Thursday, June 18, 2026
முகப்பு பதிவு பக்கம் 547

தடியரசு தின வாழ்த்துக்கள் – கேலிச்சித்திரம்

0

’தடி’யரசு தின வாழ்த்துக்கள்

republic-day-cartoon

————-

குடிகளுக்கு குறி வைக்கும்  ’குடி’யரசு !

republic-day-cartoon2

————-

republic-day-cartoon3

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்

இணையுங்கள்:

தமிழக மக்களின் மெரினா பிரகடனம் !

1

ங்கிலேயனை எதிர்த்த விடுதலைப் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்ன மருதுவின் திருச்சிப் பிரகடனத்தைப் போல உலகையே திருப்பிப் பார்க்க வைத்த தமிழக மக்களின் மெரினா போராட்டத்தில் தமிழக மக்களின் மெரினா பிரகடனம் 22.01.2017 அன்று அறிவிக்கப்பட்டது. இந்த பிரகடனத்தை மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்  தோழர் ராஜூ அறிவித்து விட்டு, இதில் சேர்க்கை, திருத்தம், விமரிசனம் இருந்தால் கூறுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். பிறகு அங்குள்ள மக்களால் இந்த பிரகடனம் பெரும் ஆரவாரத்துடன் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பாருங்கள் பகிருங்கள்.

தமிழக மக்களின் மெரினா பிரகடனம்

  • தமிழக விவசாயிகளுடைய அனைத்து வகைக் கடன்களும் ரத்து !
  • காவிரி டெல்டா விவசாயிகளுக்கு மின் கட்டணம் கல்விக் கட்டணம், பேருந்துக்கட்டணம் ஆகியவை அடுத்த அறுவடை வரை ரத்து !
  • ஜல்லிக்கட்டை நடத்த நிரந்தர சட்டம் !
  • மூடு டாஸ்மாக்கை !
  • ஆற்று மணல் தாது மணல் கிரானைட் போன்ற கனிமவளக் கொள்ளைக்குத் தடை !
  • நீர்நிலைகளைப் பராமரித்து பாதுகாக்கும் பொறுப்பு கண்காணிக்கும் அதிகாரம் – மக்களுக்கே !
  • பணமதிப்புநீக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுதொழில்களுக்கு இழப்பீடு, உடனடிக் கடன் !
  • படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை உதவித்தொகை !
  • தமிழகத்தை அழிக்க வரும் அணு உலை, நியுட்ரினோ, மீத்தேன் ஷேல் கேஸ், கெயில் குழாய் பதிப்பு ஆகியவற்றுக்கு நிரந்தரத் தடை!
  • மீனவர்களின் வாழ்வாதாரம், உயிர்பாதுகாப்புக்கு உத்தரவாதம்!
  • பள்ளிக்கல்வி வரை தாய்மொழியில் அனைவருக்கும் தரமான கட்டாய இலவசக் கல்வி !

பெரும்பான்மை மக்களுக்கு எதிராக சதித்தனமாகக் கொண்டு வரப்படும் சட்டங்களை,
உத்தரவுகளை, தீர்ப்புகளை மக்கள் ஏற்றுக் கீழ்ப்படிய முடியாது

தொடர்புக்கு 9962366321

Marina declaration

Exclusive நடுக்குப்பம் மீனவ மக்களை சூறையாடிய போலீசு – வீடியோ

0

சென்னை மெரினா கடற்கரைக்கு எதிரில் உள்ள நடுக்குப்பம் மீனவர்கள் வசிக்கும் பகுதியில் 23.01.2017 திங்கட்கிழமை அன்று போலீசு நடத்திய கொடூரத் தாக்குதல்.  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய மாணவர்களை திங்களன்று அதிகாலை அடித்து விரட்டுகிறது போலீசு. அடிபட்ட மாணவர்கள் நடுக்குப்பத்திற்கு வந்து மக்களிடம் சொல்லி கதறுகிறார்கள். மாணவர்களுக்கு ஆதரவாக திரண்ட மக்கள் கடற்கரைக்கு செல்கிறார்கள். அவர்களையும் அடித்து துரத்தும் போலீசு இறுதியில் இக்குப்பத்திற்கு வந்து சூறையாடுகிறது.

380 மீன் விற்கும் சிறு கடைகளை தீக்கிறையாக்கியது போலீசு. அந்த பகுதி மக்களை நீ தானே போராடியவர்களுக்கு சோறு கொடுத்தாய் எனச் சொல்லி ஒவ்வொருவரையும் வீடு வீடாகச் சென்று தாக்கியது மட்டுமல்ல, அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த மீன்களைத் திருடித் தின்றுள்ளது தமிழக காவல் துறை.

மேலும் காவலர்கள் குடிசைகளைப் பற்ற வைப்பதும், நின்று கொண்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியதும் சமூக ஊடகங்களில் அம்பலமான பின்னரும் அது மார்ஃபிங் எனக் கூறுகிறார் சென்னைக் கமிஷ்னர் ஜார்ஜ். ஆனால் காவல் துறையின் வெறியாட்டங்களுக்கு நேரடி சாட்சியாக  உள்ளனர் இந்த மக்கள். தற்போது போலீஸ் இந்த பகுதிகளில் உள்ள ஆண்களைக் கைது செய்ய அடிக்கடி வருகிறது. இதற்கு பயந்து பகுதியில் உள்ள ஆண்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர். வாழ்வாதாரம் இழந்த பெண்கள் கதறுகின்றனர். வினவு செய்தியாளர்கள் நேரடியாக எடுத்த வீடியோ நேர்காணல். பாருங்கள் – பகிருங்கள்.

