்கிற இந்த ஆண்டான்களுக்கு எதுக்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடஒதுக்கீடு ? சாதிவெறியை தூண்டிவிடும் ஆதிக்கசாதிகள் அனைத்திற்கும் இடஒதுக்கீடை முழுமையாக இரத்து செய்ய வேண்டும்.

            • பாத்தியா சாதி வெறியை தெளிவா காட்டிட்டே..

              உனது சாதிக்கு ஒதுக்கீடு வேண்டுமானால் தராளமாக கேள் .

              பத்தலையா ? அதிகமா கேள் அது உனது உரிமை.

              ஆனால் மற்ற சாதியினருக்கு ஒதுக்கீடே கொடுக்க கூடாது என்று சொல்ல உனக்கு உரிமை இல்லை.

              இது உனது சாதி வெறியை பறை சாற்றுகிறது

  15. ///ஆழம் பத்திரிகை பேட்டி ஒன்றில் பாமகதான் தமிழனது கட்சி என்று பாராட்டு பத்திரம் வாசித்த சீமான் திராவிடர் கட்சியெல்லாம் தமிழன் கட்சியில்லை என்று சாடுகிறார்.////

    இந்த பாமக ஜாதி வெறி பிடித்து அலைந்த போது தான் திருடர் திராவிட கழகம் பாமக விடம் போய் பிச்சை கேட்டது, இதை ஏன் வினவு பதவி செய்ய வில்லை… அது சரி பாமக சாதி வெறி பிடித்து அலையும் போது சீமான் பாமவுக்கு அதரவாக பேசிய ஆதரத்தை “வினவு” பதிவு செய்யவும்……

    • கடைசி வரைக்கும் கேட்ட கேள்விகள் எதுக்கும் பதில் சொல்லாம அவன கேட்டியா இவன கேட்டிய்யான்னு சமாளிக்கிறீங்க.. செம கில்லாடி நீங்க.. 🙂 🙂

    • உங்களுக்கு ஆதரவா பேசுற பர என்கிற நாம் தமிழர் இங்கு போட்டிருக்கும் பின்னூட்ட ஆதாரம் போதாதா ஆர்ராஜ்.

  16. ராஜான்ன நீங்க எங்கன்ன இருக்கிங்க என்னையும் சேர்த்துக்கொல்லுங்கன்ன……..,சாதியில்லாத ஒலகத்துல இருக்கிங்க அங்க கன்ன கட்டிக்கனுமாஆஆஆஆன்னே…………,

  17. Rejecting everyone’s opinion by you may leave for us to listen only one opinion that is of Vinavu. We live in a world where varied human beings of wide ranging, diverse characterstics,attributes live. Acknowledge some distinguishing views of others also

    • நீங்களே உங்கள் கருத்துக்கு எதிராக சேம் சைடு கோல் போட்ட மாதிரியல்லவா இருக்கிறது. இங்கே வினவு தனது கருத்தை சொல்கிறது. அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?

  18. சீமான் இந்த அறிக்கையை எழுதி இருக்க மாட்டார் வழக்கம் போல கைஎழுத்து மட்டும் தான்
    (சாதி பெயரை பின்னால் வைத்து கொண்டு ,) அய்யா என்னும் பெயர் உள்ள அந்த பெரியவர் தான் எழுதி கொடுத்து இருப்பார் . சீமானுக்கு சும்மா பேச தெரியும் …வேற என்ன தெரியும் ??
    சாதி ஒழிப்பு பத்தி எல்லாம் பேசினா தந்தி டிவி இல் , நிகழ்ச்சி நடத்த முடியுமா ??

    சீமான் – சாதியில் எவனாவது செத்தால் , செத்தவன் ஜாதியையும் , அடித்தவன் ஜாதியையும்
    எப்படி பேசி ஓட்டு வாங்கலாம்னு பார்பார் அவரு !!

    • இதிலிருந்தே தாங்கள் சீமானின் பேச்சுக்கள் எதையும் கேடகவில்லை என தெரிகிறது.

      முதலில் சீமானது பேச்சுக்கள் சிலவற்றையாவது கேட்டு விட்டு கருத்து சொல்லுங்கள்.

      • இளவரசன் கொலைக்கு ராமதாஸ் கும்பால் காரணம் இல்லை என்று சொன்ன யோக்கிய நாம் தமிழர் இவர் தான்.

        • சொந்த பெயரில் எழுத துப்பில்லாத மகா யோக்யரே ,

          இளவரசன் குடும்பத்தினரே ராமதாஸ் தான் காரணம் என்று சொல்ல வில்லையே ?

          அப்படியிருக்க உன் போன்றவர்களுக்கும் வினவுக்கும் ஏன் வயிறு எரிகிறது .

          கடைசியாக வந்த தகவல்படி இளவரசனின் தம்பியே நடந்த சம்பவக்களுக்கு திருமாவையும் , சிறுத்தைகளையும்தான் காரணமாக சொல்லியிருக்கிறார்.

          • அட பேரிக்கா இளவரசன் குடும்பம் எங்க குடும்பம் தான், அவங்க சொன்னா தான் நீங்க ஏத்துக்குவிங்களோ, ஒனக்கு அறிவு கிறிவு இல்லையா. இளவரசன் தற்கொலை செய்துகொண்டிருந்தாலும் அதற்கு ராமதாஸ் கும்பலின் சாதிவெறி தான் காரணம்ங்கிறது தமிழ்நாட்டுக்கே தெரியுது ஆனா இந்த பரக்கு தெரியல.

            ஆனா உங்க அண்ணன் குடுத்த அறிக்கையில ராமதாஸ் கும்பலை இப்படி வெளிப்படையா ஆதரிக்கலையே. அப்படின்னா வெளிப்படையா ஆதரிச்சு இன்னொரு அறிக்கை குடுப்பாரா.

            • மரக்காணத்தில் செத்தவங்களுக்கு யார் பொறுப்பு ?

              இளவரசன் குடும்பமே நீ சொல்வதை ஏற்கவில்லை .நீயா சும்ம கிடந்து புலம்புறே..

  19. பெயர் சொல்லி பாமாகா சாதி வெறி கூட்டம் தான் காரணம் என்று சீமான் கூறவில்லை என்றாலும் , கவரிசி காதல் , குறைந்த வயது என்று சப்பை கட்டு கட்டாமல் இருந்த வரை சந்தோசம் தான்

    அரசியல் கட்சி என்றான பிறகு வாக்குகளை குறி வைத்து தான் பேச வேண்டி உள்ளது

    • வினவு..உன் பருப்பு வேகாது..சும்மா அந்த பெண்னை கைய புடிச்சி இழுத்தியா மாதிரி பேச வேண்டாம்..

  20. வினவிற்கு மனசாட்சி இருந்தால் இந்த காதலில் அரசியல் ஆதாயம் தேட முனைந்த கட்சிகளை பட்டியலிட்டு விமர்சிக்க முடியுமா ?

    • இந்தக் காதல் பிரியணும்னு நினைச்ச கட்சிகளும், இந்தக் காதல் சேரணும்னு நினைச்ச கட்சிகளும் ஒண்ணா? உங்க லாஜிக்க ஈழத்திற்கு கொண்டு சென்றால் பிரபாகரனும், ராஜபக்சேவும் கூட ஒன்று என்று வாதிடுவீர்களோ?

      • ஏன்பா வினவு ..உலகத்திலே இது தான் முதல் காதல் மாதிரியும்..முதலில் பிரிச்ச காதல் மாதிரியும் பேசுரே??உனக்கு என்ன வேனும்???பாமக வை அழிக்கணுமா?உன்ன மாதிரி மொக்க்கை பசங்களாள அழிக்க முடியாதுடா வெண்னை..நீயும் உன் அள்ளக்கைகளும் எழுதிக்கிட்டே இருங்க நாங்க வளர்ந்துகிட்டே இருக்கோம்..

        • வளந்துகிட்டே இருப்பீங்களா.. வெண்ணெ வன்னிய மக்கள் ஒங்களை பொளந்துகிட்டே இருப்பாங்கடி.

          • சரி அதுக்கு நீ ஏன் இன்னொருத்தன் பெயரில ஒளிந்து கொண்டு தொடை நடுங்குற ..

            • சொந்தப் பேர்ல வந்தா இவரு அப்படியே கிழிச்சிருவாறு, மொதல்ல போய் நீயும் ஒங்க அண்ணன் சீமானும் ராமதாஸ் டவுசரை கிழிங்கடா.

          • சரி வன்னிய மக்களுக்கு அவ்வளவு பயமா ? இப்பிடி தொடைநடுங்கிறே.

