குமாரசாமி தீர்ப்பை மானே தேனே என்று பாராட்டி தினமணியின் வைத்தி மட்டும் எழுதவில்லை. யாரெல்லாம் எழுதினார்கள் என்று பட்டியல் இட்டால் அதற்கு ஒரு ஆயுள் போதாது. ‘அம்மாவின்’ பவர் அப்படி. அல்லது பரிசு வாங்கிய நன்றிக் கடனில் மக்கள் கடனை கொன்று தின்னும் ஊடக பிரபலங்கள் இங்கே அதிகம்.
நாளிதழுக்கு இருக்கின்ற அன்றாடம் செய்தி வெளியிடும் வாய்ப்பு வார இதழகளுக்கு இல்லை என்பதால் புதிய தலைமுறை வார இதழின் ஆசிரியர் மாலன் கொஞ்சம் வருந்தியிருப்பார் போலும். அதனாலென்ன? டிவிட்டர், ஃபேஸ்புக்கில் அவர் மனந்திறந்து பூரித்திருக்கும் செய்திகளையும் அவற்றின் உட்கிடக்கையையும் இங்கே தொகுத்து தருகிறோம்.
(தீர்ப்பு வெளிவரும் அன்று மே 11 காலையிலிருந்து மாலன் பல்லைக் கடித்துக் கொண்டு காத்திருக்கிறார். சரியாக 11.010க்கு வெற்றி செய்தி அவர் காதுக்குள் போக கைகளிலிருந்து டிவிட்டர் அறிவிப்பு பாய்கிறது.)
மாலன் நாராயணன் May 11 at 11:01am · Twitter ·
jaya is aquitted
(சரி, ஒரு செய்தியை ஒரு பத்திரிகையாசிரியர் வெளயிடுவதில் தவறு என்ன என்று விசாரிப்போர் பொறுமையாக மேலே போக…)
___________
(அடுத்த இரண்டு நிமிடத்தில் தமிழிலும் குதூகல அறிவிப்பு முழங்குகிறது)
மாலன் நாராயணன் May 11 at 11:03am · Twitter ·
ஜெயலலிதா விடுதலை
____________
மாலன் நாராயணன் May 11 at 11:20am · Twitter ·
not going for appeal -Dr.Swamy மேல் முறையீடு செய்யப் போவதில்லை –சுவாமி
(அடுத்த 15 நிமிடங்களில் சுவாமியின் செய்தி வெளிவருகிறது. இதில் செய்தியின் மதிப்பை விட மாலனின் பயமும், விருப்பமும் முக்கியம். இந்த வழக்கை ஆரம்பத்தில் போட்ட இந்த போக்கிரி மீண்டும் உ.நீதிமன்றம் சென்று பிழைப்புக்கு ஆப்பு வைப்பாரா என்பது பயம். அவர் அப்படி போகவில்லை என்றதும் அம்மாவின் விடுதலை உத்தரவாதமாகிவிடும் என்பது விருப்பம். ஆனால் சு.சாமி பேச்சிலும், எழுத்திலும் மேல் முறையீடு போவேன், கர்நாடக அரசு போகாவிட்டால் எனக்கு பவர் இருக்கிறது என்றே அனைத்து ஊடகங்களிலும் பேசினார். இது ஏன் மாலனுக்கு மாற்றி கேட்டது என்பதும் குமாரசாமி ஏன் கணக்கை மாற்றி போட்டார் என்று கேட்பதும் ஒன்று)
_____________
மாலன் நாராயணன் May 11 at 11:20am · Twitter ·
Retweeted Dhanya Rajendran (@dhanyarajendran):
Prosecution had failed to prove the charges. Appellants source of income has clearly established. #JayaVerdict
(அடுத்ததாக மாலன் , நியூஸ்மினிட் செய்தி நிறுவனத்தில் வேலை செய்யும் தன்யா ராஜேந்திரனின் செய்தியை வெளியிடுகிறார். அதன்படி அரசுத் தரப்பு குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை, ஜெயா தரப்பு தெரிவித்த சட்டபூர்வ வருமானம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிலைநாட்டப்பட்டது என்பதை மாலன் தெரிவிக்கிறார். அதையும் ஒரு ஆங்கில செய்தியாளரின் மூலம் தெரிவிப்பதால், வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் எனும் வடிவேலுவின் தத்துவத்தை திறமையாக பயன்படுத்திக் கொள்கிறார்.
ஆனால்……)
Dhanya Rajendran @dhanyarajendran : Plugging our big story today. Are there glaring mathematical errors in Jayalalithaa case judgement? http://bit.ly/1JE89zv
(அடுத்த நாள் அதே தன்யா, நீதிபதி குமாரசாமியின் கணக்கு தவறை வைத்து முக்கியமான கட்டுரையை வெளியிடப் போவதாக தெரிவிக்கிறார். இதை மாலன் ஏன் வெளியிடவில்லை? இப்போதும் வடிவேலு தத்துவத்தையே நம்புகிறார். அதாவது சிவப்பாக இருப்பவன் சொல்வதை மக்கள் நம்பிவிட்டால்…..?)
____________
(அடுத்த ஒரு மணிநேரத்தில் மாலன் அவர்கள் வரலாற்றில் மூழ்கினாரோ இல்லை ஏற்கனவே எடுத்து வைத்திருந்தாரோ, இல்லை இத்தகைய ஆவண ரெடிமேடுகளை போயஸ்தோட்டமே கூட பார்சல்கூட அனுப்பியிருக்கலாம். இதில் இதற்கு முன்னர் போடப்பட்ட பல்வேறு வழக்குகளில் ஜெயா எப்படி வென்றார் என்பதை பட்டியல் இடுகிறார். அதைப் பார்த்தால் பல பத்து ஊழல் வழக்குகளில் இருந்து அம்மையார் ஏற்கனவே விடுதலை ஆனவர் என்பதால் இந்த வழக்கெல்லாம் ஒரு ஜுஜுபி என்ற நக்கல் இருக்கும். ஊரறிந்த ஒரு ஊழல் வழக்கில் பல்வேறு தகிடுதத்தங்கள் செய்யப்பட்டதையெல்லாம் மாலன் அவர்கள் இங்கே ஆவணப்படுத்தி முன்வைக்கவில்லை. எனினும் இந்த நிலைத்தகவலை எதிர்த்து பலரும் அவரிடம் கேள்வி எழுப்புகின்றனர்.)
மாலன் நாராயணன் May 11 at 11:30am
ஜெயலலிதா சந்தித்த/வென்ற/விடுவிக்கப்பட்ட வழக்குகள்
பிறந்தநாள் பரிசு வழக்கு
2011-ம் ஆண்டு இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதாவை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.டான்சி
2002-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு விடுதலை செய்தது. மேல்முறையீட்டு வழக்கிலும் விடுதலை உறுதி செய்யப்பட்டது.கலர் டி.வி.
