இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் தங்களின் அடிப்படை ஊதியத்தை 1000 ரூபாயக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாடுதழுவிய அளவில் இன்று (23.01.2019) போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் பல்வேறு இடதுசாரி அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். தங்கள் உடலை உருக்கி, உயிரைக் கரைத்து தேயிலைத் தோட்டங்களை உருவாக்கிய தொழிலாளிகளின் அடிப்படை ஊதியப் போராட்டத்தை ஆதரிப்போம் !
போராட்டம் நடைபெரும் இடங்கள் :
1. கேகாலை தெஹிஓவிட்ட
2. பதுளை நகர் காலை 10 மணிக்கு
3 ஹப்புதளை நகர் பகல் 12 மணிக்கு
4. தெமோதர பகல் 12 மணிக்கு
5. அட்டாம்பிட்டிய பகல் 12 மணிக்கு
6. யாழ்ப்பாணம் மாலை 3.00 மணிக்கு பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில்
7. கிளிநொச்சி காலை 10 மணிக்கு மார்கட்டுக் அருகில்
8. வவுனியா காலை 10.00 மணிக்கு பழைய பேருந்தி நிலையத்திற்கு அருகில்
9. மாத்தளை ரத்தோட்டை பகல் 12 மணிக்கு
10. பகவன்தலாவ காலை 8.00 மணிக்கு
11. ஹட்டன்
12. மத்துகம மாலை 3.00 மணிக்கு
13. பதுரலிய மாலை 3.00 மணிக்கு
14 தலாவக்கலை
15. ராகல
16. நூரளை
17. தெல்தொட்ட
18. இரத்தினபுரி மாலை 3.00 மணிக்கு
19. கொஸ்கம நகர் மாலை 3.00 மணிக்கு
அதே போல அனைத்து முக்கிய பல்கலைக் கழகங்களுக்கு முன்பாக பகல் 12.00 மணிக்கு போராட்டம் நடைபெறவுள்ளது. போராட்டம் நடைபெரும் இடங்கள் :
20 ருஹுனு பல்கலைக் கழகம்
21. ஜயவர்தனபிர பல்கலைக் கழகம்
22. தென்கிழக்கு பல்கலைக் கழகம்
23. சபரகமுவ பல்கலைக் கழகம்
24. ரஜரட்ட பல்கலைக் கழகம்
25. களனி பல்கலைக் கழகம்
26 வயம்ப பல்கலைக் கழகம்
27. பேராதெனிய பல்கலைக் கழகம்
தகவல் :
சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, இலங்கை
முகநூல் பக்கத்திலிருந்து ..
இந்திய வாசகர்கள் அறிந்து கொள்ள
1000 ரூபா என்பது இந்திய 1000 ரூபா அல்ல
அது ஸ்ரீலங்கா ரூபா
இந்திய ரூபா 300 வுக்கு சமனானது
அதைவிட முக்கியம்
இந்தியாவை விட ஸ்ரீலங்காவில் பணவீக்கம் அதிகம்
எனவே இதை கொள்வனவு தகமை ( PURCHASE CAPACITY )கூட மிக குறைவானதே