’தடி’யரசு தின வாழ்த்துக்கள்
————-
குடிகளுக்கு குறி வைக்கும் ’குடி’யரசு !
————-
ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
இணையுங்கள்:
’தடி’யரசு தின வாழ்த்துக்கள்
————-
குடிகளுக்கு குறி வைக்கும் ’குடி’யரசு !
————-
ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
இணையுங்கள்:
ஆங்கிலேயனை எதிர்த்த விடுதலைப் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்ன மருதுவின் திருச்சிப் பிரகடனத்தைப் போல உலகையே திருப்பிப் பார்க்க வைத்த தமிழக மக்களின் மெரினா போராட்டத்தில் தமிழக மக்களின் மெரினா பிரகடனம் 22.01.2017 அன்று அறிவிக்கப்பட்டது. இந்த பிரகடனத்தை மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ அறிவித்து விட்டு, இதில் சேர்க்கை, திருத்தம், விமரிசனம் இருந்தால் கூறுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். பிறகு அங்குள்ள மக்களால் இந்த பிரகடனம் பெரும் ஆரவாரத்துடன் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பாருங்கள் பகிருங்கள்.
தமிழக மக்களின் மெரினா பிரகடனம்
பெரும்பான்மை மக்களுக்கு எதிராக சதித்தனமாகக் கொண்டு வரப்படும் சட்டங்களை,
உத்தரவுகளை, தீர்ப்புகளை மக்கள் ஏற்றுக் கீழ்ப்படிய முடியாது
தொடர்புக்கு 9962366321
சென்னை மெரினா கடற்கரைக்கு எதிரில் உள்ள நடுக்குப்பம் மீனவர்கள் வசிக்கும் பகுதியில் 23.01.2017 திங்கட்கிழமை அன்று போலீசு நடத்திய கொடூரத் தாக்குதல். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய மாணவர்களை திங்களன்று அதிகாலை அடித்து விரட்டுகிறது போலீசு. அடிபட்ட மாணவர்கள் நடுக்குப்பத்திற்கு வந்து மக்களிடம் சொல்லி கதறுகிறார்கள். மாணவர்களுக்கு ஆதரவாக திரண்ட மக்கள் கடற்கரைக்கு செல்கிறார்கள். அவர்களையும் அடித்து துரத்தும் போலீசு இறுதியில் இக்குப்பத்திற்கு வந்து சூறையாடுகிறது.
380 மீன் விற்கும் சிறு கடைகளை தீக்கிறையாக்கியது போலீசு. அந்த பகுதி மக்களை நீ தானே போராடியவர்களுக்கு சோறு கொடுத்தாய் எனச் சொல்லி ஒவ்வொருவரையும் வீடு வீடாகச் சென்று தாக்கியது மட்டுமல்ல, அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த மீன்களைத் திருடித் தின்றுள்ளது தமிழக காவல் துறை.
மேலும் காவலர்கள் குடிசைகளைப் பற்ற வைப்பதும், நின்று கொண்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியதும் சமூக ஊடகங்களில் அம்பலமான பின்னரும் அது மார்ஃபிங் எனக் கூறுகிறார் சென்னைக் கமிஷ்னர் ஜார்ஜ். ஆனால் காவல் துறையின் வெறியாட்டங்களுக்கு நேரடி சாட்சியாக உள்ளனர் இந்த மக்கள். தற்போது போலீஸ் இந்த பகுதிகளில் உள்ள ஆண்களைக் கைது செய்ய அடிக்கடி வருகிறது. இதற்கு பயந்து பகுதியில் உள்ள ஆண்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர். வாழ்வாதாரம் இழந்த பெண்கள் கதறுகின்றனர். வினவு செய்தியாளர்கள் நேரடியாக எடுத்த வீடியோ நேர்காணல். பாருங்கள் – பகிருங்கள்.
‘அடியரசு’ தின வாழ்த்துக்கள் – கேலிச்சித்திரங்கள்
_______________
நாளைக்கு குடியரசு தினத்த ‘மெர்சல்’ பண்றோம்…
ஓவியம் : முகிலன்
_______________
குடிமக்களை அடித்துவிரட்டி குடியரசு தின அணிவகுப்பு !