இந்த வழக்கிலும் ஜெயலலிதா விடுதலைசெய்யப்பட்டார்.கொடைக்கானல் ஓட்டல்
மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு அவரை விடுதலை செய்தது.நிலக்கரி
இந்த வழக்கில் இருந்தும் பின்பு ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார்.ஸ்பிக் நிறுவன பங்குகள்
2004-ம் ஆண்டு ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார்.திராட்சை தோட்டம்
இந்த புகார் 2013-ல் முடித்து வைக்கப்பட்டது. இதுபோல் திராட்சை தோட்டம் மூலம் ரூ 60 லட்ச அளவிற்கு வருமானம் ஈட்டிய வழக்கில் வருமானவரி கட்டவில்லை என்று கூறி தொடரப்பட்ட வழக்கில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.தெற்காசிய விளையாட்டு போட்டி
இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.டாமின் நிறுவன உரிமம்
வழக்கு சிறப்பு கோர்ட்டிலேயே முடித்து வைக்கப்பட்டது. (எப்படி மாலன் சார்?)வருமான வரி
எழும்பூர் கோர்ட்டில் முடித்து வைக்கப்பட்டது. (வரியை கட்டுவதாக ஒத்துக் கொண்டு அதாவது கணக்கில் காட்டாத வருமானத்திற்குரிய வரி….இதெல்லாம் மாலன் சாருக்கு முக்கியமில்லை)லண்டன் ஓட்டல்
இந்த வழக்கை திரும்பப்பெற சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசுக்கு அனுமதி வழங்கியது.
(இந்த நிலைத்தகவல் குறித்த மக்கள் கருத்துக்கள்)
விருதை ஜே. கே :
பணம் மட்டுமே பத்தும் செய்யும்..!! கூடுதலாக அதிகாரமும் சேர்ந்து கொண்டால் நூத்தி பத்தும் செய்யும் !!
Yuva Krishna:
’சந்தித்த’ ஓக்கே. ‘வென்ற’ என்பது சரியானதா சார்?
மாலன் நாராயணன்:
விடுவிக்கப்பட்ட என்றும் போட்டிருக்கிறேனே
Yuva Krishna:
’விடுவிக்கப்பட்ட’ என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் ஜெயலலிதாவின் வெற்றி என்பதை மக்கள் களத்தில் 91, 01, 11 ஆண்டுகளில் பெற்றவற்றை மனமுவந்து ஏற்றுக் கொள்ளலாம். நீதிமன்றங்களில் ஜெ வென்றார் என்று சொன்னால், நாளை சல்மான்கானும் வெல்லப்போகிறார் என்று சொல்ல வேண்டியிருக்கும்.
Suresh Kumar Jaganathan:
Super sir.. நீதி : எவ்ளோ பண்ணாலும் தப்பிச்சிடலாம்
Pandian Govindarajan:
ஒருபத்திரிக்கையாளனாக ஏற்பட்ட சந்தோஷமும் மனநிறைவும் புரிகிறது.
Selvan Senthilkumar:
தீர்ப்புக்கு பிறகான பதிவு….. (பத்திரிகைகள் தான்அப்படின்னா…………….நீங்களும்…………?)
Madurai Veeran: அப்புறம் என்ன ஜேக்கு பாரத ரத்னா கொடுத்திடலாம்
_____________
(அடுத்து மாலன் அவர்கள் மதிய இடைவெளிக்கு முன்னர் நாத்திகம் பேசும் முட்டாள்களை அம்பலப்படுத்துகிறார். அதில் பொதுவில் திராவிட, இடதுசாரி, முற்போக்கு முகாம்களை கேலிசெய்யும் தொனி உள்ளது என்றாலும் மாலனது பத்திரிகை ஆசிரியர் என்ற பீடத்தின் பயம் காரணமாக பல பத்திரிகையாளர்கள் இதன் உட்குத்தை கண்டு கொள்ளவில்லை. மேலும் ஜெயா கும்பல் காசு கொடுத்து செய்த நேர்த்திக் கடன்களின் உண்மை சுயரூபத்தை பள்ளி செல்லும் பிள்ளைகள் கூட அறிவார்கள் என்றாலும் மாலனது கணக்கு வேறு. இருப்பினும் மாலனது நோக்கத்திற்கு எதிராகவே பலரும் பதில் அளித்திருக்கின்றனர்.)
மாலன் நாராயணன் May 11 at 1:10pm ·
பிரார்த்தனைகளை நேர்த்திக் கடன்களை கேலி பேசியவர்கள் இனி என்ன சொல்வார்கள்? தமிழகத்தில் இறை நம்பிக்கை அதிகரிக்குமோ?
Dhandapani Sakkarapani:
என்ன தவறு செய்தாலும் நேர்த்திக்கடன் செய்து தப்பித்துவிடலாம் என்ற நம்பிக்கை அதிகரித்துவிட்டால் என்ன செய்வது? தவறே செய்யாமல் இருந்தால் எதுவும் செய்யாமலே கடவுள் காப்பாற்றுவார் என நம்புவதுதானே உண்மையான கடவுள் நம்பிக்கை?
Rajee Sankar:
இறை நம்பிக்கைகள் அதிகரிக்குதோ இல்லையோ முட்டாள்தனமான துதிபாடல்கள் நிச்சயம் அதிகரிக்கும் .
மணி மணிவண்ணன்:
அப்போ, கடவுளும் ஊழல் பேர்வழிதான்னு மக்கள் நம்புவது கூடிவிடும்னு சொல்கிறீர்களா?
Yuva Krishna:
தமிழக மக்கள் அனைவருக்கும் குமாரசாமி, மொட்டை போட்டு காது குத்தியிருக்கிறார். இறைநம்பிக்கை இல்லாமலா இது நடந்திருக்கும்?
Nagore Rumi :
இதில் உங்களுக்கு வருத்தமோ?!
Rk Rudhran :
சிலதுகள் நிஜமாகவே சிலுவையில் அறைந்து கொள்ளும்..ப்ராத்தனைகள் போஸ்டர்களாகும் போயஸ் தோட்ட வழியில்
Bala Mukundhan :
அந்த ‘நேர்த்திக் கடன்களில்’ எவ்வளவு, நிஜமாகவே மனமுருகி வேண்டி நேர்ந்து கொண்டது?, நேர வைக்கப்பட்டது? நேரம் காலம் பார்த்து நேர்த்தியான முறையில் செய்யபப்ட்டது?
