Tuesday, July 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 63

எண்ணூர்: முருகப்பா – கோரமண்டல் ஆலையை நிரந்தரமாக மூட போராடிவரும் மக்களுடன் கரம்கோர்ப்போம்!

டந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று இரவில், எண்ணூரின் பெரியகுப்பம் பகுதியில் அமைந்துள்ள முருகப்பா கோரமண்டல் இண்டர்நேஷனல் உரத்தொழிற்சாலைக்கு நச்சுத்தன்மை கொண்ட அம்மோனியா வாயுவை கொண்டுசெல்வதற்காக கடலுக்கு அடியில் 2.5 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள குழாயில் இருந்து அம்மோனியா வாயு கசிந்தது.

இதனால் பெரியகுப்பம், சின்னக்குப்பம், பர்மா நகர், எர்ணாவூர் குப்பம் போன்ற கிராமங்களில் வாழும் மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகினர். கண்ணெரிச்சல், மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் போன்றவை காரணமாக ஐம்பதுக்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கடலில் வாயுக்கசிவை பார்த்தவர்கள் உடனடியாக தகவல் தெரிவித்ததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

அம்மோனியா வாயுக் கசிவினால் அச்சத்திற்கு உள்ளான மக்கள், உரத் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று போராடியதன் விளைவாக ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது. ஆனால், ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 40 நாட்களுக்கு மேலாக மக்கள் போராடி வருகின்றனர். இந்தச் சூழலில் தான், அம்மோனியா வாயு கசிவு குறித்து ஆராய தமிழ்நாடு அரசினால் அமைக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட தொழில்நுட்பக் குழு தனது அறிக்கையை பிப்ரவரி 6 அன்று தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் சமர்பித்தது.

அந்த அறிக்கையில், 15 நிமிடத்தில் 67.63 டன் அம்மோனியா வாயு கசிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்திற்கு சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ. 5.92 கோடி சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உடனடியாக செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிபந்தனைகளை தொழிற்சாலை செயல்படுத்தாததால் தொழிற்சாலையின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


படிக்க: அச்சத்தில் எண்ணூர் மக்கள் – அமோனியா கசிவால் மூச்சு திணறல் | தோழர் மருது


மேலும், ”சேதமடைந்த குழாய்க்கு பதில் புதிய குழாய்களை அதிநவீன கண்காணிப்பு, தானியங்கி கட்டுப்பாடு மற்றும் விபத்து தடுப்பு சாதனங்களுடன் அமைக்கப்பட வேண்டும். கடலில் இருந்து சாலை வழியாக தொழிற்சாலைக்கு அமோனியா வாயு கொண்டு செல்லும் இடத்தில் குழாய்களை பொது மக்கள் யாரும் அணுகா வண்ணம் உரிய பாதுகாப்பு அமைப்புகளுடன் இருப்பதை தொழிற்சாலை உறுதி செய்ய வேண்டும்” என்பன உள்ளிட்ட 18 பரிந்துரைகளை இக்குழு தொழிற்சாலைக்கு வழங்கியுள்ளது.

நாற்பது நாட்களுக்கும் மேலாக நடந்துவந்த மக்களின் போராட்டத்தை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை; வாயுக்கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுநாள்வரை இழப்பீடும் வழங்கவில்லை. ”ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்” என்ற எண்ணூர் மக்களின் கோரிக்கை நிபுணர் குழுவின் அறிக்கையில் இடம்பெறவில்லை. திமுக அரசும் ஆலையை மூடுவது குறித்து வாயைத்திறக்கவில்லை. இதனால் கோபமடைந்த எண்ணூர் பகுதியில் உள்ள 33 கிராம மக்கள் பிப்ரவரி 6-ஆம் தேதி, சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“எண்ணூர் மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கோரமண்டலே வெளியேறு” போன்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட பேனர்களுடனும் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி முழக்கங்களையிட்டும் 33 கிராமங்களிலும் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். காலை ஏழு மணிக்கே தொடங்கிய சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டம் மதியம் இரண்டு மணி வரை நீடித்தது.

குழாய்களை மாற்றுவதும் சென்சார்களை நிறுவுவதும் தங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ஆலை வெளியேற்றப்பட வேண்டும் அல்லது நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்றும் மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இந்தப் பேரழிவிலும் மக்கள் பக்கம் நிற்க வேண்டிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொழிற்சாலைக்கு ஆதரவாக இருப்பது வேதனையளிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

மக்கள் தொடர்ந்து போராடி வந்தாலும் தி.மு.க. அரசு முருகப்பா-கோரமண்டல் ஆலைக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தே செயல்பட்டு வருகிறது. நிபுணர் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட்டதும் ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற அடிப்படையில் இருந்துதான்.


படிக்க: எண்ணெய் கழிவு: நிர்கதியாக்கப்பட்ட எண்ணூர் மக்கள்


இதற்கு முன்னர், ஜனவரி மாதத்தில் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட வெள்ளத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பக்கிங்ஹாம் கால்வாயில் அபாயகரமான எண்ணெய் கழிவுகளை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) என்ற மத்திய அரசு ஆலை திருட்டுத்தனமாக திறந்துவிட்ட விவகாரத்திலும் திமுக அரசு, சி.பி.சி.எல். நிறுவனத்துக்கு சாதகமாகவே செயல்பட்டது.

தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் பல நாசகர ஆலைகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றன. இதனால் எண்ணூர் பகுதியே மக்கள் வாழத்தகுதியற்ற பகுதியாக மாறிவருகிறது. தங்கள் உயிர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலில் அச்ச உணர்வோடு எண்ணூர் பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே, முருகப்பா-கோரமண்டல் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நாற்பது நாட்களுக்கும் மேலாக போராடி வரும் எண்ணூர் பகுதி மக்களோடு களத்தில் தோளோடு தோள் நின்று போராட வேண்டியது தமிழ்நாட்டு மக்களின் கடமையாகும். மேலும் அப்போராட்டத்தை எண்ணூர் பகுதியில் உள்ள அனைத்து நாசகர தொழிற்சாலைகளை வெளியேற்றும் வகையில் மக்கள்திரள் போராட்டங்களாக வளர்த்தெடுக்க வேண்டியது புரட்சிகர, ஜனநாயகச் சக்திகளின் கடமையாகும்.


கார்த்திக்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஆளும்வர்க்க அரசியல் கழிசடை விஜய்! | தோழர் சிவா

ஆளும்வர்க்க அரசியல் கழிசடை விஜய்! | தோழர் சிவா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



லடாக் பிராந்தியத்தை ஸ்தம்பிக்க வைத்த மக்கள் போராட்டம்

டாக்” யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி லடாக் பகுதியின் லே (Leh) மற்றும் கார்கில் (Kargil) மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பிப்ரவரி 3 அன்று அணிதிரண்டு உறைபனியில் போராட்டம் நடத்தினர். லே அபெக்ஸ் பாடி (LBA) மற்றும் கார்கில் ஜனநாயக கூட்டணி (KDA) ஆகிய இரு அமைப்புகள் இப்போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வருகின்றன.

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து, பழங்குடி அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் லடாக்கை சேர்ப்பது, உள்ளூர் மக்களுக்கு வேலையில் இடஒதுக்கீடு, லே மற்றும் கார்கிலுக்கு தலா ஒரு நாடாளுமன்ற தொகுதி ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்பட்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று, பா.ஜ.க. அரசு அதற்கே உரிய பாசிச முறையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 370-ஐ ரத்து செய்ததோடு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக துண்டாடியது.

லடாக் தனி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட வேண்டும் என்று அப்போது கோரிவந்த லடாக் பகுதி மக்கள் மோடி அரசின் உண்மை நோக்கத்தை தற்போது உணர்ந்து கொண்டதால் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி போராடி வருகின்றனர்.


படிக்க: ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து வழக்கு: பாசிஸ்டுகளுக்கு பக்கபலமாக நிற்கும் உச்சநீதிமன்றம்!


அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்கப்படுவதன் மூலம் லடாக் பகுதியில் வாழும் பழங்குடி மக்களுக்கு தங்களது மொழி, கலாச்சாரம், இயற்கைவளங்கள் ஆகியவற்றை பாதுகாத்துக்கொள்ளும் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும்.

டிசம்பர் 4 அன்று, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ஒரு குழு, போராடும் இயக்கங்களான இரண்டு அமைப்புகளின் தலைவர்களுடன் முதல்சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லாமல் இருந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இம்மாதம் (பிப்ரவரி) நடத்தப்பட உள்ளது.

மத்திய அரசின் குழு எவ்வளவு தான் பொய் வாக்குறுதிகளை கொடுத்த போதிலும், இந்த நான்கு அம்ச கோரிக்கைகளில்  போராடும் இயக்கங்கள் விடாப்பிடியாக இருக்கின்றன.

மோடி அரசை பணியவைத்து, மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வைத்த விவசாயிகளின் “டெல்லி சலோ” போராட்டத்தைப் போன்று, லடாக் மக்கள் “லே சலோ” என்று “லே” நகரத்தை நோக்கி பேரணியாகச் சென்று பா.ஜ.க-விற்கு எதிரான தங்களது கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் “லே” நகரத்தில் உள்ள போலோ மைதானத்தில் மக்கள் கூடினர்.

அங்கு கூடிய லடாக் பிராந்தியத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்களும் தலைவர்களும் மேடையில் நின்று “ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும்” என்று முழங்கினர். மக்களும் இந்த முழக்கத்தை எதிரொலித்தனர். காஷ்மீரில் வழக்கத்தைவிட இவ்வாண்டு பலமடங்கு அதிகமாக இருந்த பனிப்பொழிவையும், கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் அனைத்து தரப்பு  மக்களும்  இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.


படிக்க: காஷ்மீர் தீர்ப்பு: பாசிஸ்டுகளுக்கு சட்ட அங்கீகாரம்


சையத் ஜாபர் மெஹ்தி என்ற வியாபாரி, லடாக்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள கடைசி கிராமமான துர்டுக்கில் இருந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். அவர் பேசுகையில், “ஆறாவது அட்டவணை மற்றும் மாநில உரிமை போன்ற பிரச்சினைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்கிறேன். போராடும் இயக்கங்களின் இந்த கோரிக்கைகளை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்” என்றார்.

மகசேசே விருது வென்ற சோனம் வாங்சுக் (Sonam Wangchuk) மேடையில் பேசுகையில், “பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு, 370-வது பிரிவைப் ரத்து செய்த  பிறகு, லடாக்கை ஆறாவது அட்டவணையில் சேர்ப்பதாக உறுதியளித்தது. அதற்குப் பிறகு மத்திய அரசிடம் இதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை. ஆறாவது அட்டவணையில் லடாக்கை சேர்ப்பது பற்றி பேசுபவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இப்போது லடாக்கை அழிக்க விரும்பும் சுரங்கத் தொழில் கும்பல் திரைமறைவு பேரங்களை நடத்தி வருகிறது. நாங்கள் எங்கள் அரசியலமைப்பு உரிமைகளை மட்டுமே கோருகிறோம், அது நடக்கும் வரை நாங்கள் ஓய்வெடுக்க மாட்டோம்” என்று கூறினார்.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் அமைச்சரும் 2020-இல் லடாக் பா.ஜ.க. தலைவர் பதவியை ராஜினாமா செய்தவருவமான லே அபெக்ஸ் பாடி அமைப்பை சேர்ந்த  செரிங் டோர்ஜே, “இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கான மக்களின் ஆதரவு என்பது லடாக் மக்களின் இந்த கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவேண்டும் என்ற மிக வெளிப்படையான செய்தியை சொல்வதாக இருக்கிறது. அரசியலமைப்புக்கு புறம்பான எதையும் நாங்கள் கோரவில்லை. பழங்குடியினர் அந்தஸ்து என்பது லடாக் மக்களின் உரிமை. எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்று கூறினார்.

