மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 19
பாவெலைப் பார்க்க அனுமதி கோரி அவள் மூன்று முறை சிறைக்குச் சென்றாள். பெரிய மூக்கும், சிவந்த கன்னங்களும் நரைத்த தலையும் கொண்ட போலீஸ்காரர்களின் ஜெனரல் ஒருவன் அங்கிருந்தான். ஒவ்வொரு முறையும் அவன் அவளிடம் இதமாகப் பேசி அனுமதி தரவே மறுத்துவிட்டான்.

“அம்மா, நீ இன்னும் ஒருவார காலமாவது பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஒருவாரம் கழியட்டும். அப்புறம் பார்க்கலாம். ஆனால் இப்போது மட்டும் அது முடியாத காரியம்” என்பான்.
அவன் உருண்டு திரண்டு கொழுத்துப்போய் இருந்தான், பழுத்து அதிக நாளாகி, பூஞ்சைக் காளான் படர்ந்து போன காட்டிலந்தைப் பழத்தைப் போல அவன் அவளுக்குத் தோன்றினான். அவன் எப்போதும் ஒரு சிறு மஞ்சள் நிறமான ஈர்க் குச்சியால் தனது சின்னஞ் சிறிதான வெள்ளைநிற உளிப்பற்களைக் குத்திக் கொண்டிருந்தான். அவனது சின்னங்சிறு பசிய கண்கள் அன்பு ததும்பச் சிரித்தன. அவன் எப்போதுமே நட்போடு பேசினான்.
“அவன் மிகவும் அடக்கமானவன்” என்று அவள் ஹஹோலிடம் சொன்னாள், “எப்போதும் சிரித்த முகத்தோடேயே இருக்கிறான்.”
”ஆமாம்!” என்றான் ஹஹோல்; ”அவர்கள் எல்லோருமே ரொம்ப நல்லவர்கள். அவர்கள் மரியாதை தவறமாட்டார்கள். சிரித்த முகத்தோடேயே பேசுவார்கள்; ஆமாம்! “இதோ ஒரு கண்ணியமான யோக்கியமான புத்தி நிறைந்த மனிதன் இருக்கிறான். இவன் ஒரு பயங்கரமான ஆசாமி” என நாங்கள் நினைக்கிறோம். எனவே, உங்களுக்குச் சிரமமில்லாவிட்டால், இவனை வெறுமனே தூக்கில் போட்டுவிடுங்கள்! போதும் என்று அவர்கள் சொல்வார்கள். அப்புறம் அவர்கள் சிரித்துக் கொண்டே அவனைத் தூக்கிலும் போட்டு விடுவார்கள். போட்ட பிறகும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள்.”
“ஆனால் இங்கே சோதனை போட வந்தானே ஒருத்தன், அவன் வேறு மாதிரிப் பேர்வழி. அவன் ஒரு பன்றிப் பிறவி என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து கொள்ளலாம்” என்று சொன்னாள் தாய்.
“அவர்களில் யாருமே மனிதப் பிறவிகள் அல்ல. மக்களைச் செவிடாக்கும் சம்மட்டிகள்தான் அந்தப் பிறவிகள். நம்மை மாதிரி, ஆட்களையெல்லாம் மட்டம் தட்டி சீர்படுத்தி கையாள்வதற்கு சுலபமானவர்களாக நம்மை மாற்ற முனையும் கருவிகள்தான் அவர்கள். அவர்கள் நம்மை அதிகாரம் செய்யும் மேலிடத்தின் கைக் கருவிகளாக ஏற்கெனவே தம்மை மாற்றிக்கொண்டு விட்டவர்கள். தங்களுக்கு இட்ட எந்த ஆணையையும் எந்தவித முன்பின் யோசனையுமின்றி உடனே நிறைவேற்றி வைத்துவிடுவார்கள்.”
