தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் : நான் வளர்கிறேனே மம்மி… !
கருத்துப்படம் : வேலன்
படிக்க:
♦ ரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் !
♦ பெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் !
தள்ளாத வயதிலும் ‘துகுலஹு’ படித்து தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். -ஐ வளர்க்க பெரும்பாடு படும் ’தலைவர்’.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் : நான் வளர்கிறேனே மம்மி… !
கருத்துப்படம் : வேலன்
படிக்க:
♦ ரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் !
♦ பெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் !
தமிழகத்தில் தீயமுக அழியும் நாளே உண்மையில் பொன் நாள்.
அரசியலில் ரஜினி
2020ல் இறுதியில் அரசியல் கட்சி மற்றும் சின்னம் ஒன்றை சூப்பர் ஸ்டார் பதிவு செய்தால் பீசப்பி அரசு ஒரு சில நாட்களிலேயே அதை அங்கீகரித்து வழங்கிவிடும். மற்றவர்களுக்கு மட்டுமே சில பல மாதங்கள் தாமதமாகும்.
கட்சியின் கொள்கை என்ற ஒன்றை அறிவிக்க வேண்டுமே? ஆன்மீகம்தான் கட்சியின் கொள்கை என்று ஒற்றை வரியில் ரஜினி அறிவித்து விடுவார்.
கட்சியின் துணை தலைவர்களாக இப்போது உள்ள ரசிகர் கூட்டத்திலிருந்தும் பழைய கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தலைவர்கள் சிலரையும் தேர்வு செய்யும் முன்பாக, அவர்கள் எவ்வளவு ஆன்மீகப் பற்று உள்ளவர்கள் என்பதை அறிய, அவர்கள் கைகளில் எத்தனை பக்திக் கயிறு கட்டி உள்ளார் அல்லது பூணூல் அணிந்தவரா என்பதை அறிந்து அதற்கேற்ப கட்சி பதவிகள் வழங்கப்படும்.
2021ல் தேர்தல் தேதி அறிவித்த பிறகு எந்த கட்சியுடனும் கூட்டு சேராமல் தன்னந் தனியாவே 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடலாமா அல்லது பீசப்பி அல்லது பாமக வுடன் கூட்டணியா என்று முடிவு செய்ய வேண்டிய நேரத்தில் தலையே சுற்றி விடும். குருமூர்த்தியின் கட்டளைப்படி பீசப்பியுடன் கூட்டணி முடிவு செய்யப்படும்.
ரஜினி போட்டியிடும் தொகுதியில் எதிர் கட்சி சார்பாக சினிமாத் துரையைச் சார்ந்த ஒரு இளம் சிங்கம் போட்டியிட்டு ஆன்மீக அரசியலை வீழ்த்தினால் கதை கந்தலாகிவிடும். தேர்தல் நேரத்தில் வேறு சிலரது ரசிகர் மன்றங்களும் சில அரசியல் கட்சிகளும் ரஜனிக்கு எதிராய் ஒன்றாய் சேர்ந்து சதி வேலைகள் செய்தால் ரஜினியின் சூப்பர் கட்சியின் நிலமை படு மோசமாகிவிடும். உடனே பிசப்பி உதவுவது போல் வந்து ரஜினியை தன்னுடன் ஐக்கியப் படுத்தி விடும்.
கர்ம வீரர் காமராஜரை காணாமல் ஆக்கியதே இந்த தேர்தல் களம்தான்!. தேர்தல் நேரத்தில் சில விரும்பத் தகாத தனி மனித தாக்குதலை சந்திக்க நேரிடும். தமிழகம் முழுதும் வலம் வந்து கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேச வேண்டும். சிங்கப்பூரில் ஒட்டிய சிறுநீரகம் ஒத்துழைப்பு தர வேண்டும். அப்போலோவின் மூன்றாம் மாடி ஆயத்த நிலையில் இருக்க வேண்டும். ஆகவே, ரஜினி அவர்கள் இப்போது இருக்கும் நல்ல பேரையும் புகழையும் இழக்காமல் இருக்க அரசியலுக்கு வருவதை அன்புகூர்ந்து கட்டாயம் மறு பரிசீலனை செய்திட வேண்டும்.