லடாக் பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தால் அப்பிராந்தியமே ஸ்தம்பித்து போயுள்ளது. இந்நிலையில் செயற்பாட்டாளரான சோனம் வாங்சுக், இக்கோரிகைகளை முன்வைத்து வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருப்பது போராட்டத்தின் வீரியத்தை அதிகரிப்பதாக அமைந்துள்ளது.

இந்த போலி ஜனநாயக கூட்டமைப்பிற்குள் தங்களுக்கான உரிமைகள் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை லடாக் மக்கள் தங்களது சொந்த அனுபவத்தின் வாயிலாக புரிந்துகொண்டிருக்கிறார்கள். எனவே, தங்களது உரிமையை நிலைநாட்ட போராட்டங்களே தீர்வு என்று தற்போது முடிவெடுத்திருக்கிறார்கள்.


‌சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கலிபோர்னியா கனமழை வெள்ளம் | புகைப்படக் கட்டுரை

லிபோர்னியாவில் மழை வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியாகியுள்ளனர். அரிசோனா மாகாணம் முழுவதும் கிட்டத்தட்ட 3.8 கோடி மக்கள் வெள்ள எச்சரிக்கையின் கீழ் உள்ளனர்.

பிப்ரவரி 1 அன்று லாங் பீச்சில் உள்ள ரயில் பாலத்தின் கீழ் மூழ்கிய கார்
கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 4) அன்று சாண்டா பார்பராவை சக்திவாய்ந்த வளிமண்டல புயல் தாக்கியதால் கரை ஒதுங்கிய படகின் அருகே ஒருவர் நின்றுகொண்டிருக்கிறார்
ஸ்டுடியோ சிட்டியில் உள்ள சாலையில் திங்கள்கிழமை (பிப்ரவரி 5) அன்று வெள்ளம் ஓடும் காட்சி
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 4) அன்று சாண்டா பார்பராவில் கரை ஒதுங்கிய படகின் மீது மோதிய அலை
பிப்ரவரி 5 அன்று லாஸ் ஏஞ்சல்ஸின் பெவர்லி க்ரெஸ்ட் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவுக்குப் பிறகு மக்களில் ஒருவரை வெளியேற்றும் தீயணைப்பு வீரர்
சான் பிரான்சிஸ்கோ பகுதியில் புயலால் விழுந்த மரத்தை அகற்றும் தொழிலாளர்
சாண்டா பார்பராவில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 4) அன்று வெள்ள நீரில் நடந்து சென்ற மக்கள்
திங்களன்று (பிப்ரவரி 5) லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள யூனியன் ஸ்டேஷனில் வெள்ளத்தில் மூழ்கிய தண்ணீரை வெளியேற்றும் தொழிலாளர்கள்
சான் டியாகோ பகுதியில் பிப்ரவரி 1 அன்று தங்கள் பெற்றோருடன் நடந்து செல்லும் குழந்தைகள்
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 4) அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் மழையில் சென்றுகொண்டிருந்த மக்கள்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



சிலியில் பேரழிவை ஏற்படுத்தி வரும் காட்டுத் தீ | புகைப்படக் கட்டுரை

தென் அமெரிக்க நாடான சிலியில் பிப்ரவரி 2 அன்று தொடங்கிய காட்டுத் தீயினால் 123 போ் உயிரிழந்துள்ளனர் (பிப்ரவரி 5 நிலவரப்படி). நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. பல ஆயிரம் வீடுகள் அழிந்து போயுள்ளன.

ஹெலிகாப்டரில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் சிலியின் வால்பரைசோ பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயைக் காட்டுகிறது.
வால்பரைசோ பகுதியில் பிப்ரவரி 2 அன்று தீப்பிடித்து எரிந்த வீடுகள்
காட்டுத் தீயினால் எரிந்து போன தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ள மக்கள்
காட்டுத் தீயினால் பற்றி எரியும் வீடுகளும் வாகனங்களும்
காட்டுத் தீயினால் ஏற்பட்ட புகை மூட்டம்
மலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ
குயில்பூவி நகரின் வாகனங்கள் மற்றும் வீடுகள் காட்டுத் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன
குயில்பூவில நகரில் காட்டுத் தீயினால் எரிந்த வாகனங்களுக்கு இடையில் ஒரு பெண் குழந்தையுடன் செல்கிறார்
வினா டெல் மார் பகுதியில் காட்டுத் தீயால், அழிந்த தங்கள் வீடுகளின் இடிபாடுகளுக்கு மத்தியில் அமர்ந்துள்ள உள்ளூர் மக்கள்
வினா டெல் மாரில் உள்ள தாவரவியல் பூங்காவில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