            • அட பேரிக்கா பேரிக்கா, என்னா சும்மா வன்னிய மக்கள் வன்னிய மக்கள்னு பேசிக்கிட்ருக்க, வன்னிய உழைக்கும் மக்கள் எல்லாம் எப்பவும் எங்க பக்கம் தான்டி, ராமதாசு, காடுவெட்டி குரு, அன்புமணி எல்லாப்பயலுகளுக்கும் வன்னிய மக்களே பால் ஊத்துவாங்க பாத்துக்கிட்டே இரு.

              • நான் பேசலை . நீதான் உன் பின்னூட்டத்தில் பல தடவைகள் அந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறாய்.

                பயந்து நடுங்குகிறாய். அதனால்தான் கட்டுரயின் தலைப்பில் பயம் , பயம் என சொன்னாயா ?

      • இரு குடும்பங்களுக்கிடையேயான காதல் விவகாரத்தில் அவர்கள் சொந்த பந்தங்களோடு பேசி தீர்த்திருக்க வேண்டிய இடத்தில் சிறுத்தைகல் தேவையில்லாமல் தலையிட்டு அரசியலாக்கிதன் விளைவுதான் இது .

        இதை நான் சொல்லவில்லை இளவரசன் குடும்பத்திரே இதை சொல்கிறார்கள் என்பதை வினவு புரிந்து கொள்ள வேண்டும்.

        • அதே போல இந்த பிரச்சினையில் வன்னிய சாதிவெறியர்களான ராமதாஸ், காடுவெட்டி குரு கும்பலின் பெயரை உச்சரிக்க கூட பயந்து போய் சீமான் தொடை நடுங்குவதை பர புரிந்து கொள்ள வேண்டும்.

          • இளவரசன் குடும்பத்தினர் ஒருபோதும் பாமகவையோ அல்லது ராமதாஸையோ காரணமாக சொல்லவில்லை .

            அவர்கள் சிருத்தைகளையும் , திருமாவையுமே காரணமாக சொல்கிறார்கள்.

            அப்படி இருக்க சீமான் எதற்கு அவர்களது பெயரை உச்சரிக்க வேண்டும்.

            நீ உனது சொந்த பெயரையே உச்சரிக்க திராணியற்று வேறு பெயர்களில் ஓளிந்து கொண்டு ஊளையிடுகிறாய்…..

          • இளவரசன் குடும்பத்தினரே பாமாக வைப்பத்தி எதுவும் சொல்லாதபோது உனக்கென்ன வந்தது ?

            குடுபத்தினருக்கு இல்லாத அக்கறை உனக்கெதுக்குடா பாடு…

            • அண்ணன் வாடா போடா பாடு என்றெல்லாம் பேசுகிறீர்கள், இவை எல்லாம் உங்கள் தலைவர் செந்தமிழன் சீமான் சொல்லிக்கொடுத்த இனிய தமிழ்ச் சொற்களா ?

              தன்னை வீரன் சூரன் செந்தமிழன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு எந்நேரமும் ஒரு கையை மேலே தூக்கிக்கொண்டே திரியும் சீமானுக்கு, வெத்துவேட்டான ராமதாசை விமர்சிக்கக் கூட தைரியம் இல்லை என்றால் சீமான் என்னா ஒரு வீரன், என்னா தமிழன் ? இப்படி கேக்கனும்னு உங்களுக்கு தோனவே இல்லையா பர.

              உங்க தலைவர் ராமதாசை இப்படி மறைமுகமா ஆதரிக்கிறதுக்கு பதிலா தமிழ் வீரத்துடன் தைரியமாக ஆதரித்து பேசலாமே எதுக்கு இந்த கோழைத்தனம்.

      • உங்கள் கணக்குபடி காதல் பிரியவேண்டும் என்ற கட்சி பா.ம.க,காதல் சேரணும்னு நினைச்ச கட்சி விடுதலை சிருத்தை (திருமா).

        இளவரசன் பக்கம் என்னதான் தவறு செய்திருந்தாலும் அதை நியாயப்படுத்தும் (வி.சி). வினவு. ஏன் என்றால் நீங்கள் தலித் ஆதரவாளர்கள்.நடுநிலை ஊடகம் இல்லை.

        • சாதிவெறியர்கள் பக்கம் நின்றால் அதை நடு நிலை என்று சொல்லலாம், அல்லது சீமானைப் போல சாதிவெறியர்களின் பெயரை உச்சரிக்காமல் இருந்தாலும் கூட அதை நடு நிலை என்று சொல்லலாம் அந்த வகையில் வினவு நடுநிலையானது அல்ல ஒரு சார்பானது தான், பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் தான் நிற்கும்.

      • // இந்தக் காதல் பிரியணும்னு நினைச்ச கட்சிகளும், இந்தக் காதல் சேரணும்னு நினைச்ச கட்சிகளும் ஒண்ணா? //

        இரண்டு தரப்பிலும் இருந்தவர்களுக்கு இந்த காதல் திருமணம் வெற்றி பெற வேண்டும் என்பதை விட தான் வெற்றி பெற வேண்டுமென்ற ஈகோதான் இருந்துச்சுன்னு நான் சொல்றேன் நீங்க என்ன சொல்றீங்க ? ஈழத்தை ஆதாயமாக தலைவர் பார்த்து இருந்தால் முதலமைச்சர் பதவி அது இதுன்னு வாங்கி கிட்டு சமரசமா போயி இருப்பாரே வினவு ? விசிக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கட்சி என்பதை வினவு ஏற்றுக் கொள்கிறதா என்ன ?

  21. ஒரு ஊர்ல…. ஒருத்தன் இருந்தான்….என்ற கதையை சொல்ல மைக் பிடித்து எங்களுக்கு கடுப்பை ஏத்தாத சீமான் அவர்களே.வாய் சவடாலில் வைகோ வை வெல்லவா?

  22. வினவு ஒரு விஷ கிருமி. தன்னை போலவே அனைவரும் சிந்திக்க வேண்டும் என்று தன் எண்ணத்தை மற்றவர்மேல் திணிக்கிறது.

    வழக்கம் போல் இந்த விஷ கிருமியும் பின்னால் அரைவேக்காடுகள். எவனுக்காவது அடிமையாகவே இருந்து பழக்கப்பட்ட எண்ணத்தை மாற்றுவது கடினம். புரட்சி முதலில் இங்கு இருந்து ஆரம்பிக்கவேண்டும். வினவை புறக்கணியுங்கள்.

    • நாமெல்லாம் வன்னியர்லே என்று கூறும் சாபதாசுக்கும்
      நாமெல்லாம் தமிலர்லே என்று கூறும் சீமானுக்கும்
      நாமெல்லாம் இந்து மதம்லே என்று கூறும் ராமகோபாலனுக்கும்
      நாமெல்லாம் இசுலாதுலே என்று கூறும் கூட்டத்திற்கும்

      வினவுவிருகும் சற்றே வித்தியாசம் உள்ளது . கூர்ந்து கவனியுங்கள்

      • ராமா, நீங்க சொன்னதிலே சிலதை உங்க வசதிக்கு விட்டு புட்டீங்களே

        நாமெல்லாம் இந்தியர்லே என்று சொல்லும் இந்தி (ய) வெறியர்களுக்கும்

        நாமெல்லாம் தலிதிலே என்று சொல்லும் திருமாவுக்கும் , சிருத்தகளுக்கும் ,கிருஷ்னசாமிக்கும்

        நாமெல்லம் கம்யூனிஸ்டுகள்லே என்று கொடி தூக்கும் கம்யூனிச்டுகளுக்கும்

        நாமெல்லாம் சமூகப்போரளிகள்லே என்று சொல்லி கொண்டே இனத்துக்குள் சாதி மோதலகளை உருவாக்கி இரத்தம் குடிக்க இருக்கும்நரியை போன்றவர்களுக்கும்

        வினவுக்கும் சற்றே வித்தியாசம் ஏதும் இருக்கிறதா ?….?…?….?

    • அட லூசு உனக்கு என்ன பெரிய மாமண்ணர் என்று நினைப்பா ? வினவை புறக்கணியுங்கள் என்று இவர் உத்தரவிட்டதும் எல்லோரும் புறக்கணித்துவிடுவார்களாம், முதல்ல தூக்கத்திலிருந்து எந்திரிய்யா. இது தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத இணையமாகி பல ஆண்டுகளாகிவிட்டது. போய் ராமதாசு கும்பல பத்திரமா இருக்கச் சொல்லு வினவு தோழர்கள் தான் இந்த கும்பலுக்கு ஒரு முடிவு கட்டப் போறாங்க.

      • அடடே அப்படியா ?

        தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியா ? புல்லரிக்குதண்ணெ

        காமேடி கீமெடி பண்ணலியே ?

        வினவு ஒரு இணைய தள துக்ளக் என்று சொல்லலமென்று பார்த்தால் வினவுவும் அதன் தோழர்களும் அத்ற்கும் லாயக்கில்லாதவர்கள்..