கடைசியாக ஒரு நாள் அவளுக்குத் தன் மகனைப் பார்ப்பதற்கு அனுமதி கிடைத்துவிட்டது. ஞாயிற்றுக் கிழமையன்று சிறைச்சாலை ஆபிஸில் ஒரு மூலையில் அவள் மிகவும் பணிவோடு அடங்கி ஒடுங்கி உட்கார்ந்து கொண்டிருந்தாள். அட்டும் அழுக்கும் நிறைந்த அந்தத் தாழ்ந்த கூரை கொண்ட அறைக்குள்ளே வேறு பலரும் இருந்தார்கள். அவர்களும் கைதிகளைப் பார்ப்பதற்காகக் காத்துக் கிடப்பவர்கள்தான். அவர்கள் அங்கு அப்படிக் காத்துக் கிடப்பது அதுவே முதல் தடவை அல்லவாதலால், அங்குள்ள மனிதர்கள் நாளாவட்டத்தில் ஒருவருக்கொருவர் பழகிக்கொண்டு விட்டார்கள். எனவே சிலந்தி வலை பின்னுவதைப்போல் அவர்கள் அமைதியாக ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தார்கள்.
மடியிலே ஒரு ஜோல்னாப் பையோடு உட்கார்ந்திருந்த தொளதொளத்த முகம் படைத்த ஒரு தடித்த பெண்பிள்ளை பேசத் தொடங்கினாள்; “உங்களுக்குச் சங்கதி தெரியுமா? இன்றைக்குக் காலையில் தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தபோது பாதிரியார் ஞானப் பாடல் பாடுகின்ற பையன் ஒருவனின் காதைத் திருகினாராம்!”
“அந்தப் பையன்களும் சுத்தப் போக்கிரிப் பயல்கள்!” என்று ஒரு வயதான கனவான் பதில் சொன்னார். அவர் உடுத்தியிருந்த உடையைப் பார்த்தால் அவர் யாரோ ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மாதிரி இருந்தது.
குட்டைக் கால்களும், நெட்டைக் கைகளும், துருத்தி நீண்ட மோவாயும் வழுக்கைத் தலையும் கொண்ட சித்திரக் குள்ளப் பிறவியான ஒரு மனிதன், அந்த அறைக்குள் நிலைகொள்ளாமல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். இடையிடையே உடைந்து கரகரத்த குரலில் ஏதேதோ உத்வேகத்தோடு பேசிக்கொண்டான்,
“விலைவாசியோ விஷம்போல் ஏறிக்கொண்டே இருக்கிறது. மனிதர்களோ வரவர மோசமாகிக் கொண்டே வருகிறார்கள். இரண்டாம் தரமான மாட்டுக் கறியின் விலை கூட பவுண்டுக்கு பதினான்கு கோபெக்காம்! ரொட்டி விலையோ இரண்டரைக் கோபெக்குக்கு ஏறிப்போய்விட்டது…”
இடையிடையே கைதிகள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக சாம்பல் நிறமான ஆடையும் கனமான தோல் செருப்புகளும் அணிந்திருந்தார்கள். மங்கிய ஒளி நிறைந்த அந்த அறைக்குள்ளே நுழைந்தவுடன் அவர்கள் திருக திருக விழித்தார்கள். அவர்களில் ஒருவனுக்கு காலில் விலங்குகள் பூட்டப்பட்டிருந்தன.
சிறையின் சகல சூழ்நிலையுமே விபரீதமான அமைதியுடனும், விரும்பத்தகாத எளிமையுடனும் இருந்தது. தங்களது நிர்க்கதியான நிலைமையை அவர்கள் வெகு காலத்துக்கு முன்பே ஏற்றுப் பழகி மரத்துப் போய்விட்டவர் போலவே தோன்றினர். சிலர் தங்கள் சிறைத்தண்டனையைப் பொறுமையோடு அனுபவித்தார்கள். சிலர் உற்சாகமே அற்று சோம்பியுறங்கிக் காத்து நின்றார்கள். இன்னும் சிலர் ஒழுங்காக வந்திருந்து உற்சாகமோ விருப்பமோ அற்று, கைதிகளைப் பார்வையிட்டுக் கொண்டு சென்றார்கள். தாயின் உள்ளமோ பொறுமையிழந்து துடித்துத் தவித்தது. அவள் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலையை எதுவுமே புரியாமல் பார்த்துக் கொண்டாள். அங்கு நிலவிய சோகமயமான எளிமையைக் கண்டு வியந்தாள்.