Sivakkumar Sethuraman:
நல்ல எண்ணங்கள் கொண்ட பிராத்தனைகள்.. பலிக்கும்..! இதைத்தான் எல்லா மதத்திலுள்ள உண்மையான இறை நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் இங்கே நிஜத்தைவிட போலிகள் தான் மிக அதிகம்.. இதை செய்து காட்டுவதன் மூலம் பிரபலமாகவும் ஆதரவு டிவியில் அதிக நேரம் முகத்தை காட்டி பப்ளிசிட்டி + கட்சி பதவிகள் + சட்டமன்ற சீட் காத்திருப்பதாக உறுதி படுத்தும்..?! இதன் மூலம் சொல்லாமல் சொல்லும் செய்திகள் …உணர்த்தும் உண்மைகள்..! என்னவென்றால் இவைகள் மூலம் கட்சியில் புதுப்புது டெக்னிக் + டார்கட் +அரசியல் எதிரிகளுக்கு வைக்கும் வேட்டு மோகத்திற்காக மட்டுமே.. அக்கறையாக காட்டிக்கொள்ளும் பச்சையாய் அரசியல் ஆதாயம்..?? இதுவே யதார்த்தம்.. மிக விரைவில் பரிசுகளாய் பதவிகள் உண்டு..உண்டு..கண்டிப்பாக உண்டு.. என்பது தான்.. சிலுவை சுமப்பும்.. காவடிகளும்.. பால் குடங்களும்.. ஹோமங்க்களும்.. அபிஷேகங்களும்.. உணர்த்தும் செய்தி.. மிக விரைவில் மாதாவும் அம்மன்களின் வடிவங்களும் புதுப்புதுசாய் தெய்வபிறவி எடுத்து வண்ணத்தில் சாலை முழுவதும் ஆக்கிரமித்து ஜொளிக்கும்… தமிழகத்தின் ஆண்மீக அரசியல் பிராத்தனைகள் கின்னஸ் ரெக்கார்டு செய்யும் ..?! உலகம்மே வியக்கும் தமிழன் புகழ் கோமாளியாகும் நாள் வெகு தொலைவில் இல்லை..
Madurai Veeran:
அம்மாவுக்கு கோவில் கட்டவேண்டியதுதான் … அர்ச்சகர்களை தமிழக அரசு நியமிக்கும்
Nsm Shahul Hameed:
ஒரு விசயம் கவனித்தீர்களா சார்!, ஜெயலலிதாவுக்காக தமிழகத்தில் அநேகர் பிரார்த்தனை செய்தனர். ஆனால் நமக்குத் தெரிந்து பெரியளவில் யாரும் பிரார்த்தனை செய்யாமலேயே மற்ற மூவருக்கும் விடுதலை கிடைக்கவும் இறைவன் வழிசெய்துவிட்டாரே!. அதான் ‘வேண்டுதல் வேண்டாமை இலான்” என்றாரோ வள்ளுவர்?
____________
(அடுத்தபடியாக ஜெயா விடுதலை ஆனதன் காரணங்களை தீர்ப்பிலிருந்து எடுத்துரைக்கிறார். அவரது பதவி, வயது, பச்சமுத்துவின் முதல் ஊடக ஆசிரியர், மிரட்டலான புள்ளிவிவரங்கள் என்று பலவும் சேர்ந்து மாலன் சொன்னால் அதுவே அறுதி உண்மை என்பதை நிலைநாட்டும் என நம்புகிறார்.)
மாலன் நாராயணன் May 11 at 3:28pm
விடுதலை ஏன்?
சொத்து மதிப்பு: ரூ. 37,59,02,466
வருமானம்: 34,76,65,654
வருமானத்திற்கு அதிகமான சொத்து: 2,82, 36,812
வருமானத்திற்கு அதிகமான சொத்து சதவீதத்தில்: 8.12%
10 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதால் விடுதலை
(தீர்ப்பிலிருந்து)
Yuva Krishna: கொஞ்சம் முன்னே பின்னே இருப்பதால் அட்ஜஸ்ட் பண்ணி வெளியே விட்டுட்டாங்க .
(யுவகிருஷ்ணாவின் இந்த ‘மேலோட்டமான’ நக்கல் மாலனுக்கு கோபத்தை வரவழைத்திருந்தாலும் உடனே ஆதாரத்தை போட்டு தனது இமேஜை தூக்குகிறார்.)
மாலன் நாராயணன்:
Yuva Krishna கிருஷ்ணானந் அக்னிஹோத்ரி என்பவர் வழக்கில் உச்ச நீதிமன்றம் 10 சதவீதத்திற்குக்குறைவான மதிப்பு அதிகரிப்பு தண்டனைக்குரியதல்ல எனத் தீர்ப்பளித்திருக்கிறது அந்தத் தீர்ப்பை இங்கே காணலாம்: http://indiankanoon.org/doc/1919354/
Yuva Krishna:
அப்படியெனில்“நாட்டில் ஊழல் என்பது மிகப்பெரிய நோயாக உள்ளது. அந்த ஊழல் நோய் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை அவர் மனதில் வைத்துக் கொண்டு தீர்ப்பை வெளியிட வேண்டும். ஊழல் நடவடிக்கைகள் ஒரு நாட்டை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு அமைய வேண்டும்.”
– இப்படியெல்லாம் உச்சநீதிமன்றம் சொன்னது சும்மா லுலுவாயிக்குதான் போல
Mageshwar Anbazhagan:
இந்த விஷயம் 10 வருஷத்துக்கும் மேல விசாரணை செஞ்ச அய்யாங்களுக்கு தெரியலையா ?
Bala Kannan:
அப்பறம் பிட்பாக்கெட் அடிக்கரவனையும், செயின் திருடுருவனையும் ஜெயில்ல போடுறாங்க, ஒரு வீட்டுல பூந்து திருடுரது தப்பா என்னா ? அப்போ பேங்க்அ கொள்ளை அடிக்கலாமானு ஜட்ஜு ஐயாவ கேட்டுச் சொல்லுங்க…
_______________
(தீர்ப்பு வந்த தினத்தின் மாலை நேரம். எனவே மாலன் அவர்கள் ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு வந்துவிடுகிறார்.)
மாலன் நாராயணன் May 11 at 4:59 pm
எனக்குத்தான் அப்படித் தோன்றுகிறதோ?
வாடி ராசாத்தி, புதுசா, விரசா, ரவுசா என்ற பாடல்வரிகள் கொண்ட திரைப்பட விளம்பரம் ஒன்று இன்று வழக்கத்தைவிட அதிக முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாவதைப் போலத் தோன்றுகிற்து. பிரமையோ!