‘அடியரசு’ தின வாழ்த்துக்கள் – கேலிச்சித்திரங்கள்

8

‘அடியரசு’ தின வாழ்த்துக்கள் – கேலிச்சித்திரங்கள்

Adiarasuஓவியம் : நன்றி -சர்தார்

_______________

நாளைக்கு குடியரசு தினத்த ‘மெர்சல்’ பண்றோம்…

01

ஓவியம் : முகிலன்

_______________

குடிமக்களை அடித்துவிரட்டி குடியரசு தின அணிவகுப்பு !

parade

படம் : நன்றி -துரை
_______________

நம்ம கத்திகுத்து கந்தன் இல்ல… அம்புட்டு பயலுக்கும் இங்கதேன் ட்ரெய்னிங்கு…

03

ஓவியம் : முகிலன்

_______________

போலீசு கக்குவதைச் சொல்லும் ஊடகங்கள் !

02

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்

இணையுங்கள்:

அவர்கள் திரும்ப வருவார்கள் – ஒரு பெண்ணின் குமுறல் – வீடியோ

0

லகம் உற்றுப் பார்த்த ஒரு போராட்டத்தை ரத்தகளறியில் அமித்திய இந்த காவல் துறையும் அரசும் நாக்கை பிடுங்கிக் கொண்டு சாகலாம். நேற்றுவரை பண்புடன் பேசி கைகளை குலுக்கி வாழ்த்தியவனின் மண்டையை உடைத்து, குடிசைகளைக் கொளுத்தி வெறியாட்டம் போட்ட காவல்துறையிடம் இருந்து மக்களும் மாணவர்களும் படிப்பினை பெற்று மீண்டு வருவார்கள்.

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் -வள்ளுவர்

பெண் ஒருவரின் குமுறலையும் கோபத்தையும் பாருங்கள் பகிருங்கள்.

இந்தப் பெண் திமுகவைச் சேர்ந்தவர் என்று மாணவர் போராட்டத்தை எதிர்க்கும் தரப்பினர் (அதிமுக, பாஜக) கூறுகின்றனர். இருக்கட்டுமே. அந்தப் பெண் போராட்டத்தில் கலந்து கொண்டதும் உண்மை. போலிஸ் அங்கே பெரும் வன்முறையை நிகழ்த்தியதும் உண்மை. நடுக்குப்பத்தில் போலீசிடம் அடிவாங்கி படுகாயமுற்று, உடமைகளை இழந்த மீனவப் பெண்களும், ஆண்களும் கூட சென்ற தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்திருப்பார்கள். அதனால் அவர்கள் இந்த வன்முறையையும், ஏவி விட்ட அதிமுக அரசையும் மன்னித்து விடுவார்களா என்ன?

கேலிப்படங்கள் : அம்மாவுக்கு அஞ்சலி – மெரினாவின் குப்பைகள்

1

மாணவர்கள் மீதான தாக்குதல் : சட்டசபையில் அம்மாவுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலி !

Panner tribute_______________

குப்பைகளை அப்புறப்படுத்திய மாணவர் போராட்டம் !

marina dust2

marina dust

களச்செய்தி : தமிழக மாணவர்களை ஒடுக்குகிறது மோடி அரசு !

0

தமிழக மாணவர்களை ஒடுக்குகிறது மோடி அரசு !
கைப்பாவையாக செயல்படுகிறது பன்னீர் அரசு !

Chart 5

போராடும் மாணவர்களைக் காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்குவதன் மூலம்
டெல்லியின் ஆதிக்கத்தை திணித்துவிட முடியாது !

தமிழகத்தின் உரிமையை மீட்க ஒன்றிணைவோம் !

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஓசூர் – 97880 11784.

_______________

டெல்லிக்கு எதிராக எழுந்தது தமிழகம்! விடாதே…!
தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டு!

மாணவர்களை  தாக்கி சதி செய்த மோடி அரசை கண்டித்தும், ஓபிஎஸ் பொம்மை அரசை கண்டித்தும் 23.1.2017 , திங்கள்கிழமை  நாகர்கோவில் நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Nagarkovil 1

Nagarkovil 2

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.

_______________

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், நாட்றாபாளையம் கிராமத்தில் மக்கள் அதிகாரம், தமிழக மாணவர் எழுச்சியை ஆதரித்து தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் 22-1-2017 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நாட்றாபாளையம் பேருந்து நிறுத்தத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். உள்ளூர் பெரியவர்கள், வியாபாரிகள், நண்பர்கள் பலரும் இந்த தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர். பலரும் நேரில் வந்து மாணவர் எழுச்சியை ஆதரித்தும் வாழ்த்தியும் பேசினர். குழந்தைகள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர். மக்கள் அதிகாரத்தின் இந்த தர்ணா போராட்டம் அங்குள்ள கிராம மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

மெரினாவிலும்தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடக்கும் மாணவர் போராட்டத்தின் சிறப்பை இங்கு விளக்கிப் பேசினர். கோவனுடைய பாடல்கள் ஒளிப்பரப்பட்டன. தோழர் மருதையனுடைய மெரினா உரைகள் போட்டு பிரச்சாரம் செய்யப்பட்டன. இவை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

Thenkani kottai 1

Thenkani kottai

 

தகவல் :
மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு.
கிருஷ்ணகிரி மாவட்ட தொடர்பு எண்: 80152 69381

_______________

 ஜனவரி 25 – மொழிப்போர் தியாகிகள் தினம் !

RSYF Poster

சல்லிக்கட்டு தடை, பொங்கல் விடுமுறை ரத்து, கீழடி ஆய்வுக்கு மறுப்பு, புதிய கல்விக் கொள்கை, இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு…

  • தமிழ் உள்ளிட்ட பல்தேசிய இனங்களின் பண்பாட்டை அழித்து, ஒற்றை பார்ப்பனிய இந்து மத பண்பாட்டை திணிக்கும் மோடி அரசின் சதித்திட்டத்தை முறியடிப்போம் !
  • மொழிப்போர் தியாகிகள் நினைவை நெஞ்சிலேந்தி வீறு கொண்டெழுவோம் !
    தமிழகத்தை ஆரிய பார்ப்பன எதிர்ப்பு போரில் தளப்பிரதேசமாக கட்டியமைப்போம் !

