விஷவாயு கசிவு – மூன்று பேர் பலி | பொதுப்பணித்துறையின் அலட்சியம் | தோழர் முருகானந்தம்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

விஷவாயு கசிவு – மூன்று பேர் பலி | பொதுப்பணித்துறையின் அலட்சியம் | தோழர் முருகானந்தம்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களையும் எதிர்க்கட்சிகளின் “இந்தியா கூட்டணி” 233 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. இந்தியா கூட்டணி வெற்றிப்பெறவில்லை என்றாலும், “400 இடங்களை கைப்பற்றுவோம்” என வாய்ச்சவடால் அடித்துக்கொண்டிருந்த மோடி-அமித்ஷா கும்பல் பெரும்பான்மை கூட பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது மோடியின் சர்வாதிகாரத்திற்கு கடிவாளமிடும் என்று எதிர்க்கட்சிகளும் கணிசமான பாசிச எதிர்ப்பு சக்திகளும் கருதுகின்றனர்.
அதன் ஒரு அங்கமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 இடங்களையும் தி.மு.க-வும் அதன் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றியிருப்பது (Clean Sweep) இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. “பா.ஜ.க-வால் ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது” என்று ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி (viral) வருகிறது. இத்தேர்தல் முடிவால், பாசிசக் கும்பலுக்கு தமிழ்நாடு சிம்மசொப்பனமாக திகழ்கிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபனமாகியுள்ளது.
பாசிஸ்டுகளையும் துரோகிகளையும் புறக்கணித்த தமிழ்நாடு மக்கள்:
இத்தேர்தலில் இரண்டு இலக்க எண்ணிக்கையிலான தொகுதிகளையும் 25 சதவிகித வாக்குகளையும் வெல்வோம் என்று அண்ணாமலை தம்பட்டம் அடித்துவந்த நிலையில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க. வெற்றியடையவில்லை. குறிப்பாக, கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வியுற்றதையடுத்து, தி.மு.க-வினரும் தமிழ்நாட்டு மக்களும் ஆட்டை பலியிடும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அண்ணாமலையின் தோல்வியை கொண்டாடும் வகையில் கோயம்புத்தூரில் மக்களுக்கு ஆட்டுக்கறி பிரியாணி விருந்து வைக்கப்பட்டது. இதனால் கோயம்புத்தூரிலேயே இருந்துக்கொண்டு பா.ஜ.க. அலுவலகத்திற்கு வராமல் அண்ணாமலை தலைமறைவாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
இருப்பினும், திராவிட கட்சிகளின் உதவி இல்லாமல் பா.ஜ.க 11.6 சதவிகித வாக்குகள் வாங்கியுள்ளது; 11 தொகுதிகளில் அ.தி.மு.க-வை பின்னுக்குத் தள்ளி பா.ஜ.க. இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது; தமிழ்நாடு வரலாற்றில் பா.ஜ.க-வினரின் அதிகபட்ச வாக்காக 32.79 சதவிகித வாக்குகளை அண்ணாமலை பெற்றுள்ளார் என்றெல்லாம் கூறி, பா.ஜ.க. தமிழ்நாட்டில் அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ளது என்று சங்கிகள் கூவி வருகின்றனர். ஆனால், இம்முறை பா.ஜ.க. போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும் கூட்டணி கட்சிகளின் வாக்குகளையும் கணக்கிட்டால் பா.ஜ.க. வாக்குவிகிதம் ஒற்றை இலக்கத்தில்தான் இருக்கும் என்பதையும், 2014-இல் பா.ஜ.க. சார்பாக கோவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனின் 33.6 சதவிகித வாக்கை விட அண்ணாமலையின் வாக்கு குறைவுதான் என்பதையும் பலரும் அம்பலப்படுத்தியுள்ளனர்.
மேலும், அ.தி.மு.க-வை பின்னுக்குத்தள்ளி தி.மு.க-விற்கு போட்டியாக வளர துடிப்பது, தென் மாவட்டங்களில் சாதிய முனைவாக்கத்தை தீவரப்படுத்தி பா.ஜ.க. வேலை செய்வது போன்றவை உண்மை என்றாலும் குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்து பேரணி, ரோடுஷோக்களை நடத்தியது; கோவையில் செல்வாக்கு செலுத்தும் தி.மு.க-வின் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறையிலடைத்தது; தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் போன்ற அறியப்பட்ட முகங்களையும் ராதிகா போன்ற பிரபலங்களையும் தேர்தலில் நிறுத்தியது என தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழ்நாடு மக்கள் பா.ஜ.க.-வை புறக்கணித்துள்ளனர் என்பதே எதார்த்தம்.
படிக்க: 2024 தேர்தல் முடிவுகள்: மக்கள் போராட்டங்களால் பாசிசத்தை வேரறுப்போம்!
அதேபோல், பா.ஜ.க-விற்கு அடிமை சேவகம் புரிந்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகமிழைத்த அ.தி.மு.க. 2019 தேர்தலில் ஒற்றை தொகுதியில் வென்றிருந்த நிலையில், இத்தேர்தலில் அதையும் இழந்துவிட்டது. மேலும் ஏழு இடங்களில் டெபாசிட் இழந்தது. தி.மு.க. மீதான அதிருப்தி வாக்குகளை கூட அறுவடை செய்துகொள்ள முடியாத அ.தி.மு.க. தனது வாக்குகளையும் பா.ஜ.க-விற்கு பறிகொடுத்ததோடு பல தொகுதிகளில் இரண்டாவது இடத்தை பா.ஜ.க-விற்கு தாரைவார்த்துள்ளது. பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டதாக எடப்பாடி பழனிச்சாமி அரங்கேற்றிய நாடகத்தை நம்புவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராக இல்லை என்பதையே இத்தேர்தல் முடிவு காட்டுகிறது.
***
“நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகளை பா.ஜ.க. பெற்றால் நான் கட்சியை கலைத்துவிட்டு போய் விடுகிறேன்” என்று சவால் விட்டிருந்த சீமானின் நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது. இருப்பினும் இத்தேர்தலில் 35.60 லட்சம் வாக்குகளை (8.19 சதவிகிதம்) பெற்று நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தால் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது முக்கியத்துவமுடையதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதல்முறை போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 1.1 சதவிகித வாக்குகளும்; அதற்கடுத்து வந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 3.8 சதவிகித வாக்குகளும், 2021 சட்டமன்ற தேர்தலில் 6.8 சதவிகித வாக்குகளும் பெற்றது; தற்போது இத்தேர்தலில் 8.19 சதவிகித வாக்குகள் பெற்று 8 ஆண்டுகளில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், நாம் தமிழர் கட்சிக்கு தேர்தலுக்கு 20 நாட்களுக்கு முன்புதான் கரும்பு விவசாயி சின்னத்திற்கு மாற்றாக புதிய சின்னம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் நா.த.க. தமிழ்நாட்டில் வளர்ந்து வருகிறது என்பதைக் காட்டுவதாக பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன.
நா.த.க-வின் தேர்தல் முடிவு குறித்து பேசிய அண்ணாமலை, “நாம் தமிழர் கட்சியின் மூலமாக ஒரு செய்தி சொல்ல வேண்டியுள்ளது. திராவிட அரசியலில் இருந்து தமிழர்கள் வெளியே வர தொடங்கியுள்ளனர் என்பது அந்த கட்சியின் செய்தி. அவர்கள் களத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை நானும் நேரில் பார்த்தேன். மக்களிடையே அவர்களும் தங்களின் சித்தாந்தத்தை முன் வைக்கிறார்கள். என்னையும் சீமான் அண்ணனையும் ஒப்பிட வேண்டாம். நாங்கள் அதிக வாக்குகள் வாங்கிவிட்டோம். சீமான் அண்ணன் நாம் தமிழர் கட்சியை கலைப்பாரா என்று நான் கேட்க மாட்டேன். சீமான் அண்ணன் அவர்களின் பாதையில் பயணிக்கிறார். அரசியலில் நேர்மையாக நின்றதை பாராட்ட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சீமான் மீதான அண்ணாமலையின் இந்த பாசத்திற்கான காரணம் பா.ஜ.க – நா.த.க-விற்கு இடையேயான சித்தாந்த உறவுதான். திராவிட எதிர்ப்பு அரசியல் என்ற பெயரில் பார்ப்பனிய எதிர்ப்பு அரசியலை நீர்த்துப் போகச் செய்து, தமிழினப் பெருமிதம் என்ற பெயரில் பார்ப்பனியத்தை கடத்திக் கொண்டு வருவதுதான் சீமானின் இலக்கு. உண்மையில், சீமான் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. வளர்வதற்கான சித்தாந்த கரசேவையைத்தான் பல ஆண்டுகளாக செய்துவருகிறார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பாசிச பா.ஜ.க-வின் மதவெறி அரசியல் எடுபடவில்லை; மக்கள் பா.ஜ.க-வை எதிரியாகத்தான் பார்க்கின்றனர். பா.ஜ.க-வின் அடிமையாகிப்போன அ.தி.மு.க-வும் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு போயுள்ளது. இந்நிலையில் பா.ஜ.க-வை எதிர்ப்பதாக நாடகமாடிக் கொண்டே அதன் சித்தாந்ததை ஊட்டிவளர்க்கும் சீமானுக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்தை நாம் சாதாரணமாக கடந்து செல்லக்கூடாது.