(ஜெயா விடுதலையானதை அவர் மட்டுமல்ல, அ.தி.மு.க அடிமைகள் மட்டுமல்ல, தொலைக்காட்சி விளம்பரங்கள், பாடல்கள், டிரெயிலர்கள் கூட கொண்டாடுவதைப் பார்த்து அவரால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போகிறார்.)
___________
மாலன் நாராயணன் May 11 at 6:00pm
//எமகண்டத்தை வென்ற ஜெயலலிதா… சுக்கிர ஓரையில் சுகமான தீர்ப்பு// செய்தி இணைய தளம் ஒன்றில் இப்படி ஒரு தலைப்பு. ஹும்ம்ம்… தமிழ் இதழியல் எங்கேயோ போயிட்டது!
(அறிவுப்பூர்வமான ஒரு தீர்ப்பை, அம்மாவின் விடுதலையை மகிழ்ந்தாலும் தன் போல நுணுக்கமாக எழுதாமல் இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதுவது சாதா இதழியல் என்று தனது சூப்பர் இதழியலை நிறுவிக் கொள்கிறார்.)
____________
(அடுத்த நாள் காலை அலுவலகம் வந்ததும் முதல் செய்தியாக தினத்தந்தியின் பீஸை எடுத்து போடுகிறார். நீதிபதி குன்ஹா எங்கு தவறு செய்தார் என்று நீதிபதி குமாரசாமி எடுத்து வைக்கும் லா பாயிண்டுகளை லாலா பாடிக் கொண்டே காப்பி பேஸ்டு செய்கிறார்.)
மாலன் நாராயணன் Yesterday at 9:23am
குன்ஹா எங்கு தவறு செய்தார் என்பதை நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் விளக்கியுள்ளார்:
இந்த வழக்கில் ஆதாரங்களை ஆய்வு செய்யும் போது கீழ்க்கோர்ட்டு ஒரு தவறான முடிவுக்கு வந்துள்ளது தெளிவாக தெரிகிறது. இதில் சட்ட தடைகள் இல்லாதது மட்டுமல்ல, நீதியின் நலன் கருதி குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டியது அவசியமாகிறது. இந்த வழக்கில் வருமான வரி விவகாரங்களை ஒரு குறைந்தபட்ச மதிப்பாக கூட எடுத்துக்கொள்ள கீழ்க்கோர்ட்டு மறுத்துவிட்டது.
திருமண செலவு
சுதாகரன் திருமண செலவு ரூ 3 கோடி என்று கீழ்க்கோர்ட்டு மதிப்பிட்டு இருக்கிறது. இந்த செலவை ஜெயலலிதா செய்ததாக எந்த ஆதாரமும் இல்லாமல் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.ஆதாரங்கள் இல்லை
சாட்சிகள் பல்வேறு கட்டங்களில் பலவிதமான சாட்சியங்களை அளித்ததால் அது நம்ப தகுந்தது அல்ல. ஒட்டுமொத்த விஷயங்களையும், ஆவணங்களையும் கவனத்தில் கொள்ளும் போது, கீழ்க்கோர்ட்டின் தீர்ப்பும், அதற்கான ஆதாரமும் பலம் குறைந்து காணப்படுகிறது என்பது எனது கருத்து. கீழ்க்கோர்ட்டு கூறிய ஆதாரங்கள் சட்டப்படி வலிமையாக இல்லை.
நன்றி: இன்றைய தினத் தந்தி
குன்ஹா தீர்ப்பு வெளியானபோதே அது சட்டத்தின் பார்வையில் பிழைகள் கொண்டது எனக் கூறியிருந்த்தேன். என் கருத்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
( நீதிபதி குன்ஹா தீர்ப்பை அப்போதே தவறு என்று சட்டத்தின் பார்வையில் தான் தொலைநோக்காக கூறியிருந்ததை இங்கே மாலன் அவர்கள் பெருமை பொங்க கூறுகிறார். இதையே சோ அவர்களும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக நீதிபதி குமாரசாமி அவர்கள் வேண்டுமென்றே கணக்கை தவறாக போட்டு போங்காட்டம் ஆடித்தான் மாலன் அவர்களது கணிப்பை நிரூபிக்க வேண்டும் என்றால் இங்கே நாம் ‘அம்மாவை’யோ இல்லை, குமாரசாமியையோ குற்றம் சொல்வது சரியல்லவே?)
மனேஸ் நமசிவாயம்:
நல்லா ஜால்ரா அடிக்கீரீங்க, திருட்டு கேசுக்கு…
Jayaseelan Ganapathy:
அதெல்லாம் சரி சார்… இதெல்லாம் மாதம் ஒரு ரூபாய் சம்பளத்தில் வந்தது என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதா?
Hemanathan Kumar:
நீதியரசர் குமாரசாமியின் கணக்குப்படி இரண்டரை கோடி கணக்கில்வராத தொகைக்கு என்ன தண்டனை ??? அது பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகளா???
Thirumurthi Ranganathan:
“சாட்சிகள் பல்வேறு கட்டங்களில் பலவிதமான சாட்சியங்களை அளித்ததால் அது நம்ப தகுந்தது அல்ல.” – அரசியலில் பலம் படைத்தோர், அல்லது பண பலம் படைத்தோர், அல்லது அடியாட்கள் பலம் படைத்தோர்கள் மீது நடைபெறும் வழக்குகளில் சாட்சிகள் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு விதமாக சாட்சி சொல்லும்படி ‘அன்பாக’, அல்லது ‘ஆட்டோவில் கூட்டிச் சென்று’ என்று விதவிதமாக கவனிக்கப் பட்டு பிறழ் சாட்சிகளாவதைத்தான் கால காலமாகப் பார்க்கிறோமே. எனவே மேற்சொன்ன கருத்தை (“சாட்சிகள் பல்வேறு கட்டங்களில் பலவிதமான சாட்சியங்களை அளித்ததால் அது நம்ப தகுந்தது அல்ல.”) நீதிமன்றங்கள் முன்வைத்துத் தீர்ப்புச் சொன்னால், அது எப்போதுமே , பலம் படைத்த, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதாயமாக முடியாதா மாலன் நாராயணன் சார்?
Rajiv Gandhi:
இது ரொம்ப ஓவர்
Suresh Kumar Jaganathan:
இவ்ளோ நியாயத்த வெச்சுகிட்டு எதுக்கு சார் 18 வருசம் போட்டு இந்த இழுஇழுத்தாங்க…
Komandur Kannan:
ஒருவர் கூட உங்களுக்கு ஆதரவான நிலையை எடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.
Anbu Jaya:
இதெல்லாம் ஒரு கண் துடைப்பு. எல்லோரும் அறிந்த ரகசியம்.