        • அப்புறம் ஏன் தம்பி உன் தொடை நடுங்கி அண்ணன் சீமானுக்காக இவ்வளவு மல்லுக்கட்டிக்கிட்ருக்க. அப்புறம் எனக்கு தெரிஞ்சி என்னோட நண்பர்கள் மட்டுமே இந்தப் பதிவை மின்னஞ்சல் மூலம் இரண்டாயிரம் பேருக்கு மேல் அனுப்பியிருக்கிறார்கள். இது சும்மா ஒரு தகவலுக்காகத்தான் சொல்றேன்.

          • ///நண்பர்கள் மட்டுமே இந்தப் பதிவை மின்னஞ்சல் மூலம் இரண்டாயிரம் பேருக்கு மேல் அனுப்பியிருக்கிறார்கள்.///

            கேக்குறவன் அரவேகட இருந்த எலி கூட bullet ஓட்டுமாம்…

            • நீங்க அரவேக்காடா இருக்கலாம் அதுக்காக இது உண்மை இல்லைன்னு ஆகிடாது ராஜ்.

          • ஆமா அந்த இரண்டாயிரம் பேரும் அடுத்த தேர்தல்ல இந்த தவிர்க்க முடியாத சக்தியோடு சேர்ந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திடுவாங்க…

      • அப்ப வர எலெக்ஷன்ல வினவு தளம் மிக பெரிய ஆட்சி மாற்றத்தை கொண்டு வர பொகுது.நீங்க சொல்றத பார்த்தா கோழி கூவி தான் பொழுது விடியுதுன்னு சொல்லுவீங்க போல.நல்ல காமெடி.

    • திரு unmai,உங்களைப் பின்பற்ற உங்களிடம் என்னென்ன உள்ளது? பட்டியல் தாருங்கள்.வினவை புறக்கணிக்க அதன் பிறகு பார்க்கலாம்.

  23. // ஆம், நண்பர்களே! சீமான் பெருமையுடன் இலவசமாக அளிக்கும் தமிழ் தேசியம் என்பது ஆதிக்க சாதி கண்டிசன்ஸ் அப்ளைக்கு உட்பட்டது. //

    தமிழ் தேசியம் இப்படி என்றால் திராவிட தேசியம் எப்படியோ..?!

    தமிழ் நாட்டு மார்க்ஸ், புரட்சியாளர் பெரியார் அன்று காட்டிய வழி.. :

    கேள்வி : திராவிடர் கழகத்தில் ஆதி திராவிடர்கள் சேர்வதால் அவர்களுக்கு என்ன நன்மை?

    தமிழ் நாட்டு மார்க்ஸின் பதில் : ஆதி திராவிடர்கள் சேர்வதால் திராவிடர் கழகத்துக்கு என்ன நன்மை ?

    – ஜூன் 1948, தி.க. மாநாடு , பசுமந்தூர், வட ஆற்காடு

    வினவு, கீழ்வெண்மணி படுகொலைக்கு தங்களது தன்னிகரற்ற தலைவர் பெரியார் ஆற்றிய எதிர் வினையைப் பற்றி தங்கள் கருத்து என்ன..?!!!

  24. சரி சீமான் நேரடியாக பாமகவை கண்டிக்கவில்லை அதனால் வினவுக்கு பொத்துக்கொண்டு வந்து விட்டது.

    சரி ச்நான் கேட் கிறேன் , மரக்காணத்தில் நடந்த வன்முறையில் கொல்லப்பட்டவர்களுக்கு வினவு ஏன் அனுதாபம் தெரிவிக்க வில்லை ?

    கொலைக்கு காரணமானவர்களை ஏன் கண்டிக்கவில்லை ?

    யாருக்கு பயம் ? அங்கு வன்முறை நிகழ்த்திய சாதியினருக்கா ? விடுதலை சிருத்தைகளுக்கா ? திருமாவுக்கா ? ஜான் பாண்டியனுக்கா ? டாக்டர் கிருஷ்ணசாமிக்கா ?

    சீமானை பொறுத்தவரை மரக்கணத்தில் படுகொலை செய்தவர்களையும் அவர் நெரடியாக கண்டிக்கவில்லை அதேபோல் இந்த தற்கொலைக்கு காரணமானவர் களையும்

    அவர்நேரடியாக கண்டிக்கவில்லை..பொறுப்பான ஒரு தலைவர் அப்படித்தான் இருக்க முடியும் . இது சென்சிட்டிவான சாதி பிரச்சனை . கண்டபடி அறிக்கை விட்டு சாதி மோதலை உருவாக்க கூடாது .

    வினவுவின் ஆக்கங்களையும் கருத்துக்களையும் பார்க்கும்போது த்மிழ் இனத்துக்குள் சாதி மோதலை மேலும் மேலும் தூண்டி விட்டு இரத்தம் குடிக்க துடிக்கும் நரியின் செயல் போலுள்ளது.

    • நாயக்கன் கொட்டாயில் தலித் மக்கள் வீட்டில் புகுந்து திருடிய வன்னியனை நீ கண்டிச்சியா, கண்ணகியையும் முருகேசனையும் பெட்ரோல் ஊத்தி கொழுத்தின வன்னிய சாதி வெறியர்களை நீ கண்டிச்சியா ? மாமல்லபுரத்துல கலவரம் பன்ன கூட்டம் கூட்னதே பா.ம.க வெறிநாய்கள் தான் அந்த வன்முறையில் சில வன்னியர்கள் இறந்தனர். அதற்கும் இந்த வன்னிய சாதிவெறியர்கள் தான் காரணம்.

      சீமான் ரெண்டையும் கண்டிக்கலைன்னா அதுக்கு காரணம் நாளைக்கு தேர்தல்ல நின்னு ரெண்டு பக்கமும் பொறுக்கித்திங்க வேணாமா அதனால தான் கண்டிக்கல.

      • மரக்காவ்ணத்தில் நடந்த படுகொலைகளை நீ கண்டிச்சியா ?

        அதுக்கு பதில் சொல்லு முதல்ல .

        கேள்விக்கு உன்னிட பதில் இல்லை ..

        வக்கணையா கேள்விக்கு மேல கேள்வி கேட்டு பிரச்சனையை திசை திருப்ப பார்கிற

        • கலவரம் உருவாக காரணமாக இருந்த ராமதாஸ், காடுவெட்டி கும்பலை நீ கண்டிச்சியா அதுக்கு பதிலைச் சொல்லுய்யா முதல்ல.

          சீமான் ரெண்டையும் கண்டிக்காததற்கு காரணம் தேர்தலில் நின்னு ரெண்டு பக்கமும் பொறுக்கித்தின்பதற்காக தான்.

          • கலவரம் உருவாக இரு தரப்பும்தான் காரணம் .

            ஒரு தரப்பை மட்டும் கண்டிக்க முடியாது..

      • ஏன் என்றால் நீங்கள் அதவு கொடுக்கும் சமுதாயம் இடத்தில தப்பு நடக்கவில்லை பாரு, தமிழ் மக்கள் எல்லா தமிழ் மக்கள் தான், அது எந்த சமுதாயம் மகா இருந்தாலும் சரிதான்…. கண்களை வைத்து முதலில் சீமான் சாதியை எதிர்த்து, ராமதாஸ், திருமாளவன் சாதியை எதிர்த்து பேசியதை you tube இல் இருக்கும் பரு முதலில்… பார்த்து விடு வந்து இங்கு புலம்பு முதலில்……….

      • ////நாயக்கன் கொட்டாயில் தலித் மக்கள் வீட்டில் புகுந்து திருடிய வன்னியனை நீ கண்டிச்சியா////

        சாதியைவைத்து பதிவு போடும் உன்னை எல்லாம் என்ன சொல்ல ???

        • நாயக்கன்கொட்டாயில், நத்தம் கிராமத்தில் தலித் மக்கள் சொத்துக்கலை வன்னிய சாதிவெறியர்கள் திருடினாங்களா இல்லையா ராஜ் அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க.

  25. இதுவரை இழவு வீட்டில் புர்ச்சி செய்துகொண்டிருந்தீர்கள் …………. சூடு ஆறிவிட்டது , இப்போது இவரையும் சாக்கடைக்கு அழைக்கிறீர்கள் . உங்கள் நோக்கம்தான் என்ன ? உங்களது ப்ளாக் எப்பொழுதும் மக்கள் பார்வையிலேயே இருக்கவேண்டும் அப்படிதானே ? ஒரு இலவச ஆலோசனை …… உங்கள் ஆலோசனையை தஞ்சாவூர் கல்வெட்டுல வெட்டி வெச்சுட்டு பக்கத்திலேய உங்கந்துக்கங்க .