பார்ப்பன எதிர்ப்பு மரபை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியம்
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 32.76-ஆக இருந்த தி.மு.க-வின் வாக்கு சதவிகிதம் இத்தேர்தலில், 26.93 சதவிகிதமாக சரிந்துள்ளது. தி.மு.க. போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது இதற்கு காரணமாக சொல்லப்பட்டாலும் விருதுநகர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருமங்கலம் உள்ளிட்ட பல தொகுதிகளில் மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே தி.மு.க. வெற்றிப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை உள்ளிட்ட ஒரு சில தொகுதிகளை தவிர பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க-வினர் பெரியளவில் தேர்தல் வேலைகளில் ஈடுபடாமல் மந்தகதியில் இருந்தது தேர்தல் சமயத்திலேயே பேசு பொருளானது. மக்களின் பா.ஜ.க. எதிர்ப்பு தனக்கு வாக்குகளாக அறுவடையாகிவிடும் என்று அலட்சியமாக இருந்த தி.மு.க-விற்காக, பல இடங்களில் இளைஞர்களும் பாசிச எதிர்ப்பு சக்திகளுமே பிரச்சாரம் செய்தனர். இது கடந்த தேர்தலைவிட தமிழ்நாட்டில் வாக்குவிகிதம் குறைந்தற்கு ஒரு காரணமாகவும் கூறப்பட்டது. பிறகு எப்படி இத்தகைய வெற்றியை தி.மு.க-வால் சாதிக்க முடிந்தது.
படிக்க: 2024 தேர்தல் முடிவுகள்: பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கு மாற்றுத் திட்டமும் மக்கள் போராட்டமும் முன்நிபந்தனை!
அதற்கு காரணம் தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து தமிழ்நாட்டில் நிலவும் இந்த மரபுதான் பா.ஜ.க. எதிர்ப்பாகவும் தேர்தல் களத்தில் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளாகவும் எதிர்க்கட்சிகளுக்கு அறுவடையாகியிருக்கிறது என்பதே உண்மை. தேர்தல் தொடங்குவதற்கு முன்னரே பல அமைப்புகள் பாசிசத்தை வீழ்த்தும் நோக்கத்தில் பா.ஜ.க-விற்கு எதிரான பார்ப்பனிய எதிர்ப்பு மரபை தூக்கிப்பிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தி.மு.க. தனது தேர்தல் பிரச்சாரத்தை பாசிசக் கும்பலின் சிம்ம சொப்பனமாக விளங்கும் பார்ப்பனிய எதிர்ப்பு மரபை முன்னிறுத்தும் வகையில் மேற்கொள்ளவில்லை. பா.ஜ.க. எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு பிரச்சாரமும் கூட வரம்புக்குட்பட்ட வகையிலேயே மேற்கொண்டது. சான்றாக, ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் இழிவுப்படுத்தி பேசிய மோடி, தியானம் செய்கிறேன் என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு வந்தபோது எந்தவித எதிர்ப்பு நடவடிக்கையிலும் போராட்டத்திலும் ஈடுபடாமல் தி.மு.க. கள்ளமௌனம் காத்தது.
மேலும், மூன்று ஆண்டுகால ஆட்சியிலும் தமிழ்நாட்டிற்கே உரிய பார்ப்பனிய எதிர்ப்பு மரபை வளர்த்தெடுக்காமல் தி.மு.க. கவர்ச்சிவாதத்தையும் கார்ப்பரேட் நலதிட்டங்களையுமே முன்னிறுத்தி வருகிறது. இம்முறை தேர்தலின்போது தி.மு.க-வின் கார்ப்பரேட் நல திட்டத்திற்கு எதிராகவும் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் பரந்தூர், வேங்கைவயல், நாமக்கல், எண்ணூர் என பல இடங்களில் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.
திராவிட மாடல், கொள்கை பிடிப்பு என்றெல்லாம் பேசிக்கொண்டே பிற எதிர்க்கட்சிகளை போல பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்ய தி.மு.க. விழைகிறதே ஒழிய பா.ஜ.க. எதிர்ப்புணர்வையும் தமிழ்நாட்டில் அதற்கு அடிப்படையாக உள்ள பார்ப்பனிய எதிர்ப்பு மரபையும் வளர்த்தெடுக்க தி.மு.க. துளியும் தயாராக இல்லை.
எனவே, மக்கள் விரோத கார்ப்பரேட் திட்டங்கள், கவர்ச்சிவாதம் போன்றவற்றை முன்னிறுத்தியே மக்களின் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்துக்கொள்ளலாம் என தி.மு.க. கருதினால் அது தி.மு.க-விற்கு எதிரானதாக மட்டுமல்ல பாசிச பா.ஜ.க-விற்கு ஆதரவானதாக சென்று முடியும்.
![]()
பானு
(புதிய ஜனநாயகம் – ஜுன் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கந்து வட்டி கொடுமையால் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கடந்த 15 நாட்களில் மட்டும் ஏழு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
திருத்தங்கல் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் லிங்கம் (45); இவரது மனைவி பழனியம்மாள் (47). இருவரும் முறையே தேவதானம், சுக்கிரவார்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினர்.
இவர்களது மகள் ஆனந்தவல்லி (27). இவருக்குத் திருமணமாகி 2 மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. இவர்களது மகன் ஆதித்யா(14).
6 நபர்களிடம் லட்சக்கணக்கில் கந்து வட்டிக்கு கடன் வாங்கியதாகவும், இந்தக் கடனை கட்டச் சொல்லி அழுத்தம் கொடுத்தும், மிரட்டியும் வந்ததால் தனது மகள், மகன் மற்றும் பேத்தியைக் கொலை செய்து விட்டு, லிங்கம் – பழனியம்மாள் தம்பதியினர் 22.05.2024 அன்று தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கடன் பிரச்சினை காரணமாக லிங்கம் கடந்த இரு மாதங்களுக்கு முன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் அளித்த வாக்குமூலத்தில் கடன் வாங்கிய சிலரது பெயரை குறிப்பிட்டு, மிரட்டலால் தான் தற்கொலை முயற்சி செய்ததாக தெரிவித்து இருந்தார். அப்பொழுதே லிங்கம் குறிப்பிட்டிருந்த நபர்கள் மீது போலீசு நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று ஐந்து பேர் உயிரை காப்பாற்றி இருக்க முடியும்.
மீனம்பட்டி திடீர் நகரில் குடியிருப்பவர் ஜெயச்சந்திரன் (51). அச்சக தொழிலாளியான இவரது மனைவி ஞானபிரகாசி (48) பட்டாசுக்கான காகித குழாய் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதியரின் மகள் ஷர்மிளா( 24) எம்.ஏ முதுகலை பட்டம் பெற்ற நிலையில், இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் திருமணத்திற்கு பூ வைத்துள்ளனர். மகன் ஜெயசூர்யா (23) பொறியியல் பட்டப்படிப்பு படித்து ஓசூரில் பணிபுரிந்து வருகிறார்.
கூலி தொழிலாளிகளான ஜெயச்சந்திரன்- ஞானபிரகாசி தம்பதியினர் தங்களின் மகள் மற்றும் மகனின் கல்விச் செலவுக்காகவும், குடும்பச் செலவுக்காகவும், மருத்துவச் செலவுக்காகவும் தாங்கள் வாழ்ந்து வந்த பகுதி கிராமத்திலுள்ள சிலரிடம் ரூபாய் 4 லட்சம் வரை கடன் தொகை வட்டிக்கு பெற்றதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக தாங்கள் பெற்ற கடனுடன் அதிகமான வட்டித் தொகையை கட்ட முடியாமல் தம்பதியினர் தவித்து வந்துள்ளனர்.
ஜெயச்சந்திரன் வீட்டில் இல்லாத சமயத்தில் கந்து வட்டி கொடுத்தவர்கள் தகாத முறையில் திட்டியும் வேறு எந்த தொழிலாவது செய்து (விபச்சாரம் செய்தாவது) பணத்தைக் கொடுக்குமாறு தற்கொலைக்கு தூண்டும் விதமாக பேசியுள்ளனர். இதனால் மனமுடைந்த ஞானபிரகாசி, தனது மகள் சர்மிளாவுடன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதே பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இரண்டு வாரத்திற்கு முன்பு குமார் என்பவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
படிக்க: இசக்கிமுத்துக்களை தற்கொலைக்குத் தள்ளும் கந்துவட்டி அரசுக் கட்டமைப்பு !
“பட்டாசு தொழில் முடக்கப்பட்டுள்ளதால் தற்சமயம் நம் மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் கந்து வட்டிக்காரர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்காரர்கள் யாரும் 05.06.2024 முதல் 05.07.2024 வரை கடன் வசூலிக்க வர வேண்டாம் என தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம்” என்று மீனம்பட்டி கிராம பொதுமக்கள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
மீனம்பட்டி கிராமத்தில் 3000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இங்கு பட்டாசு தொழிலையே பிரதானமாக செய்து வருகின்றனர். பட்டாசு தொழிலைத் தவிர வேறு எந்த தொழிலும் இவர்களுக்கு கிடையாது. பட்டாசு ஆலைகளை நான்கு மாத காலமாக அரசு அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர்.
