இந்த வாரம் 26.06.2017 முதல் 30.06.2017 வரை வினவு தளத்தில் வெளியான 32 குறுஞ்செய்திகளின் இணைப்புக்கள் இந்தப் பதிவில் இடம் பெறுகின்றன. இந்தக் குறுஞ்செய்திகளில் அமெரிக்கா, மத்திய கிழக்கு, அறிவியல், ஆவணப்படங்கள, புகைப்படக் கட்டுரைகள், செய்தி வீடியோக்கள், பாஜக – மோடி அரசின் மீதான விமரிசனச் செய்திகள், தமிழக அரசியல் – செய்திகள் என பல வகைகள் இருக்கின்றன. இந்தக் குறுஞ்செய்திகள் குறித்து உங்கள் ஆலோசனைகள், கருத்துக்கள்,விமரிசனங்களையும் அறியத் தாருங்கள்! நன்றி
– வினவு
மெரினா நட்சத்திரங்களே வாருங்கள் ! காஞ்சிபுரம் கல்லூரியில் புமாஇமு வரவேற்பு கல்லூரி மாணவர்கள் மத்தியில் இத்தகைய வரவேற்பு நிகழ்ச்சி என்பது நம்பிக்கையையும் உற்ச்சாகத்தையும் நாம் அமைப்பாக வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளது. |
திருவாரூர் : ஆக்கிரமிக்கப்பட்ட குளத்தை மீட்டது மக்கள் அதிகாரம் ! அரசாங்க இடத்தில் உள்ள குளம் ஊர்ப்பொதுமக்களுக்கே சொந்தம் என்ற முழக்கத்தோடு ஊர்ப்பொதுமக்கள் மக்களதிகாரம் அமைப்புத் தோழர்களோடு இணைந்து குளத்தை சுத்தம்செய்து தூர்வாரினர். |
கருவேப்பிலங்குறிச்சி மணல் குவாரியை மூடு ! மக்கள் அதிகாரம் ஏரி, குளம், கண்மாய்களை ஆக்கிரமித்து எஸ்டேட்டுகளாக மாற்றி விவசாயத்தின் அழிவிற்கு காரணமான எந்த துறை அதிகாரிகளும் அமைச்சர்களும் தண்டிக்கப்படாத போது விவசாயி மட்டும் ஏன் சாக வேண்டும்? |
எண்ணூர் துறைமுகத்தை தனியாருக்கு விற்கும் மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்து சுமார் ரூ.15,000 கோடியை திரட்டவிருப்பதாக இந்த ஆண்டின் நிதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது, மத்திய அரசு. |
பெண் கிரிக்கெட் வீரர்களை இந்தியா போற்றுவதில்லை – ஏன் ? பெண் வீரர்கள் திறமைசாலிகளாக மட்டும் இருந்தால் போதாது, விளம்பரங்களில் தோன்றுமளவு ‘சாமுத்திரிகா இலட்சணத்தோடும்’ இருக்க வேண்டும். |
கள்ள நோட்டடித்த கேரள பாஜக தலைவர் கைது ! பாஜக யுவ மோர்ச்சா பிரமுகர் ராகேஷின் வீட்டில் இருந்து 1.4 லட்ச ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. |
அமெரிக்க மண்ணில் மோடியின் ரத்தக்கறை ரமலான் வாழ்த்து ! அமெரிக்க முதலாளிகளிடம் அவர் பேசும் கருணை முகம் மட்டுமல்ல, இந்தியாவில் முசுலீம் மக்களை ஒடுக்கும் அவரது கொடூர முகமும் கூட உண்மையானதுதான். |
பொறுக்கி நித்தியானந்தாவிற்கு எதிராக புஜதொமு பிரச்சாரம் ! தினசரி மாலையில் சாப்பாத்தி மாவாவில் காஞ்சாவை கலந்து தின்பதும் கஞசவை புகைப்பதும்தான் இந்த கும்பலின் ஆன்மீக பணியாக உள்ளது. |
ஒரே நாளில் டாஸ்மாக்கை மூடிய திருச்சி பெருவளப்பூர் மக்கள் !