சீமானை குறிவைக்கும் பாஜக ரகசியம் என்ன? | தோழர் மருது

சீமானை குறிவைக்கும் பாஜக ரகசியம் என்ன? | தோழர் மருது

https://youtu.be/cQbdCsn5KLU

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் பிப்ரவரி 2024 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம் – எது கேலிக்கூத்து? நிதிஷ் குமாரின் ’பல்டி’யா, இந்திய ஜனநாயகமா?
  • ராமர் கோவில் திறப்பு: இந்துராஷ்டிரத்திற்கான பட்டாபிஷேகம்
  • அம்பலமாகும் மோடியின் திரைமறைவு வேலைகள்
  • நிதி ஆயோக்-இன் மோசடி அறிக்கை: மோடியின் பாசிச ஆட்சியில் வறுமை ஒழிந்த வேடிக்கை
  • பாசிச மோடி அரசைப் பணியவைத்த லாரி ஓட்டுநர்களின் போராட்டம்
  • பு.ஜ.உடன் ஓர் உரையாடல்..
  • வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: தெற்காசியாவில் சரியும் அமெரிக்க மேலாதிக்கம்!
  • அட்டைப்படக் கட்டுரை விவசாயிகளின் வீரஞ்செறிந்த டிராக்டர் பேரணி
  • இராமர் கோயிலுக்கு முதல் எதிர்ப்பு! தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தோம் நாங்கள்!
    இந்துராஷ்டிரத்தின் முடிவுரையை இனி தமிழ்நாடு எழுதட்டும்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



நேற்று அயோத்தி ! இன்று ஞான வாபி ! தொடரும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் !

02.02.2024

நேற்று அயோத்தி !
இன்று ஞான வாபி !
தொடரும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள்!

பத்திரிகை செய்தி

ஞானவாபி மசூதியின் சுவற்றில் தங்களை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று இந்து பெண்கள்’ என்று கூறிக் கொண்ட பாசிஸ்டுகள் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றமோ, ஞானவாபி மசூதியை தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்யச் சொல்லி, அந்த மசூதியே இந்து கோயிலின் அடித்தளத்தின் மீது கட்டப்பட்டதாக கூறி, ஞானவாபி மசூதியின் ஒரு பகுதியில் இந்துக் கடவுளை பூசை செய்யவும் பூசை செய்வதற்கான பூசாரியை நியமிக்க உத்தரவு செய்தும் 31.01.2024 -இல் தீர்ப்பு வழங்கி உள்ளது. இஸ்லாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலாகும் இது. அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்டு அதன் மீது இராமர் கோயில் திறப்பு விழா என்ற வடு மறைவதற்கு முன்பே, இன்னொரு கொடூர தாக்குதல்.

வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991 – ஆனது 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன்பு இருந்த வழிபாட்டுத் தலங்களின் நிலைமையே தொடர்ந்து நீடிக்கும் என்று வலியுறுத்துகிறது (பாபர் மசூதி நீங்கலாக). அச்சட்டத்தை மீறித்தான் இன்னொரு அயோத்தி போல ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி பாசிச கும்பல் கரசேவை தொடங்குவதற்கான வழியை நீதிமன்றம் உருவாக்கி கொடுத்திருக்கிறது.

நீதிமன்றத்தின் வழியாகவும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிசக் கும்பல் கனவான இந்துராஷ்டிரம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதற்கு இதுவே ஒரு மோசமான எடுத்துக்காட்டு.

படிக்க : ஹேமந்த்  சோரன் கைது ! வெறி பிடித்து அலையும் மோடி அரசு !

அயோத்தி கோயில் திறப்பு என்பது, இனி சர்ச்சைக்குள்ளான விஷயமாக பார்க்கப்படப் போவதில்லை. அதன் மூலமாக இனி தங்களுடைய ஓட்டு அறுவடையை மிகப்பெரிய அளவில் ஆர் எஸ் எஸ் – பிஜேபி யால் சாதிக்க முடியாது . அதனால் தான் மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கி அதன்மூலம் கலவரம் நடத்தி, இஸ்லாமியர்களின் ரத்தம் குடித்து இந்தியாவில் ஓட்டுக்களை அறுவடை செய்வதற்காகவே திட்டமிட்டு ஞானவாபி மசூதியில் இந்துக்களை வழிபட செய்திருக்கிறது வாரணாசி நீதிமன்றம்.

இதன் மூலமாக இஸ்லாமிய மக்கள் மீதான இன்னொரு மிகப்பெரிய கலவரத்துக்கு வித்திட்டு இருக்கிறது நீதிமன்றம்.

ஆர்எஸ்எஸ் – பாஜக ; அம்பானி – அதானி பாசிச கும்பலுக்காகவே இந்த நாட்டின் அரசுத்துறைகள் அனைத்தும் திட்டமிட்டு மறுகட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அதில் நீதிமன்றமும் விதிவிலக்கல்ல.

நீதிமன்றத்திடம் சென்று இனிமேல் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் என்று நம்புவோருக்கெல்லாம் இடியாக விழுந்து இருக்கிறது வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பு.

படிக்க : நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை | மக்கள் அதிகாரம் கண்டனம்!

இனியும் இந்த அரசு கட்டமைப்பின் மூலம் நாட்டை மீட்டெடுத்து விட முடியாது என்ற நிலைமையை உருவாக்கி விட்டது மோடி – அமித்ஷா பாசிசக் கும்பல்.

மோடியின் பாசிச நடவடிக்கையை இனி ஒருபோதும் நீதிமன்றங்கள் மூலம் தடுத்து நிறுத்த முடியாது. மாபெரும் மக்கள் போராட்டங்களை கட்டியமைப்போம்! ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பலுக்கு முடிவு கட்டுவோம் என்று மக்கள் அதிகாரம் அறைகூவி அழைக்கிறது.

தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

ஹேமந்த்  சோரன் கைது ! வெறி பிடித்து அலையும் மோடி அரசு !

02.02.2024

ஹேமந்த்  சோரன் கைது ! வெறி பிடித்து அலையும் மோடி அரசு !