தங்களது வாழ்வாதாரத்தை இழந்த கிராம மக்கள் உணவிற்குக் கூட வழியில்லாமலும் கல்விச் செலவு, மருத்துவச் செலவு, விலைவாசி உயர்வு என நெருக்கடியில் உள்ளனர். அதனால், மகளிர் சுய உதவி குழுவிடம் கடன் வாங்குகிறார்கள். குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தை ஒப்படைக்காதவர்களுக்கு சுய உதவிக் குழுக்காரர்கள் நெருக்கடி கொடுப்பது, இரவு முழுவதும் அவர்கள் வீட்டிற்கு முன் அமர்ந்து கொள்வது, தகாத வார்த்தைகளில் பேசுவது போன்ற காரணங்களால் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி அதை ஈடுகட்ட வேண்டிய அவல நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.
“அருகில் உள்ள வீட்டில் திருமணத்திற்கு மொய் செய்வதற்கு கூட பணம் இல்லாததால், திருமணத்திற்கு செல்லாமல் கதவை அடைத்துக் கொண்டு வீட்டிற்குள் இருந்தோம்” என ஜெஸ்ஸி என்ற பெண் கூறுகிறார்.
“இரண்டு வேலை மட்டும் தான் சாப்பிடுகிறோம்; ஊறுகாய்க்கு கூட வழியில்லை. நான்கு மாதம் வேலை இல்லாமல் வார வட்டி ,மாதவட்டி, மகளிர் சுய உதவிக் குழு கடன் மற்றும் கந்து வட்டி கட்டுவதற்கு கையில் பணம் இல்லை. எங்களின் நிலைமையை புரிந்து கொள்ளாமல் குழுக்காரர்களும் கந்து வட்டிக்காரர்களும் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்கின்றனர். கேவலமாக திட்டுகிறார்கள் வீட்டை எழுதிதரச் சொல்கிறார்கள். நாங்கள் என்ன செய்ய முடியும்!” என மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
மக்களின் நிலை கொரோனா ஊரடங்கில் இருந்த நிலைமையை விட தற்போது மிகவும் மோசமாக உள்ளது என்பதை கள ஆய்வில் “வினவு தோழர்களால்” உணர முடிந்தது.
மகளிர் சுய உதவி குழுக்காரர்கள், கந்து வட்டிக்காரர்கள் செய்யும் கொடுமைகளுக்கு எதிராக பேசுவதற்கே மக்கள் தயங்குகிறார்கள். அவர்களுக்கு எதிராக பேசினால் அடுத்து அவர்களிடம் கடன் வாங்க முடியாது என்று பயப்படுகிறார்கள். இப்படிப்பட்ட மோசமான இழி நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
படிக்க: விழுப்புரம் குடும்பத்துடன் தற்கொலை : தொழில் நசிவு – கந்து வட்டி || தீர்வு என்ன ?
தீப்பெட்டி உற்பத்தியில் 80% தீப்பெட்டிகள் சிவகாசியில் தான் தயார் செய்யப்படுகின்றன. மேலும் இந்தியாவில் தயாராகும் பட்டாசுகளில் 90 சதவிகிதம் சிவகாசியில்தான் தயாராகின்றன. மேலும் இந்தியாவின் அச்சுப்பணிகளில் 60 சதவிகிதம் இங்கு நடைபெறுகிறது. சிவகாசியில் உள்ள 90 சதவிகித மக்கள் இந்த தொழில்களைச் சார்ந்து தான் உள்ளனர். இங்கு இதைத் தவிர மற்ற வேலை வாய்ப்புகள் எதுவும் இல்லை. ஆனால், இன்று இந்தத் தொழில்கள் நலிவடைந்து வருவதால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமடைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் தான் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், கல்வி, மருத்துவம் போன்ற செலவுகள் தவிர்க்க முடியாமல் இருக்கின்றன. ஆனால், வருமானம் மிகவும் குறைவு. இதுதான் இங்குள்ள மக்களின் இன்றைய நிலை.
இதனால், இயல்பாகவே மக்கள் கடன் வாங்கும் நிலைமை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அதனைக் கட்ட முடியாமல் நெருக்கடிக்கு மக்கள் ஆளாகின்றனர். எனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்து, தரமான கல்வியையும் மருத்துவத்தையும் மக்களுக்கு இலவசமாகக் கொடுத்தால் மக்கள் யாரும் கடன் வாங்கப் போவதில்லை. ஏனென்றால், இதுதான் மக்களின் அடிப்படைப் பிரச்சனையாக உள்ளது. இதை மக்களுக்கு அரசு செய்ய வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்தனர்.
இலாப வெறி பிடித்த முன்னணியான பட்டாசு ஆலைகளின் முதலாளிகளுக்கு சேவை செய்யும் அரசு அதிகாரிகள், சிறு குறு பட்டாசு ஆலைகளை முடக்கி லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்குகின்றனர். அதனால், மகளிர் சுய உதவிக் குழுக்களிடமும் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி நெருக்கடியில் சிக்கிக் கொண்டு கடனை கட்ட முடியாமல் தற்கொலையை நோக்கி மக்களைத் தள்ளப்படுகின்றனர்.
இது போன்று தொடரும் தற்கொலைகளில் கடன் கொடுத்தவர்கள் கொடுக்கும் நெருக்கடி, கொலை மிரட்டல்களை தாங்க முடியாமல் தற்கொலைகள் அதிக அளவில் நடக்கிறது. இந்த கிரிமினல்தனத்தை அதிகார வர்க்கம் பாதுகாக்கிறது. இதற்கு எதிராக மக்கள் களத்தில் இறங்கி போராடுவதன் மூலமாகத்தான் கந்து வட்டி கும்பலை முற்றும் முதலுமாக ஒழித்துக் கட்ட முடியும்.
![]()
வினவு களச்செய்தியாளர்,
மதுரை
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கிய தேர்தல் 44 நாட்களை கடந்து தற்போது ஜூன் 1-ஆம் தேதி நிறைவைடைய போகிறது. ஏழு கட்டங்களாக நடந்த இத்தேர்தலின் முடிவு என்னவாக அமையப்போகிறது என்பது குறித்துதான் அனைவரும் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
தேர்தல் தொடங்குவதற்கு முன்னர் வெளியாகியிருந்த கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவை பா.ஜ.க-தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறியது. மோடியின் பிம்பம், பா.ஜ.க-வின் சாதி-மத பிளவுவாத அரசியல் முதலானவை பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு அடிப்படையாக இருக்கும் எனவும் கருத்துக்கணிப்புகள் கூறியது. ஆனால், தேர்தல் தொடங்கியப் பிறகு நிலைமை அப்படியே தலைக்கீழானது. “அப்கி பார், 400 பார்” என்ற முழக்கத்துடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய மோடி-அமித்ஷா கும்பல் அந்த முழக்கத்தையே கைவிடும் அளவிற்கு நெருக்கடியில் சிக்கித் தவித்தது. மோடி 400 இடங்களை கைப்பற்றுவாரா? என்று விவாதம் நீர்த்துபோய் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவாரா? என்ற விவாதம் கிளம்பும் நிலை உருவானது.
ஏனெனில், பெரும்பான்மை மக்கள் “பா.ஜ.க. வேண்டாம்” என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள் என்பதை இந்த தேர்தல்களம் துலக்கமாக காட்டியது. 2014 மற்றும் 2019 தேர்தல்களில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிப்பதற்கு மோடியின் பிம்பம் முக்கியமான காரணமாக இருந்தது. ஆனால், இம்முறை மோடியின் பிம்பம் காலாவதியாகிவிட்டது. “எல்லாவற்றிற்கும் காலாவதி தேதி உள்ளதுபோல மோடிக்கும் காலாவதி தேதி உள்ளது” என மக்களே கருத்து தெரிவித்தனர்.
பாசிசக் கும்பலின் அடித்தளமாக இருக்கும் ஆதிக்கச்சாதி மக்களிடையே நடந்த போராட்டங்கள் பா.ஜ.க. கும்பலை ஆட்டங்காணச் செய்தது. குறிப்பாக விவசாயிகளின் போராட்டம், இளைஞர்களின் அக்னிபாத் போராட்டம் வடமாநிலங்களில் பா.ஜ.க-வின் முகத்திரையை கிழித்து மக்களிடையே பா.ஜ.க. எதிர்ப்புணர்வை வலுப்படுத்தியிருந்தது. இதன் விளைவாக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரத்தில் கூட ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது; பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வாக்குப்பதிவு வெகுவாக குறைந்தது; மதவெறியை கிளப்புவதற்காக ராமன் கோவில் திறப்பு, சி.ஏ.ஏ. அமலாக்கம் போன்ற மோடிக் கும்பலின் நடவடிக்கையும் மக்களிடையே எடுபடவில்லை.
படிக்க: 2024 தேர்தல் முடிவுகள்: மக்கள் போராட்டங்களால் பாசிசத்தை வேரறுப்போம்!