  26. //நாமோ இந்த பார்ப்பனிய மதம், சமூகத்தை எதிர்த்து நின்ற மரபை பெருமையாகவும், வாரிசாகவும் கொள்வோம்.//

    உங்களின் அதே பாரம்பரியத்தில் வந்த, கருணாநிதி, வீரமணி போன்றவர்களும் , பின்வழியில் வந்தாலும் அந்தப் பாரம்பரியத்துக்கு தலைமை தாங்குகிற ஜெயலலிதா போன்றவர்களும், ஏனைய திராவிட வீரர்களெல்லாம் பாமக வின் மீது போர் தொடுப்பபதற்கு எப்போதோ தண்டோரா போட்டு விட்டது போலவும், சீமான் மட்டும் தான் படையனுப்ப மறுத்து விட்டார் போலவும் அல்லவா இருக்கிறது உங்களின் கதை. பல உயர்மட்ட அரசியல் தலைவர்கள் மெளனம் சாதிக்கும் பொது சீமானை மட்டும் தாக்குவதேன். 🙂

      • அடுத்தவன் சொல்லுவதற்கு முன்னால் நீ இடத்தை கலி பண்ணு முதலில் வெங்காயம்

        • உங்களை நான் காலி பன்ன சொல்ல மாட்டேன் ராஜ் நாம் நல்ல முறையில் விவாதிப்போம்.

    • ஏன் என்றால் அவர் தான் அனைவரையும் தமிழர் என்கிறார். ஆனால் ஒரு தரப்பு தமிழர் இன்னொரு தரப்பு தமிழர்களை கொல்லும் போது கொன்ற தரப்பு தமிழர்களைப் பற்றி பேச மாட்டேன் என்கிறார் அதனால் தான் அவரைப் பற்றி பேச வேண்டியுள்ளது.

      • சாதி பெயரை சொல்லி அடிதுகிட்டு சாவும் முட்டாள் களுக்கு எதுக்கு குரல் கொடுக்கணும், சொல்லி பார்த்து திருந்த வில்லை என்றால் என்ன….. நீ முதல சாதி சாதி பதிவு போடுவதை முதலில் நிறுத்து

        • சாதிப் பேரைச் சொல்லி ரெண்டு தரப்பும் சண்டை போட்டுக்கலை ராஜ் ஒரு தரப்பு தான்நாங்க ஒசந்த சாதின்னு சொல்லி மற்றவர்களை ஒடுக்குது, கொள்ளையடிக்குது, கொலை பன்னுது. அதனால அப்படிப்பட்ட ஆதிக்க சாதியை சீமான் ஏன் கண்டிக்கலைன்னு தான் கேக்குறேன்.

  27. உங்கள் பக்கம் இருந்தத …………… சிலர் சீமான் பக்கம் போய் விட்டதால் வந்த ஆத்திரம் இது………………. மேலும் யார் புர்ச்சி செய்வதில் பெரியவர் …. என்று வந்த போட்டியில் அவரை வீழ்த்த வாய்ப்பு தேடுகிறீர்கள் . அவர் ” கக்கூஸ் போனேன்” என்று சொன்னாலும் ” எந்த கக்கூஸ் போனாய் இந்தியனா ……..? வெஸ்டேர்ன் கக்கூசா” என்று கேட்பிர்கள்.

  28. வினவு சிமானை பற்றி கவலைப்படவேண்டாம்! இந்த மாதிரி மனிதர்கள் உதாசீனப்படுத்தப்பட வேண்டியவர்கள் ! வினவோடு எனக்கு நிரம்ப முரண்பாடு உண்டு ! மிகக்குறந்த அளவேனும் ஒரு இடதுசாரி பார்வை கொண்ட நீஙகள் நடிகர்கள்யும் சீமான் போன்றவர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்கலமே!—காஸ்யபன்.

  29. வினவு பாமக வை மறைமுகமாக வளர்க்கிறது..வன்னிய சொந்தங்களை எல்லாம் ஒன்று கூட வைக்கும் வேலைக்கு வினவுக்கு நன்றி..காய்ந்த மரம் தான் கல்லடி படும்..தமுமுக என்று ஒரு கட்சி திமுக விற்கு அள்ளக்கையாக மாறியதை பற்றி பேச முடியலயா கையாலாகத வினவு???முஸ்லிம் அல்லாதவரை முஸ்லிம் அக மாற்றி திருமணம் செய்வது மதவெறி அதனால் மதவெறியன் வினவு சாதி வெறியை கையில் எடுத்துக்க்கொண்ட கையாலாகாத கூட்ட்ம்..

    • சாதி பெயரை பேருக்கு பின்னாடி வச்சிக்கிட்ருக்கிற நீ எல்லாம் கேள்வி கேட்காத வாய மூடு.

          • கேள்வி கேபவரை சாதிகு துணை போறவர்கள் என்று சொல்லும், முட்டாள்கள்……..

            • தலித் மக்கள் மீது நாம் தமிழர்களுக்கு இருக்கும் வன்மம் வெறி அனைத்தையும் நமது பரயிடம் பார்க்க முடிகிறது.

              • பிற்படுத்தப்பட்டவர்களிடம் உங்களுக்கு இருக்கும் வெறி தங்களது ஒவ்வொரு பதிலிலும் அப்பட்டமாக தெரிகிறது.

                இந்த வெறிதான் மரக்காணம் படுகொலைகளுக்கு காரணம்..

    • புண்ணாக்கு விக்கிறவனெல்லாம் தொழிலதிபர்னு சொல்லிக்கறாங்கப்பா. இந்த ஒரு ஓட்டை வச்சிகிட்டு ராமதாசு ஜெவிச்சி, கோட்டைய பிடிச்சி.. அடப் போங்கப்பா டயர்டாக்காதீங்க.

      • ஒண்ணொண்ணா பத்து வரும் பத்து பத்தா நூறு வரும்,நூறு நூறா ஆயிரம் வரும் ,

        ஆய்ரம் ஆய்ரமா லட்சம் வரும் , லடசம் லட்சமா தொகை வரும்…

        அடப்போடா …

        • // ஒண்ணொண்ணா பத்து வரும் பத்து பத்தா நூறு வரும்,நூறு நூறா ஆயிரம் வரும் ,

          ஆய்ரம் ஆய்ரமா லட்சம் வரும் , லட்சம் லட்சமா தொகை வரும்…//

          ஆமாம்.இப்பதான் வானூர் வட்டாட்சியர் ‘ஒரு’சம்மன் கொடுத்திருக்கிறார்.

          சம்மன்தான்,ஒண்ணொண்ணா பத்து வரும் பத்து பத்தா நூறு வரும்,நூறு நூறா ஆயிரம் வரும் ,

          ஆய்ரம் ஆய்ரமா லட்சம் வரும் , லட்சம் லட்சமா வரும்…

      • ஒரே ஒரு ஓட்டு வைத்திறுப்பவரையா கலவரத்தை தூண்டினார்,அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தினார் என்று பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்கள்.
        தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து. அதை மேலிடம் ரத்து செய்தும் திரும்பவும் அதே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்கிறார் தமிழக முதல்வர் ஜெயா….

        அடடா… இது தெறியாம போச்சே..

  30. தற்கொலை செய்யும் முன்பு எழுதியதாக வெளியிட்ட இறுதிக்கடிதத்தில் கூட பா ம க குறித்து எந்த புகாரும் இல்லையே.. அதை எழுத அவருக்கு என்ன பயம் இருந்திருக்க முடியும்..?

  31. நல்ல சாதியினர் அனைவரும் தங்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயரை சேர்த்துக்கொள்ள ஆரம்பிக்க வேண்டும்.

    ராசு
    ராசு படையாச்சி.
    Anonymous
    Anonymous Padaiyachi

    ஆஹா இவ்வளோ நாளை இந்த அழகான பெயர் உபயோகபடுத்த படவில்லையே …

    சாதி உணர்வை தூண்டியதற்கு வினவு பொறுப்பு.

    • அண்ணே, உலகத்திலேயே ஒசந்த சாதிகள் டாபர்மேன், டால்மேஷன், லேப்ரடார், அல்சேஷன், புல் டாக், பொமரேனியன் etc.,

      எனவே உங்க பேரை இனிமே மனிதன் டாபர்மேன், தாமராசு டால்மேஷன், சொம்புமணி அல்சேஷன் என்று பெருமையாக போட்டுக் கொள்ளலாமே?

      • அடேயப்பா கடவுலே சொல்லிடாரு… அடுத்த சாதியோடு கலக்க (திருமணம்) சாதியில்லை என்று சொல்லும் நீங்கள். அரசாங்க சலுகையில் மட்டும் சாதி வேண்டும் என்றாள் என்ன நியாயம்?

    • மனிதனாக இருந்து அப்படியே வளர்ச்சி குன்றி பின்னோக்கி விலங்கு நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறார் என்று புரிந்துகொள்க.

      • அப்படிப்பட்டவர்கள்தான் மரக்காணத்தில் அப்பாவி மக்கள் மீது வீரத்தை காட்டியவர்கள்..