Jeeva Manickam:
நீங்கள் குமுதத்தில் ஆசிரியராக இருந்தபோதுதானே வளர்ப்பு மகன் கலியாணம் உட்பட பல சம்பவங்கள் நடந்தன. திமுக ஆட்சிக்கு வந்ததும் சுற்றமும் நட்பும் என்று ஜெயலலிதாவை சுற்றி இருக்கும் மன்னார் குடி கும்பலைப் பற்றி நீங்கள் குமுதத்தில் பரபரப்பாய் தொடர் எழுதினீர்கள். ஜெயலலிதாவும் சசிகலாவும் நகை அணிந்த படங்களை நடுப்பக்கத்தில் வெளியிட்டு கருணாநிதியின் நண்பனாய் காட்டிக் கொண்டீர்கள், இன்று ஆட்சி மாறி விட்டது. காட்சி மாறிவிட்டது. தங்களின் ம்னசாட்சியும் மாறிவிட்டது.
(கவனியுங்கள், துக்ளக் சோ, சு.சுவாமி போல இன்னும் பல பார்ப்பனர்களைப் போல மன்னார்குடி கும்பலை தனிமைப்படுத்தி, அதாவது சசிகலா வந்த பிறகே ஜெயாவுக்கு பிரச்சினைகள் வந்தன என்ற கண்ணோட்டத்தில் மாலன் அவர்களும் அப்போது எழுதியிருக்கிறார்.)
Chandrasekar Nallusamy:
Mr Malan Sir we are (common people) not stupid, within 6 month cat will come out. Don’t try to make us fool. Better we will put vote for nota. All political parties are in same platform.
Jayaseelan Ganapathy:
நீதி வென்றது…சத்தியம் ஜெயித்தது…அப்புறமென்ன வழக்கம் போல மக்கள் தோற்றார்கள்…! நீதியரசர்.குமாரசாமியையே 2ஜி வழக்கிற்கும் நீதிபதியாக நியமித்து ஒரு அரசியல்(சமூக நீதி)சமத்துவத்தை பாஜக அரசு நிலைநாட்ட வேண்டும். இதன் மூலம் மக்கள் நீதிமன்றத்திற்கும் நீதிக்கும் சம்பந்தமே இல்லை என உணர்வர். மைசூர் போண்டாவில் மைசூரைத் தேடுவது, திருநெல்வேலி அல்வாவில் திருநெல்வேலியை தேடுவது போன்றது தான் நீதிமன்றத்தில் நீதியை தேடுவதும்.
Karthick Karu:
இதெல்லாம் தெரிஞ்சும் புதிய தலைமுறைல ஏன் சார் இறங்குமுகம்னு முதல் பக்கத்துல போட்டாங்க. 8%ஆல்கஹால் கலந்த பீர் அடிச்சிட்டு வண்டி ஓட்டுனா தப்பு இல்லையா சார்.
U S Aurro Bindhan:
நீங்களும் இப்படி மாறீட்டங்களே தப்பு செய்றவனுக்கு ஆதரவா சட்டம் வந்தா அவன் தப்பு செய்யலேன்னு ஆயிடுமா?
Abdul Hameed:
சாரே…. நீங்கள் ரொம்பத் தான் மெனக்கெடுரீங்க. பூணூல் பாசமா?
Balachandar Muruganantham:
i thought you are unbiased. are you?
Pandian Govindarajan:
கொஞ்சம் கொஞ்மாக பூனைக்குட்டி வெளியே வருகிறது. சந்தர்பவாதம் !
Vaidheeswaran Bharathy:
பாசம் இருக்கவேண்டியதுதான் தவறில்லை.. மாலன் ஒன்றும் குண்டு வைப்பவர்களுக்கு மெனக்கெடவில்லையே?
Senthilkumar Jayaprakash:
நான்கு பேரும் உத்தமர்களா?
உதயகுமார்:
கணக்கையே தப்பா போட்டிருக்கிற நீதிபதி நீதியை மட்டும் சரியா கொடுத்திருப்பாரோ?
Madurai Veeran:
குமாரசாமி எங்கு தவறுகள் செய்துள்ளார் என்று அறிய உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தால் தெரிய வரும்.
சக்தி விக்னேஷ்வர்:
ஒரு உயர்ந்த பத்திரிக்கையாளர் உங்களுக்கு ஒவ்வாத கருத்தை சொல்லிவிட்டால் உடனே இல்லாததையும் பொல்லாததையும் அவர் மீது வைப்பது தான் உங்கள் டிசைனா? பூணூல் பாசம்–எவ்வளவு அபத்தமான வார்த்தை?
எத்தனை நாட்களுக்கு தான் இந்த பிராமண துவேஷ விளையாட்டை விளையாடப் போகிறீர்களோ? இதையெல்லாம் சொன்னால் நான் ஒரு ஜால்ரா என்பீர்கள். ஜால்ராக்கள் மனதில் ஜால்ரா மணி லகலகவென்று ஆடிக்கொண்டுதான் இருக்கும்.
அவரின் எழுத்தை தொடர்ந்து வாசித்து வருபவன் என்ற முறையில் எனக்கு அவரின் பால் ஏற்பட்ட உண்மையில் சொல்கிறேன்–பார்த்து பேசுங்கள். உணர்ச்சி பெருக்கில் ஒரு நடுநிலையாளரிடம் உளறி கொட்டாதீர்கள்.
பாரதியையே பார்ப்பன வண்ணம் பூச துடிக்கும் மனப்பாங்கையே இது காட்டுகிறது.
(அய்யா சக்தி விக்னேஷ்வர், இங்கே மாலன் அவர்கள் அவருக்கு ஒவ்வுவதை மட்டும் ஏன் விசமத்தனமாக எடுத்து வைக்கிறார் என்பதே கேள்வி. அவரின் பால் உங்களுக்கு ஏற்பட்ட உண்மையின் இலட்சணம் இப்போதாவது புரிகிறதா? அவர் நடுநிலையாளர் என்று உணர்ச்சி பெருக்கில் உளறுவது சரியா?)
Bharathi Mithran:
Mr.maalan everyone knows how grand her foster sons marriage was held..how kumarasamy holds that jaya didn’t spend much…as long as people like support her under pretext of a neutral journalist its only a dream that corruption is eradicated in public life
Raja Sekaran:
Mr.Malan..go through the judgement.. blind mathematical error in total amount of credits..குன்ஹா தப்புனு குமாரசாமி சொல்றார்…குமாரசாமி தப்புனு மக்களே சொல்றாங்க…
Kavi Kkavin:
மாலன் sir இப்ப என்ன சொல்ல வரீங்க அந்த பெண் அரசியல்வாதி அப்பழுக்கற்ற தூய்மையானவர் என தானே . சரி விடுங்க .