அவளுக்குப் பக்கத்தில் சுருங்கிய முகமும் இளமைத் ததும்பும் கண்களும் கொண்ட முதியவள் ஒருத்தி இருந்தாள். அவள் தனது மெலிந்த கழுத்தைத் திருப்பி, பிறர் பேசிக் கொள்வதையெல்லாம் காது கொடுத்துக் கேட்டாள். கண்கள் படபடக்க அவள் ஒவ்வொருவரையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
”நீங்கள் யாரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்?’ என்று பெலகேயா அவளை நோக்கி மெதுவாய்க் கேட்டாள்.
”என் மகனை! அவன் ஒரு கல்லூரி மாணவன்” என்று உரக்கப் பதில் அளித்தாள் அந்தக் கிழவி, “நீங்கள்?”
‘மகனைத்தான். அவன் ஒரு தொழிலாளி.”
”அவன் பேரென்ன?”
“பாவெல் விலாசவ்.”
‘கேள்விப்பட்டதே இல்லை. உள்ளே வந்து ரொம்ப காலமாகிறதோ?”
“சுமார் ஏழு வாரமிருக்கும்.”
“என் மகன் – அவன் வந்து பத்து மாசமும் முடியப் போகிறது” என்றாள் அந்த முதியவள். அவளது குரலில் ஏதோ ஒரு பெருமிதம் தொனிப்பதாக பெலகேயாவுக்குத் தோன்றியது.
“ஆமாம். ஆமாம்” என்று அந்த வழுக்கைத் தலைக் கிழவன் சளசளக்கத் தொடங்கினான். ‘மனிதர்களுக்குப் பொறுமையே போய்விட்டது. எல்லோரும் எரிந்து பேசுகிறார்கள். ஒவ்வொருவரும் சத்தம் போடுகிறார்கள். விலைவாசியோ மேலே மேலே போகிறது. ஜனங்களோ, அதற்குத் தக்கபடி நாளுக்கு நாள் நலிந்து வருகிறார்கள். இதற்கு ஒரு முடிவு காண எவனுமே முன்வரக் காணோம்!”
”நீங்கள் சொல்வது ரொம்ப சரி’ என்றான், அந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி. “ஒழுங்கீனம்” கடைசி கடைசியாக ‘போதும் நிறுத்து’ என்று கத்தத்தான் வேண்டும். அந்தக் குரல், அந்தச் சக்திவாய்ந்த குரல்தான் இன்று நமக்குத் தேவை….”
ஒவ்வொருவரும் இந்த சம்பாஷணையில் கலந்து கொண்டார்கள். அவர்களது பேச்சு உயிர்பெற்று ஒலித்தது. எல்லோரும் வாழ்க்கையைப் பற்றிய தம் அபிப்பிராயத்தைச் சொல்ல வேண்டுமென்பதில் பேரார்வம் காட்டினார்கள். எனினும் அவர்கள் அனைவருமே தணிந்த குரலில்தான் பேசிக்கொண்டார்கள். அவர்கள் பேசிக்கொண்டது அனைத்தும் தனது கருத்துக்களுக்கு முற்றிலும் மாறுபட்டவை என்பதைத் தாய் உணர்ந்து கொண்டாள். வீட்டில் இருந்தவர்கள் அந்த மனிதர்களைவிட எவ்வளவு உரத்தும் தெளிவாகவும் எளிதாகவும் பேசிக்கொள்வார்கள்….
சதுரமாய்க் கத்தரித்து விடப்பெற்ற சிவந்த தாடியோடு கூடிய ஒரு கொழுத்த சிறையதிகாரி வந்தான். அவளது பேரைச் சொல்லிக் கூப்பிட்டான். அவளை அவன் ஏற இறங்கப் பார்த்தான். பிறகு கெந்திக்கெந்தி நடந்து கொண்டே சொன்னான்:
“என் பின்னால் வா.”
அந்தச் சிறையதிகாரி முதுகைப் பிடித்துத் தள்ளி அவனைச் சீக்கிரம் முன்னேறி நடக்கச் செய்ய வேண்டும் போலிருந்தது அவளுக்கு.
பாவெல் ஒரு சின்ன அறையில் முகத்தில் புன்னகை தவழ கைகளை நீட்டியவாறே நின்றான். அவள் அவன் கையைச் செல்லமாகப் பற்றிப் பிடித்தாள்; சிறுகச் சிரித்தாள்; படபடவென்று இமைகொட்டிப் பார்த்தாள்.
