PP Letter head24.01.2022
முதலாவது கோவை மண்டல மாநாடு தோழர் ராஜன் தலைமையில்
வெற்றிகரமாக நடைபெற்றது.
பத்திரிகை செய்தி
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
முதலாவது கோவை மண்டல மாநாடு 24.01.2022 அன்று வெற்றிகரமாக நிறைவேறியது. கோவை  மண்டலத்தில் முறைப்படி தேர்தல் நடைப்பெற்று நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி  மண்டல குழுவிற்கான தேர்தல், தேர்தல் அலுவலர்களான தோழர்கள் முருகானந்தம், கின்சன் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

This slideshow requires JavaScript.

கோவை மண்டலத்திற்கு ஐந்து பேர் செயற்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டனர். கோவை மண்டலச் செயலாளராக தோழர் சங்கர், மண்டல இணை செயலாளர் தோழர் குமார், மண்டலப் பொருளாராக தோழர் மகேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கோவை கிளைக் தேர்தல் நடைபெற்றது. தோழர் ராஜன் கிளைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். உடுமலை பகுதி செயலாளராக தோழர் குமார் தேர்வு செய்யப்பட்டார். மேற்கண்ட இரண்டு கிளைகளிலும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
♦ காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
♦ பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைப்போம்!
♦ புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்!
ஆகிய முழக்கங்களின் அடிப்படையில் செயல்படுவோம் என உறுதியேற்றனர்.
தோழமையுடன்,

தோழர் சங்கர்
மண்டல செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்.
94889 02202.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க