பத்திரிகைச் செய்தி

ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நேற்றைய தினம் தனது பதவியை இராஜினாமா செய்தார்.அன்றைய தினமே அவர் அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். பாசிச பாஜக அரசால் மேற்கொள்ளப்பட்ட இந்த பழிவாங்கும் நடவடிக்கையை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்தின் இந்து இராஷ்டித்திற்கு யார் யாரெல்லாம் தடையாக இருப்பார்களோ அத்தனை பேரையும் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு. ஜார்க்கண்ட் மாநில அரசை சீர்குலைக்கவும் கலைக்கவும்  பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட பாசிச மோடி அரசு,  அதன் இன்னொரு பகுதியாக அமலாக்கத்துறையை ஏவி ஹேமந்த் சோரனை கைது செய்திருக்கிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடமாநிலங்களில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு மோசடி வேலைகளை தொடங்கியுள்ளது. நிதீஷ் குமார் போன்றவர்களின் விலைக்கு வாங்கி இந்தியா கூட்டணியை பிளவுபடுத்துவதும் தன்னுடைய வழிக்கு வராத ஹேமந்த் சோரன் போன்றவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும் தான் தற்போது நடந்தேறி வருகிறது.

படிக்க : “வேண்டாம் பிஜேபி” பிரச்சாரத்தை தடுத்த காவிகளும் காக்கிகளும்

ஹேமந்த் சோரன் கைது என்பது திட்டமிட்ட பழி வாங்கும் நடவடிக்கை. தோல்வி முகத்தில் இருக்கும் பாசிச ஆர்எஸ்எஸ் – பிஜேபி கும்பல் வெறி பிடித்து அலைந்து கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக வெறும் அறிக்கைகளை மட்டும் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் வெளியிட்டுக் கொண்டிருப்பது என்பது சரியான நடவடிக்கை அல்ல; மாறாக ஜார்க்கண்ட் மாநில உட்பட பல்வேறு மாநிலங்களிலும் இந்த கைதுக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் போராட்டங்களை நடத்தி இருக்க வேண்டும்.

மக்கள் போராட்டங்களுக்கு மட்டுமே பாசிச கும்பல் பின் வாங்கும் என்பது மட்டுமல்ல; அந்த மக்கள் போராட்டங்களால் மட்டுமே ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி – அதானி பாசிச கும்பல் வீழ்த்தப்படும்.

ஆகவே,  ஹேமந்த் சோரன் மீதான அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை | மக்கள் அதிகாரம் கண்டனம்!

02.02.2024

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை !
மக்கள் அதிகாரம் கண்டனம்!

தமிழ்நாட்டில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை செய்த சோதனையை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து இச்சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்தை வைத்திருப்பதும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுவதும் இந்திய அரசியல் சட்டத்திற்கு புறம்பானது அல்ல சட்ட மீறலும் அல்ல என்பதை ஏற்கனவே நீதிமன்றங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

படிக்க : ஞானவாபி மசூதியும் இந்திய நீதித்துறையும்!

எனினும் தமிழ்நாட்டில் போராடுகின்ற இயக்கங்களை ஒழித்துக் கட்டும் திட்டத்திற்கு முதல் படியாகவே இந்த தேசிய புலனாய்வு முகமை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை செய்துள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்பு என்று தொடங்கும் இந்த சோதனையை நாம் எதிர்க்காவிட்டால் விரைவில் மோடிக்கு எதிராக பேசும், மக்கள் உரிமை இன விடுதலை என்று பேசும் அனைவரின் வீட்டுக்கும் தேசிய புலனாய்மை முகமை சோதனை செய்ய வருவதற்கு அனைத்து வகையான வாய்ப்புக்களும் உள்ளன. ஆகவே தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்ட இந்த சோதனையை மக்கள் அதிகாரம்  கண்டிக்கிறது.  தமிழ்நாடு அரசு தேசியப் புலனாய்வு முகமைக்கு கொடுத்த அனுமதியை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு –  புதுவை
9962266321

ஞானவாபி மசூதியும் இந்திய நீதித்துறையும்!

0

த்தர பிரதேசத்தின் வாரணாசியில் அவுரங்கசீப் கட்டிய 17 ஆம் நூற்றாண்டு ஞானவாபி மசூதியின் அடித்தளத்தில் ‘இந்துக்கள்’ வழிபாடு நடத்தத் தொடங்கியுள்ளனர். ஜனவரி 31 அன்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அதற்கான உத்தரவைப் பிறப்பித்தது. உத்தரவு பிறப்பித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே அங்கு பூஜை நடத்தப்பட்டுவிட்டதாக காசி விஸ்வநாதா் கோயில் அறக்கட்டளை தலைவா் தெரிவித்தாா்.

தான் ஓய்வு பெறவிருக்கும் கடைசி பணி நாளில் இத்தீர்ப்பை வழங்கி வாரணாசி மாவட்ட நீதிபதி அஜய கிருஷ்ண விஸ்வேஷா (Ajaya Krishna Vishvesha) கரசேவை ஆற்றியுள்ளார்.

இந்துக்கள் வழிபாட்டு சடங்குகளை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை 7 நாட்களுக்குள் செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், தீர்ப்பு வழங்கப்பட்ட அன்றைய நாள் இரவே வழிபாட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதிகாலை 3:30 மணிக்கு பூஜையும் நடத்தப்பட்டுவிட்டது.

