மோடி- அமித்ஷா கும்பல் கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும்; அந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி போராடிய ஜாமியா மிலியா, ஜே.என்.யு., அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்தும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் டிச-19 அன்று தமிழகம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

இஸ்லாமியர்கள் ஈழத்தமிழர்களை தனிமைப்படுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிராகரிப்போம் !
டெல்லி மாணவர்கள் மீதான கொடூர தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் !
பா... – ஆர்.எஸ்.எஸ்.-ன் காவி பாசிசத்திற்கு எதிராக போராட்டத் தீ பரவட்டும் ! – என்ற மைய முழக்கத்தின் கீழ் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை உள்ளிட்ட பல இடங்களில் போலீசின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

நாட்டை நாலாய் பிளந்து போட்டு
கார்ப்பரேட்டுக்கு விற்கத் துடிக்கும்
மோடியும் – அமித்ஷாவும்
இந்திய தேச பக்தர்களா?

கூறுபோட்டு விற்றுத் தின்ன
இந்தியா ஒன்றும் அமித் ஷாவின்
அப்பன் வீட்டுச் சொத்து இல்லை.

நாட்டை இந்து ராஷ்டிரம் ஆக்கும்
ஆர் எஸ்எஸ் சதித் திட்டத்தை
வீதியில் நின்று முறியடிப்போம்! – என்பது உள்ளிட்ட முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் எழுப்பினர்.

திருச்சி:

மதுரை :

பெரியார் கட்டபொம்மன் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் குருசாமி தலைமை வகித்தார். புரட்சிகர மாணவர்  – இளைஞர் முன்னணியைச்  சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி தோழர் சினேகா ; சிவகங்கை மாவட்ட மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர்  தோழர் நாகராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

விருத்தாசலம் :

விருத்தாசலம், பாலக்கரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

விழுப்புரம் :

விழுப்புரம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

கும்பகோணம் :

தஞ்சை மண்டல மக்கள் அதிகாரம் சார்பில், குடந்தையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் ஜெயபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன், தஞ்சை – மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் சண்முகசுந்தரம்; தஞ்சை – மாவட்ட ஒருங்கினைப்பார் தோழர் தேவா உள்ளிட்ட தோழர்கள் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி :

தருமபுரி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழர்களை, தருமபுரி B1 இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் வாடா, போடா என ஒருமையிலும் தகாத வார்த்தைகளாலும் திட்டியும் வலுக்கட்டாயமாக கைது செய்தார்.


மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
தொடர்புக்கு: 99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க