அச்சுறுத்தும் போலீசு, தொடரும் ஸ்டெர்லைட்  அடக்குமுறை ! மே – 22 தியாகிகளுக்காக கூடி அழ கூட உரிமையில்லை !

டந்த ஓராண்டு காலமாக  ஒரு உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனத்தை  இயங்காமல் தடுத்து நிறுத்த முடியுமா? என பலரும் கேள்வி எழுப்பிய இடத்தில் தங்களின் வீரம் செரிந்த போராட்டத்தினால் ஸ்டெர்லைட்டை இயங்காமல் இன்று வரையிலும் தடுத்து   நிறுத்தியுள்ளனர் தூத்துக்குடி மக்கள்.

கடந்த 2018 மே 22-க்குப் பிறகு தூத்துக்குடி என்பது ஸ்டெர்லைட்டுக்கு எதிரான கருத்துக்களை யார் பேசினாலும், அவர்கள் காவல்துறையின் அடக்குமுறையைச் சந்தித்தாக வேண்டும் என்ற எழுதப்படாதச் சட்டம் தூத்துக்குடியில் இன்று வரை அமலில் உள்ளது.

ஒவ்வொரு நாளும் காவல்துறையின் அச்சுறுத்தலும், பொய்வழக்கும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மே 22-ல் நிலம், நீர், காற்றை நஞ்சாக்கும் நாசகார ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என போராடியவர்களில் 15 அப்பாவி மக்களை ஸ்டெர்லைட் –  கைக்கூலியான காவல்துறை சுட்டு வீழ்த்தியது.

இந்நிலையில் மண்ணையும், மக்களையும் பாதுகாக்க தங்களின் இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்த தூத்துக்குடி மக்கள் சார்பாக, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கான வேலைகளை முன்னெடுத்து செய்துகொண்டிருந்தது.

படிக்க:
மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் நினைவை நெஞ்சிலேந்துவோம் ! தூத்துக்குடி மக்கள் அறைகூவல் !
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்

அதிலிருந்து ஒருபக்கம் ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக உள்ளவர்களுக்கு பணம் வாரியிறைக்கப்படுகிறது. மறுபக்கம் கூட்டமைப்பில் உள்ள முன்னணியாளர்கள், மக்கள் என அனைத்து தரப்பினரையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் தனது ஏவல்படையான போலீசை வைத்து பொய் வழக்கு போடுவது, நள்ளிரவில் ஒவ்வொரு முன்னணியாளர்களுக்கும் ஒரு போலீசை போட்டு கண்கானிப்பது, அவர்களின் வீடுகளுக்கு சென்று மிரட்டுவது என அச்சுறுத்திவருகிறது.

இழந்த சொந்தங்களுக்காக ஒரு நாள் கூடி அழ கூட உரிமையில்லாத நிலையை தூத்துக்குடியில் உருவாக்க எத்தணித்துக்கொண்டிருக்கிறது ஸ்டெர்லைட்டும், போலீசும்.

வீரத்தின் விளைநிலமான தூத்துக்குடி, ஸ்டெர்லைட்டின் நயவஞ்சகத்துக்கும், போலிசின் அடக்குமுறைக்கும் ஒருபோதும் அடிபனியாது!

அடக்குமுறையால் தூத்துக்குடி மக்களின் வீரத்தையும், போர்க்குணமிக்க போராட்ட உணர்வையும் தடுக்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால்,  ஒருபோதும் நடக்காது என நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கான வேலைகளை  கொண்டுசெல்வதில்  கூட்டமைப்பு நிர்வாகிகளும், மக்களும்  முன்பை விட உறுதியாகவும், உற்சாகமாகவும் தங்களை   ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் : 
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு,
தூத்துக்குடி.


இதையும் பாருங்க …

தூத்துக்குடி : புதைந்தது உடலல்ல விதையான வீரமடா | ம.க.இ.க. பாடல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க