படம் : நன்றி -துரை
_______________
நம்ம கத்திகுத்து கந்தன் இல்ல… அம்புட்டு பயலுக்கும் இங்கதேன் ட்ரெய்னிங்கு…
ஓவியம் : முகிலன்
_______________
போலீசு கக்குவதைச் சொல்லும் ஊடகங்கள் !
ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
இணையுங்கள்:
உலகம் உற்றுப் பார்த்த ஒரு போராட்டத்தை ரத்தகளறியில் அமித்திய இந்த காவல் துறையும் அரசும் நாக்கை பிடுங்கிக் கொண்டு சாகலாம். நேற்றுவரை பண்புடன் பேசி கைகளை குலுக்கி வாழ்த்தியவனின் மண்டையை உடைத்து, குடிசைகளைக் கொளுத்தி வெறியாட்டம் போட்ட காவல்துறையிடம் இருந்து மக்களும் மாணவர்களும் படிப்பினை பெற்று மீண்டு வருவார்கள்.
பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் -வள்ளுவர்பெண் ஒருவரின் குமுறலையும் கோபத்தையும் பாருங்கள் பகிருங்கள்.
இந்தப் பெண் திமுகவைச் சேர்ந்தவர் என்று மாணவர் போராட்டத்தை எதிர்க்கும் தரப்பினர் (அதிமுக, பாஜக) கூறுகின்றனர். இருக்கட்டுமே. அந்தப் பெண் போராட்டத்தில் கலந்து கொண்டதும் உண்மை. போலிஸ் அங்கே பெரும் வன்முறையை நிகழ்த்தியதும் உண்மை. நடுக்குப்பத்தில் போலீசிடம் அடிவாங்கி படுகாயமுற்று, உடமைகளை இழந்த மீனவப் பெண்களும், ஆண்களும் கூட சென்ற தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்திருப்பார்கள். அதனால் அவர்கள் இந்த வன்முறையையும், ஏவி விட்ட அதிமுக அரசையும் மன்னித்து விடுவார்களா என்ன?
போராடும் மாணவர்களைக் காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்குவதன் மூலம்
டெல்லியின் ஆதிக்கத்தை திணித்துவிட முடியாது !
தமிழகத்தின் உரிமையை மீட்க ஒன்றிணைவோம் !
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஓசூர் – 97880 11784.
_______________
மாணவர்களை தாக்கி சதி செய்த மோடி அரசை கண்டித்தும், ஓபிஎஸ் பொம்மை அரசை கண்டித்தும் 23.1.2017 , திங்கள்கிழமை நாகர்கோவில் நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
_______________
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், நாட்றாபாளையம் கிராமத்தில் மக்கள் அதிகாரம், தமிழக மாணவர் எழுச்சியை ஆதரித்து தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் 22-1-2017 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நாட்றாபாளையம் பேருந்து நிறுத்தத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். உள்ளூர் பெரியவர்கள், வியாபாரிகள், நண்பர்கள் பலரும் இந்த தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர். பலரும் நேரில் வந்து மாணவர் எழுச்சியை ஆதரித்தும் வாழ்த்தியும் பேசினர். குழந்தைகள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர். மக்கள் அதிகாரத்தின் இந்த தர்ணா போராட்டம் அங்குள்ள கிராம மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
மெரினாவிலும்தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடக்கும் மாணவர் போராட்டத்தின் சிறப்பை இங்கு விளக்கிப் பேசினர். கோவனுடைய பாடல்கள் ஒளிப்பரப்பட்டன. தோழர் மருதையனுடைய மெரினா உரைகள் போட்டு பிரச்சாரம் செய்யப்பட்டன. இவை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
தகவல் :
மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு.
கிருஷ்ணகிரி மாவட்ட தொடர்பு எண்: 80152 69381
_______________
சல்லிக்கட்டு தடை, பொங்கல் விடுமுறை ரத்து, கீழடி ஆய்வுக்கு மறுப்பு, புதிய கல்விக் கொள்கை, இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு…
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருத்தாச்சலம் – சிதம்பரம்.
தொடர்புக்கு : 8870. 81056.
திருவாரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் முரளி அவரது வீட்டில் நேற்று (24.01.2017)இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் கியூ போலீஸ் தியாகராஜன் ஆகியோரால் கைது செய்யப்பட்டு கொரடாச்சேரி போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நேற்று காலை 10 மணிக்கு திருவாரூர் பேருந்துநிலையம் அருகே நடக்க இருந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தை மோப்பம் பிடித்த போலீசு அவரை கைதுசெய்திருக்கிறது.
மேலும் 11.01.17 அன்று புதிய ரயிலடியில் “நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி” என்ற முழக்கத்தின் கீழ் பல்வேறு கட்சிகள், விவசாய அமைப்புகளை ஒருங்கிணைத்து நாள் முழுவதும் நடந்த மக்களதிகாரம் தர்ணாவில் தொண்டர்கள் கம்பு வைத்திருந்தது, மாலை 5 மணிக்கு முடிக்க வேண்டிய தர்ணாவை 06.45 க்கு முடித்தது மற்றும் நேற்று (23.01.2017) அதிகாலை ஜல்லிக்கட்டு போராட்ட மாணவர்களை போலீசு வெறிகொண்டு தாக்குவதைக் கண்டித்து சுவரொட்டிப் பிரச்சாரம் செய்தது என அவர் மீது 143, 188, 504 IB, 195/17 ஆகிய செக்சன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் கொரடாச்சேரியிலிருந்து திருவாரூர் டவுன் ஸ்டேசனுக்கு அழைத்து வரப்பட்டு நேற்று இரவு 07.15 க்கு நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டு நன்னிலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
தகவல் :
மக்களதிகாரம்,
திருவாரூர்.
புதிய ஜனநாயகம் சனவரி 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
இந்த இதழில் வெளியான கட்டுரைகள்
1. போராட்டங்கள் இருட்டடிப்பு : அன்று இந்திரா… இன்று மோடி… !
பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளுக்கு எதிரான பொதுமக்கள், புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகளின் போராட்டங்களை மோடியும் தனியார் ஊடகங்களும் கூட்டுச் சேர்ந்து இருட்டடிப்பு செய்து வருவது இந்திராவின் “நெருக்கடிநிலை” காலத்தை நினைவூட்டுகிறது.
2. அதிகாரத்தில் உழவனின் எதிரிகள் ! எழவு வீடானது தமிழகம் !!
3. மாண்புமிகு மன்னார்குடி மாஃபியா !
சசிகலாவை மாண்புமிகு முதல்வர் என்று அழைக்கும் தறுவாயில், அவரைத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கிய மனனார்குடி மாஃபியாவையும் மாண்புமிகு மன்னார்குடி மாஃபியா என்று அழைப்பதே பொருத்தமானதாக இருக்கும்.
4. அ.தி.மு.க.வை அழிக்காவிடில் தமிழகமே அழியும் !
தொழில்முறை கிரிமினல் மாஃபியாக்களின் கூடாரம்தான் அ.தி.மு.க. கொள்ளைக்கூட்டத்தின் உள் முரண்பாடுகள் காரணமாக அ.தி.மு.க. அழியும் வரை காத்திருக்கக் கூடாது. அ.தி.மு.க. என்ற விஷப்பூரானை நம் சொந்தக் கரங்களால் நசுக்கி அழிப்பதொன்றுதான், தமிழகம் பிழைப்பதற்கு வழி.
5. ஜெயா மரணம்: தமிழகத்தைக் கவ்வியிருந்த பீடை ஒழிந்தது !
6. ஜெயா: பெண்ணரசியா ? இம்சை அரசியா ?
பெண் என்ற காரணத்தை முன்வைத்து, ஜெயாவின் ஆட்சிக் காலங்களில் நடந்த அனைத்துக் குற்றங்களில் இருந்தும் ஜெயாவை விடுவித்துவிட்டு, அவரை மதிப்பீடு செய்வது அறிவுடமையாகாது.
7. சுயமரியாதையை அழித்து… பார்ப்பனப் பண்பாட்டைத் திணித்து …
சுயமரியாதை அரசியலைப் பேசிவந்த தமிழகத்தில், அதற்கு எதிரான பார்ப்பன அடிமைத்தனமும், மூடத்தனமும் மீண்டும் கோலோச்சும்படி தமிழகத்தைச் சீரழித்தார், பார்ப்பன ஜெயா.
