Wednesday, June 24, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரக் கழகம்

மக்கள் அதிகாரக் கழகம்

மக்கள் அதிகாரக் கழகம்
190 பதிவுகள் 0 மறுமொழிகள்

ஈரானின் உயர்மட்ட தலைவர் காமேனி படுகொலை! அமெரிக்கா இஸ்ரேலின் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

பாசிச ட்ரம்ப் மற்றும் பாசிச நெதன்யாகு ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டு போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவதே இன்றைய அவசியமான நடவடிக்கையாகும். ஆகவே நாடு முழுவதும் உள்ள மக்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் இந்த பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

ஜே.என்.யு மாணவர்கள் மீதான பி.ஜே.பி போலீசின் அராஜக நடவடிக்கையை எதிர்த்து முறியடிப்போம்!

ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆதிக்கச் சாதி வெறி பிடித்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அண்ணல் அம்பேத்கரின் படத்தைத் திட்டமிட்டு அடித்து உடைத்த போலீஸ்காரர்கள் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

மாடக்கோட்டை ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்கு!

நடவடிக்கை எடுத்து பட்டா வழங்கவில்லையென்றால் தொடர் போராட்டம் நடத்த மாடக்கோட்டை மக்கள், மக்கள் அதிகாரக் கழகம், ஆதிதிராவிட நலச் சங்கம் மற்றும் பிற ஜனநாயக சக்திகள் தயாராகி வருகின்றனர்.

விவசாயிக்கும் விதைக்குமான உறவை முறித்துவைக்கும் வரைவு விதைகள் மசோதா 2025

ஒவ்வொரு பகுதியின் மண் வளம், நீர் வளம், காற்று போன்ற சூழலியல் காரணிகளுக்குத் தகுந்தாற்போல் தாக்குப்பிடித்து வளரும் வகையில் உள்ள பாரம்பரிய விதைகளைத் தரமற்றவை என்று கூறி அதை நிராகரித்து ஒரே மாதிரியான விதை வடிவங்களை உருவாக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக வருகிறது இந்த சட்டம்.

ஊபா (UAPA) சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை? | வெற்றிகரமாக நடைபெற்ற கருத்தரங்கம்

“ஊபா (UAPA) சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை?” என்ற தலைப்பில் 13-2-2026 அன்று மாலை 4:30 மணிக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணி, தலித் விடுதலைக் கட்சி, மக்கள் அதிகாரக் கழகம், சி.பி.ஐ(எம்-எல்) ரெட் ஸ்டார்...

பிப். 12: மத்திய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்!

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளான நிரந்தர வேலை, பணப் பயன்கள், 8 மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை,பேரம் பேசும் உரிமை இப்படி தொழிலாளி வர்க்கம் இது நாள் வரை போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளையும் பாசிச மோடி அரசு பறித்துள்ளது.

யு.ஜி.சி. புதிய விதிமுறைகளுக்கு தடை: இந்துராஷ்டிரத்திற்கான வழி அமைக்கும் நீதித்துறை!

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று அறிக்கை கொடுத்த மண்டல் குழுவைக் கண்டித்து வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்ப்பன - பனியா மதவெறி சக்திகள் போராடியதைப் போலவே இப்பொழுதும் போராடி தங்களுக்குத் தேவையானதை நிறைவேற்றிக் கொண்டனர்.

கறிக்கோழி விவசாயிகளின் போராட்டம் வெல்லட்டும்!

விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட ஒன்பது பேரைப் பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மீண்டும் பதற்றமாகும் நெல்லை! காரணம் என்ன?

ஒடுக்கப்பட்ட சாதியோ, ஆதிக்க சாதியோ, பிள்ளையைப் பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுது, யாரை இந்த சாதி நெருப்பு சாம்பலாக்குமோ என்ற பெரும்பயம் தென்மாவட்டத்து பெற்றோர்களின் அடிவயிற்றில் புளியை கரைத்துக் கொண்டிருக்கிறது.

‘சாதி’ தான் முக்கியம்; சாமியெல்லாம் அப்புறம்!

“சாமிக்கு தீட்டு ஏற்பட்டுவிட்டது எனக் கூறி கோவிலைப் பூட்டிய கோவில் நிர்வாகம் மற்றும் குருக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் ஏன் பூட்டப்பட்டுள்ளது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும், அறநிலையத்துறை மற்றும் போலீசு இவ்விசயத்தில் தலையிட வேண்டும்” என நொச்சிலி கிராம மக்கள் கோரியுள்ளனர்.

திருச்செந்தூர் அருந்ததிய இளைஞர் சாதிவெறிப் படுகொலை!

‘தனக்குச் சமமாக வந்து தன்னையே கேள்வி கேட்கிறானா’ என்ற சாதிய வன்மத்தோடு இந்த கொலை நடந்துள்ளது‌. தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதியின் பெயரிலான படுகொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

கபடி விளையாட்டில் தீண்டாமையைப் புகுத்தும் ‘தமிழ்நாடு ரெட்டி ஜன சங்கத்தை’ தடை செய்!

சமத்துவத்தின் அடையாளமான பொங்கல் திருவிழாவை சாதிய நஞ்சாக மாற்றும் வகையில், இந்தப் போட்டியில் "ரெட்டி சமுதாய இளைஞர்கள் மட்டுமே" பங்கேற்க வேண்டும் என்றும், வீரர்களின் சாதிச் சான்றிதழைப் பெற்று 'இ-ஸ்கேன்' செய்து சரிபார்ப்போம் என்றும் அந்தச் சங்கம் அறிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம்: இந்து மதவெறி பாசிஸ்டுகளின் குரலாக இரு நீதிபதிகள் தீர்ப்பு! | ம.அ.க.

அயோத்தி பாபர் மசூதி வழக்கு போலவே தொடக்கக் காலம் முதலே இந்த வழக்கை ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல் அணுகி வருகிறது. அயோத்தி வழக்கில் நீதிமன்றங்கள் எப்படி இந்து மதவெறி கும்பலின் கைப்பாவையாகச் செயல்பட்டனவோ, அப்படியேதான் இந்த வழக்கிலும் நீதிமன்றங்கள் செயல்பட்டு உள்ளன.

Venezuela President abducted! Fascist Trump’s fanatic pursuit of hegemony!

This attack on Venezuela, which has consistently fought and spoken out against the US aggression and fascist actions, is an attack on the people of the world.

வெனிசுலா அதிபர் கைது! பாசிச ட்ரம்ப்-இன் மேலாதிக்க வெறி!

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடியும் குரல் கொடுத்தும் வந்த வெனிசுலா மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் உலக மக்கள் அனைவரின் மீதும் நடத்தப்பட்டத் தாக்குதல் ஆகும்.