இத்தனை நெருக்கடிகள் இருந்தாலும், மோடி-அமித்ஷா கும்பல் தன்னுடைய அதிகார பலத்தை பயன்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான அனைத்து முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம், போலீசு, நீதித்துறை என ஒட்டுமொத்த அரசுக்கட்டமைப்பும் பா.ஜ.க-விற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஒருபுறம் எதிர்க்கட்சிகளை தேடிதேடி நடவடிக்கை எடுப்பது, மறுபுறம் பா.ஜ.க-வின் அயோக்கியத்தனத்தையும் மோடியின் வெறுப்பு பேச்சுக்களையும் கைக்கட்டி வேடிக்கைப் பார்ப்பது என பா.ஜ.க-வின் ஒரு அங்கமாகத்தான் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு கட்டத் தேர்தல் நடந்து முடிந்தப்பிறகும் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அறிவிக்கும்போது பல்வேறு குளறுபடிகளை நிகழ்த்தியது. வாக்குப்பதிவு குறித்தான எண்ணிக்கைகளை ஆறாம் கட்டத் தேர்தல் வரை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. வெளியிட்ட எண்ணிக்கையிலும் திடீரென 1.07 கோடி வாக்குகள் அதிகரித்தது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சராசரியாக ஒரு தொகுதிக்கு 28,000 வாக்குகள் அதிகரித்தன. தேர்தல் ஆணையத்தின் இந்த அயோக்கியத்தனங்களை எதிர்கட்சிகள் அம்பலப்படுத்தி பேசினால் “சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்துவதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன” என தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளை மிரட்டியது.
தேர்தல் ஆணையத்தின் இம்முறைகேடுகளை தடுக்ககோரி எதிர்க்கட்சிகளும் சிவில் அமைப்புகளும் நீதிமன்றத்தை அணுகினால், தேர்தல் ஆணையம் கூறிய பதிலையே வெவ்வேறு வார்த்தைகளில் நீதிபதிகள் கூறினர். விவிபேட் (VVPAT) ஒப்புகை சீட்டுக்களை எண்ணக் கோரிய வழக்கு முதல் வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய 17சி படிவத்தை தேர்தல் ஆணையத்தை வெளியிடக் கோரிய வழக்கு வரை அனைத்து வழக்குகளிலும் பாசிஸ்டுகளுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கி நீதிமன்றம் சேவை செய்தது.
இந்த மோசடித் தேர்தலின் உச்சமாக, சில இடங்களில் வாக்குசாவடிகளை போலீஸ் துணையுடனே காவிக்கும்பல் கைப்பற்றியதும், வாக்களிக்க வந்த இஸ்லாமியர்களை அடித்து விரட்டியதும் அரங்கேறியது. பல இடங்களில் இஸ்லாமியர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது அம்பலமானது. பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் கள்ள வாக்கு செலுத்துவதை வீடியோக்களாகவே சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்; எதிர்க்கட்சிகளே இல்லாமல் வெற்றி பெறுவதற்கான சூரத், இந்தூர் மாடலையும் பா.ஜ.க. உருவாக்கியது. இவையெல்லாம் ஒட்டுமொத்த அதிகார கட்டமைப்பும் பா.ஜ.க-வின் வெற்றிக்காக பாடுபடுகிறது என்பதைக் காட்டியது.
சமீபத்தில், இராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. எனவே ஜூன் 4-ஆம் தேதி மோடிக் கும்பல் எத்தகைய தில்லுமுல்லுகளையும் அரங்கேற்றி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என்பது பெரும்பான்மையானோர் வெளிப்படுத்தும் கருத்தாக உள்ளது. இந்நிலையில், 120 சிவில் அமைப்புகள் இணைந்து, நாடுமுழுவதும் நியமிக்கப்பட்டுள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் “நியாயமான மற்றும் சுதந்திரமான வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்” என்று கடிதம் எழுதியுள்ளன.
22 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருக்கும் மோடி ஆட்சியை விட்டு அவ்வளவு எளிதில் இறங்க மாட்டார்; ஒருவேளை பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரவில்லையென்றால் ரஃபேல் ஊழல், பணமதிப்பு நீக்கம், பி.எம். கேர்ஸ் நிதி, தேர்தல் பத்திரங்கள், பெகாசஸ் உளவு, பனாமா மற்றும் பண்டோரா ஆவணங்கள், அதானி மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை, துறைமுகங்கள், விமான நிலையங்கள், சுரங்கங்கள், ரயில்வே போன்றவற்றில் அம்பானி-அதானி கும்பலுக்காக முறைகேடாக போடப்பட்ட ஒப்பந்தங்கள் என இந்த பத்து ஆண்டு காலத்தில் மோடி-அமித்ஷா கும்பல் நிகழ்த்திய முறைகேடுகளும் ஊழலும் விசாரணைக்கு உள்ளாக்கப்படும்; இதை மோடி விரும்ப மாட்டார், எனவே எப்படியாவது மீண்டும் வெற்றிப் பெறவே பார்ப்பார்; ஆட்சியைப் பிடிப்பதற்காக அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் மீது டொனால்ட் டிரம்ப் தாக்குதல் நடத்தியது போன்று இந்தியாவிலும் மோடி தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்றெல்லாம் சிவில் அமைப்பைச் சார்ந்தவர்களும் பத்திரிக்கையாளர்களும் எச்சரிக்கின்றனர்.
படிக்க: மோடி பதவியேற்பதை ஏற்கவைக்கும் தி.மு.க-வின் துரோகத்தனம்! | தோழர் அமிர்தா
ஆனால், இந்த அபாயகரமான நிலைமையில் கூட எதிர்க்கட்சிகள் பாசிசக் கும்பலுக்கு எதிராகவும் இந்த மோசடி தேர்தலை அம்பலப்படுத்தியும் மக்கள் போராட்டங்களை கட்டியமைப்பதற்கு தயாராக இல்லை என்பதே அவலநிலை. தற்போதுவரை தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுப்பது, நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது என்ற வரம்பைத் தாண்டி எதிர்க்கட்சிகள் வர மறுக்கின்றன. ஆனால், சிலர் எதிர்க்கட்சிகளை ஆட்சியில் அமர வைப்பதற்காக மக்கள் இந்த மோசடி தேர்தலை எதிர்த்து போராட வேண்டும் என்று அறைக்கூவல் விடுக்கின்றனர்.
ஆனால் மக்கள் நீண்ட காலமாக போராட்ட களத்தில்தான் உள்ளார்கள். பஞ்சாப், ஹரியானா எல்லைகளில் இன்று வரை விவசாயிகள் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பாசிசக் கும்பலுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டங்கள்தான் இன்று தேர்தல் களத்தில் பா.ஜ.க. கும்பலுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மாறாக, எதிர்க்கட்சிகள்தான் மக்களின் போராட்டங்களுடன் கைகோர்க்காமல், மக்கள் போராட்டத்தால் பா.ஜ.க-விற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்தி வாக்குகளை மட்டும் அறுவடை செய்துகொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றன.
ஆனால், பல இடங்களில் மக்கள் பா.ஜ.க-விற்கு வாக்களிக்காததால் வாக்கு சதவிகிதம் குறைகிறதே ஒழிய, அந்த வாக்குகள் அனைத்தும் இந்தியா கூட்டணிக்கு விழவில்லை. சான்றாக, மணிப்பூர் மக்கள் பா.ஜ.க-விற்கு எதிராக தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். ஆனால், அவர்கள் ஏன் இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுக்கவில்லை என்பதே பரிசீலிக்க வேண்டியது. காரணம், இந்தியா கூட்டணி மணிப்பூர் மக்களுக்கு தன்னை ஒரு மாற்றாக முன்னிறுத்திக் கொள்ளவில்லை; குக்கி மக்களின் போராட்டங்களுடன் கைகோர்த்து நின்று, அவர்களுக்கு நம்பிக்கையூட்டவில்லை என்பதே முதன்மையானது. சொல்லபோனால், இத்துணை துணிச்சலாக பாசிசக் கும்பல் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுவதற்கே, என்ன நடந்தாலும் களத்திற்கு சென்று மக்களிடம் முறையிடுவதற்கு துணியாத இந்தியா கூட்டணி கட்சிகளின் பலவீனமும் முக்கியமான காரணம்.
மேலும், கடந்த ஆண்டு துருக்கியில் நடந்த அதிபர் தேர்தலில், பாசிஸ்ட் எர்டோகன் பல்வேறு வகைகளில் பலவீனப்படுத்தப்பட்டிருந்தாலும், எதிர் முகாமிடம் பாசிசத்திற்கு எதிரான சரியான மாற்று ஜனநாயகத் திட்டம் இல்லாததால், எர்டோகன் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்ததை தடுக்க முடியாமல் போனது.
எனவே, பாசிச பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கான மாற்றுத் திட்டத்தை முன்வைத்து, பா.ஜ.க-வின் தில்லுமுல்லு தேர்தலுக்கு எதிராகவும் மக்களை வதைக்கும் இந்துராஷ்டிர அடிக்கட்டுமான சட்டத்திட்டங்களுக்கு எதிராகவும் போராட்டத்தைக் கட்டியமைத்தால் மட்டுமே எதிர்க்கட்சிகளால் மக்களுக்கு நம்பிக்கையூட்டி தங்களை ஒரு மாற்று கட்சியாக முன்னிறுத்திகொள்ள முடியும். மாறாக, பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகள் மட்டும் போதும்; அதுவே தங்களை சிம்மாசனத்தில் அமர்த்திவிடும் என்று எதிர்க்கட்சிகள் கனவு கண்டால், பா.ஜ.க-விற்கு எத்துணை நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அதனை சரிவர பயன்படுத்திக் கொண்டு பா.ஜ.க-வை வீழ்த்த முடியாத நிலையே ஏற்படும்.