8. வன்முறையே சட்டமாக… கொள்ளையே ஒழுங்காக…
ஜெயாவின் மூன்று தவணை ஆட்சிகளில் அ.தி.மு.க. கும்பல் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நடத்திய கிரிமினல் குற்றச் செயல்களைப் பட்டியல் இட்டால், அக்கட்சியைப் பயங்கரவாதக் கட்சி என்றே முத்திரை குத்த முடியும்.
9. ஜெயாவின் ஈழத்தாய் அவதாரம் : ஆடு நனைகிறதே என அழுத ஓநாய் !
சனாதன தர்மத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ். தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது எப்படிப்பட்ட மோசடியோ, அதற்கு இணையானது ஜெயாவின் ஈழத் தாய் அவதாரம்.
10. மேட்டுக்குடி பார்ப்பன பொறுக்கி இங்கிலீஷ் பேசினால் படிப்பாளியாம்! பார்ப்பனக் கும்பலின் பித்தலாட்டம்
11. ஊழலுக்காகவே ஆட்சி ! – இதுதாண்டா ஜெயாவின் தனித்திறமை !!
கட்சி, ஆட்சி மட்டுமின்றி, தமிழ் சமூகத்தையே ஊழலிலும் பிழைப்புவாதத்திலும் மூழ்கடித்ததில் புதிய எல்லைகளைத் தொட்டவர்தான் ஜெயா.
13. வங்கிகள் : கருப்புப் பணத்தை மாற்றித்தரும் அரசாங்க ஏஜெண்டுகள் !
கூட்டுறவு மற்றும் தொடக்க வேளாண் வங்கிகளின் வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தடை விதித்துள்ள மைய அரசு, கருப்புப் பணத்தை மாற்ற உதவிய தனியார் வங்கிகளுக்குத் தடை விதிக்க மறுப்பது ஏன் ?
14. பணமற்ற பொருளாதாரம் : உமி கொண்டு வருபவன் அவல் தின்பான் !
புதிய ஜனநாயகம் சனவரி 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.
புதிய ஜனநாயகம் மாத இதழின் ஆண்டுச் சந்தா : உள்நாடு ரூ.180
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com
போலீசு தாக்குதலை மறைக்கும் ஊடகங்கள் !
மெரினாவில் காவல்துறை நடத்திய வன்முறைகளை திட்டமிட்டே ஊடகங்கள் மறைத்தன. மேலும் பல்வேறு இடங்களில் மக்கள் தன்னெழுச்சியாக மாணவர்களுக்கு ஆதரவாகச் நடத்திய போராட்டங்களையும் மூடி மறைத்து போலீசு சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லி போராட்ட உணர்வைப் பரவவிடாமல் தடுக்க முயன்றன ஊடகங்கள். இவற்றைத் தாண்டி மக்கள் போராடும் மாணவர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து போராடியுள்ளனர்.
ஆளும் வர்க்க ஊடகங்களின் முகத்திரையை கிழிக்கும் இந்த வீடியோவைப் பாருங்கள், பகிருங்கள்.
மெரினா : போலீசு வன்முறை வெறியாட்டம் !
மெரினாவில் நடந்த மாணவர் போராட்டத்தை சமூகவிரோதிகள் வன்முறைக்கு இட்டுச் சென்றுவிட்டனர் என ஹிப் ஹாப் ஆதியும், RJ பாலாஜியும், ராகவா லாரன்சும், கமிஷ்னர் ஜார்ஜ்-ம் கூறுகின்றனர். மக்களின் மண்டையை உடைத்ததும் குடிசைகளையும், வாகனங்களையும் கொளுத்திய சமூகவிரோதிகள் யார் என்பதை இந்த வீடியோ அம்பலப்படுத்துகிறது. பாருங்கள் பகிருங்கள்.
காவல் துறையின் உண்மை முகம் !
_______________
வன்முறைக்கு யார் காரணம் !
_______________
போலீசு ஊடகங்கள் !
_______________
போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர் – ஹிப் ஆப் ஆதி & கோ
_______________
மெரினாவில் கருப்பு ஆடு !
ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை. பேச: 95518 69588
இணையுங்கள்:
ஜல்லிக்கட்டை நடத்த டெல்லியின் கொம்பைப் பிடி !
________________
உண்மையான தூய்மை இந்தியா !
________________
உச்சநீதி மன்றமல்ல உச்சிக்குடுமி மன்றம் !
________________
சொறிநாய் ‘சுனா’ ஜாக்கிரதை !
________________
வாடிவாசல் திறக்க காவி மாட்டை அடக்கு !
________________
தமிழகத்தின் உரிமை காக்க பெரியாரின் தடியை எடு !
ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை. பேச: 95518 69588
இணையுங்கள்:
மோடி அறிவித்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்கள் உழைத்து சேர்த்த பணத்தை அத்தியாவசிய தேவைகளுக்காக கூட எடுக்க முடியாமல் அனைவரும் வங்கி முன் வரிசையில் காத்திருந்தனர். பணத்தை எடுக்க அரசு 24 மணி நேரத்திற்கு நான்காயிரம் ரூபாய் எடுக்கலாம் என்பதும், கால்கடுக்க காத்திருந்த மக்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் தான் தரமுடியும் என்று வங்கிகள் சொல்வதும் அதன் பிறகு அரசு மீண்டும் 24 மணி நேரத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் தான் எடுக்க முடியும் என்பதும் மக்களை கொந்தளிக்க வைத்தன. அதனால் மோடி 50 நாட்கள் பொறுத்து கொள்ளுங்கள் அதன் பிறகு நாட்டையே சொர்க்கமாக மாற்றிவிடுவேன் பணம் எடுக்க தடையே இருக்காது என்றும் நாடகமாடினார். அதனால்தான் பணம் எடுக்க இருந்த தடை நீங்கவில்லை.

தங்களின் அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே தன்னெழுச்சியாகவும் பல அமைப்புகளிலும் போராடி வருகின்றனர். அப்படி வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம், ஓச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்தியன் வங்கி கிளையில் மக்கள் போராட்டத்தின் மூலம் தீர்வு கண்டுள்ளனர்.
11.01.17 அன்று காலை 10 மணிக்கு வங்கி திறப்பதற்கு முன்பாகவே வங்கி வாசலில் மக்கள் பணம் எடுக்க காத்திருந்தனர். வங்கி திறந்து உள்ளே நுழையும் பொழுதே வங்கி மேலாளர் இன்றைக்கு வங்கியில் பணம் இல்லை, பணம் எல்லாம் எடுக்க முடியாது கிளம்புங்க, கிளம்புங்க என்று கூறினார். அதன் பிறகும் மக்கள் வரிசையில் நிற்க மீண்டும் வங்கி துணை மேலாளர் இன்னைக்கு பணம் இல்லை கிளம்புங்க என்றார். காத்திருந்த வரிசையில் மக்கள் அதிகாரம் தோழர் உடனே வங்கி துணை மேலாளரிடம் பணம் கேட்டு பலநாள் வந்திருக்கிறோம், ஒவ்வொரு முறையும் இப்படித்தான் கூறுகிறீர்கள், இப்போது கிடைக்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளார். அதற்கு வங்கி துணை மேலாளர் போராடினாலும் பணம் கிடைக்காது என்று கூறியுள்ளார்.
வங்கியில் காத்திருந்த மக்களை பார்த்து நாம் உழைத்து சேர்த்த பணம் நமக்கில்லை என்கிறார்கள். ஆனால் சேகர் ரெட்டிக்கு கட்டு, கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டு எப்படி கிடைத்தது. தமிழ்நாட்டில் பல கிரிமினல்கள் வீட்டில், BJP கட்சி பிரமுகரின் வீட்டில் புதிய நோட்டுக்கள் கிடைத்துள்ளது . அப்படி என்றால் உழைத்து சேர்த்த நமக்கு பணம் இல்லையா? வாங்க நாம நம் பணத்தை எடுக்கணும்னா போராட்டம் நடத்தலாம் என்று சொல்ல மக்களும் உடனே அணிதிரண்டு தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராடினர். உடனே வங்கி கிளை மேலாளர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே காவேரிப்பாக்கம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான போலிசு வந்து கூட்டத்தை கலைந்து செல்லுமாறு பேச மக்கள் நாங்க சேர்த்த பணத்தை எங்களுக்கு கொடுக்க மறுக்கிறார்கள் எங்க பணத்த கொடுத்தா நாங்க ஏன் சாலைமறியல் செய்யப்போகிறோம், நீங்க போய் வங்கி மேலாளரிடம் பேசுங்கள் என்று கூறினர்.

