சென்ற ஆகஸ்டு மாதம், நெல்லை நாங்குநேரியில் சின்னதுரை என்ற தலித் மாணவனை வீடுபுகுந்து மறவர் சாதியைச் சேர்ந்த மூன்று மாணவர்கல் சரமாரியாக வெட்டிப்பொட்ட சம்பவம், தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஆனால், நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தலித் மக்கள் மீது நடந்துவரும் தாக்குதல்களில் இது ஒரு சம்பவம் மட்டுமே. பள்ளர், பறையர், அருந்ததி மக்கள் மீது நாள்தோறும் தாக்குதல்கள் நடந்தேறி வருகின்றன. ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கணக்கில் கொண்டு பார்க்கும் போது, ஆதிக்கச் சாதியினரின் தாக்குதல் இலக்கில் தலித் மக்கள் இருக்கின்றனர் என்பதை கண் கூடாக பார்க்க முடிகிறது.
கடந்த சில மாதங்களாக, தமிழ்நாட்டில், குறிப்பாக தென்மாவட்டங்களில் ஆதிக்க சாதிவெறியர்களால் தலித் மக்கள் மீது ஏவப்படும் வன்முறைகளின் பல்வேறு பரிமாணங்கள், அவற்றிற்கான காரணங்கள், தலித் மக்கள் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்கான வழிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை இச்சிறு பிரசுரம் சுருக்கமாக முன்வைக்கிறது.
வெளியீடு: தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்: என்ன செய்யப்போகிறோம்?
விலை: ரூ.10/-
வெளியிடுவோர்: புதிய ஜனநாயகம்
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com
கைபேசி: 9444632561