Rangaraju Raju:
மாலன் நீங்கள் என்ன சொல்லவருகின்றீர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். ஏன் என்றும்தெரியும். ஆனந்தத்தில் நரி ஊளையிடாமல் இருந்தால்தான் வியப்பு!
(ஆனந்தத்தில் நரி ஊளையிடாமல் இருந்தால்தான் வியப்பு……….என்னா ஒரு பன்ஞ்)
______________________
(இதன் பிறகு நீதிபதி குமாரசாமியின் கூட்டல் அயோக்கியத்தனத்தை ஊரே கண்டுபிடித்து காறித்துப்பிக் கொண்டிருக்கும் போது, குன்ஹா தீர்ப்பு தவறு என்று அன்றே சொன்ன மாலன் இப்போது என்ன செய்கிறார்?)
மாலன் நாராயணன் shared புதிய தலைமுறை வார இதழ்’s photo.
நேற்று தில்லியில் நில நடுக்கம். சென்னையில் நில அதிர்வு. அதற்கு முன்
சென்ற வெள்ளிக்கிழமை (8.5.2015) அன்று வெளியான புதிய தலைமுறை இதழில் நிலநடுக்கம் பற்றிய எச்சரிக்கை
(ஜெயா விடுதலை என்று தீர்ப்பு வந்ததும், பாரிவேந்தர் உடன் அறிக்கை வெளியிட்டு ஆனந்தப்பட்டார். அவரிடம் குப்பை கொட்டாவிட்டாலும் மாலன் அவர்கள் இப்படித்தான் எழுதுவார். எனினும் தற்போது நடந்த இந்த ‘கணக்கு’ பிரச்சினைக்காக மாலன் அவர்கள் அசடு வழிவதை பார்த்து பரம்பொருள் சும்மா இருப்பாரா? இருக்கவே இருக்கிறார் நீதியரசர் தத்து. நாளைக்கே உச்சநீதிமன்ற வழக்கில் அம்மா விடுதலை ஆகும் போது இதைத்தான் நான் அன்றே சொன்னேன் என்று மாலன் நெஞ்சு நிமிர்த்தி கூற முடியாது என்று சொல்ல முடியாதில்லையா?)
விடலை பையனின் எதிர் பாலின கவர்ச்சி உணர்வுகள் மாலனின் வார்த்தைகளில் வெளிப்டுகின்றன !
//வாடி ராசாத்தி, புதுசா, விரசா, ரவுசா என்ற பாடல்வரிகள் கொண்ட திரைப்பட விளம்பரம் ஒன்று இன்று வழக்கத்தைவிட அதிக முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாவதைப் போலத் தோன்றுகிற்து. பிரமையோ!//
இவர் எதற்கெடுத்தாலும் பாரதியை கொண்டாடுவர். அவரையே மேற்கோள் காட்டி ஊக்கு மற்றும் பின் விற்பார்.ஆனால் அதிகாரத்தை நக்கிப்பிழைக்கும் புரோக்கர் சாதி. வெளிமுகத்தை விட உள் முகம் மிக கோரமானது. நெருக்கமானவர்களுக்கு நன்றாகவே தெரிந்து ஒதுங்கியே இருப்பார்கள்.
//இன்று சில அறிவு ஜீவிகள் நீதியரசர் குமாரசாமி அவர்கள் 852 ம் பக்க தீர்ப்பில் கணக்கு பிழை செய்துவிட்டதாக கூறி இந்த தீரப்பே தவறு என்று சொல்ல தொடங்கி விட்டனர். அவர்களுக்கு இதோ சில விளக்கங்கள் பக்கம் 851 பார்தீர்களா அதில் தனியார் வங்கிகளில் வாங்கிய கடன் தொகையை (இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாங்கி கடனை தனியாக குறிப்பிட்டு உள்ளார் ) நீதிபதி அவர்கள் தனியாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார் அந்நிய தொகையையும் கூட்டி பாருங்கள் 24 + கோடி சரியாக வருகிறது . முன் பக்கத்தை கூட பார்க்காமல் படிக்காமல் யரோ ஒருவன் கொளுத்தி போட்ட புரளியை கருணாநிதி, வக்கீல் ஆச்சார்யா உட்பட பலரும் நம்பி எதோ தவறு நடந்து விட்டது என கூறி ஆளாக்கு நீதிபதியின் தீர்ப்பை தப்பும் தவறுமாக படித்து உளறியது இன்றைய உச்சகட்ட காமெடி . அனைவருக்கும் சொல்வது என்னவென்றால் யாரும் (எப்பேர்பட்ட அறிவாளியாக இருந்தாலும் )ஒரு நாளில் 918 பக்க தீர்ப்பை படித்து புரிந்து கொள்ளவே முடியாது . பொறுமையாக படித்து பார்கவும். நீதிபதி குமாரசாமி அவர்கள் ஒன்றும் படிக்காத தற்குறி அல்ல. அவர் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து தான் இந்த தீர்ப்பை எழுதியுள்ளார். / விளக்கம் 2- 852ம் பக்கத்தை பார்த்தீங்க சரி…851ம் பக்கத்தை ஏன் பார்க்கலை ? இந்தியன் வங்கி தேசியமையமாக்கப்பட்ட வங்கியா தெரியலியா ?
நீதிபதி தனது தீர்ப்பில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து பெறப்பட்ட கடன்களை மட்டுமே எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.அப்படி இருக்கையில் இந்தியன் வங்கியும் தேசிய வங்கி தானே ? சரி, உங்க கூற்று படியே நானும் வருகிறேன்.
நீதிபதி தீர்ப்பில் DVAC (Department of Vigilance and Anti Corruption) தாக்கல் செய்துள்ளது படி, தேசிய வங்கிகளில் பெறப்பட்ட கடன்களை மட்டுமே எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.நீதிபதி தவறு செய்தார் என்றால், DVACயும் (Department of Vigilance and Anti Corruption) தவறு செய்துள்ளது என்று எடுத்துக்கொள்ளலாமா ?
இந்த Department of Vigilance and Anti Corruptionஐ வைத்து தானே நீங்கள் வழக்கு பதிந்தீர்கள் ? அப்படியானால் Department of Vigilance and Anti Corruption கூறுவதே தவறு என்கின்றபோது வழக்கே தவறாக சித்திரிக்கப்பட்ட வழக்காகிவிடுகிறதே ?
