♦ ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு நினைவிடம் அமை!
♦ படுகொலைக்குக் காரணமான போலீசாருக்கு கொலை குற்றத்தில் தண்டனை வழங்கு!
♦ ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக அகற்ற தனிச்சட்டம் இயற்று!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்

22-05-2019
வள்ளுவர் கோட்டம்
சென்னை

ன்பார்ந்த நண்பர்களே !

1919-ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக்கில், கொடிய ஆள்தூக்கி ரவுலட் சட்டத்தை எதிர்த்து அமைதியாக ஆயுதமின்றி கூடிய பொதுமக்கள் மீது ஆங்கிலேய அதிகாரி ஜெனரல் டயர் துப்பாக்கி ரவைகள் தீரும் வரை கொடூரமாக சுட்டுத் தள்ளினான். ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இன்று நூறாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஜாலியன் வாலாபாக் தியாகிகள் நினைவிடத்தில் மக்களும் தலைவர்களும் ஏப்ரல் 13 அன்று அஞ்சலி செலுத்தினார்கள்.

தூத்துக்குடி படுகொலை என்பது இன்னொரு ஜாலியன் வாலாபாக். அது காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டம் என்றால் தூத்துக்குடி போராட்டம் வேதாந்தா என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு எதிரான போராட்டம். ஆகவே, ஜாலியன் வாலாபாக் நினைவு நாளைப் போலவே, 2019 மே 22 அன்று தூத்துக்குடி போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தியாகிகளின் படங்களை வீதிகள்தோறும் வைத்து, ஜல்லிக்கட்டு மக்கள் எழுச்சியைப் போல தமிழகமே அந்தத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். ஜாலியன் வாலாபாக் போன்று ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தியாகிகளுக்கும் தூத்துக்குடியில் நினைவிடம் அமைக்க போராட வேண்டும்.

தூத்துக்குடி மக்களின் வீரம் செறிந்த போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி, எட்டுவழிச்சாலை, நெடுவாசல், கன்னியாகுமரி இனையம் துறைமுக விரிவாக்கம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களுக்கு உத்வேகத்தை அளித்திருக்கிறது. அதேபோல், கார்ப்பரேட் கொள்ளையை எதிர்த்து போராடினால் தூத்துக்குடி மாடல் அடக்குமுறைதான் வரும் என்று எச்சரிப்பதற்காகவே அந்தப் படுகொலை நடத்தப்பட்டிருக்கிறது. போராடிய மக்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டம், பல நூறு வழக் குகளில் சிறை, போராட்டத்துக்கு உதவி செய்த வழக்கறிஞர்களுக்கும் சிறை போன்ற அடக்குமுறைகள் ஏவப்பட்டிருக்கின்றன.

மே 22 தூத்துக்குடியில் நடந்ததை ஒரு கனம் நினைவுபடுத்தி பாருங்கள், குடிநீர், பால், உணவு எடுத்துக்கொண்டு குழந்தைகள், பெண்கள் முதியவர்கள் குடும்பத்து டன் திருவிழாவிற்கு செல்வது போல் இந்த அரசை நம்பி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடச் சென்றார்கள். அந்த மக்களைத்தான் வேனில் ஏறி நின்று எதிரிகளைச் சுடுவது போல் சுட்டுக்கொன்றிருக்கிறது போலீசு. அந்தக் கொலைகார போலீசார் அனைவரும் கொலைக் குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட வேண்டும்.

நடந்தது கூட்டத்தைக் கலைப்பதற்கான துப்பாக்கிச்சூடு அல்ல என்பதை பிரேத பரிசோதனை அறிக்கை நிரூபித்திருக்கிறது. மக்கள் மிக அருகிலிருந்து தலையிலும், வாயிலும் கழுத்திலும் குறிபார்த்து சுட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர். கலைந்து ஓடிய மக்கள் பின்புறத்திலிருந்து சுடப்பட்டிருக்கின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், இதுவரை எந்தக் கொலைகார போலீசாரும் சி.பி.ஐ. ஆல் விசாரிக்கப்படவில்லை. மாறாக, மக்களை ஃபோனில் அழைத்து ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஏன் போராடினீர்கள், எப்படி போராடினீர்கள்? என்று துருவித் துருவி விசாரித்து வருகிறது சி.பி.ஐ.

போராடிய மக்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை ஸ்டெர்லைட் ஆதரவு கூலிப்படையினர்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தாக்கி வாகனங்களை தீயிட்டு கொளுத்தினார்கள். இந்தச் சம்பவம் போலீசு உயர் அதிகாரிகளுக்கு முன்பே தெரியும் என்பது சிசிடிவி படக்காட்சிகள் மூலம் ஆதார பூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளது. ஆதாரத்தை தொகுத்து வெளியிட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன் இன்று வரை என்ன ஆனார் எனத் தெரியவில்லை.

தூத்துக்குடி மக்கள் மீது கடந்த ஓராண்டாக அறிவிக்கப்படாத எமர் ஜென்சி அமல்படுத்தபட்டு வருகிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் யாரும் எங்கும் சென்று எதையும் பேசக் கூடாது. வாட்ஸ் அப்பில் தகவல் பரிமாறக்கூடாது. வீட்டில் கருப்பு கொடி ஏற்றக்கூடாது . துண்டறிக்கை விநியோ கிக்கக் கூடாது. போஸ்டர் ஒட்டக்கூடாது. எதைச்செய்தாலும், தீவிரவாதிகளை காண்காணிப்பது போல் கண்காணித்து போலீசார் உடனே அழைத்து எச்சரிக்கிறார்கள், பொய் வழக்கு போடுகிறார்கள். போராட்டத்தில் முன்னணியாக உள்ள இளைஞர்களை கைது செய்து அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட அனைவரும் போலீசாரால் எந்த நேரமும் பின்தொடரப்பட்டு, அச்சத்தில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால், ஸ்டெர்லைட்டுக்கு எந்த விதத்தடையும் இல்லை , உயர்நீதிமன்ற நீதிபதியே போலீஸ் எஸ்.பி. முரளி ரம்பாவை நேரில் அழைத்து கண்டிக்கும் அளவிற்கு போலீசாரின் ஸ்டெர்லைட் ஆதரவு நடவடிக்கை இருந்து வருகிறது. போராடும் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க பல கோடி ரூபாயை வாரி இரைத்து எண்ணற்ற கூலிப்படையினரை மக்கள் மத்தியில் இறக்கி தனக்கு ஆதரவான பிரச்சாரத்தை பலவகைகளில் ஸ்டெர்லைட் நிர்வாகம் செய்து வருகிறது. தேர்தலுக்குப்பிறகு நீதிமன்ற உத்திரவு பெற்று மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்ற கருத்து மக்களிடம் பரப்பப்படுகிறது.

படிக்க:
ஒரு ஏழை அப்பாவி முசுலீம் தற்கொலைப் படை பயங்கரவாதியாக ஆக்கப்பட்ட கதை !
மே – 22 தியாகிகளுக்காக கூடி அழ கூட உரிமையில்லை ! தொடரும் ஸ்டெர்லைட் அடக்குமுறை !

இதனை ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது. வேதாந்தா என்பது பல நாடுகளின் அரசுகளையே விலை பேசுகின்ற பன்னாட்டு நிறுவனம், மோடி அரசைத் தனது கைப்பாவையாக வைத்திருக்கும் நிறுவனம். அத்தகையதொரு நிறுவனத்தை தமது வீரஞ்செறிந்த போராட்டத்தின் மூலம் மூட வைத்திருக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள். பல நாட்டு மக்களை அச்சுறுத்தி வரும் கொலை கார நிறுவனத்தை மண்டியிட வைத்த இந்தப் போராட்டத்தை உலகெங் கிலும் உள்ள மக்கள் வியந்து பாராட்டுகிறார்கள். தங்கள் இன்னுயிரை ஈந்து தமிழகத்தையே தலை நிமிர வைத்திருக்கிறார்கள் தூத்துக்குடி தியாகிகள்.

அந்தத் தியாகிகளை கவுரவிக்க , ஸ்டெர்லைட் ஆலையை வெளியேற்றுவதற்கு தூத்துக்குடி மக்களுக்குத் தமிழகமே துணை நிற்கும் என்பதை உணர்த்த மே 22 அன்று தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளின் படங்களை வைத்து நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.


மக்கள் அதிகாரம்,
சென்னை,
தொடர்புக்கு: 91768 01656

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க