![]()
அறிவு
(புதிய ஜனநாயகம் – ஜுன் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவி்ல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய நாடளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4 அன்று வெளியாகியது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களிலும் பா.ஜ.க. தனியாக 240 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் “இந்தியா கூட்டணி” 233 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்களில் வெற்றிப்பெறாத நிலையில் கூட்டணி கட்சிகளை சார்ந்து ஆட்சியமைக்க வேண்டிய நிலைக்கு பா.ஜ.க. தள்ளப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே “400 இடங்களை வெல்வோம்” என்று தம்பட்டம் அடித்துவந்த பா.ஜ.க. கும்பலுக்கு இத்தேர்தல் முடிவானது பலத்த அடியைக் கொடுத்துள்ளது.
இந்துராஷ்டிரத்தின் சோதனைசாலையாக இருக்கும் உத்தரப்பிரதேசத்திலேயே பா.ஜ.க. கடும் தோல்வியடைந்துள்ளது. 80 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது பா.ஜ.க. 29 இடங்களை இழந்துள்ளது. தோல்வியின் உச்சமாக ராமன் கோவில் கட்டப்பட்டுள்ள பைசாபாத் (அயோத்தி) தொகுதியிலேயே பா.ஜ.க. தோல்வியை தழுவியுள்ளது. அதேபோல், வளர்ச்சி நாயகன், விஸ்வகுரு வரிசையில் அண்மையில் கடவுள் அவதாரம் வேடம் பூண்ட மோடியே, வாக்குப்பதிவின் முதல் சில சுற்றுகளில் பின்னடைவிற்கு தள்ளப்பட்டு, இறுதியாக வெறும் ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாத்தில் வெற்றிபெற வேண்டிய சூழல் உருவானது.
48 தொகுதிகளை கொண்ட மற்றொரு பெரிய மாநிலமான மகாராஷ்டிராவிலும் பா.ஜ.க. மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த காலங்களில் மகாரஷ்டிராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை இரண்டாக உடைத்த பா.ஜ.க., தேர்தல் ஆணையத்தின் மூலம் அக்கட்சிகளின் பெயரையும் சின்னத்தையும் பறித்தது. ஆனால், தற்போதைய தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தலா 9 மற்றும் 8 இடங்களை பெற்றுள்ளது. கட்சியை உடைத்துவிட்டு பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்த ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரசும் தலா 7 மற்றும் 1 இடங்களையே பெற்றுள்ளன. மேலும் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது, பா.ஜ.க. இம்மாநிலத்தில் 14 இடங்களை இழந்து 9 இடங்களை மட்டுமே பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் 12 தொகுதிகள் கூடுதலாக பெற்று 13 இடங்களை கைப்பற்றியுள்ளது பா.ஜ.க-விற்கு அதிர்ச்சியளித்துள்ளது.
இவை மட்டுமின்றி, கடந்த தேர்தல்களில் ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் அனைத்து தொகுதிகளையும் கைப்பாற்றிய (Clean Sweep) பா.ஜ.க இம்முறை பல தொகுதிகளை எதிர்க்கட்சிகளிடம் இழந்துள்ளது. குஜராத்தில் எந்த தொகுதியில், “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்களிடம் இரண்டு எருமை மாடு இருந்தால் ஒன்றை பறிமுதல் செய்துகொள்ளும்” என்று மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்தரோ அந்த பனஸ்கந்தா தொகுதியில் மட்டும் ஒரு தசாப்தத்திற்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது.
படிக்க: பாசிஸ்டுகளின் தேர்தல் ‘ஜனநாயகம்’!
அதேபோல் தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட பா.ஜ.க-வினரை ஊருக்குள் நுழையவிடாமல் விவசாயிகள் துறத்தியடித்த ஹரியானாவில், பா.ஜ.க. 5 இடங்களை காங்கிரசிடம் பறிக்கொடுத்தது: பஞ்சாப்பில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க. வெற்றிபெறவில்லை. ராஜஸ்தானில் கடந்த இரண்டு நாடளுமன்றத் தேர்தல்களிலும் மொத்தமுள்ள 25 தொகுதிகளையும் கைப்பற்றிய பா.ஜ.க-வால் இம்முறை 14 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்துள்ளது. அதேபோல், பீகாரில் கடந்தமுறை பா.ஜ.க. கூட்டணி 39 இடங்களை பெற்றிருந்த நிலையில் இம்முறை 24 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.
வடக்கிழக்கு மாநிலங்களிலும் பா.ஜ.க. தொகுதிகளை இழந்துள்ளது. கடந்தமுறை வடக்கிழக்கு மாநிலங்களில் உள்ள 25 தொகுதிகளில் 19 தொகுதிகளை கைப்பற்றியிருந்த பா.ஜ.க கூட்டணி இம்முறை 4 தொகுதிகளை இழந்தது. பா.ஜ.க-வால் திட்டமிட்டு குக்கி இன மக்கள் மீது வன்முறைவெறியாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்ட மணிப்பூரில் இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. இது மெய்தி மக்களும் பா.ஜ.க-வை புறக்கணித்துள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தேர்தல் தொடங்குவதற்கு முன்னர் மாநில உரிமைக்கான போராட்டம் வீரியமாக நடந்த லடாக்கில் பா.ஜ.க. மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
பா.ஜ.க அதிக இடங்களை பெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட மேற்குவங்கத்தில், பா.ஜ.க. ஆறு இடங்களை இழந்துள்ள நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 29 இடங்களை வென்றுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பிலிருந்தே மோடி கிடயாய்கிடந்த தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 40 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்து தமிழ்நாடு மக்கள் பா.ஜ.க-விற்கு மீண்டும் கதவடைத்துள்ளதுள்ளனர்.
இவ்வாறு இத்தேர்தல் முடிவானது மோடி-அமித்ஷா கும்பலின் தலையில் இடியை இறக்கியுள்ளது. மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் நாடு முழுவதும் நடந்த மக்கள் போராட்டங்களால் தோல்வி முகத்திற்கு தள்ளப்பட்ட பாசிசக் கும்பல், 2024 நாடாளுமன்றத் தேர்தலையும் தோல்வி முகத்தில் அணுகியது. அதன் வெளிப்பாடாக இத்தேர்தலில் பசுவளைய மாநிலங்கள் உள்ளிட்டு நாடு முழுவதும் கடுமையான நெருக்கடிகளை சந்தித்தது. விவசாயிகள் போராட்டம், ராஜ் புத் சாதியினர் போராட்டம் என தேர்தல் தொடங்கிய பிறகும் மக்கள் போராட்டங்கள் ஓயவில்லை. நேர்மையக தேர்தலில் வெற்றிப்பெற முடியாதநிலையில் எதிர்க்கட்சிகளை சிறையிலடைத்து, வங்கி கணக்குகளை முடக்கி, தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அரசு அமைப்புகளின் துணையுடன் ஓர் “மேட்ச் ஃபிக்சிங்” தேர்தலை நடத்தி முடித்தது, பாசிசக் கும்பல். ஆனால், ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் துணை நின்ற போதிலும் பா.ஜ.க-வால் தனிபெரும்பான்மையை கூட பெற முடியாதது, பாசிசக் கும்பலின் தோல்வி முகம் எந்த அளவிற்கு தீவிரமாக உள்ளது என்பதையே காட்டுகிறது.
தனிபெரும்பான்மையை பெற முடியாததன் காரணமாக, கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் எந்தவித சட்டவிதிகளையும் மதிக்காமல் பாசிச சர்வாதிகார ஆட்சியை நடத்திவந்த பா.ஜ.க. கும்பல், தற்போது கூட்டணி கட்சிகளை சார்ந்து நடக்க வேண்டிய பரிதாபகரமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. அதிலும் தேர்தல் சமயத்தில் பா.ஜ.க-வால் பல்வேறு அவமானங்களுக்கு உள்ளாக்கப்பட்ட ஆந்திர பிரதேசத்தின் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவையும் கட்சி தாவுவதில் இழிப்புகழ் பெற்று “பல்டி குமார்” என்று அழைக்கப்படும் பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ் குமாரையும் நம்பி கயிறு மேல் நடக்கும் நிலைக்கு பா.ஜ.க. தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு, கர்நாடகாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி உள்ளிட்டோர் பா.ஜ.க-விடம் பாதுகாப்புத்துறை, விவசாயத்துறை, சபாநாயகர் பதவி உள்ளிட்டவற்றை கோரி நெருக்கடி கொடுப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது பா.ஜ.க-வின் இக்கட்டான நிலையையே காட்டுகிறது.
இன்னொருபுறம், சொந்த கட்சிக்குள் அடியறுப்பு வேலையிலும் ஆர்.எஸ்.எஸ்-ஐ அலட்சியப்படுத்தியும் வந்த மோடி-அமித்ஷா கும்பலின் அதிகாரத்திற்கு இத்தேர்தல் முடிவு எல்லைக்கோடு வகுத்துள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர். தேர்தல் முடிவுகள் குறித்து ஆர்.எஸ்.எஸ்-இன் இதழான “ஆர்கனைசர்”-இல் வெளியான “2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வின் ஆட்சி: சில படிப்பினைகளுடன் கூடிய ஒரு வரலாற்று வெற்றி” என்ற கட்டுரையில் மோடி-அமித்ஷா கும்பலுக்கு ஆர்.எஸ்.எஸ். பல விடயங்களை ‘இடித்துரைத்துள்ளது’. அதேபோல், “தி பிரிண்ட்” இணையதளத்தில் “இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர வேண்டிய பா.ஜ.க-வின் ‘கர் வாப்சி’ (தாய் மதம் திரும்புதல்) நேரம்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இதே உள்ளடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்-யைச் சேர்ந்தவர்களும் ஆர்கனைசர் இதழின் முன்னாள் ஆசிரியர்களும் இணையத்தில் பல பதிவுகளை எழுதி வருகின்றனர். இவையெல்லாம் மோடி-அமித்ஷா கும்பலுக்கு இத்தேர்தல் முடிவு கூடுதல் நெருக்கடியை உருவாக்கியுள்ளதையே காட்டுகிறது.
