சமூக செயற்பாட்டாளர் தோழர். வரவரராவ் உள்ளிட்ட 11 சமூக ஆர்வலர்களையும் சிறையிலிருந்து உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி! திருச்சியில் உறையூர் குறத்தெரு பகுதியில் 20.07.2020 காலை 11 மணியளவில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தலைமையில் அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர். சரவணன். தலைமையேற்று நடத்தி வைத்தார்.
கண்டன உரையாற்றியவர்கள்:
- தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அய்யா ம.ப.சின்னதுரை
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தோழர் தமிழாதன்
- திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட செயலாளர்.தோழர். புதியவன் மற்றும் வழக்குறைஞர் தோழர். சந்துரு
- ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர்.தோழர். சம்சுதீன்
- மக்கள் உரிமை மீட்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் தோழர். பஷீர்
- மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலாளர் வழக்குறைஞர். தோழர். முருகானந்தம்
- சமூக நீதிப் பேரவையின் மாவட்ட செயலாளர் தோழர். ரவிக்குமார்
- புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர். சுந்தர்ராஜ்
- ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர். மணலிதாஸ்
- புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்டச் செயலாளர் தோழர். பிரித்தீவ்
- மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர். ராஜா
- மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு தோழர். சத்யா
இறுதியாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர். ஜீவா கண்டன உரையாற்றி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.
மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர். பரமசிவம் நன்றியுரை கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும் சிறையில் உயிருக்கு போராடும் தோழர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப் பட்டது.
மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள், இயக்கங்கள்,அமைப்புகளை சேர்ந்தோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.