நாட்டை சூறையாடிய கொள்ளைக்காரனே அதானி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

நாட்டையும் நாட்டு மக்களையும் கொள்ளையடித்த அம்பானி - அதானி பாசிசக் கும்பலும் அவர்களுக்கு நாட்டையே காவு கொடுத்த ஆர்எஸ்எஸ்  - பாஜக ; மோடி - அமித்ஷா பாசிச கும்பலும் இந்த நாட்டு மக்களின் எதிரிகள் மக்கள் அதிகாரம் தெரிவித்துக் கொள்கிறது.

30.01.2023

நாட்டை சூறையாடிய கொள்ளைக்காரனே அதானி!

அம்பானி  – அதானி பாசிசக் கும்பலுக்கு நாட்டைக் காவு கொடுத்த
ஆர் .எஸ் .எஸ் – பாஜக ; மோடி பாசிசக் கும்பலே குற்றவாளிகள் !

பத்திரிகை செய்தி

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரனும் உலக அளவில்  பணக்காரர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தில்  இருந்த அதானி ஒரு மாபெரும் மோசடிக்காரன், தேசத் துரோகி , கொள்ளைக்காரன் என்பதை ஹிண்டன் பர்க் ஆய்வறிக்கை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

லெட்டர் பேடு கம்பெனி ஒன்றை ஆரம்பித்து,  அதனை மிகப்பெரிய கம்பெனி போல பில்டப் செய்து, அதன் பெரும்பான்மைப் பங்குகளை தானே வாங்கிக் கொண்டு , மீதமுள்ள பங்குகளை பாசிச மோடி- அமித்ஷா கும்பலின் உதவியால் எல் .ஐ .சி யை மிரட்டி   வாங்க வைத்து , பங்கு மதிப்புகளை செயற்கையாக எகிற வைத்து, அதனை அடமானம் வைத்து பல்லாயிரக்கணக்கான கோடிகளை எஸ்பிஐ வங்கிகளில் கடன் வாங்கி அடுத்த இன்னொரு கார்ப்பரேட் கம்பெனியை ஆரம்பிப்பது. இப்படிப்பட்ட மோசடித்தனமான பல்வேறு வேலைகளில் ஈடுபட்டதன் மூலம் மட்டுமே கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவின் முதல் பணக்காரனாக மாறி இருக்கிறார் அதானி.

படிக்க : ஒரே நாடு, ஒரே தேர்தல் – ரிமோட் வாக்களிப்பு இந்து ராஷ்டிரத்துக்கான அடுத்த நகர்வில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிஸ்டுகள்!

அதானியின் இந்த மோசடிகளை அம்பலப்படுத்தி இருக்கின்ற ஹிண்டன் பார்க் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ள அதானி நிறுவனம், இந்திய நிறுவனங்களை ஒழித்துக்கட்டும் சதி என்று இந்திய தேச பெருமையில் ஒளிந்து கொள்கிறது.

கடந்த மூன்று நாட்களில் அதானியின் பங்கு மதிப்பு பெரும் அளவில் சரிந்து இருக்கின்றன .அதில் முதலீடு செய்துள்ள எல். ஐ .சி மிகப்பெரிய அளவில் பல நூறு கோடிகளை இழந்திருக்கிறது.  தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி கட்ட வேண்டும் என்பதற்காக மேலும் 300 கோடி ரூபாய்  பங்குகளை எல்ஐசி, அதானி நிறுவனத்திடம் இருந்து வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறது . இதனால் எல். ஐ. சி யில் முதலீடு செய்துள்ள இந்த நாட்டின் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வு என்னாகப் போகிறது என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

அதானியும் அம்பானியும் இந்திய உலக பணக்கார வரிசைகளில் முதல் சில இடங்களில் நீடித்திருக்க வேண்டும் என்பதற்காக, உலக அளவில் கச்சா எண்ணை வெகுவாக குறைந்த போதும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உச்சத்தை தொட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியில் இருந்து பல்லாயிரக்கணக்கான கோடிகள் களவாடப் பட்டிருக்கின்றன. துறைமுகங்கள், விமான நிலையங்கள் , நவரத்தினங்கள் என்று சொல்லக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களும் நீர், நிலம், ஆகாயம் என அனைத்து இயற்கை வளங்களும்   அம்பானி அதானிகளுக்காக பலியிடப்படுகின்றன .அதற்கேற்றபடி சட்ட திட்டங்கள் திருத்தப்படுகின்றன. கட்சிகள் மிரட்டி உருட்டி வழிக்கு கொண்டு வரப்படுகின்றன .போராடுகின்ற மக்கள் மீது அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இந்த நாட்டுக்காக நாட்டு மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் எல்லாம்  ஊபா போன்ற கருப்பு சட்டங்களால் சிறை வைக்கப்படுகின்றார்கள் .

இந்த அம்பானி ,அதானி பாசிஸ்டுகளுக்கு இந்த நாட்டையே ஆர். எஸ். எஸ் – பாஜக பாசிஸ்டுகள் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டினை முழுவதுமாக ஒட்டச் சுரண்டுவதற்கு அவர்களுக்கு தேவைப்படுவது தான் இந்து ராஷ்டிரம் .  கடந்த எட்டு ஆண்டுகளில் அம்பானி, அதானி பாசிசக் கும்பலின் சொத்து மதிப்பு பல நூறு  மடங்குகள் உயர்ந்து இருப்பதும்  பாரதிய ஜனதா கட்சிக்கு பல்லாயிரம் கோடிகள் தேர்தல் நிதி பத்திரங்கள் சேர்ந்திருப்பதுமே இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

படிக்க : அதானியே நமோ நமஹா!

இதன் நாட்டில் உள்ள வேலையின்மை  – பொருளாதார நெருக்கடி – விலைவாசி – பசி- பஞ்சம்- பட்டினி அனைத்துக்குமே மூலக் காரணம் இந்த ஆர்எஸ்எஸ் – பாஜக ;அம்பானி- அதானி பாசிச கும்பலும்  அவர்கள் பின்பற்றும் தனியார்மயம்  – தாராளமயம் உலகமயம் என்ற மறு காலனியாக்கக் கொள்கைகளும் தான் .

இப்படி நாட்டையும் நாட்டு மக்களையும் கொள்ளையடித்த அம்பானி – அதானி பாசிசக் கும்பலும் அவர்களுக்கு நாட்டையே காவு கொடுத்த ஆர்எஸ்எஸ்  – பாஜக ; மோடி – அமித்ஷா பாசிச கும்பலும் இந்த நாட்டு மக்களின் எதிரிகள் மக்கள் அதிகாரம் தெரிவித்துக் கொள்கிறது. இந்த நாட்டில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளிகள், விவசாயிகள், மீனவர்கள், பெண்கள் என அனைவருக்குமே  தங்கள் இன்னல் தீர   வேண்டுமென்றால் அதற்கு முதலாக ஆர். எஸ் .எஸ் –  பாஜக ;அம்பானி – அதானி பாசிசத்தை முறியடிக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர்.சி .வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம் ,
தமிழ்நாடு புதுவை
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க