“நலமா? நன்றாயிருக்கிறாயா?” என்றாள் அவள். அவளுக்கு பேச வார்த்தையே கிடைக்கவில்லை. தடுமாறிக் குழறினாள்.
”அம்மா, நிதானப்படுத்திக்கொள். பொறு” என்று அவளது கையைப் பற்றி பிடித்தவாறு சொன்னான் பாவெல்,
“இல்லை. நான் நன்றாய்த்தான் இருக்கிறேன்.’
“உன் அம்மாவா!” என்று பெருமூச்சுடன் கேட்டான் சிறை அதிகாரி. பிறகு அவன் பலமாகக் கொட்டாவி விட்டுவிட்டு, ”நீங்கள் இரண்டு பேரும் கொஞ்சம் விலகி விலகி நில்லுங்கள். இடையிலே கொஞ்சம் இடம் இருக்கட்டும் என்றான்.
பாவெல் அவனது ஆரோக்கியத்தைப் பற்றியும் வீட்டு விஷயங்களைப் பற்றியும் விசாரித்துக் கொண்டான். அவள் வேறுபல கேள்விகளை எதிர்பார்த்தாள். அந்தக் கேள்விகளை எதிர்நோக்கி அவன் கண்களையே வெறித்து நோக்கினாள். ஆனால் பயனில்லை. அவன் எப்போதும் போலவே அமைதியாக இருந்தான். கொஞ்சம் வெளுத்துப் போயிருந்தான். அவனது கண்கள் முன்னை விடப் பெரிதாகி இருந்தன போலத் தோன்றின.
”சாஷா உன்னை விசாரித்தாள். தன்னை மறந்து விட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டாள்” என்றாள் தாய்.
பாவெலின் கண்ணிமைகள் துடித்தன; முகம் தளர்வுற்றது. அவன் புன்னகை செய்தான். தனது இதயத்தில் திடீரென ஒரு குத்தலான வேதனை ஏற்பட்டது போல தாய் உணர்ந்தாள்.
“அவர்கள் உன்னைச் சீக்கிரம் விட்டுவிடுவார்கள் என்று கருதுகிறாயா?” என்று எரிச்சலோடும் துயரத்தோடும் கேட்டாள் அவள். “எதற்காக அவர்கள் உன்னைப் பூட்டிப் போட்டிருக்கிறார்கள்? அந்தப் பிரசுரங்கள்தான் மீண்டும் தொழிற்சாலையில் தலை காட்டித் திரிகின்றனவே!” என்றாள்.
பாவெலின் கண்கள் பிரகாசமடைந்தன.
”உண்மையாகவா?” என்று உடனே கேட்டான்.
“ஏய்! இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் இங்கே பேசக்கூடாது. உங்கள் குடும்ப விஷயம் ஒன்றை மட்டும்தான் நீங்கள் பேசலாம்” என்று தூங்கி வழியும் குரலில் சொன்னான் சிறையதிகாரி.
”இது குடும்ப விஷயமில்லையா?” என்று எதிர்த்துக் கேட்டாள் தாய்.
“இதற்குப் பதில் ஒன்றும் சொல்ல முடியாது. அதை இங்குப் பேசக்கூடாது. அவ்வளவுதான்” என்று அலட்சியமாகச் சொன்னான் அவன்.
“சரி, நீ வீட்டு விஷயங்களையே சொல்” என்றான் பாவெல். “நீ எண்ண பண்ணிக் கொண்டிருக்கிறாய்?”
அவள் தனது கண்களில் இளமையின் குறுகுறுப்பு பளிச்சிட்டு மின்ன, அவனுக்குப் பதில் சொன்னாள்.
”நானா? நான்தான் அந்தச் சாமான்களையெல்லாம் தொழிற்சாலைக்கு கொண்டுபோய்க் கொடுக்கிறேன்…”
அவள் பேச்சை நிறுத்தினாள். பிறகு சிறு சிரிப்புடன் மீண்டும் பேசினாள்.