முஸ்லீம்கள் தினமும் ஐந்து முறை தொழுகை நடத்துவதோடு போட்டி போடும் விதத்தில் தினம்தோறும் ஐந்து முறை பூஜை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


படிக்க: பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா! | மீள்பதிவு


மசூதியின் அடித்தளத்தில் நான்கு பாதாள அறைகள் இருப்பதாகவும், அவற்றில் ஒன்று அங்கு வசித்து வந்த பூசாரியின் குடும்பத்தின் வசம் இருப்பதாகவும் ’இந்து’ தரப்பினரால் கூறப்படுகிறது. ’பரம்பரை பூசாரிகள்’ என்ற முறையில் அவர்கள் கட்டிடத்திற்குள் நுழைந்து பூஜைகள் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று அக்குடும்பத்தினர் வாதிட்டனர். 1993-ஆம் ஆண்டு வரை அங்கு பூஜை செய்து வந்ததாக அவர்களால் கூறப்படுகிறது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை.

ஞானவாபி மசூதி வழக்கின் மையப் பொருளாக இருப்பது இந்திய தொல்லியல் துறையின் தொல்பொருள் ஆய்வு தான். மசூதி அமைந்துள்ள பகுதியில் இந்து கோயில் இருந்ததற்கான சான்றுகளைத் தேடி இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்து வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கை வழக்கில் தொடர்புடைய இரு தரப்பினரைத் தவிர மற்றவர் கைகளுக்கு கிடைக்கக் கூடாது என்று நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் கலவர சூழலை உருவாக்க 839 பக்கங்களைக் கொண்ட அவ்வறிக்கையின் சில பகுதிகள் திட்டமிட்டே கசியவிடப்பட்டுள்ளது.

சங்கப் பரிவார கும்பல் பல பத்தாண்டுகளாகவே ஞானவாபி மசூதி பிரச்சினையை எழுப்பி வருகிறது. இராமர் கோவில் திறப்பு உத்வேகம் அளித்துள்ளதால் ஞானவாபி மசூதியை மற்றொரு பாபர் மசூதியாக மாற்ற வேண்டும் என்று துடிக்கிறது காவி பாசிச கும்பல். மேலும் இந்து முனைவாக்கத்தை கூர்மையாக்கி 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ளவும் எத்தனிக்கிறது.


படிக்க: பாசிசத்தை அரசியலமைப்பிற்கு உட்படுத்துங்கள்! – சந்திரசூட்


இப்பிரச்சினையை தற்போது சங்கப் பரிவார கும்பலுக்கு ஏற்ற வகையில் இவ்வளவு பூதாகரமாக வளர்த்து விட்டதில் நீதிமன்றத்தின் பங்கு அளப்பரியது.

எந்தவொரு வழிபாட்டுத் தலத்தின் தன்மையையும் மாற்றுவதை வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 தடைசெய்கிறது. பாபர் மசூதி தவிர மற்ற அனைத்து வழிபாட்டுத் தலங்களும் ஆகஸ்ட் 15, 1947 அன்று எந்தத் தன்மையில் இருந்தனவோ அவை அவ்வாறே தொடர வேண்டும் என்று அச்சட்டம் கூறுகிறது. இது ஒன்றும் நீதிமன்றங்கள் அறியாததல்ல. அறிந்துதான் நீதிமன்றங்கள் தொடர்ந்து கரசேவை ஆற்றி வருகின்றன.

ஞானவாபி மசூதி பிரச்சினை உச்ச நீதிமன்றம் வந்தபோது, அதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட் ”ஒரு வழிபாட்டுத் தலத்தின் தன்மையைக் கண்டறிவதை சட்டம் (வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991) தடுக்கவில்லை; அதன் தன்மையை மாற்றுவதை மட்டுமே சட்டம் தடை செய்கிறது” என்று ஒரு வியாக்கியானத்தை முன்வைத்தார். தனது சட்ட வியாக்கியானத்தின் மூலம் சங்கப் பரிவார கும்பலின் செயல் திட்டத்திற்கு புத்துயிர்ப்பு அளித்தார்.

மசூதி குழு உச்சநீதிமன்றத்தின் அவசர தலையீட்டைக் கோரியது. ஆனால் உச்சநீதிமன்றம் அதை நிராகரித்துவிட்டது. கீழ் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு கூறிவிட்டது.

அயோத்தியைப் போலவே வாரணாசியிலும் கரசேவையில் தங்களது பங்கை நீதிமன்றங்கள் சிறப்பாக ஆற்றிவிட்டன!


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பட்ஜெட்! மோடி சுட்ட வடை | தோழர் அமிர்தா

பட்ஜெட்! மோடி சுட்ட வடை… நிர்மலா கொடுத்த அல்வா | தோழர் அமிர்தா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



வதைக்கப்படும் ஷர்ஜீல் இமாம்!

வஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) பிஎச்.டி மாணவரான ஷர்ஜீல் இமாம் (Sharjeel Imam) சிறையில் அடைக்கப்பட்டு,  இந்த ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதியுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது.

CAA/NRC சட்டமானது -அமல்படுத்தப்பட்டால் பெரும் எண்ணிக்கையிலான இந்த நாட்டின் முஸ்லீம் குடிமக்களை நாடற்றவர்களாக ஆக்கிவிடும் என்ற செய்தி தான் ஷர்ஜீல் இமாமை, CAA/NRC சட்டத்திற்கு எதிரான போரட்டக்களத்திற்கு உள்ளே அழைத்து வந்தது.

CAA/NRC சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது ஜனவரி 16, 2020 அன்று அவர் பேசிய பேச்சுக்கள் தொடர்பாக அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களின் போலீசு ஷர்ஜீல் இமாம் மீது ஜனவரி 26, 2020 அன்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு (ஜனவரி 28 அன்று), டெல்லியில் பதியப்பட்ட எஃப்ஐஆர் தொடர்பாக அவர் தனது வழக்கறிஞருடன் சரணடையச் சென்றபோது டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் (UAPA) வழக்குப் பதியப்பட்டது; டெல்லி கலவர வழக்கிலும் அவரது பெயர் சேர்க்கப்பட்டது.