இதை கூடவா நீங்கள் யோசிக்கமாட..
thanks to.. AIADMK ..facebook friends group…//
இப்படி ஒரு பதிவு முகநூலில் பார்த்தேன். உண்மையில் தீர்ப்பின் கணக்கீட்டில் தவறு இருக்கிறதா இல்லையா?
மாலனையாவது சகிச்சுக்கலாம். தந்தி டி.வி பாண்டேவை தான் சகிச்சுக்கவே முடியலை. தீர்ப்பு வந்த நாள் காலையிலேயே ஐந்து நட்சத்திர ஓட்டல் ஊழியர் போல உடையணிந்து, வழக்கத்துக்கு மாறாக உட்காராமல் நின்று கொண்டும், அங்குமிங்கும் அசைந்து கொண்டும் விருந்தினர்களிடம் கேள்விகளை கேட்டு கொண்டிருந்தார். பாண்டேவை அர்னப் கோஸ்வாமி ரொம்பவே பாதிச்சிருக்கார். பாவம். சுமந்த் சி. இராமன் என்ற ‘அரசியல் பொருளாதார நிபுணரை’ அழைத்து வந்திருந்தார். காட்சி ஊடக செய்தி ஓடைகளின் படையெடுப்புக்கு முன்பு இந்த மனிதர் பொதிகையில் குழந்தைகளை வைத்து விளையாட்டு தொடர்பாக வினாடி வினா போட்டி நடத்தி வந்தார். பாண்டேவின் புண்ணியத்திலந்தமிழகத்தின் தலைசிறந்த அரசியல் விமர்சகர் ஆகிவிட்டார்.
அப்பாவு அவர்கள் கொஞ்சம் ஆழமாக பேசக்கூடியவர் தான். ஆனால், அவரை வாயை திறக்கவே பாண்டே அனுமதிக்கவில்லை. இரவு இன்னும் ரொம்ப மோசம். அப்பாவு வாய் திறந்தாலே தொண்டையை பிடிப்பதும், அவர் கருத்துக்களை சிதைப்பதுமாக இருந்தார். ஒரு வரி கூட முடிக்க விடாதபடி இடைமறித்து கொண்டே இருந்தார். ஞாநி ஊமை படம் ஒன்றில் நடிப்பவரை போன்று பார்க்கும் போதெல்லாம் தென்பட்டார். பாண்டேவின் அராஜகம் ஞாநி மற்றும் அப்பாவு ஆகியோருக்கு தவறாக தோன்றாதது எப்படி என்பது மட்டும் தெரியவில்லை. அப்பாவு கிட்டத்தட்ட அவமானப்படுத்தப்பட்டார். அவருடைய அரசியல் அனுபவத்துக்கு முன் பாண்டே எம்மாத்திரம்? எனினும் பாண்டேவின் சூழ்ச்சியை அப்பாவு புரிந்து கொள்ளாமல் இறுதி வரையிலும் ஒரு சிறுகருத்தையாவது சொல்லிவிட வாய்ப்பு கிடைத்து விடாதா என்று எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தார்.
இது இனிமேலும் தொடரத் தான் போகிறது. பாண்டே அவரது கொண்டையை மற்றவர்கள் கவனித்து விடுவார்களோ என்ற அச்சமும், சந்தேகமும் இல்லாதவர். ஆர்.எஸ்.எஸில் இருக்கும் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரரை போற்றுவதை விடவும் ஆர்.எஸ்.எஸில் முறைப்படி இல்லாத ஒரு ஆர்.எஸ்.எஸ்காரரை ஆதரிப்பதன்/அல்லது அவர் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் அவசியத்தை நன்கு அறிந்தவர். ஆர்.எஸ்.எஸை உணர்வு பூர்வமாக ஆதரிக்கும் பாண்டே கரசேவைக்கு ஆளனுப்பிய அம்மாவை உணர்ச்சிப்பூர்வமாக ஆதரிக்கும் காரணம் இது தான்.
மாலன் பற்றிய விவாதத்தில் பாண்டேவை பற்றி விவாதிப்பது அதனை வெளியிடுவது , வினவு எனக்கு கூறிய அறிவுரை படி சரியானது தானா வினவு நன்பர்களே ? ஆனாலும் நண்பர் சுகதேவின் பாண்டேவை பற்றி கருத்துகள் 100% உண்மை தான். // ஆதவன் , கட்டுரை கூறும் பொருள் பற்றி மட்டும் விவாதிக்கவும். //
மன்னிக்கவும் ஆதவன். ஒன்றை படிக்கும் போது மனம் அதை ஒத்த வேறொன்றை சிந்திப்பதை பகிர ஆர்வம் கொண்டதை கட்டுபடுத்த முடியவில்லை. நான் மாலனின் சமீபத்திய எதையும் படித்ததில்லை. முன்பு இந்தியா டுடேயில் அவர் எழுதிய கட்டுரைகள் சிலவற்றை மட்டும் படித்துள்ளேன். அவர் அப்போது ஜெயலலிதா எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்தார்.
நணபர் சுகதேவ்,எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. வினவில் பாண்டேவை பற்றிய கட்டுரையாக பரினமிக்க வேண்டிய உங்கள் கருத்து ,வேறும் பின்னூட்டமாக வந்த்தை நினைத்து தான் வருந்துகிறேன்.
சுகதேவ், ஆதவன் பெயரில் திருவாளர் தமிழ்தான் பேசுகிறார். சமயத்தில் தனது கருத்துக்காக அவரே வேறு பெயர்களில் வந்து பேசுவார். ஆகவே இது இயல்பான கருத்தல்ல.
மாலனை முழுவதும் அம்மணமாக்கியிருக்கிறது இப்பதிவு. சொல்லிவைத்தாற் போல மாலனைப்போன்றே அனைத்து ஊடகங்களும் வாய் திறக்க மறுக்கின்றன.
திணமணி வைத்தியும் தமிழ் ஹிந்து அசோகனும் அடித்த ஜால்ராக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்றைக்கு மெளன விரதம் இருக்கிறார்கள்.
ஆங்கில இந்துவில் அதிமுகவினர் அதிர்ச்சி என்று எழுதுகிற வாசகம் கூட தமிழ் இந்துவில் இல்லையென்றால் அடேயப்பா! இப்படியொரு நக்கத்தனம் எங்கிருந்து தான் வருகிறது? மக்களால் ஒன்று திரண்டு இதை எதிர்த்து கேள்வி கேட்டுவிட முடியாது என்று பீதுடைத்த குச்சியாக எள்ளி நகையாடுகிற மனப்பான்மை இக்குற்றக் கும்பல்களுக்கு வழங்கியது எது?
1. சல்மான் கான் குறித்து, வாயை அகலத்திறந்த சமஸ், ஜெயா விசயத்தில் பொத்திக்கொண்டு இருப்பது ஏன்?