இன்னொருபுறம் “சர்வாதிகாரத்திற்கு கடிவாளமிட்டுவிட்டோம்”, “இந்தியாவின் அரசியல் சாசனம் காப்பாற்றப்பட்டுள்ளது”, “மோடி இனி வாஜ்பாயாக மாறிவிடுவார்” என்ற பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், எந்த இடத்திலும் இத்தேர்தலில் ஏன் இந்தியா கூட்டணி தோற்றது? என்பதற்கான சரியான பரிசீலனை செய்யப்பட்டதாக தெரியவில்லை.
எவ்வாறு பா.ஜ.க கும்பல் தோல்வியைத் தழுவியதற்கு நாடுமுழுவதும் நடந்த மக்கள் போராட்டங்கள் காரணமாக அமைந்ததோ அதேபோல் இந்தியா கூட்டணி கட்சிகள் இத்துணை தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கும் மக்கள் போராட்டங்கள்தான் அடிப்படையானது. ஆனால், அப்போராட்டங்களை வளர்த்தெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கவே இல்லை என்பதுதான் பரிசீலனை நடத்தப்பட வேண்டிய இடம்.
பாசிசக் கும்பல் தோல்வி முகத்தால், இத்தேர்தலில் மோடி அலை போன்று பாசிசக் கும்பலுக்கு சாதகமான எந்த அலையும் இல்லாத நிலையில், நாட்டின் பல இடங்களில் போராட்ட அலையும் பா.ஜ.க. எதிர்ப்பு அலையும் நிலவியது. அதனை நாடுதழுவிய அளவில் பா.ஜ.க. எதிர்ப்பு அலையாக வளர்த்தெடுப்பதற்கு சாதகமான சூழலும் எதிர்க்கட்சிகளுக்கு இருந்தது. ஆனால், மக்கள் போராட்டங்களில் தலையிட்டு அதனை வளர்த்தெடுத்து மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு எதிர்க்கட்சிகள் துணியவில்லை. மேலும் இந்தியா கூட்டணி கட்சிகள் பா.ஜ.க-வின் கொள்கைகளுக்கு எதிராக ஒத்த அரசியல்-பொருளாதார மாற்றுத்திட்டத்தை முன்வைக்காமல்தான் இந்த தேர்தலை சந்தித்தன. எதிர்க்கட்சிகள் தனித்தனியாகவும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வகையிலும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன. அவ்வறிக்கைகளும் முழுமையான மக்கள் கோரிக்கைகளை பிரதிபலிப்பதாக இல்லாமல் செயல்திட்டமற்ற கவர்ச்சிவாத அறிவிப்புகளாகவே இருந்தன.
படிக்க: 1.07கோடி ஓட்டுகள் மோசடி! பாசிச பாஜகவின் மோசடி தேர்தல் ஆணையம்!
அதேபோல், வடமாநிலங்களில் மக்கள் போராட்டங்களால் பாசிச கும்பலின் மதவெறி போதையிலிருந்து மக்கள் விடுப்பட்டு வரும் போக்கும் உருவாகியிருந்தது. ஆனால் அம்மக்களை பா.ஜ.க-வின் பார்ப்பனிய சித்தாந்ததிற்கு மாற்றாக ஒரு சித்தாந்ததை முன்வைத்து அணித்திரட்டுவது குறித்தெல்லாம் எதிர்க்கட்சிகள் துளியும் சிந்திக்கவில்லை. மாறாக, இவற்றையெல்லாம் செய்யவில்லை எனினும் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகள் தங்களுக்கு அறுவடையாகிவிடும் என்று மனநிலையிலையில்தான் எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்தித்தன. இதனால், பெரும்பான்மையான மக்கள் எதிர்கட்சிகளை தங்களுக்கான மாற்றாக பார்க்கவில்லை என்பதே எதிர்க்கட்சிகளின் தோல்விக்கு முக்கியமான காரணம்.
ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி இந்தியா கூட்டணி கட்சிகள் இத்தனை தொகுதிகள் வெற்றிபெற்றிருப்பதற்கு முதன்மையான காரணம் முன்னரே குறிப்பிட்டதுபோல மக்கள் போராட்டங்கள்தான். மேலும், இத்தேர்தலில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கான பாசிச எதிர்ப்பு சக்திகளும் ஜனநாயக சக்திகளும் வெவ்வேறு வடிவங்களில் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. துருவ் ராட்டி போன்ற பலர் இந்தியாவை பாசிச சர்வாதிகாரத்தில் இருந்து காக்க வேண்டும் என்ற ஓரே நோக்கத்திற்காக பா.ஜ.க-வை அம்பலப்படுத்தி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்தனர்.
மக்கள் மோடிக்கும்பலை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதற்காகவும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்பதற்காகவும்தான் மக்கள் போரட்டங்களை முன்னெடுத்தனர்; தேர்தலில் இந்தியா கூட்டணிக்கும் வாக்களித்தனர். ஆனால், இந்தியா கூட்டணியின் கையாலாகத்தனத்தாலும் துரோகத்தாலும் பா.ஜ.க கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது. இனியும் மக்களின் கோரிக்கைகளை கைவிட்டுவிட்டு, கடந்த காலங்களைப்போல் மக்கள் போராட்டங்களையும் ஒடுக்குவார்களானால் அது எதிர்க்கட்சிகளுக்கும் ஆபத்தாகத்தான் சென்றடையும்.
மேலும், கணிசமான தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளதால் எதிர்க்கட்சிகள் மீதான அடக்குமுறையை பாசிச பா.ஜ.க. நிறுத்தப் போவதில்லை. தேர்தல் முடிவு அன்று மோடி ஆற்றிய உரையில், “ஜூன் 4-க்கு பிறகு ஊழல் தலைவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும்” என்று பேசியிருப்பது, வருங்காலங்களில் எதிர்க்கட்சிகள் மீதான பாசிச அடக்குமுறை தீவிரமடையும் என்பதையே காட்டுகிறது. எனவே, மக்களின் பா.ஜ.க. எதிர்ப்புணர்வை வாக்குகளாக அறுவடை செய்துகொண்டு 233 தொகுதிகளில் வென்றுள்ள இந்திய கூட்டணி கட்சிகள், மக்களுக்கு நேர்மையாக இருக்குமெனில் மக்கள் போராட்டங்களுடன் கைகோர்த்து அதனை வளர்த்தெடுக்க வேண்டும். அதுதான் பெரும்பானமை மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றும், எதிர்க்கட்சிகளையும் பாசிச ஒடுக்குமுறையில் இருந்து காக்கும்.
எனவே, எந்த மக்கள் போராட்டங்கள் பாசிசக் கும்பலை தேர்தல் களத்தில் பலவீனப்படுத்தியதோ அதே மக்கள் போராட்டங்களை வளர்த்தெடுத்து பாசிசத்தை வீழ்த்தும் திசையை நோக்கி முன்னேறுவோம்.
![]()
தலையங்கம்
(புதிய ஜனநாயகம் – ஜுன் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,
புதிய ஜனநாயகம் ஜூன் 2024 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.
ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561
தொடர்பு விவரங்கள் :
தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
மின்னிதழ் விலை : ரூ.30
G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561
வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444
0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

மோடி பதவியேற்பதை ஏற்கவைக்கும் தி.மு.க-வின் துரோகத்தனம்! | தோழர் அமிர்தா
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

வெப்பம் மிகுதியாக இருந்த மே 22 மதியம் குவாலியர் ரயில் நிலையம் அருகே ஒரு பரிதாபமான காட்சியை மக்கள் கண்டனர். மூன்று சிறு குழந்தைகளுடன் ஒரு பெண் ரிக்ஷாவின் அருகே நின்று சத்தமாக அழுது கொண்டிருந்தார். ரிக்ஷாவில் மிகவும் பலவீனமான ஒரு ஆண் இறந்துவிட்டதைப் போல் காட்சியளித்தார்.
ஏராளமான நபர்கள் அவர்களைச் சுற்றித் திரண்டனர். ரிக்ஷாவில் அந்த நபரின் உடலில் உயிரின் தடயங்கள் ஏதும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டதால், அந்தப் பெண் சத்தமாக அழுது கொண்டிருந்தார். அவர் அழுவதைக் கண்டு குழந்தைகளும் அழத்தொடங்கினர். விசாரணையில் இறந்தது அந்த பெண்ணின் கணவரான உத்தர பிரதேசத்தின் பண்டா (Banda) மாவட்டத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த செங்கல் சூளைத் தொழிலாளி ஓம் பிரகாஷ் (Om Prakash) என்பது தெரியவந்தது. இவர் சூளையில் வேலை செய்து கொண்டிருந்த போது கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பல நாட்களாகியும் குணமடையாத நிலையில், அந்நாளில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், செங்கல் சூளை உரிமையாளர்கள் அவர் பணியிடத்தில் இறந்து விடுவதைத் தவிர்க்க அவரை சூளையை விட்டு வெளியேறும்படி கூறியுள்ளனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் உயிரிழந்த தொழிலாளியின் மனைவியான பிரேம்காலிக்கு (Premkali) உதவி செய்ய யாரும் இல்லை. ஆனால் குவாலியர் ரயில் நிலையத்தை அடைவதற்கு எப்படியாவது ரிக்ஷாவை ஏற்பாடு செய்வதில் மிகுந்த தைரியத்தையும் உறுதியையும் காட்டினார் அந்த பெண்மணி. கணவரின் உடலை தங்கள் கிராமத்திற்கு எடுத்துச் செல்ல எந்த நிதியுதவியும் இல்லாமல் முற்றிலும் ஆதரவற்ற நிலையில் இருந்தார்.