ஆய்வாளர் சந்திரசேகர் வங்கி மேலாளரிடம் வங்கியில் உண்மையில் பணம் இல்லையா என்று கேட்க மூன்று லட்சம் ரூபாய் பணம் தான் இருக்கு என்று கூற இருப்பதை கொடுக்க ஏற்ப்பாடு செய்ய சொன்னார். அதன் பிறகு வங்கியில் பணம் கொடுப்பதாக சொல்ல கூட்டம் கலைந்து வங்கிக்குள் சென்றது. அதுவரை சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசு, வங்கி மேலாளரிடம் இதை முதலிலேயே செய்து இருக்கலாம் இல்லையா என்று கேட்டார். மக்கள் அதிகாரம் தோழர் மக்களைப் பார்த்து பாருங்க முதலில் போரடினாலும் பணம் கிடைக்காது என்று கூறிய வங்கி நாம் போராடின பிறகு இப்பொழுது பணம் கொடுக்கிறது போராட்டம் தான் இங்கு அனைத்திற்கும் தீர்வு என்றார். அங்கு இருந்தவர்கள் மக்கள் அதிகார தோழரை பார்த்து நன்றி கூறினர்.
மீண்டும் அடுத்த நாள் காலை 12.01.17 அன்றும் மக்கள் இதே போல் வரிசையில் காத்திருக்க அதில் தோழரும் இருந்தார். முந்தைய நாள் போராட்டம் செய்தாலும் பணம் கிடைக்காது என்று பேசிய வங்கி மேலாளர் வங்கி ஊழியர் ஒருவரை அழைத்து மக்களுக்கு ஃபேன் போடு வரிசையில் நிற்பவர்களுக்கு வியர்க்காதா என்று கூறினார். ஏற்கனவே போலீசு வங்கியில் இரண்டு பேரை காவலுக்கு நிற்க வைத்திருந்தனர். பணம் கொடுக்க ஆரம்பித்த ஒரு மணி நேரத்திலேயே பணம் காலியாக வங்கி மேலாளர், போலீசு ஆய்வாளரை அழைத்து வங்கியில் பணம் காலியாகிவிட்டது போராடப்போகிறார்கள் இன்னும் ஒரு மணி நேரத்தில் பணம் எடுத்து வந்து விடுகிறேன் பொறுமையாக இருக்க சொல்லுங்கள் என்று கூறினார். போலிசு ஆய்வாளர் சந்திரசேகர் மக்களிடம் வந்து பணம் காலியாகி விட்டதாம் ஒரு மணி நேரத்தில் வந்துவிடுமாம் பொறுத்திருங்கள் என்று கூறினார்.
இந்த அரசு தானே சொல்லிக் கொள்ளும் சட்டப்படி கூட செயல்படுவதில்லை. தானே அறிவித்திருக்கும் உத்தரவுகளை மதிப்பதில்லை. இந்நிலையில் எங்கேயும் எப்போதும் மக்கள் தமக்கான உரிமையை போராடித்தான் பெற முடியும் என்பது அங்கிருக்கும் மக்களுக்கு ஒரு சிறிய நம்பிக்கையாக உதித்திருக்கும் என்று நம்புகிறோம்.
தகவல் :
மக்கள் அதிகாரம், காஞ்சிபுரம்.
டெல்லியை அடக்கினால் அச்சப்படும் அடங்கிப்போனால் நம்மை விரட்டும் !
உச்சநீதிமன்றதீர்ப்பை…
டெல்லி அரசின் உயிர்நிலை வசமாக மாட்டிக் கொண்டது. இம்முறை மாணவர்களின் குறி தப்பாது !
காளையில் பற்றிய தீ தமிழகத்தின் உரிமைகளை நசுக்கும் டெல்லியைப் பொசுக்கட்டும் !
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு. 99623 66321.