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருத்தாச்சலம் – சிதம்பரம்.
தொடர்புக்கு : 8870. 81056.

மெரினா தாக்குதலை கண்டித்த மக்கள் அதிகாரம் தோழர் முரளிக்கு சிறை !

0

திருவாரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் முரளி கைது !

திருவாரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் முரளி அவரது வீட்டில் நேற்று (24.01.2017)இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் கியூ போலீஸ் தியாகராஜன் ஆகியோரால் கைது செய்யப்பட்டு கொரடாச்சேரி போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நேற்று காலை 10 மணிக்கு திருவாரூர் பேருந்துநிலையம் அருகே நடக்க இருந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தை மோப்பம் பிடித்த போலீசு அவரை கைதுசெய்திருக்கிறது.

மேலும் 11.01.17 அன்று புதிய ரயிலடியில் “நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி” என்ற முழக்கத்தின் கீழ் பல்வேறு கட்சிகள், விவசாய அமைப்புகளை ஒருங்கிணைத்து நாள் முழுவதும் நடந்த மக்களதிகாரம் தர்ணாவில் தொண்டர்கள் கம்பு வைத்திருந்தது, மாலை 5 மணிக்கு முடிக்க வேண்டிய தர்ணாவை 06.45 க்கு முடித்தது மற்றும் நேற்று (23.01.2017) அதிகாலை ஜல்லிக்கட்டு போராட்ட மாணவர்களை போலீசு வெறிகொண்டு தாக்குவதைக் கண்டித்து சுவரொட்டிப் பிரச்சாரம் செய்தது என அவர் மீது 143, 188, 504 IB, 195/17 ஆகிய செக்சன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் கொரடாச்சேரியிலிருந்து திருவாரூர் டவுன் ஸ்டேசனுக்கு அழைத்து வரப்பட்டு நேற்று இரவு 07.15 க்கு நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டு நன்னிலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tvr 1

Tvr pp poster

தகவல் :
மக்களதிகாரம்,
திருவாரூர்.

புதிய ஜனநாயகம் – சனவரி 2017 மின்னிதழ்

1

puthiya-jananayagam-january-2017

புதிய ஜனநாயகம் சனவரி 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. போராட்டங்கள் இருட்டடிப்பு : அன்று இந்திராஇன்று மோடி… !
பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளுக்கு எதிரான பொதுமக்கள், புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகளின் போராட்டங்களை மோடியும் தனியார் ஊடகங்களும் கூட்டுச் சேர்ந்து இருட்டடிப்பு செய்து வருவது இந்திராவின் “நெருக்கடிநிலை” காலத்தை நினைவூட்டுகிறது.

2. அதிகாரத்தில் உழவனின் எதிரிகள் ! எழவு வீடானது தமிழகம் !!

3. மாண்புமிகு மன்னார்குடி மாஃபியா !
சசிகலாவை மாண்புமிகு முதல்வர் என்று அழைக்கும் தறுவாயில், அவரைத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கிய மனனார்குடி மாஃபியாவையும் மாண்புமிகு மன்னார்குடி மாஃபியா என்று அழைப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

4. அ.தி.மு.க.வை அழிக்காவிடில் தமிழகமே அழியும் !
தொழில்முறை கிரிமினல் மாஃபியாக்களின் கூடாரம்தான் அ.தி.மு.க. கொள்ளைக்கூட்டத்தின் உள் முரண்பாடுகள் காரணமாக அ.தி.மு.க. அழியும் வரை காத்திருக்கக் கூடாது. அ.தி.மு.க. என்ற விஷப்பூரானை நம் சொந்தக் கரங்களால் நசுக்கி அழிப்பதொன்றுதான், தமிழகம் பிழைப்பதற்கு வழி.

5. ஜெயா மரணம்: தமிழகத்தைக் கவ்வியிருந்த பீடை ஒழிந்தது !

6. ஜெயா: பெண்ணரசியா ? இம்சை அரசியா ?
பெண் என்ற காரணத்தை முன்வைத்து, ஜெயாவின் ஆட்சிக் காலங்களில் நடந்த அனைத்துக் குற்றங்களில் இருந்தும் ஜெயாவை விடுவித்துவிட்டு, அவரை மதிப்பீடு செய்வது அறிவுடமையாகாது.

7. சுயமரியாதையை அழித்து… பார்ப்பனப் பண்பாட்டைத் திணித்து …
சுயமரியாதை அரசியலைப் பேசிவந்த தமிழகத்தில், அதற்கு எதிரான பார்ப்பன அடிமைத்தனமும், மூடத்தனமும் மீண்டும் கோலோச்சும்படி தமிழகத்தைச் சீரழித்தார், பார்ப்பன ஜெயா.

8. வன்முறையே சட்டமாககொள்ளையே ஒழுங்காக
ஜெயாவின் மூன்று தவணை ஆட்சிகளில் அ.தி.மு.க. கும்பல் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நடத்திய கிரிமினல் குற்றச் செயல்களைப் பட்டியல் இட்டால், அக்கட்சியைப் பயங்கரவாதக் கட்சி என்றே முத்திரை குத்த முடியும்.

9. ஜெயாவின் ஈழத்தாய் அவதாரம் : ஆடு நனைகிறதே என அழுத ஓநாய் !
சனாதன தர்மத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ். தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது எப்படிப்பட்ட மோசடியோ, அதற்கு இணையானது ஜெயாவின் ஈழத் தாய் அவதாரம்.