  32. I sincerely loves my neighbor’s wife. She is also loving me truly. But she has children with her husband. If she is met me before her marriage we will be get it married. Unfortunately that is not happens. We are ready to ‘run-away’ but the whole world would says that it is ill-legal affair. Vinavu has to write an article to legalize ill-legal affairs for the sake of true love. Now-a-days man can fall in love with man and woman can fall in love with woman and they can live-togather. So I sincerely and seriously request to vinavu to advocate for ‘free-sex’ (please, don’t be misunderstand sex for free of cost)along with Communism and Socialism.

    • reveal you name and identity Mr.Coward. What you are doing is illegal and subject to punishment and jail sentence.

      If you mean to say loving all upper caste girls are extra marital affair, do you also say that all the so-called upper caste women are married right from their birth? by this argument you are trying to degrade whom? Moron. get a life & get away

  33. திருவாளர் சீமார் போன்ற அட்டுப் பீசுகளுக்குக் கூட ரெண்டு காமெடி பீசுகள் ஆதரவாக உள்ளார்கள் என்பது ஆச்சர்யமாய் இருக்கிறது.

    அது என்னாங்கடா தமிழ் வீரம்…? உலகத்துல வேற எவனுக்குமே வீரமே இல்லையா? தமிழனுக்கு மட்டும் தான் காதல் வருமா, மித்தவனுக்கெல்லாம் வெங்காயமா வரும்? தமிழுக்கெல்லாம் அப்புறம் வரலாம், முதல்ல நேர்மைன்னா என்னான்னு பழகிட்டு வாங்க. ஒரு தமிழ்நாட்டுக்காரன் ‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றமே’ன்னு சிவனைப் பார்த்தே சொன்னான். எங்கே, உங்க சீமாரை அதே வசனத்தை ராமதாஸ் பேரைச் சொல்லி சொல்லச் சொல்லுங்க பார்க்கலாம். ராமதாசையும் வாண்டையாரையும் பார்த்தா வாலைச் சுருட்டி பின்புறமாக சொருகிக் கொண்டு ஓடுவது தானா தமிழ் வீரம்?

    திருவாளர் சீமாருக்கு இருக்கும் தமிழ் பற்று தான் ஊரே நாறுதே.. படம் எடுத்து சம்பாதிக்க சிங்களச்சி ஹீரோயினா வேணும், அரசியல் நடத்தி பொறுக்கித் தின்ன தமிழ் உணர்வா? மேடைல நின்னு ‘ஏய் ராஜபக்சேன்னு’ கூவும் போது வீரம் பொங்குமாம், விஜயலட்சுமின்னு சொன்னதும் பொசுக்குன்னு போகுமாம். யாரு காதுல பூ சுத்தறீங்க?

    • ராமதசையும் வாண்டையரையும் ஏன் திட்ட வேண்டும் ?

      எதுக்கு வாலை சுருட்ட வேண்டும் ?

      வெவ்வேறு சாதி தலைவர்கள் தமக்குள் மோதிக்கொள்ள வேண்டும் . சாதிக்கலவரங்கள் உருவாக வேண்டும் . தமிழர்கள் தமக்குள்ளெ வெட்டி க்கொண்டு சாக வேண்டும்

      அதுதானெ தங்களது ஆசை ?

      இரத்தம் குடிக்க இருக்கும் நரியே உங்களை விட மேலானது …

      • உழைக்கும் மக்களை சாதிவெறியூட்டி இரத்தம் குடிக்கும் ஓநாய்கள் பா.ம.க ராமதாஸ் கும்பல் தான் என்பது முற்போக்கு சக்திகள் அனைவரும் அறிந்தது, ஆனால் அந்த சாதிவெறி கும்பலை கண்டிக்க உங்க புடலங்காய் தலைவருக்கு வக்கில்லை இந்த லட்சணத்துல நாம எல்லோரும் தமிழர்கள் என்கிறார் உங்க புண்ணாக்கு தலைவர், விட்டேன்னா உங்க தலைவரு எங்க போய் விழிவாருன்னு எனக்கே தெரியாது தம்பி.

        • அதையேதான் வினவுவும் உன்போன்றவர்களும் வேறு சாதி சார்பாக செய்து வருகிறீர்கள்.

          • வினவு ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கும் வன்னிய சாதி மற்றுமுள்ள அனைத்து சாதி உழைக்கும் மக்களுக்கும் ஆதரவான தளம், அப்படி இருக்கையில் வினவு எப்படி சாதிவெறியை தூண்டும் ? சீமானை காப்பாத்த எவ்வளோ கஷ்டப்பட வேண்டியிருக்கு இல்ல.

            • “””ஒருவேளை இளவரசன் எனும் தலித் இளைஞர் திவ்யா எனும் வன்னியப் பெண்ணை காதலிக்காமல் தனது சாதிக்குள்ளேயே யாரையாவது திருமணம் செய்து வாழ்ந்திருந்தால்””” இது என்ன பதிவு??? சாதிகளை எதிரும் லெசனம் இதுதன்ன ????

            • சீமானை காப்பற்ற எதற்கு கஷ்ட படனும்…. சாதியை குறித்து சீமான் தொடர்ச்சியாக தான் பதிவு செய்து வந்து கொண்டு இருக்கிறார்…. சரியாக கண்களை வைத்து you tube இல் தேடி பாருங்கள் தெரியும்

              • சாதியைப் பத்தி பொதுவா பேசலாம் ராஜ் ஆனா ஆதிக்க சாதிவெறின்னு குறிப்பா பேசனும். அப்படி ஏசனும்னா அதுக்கு தைரியம் வேணும் அந்த தைரியம் மேடையில உதார் விடும் சீமான்கிட்ட இல்ல கம்யூனிஸ்டுகள்கிட்ட அந்த துணிவு இருக்கு.

            • அப்படியா….?உங்களுக்கு , வினவு க்கு selective memory loss ன்னு கருதுகிறேன் . வன்னிய சாதி வெறி , தேவர் சாதி வெறி, கவுண்டன் சாதி வெறி , பார்பனன் சாதி வெறி என்று எழுதிவரும் வினவு, என்றாவது ஒரு நாள் தலித் சாதிவெறி என்று எழுதியது உண்டா…..? ஆணித்தரமாக சவால்விட்டு கூறுகிறேன் ஒரே ஒரு முறை தலித் சாதி வெறியை பற்றியும் அதனை தூண்டிவரும் கட்சிகளை பற்றியும் கட்டுரை எழுத முடியுமா?……………. நீங்கள் கம்யூனிசம் என்று கூறிக்கொண்டு தலித்திய சாதி வெறியைத்தான் தூண்டிவருகிறீர்கள்………….. யாராவது எதிர்த்து கேட்டல் எதாவது ஒரு சாயம் பூசி அசிங்கப்படுத்தும் வேலையத்தான் இதுவரை செய்து வருகிறிர்கள் .

              • நல்லுசாமி: வினவைப் பொருத்தவரை அவர்களே ராஜா, அவர்களே மந்திரி…நாம் எவ்வளவு அவர்களைப் பிரித்தெடுத்தாலும், தவறைச் சுட்டிக் காட்டினாலும் அவர்கள், தாங்கள் நினைத்ததைத் தான் எழுதப்போகிறார்கள்…மான அவமானங்கள் இல்லை என்பதாலும், மற்றவர்களைப் பிரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் இருப்பதாலும் அவர்களைத் திருத்த முடியாது…

                எவராலும் அவர்கள் எழுதுவதைத் தடுக்க இயலாது..!! பின் ஏன் அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்?

                • பதில் சொல்ல வேண்டியது வினவு தோழர்கள் அல்ல, வினவு கேட்டிருக்கும் கேள்விக்கு நாம் தமிழர் தம்பிகளும் அண்ணண்களும் தான் பதில் சொல்ல வேண்டும்.

              • சாதி சாயமா ? நல்லுசாமி சீமான் தான் ஆதிக்கசாதிக்கு ஆதரவா நின்னுக்கிட்டு வாயத்தொறக்கமாட்டேங்கிறாரு அது தெரியலையா உங்களுக்கு, சாதிவெறியர்களுக்கு சப்போர்ட் பன்னிக்கிட்ருக்க பன்னாடைகளை பார்த்து ஏண்டா வாய மூடிட்ருக்கன்னு கேள்வி கேட்டா அதுக்கு பதில் சொல்லவர்றவனுங்க எல்லாம் வினவு அவதூறு செய்துன்னு ரொம்ப பெரிய யோக்கிய சிகாமணிகளாட்டம் பேசுறானுங்க. நாங்கள்ளாம் சாதி வெறியர்களை ஆதரிக்கத்தான் செய்றோம்னு பால்தாக்ரே மாதிரி வெளிப்படையா சொல்லிட்டு போய்த்தொலைய வேண்டியது தானே எதுக்கு இந்த அசிங்கத்துக்கு இவ்வளவு வெளக்கம்.

