வஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வுப் பிரிவில் முன்பு பணியாற்றிய பேராசிரியர் விஜயா ராமசாமி சென்னையில் கடந்த நான்காம் தேதி உரையாற்றவதாக இருந்தது. Reluctant Brides, Deviant Wives and Cunning Witches: Women in Tamil Mahabharatas, focusing on Draupadi, Alli and Aravalli-Suravall என்பதுதான் தலைப்பு. அடிப்படையில், தமிழில் எழுதப்பட்ட மகாபாரதங்களில் திரௌபதி, அல்லி, ஆரவல்லி, சூரவல்லி ஆகிய பெண் பாத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் குறித்த உரை அது.

பேராசிரியர் விஜயா ராமசாமி

ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு சில சக்திகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், அது ரத்துசெய்யப்பட்டது. அந்த உரையின் சற்ற சுருக்கப்பட்ட வடிவத்தை தி வயர் இணைய தளம் வெளியிட்டிருக்கிறது.

விஜயா ராமசாமியின் கட்டுரை அடிப்படையில், ஒரு ஆய்வுக் கட்டுரை. யாரையும், எந்த மதத்தையும் புண்படுத்தும் நோக்கமோ, அம்மாதிரியான தகவல்களையோ கொண்ட கட்டுரையல்ல. இருந்தபோதும் எதிர்ப்பு.

அந்தக் கட்டுரையின் சுருக்கம் இதுதான்:

1. மகாபாரதம் அடிப்படையில் ஆண்களால் ஆண் மையத் தன்மையுடனும் பிராமணத்தன்மையுடன் எழுதப்பட்ட ஒரு காப்பியம். சமஸ்கிருத – பிராமண ஆண்மைய உலகில் பெண்களுக்கு இருக்கும் இடம்தான், இந்தக் காப்பியங்களில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

2. பிராந்திய மொழிகளில் மகாபாரதம் எழுதப்பட்டபோது, அவற்றின் மையம் மாறியது. துரியோதனன், கர்ணன் போன்ற ‘தீய’ சக்திகள், அவ்வளவு தீய சக்திகளாக இல்லை.

3. திரௌபதி, காந்தாரி, கர்ணனின் மனைவி பொன்னருவி ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சமஸ்கிருத் மகாபாரதத்தில் கர்ணனின் மனைவியின் பெயர் வ்ருஷாலி. தமிழில் எழுதப்பட்ட சில மகாபாரதங்களில் பொன்னருவி.

படிக்க:
♦ தேசிய அவமானம் : வட இந்தியாவில் 49% குடும்பங்கள் தீண்டாமை கடைபிடிக்கின்றன !
♦ மிஷ்கின் என்னும் பிளாஸ்டிக் எம்.ஜி.ஆர்

4. குஜிலி புத்தகங்களாக வெளிவந்த மகாபாரதக் கதைகளில் ஆன்டி – ஹீரோக்களுக்கும் எல்லைகளைத் தாண்டிய பெண்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

5. தமிழ் பாரதங்களில் அல்லி, பவளக்கொடி, உலுப்பி, மின்னொளியால் போன்றவர்கள் அர்ஜுனனை மணந்தார்கள். வியாச பாரதத்தில் இவர்களுக்கு இடமே இல்லை. இவ்வாறாக, குஜிலி பாரதங்களில் மகாபாரத காப்பியத்தின் மையம் வேறு இடத்திற்கு, குறிப்பாக பெண்களை நோக்கி நகர்த்தப்பட்டது.

6. தமிழ்நாட்டில்தான் திரௌபதி மிகப் பெரிய கடவுளாக வணங்கப்படுகிறாள். தமிழ்நாட்டில் திரௌபதி அல்லது பாஞ்சாலிக்கு 300-க்கும் மேற்பட்ட கோவில்கள் உண்டு. சில ஜாதியினர் காந்தாரியையும் வணங்குகிறார்கள்.

7. பூ மிதிக்கும் நேர்த்திக்கடன் பெரும்பாலும் திரௌபதி அல்லது காந்தாரிக்காகவே செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல தமிழர்கள் வாழும் ஃபிஜி, ரி யூனியன் தீவுகளிலும் இப்படி நடக்கிறது.

8. மதுரையை ஆண்ட மலையத்வஜ பாண்டியனின் மகளாகப் பிறந்த அல்லியின் கதை, ஏதோ ஒரு வகையில் மகாபாரதத்துடன் இணைக்கப்பட்டு, பாட்டாக படிக்கப்படுகிறது; நாடகமாக நடிக்கப்படுகிறது.

9. முடிவாக என்ன சொல்கிறார் என்றால், தமிழ் மகாபாரதங்கள் ‘குஜிலி’ எழுத்து வடிவிலும் சரி, நாடகங்களிலும்சரி, ஜாதி – பால் பேதங்களைத் தகர்க்கின்றன. சமஸ்கிருத மகாபாரதத்திற்கும் தமிழ் பாரதங்களுக்கும் இடையில் உள்ள முக்கியமான வித்தியாசம் இது.

மேலே உள்ள content -ல் மணம் புண்படுவதுபோல என்ன இருக்கிறது?

த வயர் கட்டுரைக்கான இணைப்பு. கண்டிப்பாக படியுங்கள். முதல் வாசிப்பில் புரியவில்லையெனில் இன்னொருக்க படிக்கலாம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் முரளிதரன் காசி விஸ்வநாதன் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க