இந்த நிலையில்தான் ஸ்டேஷன் மாஸ்டரும், ஒரு சில போலீஸ் அதிகாரிகளும் மிகுந்த இரக்கம் காட்டினார்கள். அவர்கள் அவளுக்கு ஆறுதல் கூறி, உடலை கிராமத்திற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்தனர். மேலும் பிரேம்காலிக்கு கொஞ்சம் பணத்தையும் கொடுத்தனர்.
படிக்க: முடிவுறாப் பயணம்? | புலம்பெயர் தொழிலாளர்கள் | கவிதை
சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த நிகழ்வு குறித்து எழுதிய எழுத்தாளர் பிரேம்காலி வசித்துவரும் நரைனி தொகுதியின் மொஹாத்ரா கிராமத்தைச் சேர்ந்த தலித்கள் வசிக்கும் குக்கிராமத்திற்குச் சென்றிருந்தார். தலித் மக்கள் அதிகம் வசிக்கும் கிராமம் அது. அவர்கள் முற்றிலும் நிலமற்றவர்களாகவோ அல்லது மிகச் சிறிய நிலங்களைக் கொண்டவர்களாகவோ உள்ளனர். கிராமத்தில் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இந்த நாட்களில் கிராமவாசிகளுக்கு தினசரி கூலி வேலை கிடைத்தாலும், கடும் வெப்பமான வானிலை அவர்களை மிகவும் பலவீனமாகவும் சோர்வாகவும் ஆக்குகிறது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை கிடைப்பது மிகவும் அரிது. இந்த நிலையில்தான், தொழிலாளர் ஒப்பந்ததாரர்கள் வழங்கும் மொத்த தொகையை ஏற்று, பல்வேறு இடங்களில் உள்ள செங்கல் சூளைகளுக்கு வேலைக்குச் சென்று விடுகின்றனர்.
கடந்த அக்டோபரில் தனது கணவர் முன்பணமாக ₹5000 பெற்றுக்கொண்டு தன்னையும் தங்களது மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு குவாலியருக்குப் புறப்பட்டதாக பிரேம்காலி கூறுகிறார்.
தானும் தன் கணவனும் சூளையில் இரவு பகலாக உழைத்ததாக அவர் கூறுகிறார். அங்கு தங்களது வாழ்க்கை நிலைமை மோசமாக இருந்ததாக அவர் கூறுகிறார்.
பல்வேறு தொழிலாளர்கள் அளித்த தகவலின்படி, 1000 செங்கற்களுக்கு ₹650 கூலி வழங்கப்படுகிறது. ஒரு தம்பதியினர் இரவும் பகலும் உழைத்தால். ஒரு நாளில் ₹1000 சம்பாதிக்க முடியும். ஆனால் உணவு, மருந்து, வருவதற்கு முன்பு பெறப்பட்ட முன்பணம் போன்றவற்றை கழித்த பின்னரே தொழிலாளர்களின் கைகளில் கூலி வழங்கப்படுகிறது. இவற்றையெல்லாம் பிடித்த பின்னரும் கூட, பிரேம்காலி புறப்படும் போது கணிசமான தொகையைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், கணக்குகள் மைனஸ்-இல் உள்ளதென கூறி சூளையை விட்டு வெளியேறும் முன் அவரும் அவருடைய கணவரும்தான் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். ஓம் பிரகாஷ் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவரது தாயாருக்கு ஒரு தொலைபேசி செய்தி வந்திருக்கிறது. அதில் சூளை உரிமையாளர் / மேலாளருக்கு பணம் அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்; அதன் பிறகுதான் அவரது மகன் திரும்ப முடியும் என்று கூறியுள்ளனர். ஆனால் அவரால் பணத்தைத் திரட்ட முடியவில்லை.
எனவே பிரேம்காலி இறக்குந்தருவாயில் இருந்த அவரது கணவர் மற்றும் மூன்று சிறு குழந்தைகளுடன் செங்கல் சூளையில் இருந்து பணம் எதுவும் இல்லாமல் வெளியேறினார்.
படிக்க: மும்பை இரசாயன ஆலை விபத்து: தொழிலாளர்கள் கொல்லப்படுவதற்கு அரசே காரணம்!
இதற்கு முன்னதாக பிரேம்காலியின் நெருங்கிய உறவினர் ஒருவர் செங்கல் சூளையில் இருந்து திரும்பிய சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். ஓம் பிரகாஷின் சகோதரர் லவ்-குஷ், பல ஆண்டுகளாக செங்கல் சூளைக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். அவர் காசநோயால் பாதிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த நோய் அவரது வேலையுடன் தொடர்புடையது என்ற வலுவான உணர்வு பிரேம்காலிக்கு உள்ளது.
பிரேம்காலியின் கிராமத்தில் உள்ள தலித் குடும்பங்களில் பெரும்பாலானோர் செங்கல் சூளைகளுக்கு செல்வதாகவும், கைரி மற்றும் ஜ்வாஹ்ரா போன்ற சில பக்கத்து கிராமங்களில் இந்த சதவீதம் இன்னும் அதிகம் என்றும் இங்குள்ள மக்கள் கூறுகின்றனர். செங்கல் சூளைகளுக்கு இடம்பெயரும் தொழிலாளர்களின் முழு வாழ்க்கையும் அங்கு செங்கற்கள் செய்தே முடிந்து விடுகிறது.
இதற்கிடையில் பிரேம்காலிக்கு வரும் வாய்ப்புகள் மிகவும் மோசமானவை. அவருக்கு எந்தவிதமான வாழ்வாதார உதவியும் இல்லை ஆனால் அவர் மூன்று குழந்தைகளை வளர்க்க வேண்டியுள்ளது. மூன்று குழந்தைகளும் மிகவும் மோசமான ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு மிகவும் பலவீனமாக உள்ளனர். லேபர் கான்ட்ராக்டர் அவரிடம் ஒரு சிறிய தொகையை கொடுத்துள்ளார்; புகார் எதுவும் கொடுக்கவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் பணம் கொடுப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் அந்த கான்ட்ராக்டர் பணம் வழங்கினாலும் அது பிரேம்காலியின் குடும்பத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்குப் போதுமானதாக இருக்காது. வித்யா தாம் சமிதி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அவரது குடும்பத்திற்கு சிறிய உதவிகளை செய்து வருவதாக அவர் கூறினார்.
இதே போன்றதொரு நிகழ்வில் நீபி கிராமத்தைச் சேர்ந்த செங்கல் சூளைத் தொழிலாளி ஒருவருக்கு உரித்தான நிலுவைத் தொகையான ₹2 லட்சத்தைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததால், அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இத்தகைய அநீதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொழிலாளர் துறை உடனடியாக உதவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இந்த தொழிலாளர்களைப் பாதுகாக்க முடியும்.
[குறிப்பு: இக்கட்டுரை கவுண்டர்கரண்ட்ஸ் இணைய ஊடகத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் துயரங்களை எடுத்துரைப்பதால் வினவு வாசகர்களுக்கு இக்கட்டுரையை மொழிபெயர்த்து வழங்குகிறோம்.]
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube


மக்கள் அதிகாரம் உள்ளிட்ட தோழமை அமைப்புகளின் முகநூல் பக்கங்கள் திட்டமிட்டு பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பலால் முடக்கம்!
09.06.2024
பத்திரிகை செய்தி
அன்பார்ந்த தோழர்களே, ஜனநாயக சக்திகளே! வணக்கம்.
06.06.2024 அன்று இரவு 9 மணிக்கு திடீரென மக்கள் அதிகாரம் முகநூல் பக்கம், வினவு மற்றும் புதிய ஜனநாயகம் ஆகிய முகநூல் பக்கங்கள் முடக்கப்பட்டு அதன் பெயரும் மாற்றப்பட்டிருக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! வேண்டாம் பிஜேபி! வேண்டும் ஜனநாயகம்! கோடி மக்களிடம் கொண்டு செல்வோம்! என்ற முழக்கங்களை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் வீச்சாக நாங்கள் செயல்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்.
குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தல் 2024-ஐ ஒட்டி தேர்தலில் பாசிச பாஜகவை வீழ்த்துவது எப்படி என்ற வெளியிட்டை தமிழ் நாடு முழுவதும் கொண்டு சென்றோம். மக்களிடத்தில் களத்தில் வேலை செய்த அதே அளவிற்கு இணையத்திலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்துக்கு எதிரான தளமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்காக நாங்கள் பங்களிப்பு செய்தோம்.