2. தமிழ் ஹிந்துவின் கருத்துக்கணிப்பு இன்றைக்கு காணவில்லை. விடுதலைக்கு பின்னணியில் இருப்பது நீண்டகால சட்டப்போராட்டம் (___________ இதில் எங்கடா இருந்தது சட்டப்போராட்டம்?) விடாமுயற்சி, தொண்டர்களின் பிரார்த்தனை என்று எதுவும் காணவில்லை.
3. திணமணி வைத்தி தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் என்று தொடர் ஒன்றை எழுதிவிட்டு, குமாரசாமி 362 சட்டப்பிரிவை பயன்படுத்தி திருத்தம் மேற்கொள்வாரா? என்று எச்சியை வடிக்கிறார். தீர்ப்பு வழங்கப்பட்ட கோணமே தவறாகிவிட்ட பிறகு எந்தப் பக்கத்தை திருத்தி என்ன பண்ண முடியும்?
4. தமிழ் ஹிந்துவின் கார்ட்டூனைப் பார்த்துவிட்டு மறுமொழி எழுதிய வாசகர்கள் இந்த ஊடகத்தின் மீதிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விட்டது என்று எழுதுகின்றனர்.
5. ஹிந்துவின் தலையங்கமோ தமிழ்நாட்டில் நலத்திட்டங்கள் சுணங்கிவிட்டதாகவும் அம்மா நலத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டுமென்றும் கூசாமல் எழுதுகிறது.
6. தினமலம் முதல் நாளில் ஜெயா விடுவிப்பு என்று எழுதிவிட்டு அடுத்த நாள் ஜெயலலிதாவிற்கு ஜெயம் என்று எழுதுவைத காறித்துப்புகிறார்கள் பல வாசகர்கள்.
7. தினமலத்தில் குமாரசாமிக்கு ஆதரவாக 850வது 852வது பக்கத்தை ஆச்சார்யாவும் கருணாநிதியும் படிக்கவேண்டும் என்று ஆவேசம் போடுகிற கைக்கூலி கூட்டமும் கொஞ்ச நஞ்சமல்ல.
8. டெக்கன் கிரானிக்களில் இது குறித்த செய்தி ஒன்றுமே கிடையாது.
9. ஹிந்து ஆங்கில நாளேட்டில் ஆச்சார்யாவின் செய்தியைவிட அம்மா வந்ததால் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி, மெட்ரோ திறக்கப்படும் என்று சொல்லிவைத்ததைப்போல இந்த அரசை பின்னிருந்து இயக்கும் முதலாளிகளின் பார்வையில் இருந்து பல கட்டுரைகளை வடிக்கிறது.
10. வைகோ ‘நான் செவிலியர் தினத்திற்குத்தான் வாழ்த்து சொன்னேன்’ அம்மாவுக்கு அல்ல என்று கணக்கு வந்த பிறகு அந்தர்பல்டி அடிக்கிறார்.
11. ஹரிஷ் சால்வேவிற்கு குமாரசாமி வழங்கிய தீர்ப்பு குறித்து மிகுந்த மகிழ்ச்சியாம்.
12. ஒட்டுமொத்த இந்துத்துவகும்பலும் அம்மாவிடுதலையை வரவேற்கிறது. முரளிதர் ராவ் வரவேற்பு (அது யாருடா முரளிதர் ராவ்வுன்னு கேட்டா, தமிழ் நாட்டு பிஜேபிக்கு தலைமைப் பொறுப்பாளராமே! கெரகம்!)
13. பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை விடுகிற ஊளைச்சவுண்டு ஒருபக்கம். சொர்ணாக்காவின் கருத்துப்படி மோடியின் வாழ்த்து அரசியல் நாகரிகமாம்!
14. டி.ராஜேந்தர், ரசினி வாழ்த்து! தயாரிப்பாளர் சங்கம் தங்களது பிரச்சனைகளை தாயுள்ளத்தோடு அணுகச் சொல்லியிருக்கிறது! சனநாதன் அரசும் புரட்சியும் படைப்பை ஆர்யா கையில் கொடுத்து பிலிம் எடுத்தது போதாது என்று படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துவிட்டதால் அம்மாவிடம் வரிச்சலுகை வேண்டி கோரிக்கை வைக்கிறார்.
ஒட்டுமொத்த நீதித்துறை, ஊடகங்கள், பணக்கார கும்பல்கள், பொறுக்கித் தின்னும் ஆளும்வர்க்க அடிமைகள் ஒன்று சேர்ந்து ஆடுவதற்கு காரணம் மக்களை முட்டாளக் கருதுவதும் மக்களால் தங்கள் கெண்டைக்கால் மயிரையும் பிடுங்கிவிடமுடியாது என்கிற இறுமாப்பும் தான்.
இந்த அரசுக் கட்டமைப்பு அழுகி நாறுகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் இருக்க முடியும்?
இடது சாரி இயக்கத் தோழரிடம் பாண்டே வாங்கிய செருப்படி… time at 1:01:40 மற்றும் 1:08:20
அம்மா வழக்கும், அய் பி எல் சீனு வழக்கும் கடலுக்குள் அமிழ்ந்திருக்கும் மிகப்பெரிய பாறையின் மிகச்சிறிய கூர்முனை! மோடி மற்றும் அமிட்ஷா வகையறாக்கள் வெறும் சிகன்டிகளே! பின்னணி அமெரிக்க மாமா ஆதரவுடன் ஆர் எஸ் எஸ்!
மாலன் சார்ந்திருக்கும் வேந்தர் குழுமம் கொளுத்த பணபலம் உடையது என்பது அனைவரும் அறிந்ததே! வெளியுலகுக்கு நியாயத்தை சொல்பவர் போல காட்சியளித்தாலும், அவர் சார்ந்த குழுமத்தின் குரலாக மாலன் இருக்கிறார். வேந்தர் குழுமம் அரசுக்கு ஜால்ரா அடிப்பது ஜெயா மீதான உண்மையான பாசம் அல்ல. ஜெயாவுக்கு தூபம் போட்டால் நாம் பிழைத்துக் கொள்ளலாம், எதிர்பாராத அரசின் அதிரடி நடவடிகளை இருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ளலாம் என்பதே! இந்த சூத்திரத்தையே அநேக பத்திரிக்கைகள் கடைபிக்கின்றன. அனால் நியாயஸ்தன் போன்று முகமூடி அணிந்து கொண்டு மாலன் செய்யும் அநியாயம் அனைவருக்கும் தெரிகிறது. மாலன் முகமூடியை யாரும் அறியாத வகையில் இறுக்கமாக அணிந்து கொள்வது நல்லது.