    • இலங்கை அரசும் அதன் படைகளும் தமிழர்ளை கொன்று குவித்தது . அதற்கு சிங்கள பெரினவாதமும் , இந்திய தமிழர் வெறுப்பு அரசியலும் உறுதுணையாக இருந்தது.

      அத்ற்காக சாதரண சிங்கள மக்களை வெறுக்க வேண்டியதில்லை .

      ஒரு நடிகை சிஙகள இனத்தை சேர்ந்தவர் என்பதற்காக அவரை படத்தில் சேர்க்க கூடாதென சொல்வது கடைந்தெடுத்த இனவெறித்தனம் .

      மன்னாரு தன்னை ஒரு இன வெறியராக நன்றாகவே இனம் காட்டி உள்ளார்.

      • சீமான் ராமதாசை விமர்சிக்க துணிவின்றி, துப்பின்றி இருக்கிறார் என்பதை முதலில் பாருங்க பாஸ் மத்தவங்களை அப்புறம் திட்டலாம்.

  34. நான் சொல்றேன், ராமதாசுன்னா சீமாருக்கு பயம் தான்… இல்லைன்னு நீ என்னா சொல்றது, சீமாரையே சொல்லச் சொல்லு பார்க்கலாம்.

  35. தன் கட்சிக்கு ஓட்டுப்போடலைன்னா நமிதாவை வைத்து படம் எடுக்க போயிடுவேன் என இரண்டு மாதங்களுக்கு முன்னர் சீமான் பேசியுள்ளதை பாருங்கள்….

    http://www.youtube.com/watch?v=PVmWL3HzgY0

    ஜெயாவிற்கு ஓட்டுக்கேட்ட சீமான், பாராட்டு விழா நடத்திய சீமான் ஜெயா,கலைஞர் உடன் கூட்டணி போவோரை கேவலமாக பேசுவது வெட்கக்கேடு.

    தேர்தல் பாதையில் பொறுக்கி தின்ன முடிவில்லை என்றால் நமீதாவை வைத்து படம் எடுக்க போயிடுவேன் என யோசிப்பவன் அறிவை, அரசியலை, வீரத்தை என்னவென்று சொல்ல முடியும்…?

    ***********

    அதே போல தேர்தல் குறித்த சீமான் பேச்சு இதோ….

    http://www.youtube.com/watch?v=nlYgguQOtJA

    தேர்தல் பாதை திருடர் பாதை என சொல்லிட்டு தேர்தல் ஜெயித்த ஆட்சியாளர்களிடம் விலைவாசியை குறை, ரோடு போடு என எப்படி கேட்க முடியும். கடவுள் இல்லை என்றுசொல்லிவிட்டு பின் கடவுளிடம் அதை கொடு இதை கொடு என கேட்பது போல உள்ளது எனவும் பிராபாகரன் கூட ஆயுதம் ஏந்தும் போதும் தேர்தலில் நின்றதை சுட்டிக்காட்டி தேர்தலில் நிற்கவேண்டிய அவசியத்தை கூறுகிறார்.

    இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம், 60 ஆண்டு தேர்தல் பாதை, சமூக மாற்றம் என எது குறித்தும் அடிப்படை அறிவு கூட இல்லாமல் பொத்தாம் பொதுவாக சீமான் பேசுவதை பார்க்கலாம்.

    சுப.வீ சிறையில் இருந்து வெளியே வ்ந்தவுடன் லெனின் புத்தகத்தை படித்தேன் , தேர்தல் பாதை சரி என முடிவு செய்தேன். அதனால் திமுகவுக்கு ஓட்டுக்கேட்கபோகிறேன் என இன்றுவரை திமுக என வெளிப்படையான தரகு முதலாளிக்கு கூஜா தூக்குவது போல சீமான் தான் பொறுக்கி தின்பதற்கு தமிழ் தேசம், நாம் தமிழர் என உதார் விடுகிறார்.

    • இலங்கை நிலைமை வேறு , இந்திய அரசியல் சமூக பிரச்சனை வேறு அது புரியாமல் இரண்டையும் போட்டு குழப்பி அடித்துள்ளீர்கள்.

      • \\இலங்கை நிலைமை வேறு , இந்திய அரசியல் சமூக பிரச்சனை வேறு அது புரியாமல் இரண்டையும் போட்டு குழப்பி அடித்துள்ளீர்கள்.\\
        இரண்டும் வேறு வேறு தான். மறுக்கவில்லை. ஆனால், உமக்கு இதயம் ஓன்று தானே. ஈழத்திற்கு ஆதரவாக துடிக்கும் உமது இதயம், ஏன் இளவரசன் போன்ற தமிழர்களுக்காக துடிக்க மறுக்கிறது. முத்துக்குமாரின் உடலுக்கு பின்னால் திரண்ட ஈழ ஆதரவாளர்கள் இளவரசன் பின்னல் அணி திரள மறுப்பதேன்? எங்கே வெள்ளையன்?

        • அதே இதயம்தான் மரக்காணத்தில் கொல்லப்பட்ட வர்களிடமும் இருந்தது.

          அதற்கும் நீங்கள் குறிப்பிட்ட நபர்கள் அணி திரளவில்லை .

          இப்போது கூப்பாடு போடும் உங்களுக்கும் அப்போது அது ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை…

          • யார் காரணம்னு சொன்னாத்தானே மக்கள் அணிதிரளுவாங்க, பொதுவா மக்கள் இல்ல வன்னிய மக்களே அணிதிரள்வாங்க ஆனா நீங்க தான் ராமதாசுக்கு பயப்படுறீங்களே நாம் தமிழர்.

      • இலங்கை வேற இந்தியா வேறன்னு எங்களுக்கு தெரியாதா பாஸ் ? அது வேற ஊரு இது வேற ஊரு தான், ஆனா ஒடுக்குமுறை ஒன்னு தானே நாம் தமிழர். அது இன ஒடுக்குமுறை இது சாதி ஒடுக்குமுறை.

  36. இலங்கை நிலைமை வேறு , இந்திய அரசியல்ல் சமூகநிலைமை வேறு .அதைக்கூட புரிந்து கொள்ளாமல் இரண்டையும் ஒன்றாகப்போட்டு குழப்பி அடித்துள்ளீர்கள்…

    • இலங்கை வேற இந்தியா வேறன்னு எங்களூக்கு தெரியாதா பாஸ் ? அது வேற ஊரு இது வேற ஊரு தான், ஆனா ஒடுக்குமுறை ஒன்னு தானே நாம் தமிழர். அது இன ஒடுக்குமுறை இது சாதி ஒடுக்குமுறை.

  37. வினவுவின் இந்த ஆக்கத்தையும் அதற்கு ஆதரவாக பின்னூட்டமிட்டு வருபவர்களின் ஒரே நோக்கம் இனத்துக்குள் சாதி மோதலகளை உருவாக்கி தமிழ் தேசியத்தை சிதைப்பதைத்தான் .

    இவர்கள் காதலுக்காவும் , காதலர்களுக்காகவும் , இளவரசன் மரணத்துக்காகவும் வடிப்பது முதலைக்கண்ணீர்.

    அந்த போலி கண்ணீருக்கு பின்னால் இருப்பது தமிழருக்குள் கலவரங்களை உருவாக்கி இரத்தம் குடிக்க காத்திருக்கும் நரியின் தந்திரம்தான்….

    • தலித் மற்றும் வன்னிய மக்களை மோதவிட்டு ரத்தம் குடித்த ஓநாய்கள் ராமதாஸ் காடுவெட்டி குரு கும்பல் தான் என்பது ஊரறிந்த உண்மை, வன்னிய மக்களே அங்கீகரிக்கிற உண்மை, அந்த உண்மையை பேச, அந்த ஓநாய்களின் பெயரைச் சொல்ல நாம் தமிழர்கள் என்று வேஷம் கட்டிக்கொண்டிருக்கும் முற்போக்கு நரிகளுக்கு பயமாக இருக்கிறதாம் இது தான் விஷயம்.

  38. // இனத்துக்குள் சாதி மோதலகளை உருவாக்கி தமிழ் தேசியத்தை சிதைப்பதைத்தான் //
    // தமிழருக்குள் கலவரங்களை உருவாக்கி இரத்தம் குடிக்க காத்திருக்கும் நரியின் தந்திரம்தான்….//

    திரு Para,இதை நீங்கள் பாமக இராமதாஸ்,காடுவெட்டி குரு போன்ற பாமக தலைமையிடம் கேட்பதுதான் 100 சதவிகிதம் சரியானது.கேட்பீர்களா?.

    • இளையோன் அவர்களே.

      உங்களுக்கும் நீங்கள் மேற்குறிப்பிட்ட தலைவர்களுக்கும் யாதொரு வித்தியாசமும் இல்லை…யாரிடம் கேட்டாலும் அது 100% சரியானதுதான்..

