வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். கொடி அகற்றிய அலுவலர் கிரண் டாம்லே பதவி பறிப்பு! காவிக் கும்பலிடமிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்டெடுப்போம்!

த்திரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகமானது ஆர்.ஆர்.எஸ். சித்தாந்தவாதியான மதன் மோகன் மால்வியாவால் தோற்றுவிக்கப்பட்டது என்றால், அங்கு இந்து ராஜ்ஜியம்தானே!

பனாரஸ் இந்துப் பல்கலை கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். சாகா நடைபெறுவது வாடிக்கையான ஒன்று.

இதனை பறைச்சாற்றும் விதமாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘ஷாகா’ கூட்டம் அப்பல்கலைக்கழகத்தில் தினமும் நடக்கும். வழக்கம்போல் நேற்றும் அக்கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த மாணவர்கள் தங்களது கொடியை நட முயன்றுள்ளனர்.

கிரண் டாம்லே.

‘இப்போதுள்ள சூழலில், ஒரு மதம் சார்ந்த கொடியை நடுவதற்கு அனுமதியில்லை’ என பல்கலைக்கழக அலுவலர் கிரண் டாம்லே கூறியுள்ளார். அதனையும் மீறி நடப்பட்ட கொடியினை பிடிங்கி எறிந்த கிரண் டாம்லேவை பதவி நீக்கம் செய்யவேண்டும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கையை ஏற்ற பல்கலைக்கழக நிர்வாகம் கிரண் டாம்லேவையே ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளது. வேறுவழியில்லாமல் கிரண் டாம்லே ராஜினாமா செய்தார்.

அதோடு விட்டுவிடவில்லை, மிர்ஷாபூர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் புகார் தெரிவிக்க, அவர்கள் போலீசில் புகார் தெரிவித்து கிரண் டாம்லே-வை அச்சுறுத்தி வருகிறார்கள்.

இந்து – இந்தி – இந்தியா என்ற இந்து ராஷ்டிரத்தை அடையத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். பாஜக கும்பல், முதல் கட்டமாக உயர்கல்வி நிறுவனங்களை கைப்பற்றியுள்ளது.

”பாதுகாப்பற்றச் சூழலில் பனாரஸ் இந்துப் பல்கலை” – மாணவர்கள் போராட்டம்.

இங்கு, சென்னை ஐ.ஐ.டியில் மத – நிர்வாக ஒடுக்குமுறையால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட ஃபாத்திமா லத்தீஃப்பின் தாய் கூறியதை நினைவுக் கூறவேண்டும். “முதலில் அவளுக்கு பனாரஸில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது. ஆனால் வட மாநிலங்களில் நிலவும் கும்பல் படுகொலையை நினைத்து நாங்கள் அஞ்சினோம்”. அந்த தாய் கூறியது தற்போது நமது கண்முன்னே சான்றாகிவிட்டது.

படிக்க:
பாத்திமா தற்கொலை : பேராசிரியர் சுதர்சன் பத்மனாபனை கைது செய் ! புமாஇமு கண்டனம்
அன்றாடம் 31 விவசாயிகள் தற்கொலை : 3 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம் !

இப்படி மாணவர்களை சாதி, மத, இன, மொழி ரீதியாக ஒடுக்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பலை கல்வி நிறுவனங்களில் இருந்து விரட்டியடிப்போம்!


த.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

1 மறுமொழி

  1. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் தீமைகளின் அச்சு. இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிரான அனைத்து கொள்கைகளின் தோற்றுவாய். தென்னிந்திய மக்களை, தேசிய மொழி என, தலைவலியாக பிடித்த இந்தியின் தூய வடிவம் (அதாவது சமஸ்கிருத தன்மை மிகுந்த) இங்குதான் உருவானது. இங்கு புடம் போடப்பட்டு வெளிவரும் உயர்சாதியினர் நாட்டின் மற்ற பகுதிகளில் இருக்கும் மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில், பதவியில், உட்கார்ந்துகொண்டு, ஆர்எஸ்எஸ் கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார்கள். மற்ற உயர்கல்வி நிறுவனங்களில் படித்து பதவியில் இருப்பவர்களை விட அதிக செல்வாக்கு உள்ள இவர்களால் அதிக நிதி ஆதாரங்களை மத்திய அரசு நிறுவனங்களில் இருந்து பெற முடிகிறது. எல்லாம் அரசியல். புதுவை பல்கலையில் உயிரியல் துறையில் மேற்படி ஆள் ஒருவன் பேராசிரியராக இருபது ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறான். வட இந்தியாவின் ஆதிக்க சாதிகளில் ஒன்றான கயஸ்தா பிரிவை சேர்ந்தவன். பச்சையான ஆர்எஸ்எஸ் வெறியன். இவனுக்கு சொந்த ஊரே பனாரஸ் தான். இவனிடம் சேர்ந்த தென்னிந்திய மாணவர்கள் யாரும் தற்கொலை செய்ய வில்லையே தவிர மற்றபடி எல்லாவிதமான சித்திரவதைகளையும் அனுபவித்திருக்கிறார்கள். புதுவை பல்கலைக்கழகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளின் தலைவராக வலம்வரும் இவன் அதற்காக ஆராய்ச்சி மாணவர்களை கடுமையாக சுரண்டியது ஒரு சிலருக்கு மட்டும் தெரியும் உண்மை. அவர்ணா பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் ஆய்வு காலத்தை இழுத்தடிப்பது, தரக்குறைவாக ஏசுவது, மாணவர்களுக்கிடையே பகையை தூண்டிவிடுவது, பெயரை கெடுப்பது, ஆராய்ச்சிக்கு நுணுக்கமான முறையில் தவறாக வழிகாட்டுவது ஆகிய அத்தனை சில்லரைத்தனங்களையும் செய்யும் இவன் இந்த புதுவை பல்கலையின் தூணாகவும் பெரும் சாதனையாளனாகவும் வலம் வருகிறான். இமேஜ் பில்டப். மத்தியில் இருக்கும் அதிகார சக்திகள் கூட இருக்கும் நெருக்கத்தை வைத்து மற்ற பேராசிரியர்களைவிட அதிக நிதியையும் இவன் பெறுகிறான். இந்துத்துவ, வடஇந்திய, உயர்சாதி அரசியல் ஆதிக்கத்துக்கு பனாரஸ் பல்கலைக்கழகமும் அதில் புடம் போடப்பட்ட இவனும் சரியான உதாரணங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க