ஆனால் இமாம் எந்த வழக்கிலும் தண்டனை பெறாமல் நான்கு ஆண்டுகளாக சிறையில் விசாரணைக் கைதியாக இருந்து வருகிறார். 2019 டிசம்பரில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்திற்கு அருகே நடந்த வன்முறை தொடர்பான இரண்டு வழக்குகளிலும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீதான எட்டு வழக்குகளில், அவர் ஐந்தில் ஜாமீன் பெற்றுள்ளார், அவர் மீதான UAPA வழக்கு மட்டுமே இன்னும் மீதமுள்ளது.

இந்த நான்கு ஆண்டுகளில் அவர் தொடுத்த ஜாமீன் மனுக்கள் டெல்லியின் பல்வேறு நீதிமன்றங்களில் திட்டமிட்டு நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.

அவர் கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, டெல்லி உயர் நீதிமன்றம் இமாமின் ஜாமீன் மனுவை 46 முறை பட்டியலிட்டுள்ளது; ஆனால் வழக்கு விசாரணை நடைபெறவில்லை. தற்போது எஃப்ஐஆர் 59/2020 இன் கீழான டெல்லி கலவர வழக்கு பிப்ரவரி 22 அன்று விசாரணைக்கு வரவுள்ளது. இருந்தாலும் இமாமுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படாமல் இருக்கிறது.


படிக்க: CAA-வுக்கு எதிராக பேசியதாக மருத்துவர் கஃபீல் கான் மீது தேசத்துரோக வழக்கு !


இமாம் மீது UAPA சட்டத்தின் பிரிவு 13-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பிரிவின்படி அதிகபட்ச தண்டனையே 7 ஆண்டுகள் தான்.

இது குறித்து அவரது வழக்கறிஞர் அஹ்மத் இப்ராஹிம் கூறுகையில் “அதிகபட்ச தண்டனையில் பாதியை முடித்துவிட்டாலும், இன்னும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எந்த ஜாமீன் மனுவும் நிலுவையில் இருக்கக்கூடாது. அந்த நபர் ஜாமீனுக்குத் தகுதியானவர் இல்லை என்றால், அந்த நபரின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டால், அந்த நபர் உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ சென்று நீதிக்கான போராட்டத்தை தொடர முடியும். ஆனால் இரண்டு ஆண்டுகளாக இமாமின் ஜாமீன் மனுவை நிலுவையில் வைத்திருப்பது குற்றவியல் நீதித்துறையின் செயல்முறைக்கு முரணானது,” என்றார்.

மேலும்” இந்த தாமதமானது அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் பேரில் உள்ளது. அரசாங்கத்தின் அழுத்தத்தின் கீழ் நீதித்துறை இயங்குகிறது. இந்தியாவில் இது முதல்முறையாக நடக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், பாஜக ஆட்சியில் இருந்தாலும் இதேதான் நடக்கிறது. டெல்லி கலவர வழக்குகளில் ஷர்ஜீல் இமாமின் ஜாமீன் விசாரணை இரண்டு ஆண்டுகளில் 46 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டே நடத்தப்படும் அரசியல் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.

CAA/NRC சட்டமானது மக்கள் போரட்டங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதிலும், CAA/NRC சட்டத்திற்கு எதிராக போராடியவர்களை நீதித்துறையின் துணைகொண்டு பாசிச கும்பல் வேட்டையாடிக்கொண்டு இருக்கிறது.

கைது செய்யப்பட்ட ஷர்ஜீல் இமாம் பாசிச கும்பலுக்கு வேண்டப்பட்ட அடிவருடியாக இருந்திருந்தால், அர்னாப் கோஸ்வாமிக்கு விடுமுறை தினத்தன்று கூடி விசாரித்து உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைப் போல், இவருக்கும் ஜாமீன் வழங்கியிருக்கும். ஆனால் இவரோ பாசிஸ்டுகளின் தாக்குதலை எதிர்த்தல்லவா போராடியிருக்கிறார்.


ஆதன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



இம்ரான்கானுக்கு சிறைத்தண்டனை: அமெரிக்க ஏகாதிபத்தியத்தை விமர்சித்ததுதான் குற்றமாம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை –
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை விமர்சித்தது தான் குற்றம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே மேலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-இல் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான்கான், ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஏற்கனவே மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் இருந்தபோது அமெரிக்க தூதரகம் வாயிலாகப் பெறப்பட்ட ரகசியங்களை பகிரங்கப்படுத்தியதாக எழுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறிய நடவடிக்கை என அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது ஆட்சிக் காலத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்த ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தண்டனை விதிக்கப்பட்ட அடுத்த நாளே ஓர் ஊழல் வழக்கில் மேலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தனக்கு எதிரான பல வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என இம்ரான்கான் கூறியுள்ளார். அதாவது இதன் பின்னணியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் இருக்கிறது என்பதே அவர் கூற வருகின்ற விசயம்.

கடந்த மார்ச் 2022-இல் அமெரிக்காவில் அந்நாட்டு உயர்மட்ட அதிகாரிகளுடன் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்றில் பங்கேற்றார். அப்போது அங்கு பேசப்பட்ட முக்கிய விவகாரங்கள் உள்ளடங்கிய ரகசிய ஆவணங்களை இஸ்லாமாபாத்திற்கு அனுப்பி வைத்தார். அதே மார்ச் 2022-இல் இம்ரான்கான் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் தனது ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டு சக்திகள் திட்டம் போடுவதாகக் கூறி ஒரு காகிதத்தை எடுத்துக் காட்டினார். ”இம்ரான்கான் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டால் (நீங்கள்) அனைவரும் மன்னிக்கப்படுவீர்கள்” என அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறினார்.