”முட்டைகோஸ், சூப்பு, சேமியா – இந்த மாதிரி சாமான்களையெல்லாம் மரியா செய்து தருகிறாள். மற்ற சரக்குகளும்…”
பாவெல் புரிந்து கொண்டுவிட்டான். அவன் தன் கையால் தலைமயிரைக் கோதிவிட்டுக் கொண்டான். பொங்கிவந்த சிரிப்பை உள்ளடக்கிக் கொண்டான்.
“பரவாயில்லை. நீ சும்மா இராமல் சுறுசுறுப்போடு வேலை செய்வதற்கு இது ஒரு அருமையான உத்தியோகம்தான். அப்படியென்றால் உனக்குத் தனியாயிருக்கவே நேரமிராதே” என்று அவன் அன்பு ததும்பச் சொன்னான். அந்தப் பரிவு நிறைந்த குரலை அவள் அதற்கு முன் அவனிடம் கேட்டதே இல்லை.
”அந்தப் பிரசுரங்கள் மீண்டும் தலைகாட்டியவுடன், அவர்கள் என்னைக் கூடச் சோதனை போட்டுவிட்டார்கள்” என்று கொஞ்சம் தற்பெருமையுடனேயே அவள் சொல்லிக் கொண்டாள்.
“ஏய்! மீண்டும் அதையா பேசுகிறாய்?” சினந்து போய்ச் சொன்னான் சிறை அதிகாரி. “அதைத்தான் பேசக்கூடாது என்று ஒருமுறை சொல்லிவிட்டேனே. ஒரு மனிதனை எதற்காகச் சிறையில் அடைக்கிறார்கள்? வெளியில் நடப்பது என்ன என்பது அவனுக்குத் தெரியக்கூடாது என்பதற்குத்தானே. நீயோ அதையே சொல்லிக் கொண்டிருக்கிறாய்… ம்? எது எதைப் பேசக்கூடாது என்பது இன்னுமா தெரியவில்லை?”
“போதும் அம்மா” என்றான் பாவெல். “மத்வேய் இலானவிச் மிகவும் நல்லவர். அவரைக் கோபமூட்டுவதில் அர்த்தமே இல்லை. நாங்கள் நெருங்கிய நண்பர்கள். நீ வந்த சமயத்தில் இவர் இருந்ததே ஒரு நல்ல காலம். வழக்கமாக இவருடைய மேலதிகாரிதான் இருப்பான்.”
”சரி நேரமாய்விட்டது” என்று கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறே சொன்னான் சிறையதிகாரி.
“ரொம்ப வந்தனம். அம்மா கவலைப்படாதே. என்னைச் சீக்கிரம் விடுதலை செய்துவிடுவார்கள்” என்றான் பாவெல்.
அவன் அவளை ஆர்வத்தோடு அணைத்து முத்தமிட்டான். அவனது அரவணைப்பினால் உள்ளம் நெகிழ்ந்து ஆனந்தப் பரவசமாகி வாய் திறந்து கத்திவிட்டாள் தாய்.
“சரி போதும், புறப்படும்” என்று சொன்னான் சிறையதிகாரி. பிறகு அவளை வெளியே அழைத்து வரும்போது அவளிடம் லேசாக முணுமுணுத்தான். “அழாதே, அவர்கள் அவனை விட்டுவிடுவார்கள். எல்லோரையுமே விட்டுவிடுவார்கள். வரவர, இங்கே கூட்டம்தான் பெருத்துப் போயிற்று.”
வீட்டுக்கு வந்தவுடன் அவள் ஹஹோலிடம் எல்லாவற்றையும் சொன்னாள். சொல்லும்போது அவள் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. புருவங்கள் துடிதுடித்தன.
”நான் அவனிடம் அதை எவ்வளவு சாமர்த்தியமாகச் சொன்னேன், தெரியுமா? அவன் அதைப் புரிந்து கொண்டுவிட்டான். அவனுக்குப் புரிந்திருக்கத்தான் வேண்டும்” என்று கூறிவிட்டுப் பெருமூச்செறிந்தாள். “இல்லையென்றால் அவன் என்னிடம் அத்தனை அன்பு காட்டியிருக்கமாட்டான். அவன் அப்படிக் காட்டிக் கொண்டதே இல்லை.”
“நீங்கள் ஒரு விசித்திரப் பிறவி, அம்மா” என்று கூறிச் சிரித்தான் ஹஹோல்; “மக்களுக்கு எத்தனையோ விஷயங்கள் தேவையாயிருக்கின்றன. ஆனால் ஒரு தாய்க்குத் தேவையான பொருள் எல்லாம் ஒன்றே ஒன்றுதான்… பாசம்!”
“இல்லை. அந்திரியூஷா? அந்த மக்களை நீங்கள் பார்த்திருக்க வேண்டும்” என்று திடீரென்று ஏற்பட்ட உத்வேக உணர்ச்சியோடு பேசத் தொடங்கினாள் அவள். “அவர்களுக்கு அதெல்லாம் பழகிப்போய்விட்டது. அவர்களது பிள்ளைகளை அவர்களிடமிருந்து பிடுங்கிப் பறித்துச் சிறைக்குள்ளே தள்ளிவிட்டார்கள். என்றாலும். அவர்கள் எதுவுமே நிகழாதது மாதிரி நடந்து கொள்கிறார்கள். சும்மா வெறுமனே வந்து உட்கார்ந்து, காத்திருந்தது, ஊர் வம்புகளைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். படித்தவர்களே இந்த மாதிரி நடந்து கொண்டால், அறிவில்லாத பாமர மக்களிடம் நீ என்னத்தைத்தான் எதிர்பார்க்க முடியும்?”
“புரிகிறது. அது இயல்புதானே?” என்று தனக்கே உரிய கேலித் தொனியில் பதிலளித்தான் ஹஹோல். “பார்க்கப் போனால், சட்டம் நம் மீது கடுமையாய் இருப்பதுபோல் அவர்களிடம் கடுமையாக இருப்பதில்லை. ஆனால் நம்மைவிட அவர்களுக்குத்தான் சட்டத்தின் உதவி அதிகம் தேவை. எனவே சட்டம் அவர்கள் தலையில் ஓங்கியறைந்தால், அவர்கள் சத்தம் போடுவார்கள். ஆனால் வெளிக்குத் தெரியாமல் சத்தம் போடுவார்கள். தன் கையிலுள்ள தடியைக் கொண்டு தானே தன் தலையில் அடித்துக் கொண்டால், அந்த அடி அப்படியொன்றும் உறைக்காது. நம்மவர் அடித்தால்தான் உறைக்காது. வலிக்காது.”
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
முந்தைய பகுதிகள்:













“பாட்டி வேற சொந்தம் இருந்தாலும் ஓகே தான். போன் நம்பர் குடுத்தா போன் பண்ணி வரவச்சுரலாம்.. சொல்லுங்க”

ஆனால், எந்த ஒரு சூழ்நிலையிலுமே தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு மாற்றாக இருக்க முடியாது. இது ஒரு எல்லாருக்குமே தெரிந்த ஒன்று.
வந்தவுடனே ஒரு பேச்சு வார்த்தை, புள்ளி விபரம் கணக்கு போட்டுக் கொள்கிறார்கள். போலீசுக்கு தகவல் சொல்றாங்க. அதுக்கு அப்பறம் அதைத் தொடர்ந்து கவனித்து “இது மாதிரி குற்றத்திற்கு என்ன ஆச்சு அது என்ன ஆச்சு? இதை பார்த்தீங்களா? அதை பார்த்தீங்களா? என்கிற ஆலோசனையும். சட்ட உதவியும் கொடுக்கிறதும் கிடையாது. (அதை மட்டும் செய்வதற்கு இன்னொரு தொண்டு நிறுவனம் இருக்கலாம், அவர்கள் வெளிநாட்டில் இருந்து மீட்பது பற்றி கவலைப்படுவது கிடையாது)

இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள், வாகனப்பிரிவு தோழர்கள் உட்பட 35பேர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். மாவட்ட பொருளாளர் தோழர் விஜயன் அவர்கள் கொடியேற்றி உரையாற்றினார்.
மீன் மார்க்கெட், அண்ணா கலையரங்கம் மற்றும் அடுக்கம்பாறை ஆகிய இடங்களில் கிளை சங்க தலைவர்கள் கொடி ஏற்றினர். இதில் மாவட்ட துணைத்தலைவர், செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அவன் கீழே உட்கார்ந்து தாயின் பக்கமாகத் திரும்பினான்.
”ஆஹா!” என்று கூறியவாறு அவன் ஒரு கரடியைப் போலத் திரும்பி உட்கார்ந்தான். “அப்படிச் சொல்லு, நானும், உன்னைப் போலத்தான், இந்த நினைப்பு என் மனதில் பட்டதோ இல்லையோ, உடனே என் உடம்பெல்லாம் குளிர்ந்து போயிற்று! ஆமாம்.”
தாய் அவனிடம் ரீபனைப் பற்றிச் சொன்னாள். அதைக் கேட்டுவிட்டு அவன் சொன்னான். “போனால் போகட்டும். கிராமங்கள்தோறும் அலைந்து திரிந்து நியாயத்தைப் பற்றி அவன் கூச்சல் போடட்டும். அங்குள்ள மக்களை அவன் தட்டியெழுப்பட்டும், நம்மோடு ஒத்துழைப்பதென்பது அவனுக்குக் கொஞ்சம் சிரமம்தான். முஜீக்கின் கருத்துக்கள்தான் அவன் மூளை நிறைய இருக்கின்றன. நம்முடைய கருத்துக்கள் அவன் மண்டையில் ஏறாது. அதற்கு இடமும் கிடையாது.”
“எந்தத் தவறானாலும் சரி, அது என்னைப் பாதித்தாலும் பாதிக்காவிட்டாலும் சரி, அதை மன்னித்து விட்டுக்கொடுக்க எனக்கு உரிமை கிடையாது. இந்த உலகில் நான் ஒருவன் மட்டுமே உயிர்வாழவில்லை. இன்றைக்கு எனக்கு ஒருவன் தீங்கிழைப்பதை நான் விட்டுக் கொடுத்துவிடலாம். அவனது தீங்கு அவ்வளவு ஒன்றும் பிரமாதமில்லை என்ற நினைப்பால், அதைக் கண்டு நான் சிரிக்கலாம்: அது என்னைச் சீண்டுவதில்லை. ஆனால், நாளைக்கோ என்மீது பலப்பரீட்சை செய்து பழகிய காரணத்தால், வேறொருவனின் முதுகுத் தோலையும் உரிக்க அவன் முனையலாம். ஒவ்வொருவரையும் ஒரே மாதிரிக் கருதிவிட முடியாது. மிகவும் ஜாக்கிரதையாக , நெஞ்சிளக்கமற்று ஆட்களை எடை போட வேண்டும். பொறுக்கியெடுக்க வேண்டும். “இவன் நம் ஆள், இவன் வேறு” என்று தீர்மானிக்க வேண்டும். இதெல்லாம் உண்மைதான். ஆனால், இது மட்டும் ஆறுதல் தராது.
இந்த போராட்டம் என்பது ஊழியர்களின் ஜனநாயகப்பூர்வமான போராட்டம்.. அவர்களின் கோரிக்கையும் மிகமிக அத்தியாவசியமான, நியாயமான கோரிக்கை… இதனை அமல்படுத்தகோரி போராடிய பல இடங்களில் அனுமதி மறுத்தும், பெண் ஊழியர்களையும், நிர்வாகிகளையும் கைது செய்தும் போலிசு ஜனநாயக விரோத செயலை வழக்கம்போல் நிலைநாட்டியது. அது இப்பொழுது மட்டுமல்ல. தங்கள் கோரிக்கைக்காக போராடிவரும் கடந்த 30 ஆண்டுகாலமாக இதுதான் நிலைமை!
அதேபோல் கடந்த 19.2.2016 அன்று சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 110 விதியின் கீழ் சத்துணவு ஊழியர்கள் ஊதியம் தொடர்பான கோரிக்கைகள் எதிர்வரும் ஊதியக்குழுவே பரிசீலிக்கும் என அறிவித்தார்கள். ஆனால் இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.



அது நிகழ்ந்தால் இந்திய சூத்திரர்கள் ஒற்றை சமூக அரசியல் வட்டத்துக்குள் இணைவார்கள். இது நாட்டின் சமூக உறவை மிகப்பெரிய அளவில் மாற்றி அமைக்கும். இந்த சந்தர்ப்பத்தில் இந்து மதத்திலும் இந்திய சமூக அரசியல் அமைப்பிலும் பட்டேல் மற்றும் சூத்திரர்களின் நிலை என்னவாக இருக்கிறது என மதிப்பிடுவது அவசியமாகும்.
பட்டேலின் மூதாதையருக்கு கல்வி கற்க உரிமை இல்லை; வேத கடவுள்களை வணங்கவோ அல்லது இந்து மதத்தின் புனித நூல்களை வாசிக்கவோ அவர்களால் முடியாது. காந்தி மற்றும் நேருவின் மூதாதையர் வேத காலத்தின் தொடக்கத்திலிருந்தே இந்த உரிமைகளைப் பெற்றிருந்தார்கள். அவர்களால் சமஸ்கிருதத்தை கற்க முடிந்தது, காலத்துக்கேற்ப வேறு மொழிகளையும் அவர்கள் கற்றார்கள்.
இன்று பார்ப்பனர்களும் பனியாக்களும் இந்திய அரசியல், அரசாங்கம், பொருளாதாரத்தை கட்டுப்படுத்துகிறவர்களாகவும் ஆதிக்கம் செலுத்துகிறவர்களாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். சூத்திரர்களின் மீது அடக்குமுறை செலுத்தும் இந்துத்துவ அமைப்பின் வழியாக அதிகார அமைப்புகளில் அவர்கள் தொடர்ந்து நீடித்துக்கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய மதம்தான் என்றாலும் சூத்திரர்களுக்கு போதகருக்குள்ள உரிமையோ மந்திரங்கள் ஓதவோ உரிமை இல்லை.
பட்டேலிடம் அறிவுசார் உற்பத்தி இல்லாத காரணத்தால் அவருடைய வரலாற்றுக்கும் அதிகாரத்துக்கும் குறுகிய வழியை ஏற்பட்டுவிட்டது. சூத்திரர்களின் வரலாறு மற்றும் அதிகாரம் குறுகிய நிலையில் உள்ளதைப் போன்றே இதுவும் அமைந்துவிட்டது. அவருக்கென்று சமூக பொருளாதார கோட்பாடு இல்லை. பிரதிநிதித்துவ கோட்பாடு எதுவும் இல்லாமல் அவர் சூத்திரர்களின் பிரநிதியாக இருந்தார். இப்போதும் கூட சூத்திரர்கள், கருத்தியல் வெற்றிடத்துடனே இருக்கிறார்கள். எவ்வளவு பெரிய சிலை பட்டேலுக்கு அமைத்தபோதும் அந்த வெற்றிடத்தை நிரப்பிவிட முடியாது.
இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், சென்னை பல்கலைக்கழக தமிழ்துறை முன்னாள் தலைவர், பேராசிரியர். வீ. அரசு, ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினரும், விவேகானந்தா கல்லூரி வரலாற்றுதுறை முன்னாள் தலைவர் பேராசிரியர் அ. கருணானந்தன், ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினரும் குடியாத்தம் அரசு கலைகல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் ப. சிவக்குமார், பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி பொருளியியல் துறை பேராசிரியர் அமலநாதன், பொருளாளர் மற்றும் சென்னைப் பல்கலைக் கழக உயிரிவேதியியல் துறை பேராசிரியர் கதிரவன் ஆகியோர் கலந்துகொண்டு உயர்கல்வி எதிர் கொண்டிருக்கும் முக்கிய சவால்களான ஊழல், இந்துத்துவ திணிப்பு, தனியார்மயம் ஆகியவற்றை பற்றி பேராசிரியர்கள் உரையாற்றினர்.
சமீப காலமாக உயர்கல்வி துறையில் முறைகேடுகளும் ஊழல்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு ஊழல் முறைகேடுகளும் அதற்கு முந்ததையதை விட அளவில் மிகப்பெரியதாகவும் தன்மையில் அதீத கிரிமினல் மயமானதாகவும் உள்ளது.








அவள் உள்ளே சென்றவுடன் முதன் முதல் அவள் முன் எதிர்ப்பட்டவன், அந்தக் கிழவன் சிஸோவ்தான்.