      • ராம்தாஸ் என்றால் தான் அவர்களுக்கு பயம் பயமாச்சே அப்புறம் எப்படி இளையோன் கேட்பார்கள்.

  39. சீனா ஆதரிக்கும் எந்த விசயத்தையும் கம்யுனிசம் ஆதரிக்கும்… சீமானின் மீதான கடுப்புக்கு அதுதான் காரணம்…

    சீமான் என்ன பிரபாகரனே அறிக்கை விட்டிருந்தாலும் எந்த தனி நபரையும் தாக்கும் வகையில் கடிதம் இருக்காது..

    திருமா அறிக்கை விட்டால் கூட அதிலும் தனி நபர் தாக்குதல் இருப்பதில்லை..

    தனி நபர் பெயரை விளித்து வெளியிடப்பட்ட அப்படி ஒரு அறிக்கையை உதாரணம் காட்ட முடியுமா?

  40. வினவு குழுவுக்கு ஒரு வேண்டுகோள்,தயவு கூர்ந்து ஒரு தலை பட்ஷமாக விமர்சனம் தரவேண்டாமே.ஐய்யா அவர்க்கும் தர்மபுரி சம்பவத்துக்கும் துலியும் சம்படந்தமில்லை.

  41. திருமாவளவன்,ஜான்பாண்டியன்,கிருஷ்ணசாமி போண்றோர் சமுகநீதி காத்த சுதந்திர போராட்ட தியாகிகள்..ராமதாஸ்,குரு சாதி வெறியர்கள்.செம காமெடி.இங்க ஜாதி அழிக்கணும்னு சொல்லும் எத்தனை பேருக்கு ஜாதி சான்றிதலை கிழித்து விட்டு கோட்டா இல்லாமல் படிப்பிற்கோ இல்லை வேலைக்கோ செல்லமாட்டோம் என்றும் அப்படி கோட்டாவில் படித்த படிப்பையோ இல்லை வேலையையோ உதறி தள்ள வீரம் இருக்கிறது???ச்செங்களுக்கு சிறுபாண்மையினர் என்ற கோட்டா வேண்டாம் என்று சொல்ல வினவு தோழற்களுக்கு தைரியம் இருக்கிறதா?தங்கள் மேல் இஸ்லாமிய சாயம் பூசாமல் இருக்க சாதி மோதலை மூட்டிவிடும் வினவுக்கு கூடிய விரைவில் மூடுவிழா இங்கு குமுறும் நண்பர்களே செய்வார்கள்…வினவுக்கு இந்தியர்கள் அனைவரும் அடித்து கொண்டு சாக வேண்டும்..அதற்கு முன்ணோட்டாம் தான் இந்த தலித் பாமக சாதி கலவரத்தை இணையத்தில் அவிழ்த்து விட்டு இருக்கிறது…வாழ்க வின்வு..வளர்க அவர்கள் சாதி சண்டை பணி..

    • சரியாக சொன்னீர்கள் .

      இங்கு மற்றவர்களால் கொடுக்கப்பட்ட பின்னூட்டத்துக்கு முதலில் வினவு எனும் பேரிலே மரியாதயாகவே பதில் அளித்தவர்கள் பின்பு இனிஷியல் தெரியாத ஒருவர் பேரில் காட்டமாகவும் வக்கிரமாகவும்ம் தமது புத்தியை காட்டியுள்ளார்கள்…

      • சாதிவெறிக்கு ஆதரவா யாராவது ஒருத்தர் சப்போர்ட்டுக்கு வந்தா போது நம்ம நாம் டமிலர் தம்பி பரக்கு ஒரே குஷி தான், எவ்வளோ சந்தோஷம் பாருங்க.

    • சரியாக சொன்னீர்கள் .

      இங்கு மற்றவர்களால் கொடுக்கப்பட்ட பின்னூட்டத்துக்கு முதலில் வினவு எனும் பேரிலே மரியாதயாகவே பதில் அளித்தவர்கள் பின்பு வைக்கொநெடுமா சீமான் எனும் பேரில் காட்டமாகவும் வக்கிரமாகவும் திட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

      • ஆதிக்க சாதிக்கு ஆதரவாக, ராமதாஸ் கும்பலுக்கு ஆதரவாக சரியாக ச் சொன்னீர்கள் அப்படின்னு சொல்லுங்க பர வாக்கியம் முழுமையா இருக்கும்.

        • நீங்கள் தொடர்ந்தும் வினவுவின் பேராலேயே எழுதலாமே . எதற்கு மூன்று பேர் முதுகுக்கு பின்னால் நின்று சன்னதம் ஆட வேண்டும்

          • நண்பர்களே, உங்கள் கருத்துக்கு எதிராக பேசுபவர்களெல்லாம் வினவு என்று சபிப்பதை விட கருத்து ரீதியாக விவாதத்தை தொடரலாமே! மேலும் நீங்களும், வைகோ நெடுமா பெயரில் உள்ள நண்பரும் கடுஞ்சொற்கள் சொல்லாமல் கருத்துக்களை மட்டும் முன் வைத்து விவாதிக்குமாறு கோருகிறோம். விவாதம் கருத்துக்களின் பால் நடப்பதை விட வசை சொற்கள் மூலம் நடப்பதால் யாதொரு பலனுமில்லை. நன்றி.

          • அட என்னய்யா சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டு… சீமான் ராமதாஸ் கும்பலுக்கு பயப்படுறாரா இல்லையான்னு மட்டும் சொல்லு அதை எவன் கேட்ட என்ன எந்த பேர்ல கேட்ட என்ன கேட்டதுக்கு மட்டும் பதிலை சொல்லு.

  42. காதல் என்பது இரு உயிரின் சுதந்திரம், அது இரண்டு குடும்பங்களால் கையாளப்பட்டிருக்க வேண்டியது.
    PMK utilized them for political reason, other political parties are playing safely by not affecting their name. But Two families lost their lives.

    Instead of making this to more complex and problematic, Let’s be with humanity and see how to help Divya family and Ilavarasan family to overcome from this issue.

    Be clear not to allow any political or third person to interfere personal life of any one in the world.

    • தமிழன் தமிழ்ன் என கொக்கரிக்கும் இந்த சீமான் தமிழர்களுக்கு ஒரு இடர் வந்தா தாங்க மாட்டார்., ஆனா தமிழர்கள் சாதிப் பெயரால் அடிச்சுக்கிட்டு செத்தா விட்ருவாரு…ஏனா இவரு தமிழனை தமிழன் என்று பிரிப்பதே சாதிகளீன் பெயரால்தான்.இவரு ஈழதுக்காக கட்டுன படை ஈழ தமிழர்க்ளுக்குதான் சொரியும்.,தமிழ்நாட்டுல என்ன வந்தாலும் சொரியாது….

  43. சிமான் பத்தி இவ்வளவு வு பேச்சா??… யார் இந்த சீமான்?. பேசும் போது தேவை இல்லாமல் கத்தும் நபர் தானெ இவர்….

    • Ammam pa!!! edhukku andha aala pathi ivlo periya post!!! andha aalu (seeman) ellam oru mattere illa enna minju pona oru 0.1% vaanguvaara 234 constituencyum serthu edhukku andha aala pathi pesi time and internet waste panranga nu theriyalla

  44. அவரை பெரிய ஆள் ஆக்கியே தீர வேண்டும் என்று வினவும் அதன்ன் நண்னபர்களும் முடிவு கட்டி விட்டார்கள்

  45. அரிப்பாளர்களே உங்களுக்கு மார்க்சிசத்தை தவிர வேற எதுவும் வராது ! தமிழன்னு சொன்னா நொல்லன்னுவீங்க ! சரி நீங்கதான் ஏதாவது கலட்டுவீங்கன்னு பார்த்தா அகில இந்திய புரட்சி பேசி போகாத ஊருக்கு வழி சொல்லுவீங்க !

    • எனக்கு எல்லாம் தெரியும் என வினவு அவர்கள் எங்குமே மார்தட்டிக்கொண்டதில்லை. மார்க்சிய முறைப்படிதான் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. கொஞ்சம் பொறுமையாக வாசித்துப் பாருங்கள்.

    • யாரப்பா அது சரியான ஊருக்கு போர ஆளு….

      ,உங்களுக்கு மார்க்சியம் தெரியுமா?…
      ,
      தெரிந்தால் அதை மறுக்க உங்களால் முடியுமா?….

      மார்க்கசியத்தை தவிர நீங்கள்தான் ஒரு வழி சொல்லுங்களேன் உலகதின் ஒடுக்கப்படும் ம்க்களுக்காக…,

      விவாதிக்க ஜனனாயகமாக தயாரா?….,

      வின்சென்ட் நான் உஙகள் உணர்வை தவறு சொல்லவில்லை….ஆனால் எந்தவித அரசியல் போராட்டதிற்கும் மார்க்சிய அறிவியலே சரியானது…,சீமானை மார்க்சியம் தவறு என்று பேசச்சொலுலங்கள்…முடியாது ஏன் சரி என்று கூட பேச மாட்டார்… வெறும் பிழைப்புவாதி……புரிந்துகொள்ளுங்கள்.