ஒரு சாதிக்காக கட்டப்பட்டிருந்த சமுதாயக்கூடம் அனைத்து பிரிவு உழைக்கும் மக்களின் சமபந்திக் கூடமாக மாறியது. சாதி கடந்த ஒற்றுமை தான் போராட்டத்தின் அழகு என பறைசாற்றியது. |
ஏழைகள் என்று வீட்டுச் சுவற்றில் எழுதுவது ராஜஸ்தானில் கட்டாயம் ! பத்து கிலோ கோதுமைக்காக நாங்கள் இந்த அவமானங்களையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.. எங்கள் வீட்டுச் சுவர்களை அரசு அதிகாரிகள் அசிங்கம் செய்து வைக்கிறார்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் எங்களைக் கேலி செய்கிறார்கள். |
தெற்கு சூடான் – உள்நாட்டுப் போரில் உருகுலையும் புதிய நாடு தீவிரவாதம், சமாதானம், உதவி, வாணிபம் என்று உலகெங்கிலும் அமெரிக்கா கால் பதித்த நாடுகளில் வன்முறை, படுகொலை, அரசியல் குழப்பம், ஆட்சி கவிழ்ப்பு, பலி வாங்குதல் என்பது தான் நடைமுறையாக இருக்கிறது |
நீங்கள் இதைப் படித்து முடிப்பதற்குள் ஒருவர் புலம் பெயர்ந்திருப்பார் ! அப்பாவி மக்கள் போர் மற்றும் கலவரங்களால் இடம்பெயர்வது கடந்த எழுபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அறிவிக்கிறது ஐ.நா-வின் அறிக்கை. |
மைசூர் கலாமந்திரில் மாட்டுக்கறியால் புனிதம் கெட்டதாம் ! கலாச்சாரத்தைப் பேசும் இடத்தில் கறிவிருந்தா? இந்த இடத்தின் புனிதம் கெட்டுவிட்டது என்றும் சாமியாடியுள்ளார். கோமூத்திரத்தை மாவிலையால் தொட்டுத் தெளித்து அந்த இடத்தின் புனிதத்தை மீட்டுள்ளனர். |
எஸ்.வி.சேகர் : ஒரு பூணூல் உண்மை பேசுமா ? வீடியோ ஆதாரம் நியூஸ் 7 விவாதத்தில் யார் அடாவடி செய்தார் என்பதை இந்த வீடியோ நிரூபிக்கிறது. எஸ்.வி.சேகர் கூறும் குற்றச்சாட்டுக்களை செய்தவர் மதிமாறனல்ல, நாராயணன்தான். |
பங்குச் சந்தையில் திறன் நகரங்கள் : நகராட்சிகளும் இனி தனியார்மயம் ! இதுவரை அரசுக்குச் சொந்தமாக தனித் தனிப் பொதுத் துறை நிறுவனங்களாக தனியார்களுக்கு விற்றுக் காசாக்கி வந்த ஆளும் கும்பல், இப்போது மொத்தமாக நாடு நகரங்களைத் தனியாருக்கு தாரைவார்க்கத் துணிந்து விட்டது |
பிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒரு தேசமே ஒரு பிக்பாஸின் ரியாலிட்டி ஷோவா மாறிவிட்டது |
மேற்குவங்கத்தில் பாஜகவின் மதக் கலவரத் திட்டம் மேலதிகமாக மாட்டுக்கறி வைத்திருந்தாலோ, மாட்டை ‘திருடினாலோ’ யார் வேண்டுமானாலும் அவர்களைக் கொல்லலாம் எனும் காட்டு தர்பார்தான் முக்கியமானது. |
தமிழகம் முழுவதும் ஜி.எஸ்.டி வரியை எதிர்த்துப் போராட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களுக்கும், ப்ரெய்லி நூல்களுக்கும் இருந்த வரிவிலக்கை இரத்து செய்துவிட்டு 5% முதல் 18% வரை ஜி.எஸ்.டி. வரி விதித்திருக்கிறது மத்திய அரசு. |
எனக்கு ட்ரம்ப் பொம்மைதான் வேண்டும் – மெக்சிகோ குறும்படம் சாரா கிளிஃப்ட் எழுதி இயக்கியிருக்கும் இந்தக் குறும்படம் நறுக்கென்று ஒரு குழந்தையின் பார்வையில் அமெரிக்காவை எதிர்க்கிறது. |
உ.பி முதல்வரின் ஹிந்து யுவவாகினி மீது பாலியல் வன்முறை வழக்கு ஒரு வேளை போலீசை அந்தக் கிரிமினல் கும்பல் தாக்கியிருக்கவில்லையெனில் ரவுடி ஆதித்யநாத் ஆளும் மாநிலத்தில் இவ்வழக்கு கண்டிப்பாக ஊற்றி மூடப்பட்டிருக்கும் |
பா.ஜ.க ஆட்சியில் கொலைகள் – குற்றங்கள் அதிகரிப்பது ஏன் ? ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை முற்றிலும் முறியடிக்காதவரை தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் விடிவு இல்லை என்பது மட்டும் உறுதி. |
பரலோகத்தில் இருக்கும் பிதாவே ! கார்டினல் பெல்லை மன்னியாதிரும் ! தற்போது வாடிகனின் நிதித்துறை தலைவராக இருக்கும் கார்டினல் பெல் தனது சொந்த ஊரான ஆஸ்திரேலியாவில் இருந்த போது குழந்தைள் மீது பாலியல் கொடுமைகளை செய்திருக்கிறார். |
குட்கா ஊழல் : யார் தண்டிக்க முடியும் ? தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நடந்து வரும் பல்வேறு குற்றச் சம்பவங்களும், கார்ப்பரேட் கொள்ளைகளும் இங்கிருக்கும் அதிகாரவர்க்கத்தின் துணையோடு தான் நடந்து வருகின்றன. |
கருத்துக் கணிப்பு : மோடியின் ஏமாற்றுப் பேச்சை ஊடகங்கள் வெளியிடுவது ஏன் ? இன்றும் அவர் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறவில்லை. மறைமுகமாக பசுவின் புனிதத்தை உறுதிப்படுத்தியதோடு, வன்முறையை நீங்கள் கையில் எடுக்காதீர்கள் (சட்டமே தண்டிக்கும்) என்று கூறியுள்ளார். |
அமெரிக்கா : குருதி விற்பனையில் உயிர் வாழும் ஏழைகள் அமெரிக்காவில் ஏழைகளின் அவலத்தை பயன்படுத்தி, வணிக நிறுவனங்கள் அவர்களது குருதியை வாங்கி அதிக இலாபம் வைத்து விற்கின்றன. |
மதிமாறனை மிரட்டும் பாஜக கும்பலைக் கண்டித்து சென்னைப் பல்கலையில் ஆர்ப்பாட்டம் ! ஆர்ப்பாட்டத்தின் போது பெண் ஒருவர் ‘நானும் பாப்பாத்தி தான் பாப்பானையும், பாப்பாத்தியையும் பத்தி பேச நீங்க யாரு? உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு? நீங்க எப்படி பேசலாம்’ என சாமியாடினார். |
பழனியில் ஆட்டம் போட்ட ஜீயர் + இந்துமதவெறிக் கும்பலுக்கு அடி உதை ! இந்த சம்பவம் நடக்கையில் இதன் சூத்திரதாரியான ஜீயர் தனது காரை எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார். அந்த வழியாக வந்த பேருந்தின் மீது கல் வீசி வீசினர் இந்து மதவெறி அமைப்பினர். |
இந்த நாட்டின் இதயமற்ற அரசரே …… “முஸ்லீம்கள் யாரிடமும் எதைப்பற்றியும் விவாதிக்காதீர்கள் முக்கியமாக உங்கள் உணவைப்பற்றியோ நீங்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான் என்றோ உரத்துப் பேசாதீர்கள் கிசுகிசுக்கக்கூட செய்யாதீர்கள் நீங்கள் பத்திரமாக வீடு திரும்புவதற்கு அது மிகவும் அவசியம்’’ |
அதிபர் ட்ரம்ப் ஜொள்ளு வடிப்பதை ரசிக்கும் தினமணி சக பத்திரிகையாளர் இழிவுபடுத்தப்பட்டது கூட தினமணிக்கு பிரச்சினையில்லை என்றால் இவர்கள் அன்றாடம் ஊருக்கும், உலகுக்கும் அள்ளிவிடும் உபதேசங்கள் அனைத்தும் முழு ஏமாற்றுதானே? |
யூ டியூப் வீடியோ வைரலாவதற்கு சாக வேண்டுமா ? வீடியோ வைரலாக வேண்டுமென்ன்றால் அந்த அதிபுதுமை சரக்கு வேண்டும். இல்லையேல் உங்களை இலட்சக்கணக்கானோர் பார்க்க வாய்ப்பில்லாமலே போய்விடும். |
சபர்மதியில் தெறித்த மோடியின் எச்சில் காயும் முன் ஜார்கண்டில் கொலை ! பசுபயங்கரவாதம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ தீவிரவாத கும்பலால் ஜாடியில் இருந்து விடுவிக்கப்பட்ட பூதமான பசுபயங்கரவாதம், தற்போது சொந்தமுறையில் இயங்கி வருகின்றது. |
நியாம்கிரியில் தி இந்துவுக்கு 3-வது அடி : இயற்கை வளம் பறிபோவதை கிராமசபை தடுக்க முடியாது ! மோடி ஆட்சியில் விஷ்ணு அவதாரம் தொடர்வதும் இந்தியாவின் வாமன தொல்குடிகள் கொல்லப்படுவதும் தற்செயலான நிகழ்வல்ல! இந்துத்துவ பார்ப்பனியத்தின் பூர்வாங்க செயல்திட்டம் இதுவே! |
Good.very short and sharp.
I. Like your style of presentation.