அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் மோடியின் தேசிய கல்விக் கொள்கை 2019 – ஐ எதிர்த்து போராட்டம் !

ன்பார்ந்த மாணவர்களே, பெற்றோர்களே, பேராசிரியர்களே !

மோடி தற்போது கொண்டுவந்திருக்கும் தேசிய கல்வி கொள்கை 2019 இது பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையை பறிக்க கூடிய வகையில் உள்ளது. இதனை, எதிர்த்து தமிழகம் முழுக்க கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர் அமைப்புகள் என தொடர்ச்சியாக கருத்தரங்கம் – அரங்க கூட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் மோடி அரசு கல்வி கொள்கை சம்பந்தமாக இரகசிய கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அதையும் பல்வேறு அமைப்புகள் எதிர்த்து போராடி தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால் இதனை ஒவ்வொன்றாக மறைமுகமா நடைமுறைப்படுத்தி வருகிறது அரசு. அதில் நீட், கேட் எக்ஸிட் ,TANCET, NTA என பல்வேறு தேசிய தகுதித் தேர்வு வைத்து அதனை நடைமுறையில் படிப்படியாக கொண்டுவருவது.

மேலும் தற்போது இந்திய பட்ஜெட் தாக்கலின்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த கல்விக் கொள்கையை அமுல் படுத்தும் விதமாக 400 கோடி ஒதுக்கியது. ஆகிய இந்த நடவடிக்கைகள் ஒட்டுமொத்த இந்திய மாணவர்களுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும்.

ஏனென்றால் ஜூலை 31 வரை கருத்து சொல்லலாம் என சொல்லிவிட்டு, நடைமுறையிலோ இதனை அமுல்படுத்தி பார்ப்பன சூழ்ச்சி புத்தியை காட்டி வருகிறது ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பல்.

கல்வியை முழுவதும் தனியார்மயப்படுத்தவும், காவிமயப்படுத்தக் கூடிய வகையில் இருக்கிறது தே.க.கொ 2019. இட ஒதுக்கீடு, உதவித்தொகை என எல்லாவற்றையும் ஒழித்து கட்டக்கூடிய வகையிலும்; 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு வைத்து ஏழை மாணவர்களை வெளியே தூக்கி எறியவும் போகிறது.

படிக்க :
♦ திருச்சி : கள்ளத்தனமாக நடத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை கருத்துக் கேட்புக் கூட்டம் முறியடிப்பு !
♦ தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிப்போம் ! – ஒரு நாள் கருத்தரங்கச் செய்திகள் படங்கள்

பல்கலைக்கழக  மானியக் குழுவை கலைத்துவிட்டு, உயர்கல்வி ஆணையம் அமைகிறது; இதன் தலைவர் பிரதமர் மோடி ஆவார். கல்வியாளர்களுக்கு இதில் இடமில்லை, இவ்வளவு ஆபத்து நிறைந்த நயவஞ்சகமான கல்விக்கொள்கை கூடாது.

இதனை வலியுறுத்தியும், தேசிய கல்விக் கொள்கை 2019-யை நிராகரிக்க வேண்டும் என்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் கடந்த 24.07.2019 அன்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை பேராசிரியர்களும் ஆதரித்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் தொடர் போராட்டம் நடக்கும் என அறிவித்து மாணவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கடலூர் மாவட்டம். தொடர்புக்கு : 97888 08110