தமிழ்நாடு முழுவதும் நாங்கள் மேற்கொண்ட போராட்டச் செய்திகளையும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வுக்கு எதிராக மற்ற அமைப்புகள் மேற்கொள்ளும் போராட்டச் செய்திகளையும் மேற்கண்ட எமது முகநூல் பக்கங்கள் வாயிலாக பரப்புரை செய்தோம். தற்பொழுது முடக்கப்பட்ட முகநூல் பக்கங்கள் ஒவ்வொன்றிலும் பல்லாயிரக்கணக்கானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
2024 தேர்தல் முடிவுகள் வெளியான அன்று தேர்தல் முடிவுகளை எப்படிப்பட்ட கண்ணோட்டத்தில் பரிசீலிக்க வேண்டும் என்பதை ஒரு நாள் முழுவதும் வினவு youtube இணையதளம், மக்கள் அதிகாரம் முகநூல் பக்கங்களிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்தோம்.
தேர்தல் முடிவுகள் தொடர்பாக நாங்கள் நிகழ்ச்சியை நடத்திய அடுத்த நாளிலேயே எமது முகநூல் பக்கங்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டு அதன் பெயரும் மாற்றப்பட்டு இருக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; பாசிஸ்டுகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் எமது முகநூல் பக்கங்கள் திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலால் முடக்கப்பட்டு இருக்கின்றது. எமது முகநூல் பக்கங்களை மீட்டெடுக்கும் அதே வேளையில் அவற்றின் பெயர்களை தற்போதைக்கு மாற்ற இயலாது என்றும் அதற்கு கணிசமான காலம் எடுக்கும் என்று முகநூல் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலுக்கு எதிராக செயல்படுவோரின் முகநூல் பக்கங்களையும் இணையதளங்களையும் முடக்குவது என்பது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலின் இலக்காக இருக்கிறது. அதன்படியே எமது முகநூல் பக்கங்களும் முடக்கப்பட்டிருக்கின்றன.
இதற்காகவெல்லாம் இந்த நாட்டையே பேரழிவில் தள்ளிய ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பலுக்கு எதிரான எமது போராட்டக் களங்கள் ஒருபோதும் நிற்க போவதில்லை.
பாசிச பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக செயல்படுவோரை முடக்கும் இந்த செயலை அனைத்து ஜனநாயக சக்திகளும் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
முன்னைக் காட்டிலும் இன்னும் வேகமாக அனைத்து வகைகளிலும் ஆர்எஸ்எஸ் – பிஜேபி; அம்பானி- அதானி பாசிசத்துக்கு எதிராக களமாடுவோம் !
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

நாடு முழுவதும் நடந்த மக்கள் போராட்டத்தாலும் எதிர்ப்பினாலும் நாடாளுமன்றத் தேர்தலில் கடுமையான நெருக்கடிகளை சந்தித்த பா.ஜ.க. கும்பல், ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பையும் தனது வெற்றிக்காக பயன்படுத்தியும் கூட, ஆட்சியமைப்பதற்கு தேவையான 272 தொகுதிகளை பெற முடியவில்லை. இந்நிலையில், கூட்டணி கட்சிகள், சுயேட்சை உறுப்பினர்களையெல்லாம் இணைத்துக்கொண்டு மக்களின் உணர்வுக்கு எதிராக இன்று மாலை மோடி ஆட்சி பொறுப்பேற்க உள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதா பேனர்ஜி, “பா.ஜ.க. ஜனநாயக விரோதமாகவும் சட்டவிரோதமாகவும் ஆட்சி அமைக்கிறது” என்றும் “இந்த நிலையற்ற மற்றும் பலவீனமான அரசாங்கம் மத்தியில் ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்படுவதை கண்டு நான் மகிழ்ச்சியடைவேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், “நாட்டிற்கு மாற்றம் தேவை; நாடு மாற்றத்தை விரும்புகிறது. இந்த ஆணை (முடிவு) மாற்றத்திற்காக இருந்தது. நாங்கள் காத்திருக்கிறோம், நிலைமைகளை கண்காணித்து வருகிறோம். இந்த ஆணை நரேந்திர மோடிக்கு எதிரானது. எனவே அவர் இம்முறை பிரதமர் ஆகக்கூடாது. வேறு யாராவது பொறுப்பேற்க அனுமதிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ள மமதா, மோடியின் பதவியேற்பு விழாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
படிக்க: சங்கிகளே, நாங்கள் உங்களை புறக்கணிக்கிறோம் | கவிதை
ஆனால், அதேசமயத்தில் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டதிலிருந்தே “இந்த தேர்தல், யார் ஆளக் கூடாது என்பதற்கான தேர்தல்”, “மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது” என்று பேசிவந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போதுவரை, மோடி பதவியேற்பது பெரும்பான்மை இந்திய மக்களின் உணர்வுக்கு எதிரானது என்று வாய்த் திறக்கவில்லை.
மாறாக, புதிதாக தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய அவர், “400, 370 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று சொன்ன பா.ஜ.க. தனிபெரும்பான்மை கூட பெற முடியாத நிலைக்கு பலவீனப்பட்டுள்ளது; பலவீனமான பா.ஜ.க. அரசை நம் முழக்கங்கள் மூலம் செயல்பட வைக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.
அதாவது, எந்த பா.ஜ.க. கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் சூறையாடிக் கொண்டிருக்கிறதோ அதே பா.ஜ.க-வை நெட்டித்தள்ளி மக்களின் வாக்குறுதிகளை செயல்பட வைக்கப் போகிறாராம். ஸ்டாலினின் இப்பேச்சு, பாசிச மோடி கும்பலை எதிர்ப்பதில் தி.மு.க-வின் சந்தர்ப்பவாதத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.
பாசிச மோடி கும்பல் நாட்டை ஆளக் கூடாது என்பதுதான் இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் உணர்வுநிலை. நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் அதைதான் உணர்த்தியது. தமிழ்நாடு மக்களின் உணர்வும், தொடக்கத்திலிருந்தே, பா.ஜ.க. பாசிசக் கும்பல் நாட்டை ஆளக் கூடாது என்பதாகவே இருந்து வருகிறது. ஆனால், அதனை இந்திய அளவில் பேசுபொருளாக்குவதற்கு பதிலாக மோடி நாட்டை ஆள்வதை ஏற்கவைக்கும் வேலையை தி.மு.க. செய்கிறது. திராவிட இயக்கத்தின் போர்வாள் என்று சொல்லிக்கொண்டே தமிழ்நாடு மக்களை பார்ப்பனியத்திற்கு மண்டியிட வைக்கும் வேலையை தி.மு.க. மேற்கொள்கிறது.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

புதிய ஜனநாயகத்தின் ஜூன் 2024 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800
புதிய ஜனநாயகம் – ஜூன் 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 = மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561
வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

கங்கனாவுக்கு விழுந்த அறை:
பாசிஸ்டுகளின் கன்னங்கள் பழுக்கட்டும் | தோழர் ரவி
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

நீட் மோசடி: தேர்வை ரத்து செய்வது தான் தீர்வு
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

சங்கிகளே, நாங்கள் உங்களை புறக்கணிக்கிறோம்
சங்கிகளே,
மெய்தி மக்களாகிய எங்களை
பழங்குடி அந்தஸ்தை காட்டி
இனவெறியை தூண்டிவிட்டு
குக்கி மக்களை
இரத்த வெள்ளத்தில்
மிதக்க வைத்தீர்களே!
கனிம வளங்களை களவாட
அம்பானி அதானிகளுக்கு படையல் போட
அமைதியாய் வாழ்ந்த
எங்களின் வாழ்க்கையில்
தீ வைத்தீர்களே!
நாங்களோ,
மண்டைக்கேறிய இனவெறியின் உச்சத்திலே
குக்கிப் பெண்களை
கூட்டுப் பலாத்காரம் செய்தோமே
அம்மணமாக்கி
வீதிகளில் இழுத்துச் சென்றோமே
கண்ணில் பட்டவர்களையெல்லாம்
அடித்துக் கொன்றோமே
வீடுகள், ஆலயங்களை
தீக்கிரையாக்கினோமே..
எத்தனை உயிர்கள்
பலியானது இக்கலவரத்தில்!
ஏராளமான இடங்கள்
சூறையானது இம்மாபாதகத்தில்!
மொத்த மணிப்பூரும்
பற்றி எரிந்ததே!
நீங்களோ,
கலவரத் தீயை மூட்டிவிட்டு
கள்ளமௌனம் காத்தீர்களே!
கயமத்தனிகளே!
ஒப்பாரி ஓலங்கள் இங்கு – இன்னும்
ஓயாத அவல நிலையிலும்
ஓர் ஆண்டுக் காலமாய் – உங்கள்
கலியுக கடவுளான மோடியோ
எங்களை இன்னும் காணவரவில்லையே!
சங்கிகளே,
போதும்!
மெய்தி இனவெறியால்
நாங்கள் பட்டப்பாடு போதும்!
எங்களின்
அமைதியான வாழ்வு நாசமாகி
நாங்கள் பட்டப்பாடு போதும்!
சங்கிகளே,
நாங்கள் உங்களை
புரிந்துக்கொள்ள தொடங்கிவிட்டோம்!
அதனால்தான்
கேடுகெட்ட சங்கிகளே,
நாங்கள் உங்களை புறக்கணிக்கிறோம்!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

காவிகளே, இது தமிழ்நாடு | வீரமரபு பாடல் | Red wave | ம.க.இ.க
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