10. மேட்டுக்குடி பார்ப்பன பொறுக்கி இங்கிலீஷ் பேசினால் படிப்பாளியாம்! பார்ப்பனக் கும்பலின் பித்தலாட்டம்

11. ஊழலுக்காகவே ஆட்சி ! – இதுதாண்டா ஜெயாவின் தனித்திறமை !!
கட்சி, ஆட்சி மட்டுமின்றி, தமிழ் சமூகத்தையே ஊழலிலும் பிழைப்புவாதத்திலும் மூழ்கடித்ததில் புதிய எல்லைகளைத் தொட்டவர்தான் ஜெயா.

  1. ரவுடித்தனமே ஜெயாவின் துணிவு ! பிச்சை போடுவதே ஜெயாவின் கருணை !!
    அலட்சியமும் மமதையும் தான்தோன்றித்தனங்களும் நிறைந்த ஜெயாவின் நடவடிக்கைகள் துணிச்சலானதாகவும், தமிழர்களின் போராட்டக் குணத்தை மழுங்கடித்துக் கையேந்திகளாக நிறுத்தப்பட்டதை அவரது கருணை எனவும் காட்டுகின்றன ஊடகங்கள்.

13. வங்கிகள் : கருப்புப் பணத்தை மாற்றித்தரும் அரசாங்க ஏஜெண்டுகள் !
கூட்டுறவு மற்றும் தொடக்க வேளாண் வங்கிகளின் வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தடை விதித்துள்ள மைய அரசு, கருப்புப் பணத்தை மாற்ற உதவிய தனியார் வங்கிகளுக்குத் தடை விதிக்க மறுப்பது ஏன் ?

14. பணமற்ற பொருளாதாரம் : உமி கொண்டு வருபவன் அவல் தின்பான் !

புதிய ஜனநாயகம் சனவரி 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

புதிய ஜனநாயகம் மாத இதழின் ஆண்டுச் சந்தா : உள்நாடு ரூ.180

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

மெரினா : போலீசு பயங்கரவாதம் – ஊடக மாமாத்தனம் ! வீடியோ

6

போலீசு தாக்குதலை மறைக்கும் ஊடகங்கள் !

மெரினாவில் காவல்துறை நடத்திய வன்முறைகளை திட்டமிட்டே ஊடகங்கள் மறைத்தன. மேலும் பல்வேறு இடங்களில் மக்கள் தன்னெழுச்சியாக மாணவர்களுக்கு ஆதரவாகச் நடத்திய போராட்டங்களையும் மூடி மறைத்து போலீசு சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லி போராட்ட உணர்வைப் பரவவிடாமல் தடுக்க முயன்றன ஊடகங்கள். இவற்றைத் தாண்டி மக்கள் போராடும் மாணவர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து போராடியுள்ளனர்.

ஆளும் வர்க்க ஊடகங்களின் முகத்திரையை கிழிக்கும் இந்த வீடியோவைப் பாருங்கள், பகிருங்கள்.

மெரினா : போலீசு வன்முறை வெறியாட்டம் !

மெரினாவில் நடந்த மாணவர் போராட்டத்தை சமூகவிரோதிகள் வன்முறைக்கு இட்டுச் சென்றுவிட்டனர் என ஹிப் ஹாப் ஆதியும், RJ பாலாஜியும், ராகவா லாரன்சும், கமிஷ்னர் ஜார்ஜ்-ம் கூறுகின்றனர். மக்களின் மண்டையை உடைத்ததும் குடிசைகளையும், வாகனங்களையும் கொளுத்திய சமூகவிரோதிகள் யார் என்பதை இந்த வீடியோ அம்பலப்படுத்துகிறது. பாருங்கள் பகிருங்கள்.

போலீசு – ஊடகம் – ஹிப்ஹாப்களின் உண்மை முகம் – கேலிச்சித்திரங்கள்

7

காவல் துறையின் உண்மை முகம் !

 

Police

_______________

வன்முறைக்கு  யார் காரணம் !

 

Police patrol

_______________

போலீசு ஊடகங்கள் !

 

Media police

_______________

போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர் – ஹிப் ஆப் ஆதி & கோ

 

Adhi and co

_______________

மெரினாவில் கருப்பு ஆடு !

Hiphop adhi

ஓவியம் : முகிலன்

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை. பேச: 95518 69588

இணையுங்கள்:

மெரினா : ஜல்லிக்கட்டு – டெல்லிக்கட்டு – கேலிச்சித்திரங்கள்

0

ஜல்லிக்கட்டை நடத்த டெல்லியின் கொம்பைப் பிடி !

5

________________

உண்மையான தூய்மை இந்தியா !

6

________________

உச்சநீதி மன்றமல்ல உச்சிக்குடுமி மன்றம் !

2

________________

சொறிநாய் ‘சுனா’ ஜாக்கிரதை !

3

________________

வாடிவாசல் திறக்க காவி மாட்டை அடக்கு !

1

________________

தமிழகத்தின் உரிமை காக்க பெரியாரின் தடியை எடு !

4

ஓவியம் : முகிலன்

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை. பேச: 95518 69588

இணையுங்கள்:

மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து புரட்சிகர அமைப்பினர் ஆர்ப்பாட்டம் !

2

வேலூரில் பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம் !

ழைக்கும் மக்களே,

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி, மாணவர்கள், பொதுமக்கள் குழந்தைகள் அனைவரும் அறவழியில் கடந்த ஒரு வாரமாக போராடிக்கொண்டுருந்த நிலையில், 23-01-17 திங்கட்கிழமை காலை முதல், அரசு தனது காட்டுமிராண்டிதனமான அடக்குமுறையை மாணவர்கள் மீது, கட்டு அவிழ்த்துவிட்டுயுள்ளது. ஏராளமான பெண்கள், குழந்தைகள் காயமடைந்து உள்ளனர். இரு மாணவர்கள் உயிரிழந்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதை கண்டித்து வேலூர் பு.ஜ.தொ.மு அமைப்பினர் காலை 11:00 மணியளவில், வேலூர் பழைய பேருந்து நிலையத்தில்,ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். பெண்கள், குழந்தைகள் என பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு தோழர்கள், மத்திய, மா நில அரசின் தமிழின விரோத நடவடிக்கைக்கு ஏதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Vellore

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
வேலூர்.

பென்னாகரத்தில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

டெல்லிக்கு எதிராக எழுந்தது தமிழகம்! விடாதே…!
தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டு!

மாணவர்களை  தாக்கி சதி செய்த மோடி அரசை கண்டித்தும், ஓபிஎஸ் பொம்மை அரசை கண்டித்தும் 23.1.2017 , திங்கள்கிழமை காலை 11 மணியளவில் பென்னாகரம் பேருந்துநிலையத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கினைப்பாளர் தோழர். முத்துக்குமார் தலைமையேற்று கண்டன உரையாற்றினார்.அமைதியாக போராடிய மாணவர்களை தாக்கி வன்முறையில் ஈடுப்பட்டது மோடி அரசு. மாணவர்களின் மண்டையை உடைத்தும், கடுமையாக தாக்கியது. மோடி அரசும்,ஓபிஎஸ் பொம்மை அரசும் தான் காரணம். குஜராத்தில் 2000 முஸ்லீம்களை கொன்று குவித்தது மோடி அரசு. காவிரியில் தண்ணீரை கொடுக்க மறுத்தது மோடி அரசு . “மாட்டு மூத்திரத்தை குடிப்பவன் மாட்டை அடக்க  முடியுமா?”  இந்த மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாகவும்,மோடி அரசை எதிர்த்து போராடினால் தான் நமக்கு வாழ்வு என்று பேசினார். மக்கள் 100 க்கும் மேற்பட்டோர் நின்று கவனித்தனர்.

Pennagaram 1

Pennagaram 2

தகவல் :
மக்கள் அதிகாரம்,
பென்னாகரம்.

காஞ்சிபுரத்தில் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக ஜல்லிக்கட்டு உரிமைக்காக மெரீனாவில் போராடிய  மாணவர்கள், இளைஞர்களை இன்று காலை 23.01.2017 அன்று போலீசு கொலை வெறிதாக்குதல் நடத்தியது. இதனை கண்டித்தும் போலீசின் அராஜகத்திற்கு முடிவுகட்டும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு , பு.மா.இ.மு தோழர்கள் கலந்துக்கொண்டனர் . இவ்வார்ப்பாட்டம் மாலை 5 மணியிலிருந்து 6.30 மணிவரை நடந்தது.
இடம்:காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரில்

Kanchi

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின்,
காஞ்சிபுரம் மாவட்டம்.

கும்மிடிப்பூண்டியில் தொழிலாளர்கள் பேரணி !

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் தொழிலாளர்கள் நூற்றுக் கணக்கில் திரண்டு நேற்று 23.01.17 மாலை பேரணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Gumidipundi

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
திருவள்ளூர் மாவட்டம்.

தேன்கனிக் கோட்டை ஆர்ப்பாட்டம் !

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், நாட்றாபாளையம் கிராமத்தில் மக்கள் அதிகாரம் சார்ப்பாக ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் 20-1-2017 அன்று காலை 10 மணியளவில் நாட்றாபாளையம் பேருந்து நிறுத்தத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் சரவணன், சுரேசு, ராமு ஆகியோர் கண்டன உரையாற்றினர். மற்றும் திரளான மக்கள் இறுதிவரை ஆர்ப்பாட்டத்திற்கு திரண்டு ஆதரவளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக கிராமங்கள் தோறும் வீடுகளில் பிரச்சாரம் செய்து இளைஞர்களைத் திரட்டியுள்ளனர். அப்பகுதி மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்கும் வகையில் திரளான அளவில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். காடுகளுக்குள் (கழனி) உள்ள பட்டித் தொட்டிகளிலும் குக்கிராமங்களிலும் மக்கள் அதிகாரம் இளைஞர்களைத் திரட்டிப் போராடி வருகிறது. இதனை அடுத்து அஞ்செட்டியில் நடந்த அனைத்துக் கட்சியினர் கூட்டத்திலும் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர். திரளான மக்களிடம் பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

Thenkani kottai 1

Thenkani kottai

தகவல் :
மக்கள் அதிகாரம்.
கிருஷ்ணகிரி மாவட்டம்.

ஓசூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் !

மோடியின் அதிகாரம் தமிழகத்தில் செல்லாது!
டெல்லியின் கொம்பைப் பிடித்து அடக்குவதுதான் ஜல்லிக்கட்டு!

என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக ஒசூர் ராம்நகரில் 20-10-2017 மாலை 5 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாகலூர் பகுதி அமைப்பாளர் தோழர்.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இன்று தமிழகம் எழுந்து நிற்கிறது, மோடி அரசைப் பணிய வைக்கப் போராட்டக் கோளம் பூண்டுள்ளது. தமிழர்கள் எதை விளையாட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்திற்கோ மோடி அரசுக்கோ இல்லை என்பதை தமிழகம் அறிவித்துக் கொண்டிருக்கிறது. எதை உண்பது, எதைக் கொண்டாடுவது, என்ன விளையாட்டு விளையாடுவது என்று தமிழர்களின் மொழி, பண்பாட்டின் மீது கைவைப்பதை தமிழகம் அனுமதிக்காது என்பதை உணர்த்தும் வகையில் பேசினார்.

தொடர்ந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில துணைத் தலைவர் தோழர்.பரசுராமன் மோடி அரசின் தமழகத்திற்கு எதிரான போக்குகளை அம்பலப்படுத்திப் பேசினார். கூடங்களும், கெயில் எரிவாயுக் குழாய், மீத்தேன், நியூட்ரினோ போன்ற அழிவுத் திட்டங்களைத் தமிழகத்தின் மீது திணிப்பதற்கும் ஜல்லிக் கட்டு தடைக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. அதேபோல, இந்தித் திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, நீட் தேர்வு திணிப்பு, சி.பி.எஸ்.இ. பாடங்கள் திணிப்பு என்று தமிழகத்தின் மீது மொழி மற்றும் கல்விரீதியாக ஒரு தாக்குதலை மோடி அரசு தொடுத்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டங்கள், இந்தத் திணிப்புகளுக்கு எதிரான போராட்டங்களாக கட்டாயம் வளரும்.

ஒட்டுமொத்தத்தில் பாஜக தமிழகத்திடம் ஓரவஞ்சனையுடந்தான் நடத்துக் கொள்கிறது. திராவிட – தமிழின உணர்வுக்கு எதிராக பார்ப்பன வெறுப்பைக் கக்கிக்கொண்டிருக்கிறது. இதனாலேயே காவிரியில் தமிழகத்தின் உரிமையை மறுக்கும் கர்நாடகாவிற்கும் முல்லைப் பெரியாறு, சிறுவாணி போன்ற வற்றில் தமிழகத்தின் நீர் உரிமையை மறுக்கும் கேரளாவிற்கும் துணை புரிகிறது. இந்த மோடி அரசுக்கு எதிரான இந்தப் போராட்டம் கட்டாயம் வெற்றி பெறும். சென்ற ஆண்டு பி.எஃப். சட்டத்திருத்தம் செய்த மோடி அரசை பெங்களுரூரு தொழிலாளர்கள் பணியவைத்தனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்த மோடி அரசை தமிழகம் பணியவைத்துள்ளது. அடுத்தடுத்து இந்த போராட்டங்கள் தொடரும் என்று கூறி சிறப்புரையாற்றினார். திரளான பொதுமக்களும் கடைவியாபாரிகளும் கூடிநின்று ஆதரித்தனர். ஜல்லிக்கட்டின் மீதான தடைவிதிக்க காரணமாக இருந்த பீட்டா அமைப்பு என்பது பார்ப்பன மற்றும் ஆர்.எஸ்.எஸ். அபிமானிகளால் நடத்தப்படுகிறது என்பதையும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்பலப்படுத்தி பேசினர்.

முழக்கம்

Notice

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
ஓசூர் – கிருஷ்ணகிரி மாவட்டம்.

ஓச்சேரி இந்தியன் வங்கிக்கு பணத்தை வரவழைத்த மக்கள்

0

மோடி அறிவித்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்கள் உழைத்து சேர்த்த பணத்தை அத்தியாவசிய தேவைகளுக்காக கூட எடுக்க முடியாமல் அனைவரும் வங்கி முன் வரிசையில் காத்திருந்தனர். பணத்தை எடுக்க அரசு 24 மணி நேரத்திற்கு நான்காயிரம் ரூபாய் எடுக்கலாம் என்பதும், கால்கடுக்க காத்திருந்த மக்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் தான் தரமுடியும் என்று வங்கிகள் சொல்வதும் அதன் பிறகு அரசு மீண்டும் 24 மணி நேரத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் தான் எடுக்க முடியும் என்பதும் மக்களை கொந்தளிக்க வைத்தன. அதனால் மோடி 50 நாட்கள் பொறுத்து கொள்ளுங்கள் அதன் பிறகு நாட்டையே சொர்க்கமாக மாற்றிவிடுவேன் பணம் எடுக்க தடையே இருக்காது என்றும் நாடகமாடினார்.  அதனால்தான் பணம் எடுக்க இருந்த தடை நீங்கவில்லை.

ocheri-indian-bank-protest
வங்கி திறந்து உள்ளே நுழையும் பொழுதே வங்கி மேலாளர் இன்றைக்கு வங்கியில் பணம் இல்லை, பணம் எல்லாம் எடுக்க முடியாது கிளம்புங்க, கிளம்புங்க என்று கூறினார்.

தங்களின் அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே தன்னெழுச்சியாகவும் பல அமைப்புகளிலும் போராடி வருகின்றனர். அப்படி வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம், ஓச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்தியன் வங்கி கிளையில் மக்கள் போராட்டத்தின் மூலம் தீர்வு கண்டுள்ளனர்.

11.01.17 அன்று காலை 10 மணிக்கு வங்கி திறப்பதற்கு முன்பாகவே வங்கி வாசலில் மக்கள் பணம் எடுக்க காத்திருந்தனர். வங்கி திறந்து உள்ளே நுழையும் பொழுதே வங்கி மேலாளர் இன்றைக்கு வங்கியில் பணம் இல்லை, பணம் எல்லாம் எடுக்க முடியாது கிளம்புங்க, கிளம்புங்க என்று கூறினார். அதன் பிறகும் மக்கள் வரிசையில் நிற்க மீண்டும் வங்கி துணை மேலாளர் இன்னைக்கு பணம் இல்லை கிளம்புங்க என்றார். காத்திருந்த வரிசையில் மக்கள் அதிகாரம் தோழர் உடனே வங்கி துணை மேலாளரிடம் பணம் கேட்டு பலநாள் வந்திருக்கிறோம், ஒவ்வொரு முறையும் இப்படித்தான் கூறுகிறீர்கள், இப்போது கிடைக்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளார். அதற்கு வங்கி துணை மேலாளர் போராடினாலும் பணம் கிடைக்காது என்று கூறியுள்ளார்.

வங்கியில் காத்திருந்த மக்களை பார்த்து நாம் உழைத்து சேர்த்த பணம் நமக்கில்லை என்கிறார்கள். ஆனால் சேகர் ரெட்டிக்கு கட்டு, கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டு எப்படி கிடைத்தது. தமிழ்நாட்டில் பல கிரிமினல்கள் வீட்டில், BJP கட்சி பிரமுகரின் வீட்டில் புதிய நோட்டுக்கள் கிடைத்துள்ளது . அப்படி என்றால் உழைத்து சேர்த்த நமக்கு பணம் இல்லையா? வாங்க நாம நம் பணத்தை எடுக்கணும்னா போராட்டம் நடத்தலாம் என்று சொல்ல மக்களும் உடனே அணிதிரண்டு தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராடினர். உடனே வங்கி கிளை மேலாளர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே காவேரிப்பாக்கம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான போலிசு வந்து கூட்டத்தை கலைந்து செல்லுமாறு பேச மக்கள் நாங்க சேர்த்த பணத்தை எங்களுக்கு கொடுக்க மறுக்கிறார்கள் எங்க பணத்த கொடுத்தா நாங்க ஏன் சாலைமறியல் செய்யப்போகிறோம்,  நீங்க போய் வங்கி மேலாளரிடம் பேசுங்கள் என்று கூறினர்.

ocheri-indian-bank-protest1
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசு வங்கி மேலாளரிடம் இதை முதலிலேயே செய்து இருக்கலாம் இல்லையா என்று கேட்டார்

ஆய்வாளர் சந்திரசேகர் வங்கி மேலாளரிடம் வங்கியில் உண்மையில் பணம் இல்லையா என்று கேட்க மூன்று லட்சம் ரூபாய் பணம் தான் இருக்கு என்று கூற இருப்பதை கொடுக்க ஏற்ப்பாடு செய்ய சொன்னார். அதன் பிறகு வங்கியில் பணம் கொடுப்பதாக சொல்ல கூட்டம் கலைந்து வங்கிக்குள் சென்றது. அதுவரை சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசு, வங்கி மேலாளரிடம் இதை முதலிலேயே செய்து இருக்கலாம் இல்லையா என்று கேட்டார். மக்கள் அதிகாரம் தோழர் மக்களைப் பார்த்து பாருங்க முதலில் போரடினாலும் பணம் கிடைக்காது என்று கூறிய வங்கி நாம் போராடின பிறகு இப்பொழுது பணம் கொடுக்கிறது போராட்டம் தான் இங்கு அனைத்திற்கும் தீர்வு என்றார். அங்கு இருந்தவர்கள் மக்கள் அதிகார தோழரை பார்த்து நன்றி கூறினர்.

மீண்டும் அடுத்த நாள் காலை 12.01.17 அன்றும் மக்கள் இதே போல் வரிசையில் காத்திருக்க அதில் தோழரும் இருந்தார். முந்தைய நாள் போராட்டம் செய்தாலும் பணம் கிடைக்காது என்று பேசிய வங்கி மேலாளர் வங்கி ஊழியர் ஒருவரை அழைத்து மக்களுக்கு ஃபேன் போடு வரிசையில் நிற்பவர்களுக்கு வியர்க்காதா என்று கூறினார். ஏற்கனவே போலீசு வங்கியில் இரண்டு பேரை காவலுக்கு நிற்க வைத்திருந்தனர். பணம் கொடுக்க ஆரம்பித்த ஒரு மணி நேரத்திலேயே பணம் காலியாக வங்கி மேலாளர், போலீசு ஆய்வாளரை அழைத்து வங்கியில் பணம் காலியாகிவிட்டது போராடப்போகிறார்கள் இன்னும் ஒரு மணி நேரத்தில் பணம் எடுத்து வந்து விடுகிறேன் பொறுமையாக இருக்க சொல்லுங்கள் என்று கூறினார். போலிசு ஆய்வாளர் சந்திரசேகர் மக்களிடம் வந்து பணம் காலியாகி விட்டதாம் ஒரு மணி நேரத்தில் வந்துவிடுமாம் பொறுத்திருங்கள் என்று கூறினார்.

இந்த அரசு தானே சொல்லிக் கொள்ளும் சட்டப்படி கூட செயல்படுவதில்லை. தானே அறிவித்திருக்கும் உத்தரவுகளை மதிப்பதில்லை. இந்நிலையில் எங்கேயும் எப்போதும் மக்கள் தமக்கான உரிமையை போராடித்தான் பெற முடியும் என்பது அங்கிருக்கும் மக்களுக்கு ஒரு சிறிய நம்பிக்கையாக உதித்திருக்கும் என்று நம்புகிறோம்.

தகவல் :
மக்கள் அதிகாரம், காஞ்சிபுரம்.

டெல்லிக்கு எதிராக தமிழகம் எழுந்தது !

81

டெல்லிக்கு எதிராக தமிழகம் எழுந்தது ! விடாதே !
தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டு !

டெல்லியை அடக்கினால் அச்சப்படும் அடங்கிப்போனால் நம்மை விரட்டும் !

  • தமிழகத்தின் மாணவச் சமூகமே, பிடி இருகட்டும், டெல்லியின் கொம்பை பிடி விடாதே இம்முறை மோடியின் பொய், பித்தலாட்டத்திற்கு ஏமாறக்கூடாது. சென்னை மெரினா முதல் தென்குமரி வரை காளையில் பற்றியத் தீகாட்டுத்தீயாக தமிழகத்தின் உரிமைக்காக டெல்லியைப் பொசுக்கட்டும். சிறைபட்டது காளை மட்டுமல்ல, காவிரி மட்டுமல்ல, கல்வி உரிமை மட்டுமல்ல, தமிழர் பண்பாடு மட்டுமல்ல மொத்த தமிழினமும்தான். டெல்லி ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுக்கும் உரிமைப் போராட்டத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும்.
  • 7 கோடி மக்களின் பிரதிநிதிகளான தமிழக எம்.பி.க்களை பிரதமர் சந்திக்க மறுக்கிறார். காவிரியை தடுத்த மோடியால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மரணம், செய்யாத குற்றத்திற்கு டெல்டா விவசாயமே தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளது. எந்த சட்டமும் இல்லாமல் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒரே இரவில் செல்லாது என 100 கோடி மக்களை நடுத்தெருவில் நிறுத்திய மோடியால், ஜல்லிகட்டு நடத்த முடியாதா? செத்துப்போன மொழியான சமஸ்கிருதத் திணிப்பு பள்ளிகளில் சி.பி.எஸ்இ. பாடத்திட்டம் திணிப்பு: தமிழக மாணவர்களை நடுத்தெருவில் நிறுத்த நீட்தேர்வு.
  • திராவிடத்தை அழிப்பேன் என சூளுரை. பெரியார் சிலை இடிப்பு. தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க மீத்தேன், ஷேல்கேஸ், நியூட்ரினோ, கூடங்குளம் அணு உலை போன்ற அழிவுத்திட்டங்களை கொண்டு வந்து தமிழகத்தில் குவிப்பது எதிர்த்துப் போராடினால் தேசத்துரோக வழக்கு. டெல்லி கோர்ட்டில் ரவுடித்தனம் செய்த பாஜக வக்கீல் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், ஊழலுக்கு எதிராகப் போராடிய தமிழக வழக்கறிஞர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழி என போராடியதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் மத்திய பாதுகாப்பு படை.
  • இல்லாத சரஸ்வதி நதியை தேட 100 கோடி ஒதுக்கிய மோடி அரசு, உலக வரலாற்றை திருப்பிப்போடும் – தமிழர்களின் தொண்மையை நிருபிக்கும் கீழடி அகழ்வாராய்ச்சியை தடுக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி பாபர் மசூதியை இடித்தார்கள் கடலுக்கடியில் ராமர் பாலம் என்று கூறி சேதுகால்வாய் திட்டத்திற்கு தடைவிதித்தார்கள். தமிழர்கள் போராடினால் ஆட்சியைகலைப்பேன் என அச்சுறுத்துகிறார்கள்.
  • சொந்த பந்தங்களோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய பொங்கல் நாள் போர்க்களமாக மாற்றியது அதிகார வர்க்கத் திமிரின் உச்சக்கட்டம். நம் ஊரில் வந்து நம்மாட்டை விடாதே என வாடிவாசலை மறித்து அடிப்பதும் கைது செய்வதும், கணக்கெடுப்பதும், மிரட்டுவதும் – என்ன நடக்கிறது? தமிழகத்தில் பிஜேபி. ஆட்சியா அல்லது அடிமைகளின் ஆட்சியா?
  • உச்சநீதிமன்ற உத்திரவுகளை தினம்தோறும் மீறுவது இந்த ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ் அதிகாரிகள்தான். தீர்ப்புகளை குப்பைக் காகிதமாக கருதுவது மத்திய – மாநில அரசுகள்தான். காலம் காலமாக ஜல்லிகட்டு நடத்தும் மக்களை பார்த்து கட்டப்பஞ்சாயத்து நீதிமன்ற உத்திரவிற்கு கட்டுப்படு என சொல்லும் தகுதி, அருகதை இவர்களுக்கு கிடையாது. வாழ்வுரிமைகளை நசுக்கி, வாழ்வாதாரங்களை அழித்து தமிழர்களை மிதிக்கும் டெல்லியின் காலை முறிக்காமல் விடக்கூடாது.

Front

உச்சநீதிமன்றதீர்ப்பை…

  • காவிரியில் கர்நாடகா மதிக்கவில்லை, முல்லைப் பெரியாரில் கேரளா மதிக்கவில்லை, மனித பிரமிடு கூடாது என்ற உத்திரவை மகாராஷ்டிரா மதிக்கவில்லை, நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசே மதிக்கவில்லை. ஜல்லிகட்டில் தமிழகத்தை கட்டுப்படுத்த என்ன அருகதை இருக்கிறது?
  • சுப்பிரமணியசாமி, தமிழன் கட்டிய சிதம்பரம் கோவிலை தீட்சதர்களுக்குக் கொடு என சொன்னான், உச்சநீதிமன்றமும் கொடுத்தது. கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், தமிழ்நாட்டில் மட்டும் கூடாது என்கிறது உச்சநீதிமன்றம்.
  • ஜல்லிக்கட்டு தொன்மையான தமிழர் பண்பாடு என்கிறோம். கம்ப்யூட்டரில் விளையாடு என தமிழினத்தை கேலி பேசுகிறார் டெல்லி நீதிபதி தமிழனுக்கு இழைக்கும் அநீதி – மோடியும், உச்சுக்குடுமி மன்றமும் சொல்லும் மனுநீதி. பார்ப்பன எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, தமிழின் தொன்மை, பகுத்தறிவு, திராவிடக் கொள்கை களில் தமிழகம் அடையாளமாக நிற்கிறது. இதனால் உச்சநீதிமன்றம், டெல்லி மத்திய அரசு, வட இந்திய ஊடகங்கள் அனைத்திற்கும் தமிழ்நாடு என்றாலே ஒரவஞ்சனைதான், வேப்பங்காய்தான்.
  • தமிழர்கள் மீது நடத்தப்படும் தொடர் அடக்குமுறை விளைவினால் ஏற்பட்ட எதிர்ப்புகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து இன்று காளை மூலம் டெல்லி மீது சீறிபாய்கிறது.

டெல்லி அரசின் உயிர்நிலை வசமாக மாட்டிக் கொண்டது. இம்முறை மாணவர்களின் குறி தப்பாது !

காளையில் பற்றிய தீ தமிழகத்தின் உரிமைகளை நசுக்கும் டெல்லியைப் பொசுக்கட்டும் !

Back

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு. 99623 66321.