      • தோழரே ஜனநாயகமாக விவாதிப்போம் வாருங்கள் .மார்க்சியம் உழைக்கும் மக்களின் விடுதலைக்கான தத்துவம் அதில் மாற்றுக்கருத்து இல்லை .ம க இ க வின் நிலைப்பாடு குறித்துத்தான் சிக்கலே .மார்க்சிய முகமூடி அணிந்த அனைவருமே புரட்சியாளர்கள் இல்லை .நான் என் இன மக்களின் விடுதலைக்காக போராடுகிறேன் .எம் இனத்தின் விடுதலைப்பொராட்டம் என்பது சோசியலிச தமிழ்தேசிய குடியரசை நோக்கியே . இதில் அகில இந்தியபுதியஜனநாயக புரட்சி சரியா ? தமிழ்தேசிய புரட்சி சரியா? என்பதே முரண்பாட்டின் துவக்கம்.

        • உழைக்கும் மக்களின் விடுதலைக்கான தத்துவமான மார்க்சியம் மக்களை அன்பார்ந்த உழைக்கும் மக்களே என்று வர்க்க ரீதியாக அணிதிரளச் சொல்கிறதா இல்லை அன்பார்ந்த உழைக்கும் தமிழர்களே என்று இனரீதியாக அணிதிரளச் சொல்கிறதா ? மக்களை நோக்கி அன்பார்ந்த என்று விளிக்கும் போதே வர்க்கக் கண்ணோட்டத்தை மறுத்து இனவாதத்தை முன்வைக்கும் தமிழினவாதிகள் மார்க்சியம் உழைக்கும் மக்களுக்கான தத்துவம் தான் என்று மார்க்சியத்திற்கு நற்சான்றிதழ் அளிக்கிறார்கள் என்றால் அதற்காக மார்க்சியம் பெருமைப்பட வேண்டும்.

          முகமூடி அணிதிருப்பவர்களின் உண்மையான முகம் தெரியாது என்பது அனைவரும் அறிந்த உண்மை தான். எனவே முகமூடி அணியாத உண்மையான புரட்சியாளர்கள் யார் என்கிற உண்மையை உண்மையான புரட்சியாளர்களை நேரில் தரிசித்த வின்செண்ட் செல்வா போன்றவர்கள் சொன்னால் தான் எங்களைப் போன்றவர்களும் தமிழக புரட்சியாளர்கள் யார் என்று அடையாளம் கண்டுகொள்ள இயலும்.

          புதிய ஜனநாயகப் புரட்சி தவறு என்று நீங்கள் எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்.

          • தோழரே மார்க்ஸ் உழைக்கும் தமிழர்களே ஒன்று சேருங்கள் என்று சொல்லவில்லை உண்மைதான் ,அதேபோல் உழைக்கும் இந்தியர்களே ஒன்று சேருங்கள் என்றும் சொல்லவில்லை , பன்மையை மறுக்கும் யாவும் ஏகதிபத்யமே!

        • தோழருக்கு நன்றி….சில கேள்விகள் …..னீங்கள் யாரிடம் தனிதேசம் கேட்கின்றீர்கள்.?…சரி உங்களுடைய குறைந்த பட்ச சுயனிர்ன்ணய உரிமை உங்களுக்கோ அல்லது இந்தியாவில் உள்ள வேறு தேசியயதுக்கோ சுதந்திரம் உண்டா….இல்லை உங்களை ஒடுக்குவது வேறு ஒரு தனிப்பட்ட தேசியமா?….அவ்வாறு இல்லை இந்தியா என்ற போலிக்கட்டுமானம்….இங்குள்ள பொளளாச்சி மகாலிங்கம்,தயானிதி,ராஜாதியம்மாள்,கனிமொழி,வைகோ, ஈழத் தாய் அம்மா,சீமான்,விஜயகாத்…,க்கும் தேவையாய் உள்ளது….இந்த கட்டுமானத்தை காப்பாற்ற வேண்டிய அவசியம் இவர்களுக்கு உள்ளதை போல்தான் மற்ற தேசிய முதலாலிகளும் இதை தாங்கிபிடிக்கிறார்கள்….என்வே இந்தியாவின் தேவை முதலாளிகளின் தேவையே….எனவே தேசிய முதலாளிகள் …..இவர்களின் கூட்டுதான் இந்திய அரசு..னிலமை இவ்வாறு இருக்கும் பொழுது பாட்டாளிகள் எப்படி தேசிய கோரிக்கை வைக்க முடியும்…..லெனின் வரையறை…தேசியம் என்பது எப்பொழுதும் முதளாலிகளின் கோரிக்கையே…சர்வ தேசியம் என்பதே பாட்டாளிகளின் கோரிக்கை….

          • இந்தியா என்ற போலிக்கட்டுமானம்….இங்குள்ள பொளளாச்சி மகாலிங்கம்,தயானிதி,ராஜாதியம்மாள்,கனிமொழி,வைகோ, ஈழத் தாய் அம்மா,சீமான்,விஜயகாத்…,க்கும் தேவையாய் உள்ளது….இந்த கட்டுமானத்தை காப்பாற்ற வேண்டிய அவசியம் இவர்களுக்கு உள்ளதை போல்தான் மற்ற தேசிய முதலாலிகளும் இதை தாங்கிபிடிக்கிறார்கள்….என்வே இந்தியாவின் தேவை முதலாளிகளின் தேவையே….எனவே தேசிய முதலாளிகள் …..இவர்களின் கூட்டுதான் இந்திய அரசு..னிலமை இவ்வாறு இருக்கும் பொழுது பாட்டாளிகள் எப்படி தேசிய கோரிக்கை வைக்க முடியும்….

            சரியாக சொன்னீர்கள் இந்தியா என்பது போலிக்கட்டுமானம் ,இந்தியாவின் தேவை முதலாளிகளின் தேவையே பல்வேறு தேசிய இனங்களின் உரிமைகளை ப்பரித்து உருவாக்கப்பட்ட இந்தியாவை தகர்ப்பதன் மூலமே பார்ப்பனீய ஏகதிபத்திய முதலாளித்துவத்தை வீழ்த்த முடியும்,

  46. காலவதியாகிப்போன மார்க்ஸீயத்தைப்பத்தி பேசி நேரத்தை வீணாக்க வேண்டாமேன்னு சீமான் நினைத்திருக்கலாம்

    • அட புதுத்தத்துவ அறினர் அய்யா பர அண்ணே வணக்க……. மார்கசியம் காலாவதி ஆயிருச்சு….. சரி உங்க தத்துவம் என்ன?……. இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்பதா…..அம்மா உணவகதில் காசுக்கு சோறு கிடைக்கும் என்பதா…ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் பத்து ரூபா என்பதா?…..இல்லை கூடங்குளம் அணுவுலை பாதுகாப்பானது என்பதா…..உலகில் உழைக்கும் வர்க்கம் இருக்கும் வரை மார்க்கசியம் தன் உன்னதமான பணியை செய்துகொண்டே இருக்கும்…..உனக்கு முடியுமானல் மார்க்கசியம் படி……சீமானைப்போல் மக்களை திசை திருப்பி பிழைக்க உண்மையான மக்களின் பால் அன்பு கொண்டவனால் முடியாது….கம்யூனிசம் மட்டுமே உலக மக்கலுக்கான விடுதலை….இன்று வரை உலக சமுதாய இயக்கம் மார்க்கசிய அறிவியல்படியே இயங்குகிறது….முதலாளிகளும், அரசுகளும் ,பாட்டாளிகளும்
      மார்க்கசியதில் உள்ளவாறே இயங்குகிறார்க்ள்..

      • காலாவதியாகிபோனவை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை…

        • பர…அண்ணே…சரி விடுங்க….அப்புறம் ஏன் வினவு உங்கள் கவனத்தை ஈர்க்குது?…வினவு உங்கள் கவனத்தை ஈர்ப்பதும் உன்னதமான மார்க்கசிய இயங்கவியலே….நீங்களும் விடுதலைக்கான பாதையை தேடுகிறீர்கள்…அதற்க்கான சாட்சி நீங்கள் வினவை அலசுவது…இது வினவின் வெற்றி…மார்க்கசியதின் வெற்றி..

  47. கொஞ்சம் நேரம் கிடைக்கும் போது இந்த கட்டுரையை வாசிக்கவும். பின்னர் விவாதிப்போம். ஒன்றும் தவறாக எடுத்துகொள்ள வேண்டாம்.
    http://www.americandailyherald.com/pundits/christopher-c-m-warren/item/karl-marx-and-the-communist-religion-of-hate

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க