எந்த நாடு இதற்குப் பின்னணியில் இருக்கிறது என்று இம்ரான்கான் சொல்லாவிட்டாலும் அமெரிக்காதான் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள முடியும். அதே சமயம் அமெரிக்காவை விமர்சிக்கவும் அவர் தவறவில்லை. இந்த சம்பவம் இம்ரான்கான் பதவி விலகுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நடந்தது.


படிக்க: மக்களை வாட்டும் பொருளாதார நெருக்கடி: நேற்று – இலங்கை, இன்று – பாகிஸ்தான்!


இம்ரான்கானின் பதவி பறிபோன பின், ஜூலை 2023-இல் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம் 1923-இன் படி அரசு ரகசியங்களை பொதுவெளியில் கசிய விட்டதாகக் குற்றம்சாட்டி பாகிஸ்தான் அரசு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில்தான் தற்போது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பிப்ரவரி 8 ம் தேதி பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலிலும் இம்ரான்கான் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆட்சியில் இருந்த காலத்தில், அமெரிக்காவை வெளிப்படையாகவே விமர்சித்தார் இம்ரான்கான். இன்னொரு பக்கம் சீன – இரசிய அரசியல் பொருளாதார உறவை வலுப்படுத்திக் கொண்டார்.

ஒரு பக்கம் பாகிஸ்தான் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதும், குறிப்பாக ஐ.எம்.எஃப் இன் கடன் வலையில் பாகிஸ்தான் சிக்கிக் கொண்டிருப்பதும், இந்த நிலைமை மேலும் மேலும் அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு வழிவகுக்கும் என்பதும், இது பாகிஸ்தானை மிக மோசமான சூழ்நிலைக்குத் தள்ளிவிடும் என்பதும்தான் இம்ரான்கான் அமெரிக்கா மீது வெளிப்படையாகக் கூறிய விமர்சனங்கள்.

தான் கொடுக்கும் கடனுக்கு நிகராக மக்களுக்கு வழங்கும் சலுகைகளை வெட்ட வேண்டும் என்பதே எல்லா நாடுகளுக்கும் அமெரிக்கா தலைமையிலான ஐ.எம்.எஃப் முன்வைக்கும் நிர்ப்பந்தம்.

சில ஆண்டுகளுக்கு முன்னதாக சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் ஒரு அங்கமாக, பாகிஸ்தான் வழியாக சீனா – பாகிஸ்தான் பொருளாதாரத் தாழ்வாரம் (CPEC) என்ற பெரும் பொருளாதாரத் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

இவையெல்லாம் தான் இம்ரான்கானின் மீதான தற்போதைய அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு காரணமாக உள்ளது. தற்போது ஆட்சியில் இருக்கும் ஷபாஸ் ஷெரிப் தலைமையிலான கும்பலும் அமெரிக்க அடிவருடியாக இருக்கும் வரை தான் ஆட்சியில் நீடிக்க முடியும்.

உலகை தனது அரசியல் பொருளாதார ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்க வேண்டும், தன்னை மீறி இந்த உலகத்தில் எதுவும் நடந்து விடக்கூடாது என்ற ஆதிக்கவெறி, அப்படி மீறி யார் நடந்து கொண்டாலும் அவர்களை அடக்கி ஒடுக்க வேண்டும்; மீறினால் அழித்து விட வேண்டும் என்று துடிக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். சதாம் உசேன் தொடங்கி இம்ரான்கான் வரை இதுதான் நிதர்சனமான உண்மை.

தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்படிப்பட்ட நிலைமைகளை உருவாக்கியது என்பது உலகறிந்ததே.

தனது அடிவருடிகளை ஆட்சியில் அமர்த்தி அதன் மூலம் தனது சுரண்டலையும், ஆதிக்கத்தையும் பல்வேறு வழிகளில் நிறுவிக் கொள்ளத் துடிக்கிறது அமெரிக்கா.

இந்தியாவின் மோடி தலைமையிலான காவி – கார்ப்பரேட் கும்பல் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அடிமை கும்பலாகவே உள்ளது.

உலகையே அச்சுறுத்தி தனது காலடியில் வைத்திருக்க வேண்டும் என்று கொக்கரிக்கின்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்தாமல் உலக மக்களுக்கு விடிவில்லை என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை.


சிவக்குமார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



“வேண்டாம் பிஜேபி” பிரச்சாரத்தை தடுத்த காவிகளும் காக்கிகளும்

”2024 நாடாளுமன்றத் தேர்தல்: வேண்டாம் பிஜேபி; வேண்டும் ஜனநாயகம்” என்ற இயக்கத்தின் ஒரு அங்கமாக செய்யாறு பகுதியில் தெருமுனைக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதனையொட்டி ஜனவரி 28 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொழிற்சங்க உறுப்பினர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த பிஜேபி நகரச் செயலாளர் நமது தோழர்கள் பிரச்சாரம் செய்வதைத் தடுத்துள்ளார். மேலும் போலீசை அழைத்தும் அச்சுறுத்தியுள்ளார்.

அப்பகுதியைச் சேர்ந்த ஜமுமுக (JMMK), மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய அமைப்பினர் நமது தோழர்களுக்கு ஆதரவாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இன்றைய பிரச்சாரத்தை முடித்துக் கொள்ளுமாறு போலீசு நிர்ப்பந்தத்தை தொடர்ந்து பிரச்சாரம் முடித்துக்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டின் போலீசுத்துறை ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி; அம்பானி – அதானி பாசிஸ்டுகளின் அடியாளாகத்தான் வேலை செய்கிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.


தகவல்
புதிய தொழிலாளி முகநூல்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube